Showing posts with label கடன். Show all posts
Showing posts with label கடன். Show all posts

Friday, January 15, 2010

தொட​ரும் இன​வெ​றித் தாக்​கு​தல்

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் இந்​திய மாண​வர்​கள் மீது நடந்து வரும் இன​வெ​றித் தாக்​கு​தல் கவலை அளிக்​கி​றது.​ கடந்த ஓராண்​டுக்கு மேலாக ​ இத்​த​கைய தாக்​கு​தல்​கள் நடந்து வரு​வது கவ​னத்​தில் கொள்​ளத்​தக்​கது.​

க​டந்த ஒரு​வா​ரத்​துக்கு முன்​னர் ஆஸ்​தி​ரே​லி​யா​வின் மெல்​பர்ன் நக​ரில் பஞ்​சா​பைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது இளை​ஞர் அடை​யா​ளம் தெரி​யாத நபர்​க​ளால் கொடூ​ர​மா​கக் குத்​திக் கொல்​லப்​பட்​டுள்​ளார்.​ இதைத் தொடர்ந்து எரிந்த நிலை​யில் இந்​தி​ய​ரின் உடல் மீட்​கப்​பட்​டுள்​ளது.​ இச் சம்​ப​வங்​கள் பெரும் அதிர்ச்​சியை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளன.​ இந்த அதிர்ச்​சியி​லி​ருந்து நாம் மீள்​வ​தற்​குள் மற்​றொரு இந்​தி​யர் மீது மர்​மக் கும்​பல் ஆசிட் வீச்சு நடத்​தி​விட்டு தப்​பி​யோ​டி​யுள்​ளது.​

மெல்​பர்ன் நக​ரின் வட​மேற்​குப் பகு​தி​யில் வசித்து வரு​ப​வர் ​ ஜஸ்ப்​ரீத் சிங்.​ இந்​தி​ய​ரான இவர்,​​ தனது மனை​வி​யு​டன் ஒரு விருந்​துக்​குச் சென்​று​விட்டு வீடு திரும்​பு​கை​யில் மனை​வியை வீட்​டில் இறக்​கி​விட்டு,​​ காரை பக்​கத்​துத் தெரு​வில் நிறுத்​தி​விட்டு வெளியே வந்​த​போது மர்​மக் கும்​பல் அவரை கீழே தள்ளி அவர் மீது ஆசிட்டை வீசி,​​ தீவைத்​து​விட்​டுத் தப்​பி​யோ​டி​விட்​டது.​

இப்​படி இந்​தி​யர்​கள் மீதான தாக்​கு​தல் அடிக்​கடி நடக்​கின்ற போதி​லும் இதை ஆஸ்​தி​ரே​லிய அரசு தீவி​ரப் பிரச்​னை​யாக எடுத்​துக் கொண்​ட​தா​கத் தெரி​ய​வில்லை.​ இந்​தத் தாக்​கு​தலை இன​வெ​றித் தாக்​கு​தல் என்று சொல்​ல​மு​டி​யா​விட்​டா​லும்,​​ கடந்த ஓராண்​டுக்கு மேலாக இந்​தி​யர்​களை மட்​டும் குறி​வைத்து நடத்​தப்​ப​டும் தாக்​கு​தல்​க​ளைப் பார்த்​தால் இது இன​வெறி ஆதிக்​கச் செயலே என்​பது தெரி​ய​வ​ரும்.​

