ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சிஏஜி அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப்பதும், உச்ச நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல்வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார்.
மிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்திரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்பந்தமே இல்லாத அந்தக் குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் பெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட உடனேயே தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும், கேட்கவில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டவர்.
முதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரியார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால்தான் மேலும் மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்துகின்றன என்கிறார்.
கருணாநிதிக்குத் தெரியுமா? டி.டி. கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். உடன் பெருந்தலைவர் காமராஜும் வருகிறார். கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் செல்கின்றனர். எல்லோரும் சட்டையைக் கழற்றுகின்றனர். காமராஜ் சட்டையைக் கழற்றுகிறார். டி.டி.கே. சட்டையைக் கழற்றவில்லை. காமராஜ் சொல்லுகிறார்-"அவன் பூணூல் போட்டிருக்க மாட்டான், அதான் கழற்ற மாட்டேங்கிறான்' என்று! அந்த ஆச்சாரியாரின் ஆச்சரியமான ஆச்சாரத்தைப் பார்த்துச் சுற்றி இருந்தோர் வியந்தனர்.
காங்கிரஸ் கட்சி தனது மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணை பதவி விலக வைத்திருக்கிறதே! அவர்மீது விசாரணை நடக்கப் போகிறதே! அவர் என்ன தலித்தா? சுரேஷ் கல்மாடியைப் பதவி விலகச் சொல்லியுள்ளதே, அவர் என்ன தலித்தா?
கருணாநிதிக்கு நினைவிருக்கும். அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்கு தமிழர் ஓ.வி. அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். "அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா?' என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே. விபத்து நடந்த சில மணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து பெரியவர் லால் பகதூர் சாஸ்திரியும் நம்மவர் ஓ.வி.அளகேசனும் பதவி விலகினார்களே! அவர்கள் தலித்துகளா?
போஃபர்ஸ் பீரங்கி என்று தமிழகம் முழுவதும் ரூ. 64 கோடிக்கு விசாரணை வேண்டும். ராஜீவ் காந்தியைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே!
இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்க்கு கேள்வியே கேட்கக் கூடாது என்கிறீர்களே! என்ன நியாயம்?
1967-ல் ஜெயலலிதா கட்டிய வருமான வரி என்ன? இன்று அவர் கட்டுகிற வருமான வரி என்ன என்று கேட்கிற கருணாநிதி, அவர் 67-ல் கட்டிய வருமான வரி என்ன? இப்போது கட்டுகிற வரி என்ன என்று சொல்வாரா? பத்திரிகைகளைப் பார்ப்பனப் பத்திரிகைகள் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இந்த சாமானியனின் சாயம் வெளுத்துவிடும் என்பதாலா?
ஜெயலலிதாவைப் பார்ப்பனத்தி என்று இவர் பேசினால் வீரமணி கோபம் கொள்வார். அவர்தான் ஜெயலலிதாவுக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை' என்று பட்டம் கொடுத்தவர். கருணாநிதிக்குக்கூட அந்தப் பட்டத்தை அவர் வழங்கவில்லை.
பார்ப்பனப் பத்திரிகைகள் என்று குறிப்பிடுகிற கருணாநிதி, அவற்றை முதலில் இருந்தே இவை பார்ப்பனப் பத்திரிகைகள் என்று புறக்கணித்திருந்தால் நமக்குப் புரியும், இவர் சரியான பெரியாரின் சீடர் என்று. "சோ'வைப் பார்ப்பான் என்பார். பிறகு "சோ'வே என்னைப் பாராட்டியிருக்கிறார் தெரியுமா என்பார்.
ஓர் ஆங்கில நாளேட்டை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்பார். பிறகு அந்தப் பத்திரிகையே தன்னைப் பாராட்டியிருக்கிறது என்று பெருமை பேசுவார்.
இவர் குடும்பத்தினர் நடத்துகிற பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதெல்லாம் பார்ப்பனர்கள்தான். எதற்கு அவர்களை இந்தப் பெரியாரின் சீடர் குடும்பம் வளர்க்கிறது? பார்ப்பன வாடையே படாமல் இவர்களின் ஊடகம் நடக்காதா, என்ன?
ஜெமினி கணேசன் பிறந்த நாளில் கலந்துகொள்கிறார். ஜெமினியின் மாமா ஒருவர் முதல் மனைவியை இழந்துவிட்டாராம். உடனே எங்கள் இசை வேளாளர் குடும்பத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார். அவரின் பெண்தான் முத்துலெட்சுமி ரெட்டி என்கிறார். அப்படியென்றால், இந்தியச் சட்டப்படி முத்துலெட்சுமி பார்ப்பனப் பெண்தானே! அவரை ஏன் இவர் புகழ்கிறார்?
ஜாதிய ஒழிப்பில் ஈடுபட வேண்டிய கருணாநிதி, இன்னும் தன் ஜாதியைக்கூட மறக்க மாட்டேன் என்கிறாரே. கேட்டால், தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவன் என்பார். தன் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தவரே இவர்தானே!
பார்ப்பனர்களை இவ்வளவு வசைபாடும் கருணாநிதி, தன் குடும்பத்து இளைஞர்களிடம் பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கலாமே? சொல்லமாட்டார். பார்ப்பனீயம் அவருக்கு மட்டும் இனிக்க வேண்டும். மற்றவர்களுக்குக் கசக்க வேண்டும். இதுதான் கருணாநிதியின் பகுத்தறிவு தர்மம்.
தனக்குச் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிற கருணாநிதி, நீரா ராடியா, கனிமொழி, ராசா ஒலிக் குறுந்தகடுகள் குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே, ஏன்? ஆ. ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது நீரா ராடியாவா, இல்லை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியா என்று ஆங்கிலப் பத்திரிகைகள் கேள்வி கேட்டு திமுகவின் மானத்தைச் சந்தி சிரிக்கச் செய்கின்றனவே, அதைப்பற்றி இவர் எதுவுமே பேசுவதில்லையே, ஏன்?
ஒவ்வொரு தேர்தலின்போதும் நான் தாழ்த்தப்பட்ட பெண்ணை மருமகளாக்கியிருக்கிறேன் என்பார். தன் வீட்டு மருமகளாகிவிட்ட பெண்ணை ஒவ்வொரு தேர்தலின்போதும் தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருணாநிதி செய்கிற மரியாதையா? அவமரியாதையா? அவரது உள்மனதில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் மருமகளாகிவிட்டாளே என்கிற ஆதங்கத்தின், உள்மனதின் ஓலம்தானே அது? அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஆபத்து வருகிறபோதெல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பேசுகிற கருணாநிதி, ஏதாவது பெரும்பான்மை ஜாதி குறித்துப் பேசுவாரா? இதுவரை பேசியிருக்கிறாரா?
ராஜாஜி என்கிற பார்ப்பனர்தான் காமராஜையும், காங்கிரûஸயும் வீழ்த்த இவர்களுக்கு உதவினார். உடனே அவரை மூதறிஞர் என்றார்கள். அதற்கு முன்புவரை அவர் குல்லுக பட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார்!
மார்க்சிஸ்டுகளோடு தேர்தல் உறவா, தோழர் பி. இராமமூர்த்தியை சர்வதேசச் சிந்தனையாளர் என்பார்கள். உறவு முறிந்த மறுகணமே நொண்டிப் பார்ப்பான் இராமமூர்த்தி என்பார்கள்.
தோழர் ரங்கராஜனைக்கூட பார்ப்பனர் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியவர் கருணாநிதி.
இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சிவகங்கைச் சின்னப் பையன், சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை. அந்தப் பையன் என்னைப் பேசுகிறான் என்றவர்தானே கருணாநிதி.
வேலூரில் ""நேருவே ஆரிய திராவிட யுத்தம்'' என்று எழுதியிருக்கிறார் என்று சான்று காட்டுகிறார் கருணாநிதி.
என்ன செய்ய கருணாநிதி அவர்களே! அந்த நேருவும்கூட ஒரு பார்ப்பனர்தான். ஆமாம் காஷ்மீரத்து பண்டிட்தானே
கட்டுரையாளர் : நெல்லைகண்ணன்
நன்றி : தினமணி
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Thursday, December 2, 2010
Wednesday, September 1, 2010
மறுபக்கம்...
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் நல்லதொரு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின் உச்சகட்டம்தான் தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவம்.
கோவை விவசாயப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுச் சுற்றுலாவுக்காகச் சென்றிருந்த பஸ் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி எரிக்கப்பட்ட சம்பவம் இன்றைக்கும் நமது மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. 44 சக மாணவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த கோகிலாவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று பேரும் வெறிபிடித்த கும்பலுடைய ஆத்திரத்தின் விளைவால் எரிந்து சாம்பலான கொடூரமான சம்பவம் தமிழக சரித்திரத்திலேயே ஒரு கரும்புள்ளி.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, பி.எஸ். சௌஹான் இருவரும் எழுதியிருக்கும் தீர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி பாராட்டுக்குரியது. நமது இந்திய சமுதாயம் எப்படி மரத்துப்போன இதயங்களுக்குச் சொந்தமாகிவிட்டிருக்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு வருத்தத்துடன் பதிவு செய்கிறது. பொதுமக்கள், கடைக்காரர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என்று பல நூறு பேர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களேதவிர, அந்த அப்பாவி மாணவிகளை எரியும் பஸ்ஸிலிருந்து மீட்கவோ வெறிபிடித்த கும்பலை அடித்து விரட்டவோ ஒருவர்கூட தங்களது சுட்டுவிரலை அசைக்கவில்லை என்கிற இரக்கமற்ற தன்மையைத் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.
2007-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி சேலத்திலுள்ள விசாரணை நீதிமன்றம் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையும் ஏனைய 25 பேருக்குக் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியதுபோலவே, இப்போது உச்ச நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியிருப்பதன்மூலம் இந்தியாவில் இன்னும் நீதி செத்துவிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதாலேயே அடிப்படைப் பிரச்னை முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. இந்திய அரசியலில் காணப்படும் சில அநாகரிகமான போக்குக்கும் முடிவு கட்டப்படுமானால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். இந்தப் பிரச்னையில் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடையும் ஏனைய கட்சிகளின் போக்குமட்டும் பாராட்டக்கூடியதாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் நிஜம்.
"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்கிற அறிஞர் அண்ணாவின் கோஷத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் அனைத்துமே தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தைப்போல, தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன.
தருமபுரியில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஏனைய நிகழ்வுகளில் பொதுச்சொத்துகளுக்குச் சேதமும் பொதுமக்களுக்குத் துன்பமும் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் வேறுபாடு.
தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வெறிபிடித்த கும்பலாக்குவதன் மூலம் தங்களது தலைமையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்கிற கருத்து பரவலாகவே நமது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால், தொண்டர்கள் தீக்குளிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் உதவித்தொகை அளிக்க இந்தக் கட்சிகள் முன்வருவானேன்?
உணர்ச்சிவசப்படுபவர்களையோ, தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கோழைகளையோ ஆதரிக்க முடியாது, கூடாது என்று ஏதாவது ஒரு தமிழக அரசியல் கட்சித் தலைவர் சொன்னதுண்டா? சொல்ல மாட்டார்கள். பல லட்சம் ரூபாய் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை அளித்து, தனக்காக இத்தனை பேர் உயிர்ப்பலி கொடுத்தனர் என்று அதையே அரசியல் ஆதாயமாக்க விரும்புபவர்கள்தான் பெருவாரியான தமிழக அரசியல் தலைவர்கள்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நடந்த வன்முறையில் நாசப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகள் கொஞ்சமாநஞ்சமா? எம்ஜிஆர் இறந்த செய்தி கேட்டு தமிழகமெங்கும் நடந்த வன்முறைகளும், அதையே காரணமாக்கி தமிழகமெங்கும் சூறையாடப்பட்ட கடைகளும், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளும் கொஞ்சமாநஞ்சமா? வன்னியர் போராட்டத்தின்போதும், வைகோ திமுகவிலிருந்து விலக்கப்பட்டபோதும் தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் மட்டுமென்ன சாதாரணமானதா?
விடுதலைப் போராட்டத்தில் அன்னியர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைப்போல, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளைப்போல ஒரு சுதந்திர நாட்டில், அதிலும் குறிப்பாக, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வன்முறைக்கும், வெறிச்செயல்களுக்கும் தேவைதான் என்ன? நல்ல தலைவர்களாக இருந்தால் தங்களது தொண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதை எப்படி அனுமதிக்கலாம்?
தனி மனிதன் செய்தால் சட்டப்படி குற்றம் என்று கருதப்படும் செயல்களை, வெறிபிடித்த கும்பல் செய்தால் நியாயமாகி விடுகிறதே, இதற்கு நமது அரசியல் கட்சித் தலைவர்கள்தானே காரணம். கடமை உணர்வோடு, கண்ணியமாகவும் கட்டுப்பாடுடனும் தனது தொண்டர் கூட்டத்தை மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் தலைவர் இவர் என்று அடையாளம் காட்ட தமிழகத்தில் ஒருவர்கூட இல்லாத நிலையில், என்ன சொல்லி என்ன பயன்?
பொதுமக்களையும், பொதுச்சொத்துகளையும் பாதுகாக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும்போது, தேட முற்படும்போது தருமபுரியில் நடந்ததுபோல பஸ் மட்டுமா எரியும், மனித தர்மமே அல்லவா எரிந்து சாம்பலாகும்...
நன்றி : தினமணி
கோவை விவசாயப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுச் சுற்றுலாவுக்காகச் சென்றிருந்த பஸ் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி எரிக்கப்பட்ட சம்பவம் இன்றைக்கும் நமது மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. 44 சக மாணவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த கோகிலாவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று பேரும் வெறிபிடித்த கும்பலுடைய ஆத்திரத்தின் விளைவால் எரிந்து சாம்பலான கொடூரமான சம்பவம் தமிழக சரித்திரத்திலேயே ஒரு கரும்புள்ளி.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, பி.எஸ். சௌஹான் இருவரும் எழுதியிருக்கும் தீர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி பாராட்டுக்குரியது. நமது இந்திய சமுதாயம் எப்படி மரத்துப்போன இதயங்களுக்குச் சொந்தமாகிவிட்டிருக்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு வருத்தத்துடன் பதிவு செய்கிறது. பொதுமக்கள், கடைக்காரர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என்று பல நூறு பேர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களேதவிர, அந்த அப்பாவி மாணவிகளை எரியும் பஸ்ஸிலிருந்து மீட்கவோ வெறிபிடித்த கும்பலை அடித்து விரட்டவோ ஒருவர்கூட தங்களது சுட்டுவிரலை அசைக்கவில்லை என்கிற இரக்கமற்ற தன்மையைத் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.
2007-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி சேலத்திலுள்ள விசாரணை நீதிமன்றம் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையும் ஏனைய 25 பேருக்குக் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியதுபோலவே, இப்போது உச்ச நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியிருப்பதன்மூலம் இந்தியாவில் இன்னும் நீதி செத்துவிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதாலேயே அடிப்படைப் பிரச்னை முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. இந்திய அரசியலில் காணப்படும் சில அநாகரிகமான போக்குக்கும் முடிவு கட்டப்படுமானால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். இந்தப் பிரச்னையில் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடையும் ஏனைய கட்சிகளின் போக்குமட்டும் பாராட்டக்கூடியதாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் நிஜம்.
"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்கிற அறிஞர் அண்ணாவின் கோஷத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் அனைத்துமே தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தைப்போல, தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன.
தருமபுரியில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஏனைய நிகழ்வுகளில் பொதுச்சொத்துகளுக்குச் சேதமும் பொதுமக்களுக்குத் துன்பமும் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் வேறுபாடு.
தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வெறிபிடித்த கும்பலாக்குவதன் மூலம் தங்களது தலைமையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்கிற கருத்து பரவலாகவே நமது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால், தொண்டர்கள் தீக்குளிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் உதவித்தொகை அளிக்க இந்தக் கட்சிகள் முன்வருவானேன்?
