Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Wednesday, August 18, 2010

வேண்டாம் வேதாந்தம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆறுதல் தரும் இரண்டு விவகாரங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன. முதலாவதாக, நாட்டில் முறைகேடான கனிமச் சுரங்கங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுமத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. இரண்டாவது, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் பாக்சைட் கனிமச் சுரங்கத் திட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த இரண்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் விவகாரங்கள். மத்திய அரசு இப்போதுதான் ஒன்றில் நடவடிக்கை எடுக்கிறது. இன்னொன்றில் நடவடிக்கை எடுக்க ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பும் குரல்கள் யார் காதிலோ விழுந்து ஏதோ விஷயங்கள் நடக்கவே செய்கின்றன என்பது உறுதிப்படுவதன் மூலம் இந்த விழிப்புணர்வுக் குரல்களுக்கு வலுவும் தெம்பும் ஏற்படும்.

மத்திய அரசு அமைத்துள்ள குழு, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி, இரும்பு, மக்னீசியம் தாதுக்கள் முறைகேடாகச் சுரண்டப்படுகின்றன என்பது குறித்து ஆந்திர மாநிலம், ஜார்க்கண்ட், கர்நாடகம், சத்தீஸ்கர் ஒரிசா ஆகிய இடங்களில் ஆய்வுகள் செய்து தனது அறிக்கையை அளிக்கும்.

கனிமங்களை முறைகேடாகத் தோண்டியெடுத்தல் சாத்தியமா என்ற ஐயம் எழக்கூடும். ஆம், அவை நடைபெறுகிறது என்பதும், சில இடங்களில் மாநில அரசுகளின் மறைமுக ஒத்துழைப்புடனும், சில இடங்களில் மிக ரகசியமாகவும் நடந்துகொண்டிருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், ஒரு சுற்றுச்சூழல் இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முறைகேடாகத் தோண்டியெடுக்கும் நிலக்கரியை இங்குள்ள ஆதிவாசிகள் மலைகளின் குறுக்கு வழியில் சுமந்து செல்கிறார்கள். இவர்களை வழிமறிக்கும் வனத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கும் மாமூல்போக, இவர்களது கூலியில் ஒரு நாளைக்கு ரூ.50 கிடைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளுக்கு இது கடத்தல் என்றோ முறைகேடு என்றோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது ஒருநாள் கூலி மட்டும்தான். அவர்கள் வாழ்க்கை அப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த முறைகேடான கனிமச் சுரங்கங்களும் தாதுப்பொருள் கடத்தலும் ஆதிவாசிகளின் உழைப்பைச் சுரண்டுவதும் ஒருபுறமிருக்கட்டும், அரசு அனுமதியுடன் நடைபெறும் சுரங்கங்களில்கூட, அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவு.

தற்போது கர்நாடக மாநிலத்தில் இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான பனிப்போர் என்கிற உண்மை ஒருபுறம் இருக்க, இதில் கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

உலகிலேயே மிகச் சிறந்த, தரமான இரும்புத் தாது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில்தான் கிடைக்கிறது. இதற்காக அரசு நிர்ணயித்துள்ள ராயல்டிதொகை ஒரு டன் இரும்புத் தாதுக்கு 27. ஆனால் உலகச் சந்தையில் பெல்லாரி இரும்புத் தாதுவின் விலை டன் 6,000 முதல் 7,000 வரை. சுரங்கம் தோண்டும் செலவு, போக்குவரத்துச் செலவு, வேலையாள் கூலி, கட்சிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அளிக்கும் லஞ்சம் எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும்கூட ஒரு டன் இரும்புத் தாதுக்கு குறைந்தது 5,000 கிடைக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. அப்படியானால், ஏன் அரசு இவ்வளவு மலிவாக ராயல்டி தொகையை நிர்ணயிக்க வேண்டும்?

இது கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல, ஆந்திரம், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும்கூட, கனிமங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் உரிமத் தொகைக்கும் (ராயல்டி) இந்த தனியார் நிறுவனங்கள் பெறும் லாபத்துக்கும் குறைந்தபட்சம் 1000 விழுக்காடு வித்தியாசம் இருக்கிறது. முதலில் இந்த வேறுபாட்டைக் களைந்தாலே அரசுக்கு மிக அதிகமான வருவாய் கிடைக்கும். முறைகேடாக கனிமங்களைச் சுரண்டுபவர்களைவிட, முறையாகச் சுரங்கம் அமைத்து சுரண்டுபவர்கள்தான் மிகமிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.

ஒரிசாவில் வேதாந்தா என்கிற நிறுவனம் நியம்கிரி என்ற மலையில் தொடங்கவிருந்த பாக்ûஸட் கனிமம் தோண்டும் திட்டத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று இது தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருப்பதுடன், வேதாந்தா நிறுவனம் எவ்வாறு சுற்றுச்சூழல் விதிமுறைகள் பலவற்றை மீறியுள்ளது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

"....இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதிக்கச் செய்வதுடன், இரு பழங்குடி மக்களின் நலனுக்கு முரணாக அமையும் இந்தத் திட்டத்தை அனுமதித்தால், ஆதிவாசிகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் மீதும் அவர்களது சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்' என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இன்று இந்த மாநிலங்களில் மாவோயிஸ்ட் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே, ஆதிவாசிகள் நம் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான்.

கனிம ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸஸ், அண்மையில் வேதாந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்போவதாகக் கூறி, 2400 ஹெக்டேர் நிலத்தை, பூரி-கொனார்க் நெடுஞ்சாலையில் வாங்கியது பெரும் பிரச்னையானதால், அந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது, இதே நிறுவனத்தின் பாக்ûஸட் திட்டத்துக்கும் எதிராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பழனி கோயிலில் மூலவர் முருகனின் நவபாஷாண சிலையின் முன்புறம் அப்படியே இருக்க பின்புறம் நிறையச் சுரண்டப்பட்டு, சிலையே பாதிப்படைந்ததாகப் புகார்கள் உண்டு. சிலையின் பின்புறத்தைப் பார்த்தவர் இல்லை. மத்திய அரசு கடுமையாகவும், நியாயமாகவும், முதுகெலும்புடனும் செயல்படாவிட்டால் இந்தியாவையும் கூட பழனியாண்டவர் நவபாஷாண சிலைகதை போல ஆக்கிவிடுவார்கள்.

எல்லாம் விதிப்பயன் என்பதுதானே வேதாந்தத்தின் அடிப்படைத் தத்துவம். வேதாந்தத்தை நம்பும் இந்தியாவுக்கு வேதாந்தம் புகட்ட வேதாந்தா போன்ற நிறுவனங்கள் கச்சை கட்டிக்கொண்டு இறங்கி இருக்கின்றன. எல்லாம் விதிப்பயன், வேறென்ன?
நன்றி : தினமணி

Thursday, January 7, 2010

வருமுன் காத்தலே நலம்!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. வழக்கத்தைவிட பருவமழை அதிக அளவில் பெய்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மழை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

÷வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

÷தேங்கியுள்ள மழைநீரில் உருவாகும் கொசுக்களால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகச் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கிராமங்கள், நகர்ப்புறங்களில் மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு உருவாகி கொசுக்களால் இந்நோய் எளிதில் பரவி வருகிறது.

÷வைரஸ் காய்ச்சல் தாக்கப்பட்டவர்கள் பலர் கால்வலி, மூட்டுவலி காரணமாக மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலை உள்ளது. இது சிக்குன் குனியா காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

÷திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழக்க நேரிட்டது. முக்கூடல் அருகே வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவருக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

÷இதேபோல, மேலப்பாளையத்தில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயதுச்சிறுவன் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலாக மாறி வருவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக அஞ்சப்படுகிறது.

÷தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், 900 பேருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாகவும், இன்னும் 2 மாதங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே, போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

÷கடந்த சில தினங்களாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரில் குளோரின் கலந்து வழங்கப்படுகிறது.
இது தவிர வேறு எந்தத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

÷மேலும், சுகாதாரச் சீர்கேடுகள் மூலம் உருவாகி வரும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

÷பல ஊர்களில் பள்ளிகள், மாணவர் விடுதிகள், சத்துணவுக் கூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

÷அண்மையில் தேக்கடியில் சுற்றுலா சென்றோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து 60}க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வேதாரண்யத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் டிரைவராகப் பணி செய்தவர் ஓட்டிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி ஓர் ஆசிரியை மற்றும் 9 மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டது.

÷இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நீர்நிலைகளில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் உயிர் பாதுகாப்புக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் வாகன ஓட்டுநர்கள் 10 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

÷கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 98 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா என்பதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏதாவது ஒரு விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகுதான் அரசின் நடவடிக்கையும் கடுமையாக்கப்படுகிறது. ஏன் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது?

÷வருமுன் காத்தலே நலம் என்பதற்கேற்ப, மழைக்கால நோயை எதிர்பார்த்து ஒவ்வோர் ஊரிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ÷மக்களுக்காக வருமுன் காப்போம் மருத்துவ முகாம், உயிர் காக்கும் உயர் சிகிச்சை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு, இதுபோன்ற பருவகால நோய் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் :சா. ஷேக் அப்துல்காதர்
நன்றி : தினமணி

Tuesday, January 5, 2010

ஒரு வேலைநிறுத்தம், இரு பரிமாணங்கள்

பின்னலாடைத் தொழில் உலகளாவிய முறையில் பிரபலமடைந்து விளங்கும் பெருமைக்குரிய நகரம் திருப்பூர்.

இங்கு தயாராகும் பல்வேறு ரகமான பின்னலாடைகளுக்குக் கவர்ச்சியான வண்ணத்தை மெருகேற்றித் தருகிற சாயங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாயப்பட்டறை ஆலைகள் ஈடுபட்டுள்ளன. வண்ணமேற்றப்பட்ட ஆயத்த ஆடைகளை விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்புவதற்கு முன்னதாக அவற்றைச் சலவை செய்யும் சலவை ஆலைகளும் இத்தொழிலில் பிரிக்க முடியாத அங்கம்.

இந்தச் சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து வேலைநிறுத்தம் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன.

வழக்கமான வேலைநிறுத்தங்கள் அவை நடைபெறும் தொழில் அல்லது பணிக்கூட முதலாளிகள் மற்றும் அவற்றின் பணியாளர்களை மட்டுமே பாதிக்கிற ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டவை. ஆனால் திருப்பூரில் நடைபெற்று வருகிற வேலைநிறுத்தத்துக்கு இரட்டைப் பரிமாணங்கள் உண்டு. ஒன்று, அந்தத் தொழில் சம்பந்தப்பட்டது; இன்னொன்று ஒட்டுமொத்த சமுதாயத்தை உள்ளடக்கியது.

திருப்பூர் மட்டுமன்றி ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இத்தகைய சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் அமைந்துள்ளன.

1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திருப்பூரில் மிகப்பெரும் அளவில் அமைக்கப்பட்ட சாயஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து வரத் தொடங்கியது. இதையடுத்து நொய்யல் ஆற்றுக் கரையோர விவசாயம் பாதிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் வந்த அபாயகரமான தொழிற்சாலைக் கழிவுநீரால் ஆற்று நீர் முற்றிலுமாக மாசடைந்தது.

ஒரத்துப்பாளையம் அணை சுற்று வட்டாரத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாயின. இத்துடன் அணையில் தேங்கியிருக்கும் மாசுபட்ட நீரினாலும், கால்வாய்களில் செல்லும் இந்தக் கழிவுநீரினாலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் கிடைத்துவந்த குடிநீரும் மாசுபட்டுவிட்டது. அன்றாடம் குடிநீருக்கு இப்பகுதி மக்கள் நெடுந்தொலைவு சென்று வர வேண்டியிருக்கிறது.

