ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடந்து வரும் இனவெறித் தாக்குதல் கவலை அளிக்கிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இத்தகைய தாக்குதல்கள் நடந்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து எரிந்த நிலையில் இந்தியரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த அதிர்ச்சியிலிருந்து நாம் மீள்வதற்குள் மற்றொரு இந்தியர் மீது மர்மக் கும்பல் ஆசிட் வீச்சு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளது.
மெல்பர்ன் நகரின் வடமேற்குப் பகுதியில் வசித்து வருபவர் ஜஸ்ப்ரீத் சிங். இந்தியரான இவர், தனது மனைவியுடன் ஒரு விருந்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் மனைவியை வீட்டில் இறக்கிவிட்டு, காரை பக்கத்துத் தெருவில் நிறுத்திவிட்டு வெளியே வந்தபோது மர்மக் கும்பல் அவரை கீழே தள்ளி அவர் மீது ஆசிட்டை வீசி, தீவைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டது.
இப்படி இந்தியர்கள் மீதான தாக்குதல் அடிக்கடி நடக்கின்ற போதிலும் இதை ஆஸ்திரேலிய அரசு தீவிரப் பிரச்னையாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தத் தாக்குதலை இனவெறித் தாக்குதல் என்று சொல்லமுடியாவிட்டாலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்தியர்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைப் பார்த்தால் இது இனவெறி ஆதிக்கச் செயலே என்பது தெரியவரும்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் சாதாரண குற்றச் சம்பவங்கள்தான் என்பது போல் ஆஸ்திரேலியத் தூதர் தாமஸ் வர்கீஸ் பேசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பார்த்தால் பாதுகாப்பு இல்லாத காரணத்தால்தான் இந்த எண்ணிக்கை குறைந்து வருவது புரியும்.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் ஆசியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் அங்கு படித்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், ஆசியர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியாவில் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பகுதிநேர ஊழியர்களாக வேலைசெய்து தங்கள் செலவினங்களைச் சமாளித்து வருகின்றனர். குறிப்பாக மெல்பர்ன் நகரில் இந்தியர்கள் எங்கு சென்றாலும் குழுவாகவே செல்கின்றனர். தனியாகச் செல்வதில்லை. மேலும் விலைமதிப்பு மிக்க பொருள்கள் எதையும் அவர்கள் கையிலெடுத்துச் செல்வதில்லை. இந்நிலையில் இதுபோன்று நடத்தப்படும் தாக்குதலை வழிப்பறி என்ற சாதாரண குற்றமாக யாரும் சொல்லிவிட முடியாது.
இந்தியர்கள் மீது குறிப்பாக மாணவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் கொலைவெறித் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதை ஆஸ்திரேலிய அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறுவதற்குப் பதிலாக உலகம் எங்கும் இதுபோன்ற குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஏன் தில்லி, மும்பை போன்ற நகரங்களிலும் இவை நடக்கத்தான் செய்கின்றன. எனவே இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் பேசியுள்ளது அவரது பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
இத்தகைய சம்பவங்கள் தற்செயலாக நடந்திருந்தாலும் சரி...இனவெறித் தாக்குதலாக இருந்தாலும் சரி... வெளிநாட்டினரை, குறிப்பாக இந்தியர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆஸ்திரேலிய அரசுக்கு உள்ளது.
இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்து வரும் நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, "ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் படிக்கச் செல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியா சென்று படிப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறுநாடுகளில் உள்ள பட்ட மேற்படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்' என்றும் யோசனை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வுகாண முன்வராமல், மாணவர்களை அங்கு சென்று படிக்க வேண்டாம் என்று கூறுவது புத்திசாலித்தனம் அல்ல. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்புக் கல்வி நன்றாக இருப்பதால்தான் அங்கு சேர்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் திறமையுள்ள மாணவர்களும், அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்புள்ள, வன்முறைச் செயல்களில் ஈடுபடாத மாணவர்கள்தான் அங்கு செல்கின்றனர். எங்கு சென்று படிக்க வேண்டும், என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மாணவரும் அவருடைய பெற்றோரும் தான். கல்வி ஆலோசகர்களாகச் செயல்படும் சிலருடைய தவறான வழிகாட்டுதல்களாலே தவறுகள் ஏற்படுகின்றன. வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்குச் சில எச்சரிக்கைகளை அமைச்சர் தெரிவிக்கலாமே தவிர அவர்களை இங்கு படிக்காதே, அங்கு படிக்காதே என்று தீர்ப்புச் சொல்லக்கூடாது.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்களின் திறமையான படிப்பின் மூலமும், செயல்பாட்டின் மூலமும் அந்த நாட்டுக்குப் பெருமை தேடித் தருகின்றனர்.