உணர்ச்சிவசப்படுபவர்களையோ, தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கோழைகளையோ ஆதரிக்க முடியாது, கூடாது என்று ஏதாவது ஒரு தமிழக அரசியல் கட்சித் தலைவர் சொன்னதுண்டா? சொல்ல மாட்டார்கள். பல லட்சம் ரூபாய் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை அளித்து, தனக்காக இத்தனை பேர் உயிர்ப்பலி கொடுத்தனர் என்று அதையே அரசியல் ஆதாயமாக்க விரும்புபவர்கள்தான் பெருவாரியான தமிழக அரசியல் தலைவர்கள்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நடந்த வன்முறையில் நாசப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகள் கொஞ்சமாநஞ்சமா? எம்ஜிஆர் இறந்த செய்தி கேட்டு தமிழகமெங்கும் நடந்த வன்முறைகளும், அதையே காரணமாக்கி தமிழகமெங்கும் சூறையாடப்பட்ட கடைகளும், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளும் கொஞ்சமாநஞ்சமா? வன்னியர் போராட்டத்தின்போதும், வைகோ திமுகவிலிருந்து விலக்கப்பட்டபோதும் தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் மட்டுமென்ன சாதாரணமானதா?
விடுதலைப் போராட்டத்தில் அன்னியர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைப்போல, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளைப்போல ஒரு சுதந்திர நாட்டில், அதிலும் குறிப்பாக, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வன்முறைக்கும், வெறிச்செயல்களுக்கும் தேவைதான் என்ன? நல்ல தலைவர்களாக இருந்தால் தங்களது தொண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதை எப்படி அனுமதிக்கலாம்?
தனி மனிதன் செய்தால் சட்டப்படி குற்றம் என்று கருதப்படும் செயல்களை, வெறிபிடித்த கும்பல் செய்தால் நியாயமாகி விடுகிறதே, இதற்கு நமது அரசியல் கட்சித் தலைவர்கள்தானே காரணம். கடமை உணர்வோடு, கண்ணியமாகவும் கட்டுப்பாடுடனும் தனது தொண்டர் கூட்டத்தை மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் தலைவர் இவர் என்று அடையாளம் காட்ட தமிழகத்தில் ஒருவர்கூட இல்லாத நிலையில், என்ன சொல்லி என்ன பயன்?
பொதுமக்களையும், பொதுச்சொத்துகளையும் பாதுகாக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும்போது, தேட முற்படும்போது தருமபுரியில் நடந்ததுபோல பஸ் மட்டுமா எரியும், மனித தர்மமே அல்லவா எரிந்து சாம்பலாகும்...
நன்றி : தினமணி
Labels:
அரசியல்,
தலையங்கம்,
நீதி மன்றம்
Friday, August 20, 2010
இது ரசிகனின் குரல்...
சென்னையிலுள்ள திரையரங்குகளில் நடைபெறும் பகல் கொள்ளை ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
மாநில மனித உரிமை ஆணையம் சமீபத்தில் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதன்படி, துணை ஆணையர் நிலையிலுள்ள அதிகாரி ஒருவரைக் கொண்டு திரையரங்குகளில் நடைபெறும் சுரண்டல்களையும் பகல் கொள்ளைகளையும் விசாரித்து அதன் அடிப்படையில் காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. குறிப்பாக, திரைப்படம் பார்க்கவரும் ரசிகர்கள் குடிதண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவற்றை வெளியிலிருந்தோ தங்களது வீட்டிலிருந்தோ கொண்டு வரக்கூடாது என்று தடுப்பதும், பாதுகாப்பு என்ற பெயரில் அவற்றை அரங்குக்குள் நுழையும்போதே சோதித்துப் பறிப்பதும் தனிமனித உரிமை மீறல் என்று மாநில மனித உரிமை ஆணையம் கருதுகிறது என்பதை கரகோஷத்துடன் வரவேற்க வேண்டும்.
திரையரங்குகளில் நடைபெறும் கொள்ளைகளைத் தட்டிக் கேட்க யாருமில்லையே என்கிற மனப்புழுக்கத்துடன் படம்பார்க்க வரும் ரசிகர்கள்தான் பெரும்பாலோர். வெளியில், வெறும் 12-க்கு விற்கப்படும் மினரல் வாட்டர் திரையரங்குகளில் 30 முதல் 40. பாப்கார்ன் சிறியது 50, பெரியது 100 என்று விற்பது வெளியில் வெறும் பத்தே ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு காபி குடிக்க வேண்டுமானால் இந்தத் திரையரங்குகளில் 40 செலவழித்தாக வேண்டும். சென்னையிலுள்ள அதிநவீன திரையரங்குகளில் தொடங்கிய இந்த "தியேட்டர் கொள்ளை' இப்போது மாவட்டத் தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.
அதிநவீனத் திரையரங்குகள் சுமார் 10 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகின்றன. இந்தத் திரையரங்குகளில் உள்ள வசதிகள் முதலீடு போன்றவற்றைக் கருத்தில்கொண்டு அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது நியாயம்தான். ஆனால், அந்தக் கட்டணம் இவ்வளவுதான் என்கிற நிர்ணய வரம்பு இல்லாமல் இருக்கிறதே, அதுதான் அநியாயம்.
அதிநவீனத் திரையரங்குகளில் குறிப்பிட்ட இடங்கள் சாதாரண ரசிகனுக்கும் பயன்படும்படியாகக் குறைந்த கட்டணத்தில், அதாவது பத்தே பத்து ரூபாய் என்று அமைய வேண்டும் என்பது அரசின் நிபந்தனை. அதற்காக, ஒரு கண்துடைப்புப்போல, திரையை ஒட்டிய முதல் வரிசையை மட்டும் குறைந்த கட்டணம் என்று ஒதுக்குகிறார்கள். அதை ஒட்டுமொத்தமாக வாங்கி கறுப்பு மார்க்கெட்டில் விற்றுப் பணம் சம்பாதிப்பதற்கென்றே திரையரங்கு உரிமையாளர்களின் ஆசியுடன் இயங்கும் ஒரு "தாதா' கும்பல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏனைய அத்தனை சீட்டுகளும் 100 ரூபாய் கட்டணத்துக்கு மேல். இந்த அதிநவீனத் திரையரங்குகளில் 100 அல்லது 120 என்கிற இரண்டே கட்டணங்கள்தான்.
திரையரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதி, அந்த அரங்கத்தின் தொழில்நுட்பம், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில், திரையின் அருகில் சற்று பின்னால், அதற்கும்பின்னால், அதிகம் பின்னால் அமைந்த இருக்கைகளுக்கு ஏற்பக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட காலம், எம்.ஜி.ஆரின் ஆட்சியுடன் போய்விட்டது என்பதுதான் யதார்த்த உண்மை.
திரையரங்குகளில் இருக்கைக் கட்டணம் 100 அல்லது 120 என்று நிர்ணயிக்கப்பட்ட பிறகு அந்தக் கட்டணத்தைத்தானே எந்தத் திரைப்படமாக இருந்தாலும் வசூலிக்க வேண்டும். அப்படியொரு லாஜிக்கும் இன்றைய திரையரங்குகளில் கிடையாது. பிரபல நடிகர்கள் நடித்த புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, இருக்கைக் கட்டணத்தைத் திரையரங்குகளே தீர்மானித்துக் கொள்கின்றன. சில திரைப்படங்களுக்கு 1,000 வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிக்கும் திரையரங்குகள் பல.
குறைந்தது 1,000 இல்லாமல் குடும்பத்துடன் திரையரங்குக்குப்போய் திரைப்படம் பார்க்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதால்தானே திருட்டு டிவிடிக்கள் கோலோச்சுகின்றன. திருட்டு டிவிடிக்களை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிடும் திரைப்படத்துறையினர் திரையரங்குகளின் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி வற்புறுத்தாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை.
கட்டணம் வசூலிப்பது திரையரங்குகள் தரும் வசதிக்காகவே தவிர, இன்னார் திரைப்படத்துக்கு இன்ன கட்டணம், இத்தனை நாள்களுக்கு இவ்வளவு கட்டணம் என்று திரையரங்குகளே தீர்மானிப்பது பகல்கொள்ளை என்று தெரிந்தும் அரசு அதை ஏற்றுக்கொண்டிருக்கிறதே அதன் காரணம்தான் புரியவில்லை. அரசியல் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரிய அளவில் திரைப்படத் தொழிலில் ஏகபோக உரிமை செலுத்தத் தொடங்கியிருப்பது சமீபகாலத்தில்தான். ஆனால், இந்த நிலைமை நீண்டநாள்களாகவே தொடர்கிறது.
திரையரங்குகளின் கட்டணம், முதலீடு, தரம், வசதிகளைப் பொறுத்து 100 அல்ல, 1,000 கூட நிர்ணயிக்கப்படட்டும். வசதி உள்ளவர்கள் அங்கேபோய் திரைப்படம் பார்த்துக் கொள்ளட்டும். ஆனால், நடிகருக்குத் தகுந்தபடி, படத்துக்குப் படம் இந்தக் கட்டணம் வேறுபடுவது என்பது ஏற்புடையதல்ல. பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்தக் கட்டண நிர்ணயமுறை எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதன் காரணம் புரியவில்லை. ஆட்சிகள் மாறின. கட்சிகள் மாறின. கட்டணக் குளறுபடி மட்டும் மாறாமல் தொடர்கிறது.
திரையரங்குகள் வாடிக்கையாளர்களுக்கு முறையான விலையில் மட்டுமே உணவுப்பொருள்களை விற்க வேண்டும். ரசிகர்கள் கொண்டுவரும் உணவுப்பொருள்களைத் தடை செய்வது ஏற்புடையதல்ல. திரையரங்குகள் அசுத்தமாகும் என்பது அபத்தமான வாதம். அதற்காகத்தானே கட்டணம் வசூலிக்கிறார்கள். திரைப்படக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்வது திரைப்படத்துறையினருக்கும் நல்லதல்ல; நடிகர்களுக்கும் நல்லதல்ல.
இந்தப் பிரச்னைகளை மக்கள் மன்றத்தின் விவாதத்துக்குக் கொண்டு வந்திருக்கும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு நமது பாராட்டுகள்!
நன்றி : தினமணி
மாநில மனித உரிமை ஆணையம் சமீபத்தில் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதன்படி, துணை ஆணையர் நிலையிலுள்ள அதிகாரி ஒருவரைக் கொண்டு திரையரங்குகளில் நடைபெறும் சுரண்டல்களையும் பகல் கொள்ளைகளையும் விசாரித்து அதன் அடிப்படையில் காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. குறிப்பாக, திரைப்படம் பார்க்கவரும் ரசிகர்கள் குடிதண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவற்றை வெளியிலிருந்தோ தங்களது வீட்டிலிருந்தோ கொண்டு வரக்கூடாது என்று தடுப்பதும், பாதுகாப்பு என்ற பெயரில் அவற்றை அரங்குக்குள் நுழையும்போதே சோதித்துப் பறிப்பதும் தனிமனித உரிமை மீறல் என்று மாநில மனித உரிமை ஆணையம் கருதுகிறது என்பதை கரகோஷத்துடன் வரவேற்க வேண்டும்.
திரையரங்குகளில் நடைபெறும் கொள்ளைகளைத் தட்டிக் கேட்க யாருமில்லையே என்கிற மனப்புழுக்கத்துடன் படம்பார்க்க வரும் ரசிகர்கள்தான் பெரும்பாலோர். வெளியில், வெறும் 12-க்கு விற்கப்படும் மினரல் வாட்டர் திரையரங்குகளில் 30 முதல் 40. பாப்கார்ன் சிறியது 50, பெரியது 100 என்று விற்பது வெளியில் வெறும் பத்தே ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு காபி குடிக்க வேண்டுமானால் இந்தத் திரையரங்குகளில் 40 செலவழித்தாக வேண்டும். சென்னையிலுள்ள அதிநவீன திரையரங்குகளில் தொடங்கிய இந்த "தியேட்டர் கொள்ளை' இப்போது மாவட்டத் தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.
அதிநவீனத் திரையரங்குகள் சுமார் 10 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகின்றன. இந்தத் திரையரங்குகளில் உள்ள வசதிகள் முதலீடு போன்றவற்றைக் கருத்தில்கொண்டு அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது நியாயம்தான். ஆனால், அந்தக் கட்டணம் இவ்வளவுதான் என்கிற நிர்ணய வரம்பு இல்லாமல் இருக்கிறதே, அதுதான் அநியாயம்.
அதிநவீனத் திரையரங்குகளில் குறிப்பிட்ட இடங்கள் சாதாரண ரசிகனுக்கும் பயன்படும்படியாகக் குறைந்த கட்டணத்தில், அதாவது பத்தே பத்து ரூபாய் என்று அமைய வேண்டும் என்பது அரசின் நிபந்தனை. அதற்காக, ஒரு கண்துடைப்புப்போல, திரையை ஒட்டிய முதல் வரிசையை மட்டும் குறைந்த கட்டணம் என்று ஒதுக்குகிறார்கள். அதை ஒட்டுமொத்தமாக வாங்கி கறுப்பு மார்க்கெட்டில் விற்றுப் பணம் சம்பாதிப்பதற்கென்றே திரையரங்கு உரிமையாளர்களின் ஆசியுடன் இயங்கும் ஒரு "தாதா' கும்பல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏனைய அத்தனை சீட்டுகளும் 100 ரூபாய் கட்டணத்துக்கு மேல். இந்த அதிநவீனத் திரையரங்குகளில் 100 அல்லது 120 என்கிற இரண்டே கட்டணங்கள்தான்.
திரையரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதி, அந்த அரங்கத்தின் தொழில்நுட்பம், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில், திரையின் அருகில் சற்று பின்னால், அதற்கும்பின்னால், அதிகம் பின்னால் அமைந்த இருக்கைகளுக்கு ஏற்பக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட காலம், எம்.ஜி.ஆரின் ஆட்சியுடன் போய்விட்டது என்பதுதான் யதார்த்த உண்மை.
திரையரங்குகளில் இருக்கைக் கட்டணம் 100 அல்லது 120 என்று நிர்ணயிக்கப்பட்ட பிறகு அந்தக் கட்டணத்தைத்தானே எந்தத் திரைப்படமாக இருந்தாலும் வசூலிக்க வேண்டும். அப்படியொரு லாஜிக்கும் இன்றைய திரையரங்குகளில் கிடையாது. பிரபல நடிகர்கள் நடித்த புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, இருக்கைக் கட்டணத்தைத் திரையரங்குகளே தீர்மானித்துக் கொள்கின்றன. சில திரைப்படங்களுக்கு 1,000 வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிக்கும் திரையரங்குகள் பல.
குறைந்தது 1,000 இல்லாமல் குடும்பத்துடன் திரையரங்குக்குப்போய் திரைப்படம் பார்க்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதால்தானே திருட்டு டிவிடிக்கள் கோலோச்சுகின்றன. திருட்டு டிவிடிக்களை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிடும் திரைப்படத்துறையினர் திரையரங்குகளின் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி வற்புறுத்தாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை.
கட்டணம் வசூலிப்பது திரையரங்குகள் தரும் வசதிக்காகவே தவிர, இன்னார் திரைப்படத்துக்கு இன்ன கட்டணம், இத்தனை நாள்களுக்கு இவ்வளவு கட்டணம் என்று திரையரங்குகளே தீர்மானிப்பது பகல்கொள்ளை என்று தெரிந்தும் அரசு அதை ஏற்றுக்கொண்டிருக்கிறதே அதன் காரணம்தான் புரியவில்லை. அரசியல் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரிய அளவில் திரைப்படத் தொழிலில் ஏகபோக உரிமை செலுத்தத் தொடங்கியிருப்பது சமீபகாலத்தில்தான். ஆனால், இந்த நிலைமை நீண்டநாள்களாகவே தொடர்கிறது.
திரையரங்குகளின் கட்டணம், முதலீடு, தரம், வசதிகளைப் பொறுத்து 100 அல்ல, 1,000 கூட நிர்ணயிக்கப்படட்டும். வசதி உள்ளவர்கள் அங்கேபோய் திரைப்படம் பார்த்துக் கொள்ளட்டும். ஆனால், நடிகருக்குத் தகுந்தபடி, படத்துக்குப் படம் இந்தக் கட்டணம் வேறுபடுவது என்பது ஏற்புடையதல்ல. பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்தக் கட்டண நிர்ணயமுறை எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதன் காரணம் புரியவில்லை. ஆட்சிகள் மாறின. கட்சிகள் மாறின. கட்டணக் குளறுபடி மட்டும் மாறாமல் தொடர்கிறது.
திரையரங்குகள் வாடிக்கையாளர்களுக்கு முறையான விலையில் மட்டுமே உணவுப்பொருள்களை விற்க வேண்டும். ரசிகர்கள் கொண்டுவரும் உணவுப்பொருள்களைத் தடை செய்வது ஏற்புடையதல்ல. திரையரங்குகள் அசுத்தமாகும் என்பது அபத்தமான வாதம். அதற்காகத்தானே கட்டணம் வசூலிக்கிறார்கள். திரைப்படக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்வது திரைப்படத்துறையினருக்கும் நல்லதல்ல; நடிகர்களுக்கும் நல்லதல்ல.