இதை ஒத்த பாதிப்புகள் ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் நேரிட்டுள்ளன. சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பெரிதளவு மாசுபடுத்துகிற இதர தொழில்களாக தோல் பதனிடும் தொழிலும், ரசாயனத் தொழிற்சாலைகளும் அறியப்படுகின்றன. வேலூர் - ராணிப்பேட்டை பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் காரணமாக நேரிட்டுள்ள மாசுபடுதலும் அளவில்லாத எல்லையை எட்டியுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள் அமைவதும், அவற்றின் மூலம் உற்பத்தி பெருகுவதும் எந்த ஒரு நாட்டுக்கும் இன்றியமையாத தேவைதான். எனினும், இந்த வளர்ச்சியின் பரிமாணங்கள் சுற்றுச்சூழலை மீட்க முடியாத பெருஞ்சேதத்துக்கு இலக்காக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மத்திய அரசால் நாடு முழுவதற்கும் பொருந்தும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. மாநிலங்களிலும் மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் ஏற்கெனவே அமலில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டோ, தளர்த்தப்பட்டோ விட்டபோதிலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய இசைவைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்வது சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான்.

ஆனால் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சாயக்கழிவு நீர் ஆற்றில் விடப்பட்டு வந்ததன் காரணமாக நேரிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தமிழக அரசோ, மாசுக்கட்டுப்பாடு வாரியமோ உரியவகையில் களையத் தவறிவிட்டன. இதே நிலைமைதான வேலூர் மாவட்டத்தின் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் விஷயத்திலும் நிலவியது. இந்த இரண்டு (திருப்பூர், வேலூர்) மாவட்டங்களின் பாதிப்புக்கு இலக்காகிய மக்கள் நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

திருப்பூர் சாயப்பட்டறை, சலவை ஆலைகளின் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு, காவிரி ஆற்றோடு கலந்து அதன் பாசனப்படுகை முழுவதிலும் பாதிப்பு உணரப்பட்டது. கரூர் தாலுகா நொய்யல் கால்வாய் விவசாயிகள் சங்கம் இப்பிரச்னையை 1996-ம் ஆண்டு வாக்கில் உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. சென்னை உயர் நீதிமன்றத்திலும், தில்லி உச்ச நீதிமன்றத்திலும் இப்பிரச்னை தொடர்பான வழக்கும், மேல்முறையீடுகளும் கடந்த 13 ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு தீர்ப்புகளும், மேலாணைகளும் பிறப்பிக்கப்பட்டன. வேலூர் குடிமக்கள் நலச் சங்கம் தொடுத்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ம் ஆண்டிலேயே வழங்கியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது குறித்த முன்னோடித் தீர்ப்பாகவும் நிலைபெற்று விட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இடம்பெற்றுள்ள பதிவுகளின் சுருக்கம் பின்வருமாறு:

""தொழில் நடவடிக்கை மூலம் அபாயகரமான கழிவுகளை வெளியேற்றினால் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும், பாதிக்கப்படும் கிராமத்தினர் உள்ளிட்ட இதர மக்களுக்கும் தொழில்துறையினர் இழப்பீடு வழங்கப் பொறுப்பாளிகள் ஆவர். தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும் இது பொருந்தும். அத்துடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதாரத்தில் இருந்து மீட்டமைக்க வேண்டிய நடவடிக்கைக்கும் அவர்கள் பொறுப்பாளிகள் ஆவர்''.

""அரசியல் சாசனப் பிரிவுகள் 47, 48-ஏ, 51-ஏ(ஜி) ஆகியவற்றின்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். அத்துடன் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி மாசில்லாத சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது தனிமனிதர்களின் உரிமை என்று அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாசுபடுத்தியவர்களே தண்டம் செலுத்துவது என்ற கொள்கைகள் சுற்றுப்புறச் சூழல் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.''

இந்தத் தீர்ப்புகளின் பின்புலத்தில் திருப்பூர் சாயப்பட்டறை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட கண்டிப்பான உத்தரவுகளைக் கடந்த 2009 அக்டோபர் 6அன்று பிறப்பித்தது:

""சாயஆலைகள் நீதிமன்றம் விதித்திருக்கும் அபராதம் உள்பட அனைத்து விதிமுறைகளையும் இன்றிலிருந்து (6.10.09) அடுத்த மூன்று மாத காலத்தில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். நொய்யல் ஆறு,அணை ஆகியவற்றில் மாசு கலக்காமல் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கொடுத்திருக்கும் காலக்கெடுவுக்குள் சுத்தப்படுத்தும் பணிகளையும் முடிக்க வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையங்களைச் செயல்படுத்தவும், அணையைச் சுத்தப்படுத்துவது, ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை முழுமையாக வழங்கவும், அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றவும் இன்றிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு வழங்கப்படுகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் வேறு மாசு ஏற்படாமல் விதிமுறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.''

உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்தக் காலக்கெடு ஜனவரி 6 அன்று முடிவடைகிறது. இதற்குள்ளாக,சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய தொகைகள் நீங்கலாக மீதமுள்ள 62 கோடி ரூபாய்களைச் செலுத்துவது மட்டுமன்றி, ஏற்கெனவே நிறுவப்பட்டு வரும் 17 பொதுசுத்திகரிப்பு நிலையங்களில், ஆர்.ஓ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்து கொண்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது நிறுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இவற்றைச் செயல்படுத்தத் தவறினால், இந்த ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்படும். இந்தக் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்த இயலாமையைத் தெரிவித்துத்தான், திருப்பூரில் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்தச் சாயப்பட்டறை, சலவை ஆலைகளில் பணிபுரியும் 40 ஆயிரம் தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும் உடனடி பாதிப்புக்கு உள்ளாவது திண்ணம். இந்த ஆலைகளை நம்பியுள்ள பனியன் தொழில் மற்றும் அதன் சார்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும்.

திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு தாலுகாக்களின் 68 கிராமங்களில் 28,499 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டு, 28,596 விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய கையறு நிலையில் உள்ளனர்.

இப்பிரச்னையின் இரண்டு பரிமாணங்களும் கனமானவை; அலட்சியப்படுத்த முடியாதவை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கறாராக அமல்படுத்துவது இதில் எட்டப்படக் கூடிய எந்தத் தீர்வுக்கும் அடிநாதமாக - முன்நிபந்தனையாக இருத்தல் வேண்டும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வாக சில கோரிக்கைகளையும் ஆலை உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர். நிறுவப்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான கட்டமைப்புச் செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குவது; வங்கிக் கடன் வட்டியைத் தள்ளுபடி செய்வது; கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்குவது; தவணை செலுத்தி முடிக்க வேண்டிய ஆண்டுகளை நீட்டிப்பது போன்ற இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவது அவசியமே. மாநில அரசு இந்தத் தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நோக்கோடு இவற்றுக்கு உரிய தீர்வு காணவும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படியான நிவாரணத் தொகைகள் வழங்கப்படவும் முற்பட வேண்டும்.

அதேநேரத்தில், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடாமல் பார்த்துக் கொள்கிற சமூகப் பொறுப்புணர்வோடு ஆலை உரிமையாளர்களும் ஒரு நேர்மையான அணுகுமுறையைக் கைக்கொள்வது சமரசம் செய்து கொள்ளக்கூடாத கட்டாயம்.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி

Saturday, January 2, 2010

உலகம் அழிந்துவிடுமா?

விரைவில் உலகம் அழிந்துவிடுமா? அண்மைக்காலமாக மனித குலத்தின் ஆழ்மனத்தில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கேள்வி இது.

திருச்சியில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடம் ஒரு மாணவி இதைக் கேட்டார். ஒரு கணம் மெüனித்த அந்த விஞ்ஞானி, அப்புறம் இப்படி பதில் தந்தார்: ""இல்லை. பூமியில் 1000 கோடி ஆண்டுகள் சூரிய வெளிச்சம் இருக்கும் என்று விஞ்ஞானி சந்திரசேகர் தன் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்.

தற்போது 500 கோடி ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் உள்ளன. ஆகையால், கவலைப்படத் தேவையில்லை.''

அந்த மாணவி என்றில்லை; இயற்கையின் மீதும், சக மனிதர்கள் மீதும் எந்த அக்கறையும் இல்லாதவர்களையும்கூட இந்தக் கேள்வி பதற்றத்துக்குள்ளாக்குகிறது. மாயர்களின் நாகரிகத்தில் தொடங்கி புவி வெப்பமயமாதல் கருதுகோள் வரை சகலமும் இந்தக் கேள்வியாளர்களின் மனத்தை கேள்வியை நோக்கித் தள்ளுகின்றன. பனிமலைகள் உருகுகின்றன; மலைகள் சரிகின்றன; கடல்மட்டம் உயர்கிறது; தீவுகள் மூழ்குகின்றன. உலகம் அழிந்துவிடுமா?

எப்படி இந்த உலகைக் காப்பது? தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்களை அணைத்தா? பாலிதீன் பைகளைத் தவிர்க்க கடைக்கு துணிப் பைகளை எடுத்துச் சென்றா? இனி,காருக்குப் பதில் பஸ்ஸிலேயே பயணம் மேற்கொண்டா?

உலகின் அத்தனைதொழிற்சாலைகளையும் செம்மையான தொழில்நுட்பத்தின் கீழ் மாற்றியா? எப்படி உலகைக் காப்பது? மனிதர்களின் பதற்றம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

உலகின் மிகப்பெரிய பாலைவனமாக இன்று காட்சியளிக்கும் சஹாரா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகள் நிறைந்த பசுமையான பகுதியாக இருந்தது. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.

பின்னாளில், ஏதோ ஓர் அழிவு சக்தியில்-எரிகற்களின் மோதலில் அல்லது ஒரு கொடும் தீப்புயலில் நிலத்திலிருந்த யாவும் எரிந்தழிய பாலையானது சஹாரா. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.

யாரால், எதனால் ஏற்பட்டது அந்த தீப்புயல்? பல கோடி ஆண்டுகளாகக் கோள்கள் இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளாக புவியும் இருக்கிறது. மனிதனால் எதை மாற்ற முடியும்?

மனிதன் தீயை உருவாக்கக் கற்றுக்கொண்டபோதே அழிவு சக்தி உருவாகிவிட்டது. சக்கரத்தை அவன் கண்டறிந்தபோது அந்த அழிவு சக்தி நூறு கால்களையும் கொண்டது. ஆயுதங்களை அவன் கண்டுணர்ந்தபோது அழிக்க முடியாத சக்தியை அந்த அழிவு சக்தி பெற்றது. இந்தப் பயணம் நிலையானது. தவிர்க்க முடியாதது.

அடர் வனங்கள், லட்சக்கணக்கான தாவர இனங்கள், பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகள், பறவைகள், உயிரோட்டமிக்க நீர்நிலைகள், நீர்வாழ் உயிரினங்கள், ஒட்டுண்ணிகள், நுண்ணியிரிகள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன.

சிங்கங்கள், புலிகள், கானுறை வேங்கைகள், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், ஓங்கில்கள்,சோலைப்பாடிகள், பிணந்தின்னிக்கழுகுகள் யாவும் அருகிக்கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் எப்படித் தப்ப முடியும்?

சீன ஞானி லா வோட்சு சொன்னதுபோல,""வானகமும் வையகமும் நிரந்தரமாக நீடிக்க முடியாதபோது மனிதன் எப்படி நீடிக்க முடியும்?''

புன்சிரிப்போடு பதில் சொல்லுங்கள்: உலகம் அழிந்துவிடுமா? அழிந்தால்தான் நாம் என்ன செய்யப்போகிறோம்?

வானகமும் வையகமும் அடர் வனங்களும் உயிரோட்டமிக்க நீர்நிலைகளும் பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகளும் பறவைகளும் நீர்வாழ் உயிரினங்களும் அழிந்துகொண்டிருக்க மனிதன் மட்டும் எப்படி நீடிக்க முடியும்? சிங்கங்களும் புலிகளும் கானுறை வேங்கைகளும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும் ஓங்கில்களும் சோலைப்பாடிகளும் பிணந்தின்னிக்கழுகுகளும் அழிந்த பின் மனிதன் மட்டும் ஏன் நீடிக்க வேண்டும்?
கட்டுரையாளர் : சமஸ்
நன்றி : தினமணி

Friday, December 25, 2009

புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு

கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது.​ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள்,​​ அமைப்புகள்,​​ இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.

இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம்.​ ​ மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது.​ இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால்,​​ ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும்,​​ முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான்.​ அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது.​ உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது.​ ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது,​​ சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது;​ பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால்,​​ அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது.​ உலக நாடுகள் அனைத்தையும்,​​ ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் -​ கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும்,​​ வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால்,​​ அவற்றோடு சேர்ந்து பூமிக்கும்,​​ கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது.​ இவை ​ -​ நிலக்கரியும்,​​ பெட்ரோலியப் பொருள்களும் -​ சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம்,​​ காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது.​ இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் ​ பெருக்கின.​ இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின.​ கூடவே,​​ காடுகள் அழிக்கப்பட்டதும்,​​ பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும்,​​ அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும்,​​ பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன.​ உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று,​​ நீர்,​​ அனைத்தும் ​ மாசுபட்டன;​ ​ மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின.​ வளர்ச்சியும்,​​ முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால்,​​ சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.

இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும்,​​ அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் ​ வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது.​ பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து,​​ மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது.​ பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின.​ இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால்,​​ மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை ​ எழுந்தது.

​ ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி,​​ அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது.​ இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது.​ இதையடுத்து ஐ.நா.​ முயற்சியில் 1989,​ 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.​ கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள்,​​ கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா.​ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் ​ உருவாக்கப்பட்டன.​ ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும்,​​ 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன.​ தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது.​ இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா.​ 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.

1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா.​ கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது.​ புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும்,​​ இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்;​ வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால்,​​ அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ,​​ கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது;​ ​ என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள்,​​ வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி,​​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது.​ இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன.​ ​ இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.​ இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து -​ இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் -​ வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.​ இந்த 1992-ன் ஐ.நா.​ கோட்பாடு,​​ உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும்,​​ இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது.​ இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா.​ எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.

எனினும்,​​ இந்த ஐ.நா.​ கோட்பாடு அடுத்தடுத்த ​ பேச்சுவார்த்தைகளுக்கும்,​​ மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.​ புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும்,​​ உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக,​​ சிறு தீவு நாடுகள்;​ தாழ்நிலைக் கடலோர நாடுகள்;​ சதுப்பு நிலம்,​​ காடுகள் நிறைந்த நாடுகள்;​ ​ ​ இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்;​ வறட்சி -​ பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்;​ நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்;​ எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்;​ எரிபொருள்களை ​(நிலக்கரி,​​ எண்ணெய்)​ எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள்,​​ சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது;​ வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.

ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா.​ கோட்பாட்டுக்கு,​​ வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது.​ ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும்,​​ 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் ​ சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது.​ 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு,​​ வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் ​(கரியமில வாயு)​ வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது.​ 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே,​​ புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ ​ உடன்பாட்டின் மையக் கோட்பாடு.​ இதுவே பொதுவான -​ ஆனால் பாகுபடுத்தப்பட்ட -​ பொறுப்புகள் என்று அறியப்பட்டது.​ இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா ​ இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி,​​ இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.

இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது.​ இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும்,​​ வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து,​​ கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.

சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும்,​​ கோபன்ஹேகனில் குழுமி,​​ ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு,​​ "பூமண்டலம் காப்போம்;​ ​ புவிவெப்பம் ​ தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.

இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று,​​ ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது.​ ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ,​​ சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ​ ஏற்க மறுத்தார்.

தனிநபர் சராசரிக் கணக்கில்,​​ இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா,​​ தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல்,​​ வளரும் நாடுகள் -​ குறிப்பாக சீனாவும் இந்தியாவும் -​ கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது;​ ​ அது மட்டுமல்ல,​​ வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.

வளரும் நாடுகள் ஜி -​ 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.

சர்வதேச நிதி நெருக்கடியின்போது,​​ வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது.​ கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில்,​​ அமெரிக்காவையும்,​​ வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.​ ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்,​​ பிரேசில்,​​ தென்ஆப்பிரிக்கா,​​ இந்தியா,​​ சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன;​ ​ இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.

​ கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது,​​ 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே,​​ கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள்.​ இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.

இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள ​(கரியமில வாயு ​ குறைப்புக்கான)​ பொறுப்பு என்பது,​​ வளரும் நாடுகளான இந்தியா -​ சீனாவோ,​​ இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் -​ ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல்.​ கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக,​​ சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது. ​

பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 -​ 2012-ல் 3000 கோடி டாலரும்,​​ 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.​ ஆனால்,​​ கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!
கட்டுரையாளர் : உ .ரா.​ வரதராசன்
நன்றி : தினமணி

Monday, December 7, 2009

கூவம் நதி​யா​கி​றது...

சென்​னைப் பெரு​ந​க​ரின் அகண்ட சாக்​க​டை​க​ளாக உள்ள கூவம் ஆறு, அடை​யாறு,​ பக்​கிங்​காம் கால்​வாய் மூன்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்தி,​ சிங்​கா​ரச் சென்​னையை உரு​வாக்​கு​வ​தற்​காக சென்னை நதி​கள் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு,​ அதன் தலை​வர் பொறுப்​பை​யும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார் துணை முதல்​வர் மு.க. ஸ்டா​லின்.

​ ​ 1967-ல் முதன்​மு​த​லா​கத் தமி​ழ​கத்​தில் திமுக ஆட்சி அமைத்​த​போதே,​ கூவத்​தில் பட​கு​வி​டும் திட்​டத்​தைத் தொடங்​கி​னார் அன்று பொதுப்​ப​ணித்​துறை அமைச்​ச​ராக இருந்த இன்​றைய முதல்​வர் மு. கரு​ணா​நிதி. அதற்​கா​கக் கட்​டப்​பட்ட பட​குத்​து​றை​க​ளின் சிதைந்த மிச்​சங்​களை இப்​போ​தும் சில இடங்​க​ளில் காண முடி​கி​றது. அப்​போது அவ​ரால் அத்​திட்​டத்தை செய்​து​மு​டிக்க முடி​ய​வில்லை. "மகன் தந்​தைக்​காற்​றும் உதவி' அவர் தொடங்​கிய பணியை நிறைவு செய்​வ​து​தான்.

​ ​ இந்த ஆணை​யம் எத்​த​கைய பணி​களை முத​லில் செய்​யப்​போ​கி​றது;​ இதற்​கான மதிப்​பீடு என்ன,​ இச்​செ​ல​வுக்​கான நிதியை எங்​கி​ருந்து பெறப்​போ​கி​றார்​கள் என்ற விவ​ரங்​கள் விரை​வில் இது​பற்​றிய அறி​விப்​பு​க​ளாக வெளி​யா​கும். முத​லில் கூவத்​தைத்​தான் எடுத்​துக்​கொள்ள இருக்​கின்​ற​னர்.

​ ​ கூவம் மிக​மிக மோச​மாக மாச​டைந்து,​ கழி​வு​கள் நக​ர​வும் முடி​யா​த​படி தேங்​கிக் கிடக்​கி​றது. கூவத்​தில் உள்ள தண்​ணீரை எடுத்து,​ தெளி​ய​வைத்து,​ வடி​கட்​டிய நீரில் மீன்​களை விட்​டால்,​ 4 மணி நேரத்​தில் மீன்​கள் செத்​து​வி​டு​கின்​றன என்​ப​து​தான் கூவம் குறித்து ஆய்​வு​மு​டி​வு​கள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்​ஸி​ஜன் இல்லை. வெறும் நச்சு உலோ​கக் கலப்​பும்,​ சேறும் சக​தி​யும்​தான் உள்​ளன. அடை​யா​றும் அந்​த​வி​த​மா​கவே படு​மோ​ச​மாக மாச​டைந்து கிடக்​கி​றது. மணப்​பாக்​கம் தடுப்​பணை வரை அடை​யாறு கொஞ்​சம் தூய்​மை​யாக இருந்​தா​லும்,​ சென்னை பெரு​ந​க​ரத்​தில் நுழைந்​த​வு​டன் அதன் மேனி​யில் வெறும் குப்​பை​க​ளும் நச்​சுக் கழி​வு​க​ளும்​தான் கொட்​டப்​ப​டு​கின்​றன. "அடை​யாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்​தது,​ இப்​போ​தும் இருக்​கி​றது ​ என்​பதே நம்ப முடி​யாத விஷ​ய​மாக ஆகி​விட்​டது.

​ ​ அடை​யாறு,​ கூவம்,​ பக்​கிங்​காம் கால்​வாய் ஆகி​ய​வற்​றில் 1950 களில் இருந்த நிலை உரு​வா​க​வும்,​ பட​கு​கள் ஓட​வும்,​ நீர்​வாழ் உயி​ரி​னங்​கள் அவற்​றில் காணப்​ப​டும் சூழல் மீண்​டும் வர​வேண்​டும். இது முக்​கி​ய​மான பணி என்​ப​தி​லும்,​ இதை எப்​பாடு பட்​டா​கி​லும் செய்​தாக வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்​து​கள் இருக்க முடி​யாது. இருப்​பி​னும்,​ இத்​திட்​டம் வெற்றி பெற வேண்​டு​மா​னால்,​ இது தேர்​தல் கால அர​சி​யல் பிர​சா​ர​மாக மாறு​வ​தைத் தவிர்க்க வேண்​டும். இப்​ப​டிச் சொல்​லக் கார​ணம் இருக்​கி​றது. ​

சென்​னை​யின் நதி​க​ளைத் தூய்​மைப்​ப​டுத்​தும் பணிக்கு குறைந்​த​பட்​சம் 10 ஆண்​டு​கள் தேவை. இதற்​குள் 3 சட்​டப்​பே​ரவை தேர்​தல்​க​ளை​யும் 2 உள்​ளாட்​சித் தேர்​தல்​க​ளை​யும் சென்னை சந்​திக்க நேர​லாம். இத்​திட்​டம் அர​சி​யல் கட்​சி​யின் சாத​னை​யாக முன்​வைக்​கப்​ப​டு​மா​னால்,​ இத்​திட்​டத்தை எதிர்க்​கட்​சி​கள் குறை​கூ​றும்,​ விமர்​சிக்​கும் என்​ப​தோடு,​ ஆட்சி மாற்​றம் ஏற்​ப​டு​மே​யா​னால்,​ இத்​திட்​டத்தை முற்​றி​லு​மா​கப் புறக்​க​ணிப்​பார்​கள்,​ கிடப்​பில் போடு​வார்​கள். இத​னால் மக்​க​ளுக்​கும் இழப்பு,​ சென்னை நக​ருக்​கும் இழப்பு.

சிங்​கப்​பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்​தான். இந்த நதி கூவம் போல மிக​மிக மோச​மா​காத நிலை​யி​லேயே,​ 1977-ம் ஆண்​டில்,​ "சிங்​கப்​பூர் நதி மற்​றும் கலாங் கழி​மு​கத் தூய்​மைத் திட்​டம்' தொடங்​கப்​பட்டு 10 ஆண்டு கால அவ​கா​சத்​தில் முடிக்​கத் திட்​ட​மி​டப்​பட்டு,​ அதன்​படி சிறப்​பா​கச் செய்து முடிக்​கப்​பட்​ட​தன் முழு​மு​தற் கார​ணம்-​ அது அர​சி​யல் வெற்​றி​யாக ஆக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான். சிங்​கப்​பூர் நதி​யின் கரை​யி​லும் கழி​மு​கப் பகு​தி​யி​லும் குடி​யி​ருந்த 26,000 ஏழைக் குடும்​பங்​கள் பார​பட்​ச​மின்றி ஊருக்கு வெளியே குடி​ய​மர்த்​தப்​பட்​ட​னர். 2,800 குடி​சைத்​தொ​ழில் மற்​றும் சிறு​தொ​ழில்​கூ​டங்​க​ளும் ஊருக்கு வெளியே அனுப்​பப்​பட்​டன. நடை​பாதை வணி​கர்​கள்,​ தெரு​வோர உண​வ​கங்​கள் எல்​லா​மும் கழி​வு​நீர் போக்​கி​கள் கொண்ட தனி​யி​டங்​க​ளுக்கு மாற்​றப்​பட்​டன. பிளாஸ்​டிக் பொருள் போன்ற திடக்​க​ழி​வு​கள் சிங்​கப்​பூர் நதி​யில் கலக்​கா​த​படி சிறப்​புத் தடுப்பு அமைப்​பு​கள் கரை​யோ​ரங்​க​ளில் ஏற்​ப​டுத்​தப்​பட்​டன. இதற்​கான திட்​டச் செலவு 20 கோடி டாலர்​கள்.