இந்​தத் தாக்​கு​தல் சம்​ப​வங்​கள் சாதா​ரண குற்​றச் சம்​ப​வங்​கள்​தான் என்​பது போல் ஆஸ்​தி​ரே​லி​யத் தூதர் தாமஸ் வர்​கீஸ் பேசி​யுள்​ளார்.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் மேற்​ப​டிப்​புக்கு விண்​ணப்​பிக்​கும் இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை குறைந்து வரு​வ​தற்கு சர்​வ​தேச அள​வில் ஏற்​பட்​டுள்ள பொரு​ளா​தா​ரச் சரிவே கார​ணம் என்​றும் அவர் கூறி​யுள்​ளார்.​ ஆனால்,​​ ஊட​கங்​கள் மூலம் கிடைக்​கும் தக​வல்​க​ளைப் பார்த்​தால் பாது​காப்பு இல்​லாத கார​ணத்​தால்​தான் இந்த எண்​ணிக்கை குறைந்து வரு​வது புரி​யும்.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் படிக்​கும் ஆசி​யர் அல்​லா​த​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யு​டன் ஒப்​பிட்​டால் அங்கு படித்து வரும் இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை குறை​வு​தான்.​ ஆனால்,​​ ஆசி​யர்​கள் எண்​ணிக்​கை​யில் இந்​தியா இரண்​டா​வது இடம் வகிக்​கி​றது.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் பட்​ட​மேற்​ப​டிப்பு படிக்​கும் மாண​வர்​கள்,​​ பகு​தி​நேர ஊழி​யர்​க​ளாக வேலை​செய்து தங்​கள் செல​வி​னங்​க​ளைச் சமா​ளித்து வரு​கின்​ற​னர்.​ குறிப்​பாக மெல்​பர்ன் நக​ரில் இந்​தி​யர்​கள் எங்கு சென்​றா​லும் குழு​வா​கவே செல்​கின்​ற​னர்.​ தனி​யா​கச் செல்​வ​தில்லை.​ மேலும் விலை​ம​திப்பு மிக்க பொருள்​கள் எதை​யும் அவர்​கள் கையி​லெ​டுத்​துச் செல்​வ​தில்லை.​ இந்​நி​லை​யில் இது​போன்று நடத்​தப்​ப​டும் தாக்​கு​தலை வழிப்​பறி என்ற சாதா​ரண குற்​ற​மாக யாரும் சொல்​லி​விட முடி​யாது.​

இந்​தி​யர்​கள் மீது குறிப்​பாக மாண​வர்​கள் மீது நடத்​தப்​பட்டு வரும் கொலை​வெ​றித் தாக்​கு​த​லுக்கு இந்​தியா ​ கடும் கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளதை ஆஸ்​தி​ரே​லிய அர​சால் தாங்​கிக் கொள்ள முடி​ய​வில்லை.​ இந்​தி​யர்​க​ளின் பாது​காப்பை உறுதி செய்​வ​தா​கக் கூறு​வ​தற்​குப் பதி​லாக உல​கம் எங்​கும் இது​போன்ற குற்​றங்​கள் நடக்​கத்​தான் செய்​கின்​றன.​ ஏன் தில்லி,​​ மும்பை போன்ற நக​ரங்​க​ளி​லும் இவை நடக்​கத்​தான் செய்​கின்​றன.​ எனவே இதைப் பெரி​து​ப​டுத்த வேண்​டாம் என்று அந்த நாட்​டின் வெளி​யு​றவு அமைச்​சர் பேசி​யுள்​ளது அவ​ரது பொறுப்​பற்ற தன்​மை​யையே காட்​டு​கி​றது.​

இத்​த​கைய சம்​ப​வங்​கள் தற்​செ​ய​லாக நடந்​தி​ருந்​தா​லும் சரி...இன​வெ​றித் தாக்​கு​த​லாக இருந்​தா​லும் சரி...​ வெளி​நாட்​டி​னரை,​​ குறிப்​பாக இந்​தி​யர்​க​ளைப் பாது​காக்​கும் பொறுப்பு ஆஸ்​தி​ரே​லிய அர​சுக்கு உள்​ளது.​