இந்தப் பிரச்னைகளை மக்கள் மன்றத்தின் விவாதத்துக்குக் கொண்டு வந்திருக்கும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு நமது பாராட்டுகள்!
நன்றி : தினமணி
Monday, January 18, 2010
வங்கம் தந்த வரலாற்று நாயகன்
இந்தியத் திருநாட்டின் இருள்படர்ந்த ஆங்கிலேய அன்னிய ஆட்சிக்காலக்கட்டத்தில், அதே பிரிட்டிஷ் நாட்டுக்கு உயர்கல்வி பயில்வதற்காகச் சென்று, அங்கிருந்தே காலனியாதிக்க நுகத்தடியிலிருந்து தாய்நாட்டை விடுவிக்கிற உத்வேகத்தோடு திரும்பி வந்து, விடுதலைப் போராட்ட வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு தலைமுறையே உண்டு. அதில் ஒருவராக இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் நம்மிடையே கலங்கரை விளக்கமாய் நின்று இலங்கிய வரலாற்று நாயகர்களின் வரிசையில் எஞ்சி நின்ற ஒருவர்தான் ஜோதிபாசு.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைமை, விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயலாற்றித்தான் தங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கியது என்பது வரலாற்றுப் பதிவு. அந்தப் பாரம்பரியத்துக்கும் சொந்தக்காரர்தான் 96 வயதுவரை வாழ்ந்து வழிகாட்டிய ஜோதிபாசு.
சட்டப்படிப்புக்காக ஜோதிபாசு 1935-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். ஜோதிபாசு லண்டன் சென்ற காலத்திற்கு முன்பாகவே மகாத்மா காந்தி தனது பாரிஸ்டர் பட்டப்படிப்பை முடித்துத் திரும்பி விட்டிருந்தார். அங்கு இந்திய மாணவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கிய இந்தியா லீகின் தலைவராக இருந்தவர் சுதந்திர இந்தியாவின் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இடம்பெற்ற வி.கே.கிருஷ்ண மேனன். இவரையும் உள்ளிட்டு இங்கிலாந்தில் ஜோதிபாசுவுடன் சேர்ந்து செயல்பட்டவர்களின் பட்டியல் மிக நீண்டது.
ஹிரேன் முகர்ஜி, புபேஷ் குப்தா, ரஜனி படேல், பி.என்.ஹக்சர், மோகன் குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, நிகில் சக்ரவர்த்தி, என்.கே.கிருஷ்ணன், அருண் போஸ், பெரோஸ் காந்தி போன்றவர்கள் பின்னாளில் இந்திய அரசியல் சமூக அரங்கில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர்கள். இவர்களில் பலர் ஒன்றாகச் சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு பிரிட்டிஷ் மண்ணிலேயே ஆதரவும், நிதியும் திரட்டும் பணியில் முனைந்து லண்டன் மஜ்லிகள் அமைப்பைத் தொடங்கினர். அந்த அமைப்பின் முதல் செயலாளராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜோதிபாசு.
அந்த நாள்களில் இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் ஓர் ஆதர்ச சக்தியாகத் திகழ்ந்தவர் ஜவாஹர்லால் நேரு. நேரு இங்கிலாந்துக்குச் சென்ற இரு சந்தர்ப்பங்களில் லண்டன் மஜ்லிகள் சார்பாக ஜோதிபாசு அவருக்கு வரவேற்பு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தாய்நாட்டின் விடுதலைக்கான வேட்கை ஆர்த்தெழுந்த அந்த இளமைப் பருவத்தில் ஜோதிபாசு உள்ளிட்ட இந்திய இளைஞர்களின் நெஞ்சங்களில் ஏகாதிபத்திய நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் எதிரான உணர்வுகளும் பற்றிப் படர்ந்தன. இதன் தொடர்ச்சியாக அவர்களிடையே மார்க்சியம் மற்றும் இடதுசாரி அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் வளரலானது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக விளங்கிய ஹரி பாலிட், ரஜனி பாமி தத், பென் ப்ராட்லி போன்றோரோடு ஜோதிபாசுவுக்கு ஏற்பட்ட தொடர்பும் நெருக்கமும் அவரை ஒரு கம்யூனிஸ்டாகப் பரிணமிக்கச் செய்தது. அதன் விளைவாக லண்டனிலிருந்து நாடு திரும்பிய சில நாள்களிலேயே கட்சியின் முழுநேர ஊழியராக ஜோதிபாசுவின் வாழ்க்கை தொடங்கி விட்டது.
ஆரம்பநாள் கம்யூனிஸ்டுகள் அனைவரையும் போலவே ஜோதிபாசுவும், கட்சியின் முடிவுக்கிணங்க தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டார். முதலில் துறைமுகத் தொழிலாளர்களின் மத்தியிலும், அடுத்து ரயில்வே தொழிற்சங்க இயக்கத்திலும் தன்னைப் பிணைத்துக் கொண்ட ஜோதிபாசுவுக்கு, அதன் வாயிலாகவே சட்டமன்ற நுழைவுக்கும் வழி திறந்தது. அன்றைய வங்காள மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ரயில்வே தொழிலாளர்களை வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி ஒன்றில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜோதிபாசு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினரானார். அந்த வெற்றியின் பின்னணி முக்கியமானது.
1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த சூழலில், ஒரு கட்டத்தில் அது பாசிச எதிர்ப்பு யுத்தமாக உருவெடுத்தது. அப்போது கம்யூனிஸ்டுகள் எடுத்த நிலைப்பாடு, சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியானதே என்றாலும், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இது இன்றளவும் இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் விவாதப் பொருளாக ஆக்கப்பட்டு வந்துள்ள ஒரு பிரச்னை. 1946-ல் மாகாண சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜோதிபாசு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்பட்டது. அதையும் எதிர்கொண்டுதான் ஜோதிபாசுவின் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது.
சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் பெறும் சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்து விடுவேன், கட்சி எனக்கு ஊதியம் வழங்கும் என்று ஜோதிபாசு தனது சுயசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது இன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பின்பற்றப்படும் நடைமுறை.
நாடு சுதந்திரமடைந்து, புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற 1952-ம் ஆண்டின் முதல் பொதுத் தேர்தலிலும் ஜோதிபாசு கோல்கத்தாவின் பாராநகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானார். 1972-ல் மேற்கு வங்கத்தில் அரங்கேறிய அரை பாசிச அடக்குமுறைக்கு இடையிலான மோசடித் தேர்தல் ஒன்றைத்தவிர, ஜோதிபாசு இத்தொகுதியிலிருந்தே வெற்றி பெற்று வந்தார். பின்னர் அவர் முதலமைச்சரான 1977-ம் ஆண்டுத் தேர்தலில் சத்கர்ச்சியா தொகுதிக்கு மாறினார். ஜனநாயக இந்தியாவின் அரசியல் வரலாற்றில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக நீடித்த பெருமைக்குரிய ஒரே தலைவராக ஜோதிபாசு முத்திரை பதித்துள்ளார். இது அவரது நீண்ட நெடிய பொது வாழ்க்கையின் ஒரு சிறப்பம்சம் மட்டுமே. ஜோதிபாசுவின் வாழ்க்கைப் பயணம் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் ஈட்டுத் தந்துள்ள பயன்களும், படிப்பினைகளும் பன்முகப்பட்டவை என்பதை நினைவு கூர வேண்டும்.
ஜோதிபாசு தன்னுடைய அரசியல் அனுபவங்களைப் பதிவு செய்ய முற்பட்டபோது அதற்கு அவரிட்ட தலைப்பு "மக்களோடு மக்களாக' என்பதே. அந்த நினைவலைகளை அறிமுகப்படுத்துகையில் அவர் குறிப்பிட்டார்: மக்களின் விடுதலையையே மையமாகக் கொண்ட எனது அரசியல் வாழ்வின்போது பல சிக்கலான பிரச்னைகளை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். மக்கள் வெற்றிக்கொடியை நாட்டியதையும் பார்த்திருக்கிறேன். அதேபோன்று, சில நேரங்களில் அவர்களின் தோல்விக்கு ஒரு சாட்சியமாகவும் விளங்கியிருக்கிறேன். மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஏராளமான சோதனைகளுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் மக்களே இறுதியில் வெற்றியடையப் போகிறார்கள். இந்த உறுதியான நம்பிக்கைதான் ஜோதிபாசுவை நாட்டு மக்களும் குறிப்பாக மேற்கு வங்க மக்களும் ஆழமாக நேசித்ததற்கும், அவர் மக்களை நேசித்ததற்கும் அடிப்படையாக இருந்தது.
ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்ற முறையில் ஜோதிபாசுவின் அரசியல் போராட்டம் காங்கிரசுக்கு எதிரானதாகவே இருந்தது. ஆனால் கட்சி மாச்சரியங்களைக் கடந்து காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் பலரிடத்தில் அவர் நட்பும் மரியாதையும் பாராட்டி வந்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இந்திய வரலாற்றில் வகித்த முக்கியமான பாத்திரத்தை அங்கீகரித்துப் பாராட்ட ஜோதிபாசு தவறியதேயில்லை. தேசிய விடுதலை லட்சியத்தில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை உலக அரசியலின் இதர முற்போக்கு சக்திகளோடு இணைக்கும் அறிவுத்திறனை நேரு பெற்றிருந்தார் என்று மனந்திறந்து புகழாரம் சூட்டியவர் ஜோதிபாசு. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதில் நேரு தீவிர ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டவராக விளங்கினார். கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கிய நிறுவனர் என்ற முறையில் அவர் சர்வதேச அரசியலில் எந்தச் சவாலையும் சந்திக்கும் நாடாக இந்தியாவை ஆக்கினார் என்று ஜோதிபாசு குறிப்பிட்டது, நேருவின் வரலாற்றுப் பங்களிப்பு பற்றிய துல்லியமான மதிப்பீடாகும்.
கூட்டாட்சிக் கோட்பாட்டை அங்கீகரிக்காத மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் 1975-ம் ஆண்டின் அவசர நிலைமையின்போது உச்சகட்டத்தை எட்டியது.
இதுபற்றி இந்திரா காந்தியிடமே ஜோதிபாசு கேட்டபோது, அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் மக்கள் இல்லை. மக்களைச் சரியான பாதைக்குக் கொண்டு வர ஓர் அதிர்ச்சி வைத்தியம் தேவைப்பட்டது என்று அவர் பதிலளித்தாராம். ஆனால், இரண்டாண்டுகளுக்குள்ளாக சர்வாதிகாரத்தை நிராகரித்து, அவசர நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து இந்திய ஜனநாயகப் பாரம்பரியம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டதை ஜோதிபாசு வியந்து போற்றினார்.
மத்திய, மாநில உறவுகளை ஓர் ஆரோக்கியமான அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும் என்பதற்காக ஜோதிபாசு காங்கிரசல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி இது தொடர்பான ஒரு பிரகடனத்தை நாட்டு மக்கள் முன்வைக்க முயற்சி மேற்கொண்டது இன்றும் கூடப் பொருத்தமானதொரு சீரிய நடவடிக்கையாகும். கூடவே மாநிலத்திற்குள்ளேயே எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது என்பதையும், மாநில அரசின் அதிகாரங்களைப் பரவலாக்கி உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் முழுமை பெறும் என்பதையும் நடைமுறைப்படுத்திக் காட்டியவரும் அவரே. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஜோதிபாசுவின் ஆட்சிக்காலத்தில்தான் மேற்குவங்கம் பெற்றது. பின்னர் அது அகில இந்திய அளவில் விரிவாக்கம் பெற்றது.
வகுப்புவாத-அடிப்படைவாத அரசியல் என்பது இந்தியாவின் நீண்டகாலப் பாரம்பரியத்துக்கே எதிரானது என்று உறுதியான கருத்தின் அடிப்படையில், ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்திய, வேற்றுமையில் ஒற்றுமை என்ற லட்சியத்தையும், மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடிப்பதில் ஜோதிபாசு தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர்.
உலகப் போக்குகளிலிருந்து இந்தியா தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாது என்கிறபோதே, 1991-ல் நம்நாடு உள்நாட்டுப் பொருளாதாரத்தைத் தயார்படுத்திக் கொள்ளாமலேயே தாராளமயத்துக்கு இ ட்டுச் செல்லப்பட்டது என்று ஜோதிபாசு கருதினார். அறுபத்தி இரண்டு ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், மக்கள்தொகையில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பயன் அடைந்திருக்கக்கூடிய ஒரு சமூகத்தைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம். புறக்கணிக்கப்பட்டுள்ள 85 முதல் 90 சதவிகிதம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நிலை இன்றில்லையே என்பது குறித்துத் தன் வேதனையை வெளிப்படுத்தியவர் ஜோதிபாசு.
÷1998-ம் ஆண்டு நவம்பர் 14 அன்று தில்லியில் ஜவாஹர்லால் நேரு நினைவுச் சொற்பொழிவை ஆற்றியபோது ஜோதிபாசு கூறியது, இன்றைய இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவாலும் அறைகூவலுமாகும். அவர் சொன்னார்: நம்முடைய சமூக-அரசியல் சூழலில் உள்ள மாசுபடுத்தும் கறைகளைப் போக்குவது அவசியமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று. பொது வாழ்வில் ஒழுக்கம் என்பது பலியாகி வருகிறது.
இத்தகைய நிலைமைக்கு அரசியல்வாதிகளே பிரதானப் பொறுப்பாளியாவார்கள். இந்தப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கான மக்களுடைய உணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். அழுகிப்போன இந்த நிலைமையைத் தடுத்து நிறுத்துவதில் ஒரு தலையாய பங்கை வகிக்கப் பொறுப்புணர்வு கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்வர வேண்டும்.
வங்கம் தந்த வரலாற்று நாயகனின் இந்த வைரவரிகள் சமூகப் பிரக்ஞை கொண்ட அனைத்துத் தரப்பினரும் நெஞ்சில் பதித்து நிறைவேற்ற வேண்டிய கடமைச் சாசனம்!
கட்டுரையாளர் :உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைமை, விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயலாற்றித்தான் தங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கியது என்பது வரலாற்றுப் பதிவு. அந்தப் பாரம்பரியத்துக்கும் சொந்தக்காரர்தான் 96 வயதுவரை வாழ்ந்து வழிகாட்டிய ஜோதிபாசு.
சட்டப்படிப்புக்காக ஜோதிபாசு 1935-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். ஜோதிபாசு லண்டன் சென்ற காலத்திற்கு முன்பாகவே மகாத்மா காந்தி தனது பாரிஸ்டர் பட்டப்படிப்பை முடித்துத் திரும்பி விட்டிருந்தார். அங்கு இந்திய மாணவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கிய இந்தியா லீகின் தலைவராக இருந்தவர் சுதந்திர இந்தியாவின் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இடம்பெற்ற வி.கே.கிருஷ்ண மேனன். இவரையும் உள்ளிட்டு இங்கிலாந்தில் ஜோதிபாசுவுடன் சேர்ந்து செயல்பட்டவர்களின் பட்டியல் மிக நீண்டது.
ஹிரேன் முகர்ஜி, புபேஷ் குப்தா, ரஜனி படேல், பி.என்.ஹக்சர், மோகன் குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, நிகில் சக்ரவர்த்தி, என்.கே.கிருஷ்ணன், அருண் போஸ், பெரோஸ் காந்தி போன்றவர்கள் பின்னாளில் இந்திய அரசியல் சமூக அரங்கில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர்கள். இவர்களில் பலர் ஒன்றாகச் சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு பிரிட்டிஷ் மண்ணிலேயே ஆதரவும், நிதியும் திரட்டும் பணியில் முனைந்து லண்டன் மஜ்லிகள் அமைப்பைத் தொடங்கினர். அந்த அமைப்பின் முதல் செயலாளராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜோதிபாசு.
