Showing posts with label கச்சா எண்ணெய் விலை. Show all posts
Showing posts with label கச்சா எண்ணெய் விலை. Show all posts

Monday, October 19, 2009

டாலரின் மதிப்பு உயர்வால், கச்சா எண்ணெய் விலையில் சரிவு

டாலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருவதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் சரிவின‌ை கண்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஆசிய சந்தையில் டாலரின் மதிப்பு மீண்டும் எழுச்சி பெற்றது. இதனால், கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கியது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிகரித்ததை போல கடந்த வெள்ளி கிழமை கச்சா எண்ணெய் விலை 78.53 அமெரிக்க டாலராக உயர்வினை கண்டது. இது இன்று 78.41 அமெரிக்க டாலராக சரிவினை கண்டது. இன்று காலை ஆசிய சந்தையில், நவம்பர் டெலிவரிக்கான , நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட், லைட் ஸ்வீட் கச்சா எண்ணெய் விலை, பேரல் ஒன்றிற்கு 12 சென்ட்டுகள் குறைந்து 78.41 அமெரிக்க டாலராக உள்ளது. டிசம்பர் டெலிவரிக்கான பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய் விலை 14 சென்ட்டுகள் குறைந்து 76.85 அமெரிக்க டாலராக உள்ளது.
நன்றி : தினமலர்


Saturday, August 1, 2009

விமான எரிபொருள் விலை இன்றிரவு முதல் உயர்கிறது

இன்று நள்ளிரவில் இருந்து, விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூயல் ( ஏ எஃப் டி ) விலை உயர்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதை அடுத்து விமானங்களுக்கான எரிபொருள் விலை 1.6 சதவீதம், அதாவது டில்லியில் கிலோ லிட்டருக்கு ரூ.585 கூட்டப்படுகிறது. இனிமேல் அதன் விலை கிலோ லிட்டருக்கு ரூ.36,923 ஆக இருக்கும் என்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை பொருத்து, இந்தியாவில் விமான எரிபொருள் விலையும் உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை கடந்த இரண்டு மாதங்களில் நான்கு தடவைகள் விமான எரிபொருள் விலையை கூட்டியிருக்கின்றன. இருந்தாலும் கடந்த இரு வாரங்களுக்கு முன் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்ததால் விமான எரிபொருள் விலையும் 5.7 சதவீதம் குறைக்கப்பட்டது. மே 1 ம் தேதி அன்று கிலோ லிட்டருக்கு ரூ.31,614.54 ஆக இருந்த விமான எரிபொருள் விலை, நான்கு முறை மாற்றி அமைக்கப்பட்டபின் ஜூன் 1 ம் தேதி அன்று ரூ.38,557.56 ஆக உயர்ந்து விட்டது. ஆனால் ஜூலை 16ம் தேதியன்று அது ரூ.36,338 ஆக குறைக்கப்பட்டது. இப்போது அது ரூ. 36,923 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த விமான எரிபொருள் விலை ஊருக்கு ஊர் மாறுபடும். டில்லியில் ரூ.36,923 ஆக இருக்கும் இது, மும்பையில் ரூ.38,098 ஆகவும், கோல்கட்டாவில் ரூ.45,060 ஆகவும், சென்னையில் ரூ.40,789 ஆகவும் இருக்கிறது. விமானங்களை இயக்க ஆகும் செலவில் 40 சதவீதத்தை எடுத்துக்கொள்ளும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால், ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் விமான கம்பெனிகள் மேலும் சிக்கலுக்குள்ளாகும் என்று சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்



Wednesday, July 29, 2009

கச்சா எண்ணெய் விலை குறைந்தது

அமெரிக்க மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதாக வெளிவந்த செய்தியாலும், பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனமான பிபி, நஷ்டமடைந்திருப்பதாக வெளிவந்த செய்தியாலும், ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. நியுயார்க்கின் முக்கிய வியாபார பொருளான யுஎஸ் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) பேரலுக்கு 60 சென்ட் குறைந்து 66.63 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 28 சென்ட் குறைந்து 69.60 டாலராக இருக்கிறது. அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து அதன் காரணமாக அங்கு வாங்கும் சக்தி குறைந்து போனதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஜூன் மாதம் 49.3 புள்ளிகளாக இருந்த வாங்கும் சக்தி, ஜூலை மாதத்தில் 46.6 புள்ளிகளாக குறைந்திருக்கிறது. இது, கடந்த மே மாதத்தில் 54.8 புள்ளிகளாக இருந்தது.

