Tuesday, June 30, 2009

கச்சா எண்ணெய் விலை 72 டாலருக்கும் மேல் உயர்ந்தது

உலகின் எட்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான நைஜீரியாவில், அடிக்கடி ஆயில் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் பைப்லைன்களை மற்றும் பிளாட்பாரத்தை தீவிரவாதிகள் சேதப்படுத்தி விடுவார்கள். இதனால் எண்ணெய் கம்பெனிகளுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் நஷ்டம் ஏற்படுவதுடன் உற்பத்தியும் பாதிக்கப்படுவது வழக்கம். இப்போது அம்மாதிரியான பிரச்னை மீண்டும் எழுந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலருக்கும் மேல் உயர்ந்து விட்டது. அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.08 டாலர் அதிகரித்து 72.57 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 1.21 டாலர் அதிகரித்து 72.20 டாலராக இருக்கிறது.
நன்றி : தினமலர்


எம்.டி.என். நிறுவனத்துடன் இணைவது குறித்து புதிதாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை : சுனில் மிட்டல்

தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய செல்போன் நிறுவனமான எம்.டி.எம்.,உடன் இணைவது குறித்து நாங்கள் புதிதாக பேச்சவார்த்தை ஏதுவும் நடத்தவில்லை என்று பார்தி ஏர்டெல்லின் சேர்மன் சுனில் மிட்டல் தெரிவித்தார். ஆனால் அதை அவர் மறுக்கவும் இல்லை. மேலும் இது குறித்து நாங்கள் இந்திய மற்றும் ஆப்பிரிக்க அரசாங்கத்துடனும் இதுவரை பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை என்றார். ஆனால் எப்போது நாங்கள் அவர்களை அனுகுகிறோமோ, அப்போது அவர்களிடமிருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று சொன்னார் மிட்டல். லண்டனில் நடக்கும் சர்வதேச தொழில் அதிபர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருக்கும் அவர் இதனை தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான பார்தி ஏர்டெல்லும் தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான எம்.டி.எம்.,மும் இணைந்து, உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய மொபைல் நிறுவனமாக உருவாக முடிவு செய்து, அதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை யை நடத்தியிருக்கின்றன. இந்த இருவரும் இணைந்தால் அவர்களுக்கு மொத்தம் 20 கோடி சந்தாதாரர்கள் இருப்பார்கள். அவர்களது மொத்த வருமானமும் 20 பில்லியன் டாலராக இருக்கும்.
நன்றி : தினமலர்


Monday, June 29, 2009

லேசான ஏற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை

வெள்ளி அன்று 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருந்த பங்கு சந்தை இன்று லேசான ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் ஆயில் அண்ட் கேஸ், மெட்டல், ரியல் எஸ்டேட், பேங்கிங் ( ஐசிஐசிஐ நீங்கலாக ), குறிப்பிட்ட இன்ஃப்ராஸ்டரக்சர் கம்பெனிகள் நல்ல லாபம் பார்த்தன. அதே நேரம் ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், சுஸ்லான், சன் பார்மா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஐடிசி, ஐடியா, டாடா பவர், ஹீரோ ஹோண்டா போன்ற நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. காலையில் இருந்தே ஏற்றத்தில் இருந்த சந்தையில் மாலை வர்த்தகம் முடியும் போது, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 21.10 புள்ளிகள் ( 0.14 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 14,785.74 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 15.45 புள்ளிகள் ( 0.35 சதவீதம் ) உயர்ந்து 4,390.95 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


தங்கம் இறக்குமதி 44 சதவீதம் குறைந்தது

உச்சத்தில் இருக்கும் விலை ; டிமாண்ட் இல்லை போன்ற காரணங்களால், ஜூன் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி, அதற்கு முந்தைய மாத இறக்குமதியை விட 44 சதவீதம் குறைந்திருக்கும் என்று தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மே மாதத்தில் 18 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. அது ஜூன் மாதத்தில் 10 டன்னாக குறைந்திருக்கும் என்று பாம்பே புல்லியன் அசோசியேஷன் தெரிவிக்கிறது. இனிமேலும் தங்கத்தின் விலை குறையவில்லை என்றால், இறக்குமதி அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று பாம்பே புல்லியன் அசோசியேஷன் இயக்குனர் சுரேஷ் ஹூன்டியா தெரிவித்தார். கடந்த வாரத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.14,600 ஐ ஒட்டியே இருந்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் ( 28.34 கிராம் ) தங்கத்தின் விலை 938.55 டாலராக இருந்தது. தங்கத்தின் எனவே,கடந்த வருடம் ஜனவரி - ஜூன் காலத்தில் 139 டன்னாக இருந்த தங்கத்தின் இறக்குமதி, கடுமையான விலை உயர்வால் இந்த வருடம் ஜனவரி - ஜூன் காலத்தில் 50 டன்னாக குறைந்திருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15 ஆயிரத்தை ஒட்டி இருந்தபோது, இந்தியாவில் தங்கம் இறக்குமதியே செய்யப்படவில்லை என்கிறார் ஹூன்டியா. ஆனால் ஏப்ரலில் வந்த ' அக்ஷய திருதி 'யை முன்னிட்டு அந்த மாதத்தில் மட்டும் 20 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
நன்றி : தினமலர்


சிமெண்ட் விலை மூடைக்கு ரூ.5 குறையலாம்

50 கிலோ எடை கொண்ட சிமெண்ட் மூடையின் விலை ரூ.3 முதல் ரூ.5 வரை குறையலாம் என்று தெரிகிறது. சிமெண்டுக்கான தேவை குறைந்திருப்பதாலும், சிமெண்ட்டின் சப்ளை அதிகரித்திருப்பதாலும் அடுத்த மாதத்தில் இருந்து விலை குறையலாம் என்று டீலர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் மும்பை, குஜராத், மற்றும் தென் இந்தியா வில் அதன் விலை இனிமேல் மூடைக்கு ரூ.255 ஆகவும், வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் அதன் விலை ரூ.245 ஆகவும் இருக்கும் என்கிறார்கள். ஜூலை - ஆகஸ்ட்டில் சிமெண்ட்டின் சப்ளை அதிகரிக்கும் என்பதாலும், பருவ மழை காலத்தில் கட்டுமான தொழிலில் தேக்கநிலை ஏற்படும் என்பதால் சிமெண்ட்டுக்கான தேவை குறையும் என்பதாலும், அடுத்த மாதத்தில் அதன் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


பெட்ரோல், டீசல் விலை உயர்வு உடனடியாக இல்லை : முரளி தியோரா

எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உடனடியாக உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை எவ்வாரெல்லாம் மாறுகிறது என்பதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதன் அடிப்படையில்தான் இந்தியாவில் விற்கப்படும் சில்லரை விலை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாறுதல் செய்யப்படும் என்றார் அவர். அவர் மேலும் தெரிவித்தபோது, நாம் வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயிலின் விலை வெள்ளிக்கிழமை அன்று பேரலுக்கு 68.54 டாலராக இருந்தது. அது உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் அந்த விலை மேலும் உயருகிறதா என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எப்படி இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்தும் முன், மத்திய அமைச்சரவை கூடி விவாதித்துதான் முடிவு செய்யும் என்றார். இப்போது இந்திய எண்ணெய் கம்பெனிகள், ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்கும் போதும் ரூ.2.96 நஷ்டம் அடைகின்றன. பெட்ரோலி விற்கும் போது ரூ.6.08 நஷ்டம் அடைகின்றன.
நன்றி : தினமலர்


Sunday, June 28, 2009

வீடுகளின் விலை மேலும் குறையும்

அடுத்த ஆண்டின் மத்தியில் வீடுகளின் விலை மேலும் பத்து சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிசில் என்ற நிறுவனம், பொருளாதார மந்த நிலையால் நிலம் மற்றும் வீடுகளின் தேவை, அவற்றின் விலை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வை மேற் கொண்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மும்பை, டில்லி உள்ளிட்ட பெருநகரங்களில் நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை, வீடுகளின் விலை இரண்டு மடங்கு அதிகரித்து காணப்பட்டது.
ஆனால், பொருளாதார மந்த நிலையால் வளர்ச்சி தடைபட்டதால், வீடுகளுக்கான தேவை பெரிதும் குறையத் துவங்கியது. இதன்காரணமாக, அவற்றின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த மார்ச்சில் 18ல் இருந்து 20 சதவீதம் வரை வீடுகளின் விலையில் சரிவு ஏற்பட்டது. பெருநகரங்களில் அதிகமான வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இருந்தபோதும், அவற்றை வாங்குவதற்கு முன்பு போல் போட்டி எதுவும் இல்லை. இதனால், அடுத்த ஆண்டின் மத்தியில் வீடுகளின் விலை, மேலும் பத்து சதவீதம் அளவுக்கு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Saturday, June 27, 2009

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு : 11 ஆயிரம் தொட ரூ.48 தான் குறைவு

ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து சவரன் 10 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்றது. 11 ஆயிரம் ரூபாயை நெருங்க, இன்னும் 48 ரூபாய் தான் குறைவாக உள்ளது.
கடந்த மாதம் விலை குறைந்த ஆபரணத் தங்கம், தற்போது திருமண சீசன் என்பதால் கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 22ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,346 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 768 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 23ம் தேதி ஒரு கிராம் 1,346 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 768 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த 24ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,352 ரூபாயாக உயர்ந்தது. சவரன் தங்கம் 10 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 10 ஆயிரத்து 896 ரூபாய்க்கு உயர்ந்தது. நேற்று சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,369 ரூபாய்க்கு விற்றது. சவரன் 10 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்றது. 11 ஆயிரத்தை தொட இன்னும் 48 ரூபாய் தான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


ஜாகுவார், லேண்ட்ரோவரால் டாடா மோட்டார்ஸூக்கு நஷ்டம் ரூ.2,505 கோடி

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், 2008 - 09 நிதி ஆண்டில் ரூ.2,505 கோடி நிகர நஷ்டம் அடைந்திருக்கிறது. இங்கிலாந்தின் சொகுசு கார் கம்பெனிகளான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரை கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 2.5 பில்லியன் டாலருக்கு டாடா மோட்டார்ஸ் வாங்கியதை அடுத்து, இந்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஜாகுவார், லேண்ட்ரோவர் நிறுவனங்களால் மட்டும் டாடா மோட்டார்ஸூக்கு ரூ.1,777 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. டாடா மோட்டார்ஸின் கைக்கு ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் வந்ததற்கு பின், அந்த இரு கார்களின் வருடாந்தர விற்பனை 32 சதவீதம் குறைந்து 1.67 லட்சமாகி இருக்கிறது. லேண்ட் ரோவரின் விற்பனை 1.98 லட்சத்தில் இருந்து 1.2 லட்சமாகவும், ஜாகுவாரின் விற்பனை 1,000 கார்கள் குறைந்து 47,000 ஆகவும் ஆகி விட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸ் வைஸ் சேர்மன் ரவி காந்த், கடந்த நிதி ஆண்டில் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரின் விற்பனை வட அமெரிக்காவில் 37 சதவீதமும் இங்கிலாந்தில் 31 சதவீதமும் குறைந்திருந்தது என்றார். ஆனால் இப்போது, அங்கு நிலைமை மாறி வருகிறது. விற்பனை அதிகரித்து வருகிறது என்றார்.
நன்றி : தினமலர்


உலகம் இதுவரை பார்த்திராத வகையில் மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்குமாம்

இளவரசி டயனாவுக்கு அடுத்ததாக, உலகம் இதுவரை பார்த்திராத வகையில், அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக, மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலம் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும், டி.வி.பார்வையாளர்களும் அதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இளவரசி டயனாவின் சவ ஊர்வலத்தில் தான் அதிகம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள. 12 வருடங்களுக்கு முன் இறந்த டயனாவின் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள, சுமார் 2,50,000 பேர் ஹைடல் பார்க்கில் மட்டும் கூடி இருந்தார்கள். இது தவிர பிரபல அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரஸ்லே 1977 ல் இறந்தபோது 75,000 ரசிகர்கள் கூடியிருந்தார்கள். ருடால்ப் வேலன்டினோ என்ற அமெரிக்க நடிகர் 1926 ல் இறந்தபோது 40,000 பேர் கூடியிருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலத்தில் டயனாவுக்கு அடுத்ததாக அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை மைக்கேல் ஜாக்ஸனின் சவ அடக்கத்தை குடும்ப நிகழ்ச்சியாக நடத்த தீர்மானித்தாலும் கூட ரசிகர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றும் என்கிறார்கள். மேலும் மைக்கேல் ஜாக்ஸன் ரகசியமாக முஸ்லிமாக மாறி விட்டார் என்றும் கூறப்படுகிறது. அப்படி அவர் முஸ்லீம் முறையில் அடக்கம் செய்யப்பட இருந்தால், இறந்த இரு நாட்களுக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டுமாம். அதற்கு வாய்ப்பு இல்லை. இன்னொரு செய்தியும் வெளிவருகிறது. அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல், பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


பெங்களுருவில் இருந்த துபாய்க்கு தினசரி விமான சேவை : கிங்ஃபிஷர் இயக்குகிறது

Justify Fullபெங்களுருவில் இருந்து துபாய்க்கு தினசரி விமான சேவையை தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் இயக்குகிறது. ஏற்கனவே லண்டன், கொழும்பு, மற்றும் தாகா போன்ற சர்வதேச நகரங்களுக்கு விமான சேவையை நடத்திக்கொண்டிருக்கும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், இப்போது நான்காவதாக துபாய்க்கு சேவையை துவங்கியிருக்கிறது. இந்த பயணத்திற்காக ஏ320 ரக விமானம் பயன்படுத்தப்படும் என்றும் கிங்ஃபிஷர் கிளாஸ், பிரீமியம் எக்கனாமி போன்ற வகுப்புகள் அதில் இருக்கும் என்றும் அந்த கிங்ஃபிஷர் தெரிவித்திருக்கிறது. பெங்களுருவில் இருந்து தினமும் மாலை 6 : 15 க்கு புறப்படும் அந்த விமானம்,ற இரவு 8 : 55 க்கு ( அங்குள்ள நேரம் ) துபாய் சென்றடையும். அதேபோல் அங்கு இரவு 10 : 10 க்கு புறப்படும் அந்த விமானம், பெங்களுருவுக்கு அடுத்த நாள் அதிகாலை 3 : 45 க்கு வந்து சேரும் என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Friday, June 26, 2009

ஏறியது பங்கு சந்தை

ஜூலை சீரியஸின் முதல் நாளான இன்று, பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. கேப்பிட்டல் குட்ஸ், பேங்கிங், ஆயில் அண்ட் கேஸ், டெக்னாலஜி மற்றும் ரியஸ் எஸ்டேட் பங்குகளின் வளர்ச்சியால் சந்தை குறியீட்டு எண்களான நிப்டி 4350 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 14700 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து முடிந்திருக்கிறது. கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தின் போது, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஓ என் ஜி சி, எல் அண்ட் டி, இன்போசிஸ், பெல், டிசிஎஸ், பார்தி, எஸ்பிஐ, ஸ்டெர்லைட், செய்ல், ஹெச்டிஎப்சி,மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதால், சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இருந்தாலும் சன் பார்மா, ரான்பாக்ஸி லேப், ஹீரோ ஹோண்டா, எம் அண்ட் எம், மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. சன் பார்மா வின் பங்கு மதிப்பு இன்று 11.5 சதவீதத்திற்கு மேல் குறைந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 419.02 புள்ளிகள் ( 2.92 சதவீதம் ) உயர்ந்து 14,764.64 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 133.65 புள்ளிகள் ( 3.15 சதவீதம் ) உயர்ந்து 4,375.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

நன்றி : தினமலர்



டாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்தது

2008 - 09 நிதி ஆண்டில், உலகின் ஆறாவது மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக ஐரோப்பாவில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 2,045 பேர்களின் வேலை பறிபோகும் என்றும் தெரிகிறது. ஐரோப்பாவில் ஸ்டீலுக்கான தேவை குறைந்து போனதையடுத்து கடும் நெருக்கடியில் இருக்கும் ஆங்கிலோ - டச் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்வது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையை விட இப்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்றார் டாடா ஸ்டீலின் மேலாண் இயக்குனர் முத்துராமன். பொருளாதார மந்த நிலையால், ஸ்டீலை அதிகம் பயன்படுத்தும் கட்டுமான துறை மற்றும் ஆட்டோமொபைல் தொழில் மோசமாக நலிவடைந்து போய் இருக்கிறது. எனவே ஆர்செலர் மிட்டல் போன்ற பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களே உற்பத்தியை வெகுவாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஐரோப்பாவை பொறுத்தவரை, இரண்டாம் உலகப்போருக்குப்பின் இந்த வருடம் தான் ஸ்டீலுக்காவ தேவை இந்தளவுக்கு மோசமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


இன்போசிஸ் துணை தலைவர் நந்தன் நிலேகனி ராஜினாமா ; மத்திய அரசு பணியில் சேர்ந்தார்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸில் துணை தலைவராக இருப்பவர் நந்தன் நிலேகனி. அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சருக்கு நிகரான பதவியில் சேர்ந்திருக்கிறார். இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு துவங்கியுள்ளது. அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஆணையத்தின் தலைவராக நிலேகனி நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனம் துவக்கப்பட காரணமானவர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். 2007ல் அந்த நிறுவனத்தின் துணை தலைவரான பின், நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்தார். 21 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடைய இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


மைக்கேல் ஜாக்ஸனின் மரணம் குறித்த செய்தியை அறிய இன்டர்நெட்டை மொய்த்த அவரது ரசிகர்கள்

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்ததாக செய்தி வெளியான உடனேயே அவரை குறித்த செய்திகள் மற்றும் விபரங்களை அறிய, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இன்டர்நெட்டை மொய்க்க ஆரம்பித்து விட்டனர். அதிகம் பேரால் பார்க்கப்பட்டது கூகிள் வெப்சைட்தான். அவரது மரணம் குறித்த செய்திகளை விட அவர் குறித்த விபரங்களை அறிய நிறைய பேர் கூகிள் வெப்சைட்டை பார்த்திருக்கிறார்கள். அதேபோல் அவரது மரணம் குறித்த செய்திகளை அறிய லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெப்சைட்டை அதிகம் பேர் பார்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏனென்றால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்திருக்கிறார்.எனவே உள்ளூர் பத்திரிக்கையான லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இல் தான் அவர் குறித்த செய்திகள் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருதியிருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