இந்​தி​யர்​கள் மீது இன​வெ​றித் தாக்​கு​தல் நடந்து வரும் நிலை​யில்,​​ மத்​திய வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.கிருஷ்ணா,​​ "ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு படிக்​கச் செல்​லும் மாண​வர்​கள் ஒரு​மு​றைக்கு இரு​முறை யோசித்​துப் படிக்​கச் செல்​ல​வேண்​டும்.​ இன்​னும் சொல்​லப்​போ​னால் ஆஸ்​தி​ரே​லியா சென்று படிப்​ப​தைத் தவிர்க்க வேண்​டும்.​ வேறு​நா​டு​க​ளில் உள்ள பட்ட மேற்​ப​டிப்​பு​க​ளைத் தேர்ந்​தெ​டுத்​துப் படிக்​க​லாம்' என்​றும் யோசனை கூறி​யி​ருக்​கி​றார்.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் இந்​தி​யர்​கள் மீதான தாக்​கு​தலை உட​ன​டி​யாக நிறுத்த அந்த நாட்டு அர​சு​டன் பேச்சு நடத்தி சுமு​கத் தீர்​வு​காண முன்​வ​ரா​மல்,​​ மாண​வர்​களை அங்கு சென்று படிக்க வேண்​டாம் என்று கூறு​வது புத்​தி​சா​லித்​த​னம் அல்ல.​ ஆஸ்​தி​ரே​லிய பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் பட்​ட​மேற்​ப​டிப்​புக் கல்வி நன்​றாக இருப்​ப​தால்​தான் அங்கு சேர்​வ​தில் மாண​வர்​கள் ஆர்​வம் காட்​டு​கின்​ற​னர்.​ மேலும் திற​மை​யுள்ள மாண​வர்​க​ளும்,​​ அதிக மதிப்​பெண் பெறும் வாய்ப்​புள்ள,​​ வன்​மு​றைச் செயல்​க​ளில் ஈடு​ப​டாத மாண​வர்​கள்​தான் அங்கு செல்​கின்​ற​னர்.​ எங்கு சென்று படிக்க வேண்​டும்,​​ என்ன படிப்பு படிக்க வேண்​டும் என்​ப​தைத் தீர்​மா​னிக்க வேண்​டி​யது மாண​வ​ரும் அவ​ரு​டைய பெற்​றோ​ரும் தான்.​ கல்வி ஆலோ​ச​கர்​க​ளா​கச் செயல்​ப​டும் சில​ரு​டைய தவ​றான வழி​காட்​டு​தல்​க​ளாலே தவ​று​கள் ஏற்​ப​டு​கின்​றன.​ வெளி​நாடு சென்று படிக்​கும் மாண​வர்​க​ளுக்​குச் சில எச்​ச​ரிக்​கை​களை அமைச்​சர் தெரி​விக்​க​லாமே தவிர அவர்​களை இங்கு படிக்​காதே,​​ அங்கு படிக்​காதே என்று தீர்ப்​புச் சொல்​லக்​கூ​டாது.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் படிக்​கும் இந்​திய மாண​வர்​கள்,​​ தங்​க​ளின் திற​மை​யான படிப்​பின் மூல​மும்,​​ செயல்​பாட்​டின் மூல​மும் அந்த நாட்​டுக்​குப் பெருமை தேடித் தரு​கின்​ற​னர்.​

இதை ஆஸ்​தி​ரே​லிய அரசு உணர்ந்​து​கொண்டு நடந்த சம்​ப​வத்​துக்கு வருத்​தம் தெரி​விப்​ப​து​டன் நில்​லா​மல்,​​ இந்​தி​யர்​க​ளின் பாது​காப்​பில் கவ​னம் செலுத்த வேண்​டும்.​ அது​மட்​டு​மல்ல,​​ இது​போன்ற இன​வெ​றித் தாக்​கு​த​லுக்கு முற்​றுப்​புள்ளி வைப்​ப​து​டன் இதற்​குக் கார​ண​மான குற்​ற​வா​ளி​க​ளைக் கண்​டு​பி​டித்து நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​

