Sunday, February 22, 2009

குக்கிராமங்களில் சேவை வங்கி புது திட்டம்

வங்கியின் கிளை இல்லாத குக்கிராமங்களில் சேவை செய்ய, மின்னணு சாதனங்களின் வசதியுடன் புதிய 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை ஸ்டேட் பாங்க் அறிமுகப்படுத்த உள்ளது. குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு வங்கியில் பணம் போடும் வசதி இல்லை. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வேலை செய்ய தொழிலாளிகள் போகும் போது, அவர்கள் வீட்டுக்கு பணம் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர். இப்படி குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு வங்கி சேவை கிடைக்கச் செய்ய ஸ்டேட் பாங்க் புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது. வங்கியின் சார்பில், குக்கிராமங்களில், வர்த்தக பிரதிநிதிகள் இருப்பர். அவர்களிடம் மின்னணு சாதனம் தரப்படும். விவசாயிகள், தொழிலாளிகளுக்கு வங்கி தரும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி, இந்த சாதனம் மூலம் தங்கள் குடும்பத்துக்கு உடனுக்குடன் பணம் அனுப்பலாம். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணத்தை தங்கள் வங்கி கணக்கில் போட இந்த மின்னணு சாதனம் உதவுகிறது. கிராமங்களில், கூட்டுறவு சட்டத் தின் படி செயல்படும் கூட்டுறவு சொசைட்டிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் ஆகியவை வங்கியின் பிரதிநிதியாக செயல்படும். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி கிராமத்தில் உள்ளவர்கள் பணத்தை செலுத்தினால், அதே போல, ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணமும் எடுக்கலாம். ஸ்மார்ட் கார்டில் இருந்து வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்றும் வசதியையும் வங்கி ஏற்படுத்த உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் கார்டை, ஏ.டி.எம்., கார்டு போலவே பயன்படுத்தலாம். பணத்தை போடுவது, எடுப்பது, கணக்கு விவரம் பெறுவது ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நன்றி : தினமலர்


ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு புத்துயிர்

வியாழனன்று சந்தை மேலும் கீழுமாக இருந்தது என்றாலும், அதற்கு முந்தைய மூன்று நாட்கள் கீழேயே போய்க் கொண்டிருந்த சந்தையை மேலே கொண்டு வந்தது. ரூபாயின் மதிப்பு 50 வரை சென்று வந்ததால், அது சாப்ட்வேர் கம்பெனிகளுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்த்து அந்தக் கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றன. பணவீக்கம் மேலும் இந்த வாரம் குறைந்திருந்தது. ஆனால், சந்தை அதைக் கண்டுகொள்ளவில்லை. வெள்ளியன்று சந்தை உலகச் சந்தைகளின் போக்கை வைத்து அதே போலவே கீழே சென்றது. வியாழனன்று உலகளவில் எல்லா சந்தைகளும் கீழேயே இருந்தன. அதன் போக்கு இங்கும் சந்தைகளில் பிரதிபலித்தது. அன்றைய தினம் ஒரு கட்டத்தில் சந்தை, 280 புள்ளிகள் வரை இழந்திருந்தது. இது தான் சமயம் என்று வாங்குபவர்கள் சிலர் இருந்ததால், சந்தை இழந்ததில் 80 புள்ளிகளை திரும்பப் பெற்றது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 199 புள்ளிகள் கீழே சென்று 8,843 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 52 புள்ளிகள் கீழே சென்று 2,736 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சந்தை 9,000க்கு கீழேயே முடிவடைந்துள்ளது என்பது ஒருவிதமான கலக்கம் தான். கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி முடிவில் 9,647 புள்ளிகளில் சந்தை முடிவடைந்திருந்தது. ஆனால், தற்போது 9,000 அளவில் அல்லாடுவது ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம் தான். நல்ல பங்குகள் நல்ல பல பங்குகள் சந்தையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. சந்தையில் மலிவாக இருக்கிறதே என்று வாங்கப் போனால், இன்னும் விலை குறைகிறது. அதனால், முதலீட்டா ளர்கள் பயப்படும் நிலை உள்ளது. அதனால், சந்தையால் மேலே வரவே முடியவில்லை. நீண்டகாலம் என்று வாங்குபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். சென்ற வருடமெல்லாம் பணவீக்கம் குறையாதா என்று கடவுளைப் பிரார்த் தித்துக் கொண்டிருந்தோம். தற்போது இன்னும் குறையாமல் இருக்க வேண்டுமே என்று முதலீட்டாளர்கள் பிரார்த் தித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது குறைவதற்குக் காரணம் தேக்க நிலை தான். சென்ற வாரம் 4.39 சதவீதம் அளவிற்கு இருந்தது, தற்போது 3.92 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது, பரமபத இறக்கம் தான். ஏறுவதில் இருந்த ஜோர் இறங்குவதிலும் உள்ளது. ஆனால், இரண்டுமே நிம்மதி தரவில்லை. டிசம்பர் 2007ல் 3.8 சதவீதம் வரை சென்றிருந்தது. அதை கிட்டத்தட்ட மறுபடி நெருங்கி விட்டது. இது போன்ற பொருளாதார மந்தமான சூழ்நிலையில் எல்லாரும் எங்கும் முதலீடு செய்யாமல் பணத் தைப் பணமாக வைத்திருப்பதையே விரும்புவர். நல்ல சமயத்திற்காகக் காத்திருப்பர். ஆனால், இது மியூச்சுவல் பண்டு களுக்கும் பொருந்துகிறது. தற்போது மியூச்சுவல் பண்டுகள் அதிகம் முதலீடு செய்யாமல் பணத்தைக் கைவசம் வைத்துள்ளது. ஜனவரி முடிவில் எல்லா மியூச்சுவல் பண்டுகளும் இது போல கைவசம் வைத்திருந்தது 9,729 கோடி ரூபாய். நல்ல சமயத்திற் காக அவர்களும் காத்திருக்கின்றனரோ என் னவோ? பூஜாரிகள் தான் சாமியிடம் வரம் கேட்க வேண் டும்.. ஆனால், சாமியே வரம் கேட்கும் நிலைக்கு வந்தால்? 9,729 கோடி ரூபாய் என்பது கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலர் அளவு, சந்தைக்குள் வந்தால் சந்தையில் புது ரத்தம் பாயும் என்று எதிர்பார்க்கலாம்.
8 சதவீத வட்டி: வீடு வாங்கப் போகின்றீரா? முதல் வருடம் வட்டி 8 சதவீதம் என்று ஸ்டேட் வங்கி அறிவித்தாலும் அறிவித் தது... வங்கிகளுடையே போட்டி உண்டாகியுள்ளது. வேறு சில வங்கிகளும் 8 சதவீதம் தான் முதல் வருட வட்டி என்று அறிவித் துள்ளன. ஆனால், அது ஐந்து லட்சம் வரை உள்ள லோன்களுக்குத் தான் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வீட்டு விலையும் குறைகிறது, வட்டியும் குறைகிறது. முதலீட்டாளர்களுக்கு லாபம் தானே? அடுத்த வாரம் பங்குச் சந்தை ரிசர்வ் வங்கியை நம்பி இருக்கும். ரேட் கட் வந்தால் சந்தை சிறிது உயிர் பெறும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : dinamalar