Thursday, June 25, 2009

ரூ.50 ஆயிரம் முதலீட்டுக்கு பான் எண் தேவையில்லை

மியூச்சுவல் பண்ட் உட்பட, 'சிப்' திட்டங்களில் 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்ய, 'பான்' கார்டு எண் கட்டாயம் இல்லை.'சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' (சிப்) திட்டங்களில் முதலீடு செய்ய, 'பான்' கார்டு எண் கட்டாயம் என்று 2007ல், பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டது. இதனால், மியூச்சுவல் பண்ட் திட் டங்களில் முதலீடு செய்வோரிடையே கலக்கம் ஏற்பட்டது.இது போன்ற திட்டங்களில் தனி நபர்களும், நிறுவனங்களும் முதலீடு செய்வது வழக்கம். தனி நபர் முதலீடுகள் அதிகம் வருவதைத் தான் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எதிர் பார்க்கின்றன. அது தான் சீரான வர்த்தகத்துக்கு வழி வகுக்கும் என்பதால் தான்.கடந்தாண்டு, தனி நபர்களை விட, நிறுவனங்களின் முதலீடுகள் தான் அதிகம். ஆனால், திடீரென பெரும்பாலான முதலீடுகளை திரும்பப் பெற்றுக்கொண்டதால், சிக்கல் ஏற்பட்டது.தனி நபர்கள் அதிகளவில் முதலீடு செய்யாமல் இருப்பதற்கு காரணம், 'பான்' எண் குறிப்பிட வேண்டும் என் பது தான். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படவே, அரசும் பரிசீலித்தது.'சிப்' வகையிலான முதலீடுகளில் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் முதலீடு செய்யும் போது, 'பான்' எண் கட்டாயம் இனி இருக்காது. இது தொடர்பாக மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வரும்.இது குறித்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கத்தலைவர் குரியன் கூறுகையில், 'மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, 'பான்' கட்டாயம் என்ற வரம்பில் தளர்வு கொண்டு வர மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது' என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


ஏர் - இந்தியாவின் எல்லா சுமைகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் : மன்மோகன் சிங்

ஏர் - இந்தியாவின் எல்லா சுமைகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்தார். ஆனால் அதற்கு பதிலாக ஏர் - இந்தியா நிறுவனம், கடுமையான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். நிர்வாகத்துறையில், நிதித்துறையில் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையில் பல மாறுதல்களை ஏர் - இந்தியா செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த ஏர் - இந்தியா அதிகாரிகள், ஒரு ஏர்லைன்ஸ் சிரமத்திற்குள்ளாகும் போதெல்லாம் ஒரு அரசாங்கத்தால் உதவிக் கொண்டிருக்க முடியாதுதான் என்றனர். இது குறித்து பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பட்டேல், குறுகிய கால மற்றும் நீண்ட கால நோக்கில் செலவை குறைத்து வருமானத்தை பெருக்க ஏர் - இந்தியா பல கண்டிப்பான நடவடிக்கைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றார். ஏர் - இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த கடும் நிதி நெருக்கடி குறித்து நேற்று பிரதமர் மன்மோகன்சிங்குடன், பிரபுல் பட்டேல், மூத்த அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஏர் - இந்தியாவின் புதிய சிஎம்டி அர்விந்த் ஜாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். ஊழியர்கள் எண்ணிக்கையில் மட்டுமல்லாது, அவர்களது சம்பளம் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவைகளில் பல தேவையில்லாத விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை உடனடியாக நீக்க வேண்டியிருக்கிறது என்றார் பிரபுல் பட்டேல்.
நன்றி : தினமலர்


பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறது பங்குச் சந்தை - சேதுராமன் சாத்தப்பன்

பங்குச் சந்தை 15,000 புள்ளிகள் வரை பறந்தது. ஆனால், அதன் பிறகு ஓய்வு எடுக்கிறதா? இல்லை, பொறுமை காக்கிறதா? இல்லை கீழே சரிகிறதா என்று முதலீட்டாளர்கள் பலருக்கும் புரியவில்லை. ஏனெனில், சந்தையின் போக்கு அப்படித்தான் இருந்தது.திங்களன்று லாப நோக்கில் முதலீட்டாளர்கள் விற்றதால் சந்தை 196 புள்ளிகளை இழந்து முடிந்தது. நேற்று முன்தினம் உலக சந்தைகளின் போக்கை வைத்தே இந்திய சந்தைகளும் இருந்தன. துவக்கத்தில் கீழேயே துவங்கியது. மதியத்திற்கு மேல் சந்தைகள் இழந்த நஷ்டத்தையும் சரி செய்து நஷ்டமும் இல்லாமல், லாபமும் இல்லாமல் முடிந்தது.நேற்று சந்தை கீழேயே துவங்கியது. ஆனால், பின்னர் 98 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது.நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 98 புள்ளிகள் மேலே சென்று 14,422 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் மேலே சென்று 4,292 புள்ளிகளுடனும் முடிந்தது.மகேந்திராவின் சத்யம்: சத்யம் கம்பெனி பெயர் மாற்றப்பட்டு மகேந்திரா சத்யம் என்று ஆகியுள்ளது. இனிமேல் தவறுகள் நடக்காது என்ற மகேந்திராவின், சத்யமாக இருக்கட்டும்.சில வாரங்களுக்கு முன் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கூடும் எனக் கணித்திருந்தோம். ஆனால், ஏன் தற்போது குறைந்து வருகிறது. அப்போது பங்குச் சந்தைக்குள் வெளிநாட்டு பணவரவு நிறைய இருந்தது.தற்போது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதை குறைத்து, விற்று எடுத்துக் கொண்டு செல்கின்றன. உலகளவில் டாலர் மற்ற கரன்சிகளுக்கு எதிராக வலுப்பெற்று வருகிறது. பட்ஜெட் நன்றாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு பணவரவு அதிகமாக இருக்கும். அப்போது மறுபடி இந்திய ரூபாய் 47 அளவில் வரலாம்.ரயில்வே பட்ஜெட்: ரயில்வே பட்ஜெட்டை எதிர்பார்த்து 10க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றுக் கொண்டிருக்கின்றன. அவை கலிந்தி ரெயில் நிர்மான், கன்டெய்னர் கார்ப்பரேஷன், பி.இ.எம்.எல்., சிம்ப்ஸ்க்ஸ் கேஸ்டிங், கெர்னெக்ஸ் மைக்ரோ சிஸ்டம்ஸ், டிடாகர் வேகன்ஸ், டெக்ஸ்மாகோ, ஸ்டோன் இந்தியா, ஹிந்த் ரெக்டிபையர், பி.எச்.இ.எல்.,பவர் கிரிட் கார்ப்பரேஷன் சில காலம் முன் தனது புதிய வெளியீட்டை கொண்டு வந்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். போட்டவர்களுக்கெல்லாம் லாபம் வழங்கிய வெளியீடு அது. அவர்கள் இன்னும் முதலீட்டை அதிகரிக்க மறுபடி கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்; கிட்டதட்ட 3000 கோடி ரூபாய் வெளியீடு. மகேந்திரா புதிய வெளியீட்டிற்கு க்ரே மார்க்கெட்டில் 45 முதல் 50 ரூபாய் வரை பிரிமியம் இருப்பதாக செய்திகள் வருகின்றன.உலகளவில் ஒரு பெரிய புதிய வெளியீட்டை சீனாவில் உள்ள, 'சைனா மெட்டலர்ஜிகல்' என்ற கம்பெனி கொண்டு வரவுள்ளது. இது, 8,000 முதல் 10,000 கோடி ரூபாய் வரை திரட்டவுள்ளது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?ஒரு காலாண்டு முடிந்து அடுத்த காலாண்டு வரப்போகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆமாம், ஜூன் காலாண்டு, அதாவது கம்பெனிகளின் இந்த ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் இருந்து வரத்துவங்கி விடும்.மேலும், பட்ஜெட் வேறு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும். இரண்டும் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதன் பிறகு சந்தை மேலே செல்லும்.
நன்றி : தினமலர்


Wednesday, June 24, 2009

பங்கு சந்தையில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய எல்.ஐ.சி.,திட்டம்

பங்கு சந்தையில் ரூ.50,000 கோடியை இந்த நிதி ஆண்டில் முதலீடு செய்ய எல்.ஐ.சி.,ஆஃப் இந்தியா திட்டமிட்டிருக்கிறது. கடந்த வருடம் நாங்கள் ரூ.40,800 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தோம். இந்த வருடம் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம் என்றார் எல்.ஐ.சி.,யின் மேலாண் இயக்குனர் தாமஸ் மேத்யூ. இந்த நிதி ஆண்டில் இதுவரையிலும் எல்.ஐ.சி., ரூ.8,000 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருக்கிறது. இது தவிர அரசுத்துறை பத்திரங்களிலும், கார்பரேட் கடன் பத்திரங்களிலும் எல்.ஐ.சி., முதலீடு செய்திருக்கிறது. நேற்று எல்.ஐ.சி.,யின் சேர்மன் விஜயன் இது குறித்து பேசியபோது, இந்த நிதி ஆண்டில் நாங்கள் 20 சதவீத கூடுதல் பிரீமியம் வருவாயை எதிர்பார்க் கிறோம். புது பிரீமியம் மூலம் கிடைக்கும் வருவாயை பொறுத்தவரை, 2008 - 09 நிதி ஆண்டில் 10 சதவீதம் குறைந்திருந்தது. அது இந்த நிதி ஆண்டில் 25 சதவீதம் உயரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். 2008 - 09 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.,பிரீமியம் வருவாயாக ரூ.1,55,000 கோடியை பெற்றிருந்தது. அதில் புது பிரீமியம் வருவாய் ரூ.52,000 கோடியும் அடங்கும்.
நன்றி :தினமலர்


