Saturday, March 7, 2009

ஐன்ஸ்டீனின் டாக்டர் பட்டமும் ஏலத்திற்கு வருகிறது

20 ம் நூற்றாண்டின் மிக சிறந்த விஞ்ஞானி என்று அழைக்கப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் டாக்டர் பட்டமும் ஏலத்திற்கு வருகிறது. ' ஏ நியு டிடர்மினேஷன் ஆஃப் மோல்கூலர் டைமன்சன்ஸ் ' என்ற ஆராய்ச்சி கட்டுரையை வழங்கியதற்காக, யுனிவர்சிட்டி ஆஃப் ஜூரிச் 1906 ம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு வழங்கிய டாக்டர் பட்டம் ஏலம் விடப்படுவதாக லூசர்ன் நகர ஏல நிறுவனத்தை சேர்ந்த ஃபிஷர் கேலரி தெரிவித்தார். வரும் ஜூன் மாதம் இந்த ஏலம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். 1909 ம் ஆண்டு யுனிவர்சிட்டி ஆஃப் ஜெனிவா, ஐன்ஸ்டீனுக்கு வழங்கிய கௌரவ டாக்டர் பட்டமும் ஏலம் விடப்படுகிறது. ஜெர்மனியில் உல்ம் என்ற நகரில் மார்ச் 14,1879 ல் பிறந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜெர்மனியில் ஆரம்ப கல்வி கற்ற ஐன்ஸ்டீன் பின்னர் சுவிட்சர்லாந்து சென்று அங்கு டிப்ளமோ பட்டம் பெற்றார். 1906 ம் ஆண்டு ஜூரிச் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஐன்ஸ்டீனுக்கு, மூன்று ஆண்டுகளுக்குப்பின் ஜெனிவா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 1905 ம் ஆண்டு ஐன்ஸ்டீன் எழுதிய ' ரிலேடிவிடி தியரி ஆஃப் மோஷன் ' காக 1921ம் ஆண்டு பௌதீகத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, மீண்டும் ஜெர்மனி என்று வசித்து வந்த ஐன்ஸ்டீன், பின்னர் அமெரிக்கா சென்றார். ஏப்ரல் 18,1955ல் அவரது 76 வது வயதில் அமெரிக்காவில் காலமானார். 300 க்கும் மேற்பட்ட சயன்ஸ் கட்டுரைகளையும், 150 க்கும் மேலான சயன்ஸ் அல்லாத விஷயங்கள் குறித்த கட்டுரையையும் எழுதியுள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை, பிரபல டைம் பத்திரிக்கை, ' மேன் ஆஃப் த செஞ்சூரி ' என்று தேர்ந்தெடுத்தது. பொதுவாக டைம் பத்திரிக்கை, ஒருவரை, ' மேன் ஆஃப் த இயர் ' என்று தான் தேர்ந்தெடுக்கும்.
நன்றி : தினமலர்


கெமிக்கல் இன்டஸ்டிரியை ஊக்கப்படுத்தவும் விரைவில் திட்டம் : மத்திய அரசு முடிவு

ஸ்டீல், சிமென்ட் போன்ற பொருட்களுக்கான உற்பத்தி வரியை குறைத்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்ட சில நாட்களிலேயே இன்னொரு துறைக்கான சலுகை திட்டம் குறித்தும் திட்டமிட ஆரம்பித்தது. அந்த துறை, கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை. இந்த துறைக்கும் கஸ்டம்ஸ் மற்றும் எக்ஸைஸ் டூட்டியை கட் செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாப்தாவுக்கு இப்போது விதிக்கப்படும் 5 சதவீத கஸ்டம்ஸ் டூட்டியை இல்லாமல் ஆக்குவது, மோனோ எத்தில் கிளைகோலுக்கு விதிக்கப்படும் 8 சதவீத எக்ஸைஸ் டூட்டியை 4 சதவீதமாக குறைப்பது போன்ற சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தலுக்குப்பின் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த டூட்டி கட் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கருத்து கேட்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் இந்திய கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையும் வெகுவாக பாதித்திருக்கிறது. விலை குறைந்திருப்பது, ஏற்றுமதி ஆர்டர் குறைந்திருப்பது, உள்நாட்டின் டிமாண்ட் குறைந்து போனது போன்ற காரணங்களால் இந்த துறையின் விரிவாக்க திட்டங்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும், உற்பத்தி சிறிய அளவிலேயே நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள். டெக்ஸ்டைல் தொழிலுக்கு பயன்படும் விஸ்கோஸ் ஸ்டாபிள் பைபர் தயார் செய்யும் கிராஸிம் நிறுவனத்தின் விற்பனை , மூன்றாவது காலாண்டில் 22 சதவீதம் குறைந்திருப்பதை அடுத்து, அந்த நிறுவனம், உற்பத்தியை நிறுத்தி விடலாமா என்று யோசித்து வருவதாக சொல்கிறார்கள். கடந்த வருடம் ஜூலை மாதம் பேரலுக்கு 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 40 - 45 டாலர் தான். எனவே கெமிக்கல், சால்வன்ட், பாலிமர், மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் விலை, கடந்த 2002 - 03 ல் இருந்த நிலைக்கு போய்விட்டது என்கிறார்கள். .
நன்றி : தினமலர்