அன்​னிய நாட்​டில் இந்​தி​யர்​க​ளின் விலை​ம​திக்க முடி​யாத உயிர் பறி​போ​வதை பார்த்​துக்​கொண்டு நாம் சும்மா இருக்க முடி​யாது.​ இந்​திய மாண​வர்​க​ளின் பாது​காப்பை உறுதி செய்​வ​தில் ஆஸ்​தி​ரே​லிய அர​சுக்கு முழு பொறுப்பு உள்​ளது.​ அதை வலி​யு​றுத்​தும் கடமை இந்​திய அர​சுக்கு உள்​ளது.
கட்டுரையாளர் :ஜெ.ராக​வன்
நன்றி : தினமணி

Saturday, January 9, 2010

கிரெடிட் கார்டில் கண்டபடி செலவழிப்பவரா? : வங்கிகள் கிடுக்கிப்பிடி


உரிய காலத்துக்குள் பணம் கட்டாமல் இருந்தால், அல்லது குறைவான பணம் கட்டியிருந்தால் உங்கள் கிரெடிட் கார்டின் உச்சவரம்பு குறைக்கப்படலாம். வங்கிகளின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கிடுக்கிப்பிடியாகக் கருதப்படுகிறது. ஒருவரின் கடன் திருப்பிச் செலுத்தும் தகுதியின் அடிப்படையில் அவருக்கு வங்கிகள் கடன் அட்டைகள் எனப்படும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அப்படி வழங்கும் போது, அந்த அட்டையைப் பயன்படுத்தும் உச்சவரம்பும் குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒருவர் தனது கடன் அட்டையை ஒரு லட்சம் ரூபாய் வரையில் பயன்படுத்தலாம். 45 நாட்களுக்குள், அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். காலம் அதிகரிக்க அதற்கான வட்டி வீதமும் அதிகரித்துக் கொண்டே செல்லும். இப்படி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியே வாழ்க்கையைக் கழிப்பவர்கள் பின் அதைத் திருப்பிக் கட்ட சிரமப்படுகின்றனர். இதனால், பெருமளவில் பாதிக்கப்பட்ட வங்கிகள், இந்த நடைமுறையில் சில மாற்றங் களை கொண்டு வந்துள்ளன. அதன்படி, கிரெடிட் கார்டை அதிக அளவில் பயன்படுத்துபவர் களது உச்சவரம்பு குறைக் கப் பட்டுள்ளது. எச்.எஸ்.பி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற வங்கிகள் இதை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி ஊழியர் ஒருவர் கூறுகையில்,'எங்கள் வங்கி இப்போது 'ப்ரூடன்ட் கிரெடிட் கார்டு லைன் மேலாண்மை' குறித்த சில விஷயங்களைப் பின்பற்றி வருகிறது. அதனால், சில வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் ரொக்கப் பரிமாற்றங்களின் உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இது, நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது' என்று தெரிவித்தார். இந்த அதிரடி மாற்றத்துக்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஒன்று, கடன் அட்டை வாங்கி அளவில்லாமல் செலவழித்து விட்டு திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அதைக் குறைப்பதற்காக. இரண்டு, கடன் அட்டை வாங்கி வைத்து விட்டு, அதைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அல்லது செலுத்த வேண்டிய அளவை விட குறைந்த அளவிலேயே பணம் செலுத்துபவர்கள் இவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக. இந்த நடைமுறையை சில வங்கிகள் கடந்த ஓர் ஆண்டாகவே கடைப்பிடித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைமுறையால், பாதுகாப்பற்ற கடன் வழங்கலைத் தவிர்க்க முடிவதாக வங்கி அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால், 2009ல் இரண்டு கோடி கிரெடிட் கார்டுகள் குறைந்து விட்டன, என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


Monday, November 30, 2009

துபாய் பொருளாதார நெருக்கடி: அதிகளவு பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கருத்து