பஜாஜ் அறிமுகப்படுத்திய 220 சிசி பல்சர்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் புதிய 220 சிசி பல்சர் மாடல் பைக்கை நேற்று டில்லியில் அறிமுகம் செய்தது. 21.4 பிஎஸ் பவருடன் வெளிவரும் இந்த புதிய பைக்கின் விலை ரூ.70,000. இதன் அறிமுக விழாவில் பேசிய பஜாஜ் ஆட்டோவின் சி.இ.ஓ.,( இரு சக்கர வாகனம் ) ஸ்ரீதர், நாங்கள் அதிக மைலேஜ் கொடுக்க கூடிய இஞ்சின்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். அவைகளை கொண்டு இந்த வருடத்திற்குள் மேலும் இரண்டு பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார். மேலும் பல்சர் பிரியர்களுக்காக, அதில் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி அதன் மேம்படுத்தப்பட்ட மாடல்களை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறோம் என்றார். இப்போது வெளியிட்டிருக்கும் பல்சர் 220 சிசி பைக் தான் இப்போதைக்கு இந்தியாவில் அதிக வேகமாக போகக் கூடிய பைக்காக இருக்கும் என்று சொன்ன அவர், உலகிலேயே அதிக மைலேஜ் கொடுக்க கூடிய டிடிஎஸ் -எஸ்ஐ 2.0 பைக்கை அடுத்த மாதம் வெளியிட இருக்கிறோம் என்றார். பஜாஜ் ஆட்டோவின் மேலாண் இயக்குனர் ராஜிவ் பஜாஜ் இது பற்றி பேசுகையில், நாங்கள் வருடத்திற்கு 2.50 லட்சம் பைக்குகளை விற்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


டாடாவின் நானோ காரை பெறுவதற்காக 1.55 லட்சம் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பு

உலகின் மிக மலிவான கார் என்று சொல்லப்படும் டாடா மோட்டார்ஸின் நானோ காரை பெறுவதற்காக, 1.55 லட்சம் வாடிக்கையாளர்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு அடுத்த மாதத்தில் இருந்து நானோ சப்ளை செய்யப்படும். அடுத்த மாதத்தில் துவங்கும் சப்ளை, அடுத்த வருடம் மார்ச்சுக்குள் முடியும். அடுத்த கட்டமாக 55,021 பேருக்கு அதன்பின்னர் நானோ சப்ளை செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. டாடாவின் நானோவுக்காக மொத்தம் 2,06,703 பேர் புக் செய்திருந்தார்கள். அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டிய கார் தயாரிக்கப்பட்டு விட்டது என்றும், அவர்கள் மட்டும் நாங்கள் மார்ச் 23ம் தேதி அறிவித்த எக்ஸ் - ஷோரூம் விலையில் நானோவை பெறுவார்கள் என்றும் சொன்னார்கள்.
நன்றி : தினமலர்



மகிந்திரா சத்யத்திற்கு புது சி.இ.ஓ.,வாக குர்னானி நியமனம்

மகிந்திரா சத்யம் என்று பெயர் மாற்றம் செய்ப்பட்டுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஒ.,வாக சி.பி.குர்னானி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக சஞ்சய் கர்லா என்பவர் டெக் மகிந்திராவின் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதே போல் மகிந்திரா சத்யத்தின் புதிய சி.எஃப்.ஓ.,வாக சுப்ரமணியம் துர்கா சங்கரும், டெக் மகிந்திரா மற்றும் மகிந்திரா சத்யத்தில் வைஸ் பிரசிடென்ட் ஆக வினீத் நய்யாரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே மகிந்திரா சத்யத்தில் இடைக்கால சி.இ.ஓ.வாக இருந்த ஏ.எஸ் மூர்த்தி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாகத்தான் குர்னானி நியமிக்கப்பட்டிருக்கிறார். குர்னானி இதற்கு முன் டெக் மகிந்திராவின் சர்வதேச நடவடிக்கைகளின் தலைவராக இருந்தவர். ஆனால் ஏ.எஸ்.மூர்த்தி தொடர்ந்து மகிந்திரா சத்யத்தில்தான் இருப்பார். துர்காசங்கர் இதற்கு முன் மகிந்திரா அண்ட் மகிந்திராவின் எம் அண்ட் ஏ பிரிவில் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ஆக இருந்தார். நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் நேற்று செவ்வாய் கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, June 23, 2009

ஆசிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி

உலக பொருளாதாரம் வீழ்ந்து வருவதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டதையடுத்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அதனையடுத்து இன்று ஆசிய பங்கு சந்தைகளும் கடும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. ஜப்பானின் சந்தை குறியீட்டு எண் நிக்கி 3.4 சதவீத வீழ்ச்சியை கண்டிருக்கிறது. ஹாங்காங்கின் ஹோங்செங் 3.2 சதவீதம் சரிந்திருக்கிறது. உலக வங்கியின் அறிக்கையால் கச்சா எண்ணெய் விலை மற்றும் மெட்டல் விலை சரிந்திருக்கிறது. எனவே இது சார்ந்த தொழில்துறை பங்கு மதிப்பும் குறைந்திருக்கிறது. இன்று காலை வர்த்தகத்தின்போது, அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.10 டாலர் குறைந்து 66.40 டாலராக இருக்கிறது. திங்கள் அன்று அதன் விலை பேரலுக்கு 2.76 டாலர் குறைந்திருந்தது. லண்டனில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 98 சென்ட் குறைந்து 66 டாலராக இருக்கிறது. அமெரிக்காவின் டவ்ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் இன்டக்ஸ் திங்கள் அன்று 2.4 சதவீதம் குறைந்திருந்தது. லண்டனின் எஃப்.டி.எப்.சி. 100 ன் இன்டக்ஸ் 2.6 சதவீதம் குறைந்திருந்தது.ஆஸ்திரேலி பங்கு சந்தையிலும் 3 சதவீத சரிவு ஏற்பட்டிருக்கிறது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், முன்னேறும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம் தான் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. 2008ல் அதன் வளர்ச்சி 5.9 சதவீதமாகவும், 2007ல் அதன் வளர்ச்சி 8.1 சதவீதமாகவும் இருந்தது.
நன்றி : தினமலர்


சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸின் பெயர் மகிந்திரா சத்யம் என மாற்றம் செய்யப்பட்டது

ஊழல் சூறாவளியில் சிக்கித் திணறிய சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் பெயர் மகிந்திரா சத்யம் என மாற்றப்பட்டுள்ளது. இது, மகிந்திரா குழுமத்தின் நற்பெயர் மற்றும் சத்யம் நிறுவனத்தின் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துவதாக அமையும் என மகிந்திரா குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார். நம்நாட்டில் இதுவரை எந்த நிறுவனமும் செய்தாத மோசடியை சத்யம் கம்ப்யூட்டர்ஸின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ செய்திருந்தார். சுமார் ரூ.8,000 கோடிக்கு நிதி நிலை கணக்குகளில் முறைகேடுகள் செய்ததை அவர் ஜனவரி மாதத்தில் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய களங்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த நிறுவனம் விற்பனைக்கு வந்ததையடுத்து, மகிந்திரா குழுமுத்தின் ஓர் அங்கமான டெக் மகிந்திரா நிறுவனம், சத்யம் நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை ரூ.1,760 கோடிக்கு சென்ற ஏப்ரல் மாதத்தில் வாங்கியது. அப்போதே, அதன் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று மகிந்திரா கருதியது. சத்யம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் பெயரை மாற்ற வேண்டும் என டெக் மகிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்ற டெக் மகிந்திரா மற்றும் சத்யம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில், மகிந்திரா சத்யம் என பெயர் மாற்றம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
நன்றி : தினமலர்


ஏர் - இந்தியா ஊழியர்களுக்கான சம்பளத்தில் 17 சதவீதம் குறைக்கப்படுகிறது

நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி வரை நஷ்டம் அடைந்து வரும் ஏர் - இந்தியா நிறுவனம், செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழியர்களுக்கான ஜூன் மாத சம்பளத்தை, ஜூன் கடைசி தேதிக்கு பதிலாக ஜூலை 15 ம் தேதி கொடுப்பதாக அறிவித்தது. பின்னர் அதன் உயர் அதிகாரிகள் எல்லோரும் ஜூலை மாதத்தில் சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை இல்லாமல் வேலை பாருங்கள் என்றது. இப்போது மூன்றாவதாக ஊழியர்களுக்கு செலவு செய்து வந்த வருடாந்தர தொகையில் 17 சதவீதத்தை அல்லது ரூ.500 கோடியை குறைக்க முடிவு செய்திருக்கிறது. அதற்காக ஒரு கமிட்டியை நியமனம் செய்திருக்கிறது. இப்போது அந்த நிறுவனத்தில் 31,000 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு வருடந்தோறும் சம்பளம் மற்றும் மற்ற வசதிகளுக்கான தொகையாக ரூ.3,000 கோடி செலவு செய்யப்படுகிறது. இதிலிருந்து ரூ.500 கோடியை குறைத்து ரூ.2,500 கோடியாக மாற்ற முயற்றிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நான்கு பேரை கொண்ட அந்த கமிட்டி, ஊழியர்களுக்கும் ஏர் - இந்தியா நிர்வாகத்துக்கு மிடையே போடப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த ஒப்பந்தத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.ற அந்த குழுவில் மனித வள மேம்பாட்டு துறையை சேர்ந்தவர்களும் நிதித்துறையை சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இப்போது ஏர் - இந்தியாவின் மொத்த நிர்வாக செலவில் 35 சதவீதம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மற்ற வசதிகளுக்காகவே செலவு செய்யப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அமைப்பது குறித்து அந்த குழு ஆராய்ந்து, ஜூலை 15ம் தேதிக்கும் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