​ ​ கூவத்தை அதன் உற்​பத்தி இடத்தி​லி​ருந்து கழி​மு​கம் வரை சுமார் 65 கி.மீ. தொலை​வுக்​குத் தூய்​மைப்​ப​டுத்​த​வும்,​ அடை​யாறு ​(சுமார் 48 கி.மீ.), பக்​கிங்​காம் கால்​வாய் எல்​லா​வற்​றி​லும் உள்ள ஆக்​கி​ர​மிப்​பை​யும் குடி​சைப் பகு​தி​க​ளை​யும் நீக்க வேண்​டு​மா​னால் மிகக் குறைந்​த​பட்​சம் ஒரு லட்​சம் குடி​சை​களை அகற்றி,​ புற​ந​கர்ப் பகு​தி​யில் மாற்​றி​டம் தந்​தாக வேண்​டும். பல்​வேறு ஆக்​கி​ர​மிப்​பு​கள் அகற்​றப்​பட வேண்​டும். தொழில்​நி​று​வ​னம் மற்​றும் மருத்​து​வ​ம​னைக் கழி​வு​கள் இதில் கலப்​ப​தைத் தடுக்க வேண்​டும். இத்​த​னை​யும் செய்ய வேண்​டு​மா​னால்,​ அர​சி​யல் சாய்வு இல்​லாத அர​சின் உறு​திப்​பாடு தேவை. வாக்கு வங்​கி​கள் பற்​றிய எந்த நினைப்​பும் இல்​லா​மல்,​ கட​மை​யைச் செய்​யும் உணர்வு மட்​டுமே இருந்​தால்​தான் இத்​திட்​டம் வெற்றி அடை​யும்.

​ ​ மேலும்,​ தமி​ழ​கத்​தின் தலை​ந​க​ர​மா​கிய சென்னை பெரு​ந​க​ரின் நதி​க​ளுக்கு மட்​டும் ஆணை​யம் அமைத்​தி​ருப்​ப​தைக் காட்​டி​லும்,​ ஏன் தமி​ழக நதி​கள் ஆணை​யம் என ​ அமைக்​க​வில்லை என்​பது சற்று வருத்​தம் தரு​கி​றது. தமி​ழ​கத்​தின் நதி​கள் அனைத்​துமே ஏறக்​கு​றைய கூவம்,​ அடை​யாறு போல தூய்மை கெட்​டுப்​போய் கிடக்​கின்​றன. மணல்​கொள்​ளை​யா​லும் தொழில்​து​றைக் கழி​வு​க​ளா​லும் மேனி மெலிந்து,​ நோயுற்​றுக் கிடக்​கின்​றன. இவற்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்​து​வது தமி​ழக அர​சின் பணி​தானே?​

​ ​ வாஷிங்​ட​னுக்கு ஒரு பொட்​டோ​மேக். லண்​ட​னுக்கு ஒரு தேம்ஸ். பாரீ​சுக்கு ​ ஒரு ரைன். சென்​னைக்கு ஒரு கூவம் என்​கிற நிலை ஏற்​பட வேண்​டும் என்​பது முதல்​வர் கரு​ணா​நி​தி​யு​டைய கனவு மட்​டு​மல்ல. ஒவ்​வொரு சென்​னை​வா​சி​யின் கன​வும்​கூட. நல்​ல​தொரு முயற்சி துணை முதல்​வர் தலை​மை​யில் செயல்​ப​டத் தயா​ரா​கி​றது. இந்த ஆக்​க​பூர்​வ​மான திட்​டம் அர​சி​ய​லாக்​கப்​ப​டக் கூடாது!
நன்றி : தினமணி

Saturday, December 5, 2009

நமக்கு நாமே

பு​வி​வெப்​பத்​தைக் குறைப்​ப​தில் தனது பங்கு என்ன என்​பதை அமெ​ரிக்கா அறி​வித்​து​விட்​டது. அதா​வது 2005-ம் ஆண்டு வெளி​யேற்​றிய பசுமை இல்ல வாயுக்​க​ளின் அள​வில் 18 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​ளப்​போ​வ​தாக தெரி​வித்​தி​ருக்​கி​றது. வள​ரும் நாடு​க​ளில் மிக அதி​க​மாக பசுமை இல்ல வாயுக்​களை வெளி​யேற்​றும் சீனா,​ தான் 35 முதல் 40 விழுக்​காடு குறைக்​கப் போவ​தாக அறி​வித்​துள்​ளது. சீனா​வைப் போலவே ​ இந்​தி​யா​வும் ஓர​ளவு இதே அளவை அறி​வித்​தாக வேண்​டிய கட்​டா​யத்​தில் இருக்​கி​றது.

தற்​போது வெளி​யேற்​றப்​ப​டும் பசுமை இல்ல வாயுக்​க​ளின் அளவை இந்​தியா 40 சத​வீ​தம் குறைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால்,​ அதற்​காக இந்​தியா இழக்க வேண்​டிய தொழில்​வ​ளர்ச்​சி​யும் எதிர்​கொள்ள வேண்​டிய செல​வி​னங்​க​ளும் மிக அதி​கம். இந்​தி​யா​வின் மின்​உற்​பத்​தி​யில் பெரும்​பங்கு அனல்​மின் நிலை​யங்​களி​லி​ருந்​து​தான் கிடைக்​கி​றது. இவற்​றின் மூலம் வெளி​யேற்​றப்​ப​டும் கரி​ய​மில வாயு அள​வும் அதி​கம். இதற்​காக அனல்​மின் நிலை​யங்​களை உட​ன​டி​யாக மூடு​வதோ,​ மின்​உற்​பத்​தி​யைக் குறைத்​துக்​கொள்​வதோ இய​லாத காரி​யம்.

இந்​தி​யா​வில் சூரி​ய​சக்தி மூல​மாக மின்​சா​ரம் தயா​ரித்து,​ இழப்பை ஈடு செய்ய முடி​யும் என்​பது உண்​மையே என்​றா​லும்,​ அதற்​கா​கும் செலவு பல ஆயி​ரம் கோடி ரூபாய். இதில் ஒரு பகு​தியை ஐக்​கிய நாடு​கள் சபை வழங்​கும் என்​றா​லும்,​ புதிய மின்​உற்​பத்தி முறைக்கு அது முற்​றி​லும் பயன் அளிக்​காது. ​

தொ​ழில்​து​றை​க​ளில் வெளி​யேற்​றப்​ப​டும் கரி​ய​மில வாயு அள​வைக் குறைப்​ப​தற்​காக,​ தொழிற்​கூ​டங்​க​ளில் புதிய தொழில்​நுட்​பத்​தைப் புகுத்த வேண்​டு​மா​னால்,​ அதற்​காக இத்​தொ​ழில் துறைக்கு மானி​யம் மற்​றும் சலு​கை​கள் அறி​வித்​தாக வேண்​டும். இத​னால் இந்​தி​யா​வுக்கு பெரும் வரு​வாய் இழப்பு ஏற்​ப​டும். வளர்ச்​சிப் பணி​கள் தடைப்​ப​டும்.

இந்​தியா அதன் பிரச்​னையை எதிர்​கொள்​ளும் அதே வேளை​யில்,​ இந்​தி​யர் என்ற முறை​யில் ஒவ்​வொ​ரு​வ​ரும் புவி​வெப்​பத்​தைக்

குறைக்க சில வழி​கள் இருக்​கின்​றன. மின்​சா​ரத்தை அள​வா​கப் பயன்​ப​டுத்​து​வது,​ வாக​னப் பயன்​பாட்​டைக் குறைத்​துக்​கொள்​வது,​ சீர்​வளி அரங்​கு​கள் மற்​றும் குளிர்​ப​தன பெட்டி பயன்​பாட்டை கட்​டுக்​குள் வைப்​பது போன்​ற​வற்றை மேற்​கொள்​ள​லாம். இவை யாவற்​றை​யும் காட்​டி​லும் மிக அதி​க​மாக ஒரு மனி​தன் இந்​தப் புவிக்கு நன்மை செய்ய விரும்​பி​னால்,​ அவர் சைவ உண​வுக்கு மாறு​வ​தன் மூலம் அதைச் செய்ய முடி​யும்.

அண்​மை​யில் மத்​திய சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ் குறிப்​பி​டு​கை​யில் "மாட்​டி​றைச்சி சாப்​பி​டு​வதை நிறுத்​து​வ​தன் மூலம் புவி​வெப்​பத்​தைக் குறைக்​க​லாம்' என்று கூறிய கருத்து உண்​மையே. இதை நோபல் பரிசு பெற்​ற​வ​ரும் ஐக்​கி​ய​நா​டு​க​ளின் ஒரு பிரி​வா​கிய பரு​வ​நிலை மாற்​றத்​துக்​கான சர்​வ​தேச அமைப்​பின் தலை​வர்

ராஜேந்​தர் கே. பச்​செüரி பல கருத்​த​ரங்​கு​க​ளில் தொடர்ந்து வலி​யு​றுத்தி வரு​கி​றார்.

ஒரு கிலோ மாட்​டி​றைச்​சி​யைத் தவிர்ப்​ப​தன் மூலம் வளி​மண்​ட​லத்​தில் 36.4 கிலோ கரி​ய​மில வாயு கலப்​ப​தைத் தவிர்க்க முடி​யும் என்று அவர் சொல்​வது வெறும் புள்​ளி​வி​வ​ரம் அல்ல. நடை​முறை வாழ்க்​கைக்கு சாத்​தி​ய​மா​ன​தும்​கூட. ஆடு,​ மாடு​கள் வளர்ப்​ப​தற்​காக அழி​ப​டும் காடு​கள்,​ இறைச்​சியை வேறு இடங்​க​ளுக்​குக் கொண்டு செல்​வ​தற்​கான வாக​னப் போக்​கு​வ​ரத்து,​ இறைச்​சியை குளிர்​ப​த​னப் பெட்​டி​யில் வைத்​தி​ருத்​தல் போன்ற தொடர்​ந​ட​வ​டிக்​கை​யால் ஏற்​ப​டும் கரி​ய​மில வாயுவை கணக்​கிட்டு இந்​தக் கணக்​கீடு செய்​யப்​ப​டு​கி​றது.

இ​றைச்​சிக் கடை​கள் என்​பது ஊருக்கு ஒரு சில​வாக இருந்த நாள்​கள் என்​பது முற்​றி​லு​மாக மாறிப்​போய்,​ இப்​போது எல்லா நாள்​க​ளி​லும் எல்லா இடங்​க​ளி​லும் தெரு​வுக்​குத் தெரு இறைச்​சிக் கடை​க​ளும்,​ பிரி​யா​ணிக் கடை​க​ளும் இருப்​ப​தைக் காண்​கி​றோம். 2006 ம் ஆண்டு உல​கம் முழு​வ​தும் 28 கோடி டன் இறைச்சி உண​வுக்​காக பயன்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது. இது ஐம்​பது ஆண்​டு​க​ளுக்கு முன்பு இருந்த அள​வைக் காட்​டி​லும் 5 மடங்கு அதி​கம்.