அந்த நாள்களில் இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் ஓர் ஆதர்ச சக்தியாகத் திகழ்ந்தவர் ஜவாஹர்லால் நேரு. நேரு இங்கிலாந்துக்குச் சென்ற இரு சந்தர்ப்பங்களில் லண்டன் மஜ்லிகள் சார்பாக ஜோதிபாசு அவருக்கு வரவேற்பு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தாய்நாட்டின் விடுதலைக்கான வேட்கை ஆர்த்தெழுந்த அந்த இளமைப் பருவத்தில் ஜோதிபாசு உள்ளிட்ட இந்திய இளைஞர்களின் நெஞ்சங்களில் ஏகாதிபத்திய நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் எதிரான உணர்வுகளும் பற்றிப் படர்ந்தன. இதன் தொடர்ச்சியாக அவர்களிடையே மார்க்சியம் மற்றும் இடதுசாரி அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் வளரலானது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக விளங்கிய ஹரி பாலிட், ரஜனி பாமி தத், பென் ப்ராட்லி போன்றோரோடு ஜோதிபாசுவுக்கு ஏற்பட்ட தொடர்பும் நெருக்கமும் அவரை ஒரு கம்யூனிஸ்டாகப் பரிணமிக்கச் செய்தது. அதன் விளைவாக லண்டனிலிருந்து நாடு திரும்பிய சில நாள்களிலேயே கட்சியின் முழுநேர ஊழியராக ஜோதிபாசுவின் வாழ்க்கை தொடங்கி விட்டது.
ஆரம்பநாள் கம்யூனிஸ்டுகள் அனைவரையும் போலவே ஜோதிபாசுவும், கட்சியின் முடிவுக்கிணங்க தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டார். முதலில் துறைமுகத் தொழிலாளர்களின் மத்தியிலும், அடுத்து ரயில்வே தொழிற்சங்க இயக்கத்திலும் தன்னைப் பிணைத்துக் கொண்ட ஜோதிபாசுவுக்கு, அதன் வாயிலாகவே சட்டமன்ற நுழைவுக்கும் வழி திறந்தது. அன்றைய வங்காள மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ரயில்வே தொழிலாளர்களை வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி ஒன்றில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜோதிபாசு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினரானார். அந்த வெற்றியின் பின்னணி முக்கியமானது.
1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த சூழலில், ஒரு கட்டத்தில் அது பாசிச எதிர்ப்பு யுத்தமாக உருவெடுத்தது. அப்போது கம்யூனிஸ்டுகள் எடுத்த நிலைப்பாடு, சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியானதே என்றாலும், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இது இன்றளவும் இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் விவாதப் பொருளாக ஆக்கப்பட்டு வந்துள்ள ஒரு பிரச்னை. 1946-ல் மாகாண சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜோதிபாசு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்பட்டது. அதையும் எதிர்கொண்டுதான் ஜோதிபாசுவின் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது.
சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் பெறும் சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்து விடுவேன், கட்சி எனக்கு ஊதியம் வழங்கும் என்று ஜோதிபாசு தனது சுயசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது இன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பின்பற்றப்படும் நடைமுறை.
நாடு சுதந்திரமடைந்து, புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற 1952-ம் ஆண்டின் முதல் பொதுத் தேர்தலிலும் ஜோதிபாசு கோல்கத்தாவின் பாராநகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானார். 1972-ல் மேற்கு வங்கத்தில் அரங்கேறிய அரை பாசிச அடக்குமுறைக்கு இடையிலான மோசடித் தேர்தல் ஒன்றைத்தவிர, ஜோதிபாசு இத்தொகுதியிலிருந்தே வெற்றி பெற்று வந்தார். பின்னர் அவர் முதலமைச்சரான 1977-ம் ஆண்டுத் தேர்தலில் சத்கர்ச்சியா தொகுதிக்கு மாறினார். ஜனநாயக இந்தியாவின் அரசியல் வரலாற்றில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக நீடித்த பெருமைக்குரிய ஒரே தலைவராக ஜோதிபாசு முத்திரை பதித்துள்ளார். இது அவரது நீண்ட நெடிய பொது வாழ்க்கையின் ஒரு சிறப்பம்சம் மட்டுமே. ஜோதிபாசுவின் வாழ்க்கைப் பயணம் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் ஈட்டுத் தந்துள்ள பயன்களும், படிப்பினைகளும் பன்முகப்பட்டவை என்பதை நினைவு கூர வேண்டும்.
ஜோதிபாசு தன்னுடைய அரசியல் அனுபவங்களைப் பதிவு செய்ய முற்பட்டபோது அதற்கு அவரிட்ட தலைப்பு "மக்களோடு மக்களாக' என்பதே. அந்த நினைவலைகளை அறிமுகப்படுத்துகையில் அவர் குறிப்பிட்டார்: மக்களின் விடுதலையையே மையமாகக் கொண்ட எனது அரசியல் வாழ்வின்போது பல சிக்கலான பிரச்னைகளை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். மக்கள் வெற்றிக்கொடியை நாட்டியதையும் பார்த்திருக்கிறேன். அதேபோன்று, சில நேரங்களில் அவர்களின் தோல்விக்கு ஒரு சாட்சியமாகவும் விளங்கியிருக்கிறேன். மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஏராளமான சோதனைகளுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் மக்களே இறுதியில் வெற்றியடையப் போகிறார்கள். இந்த உறுதியான நம்பிக்கைதான் ஜோதிபாசுவை நாட்டு மக்களும் குறிப்பாக மேற்கு வங்க மக்களும் ஆழமாக நேசித்ததற்கும், அவர் மக்களை நேசித்ததற்கும் அடிப்படையாக இருந்தது.
ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்ற முறையில் ஜோதிபாசுவின் அரசியல் போராட்டம் காங்கிரசுக்கு எதிரானதாகவே இருந்தது. ஆனால் கட்சி மாச்சரியங்களைக் கடந்து காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் பலரிடத்தில் அவர் நட்பும் மரியாதையும் பாராட்டி வந்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இந்திய வரலாற்றில் வகித்த முக்கியமான பாத்திரத்தை அங்கீகரித்துப் பாராட்ட ஜோதிபாசு தவறியதேயில்லை. தேசிய விடுதலை லட்சியத்தில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை உலக அரசியலின் இதர முற்போக்கு சக்திகளோடு இணைக்கும் அறிவுத்திறனை நேரு பெற்றிருந்தார் என்று மனந்திறந்து புகழாரம் சூட்டியவர் ஜோதிபாசு. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதில் நேரு தீவிர ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டவராக விளங்கினார். கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கிய நிறுவனர் என்ற முறையில் அவர் சர்வதேச அரசியலில் எந்தச் சவாலையும் சந்திக்கும் நாடாக இந்தியாவை ஆக்கினார் என்று ஜோதிபாசு குறிப்பிட்டது, நேருவின் வரலாற்றுப் பங்களிப்பு பற்றிய துல்லியமான மதிப்பீடாகும்.
கூட்டாட்சிக் கோட்பாட்டை அங்கீகரிக்காத மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் 1975-ம் ஆண்டின் அவசர நிலைமையின்போது உச்சகட்டத்தை எட்டியது.
இதுபற்றி இந்திரா காந்தியிடமே ஜோதிபாசு கேட்டபோது, அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் மக்கள் இல்லை. மக்களைச் சரியான பாதைக்குக் கொண்டு வர ஓர் அதிர்ச்சி வைத்தியம் தேவைப்பட்டது என்று அவர் பதிலளித்தாராம். ஆனால், இரண்டாண்டுகளுக்குள்ளாக சர்வாதிகாரத்தை நிராகரித்து, அவசர நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து இந்திய ஜனநாயகப் பாரம்பரியம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டதை ஜோதிபாசு வியந்து போற்றினார்.
மத்திய, மாநில உறவுகளை ஓர் ஆரோக்கியமான அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும் என்பதற்காக ஜோதிபாசு காங்கிரசல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி இது தொடர்பான ஒரு பிரகடனத்தை நாட்டு மக்கள் முன்வைக்க முயற்சி மேற்கொண்டது இன்றும் கூடப் பொருத்தமானதொரு சீரிய நடவடிக்கையாகும். கூடவே மாநிலத்திற்குள்ளேயே எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது என்பதையும், மாநில அரசின் அதிகாரங்களைப் பரவலாக்கி உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் முழுமை பெறும் என்பதையும் நடைமுறைப்படுத்திக் காட்டியவரும் அவரே. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஜோதிபாசுவின் ஆட்சிக்காலத்தில்தான் மேற்குவங்கம் பெற்றது. பின்னர் அது அகில இந்திய அளவில் விரிவாக்கம் பெற்றது.
வகுப்புவாத-அடிப்படைவாத அரசியல் என்பது இந்தியாவின் நீண்டகாலப் பாரம்பரியத்துக்கே எதிரானது என்று உறுதியான கருத்தின் அடிப்படையில், ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்திய, வேற்றுமையில் ஒற்றுமை என்ற லட்சியத்தையும், மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடிப்பதில் ஜோதிபாசு தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர்.
உலகப் போக்குகளிலிருந்து இந்தியா தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாது என்கிறபோதே, 1991-ல் நம்நாடு உள்நாட்டுப் பொருளாதாரத்தைத் தயார்படுத்திக் கொள்ளாமலேயே தாராளமயத்துக்கு இ ட்டுச் செல்லப்பட்டது என்று ஜோதிபாசு கருதினார். அறுபத்தி இரண்டு ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், மக்கள்தொகையில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பயன் அடைந்திருக்கக்கூடிய ஒரு சமூகத்தைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம். புறக்கணிக்கப்பட்டுள்ள 85 முதல் 90 சதவிகிதம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நிலை இன்றில்லையே என்பது குறித்துத் தன் வேதனையை வெளிப்படுத்தியவர் ஜோதிபாசு.
÷1998-ம் ஆண்டு நவம்பர் 14 அன்று தில்லியில் ஜவாஹர்லால் நேரு நினைவுச் சொற்பொழிவை ஆற்றியபோது ஜோதிபாசு கூறியது, இன்றைய இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவாலும் அறைகூவலுமாகும். அவர் சொன்னார்: நம்முடைய சமூக-அரசியல் சூழலில் உள்ள மாசுபடுத்தும் கறைகளைப் போக்குவது அவசியமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று. பொது வாழ்வில் ஒழுக்கம் என்பது பலியாகி வருகிறது.
இத்தகைய நிலைமைக்கு அரசியல்வாதிகளே பிரதானப் பொறுப்பாளியாவார்கள். இந்தப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கான மக்களுடைய உணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். அழுகிப்போன இந்த நிலைமையைத் தடுத்து நிறுத்துவதில் ஒரு தலையாய பங்கை வகிக்கப் பொறுப்புணர்வு கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்வர வேண்டும்.
வங்கம் தந்த வரலாற்று நாயகனின் இந்த வைரவரிகள் சமூகப் பிரக்ஞை கொண்ட அனைத்துத் தரப்பினரும் நெஞ்சில் பதித்து நிறைவேற்ற வேண்டிய கடமைச் சாசனம்!
கட்டுரையாளர் :உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
லால் சலாம்!
ஒரு மாமலை சாய்ந்துவிட்டது; இனி எதிர்காலம் சூன்யமாகத் தெரிகிறது; அடுத்து என்ன, எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு இடமே அளிக்காமல், அதே நேரத்தில் மரணத்தின் துயரமும் இழப்பின் தாக்கமும் குறைந்துவிடவும் செய்யாமல் நிகழ்ந்திருக்கிறது ஜோதிபாசுவின் மரணம். கடந்த பல மாதங்களாகவே எதிர்பார்த்திருந்த ஒன்றுதான் என்றாலும், அந்த மாமனிதரின் இழப்பு என்பது இந்திய அரசியலில் ஈடு செய்ய முடியாத ஒன்றுதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா என்ன?
மேற்கு வங்காளம் பல இடதுசாரி சிந்தனையாளர்களை இந்திய அரசியலுக்கு வழங்கி இருக்கிறது. பூபேஷ் குப்தா, கீதா முகர்ஜி, ஜோதிர்மாய் பாசு, இந்திரஜித் குப்தா, ஹிரேன் முகர்ஜி, ஏ. பி. பரதன் என்று ஒரு மிகப் பெரிய பட்டியல் நீள்கிறது. மேலே குறிப்பிட்ட தலைவர்கள் அனைவருமே தலைசிறந்த பாராளுமன்றவாதிகளாகவும், கம்யூனிச சித்தாந்தவாதிகளாகவும் திகழ்ந்தனரே தவிர, பொதுவுடைமைச் சிந்தனை சார்ந்த அடிப்படை ஜனநாயக அரசியலைக் கற்றுத் தேர்ந்தவர்களா என்றால் கிடையாது. அதுதான் ஜோதிபாசுவின் பலம்.
அரசியலையும் கொள்கைப் பிடிப்பையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தத் தெரிந்திருந்ததால்தான் ஜோதிபாசுவால் 23 ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராகத் தொடர்ந்து பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.
ஜூலை 8, 1914-ல் பிறந்த ஜோதிபாசுவின் வாழ்க்கையில் இடதுசாரி இயக்கச் சிந்தனையின் தாக்கம் அவர் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெறச் சென்றபோது ஏற்பட்டது. ரயில்வே தொழிலாளர் யூனியன்தான் ஜோதிபாசுவின் தொழிற்சங்க ஈடுபாட்டிற்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருந்தது. அவரது முதல் சட்டப்பேரவை பிரவேசமே ரயில்வே தொகுதியிலிருந்துதான் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. டாக்டர் பி.சி. ராய் தலைமையிலான காங்கிரஸ் அரசு பலமாக அமைந்திருந்த காலத்தில், ஜோதிபாசு எதிர்க்கட்சி உறுப்பினராக எழுப்பிய விவாதங்களும் நடத்திய போராட்டங்களும் ஏராளம், ஏராளம்.
1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்படுத்திய நிறுவனத் தலைவர்களில் ஜோதிபாசு முக்கியமான பங்கு வகித்தார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய அரசியல்குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் ஜோதிபாசுவும் ஒருவர்.
1969-ல், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கிய அஜாய் முகர்ஜியின் வங்காள காங்கிரஸýடன் இணைந்து இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைத்தனர். அஜாய் முகர்ஜி முதல்வராகவும் அந்த அமைச்சரவையில் ஜோதிபாசு உள்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றனர். அந்தக் கூட்டணி ஆட்சி ஏன் கவிழ்ந்தது தெரியுமா? உள்துறை அமைச்சரான ஜோதிபாசு தன்னை செயல்படவிடுவதில்லை என்று முதல்வர் அஜாய் முகர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, சட்டப்பேரவையில் முதல்வரான தானே, தர்னா இருக்கப் போவதாக அறிவித்த கேலிக்கூத்துகள் மேற்கு வங்க சரித்திர நிகழ்வுகள்.
ஜோதிபாசுவின் வெற்றிக்குக் காரணம், காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை சாதுர்யமாக ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக ஓர் இடதுசாரிக் கூட்டணி அரசை நடத்தியது. இன்னொரு காரணம், இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்னோடியாக நிலச் சீர்திருத்தங்களையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வையும் முறையாகச் செய்து முடித்தது. இவையாவையும்விட, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கட்சியை வலுப்படுத்தியதும் கட்சி பலத்தைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும்தான்.
1996-ல் மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசில் பங்கு பெறாதது ஒரு வரலாற்றுப் பிழை என்று ஜோதிபாசு கூறியது மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுகிறது. ஆட்சியில் பங்குபெற மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் குழு ஒப்புக்கொண்டிருந்தால், ஜோதிபாசு இந்தியாவின் முதல் இடதுசாரி பிரதமராகியிருப்பார். ஆனால் கட்சித் தலைமையின் விருப்பத்தை அரசியல்குழு ஏற்கவில்லை. கட்சியின் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியாத ஒரு கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதால் என்ன பயன் என்று அரசியல் குழு கருதியது. கட்சியின் முடிவை கனத்த மனதுடன் தலைவணங்கி ஏற்ற தலைவர் ஜோதிபாசு. இன்னொரு தலைவர், இன்னொரு கட்சி இப்படியொரு சவாலை எதிர்கொள்ளுமா?