இதை ஆஸ்திரேலிய அரசு உணர்ந்துகொண்டு நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் நில்லாமல், இந்தியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, இதுபோன்ற இனவெறித் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இதற்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்னிய நாட்டில் இந்தியர்களின் விலைமதிக்க முடியாத உயிர் பறிபோவதை பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது. இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆஸ்திரேலிய அரசுக்கு முழு பொறுப்பு உள்ளது. அதை வலியுறுத்தும் கடமை இந்திய அரசுக்கு உள்ளது.
கட்டுரையாளர் :ஜெ.ராகவன்
நன்றி : தினமணி
Showing posts with label கடன். Show all posts
Showing posts with label கடன். Show all posts
Friday, January 15, 2010
Saturday, January 9, 2010
கிரெடிட் கார்டில் கண்டபடி செலவழிப்பவரா? : வங்கிகள் கிடுக்கிப்பிடி

உரிய காலத்துக்குள் பணம் கட்டாமல் இருந்தால், அல்லது குறைவான பணம் கட்டியிருந்தால் உங்கள் கிரெடிட் கார்டின் உச்சவரம்பு குறைக்கப்படலாம். வங்கிகளின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கிடுக்கிப்பிடியாகக் கருதப்படுகிறது. ஒருவரின் கடன் திருப்பிச் செலுத்தும் தகுதியின் அடிப்படையில் அவருக்கு வங்கிகள் கடன் அட்டைகள் எனப்படும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அப்படி வழங்கும் போது, அந்த அட்டையைப் பயன்படுத்தும் உச்சவரம்பும் குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒருவர் தனது கடன் அட்டையை ஒரு லட்சம் ரூபாய் வரையில் பயன்படுத்தலாம். 45 நாட்களுக்குள், அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். காலம் அதிகரிக்க அதற்கான வட்டி வீதமும் அதிகரித்துக் கொண்டே செல்லும். இப்படி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியே வாழ்க்கையைக் கழிப்பவர்கள் பின் அதைத் திருப்பிக் கட்ட சிரமப்படுகின்றனர். இதனால், பெருமளவில் பாதிக்கப்பட்ட வங்கிகள், இந்த நடைமுறையில் சில மாற்றங் களை கொண்டு வந்துள்ளன. அதன்படி, கிரெடிட் கார்டை அதிக அளவில் பயன்படுத்துபவர் களது உச்சவரம்பு குறைக் கப் பட்டுள்ளது. எச்.எஸ்.பி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற வங்கிகள் இதை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி ஊழியர் ஒருவர் கூறுகையில்,'எங்கள் வங்கி இப்போது 'ப்ரூடன்ட் கிரெடிட் கார்டு லைன் மேலாண்மை' குறித்த சில விஷயங்களைப் பின்பற்றி வருகிறது. அதனால், சில வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் ரொக்கப் பரிமாற்றங்களின் உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இது, நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது' என்று தெரிவித்தார். இந்த அதிரடி மாற்றத்துக்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஒன்று, கடன் அட்டை வாங்கி அளவில்லாமல் செலவழித்து விட்டு திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அதைக் குறைப்பதற்காக. இரண்டு, கடன் அட்டை வாங்கி வைத்து விட்டு, அதைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அல்லது செலுத்த வேண்டிய அளவை விட குறைந்த அளவிலேயே பணம் செலுத்துபவர்கள் இவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக. இந்த நடைமுறையை சில வங்கிகள் கடந்த ஓர் ஆண்டாகவே கடைப்பிடித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைமுறையால், பாதுகாப்பற்ற கடன் வழங்கலைத் தவிர்க்க முடிவதாக வங்கி அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால், 2009ல் இரண்டு கோடி கிரெடிட் கார்டுகள் குறைந்து விட்டன, என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்
இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி ஊழியர் ஒருவர் கூறுகையில்,'எங்கள் வங்கி இப்போது 'ப்ரூடன்ட் கிரெடிட் கார்டு லைன் மேலாண்மை' குறித்த சில விஷயங்களைப் பின்பற்றி வருகிறது. அதனால், சில வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் ரொக்கப் பரிமாற்றங்களின் உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இது, நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது' என்று தெரிவித்தார். இந்த அதிரடி மாற்றத்துக்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஒன்று, கடன் அட்டை வாங்கி அளவில்லாமல் செலவழித்து விட்டு திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அதைக் குறைப்பதற்காக. இரண்டு, கடன் அட்டை வாங்கி வைத்து விட்டு, அதைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அல்லது செலுத்த வேண்டிய அளவை விட குறைந்த அளவிலேயே பணம் செலுத்துபவர்கள் இவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக. இந்த நடைமுறையை சில வங்கிகள் கடந்த ஓர் ஆண்டாகவே கடைப்பிடித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைமுறையால், பாதுகாப்பற்ற கடன் வழங்கலைத் தவிர்க்க முடிவதாக வங்கி அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால், 2009ல் இரண்டு கோடி கிரெடிட் கார்டுகள் குறைந்து விட்டன, என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்
Monday, November 30, 2009
துபாய் பொருளாதார நெருக்கடி: அதிகளவு பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கருத்து
துபாய் பொருளாதார நெருக்கடியால் அதிகளவு பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டதன் காரணமாக துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரெலியாக இந்திய பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இந்நிலையில், துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தகவல் தெரிவித்தனர் . இதன் காரணமாக இன்றைய பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் தொடங்கியது. நேற்று ஐக்கிய அரபு குடியரசின் ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை, நிதி சந்தை, வங்கிகள் ஆகியவற்றின் பணப்புழக்கம் பாதிக்காத வகையில் அந்நாட்டு நாணயமான தினாரை வங்கித் துறையில் புழக்கத்திற்கு விடுவதாக அறிவித்தது. இந்நிலையில் எடில்விஸ் இன்ஸ்டிசனல் ஈக்விட்டிஸ் என்ற முதலீடு நிறுவனத்தின் துணை தலைவர் விகாஸ் கிமானி இதுகுறித்து கூறும் போது, இந்திய பொருளாதாரத்திற்கு துபாயில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாதிப்பு குறைந்த அளவே இருக்கும். துபாய் நிறுவன கடன் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த கடனை திருப்பி செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். துபாய் வேர்ல்ட் நிறுவனத்தை பாதுகாக்க துபாய் அரசு முயற்சிக்கும் என்று தெரிவித்தார்.ஐக்கிய அரபு குடியரசு, நெருக்கடியில் உள்ள நிறுவனத்திற்கு உதவும் வகையில் உதவிக்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று பொதுவான எதிர்பார்ப்பு நிலவுவதாக மற்றொரு நிபுணர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்
Labels:
அரபு நாடு,
கடன்,
பங்கு சந்தை
Monday, October 12, 2009
கடனும் இலவசம்
கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவிப்பு செய்தது. 2009-10-ம் கல்வியாண்டில் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடியை அரை மனதுடன்தான் பாராட்ட முடிகிறது. ஏனெனில், மத்திய அரசு அறிவித்திருக்கும் நிபந்தனையைப் பார்க்கும்போது, யாருக்கு இந்தக் கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடி மிகவும் பயனுள்ளதாக இருக்குமோ அவர்களை மீண்டும் பின்னுக்குத் தள்ளுகிற நிலைமையை மத்திய அரசே உருவாக்கப்போகிறது என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.