ஒரு எக்​டேர் நிலப்​ப​ரப்​பில் வேளாண்மை செய்து உரு​வாக்​கப்​ப​டும் காய்​கறி,​ கனி​கள் பருப்​பு​வ​கை​கள் மூலம் ஒரு ஆண்​டுக்கு 30 பேருக்கு உண​வ​ளிக்க முடி​யும். ஆனால் இதே நிலப்​ப​ரப்பை கால்​நடை வளர்ப்​புக்​குப் பயன்​ப​டுத்தி அதன் மூலம் கிடைக்​கும் முட்டை,​ பால்,​

இறைச்சி ஆகி​ய​வற்​றின் மூலம் ஒரு ஆண்​டுக்கு 10 பேருக்கு மட்​டுமே உண​வ​ளிக்க முடி​யும் என்​றும் கணக்​கி​டப்​ப​டு​கி​றது.

ஒரு கிலோ கிராம் மாட்​டி​றைச்சி பெறு​வ​தற்கு 10 கிலோ கால்​ந​டைத் தீவ​னம் தேவைப்​ப​டு​கி​றது. ஒரு கிலோ பன்​றிக் கறிக்கு 5 கிலோ தானி​ய​மும் ஒரு கிலோ கோழிக்​க​றிக்கு 3 கிலோ தானி​யம் தேவை​யாக இருக்​கி​றது. ஆனால் இந்த தானி​யத்​தைக் கொண்டு பல வேளை உணவை ஒரு மனி​தன் உண்ண முடி​யும். மேலும்,​ காய்​கறி உண​வைச் சமைக்​கத் தேவைப்​ப​டும் எரி​சக்​தி​யைக் காட்​டி​லும் இறைச்சி உணவு தயா​ரிக்க 25 மடங்கு எரி​சக்தி தேவை​யாக இருக்​கி​றது. இவை யாவற்​றை​யும் கருத்​தில் கொள்​ளும்​போது,​ ஒரு​வர் சைவ உண​வுக்கு மாறு​வது மண்​ணு​ல​கிற்கு மட்​டு​மல்ல,​ வளி​மண்​ட​லத்​திற்​கும் நன்மை செய்ய முடி​யும்.

சைவ உணவு மனி​த​ருக்கு எளி​மை​யான உணவு என்​ப​து​டன்,​ வளி​மண்​ட​லத்தை மாசு​ப​டுத்​தும் பசுமை இல்ல வாயுக்​க​ளில் கரி​ய​மில வாயு​வை​விட 30 மடங்​கும் அதிக தீமை விளை​விக்​கும் மீத்​தேன் வாயுக்கு இறைச்சி கார​ண​மாக இருக்​கி​றது என்​பதை எண்​ணும் போது,​ இந்​தி​யர்​கள் ஒவ்​வொ​ரு​வ​ரும் மாமிச உண​வைத் தவிர்ப்​ப​தும்,​ வச​தி​க​ளைக் குறைத்​துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்​வ​தும் அர்த்​த​முள்ள வாழ்க்​கை​யாக இருக்​கும். மேலும்,​ புவி வெப்​பத்​தைக் குறைத்து பரு​வ​நிலை மாற்​றங்​களை கட்​டுக்​குள் கொண்​டு​வ​ர​வும் உத​வும். ஒவ்​வொ​ரு​வ​ரும் தங்​க​ளால் இயன்ற அள​வில் வளி​மண்​ட​லத்​தைக் காப்​பது என்று உறு​தியை ஏற்​றுக் கொண்​டால்,​ புவி​யைக் காக்​க​லாம். நாடு அத​ன​ள​வில் பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்க முற்​ப​டும்​போது குடி​ம​கன்​க​ளா​கிய நாமும் நம்​மால் முடிந்த பங்​க​ளிப்​பைச் செய்​தால் என்ன!
நன்றி : தினமணி

வெள்​ளிப் பனி​மலை உரு​குதே

""வெள்​ளிப் பனி​மலை மீது​லா​வு​வோம்'' என்று பாடிய பாரதி,​ கூடவே "GL​A​C​I​E​RS' ​ ​என்ற ஆங்​கி​லச் சொல்​லுக்கு ஓர் அழ​கிய தமிழ்ச்​சொல்லை ""வெள்​ளிப்​பனி'' என்று பாடிக்​காட்​டிய தேசி​யக்​க​விக்கு வணக்​கம் செலுத்​தும் அதே​ச​ம​யத்​தில்,​ 2035-ல்,​ அதா​வது இன்​னும் 25 ஆண்​டு​க​ளில்,​ கால​நி​லை​யின் தடு​மாற்​றம் விளை​வாக,​ இம​ய​மலை திரு​வண்​ணா​ம​லை​போல் ஆகி​வி​டும் என்று சில கால​நிலை வல்​லு​நர்​கள் எச்​ச​ரித்​துள்​ளதை எண்​ணிப் பார்த்​தால்,​ நெஞ்சு பொறுக்​கு​தி​லையே.

"மன்​னும் இம​ய​மலை எங்​கள் மலையே' என்று இப்​போது நாம் பாடி​னால் பாகிஸ்​தான்,​ நேபா​ளம்,​ திபெத்,​ பூடான் ஆகிய நாடு​கள் எங்​கள் பங்கு எங்கே என்று கேட்​கும்?​ இம​ய​ம​லை​யின் பரந்த விஸ்​தீ​ர​ணம் மத்​திய ஆசி​யா​வி​லும் விரிந்து பரந்​துள்​ளது. ஆனால் வெள்​ளிப்​ப​னி​ம​லை​கள் மட்​டும் மேற்​கூ​றிய நான்கு நாடு​க​ளு​டன் இந்​தி​யா​வுக்​கும் சேர்ந்து சொந்​தம். கால​நி​லைத் தடு​மாற்​றத்​தால் வேக​மாக வெள்​ளிப்​பனி உரு​கும் சூழ்​நி​லையை மன​தில் கொள்​ளா​மல் சொந்​தம் கொண்​டா​டும் ஐந்து நாடு​க​ளும் இந்த வெள்​ளிப்​பனி மலையை ஒரு மாபெ​ரும் பவர்​ஹ​வு​ஸôக மாற்ற எண்​ணு​கின்​றன.

÷உ​யிர்ச்​சூ​ழல் வளத்​தைப் புறக்​க​ணித்​து​விட்டு தென்​கோ​டி​யில் செயல்​பட்ட சேது சமுத்​தி​ரத் திட்​டம் ஓசை இழந்​து​விட்​டது. இது சூழல் பாது​காப்பு கார​ண​மாக இல்லை. கால்​வா​யில் மண் அள்ள அள்ள மீண்​டும் தூர்ந்து வரு​கி​ற​தாம். ட்ரட்​ஜர் கார்ப்​ப​ரே​ஷ​னுக்கு வர​வேண்​டிய பணம் வர​வில்​லை​யாம். சேது​ரா​மர் சேஃ​பா​கி​விட்​டார். இப்​போது லிப​ரான் கமி​ஷன் அறிக்​கை​யில் அயோத்​தி​ரா​மர் பிரச்​னை​யா​கி​விட்​டார். ராமர் பிரச்னை நமக்கு ஏன்?​ இப்​போ​துள்ள பூதா​கா​ர​மான பிரச்னை வட​கோ​டி​யில் உள்ள இம​யத்​தின் பனி​ம​லை​கள். ராம​ருக்கு வந்த ஆபத்து இப்​போது சிவ​னுக்கு இடம்​

பெ​யர்ந்​து​விட்​டது. மேரு​ம​லைக்​கும் கைலா​சத்​துக்​கும் ஆபத்து காத்​தி​ருக்​கி​றது. கால​நி​லைத் தடு​மாற்​றத்​துக்கு உல​கி​லேயே முதல் பலி இம​யத்​தின் வெள்​ளிப்​ப​னி​ம​லை​கள் என்று I.C.I.M.O.D.. கரு​து​கி​றது. அதா​வது In​t​e​r​n​a​t​i​o​n​al Ce​n​t​re ​ For In​t​e​g​r​a​t​ed Mo​u​n​t​a​in De​v​e​l​o​p​m​e​nt-​ல் கால​நி​லைத் தடு​மாற்​றத்தை ஆரா​யும் விஞ்​ஞா​னி​க​ளின் அறிக்​கை​யின் அடிப்​ப​டை​யில், ​I.C.I.M.O.D.,​ இம​ய​ம​லைப் பகு​தி​க​ளில் 2100-ஐ நெருங்​கும்​போது வெப்​ப​நிலை 5.5 டிகிரி செல்​சி​யஸ் அதி​க​மா​கும் என்​ப​தால்,​ பனி​ம​லை​கள் அழி​யும் என்று கூறு​கி​றது. ஆகவே,​ கயி​லை​மலை திரு​வண்​ணா​ம​லை​யா​கி​விட்​டால்.... இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யா​கும் நதி​களை நம்பி வாழும் இந்​தி​யர்​கள்,​ பாகிஸ்​தா​னி​யர்​கள்,​ பர்​மி​யர்​கள்,​ நேபா​ளி​கள்,​ பூட்​டா​னி​கள்,​ சீனர்​கள் எத்​தனை கோடி,​ எத்​தனை கோடி,​ இறைவா இவர்​கள் கதி என்​ன​வா​கும்?​ நினைத்​துப் பார்க்​கவே குலை​ந​டுங்​கும் ஒரு சூழ்​நி​லை​யில் எத்​தனை கோடி எத்​தனை கோடி டாலர்​கள் செல​வ​ழித்து நிலை​யற்ற நீர் மின்​சா​ரத்​திட்​டங்​களை இந்​தியா மட்​டு​மல்ல;​ பாகிஸ்​தான்,​ பூடான் நிறை​வேற்ற முனைந்​து​விட்​டது. இந்​தி​யா​வில் தைபாங் திட்ட மதிப்​பீடு,​ பூடா​னின் தலா திட்​டம்,​ பாகிஸ்​தா​னில் டையா​மர் பாஷா திட்​டம் ஆகிய மூன்​றும் உல​கி​லேயே அதி​கச் செல​வுள்ள நீர்​மின்​சா​ரத் திட்​டம் என்று கூறப்​ப​டு​கி​றது. ஒட்​டு​மொத்​த​மாக 1,50,000 மெகா​வாட் மின் உற்​பத்​தித் திட்​டம்.

÷இந்​தத் திட்​டங்​க​ளுக்கு இந்​தி​யா​வில் மட்​டு​மல்ல;​ சீனா​வி​லும் எதிர்ப்​புக் கிளம்​பி​யுள்​ளது. சீன நிபு​ணர் குழு மூத்த பொறி​யா​ளர் சின்-​யுவான் ஹாங்,​ பனி​மலை-​உரு​கு​வது தீவி​ர​மா​கும் என்​ப​தால் ஜீவ​ந​தி​கள் பாலா​றா​கி​விட்​டால் ​(வறண்​டு​விட்​டால்)​ இல்​லாத நீரில் எப்​படி மின்​சா​ரம் எடுக்க முடி​யும்?​ என்​கி​றார். ""கான்​கி​ரீட் மலை​கள்:​ இம​ய​ம​லை​க​ளின் அணைக் கட்​ட​டங்​கள்'' என்று ​I.C.I.M.O.D.,​ சார்​பில் ஆய்வு நிகழ்த்​திய ஸ்ரீபத் தர்​மா​தி​காரி என்ற பொறி​யா​ளர்,​ ""செய​லாற்ற முடி​யாத இம் மாபெ​ரும் திட்​டங்​க​ளில் கோடி கோடி​யா​கப் பணம் செல​வ​ழிப்​பது முட்​டாள்​த​ன​மா​னது. அது​வும் உல​க​ளா​விய நிதி நெருக்​க​டி​யுள்ள சூழ்​நி​லை​யில் இச்​செ​லவு அடி​முட்​டாள்​த​னம்'' என்று குறிப்​பிட்​டுள்​ளார். ""கால​நி​லைத் தடு​மாற்​றத்தை மன​தில் வைக்​கா​மல் இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யா​கும் நதி​க​ளின் போக்கு நிலை​யா​னது என்ற கரு​து​கோ​ளில் செயல்​ப​டு​வது ஆபத்​தா​னது. பனி ஏரி​கள் வெடித்து உடைப்பு எடுத்​தால் தோன்​றக்​கூ​டிய பயங்​கர வெள்​ளம் அணைக்​கட்​டு​களை உடைத்​து​வி​டும். காலப்​போக்​கில் நதி​யில் நீரோட்​டம் இல்​லா​விட்​டா​லும் மின் உற்​பத்தி செய்ய முடி​யாது...'' என்று தர்​மா​தி​காரி கூறி​யுள்​ளார்.

