சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆறுதல் தரும் இரண்டு விவகாரங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன. முதலாவதாக, நாட்டில் முறைகேடான கனிமச் சுரங்கங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுமத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. இரண்டாவது, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் பாக்சைட் கனிமச் சுரங்கத் திட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த இரண்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் விவகாரங்கள். மத்திய அரசு இப்போதுதான் ஒன்றில் நடவடிக்கை எடுக்கிறது. இன்னொன்றில் நடவடிக்கை எடுக்க ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பும் குரல்கள் யார் காதிலோ விழுந்து ஏதோ விஷயங்கள் நடக்கவே செய்கின்றன என்பது உறுதிப்படுவதன் மூலம் இந்த விழிப்புணர்வுக் குரல்களுக்கு வலுவும் தெம்பும் ஏற்படும்.
மத்திய அரசு அமைத்துள்ள குழு, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி, இரும்பு, மக்னீசியம் தாதுக்கள் முறைகேடாகச் சுரண்டப்படுகின்றன என்பது குறித்து ஆந்திர மாநிலம், ஜார்க்கண்ட், கர்நாடகம், சத்தீஸ்கர் ஒரிசா ஆகிய இடங்களில் ஆய்வுகள் செய்து தனது அறிக்கையை அளிக்கும்.
கனிமங்களை முறைகேடாகத் தோண்டியெடுத்தல் சாத்தியமா என்ற ஐயம் எழக்கூடும். ஆம், அவை நடைபெறுகிறது என்பதும், சில இடங்களில் மாநில அரசுகளின் மறைமுக ஒத்துழைப்புடனும், சில இடங்களில் மிக ரகசியமாகவும் நடந்துகொண்டிருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், ஒரு சுற்றுச்சூழல் இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முறைகேடாகத் தோண்டியெடுக்கும் நிலக்கரியை இங்குள்ள ஆதிவாசிகள் மலைகளின் குறுக்கு வழியில் சுமந்து செல்கிறார்கள். இவர்களை வழிமறிக்கும் வனத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கும் மாமூல்போக, இவர்களது கூலியில் ஒரு நாளைக்கு ரூ.50 கிடைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளுக்கு இது கடத்தல் என்றோ முறைகேடு என்றோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது ஒருநாள் கூலி மட்டும்தான். அவர்கள் வாழ்க்கை அப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த முறைகேடான கனிமச் சுரங்கங்களும் தாதுப்பொருள் கடத்தலும் ஆதிவாசிகளின் உழைப்பைச் சுரண்டுவதும் ஒருபுறமிருக்கட்டும், அரசு அனுமதியுடன் நடைபெறும் சுரங்கங்களில்கூட, அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவு.
தற்போது கர்நாடக மாநிலத்தில் இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான பனிப்போர் என்கிற உண்மை ஒருபுறம் இருக்க, இதில் கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உலகிலேயே மிகச் சிறந்த, தரமான இரும்புத் தாது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில்தான் கிடைக்கிறது. இதற்காக அரசு நிர்ணயித்துள்ள ராயல்டிதொகை ஒரு டன் இரும்புத் தாதுக்கு 27. ஆனால் உலகச் சந்தையில் பெல்லாரி இரும்புத் தாதுவின் விலை டன் 6,000 முதல் 7,000 வரை. சுரங்கம் தோண்டும் செலவு, போக்குவரத்துச் செலவு, வேலையாள் கூலி, கட்சிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அளிக்கும் லஞ்சம் எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும்கூட ஒரு டன் இரும்புத் தாதுக்கு குறைந்தது 5,000 கிடைக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. அப்படியானால், ஏன் அரசு இவ்வளவு மலிவாக ராயல்டி தொகையை நிர்ணயிக்க வேண்டும்?
இது கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல, ஆந்திரம், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும்கூட, கனிமங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் உரிமத் தொகைக்கும் (ராயல்டி) இந்த தனியார் நிறுவனங்கள் பெறும் லாபத்துக்கும் குறைந்தபட்சம் 1000 விழுக்காடு வித்தியாசம் இருக்கிறது. முதலில் இந்த வேறுபாட்டைக் களைந்தாலே அரசுக்கு மிக அதிகமான வருவாய் கிடைக்கும். முறைகேடாக கனிமங்களைச் சுரண்டுபவர்களைவிட, முறையாகச் சுரங்கம் அமைத்து சுரண்டுபவர்கள்தான் மிகமிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.
ஒரிசாவில் வேதாந்தா என்கிற நிறுவனம் நியம்கிரி என்ற மலையில் தொடங்கவிருந்த பாக்ûஸட் கனிமம் தோண்டும் திட்டத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று இது தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருப்பதுடன், வேதாந்தா நிறுவனம் எவ்வாறு சுற்றுச்சூழல் விதிமுறைகள் பலவற்றை மீறியுள்ளது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
"....இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதிக்கச் செய்வதுடன், இரு பழங்குடி மக்களின் நலனுக்கு முரணாக அமையும் இந்தத் திட்டத்தை அனுமதித்தால், ஆதிவாசிகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் மீதும் அவர்களது சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்' என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இன்று இந்த மாநிலங்களில் மாவோயிஸ்ட் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே, ஆதிவாசிகள் நம் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான்.
கனிம ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸஸ், அண்மையில் வேதாந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்போவதாகக் கூறி, 2400 ஹெக்டேர் நிலத்தை, பூரி-கொனார்க் நெடுஞ்சாலையில் வாங்கியது பெரும் பிரச்னையானதால், அந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது, இதே நிறுவனத்தின் பாக்ûஸட் திட்டத்துக்கும் எதிராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பழனி கோயிலில் மூலவர் முருகனின் நவபாஷாண சிலையின் முன்புறம் அப்படியே இருக்க பின்புறம் நிறையச் சுரண்டப்பட்டு, சிலையே பாதிப்படைந்ததாகப் புகார்கள் உண்டு. சிலையின் பின்புறத்தைப் பார்த்தவர் இல்லை. மத்திய அரசு கடுமையாகவும், நியாயமாகவும், முதுகெலும்புடனும் செயல்படாவிட்டால் இந்தியாவையும் கூட பழனியாண்டவர் நவபாஷாண சிலைகதை போல ஆக்கிவிடுவார்கள்.
எல்லாம் விதிப்பயன் என்பதுதானே வேதாந்தத்தின் அடிப்படைத் தத்துவம். வேதாந்தத்தை நம்பும் இந்தியாவுக்கு வேதாந்தம் புகட்ட வேதாந்தா போன்ற நிறுவனங்கள் கச்சை கட்டிக்கொண்டு இறங்கி இருக்கின்றன. எல்லாம் விதிப்பயன், வேறென்ன?
நன்றி : தினமணி
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Wednesday, August 18, 2010
Thursday, January 7, 2010
வருமுன் காத்தலே நலம்!
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. வழக்கத்தைவிட பருவமழை அதிக அளவில் பெய்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மழை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.
÷வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
÷தேங்கியுள்ள மழைநீரில் உருவாகும் கொசுக்களால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகச் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கிராமங்கள், நகர்ப்புறங்களில் மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு உருவாகி கொசுக்களால் இந்நோய் எளிதில் பரவி வருகிறது.
÷வைரஸ் காய்ச்சல் தாக்கப்பட்டவர்கள் பலர் கால்வலி, மூட்டுவலி காரணமாக மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலை உள்ளது. இது சிக்குன் குனியா காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
÷திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழக்க நேரிட்டது. முக்கூடல் அருகே வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவருக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டது.
÷இதேபோல, மேலப்பாளையத்தில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயதுச்சிறுவன் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலாக மாறி வருவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக அஞ்சப்படுகிறது.
÷தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், 900 பேருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாகவும், இன்னும் 2 மாதங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே, போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
÷கடந்த சில தினங்களாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரில் குளோரின் கலந்து வழங்கப்படுகிறது.
இது தவிர வேறு எந்தத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
÷மேலும், சுகாதாரச் சீர்கேடுகள் மூலம் உருவாகி வரும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷பல ஊர்களில் பள்ளிகள், மாணவர் விடுதிகள், சத்துணவுக் கூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
÷அண்மையில் தேக்கடியில் சுற்றுலா சென்றோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து 60}க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வேதாரண்யத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் டிரைவராகப் பணி செய்தவர் ஓட்டிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி ஓர் ஆசிரியை மற்றும் 9 மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டது.
÷இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நீர்நிலைகளில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் உயிர் பாதுகாப்புக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் வாகன ஓட்டுநர்கள் 10 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
÷கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 98 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா என்பதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏதாவது ஒரு விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகுதான் அரசின் நடவடிக்கையும் கடுமையாக்கப்படுகிறது. ஏன் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது?
÷வருமுன் காத்தலே நலம் என்பதற்கேற்ப, மழைக்கால நோயை எதிர்பார்த்து ஒவ்வோர் ஊரிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ÷மக்களுக்காக வருமுன் காப்போம் மருத்துவ முகாம், உயிர் காக்கும் உயர் சிகிச்சை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு, இதுபோன்ற பருவகால நோய் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் :சா. ஷேக் அப்துல்காதர்
நன்றி : தினமணி
÷வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
÷தேங்கியுள்ள மழைநீரில் உருவாகும் கொசுக்களால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகச் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கிராமங்கள், நகர்ப்புறங்களில் மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு உருவாகி கொசுக்களால் இந்நோய் எளிதில் பரவி வருகிறது.
÷வைரஸ் காய்ச்சல் தாக்கப்பட்டவர்கள் பலர் கால்வலி, மூட்டுவலி காரணமாக மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலை உள்ளது. இது சிக்குன் குனியா காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
÷திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழக்க நேரிட்டது. முக்கூடல் அருகே வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவருக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டது.
÷இதேபோல, மேலப்பாளையத்தில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயதுச்சிறுவன் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலாக மாறி வருவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக அஞ்சப்படுகிறது.
÷தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், 900 பேருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாகவும், இன்னும் 2 மாதங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே, போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
÷கடந்த சில தினங்களாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரில் குளோரின் கலந்து வழங்கப்படுகிறது.
இது தவிர வேறு எந்தத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
÷மேலும், சுகாதாரச் சீர்கேடுகள் மூலம் உருவாகி வரும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷பல ஊர்களில் பள்ளிகள், மாணவர் விடுதிகள், சத்துணவுக் கூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
÷அண்மையில் தேக்கடியில் சுற்றுலா சென்றோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து 60}க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வேதாரண்யத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் டிரைவராகப் பணி செய்தவர் ஓட்டிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி ஓர் ஆசிரியை மற்றும் 9 மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டது.
÷இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நீர்நிலைகளில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் உயிர் பாதுகாப்புக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் வாகன ஓட்டுநர்கள் 10 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
÷கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 98 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா என்பதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏதாவது ஒரு விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகுதான் அரசின் நடவடிக்கையும் கடுமையாக்கப்படுகிறது. ஏன் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது?
÷வருமுன் காத்தலே நலம் என்பதற்கேற்ப, மழைக்கால நோயை எதிர்பார்த்து ஒவ்வோர் ஊரிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ÷மக்களுக்காக வருமுன் காப்போம் மருத்துவ முகாம், உயிர் காக்கும் உயர் சிகிச்சை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு, இதுபோன்ற பருவகால நோய் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் :சா. ஷேக் அப்துல்காதர்
நன்றி : தினமணி
Labels:
கட்டுரை,
சுற்றுச்சூழல்,
தமிழகஅரசு,
மருத்துவம்
Tuesday, January 5, 2010
ஒரு வேலைநிறுத்தம், இரு பரிமாணங்கள்
பின்னலாடைத் தொழில் உலகளாவிய முறையில் பிரபலமடைந்து விளங்கும் பெருமைக்குரிய நகரம் திருப்பூர்.
இங்கு தயாராகும் பல்வேறு ரகமான பின்னலாடைகளுக்குக் கவர்ச்சியான வண்ணத்தை மெருகேற்றித் தருகிற சாயங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாயப்பட்டறை ஆலைகள் ஈடுபட்டுள்ளன. வண்ணமேற்றப்பட்ட ஆயத்த ஆடைகளை விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்புவதற்கு முன்னதாக அவற்றைச் சலவை செய்யும் சலவை ஆலைகளும் இத்தொழிலில் பிரிக்க முடியாத அங்கம்.
இந்தச் சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து வேலைநிறுத்தம் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன.
வழக்கமான வேலைநிறுத்தங்கள் அவை நடைபெறும் தொழில் அல்லது பணிக்கூட முதலாளிகள் மற்றும் அவற்றின் பணியாளர்களை மட்டுமே பாதிக்கிற ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டவை. ஆனால் திருப்பூரில் நடைபெற்று வருகிற வேலைநிறுத்தத்துக்கு இரட்டைப் பரிமாணங்கள் உண்டு. ஒன்று, அந்தத் தொழில் சம்பந்தப்பட்டது; இன்னொன்று ஒட்டுமொத்த சமுதாயத்தை உள்ளடக்கியது.
திருப்பூர் மட்டுமன்றி ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இத்தகைய சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் அமைந்துள்ளன.
1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திருப்பூரில் மிகப்பெரும் அளவில் அமைக்கப்பட்ட சாயஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து வரத் தொடங்கியது. இதையடுத்து நொய்யல் ஆற்றுக் கரையோர விவசாயம் பாதிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் வந்த அபாயகரமான தொழிற்சாலைக் கழிவுநீரால் ஆற்று நீர் முற்றிலுமாக மாசடைந்தது.
ஒரத்துப்பாளையம் அணை சுற்று வட்டாரத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாயின. இத்துடன் அணையில் தேங்கியிருக்கும் மாசுபட்ட நீரினாலும், கால்வாய்களில் செல்லும் இந்தக் கழிவுநீரினாலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் கிடைத்துவந்த குடிநீரும் மாசுபட்டுவிட்டது. அன்றாடம் குடிநீருக்கு இப்பகுதி மக்கள் நெடுந்தொலைவு சென்று வர வேண்டியிருக்கிறது.
இதை ஒத்த பாதிப்புகள் ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் நேரிட்டுள்ளன. சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பெரிதளவு மாசுபடுத்துகிற இதர தொழில்களாக தோல் பதனிடும் தொழிலும், ரசாயனத் தொழிற்சாலைகளும் அறியப்படுகின்றன. வேலூர் - ராணிப்பேட்டை பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் காரணமாக நேரிட்டுள்ள மாசுபடுதலும் அளவில்லாத எல்லையை எட்டியுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள் அமைவதும், அவற்றின் மூலம் உற்பத்தி பெருகுவதும் எந்த ஒரு நாட்டுக்கும் இன்றியமையாத தேவைதான். எனினும், இந்த வளர்ச்சியின் பரிமாணங்கள் சுற்றுச்சூழலை மீட்க முடியாத பெருஞ்சேதத்துக்கு இலக்காக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மத்திய அரசால் நாடு முழுவதற்கும் பொருந்தும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. மாநிலங்களிலும் மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் ஏற்கெனவே அமலில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டோ, தளர்த்தப்பட்டோ விட்டபோதிலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய இசைவைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்வது சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான்.
ஆனால் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சாயக்கழிவு நீர் ஆற்றில் விடப்பட்டு வந்ததன் காரணமாக நேரிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தமிழக அரசோ, மாசுக்கட்டுப்பாடு வாரியமோ உரியவகையில் களையத் தவறிவிட்டன. இதே நிலைமைதான வேலூர் மாவட்டத்தின் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் விஷயத்திலும் நிலவியது. இந்த இரண்டு (திருப்பூர், வேலூர்) மாவட்டங்களின் பாதிப்புக்கு இலக்காகிய மக்கள் நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
திருப்பூர் சாயப்பட்டறை, சலவை ஆலைகளின் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு, காவிரி ஆற்றோடு கலந்து அதன் பாசனப்படுகை முழுவதிலும் பாதிப்பு உணரப்பட்டது. கரூர் தாலுகா நொய்யல் கால்வாய் விவசாயிகள் சங்கம் இப்பிரச்னையை 1996-ம் ஆண்டு வாக்கில் உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. சென்னை உயர் நீதிமன்றத்திலும், தில்லி உச்ச நீதிமன்றத்திலும் இப்பிரச்னை தொடர்பான வழக்கும், மேல்முறையீடுகளும் கடந்த 13 ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு தீர்ப்புகளும், மேலாணைகளும் பிறப்பிக்கப்பட்டன. வேலூர் குடிமக்கள் நலச் சங்கம் தொடுத்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ம் ஆண்டிலேயே வழங்கியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது குறித்த முன்னோடித் தீர்ப்பாகவும் நிலைபெற்று விட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இடம்பெற்றுள்ள பதிவுகளின் சுருக்கம் பின்வருமாறு:
""தொழில் நடவடிக்கை மூலம் அபாயகரமான கழிவுகளை வெளியேற்றினால் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும், பாதிக்கப்படும் கிராமத்தினர் உள்ளிட்ட இதர மக்களுக்கும் தொழில்துறையினர் இழப்பீடு வழங்கப் பொறுப்பாளிகள் ஆவர். தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும் இது பொருந்தும். அத்துடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதாரத்தில் இருந்து மீட்டமைக்க வேண்டிய நடவடிக்கைக்கும் அவர்கள் பொறுப்பாளிகள் ஆவர்''.
""அரசியல் சாசனப் பிரிவுகள் 47, 48-ஏ, 51-ஏ(ஜி) ஆகியவற்றின்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். அத்துடன் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி மாசில்லாத சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது தனிமனிதர்களின் உரிமை என்று அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாசுபடுத்தியவர்களே தண்டம் செலுத்துவது என்ற கொள்கைகள் சுற்றுப்புறச் சூழல் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.''
இந்தத் தீர்ப்புகளின் பின்புலத்தில் திருப்பூர் சாயப்பட்டறை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட கண்டிப்பான உத்தரவுகளைக் கடந்த 2009 அக்டோபர் 6அன்று பிறப்பித்தது:
""சாயஆலைகள் நீதிமன்றம் விதித்திருக்கும் அபராதம் உள்பட அனைத்து விதிமுறைகளையும் இன்றிலிருந்து (6.10.09) அடுத்த மூன்று மாத காலத்தில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். நொய்யல் ஆறு,அணை ஆகியவற்றில் மாசு கலக்காமல் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கொடுத்திருக்கும் காலக்கெடுவுக்குள் சுத்தப்படுத்தும் பணிகளையும் முடிக்க வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையங்களைச் செயல்படுத்தவும், அணையைச் சுத்தப்படுத்துவது, ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை முழுமையாக வழங்கவும், அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றவும் இன்றிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு வழங்கப்படுகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் வேறு மாசு ஏற்படாமல் விதிமுறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.''
உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்தக் காலக்கெடு ஜனவரி 6 அன்று முடிவடைகிறது. இதற்குள்ளாக,சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய தொகைகள் நீங்கலாக மீதமுள்ள 62 கோடி ரூபாய்களைச் செலுத்துவது மட்டுமன்றி, ஏற்கெனவே நிறுவப்பட்டு வரும் 17 பொதுசுத்திகரிப்பு நிலையங்களில், ஆர்.ஓ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்து கொண்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது நிறுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இவற்றைச் செயல்படுத்தத் தவறினால், இந்த ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்படும். இந்தக் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்த இயலாமையைத் தெரிவித்துத்தான், திருப்பூரில் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்தச் சாயப்பட்டறை, சலவை ஆலைகளில் பணிபுரியும் 40 ஆயிரம் தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும் உடனடி பாதிப்புக்கு உள்ளாவது திண்ணம். இந்த ஆலைகளை நம்பியுள்ள பனியன் தொழில் மற்றும் அதன் சார்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும்.
திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு தாலுகாக்களின் 68 கிராமங்களில் 28,499 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டு, 28,596 விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய கையறு நிலையில் உள்ளனர்.
இப்பிரச்னையின் இரண்டு பரிமாணங்களும் கனமானவை; அலட்சியப்படுத்த முடியாதவை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கறாராக அமல்படுத்துவது இதில் எட்டப்படக் கூடிய எந்தத் தீர்வுக்கும் அடிநாதமாக - முன்நிபந்தனையாக இருத்தல் வேண்டும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வாக சில கோரிக்கைகளையும் ஆலை உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர். நிறுவப்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான கட்டமைப்புச் செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குவது; வங்கிக் கடன் வட்டியைத் தள்ளுபடி செய்வது; கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்குவது; தவணை செலுத்தி முடிக்க வேண்டிய ஆண்டுகளை நீட்டிப்பது போன்ற இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவது அவசியமே. மாநில அரசு இந்தத் தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நோக்கோடு இவற்றுக்கு உரிய தீர்வு காணவும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படியான நிவாரணத் தொகைகள் வழங்கப்படவும் முற்பட வேண்டும்.
அதேநேரத்தில், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடாமல் பார்த்துக் கொள்கிற சமூகப் பொறுப்புணர்வோடு ஆலை உரிமையாளர்களும் ஒரு நேர்மையான அணுகுமுறையைக் கைக்கொள்வது சமரசம் செய்து கொள்ளக்கூடாத கட்டாயம்.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
இங்கு தயாராகும் பல்வேறு ரகமான பின்னலாடைகளுக்குக் கவர்ச்சியான வண்ணத்தை மெருகேற்றித் தருகிற சாயங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாயப்பட்டறை ஆலைகள் ஈடுபட்டுள்ளன. வண்ணமேற்றப்பட்ட ஆயத்த ஆடைகளை விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்புவதற்கு முன்னதாக அவற்றைச் சலவை செய்யும் சலவை ஆலைகளும் இத்தொழிலில் பிரிக்க முடியாத அங்கம்.
இந்தச் சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து வேலைநிறுத்தம் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன.
வழக்கமான வேலைநிறுத்தங்கள் அவை நடைபெறும் தொழில் அல்லது பணிக்கூட முதலாளிகள் மற்றும் அவற்றின் பணியாளர்களை மட்டுமே பாதிக்கிற ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டவை. ஆனால் திருப்பூரில் நடைபெற்று வருகிற வேலைநிறுத்தத்துக்கு இரட்டைப் பரிமாணங்கள் உண்டு. ஒன்று, அந்தத் தொழில் சம்பந்தப்பட்டது; இன்னொன்று ஒட்டுமொத்த சமுதாயத்தை உள்ளடக்கியது.
திருப்பூர் மட்டுமன்றி ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இத்தகைய சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் அமைந்துள்ளன.
1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திருப்பூரில் மிகப்பெரும் அளவில் அமைக்கப்பட்ட சாயஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து வரத் தொடங்கியது. இதையடுத்து நொய்யல் ஆற்றுக் கரையோர விவசாயம் பாதிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் வந்த அபாயகரமான தொழிற்சாலைக் கழிவுநீரால் ஆற்று நீர் முற்றிலுமாக மாசடைந்தது.
ஒரத்துப்பாளையம் அணை சுற்று வட்டாரத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாயின. இத்துடன் அணையில் தேங்கியிருக்கும் மாசுபட்ட நீரினாலும், கால்வாய்களில் செல்லும் இந்தக் கழிவுநீரினாலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் கிடைத்துவந்த குடிநீரும் மாசுபட்டுவிட்டது. அன்றாடம் குடிநீருக்கு இப்பகுதி மக்கள் நெடுந்தொலைவு சென்று வர வேண்டியிருக்கிறது.
இதை ஒத்த பாதிப்புகள் ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் நேரிட்டுள்ளன. சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பெரிதளவு மாசுபடுத்துகிற இதர தொழில்களாக தோல் பதனிடும் தொழிலும், ரசாயனத் தொழிற்சாலைகளும் அறியப்படுகின்றன. வேலூர் - ராணிப்பேட்டை பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் காரணமாக நேரிட்டுள்ள மாசுபடுதலும் அளவில்லாத எல்லையை எட்டியுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள் அமைவதும், அவற்றின் மூலம் உற்பத்தி பெருகுவதும் எந்த ஒரு நாட்டுக்கும் இன்றியமையாத தேவைதான். எனினும், இந்த வளர்ச்சியின் பரிமாணங்கள் சுற்றுச்சூழலை மீட்க முடியாத பெருஞ்சேதத்துக்கு இலக்காக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மத்திய அரசால் நாடு முழுவதற்கும் பொருந்தும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. மாநிலங்களிலும் மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் ஏற்கெனவே அமலில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டோ, தளர்த்தப்பட்டோ விட்டபோதிலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய இசைவைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்வது சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான்.
ஆனால் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சாயக்கழிவு நீர் ஆற்றில் விடப்பட்டு வந்ததன் காரணமாக நேரிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தமிழக அரசோ, மாசுக்கட்டுப்பாடு வாரியமோ உரியவகையில் களையத் தவறிவிட்டன. இதே நிலைமைதான வேலூர் மாவட்டத்தின் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் விஷயத்திலும் நிலவியது. இந்த இரண்டு (திருப்பூர், வேலூர்) மாவட்டங்களின் பாதிப்புக்கு இலக்காகிய மக்கள் நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
திருப்பூர் சாயப்பட்டறை, சலவை ஆலைகளின் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு, காவிரி ஆற்றோடு கலந்து அதன் பாசனப்படுகை முழுவதிலும் பாதிப்பு உணரப்பட்டது. கரூர் தாலுகா நொய்யல் கால்வாய் விவசாயிகள் சங்கம் இப்பிரச்னையை 1996-ம் ஆண்டு வாக்கில் உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. சென்னை உயர் நீதிமன்றத்திலும், தில்லி உச்ச நீதிமன்றத்திலும் இப்பிரச்னை தொடர்பான வழக்கும், மேல்முறையீடுகளும் கடந்த 13 ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு தீர்ப்புகளும், மேலாணைகளும் பிறப்பிக்கப்பட்டன. வேலூர் குடிமக்கள் நலச் சங்கம் தொடுத்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ம் ஆண்டிலேயே வழங்கியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது குறித்த முன்னோடித் தீர்ப்பாகவும் நிலைபெற்று விட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இடம்பெற்றுள்ள பதிவுகளின் சுருக்கம் பின்வருமாறு:
""தொழில் நடவடிக்கை மூலம் அபாயகரமான கழிவுகளை வெளியேற்றினால் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும், பாதிக்கப்படும் கிராமத்தினர் உள்ளிட்ட இதர மக்களுக்கும் தொழில்துறையினர் இழப்பீடு வழங்கப் பொறுப்பாளிகள் ஆவர். தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும் இது பொருந்தும். அத்துடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதாரத்தில் இருந்து மீட்டமைக்க வேண்டிய நடவடிக்கைக்கும் அவர்கள் பொறுப்பாளிகள் ஆவர்''.
""அரசியல் சாசனப் பிரிவுகள் 47, 48-ஏ, 51-ஏ(ஜி) ஆகியவற்றின்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். அத்துடன் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி மாசில்லாத சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது தனிமனிதர்களின் உரிமை என்று அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாசுபடுத்தியவர்களே தண்டம் செலுத்துவது என்ற கொள்கைகள் சுற்றுப்புறச் சூழல் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.''
இந்தத் தீர்ப்புகளின் பின்புலத்தில் திருப்பூர் சாயப்பட்டறை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட கண்டிப்பான உத்தரவுகளைக் கடந்த 2009 அக்டோபர் 6அன்று பிறப்பித்தது:
""சாயஆலைகள் நீதிமன்றம் விதித்திருக்கும் அபராதம் உள்பட அனைத்து விதிமுறைகளையும் இன்றிலிருந்து (6.10.09) அடுத்த மூன்று மாத காலத்தில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். நொய்யல் ஆறு,அணை ஆகியவற்றில் மாசு கலக்காமல் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கொடுத்திருக்கும் காலக்கெடுவுக்குள் சுத்தப்படுத்தும் பணிகளையும் முடிக்க வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையங்களைச் செயல்படுத்தவும், அணையைச் சுத்தப்படுத்துவது, ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை முழுமையாக வழங்கவும், அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றவும் இன்றிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு வழங்கப்படுகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் வேறு மாசு ஏற்படாமல் விதிமுறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.''
உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்தக் காலக்கெடு ஜனவரி 6 அன்று முடிவடைகிறது. இதற்குள்ளாக,சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய தொகைகள் நீங்கலாக மீதமுள்ள 62 கோடி ரூபாய்களைச் செலுத்துவது மட்டுமன்றி, ஏற்கெனவே நிறுவப்பட்டு வரும் 17 பொதுசுத்திகரிப்பு நிலையங்களில், ஆர்.ஓ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்து கொண்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது நிறுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இவற்றைச் செயல்படுத்தத் தவறினால், இந்த ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்படும். இந்தக் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்த இயலாமையைத் தெரிவித்துத்தான், திருப்பூரில் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்தச் சாயப்பட்டறை, சலவை ஆலைகளில் பணிபுரியும் 40 ஆயிரம் தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும் உடனடி பாதிப்புக்கு உள்ளாவது திண்ணம். இந்த ஆலைகளை நம்பியுள்ள பனியன் தொழில் மற்றும் அதன் சார்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும்.
திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு தாலுகாக்களின் 68 கிராமங்களில் 28,499 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டு, 28,596 விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய கையறு நிலையில் உள்ளனர்.
இப்பிரச்னையின் இரண்டு பரிமாணங்களும் கனமானவை; அலட்சியப்படுத்த முடியாதவை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கறாராக அமல்படுத்துவது இதில் எட்டப்படக் கூடிய எந்தத் தீர்வுக்கும் அடிநாதமாக - முன்நிபந்தனையாக இருத்தல் வேண்டும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வாக சில கோரிக்கைகளையும் ஆலை உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர். நிறுவப்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான கட்டமைப்புச் செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குவது; வங்கிக் கடன் வட்டியைத் தள்ளுபடி செய்வது; கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்குவது; தவணை செலுத்தி முடிக்க வேண்டிய ஆண்டுகளை நீட்டிப்பது போன்ற இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவது அவசியமே. மாநில அரசு இந்தத் தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நோக்கோடு இவற்றுக்கு உரிய தீர்வு காணவும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படியான நிவாரணத் தொகைகள் வழங்கப்படவும் முற்பட வேண்டும்.
அதேநேரத்தில், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடாமல் பார்த்துக் கொள்கிற சமூகப் பொறுப்புணர்வோடு ஆலை உரிமையாளர்களும் ஒரு நேர்மையான அணுகுமுறையைக் கைக்கொள்வது சமரசம் செய்து கொள்ளக்கூடாத கட்டாயம்.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
Labels:
கட்டுரை,
சுற்றுச்சூழல்,
தமிழகஅரசு,
நீதி மன்றம்,
நீர்
Saturday, January 2, 2010
உலகம் அழிந்துவிடுமா?
விரைவில் உலகம் அழிந்துவிடுமா? அண்மைக்காலமாக மனித குலத்தின் ஆழ்மனத்தில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கேள்வி இது.
திருச்சியில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடம் ஒரு மாணவி இதைக் கேட்டார். ஒரு கணம் மெüனித்த அந்த விஞ்ஞானி, அப்புறம் இப்படி பதில் தந்தார்: ""இல்லை. பூமியில் 1000 கோடி ஆண்டுகள் சூரிய வெளிச்சம் இருக்கும் என்று விஞ்ஞானி சந்திரசேகர் தன் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்.
தற்போது 500 கோடி ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் உள்ளன. ஆகையால், கவலைப்படத் தேவையில்லை.''
அந்த மாணவி என்றில்லை; இயற்கையின் மீதும், சக மனிதர்கள் மீதும் எந்த அக்கறையும் இல்லாதவர்களையும்கூட இந்தக் கேள்வி பதற்றத்துக்குள்ளாக்குகிறது. மாயர்களின் நாகரிகத்தில் தொடங்கி புவி வெப்பமயமாதல் கருதுகோள் வரை சகலமும் இந்தக் கேள்வியாளர்களின் மனத்தை கேள்வியை நோக்கித் தள்ளுகின்றன. பனிமலைகள் உருகுகின்றன; மலைகள் சரிகின்றன; கடல்மட்டம் உயர்கிறது; தீவுகள் மூழ்குகின்றன. உலகம் அழிந்துவிடுமா?
எப்படி இந்த உலகைக் காப்பது? தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்களை அணைத்தா? பாலிதீன் பைகளைத் தவிர்க்க கடைக்கு துணிப் பைகளை எடுத்துச் சென்றா? இனி,காருக்குப் பதில் பஸ்ஸிலேயே பயணம் மேற்கொண்டா?
உலகின் அத்தனைதொழிற்சாலைகளையும் செம்மையான தொழில்நுட்பத்தின் கீழ் மாற்றியா? எப்படி உலகைக் காப்பது? மனிதர்களின் பதற்றம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
உலகின் மிகப்பெரிய பாலைவனமாக இன்று காட்சியளிக்கும் சஹாரா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகள் நிறைந்த பசுமையான பகுதியாக இருந்தது. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.
பின்னாளில், ஏதோ ஓர் அழிவு சக்தியில்-எரிகற்களின் மோதலில் அல்லது ஒரு கொடும் தீப்புயலில் நிலத்திலிருந்த யாவும் எரிந்தழிய பாலையானது சஹாரா. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.
யாரால், எதனால் ஏற்பட்டது அந்த தீப்புயல்? பல கோடி ஆண்டுகளாகக் கோள்கள் இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளாக புவியும் இருக்கிறது. மனிதனால் எதை மாற்ற முடியும்?
மனிதன் தீயை உருவாக்கக் கற்றுக்கொண்டபோதே அழிவு சக்தி உருவாகிவிட்டது. சக்கரத்தை அவன் கண்டறிந்தபோது அந்த அழிவு சக்தி நூறு கால்களையும் கொண்டது. ஆயுதங்களை அவன் கண்டுணர்ந்தபோது அழிக்க முடியாத சக்தியை அந்த அழிவு சக்தி பெற்றது. இந்தப் பயணம் நிலையானது. தவிர்க்க முடியாதது.
அடர் வனங்கள், லட்சக்கணக்கான தாவர இனங்கள், பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகள், பறவைகள், உயிரோட்டமிக்க நீர்நிலைகள், நீர்வாழ் உயிரினங்கள், ஒட்டுண்ணிகள், நுண்ணியிரிகள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன.
சிங்கங்கள், புலிகள், கானுறை வேங்கைகள், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், ஓங்கில்கள்,சோலைப்பாடிகள், பிணந்தின்னிக்கழுகுகள் யாவும் அருகிக்கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் எப்படித் தப்ப முடியும்?
சீன ஞானி லா வோட்சு சொன்னதுபோல,""வானகமும் வையகமும் நிரந்தரமாக நீடிக்க முடியாதபோது மனிதன் எப்படி நீடிக்க முடியும்?''
புன்சிரிப்போடு பதில் சொல்லுங்கள்: உலகம் அழிந்துவிடுமா? அழிந்தால்தான் நாம் என்ன செய்யப்போகிறோம்?
வானகமும் வையகமும் அடர் வனங்களும் உயிரோட்டமிக்க நீர்நிலைகளும் பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகளும் பறவைகளும் நீர்வாழ் உயிரினங்களும் அழிந்துகொண்டிருக்க மனிதன் மட்டும் எப்படி நீடிக்க முடியும்? சிங்கங்களும் புலிகளும் கானுறை வேங்கைகளும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும் ஓங்கில்களும் சோலைப்பாடிகளும் பிணந்தின்னிக்கழுகுகளும் அழிந்த பின் மனிதன் மட்டும் ஏன் நீடிக்க வேண்டும்?
கட்டுரையாளர் : சமஸ்
நன்றி : தினமணி
திருச்சியில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடம் ஒரு மாணவி இதைக் கேட்டார். ஒரு கணம் மெüனித்த அந்த விஞ்ஞானி, அப்புறம் இப்படி பதில் தந்தார்: ""இல்லை. பூமியில் 1000 கோடி ஆண்டுகள் சூரிய வெளிச்சம் இருக்கும் என்று விஞ்ஞானி சந்திரசேகர் தன் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்.
தற்போது 500 கோடி ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் உள்ளன. ஆகையால், கவலைப்படத் தேவையில்லை.''
அந்த மாணவி என்றில்லை; இயற்கையின் மீதும், சக மனிதர்கள் மீதும் எந்த அக்கறையும் இல்லாதவர்களையும்கூட இந்தக் கேள்வி பதற்றத்துக்குள்ளாக்குகிறது. மாயர்களின் நாகரிகத்தில் தொடங்கி புவி வெப்பமயமாதல் கருதுகோள் வரை சகலமும் இந்தக் கேள்வியாளர்களின் மனத்தை கேள்வியை நோக்கித் தள்ளுகின்றன. பனிமலைகள் உருகுகின்றன; மலைகள் சரிகின்றன; கடல்மட்டம் உயர்கிறது; தீவுகள் மூழ்குகின்றன. உலகம் அழிந்துவிடுமா?
எப்படி இந்த உலகைக் காப்பது? தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்களை அணைத்தா? பாலிதீன் பைகளைத் தவிர்க்க கடைக்கு துணிப் பைகளை எடுத்துச் சென்றா? இனி,காருக்குப் பதில் பஸ்ஸிலேயே பயணம் மேற்கொண்டா?