சுவிஸ் வங்கியின் சேமிப்பு குறித்த விபரத்தை அளிக்க சுவிஸ் அரசு சம்மதம்

வரி கட்டுவதில் இருந்து தப்புவதற்காக சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் ( கருப்பு பணம் ) குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று சுவிஸ் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. போதைப்பொருள் விற்பனை அல்லது லஞ்சம் மூலம் பெற்ற பணம் ஆகிய இரண்டு வகையான பணத்தை மட்டுமே சுவிஸ் வங்கி இதுவரை பெற்றுக்கொள்ளாமல் இருந்தது. இந்த இரு வகையில் இல்லாமல் மற்ற எந்த வகையில் ஒருவர் பணம் சம்பாதித் திருந்தாலும் அவரது பணத்தை சுவிஸ் வங்கிகள் பெற்றுக்கொள்ளும். அது சம்பந்தமான விபரங்களை யாருக்கும் சொல்லாமல் ரகசியம் காக்கும். ஆனால் உலகம் முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்கள், வருமான வரித்துறைக்கு காட்டாமல் சம்பாதிக்கும் கருப்பு பணத்தையும் சுவிஸ் வங்கியில் சேமித்து வைக்க துவங்கினர். இதனால் அவர்கள் அந்தந்த நாட்டில் வரி கட்டுவதில் இருந்து தப்பித்து வந்தனர். இவ்வாறு வரி கட்டுவதில் இருந்து தப்பித்த இந்தியர் களின் பணமும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் சேமிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கருப்பு பணம் யார் யார் பெயரில் எவ்வளவு தொகை சேமிக்கப்பட்டிருக்கிறது என்ற விபரம் நமக்கு தெரிவதில்லை. இதனை போக்கும் விதமாக இந்திய அரசு, சுவிட்சர்லாந்து அரசுடன் தொடர்பு கொண்டு, டபுள் டேக்ஷேசன் ஆவாய்டன்ஸ் அக்ரீமென்ட் ( டிடிஏஏ ) படி, வரி கட்டுவதில் இருந்து தப்புவதற்காக சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் குறித்த விபரத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனை பரிசீலித்த சுவிட்சர்லாந்து அரசு, இந்திய அரசு கேட்டுக்கொண்டால் அந்த விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது.
நன்றி : தினமலர்


Monday, June 22, 2009

பங்கு விற்பனை: மத்திய அரசு புது முடிவு

கடும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, அரசு துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று, 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்த போது, இடதுசாரிகள் மிரட்டல் இருந்ததால், அரசு துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடியாமல் தவித்தது மத்திய அரசு. இந்த முறை இடதுசாரிகள் ஓரம் கட்டப்பட்டு விட்டதால், அவர்கள் தொல்லையில்லாமல் திட்டங்களை நிறைவேற்றுவதில் காங்., நிம்மதி அடைந்துள்ளது. ரசு செலவின மதிப்பீடுகள் அதிகரித்து வருகின்றன; வருவாயும் போதுமான அளவுக்கு இல்லை. திட்டங்களை நிறைவேற்ற அதிகளவில் ஒதுக்கீடும் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால், இதற்கான நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் சிலவற்றை தனியாருக்கு விற்று, அதன் மூலம் நிதி திரட்ட அரசு திட்டம் தீட்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, வரும் 6ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, அதில் பிரணாப் முகர்ஜி வெளியிடுவார் என்று தெரிகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம், 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, இரு கட்டமாக பங்குகளை விற்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

நன்றி : தினமலர்



Saturday, June 20, 2009

மூலிகை சிகிச்சைக்காக கேரளா வரும் வெளிநாட்டு பயணிகள் வரத்து குறைந்தது

கேரளாவில் பிரபலமாக இருக்கும் மூலிகை சிகிச்சைக்காக ( ஸ்பா ) அங்குள்ள பருவ காலத்தில் ( ஜூன் - செப்டம்பர் ) ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடமிருந்து நிறைய சுற்றுலா பயணிகள் இதற்காக வருவதுண்டு. இப்போது அங்கு பொருளாதார மந்த நிலை தீவிரமாக இருப்பதால், அங்கிருந்து வருபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்த பருவ காலத்திலும் அங்கிருந்து வருபவர்கள் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்து விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். பொதுவாக பருவ காலத்தில்தான் சுற்றுச்சூழல் தூசு இல்லாமலும், குளிராகவும் இருக்கும். அப்போதுதான் நம் உடம்பில் உள்ள மயிர்க்கால்களின் ஓட்டைகளும் நன்கு திறந்திருக்கும். அப்போது மூலிகை சிகிச்சை செய்தால்தான் அது உடலுக்கு நல்ல பயனை தரும். எனவே இந்த காலம் தான் மூலிகை சிகிச்சை செய்து கொள்ள ஏற்ற காலம். ஆனால் இந்த வருடம் அதையும் எதிர்பார்க்க முடியாது என்றார் டாக்டர் ராஜேஷ். இவர் கொச்சியை சேர்ந்த சாப்டச் ஹெல்த்கேர் நிறுவனத்தின் டாக்டராக இருக்கிறார். இந்த நிறுவனத்திற்கு மூலிகை சிகிச்சைக்காக ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருவது வழக்கம். மேலும் கோயம்புத்தூரில் இருக்கும் ஆர்ய வைத்ய பார்மஸி ( ஏவிபி ) மற்றும் கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை ஆகியவற்றுக்கும் சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்கிறார் ஏவிபி யின் மேலாண் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணகுமார்.
நன்றி : தினமலர்


பெல் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு

இந்திய அளவில் மதிப்பு மிக்க பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் ( பெல் ) மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளில் கொஞ்சம் பங்குகளை விற்க மத்திய அரசு முன் வந்திருக்கிறது. பெரிய தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் நேற்று இதனை தெரிவித்தார். இரண்டாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இல்லாததால் இதற்கு எதிர்ப்பு அவ்வளவாக இருக்காது என்று எண்ணிய மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், ரூ.28,000 கோடி மதிப்புள்ள பெல் நிறுவனத்தில் 67.72 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மத்திய அரசு, கடந்த 2005 இலேயே அதன் பங்குகளில் கொஞ்சம் பங்குகளை விற்க முன் வந்தது. அப்போது இடதுசாரி கட்சிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்ததால், அது கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வேறு வழியில்லாமல் மத்திய அரசு விற்பனையை கைவிட்டது. இப்போது இடதுசாரிகளின் தொந்தரவு இல்லாததால் மீண்டும் விற்பனைக்கான முயற்சியை ஆரம்பித்திருக்கிறது. பெல் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் 67.72 சதவீத பங்குகளில் 10 சதவீதத்தை விற்கும் என்று தெரிகிறது. இப்போது பெல் நிறுவனத்தின் சந்தை முதலீடு ரூ.1,02,334 கோடியாக இருக்கிறது. 10 சதவீத பங்குகளை விற்பதால் அதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.10,234 கோடி கிடைக்கும். மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான சாதனங்களை பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. மத்திய அரசின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்கள் லிஸ்ட்டில் பெல் நிறுவனமும் இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இருந்தால், அந்த நிறுவனம் அதிக சுதந்திரம் கொண்டதாக இருக்கிறது என்று அர்த்தம்.
நன்றி : தினமலர்


'யூ மொபைல்' வசதியை அறிமுகப்படுத்தியது யூனியன் வங்கி

மொபைல் மூலம் வங்கியின் அனைத்து சேவையும் பெற முடிகிற, 'யூ மொபைல்' வசதியை, இந்திய யூனியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நாயர் அறிமுகப்படுத்தினார்.
அறிமுக நிகழ்ச்சியில் நாயர் பேசியதாவது: இந்திய யூனியன் வங்கி ஏற்கனவே, குறிப்பிட்ட செயல்பாடுகள் கொண்ட மொபைல் வங்கி சேவையை நடைமுறைப்படுத்தியது. அடுத்த கட்டமாக, முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்ட, 'யூ மொபைல்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டில் இந்திய யூனியன் வங்கியில் மற்றும் கிளைகளில் ரொக்கம் பெறாமல், எலக்ட்ரானிக் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ததில், 6 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, இதை 35 சதவீதமாக உயர்த்த, 'யூ மொபைல்' வசதி பெரிதும் உதவும். மொபைல் போனில் பட்டனை அழுத்தினால், வங்கியின் அனைத்து சேவைகளையும் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த 'யூ மொபைல்' வசதியை, எஸ்.எம்.எஸ்., மற்றும் ஜி.பி.ஆர்.எஸ்., மூலம் பெறலாம். வங்கித் துறையில் பாதுகாப்பாக, எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செயல்படுத்த முடிகிற இந்த வசதியின் மூலம், யூனியன் வங்கி கணக்கிற்கு மற்றும் இதர வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றவும், காசோலைகளை நிறுத்தவும், காசோலை புத்தகம் அனுப்பச் சொல்லியும் தகவல் அனுப்பி, பயன் பெறலாம். யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள், மொபைல் போன் கணக்கு மூலம் செக் நிலவரம், கிளை ஏ.டி.எம்., இருப்பிடம், கணக்கு பட்டியல், கணக்கு இருப்பு பற்றிய விசாரணை, மினி ஸ்டேட்மென்ட் போன்றவற்றைப் பெறலாம். இவ்வாறு நாயர் பேசினார்.
நன்றி : தினமலர்