""பனி ஏரி வெடிப்பு'' என்​பது எதுவோ தரைப்​ப​கு​தி​யில் உள்ள சாதா​ரண ஏரி உடை​வ​து​போல் அல்ல. ஆங்​கி​லத்​தில் Gl​a​c​i​al La​ke Ou​t​b​u​r​st Fl​o​o​ds -​ GL​OF என்​பார்​கள். 1985-ல் நேபா​ளத்​தில் ஒருக்ளா​ஃப் ஏற்​பட்​ட​தன் விளை​வால் மலைப்​ப​கு​தி​யில் 14 பாலங்​க​ளை​யும்,​ 1 நீர்​மின் திட்ட அணை​யை​யும் உடைத்​துப் பெரு​கிய வெள்​ளத்​தில் மக்​கள் மடிந்​த​னர். பள்​ளத்​தாக்​குப் பயிர்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி நாச​மா​யின. பூடான் பகு​தி​யில் மட்​டும் 2,600 பனி ஏரி​கள் உள்​ளன. இவற்​றில் 25 வெடிக்​கும் அபா​யத்​தில் உள்​ளது. இதே நிலை இந்​தி​யா​வி​லும் உண்டு. வெள்​ளிப்​பனி உருகி ஆங்​காங்கே பனிக்​கட்டி ஏரி​கள் உரு​வாகி அவை வெடிக்​கின்​ற​ன​வாம்.

÷வ​ளர்ச்சி வளர்ச்சி என்று பேசி எவ்​வாறு பொது மூல​த​னத்​தைக் கொள்​ளை​ய​டிக்​க​லாம் என்​ப​தில் தீவிர கவ​னம் செலுத்​தப்​ப​டு​கி​றது. இந்த நோய் இந்​தியா,​ பாகிஸ்​தான்,​ பூடான்,​ நேபா​ளம் ஆகிய நாடு​க​ளில் பரவி இம​யத்​தையே அசைத்​துப் பார்க்​கி​றது. இப்​போ​துள்ள பிரச்னை,​ வெள்​ளிப்​ப​னி​மலை உரு​கு​வ​தால் தோன்​றக்​கூ​டிய தண்​ணீர்ப்​பஞ்​சம். கால​நி​லைத் தடு​மாற்றத்தை மனத்​தில் கொண்டு எதிர்​கால நீர்த்​தே​வையை எப்​ப​டிச் சமா​ளிப்​பது என்று யோசிப்​பதை மறந்து கோடி கோடி​யா​கப் பணத்​தைக் கொட்டி வற்​றப்​போ​கும் நதி​கள் மீது நீர்​மின்​சா​ரத் திட்​டங்​க​ளைச் செயல்​ப​டுத்​து​வது புத்​தி​சா​லித்​த​ன​மான ஆட்சி அதி​கா​ரத்​தின் லட்​ச​ணம் ஆகாது.

÷அ​னைத்​து​லக நிலை இப்​படி உள்​ள​போது,​ இந்த அவ​ச​ர​கா​லப் பிரச்​னையை இந்​தியா எவ்​வாறு மதிப்​பீடு செய்​கி​றது?​ மத்​திய அர​சின் வனம் மற்​றும் சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்,​ வெள்​ளிப்​பனி உரு​கு​வது பற்​றிய விஷ​யத்​திற்​கும் கால​நி​லைத் தடு​மாற்​றத்​திற்​கும் உறவு இருப்​ப​தா​கச் சொல்​லப்​ப​டும் விஷ​யம் ஆதா​ர​மில்​லா​தது என்று கூறு​கி​றார். மதிப்​பிற்​கு​ரிய அமைச்​சர் எந்த அடிப்​ப​டை​யில் கூறு​கி​றார் என்​றால்,​ அரசு கூறு​வ​தற்​கெல்​லாம் தலை​யாட்​டி​ய​படி உண்​மையை ஒளித்து எழு​து​வ​தற்​கும் சில விஞ்​ஞா​னி​கள் கிடைத்​த​வண்​ணம் உள்​ள​னர். அப்​ப​டிக்​கி​டைத்த வி.கே. ரெய்னா ஓய்வு பெற்ற புவி​யி​யல் விஞ்​ஞானி. ""வெள்​ளிப்​பனி மெல்ல மெல்​லப் பின்​னோக்​கிச் செல்​வது -​ உருகி ஏரி​யா​வது 19-ம் நூற்​றாண்​டின் இறு​திப் பகு​தி​யி​லேயே தொடங்​கி​விட்​டது என்​றும்,​ அலாஸ்கா அல்​லது கிரீன்​லேண்​டு​டன் ஒப்​பி​டும்​போது பின்​னோக்​கிச் செல்​லும் வெள்​ளிப்​பனி அவ்​வ​ளவு அதி​க​மா​யில்​லை​யாம். வெள்​ளிப்​பனி இயக்​கம் விழும் வெள்​ளிப்​பனி அள​வு​கொண்​டும்,​ தட்​ப​வெப்​பம் கொண்​டும் நிர்​ண​ய​மா​கி​ற​தே​த​விர தட்​ப​வெப்​பத் தடு​மாற்​றத்​துக்​கும் வெள்​ளிப்​பனி மறை​வுக்​கும் தொடர்பு இல்லை என்​றும் கங்கை உற்​பத்​திக்​குக் கார​ண​மான கங்​கோத்ரி வெள்​ளிப்​பனி நின்ற நிலை​யில் உள்​ள​தா​க​வும் ரெய்னா கூறி​யுள்​ளதை அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார்.

÷இந்​தியா-​பாகிஸ்​தான் ஜீவ​நதி சிந்​து​வு​டன் ஐந்து கிளை நதி​க​ளு​டன்,​ இந்​தி​யா​வுக்கே சொந்​த​மான கங்கை-​பிரம்​ம​புத்​திரா நதி​க​ளுக்​கும் சேர்த்து ஒரு பிரச்​னை​யும் இல்​லை​யென்று ஒரு ஜால்ரா விஞ்​ஞானி கூறி​யுள்​ளதை அப்​ப​டியே I.P.C.C. என்று சொல்​லப்​ப​டும் In​t​er Go​v​e​r​n​m​e​n​t​al Pa​n​el On Cl​i​m​a​te Ch​a​n​ge-​ன் தலை​வ​ரான ராஜேந்​திர பாச்​செ​ளரி தனது எதிர்ப்பை ""கார்​டி​யன்'' பத்​தி​ரி​கை​யில் குறிப்​பி​டும்​போது,​ "இப்​படி ஓர் அர்த்​த​மில்​லாத ரெய்​னா​வின் அறிக்​கையை அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ் ஒப்​புக்​கொண்​டது எப்​படி?​' என்று வியந்​துள்​ளார். I.P.C.C. ​ என்​பது நோபல் பரிசு பெற்ற விஞ்​ஞா​னி​களை உள்​ள​டக்​கி​யது. அமைச்​ச​ரின் கூற்​றில் உள்ள கருத்து வேற்​றுமை இத்​து​டன் அடங்​க​வில்லை. TE​RI ​ என்று சொல்​லப்​ப​டும் The Energy and Resour​ces Institute-​ன் வெள்​ளிப்​பனி விஞ்​ஞானி சையத் இக்​பால் ஹசன்,​ வனம்-​சுற்​றுச்​சூ​ழல் அமைச்​ச​ர​கம் தன்​னி​டம் தட்​ப​வெப்​பத் தடு​மாற்​றத்​தி​னால் இம​யத்​தின் வெள்​ளிப்​பனி மலை​யின் பாது​காப்பு பற்​றிய அறி​வி​யல் அறிக்கை கேட்​கப்​பட்​ட​தா​க​வும்,​ தனது கருத்​து​கள் புறக்​க​ணிக்​கப்​பட்​ட​தா​க​வும் கூறு​கி​றார்.

ரெய்னா அறிக்​கைக்​குத் தக்க பதில் வழங்​கி​யுள்​ளார். ""1980-களி​லேயே பசு​மை​யக நச்சு ஆவி​கள் இமய வெள்​ளிப்​ப​னி​க​ளைத் தாக்க ஆரம்​பித்​து​விட்​டன என்​றும்,​ இத​னால் இம​யத்​தின் வெள்​ளிப்​பனி வேக​மாக உரு​கு​வ​தை​யும் கண்​ட​றிந்​துள்​ள​தா​க​வும்,​ நேபா​ளம்,​ சிக்​கிம்,​ பூடான் பகு​தி​க​ளில் வெடிக்​கக்​கூ​டிய பனிக்​கட்டி ஏரி​கள் வெள்​ளிப்​பனி உரு​கு​வ​தால் தோன்​றி​யுள்​ளன என்​றும் குறிப்​பிட்​டுள்​ளார். எனி​னும் பூடான் அரசு அத்​த​கைய வெடிக்​கும் ஏரி​க​ளைக் கண்​ட​றிந்து அதை ஆபத்​தில்​லா​மல் நீரை வெளி​யேற்ற முயற்சி செய்​கி​றது. உத்​த​ராஞ்ச​லில் உள்ள கார்​வால் பல்​க​லைக்​க​ழ​கத்​தின் புவி​யி​யல் விஞ்​ஞா​னி​க​ளின் ஆய்​வுப்​படி,​ "கடந்த 200 ஆண்​டு​க​ளில் கங்​கோத்​ரி​யின் வெள்​ளிப்​பனி 2 கிலோ​மீட்​டர் அள​வுக்​குப் பின்​னோக்​கி​விட்​டது. அதா​வது உரு​கிக்குறைந்​து​விட்​டது.

ஆனால் கடந்த 25 ஆண்​டு​க​ளில் மட்​டும் 800 மீட்​டர் உள்​ள​டங்​கி​விட்​டது'' இந்த உண்மை நிலையை மூடி மறைத்து கங்​கோத்ரி வெள்​ளிப்​பனி உள்ள இடத்​தில் மாறா​மல் இருப்​ப​தாக அமைச்​சர் கூறு​வது நகைப்​புக்கு இடம் அளித்​தா​லும்,​ வெள்​ளிப்​பனி இழப்​பால் ஏற்​ப​டும் வெடி ஏரி​கள் அல்​கொய்தா தீவி​ர​வா​தி​க​ளின் வெடி​குண்​டை​விட மோச​மான விளை​வு​களை ஏற்​ப​டுத்​தக்​கூ​டிய செய்தி நகைப்​புக்​கு​ரி​யது இல்லை.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாரா​ய​ணன்
நன்றி : தினமணி

Wednesday, November 25, 2009

மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்

தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.

இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.

தமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.

அதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.

2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.

இந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.

வேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.

நீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.

தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.

திறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.

மழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.

திறந்தவெளிக் கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றில் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.

நிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.

கிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.

இதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.

இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.

நிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.

(கட்டுரையாளர்: எம். பாண்டியன், மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்).
நன்றி : தினமணி

Wednesday, November 18, 2009

நாளை எந்தப் பக்கம்?