உலகின் அத்தனைதொழிற்சாலைகளையும் செம்மையான தொழில்நுட்பத்தின் கீழ் மாற்றியா? எப்படி உலகைக் காப்பது? மனிதர்களின் பதற்றம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
உலகின் மிகப்பெரிய பாலைவனமாக இன்று காட்சியளிக்கும் சஹாரா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகள் நிறைந்த பசுமையான பகுதியாக இருந்தது. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.
பின்னாளில், ஏதோ ஓர் அழிவு சக்தியில்-எரிகற்களின் மோதலில் அல்லது ஒரு கொடும் தீப்புயலில் நிலத்திலிருந்த யாவும் எரிந்தழிய பாலையானது சஹாரா. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.
யாரால், எதனால் ஏற்பட்டது அந்த தீப்புயல்? பல கோடி ஆண்டுகளாகக் கோள்கள் இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளாக புவியும் இருக்கிறது. மனிதனால் எதை மாற்ற முடியும்?
மனிதன் தீயை உருவாக்கக் கற்றுக்கொண்டபோதே அழிவு சக்தி உருவாகிவிட்டது. சக்கரத்தை அவன் கண்டறிந்தபோது அந்த அழிவு சக்தி நூறு கால்களையும் கொண்டது. ஆயுதங்களை அவன் கண்டுணர்ந்தபோது அழிக்க முடியாத சக்தியை அந்த அழிவு சக்தி பெற்றது. இந்தப் பயணம் நிலையானது. தவிர்க்க முடியாதது.
அடர் வனங்கள், லட்சக்கணக்கான தாவர இனங்கள், பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகள், பறவைகள், உயிரோட்டமிக்க நீர்நிலைகள், நீர்வாழ் உயிரினங்கள், ஒட்டுண்ணிகள், நுண்ணியிரிகள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன.
சிங்கங்கள், புலிகள், கானுறை வேங்கைகள், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், ஓங்கில்கள்,சோலைப்பாடிகள், பிணந்தின்னிக்கழுகுகள் யாவும் அருகிக்கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் எப்படித் தப்ப முடியும்?
சீன ஞானி லா வோட்சு சொன்னதுபோல,""வானகமும் வையகமும் நிரந்தரமாக நீடிக்க முடியாதபோது மனிதன் எப்படி நீடிக்க முடியும்?''
புன்சிரிப்போடு பதில் சொல்லுங்கள்: உலகம் அழிந்துவிடுமா? அழிந்தால்தான் நாம் என்ன செய்யப்போகிறோம்?
வானகமும் வையகமும் அடர் வனங்களும் உயிரோட்டமிக்க நீர்நிலைகளும் பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகளும் பறவைகளும் நீர்வாழ் உயிரினங்களும் அழிந்துகொண்டிருக்க மனிதன் மட்டும் எப்படி நீடிக்க முடியும்? சிங்கங்களும் புலிகளும் கானுறை வேங்கைகளும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும் ஓங்கில்களும் சோலைப்பாடிகளும் பிணந்தின்னிக்கழுகுகளும் அழிந்த பின் மனிதன் மட்டும் ஏன் நீடிக்க வேண்டும்?
கட்டுரையாளர் : சமஸ்
நன்றி : தினமணி
Labels:
கட்டுரை,
சுற்றுச்சூழல்,
புவி வெப்பம்
Friday, December 25, 2009
புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு
கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள், அமைப்புகள், இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.
இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம். மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது. இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால், ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான். அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது. ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது, சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது; பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால், அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது. உலக நாடுகள் அனைத்தையும், ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் - கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும், வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால், அவற்றோடு சேர்ந்து பூமிக்கும், கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது. இவை - நிலக்கரியும், பெட்ரோலியப் பொருள்களும் - சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம், காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது. இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் பெருக்கின. இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின. கூடவே, காடுகள் அழிக்கப்பட்டதும், பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும், அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும், பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன. உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று, நீர், அனைத்தும் மாசுபட்டன; மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின. வளர்ச்சியும், முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால், சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.
இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும், அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது. பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து, மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது. பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின. இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால், மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை எழுந்தது.
ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி, அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது. இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது. இதையடுத்து ஐ.நா. முயற்சியில் 1989, 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள், கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் உருவாக்கப்பட்டன. ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும், 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன. தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது. இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா. 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.
1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா. கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது. புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும், இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்; வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால், அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது; என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி, கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது. இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன. இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன. இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து - இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் - வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த 1992-ன் ஐ.நா. கோட்பாடு, உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும், இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது. இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா. எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.
எனினும், இந்த ஐ.நா. கோட்பாடு அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்கும், மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும், உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக, சிறு தீவு நாடுகள்; தாழ்நிலைக் கடலோர நாடுகள்; சதுப்பு நிலம், காடுகள் நிறைந்த நாடுகள்; இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்; வறட்சி - பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்; நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்; எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்; எரிபொருள்களை (நிலக்கரி, எண்ணெய்) எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள், சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது; வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.
ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா. கோட்பாட்டுக்கு, வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது. ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும், 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது. 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு, வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் (கரியமில வாயு) வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது. 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே, புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ உடன்பாட்டின் மையக் கோட்பாடு. இதுவே பொதுவான - ஆனால் பாகுபடுத்தப்பட்ட - பொறுப்புகள் என்று அறியப்பட்டது. இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி, இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.
இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது. இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும், வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து, கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.
சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும், கோபன்ஹேகனில் குழுமி, ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு, "பூமண்டலம் காப்போம்; புவிவெப்பம் தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.
இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று, ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது. ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ, சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க மறுத்தார்.
தனிநபர் சராசரிக் கணக்கில், இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா, தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல், வளரும் நாடுகள் - குறிப்பாக சீனாவும் இந்தியாவும் - கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது; அது மட்டுமல்ல, வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.
வளரும் நாடுகள் ஜி - 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.
சர்வதேச நிதி நெருக்கடியின்போது, வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது. கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில், அமெரிக்காவையும், வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன; இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.
கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது, 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே, கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள். இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.
இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள (கரியமில வாயு குறைப்புக்கான) பொறுப்பு என்பது, வளரும் நாடுகளான இந்தியா - சீனாவோ, இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் - ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல். கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக, சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது.
பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 - 2012-ல் 3000 கோடி டாலரும், 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம். மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது. இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால், ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான். அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது. ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது, சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது; பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால், அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது. உலக நாடுகள் அனைத்தையும், ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் - கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும், வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால், அவற்றோடு சேர்ந்து பூமிக்கும், கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது. இவை - நிலக்கரியும், பெட்ரோலியப் பொருள்களும் - சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம், காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது. இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் பெருக்கின. இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின. கூடவே, காடுகள் அழிக்கப்பட்டதும், பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும், அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும், பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன. உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று, நீர், அனைத்தும் மாசுபட்டன; மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின. வளர்ச்சியும், முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால், சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.
இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும், அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது. பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து, மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது. பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின. இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால், மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை எழுந்தது.
ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி, அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது. இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது. இதையடுத்து ஐ.நா. முயற்சியில் 1989, 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள், கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் உருவாக்கப்பட்டன. ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும், 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன. தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது. இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா. 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.
1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா. கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது. புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும், இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்; வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால், அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது; என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி, கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது. இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன. இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன. இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து - இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் - வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த 1992-ன் ஐ.நா. கோட்பாடு, உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும், இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது. இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா. எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.
எனினும், இந்த ஐ.நா. கோட்பாடு அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்கும், மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும், உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக, சிறு தீவு நாடுகள்; தாழ்நிலைக் கடலோர நாடுகள்; சதுப்பு நிலம், காடுகள் நிறைந்த நாடுகள்; இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்; வறட்சி - பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்; நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்; எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்; எரிபொருள்களை (நிலக்கரி, எண்ணெய்) எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள், சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது; வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.
ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா. கோட்பாட்டுக்கு, வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது. ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும், 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது. 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு, வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் (கரியமில வாயு) வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது. 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே, புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ உடன்பாட்டின் மையக் கோட்பாடு. இதுவே பொதுவான - ஆனால் பாகுபடுத்தப்பட்ட - பொறுப்புகள் என்று அறியப்பட்டது. இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி, இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.
இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது. இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும், வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து, கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.
சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும், கோபன்ஹேகனில் குழுமி, ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு, "பூமண்டலம் காப்போம்; புவிவெப்பம் தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.
இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று, ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது. ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ, சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க மறுத்தார்.
தனிநபர் சராசரிக் கணக்கில், இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா, தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல், வளரும் நாடுகள் - குறிப்பாக சீனாவும் இந்தியாவும் - கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது; அது மட்டுமல்ல, வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.
வளரும் நாடுகள் ஜி - 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.
சர்வதேச நிதி நெருக்கடியின்போது, வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது. கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில், அமெரிக்காவையும், வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன; இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.
கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது, 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே, கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள். இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.
இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள (கரியமில வாயு குறைப்புக்கான) பொறுப்பு என்பது, வளரும் நாடுகளான இந்தியா - சீனாவோ, இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் - ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல். கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக, சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது.
பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 - 2012-ல் 3000 கோடி டாலரும், 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
Labels:
கட்டுரை,
சுற்றுச்சூழல்,
புவி வெப்பம்
Monday, December 7, 2009
கூவம் நதியாகிறது...
சென்னைப் பெருநகரின் அகண்ட சாக்கடைகளாக உள்ள கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மூன்றையும் தூய்மைப்படுத்தி, சிங்காரச் சென்னையை உருவாக்குவதற்காக சென்னை நதிகள் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
1967-ல் முதன்முதலாகத் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தபோதே, கூவத்தில் படகுவிடும் திட்டத்தைத் தொடங்கினார் அன்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த இன்றைய முதல்வர் மு. கருணாநிதி. அதற்காகக் கட்டப்பட்ட படகுத்துறைகளின் சிதைந்த மிச்சங்களை இப்போதும் சில இடங்களில் காண முடிகிறது. அப்போது அவரால் அத்திட்டத்தை செய்துமுடிக்க முடியவில்லை. "மகன் தந்தைக்காற்றும் உதவி' அவர் தொடங்கிய பணியை நிறைவு செய்வதுதான்.
இந்த ஆணையம் எத்தகைய பணிகளை முதலில் செய்யப்போகிறது; இதற்கான மதிப்பீடு என்ன, இச்செலவுக்கான நிதியை எங்கிருந்து பெறப்போகிறார்கள் என்ற விவரங்கள் விரைவில் இதுபற்றிய அறிவிப்புகளாக வெளியாகும். முதலில் கூவத்தைத்தான் எடுத்துக்கொள்ள இருக்கின்றனர்.
கூவம் மிகமிக மோசமாக மாசடைந்து, கழிவுகள் நகரவும் முடியாதபடி தேங்கிக் கிடக்கிறது. கூவத்தில் உள்ள தண்ணீரை எடுத்து, தெளியவைத்து, வடிகட்டிய நீரில் மீன்களை விட்டால், 4 மணி நேரத்தில் மீன்கள் செத்துவிடுகின்றன என்பதுதான் கூவம் குறித்து ஆய்வுமுடிவுகள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்ஸிஜன் இல்லை. வெறும் நச்சு உலோகக் கலப்பும், சேறும் சகதியும்தான் உள்ளன. அடையாறும் அந்தவிதமாகவே படுமோசமாக மாசடைந்து கிடக்கிறது. மணப்பாக்கம் தடுப்பணை வரை அடையாறு கொஞ்சம் தூய்மையாக இருந்தாலும், சென்னை பெருநகரத்தில் நுழைந்தவுடன் அதன் மேனியில் வெறும் குப்பைகளும் நச்சுக் கழிவுகளும்தான் கொட்டப்படுகின்றன. "அடையாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பதே நம்ப முடியாத விஷயமாக ஆகிவிட்டது.
அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் 1950 களில் இருந்த நிலை உருவாகவும், படகுகள் ஓடவும், நீர்வாழ் உயிரினங்கள் அவற்றில் காணப்படும் சூழல் மீண்டும் வரவேண்டும். இது முக்கியமான பணி என்பதிலும், இதை எப்பாடு பட்டாகிலும் செய்தாக வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. இருப்பினும், இத்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், இது தேர்தல் கால அரசியல் பிரசாரமாக மாறுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படிச் சொல்லக் காரணம் இருக்கிறது.
சென்னையின் நதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தேவை. இதற்குள் 3 சட்டப்பேரவை தேர்தல்களையும் 2 உள்ளாட்சித் தேர்தல்களையும் சென்னை சந்திக்க நேரலாம். இத்திட்டம் அரசியல் கட்சியின் சாதனையாக முன்வைக்கப்படுமானால், இத்திட்டத்தை எதிர்க்கட்சிகள் குறைகூறும், விமர்சிக்கும் என்பதோடு, ஆட்சி மாற்றம் ஏற்படுமேயானால், இத்திட்டத்தை முற்றிலுமாகப் புறக்கணிப்பார்கள், கிடப்பில் போடுவார்கள். இதனால் மக்களுக்கும் இழப்பு, சென்னை நகருக்கும் இழப்பு.
சிங்கப்பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்தான். இந்த நதி கூவம் போல மிகமிக மோசமாகாத நிலையிலேயே, 1977-ம் ஆண்டில், "சிங்கப்பூர் நதி மற்றும் கலாங் கழிமுகத் தூய்மைத் திட்டம்' தொடங்கப்பட்டு 10 ஆண்டு கால அவகாசத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டு, அதன்படி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டதன் முழுமுதற் காரணம்- அது அரசியல் வெற்றியாக ஆக்கப்படவில்லை என்பதுதான். சிங்கப்பூர் நதியின் கரையிலும் கழிமுகப் பகுதியிலும் குடியிருந்த 26,000 ஏழைக் குடும்பங்கள் பாரபட்சமின்றி ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டனர். 2,800 குடிசைத்தொழில் மற்றும் சிறுதொழில்கூடங்களும் ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டன. நடைபாதை வணிகர்கள், தெருவோர உணவகங்கள் எல்லாமும் கழிவுநீர் போக்கிகள் கொண்ட தனியிடங்களுக்கு மாற்றப்பட்டன. பிளாஸ்டிக் பொருள் போன்ற திடக்கழிவுகள் சிங்கப்பூர் நதியில் கலக்காதபடி சிறப்புத் தடுப்பு அமைப்புகள் கரையோரங்களில் ஏற்படுத்தப்பட்டன. இதற்கான திட்டச் செலவு 20 கோடி டாலர்கள்.
கூவத்தை அதன் உற்பத்தி இடத்திலிருந்து கழிமுகம் வரை சுமார் 65 கி.மீ. தொலைவுக்குத் தூய்மைப்படுத்தவும், அடையாறு (சுமார் 48 கி.மீ.), பக்கிங்காம் கால்வாய் எல்லாவற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பையும் குடிசைப் பகுதிகளையும் நீக்க வேண்டுமானால் மிகக் குறைந்தபட்சம் ஒரு லட்சம் குடிசைகளை அகற்றி, புறநகர்ப் பகுதியில் மாற்றிடம் தந்தாக வேண்டும். பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தொழில்நிறுவனம் மற்றும் மருத்துவமனைக் கழிவுகள் இதில் கலப்பதைத் தடுக்க வேண்டும். இத்தனையும் செய்ய வேண்டுமானால், அரசியல் சாய்வு இல்லாத அரசின் உறுதிப்பாடு தேவை. வாக்கு வங்கிகள் பற்றிய எந்த நினைப்பும் இல்லாமல், கடமையைச் செய்யும் உணர்வு மட்டுமே இருந்தால்தான் இத்திட்டம் வெற்றி அடையும்.
மேலும், தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னை பெருநகரின் நதிகளுக்கு மட்டும் ஆணையம் அமைத்திருப்பதைக் காட்டிலும், ஏன் தமிழக நதிகள் ஆணையம் என அமைக்கவில்லை என்பது சற்று வருத்தம் தருகிறது. தமிழகத்தின் நதிகள் அனைத்துமே ஏறக்குறைய கூவம், அடையாறு போல தூய்மை கெட்டுப்போய் கிடக்கின்றன. மணல்கொள்ளையாலும் தொழில்துறைக் கழிவுகளாலும் மேனி மெலிந்து, நோயுற்றுக் கிடக்கின்றன. இவற்றையும் தூய்மைப்படுத்துவது தமிழக அரசின் பணிதானே?
வாஷிங்டனுக்கு ஒரு பொட்டோமேக். லண்டனுக்கு ஒரு தேம்ஸ். பாரீசுக்கு ஒரு ரைன். சென்னைக்கு ஒரு கூவம் என்கிற நிலை ஏற்பட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியுடைய கனவு மட்டுமல்ல. ஒவ்வொரு சென்னைவாசியின் கனவும்கூட. நல்லதொரு முயற்சி துணை முதல்வர் தலைமையில் செயல்படத் தயாராகிறது. இந்த ஆக்கபூர்வமான திட்டம் அரசியலாக்கப்படக் கூடாது!
நன்றி : தினமணி
1967-ல் முதன்முதலாகத் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தபோதே, கூவத்தில் படகுவிடும் திட்டத்தைத் தொடங்கினார் அன்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த இன்றைய முதல்வர் மு. கருணாநிதி. அதற்காகக் கட்டப்பட்ட படகுத்துறைகளின் சிதைந்த மிச்சங்களை இப்போதும் சில இடங்களில் காண முடிகிறது. அப்போது அவரால் அத்திட்டத்தை செய்துமுடிக்க முடியவில்லை. "மகன் தந்தைக்காற்றும் உதவி' அவர் தொடங்கிய பணியை நிறைவு செய்வதுதான்.
இந்த ஆணையம் எத்தகைய பணிகளை முதலில் செய்யப்போகிறது; இதற்கான மதிப்பீடு என்ன, இச்செலவுக்கான நிதியை எங்கிருந்து பெறப்போகிறார்கள் என்ற விவரங்கள் விரைவில் இதுபற்றிய அறிவிப்புகளாக வெளியாகும். முதலில் கூவத்தைத்தான் எடுத்துக்கொள்ள இருக்கின்றனர்.