நன்றி : தினமலர்



Monday, July 27, 2009

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 68.44 டாலராக உயர்ந்தது

மோசமான நிலையில் இருந்த உலக பொருளாதாரம் அதிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிவதால் ஆசிய சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்கள் வெளியிட்ட காலாண்டு நிதி அறிக்கையில், அவைகள் லாபம் சம்பாதித்திருப்து தெரிய வந்திருப்பதை அடுத்து, கடந்த ஒரு வருட காலமாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வந்த பொருளாதார மந்த நிலை, முடிவுக்கு வந்து விடும் என்று தெரிகிறது. இதன் காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் மீண்டும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. நியுயார்க்கின் முக்கிய வியாபார பொருளான யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) விலை பேரலுக்கு 39 சென்ட் உயர்ந்து 68.44 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 38 சென்ட் உயர்ந்து 70.70 டாலராக இருக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, July 21, 2009

எண்ணெய் நிறுவனங்களுக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் கடன் ரூ.950 கோடி

இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கும் தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ.950 கோடிக்கு மேல் கடன் வைத்திருக்கிறது. இருந்தாலும் இந்த கடனை பெறுவதற்காக மத்திய அரசு, பேங்க் கியாரன்டி எதையும் பெறவில்லை. பார்லிமென்டில் எழுத்து மூலமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா இதனை தெரிவித்தார். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு ரூ.599 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு ரூ.314 கோடியும், இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு ரூ.37.36 கோடியும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பாக்கி வைத்திருக்கிறது என்றார் முரளி தியோரா. இந்த நிதி ஆண்டின் துவக்கத்தில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்ததால் விமானங்களுக்கான எரிபொருளின் விலையும் உயத்தப்பட்டது. அதிலிருந்து இந்த கடன் தொகை அதிகரித்துக்கொண்டே வந்து இப்போது ரூ.950 கோடிக்கு மேல் போய் விட்டது.
நன்றி : தினமலர்


Friday, July 17, 2009

விமான எரிபொருள் விலை 6% குறைக்கப்பட்டது

இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் பொதுத் துறை நிறுவனங்கள், புதன்கிழமை அன்று விமான எரிபொருள் விலையை 5.7 சதவீதம் குறைத்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து, அண்மைக் காலமாக விமான எரிபொருளின் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், தற்பொழுது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, சராசரியாக 63.42 டாலராக குறைந்துள்ளதையடுத்து விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. புதுடெல்லியில், ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.2,221 குறைக்கப்பட்டு ரூ.36,338-க்கு விற்பனை செய்யப்படுகிறது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.39,789 என்ற அளவிலிருந்து ரு.37,475-ஆக குறைக்கப் பட்டுள்ளது. இந்தியா வாங்கும் ஒரு பீப்பாய் பேஸ்கட் குரூட் ஆயில் விலை அண்மையில் சராசரியாக 69.57 டாலராக அதிகரித்ததையடுத்து இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விமான எரிபொருளின் விலையை உயர்த்தின
நன்றி : தினமலர்


Friday, July 10, 2009

கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று மேலும் குறைந்திருக்கிறது. நியுயார்க்கின் முக்கிய வியாபார பொருளான யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை இன்று 33 சென்ட் குறைந்து, பேரலுக்கு 60.08 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) 30 சென்ட் குறைந்து பேரலுக்கு 60.80 டாலராக இருக்கிறது. கடந்த மாதத்தில் 73 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 13 டாலர் குறைந்து விட்டதற்கு,ற உலக அளவிலான பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையிலேயே இருப்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