சம்பளம் இல்லாமல் வேலை பாருங்கள் : ஏர் - இந்தியாவும் கேட்கிறது

ஜூலை மாதத்தில் சம்பளம் இல்லாமல் வேலை பாருங்கள் என்று அதன் ஊழியர்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ் கேட்டுக்கொண்டது போலவே, ஏர் - இந்தியாவும் கேட்டிருக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ், அதன் எல்லா ஊழியர்களிடமும் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க சொன்னது. ஏர் - இந்தியாவோ, நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களிடமும் மூத்த அதிகாரிகளிடமும் மட்டுமே ஜூலை மாதத்தில் சம்பளம் மற்றும் உற்பத்திக்கு தகுந்த ஊக்க தொகை பெறாமல் வேலைபார்க்க சொல்லி கேட்டிருக்கிறது.கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் இந்த இரு விமான கம்பெனிகளும் செலவை கட்டுப்படுத்த இந்த ஏற்பாட்டிற்கு இறங்கி வந்திருக்கின்றன. இது குறித்து வெள்ளி அன்று ஏர் - இந்தியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஏர் - இந்தியாவின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குநர் அர்விந்த் ஜாதவ், ஜெனரல் மேனேஜர் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருப்பவர்கள் ஜூலை மாதத்தில் சம்பளம், ஊக்கதொகை இல்லாமல் வேலை பாருங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த மாத துவக்கத்தில்தான் ஏர் - இந்தியா நிறுவனம், அதன் ஊழியர்களுக்கான ஜூன் மாத சம்பளத்தை ஜூலை ஒன்றாம் தேதிக்கு பதிலாக 15 நாள் கழித்து ஜூலை 15 ம் தேதி வழங்குவதாக அறிவித்தது. இப்போது அதன் மூத்த அதிகாரிகளுக்கு ஜூலை மாதம் சம்பளம் இல்லை என்கிறது. 2008 - 09 நிதி ஆண்டில் ஏர் - இந்தியா ரூ.4,000 கோடி வரை நஷ்டம் அடைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.2,226 கோடி நஷ்டம் அடைந்திருந்தது.
நன்றி : தினமலர்


Friday, June 19, 2009

இந்திய நிறுவனங்களால் 3 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைச்சிருக்கு

அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகள் எல்லாம் இந்தியாவுக்கே போய்க்கொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்கர்களுக்கு வேலை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று புலம்பிக்கொண்டிருக்கும் அமெரிக்கர்களின் பார்வைக்கு ஒரு ஆச்சரியமான தகவலை ' இன்டியா பிராண்ட் ஈக்வட்டி ஃபவுண்டேஷன் ' என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்களால் 2004 - 07 காலத்தில் 3,00,000 அமெரிக்கர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பதுதான் அந்த தகவல். வாஷிங்டனில் அந்த அறிக்கையை வெளியிட்டு பேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா, 2004 - 07 காலத்தில் இந்திய நிறுவனங்களால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 10,500 கோடி டாலர்கள் கிடைத்திருக்கிறது என்றார். இந்தியர்களால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 10,500 கோடி டாலர் வந்து கொண்டிருக்கும் நிலையில்தான், 5,000 கோடி டாலர் அளவுக்கு இந்தியாவில் நடக்கும் அவுட்சோர்சிங் வேலையையும் அமெரிக்கர்களுக்கே கொடுங்கள் என்கிறார்கள். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூட, பெங்களுருக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் அவுட்சோர்சிங் வேலையை பஃப்பல்லோவுக்கு கொடுத்தால் என்ன என்று கேட்கிறார்.
நன்றி : தினமலர்


5 ஆண்டுகளில் தங்கம் விலை மூன்று மடங்கு உயர்வு

ஆண்டுக்கு ஆண்டு தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டே செல்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை மூன்று மடங்கு உயர்ந்தாலும், விற்பனை மட்டும் குறையவில்லை.
தற்போது, நகை வாங்குவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள் ளது. நகைகளாக வாங்கிக் குவிப்பதை விட தங்க நாணயங்களாக வாங்கி சேமிப்பதே புத்திசாலித்தனம் எனக் கருதுகின்றனர்.
விற்கும் போது சேதாரம் குறைப்பதில்லை, அன்றைய விலைக்கே விற்கலாம் என்பதே காரணம்.
நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கும் தங்க விலை குறைய வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து சென்னை நகர தங்க நகை மொத்த வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் உதயகுமார் கூறுகையில், 'மே 15ம் தேதி கிராம் ஆயிரத்து 379 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து 32 ரூபாய்க்கும் விற்றது. அதிகபட்சமாக ஜூன் 16ம் தேதி கிராம் ஆயிரத்து 387 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து 96 ரூபாய்க்கும் விற்றது.
அமெரிக்க டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 51 ஆக இருந்தது. தற்போது 47 ரூபாய்க்கு வந்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை தற்போது சிறிது குறைந்துள்ளது. டாலர் மதிப்பில் 44 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதால், தங்கம் விலை 30 முதல் 50 ரூபாய் வரை குறையலாம்' என்றார்.
நேற்று சென்னை நகரில் ஒரு கிராம் ஆயிரத்து 357 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்றது.
மதுரை மற்றும் திருச்சியில் கிராம் ஆயிரத்து 374 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 992 ரூபாய்க்கும் விற்பனையானது. கோவையில் கிராம் ஆயிரத்து 360 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்றது. கடந்த 2004ம் ஆண்டு ஒரு சவரன் நான்காயிரத்து 760க்கு விற்ற தங்கம், தற்போது 10 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
நன்றி : தினமலர்


Thursday, June 18, 2009

சீன நடிகர் ஜெட் லீ சிங்கப்பூர் பிரஜை ஆனார்

பிரபல சீன நடிகர் ஜெட் லீ சிங்கப்பூர் குடியுரிமை வாங்கியிருக்கிறார். இதற்காக சிங்கப்பூரில் 14 மில்லியன் டாலர் ( சுமார் ரூ.66.5 கோடி ) மதிப்புள்ள சொத்து ஒன்றை வாங்கியிருப்பதாக பிசினஸ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் அவர்களுக்கு அங்கு சொந்தமாக ஏதாவது ஒரு சொத்து இருக்க வேண்டும் என்பது விதி. சீன தலைநகரான பெய்ஜிங்கில் பிறந்த நடிகர் ஜெட் லீ எப்போது சிங்கப்பூரில் சொத்து வாங்கினார்; எப்போது குடியுரிமை பெற்றார் என்ற விபரம் சொல்லப்படவில்லை. ஏற்கனவே கோங் லீ என்ற சீன நடிகை சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருக்கிறார். இப்போது இரண்டாவதாக ஒரு சீன நடிகர் சிங்கப்பூர் பிரஜை ஆகியிருக்கிறார்.
நன்றி : தினமலர்


30 ஆண்டுகளில் முதல் முறையாக பணவீக்கம் மைனஸ் நிலைக்கு போனது

மே 30ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 0.13 சதவீதமாக இருந்த இந்தியாவின் பணவீக்க விகிதம், ஜூன் 6 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் மைனஸ் 1.61 சதவீதமாக ஆனது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த 30 ஆண்டுகளில் இப்போதுதான் மைனஸ் நிலைக்கு சென்றிருக்கிறது. இப்போதைய நிலையில் உலகிலேயே பணவீக்க விகிதம் மைனஸ் நிலைக்கு சென்றது இந்தியாவில் மட்டுமே. ஐரோப்பிய நாடுகளில் கூட சைபர் நிலை வரைக்குமே பணவீக்கம் சென்றிருக்கிறது.
நன்றி : தினமலர்


Wednesday, June 17, 2009

பங்கு சந்தையில் 435 புள்ளிகள் சரிவு

பங்கு சந்தை இன்றும் சரிவில் முடிந்திருக்கிறது. காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்திருந்த சந்தை குறியீட்டு எண்கள், மாலை வர்த்தக முடிவு வரை நீடித்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 435.07 புள்ளிகள் ( 2.91 சதவீதம் ) குறைந்து 14,522.84 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 161.65 புள்ளிகள் ( 3.58 சதவீதம் ) குறைந்து 4,356.15 புள்ளிகளில் முடிந்திருக் கிறது. கடந்த மூன்று நாட்களாகவே நிறுவன முதலீட்டாளர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாலும் இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன என்றும் சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த வருடம் அடைய இருக்கும் வருமான இழப்பு ரூ.38,700 கோடி

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையால், இந்த வருட வருமானத்தில் ரூ.38,700 கோடியை இழப்பார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களுமே ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையின் போதும் ரூ.2.96 ஐ இழக்கிறார்கள் என்கின்றனர் அதிகாரிகள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 70 டாலர் வரை உயர்ந்து விட்டதால், ஏற்கனவே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையின் போதும் ஆகிக்கொண்டிருந்த ரூ.3.68 நஷ்டம், இப்போது ரூ.6.08 ஆக உயர்ந்து விட்டது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி.மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையால் நாள் ஒன்றுக்கு ரூ.135 கோடி நஷ்டம் அடைந்து வருகின்றன.
நன்றி : தினமலர்