கூவம் மிகமிக மோசமாக மாசடைந்து, கழிவுகள் நகரவும் முடியாதபடி தேங்கிக் கிடக்கிறது. கூவத்தில் உள்ள தண்ணீரை எடுத்து, தெளியவைத்து, வடிகட்டிய நீரில் மீன்களை விட்டால், 4 மணி நேரத்தில் மீன்கள் செத்துவிடுகின்றன என்பதுதான் கூவம் குறித்து ஆய்வுமுடிவுகள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்ஸிஜன் இல்லை. வெறும் நச்சு உலோகக் கலப்பும், சேறும் சகதியும்தான் உள்ளன. அடையாறும் அந்தவிதமாகவே படுமோசமாக மாசடைந்து கிடக்கிறது. மணப்பாக்கம் தடுப்பணை வரை அடையாறு கொஞ்சம் தூய்மையாக இருந்தாலும், சென்னை பெருநகரத்தில் நுழைந்தவுடன் அதன் மேனியில் வெறும் குப்பைகளும் நச்சுக் கழிவுகளும்தான் கொட்டப்படுகின்றன. "அடையாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பதே நம்ப முடியாத விஷயமாக ஆகிவிட்டது.
அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் 1950 களில் இருந்த நிலை உருவாகவும், படகுகள் ஓடவும், நீர்வாழ் உயிரினங்கள் அவற்றில் காணப்படும் சூழல் மீண்டும் வரவேண்டும். இது முக்கியமான பணி என்பதிலும், இதை எப்பாடு பட்டாகிலும் செய்தாக வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. இருப்பினும், இத்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், இது தேர்தல் கால அரசியல் பிரசாரமாக மாறுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படிச் சொல்லக் காரணம் இருக்கிறது.
சென்னையின் நதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தேவை. இதற்குள் 3 சட்டப்பேரவை தேர்தல்களையும் 2 உள்ளாட்சித் தேர்தல்களையும் சென்னை சந்திக்க நேரலாம். இத்திட்டம் அரசியல் கட்சியின் சாதனையாக முன்வைக்கப்படுமானால், இத்திட்டத்தை எதிர்க்கட்சிகள் குறைகூறும், விமர்சிக்கும் என்பதோடு, ஆட்சி மாற்றம் ஏற்படுமேயானால், இத்திட்டத்தை முற்றிலுமாகப் புறக்கணிப்பார்கள், கிடப்பில் போடுவார்கள். இதனால் மக்களுக்கும் இழப்பு, சென்னை நகருக்கும் இழப்பு.
சிங்கப்பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்தான். இந்த நதி கூவம் போல மிகமிக மோசமாகாத நிலையிலேயே, 1977-ம் ஆண்டில், "சிங்கப்பூர் நதி மற்றும் கலாங் கழிமுகத் தூய்மைத் திட்டம்' தொடங்கப்பட்டு 10 ஆண்டு கால அவகாசத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டு, அதன்படி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டதன் முழுமுதற் காரணம்- அது அரசியல் வெற்றியாக ஆக்கப்படவில்லை என்பதுதான். சிங்கப்பூர் நதியின் கரையிலும் கழிமுகப் பகுதியிலும் குடியிருந்த 26,000 ஏழைக் குடும்பங்கள் பாரபட்சமின்றி ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டனர். 2,800 குடிசைத்தொழில் மற்றும் சிறுதொழில்கூடங்களும் ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டன. நடைபாதை வணிகர்கள், தெருவோர உணவகங்கள் எல்லாமும் கழிவுநீர் போக்கிகள் கொண்ட தனியிடங்களுக்கு மாற்றப்பட்டன. பிளாஸ்டிக் பொருள் போன்ற திடக்கழிவுகள் சிங்கப்பூர் நதியில் கலக்காதபடி சிறப்புத் தடுப்பு அமைப்புகள் கரையோரங்களில் ஏற்படுத்தப்பட்டன. இதற்கான திட்டச் செலவு 20 கோடி டாலர்கள்.
கூவத்தை அதன் உற்பத்தி இடத்திலிருந்து கழிமுகம் வரை சுமார் 65 கி.மீ. தொலைவுக்குத் தூய்மைப்படுத்தவும், அடையாறு (சுமார் 48 கி.மீ.), பக்கிங்காம் கால்வாய் எல்லாவற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பையும் குடிசைப் பகுதிகளையும் நீக்க வேண்டுமானால் மிகக் குறைந்தபட்சம் ஒரு லட்சம் குடிசைகளை அகற்றி, புறநகர்ப் பகுதியில் மாற்றிடம் தந்தாக வேண்டும். பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தொழில்நிறுவனம் மற்றும் மருத்துவமனைக் கழிவுகள் இதில் கலப்பதைத் தடுக்க வேண்டும். இத்தனையும் செய்ய வேண்டுமானால், அரசியல் சாய்வு இல்லாத அரசின் உறுதிப்பாடு தேவை. வாக்கு வங்கிகள் பற்றிய எந்த நினைப்பும் இல்லாமல், கடமையைச் செய்யும் உணர்வு மட்டுமே இருந்தால்தான் இத்திட்டம் வெற்றி அடையும்.
மேலும், தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னை பெருநகரின் நதிகளுக்கு மட்டும் ஆணையம் அமைத்திருப்பதைக் காட்டிலும், ஏன் தமிழக நதிகள் ஆணையம் என அமைக்கவில்லை என்பது சற்று வருத்தம் தருகிறது. தமிழகத்தின் நதிகள் அனைத்துமே ஏறக்குறைய கூவம், அடையாறு போல தூய்மை கெட்டுப்போய் கிடக்கின்றன. மணல்கொள்ளையாலும் தொழில்துறைக் கழிவுகளாலும் மேனி மெலிந்து, நோயுற்றுக் கிடக்கின்றன. இவற்றையும் தூய்மைப்படுத்துவது தமிழக அரசின் பணிதானே?
வாஷிங்டனுக்கு ஒரு பொட்டோமேக். லண்டனுக்கு ஒரு தேம்ஸ். பாரீசுக்கு ஒரு ரைன். சென்னைக்கு ஒரு கூவம் என்கிற நிலை ஏற்பட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியுடைய கனவு மட்டுமல்ல. ஒவ்வொரு சென்னைவாசியின் கனவும்கூட. நல்லதொரு முயற்சி துணை முதல்வர் தலைமையில் செயல்படத் தயாராகிறது. இந்த ஆக்கபூர்வமான திட்டம் அரசியலாக்கப்படக் கூடாது!
நன்றி : தினமணி
Labels:
சுற்றுச்சூழல்,
தமிழகஅரசு,
தலையங்கம்
Saturday, December 5, 2009
நமக்கு நாமே
புவிவெப்பத்தைக் குறைப்பதில் தனது பங்கு என்ன என்பதை அமெரிக்கா அறிவித்துவிட்டது. அதாவது 2005-ம் ஆண்டு வெளியேற்றிய பசுமை இல்ல வாயுக்களின் அளவில் 18 சதவீதம் குறைத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறது. வளரும் நாடுகளில் மிக அதிகமாக பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் சீனா, தான் 35 முதல் 40 விழுக்காடு குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. சீனாவைப் போலவே இந்தியாவும் ஓரளவு இதே அளவை அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தற்போது வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை இந்தியா 40 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டுமானால், அதற்காக இந்தியா இழக்க வேண்டிய தொழில்வளர்ச்சியும் எதிர்கொள்ள வேண்டிய செலவினங்களும் மிக அதிகம். இந்தியாவின் மின்உற்பத்தியில் பெரும்பங்கு அனல்மின் நிலையங்களிலிருந்துதான் கிடைக்கிறது. இவற்றின் மூலம் வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவும் அதிகம். இதற்காக அனல்மின் நிலையங்களை உடனடியாக மூடுவதோ, மின்உற்பத்தியைக் குறைத்துக்கொள்வதோ இயலாத காரியம்.
இந்தியாவில் சூரியசக்தி மூலமாக மின்சாரம் தயாரித்து, இழப்பை ஈடு செய்ய முடியும் என்பது உண்மையே என்றாலும், அதற்காகும் செலவு பல ஆயிரம் கோடி ரூபாய். இதில் ஒரு பகுதியை ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் என்றாலும், புதிய மின்உற்பத்தி முறைக்கு அது முற்றிலும் பயன் அளிக்காது.
தொழில்துறைகளில் வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவைக் குறைப்பதற்காக, தொழிற்கூடங்களில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்த வேண்டுமானால், அதற்காக இத்தொழில் துறைக்கு மானியம் மற்றும் சலுகைகள் அறிவித்தாக வேண்டும். இதனால் இந்தியாவுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். வளர்ச்சிப் பணிகள் தடைப்படும்.
இந்தியா அதன் பிரச்னையை எதிர்கொள்ளும் அதே வேளையில், இந்தியர் என்ற முறையில் ஒவ்வொருவரும் புவிவெப்பத்தைக்
குறைக்க சில வழிகள் இருக்கின்றன. மின்சாரத்தை அளவாகப் பயன்படுத்துவது, வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது, சீர்வளி அரங்குகள் மற்றும் குளிர்பதன பெட்டி பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை யாவற்றையும் காட்டிலும் மிக அதிகமாக ஒரு மனிதன் இந்தப் புவிக்கு நன்மை செய்ய விரும்பினால், அவர் சைவ உணவுக்கு மாறுவதன் மூலம் அதைச் செய்ய முடியும்.
அண்மையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகையில் "மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் புவிவெப்பத்தைக் குறைக்கலாம்' என்று கூறிய கருத்து உண்மையே. இதை நோபல் பரிசு பெற்றவரும் ஐக்கியநாடுகளின் ஒரு பிரிவாகிய பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அமைப்பின் தலைவர்
ராஜேந்தர் கே. பச்செüரி பல கருத்தரங்குகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒரு கிலோ மாட்டிறைச்சியைத் தவிர்ப்பதன் மூலம் வளிமண்டலத்தில் 36.4 கிலோ கரியமில வாயு கலப்பதைத் தவிர்க்க முடியும் என்று அவர் சொல்வது வெறும் புள்ளிவிவரம் அல்ல. நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியமானதும்கூட. ஆடு, மாடுகள் வளர்ப்பதற்காக அழிபடும் காடுகள், இறைச்சியை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான வாகனப் போக்குவரத்து, இறைச்சியை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருத்தல் போன்ற தொடர்நடவடிக்கையால் ஏற்படும் கரியமில வாயுவை கணக்கிட்டு இந்தக் கணக்கீடு செய்யப்படுகிறது.
இறைச்சிக் கடைகள் என்பது ஊருக்கு ஒரு சிலவாக இருந்த நாள்கள் என்பது முற்றிலுமாக மாறிப்போய், இப்போது எல்லா நாள்களிலும் எல்லா இடங்களிலும் தெருவுக்குத் தெரு இறைச்சிக் கடைகளும், பிரியாணிக் கடைகளும் இருப்பதைக் காண்கிறோம். 2006 ம் ஆண்டு உலகம் முழுவதும் 28 கோடி டன் இறைச்சி உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம்.
ஒரு எக்டேர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்து உருவாக்கப்படும் காய்கறி, கனிகள் பருப்புவகைகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 30 பேருக்கு உணவளிக்க முடியும். ஆனால் இதே நிலப்பரப்பை கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் முட்டை, பால்,
இறைச்சி ஆகியவற்றின் மூலம் ஒரு ஆண்டுக்கு 10 பேருக்கு மட்டுமே உணவளிக்க முடியும் என்றும் கணக்கிடப்படுகிறது.
ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி பெறுவதற்கு 10 கிலோ கால்நடைத் தீவனம் தேவைப்படுகிறது. ஒரு கிலோ பன்றிக் கறிக்கு 5 கிலோ தானியமும் ஒரு கிலோ கோழிக்கறிக்கு 3 கிலோ தானியம் தேவையாக இருக்கிறது. ஆனால் இந்த தானியத்தைக் கொண்டு பல வேளை உணவை ஒரு மனிதன் உண்ண முடியும். மேலும், காய்கறி உணவைச் சமைக்கத் தேவைப்படும் எரிசக்தியைக் காட்டிலும் இறைச்சி உணவு தயாரிக்க 25 மடங்கு எரிசக்தி தேவையாக இருக்கிறது. இவை யாவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, ஒருவர் சைவ உணவுக்கு மாறுவது மண்ணுலகிற்கு மட்டுமல்ல, வளிமண்டலத்திற்கும் நன்மை செய்ய முடியும்.
சைவ உணவு மனிதருக்கு எளிமையான உணவு என்பதுடன், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் கரியமில வாயுவைவிட 30 மடங்கும் அதிக தீமை விளைவிக்கும் மீத்தேன் வாயுக்கு இறைச்சி காரணமாக இருக்கிறது என்பதை எண்ணும் போது, இந்தியர்கள் ஒவ்வொருவரும் மாமிச உணவைத் தவிர்ப்பதும், வசதிகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும். மேலும், புவி வெப்பத்தைக் குறைத்து பருவநிலை மாற்றங்களை கட்டுக்குள் கொண்டுவரவும் உதவும். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவில் வளிமண்டலத்தைக் காப்பது என்று உறுதியை ஏற்றுக் கொண்டால், புவியைக் காக்கலாம். நாடு அதனளவில் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முற்படும்போது குடிமகன்களாகிய நாமும் நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்தால் என்ன!
நன்றி : தினமணி
தற்போது வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை இந்தியா 40 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டுமானால், அதற்காக இந்தியா இழக்க வேண்டிய தொழில்வளர்ச்சியும் எதிர்கொள்ள வேண்டிய செலவினங்களும் மிக அதிகம். இந்தியாவின் மின்உற்பத்தியில் பெரும்பங்கு அனல்மின் நிலையங்களிலிருந்துதான் கிடைக்கிறது. இவற்றின் மூலம் வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவும் அதிகம். இதற்காக அனல்மின் நிலையங்களை உடனடியாக மூடுவதோ, மின்உற்பத்தியைக் குறைத்துக்கொள்வதோ இயலாத காரியம்.
இந்தியாவில் சூரியசக்தி மூலமாக மின்சாரம் தயாரித்து, இழப்பை ஈடு செய்ய முடியும் என்பது உண்மையே என்றாலும், அதற்காகும் செலவு பல ஆயிரம் கோடி ரூபாய். இதில் ஒரு பகுதியை ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் என்றாலும், புதிய மின்உற்பத்தி முறைக்கு அது முற்றிலும் பயன் அளிக்காது.
தொழில்துறைகளில் வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவைக் குறைப்பதற்காக, தொழிற்கூடங்களில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்த வேண்டுமானால், அதற்காக இத்தொழில் துறைக்கு மானியம் மற்றும் சலுகைகள் அறிவித்தாக வேண்டும். இதனால் இந்தியாவுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். வளர்ச்சிப் பணிகள் தடைப்படும்.
இந்தியா அதன் பிரச்னையை எதிர்கொள்ளும் அதே வேளையில், இந்தியர் என்ற முறையில் ஒவ்வொருவரும் புவிவெப்பத்தைக்
குறைக்க சில வழிகள் இருக்கின்றன. மின்சாரத்தை அளவாகப் பயன்படுத்துவது, வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது, சீர்வளி அரங்குகள் மற்றும் குளிர்பதன பெட்டி பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை யாவற்றையும் காட்டிலும் மிக அதிகமாக ஒரு மனிதன் இந்தப் புவிக்கு நன்மை செய்ய விரும்பினால், அவர் சைவ உணவுக்கு மாறுவதன் மூலம் அதைச் செய்ய முடியும்.
அண்மையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகையில் "மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் புவிவெப்பத்தைக் குறைக்கலாம்' என்று கூறிய கருத்து உண்மையே. இதை நோபல் பரிசு பெற்றவரும் ஐக்கியநாடுகளின் ஒரு பிரிவாகிய பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அமைப்பின் தலைவர்
ராஜேந்தர் கே. பச்செüரி பல கருத்தரங்குகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒரு கிலோ மாட்டிறைச்சியைத் தவிர்ப்பதன் மூலம் வளிமண்டலத்தில் 36.4 கிலோ கரியமில வாயு கலப்பதைத் தவிர்க்க முடியும் என்று அவர் சொல்வது வெறும் புள்ளிவிவரம் அல்ல. நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியமானதும்கூட. ஆடு, மாடுகள் வளர்ப்பதற்காக அழிபடும் காடுகள், இறைச்சியை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான வாகனப் போக்குவரத்து, இறைச்சியை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருத்தல் போன்ற தொடர்நடவடிக்கையால் ஏற்படும் கரியமில வாயுவை கணக்கிட்டு இந்தக் கணக்கீடு செய்யப்படுகிறது.
இறைச்சிக் கடைகள் என்பது ஊருக்கு ஒரு சிலவாக இருந்த நாள்கள் என்பது முற்றிலுமாக மாறிப்போய், இப்போது எல்லா நாள்களிலும் எல்லா இடங்களிலும் தெருவுக்குத் தெரு இறைச்சிக் கடைகளும், பிரியாணிக் கடைகளும் இருப்பதைக் காண்கிறோம். 2006 ம் ஆண்டு உலகம் முழுவதும் 28 கோடி டன் இறைச்சி உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம்.
ஒரு எக்டேர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்து உருவாக்கப்படும் காய்கறி, கனிகள் பருப்புவகைகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 30 பேருக்கு உணவளிக்க முடியும். ஆனால் இதே நிலப்பரப்பை கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் முட்டை, பால்,
இறைச்சி ஆகியவற்றின் மூலம் ஒரு ஆண்டுக்கு 10 பேருக்கு மட்டுமே உணவளிக்க முடியும் என்றும் கணக்கிடப்படுகிறது.
ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி பெறுவதற்கு 10 கிலோ கால்நடைத் தீவனம் தேவைப்படுகிறது. ஒரு கிலோ பன்றிக் கறிக்கு 5 கிலோ தானியமும் ஒரு கிலோ கோழிக்கறிக்கு 3 கிலோ தானியம் தேவையாக இருக்கிறது. ஆனால் இந்த தானியத்தைக் கொண்டு பல வேளை உணவை ஒரு மனிதன் உண்ண முடியும். மேலும், காய்கறி உணவைச் சமைக்கத் தேவைப்படும் எரிசக்தியைக் காட்டிலும் இறைச்சி உணவு தயாரிக்க 25 மடங்கு எரிசக்தி தேவையாக இருக்கிறது. இவை யாவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, ஒருவர் சைவ உணவுக்கு மாறுவது மண்ணுலகிற்கு மட்டுமல்ல, வளிமண்டலத்திற்கும் நன்மை செய்ய முடியும்.
