![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs0XP2gsy1hBUTt5c8wpfwTsw81ivBKqAgq_gL8DgOxAXPTFAci6fdGdmGwfr5jD4L2CqBl1c45WZxb-HYzgKocTD5dRr_5l5ZHA5qzl2Ny8LHf_SwiNA8pkejFZva0shh01SJarDnv_0/s320/6847150.jpg)
தற்போதைய சூழ்நிலையில் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. இதைத் தவிர்க்க, தேசிய வீட்டு வசதி வங்கிக்கு 5,000 கோடி ரூபாயும், எக்சிம் வங்கிக்கு 4,000 கோடி ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும். இம்முடிவை ரிசர்வ் வங்கி மத்தியக் குழு எடுத்தது' என்றார்.மேலும் அவர், அடுத்த இரு ஆண்டுகளுக்கு நிதி நெருக்கடி சூழ்நிலை தொடரும் என்று கூறியதுடன், மொத்த வளர்ச்சி 7.5 சதவீதம் முதல் 8 சதவீதத்திற்குள் தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, பணவீக்கம் நடப்பு வாரத்தில் 8 சதவீதமாகக் குறைந்தது.மேலும், ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்த
ஊக்குவிப்பு நடவடிக்கை காரணமாக வட்டி வீதம் குறையும் என்று முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன் நேற்று மும்பையில் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்