டில்லியில் இருந்து பாங்காக் கிற்கு நேரடி விமானம் : கேதே பசிபிக் இயக்குகிறது

வரும் 30ம் தேதி முதல் புதுடில்லியில் இருந்து பாங்காக்கிற்கு தினசரி நேரடி விமானசேவை நடத்த இருப்பதாக கேதே பசிபிக் ஏர்வேஸ் அறிவித்திருக்கிறது. இந்த வழித்தடத்தில் நல்ல போக்குவரத்து இருந்து வருகிறது. எனவே நாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம் என்றார் கேதே பசிபிக் இன் இந்தியாவுக்கான பொது மேளாளர் டாம் ரைட். டில்லியில் 3.30 க்கு புறப்படும் விமானம் பாங்காக்கிற்கு, அங்குள்ள நேரப்படி 8.55 க்கு போய் சேரும். அங்கிருந்து 17.25 க்கு புறப்படும் அந்த விமானம் டில்லிக்கு, இங்குள்ள நேரப்படி 19.45 க்கு வந்து சேரும். பயண நேரம் குறைவாக இருப்பதால் பாங்காக்கிற்கு சுற்றுலா வருபவர்கள் ஒரு பகல் முழுவதையும் ஊர் சுற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்றார் டாம். டில்லியில் இருந்து பாங்காக் செல்லும் அந்த விமானம், பாங்காக்கில் இருந்து ஹாங்காங்கிற்கும் செல்வதால், அங்கு செல்ல விரும்பும் பயணிகள் எளிதாக அதே விமானத்தில் ஹாங்காங்கும் செல்லலாம். மேலும் ஜப்பான், கொரியா மற்றும் சீனா செல்ல விரும்புபவர்களுக்கும் இது வசதியாக இருக்கும் என்றார் அவர். ஹாங்காங்கை சேர்ந்த கேதே பசிபிக் விமான நிறுவனம், இந்தியாவில் கடந்த 55 வருடங்களாக விமான சேவையில் ஈடுபட்டு வருகிறது.
நன்றி : தினமலர்


பி.எஸ்.என்.எல்., நிறுவனம் மேலும் ஒரு சலுகை

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் எஸ்.டி.டி., கட்டணத்தை 50 சதவீதம் குறைத்துள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்த சூழலில் 'லேண்ட் லைன்' இணைப்புகளை சரண்டர் செய்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதைத் தடுக்கும் முயற்சியில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளையும், சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே, தொலைபேசி இணைப்புடன் பிராட்பேண்டு இணைப்பு பெறுபவர்களுக்கு அவ்வப்போது சலுகைகளை அறிவித்தது. சமீபத்தில் எஸ்.டி.டி., இணைப்பு பெறுபவர்களுக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டு, தொலைபேசி இணைப்பிற்கான கட்டணமும் குறைக்கப்பட்டது. பேசும் நேரத்திற்கான 'பல்ஸ் ரேட்'டும் அதிகரிக்கப்பட்டு 120 வினாடிகளாக உயர்த்தப்பட்டது. மேலும், 95 இணைப்பு எண்ணாக பயன்படுத்துவது ரத்து செய்யப்பட்டு, '0' இணைப்புடன் எஸ்.டி.டி.,யாக மாற்றப்பட் டது. இந்நிலையில் எஸ்.டி.டி., கட்டணம் தற்போது 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க் மற்றும் மற்ற நெட்ஒர்க்கில் தமிழகம் முழுவதும் பேச இரண்டு நிமிடத்திற்கு 50 காசுகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு 50 கி.மீ., தொலைவிற்குள் பேசுவதற்கான 'பல்ஸ் ரேட்' 90 வினாடிகளிலிருந்து 120 வினாடிகளாக உயர்த்தப்பட்டு கட்டணம் 67 காசுகளிலிருந்து 50 காசுகளாக குறைக்கப்பட்டுள் ளது.
தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு 50 கி.மீ.,க்கு அதிகமான தொலைவிற்கு பேசுவதற்கான 'பல்ஸ் ரேட்' ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், கட்டணம் ஒரு ரூபாயிலிருந்து 50 காசுகளாக குறைக்கப்பட்டுள் ளது. இந்த கட்டணம் கடந்த 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான கட்டணம் தற்போது ஒரு நிமிடத்திற்கு 80 காசுகளிலிருந்து 40 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் எஸ்.டி.டி., பேச வாடிக்கையாளர்கள் இதுவரையில் ஒரு நிமிடத்திற்கு 1.20 காசுகள் கட்டணம் செலுத்தி வந்தனர். இது தற் போது 60 காசுகளாக குறைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


வீட்டுக்கடன் வட்டி : ஐ.சி.ஐ.சி.ஐ., குறைப்பு

இந்தியாவின் பெரிய தனியார் நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, புதிய வீட்டு கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீம் வரை குறைத்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி செய்தி தொடர்பாளர் கூறியதாவது: 20 லட்ச ரூபாய்க்கு குறைவாக வாங்கும் வீட்டு கடன்களுக்கான வட்டி வீதம் 9.75 சதவீதம். இதற்கு முன்னர் 10 சதவீதமாக இருந்தது. 20 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான கடன்களுக்கான வட்டி வீதம் 10.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. 30 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வாங்கும் கடன்களுக்கான வட்டி வீதம் 12 சதவீதத்தில் இருந்து, 11.5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இந்த வட்டி வீதங்கள் குறைப்பு அனைத்தும் புதிய கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி செய்தி தொடர்பாளர் கூறினார்.
நன்றி :தினமலர்