சைவ உணவு மனிதருக்கு எளிமையான உணவு என்பதுடன், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் கரியமில வாயுவைவிட 30 மடங்கும் அதிக தீமை விளைவிக்கும் மீத்தேன் வாயுக்கு இறைச்சி காரணமாக இருக்கிறது என்பதை எண்ணும் போது, இந்தியர்கள் ஒவ்வொருவரும் மாமிச உணவைத் தவிர்ப்பதும், வசதிகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும். மேலும், புவி வெப்பத்தைக் குறைத்து பருவநிலை மாற்றங்களை கட்டுக்குள் கொண்டுவரவும் உதவும். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவில் வளிமண்டலத்தைக் காப்பது என்று உறுதியை ஏற்றுக் கொண்டால், புவியைக் காக்கலாம். நாடு அதனளவில் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முற்படும்போது குடிமகன்களாகிய நாமும் நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்தால் என்ன!
நன்றி : தினமணி
Labels:
சுற்றுச்சூழல்,
தலையங்கம்
வெள்ளிப் பனிமலை உருகுதே
""வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம்'' என்று பாடிய பாரதி, கூடவே "GLACIERS' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஓர் அழகிய தமிழ்ச்சொல்லை ""வெள்ளிப்பனி'' என்று பாடிக்காட்டிய தேசியக்கவிக்கு வணக்கம் செலுத்தும் அதேசமயத்தில், 2035-ல், அதாவது இன்னும் 25 ஆண்டுகளில், காலநிலையின் தடுமாற்றம் விளைவாக, இமயமலை திருவண்ணாமலைபோல் ஆகிவிடும் என்று சில காலநிலை வல்லுநர்கள் எச்சரித்துள்ளதை எண்ணிப் பார்த்தால், நெஞ்சு பொறுக்குதிலையே.
"மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று இப்போது நாம் பாடினால் பாகிஸ்தான், நேபாளம், திபெத், பூடான் ஆகிய நாடுகள் எங்கள் பங்கு எங்கே என்று கேட்கும்? இமயமலையின் பரந்த விஸ்தீரணம் மத்திய ஆசியாவிலும் விரிந்து பரந்துள்ளது. ஆனால் வெள்ளிப்பனிமலைகள் மட்டும் மேற்கூறிய நான்கு நாடுகளுடன் இந்தியாவுக்கும் சேர்ந்து சொந்தம். காலநிலைத் தடுமாற்றத்தால் வேகமாக வெள்ளிப்பனி உருகும் சூழ்நிலையை மனதில் கொள்ளாமல் சொந்தம் கொண்டாடும் ஐந்து நாடுகளும் இந்த வெள்ளிப்பனி மலையை ஒரு மாபெரும் பவர்ஹவுஸôக மாற்ற எண்ணுகின்றன.
÷உயிர்ச்சூழல் வளத்தைப் புறக்கணித்துவிட்டு தென்கோடியில் செயல்பட்ட சேது சமுத்திரத் திட்டம் ஓசை இழந்துவிட்டது. இது சூழல் பாதுகாப்பு காரணமாக இல்லை. கால்வாயில் மண் அள்ள அள்ள மீண்டும் தூர்ந்து வருகிறதாம். ட்ரட்ஜர் கார்ப்பரேஷனுக்கு வரவேண்டிய பணம் வரவில்லையாம். சேதுராமர் சேஃபாகிவிட்டார். இப்போது லிபரான் கமிஷன் அறிக்கையில் அயோத்திராமர் பிரச்னையாகிவிட்டார். ராமர் பிரச்னை நமக்கு ஏன்? இப்போதுள்ள பூதாகாரமான பிரச்னை வடகோடியில் உள்ள இமயத்தின் பனிமலைகள். ராமருக்கு வந்த ஆபத்து இப்போது சிவனுக்கு இடம்
பெயர்ந்துவிட்டது. மேருமலைக்கும் கைலாசத்துக்கும் ஆபத்து காத்திருக்கிறது. காலநிலைத் தடுமாற்றத்துக்கு உலகிலேயே முதல் பலி இமயத்தின் வெள்ளிப்பனிமலைகள் என்று I.C.I.M.O.D.. கருதுகிறது. அதாவது International Centre For Integrated Mountain Development-ல் காலநிலைத் தடுமாற்றத்தை ஆராயும் விஞ்ஞானிகளின் அறிக்கையின் அடிப்படையில், I.C.I.M.O.D., இமயமலைப் பகுதிகளில் 2100-ஐ நெருங்கும்போது வெப்பநிலை 5.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என்பதால், பனிமலைகள் அழியும் என்று கூறுகிறது. ஆகவே, கயிலைமலை திருவண்ணாமலையாகிவிட்டால்.... இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளை நம்பி வாழும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பர்மியர்கள், நேபாளிகள், பூட்டானிகள், சீனர்கள் எத்தனை கோடி, எத்தனை கோடி, இறைவா இவர்கள் கதி என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே குலைநடுங்கும் ஒரு சூழ்நிலையில் எத்தனை கோடி எத்தனை கோடி டாலர்கள் செலவழித்து நிலையற்ற நீர் மின்சாரத்திட்டங்களை இந்தியா மட்டுமல்ல; பாகிஸ்தான், பூடான் நிறைவேற்ற முனைந்துவிட்டது. இந்தியாவில் தைபாங் திட்ட மதிப்பீடு, பூடானின் தலா திட்டம், பாகிஸ்தானில் டையாமர் பாஷா திட்டம் ஆகிய மூன்றும் உலகிலேயே அதிகச் செலவுள்ள நீர்மின்சாரத் திட்டம் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 1,50,000 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம்.
÷இந்தத் திட்டங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல; சீனாவிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சீன நிபுணர் குழு மூத்த பொறியாளர் சின்-யுவான் ஹாங், பனிமலை-உருகுவது தீவிரமாகும் என்பதால் ஜீவநதிகள் பாலாறாகிவிட்டால் (வறண்டுவிட்டால்) இல்லாத நீரில் எப்படி மின்சாரம் எடுக்க முடியும்? என்கிறார். ""கான்கிரீட் மலைகள்: இமயமலைகளின் அணைக் கட்டடங்கள்'' என்று I.C.I.M.O.D., சார்பில் ஆய்வு நிகழ்த்திய ஸ்ரீபத் தர்மாதிகாரி என்ற பொறியாளர், ""செயலாற்ற முடியாத இம் மாபெரும் திட்டங்களில் கோடி கோடியாகப் பணம் செலவழிப்பது முட்டாள்தனமானது. அதுவும் உலகளாவிய நிதி நெருக்கடியுள்ள சூழ்நிலையில் இச்செலவு அடிமுட்டாள்தனம்'' என்று குறிப்பிட்டுள்ளார். ""காலநிலைத் தடுமாற்றத்தை மனதில் வைக்காமல் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளின் போக்கு நிலையானது என்ற கருதுகோளில் செயல்படுவது ஆபத்தானது. பனி ஏரிகள் வெடித்து உடைப்பு எடுத்தால் தோன்றக்கூடிய பயங்கர வெள்ளம் அணைக்கட்டுகளை உடைத்துவிடும். காலப்போக்கில் நதியில் நீரோட்டம் இல்லாவிட்டாலும் மின் உற்பத்தி செய்ய முடியாது...'' என்று தர்மாதிகாரி கூறியுள்ளார்.
""பனி ஏரி வெடிப்பு'' என்பது எதுவோ தரைப்பகுதியில் உள்ள சாதாரண ஏரி உடைவதுபோல் அல்ல. ஆங்கிலத்தில் Glacial Lake Outburst Floods - GLOF என்பார்கள். 1985-ல் நேபாளத்தில் ஒருக்ளாஃப் ஏற்பட்டதன் விளைவால் மலைப்பகுதியில் 14 பாலங்களையும், 1 நீர்மின் திட்ட அணையையும் உடைத்துப் பெருகிய வெள்ளத்தில் மக்கள் மடிந்தனர். பள்ளத்தாக்குப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாயின. பூடான் பகுதியில் மட்டும் 2,600 பனி ஏரிகள் உள்ளன. இவற்றில் 25 வெடிக்கும் அபாயத்தில் உள்ளது. இதே நிலை இந்தியாவிலும் உண்டு. வெள்ளிப்பனி உருகி ஆங்காங்கே பனிக்கட்டி ஏரிகள் உருவாகி அவை வெடிக்கின்றனவாம்.
÷வளர்ச்சி வளர்ச்சி என்று பேசி எவ்வாறு பொது மூலதனத்தைக் கொள்ளையடிக்கலாம் என்பதில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நோய் இந்தியா, பாகிஸ்தான், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளில் பரவி இமயத்தையே அசைத்துப் பார்க்கிறது. இப்போதுள்ள பிரச்னை, வெள்ளிப்பனிமலை உருகுவதால் தோன்றக்கூடிய தண்ணீர்ப்பஞ்சம். காலநிலைத் தடுமாற்றத்தை மனத்தில் கொண்டு எதிர்கால நீர்த்தேவையை எப்படிச் சமாளிப்பது என்று யோசிப்பதை மறந்து கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி வற்றப்போகும் நதிகள் மீது நீர்மின்சாரத் திட்டங்களைச் செயல்படுத்துவது புத்திசாலித்தனமான ஆட்சி அதிகாரத்தின் லட்சணம் ஆகாது.
÷அனைத்துலக நிலை இப்படி உள்ளபோது, இந்த அவசரகாலப் பிரச்னையை இந்தியா எவ்வாறு மதிப்பீடு செய்கிறது? மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், வெள்ளிப்பனி உருகுவது பற்றிய விஷயத்திற்கும் காலநிலைத் தடுமாற்றத்திற்கும் உறவு இருப்பதாகச் சொல்லப்படும் விஷயம் ஆதாரமில்லாதது என்று கூறுகிறார். மதிப்பிற்குரிய அமைச்சர் எந்த அடிப்படையில் கூறுகிறார் என்றால், அரசு கூறுவதற்கெல்லாம் தலையாட்டியபடி உண்மையை ஒளித்து எழுதுவதற்கும் சில விஞ்ஞானிகள் கிடைத்தவண்ணம் உள்ளனர். அப்படிக்கிடைத்த வி.கே. ரெய்னா ஓய்வு பெற்ற புவியியல் விஞ்ஞானி. ""வெள்ளிப்பனி மெல்ல மெல்லப் பின்னோக்கிச் செல்வது - உருகி ஏரியாவது 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே தொடங்கிவிட்டது என்றும், அலாஸ்கா அல்லது கிரீன்லேண்டுடன் ஒப்பிடும்போது பின்னோக்கிச் செல்லும் வெள்ளிப்பனி அவ்வளவு அதிகமாயில்லையாம். வெள்ளிப்பனி இயக்கம் விழும் வெள்ளிப்பனி அளவுகொண்டும், தட்பவெப்பம் கொண்டும் நிர்ணயமாகிறதேதவிர தட்பவெப்பத் தடுமாற்றத்துக்கும் வெள்ளிப்பனி மறைவுக்கும் தொடர்பு இல்லை என்றும் கங்கை உற்பத்திக்குக் காரணமான கங்கோத்ரி வெள்ளிப்பனி நின்ற நிலையில் உள்ளதாகவும் ரெய்னா கூறியுள்ளதை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
÷இந்தியா-பாகிஸ்தான் ஜீவநதி சிந்துவுடன் ஐந்து கிளை நதிகளுடன், இந்தியாவுக்கே சொந்தமான கங்கை-பிரம்மபுத்திரா நதிகளுக்கும் சேர்த்து ஒரு பிரச்னையும் இல்லையென்று ஒரு ஜால்ரா விஞ்ஞானி கூறியுள்ளதை அப்படியே I.P.C.C. என்று சொல்லப்படும் Inter Governmental Panel On Climate Change-ன் தலைவரான ராஜேந்திர பாச்செளரி தனது எதிர்ப்பை ""கார்டியன்'' பத்திரிகையில் குறிப்பிடும்போது, "இப்படி ஓர் அர்த்தமில்லாத ரெய்னாவின் அறிக்கையை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஒப்புக்கொண்டது எப்படி?' என்று வியந்துள்ளார். I.P.C.C. என்பது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை உள்ளடக்கியது. அமைச்சரின் கூற்றில் உள்ள கருத்து வேற்றுமை இத்துடன் அடங்கவில்லை. TERI என்று சொல்லப்படும் The Energy and Resources Institute-ன் வெள்ளிப்பனி விஞ்ஞானி சையத் இக்பால் ஹசன், வனம்-சுற்றுச்சூழல் அமைச்சரகம் தன்னிடம் தட்பவெப்பத் தடுமாற்றத்தினால் இமயத்தின் வெள்ளிப்பனி மலையின் பாதுகாப்பு பற்றிய அறிவியல் அறிக்கை கேட்கப்பட்டதாகவும், தனது கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
ரெய்னா அறிக்கைக்குத் தக்க பதில் வழங்கியுள்ளார். ""1980-களிலேயே பசுமையக நச்சு ஆவிகள் இமய வெள்ளிப்பனிகளைத் தாக்க ஆரம்பித்துவிட்டன என்றும், இதனால் இமயத்தின் வெள்ளிப்பனி வேகமாக உருகுவதையும் கண்டறிந்துள்ளதாகவும், நேபாளம், சிக்கிம், பூடான் பகுதிகளில் வெடிக்கக்கூடிய பனிக்கட்டி ஏரிகள் வெள்ளிப்பனி உருகுவதால் தோன்றியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும் பூடான் அரசு அத்தகைய வெடிக்கும் ஏரிகளைக் கண்டறிந்து அதை ஆபத்தில்லாமல் நீரை வெளியேற்ற முயற்சி செய்கிறது. உத்தராஞ்சலில் உள்ள கார்வால் பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, "கடந்த 200 ஆண்டுகளில் கங்கோத்ரியின் வெள்ளிப்பனி 2 கிலோமீட்டர் அளவுக்குப் பின்னோக்கிவிட்டது. அதாவது உருகிக்குறைந்துவிட்டது.
ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் 800 மீட்டர் உள்ளடங்கிவிட்டது'' இந்த உண்மை நிலையை மூடி மறைத்து கங்கோத்ரி வெள்ளிப்பனி உள்ள இடத்தில் மாறாமல் இருப்பதாக அமைச்சர் கூறுவது நகைப்புக்கு இடம் அளித்தாலும், வெள்ளிப்பனி இழப்பால் ஏற்படும் வெடி ஏரிகள் அல்கொய்தா தீவிரவாதிகளின் வெடிகுண்டைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செய்தி நகைப்புக்குரியது இல்லை.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி
"மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று இப்போது நாம் பாடினால் பாகிஸ்தான், நேபாளம், திபெத், பூடான் ஆகிய நாடுகள் எங்கள் பங்கு எங்கே என்று கேட்கும்? இமயமலையின் பரந்த விஸ்தீரணம் மத்திய ஆசியாவிலும் விரிந்து பரந்துள்ளது. ஆனால் வெள்ளிப்பனிமலைகள் மட்டும் மேற்கூறிய நான்கு நாடுகளுடன் இந்தியாவுக்கும் சேர்ந்து சொந்தம். காலநிலைத் தடுமாற்றத்தால் வேகமாக வெள்ளிப்பனி உருகும் சூழ்நிலையை மனதில் கொள்ளாமல் சொந்தம் கொண்டாடும் ஐந்து நாடுகளும் இந்த வெள்ளிப்பனி மலையை ஒரு மாபெரும் பவர்ஹவுஸôக மாற்ற எண்ணுகின்றன.
÷உயிர்ச்சூழல் வளத்தைப் புறக்கணித்துவிட்டு தென்கோடியில் செயல்பட்ட சேது சமுத்திரத் திட்டம் ஓசை இழந்துவிட்டது. இது சூழல் பாதுகாப்பு காரணமாக இல்லை. கால்வாயில் மண் அள்ள அள்ள மீண்டும் தூர்ந்து வருகிறதாம். ட்ரட்ஜர் கார்ப்பரேஷனுக்கு வரவேண்டிய பணம் வரவில்லையாம். சேதுராமர் சேஃபாகிவிட்டார். இப்போது லிபரான் கமிஷன் அறிக்கையில் அயோத்திராமர் பிரச்னையாகிவிட்டார். ராமர் பிரச்னை நமக்கு ஏன்? இப்போதுள்ள பூதாகாரமான பிரச்னை வடகோடியில் உள்ள இமயத்தின் பனிமலைகள். ராமருக்கு வந்த ஆபத்து இப்போது சிவனுக்கு இடம்
பெயர்ந்துவிட்டது. மேருமலைக்கும் கைலாசத்துக்கும் ஆபத்து காத்திருக்கிறது. காலநிலைத் தடுமாற்றத்துக்கு உலகிலேயே முதல் பலி இமயத்தின் வெள்ளிப்பனிமலைகள் என்று I.C.I.M.O.D.. கருதுகிறது. அதாவது International Centre For Integrated Mountain Development-ல் காலநிலைத் தடுமாற்றத்தை ஆராயும் விஞ்ஞானிகளின் அறிக்கையின் அடிப்படையில், I.C.I.M.O.D., இமயமலைப் பகுதிகளில் 2100-ஐ நெருங்கும்போது வெப்பநிலை 5.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என்பதால், பனிமலைகள் அழியும் என்று கூறுகிறது. ஆகவே, கயிலைமலை திருவண்ணாமலையாகிவிட்டால்.... இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளை நம்பி வாழும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பர்மியர்கள், நேபாளிகள், பூட்டானிகள், சீனர்கள் எத்தனை கோடி, எத்தனை கோடி, இறைவா இவர்கள் கதி என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே குலைநடுங்கும் ஒரு சூழ்நிலையில் எத்தனை கோடி எத்தனை கோடி டாலர்கள் செலவழித்து நிலையற்ற நீர் மின்சாரத்திட்டங்களை இந்தியா மட்டுமல்ல; பாகிஸ்தான், பூடான் நிறைவேற்ற முனைந்துவிட்டது. இந்தியாவில் தைபாங் திட்ட மதிப்பீடு, பூடானின் தலா திட்டம், பாகிஸ்தானில் டையாமர் பாஷா திட்டம் ஆகிய மூன்றும் உலகிலேயே அதிகச் செலவுள்ள நீர்மின்சாரத் திட்டம் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 1,50,000 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம்.
÷இந்தத் திட்டங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல; சீனாவிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சீன நிபுணர் குழு மூத்த பொறியாளர் சின்-யுவான் ஹாங், பனிமலை-உருகுவது தீவிரமாகும் என்பதால் ஜீவநதிகள் பாலாறாகிவிட்டால் (வறண்டுவிட்டால்) இல்லாத நீரில் எப்படி மின்சாரம் எடுக்க முடியும்? என்கிறார். ""கான்கிரீட் மலைகள்: இமயமலைகளின் அணைக் கட்டடங்கள்'' என்று I.C.I.M.O.D., சார்பில் ஆய்வு நிகழ்த்திய ஸ்ரீபத் தர்மாதிகாரி என்ற பொறியாளர், ""செயலாற்ற முடியாத இம் மாபெரும் திட்டங்களில் கோடி கோடியாகப் பணம் செலவழிப்பது முட்டாள்தனமானது. அதுவும் உலகளாவிய நிதி நெருக்கடியுள்ள சூழ்நிலையில் இச்செலவு அடிமுட்டாள்தனம்'' என்று குறிப்பிட்டுள்ளார். ""காலநிலைத் தடுமாற்றத்தை மனதில் வைக்காமல் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளின் போக்கு நிலையானது என்ற கருதுகோளில் செயல்படுவது ஆபத்தானது. பனி ஏரிகள் வெடித்து உடைப்பு எடுத்தால் தோன்றக்கூடிய பயங்கர வெள்ளம் அணைக்கட்டுகளை உடைத்துவிடும். காலப்போக்கில் நதியில் நீரோட்டம் இல்லாவிட்டாலும் மின் உற்பத்தி செய்ய முடியாது...'' என்று தர்மாதிகாரி கூறியுள்ளார்.