வீட்டு வங்கிக் கடன்கூட 8 முதல் 8.5 சதவீத வட்டியில் தருகிறார்கள். அதாவது நிலத்தின் மதிப்பு ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகக்கூடிய ஒரு உடைமை மீதான கடனுக்கே இந்த அளவுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் படிப்பைத் தவிர எந்தவித வருவாய்க்கும் வழியே இல்லை என்கிற மாணவருக்கு அளிக்கும் கல்விக் கடனுக்கு வங்கிகள் நிர்ணயித்துள்ள வட்டி 11 சதவீதம்.
ஒரு மாணவர் முதல் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், அவர் மாதம் ரூ.1000 வரை வட்டி கட்டியாக வேண்டும். அடுத்தஆண்டு இன்னொரு லட்சம் வாங்கினால் அந்த ஆண்டில் மாதம் ரூ. 2,000 வட்டி. மாணவர் படித்துக்கொண்டிருக்கிறாரே தவிர, தொழில் செய்பவர் அல்ல. வீடு, நிலம் போல ஆண்டுதோறும் மதிப்புக்கூடக்கூடிய பொருள் அல்ல அவருடைய படிப்பு. அவர் வேலைக்குச் சேர்ந்தாலொழிய கடனைத் திருப்பிச் செலுத்தும் சக்தி அவருக்குக் கிடையாது.
தற்போது மத்திய அரசு அனைத்துக் கல்விக் கடனுக்கும் வட்டியைத் தானே செலுத்தும் இந்த அறிவிப்பால், வசதி உள்ளவர்களும், சொத்து உள்ளவர்களும், கருப்புப்பணத்தை வைத்திருப்பவர்களும்கூட, "சும்மா கிடைக்கிற கடன்தானே', "நாலு வருஷத்துக்கு வட்டியில்லாத கடன்தானே' என்று கல்விக் கடனை வாங்கி, அதைத் தொழிலில் முதலீடு செய்தோ அல்லது அப்படியே அதே வங்கியில் வைப்பு நிதியாக வைத்து 7 சதவீதம் வட்டியைப் பெறுவதற்கான ஆசையாலோ, கல்விக்கடன் பெற முயல்வர். இதனால் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் வங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியுள்ளவர்களையே "பாதுகாப்பாக'த் தேர்வு செய்யும். முன்னுரிமை வழங்கும். மேலும், ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் குறிப்பிட்ட அளவுக்குமேல் கல்விக் கடன் வழங்க முடியாது. ஆகவே, தகுதியுடைய, ஏழை மாணவர்கள் இந்த இலவசக் கடன் போட்டியில் நிராகரிக்கப்படுவார்கள்.
தற்போது மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஒரேயொரு நிபந்தனை பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே. அதாவது பெற்றோரின் ஊதியம் மாதம் ரூ. 37,500-க்கு மிகாமல் இருந்தால் இந்தக் கல்விக் கடன், வட்டி தள்ளுபடிச் சலுகையைப் பெற முடியும். ஆகவே, இந்த இலவசக் கடனைப் பெற எல்லோரும் முயற்சி செய்வார்கள் என்பது நிச்சயம். இந்தக் கல்விக் கடன் திட்டத்தில் பயன்பெறவுள்ள 5 லட்சம் மாணவர்களில் 75 சதவீதம் பேர் வசதி உள்ளவர்களாகவும், அரசு இலவசக் கடன் என்று அறிவித்ததால் வாங்க வந்தவர்களாகவும் இருப்பர்.
மாணவர்களின் உயர்கல்வியில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அவர்கள் செய்திருக்கவேண்டிய முதல் வேலை, கல்விக் கட்டணத்தைக் குறைப்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களைச் சேர்த்து ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் ஏறக்குறைய ரூ. 1 லட்சம் செலுத்தவேண்டியுள்ளது. மத்திய அரசு கடுமையான, உறுதியான நடவடிக்கை எடுத்தால், இந்தக் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ. 50,000 என குறைக்க முடியும். இதனால் பெற்றோர் நேரடியாகப் பயன்பெறுவார்கள். அவர்கள் கல்விக் கடன் வாங்கினாலும்கூட, அதுவும் 50 சதவீதமாகக் குறையும். அதற்கு மத்திய அரசே வட்டியைச் செலுத்தினாலும், அதுவும் பாதியாகக் குறையும்.
