
மும்பை பங்குச் சந்தையில் ஏக குஷியுடன் தங்கள் தீபாவளி பண்டிக்கை திருநாளை முதலீட்டாளர்கள் கொண்டாடினர். 30 லட்சம் கோடி அளவிற்கு லாபம் கிடைத்துள்ளது என்றால், சந்தேஷத்திற்கு பஞ்சம் இருக்குமா என்ன? மும்பை பங்குச் சந்தை மற்றும் மும்பை முன்பேர வர்த்தக சந்தைகளில் சாம்வாட் 2065 கடந்த வெள்ளி கிழமையுடன் முடிவடைந்தது. இந்த சாம்வாட் 2065ல் பங்குச்சந்தையில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், முதலீட்டாளர்கள் இரட்டிப்பு லாபம் அடைந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த நேரத்தில் மொத்த முதலீட்டாளர்களி் லாபம் 58 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, நேற்று தீபாவளி அன்று
மும்பை பங்குச் சந்தை மற்றும் மும்பை முன்பேர வர்த்தக சந்தைகளில் சாம்வாட் 2066 பிறப்பை முன்னிட்டு முகுராத் வர்த்தகம் நடைபெற்றது. சாம்வாட் 2066ல் அதிக லாபம் கிடைக்கும் விதமாக லட்சுமி பூஜையும் நடைபெற்றது.
நன்றி : தினமலர்