காலியான விமானத்தை ஓட்டி வர மறுத்த பைலட்டுக்கு ஏர் இந்தியா நோட்டீஸ்

பயணிகள் யாரும் இல்லாத காலி விமானம் ஒன்றை ரியாத்தில் இருந்து மும்பைக்கு ஓட்டி வர மறுத்த ஏர் இந்தியாவின் மூத்த பைலட் ஒருவருக்கு அந்நிறுவனம் ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. அது ஒரு பாதுகாப்பில்லாத விமானம். எனவே அதனை என்னால் ஒட்டி வர முடியாது என்று அந்த பைலட் ஓட்ட மறுத்து விட்டார். சரியான காரணம் எதுவுமின்றி கேப்டன் என்.கே.பெர்ரி என்ற பைலட் விமானத்தை ஓட்ட மறுத்ததால் அவருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஏர் - இந்தியா உயர் அதிகாரிகள். ஆனால் பெர்ரியோ, அந்த விமானத்தில் ஒரு கோளாறு இருக்கிறது. லேண்டிங் கியர் சரியில்லை. எனவே விமானத்தை லேண்ட் செய்யும்போது பிரச்னை வரும். இந் நிலையில் நான் எப்படி அதை ஓட்டி வருவது என்கிறார். ஆனால் அந்த விமானத்தில் அந்த கோளாறு இருப்பது உண்மைதான். மே 27 ம் தேதி ரியாத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட வேண்டிய அந்த விமானத்தில் ( பிளைட் நம்பர் ஏஐ - 882 ) லேண்டிங் கியரில் கோளாறு இருப்பது தெரிய வந்து, அதிலிருந்த பயணிகள் இறக்கப்பட்டு வேறு விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பப்பட்டனர். அந்த விமானத்தை சரி செய்ய ஏர் இந்தியாவுக்கு ரியாத்தில் வசதியில்லாததால்தான் கேப்டன் பெர்ரியை கொண்டு அதை மும்பைக்கு ஓட்டி வர சொன்னார்கள். ஆனால் அதை பெர்ரி ஓட்ட மறுத்ததால் வேறு பைலட்டை கொண்டு அந்த விமானத்தை மும்பைக்கு கொண்டு வந்து விட்டனர். இப்போது பெர்ரிக்கு, ஏன் விமானத்தை ஓட்ட மறுத்தீர்கள் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, June 16, 2009

இமயமலையின் பனி உருகி வருவதால் தென்ஆசிய நாடுகளுக்கு கடும் பாதிப்பு : ஜான் கெர்ரி

இமயமலையில் இருக்கும் பனி உருகி வருவது தென் ஆசிய நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார் அமெரிக்க செனட் சபை உறுப்பினரான ஜான் கெர்ரி. இமய மலையில் இருந்து தொடர்ந்து பனி உருகிக்கொண்டு இருந்தால், அதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால், அது அந்த பகுதிக்கு பேராபத்தாக முடியும் என்றார் அவர். தென் ஆசிய நாடுகளில், சீனாவில் இருந்து ஆப்கானிஸ்தான் வரையிலான பகுதியில் வசிக்கும் சுமார் 100 கோடி மக்களுக்கு இமயமலை தான் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள பனி 2035 க்குள் முழுவதுமாக உருகி விடும் என்கிறார்கள். அப்படியானால் அங்குள்ளவர்கள் நிலை என்ன ? என்று கேட்டார் கெர்ரி. நியுயார்க்கில் ' கிளைமேட் சேஞ்ச் ' குறித்து நடந்த கூட்டத்தில் பேசிய ஜான் கெர்ரி இவ்வாறு கேள்வி எழுப்பினார். இமயமலையில் உற்பத்தியாகும் நதி நீர் இந்தியாவின் விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் அவர்களின் மத சடங்குகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை, இமயமலையில் உற்பத்தியாகும் நதி அங்கு பாயவில்லை என்றால் அங்கு விவசாயமே இல்லாமல் போய்விடும் என்றார் கெர்ரி.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை குறைந்து 70 டாலராகியது

கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வருகிறது. இன்று அதன் விலை பேரலுக்கு 70 டாலருக்கு வந்து விட்டது. ஐரோப்பாவின் கரன்சியான யூரோவுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பதாலும், சர்வதேச அளவில் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பயப்படுவதால் பங்கு சந்தைகள் சரிந்து வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது என்கிறார்கள். அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை, நேற்றைய விலையில் இருந்து 61 சென்ட் குறைந்து இன்று பேரலுக்கு 70.01 டாலராக இருந்தது. கடந்த வாரத்தில்தான் இது 73 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) 43 சென்ட் குறைந்து 69.81 டாலராக இருந்தது.
நன்றி : தினமலர்


Monday, June 15, 2009

இந்தியாவின் மதிப்பு மிக்க கம்பெனி லிஸ்ட்டில் மீண்டும் சேர்ந்தது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்

இந்தியாவின் மதிப்பு மிக்க 100 கம்பெனிகள் லிஸ்ட்டில் மீண்டும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் இடம் பிடித்து விட்டது. ஏற்கனவே இந்தியாவின் மதிப்பு மிக்க கம்பெனி லிஸ்ட்டில் தான் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் இருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் அந்த கம்பெனியில் நடந்த நிதி மோசடியை அடுத்து, அது அந்த பெருமையை இழந்தது. இப்போது டெக் மகேந்திராவின் கைக்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வந்திருப்பததை அடுத்து, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நிகர லாபயும் ஈட்டி, அதன் மூலம் அதன் பங்கு மதிப்பும் கடந்த வாரத்தில் பெரிய அளவில் உயர துவங்கியது. சத்யத்தின் சந்தை மதிப்பும் ரூ.7,800 கோடியாக உயர்ந்து விட்டது. கடந்த ஜனவரி 7ம் தேதி சத்யத்தில் நிதி மோசடி நடந்தது வெளியே தெரிந்தது. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து ஜனவரி 9 ம் தேதி, சத்யத்தின் பங்கு மதிப்பு வெறும் ரூ.6.30 ஆகத்தான் இருந்தது. அதன் சந்தை மதிப்பும் அப்போது சுமார் ரூ.600 கோடியாகத்தான் இருந்தது. இப்போது அதன் பங்கு மதிப்பும் உயர்ந்து விட்டது. அந்த நிறுவனத்தின் மதிப்பும் உயர்ந்து விட்டது.
நன்றி : தினமலர்


கடந்த வாரத்தில் மட்டும் இந்தியாவின் 10 முக்கிய நிறுவனங்கள் இழந்தது ரூ.5,168 கோடி

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவின் 10 முக்கிய நிறுவனங்கள், அவர்களின் சந்தை முதலீட்டில் ரூ.5,168 கோடியை இழந்திருக்கின்றன. அதில் பெரும்பங்கை இழந்தது ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்பரேஷன் ( ஓ.என்.;ஜி.சி.)தான் . நான்கு தனியார் நிறுவனங்களையும் ஆறு பொதுத்துறை நிறுவனங்களையும் கொண்ட இந்தியாவின் முக்கிய 10 நிறுவனங்களின் சந்தை முதலீடு, கடந்த வாரத்தில் ரூ.16,88,213 கோடியில் இருந்து ரூ.16,83,045 கோடியாக குறைந்திருக்கிறது. கடந்த வெள்ளி அன்று மும்பை பங்கு சந்தையில் ஓ.என்.ஜி.சி.,யின் பங்கு மதிப்பு 4.56 சதவீதம் குறைந்து ரூ.1,126.80 ஆகத்தான் விற்பனை ஆனது. எனவே அதன் சந்தை முதலீடும் ரூ.11,518 கோடி குறைந்து ரூ.2,41,008 கோடியாகி விட்டது. ஒ.என்.ஜி.சி.,தவிர மற்ற முக்கிய நிறுவனங்களான எம்.எம்.டி.சி., என்.எம்.டி.சி.,எஸ்.பி.ஐ., பி.ஹெச்.இ.எல்., ஆகியவையும் அதிக அளவில் சந்தை முதலீட்டை கடந்த வாரத்தில் இழந்திருந்தன.
நன்றி : தினமலர்


Saturday, June 13, 2009

இந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி துறையில் 13 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்

ஏற்றுமதி துறையில் இந்த நிதி ஆண்டில் 13 லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாட்டு வர்த்தக மற்றும் அபிவிருத்தி கூட்டமைப்பு ( யுஎன்சிடிஏடி ) தெரிவித்திருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இன்னும் பொருளாதார மந்த நிலை நீடிப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் பண்ணை போன்ற சில தொழில்களில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதால் ஏற்றுமதி துறையில் மட்டும் 7.48 லட்சம் பேர் மட்டுமே வேலை இழப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 2009 - 10 நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 2.2 சதவீதம் குறைந்து விடும் என்று அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களில் அதிகம் சரிவை சந்திக்க இருப்பது பெட்ரோலிய பொருட்கள் தான் என்றும், அதற்கு அடுத்ததாக ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, மினரல்கள் மற்றும் டெக்ஸ்டைல் பொருட்களில் சரிவு ஏற்படும் என்றும் ஐ.நா. அமைப்பு தெரிவிக்கிறது. இந்த நிதி ஆண்டில் நிலைமை மோசமானா லும் அடுத்த நிதி ஆண்டில் அது சரியாகி விடும் என்றும் அப்போது சுமார் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


தமிழ்நாடு அல்லது கர்நாடக மாநிலத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க ஏர்பஸ் விமான நிறுவனம் ஆர்வம்

ஏர்பஸ் நிறுவனம், வர்த்தக விமானங்கள் தயாரிப்பில் போயிங் நிறுவனத்திற்கு அடுத்ததாக உலகின் மிகப் பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இத்தொழிற்பிரிவு விமான பாகங்களை ஒருங்கிணைத்து விமானத்தை முழுமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இப்பிரிவை ஏர்பஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலோ அல்லது கர்நாடக மாநிலத்திலோ நிறுவ ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிறுவனம் சீனாவில் ஏற்கனவே இது போன்ற ஒரு தொழிற்பிரிவைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புதிதாக ஒரு தொழிற்பிரிவை இந்நிறுவனம் தொடங்கினால், அது ஐரோப்பாவிற்கு வெளியே இந்நிறுவனத்தால் அமைக்கப்படும் இரண்டாவது தொழிற்சாலையாக இருக்கும். இதனையடுத்து ஏர்பஸ் நிறுவனம், விமான தயாரிப்பு செலவை 20-30 சதவீதம் குறைத்து இந்திய சந்தைக்கு சிறப்பான அளவில் சேவையளிக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழகத்திலோ, கர்நாடகத்திலோ அமைக்கப்படும் இத்தொழிற்பிரிவு 2,600 மீட்டர் விமான ஓடுதளத்தைக் கொண்டதாக இருக்கும். விமானங்களுக்கு வண்ணம் பூசுதல், பரிசோதனைகள் மற்றும் இறுதி டெலிவரி போன்ற பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும்.
புதிய தொழிற்சாலையில் ஏர்பஸ் நிறுவனம் 60 கோடி டாலர் (சுமார் ரூ.3,000 கோடி) முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகளில் 600 முதல் 1,000 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்தொழிற்சாலைக்கான நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டால், அடுத்த 3-4 ஆண்டுகளில் இது செயல்பாட்டுக்கு வரும். தற்போது இந்தியாவில் வர்த்தக விமானங்களுக்கான சந்தை மதிப்பு 150 கோடி டாலராக (சுமார் ரூ.7,000 கோடி) உள்ளது. ஏர்பஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு பிரிவு செயல்பாட்டுக்கு வரும்போது, சந்தை மதிப்பு 380 கோடி டாலராக (சுமார் ரூ.18,000 கோடி) உயர வாய்ப்பு இருக்கிறது.
நன்றி : தினமலர்