இதற்கு மாறாக, கல்விக் கடனுக்கான வட்டியை மட்டும் அரசே ஏற்பதன் மூலம், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம்போல பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறார்கள் என்பதோடு, அனைவரும் கல்விக்கடன் பெறவும் ஊக்கப்படுத்துகிறார்கள்.
அதிக மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு முழு வட்டி தள்ளுபடி என்றும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கடனுக்கு குறிப்பிட்ட சதவிகித வட்டி தள்ளுபடி என்றும் அரசு அறிவித்தாலும்கூட, இந்தக் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி நியாயமானதாகவும், உண்மையானதாகவும் அமையும்.
கர்நாடக மாநில அரசைப் போல, கல்விக் கடனில் 6 சதவீத வட்டியை மானியமாக அளிக்கும் வழக்கத்தை கையில் எடுத்துக்கொண்டால்கூட, வெறுமனே இலவசக் கடன் என்பதற்கான போட்டி பெருமளவு குறையும்.
அனைத்து மாணவர்களின் கல்விக் கடனுக்கும் வட்டி தள்ளுபடி என அறிவித்து, தேவையில்லாமல் ஒரு போட்டியை உருவாக்கி, அதில் வலுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெறவும், இளைத்தவர்கள் ஒதுங்கி நின்று ஏங்கவும் அரசே பாதை அமைத்துள்ளது. நல்ல திட்டம், ஆனால் நடைமுறையில் சில கடிவாளம் தேவைப்படுகிறது.
நன்றி : தினமணி
கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடியை அரை மனதுடன்தான் பாராட்ட முடிகிறது. ஏனெனில், மத்திய அரசு அறிவித்திருக்கும் நிபந்தனையைப் பார்க்கும்போது, யாருக்கு இந்தக் கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடி மிகவும் பயனுள்ளதாக இருக்குமோ அவர்களை மீண்டும் பின்னுக்குத் தள்ளுகிற நிலைமையை மத்திய அரசே உருவாக்கப்போகிறது என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.
வீட்டு வங்கிக் கடன்கூட 8 முதல் 8.5 சதவீத வட்டியில் தருகிறார்கள். அதாவது நிலத்தின் மதிப்பு ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகக்கூடிய ஒரு உடைமை மீதான கடனுக்கே இந்த அளவுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் படிப்பைத் தவிர எந்தவித வருவாய்க்கும் வழியே இல்லை என்கிற மாணவருக்கு அளிக்கும் கல்விக் கடனுக்கு வங்கிகள் நிர்ணயித்துள்ள வட்டி 11 சதவீதம்.
ஒரு மாணவர் முதல் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், அவர் மாதம் ரூ.1000 வரை வட்டி கட்டியாக வேண்டும். அடுத்தஆண்டு இன்னொரு லட்சம் வாங்கினால் அந்த ஆண்டில் மாதம் ரூ. 2,000 வட்டி. மாணவர் படித்துக்கொண்டிருக்கிறாரே தவிர, தொழில் செய்பவர் அல்ல. வீடு, நிலம் போல ஆண்டுதோறும் மதிப்புக்கூடக்கூடிய பொருள் அல்ல அவருடைய படிப்பு. அவர் வேலைக்குச் சேர்ந்தாலொழிய கடனைத் திருப்பிச் செலுத்தும் சக்தி அவருக்குக் கிடையாது.