சரியான நேரத்தில் ஜோதிபாசு தன் பதவியைத் துறந்து ஓய்வு பெற்றுவிட்டார். இன்னமும் சிறிது காலம் கடத்தியிருந்தால், அவரது இயலாமை அவரைக் கேலிப் பொருளாக்கி ஜோதிபாசு என்கிற மிகப்பெரிய ஆளுமையைத் தகர்த்திருக்கும். ஜோதிபாசு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கூட்டணி வலுவிழக்கத் தொடங்கி இருப்பதில் இருந்தே இந்தத் தனிமனிதரின் செல்வாக்கும் ஆளுமைத் திறனும் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
நாளை ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலத்தில் மரியாதை செலுத்த அணிவகுத்து நிற்கப்போகும் செஞ்சட்டைப் படையினரின் முன்னால் ஒரு மிகப் பெரிய கேள்விக்குறி தொக்கி நிற்கும். இனிமேல் இடதுசாரி இயக்கத்தை வழிநடத்தவும், பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு, ஜாதிய, மத சக்திகளால் கவரப்பட்டிருக்கும் அடித்தட்டு மக்களை வழிநடத்தவும் யார் தலைமை ஏற்கப் போகிறார்கள் என்கிற கேள்விக்குறிதான் அது.
ஜோதிபாசுவின் மரணம் இடதுசாரி இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாக அமையுமேயானால் மட்டுமே அவர் குறிப்பிட்ட வரலாற்றுப் பிழை திருத்தப்படும்.
நன்றி : தினமணி
மேற்கு வங்காளம் பல இடதுசாரி சிந்தனையாளர்களை இந்திய அரசியலுக்கு வழங்கி இருக்கிறது. பூபேஷ் குப்தா, கீதா முகர்ஜி, ஜோதிர்மாய் பாசு, இந்திரஜித் குப்தா, ஹிரேன் முகர்ஜி, ஏ. பி. பரதன் என்று ஒரு மிகப் பெரிய பட்டியல் நீள்கிறது. மேலே குறிப்பிட்ட தலைவர்கள் அனைவருமே தலைசிறந்த பாராளுமன்றவாதிகளாகவும், கம்யூனிச சித்தாந்தவாதிகளாகவும் திகழ்ந்தனரே தவிர, பொதுவுடைமைச் சிந்தனை சார்ந்த அடிப்படை ஜனநாயக அரசியலைக் கற்றுத் தேர்ந்தவர்களா என்றால் கிடையாது. அதுதான் ஜோதிபாசுவின் பலம்.
அரசியலையும் கொள்கைப் பிடிப்பையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தத் தெரிந்திருந்ததால்தான் ஜோதிபாசுவால் 23 ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராகத் தொடர்ந்து பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.
ஜூலை 8, 1914-ல் பிறந்த ஜோதிபாசுவின் வாழ்க்கையில் இடதுசாரி இயக்கச் சிந்தனையின் தாக்கம் அவர் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெறச் சென்றபோது ஏற்பட்டது. ரயில்வே தொழிலாளர் யூனியன்தான் ஜோதிபாசுவின் தொழிற்சங்க ஈடுபாட்டிற்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருந்தது. அவரது முதல் சட்டப்பேரவை பிரவேசமே ரயில்வே தொகுதியிலிருந்துதான் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. டாக்டர் பி.சி. ராய் தலைமையிலான காங்கிரஸ் அரசு பலமாக அமைந்திருந்த காலத்தில், ஜோதிபாசு எதிர்க்கட்சி உறுப்பினராக எழுப்பிய விவாதங்களும் நடத்திய போராட்டங்களும் ஏராளம், ஏராளம்.
1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்படுத்திய நிறுவனத் தலைவர்களில் ஜோதிபாசு முக்கியமான பங்கு வகித்தார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய அரசியல்குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் ஜோதிபாசுவும் ஒருவர்.
1969-ல், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கிய அஜாய் முகர்ஜியின் வங்காள காங்கிரஸýடன் இணைந்து இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைத்தனர். அஜாய் முகர்ஜி முதல்வராகவும் அந்த அமைச்சரவையில் ஜோதிபாசு உள்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றனர். அந்தக் கூட்டணி ஆட்சி ஏன் கவிழ்ந்தது தெரியுமா? உள்துறை அமைச்சரான ஜோதிபாசு தன்னை செயல்படவிடுவதில்லை என்று முதல்வர் அஜாய் முகர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, சட்டப்பேரவையில் முதல்வரான தானே, தர்னா இருக்கப் போவதாக அறிவித்த கேலிக்கூத்துகள் மேற்கு வங்க சரித்திர நிகழ்வுகள்.
ஜோதிபாசுவின் வெற்றிக்குக் காரணம், காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை சாதுர்யமாக ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக ஓர் இடதுசாரிக் கூட்டணி அரசை நடத்தியது. இன்னொரு காரணம், இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்னோடியாக நிலச் சீர்திருத்தங்களையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வையும் முறையாகச் செய்து முடித்தது. இவையாவையும்விட, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கட்சியை வலுப்படுத்தியதும் கட்சி பலத்தைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும்தான்.
1996-ல் மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசில் பங்கு பெறாதது ஒரு வரலாற்றுப் பிழை என்று ஜோதிபாசு கூறியது மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுகிறது. ஆட்சியில் பங்குபெற மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் குழு ஒப்புக்கொண்டிருந்தால், ஜோதிபாசு இந்தியாவின் முதல் இடதுசாரி பிரதமராகியிருப்பார். ஆனால் கட்சித் தலைமையின் விருப்பத்தை அரசியல்குழு ஏற்கவில்லை. கட்சியின் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியாத ஒரு கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதால் என்ன பயன் என்று அரசியல் குழு கருதியது. கட்சியின் முடிவை கனத்த மனதுடன் தலைவணங்கி ஏற்ற தலைவர் ஜோதிபாசு. இன்னொரு தலைவர், இன்னொரு கட்சி இப்படியொரு சவாலை எதிர்கொள்ளுமா?
சரியான நேரத்தில் ஜோதிபாசு தன் பதவியைத் துறந்து ஓய்வு பெற்றுவிட்டார். இன்னமும் சிறிது காலம் கடத்தியிருந்தால், அவரது இயலாமை அவரைக் கேலிப் பொருளாக்கி ஜோதிபாசு என்கிற மிகப்பெரிய ஆளுமையைத் தகர்த்திருக்கும். ஜோதிபாசு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கூட்டணி வலுவிழக்கத் தொடங்கி இருப்பதில் இருந்தே இந்தத் தனிமனிதரின் செல்வாக்கும் ஆளுமைத் திறனும் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
நாளை ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலத்தில் மரியாதை செலுத்த அணிவகுத்து நிற்கப்போகும் செஞ்சட்டைப் படையினரின் முன்னால் ஒரு மிகப் பெரிய கேள்விக்குறி தொக்கி நிற்கும். இனிமேல் இடதுசாரி இயக்கத்தை வழிநடத்தவும், பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு, ஜாதிய, மத சக்திகளால் கவரப்பட்டிருக்கும் அடித்தட்டு மக்களை வழிநடத்தவும் யார் தலைமை ஏற்கப் போகிறார்கள் என்கிற கேள்விக்குறிதான் அது.
ஜோதிபாசுவின் மரணம் இடதுசாரி இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாக அமையுமேயானால் மட்டுமே அவர் குறிப்பிட்ட வரலாற்றுப் பிழை திருத்தப்படும்.
நன்றி : தினமணி
Saturday, January 2, 2010
இலங்கைத் தமிழர் பிரச்னை தமிழகக் கட்சி அரசியலா?
இலங்கையில் நடந்து முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படும் போர், இரண்டு நாடுகளுக்கிடையில் நடந்த போர் அல்ல. முழுக்குடியுரிமை பெற்ற தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிராக, பல நாட்டுப் படை, போர்க்கருவிகள், அரசியல், நிதியுதவியுடன், அரசு அதிகாரத்தை கையில் வைத்துள்ள இலங்கை அரசு நடத்திய கொடூரமான போர் என்பதை - மீண்டும் நினைவுறுத்தும் அவசியம் எழுந்துள்ளது.2009-மே மாதத்தில் தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்து ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன் மகிழ்ச்சிக்காக விழாவையும் கொண்டாடிக் கொண்டது. இந்திய அரசும் இதைப் பாராட்டி, போரினால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்து கொள்ள நிதியுதவி செய்வதாக அறிவித்தது. தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக் கூடங்களில் சிக்குண்டு கிடக்கிறார்கள்.
இந்தக் காலத்தில்தான், தமிழக முதல்வர் கருணாநிதி, நம் மெüனம் யாருக்குத் தெரியப் போகிறது என்ற தலைப்பிட்டு, கட்டுரையை எழுதி வெளியிட்டிருந்தார். அதில் ""நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை'' என்று எழுதியுள்ளார். நானும் அவரிடம் குற்றம் காணவோ, அவர் மீது குறை கூறவோ இதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனாலும் இதனை ஆராய்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கு எழுந்துள்ளது.
தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய்விட்டார்களே, என்ற ஆதங்கத்தில்தான் எழுதுகிறேன். ""வாழவேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் எழுதுகிறேன்'' என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாகக் கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ்மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு ஆளாகித் தங்கள் உயிரை இழக்க நேரிட்டது? ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து, விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருணாநிதி எழுதியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மட்டும் நடந்த போராக மட்டும் கருணாநிதி இதைக் கூறுகிறார். இந்தியப் பேரரசும் இலங்கைப் போரில் பங்கெடுத்தது. இந்த உண்மையை யாராலும் மறைக்க முடியுமா? தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்காக 1956 முதல் ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து போராடியதையும் பதிவு செய்து, அன்று முதல் இன்று வரை தனது கட்சி நடத்திய போராட்டங்கள், சட்டமன்றப் பதவிகளைத் துறந்தது, இருமுறை ஆட்சியை இழந்தது, தி.மு.க திரட்டிய நிதி, அது மதிக்கப்படாதது, மதுரையில் பழ.நெடுமாறனால் கூட்டப்பட்ட டெசோ மாநாடு, இந்தியா திரும்பிய அமைதிப்படையை வரவேற்க மறுத்தது என நீண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளார். ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு ரணில் விக்கிரமசிங்க தந்த பேட்டியையும் ஆதாரம் காட்டியுள்ளார்.
இதற்குப் பின் இவர் குறிப்பிட்டுச் சொல்வதுதான் மிகவும் முக்கியமானதாகும். என்னையும், தம்பி மாறனையும் 1989-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தில்லிக்கு அழைத்து - விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப்பிரச்னை குறித்தும், இரண்டு நாள் உரையாடி - அது பற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்குத் தெரிவித்து - நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு, பிரபாகரனுடன் இந்தப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ, அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை இங்கிருந்து செய்து தருகிறேன்.
அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் - இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். என்று கூறி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி, இந்திய மண்ணில், அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். இதனால், ஈழ விடுதலைப் போராட்டத்தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்றும் எழுதியுள்ளார். அந்தப் படுகொலைக்குப் பின்னர் பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு என பொங்கியெழுந்த ஆதரவு வெள்ளம் வற்றிய ஓடையாகியது என்பதும் உண்மை தான்.
நம்முடைய கேள்வி என்னவென்றால் இன்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ள இந்த முக்கியத் தகவல்கள், இதற்கு முன்னர், இவரால் தமிழக மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்பதுதான். பிரதமர் ராஜீவ் காந்தி, கருணாநிதியுடனும் முரசொலி மாறனுடனும் தில்லியில், பேசியது 1989-ம் ஆண்டில். ù காலையுண்டது 1991 மே 21-ம் நாளன்று. கொல்லப்பட்ட போது இவர் முன்னாள் பிரதமர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டும்தான். 1989-க்கும் 1991,மே மாதத்துக்கும் இடையிலான காலத்தில், ராஜீவ் காந்தி கேட்டுக் கொண்டபடி, கருணாநிதி பிரபாகரனைச் சந்தித்தாரா? ராஜீவ் காந்தி உறுதியளித்த உதவி பற்றி பிரபாகரனுக்குக் கூறப்பட்டதா? இந்தியப் பேரரசு உதவிக்கரம் நீட்டியதை பிரபாகரன் உதறித் தள்ளினாரா? தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கூறி விளக்கம் தர வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு இருக்கிறது.
ஏனெனில், 1989 பிப்ரவரியில் தில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி, முதல்வர் கருணாநிதியை அழைத்துப் பேசியபோது உடனிருந்தவர் முரசொலி மாறன் மட்டுமே. உறுதிமொழி தந்த ராஜீவ் காந்தியும் இப்போது இல்லை, உடனிருந்து கேட்ட மாறனும் இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற, ஒரே ஒருவர் மட்டும் தான் உள்ளார். அவர் தான் கருணாநிதி. ராஜீவ் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக இருந்த பெரியவர் மூப்பனாரிடமோ, வாழப்பாடி ராமமூர்த்தியிடமோ இந்தப் பணியை ஒப்படைக்காமல், கருணாநிதியை அழைத்துச் சொன்னது ஏன்? இவர் கூறினால் தான் பிரபாகரனும், போராளிகளும் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் தான். இந்தப் பணி நிறைவேற்றப்பட்டதா? கிடைத்த பதில் ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டதா? இவை எல்லாம் இதில் தொடரும் கேள்விகள். 1989 முதல் 1991 மே வரை இந்தச் செய்தியைத் தமிழ் மக்களுக்கு ஏன் தெரிவிக்காமல், அதன் பிறகும் 2009 வரை இது குறித்து மெüனமாக இருந்து இன்று முரசொலியில் கடிதம் ஏன் எழுத வேண்டும்? ராஜீவ் காந்தி கருணாநிதியிடம் தந்த வாக்குறுதி, பிரபாகரனை எட்டியதாகவும் தெரியவில்லை.
பிரபாகரன், ராஜீவ் காந்தி தந்த வாக்குறுதியை நம்பவும் இல்லை, ஏற்கவும் இல்லை இதில் வேறு சந்தேகம் கலைஞருக்கு இருக்கிறது என்றால், 1991-ல் அமைந்த, தி.மு.க. ஆதரவு வி.பி.சிங் அரசிடம் அதைக் கூறி, ராஜீவ் காந்திக்குப் பாதுகாப்பு ஏற்பாட்டை இவர் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை தான் நடந்தது. இன்னொரு முக்கிய அரசியல் விளக்கத்தையும் தர வேண்டுகிறேன். 1956 முதல் தந்தை செல்வாவின் குரலோடு சேர்ந்து முழங்கத் தொடங்கிய அந்த இனச்சிக்கல் 2009 வரை தீர்க்கப்படவே இல்லை. இதற்கு யார் காரணம் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாகி, புலம் பெயர்ந்து ஓடுவது தொடங்கி விட்டது.
இந்திய அரசு, தொடக்க காலத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு இடம் தந்து உதவியது. இலங்கை அரசைக் கண்டித்தது. தீர்வு காண வற்புறுத்தியது. 1956-ம் ஆண்டிலேயே கருணாநிதி தி.மு.க. வின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அவர் தான் இன்று ஆட்சிக்கும் தலைவர். கட்சிக்கும் தலைவர். பா.ஜ.க.வுடனும் தி.மு.க. கூட்டாட்சி நடத்தியது. காங்கிரசுடனும் கூட்டாட்சி நடத்துகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மத்திய கூட்டாட்சியில் பங்கேற்று வருகிறது. தி.மு.க. மத்திய ஆட்சியில் பங்கு பெறாமல் இருந்த போது, காங்கிரஸ் ஆட்சி, இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு நிலையை எடுத்தது. ஆனால், தி.மு.க. மத்திய மந்திரி சபையில் சேர்ந்த பின்னர், மத்திய காங்கிரஸ் ஆட்சி இலங்கை அரசுக்கு ஆதரவு நிலையையும், போராளிகளை ஒழிக்க ஆயுத உதவி செய்வதும் ஏன்? இந்தக் கொள்கை நிலை - மாற்றத்துக்குக் காரணம் என்ன?
÷விடுதலைப்புலிகள் தந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் நிராகரித்தனர் எனக் குறை சொல்லப்படுகிறது. இருக்கலாம். ஆனால், தி.மு.க. பங்கேற்றுள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டிலுள்ள அத்தனை கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் கூடி நிறைவேற்றிய தீர்மானம், சட்டசபைத் தீர்மானம். பிரதமரை நேரில் சந்தித்துத் தந்த வேண்டுகோள் - ஆகியவை பயனற்று குப்பைக் கூடை காகிதமாகிவிட்டதே ஏன்? அது பற்றிய சுய விமர்சனம் இல்லாமல், போராளிகள் தவறாக மதிப்பிட்டுச் செயல்பட்டதை மட்டும் பட்டிலிட்டுள்ளது ஏன்?