""பனி ஏரி வெடிப்பு'' என்பது எதுவோ தரைப்பகுதியில் உள்ள சாதாரண ஏரி உடைவதுபோல் அல்ல. ஆங்கிலத்தில் Glacial Lake Outburst Floods - GLOF என்பார்கள். 1985-ல் நேபாளத்தில் ஒருக்ளாஃப் ஏற்பட்டதன் விளைவால் மலைப்பகுதியில் 14 பாலங்களையும், 1 நீர்மின் திட்ட அணையையும் உடைத்துப் பெருகிய வெள்ளத்தில் மக்கள் மடிந்தனர். பள்ளத்தாக்குப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாயின. பூடான் பகுதியில் மட்டும் 2,600 பனி ஏரிகள் உள்ளன. இவற்றில் 25 வெடிக்கும் அபாயத்தில் உள்ளது. இதே நிலை இந்தியாவிலும் உண்டு. வெள்ளிப்பனி உருகி ஆங்காங்கே பனிக்கட்டி ஏரிகள் உருவாகி அவை வெடிக்கின்றனவாம்.
÷வளர்ச்சி வளர்ச்சி என்று பேசி எவ்வாறு பொது மூலதனத்தைக் கொள்ளையடிக்கலாம் என்பதில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நோய் இந்தியா, பாகிஸ்தான், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளில் பரவி இமயத்தையே அசைத்துப் பார்க்கிறது. இப்போதுள்ள பிரச்னை, வெள்ளிப்பனிமலை உருகுவதால் தோன்றக்கூடிய தண்ணீர்ப்பஞ்சம். காலநிலைத் தடுமாற்றத்தை மனத்தில் கொண்டு எதிர்கால நீர்த்தேவையை எப்படிச் சமாளிப்பது என்று யோசிப்பதை மறந்து கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி வற்றப்போகும் நதிகள் மீது நீர்மின்சாரத் திட்டங்களைச் செயல்படுத்துவது புத்திசாலித்தனமான ஆட்சி அதிகாரத்தின் லட்சணம் ஆகாது.
÷அனைத்துலக நிலை இப்படி உள்ளபோது, இந்த அவசரகாலப் பிரச்னையை இந்தியா எவ்வாறு மதிப்பீடு செய்கிறது? மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், வெள்ளிப்பனி உருகுவது பற்றிய விஷயத்திற்கும் காலநிலைத் தடுமாற்றத்திற்கும் உறவு இருப்பதாகச் சொல்லப்படும் விஷயம் ஆதாரமில்லாதது என்று கூறுகிறார். மதிப்பிற்குரிய அமைச்சர் எந்த அடிப்படையில் கூறுகிறார் என்றால், அரசு கூறுவதற்கெல்லாம் தலையாட்டியபடி உண்மையை ஒளித்து எழுதுவதற்கும் சில விஞ்ஞானிகள் கிடைத்தவண்ணம் உள்ளனர். அப்படிக்கிடைத்த வி.கே. ரெய்னா ஓய்வு பெற்ற புவியியல் விஞ்ஞானி. ""வெள்ளிப்பனி மெல்ல மெல்லப் பின்னோக்கிச் செல்வது - உருகி ஏரியாவது 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே தொடங்கிவிட்டது என்றும், அலாஸ்கா அல்லது கிரீன்லேண்டுடன் ஒப்பிடும்போது பின்னோக்கிச் செல்லும் வெள்ளிப்பனி அவ்வளவு அதிகமாயில்லையாம். வெள்ளிப்பனி இயக்கம் விழும் வெள்ளிப்பனி அளவுகொண்டும், தட்பவெப்பம் கொண்டும் நிர்ணயமாகிறதேதவிர தட்பவெப்பத் தடுமாற்றத்துக்கும் வெள்ளிப்பனி மறைவுக்கும் தொடர்பு இல்லை என்றும் கங்கை உற்பத்திக்குக் காரணமான கங்கோத்ரி வெள்ளிப்பனி நின்ற நிலையில் உள்ளதாகவும் ரெய்னா கூறியுள்ளதை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
÷இந்தியா-பாகிஸ்தான் ஜீவநதி சிந்துவுடன் ஐந்து கிளை நதிகளுடன், இந்தியாவுக்கே சொந்தமான கங்கை-பிரம்மபுத்திரா நதிகளுக்கும் சேர்த்து ஒரு பிரச்னையும் இல்லையென்று ஒரு ஜால்ரா விஞ்ஞானி கூறியுள்ளதை அப்படியே I.P.C.C. என்று சொல்லப்படும் Inter Governmental Panel On Climate Change-ன் தலைவரான ராஜேந்திர பாச்செளரி தனது எதிர்ப்பை ""கார்டியன்'' பத்திரிகையில் குறிப்பிடும்போது, "இப்படி ஓர் அர்த்தமில்லாத ரெய்னாவின் அறிக்கையை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஒப்புக்கொண்டது எப்படி?' என்று வியந்துள்ளார். I.P.C.C. என்பது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை உள்ளடக்கியது. அமைச்சரின் கூற்றில் உள்ள கருத்து வேற்றுமை இத்துடன் அடங்கவில்லை. TERI என்று சொல்லப்படும் The Energy and Resources Institute-ன் வெள்ளிப்பனி விஞ்ஞானி சையத் இக்பால் ஹசன், வனம்-சுற்றுச்சூழல் அமைச்சரகம் தன்னிடம் தட்பவெப்பத் தடுமாற்றத்தினால் இமயத்தின் வெள்ளிப்பனி மலையின் பாதுகாப்பு பற்றிய அறிவியல் அறிக்கை கேட்கப்பட்டதாகவும், தனது கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
ரெய்னா அறிக்கைக்குத் தக்க பதில் வழங்கியுள்ளார். ""1980-களிலேயே பசுமையக நச்சு ஆவிகள் இமய வெள்ளிப்பனிகளைத் தாக்க ஆரம்பித்துவிட்டன என்றும், இதனால் இமயத்தின் வெள்ளிப்பனி வேகமாக உருகுவதையும் கண்டறிந்துள்ளதாகவும், நேபாளம், சிக்கிம், பூடான் பகுதிகளில் வெடிக்கக்கூடிய பனிக்கட்டி ஏரிகள் வெள்ளிப்பனி உருகுவதால் தோன்றியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும் பூடான் அரசு அத்தகைய வெடிக்கும் ஏரிகளைக் கண்டறிந்து அதை ஆபத்தில்லாமல் நீரை வெளியேற்ற முயற்சி செய்கிறது. உத்தராஞ்சலில் உள்ள கார்வால் பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, "கடந்த 200 ஆண்டுகளில் கங்கோத்ரியின் வெள்ளிப்பனி 2 கிலோமீட்டர் அளவுக்குப் பின்னோக்கிவிட்டது. அதாவது உருகிக்குறைந்துவிட்டது.
ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் 800 மீட்டர் உள்ளடங்கிவிட்டது'' இந்த உண்மை நிலையை மூடி மறைத்து கங்கோத்ரி வெள்ளிப்பனி உள்ள இடத்தில் மாறாமல் இருப்பதாக அமைச்சர் கூறுவது நகைப்புக்கு இடம் அளித்தாலும், வெள்ளிப்பனி இழப்பால் ஏற்படும் வெடி ஏரிகள் அல்கொய்தா தீவிரவாதிகளின் வெடிகுண்டைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செய்தி நகைப்புக்குரியது இல்லை.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி
Labels:
இந்தியாஅரசு,
கட்டுரை,
சுற்றுச்சூழல்
Wednesday, November 25, 2009
மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்
தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.
இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.
தமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.
அதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.
2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.
இந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.
வேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.
நீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.
தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.
திறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.
மழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.
திறந்தவெளிக் கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றில் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.
நிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.
கிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
இதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.
இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.
மழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.
நிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.
(கட்டுரையாளர்: எம். பாண்டியன், மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்).
நன்றி : தினமணி
இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.
தமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.
அதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.
2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.
இந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.
வேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.
நீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.
தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.
திறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.
மழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.
திறந்தவெளிக் கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றில் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.
நிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.
கிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
இதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.
இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.
மழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.
நிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.
(கட்டுரையாளர்: எம். பாண்டியன், மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்).
நன்றி : தினமணி
Labels:
கட்டுரை,
சுற்றுச்சூழல்,
விவசாயம்
Wednesday, November 18, 2009
நாளை எந்தப் பக்கம்?
சென்றவாரம் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க ஆற்றல் துறை அமைச்சர் ஸ்டீபன் சூ, புதுதில்லியில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐஐடி) மாணவர்களிடையே பேசும்போது, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்: "கோபன்ஹேகன் மாநாட்டில் கரியமில வாயு குறைப்பு குறித்து அமெரிக்கா எந்த உறுதிமொழியையும் வழங்காது'
அதாவது, கியோடோ மாநாட்டுத் தீர்மானத்தின்படி, வளர்ந்த நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா ஏற்கப்போவதில்லை என்பதுதான் இதன் பொருள். இதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார். அமெரிக்கா தனக்கான தூய ஆற்றல் மற்றும் பாதுகாப்புக் குறித்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும், அந்தச் சட்டம் அமெரிக்க அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும், அது நிறைவேறாத நிலையில் கரியமில வாயு குறைப்பு பற்றிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப மாறுதலுக்கான செயல்வரம்பு மாநாட்டில் (UNFCCC) அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிடம் இந்தியா எழுப்பிய கேள்விகள் குறித்துச் சொல்லும்போது, "இந்தியாவின் நிர்பந்தங்களை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். கரியமில வாயு வெளிப்பாட்டை இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகமாகக் குறைக்கத் தேவையில்லை' என்று இந்தியாவுக்கு மனம்குளிரும் பதிலையும் அவர் அளிக்கத் தவறவில்லை.
அதன் பின்னர், அவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அடுத்தநாள் சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, சீனாவை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
சிங்கப்பூரில் ஒபாமாவும், இந்தியாவில் ஸ்டீபன் சூ-வும் இப்படியாகப் பேசக் காரணம், கோபன்ஹேகன் மாநாட்டின்போது அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இந்தியாவும் சீனாவும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான்.
1997-ல் மேற்கொண்ட கியோடோ மாநாட்டு முடிவுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட அமெரிக்காவின் முயற்சிக்கு யாரும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காக இத்தகைய பசப்பு வார்த்தைகளை அமெரிக்கா பேசி வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு அமைச்சர்களை அனுப்பிவைத்தும், சீன நாட்டினைப் புகழ்ந்தும் தோழமை பாராட்டுகிறார்கள்.
உலகில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமானால், உலக நாடுகள் அனைத்தும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இதில் எந்தெந்த நாடுகள் இன்றைய மிக மோசமான புவிவெப்பத்துக்குக் காரணமோ அந்த நாடுகள் 1990-ம் ஆண்டு அளவின்படி குறிப்பிட்ட சதவீத கரியமில வாயு உள்ளிட்ட பசுமைஇல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைக்க வேண்டும். இதுதான் கியோடோ தீர்மானம்.
ஆனால் அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், 2005-ம் ஆண்டு நிலவரப்படி, (1990-ம் ஆண்டு நிலவரப்படி அல்ல), தாங்கள் வெளியேற்றும் பசுமைஇல்ல வாயுக்களில் 20 சதவீதத்தை 2020-ம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வோம் என்பதுதான். இதைவிட, நாங்கள் கொஞ்சம்கூட குறைக்க மாட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்.
இதைப்போன்ற அநியாயம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய வளிமண்டல மாசுகளின் 30 சதவீதம் அமெரிக்காவினால் உண்டானது. தற்போதும் ஆண்டுதோறும் உலகின் மொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 18 சதவீதம் அமெரிக்காவினுடையது. இதற்கு இணையான அளவில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே!
இதனால்தான் வளரும் நாடுகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமானவை. இந்த இரு நாடுகளும் ஒன்றாக நின்றால், கோபன்ஹேகனில் தற்போதுள்ள 141 நாடுகளும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும். ஓர் அணிக்கு சீனா அல்லது இந்தியா தலைமையேற்கும் கட்டாயம் உருவாகும். இது "பெரியண்ணன்' அமெரிக்காவுக்கு அவமரியாதை ஆகிவிடும். தற்போது அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சி வெளிப்படையானது. முதலாவதாக இரு நாடுகளையும் தனக்குச் சாதகமாக இருக்கச் செய்வது; அல்லது சும்மா இருந்தாலும் சரிதான். இரண்டாவதாக, சீனாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, இந்தியாவைத் தனிமைப்படுத்துவது!
இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுதான். இந்தியா தனித்து நின்று எதிர்க்கும் என்றால், அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் நிதியுதவிகள் கிடைக்காது என்பதுடன் வேறு நெருக்கடிகளும் ஏற்படும். உதாரணமாக, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல் பரிமாற்றம் இருக்காது.
இருப்பினும், உலக நன்மைக்காக எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகள்தானே முடிவு எடுப்பவர்களாக இருக்கிறார்கள்!
நன்றி: தினமணி
அதாவது, கியோடோ மாநாட்டுத் தீர்மானத்தின்படி, வளர்ந்த நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா ஏற்கப்போவதில்லை என்பதுதான் இதன் பொருள். இதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார். அமெரிக்கா தனக்கான தூய ஆற்றல் மற்றும் பாதுகாப்புக் குறித்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும், அந்தச் சட்டம் அமெரிக்க அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும், அது நிறைவேறாத நிலையில் கரியமில வாயு குறைப்பு பற்றிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப மாறுதலுக்கான செயல்வரம்பு மாநாட்டில் (UNFCCC) அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிடம் இந்தியா எழுப்பிய கேள்விகள் குறித்துச் சொல்லும்போது, "இந்தியாவின் நிர்பந்தங்களை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். கரியமில வாயு வெளிப்பாட்டை இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகமாகக் குறைக்கத் தேவையில்லை' என்று இந்தியாவுக்கு மனம்குளிரும் பதிலையும் அவர் அளிக்கத் தவறவில்லை.
அதன் பின்னர், அவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அடுத்தநாள் சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, சீனாவை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
சிங்கப்பூரில் ஒபாமாவும், இந்தியாவில் ஸ்டீபன் சூ-வும் இப்படியாகப் பேசக் காரணம், கோபன்ஹேகன் மாநாட்டின்போது அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இந்தியாவும் சீனாவும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான்.
1997-ல் மேற்கொண்ட கியோடோ மாநாட்டு முடிவுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட அமெரிக்காவின் முயற்சிக்கு யாரும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காக இத்தகைய பசப்பு வார்த்தைகளை அமெரிக்கா பேசி வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு அமைச்சர்களை அனுப்பிவைத்தும், சீன நாட்டினைப் புகழ்ந்தும் தோழமை பாராட்டுகிறார்கள்.
உலகில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமானால், உலக நாடுகள் அனைத்தும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இதில் எந்தெந்த நாடுகள் இன்றைய மிக மோசமான புவிவெப்பத்துக்குக் காரணமோ அந்த நாடுகள் 1990-ம் ஆண்டு அளவின்படி குறிப்பிட்ட சதவீத கரியமில வாயு உள்ளிட்ட பசுமைஇல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைக்க வேண்டும். இதுதான் கியோடோ தீர்மானம்.
ஆனால் அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், 2005-ம் ஆண்டு நிலவரப்படி, (1990-ம் ஆண்டு நிலவரப்படி அல்ல), தாங்கள் வெளியேற்றும் பசுமைஇல்ல வாயுக்களில் 20 சதவீதத்தை 2020-ம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வோம் என்பதுதான். இதைவிட, நாங்கள் கொஞ்சம்கூட குறைக்க மாட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்.
இதைப்போன்ற அநியாயம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய வளிமண்டல மாசுகளின் 30 சதவீதம் அமெரிக்காவினால் உண்டானது. தற்போதும் ஆண்டுதோறும் உலகின் மொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 18 சதவீதம் அமெரிக்காவினுடையது. இதற்கு இணையான அளவில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே!
இதனால்தான் வளரும் நாடுகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமானவை. இந்த இரு நாடுகளும் ஒன்றாக நின்றால், கோபன்ஹேகனில் தற்போதுள்ள 141 நாடுகளும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும். ஓர் அணிக்கு சீனா அல்லது இந்தியா தலைமையேற்கும் கட்டாயம் உருவாகும். இது "பெரியண்ணன்' அமெரிக்காவுக்கு அவமரியாதை ஆகிவிடும். தற்போது அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சி வெளிப்படையானது. முதலாவதாக இரு நாடுகளையும் தனக்குச் சாதகமாக இருக்கச் செய்வது; அல்லது சும்மா இருந்தாலும் சரிதான். இரண்டாவதாக, சீனாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, இந்தியாவைத் தனிமைப்படுத்துவது!
இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுதான். இந்தியா தனித்து நின்று எதிர்க்கும் என்றால், அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் நிதியுதவிகள் கிடைக்காது என்பதுடன் வேறு நெருக்கடிகளும் ஏற்படும். உதாரணமாக, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல் பரிமாற்றம் இருக்காது.
இருப்பினும், உலக நன்மைக்காக எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகள்தானே முடிவு எடுப்பவர்களாக இருக்கிறார்கள்!
நன்றி: தினமணி
Labels:
அமெரிக்கா,
சுற்றுச்சூழல்
Tuesday, November 17, 2009
உணவின் தேவையும் நீரில் சிக்கனமும்
நாளுக்கு நாள் உணவின் தேவை உயர்ந்து வருகிறது. உணவின் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை என்பதால் அரிசி விலையும் பருப்பு விலையும் ஆகாயத்தைத் தொடுவதாக உள்ளன. நல்லவேளையாக தமிழ்நாட்டுக்குத் தேவையான வடகிழக்குப் பருவமழை தாமதமானாலும் தொடங்கியுள்ளது.