துபாய் பொருளாதார நெருக்கடியால் அதிகளவு பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டதன் காரணமாக துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரெலியாக இந்திய பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இந்நிலையில், துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தகவல் தெரிவித்தனர் . இதன் காரணமாக இன்றைய பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் தொடங்கியது. நேற்று ஐக்கிய அரபு குடியரசின் ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை, நிதி சந்தை, வங்கிகள் ஆகியவற்றின் பணப்புழக்கம் பாதிக்காத வகையில் அந்நாட்டு நாணயமான தினாரை வங்கித் துறையில் புழக்கத்திற்கு விடுவதாக அறிவித்தது. இந்நிலையில் எடில்விஸ் இன்ஸ்டிசனல் ஈக்விட்டிஸ் என்ற முதலீடு நிறுவனத்தின் துணை தலைவர் விகாஸ் கிமானி இதுகுறித்து கூறும் போது, இந்திய பொருளாதாரத்திற்கு துபாயில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாதிப்பு குறைந்த அளவே இருக்கும். துபாய் நிறுவன கடன் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த கடனை திருப்பி செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். துபாய் வேர்ல்ட் நிறுவனத்தை பாதுகாக்க துபாய் அரசு முயற்சிக்கும் என்று தெரிவித்தார்.
ஐக்கிய அரபு குடியரசு, நெருக்கடியில் உள்ள நிறுவனத்திற்கு உதவும் வகையில் உதவிக்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று பொதுவான எதிர்பார்ப்பு நிலவுவதாக மற்றொரு நிபுணர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Monday, October 12, 2009

கடனும் இலவசம்

கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவிப்பு செய்தது. 2009-10-ம் கல்வியாண்டில் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடியை அரை மனதுடன்தான் பாராட்ட முடிகிறது. ஏனெனில், மத்திய அரசு அறிவித்திருக்கும் நிபந்தனையைப் பார்க்கும்போது, யாருக்கு இந்தக் கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடி மிகவும் பயனுள்ளதாக இருக்குமோ அவர்களை மீண்டும் பின்னுக்குத் தள்ளுகிற நிலைமையை மத்திய அரசே உருவாக்கப்போகிறது என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.

வீட்டு வங்கிக் கடன்கூட 8 முதல் 8.5 சதவீத வட்டியில் தருகிறார்கள். அதாவது நிலத்தின் மதிப்பு ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போகக்கூடிய ஒரு உடைமை மீதான கடனுக்கே இந்த அளவுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் படிப்பைத் தவிர எந்தவித வருவாய்க்கும் வழியே இல்லை என்கிற மாணவருக்கு அளிக்கும் கல்விக் கடனுக்கு வங்கிகள் நிர்ணயித்துள்ள வட்டி 11 சதவீதம்.

ஒரு மாணவர் முதல் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், அவர் மாதம் ரூ.1000 வரை வட்டி கட்டியாக வேண்டும். அடுத்தஆண்டு இன்னொரு லட்சம் வாங்கினால் அந்த ஆண்டில் மாதம் ரூ. 2,000 வட்டி. மாணவர் படித்துக்கொண்டிருக்கிறாரே தவிர, தொழில் செய்பவர் அல்ல. வீடு, நிலம் போல ஆண்டுதோறும் மதிப்புக்கூடக்கூடிய பொருள் அல்ல அவருடைய படிப்பு. அவர் வேலைக்குச் சேர்ந்தாலொழிய கடனைத் திருப்பிச் செலுத்தும் சக்தி அவருக்குக் கிடையாது.