1990 முதல் 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாலும், 1991 மே மாதம் 21-ம் நாளன்று ராஜீவ் காந்தி வெடிகுண்டுக்கு ஆளான போது அதே இடத்தில் நானும் ரத்தம் சிந்தியவன் என்பதாலும், தமிழ் மக்களை மிகவும் நேசித்தவர், அவர்களது உரிமைகளை ஈட்டித்தர உறுதியுடன் முயன்றவர் ராஜீவ் காந்தி என்பதைத் தெரிந்தவன் நான். அவர் மீது சுமத்தப்பட்டுவரும் களங்கத்தைத் துடைக்க வேண்டியோர் துடைக்கவில்லை. அவருடைய இந்த உள்ளுணர்வைத் தெரிவிக்க விரும்புகிறேன். ÷நானறிந்த வரையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு எல்லாம் பல காரணங்கள் உண்டு. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் குழப்பியதும் காரணமாகும்.
ஆனால் இலங்கைத் தமிழர்கள் தன்னம்பிக்கையை இன்னமும் இழக்கவில்லை, இலங்கைத் தமிழரின் அரசியல் மனித உரிமைகளை மீட்டு நிலை நாட்டப்பட வேண்டுமெனில், இலங்கை ஒரு ஜனநாயக நாடு அல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது நட்புக்குரிய நாடு அல்ல என்பதை இந்தியா உணர வேண்டும்.
இலங்கைத் தமிழர்களே அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். இறுதி அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர்களால் ஏற்கப்படதக்கதாக அமைய வேண்டும். இதைத் தவிர்த்து தமிழக அரசியலுக்காக இலங்கைத் தமிழர்களின் உயிரைப் பணயம் வைத்து விளையாடுவ தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இறுதியில் அறம் வெல்லும், நம்புவோம்.
கட்டுரையாளர் :தா. பாண்டியன்
நன்றி : தினமணி
Labels:
அரசியல்,
இந்தியாஅரசு,
இலங்கை,
ஈழம்,
கட்டுரை
Wednesday, December 30, 2009
தனித்திரு, விழித்திரு...
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6-வது முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் வளத்துக்கு நிலையான ஆட்சி அவசியம் என்பதாலும், மக்கள் நலன் கருதியும் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்போது இதைத்தானே எல்லா கட்சிகளும் சொல்லி வருகின்றன. அதனால் இதிலொன்றும் ஆச்சரியமில்லை.
சிபுசோரனுக்கும் முதலமைச்சர் பதவிக்கும் ராசியே கிடையாது. 2005-ல் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பத்து நாளில் பதவியை இழக்க வேண்டியதாயிற்று. இரண்டாவது முறையாக 2009-ல் முதலமைச்சரானார். ஆனால் அவரால் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இப்போது 3-வது முறையாக முதலமைச்சராகிறார். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது தெரிந்திருந்தாலும், சிபு சோரன் கூடுதலாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய, சொந்த அனுபவத்தில் தெரிந்துவைத்திருக்கும் தகவல்- முதல்வர் பதவியும் நிரந்தரமில்லை.
2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை அமைச்சராக சிபுசோரன் பதவி வகித்தபோது, அவர் மீதான கொலை வழக்கு காரணமாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்றத்தில் நடத்திய அமளி, கூச்சல் அத்தனையும் இப்போதும் கண்முன் நிற்கிறது. இப்போது சிபுசோரன் தன் மீது தொடுக்கப்பட்ட இரண்டு கொலை வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆகையால் அவருக்கு தங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டுவதாக பாஜக சொல்லிக்கொள்ள முடியும்.
ஜார்க்கண்ட் மாநிலம் அமைக்கப்பட்ட நாள் முதலாக மூன்று முறை பாஜகதான் ஆட்சி அமைத்துள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக, தற்போது வேறு வழியின்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை சிபுசோரன் நன்கு அறிவார். பாஜகவின் இந்த பலவீனத்தை அவர் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.
பாஜக மட்டுமன்றி அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு உள்பட நான்கு அமைப்புகளின் ஆதரவில்தான் சிபுசோரன் ஆட்சி அமையவிருக்கிறது. அரசியல் சட்டப்படி இத்தகைய கூட்டணி ஆட்சி சாத்தியமாக இருந்தாலும், ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில் இது எத்தகைய கேடுகளை ஏற்கெனவே விளைவித்திருக்கிறது என்பதற்கு முந்தைய முதலமைச்சர் மது கோடா ஒரு சாட்சி. அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பிலிருந்து உருவான மது கோடா, காங்கிரஸ், ஜேஎம்எம் முரண்களைப் பயன்படுத்திக்கொண்டு முதலமைச்சராகி, ரூ.4000 கோடி பணம் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இப்போது சிறையில் இருக்கிறார் என்பதே போதும் இந்த மாநிலத்தின் வளத்தையும் ஊழல் வாய்ப்புகளையும் அறிந்துகொள்வதற்கு.
ஜார்க்கண்ட் கனிம வளம் நிறைந்த மாநிலம். சுமார் 2 கோடி மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள். இன்னமும்கூட இந்த மக்கள் மிகவும் மோசமான வறுமையில் வாழ்க்கை நடத்தும் நிலைமை மாறவில்லை. சிபுசோரன் தன் வாழ்க்கையில் முதன்முதலாக கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளானதே, பழங்குடியல்லாத வெளியாட்களே வெளியேபோ என்ற போராட்டத்தின்போது சிருடி என்ற கிராமத்தில் 16 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்தான். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சின்னமே, பழங்குடியினரைக் குறிக்கும் வில்லும் அம்பும்தான். பழங்குடியினருக்கான போராட்டத்தில் உதித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பழங்குடியினர் முன்னேறவில்லை.
இந்த மாநிலத்தில் உள்ள 32,620 கிராமங்களில் 45 சதவீத கிராமங்கள்தான் மின்இணைப்பு பெற்றுள்ளன. இன்னும் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருண்டுதான் கிடக்கின்றன. வெறும் 8,484 கிராமங்களுக்கு மட்டுமே அணுகுசாலை இருக்கிறது. இந்த நிலையில் அந்த மக்களின் வாழ்க்கை, கல்வி, வேலைவாய்ப்பு குறித்து அதிகமாக புள்ளிவிவரங்களை அடுக்க வேண்டியதில்லை. சொல்லாமலே புரியும்.
கனிம வளத்தைக் கொள்ளையடிக்க வரும் பெரும் நிறுவனங்கள் ஆட்சியாளர்களை தன்வயப்படுத்தத் தவறுவதில்லை. ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து விலகி விலகிப் போய், அடுத்த தேர்தலுக்கு மட்டுமே இறங்கி வருகிறார்கள் என்பதுதான் இம்மாநில அரசியல் நிலவரம்.
நிலைமை இப்படி இருக்கையில், இந்த மாநிலத்தில் இத்தனை கட்சிகள் ஆதரவுடன் ஒரு கட்சி தனியாக ஆட்சி அமைத்தாலோ அல்லது கூட்டணி ஆட்சி அமைத்தாலோ பல்வேறு சமரசங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. சமரசங்கள் என்றால், அரசியல் அகராதியில் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?
தேசியக் கட்சியான பாஜகவுக்கு உண்மையாகவே மாநிலத்தில் நிலையான ஆட்சி மக்கள் நலன் ஆகியவைதான் முக்கியம் என்றால், ஆட்சியில் பங்கு கொள்ளாமல் அதே நேரத்தில் ஒரு கண்காணிப்பாளரைப் போல செயல்பட வேண்டும். தவறு நேரும் எந்த நிமிடத்திலும் ஆதரவை விலக்கிக் கொண்டுவிடத் தயாராக இருக்க வேண்டும். தான் ஆதரவை விலக்கிக் கொண்டால் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவார்களே என்ற எண்ணத்தில் தவறுகளைச் சகித்துக் கொள்ளுமேயானால், அந்த மாநிலத்தில் பல "மது கோடா'-க்கள் வளம் பெறுவார்கள். மக்கள் வளம் பெற மாட்டார்கள்.
நன்றி : தினமணி
மாநிலத்தின் வளத்துக்கு நிலையான ஆட்சி அவசியம் என்பதாலும், மக்கள் நலன் கருதியும் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்போது இதைத்தானே எல்லா கட்சிகளும் சொல்லி வருகின்றன. அதனால் இதிலொன்றும் ஆச்சரியமில்லை.
சிபுசோரனுக்கும் முதலமைச்சர் பதவிக்கும் ராசியே கிடையாது. 2005-ல் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பத்து நாளில் பதவியை இழக்க வேண்டியதாயிற்று. இரண்டாவது முறையாக 2009-ல் முதலமைச்சரானார். ஆனால் அவரால் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இப்போது 3-வது முறையாக முதலமைச்சராகிறார். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது தெரிந்திருந்தாலும், சிபு சோரன் கூடுதலாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய, சொந்த அனுபவத்தில் தெரிந்துவைத்திருக்கும் தகவல்- முதல்வர் பதவியும் நிரந்தரமில்லை.
2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை அமைச்சராக சிபுசோரன் பதவி வகித்தபோது, அவர் மீதான கொலை வழக்கு காரணமாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்றத்தில் நடத்திய அமளி, கூச்சல் அத்தனையும் இப்போதும் கண்முன் நிற்கிறது. இப்போது சிபுசோரன் தன் மீது தொடுக்கப்பட்ட இரண்டு கொலை வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆகையால் அவருக்கு தங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டுவதாக பாஜக சொல்லிக்கொள்ள முடியும்.
ஜார்க்கண்ட் மாநிலம் அமைக்கப்பட்ட நாள் முதலாக மூன்று முறை பாஜகதான் ஆட்சி அமைத்துள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக, தற்போது வேறு வழியின்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை சிபுசோரன் நன்கு அறிவார். பாஜகவின் இந்த பலவீனத்தை அவர் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.
பாஜக மட்டுமன்றி அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு உள்பட நான்கு அமைப்புகளின் ஆதரவில்தான் சிபுசோரன் ஆட்சி அமையவிருக்கிறது. அரசியல் சட்டப்படி இத்தகைய கூட்டணி ஆட்சி சாத்தியமாக இருந்தாலும், ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில் இது எத்தகைய கேடுகளை ஏற்கெனவே விளைவித்திருக்கிறது என்பதற்கு முந்தைய முதலமைச்சர் மது கோடா ஒரு சாட்சி. அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பிலிருந்து உருவான மது கோடா, காங்கிரஸ், ஜேஎம்எம் முரண்களைப் பயன்படுத்திக்கொண்டு முதலமைச்சராகி, ரூ.4000 கோடி பணம் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இப்போது சிறையில் இருக்கிறார் என்பதே போதும் இந்த மாநிலத்தின் வளத்தையும் ஊழல் வாய்ப்புகளையும் அறிந்துகொள்வதற்கு.
ஜார்க்கண்ட் கனிம வளம் நிறைந்த மாநிலம். சுமார் 2 கோடி மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள். இன்னமும்கூட இந்த மக்கள் மிகவும் மோசமான வறுமையில் வாழ்க்கை நடத்தும் நிலைமை மாறவில்லை. சிபுசோரன் தன் வாழ்க்கையில் முதன்முதலாக கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளானதே, பழங்குடியல்லாத வெளியாட்களே வெளியேபோ என்ற போராட்டத்தின்போது சிருடி என்ற கிராமத்தில் 16 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்தான். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சின்னமே, பழங்குடியினரைக் குறிக்கும் வில்லும் அம்பும்தான். பழங்குடியினருக்கான போராட்டத்தில் உதித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பழங்குடியினர் முன்னேறவில்லை.
இந்த மாநிலத்தில் உள்ள 32,620 கிராமங்களில் 45 சதவீத கிராமங்கள்தான் மின்இணைப்பு பெற்றுள்ளன. இன்னும் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருண்டுதான் கிடக்கின்றன. வெறும் 8,484 கிராமங்களுக்கு மட்டுமே அணுகுசாலை இருக்கிறது. இந்த நிலையில் அந்த மக்களின் வாழ்க்கை, கல்வி, வேலைவாய்ப்பு குறித்து அதிகமாக புள்ளிவிவரங்களை அடுக்க வேண்டியதில்லை. சொல்லாமலே புரியும்.
கனிம வளத்தைக் கொள்ளையடிக்க வரும் பெரும் நிறுவனங்கள் ஆட்சியாளர்களை தன்வயப்படுத்தத் தவறுவதில்லை. ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து விலகி விலகிப் போய், அடுத்த தேர்தலுக்கு மட்டுமே இறங்கி வருகிறார்கள் என்பதுதான் இம்மாநில அரசியல் நிலவரம்.
நிலைமை இப்படி இருக்கையில், இந்த மாநிலத்தில் இத்தனை கட்சிகள் ஆதரவுடன் ஒரு கட்சி தனியாக ஆட்சி அமைத்தாலோ அல்லது கூட்டணி ஆட்சி அமைத்தாலோ பல்வேறு சமரசங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. சமரசங்கள் என்றால், அரசியல் அகராதியில் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?
தேசியக் கட்சியான பாஜகவுக்கு உண்மையாகவே மாநிலத்தில் நிலையான ஆட்சி மக்கள் நலன் ஆகியவைதான் முக்கியம் என்றால், ஆட்சியில் பங்கு கொள்ளாமல் அதே நேரத்தில் ஒரு கண்காணிப்பாளரைப் போல செயல்பட வேண்டும். தவறு நேரும் எந்த நிமிடத்திலும் ஆதரவை விலக்கிக் கொண்டுவிடத் தயாராக இருக்க வேண்டும். தான் ஆதரவை விலக்கிக் கொண்டால் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவார்களே என்ற எண்ணத்தில் தவறுகளைச் சகித்துக் கொள்ளுமேயானால், அந்த மாநிலத்தில் பல "மது கோடா'-க்கள் வளம் பெறுவார்கள். மக்கள் வளம் பெற மாட்டார்கள்.
நன்றி : தினமணி
Thursday, December 24, 2009
புதிய பாதையில் அத்வானி
ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) விரும்பியபடியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகிவிட்டார். ஆனால், இதன் மூலம் அத்வானியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., அத்வானி இணைந்து கட்சியை வலுப்படுத்த புதிய செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதிகாரப் பங்கீட்டு அடிப்படையிலான இத்திட்டம் நல்ல திட்டம்தான்.
பாஜகவின் அடுத்த தலைவர் நிதின் கட்கரி என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அறிவித்தபோது, அதை அத்வானி உள்ளிட்ட பலரும் ஏற்றுக்கொண்டனர். நிதின் கட்கரியைத் தேர்ந்தெடுத்ததில் தனக்கும் முக்கிய பங்கு உண்டு என்று அத்வானி கூறியிருந்தார். அதேபோல், அத்வானி தன்னை அணுகி, கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டதாக நிதின் கட்கரியும் ஒப்புக்கொண்டிருந்தார். இதன் மூலம் தனக்கு அத்வானியின் ஆதரவு உள்ளது என்பதை மறைமுகமாக நிதின் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதிலும் அத்வானிக்கு முக்கிய பங்கு இருந்தது. மக்களவையில் அத்வானிக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லியும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சங்கப்பரிவாரங்களின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
பாஜகவின் சட்டவிதிகள் திருத்தியமைக்கப்பட்டு, நாடாளுமன்றக் குழு தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக எல்.கே.அத்வானி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அத்வானியின் எதிர்ப்பாளர்களான மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஏனெனில் இதற்கு ஆர்.எஸ்.எஸ். எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.
பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக எல்.கே.அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இதில் அதீத ஆர்வம் காட்டவில்லை. கட்சியில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் வழிநடத்திச் செல்ல அவரால்தான் முடியும் என்று நினைத்திருக்கலாம்.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி கொடுத்து அவரது ஆதரவை உறுதி செய்தது போலத்தான் இதுவும். இல்லையெனில் அத்வானியின் ஆதரவாளர்களான அடுத்த தலைமுறையினர் நிதின் கட்கரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.
சோனியா காந்தி எம்.பி.யாவதற்கு முன்னதாகவே அதாவது 1998}ல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியை அவருக்கு அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சட்டவிதிகளைத் திருத்தி அமைத்தது. அதன் பிறகுதான் சோனியா காந்தி, கட்சியில் முக்கியத்துவம் பெற்று அதிக சக்திவாய்ந்தவராக உருவானார். 1999, 2004, 2009 தேர்தல்களிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அளவுக்கு வலுப்பெற்றது.
இப்போது பாஜகவும் சட்டவிதிகளைத் திருத்தியமைத்து அத்வானிக்குப் புதிய பதவியைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால், சோனியாவுக்கும் அத்வானிக்கும் வித்தியாசம் உள்ளது. சோனியா, ஆளும் காங்கிரஸ் அரசின் முக்கிய சக்தியாக இருந்து வருகிறார். அத்வானி, பாஜகவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பார்க்கப்படுகிறார்.
