Saturday, June 27, 2009

பெங்களுருவில் இருந்த துபாய்க்கு தினசரி விமான சேவை : கிங்ஃபிஷர் இயக்குகிறது

Justify Fullபெங்களுருவில் இருந்து துபாய்க்கு தினசரி விமான சேவையை தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் இயக்குகிறது. ஏற்கனவே லண்டன், கொழும்பு, மற்றும் தாகா போன்ற சர்வதேச நகரங்களுக்கு விமான சேவையை நடத்திக்கொண்டிருக்கும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், இப்போது நான்காவதாக துபாய்க்கு சேவையை துவங்கியிருக்கிறது. இந்த பயணத்திற்காக ஏ320 ரக விமானம் பயன்படுத்தப்படும் என்றும் கிங்ஃபிஷர் கிளாஸ், பிரீமியம் எக்கனாமி போன்ற வகுப்புகள் அதில் இருக்கும் என்றும் அந்த கிங்ஃபிஷர் தெரிவித்திருக்கிறது. பெங்களுருவில் இருந்து தினமும் மாலை 6 : 15 க்கு புறப்படும் அந்த விமானம்,ற இரவு 8 : 55 க்கு ( அங்குள்ள நேரம் ) துபாய் சென்றடையும். அதேபோல் அங்கு இரவு 10 : 10 க்கு புறப்படும் அந்த விமானம், பெங்களுருவுக்கு அடுத்த நாள் அதிகாலை 3 : 45 க்கு வந்து சேரும் என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: