Showing posts with label மியூச்சுவல் ஃபண்ட். Show all posts
Showing posts with label மியூச்சுவல் ஃபண்ட். Show all posts

Friday, January 22, 2010

போஸ்ட்ஆபீசில் பெறலாம் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியை

தமிழகத்தில் உள்ள போஸ்ட் ஆபீசில், ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியலின் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக தபால் துறையுடன் ஐ.சி.ஐ.சி.ஐ., புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல். இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல் விற்பனை பிரிவு மூத்த துணைத் தலைவர் அனுப் ராவ் கூறும்போது, இந்த ஒப்பந்தப்படி தமிழகத்தில் உள்ள 12,179 போஸ்ட் ஆபீஸ்களில் ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியில் சேரலாம். ஏற்கனவே பாலிசியில் சேர்ந்துள்ளவர்கள், இணைய தளம் மூலம் இணைக்கப்பட்டுள்ள 1,129 போஸ்ட் ஆபிஸ்களில் பிரீமியம் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Thursday, December 10, 2009

'டல்' அடிக்குது பங்குச் சந்தை: டபாய்க்குமா, பறக்குமா?

உலகளவில் பிரச்னைகள் இல்லாததால் சந்தையிலும் பெரிய மாற்றம் இல்லை. சரிவில் வாங்கியவர்கள் லாபமடைந்தனர்; விற்றவர்களும் மறுபடி ஒரு சரிவுக்காக காத்திருக்கின்றனர். திங்களும், நேற்றும் சிறிய சரிவைச் சந்தித்தன. ஆனால், நேற்று முன்தினம் சந்தை, 'ஜம்'மென பயணித்தது. பெரிய துபாய் புயலுக்கு பிறகும், சந்தை 17,000 புள்ளிகளுக்கும் மேலே தான் இருக்கிறது. திங்களன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, நேற்று முன் தினம், பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை தான், சந்தை யை 244 புள்ளிகளுக்கு மேல் தூக்கிச் சென்றது. அதாவது, 'வரும் மார்ச் மாதம், அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் அதிகப்படியாக செலவழிக்கும். அதற்காக பார்லிமென் டின் அனுமதியை கோரும். சில மாதங்களுக்குள் அரசு நிறுவன பங்குகள் விற்பனை நடக்கும்' எனக் கூறினார். இது, சந்தையை மேலே தூக்கிச் சென்றது. நேற்று முன்தினம், 'நிப்டி' 18 மாத உச்சத்திற்கு போனது ஒரு சாதனை. கடந்த ஆண்டு சோதனை படைத்த சந்தை, தற்போது சாதனை படைப்பது, ஆறுதல். நேற்று சந்தை மதிப்பு உலகளவில் குறைந்திருந்ததால், இங்கும் குறைந்தது. மெட்டல் மற்றும் வங்கிப் பங்குகள், சரிவுக்கு காரணமாக இருந்தன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 102 புள்ளிகள் குறைந்து 17,125 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை 35 புள்ளிகள் குறந்து 5,112 புள்ளிகளுடனும் முடிந்தது.

புதிய வெளியீடுகள் : ஜே.எஸ்.டபிள்யூ., எனர்ஜி (ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் கம் பெனியின் ஒரு அங்கம்) தனது புதிய வெளியீட்டை டிச., 7ம் தேதி முதல் கொண்டு வந் தது. நேற்றைய இறுதியில் 1.67 தடவை செலுத்தப்பட்டிருந்தது. வெளியீடு முடிந்தது.கோத்ரெஜ் பிராபர்டீசின் புதிய வெளியீடு நேற்று வரை 1.23 தடவை வரை செலுத்தப்பட்டிருந்தது. வெளியீடு நாளை வரை திறந்திருக்கும்.

மியூச்சுவல் பண்ட்கள் : கடந்த ஆண்டு சந்தை குறைவாக இருந்த போது, மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் கோடிகளுக்கும் கீழே சென்றிந்தது. தற்போது, மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு எட்டு லட்சம் கோடிகளுக்கும் மேலே சென் றிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு கூடியுள்ளது; அதே சமயம் முதலீட்டாளர் களும் அதிகளவில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்துள்ளனர்.

தற்போது, பங்குச் சந்தைகள் டெர்மினல்கள் மூலமாகவே, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவைகள் மூலமாக மியூச்சுவல் பண்ட்களின் யூனிட்டுகளை வாங்கலாம். சில மியூச்சுல் பண்ட்கள் தங்களை பங்குச் சந்தைகள் இணைத்துக் கொண்டுள்ளன. இன்னும் பல மியூச்சுவல் பண்ட்கள் சேரவும் உள்ளன. மதியம் 3 மணி வரை அன்றைய விலையிலேயே வாங்கலாம் என்பது தான் இதில் விசேஷம். தற்சமயம் மறுபடி பல மியூச்சுவல் பண்ட்கள் தங்களது புதிய வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளன. காற் றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டுமே?

வீட்டுக் கடன் சந்தையில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. ஆதலால், வீட்டுக்கடன் 8 சதவீதத்தை தொட்டு விட்டது. கடன் கொடுப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி வேறு. கடன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். ஆனால், வீடு விலை குறைய வேண்டுமே? கனவு இல்லத்தை நனவு இல்லமாக ஆக்க வாருங்கள் என்று, கூவிக் கூவி வீட்டுக் கடன் கம்பெனிகள் அழைக் கின்றன. பணப் புழக்கம் அதிகமாக இருப்பதால், ரிசர்வ் வங்கி அதைக் குறைப்பதற்காக சி.ஆர்.ஆர்., சதவீதத்தை கூட்டி விடுமா என்ற பேச்சு வேறு அடிபடுகிறது.

நவம்பர் கார் விற்பனைகார் விற்பனை சூடு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே சமயம் விற்பனையை விட, 46 சதவீதம் கூடியுள்ளது. கார் கம்பெனிகளின் பங்குகளுக்கு கொண்டாட்டம் தான். கடந்த ஆண்டு அதிகம் அடிபட்ட பங்குகள் கார் கம்பெனிகள். தற்போது ஜம்மென சுகமான சாலையில் வழுக்கிக் கொண்டு செல்லும் கார் போல அந்தக் கம்பெனிகளின் பங்குகள் பயணிக்கின்றன.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? : சந்தை சிறிய ஏற்ற, இறக்கங்களுடன் தான் இருக்கும். நல்ல வாய்ப்புகளுக்கு காத்திருங்கள். தற்போது வாங்குவதாக இருந்தால் ப்ளூ சிப் பங்குகளாக பார்த்து வாங்குகள். குறுகிய காலத்தில் நஷ்டம் இருந்தாலும் நீண்டகாலத்தில் லாபம் இருக்கும். இந்த வாரத்தில் பொதுவாக பார்த்தால், மேலேயும் போகமால் கீழேயும் வராமல், 'டல்' அடித்து கொண்டிருக்கிறது. மேலே பறக்குமா அல்லது டபாயக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5,200க்கு மேல் நிப்டி நான்கு நாட்களுக்கு நிலை பெற்றால், பலரும் உள்ளே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. லாபம் இருந்தால் கையில் காசு பார்ப்பதே உத்தமம்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


Sunday, November 15, 2009

புதிய சலுகைகளை வழங்க ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் திட்டம்

அடுத்த ஆண்டிற்குள் புதிய சலுகைகளை வழங்க ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், மிக சிறந்த மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின், முதல் பத்து இடத்திற்குள் வந்து விட வேண்டும் என்ற இந்நிறுவனத்தின் இலக்கே இந்த சலுகைகளை வழங்க காரணமாகும்.

மிக சிறந்த பத்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதலீட்டாளர்களை கவரும் விதமாக பல்வேறு புதிய சலுகைகளை அளிக்க இருப்பதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என்றும் ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Thursday, October 22, 2009

பங்குச்சந்தையில் ரூ. 13,957 கோடி முதலீடு: மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு

பங்குச் சந்தையில் 13 ஆயிரத்து 957 கோடி ரூபாயை முதலீடு செய்ய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஷேர்கான் ஆய்வு நிறுவனத்தின் மியூச்சுவல் பண்ட் பிரிவு ஆய்வாளர் ஷப்னா ஜவார் கூறும் ‌போது, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களிடம் ரொக்கமாக ரூபாய் 13 ஆயிரத்து 957 கோடி இருப்பதாகவும், இதை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான தக்க தருணத்திற்காக காத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 957 கோடியில், ஏற்கனவே திரட்டிய தொகை ரூ. 13 ஆயிரத்து 045 கோடி ஆகும். புதிய யூனிட்டுகள் வெளியீட்டு மூலம் ரூ. 912 கோடி திரட்டப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Thursday, June 25, 2009

ரூ.50 ஆயிரம் முதலீட்டுக்கு பான் எண் தேவையில்லை

மியூச்சுவல் பண்ட் உட்பட, 'சிப்' திட்டங்களில் 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்ய, 'பான்' கார்டு எண் கட்டாயம் இல்லை.'சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' (சிப்) திட்டங்களில் முதலீடு செய்ய, 'பான்' கார்டு எண் கட்டாயம் என்று 2007ல், பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டது. இதனால், மியூச்சுவல் பண்ட் திட் டங்களில் முதலீடு செய்வோரிடையே கலக்கம் ஏற்பட்டது.இது போன்ற திட்டங்களில் தனி நபர்களும், நிறுவனங்களும் முதலீடு செய்வது வழக்கம். தனி நபர் முதலீடுகள் அதிகம் வருவதைத் தான் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எதிர் பார்க்கின்றன. அது தான் சீரான வர்த்தகத்துக்கு வழி வகுக்கும் என்பதால் தான்.கடந்தாண்டு, தனி நபர்களை விட, நிறுவனங்களின் முதலீடுகள் தான் அதிகம். ஆனால், திடீரென பெரும்பாலான முதலீடுகளை திரும்பப் பெற்றுக்கொண்டதால், சிக்கல் ஏற்பட்டது.தனி நபர்கள் அதிகளவில் முதலீடு செய்யாமல் இருப்பதற்கு காரணம், 'பான்' எண் குறிப்பிட வேண்டும் என் பது தான். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படவே, அரசும் பரிசீலித்தது.'சிப்' வகையிலான முதலீடுகளில் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் முதலீடு செய்யும் போது, 'பான்' எண் கட்டாயம் இனி இருக்காது. இது தொடர்பாக மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வரும்.இது குறித்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கத்தலைவர் குரியன் கூறுகையில், 'மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, 'பான்' கட்டாயம் என்ற வரம்பில் தளர்வு கொண்டு வர மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது' என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Friday, April 3, 2009

மார்ச் மாதத்தில் ரூ.7,000 கோடி முதலீட்டை இழந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்

பரஸ்பர நிதி என்று சொல்லப்படும் மியூச்சுவல் பண்ட்டின் முதலீடு, மார்ச் மாதத்தில் ரூ.7,000 கோடிக்கு மேல் குறைந்திருக்கிறது. எனவே இப்போது மியூச்சுவல் ஃபண்ட்டின் மொத்த முதலீடு ரூ.5 லட்சம் கோடிக்கும் கீழே சென்று விட்டது. ஆனால் மற்ற எல்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் மார்ச் மாதத்தில் முதலீட்டை இழந்திருக்கும்போது, ஹெச்.டி.எஃப்.சி.பேங்க் மட்டும் ரூ.1,000 கோடி முதலீட்டை கூடுதலாக பெற்றிருக்கிறது. மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருக்கும் 34 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் ( ' அசட் அன்டர் மேனேஜ்மென்ட் ' - ஏ யு எம் ) முதலீடு ரூ.7,709.10 கோடி ( 1.54 சதவீதம் ) குறைந்து ரூ.4,93,264.28 கோடியாகி விட்டது என்று அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் பண்ட் இன் இந்தியா தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மியூச்சுவல் பண்டில் செய்யப்பட்டிருந்த மொத்த முதலீடு ரூ.5,00,973.38 கோடியாக இருந்தது. இந்தியாவின் பிரபல முதலீட்டு நிறுவனங்களான ரிலையன்ஸ் எம்.எஃப், ஐசிஐசிஐ புருடென்ஸியல், யு.டி.ஐ.எம்.எஃப், மற்றும் எல்.ஐ.சி.எம்.எஃப்., ஆகியவை மட்டும் மொத்தமாக ரூ.4,3058.53 கோடியை மார்ச் மாதத்தில் இழந்திருக்கிறது. ஆனால் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் கூடுதலாக ரூ.1,092.05 கோடி முதலீட்டை பெற்றிருக்கிறது.
நன்றி : தினமலர்