புதிய பதவிக்கு வந்துள்ளதன் மூலம் அத்வானி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று யாரும் கருத வேண்டாம். அதாவது பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவரானதன் மூலம் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அவர்களை நீக்கவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவசரப்பட்டு அவர் எந்த முடிவும் எடுக்கமாட்டார் என்றாலும், முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் அத்வானியை கட்சி மேலிடம் ஒதுக்கிவிட முடியாது என்பதுதான் இதன் சாராம்சம்.
பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக அத்வானி இருப்பதால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மாவுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இணைந்து செயல்பட வழிவகுக்கும். இருவருக்கும் காபினெட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து, சலுகைகள் கிடைக்கும் என்றாலும், மரபின் அடிப்படையில் பார்த்தால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைவிட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சற்று உயர்ந்ததுதான் என்று கூற வேண்டும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் யாராவது வந்தால், இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதுண்டு. மேலும், அரசு ஏதாவது குழு நியமித்தால் அதில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் முக்கிய இடம் இருக்கும். முக்கிய நியமனங்களில் எதிர்க்கட்சித் தலைவரைக் குழுவில் சேர்க்காமல் எந்த முடிவையும் அரசால் எடுக்க முடியாது.
அத்வானியின் ஆதரவு இல்லாமல் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்க முடியாது. அதுமட்டுமல்ல; அப்பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானாலும் அதற்கு அத்வானியின் ஆதரவு தேவை. எனினும் அத்வானிக்குப் பதிலாக சுஷ்மாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கட்சிக்குள் நிலவிவரும் உட்பூசலுக்கு தீர்வு காண முடியாது.
முதலாவதாக, பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்கிற சர்ச்சை எழுந்தது. அதற்கு ஒருவழியாகத் தீர்வுகாணப்பட்டுவிட்டது. இரண்டாவதாக, பாஜகவின் அன்றாடச் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர். பாஜகவின் முக்கியப் பதவியில் அத்வானி நீடிப்பது சங்கப்பரிவாரங்கள் தலையீட்டை எதிர்ப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தும்.
ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான நிதின் கட்கரி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களை அவர் நியமிக்கக்கூடும்.
அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்றும் அல்லது இடைநீக்கம் செய்யும் அதிகாரமும் அவருக்கு உள்ளது. ஆனாலும், சங்கப்பரிவாரங்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட முடியாது.
மூன்றாவதாக, பாஜகவின் நிலைப்பாடு என்ன? நாங்கள் மாறுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள பாஜக என்ன செய்யப்போகிறது? இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெற அக்கட்சி என்ன செய்யப்போகிறது? என்பது முக்கியமான விஷயமாகும்.
பாஜகவில் உள்கட்சிப் பூசல்கள் அதிகரித்து, அக்கட்சிக்குக் கெட்டபெயர் ஏற்பட்ட நேரத்தில் புதிய தலைவராக நிதின் கட்கரி பொறுப்பேற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி தோல்வியையே சந்தித்துள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் தலைதூக்கிய போதிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு பாஜகவால் ஏதும் செய்ய முடியவில்லை.
சங்கப்பரிவாரங்களைத் திருப்திப்படுத்தி, எதிர்ப்பாளர்களைச் சமாளித்து கட்சியை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு, புதிய தலைவரான நிதின் கட்கரிக்கு உள்ளது. மாநில அளவில் தலைவராக அவர் பேசப்பட்டவர்தானே தவிர தேசிய அளவில் அவர் எந்தப் பொறுப்பையும் இதுவரை வகிக்கவில்லை.
நாகபுரியைச் சேர்ந்த நிதின் கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணி இருக்கிறது. அதன் தலைவர் மோகன் பாகவத்துடன் சேர்ந்து பணியாற்றினாலும், அவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது. எனினும் 52 வயது இளைஞரான நிதின், பாஜகவுக்கும் சங்கப்பரிவாரங்களுக்கும் பாலமாக இருப்பார் எனத் தெரிகிறது. காங்கிரசில் ராகுல் காந்தி எப்படி இளைஞர் படையை வழிநடத்திச் செல்கிறாரோ அதேபோல நிதின் கட்கரியும் பாஜகவை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது.
பாஜகவில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகிய இருவரும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேலாக கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வந்துள்ளனர். சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் திறம்படச் செயலாற்றி வந்தனர். அவர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
புதிய தலைவரான நிதின், கட்சியில் எந்தக் கோஷ்டியையும் சேராதவர். அது அவருக்குச் சாதகமான அம்சம். அவரது தலைமையில் பாஜக புதிய கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறது. வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக கட்சியில் சிறந்த பேச்சாளராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ், அதேபோல அருண் ஜேட்லியும் புதிய உத்திகளுடன் செயல்படக்கூடிய திறன்பெற்றவர். இவர்களை அரவணைத்து நிதின் கட்கரி கட்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி
பாஜகவின் அடுத்த தலைவர் நிதின் கட்கரி என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அறிவித்தபோது, அதை அத்வானி உள்ளிட்ட பலரும் ஏற்றுக்கொண்டனர். நிதின் கட்கரியைத் தேர்ந்தெடுத்ததில் தனக்கும் முக்கிய பங்கு உண்டு என்று அத்வானி கூறியிருந்தார். அதேபோல், அத்வானி தன்னை அணுகி, கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டதாக நிதின் கட்கரியும் ஒப்புக்கொண்டிருந்தார். இதன் மூலம் தனக்கு அத்வானியின் ஆதரவு உள்ளது என்பதை மறைமுகமாக நிதின் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதிலும் அத்வானிக்கு முக்கிய பங்கு இருந்தது. மக்களவையில் அத்வானிக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லியும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சங்கப்பரிவாரங்களின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
பாஜகவின் சட்டவிதிகள் திருத்தியமைக்கப்பட்டு, நாடாளுமன்றக் குழு தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக எல்.கே.அத்வானி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அத்வானியின் எதிர்ப்பாளர்களான மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஏனெனில் இதற்கு ஆர்.எஸ்.எஸ். எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.
பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக எல்.கே.அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இதில் அதீத ஆர்வம் காட்டவில்லை. கட்சியில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் வழிநடத்திச் செல்ல அவரால்தான் முடியும் என்று நினைத்திருக்கலாம்.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி கொடுத்து அவரது ஆதரவை உறுதி செய்தது போலத்தான் இதுவும். இல்லையெனில் அத்வானியின் ஆதரவாளர்களான அடுத்த தலைமுறையினர் நிதின் கட்கரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.
சோனியா காந்தி எம்.பி.யாவதற்கு முன்னதாகவே அதாவது 1998}ல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியை அவருக்கு அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சட்டவிதிகளைத் திருத்தி அமைத்தது. அதன் பிறகுதான் சோனியா காந்தி, கட்சியில் முக்கியத்துவம் பெற்று அதிக சக்திவாய்ந்தவராக உருவானார். 1999, 2004, 2009 தேர்தல்களிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அளவுக்கு வலுப்பெற்றது.
இப்போது பாஜகவும் சட்டவிதிகளைத் திருத்தியமைத்து அத்வானிக்குப் புதிய பதவியைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால், சோனியாவுக்கும் அத்வானிக்கும் வித்தியாசம் உள்ளது. சோனியா, ஆளும் காங்கிரஸ் அரசின் முக்கிய சக்தியாக இருந்து வருகிறார். அத்வானி, பாஜகவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பார்க்கப்படுகிறார்.
புதிய பதவிக்கு வந்துள்ளதன் மூலம் அத்வானி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று யாரும் கருத வேண்டாம். அதாவது பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவரானதன் மூலம் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அவர்களை நீக்கவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவசரப்பட்டு அவர் எந்த முடிவும் எடுக்கமாட்டார் என்றாலும், முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் அத்வானியை கட்சி மேலிடம் ஒதுக்கிவிட முடியாது என்பதுதான் இதன் சாராம்சம்.
பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக அத்வானி இருப்பதால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மாவுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இணைந்து செயல்பட வழிவகுக்கும். இருவருக்கும் காபினெட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து, சலுகைகள் கிடைக்கும் என்றாலும், மரபின் அடிப்படையில் பார்த்தால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைவிட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சற்று உயர்ந்ததுதான் என்று கூற வேண்டும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் யாராவது வந்தால், இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதுண்டு. மேலும், அரசு ஏதாவது குழு நியமித்தால் அதில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் முக்கிய இடம் இருக்கும். முக்கிய நியமனங்களில் எதிர்க்கட்சித் தலைவரைக் குழுவில் சேர்க்காமல் எந்த முடிவையும் அரசால் எடுக்க முடியாது.
அத்வானியின் ஆதரவு இல்லாமல் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்க முடியாது. அதுமட்டுமல்ல; அப்பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானாலும் அதற்கு அத்வானியின் ஆதரவு தேவை. எனினும் அத்வானிக்குப் பதிலாக சுஷ்மாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கட்சிக்குள் நிலவிவரும் உட்பூசலுக்கு தீர்வு காண முடியாது.
முதலாவதாக, பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்கிற சர்ச்சை எழுந்தது. அதற்கு ஒருவழியாகத் தீர்வுகாணப்பட்டுவிட்டது. இரண்டாவதாக, பாஜகவின் அன்றாடச் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர். பாஜகவின் முக்கியப் பதவியில் அத்வானி நீடிப்பது சங்கப்பரிவாரங்கள் தலையீட்டை எதிர்ப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தும்.
ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான நிதின் கட்கரி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களை அவர் நியமிக்கக்கூடும்.
அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்றும் அல்லது இடைநீக்கம் செய்யும் அதிகாரமும் அவருக்கு உள்ளது. ஆனாலும், சங்கப்பரிவாரங்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட முடியாது.
மூன்றாவதாக, பாஜகவின் நிலைப்பாடு என்ன? நாங்கள் மாறுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள பாஜக என்ன செய்யப்போகிறது? இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெற அக்கட்சி என்ன செய்யப்போகிறது? என்பது முக்கியமான விஷயமாகும்.
பாஜகவில் உள்கட்சிப் பூசல்கள் அதிகரித்து, அக்கட்சிக்குக் கெட்டபெயர் ஏற்பட்ட நேரத்தில் புதிய தலைவராக நிதின் கட்கரி பொறுப்பேற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி தோல்வியையே சந்தித்துள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் தலைதூக்கிய போதிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு பாஜகவால் ஏதும் செய்ய முடியவில்லை.
சங்கப்பரிவாரங்களைத் திருப்திப்படுத்தி, எதிர்ப்பாளர்களைச் சமாளித்து கட்சியை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு, புதிய தலைவரான நிதின் கட்கரிக்கு உள்ளது. மாநில அளவில் தலைவராக அவர் பேசப்பட்டவர்தானே தவிர தேசிய அளவில் அவர் எந்தப் பொறுப்பையும் இதுவரை வகிக்கவில்லை.
நாகபுரியைச் சேர்ந்த நிதின் கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணி இருக்கிறது. அதன் தலைவர் மோகன் பாகவத்துடன் சேர்ந்து பணியாற்றினாலும், அவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது. எனினும் 52 வயது இளைஞரான நிதின், பாஜகவுக்கும் சங்கப்பரிவாரங்களுக்கும் பாலமாக இருப்பார் எனத் தெரிகிறது. காங்கிரசில் ராகுல் காந்தி எப்படி இளைஞர் படையை வழிநடத்திச் செல்கிறாரோ அதேபோல நிதின் கட்கரியும் பாஜகவை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது.
பாஜகவில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகிய இருவரும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேலாக கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வந்துள்ளனர். சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் திறம்படச் செயலாற்றி வந்தனர். அவர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
புதிய தலைவரான நிதின், கட்சியில் எந்தக் கோஷ்டியையும் சேராதவர். அது அவருக்குச் சாதகமான அம்சம். அவரது தலைமையில் பாஜக புதிய கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறது. வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக கட்சியில் சிறந்த பேச்சாளராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ், அதேபோல அருண் ஜேட்லியும் புதிய உத்திகளுடன் செயல்படக்கூடிய திறன்பெற்றவர். இவர்களை அரவணைத்து நிதின் கட்கரி கட்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி
Wednesday, December 16, 2009
உண்மையான கூட்டாட்சிதான் காலத்தின் கட்டாயம்!
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. எனவே மாநிலத்தின் நிலைமையை நேரில் மதிப்பிட்டு அம் மாநில அரசைப் பதவிநீக்கம் செய்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்று மத்திய உள்துறை இணைச் செயலாளர் வி.எஸ். சௌத்ரி தலைமையில் மத்திய அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள உயர் அதிகாரிகளையும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியது.
÷இப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிரும் புதிருமான பா.ஜ.க. இடதுசாரிக் கட்சிகள், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இணைந்து நின்று மத்திய அரசின் இச்செயலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
÷மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்குப் பதிலளிக்கும்போது, மத்திய அரசின் குழு அனுப்பும் முடிவு, மாநில அரசுடன் மோதவேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இதை 356-வது விதி என்ற கண்ணாடி வழியாகப் பார்க்கத் தேவையில்லை என்று கூறியிருப்பது, தேங்காய் திருட தென்னை மரத்தில் ஏறியவனை தோட்டக்காரன் கண்டுபிடித்தவுடன் புல் பறிக்க மரமேறியதாகப் பசப்பிய கதைதான் நினைவுக்கு வருகிறது.
÷சிறந்த வழக்கறிஞரான சிதம்பரம் அரசியல் சட்டத்தின் பிரிவுகள் என்ன கூறுகின்றன என்பதை அறியாமல் இருக்க முடியாது. சட்டம் ஒழுங்குப் பிரச்னை என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட ஒன்றாகும். ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுமானால் மத்திய அரசு என்ன செய்யவேண்டும் என்பதை அரசியல் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. அரசியல் சட்டத்தின் 163, 164, 356-வது பிரிவுகள் மத்திய, மாநில உறவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
÷ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதாகப் புகார் செய்யப்படுமானால், மத்திய அரசு உடனடியாக அந்த மாநில அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு மாநில அரசு மறுக்குமானால், அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற 257(1) பிரிவின்படி மாநில அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆணைகளை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். அந்த ஆணைகளையும் மாநில அரசு புறக்கணிக்குமானால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்து மத்திய அரசு யோசிக்க வேண்டும். அதன் பின்னரே 356-வது பிரிவின் கீழ் மாநில அரசைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
÷அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்தில் அரசியல் நிர்ணய சபையில் இப் பிரச்னை குறித்து விரிவான-ஆழமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. 1949-ம் ஆண்டு மே 31-ம் தேதி அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவு கு றித்து விவாதம் நடைபெற்றபோது, மத்திய சட்ட அமைச்சர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
மாநில அரசுகளுக்கு அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள விதிமுறைகளுக்கு மாறாக அந்த அரசுகள் செயல்படுமானால் மத்திய அரசு தலையிடும் நிலை உருவாகிறது. ஆனால் மாநிலத்தில் நல்ல அரசு செயல்படுகிறதா இல்லையா என்பதை நிர்ணயிப்பது மத்திய அரசின் வேலை அல்ல. இந்த விஷயத்தில் நான் மிகத் தெளிவாகவே இருக்கிறேன். இந்தச் சட்டப்பிரிவு செயல்படாத செத்த பிரிவாகவே இருக்கும். எனினும் இந்தச் சட்டப்பிரிவைச் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் மாநில ஆட்சியைக் கலைப்பதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முதலாவதாக அரசியல் சட்டம் வகுத்துத் தந்த வழிப்பிரகாரம் நடக்குமாறு தவறு செய்யும் மாநிலத்துக்கு எச்சரிக்கை விடவேண்டும். அந்த எச்சரிக்கை உரிய பயனை அளிக்காமல் போகுமானால், அந்த மாநில மக்களே தங்கள் விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும். மேற்கண்ட இரண்டு பரிகாரங்களும் தோல்வியடையுமானால் மட்டுமே 356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்த வேண்டும்.