Friday, June 12, 2009

பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து : ஸ்விஸ் கம்பெனி நோவார்டிஸ் தயாரித்தது

உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் பன்றி காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து ஒன்றை சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான நோவார்டிஸ் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த மருந்து, செல்களில் இருந்து உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் அந்த மருந்து இன்னும் சோதனை அடிப்படையில்தான் இருக்கிறதாம். உலகம் முழுவதும் இது ஒழிக்கப்பட வேண்டிய நோய் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததற்கு பின்னர்தான், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை நோவார்டிஸ் வெளியே சொல்லியிருக்கிறது.
நன்றி: தினமலர்


அல்ட்ரா டெக் நிறுவனத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறியது எல் அண்ட் டி

அல்ட்ரா டெக் சிமெண்ட் கம்பெனியில் தனக்கு இருந்த 11.49 சதவீத பங்குகளை முழுவதுமாக எல் அண்ட் டி நிறுவனம் விற்று விட்டது. இந்த விற்பனை மூலம் கிடைத்த சுமார் ரூ.1,037 கோடி பணத்தை வேறு சில புதிய திட்டங்களில் முதலீடு செய்ய மற்றும் செலவு செய்ய எல் அண்ட் டி., முடிவு செய்திருக்கிறது. எல் அண்ட் டி.,யிடம் இருந்த அல்ட்ரா டெக்கின் 14.3 மில்லியன் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு சராசரியாக ரூ.175 என்று விலை வைத்து எல் அண்ட் டி., விற்றிருக்கிறது. அவைகள் 12 இந்திய மற்றும் 13 வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு விற்கப்பட்டிருக் கிறது. இந்த விற்பனை மூலம் கிடைத்த சுமார் ரூ.1,037 கோடி பணத்தில், பாதியை புதிய திட்டங்களில், குறிப்பாக கப்பல் கட்டும் தொழில், அணுமின் நிலையம், பாய்லர் மற்றும் டர்பைன் தயாரிப்பு மற்றும் ராணுவ தளவாட தொழில்களில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக எல் அண்ட் டி.,யின் தலைமை நிதி அதிகாரி தியோஸ்தலே தெரிவித்தார். அவர் இது பற்றி மேலும் தெரிவித்தபோது, இந்த நிதி ஆண்டில் எங்களுக்கு ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய திட்டம் இருக்கிறது என்றார். எங்களுக்கு இந்த விலை ஒரு நல்ல விலைதான். ஏனென்றால் நாங்கள் டெக் மகேந்திராவில் முதலீடு செய்தது மிக மிக குறைவு. எங்களது கணக்கு புத்தகத்தில் அந்த பங்குகளின் மதிப்பு ரூ.14 கோடி என்றுதான் இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


Wednesday, June 10, 2009

ஸ்டேட் பாங்க்கில் 13,000 பேருக்கு வேலை

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்த நிதி ஆண்டில் 13,000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. அதன் வெவ்வேறு பணிகளுக்காக இந்த 13,000 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 2008 - 09 நிதி ஆண்டில் நாங்கள் 33,703 பேரை புதிதாக வேலைக்கு எடுத்தோம். இந்த நிதி ஆண்டில் மேலும் 13,000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக் கிறோம் என்றார் ஸ்டேட் பேங்க்கின் உயர் அதிகாரி ஒருவர். முன்னணி வங்கியான எங்களுக்கு இது தேவைப் படுகிறது என்றார். முதலாவதாக நாங்கள் ஆபீசர்கள், மார்க்கெட்டிங் மற்றும் ரெக்கவரி ( ரூரல் ), மற்றும் டெக்னிக்கல் ( பண்ணை துறை ) பிரிவுகளில் புதிய ஆட்களை வேலைக்கு எடுக்க, வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார் அவர். இது குறித்து இன்ஸ்டியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் ( ஐபிபிஎஸ் ) இயக்குனர் பாலசந்திரன் பேசியபோது, பொதுவாகவே எல்லா இந்திய பொருத்துறை வங்கிகளுமே இந்த நிதி ஆண்டில் 30,000 பேர் வரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கின்றன. அதில் 50 சதவீதத்தை ஸ்டேட் பேங்க்கே எடுத்துக்கொள்ள இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


Monday, June 8, 2009

2020 வாக்கில் ஜப்பானில் எலக்ட்ரிக் கார் ஓடுமா என்பது சந்தேகமே

இன்னும் 10 ஆண்டுகளில், அதாவது 2020 வாக்கில் ஜப்பான் முழுவதிலும் நச்சுக்காற்று எதையும் வெளியிடாத எலக்ட்ரிக் கார்களை மட்டுமே ஓட விட வேண்டும் என்ற ஜப்பான் கார் தயாரிப்பாளர்களின் கனவு நனவாகாது போல் தெரிகிறது. சில நிறுவனங்கள் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து சோதனை செய்து பார்த்து விட்டும் கூட, அதனை வியாபார ரீதியில் தயாரித்து விற்பது கஷ்டம் என்று ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனமான பியூஜி கெய்ஸாய் கம்பெனி தெரிவித்திருக்கிறது. மிட்சுபிஷி மோட்டார்ஸ் அடுத்த மாதத்திலும், நிஸன் மோட்டார் அடுத்த வருடத்திலும் எலக்ட்ரிக் கார்களை வெளியிடுவதாக சொல்லியிருக்கிறது. இப்போது அது சாத்தியமில்லாத ஒன்று என்று சொல்வதற்கு காரணம், பெட்ரோல் அல்லது டீசல் கார்களைப்போல் எலக்ட்ரிக் கார்களை வெகு தூரத்திற்கு ஓட்டி செல்ல முடியாது என்கிறார் கள். குறைந்த தூர பயணங்களுக்கு மட்டுமே எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த முடியுமாம். எலக்ட்ரிக் கார்களை ஒரு தடவை சார்ஜ் செய்தால் அதன் மூலம் 160 கி.மீ.தான் போக முடியும். இது, பெட்ரோல் கார்கள் செல்லும் தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு தூரம்தான். மேலும் எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் ஸ்டேஷன்கள் நாடு முழுவதும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அதை ஓட்டுபவர்கள் அதிக சிரமத்திற்குள்ளாவார்கள். இன்னொரு மிகப்பெரிய பிரச்னை எலக்ட்ரிக் கார்களின் விலை மிக அதிகமாக இருப்பதுதான். பொதுவாக ஒரு எலக்ட்ரிக் காரின் விலை 45,99,000 யென்னாக ( சுமார் 22,07,500 ரூபாய் ) இருக்கும் என்கிறார்கள். அரசாங்கம் அதற்கு மானியம் கொடுத்தால் வேண்டுமானால் 29,90,000 யென்னுக்கு ( 14,35,200 ரூபாய் ) க்கு கிடைக்குமாம். இப்படி பல பிரச்னைகள் இருப்பதால் எலக்ட்ரிக் கார் என்பது அவ்வளது சாத்தியமில்லாதது என்கிறது அந்த ஆராய்ச்சி நிறுவனம்.

நன்றி : தினமலர்


அப்பல்லோ ஹெல்த் சிட்டிரூ. 150 கோடியில் விரிவாக்கம்

அப்பல்லோ மருத்துவமனை குழுமம், ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஹெல்த் சிட்டி மருத்துவமனையை 150 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்துகிறது. இது தொடர்பான அறிவிப்பை, மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்துள்ளார்.இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,500 படுக்கை வசதிகளுடன் கூடிய 43 மருத்துவ
மனைகளை அப்பல்லோ குழுமம் நடத்தி வருகிறது. நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் இம்மருத்துவமனை குழுமம், ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஹெல்த் சிட்டி மருத்துவமனையை 150 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்த உள்ளதாக அதன் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.விரிவுபடுத்தப்படும் வளாகத்தில், பல்வேறு நோய்களுக்கான நவீன மருத்துவப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் ரேடியோ சர்ஜரி பிரிவு, முழங்கால் தொடர்பான நோய்களுக்கான பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் திறமைவாய்ந்த எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்களைக்கொண்டு, மிகத் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.அழகுக் கலை மற்றும் உடல் அழகுபடுத்துவதற்கான சிகிச்சையில், சர்வதேச அளவில் சிறந்த அனுபவம் பெற்றவர்களைக்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதுபோல் பல்வேறு நவீன மருத்துவ சிகிச்சைகளை, விரிவுபடுத்தப்படும் திட்டத்தின் மூலம் செயல்படுத்துவதற்கு அப்பல்லோ மருத்துவக் குழுமம் திட்டமிட்டுள்ளது.
நன்றி : தினமலர்