Sunday, December 13, 2009

பயோகான் நிறுவனம் சாப்பிடக்கூடிய இன்சுலின் மருந்து தயாரிக்கிறது

பெங்களூரைச் சேர்ந்த மருந்து நிறுவனமான பயோகான், சாப்பிடக் கூடிய இன்சுலின் மருந்துப் பொருள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் இடையூறு இல்லாமல் நடைபெறுமானால் 2011ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த இன்சுலின் மருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிரண் மசூம்தார் தெரிவித்தார். புதிய மருந்துக்கு இன்-105 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை மற்றும் ஆய்வுகள் மூன்றாவது கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். நாடு முழுவதுமாக 15 ஆராய்ச்சி மையங்களில் இந்த மருந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் இந்த மருந்தை தயாரித்து சந்தைப்படுத்துவற்கான ஒப்புதல் மற்றும் உரிமம் போன்றவற்றைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது.
நன்றி :தினமலர்