சர்வதேச சந்தையில் விலை குறைந்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் : தியோரா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 முதல் 60 டாலருக்குள் இருந்தால், இந்தியாவில் கடந்த வாரத்தில் கூட்டிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டு விடும் என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலர் வரை வந்ததால் மத்திய அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4 ம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 ம் உயர்த்தியது. ஆனால் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை நேற்றைக்கு பேரலுக்கு 61.58 டாலராகத்தான் இருந்தது. ஜூலை மாதத்தின் அதன் சராசரி விலை பேரலுக்கு 61.12 டாலருக்கும் குறைவான விலையில்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் பெட்ரோலிய தேவையில் 75 சதவீதத்தை நாம் இறக்குமதிதான் செய்கிறோம். இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் மானிய விலையில் கொடுக்கப்படுவதால், இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை 2008 - 09 நிதி ஆண்டில் ரூ.4,870 கோடி வரை நஷ்டம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெட்ரோல்,டீசல் விலை உயர்வு அவசியமானதுதான் என்றார் முரளி தியோரா.
நன்றி : தினமலர்

Wednesday, July 1, 2009

பெட்ரோல் டீசல் விலை உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை ரூ.2ம் உயர்வடைகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்து பேசினார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முரளி தியோரா பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை ரூ.2ம் உயர்த்துவதாக அறிவித்தார். இந்த விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.
நன்றி : தினமலர்


Tuesday, June 30, 2009

கச்சா எண்ணெய் விலை 72 டாலருக்கும் மேல் உயர்ந்தது

உலகின் எட்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான நைஜீரியாவில், அடிக்கடி ஆயில் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் பைப்லைன்களை மற்றும் பிளாட்பாரத்தை தீவிரவாதிகள் சேதப்படுத்தி விடுவார்கள். இதனால் எண்ணெய் கம்பெனிகளுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் நஷ்டம் ஏற்படுவதுடன் உற்பத்தியும் பாதிக்கப்படுவது வழக்கம். இப்போது அம்மாதிரியான பிரச்னை மீண்டும் எழுந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலருக்கும் மேல் உயர்ந்து விட்டது. அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.08 டாலர் அதிகரித்து 72.57 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 1.21 டாலர் அதிகரித்து 72.20 டாலராக இருக்கிறது.
நன்றி : தினமலர்


Wednesday, June 17, 2009

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த வருடம் அடைய இருக்கும் வருமான இழப்பு ரூ.38,700 கோடி

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையால், இந்த வருட வருமானத்தில் ரூ.38,700 கோடியை இழப்பார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களுமே ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையின் போதும் ரூ.2.96 ஐ இழக்கிறார்கள் என்கின்றனர் அதிகாரிகள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 70 டாலர் வரை உயர்ந்து விட்டதால், ஏற்கனவே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையின் போதும் ஆகிக்கொண்டிருந்த ரூ.3.68 நஷ்டம், இப்போது ரூ.6.08 ஆக உயர்ந்து விட்டது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி.மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையால் நாள் ஒன்றுக்கு ரூ.135 கோடி நஷ்டம் அடைந்து வருகின்றன.
நன்றி : தினமலர்


Tuesday, June 16, 2009

கச்சா எண்ணெய் விலை குறைந்து 70 டாலராகியது

கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வருகிறது. இன்று அதன் விலை பேரலுக்கு 70 டாலருக்கு வந்து விட்டது. ஐரோப்பாவின் கரன்சியான யூரோவுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பதாலும், சர்வதேச அளவில் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பயப்படுவதால் பங்கு சந்தைகள் சரிந்து வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது என்கிறார்கள். அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை, நேற்றைய விலையில் இருந்து 61 சென்ட் குறைந்து இன்று பேரலுக்கு 70.01 டாலராக இருந்தது. கடந்த வாரத்தில்தான் இது 73 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) 43 சென்ட் குறைந்து 69.81 டாலராக இருந்தது.
நன்றி : தினமலர்