நீடிக்குமா? வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரப்பிரதேசத்திலும் ஒரிசாவிலும் வெள்ளத்தை ஏற்படுத்துமா? போகப் போகத் தெரியும். இங்கு பெய்யாமல் அங்கு பெய்தாலும் சரி. ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அரிசி வருவது நின்றுவிடாது. தென்மேற்குப் பருவமழை பொய்த்தது பொய்த்ததுதான்.
அரிசி, கோதுமை இறக்குமதியுடன் பருப்பு இறக்குமதியும் தொடர்வது உண்மைதான். உணவுக்கும் நீருக்கும் பற்றாக்குறை இருப்பது உண்மை. இதற்கு நதிநீர் இணைப்பு சரியான தீர்வு என்று பலர் கருதுகிறார்கள். அப்படியே இணைத்தாலும், ஆந்திர அரசு நமக்குத் தேவையான நீரைத் தருமா? குறுக்கே குறுக்கே கர்நாடகம் அணைக்கட்டுகளைக் கட்டிக் காவிரிப் பிரச்னை நாற்பது ஆண்டுகளாக சந்தி சிரிக்கிறது. கிருஷ்ணர் வேஷம் போட்டு மக்களை மயக்கிய என்.டி.ஆர். சென்னைக்கு கிருஷ்ணா தீர்த்தம் தருவதாக ஒப்பந்தம் செய்தார்.
தமிழ்நாடு அரசு தந்த பணத்தைக் கொண்டு ஆந்திர மாவட்டங்களில் கால்வாய் வெட்டினார்கள். இன்று வெட்டிய கால்வாய்கள் தூர்ந்துவிட்டன. பெருமாள் கோயிலில் வழங்கும் துளசி தீர்த்தம்போல் வந்தது சிறுதுளிகள். இன்று பாலாறில் அணை ஒரு பிரச்னை. எதிர்க்கட்சிகள் சிலநாள் தூக்கிப் பிடித்தன. இலங்கைத் தமிழர் பிரச்னை வந்ததும் காவிரிப் பிரச்னை, பாலாறு பிரச்னைகளையெல்லாம் ஓசை இல்லாமல் அடங்கிவிட்டன.
இந்தியாவில் உள்ள நதிகளை எல்லாம் இணைப்பது இயலாத காரியம் என்று ராகுல் காந்தி கைவிரித்துவிட்டதும் ஒருவிதத்தில் நல்லது. நதி இணைப்பில் எச்சரிக்கை தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆமோதித்து விட்டார். ஒரு காவிரிப் பிரச்னையைத் தீர்த்து வைக்க முடியாத சூழ்நிலையில், இருபது மாநிலங்களிலும் இருபது காவிரிப் பிரச்னைகள் - ஒவ்வொரு நதியும் அடுத்த மாநிலத்துக்கு வரும்போது - யார் குடுமி யாரிடம் இருக்கும், என்று பாரதப் பிரதமர் யோசித்துத்தான் இப்படிச் சொல்லியிருப்பார். அதற்குப் பின் சுற்றுச்சூழல், வன அழிப்பு, புதிய வாழ்விடம் என்ற பிரச்னைகள் ஏழைகளை மிகவும் பாதிக்கலாம். அதிகம் தண்ணீர் என்றால் அதிகம் உணவு. அதிகம் உணவுக்கு நதிநீர் இணைப்பு என்று ஒரு சுலபமான செய்தியைச் சொல்லும் அரசியல்வாதிகளும், பெரும்பாலான பொதுமக்கள் கருத்தும் ஒன்றாயுள்ளன. வேறு மாற்று யோசனைகளை நாம் சிந்திக்க மறுப்பது ஏன்?
முதலில் நீரில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறோமா? விவசாயத் தேவைக்குப் பயன்பட்ட தண்ணீர் முக்கிய அணைகள் அல்லது நீர்நிலைகளிலிருந்து குடிநீருக்காகத் தொலைதூரங்களுக்குக் கொண்டு வரப்படுகிறது. இடையில் எத்தனை உடைப்புகள் என்ற கணக்கு ஒருவரைத் தலை சுற்ற வைக்கும். பல இடங்களில் புதிய குளங்களே தேவையில்லாத பாழ்நிலத்தில் உருவாகியுள்ளது.
தோராயமாக இப்படி உடைப்பு எடுத்து ஓடும் தண்ணீரை ஸ்ப்ரிங்க்ளர் அல்லது "ரெயின்கன்'
மூலம் 2 லட்சம் டன் மக்சாச்சோளம் அல்லது 2 லட்சம் டன் கேழ்வரகு அல்லது 1.5 லட்சம் டன் வெள்ளைச்சோளம் உற்பத்தி செய்யலாம். கோ - 3 தீவனப்புல் சாகுபடி செய்தால் 10,000 பசுமாடுகள் (கலப்பினம்) மூலம் 50,000 டன் பால் உற்பத்தி செய்யலாம். பொது இடங்களில் குழாய் இருக்கும்; டேப் இருக்காது. டேப் இல்லாமல் தினம் வழிந்தோடும் தண்ணீரைக் கொண்டு பார் அமைத்துத் துவரையோ, உளுந்தோ போட்டால் ஒவ்வொரு வழிந்தோடும் குழாய்களைச் சுற்றியுள்ள இடத்திலும் 10 மூட்டை விளைச்சல் எடுக்கலாம்.
மழைநீர் சேமிப்பு என்பது கருத்தரங்கிலும் மேடைப் பேச்சுகளிலும் உள்ள வேகம் செயலில் இல்லை. இந்தியாவின் சராசரி மழை அளவு 115 செ.மீ. தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 90 செ.மீ. உலக சராசரி மழை அளவு 70 செ.மீ. ஆகவே இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டின் மழை அளவு உலக சராசரியைவிட அதிகமே.
மழைப்பொழிவு அதிகமுள்ள பல மாநிலங்களில் நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் - காவிரி டெல்டாப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 1000 அடிக்குக் கீழே தண்ணீர் சென்றுவிட்டது. பல மாநிலங்களில் இதே பிரச்னை.
நீர்ச்சிக்கனப் பயிர் சாகுபடிக்கு திட்டமிடப்படுகிறது. இதில் மிகவும் வியப்பான விஷயம், ராலிகன் சித்தி, ஹிவாரே பாசார் போன்ற வறட்சியான மகாராஷ்டிர மாநிலப் பகுதியில் மழை அளவு 46 செ.மீ. தான்.
உலக சராசரி - இந்திய சராசரியைவிடக் குறைவான தக்காண பீடபூமிப் பிரதேசம் இப்பகுதிகளில் இப்போதெல்லாம் 30, 40 அடியில் ஊற்று இருந்துகொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் அண்ணா ஹசாரே வழிகாட்டி, மக்கள் சேர்ந்து சிறப்பாக மழைநீரைச் சேமிப்பதுவே. இதுபோல் ஒவ்வொரு கிராமங்களிலும் ராலிகன் சித்தியின் உதாரணம் பின்பற்றப்படுமானால் நதிநீர் இணைப்பு என்ற பேச்சுக்கே அவசியமில்லை. கிடைக்கும் மழைநீரில் ஐந்தில் ஒரு பங்கைத்தான் பயன்படுத்துகிறோம். 50 சதவீதம் பயன்படுத்தத் திட்டமிட்டாலே போதும். பத்தில் 1 பங்கு இயல்பாகவே பூமிக்கடியில் செல்கிறது. பத்தில் 1 பங்கு ஏரி, குளங்களுக்கும் செல்கிறது. மீதி 8 பங்கு - பெய்யும் மழையில் 80 சதவீதம் பாழாகிறது.
ராலிகான் சித்தியிலும் ஹிவாரே பாசாரிலும் நிகழ்ந்தது என்ன? வனத்துறையின் துணையுடன் கிராமத்தின் மேற்கட்டில் இருந்த மலைகளில் ஏராளமாக மரங்களை நட்டார்கள். வனம் உருவானது. ஆங்காங்கே நீண்ட வரப்புகளை வெட்டினார்கள். பல்வேறு நீர்த்தடுப்பு - கசிவுநீர்க் குட்டைகள் - குறுக்கணைகள் கட்டினார்கள். தீவனப்புல், வெங்காயம் சாகுபடி செய்தனர். கிராமத்தைவிட்டு மும்பைக்குப் பிழைக்கச் சென்ற விவசாயிகள் கிராமத்துக்கு வந்து லட்சக்கணக்கில் சம்பாதித்தனர். சிறப்பாகக் கால்நடை - கறவைப்பசு வளர்த்தார்கள். "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்ற கண்ணதாசன் பாட்டுக்கு இலக்கணம் வகுத்தனர், வறட்சிப்பகுதி விவசாயிகள்.
உணவுக்குத் தேவை உள்ளது, சரி. ஆனால் ரேஷனில் வழங்கப்படும் அரிசி தேவையில்லாமல் வீணாவது ஒருபுறம். அரிசிச் சோறு உண்டு பழக்கமில்லாத மலைவாழ் மக்கள் ஒரு ரூபாய் அரிசியால் கேப்பை, வரகு, பொட்டுக்கம்பு போன்றவற்றைச் சொந்த உணவுத் தேவைக்கு என்று சாகுபடி செய்த வழக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். அரிசி உண்ணும் வழக்கம் இல்லாதவர்களிடம் அரிசி நுகர்வைத் திணிப்பது சரியா? கொஞ்சநஞ்சம் எஞ்சியுள்ள புஞ்சை தானிய சாகுபடியையும் அழித்துவிட்டு நீர்ச்செலவுள்ள அரிசி போன்ற உணவு சாகுபடியை ஊக்குவிப்பதும் சரிதானா?
1 டன் அரிசி உற்பத்தியாவதற்குச் செலவாகும் நீரிலிருந்து 10 டன் புஞ்சை தானியங்களையோ 10 டன் பருப்பு வகை தானியங்களையோ உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய ஸ்ப்ரிங்க்ளர் அல்லது ரெயின்கன் அமைத்துக் கொள்ளலாம். நீர்ச்சிக்கனம் பற்றி மீண்டும் விவாதிக்கும் முன்பு பொது வினியோக அரிசியானாலும், அதிக விலை கொடுத்து வெளி அங்காடி அரிசியானாலும், வேறு பயனாவதும் வீணாவதும் தொடர்கதை. பொதுவினியோக அரிசி வெளி அங்காடிக்குக் கடத்தப்படும் கதை ஒருபுறம். 1 ரூபாய் அரிசியைப் பயனீட்டாளர்களே, 5 ரூபாய்க்கு விற்பது ஒருபுறம். தமிழ்நாட்டு கிராமங்களில் 1 ரூபாய் ரேஷன் அரிசி மாவாக அரைக்கப்பட்டுக் கறவைப் பசுக்களுக்கு அடர்தீவனமாக வழங்கப்படுகிறது. ஏனெனில் புஞ்சை தானியங்களைவிட அரிசி மலிவாக உள்ளது. மனித உணவாக புஞ்சை தானியங்கள் பயன்படுவதற்கு அரிசி நுகர்வு குறுக்கே நின்றது சரி. இப்போது கால்நடை உணவாகவும் அரிசி மாறிவிட்டதால், புஞ்சை தானிய சாகுபடி எவ்வாறு ஊக்கம் பெறும் என்று புரியவில்லை.
""ஒருபக்கம் உண்ணச் சோறில்லை'' என்று புலம்பல். எனினும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் இன்று ரேஷன் அரிசி சாப்பிட்டால் வயிறு வலிக்கிறது என்று காரணம் சொல்லி வெளி அங்காடியில் நல்ல விலை கொடுத்து நல்ல அரிசி வாங்கி உண்பது இல்லையா? குப்பையில் நாள்தோறும் கொட்டும் அரிசிச்சோறை விளைவிக்கத் தமிழ்நாட்டுக்கு கங்கையே வந்தாலும் பத்தாது.
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக முனைவர்கள் அரிசியைச் சற்று மறந்துவிட்டு வேறு உணவு தானியங்களின் உற்பத்தியை உயர்த்துவதில் கவனம் செலுத்தக்கூடாதா? 1964 - 68 காலகட்டத்தில் பொன்னையா என்பவர், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது, புஞ்சை தானியப் பயிர் சாகுபடிக்கும், பருப்புவகைப் பயிர் சாகுபடிக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கித் தேர்வு விதைகளை விநியோகம் செய்யும் திட்டம் அவரால் செயலானது. தமிழ்நாட்டில் விளையக்கூடிய சம்பா கோதுமைக்கும் அன்றே சான்று விதை உற்பத்தித் திட்டம் வகுத்தவர். இன்று பருப்பு விலைகள் எல்லாம் கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 என்று உயர்ந்துள்ளன. பருவகாலத்துக்கு முன்பே சரியான நேரத்தில் உணவு தானியம், பருப்பு வகை விதை விநியோகம் செய்யாமல், இம்மாநில அரசின் வேளாண்மைத்துறை முனைவர்கள் பி.ட்டி கத்தரிக்காய் விற்பனைக்கு வந்துவிட்டால் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று எண்ணும் காரணம் என்னவென்று புரியவில்லை. உண்ட விஷம் போதாதா? மரபணு மாற்ற மலட்டு விதைகளைக் கொண்டு வந்து பாரம்பரிய விதைகளையும் வீரிய விதைகளையும் அழித்துவிட நினைக்கும் மடமையை என்னென்பது? காலநிலை மாற்றத்தினால் பெய்யும் மழை ஒரே சீராக இல்லை. ஒரே இடத்தில் மழைகொட்டி, பருவமழை பரவலாகப் பெய்யாமல், இந்திய மாநிலங்களில் நிலத்தடி நீர் எட்டாக்கனியாகி வருவதால், மேல்மட்ட ஊற்றுக்களை மீண்டும் உயிர் பெறச் செய்து, நீர்ச்சிக்கன உணவு தானியப் பயிர்களை ஊக்கப்படுத்த வேண்டிய அவசரத்தை வேளாண்மை அமைச்சரகம் உணர்ந்து உரிய நடவடிக்கை எடுத்தால், நாடு நன்மை பெறும்.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி
நீடிக்குமா? வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரப்பிரதேசத்திலும் ஒரிசாவிலும் வெள்ளத்தை ஏற்படுத்துமா? போகப் போகத் தெரியும். இங்கு பெய்யாமல் அங்கு பெய்தாலும் சரி. ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அரிசி வருவது நின்றுவிடாது. தென்மேற்குப் பருவமழை பொய்த்தது பொய்த்ததுதான்.
அரிசி, கோதுமை இறக்குமதியுடன் பருப்பு இறக்குமதியும் தொடர்வது உண்மைதான். உணவுக்கும் நீருக்கும் பற்றாக்குறை இருப்பது உண்மை. இதற்கு நதிநீர் இணைப்பு சரியான தீர்வு என்று பலர் கருதுகிறார்கள். அப்படியே இணைத்தாலும், ஆந்திர அரசு நமக்குத் தேவையான நீரைத் தருமா? குறுக்கே குறுக்கே கர்நாடகம் அணைக்கட்டுகளைக் கட்டிக் காவிரிப் பிரச்னை நாற்பது ஆண்டுகளாக சந்தி சிரிக்கிறது. கிருஷ்ணர் வேஷம் போட்டு மக்களை மயக்கிய என்.டி.ஆர். சென்னைக்கு கிருஷ்ணா தீர்த்தம் தருவதாக ஒப்பந்தம் செய்தார்.
தமிழ்நாடு அரசு தந்த பணத்தைக் கொண்டு ஆந்திர மாவட்டங்களில் கால்வாய் வெட்டினார்கள். இன்று வெட்டிய கால்வாய்கள் தூர்ந்துவிட்டன. பெருமாள் கோயிலில் வழங்கும் துளசி தீர்த்தம்போல் வந்தது சிறுதுளிகள். இன்று பாலாறில் அணை ஒரு பிரச்னை. எதிர்க்கட்சிகள் சிலநாள் தூக்கிப் பிடித்தன. இலங்கைத் தமிழர் பிரச்னை வந்ததும் காவிரிப் பிரச்னை, பாலாறு பிரச்னைகளையெல்லாம் ஓசை இல்லாமல் அடங்கிவிட்டன.
இந்தியாவில் உள்ள நதிகளை எல்லாம் இணைப்பது இயலாத காரியம் என்று ராகுல் காந்தி கைவிரித்துவிட்டதும் ஒருவிதத்தில் நல்லது. நதி இணைப்பில் எச்சரிக்கை தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆமோதித்து விட்டார். ஒரு காவிரிப் பிரச்னையைத் தீர்த்து வைக்க முடியாத சூழ்நிலையில், இருபது மாநிலங்களிலும் இருபது காவிரிப் பிரச்னைகள் - ஒவ்வொரு நதியும் அடுத்த மாநிலத்துக்கு வரும்போது - யார் குடுமி யாரிடம் இருக்கும், என்று பாரதப் பிரதமர் யோசித்துத்தான் இப்படிச் சொல்லியிருப்பார். அதற்குப் பின் சுற்றுச்சூழல், வன அழிப்பு, புதிய வாழ்விடம் என்ற பிரச்னைகள் ஏழைகளை மிகவும் பாதிக்கலாம். அதிகம் தண்ணீர் என்றால் அதிகம் உணவு. அதிகம் உணவுக்கு நதிநீர் இணைப்பு என்று ஒரு சுலபமான செய்தியைச் சொல்லும் அரசியல்வாதிகளும், பெரும்பாலான பொதுமக்கள் கருத்தும் ஒன்றாயுள்ளன. வேறு மாற்று யோசனைகளை நாம் சிந்திக்க மறுப்பது ஏன்?
முதலில் நீரில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறோமா? விவசாயத் தேவைக்குப் பயன்பட்ட தண்ணீர் முக்கிய அணைகள் அல்லது நீர்நிலைகளிலிருந்து குடிநீருக்காகத் தொலைதூரங்களுக்குக் கொண்டு வரப்படுகிறது. இடையில் எத்தனை உடைப்புகள் என்ற கணக்கு ஒருவரைத் தலை சுற்ற வைக்கும். பல இடங்களில் புதிய குளங்களே தேவையில்லாத பாழ்நிலத்தில் உருவாகியுள்ளது.
தோராயமாக இப்படி உடைப்பு எடுத்து ஓடும் தண்ணீரை ஸ்ப்ரிங்க்ளர் அல்லது "ரெயின்கன்'
மூலம் 2 லட்சம் டன் மக்சாச்சோளம் அல்லது 2 லட்சம் டன் கேழ்வரகு அல்லது 1.5 லட்சம் டன் வெள்ளைச்சோளம் உற்பத்தி செய்யலாம். கோ - 3 தீவனப்புல் சாகுபடி செய்தால் 10,000 பசுமாடுகள் (கலப்பினம்) மூலம் 50,000 டன் பால் உற்பத்தி செய்யலாம். பொது இடங்களில் குழாய் இருக்கும்; டேப் இருக்காது. டேப் இல்லாமல் தினம் வழிந்தோடும் தண்ணீரைக் கொண்டு பார் அமைத்துத் துவரையோ, உளுந்தோ போட்டால் ஒவ்வொரு வழிந்தோடும் குழாய்களைச் சுற்றியுள்ள இடத்திலும் 10 மூட்டை விளைச்சல் எடுக்கலாம்.