சென்றவாரம் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க ஆற்றல் துறை அமைச்சர் ஸ்டீபன் சூ, புதுதில்லியில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐஐடி) மாணவர்களிடையே பேசும்போது, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்: "கோபன்ஹேகன் மாநாட்டில் கரியமில வாயு குறைப்பு குறித்து அமெரிக்கா எந்த உறுதிமொழியையும் வழங்காது'

அதாவது, கியோடோ மாநாட்டுத் தீர்மானத்தின்படி, வளர்ந்த நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா ஏற்கப்போவதில்லை என்பதுதான் இதன் பொருள். இதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார். அமெரிக்கா தனக்கான தூய ஆற்றல் மற்றும் பாதுகாப்புக் குறித்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும், அந்தச் சட்டம் அமெரிக்க அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும், அது நிறைவேறாத நிலையில் கரியமில வாயு குறைப்பு பற்றிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப மாறுதலுக்கான செயல்வரம்பு மாநாட்டில் (UNFCCC) அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிடம் இந்தியா எழுப்பிய கேள்விகள் குறித்துச் சொல்லும்போது, "இந்தியாவின் நிர்பந்தங்களை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். கரியமில வாயு வெளிப்பாட்டை இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகமாகக் குறைக்கத் தேவையில்லை' என்று இந்தியாவுக்கு மனம்குளிரும் பதிலையும் அவர் அளிக்கத் தவறவில்லை.

அதன் பின்னர், அவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அடுத்தநாள் சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, சீனாவை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

சிங்கப்பூரில் ஒபாமாவும், இந்தியாவில் ஸ்டீபன் சூ-வும் இப்படியாகப் பேசக் காரணம், கோபன்ஹேகன் மாநாட்டின்போது அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இந்தியாவும் சீனாவும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான்.

1997-ல் மேற்கொண்ட கியோடோ மாநாட்டு முடிவுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட அமெரிக்காவின் முயற்சிக்கு யாரும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காக இத்தகைய பசப்பு வார்த்தைகளை அமெரிக்கா பேசி வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு அமைச்சர்களை அனுப்பிவைத்தும், சீன நாட்டினைப் புகழ்ந்தும் தோழமை பாராட்டுகிறார்கள்.

உலகில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமானால், உலக நாடுகள் அனைத்தும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இதில் எந்தெந்த நாடுகள் இன்றைய மிக மோசமான புவிவெப்பத்துக்குக் காரணமோ அந்த நாடுகள் 1990-ம் ஆண்டு அளவின்படி குறிப்பிட்ட சதவீத கரியமில வாயு உள்ளிட்ட பசுமைஇல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைக்க வேண்டும். இதுதான் கியோடோ தீர்மானம்.

ஆனால் அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், 2005-ம் ஆண்டு நிலவரப்படி, (1990-ம் ஆண்டு நிலவரப்படி அல்ல), தாங்கள் வெளியேற்றும் பசுமைஇல்ல வாயுக்களில் 20 சதவீதத்தை 2020-ம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வோம் என்பதுதான். இதைவிட, நாங்கள் கொஞ்சம்கூட குறைக்க மாட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்.

இதைப்போன்ற அநியாயம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய வளிமண்டல மாசுகளின் 30 சதவீதம் அமெரிக்காவினால் உண்டானது. தற்போதும் ஆண்டுதோறும் உலகின் மொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 18 சதவீதம் அமெரிக்காவினுடையது. இதற்கு இணையான அளவில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே!

இதனால்தான் வளரும் நாடுகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமானவை. இந்த இரு நாடுகளும் ஒன்றாக நின்றால், கோபன்ஹேகனில் தற்போதுள்ள 141 நாடுகளும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும். ஓர் அணிக்கு சீனா அல்லது இந்தியா தலைமையேற்கும் கட்டாயம் உருவாகும். இது "பெரியண்ணன்' அமெரிக்காவுக்கு அவமரியாதை ஆகிவிடும். தற்போது அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சி வெளிப்படையானது. முதலாவதாக இரு நாடுகளையும் தனக்குச் சாதகமாக இருக்கச் செய்வது; அல்லது சும்மா இருந்தாலும் சரிதான். இரண்டாவதாக, சீனாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, இந்தியாவைத் தனிமைப்படுத்துவது!

இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுதான். இந்தியா தனித்து நின்று எதிர்க்கும் என்றால், அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் நிதியுதவிகள் கிடைக்காது என்பதுடன் வேறு நெருக்கடிகளும் ஏற்படும். உதாரணமாக, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல் பரிமாற்றம் இருக்காது.
இருப்பினும், உலக நன்மைக்காக எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகள்தானே முடிவு எடுப்பவர்களாக இருக்கிறார்கள்!
நன்றி: தினமணி

Tuesday, November 17, 2009

உணவின் தேவையும் நீரில் சிக்கனமும்

நாளுக்கு நாள் உணவின் தேவை உயர்ந்து வருகிறது. உணவின் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை என்பதால் அரிசி விலையும் பருப்பு விலையும் ஆகாயத்தைத் தொடுவதாக உள்ளன. நல்லவேளையாக தமிழ்நாட்டுக்குத் தேவையான வடகிழக்குப் பருவமழை தாமதமானாலும் தொடங்கியுள்ளது.

நீடிக்குமா? வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரப்பிரதேசத்திலும் ஒரிசாவிலும் வெள்ளத்தை ஏற்படுத்துமா? போகப் போகத் தெரியும். இங்கு பெய்யாமல் அங்கு பெய்தாலும் சரி. ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அரிசி வருவது நின்றுவிடாது. தென்மேற்குப் பருவமழை பொய்த்தது பொய்த்ததுதான்.

அரிசி, கோதுமை இறக்குமதியுடன் பருப்பு இறக்குமதியும் தொடர்வது உண்மைதான். உணவுக்கும் நீருக்கும் பற்றாக்குறை இருப்பது உண்மை. இதற்கு நதிநீர் இணைப்பு சரியான தீர்வு என்று பலர் கருதுகிறார்கள். அப்படியே இணைத்தாலும், ஆந்திர அரசு நமக்குத் தேவையான நீரைத் தருமா? குறுக்கே குறுக்கே கர்நாடகம் அணைக்கட்டுகளைக் கட்டிக் காவிரிப் பிரச்னை நாற்பது ஆண்டுகளாக சந்தி சிரிக்கிறது. கிருஷ்ணர் வேஷம் போட்டு மக்களை மயக்கிய என்.டி.ஆர். சென்னைக்கு கிருஷ்ணா தீர்த்தம் தருவதாக ஒப்பந்தம் செய்தார்.

தமிழ்நாடு அரசு தந்த பணத்தைக் கொண்டு ஆந்திர மாவட்டங்களில் கால்வாய் வெட்டினார்கள். இன்று வெட்டிய கால்வாய்கள் தூர்ந்துவிட்டன. பெருமாள் கோயிலில் வழங்கும் துளசி தீர்த்தம்போல் வந்தது சிறுதுளிகள். இன்று பாலாறில் அணை ஒரு பிரச்னை. எதிர்க்கட்சிகள் சிலநாள் தூக்கிப் பிடித்தன. இலங்கைத் தமிழர் பிரச்னை வந்ததும் காவிரிப் பிரச்னை, பாலாறு பிரச்னைகளையெல்லாம் ஓசை இல்லாமல் அடங்கிவிட்டன.

இந்தியாவில் உள்ள நதிகளை எல்லாம் இணைப்பது இயலாத காரியம் என்று ராகுல் காந்தி கைவிரித்துவிட்டதும் ஒருவிதத்தில் நல்லது. நதி இணைப்பில் எச்சரிக்கை தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆமோதித்து விட்டார். ஒரு காவிரிப் பிரச்னையைத் தீர்த்து வைக்க முடியாத சூழ்நிலையில், இருபது மாநிலங்களிலும் இருபது காவிரிப் பிரச்னைகள் - ஒவ்வொரு நதியும் அடுத்த மாநிலத்துக்கு வரும்போது - யார் குடுமி யாரிடம் இருக்கும், என்று பாரதப் பிரதமர் யோசித்துத்தான் இப்படிச் சொல்லியிருப்பார். அதற்குப் பின் சுற்றுச்சூழல், வன அழிப்பு, புதிய வாழ்விடம் என்ற பிரச்னைகள் ஏழைகளை மிகவும் பாதிக்கலாம். அதிகம் தண்ணீர் என்றால் அதிகம் உணவு. அதிகம் உணவுக்கு நதிநீர் இணைப்பு என்று ஒரு சுலபமான செய்தியைச் சொல்லும் அரசியல்வாதிகளும், பெரும்பாலான பொதுமக்கள் கருத்தும் ஒன்றாயுள்ளன. வேறு மாற்று யோசனைகளை நாம் சிந்திக்க மறுப்பது ஏன்?

முதலில் நீரில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறோமா? விவசாயத் தேவைக்குப் பயன்பட்ட தண்ணீர் முக்கிய அணைகள் அல்லது நீர்நிலைகளிலிருந்து குடிநீருக்காகத் தொலைதூரங்களுக்குக் கொண்டு வரப்படுகிறது. இடையில் எத்தனை உடைப்புகள் என்ற கணக்கு ஒருவரைத் தலை சுற்ற வைக்கும். பல இடங்களில் புதிய குளங்களே தேவையில்லாத பாழ்நிலத்தில் உருவாகியுள்ளது.

தோராயமாக இப்படி உடைப்பு எடுத்து ஓடும் தண்ணீரை ஸ்ப்ரிங்க்ளர் அல்லது "ரெயின்கன்'
மூலம் 2 லட்சம் டன் மக்சாச்சோளம் அல்லது 2 லட்சம் டன் கேழ்வரகு அல்லது 1.5 லட்சம் டன் வெள்ளைச்சோளம் உற்பத்தி செய்யலாம். கோ - 3 தீவனப்புல் சாகுபடி செய்தால் 10,000 பசுமாடுகள் (கலப்பினம்) மூலம் 50,000 டன் பால் உற்பத்தி செய்யலாம். பொது இடங்களில் குழாய் இருக்கும்; டேப் இருக்காது. டேப் இல்லாமல் தினம் வழிந்தோடும் தண்ணீரைக் கொண்டு பார் அமைத்துத் துவரையோ, உளுந்தோ போட்டால் ஒவ்வொரு வழிந்தோடும் குழாய்களைச் சுற்றியுள்ள இடத்திலும் 10 மூட்டை விளைச்சல் எடுக்கலாம்.

மழைநீர் சேமிப்பு என்பது கருத்தரங்கிலும் மேடைப் பேச்சுகளிலும் உள்ள வேகம் செயலில் இல்லை. இந்தியாவின் சராசரி மழை அளவு 115 செ.மீ. தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 90 செ.மீ. உலக சராசரி மழை அளவு 70 செ.மீ. ஆகவே இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டின் மழை அளவு உலக சராசரியைவிட அதிகமே.

மழைப்பொழிவு அதிகமுள்ள பல மாநிலங்களில் நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் - காவிரி டெல்டாப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 1000 அடிக்குக் கீழே தண்ணீர் சென்றுவிட்டது. பல மாநிலங்களில் இதே பிரச்னை.

நீர்ச்சிக்கனப் பயிர் சாகுபடிக்கு திட்டமிடப்படுகிறது. இதில் மிகவும் வியப்பான விஷயம், ராலிகன் சித்தி, ஹிவாரே பாசார் போன்ற வறட்சியான மகாராஷ்டிர மாநிலப் பகுதியில் மழை அளவு 46 செ.மீ. தான்.

உலக சராசரி - இந்திய சராசரியைவிடக் குறைவான தக்காண பீடபூமிப் பிரதேசம் இப்பகுதிகளில் இப்போதெல்லாம் 30, 40 அடியில் ஊற்று இருந்துகொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் அண்ணா ஹசாரே வழிகாட்டி, மக்கள் சேர்ந்து சிறப்பாக மழைநீரைச் சேமிப்பதுவே. இதுபோல் ஒவ்வொரு கிராமங்களிலும் ராலிகன் சித்தியின் உதாரணம் பின்பற்றப்படுமானால் நதிநீர் இணைப்பு என்ற பேச்சுக்கே அவசியமில்லை. கிடைக்கும் மழைநீரில் ஐந்தில் ஒரு பங்கைத்தான் பயன்படுத்துகிறோம். 50 சதவீதம் பயன்படுத்தத் திட்டமிட்டாலே போதும். பத்தில் 1 பங்கு இயல்பாகவே பூமிக்கடியில் செல்கிறது. பத்தில் 1 பங்கு ஏரி, குளங்களுக்கும் செல்கிறது. மீதி 8 பங்கு - பெய்யும் மழையில் 80 சதவீதம் பாழாகிறது.

