
விப்ரோ லிமிடெட்டின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி துறையில் மூன்றாம் இடத்தில் இருந்து வரும் நிறுவனம் விப்ரோ. தற்போது, முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்நிறுவனம், இந்த இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்த நிகர லாபத்தை விட அதிகளவு நிகர லாபத்தை அடைந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் 11.71 பில்லியன் ரூபாயாக(252 மில்லியன் டாலர்) 21 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், 10.41 பில்லியன் ரூபாய் நிகர லாபம் கிடைக்கும் என்றே விப்ரோ நிறுவனம் கணிப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நிறுவனத்தின் நிகர லாபம் எதிர்பார்த்தை விட அதிகயளவு அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக பங்குச்சந்தையில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நன்றி : தினமலர்