தற்போது மத்திய அரசு அனைத்துக் கல்விக் கடனுக்கும் வட்டியைத் தானே செலுத்தும் இந்த அறிவிப்பால், வசதி உள்ளவர்களும், சொத்து உள்ளவர்களும், கருப்புப்பணத்தை வைத்திருப்பவர்களும்கூட, "சும்மா கிடைக்கிற கடன்தானே', "நாலு வருஷத்துக்கு வட்டியில்லாத கடன்தானே' என்று கல்விக் கடனை வாங்கி, அதைத் தொழிலில் முதலீடு செய்தோ அல்லது அப்படியே அதே வங்கியில் வைப்பு நிதியாக வைத்து 7 சதவீதம் வட்டியைப் பெறுவதற்கான ஆசையாலோ, கல்விக்கடன் பெற முயல்வர். இதனால் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் வங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியுள்ளவர்களையே "பாதுகாப்பாக'த் தேர்வு செய்யும். முன்னுரிமை வழங்கும். மேலும், ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் குறிப்பிட்ட அளவுக்குமேல் கல்விக் கடன் வழங்க முடியாது. ஆகவே, தகுதியுடைய, ஏழை மாணவர்கள் இந்த இலவசக் கடன் போட்டியில் நிராகரிக்கப்படுவார்கள்.

தற்போது மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஒரேயொரு நிபந்தனை பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே. அதாவது பெற்றோரின் ஊதியம் மாதம் ரூ. 37,500-க்கு மிகாமல் இருந்தால் இந்தக் கல்விக் கடன், வட்டி தள்ளுபடிச் சலுகையைப் பெற முடியும். ஆகவே, இந்த இலவசக் கடனைப் பெற எல்லோரும் முயற்சி செய்வார்கள் என்பது நிச்சயம். இந்தக் கல்விக் கடன் திட்டத்தில் பயன்பெறவுள்ள 5 லட்சம் மாணவர்களில் 75 சதவீதம் பேர் வசதி உள்ளவர்களாகவும், அரசு இலவசக் கடன் என்று அறிவித்ததால் வாங்க வந்தவர்களாகவும் இருப்பர்.

மாணவர்களின் உயர்கல்வியில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அவர்கள் செய்திருக்கவேண்டிய முதல் வேலை, கல்விக் கட்டணத்தைக் குறைப்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களைச் சேர்த்து ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் ஏறக்குறைய ரூ. 1 லட்சம் செலுத்தவேண்டியுள்ளது. மத்திய அரசு கடுமையான, உறுதியான நடவடிக்கை எடுத்தால், இந்தக் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ. 50,000 என குறைக்க முடியும். இதனால் பெற்றோர் நேரடியாகப் பயன்பெறுவார்கள். அவர்கள் கல்விக் கடன் வாங்கினாலும்கூட, அதுவும் 50 சதவீதமாகக் குறையும். அதற்கு மத்திய அரசே வட்டியைச் செலுத்தினாலும், அதுவும் பாதியாகக் குறையும்.

இதற்கு மாறாக, கல்விக் கடனுக்கான வட்டியை மட்டும் அரசே ஏற்பதன் மூலம், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம்போல பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறார்கள் என்பதோடு, அனைவரும் கல்விக்கடன் பெறவும் ஊக்கப்படுத்துகிறார்கள்.

அதிக மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு முழு வட்டி தள்ளுபடி என்றும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கடனுக்கு குறிப்பிட்ட சதவிகித வட்டி தள்ளுபடி என்றும் அரசு அறிவித்தாலும்கூட, இந்தக் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி நியாயமானதாகவும், உண்மையானதாகவும் அமையும்.
கர்நாடக மாநில அரசைப் போல, கல்விக் கடனில் 6 சதவீத வட்டியை மானியமாக அளிக்கும் வழக்கத்தை கையில் எடுத்துக்கொண்டால்கூட, வெறுமனே இலவசக் கடன் என்பதற்கான போட்டி பெருமளவு குறையும்.

அனைத்து மாணவர்களின் கல்விக் கடனுக்கும் வட்டி தள்ளுபடி என அறிவித்து, தேவையில்லாமல் ஒரு போட்டியை உருவாக்கி, அதில் வலுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெறவும், இளைத்தவர்கள் ஒதுங்கி நின்று ஏங்கவும் அரசே பாதை அமைத்துள்ளது. நல்ல திட்டம், ஆனால் நடைமுறையில் சில கடிவாளம் தேவைப்படுகிறது.
நன்றி : தினமணி