மழைநீர் சேமிப்பு என்பது கருத்தரங்கிலும் மேடைப் பேச்சுகளிலும் உள்ள வேகம் செயலில் இல்லை. இந்தியாவின் சராசரி மழை அளவு 115 செ.மீ. தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 90 செ.மீ. உலக சராசரி மழை அளவு 70 செ.மீ. ஆகவே இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டின் மழை அளவு உலக சராசரியைவிட அதிகமே.
மழைப்பொழிவு அதிகமுள்ள பல மாநிலங்களில் நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் - காவிரி டெல்டாப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 1000 அடிக்குக் கீழே தண்ணீர் சென்றுவிட்டது. பல மாநிலங்களில் இதே பிரச்னை.
நீர்ச்சிக்கனப் பயிர் சாகுபடிக்கு திட்டமிடப்படுகிறது. இதில் மிகவும் வியப்பான விஷயம், ராலிகன் சித்தி, ஹிவாரே பாசார் போன்ற வறட்சியான மகாராஷ்டிர மாநிலப் பகுதியில் மழை அளவு 46 செ.மீ. தான்.
உலக சராசரி - இந்திய சராசரியைவிடக் குறைவான தக்காண பீடபூமிப் பிரதேசம் இப்பகுதிகளில் இப்போதெல்லாம் 30, 40 அடியில் ஊற்று இருந்துகொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் அண்ணா ஹசாரே வழிகாட்டி, மக்கள் சேர்ந்து சிறப்பாக மழைநீரைச் சேமிப்பதுவே. இதுபோல் ஒவ்வொரு கிராமங்களிலும் ராலிகன் சித்தியின் உதாரணம் பின்பற்றப்படுமானால் நதிநீர் இணைப்பு என்ற பேச்சுக்கே அவசியமில்லை. கிடைக்கும் மழைநீரில் ஐந்தில் ஒரு பங்கைத்தான் பயன்படுத்துகிறோம். 50 சதவீதம் பயன்படுத்தத் திட்டமிட்டாலே போதும். பத்தில் 1 பங்கு இயல்பாகவே பூமிக்கடியில் செல்கிறது. பத்தில் 1 பங்கு ஏரி, குளங்களுக்கும் செல்கிறது. மீதி 8 பங்கு - பெய்யும் மழையில் 80 சதவீதம் பாழாகிறது.
ராலிகான் சித்தியிலும் ஹிவாரே பாசாரிலும் நிகழ்ந்தது என்ன? வனத்துறையின் துணையுடன் கிராமத்தின் மேற்கட்டில் இருந்த மலைகளில் ஏராளமாக மரங்களை நட்டார்கள். வனம் உருவானது. ஆங்காங்கே நீண்ட வரப்புகளை வெட்டினார்கள். பல்வேறு நீர்த்தடுப்பு - கசிவுநீர்க் குட்டைகள் - குறுக்கணைகள் கட்டினார்கள். தீவனப்புல், வெங்காயம் சாகுபடி செய்தனர். கிராமத்தைவிட்டு மும்பைக்குப் பிழைக்கச் சென்ற விவசாயிகள் கிராமத்துக்கு வந்து லட்சக்கணக்கில் சம்பாதித்தனர். சிறப்பாகக் கால்நடை - கறவைப்பசு வளர்த்தார்கள். "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்ற கண்ணதாசன் பாட்டுக்கு இலக்கணம் வகுத்தனர், வறட்சிப்பகுதி விவசாயிகள்.
உணவுக்குத் தேவை உள்ளது, சரி. ஆனால் ரேஷனில் வழங்கப்படும் அரிசி தேவையில்லாமல் வீணாவது ஒருபுறம். அரிசிச் சோறு உண்டு பழக்கமில்லாத மலைவாழ் மக்கள் ஒரு ரூபாய் அரிசியால் கேப்பை, வரகு, பொட்டுக்கம்பு போன்றவற்றைச் சொந்த உணவுத் தேவைக்கு என்று சாகுபடி செய்த வழக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். அரிசி உண்ணும் வழக்கம் இல்லாதவர்களிடம் அரிசி நுகர்வைத் திணிப்பது சரியா? கொஞ்சநஞ்சம் எஞ்சியுள்ள புஞ்சை தானிய சாகுபடியையும் அழித்துவிட்டு நீர்ச்செலவுள்ள அரிசி போன்ற உணவு சாகுபடியை ஊக்குவிப்பதும் சரிதானா?
1 டன் அரிசி உற்பத்தியாவதற்குச் செலவாகும் நீரிலிருந்து 10 டன் புஞ்சை தானியங்களையோ 10 டன் பருப்பு வகை தானியங்களையோ உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய ஸ்ப்ரிங்க்ளர் அல்லது ரெயின்கன் அமைத்துக் கொள்ளலாம். நீர்ச்சிக்கனம் பற்றி மீண்டும் விவாதிக்கும் முன்பு பொது வினியோக அரிசியானாலும், அதிக விலை கொடுத்து வெளி அங்காடி அரிசியானாலும், வேறு பயனாவதும் வீணாவதும் தொடர்கதை. பொதுவினியோக அரிசி வெளி அங்காடிக்குக் கடத்தப்படும் கதை ஒருபுறம். 1 ரூபாய் அரிசியைப் பயனீட்டாளர்களே, 5 ரூபாய்க்கு விற்பது ஒருபுறம். தமிழ்நாட்டு கிராமங்களில் 1 ரூபாய் ரேஷன் அரிசி மாவாக அரைக்கப்பட்டுக் கறவைப் பசுக்களுக்கு அடர்தீவனமாக வழங்கப்படுகிறது. ஏனெனில் புஞ்சை தானியங்களைவிட அரிசி மலிவாக உள்ளது. மனித உணவாக புஞ்சை தானியங்கள் பயன்படுவதற்கு அரிசி நுகர்வு குறுக்கே நின்றது சரி. இப்போது கால்நடை உணவாகவும் அரிசி மாறிவிட்டதால், புஞ்சை தானிய சாகுபடி எவ்வாறு ஊக்கம் பெறும் என்று புரியவில்லை.
""ஒருபக்கம் உண்ணச் சோறில்லை'' என்று புலம்பல். எனினும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் இன்று ரேஷன் அரிசி சாப்பிட்டால் வயிறு வலிக்கிறது என்று காரணம் சொல்லி வெளி அங்காடியில் நல்ல விலை கொடுத்து நல்ல அரிசி வாங்கி உண்பது இல்லையா? குப்பையில் நாள்தோறும் கொட்டும் அரிசிச்சோறை விளைவிக்கத் தமிழ்நாட்டுக்கு கங்கையே வந்தாலும் பத்தாது.
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக முனைவர்கள் அரிசியைச் சற்று மறந்துவிட்டு வேறு உணவு தானியங்களின் உற்பத்தியை உயர்த்துவதில் கவனம் செலுத்தக்கூடாதா? 1964 - 68 காலகட்டத்தில் பொன்னையா என்பவர், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது, புஞ்சை தானியப் பயிர் சாகுபடிக்கும், பருப்புவகைப் பயிர் சாகுபடிக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கித் தேர்வு விதைகளை விநியோகம் செய்யும் திட்டம் அவரால் செயலானது. தமிழ்நாட்டில் விளையக்கூடிய சம்பா கோதுமைக்கும் அன்றே சான்று விதை உற்பத்தித் திட்டம் வகுத்தவர். இன்று பருப்பு விலைகள் எல்லாம் கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 என்று உயர்ந்துள்ளன. பருவகாலத்துக்கு முன்பே சரியான நேரத்தில் உணவு தானியம், பருப்பு வகை விதை விநியோகம் செய்யாமல், இம்மாநில அரசின் வேளாண்மைத்துறை முனைவர்கள் பி.ட்டி கத்தரிக்காய் விற்பனைக்கு வந்துவிட்டால் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று எண்ணும் காரணம் என்னவென்று புரியவில்லை. உண்ட விஷம் போதாதா? மரபணு மாற்ற மலட்டு விதைகளைக் கொண்டு வந்து பாரம்பரிய விதைகளையும் வீரிய விதைகளையும் அழித்துவிட நினைக்கும் மடமையை என்னென்பது? காலநிலை மாற்றத்தினால் பெய்யும் மழை ஒரே சீராக இல்லை. ஒரே இடத்தில் மழைகொட்டி, பருவமழை பரவலாகப் பெய்யாமல், இந்திய மாநிலங்களில் நிலத்தடி நீர் எட்டாக்கனியாகி வருவதால், மேல்மட்ட ஊற்றுக்களை மீண்டும் உயிர் பெறச் செய்து, நீர்ச்சிக்கன உணவு தானியப் பயிர்களை ஊக்கப்படுத்த வேண்டிய அவசரத்தை வேளாண்மை அமைச்சரகம் உணர்ந்து உரிய நடவடிக்கை எடுத்தால், நாடு நன்மை பெறும்.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி
Labels:
கட்டுரை,
சுற்றுச்சூழல்,
நீர்,
விவசாயம்
அபாயத்தின் அறிகுறி!
வளிமண்டலம் மாசடைந்து புவிவெப்பம் அதிகரிப்பது உலகில் வாழும் எல்லா உயிரினங்களையும் பாதிக்கிறது என்பது தெரிந்த விஷயம். நிலத்தில் வாழும் உயிரினங்களைவிட மிகஅதிகமாகப் பாதிக்கப்பட இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான் என்பது பெரிய அளவில் ஏன் நம்மைக் கவலைப்பட வைக்கவில்லை என்பது தெரியவில்லை.
அண்மையில் மீன் மற்றும் மீனளம் (ஃபிஷ் அண்ட் ஃபிஷரீஸ்) என்கிற மேலைநாட்டுப் பத்திரிகை ஒன்றில் படித்த விஷயம், நம்மைத் திடுக்கிட வைக்கிறது. புவிவெப்பமாதல் காரணமாக பல்லுயிர்பெருக்கத்துக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் மீன் இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படவுள்ளன என்பது பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறது அந்தப் பத்திரிகை.
கடல் நீரின் தட்பவெப்பத்தைப் பொறுத்துத்தான் பலவகை மீன் இனங்கள் அந்தந்தப் பகுதியில் காணப்படுகின்றன. தட்பவெப்பம் மாறும்போது, இந்த மீன் இனங்கள் அங்கே வாழ முடியாமல், சாதகமான தட்பவெப்பம் நிலவும் பகுதியை நோக்கி நகர வேண்டும்; இல்லாவிட்டால் அழிந்துவிடும் அபாயம்தான் ஏற்படும்.
குறிப்பாக, பூமத்திய ரேகையையொட்டிய, வெப்பம் அதிகமுள்ள கடல் பகுதியில் காணப்படும் மீன் இனங்கள், புவி வெப்பமாவதைத் தொடர்ந்து குளிர்ப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்தாக வேண்டும். அப்போதுதான் தங்களது உடல்வெப்பத்தை தகவமைத்து வாழ முடியும். ஆனால், துருவப் பகுதிகளில் உள்ள குளிரைத் தாங்கி இந்த மீன் இனங்களால் வாழ முடியுமா என்பதும் சந்தேகம்தான்.
துருவப் பகுதிகளில் மீன் இனங்களின் எண்ணிக்கை குறைவு. அப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள், புவி வெப்பமாதலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் மீன்களின் எண்ணிக்கையே குறைவுதான் என்பதால் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் என்பதும் ஆறுதல்.
வெப்ப மண்டலங்களிலும், துருவப் பகுதிகளுக்குக் கீழேயுள்ள பிரதேசங்களிலும் ஏற்பட இருக்கும் புவிவெப்ப மாற்றங்கள், ஏறத்தாழ 60 விழுக்காடு மீன் இனங்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் என்பதுதான் அச்சப்பட வைக்கும் விஷயம். இந்த மாற்றம், கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். கடலின் ஆழத்தில் அல்லது மேற்புறத்தில் வாழும் மீன்கள் எவையாக இருந்தாலும் பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உடனடி பாதிப்பு கடலின் மேற்பகுதியில் வாழும் மீன் இனங்களுக்குத்தான். குறைந்தது 600 கி.மீ. தூரத்துக்காவது இடம் பெயர்ந்தால் மட்டுமே வெப்பப் பகுதியில் வாழும் 90% மீன்இனங்கள் உயிர்வாழ முடியும் என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வுக்கட்டுரை.
இந்தப் பிரச்னை சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்களையும் அச்சுறுத்தக் காரணம், மீன் இனங்களுக்கு ஏற்படும் பாதிப்பால் உலகில் உணவுத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதுதான்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ 4 கோடி மீனவர்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். மீன்கள் கிடைக்காதென்றால் பல மீனவர் குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நேரும்.
வளர்ந்த நாடுகளில் சுமார் 28 கோடிப் பேர் தங்களது தினசரி உணவில் மீனைச் சேர்த்துக்கொள்கிறார்கள். மீனுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமானால், அதன் நேரடி விளைவாக மாமிசத் தேவை அதிகரிக்கும். உலகம் புதிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு பயமுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், புவிவெப்பமாதலால் மீன் வளமும் குறையுமேயானால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். மேலும், மீன் பிடிப்பு குறையக் குறைய இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பாதிப்பும், மீனவர்களுக்குத் தொழில்நசிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
இப்பொழுதே கடலில் முன்பு போல மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறை நிறையவே இருக்கிறது. இந்நிலையில், புவி வெப்பமடைதலும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பும் கடல்மீன்களுக்கும் அதன் இனப்பெருக்கத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறுமெனில், விளைவுகள் படுமோசமாக மாறிவிடும்.
இதன் உடனடித் தாக்கம் உணவுப் பஞ்சம். தொடர் விளைவு, மீன்களின் இனப்பெருக்கத்துக்கு நிரந்தரப் பாதிப்பு. உலக நாடுகள் ஒன்றுகூடி உடனடியாகத் தீவிர ஆலோசனைகளை நடத்தியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நன்றி : தினமணி
அண்மையில் மீன் மற்றும் மீனளம் (ஃபிஷ் அண்ட் ஃபிஷரீஸ்) என்கிற மேலைநாட்டுப் பத்திரிகை ஒன்றில் படித்த விஷயம், நம்மைத் திடுக்கிட வைக்கிறது. புவிவெப்பமாதல் காரணமாக பல்லுயிர்பெருக்கத்துக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் மீன் இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படவுள்ளன என்பது பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறது அந்தப் பத்திரிகை.
கடல் நீரின் தட்பவெப்பத்தைப் பொறுத்துத்தான் பலவகை மீன் இனங்கள் அந்தந்தப் பகுதியில் காணப்படுகின்றன. தட்பவெப்பம் மாறும்போது, இந்த மீன் இனங்கள் அங்கே வாழ முடியாமல், சாதகமான தட்பவெப்பம் நிலவும் பகுதியை நோக்கி நகர வேண்டும்; இல்லாவிட்டால் அழிந்துவிடும் அபாயம்தான் ஏற்படும்.
குறிப்பாக, பூமத்திய ரேகையையொட்டிய, வெப்பம் அதிகமுள்ள கடல் பகுதியில் காணப்படும் மீன் இனங்கள், புவி வெப்பமாவதைத் தொடர்ந்து குளிர்ப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்தாக வேண்டும். அப்போதுதான் தங்களது உடல்வெப்பத்தை தகவமைத்து வாழ முடியும். ஆனால், துருவப் பகுதிகளில் உள்ள குளிரைத் தாங்கி இந்த மீன் இனங்களால் வாழ முடியுமா என்பதும் சந்தேகம்தான்.
துருவப் பகுதிகளில் மீன் இனங்களின் எண்ணிக்கை குறைவு. அப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள், புவி வெப்பமாதலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் மீன்களின் எண்ணிக்கையே குறைவுதான் என்பதால் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் என்பதும் ஆறுதல்.
வெப்ப மண்டலங்களிலும், துருவப் பகுதிகளுக்குக் கீழேயுள்ள பிரதேசங்களிலும் ஏற்பட இருக்கும் புவிவெப்ப மாற்றங்கள், ஏறத்தாழ 60 விழுக்காடு மீன் இனங்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் என்பதுதான் அச்சப்பட வைக்கும் விஷயம். இந்த மாற்றம், கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். கடலின் ஆழத்தில் அல்லது மேற்புறத்தில் வாழும் மீன்கள் எவையாக இருந்தாலும் பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உடனடி பாதிப்பு கடலின் மேற்பகுதியில் வாழும் மீன் இனங்களுக்குத்தான். குறைந்தது 600 கி.மீ. தூரத்துக்காவது இடம் பெயர்ந்தால் மட்டுமே வெப்பப் பகுதியில் வாழும் 90% மீன்இனங்கள் உயிர்வாழ முடியும் என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வுக்கட்டுரை.
இந்தப் பிரச்னை சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்களையும் அச்சுறுத்தக் காரணம், மீன் இனங்களுக்கு ஏற்படும் பாதிப்பால் உலகில் உணவுத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதுதான்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ 4 கோடி மீனவர்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். மீன்கள் கிடைக்காதென்றால் பல மீனவர் குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நேரும்.
வளர்ந்த நாடுகளில் சுமார் 28 கோடிப் பேர் தங்களது தினசரி உணவில் மீனைச் சேர்த்துக்கொள்கிறார்கள். மீனுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமானால், அதன் நேரடி விளைவாக மாமிசத் தேவை அதிகரிக்கும். உலகம் புதிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு பயமுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், புவிவெப்பமாதலால் மீன் வளமும் குறையுமேயானால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். மேலும், மீன் பிடிப்பு குறையக் குறைய இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பாதிப்பும், மீனவர்களுக்குத் தொழில்நசிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
இப்பொழுதே கடலில் முன்பு போல மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறை நிறையவே இருக்கிறது. இந்நிலையில், புவி வெப்பமடைதலும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பும் கடல்மீன்களுக்கும் அதன் இனப்பெருக்கத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறுமெனில், விளைவுகள் படுமோசமாக மாறிவிடும்.
இதன் உடனடித் தாக்கம் உணவுப் பஞ்சம். தொடர் விளைவு, மீன்களின் இனப்பெருக்கத்துக்கு நிரந்தரப் பாதிப்பு. உலக நாடுகள் ஒன்றுகூடி உடனடியாகத் தீவிர ஆலோசனைகளை நடத்தியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நன்றி : தினமணி
Labels:
சுற்றுச்சூழல்,
தலையங்கம்
Subscribe to:
Posts (Atom)