ராலிகான் சித்தியிலும் ஹிவாரே பாசாரிலும் நிகழ்ந்தது என்ன? வனத்துறையின் துணையுடன் கிராமத்தின் மேற்கட்டில் இருந்த மலைகளில் ஏராளமாக மரங்களை நட்டார்கள். வனம் உருவானது. ஆங்காங்கே நீண்ட வரப்புகளை வெட்டினார்கள். பல்வேறு நீர்த்தடுப்பு - கசிவுநீர்க் குட்டைகள் - குறுக்கணைகள் கட்டினார்கள். தீவனப்புல், வெங்காயம் சாகுபடி செய்தனர். கிராமத்தைவிட்டு மும்பைக்குப் பிழைக்கச் சென்ற விவசாயிகள் கிராமத்துக்கு வந்து லட்சக்கணக்கில் சம்பாதித்தனர். சிறப்பாகக் கால்நடை - கறவைப்பசு வளர்த்தார்கள். "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்ற கண்ணதாசன் பாட்டுக்கு இலக்கணம் வகுத்தனர், வறட்சிப்பகுதி விவசாயிகள்.

உணவுக்குத் தேவை உள்ளது, சரி. ஆனால் ரேஷனில் வழங்கப்படும் அரிசி தேவையில்லாமல் வீணாவது ஒருபுறம். அரிசிச் சோறு உண்டு பழக்கமில்லாத மலைவாழ் மக்கள் ஒரு ரூபாய் அரிசியால் கேப்பை, வரகு, பொட்டுக்கம்பு போன்றவற்றைச் சொந்த உணவுத் தேவைக்கு என்று சாகுபடி செய்த வழக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். அரிசி உண்ணும் வழக்கம் இல்லாதவர்களிடம் அரிசி நுகர்வைத் திணிப்பது சரியா? கொஞ்சநஞ்சம் எஞ்சியுள்ள புஞ்சை தானிய சாகுபடியையும் அழித்துவிட்டு நீர்ச்செலவுள்ள அரிசி போன்ற உணவு சாகுபடியை ஊக்குவிப்பதும் சரிதானா?

1 டன் அரிசி உற்பத்தியாவதற்குச் செலவாகும் நீரிலிருந்து 10 டன் புஞ்சை தானியங்களையோ 10 டன் பருப்பு வகை தானியங்களையோ உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய ஸ்ப்ரிங்க்ளர் அல்லது ரெயின்கன் அமைத்துக் கொள்ளலாம். நீர்ச்சிக்கனம் பற்றி மீண்டும் விவாதிக்கும் முன்பு பொது வினியோக அரிசியானாலும், அதிக விலை கொடுத்து வெளி அங்காடி அரிசியானாலும், வேறு பயனாவதும் வீணாவதும் தொடர்கதை. பொதுவினியோக அரிசி வெளி அங்காடிக்குக் கடத்தப்படும் கதை ஒருபுறம். 1 ரூபாய் அரிசியைப் பயனீட்டாளர்களே, 5 ரூபாய்க்கு விற்பது ஒருபுறம். தமிழ்நாட்டு கிராமங்களில் 1 ரூபாய் ரேஷன் அரிசி மாவாக அரைக்கப்பட்டுக் கறவைப் பசுக்களுக்கு அடர்தீவனமாக வழங்கப்படுகிறது. ஏனெனில் புஞ்சை தானியங்களைவிட அரிசி மலிவாக உள்ளது. மனித உணவாக புஞ்சை தானியங்கள் பயன்படுவதற்கு அரிசி நுகர்வு குறுக்கே நின்றது சரி. இப்போது கால்நடை உணவாகவும் அரிசி மாறிவிட்டதால், புஞ்சை தானிய சாகுபடி எவ்வாறு ஊக்கம் பெறும் என்று புரியவில்லை.

""ஒருபக்கம் உண்ணச் சோறில்லை'' என்று புலம்பல். எனினும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் இன்று ரேஷன் அரிசி சாப்பிட்டால் வயிறு வலிக்கிறது என்று காரணம் சொல்லி வெளி அங்காடியில் நல்ல விலை கொடுத்து நல்ல அரிசி வாங்கி உண்பது இல்லையா? குப்பையில் நாள்தோறும் கொட்டும் அரிசிச்சோறை விளைவிக்கத் தமிழ்நாட்டுக்கு கங்கையே வந்தாலும் பத்தாது.

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக முனைவர்கள் அரிசியைச் சற்று மறந்துவிட்டு வேறு உணவு தானியங்களின் உற்பத்தியை உயர்த்துவதில் கவனம் செலுத்தக்கூடாதா? 1964 - 68 காலகட்டத்தில் பொன்னையா என்பவர், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது, புஞ்சை தானியப் பயிர் சாகுபடிக்கும், பருப்புவகைப் பயிர் சாகுபடிக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கித் தேர்வு விதைகளை விநியோகம் செய்யும் திட்டம் அவரால் செயலானது. தமிழ்நாட்டில் விளையக்கூடிய சம்பா கோதுமைக்கும் அன்றே சான்று விதை உற்பத்தித் திட்டம் வகுத்தவர். இன்று பருப்பு விலைகள் எல்லாம் கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 என்று உயர்ந்துள்ளன. பருவகாலத்துக்கு முன்பே சரியான நேரத்தில் உணவு தானியம், பருப்பு வகை விதை விநியோகம் செய்யாமல், இம்மாநில அரசின் வேளாண்மைத்துறை முனைவர்கள் பி.ட்டி கத்தரிக்காய் விற்பனைக்கு வந்துவிட்டால் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று எண்ணும் காரணம் என்னவென்று புரியவில்லை. உண்ட விஷம் போதாதா? மரபணு மாற்ற மலட்டு விதைகளைக் கொண்டு வந்து பாரம்பரிய விதைகளையும் வீரிய விதைகளையும் அழித்துவிட நினைக்கும் மடமையை என்னென்பது? காலநிலை மாற்றத்தினால் பெய்யும் மழை ஒரே சீராக இல்லை. ஒரே இடத்தில் மழைகொட்டி, பருவமழை பரவலாகப் பெய்யாமல், இந்திய மாநிலங்களில் நிலத்தடி நீர் எட்டாக்கனியாகி வருவதால், மேல்மட்ட ஊற்றுக்களை மீண்டும் உயிர் பெறச் செய்து, நீர்ச்சிக்கன உணவு தானியப் பயிர்களை ஊக்கப்படுத்த வேண்டிய அவசரத்தை வேளாண்மை அமைச்சரகம் உணர்ந்து உரிய நடவடிக்கை எடுத்தால், நாடு நன்மை பெறும்.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி

அபாயத்தின் அறிகுறி!

வளிமண்டலம் மாசடைந்து புவிவெப்பம் அதிகரிப்பது உலகில் வாழும் எல்லா உயிரினங்களையும் பாதிக்கிறது என்பது தெரிந்த விஷயம். நிலத்தில் வாழும் உயிரினங்களைவிட மிகஅதிகமாகப் பாதிக்கப்பட இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான் என்பது பெரிய அளவில் ஏன் நம்மைக் கவலைப்பட வைக்கவில்லை என்பது தெரியவில்லை.

அண்மையில் மீன் மற்றும் மீனளம் (ஃபிஷ் அண்ட் ஃபிஷரீஸ்) என்கிற மேலைநாட்டுப் பத்திரிகை ஒன்றில் படித்த விஷயம், நம்மைத் திடுக்கிட வைக்கிறது. புவிவெப்பமாதல் காரணமாக பல்லுயிர்பெருக்கத்துக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் மீன் இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படவுள்ளன என்பது பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறது அந்தப் பத்திரிகை.

கடல் நீரின் தட்பவெப்பத்தைப் பொறுத்துத்தான் பலவகை மீன் இனங்கள் அந்தந்தப் பகுதியில் காணப்படுகின்றன. தட்பவெப்பம் மாறும்போது, இந்த மீன் இனங்கள் அங்கே வாழ முடியாமல், சாதகமான தட்பவெப்பம் நிலவும் பகுதியை நோக்கி நகர வேண்டும்; இல்லாவிட்டால் அழிந்துவிடும் அபாயம்தான் ஏற்படும்.

குறிப்பாக, பூமத்திய ரேகையையொட்டிய, வெப்பம் அதிகமுள்ள கடல் பகுதியில் காணப்படும் மீன் இனங்கள், புவி வெப்பமாவதைத் தொடர்ந்து குளிர்ப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்தாக வேண்டும். அப்போதுதான் தங்களது உடல்வெப்பத்தை தகவமைத்து வாழ முடியும். ஆனால், துருவப் பகுதிகளில் உள்ள குளிரைத் தாங்கி இந்த மீன் இனங்களால் வாழ முடியுமா என்பதும் சந்தேகம்தான்.

துருவப் பகுதிகளில் மீன் இனங்களின் எண்ணிக்கை குறைவு. அப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள், புவி வெப்பமாதலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் மீன்களின் எண்ணிக்கையே குறைவுதான் என்பதால் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் என்பதும் ஆறுதல்.

வெப்ப மண்டலங்களிலும், துருவப் பகுதிகளுக்குக் கீழேயுள்ள பிரதேசங்களிலும் ஏற்பட இருக்கும் புவிவெப்ப மாற்றங்கள், ஏறத்தாழ 60 விழுக்காடு மீன் இனங்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் என்பதுதான் அச்சப்பட வைக்கும் விஷயம். இந்த மாற்றம், கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். கடலின் ஆழத்தில் அல்லது மேற்புறத்தில் வாழும் மீன்கள் எவையாக இருந்தாலும் பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உடனடி பாதிப்பு கடலின் மேற்பகுதியில் வாழும் மீன் இனங்களுக்குத்தான். குறைந்தது 600 கி.மீ. தூரத்துக்காவது இடம் பெயர்ந்தால் மட்டுமே வெப்பப் பகுதியில் வாழும் 90% மீன்இனங்கள் உயிர்வாழ முடியும் என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வுக்கட்டுரை.

இந்தப் பிரச்னை சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்களையும் அச்சுறுத்தக் காரணம், மீன் இனங்களுக்கு ஏற்படும் பாதிப்பால் உலகில் உணவுத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதுதான்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ 4 கோடி மீனவர்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். மீன்கள் கிடைக்காதென்றால் பல மீனவர் குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நேரும்.

வளர்ந்த நாடுகளில் சுமார் 28 கோடிப் பேர் தங்களது தினசரி உணவில் மீனைச் சேர்த்துக்கொள்கிறார்கள். மீனுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமானால், அதன் நேரடி விளைவாக மாமிசத் தேவை அதிகரிக்கும். உலகம் புதிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு பயமுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், புவிவெப்பமாதலால் மீன் வளமும் குறையுமேயானால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். மேலும், மீன் பிடிப்பு குறையக் குறைய இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பாதிப்பும், மீனவர்களுக்குத் தொழில்நசிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இப்பொழுதே கடலில் முன்பு போல மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறை நிறையவே இருக்கிறது. இந்நிலையில், புவி வெப்பமடைதலும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பும் கடல்மீன்களுக்கும் அதன் இனப்பெருக்கத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறுமெனில், விளைவுகள் படுமோசமாக மாறிவிடும்.

இதன் உடனடித் தாக்கம் உணவுப் பஞ்சம். தொடர் விளைவு, மீன்களின் இனப்பெருக்கத்துக்கு நிரந்தரப் பாதிப்பு. உலக நாடுகள் ஒன்றுகூடி உடனடியாகத் தீவிர ஆலோசனைகளை நடத்தியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நன்றி : தினமணி