தற்போது மத்திய அரசு அனைத்துக் கல்விக் கடனுக்கும் வட்டியைத் தானே செலுத்தும் இந்த அறிவிப்பால், வசதி உள்ளவர்களும், சொத்து உள்ளவர்களும், கருப்புப்பணத்தை வைத்திருப்பவர்களும்கூட, "சும்மா கிடைக்கிற கடன்தானே', "நாலு வருஷத்துக்கு வட்டியில்லாத கடன்தானே' என்று கல்விக் கடனை வாங்கி, அதைத் தொழிலில் முதலீடு செய்தோ அல்லது அப்படியே அதே வங்கியில் வைப்பு நிதியாக வைத்து 7 சதவீதம் வட்டியைப் பெறுவதற்கான ஆசையாலோ, கல்விக்கடன் பெற முயல்வர். இதனால் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் வங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியுள்ளவர்களையே "பாதுகாப்பாக'த் தேர்வு செய்யும். முன்னுரிமை வழங்கும். மேலும், ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் குறிப்பிட்ட அளவுக்குமேல் கல்விக் கடன் வழங்க முடியாது. ஆகவே, தகுதியுடைய, ஏழை மாணவர்கள் இந்த இலவசக் கடன் போட்டியில் நிராகரிக்கப்படுவார்கள்.
தற்போது மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஒரேயொரு நிபந்தனை பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே. அதாவது பெற்றோரின் ஊதியம் மாதம் ரூ. 37,500-க்கு மிகாமல் இருந்தால் இந்தக் கல்விக் கடன், வட்டி தள்ளுபடிச் சலுகையைப் பெற முடியும். ஆகவே, இந்த இலவசக் கடனைப் பெற எல்லோரும் முயற்சி செய்வார்கள் என்பது நிச்சயம். இந்தக் கல்விக் கடன் திட்டத்தில் பயன்பெறவுள்ள 5 லட்சம் மாணவர்களில் 75 சதவீதம் பேர் வசதி உள்ளவர்களாகவும், அரசு இலவசக் கடன் என்று அறிவித்ததால் வாங்க வந்தவர்களாகவும் இருப்பர்.
மாணவர்களின் உயர்கல்வியில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அவர்கள் செய்திருக்கவேண்டிய முதல் வேலை, கல்விக் கட்டணத்தைக் குறைப்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களைச் சேர்த்து ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் ஏறக்குறைய ரூ. 1 லட்சம் செலுத்தவேண்டியுள்ளது. மத்திய அரசு கடுமையான, உறுதியான நடவடிக்கை எடுத்தால், இந்தக் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ. 50,000 என குறைக்க முடியும். இதனால் பெற்றோர் நேரடியாகப் பயன்பெறுவார்கள். அவர்கள் கல்விக் கடன் வாங்கினாலும்கூட, அதுவும் 50 சதவீதமாகக் குறையும். அதற்கு மத்திய அரசே வட்டியைச் செலுத்தினாலும், அதுவும் பாதியாகக் குறையும்.
இதற்கு மாறாக, கல்விக் கடனுக்கான வட்டியை மட்டும் அரசே ஏற்பதன் மூலம், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம்போல பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறார்கள் என்பதோடு, அனைவரும் கல்விக்கடன் பெறவும் ஊக்கப்படுத்துகிறார்கள்.
அதிக மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு முழு வட்டி தள்ளுபடி என்றும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கடனுக்கு குறிப்பிட்ட சதவிகித வட்டி தள்ளுபடி என்றும் அரசு அறிவித்தாலும்கூட, இந்தக் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி நியாயமானதாகவும், உண்மையானதாகவும் அமையும்.
கர்நாடக மாநில அரசைப் போல, கல்விக் கடனில் 6 சதவீத வட்டியை மானியமாக அளிக்கும் வழக்கத்தை கையில் எடுத்துக்கொண்டால்கூட, வெறுமனே இலவசக் கடன் என்பதற்கான போட்டி பெருமளவு குறையும்.
அனைத்து மாணவர்களின் கல்விக் கடனுக்கும் வட்டி தள்ளுபடி என அறிவித்து, தேவையில்லாமல் ஒரு போட்டியை உருவாக்கி, அதில் வலுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெறவும், இளைத்தவர்கள் ஒதுங்கி நின்று ஏங்கவும் அரசே பாதை அமைத்துள்ளது. நல்ல திட்டம், ஆனால் நடைமுறையில் சில கடிவாளம் தேவைப்படுகிறது.
நன்றி : தினமணி
Subscribe to:
Posts (Atom)