Thursday, March 19, 2009

டிஎஸ்பி மெரில் லிஞ்சின் 10 சதவீத பங்குகளை விற்றார் ஹேமந்த்ரா கோத்தாரி

டிஎஸ்பி மெரில் லிஞ்ச் நிறுவனத்தில் இருந்த 10 சதவீத பங்குகளை விற்று விட்டார் அதன் சேர்மன் ஹேமந்த்ரா கோத்தாரி. நிண்ட காலமாகவே நான் இதை விற்று விட தீர்மானித்திருந்தேன். இப்போது விற்று விட்டேன் என்றார் ஹேமந்த்ரா கோத்தாரி. இவருக்கு அந்த நிறுவனத்தில் இருந்த பங்குகளில் 48 சதவீத பங்குகளை ஏற்கனவே கடந்த 2006 ம் வருடம் அவர் டிஎஸ்பி மெரில் லிஞ்ச் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெரில் லிஞ்ச்க்கு விற்று விட்டார். இப்பேது மீதி இருந்த 10 சதவீதத்தையும் விற்றிருக்கிறார். எனவே இதன் மூலம் டி எஸ் பி மெரில் லிஞ்ச் நிறுவனம் முழுவதும் அதன் தாய் நிறுவனமான மெரில் லிஞ்ச் இடம் சென்று விட்டது. அதாவது மெரில் லிஞ்ச் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய பேங்க் ஆஃப் அமெரிக்காவிடம் சென்று விட்டது. மார்ச் 31ம் தேதியுடன் டிஎஸ்பி மெரில் லிஞ்ச்சில் இருந்து ஹேமந்த்ரா கோத்தாரி ஓய்வு பெற்று விட்டாலும், தொடர்ந்து நான் - எக்ஸிகூடிவ் சேர்மனாக டிஎஸ்பி மெரில் லிஞ்ச்சின் அசட் மேனேஜ்மென்ட் நிறுவனமான டிஎஸ்பி பிளாக்ராக் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கோத்தாரியில் பங்குகள் விற்கப்பட்டு விட்டதால் அதில் பணிபுரிந்து வரும் 450 ஊழியர்களுக்கு எந்த வித பாதிப்பும் வராது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, March 3, 2009

மியூச்சுவல் ஃபண்ட்டின் முதலீடு மீண்டும் ரூ.5 லட்சம் கோடியை தாண்டியது

நான்கு மாத இடைவேளைக்குப்பின் மியூச்சுவல் ஃபண்ட்டின் முதலீடு மீண்டும் ரூ.5 லட்சம் கோடியை தாண்டியிருக்கிறது. தொடர்ந்து ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக இருக்கிறது. பிப்ரவரி கடைசியியில் கணக்கிட்டபோது அதன் ஆவரேஜ் ஏ.யு.எம் ( அசட் அன்டர் மேனேஜ்மென்ட் ) ரூ.5,500 கோடியாக உயர்ந்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட்டின் முதலீடு ரூ.40,000 கோடி ( 8.8 சதவீதம் ) அதிகரித்திருக்கிறது. இந்த உயர்வுக்கு காரணம், வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் மக்கள் பெருமளவில் முதலீடு செய்ய முன் வந்ததுதான் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 34 மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ்களில் ஜனவரி மாதம் முடிய ரூ.4,60,948.99 கோடியாக இருந்த ஏ.யு.எம்., பிப்ரவரி மாத கடைசியில் ரூ.5,00,973.37 கோடியாக உயர்ந்திருக்கிறது. அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ரூ.5,00,000 கோடியை தாண்டியிருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்டின் ஏ.யு.எம்., இதற்கு முன் கடந்த வருடம் செப்டம்பரில் ரூ.5,28,871.75 கோடியாக இருந்தது.
நன்றி : தினமலர்