Friday, April 17, 2009

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று உயர்ந்திருக்கிறது. நியுயார்க் சந்தையில் அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( மே டெலிவரிக்கானது ) பேரலுக்கு 97 சென்ட் உயர்ந்து 50.22 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( ஜூன் டெலிவரிக்கானது ) 89 சென்ட் உயர்ந்து 53.33 டாலராக இருக்கிறது. எதிர்கால உபயோகத்திற்காக அமெரிக்கா சேர்த்து வைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவு, எதிர்பார்த்ததையும் விட அதிகமாக இருக்கிறது. அதையும் மீறி, கச்சா எண்ணெய் விலை இன்று உயர்ந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 1990 க்குப்பின் இப்போதுதான் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் சேமிப்பு 366.7 மில்லியன் பேரல்களாகி இருக்கிறது. இது கடந்த வருடம் இருந்த சேமிப்பு அளவைக்காட்டிலும் 16.5 சதவீதம் அதிகம்.
நன்றி : தினமலர்


Monday, March 30, 2009

கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது

கச்சா எண்ணெய் விலை இன்று பேரலுக்கு 1.13 டாலர் குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( மே டெலிவரிக்கானது ) இன்று பேரலுக்கு 1.13 டாலர் குறைந்து 51.25 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 92 சென்ட் குறைந்து 51.06 டாலராக இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையிலேயே இருப்பதால், அங்கு வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாலும், அமெரிக்கா சேமித்து வைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். மார்ச் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் 6,60,000 பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை அங்கு 33 லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


Friday, March 20, 2009

கச்சா எண்ணெய் விலை குறைந்தது

நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 61 சென்ட் குறைந்திருக்கிறது. தொடர்ந்து சில நாட்களாக அது தொடர்ந்து பேரலுக்கு 51 டாலரை ஒட்டியே இருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கி, ஒரு லட்சம் கோடி டாலரை புழக்கத்தில் விட முன்வந்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நியுயார்க் சந்தையில் ஏப்ரல் டெலிவரிக்கான யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 61 சென்ட் குறைந்து 51 டாலராக இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதில் அதிக பட்சமாக நேற்று அதன் விலை 52.25 டாலராக இருந்தது. இது கடந்த நவம்பர் 28ம் தேதிக்குப்பிறகு இருந்த அதிக பட்ச விலை. மே டெவிவரிக்கான லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 41 சென்ட் குறைந்து 50.26 டாலராக இருக்கிறது. நலிவடைந்து போயிருக்கும் உலகின் மிகப்பெரிய அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்க பெடரல் வங்கி, ஒரு லட்சம் கோடி டாலரை புழக்கத்தில் விடுவதாக புதன்கிழமை அன்று அறிவித்தது. இதனையடுத்து பெரும்பாலான கரன்சிக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து போனது. கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் நடப்பதால், அதன் மதிப்பு குறைந்து போனதையடுத்து, மற்ற கரன்சி வைத்திருக்கும் நாடுகளில் கச்சா எண்ணெய் குறைந்த விலைக்கு கிடைக்கிறது.

நன்றி : தினமலர்



Wednesday, March 4, 2009

கச்சா எண்ணெய்யின் விலை குறைவால் இறக்குமதி பில்தொகை 67 சதவீதம் குறைந்தது

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டிருக்கும் இந்தியன் ஆயில் கார்பரேஷன், மாதா மாதம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் பில்தொகை இப்போது 67 சதவீதம் குறைந்து 1.5 பில்லியன் டாலருக்கு வந்திருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து போனதையடுத்து இறக்குமதி பில் தொகையும் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூலையில் பேரல் ஒன்றுக்கு 140 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது 40 டாலரை ஒட்டித்தான் இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பில் தொகையும் வெகுவாக குறைந்து விட்டது. புதுடில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய இந்தியன் ஆயில் கார்பரேஷனின் இயக்குநர் ( நிதி ) நரசிம்மன் இதனை தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 140 டாலராக இருந்தபோது 4.5 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் இறக்குமதி பில் தொகை, இப்போது 1.5 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, February 17, 2009

கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதால், இன்று ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 37 டாலருக்கும் கீழே சென்று விட்டது. இன்று நியுயார்க் மெர்க்கன்டைல் எக்ஸ்சேஞ்சில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 76 சென்ட் குறைந்து 36.75 டாலராக இருக்கிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் பேரலுக்கு 147.27 டாலர் வரை சென்ற கச்சா எண்ணெய் விலை இப்போது, அதிலிருந்து 75 சதவீதம் வரை குறைந்து விட்டது. அமெரிக்க பொருளாதாரம் கடும் சரிவில் இருப்பதால் அங்கு அதிகமான பேர் தினமும் வேலையை இழந்து வருகிறார்கள். எனவே அங்கு மக்களின் வாங்கும் சக்தி பெருமளவில் குறைந்து விட்டது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பானிலும் இப்போது நிலைமை மோசமாக இருக்கிறது. எனவே அங்கும் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்து விட்டது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து வருகிறது.
நன்றி : தினமலர்

நன்றி : தினமலர்

Monday, February 16, 2009

கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது

சரிந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை சரி செய்ய, அந்நாட்டு அரசு மிகப்பெரிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக அறிவித்தும் கூட கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( மார்ச் டெலிவரிக்கானது )இன்று காலை பேரலுக்கு 5 சென்ட் குறைந்து 37.46 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 11 சென்ட் குறைந்து 44.70 டாலராக இருந்தது. பொருளாதார மீட்பு திட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்தும் கூட, அங்கு சேமித்து வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரித்திருப்பதாலும், பெட்ரோலுக்கான தேவை குறைந்து போனதாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். வரி விலக்கு மற்றும் சில சலுகை திட்டத்திற்காக 787 பில்லியன் டாலரை ஒதுக்கும் பொருளாதார மீட்பு திட்டத்திற்கு கடந்த வெள்ளி அன்று அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்திருந்தது. அது இப்போது அதிபர் பாரக் ஒபாமாவின் கையெழுத்திற்காக காத்திருக்கிறது.
நன்றி : தினமலர்

Sunday, December 21, 2008

எரிபொருள் விலை வீழ்ச்சி : விமான கட்டணம் குறைகிறது

விமான எரிபொருளின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், விரைவில் விமான கட்டணமும் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, கடந்த சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, விமான எரிபொருளின் விலையும் கடந்த 36 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதையடுத்து, கடுமையாக உயர்த்தப்பட்ட விமான கட்டணம் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், விமான கட்டணம் குறைப்பு குறித்து, விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது:
விமான எரிபொருளுக்கான விலை குறிப்பிடத் தக்க அளவில் குறைந்துள்ளது. இதன் பலன், சாதாரண பயணிகளுக்கும் கிடைக்க வேண்டும். ஏர் இந்தியா நிறுவனம், இன்னும் சில நாட்களில் கட்டணத்தை குறைப்பது குறித்து அறிவிக்கும். இதையடுத்து, தனியார் விமான நிறுவனங்களும் கட்டண குறைப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Saturday, December 20, 2008

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 36 டாலராக குறைந்தது

வியாழன் அன்று நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதத்திற்கும் மேல் குறைந்து, பேரலுக்கு 36 டாலராக குறைந்திருக்கிறது. அமெரிக்காவில் கார்களுக்கான டிமாண்ட் குறைந்து போய், டீலர்களிடம் ஏராளமான கார்கள் விற்காமல் தேங்கி இருப்பதால், அங்குள்ள கார் கம்பெனிகளுக்கு இன்வென்ட்ரி நஷ்டம் அதிகம் ஏற்பட்டு வருகிறது. கார்களின் விற்பனை குறைந்து வருவதால் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவையும் குறைந்து, அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருகிறது. ஓபக் அமைப்பு நாடுகள் உற்பத்தியை குறைப்போம் என்று சொன்னதும் கூட விலை குறைவதை தடுக்க முடியவில்லை. நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 35.98 டாலர் வரை குறைந்து பின்னர் 36.22 டாலரில் முடிந்திருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 43.92 டாலராக இருந்தது. சரிந்துகொண்டிருக்கும் பொருளாதாரம் இன்னும் சரியாகவில்லையாதலால், பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்டும் அதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து குறைந்து கொண்டுதான் இருக்கும் என்று இன்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்