÷மாநிலங்கள் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தக்கூடிய பல்வேறு சட்டப்பிரிவுகள் நமது அரசியல் சட்டத்தில் இடம்பெற்றிருந்த போதிலும், நமது அரசியல் அமைப்பு, கூட்டாட்சி அமைப்பாகும். அதாவது மத்திய அரசுக்கு என்று ஒதுக்கப்பட்ட துறைகளில் மத்திய அரசுக்கு எவ்வளவு சுயஆதிக்கம் உண்டோ அதைப்போல மாநிலங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட துறைகளில் மாநிலங்களுக்கு சுயஆதிக்கம் உண்டு. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கை என்பது மத்திய,மாநில அரசுகளுக்கு இடையே சட்டம் இயற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பகிர்ந்து தருவதாகும்.
இது மத்திய அரசு இயற்றும் சட்டத்தின் மூலம் அல்லது அரசியல் சட்டத்தின் மூலமே வகைசெய்யப்படுகிறது. நமது அரசியலமைப்பின்படி மாநிலங்கள் சட்டம் இயற்றும் அல்லது நிர்வாக அதிகாரங்களுக்கு மத்திய அரசைச் சார்ந்திருக்கவில்லை. இந்த விஷயத்தில் மாநில அரசும், மத்திய அரசும் சரிசமமான அதிகாரங்கள் படைத்தவை.
÷1951-ம் ஆண்டில் முதல் முதலாக பஞ்சாப் மாநில அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது. அதற்குப் பிறகு 100 தடவைகளுக்கு மேல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசு இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டது. எல்லா கட்சிகளுக்கும் இதில் பங்கு உண்டு. 1977-ம் ஆண்டில் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது 9 மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் அரசுகள் பதவி நீக்கம் செய்யப்பட்டன. 1980-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டபோது 9 மாநிலங்களில் இருந்த ஜனதா கட்சி அரசுகள் பதவி நீக்கம் செய்யப்பட்டன. ஆனால் அப்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தால் இந்தப் பதவி நீக்கத்தை ஏற்பதற்கு அது மறுத்துவிட்டது. ஆனால் 1994-ம் ஆண்டில் கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த எஸ்.ஆர். பொம்மையின் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, இந்திய உச்ச நீதிமன்றத்தில் 9 பேர்களைக் கொண்ட நீதிபதிகளின் ஆயம் தலையிட்டு உன்னதமான ஒரு தீர்ப்பை வழங்கியது.
÷இந்த ஆயத்தில் ஒருவரான நீதிபதி கே. ராமசாமி பின்வருமாறு குறிப்பிட்டார்:
நமது அரசியல் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தை தன்னுடைய அடிப்படை அம்சமாகக் கொண்டிருக்கிறது. அது ஒருபோதும் அழிக்கப்பட முடியாதது.
மற்றொரு நீதிபதியான குல்தீப் சிங் கூறுகையில்: மாநிலங்கள் சுதந்திரமானதும் தனித்தன்மை வாய்ந்ததுமான அரசியல் சட்ட ரீதியான நிலையைக் கொண்டிருக்கின்றன. நாட்டின் அரசியல், சமுதாயம், கல்வி போன்ற துறைகளில் மத்திய அரசைப் போலவே மாநில அரசுகளுக்கும் முக்கியப் பங்களிப்பு உண்டு. மத்திய ஆட்சியின் ஏஜெண்டுகளாகவோ அல்லது அதைச் சார்ந்து நிற்கவேண்டிய நிலையிலேயோ மாநில ஆட்சிகள் இல்லை.÷ ÷மற்றொரு நீதிபதியான ரத்தினவேல் பாண்டியன் கூறுகையில்: 356-வது சட்டப்பிரிவு அபூர்வமாகவே பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் சட்ட அமைப்பின்படி மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நிலவும் உறவைச் சீர்குலைக்கும் வகையில் இந்தப் பிரிவை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுமானால், மாநில முதலமைச்சர் தன்னுடைய அரசியல் ரீதியான கடமைகளைச் சரிவரச் செய்ய முடியாது. தான் தொடர்ந்து பதவியில் இருக்க முடியுமா முடியாதா என்ற அச்சத்தின் கீழ் அவர் இயங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் மாநிலத்தின் நலன்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுவிடும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
÷உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 9 பேரைக் கொண்ட ஆயம் அளித்த இந்தத் தீர்ப்பு என்பது, மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்.
1980-களில் மத்திய, மாநில உறவு பற்றி ஆராய பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம் தன்னுடைய அறிக்கையில் பின்வருமாறு திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது:
மிக மோசமான சூழ்நிலையில் வேறுவழியே இல்லாதபோதும், மற்ற வேறு வகையான முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போனபோதும், அந்த மாநிலத்தில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கைத் திருத்தும் நோக்கத்துடன் 356-வது பிரிவு மிகமிக அபூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்வதற்கு முன்னால் அந்த மாநிலத்தில் எழுந்துள்ள பிரச்னையைத் தீர்ப்பதற்கு சகல விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தவறு செய்யும் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடப்படவேண்டும். 356-வது பிரிவின்படி நடவடிக்கை எடுப்பதற்கு முன், மாநில அரசு அளிக்கும் விளக்கத்தை மிகக் கவனமுடன் பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறெல்லாம் செய்யாமல் மாநில அரசைப் பதவிநீக்கம் செய்வதென்பது சரியானது அல்ல.
உலகத்தின் பல்வேறு கூட்டாட்சி முறை உள்ள நாடுகளின் அரசியல் சட்டத்தில் இத்தகைய சட்டப்பிரிவு என்பது இல்லவே இல்லை. எனவே இச்சட்டப்பிரிவை அடியோடு நீக்குவது பற்றி ஆராயவேண்டிய கட்டம் வந்துவிட்டது.
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்த இந்தியாவின் நிலைமை முற்றிலுமாக மாறியிருக்கிறது. அப்போது காங்கிரஸ் கட்சி ஒன்றே வலிமை வாய்ந்த கட்சியாகத் திகழ்ந்தது. 1947-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி நடத்தியது. சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் நின்று தலைமை தாங்கிப் போராடிய பல தலைவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்புகளில் இருந்தார்கள். எனவே மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பிரச்னைகள் எழும்போது அவற்றைக் கட்சி மட்டத்திலும் ஆட்சி மட்டத்திலும் சுமுகமாகத் தீர்த்துக் கொண்டார்கள்.
ஆனால் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி மத்தியில் ஒரு கட்சியும் மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகளும் ஆட்சிப் பொறுப்புகளை ஏற்கும் நிலை வந்துவிட்டது. இந்த நிலைமையிலும் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு மத்தியில் எந்தவொரு கட்சியும் ஆட்சி செய்யமுடியாமல் பல்வேறு மாநிலக் கட்சிகளின் உதவியோடு கூட்டணி ஆட்சியை நடத்தும் நிலை மிகத் தெளிவாக உருவாகிவிட்டது.
இனி எந்தக் காலத்திலும் ஒரு கட்சியின் ஆட்சி என்பது மத்திய அரசில் ஏற்படப் போவதில்லை. எனவே மத்திய, மாநில அரசுகளுக்கிடையே மோதலற்ற போக்கு ஏற்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்; இல்லையென்றால் வளர்ச்சி திட்டவட்டமாகப் பாதிக்கப்படும்.
÷நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற வளர்ச்சிப் போக்குகள் இருப்பது மோதல்களை அதிகமாக்குவதற்கே வழிவகுக்கும். மாநில உரிமைகளை வலியுறுத்தி காங்கிரஸ் அல்லாத கட்சிகள் நடத்தும் போராட்டம் என்பது மத்திய அரசின் அதிகாரங்களுக்கு அறைகூவல் விடுவதில் போய் முடியும்.
இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சி முறைகள் நிலவி வரும்போது இந்தியாவிலும் அத்தகைய நிலைமை வந்துவிடக் கூடாது. மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும் உண்மையான கூட்டாட்சி மலரும் வகையிலும் நமது அரசியல் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டிய காலகட்டம் பிறந்துவிட்டது. இந்த உண்மையை மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் உணரவேண்டும். இல்லையென்றால் வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி
÷இப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிரும் புதிருமான பா.ஜ.க. இடதுசாரிக் கட்சிகள், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இணைந்து நின்று மத்திய அரசின் இச்செயலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
÷மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்குப் பதிலளிக்கும்போது, மத்திய அரசின் குழு அனுப்பும் முடிவு, மாநில அரசுடன் மோதவேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இதை 356-வது விதி என்ற கண்ணாடி வழியாகப் பார்க்கத் தேவையில்லை என்று கூறியிருப்பது, தேங்காய் திருட தென்னை மரத்தில் ஏறியவனை தோட்டக்காரன் கண்டுபிடித்தவுடன் புல் பறிக்க மரமேறியதாகப் பசப்பிய கதைதான் நினைவுக்கு வருகிறது.
÷சிறந்த வழக்கறிஞரான சிதம்பரம் அரசியல் சட்டத்தின் பிரிவுகள் என்ன கூறுகின்றன என்பதை அறியாமல் இருக்க முடியாது. சட்டம் ஒழுங்குப் பிரச்னை என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட ஒன்றாகும். ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுமானால் மத்திய அரசு என்ன செய்யவேண்டும் என்பதை அரசியல் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. அரசியல் சட்டத்தின் 163, 164, 356-வது பிரிவுகள் மத்திய, மாநில உறவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
÷ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதாகப் புகார் செய்யப்படுமானால், மத்திய அரசு உடனடியாக அந்த மாநில அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு மாநில அரசு மறுக்குமானால், அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற 257(1) பிரிவின்படி மாநில அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆணைகளை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். அந்த ஆணைகளையும் மாநில அரசு புறக்கணிக்குமானால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்து மத்திய அரசு யோசிக்க வேண்டும். அதன் பின்னரே 356-வது பிரிவின் கீழ் மாநில அரசைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
÷அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்தில் அரசியல் நிர்ணய சபையில் இப் பிரச்னை குறித்து விரிவான-ஆழமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. 1949-ம் ஆண்டு மே 31-ம் தேதி அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவு கு றித்து விவாதம் நடைபெற்றபோது, மத்திய சட்ட அமைச்சர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
மாநில அரசுகளுக்கு அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள விதிமுறைகளுக்கு மாறாக அந்த அரசுகள் செயல்படுமானால் மத்திய அரசு தலையிடும் நிலை உருவாகிறது. ஆனால் மாநிலத்தில் நல்ல அரசு செயல்படுகிறதா இல்லையா என்பதை நிர்ணயிப்பது மத்திய அரசின் வேலை அல்ல. இந்த விஷயத்தில் நான் மிகத் தெளிவாகவே இருக்கிறேன். இந்தச் சட்டப்பிரிவு செயல்படாத செத்த பிரிவாகவே இருக்கும். எனினும் இந்தச் சட்டப்பிரிவைச் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் மாநில ஆட்சியைக் கலைப்பதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முதலாவதாக அரசியல் சட்டம் வகுத்துத் தந்த வழிப்பிரகாரம் நடக்குமாறு தவறு செய்யும் மாநிலத்துக்கு எச்சரிக்கை விடவேண்டும். அந்த எச்சரிக்கை உரிய பயனை அளிக்காமல் போகுமானால், அந்த மாநில மக்களே தங்கள் விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும். மேற்கண்ட இரண்டு பரிகாரங்களும் தோல்வியடையுமானால் மட்டுமே 356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்த வேண்டும்.
÷மாநிலங்கள் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தக்கூடிய பல்வேறு சட்டப்பிரிவுகள் நமது அரசியல் சட்டத்தில் இடம்பெற்றிருந்த போதிலும், நமது அரசியல் அமைப்பு, கூட்டாட்சி அமைப்பாகும். அதாவது மத்திய அரசுக்கு என்று ஒதுக்கப்பட்ட துறைகளில் மத்திய அரசுக்கு எவ்வளவு சுயஆதிக்கம் உண்டோ அதைப்போல மாநிலங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட துறைகளில் மாநிலங்களுக்கு சுயஆதிக்கம் உண்டு. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கை என்பது மத்திய,மாநில அரசுகளுக்கு இடையே சட்டம் இயற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பகிர்ந்து தருவதாகும்.
இது மத்திய அரசு இயற்றும் சட்டத்தின் மூலம் அல்லது அரசியல் சட்டத்தின் மூலமே வகைசெய்யப்படுகிறது. நமது அரசியலமைப்பின்படி மாநிலங்கள் சட்டம் இயற்றும் அல்லது நிர்வாக அதிகாரங்களுக்கு மத்திய அரசைச் சார்ந்திருக்கவில்லை. இந்த விஷயத்தில் மாநில அரசும், மத்திய அரசும் சரிசமமான அதிகாரங்கள் படைத்தவை.
÷1951-ம் ஆண்டில் முதல் முதலாக பஞ்சாப் மாநில அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது. அதற்குப் பிறகு 100 தடவைகளுக்கு மேல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசு இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டது. எல்லா கட்சிகளுக்கும் இதில் பங்கு உண்டு. 1977-ம் ஆண்டில் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது 9 மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் அரசுகள் பதவி நீக்கம் செய்யப்பட்டன. 1980-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டபோது 9 மாநிலங்களில் இருந்த ஜனதா கட்சி அரசுகள் பதவி நீக்கம் செய்யப்பட்டன. ஆனால் அப்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தால் இந்தப் பதவி நீக்கத்தை ஏற்பதற்கு அது மறுத்துவிட்டது. ஆனால் 1994-ம் ஆண்டில் கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த எஸ்.ஆர். பொம்மையின் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, இந்திய உச்ச நீதிமன்றத்தில் 9 பேர்களைக் கொண்ட நீதிபதிகளின் ஆயம் தலையிட்டு உன்னதமான ஒரு தீர்ப்பை வழங்கியது.
÷இந்த ஆயத்தில் ஒருவரான நீதிபதி கே. ராமசாமி பின்வருமாறு குறிப்பிட்டார்:
நமது அரசியல் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தை தன்னுடைய அடிப்படை அம்சமாகக் கொண்டிருக்கிறது. அது ஒருபோதும் அழிக்கப்பட முடியாதது.
மற்றொரு நீதிபதியான குல்தீப் சிங் கூறுகையில்: மாநிலங்கள் சுதந்திரமானதும் தனித்தன்மை வாய்ந்ததுமான அரசியல் சட்ட ரீதியான நிலையைக் கொண்டிருக்கின்றன. நாட்டின் அரசியல், சமுதாயம், கல்வி போன்ற துறைகளில் மத்திய அரசைப் போலவே மாநில அரசுகளுக்கும் முக்கியப் பங்களிப்பு உண்டு. மத்திய ஆட்சியின் ஏஜெண்டுகளாகவோ அல்லது அதைச் சார்ந்து நிற்கவேண்டிய நிலையிலேயோ மாநில ஆட்சிகள் இல்லை.÷ ÷மற்றொரு நீதிபதியான ரத்தினவேல் பாண்டியன் கூறுகையில்: 356-வது சட்டப்பிரிவு அபூர்வமாகவே பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் சட்ட அமைப்பின்படி மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நிலவும் உறவைச் சீர்குலைக்கும் வகையில் இந்தப் பிரிவை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுமானால், மாநில முதலமைச்சர் தன்னுடைய அரசியல் ரீதியான கடமைகளைச் சரிவரச் செய்ய முடியாது. தான் தொடர்ந்து பதவியில் இருக்க முடியுமா முடியாதா என்ற அச்சத்தின் கீழ் அவர் இயங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் மாநிலத்தின் நலன்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுவிடும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
÷உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 9 பேரைக் கொண்ட ஆயம் அளித்த இந்தத் தீர்ப்பு என்பது, மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்.
1980-களில் மத்திய, மாநில உறவு பற்றி ஆராய பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம் தன்னுடைய அறிக்கையில் பின்வருமாறு திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது:
மிக மோசமான சூழ்நிலையில் வேறுவழியே இல்லாதபோதும், மற்ற வேறு வகையான முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போனபோதும், அந்த மாநிலத்தில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கைத் திருத்தும் நோக்கத்துடன் 356-வது பிரிவு மிகமிக அபூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்வதற்கு முன்னால் அந்த மாநிலத்தில் எழுந்துள்ள பிரச்னையைத் தீர்ப்பதற்கு சகல விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தவறு செய்யும் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடப்படவேண்டும். 356-வது பிரிவின்படி நடவடிக்கை எடுப்பதற்கு முன், மாநில அரசு அளிக்கும் விளக்கத்தை மிகக் கவனமுடன் பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறெல்லாம் செய்யாமல் மாநில அரசைப் பதவிநீக்கம் செய்வதென்பது சரியானது அல்ல.
உலகத்தின் பல்வேறு கூட்டாட்சி முறை உள்ள நாடுகளின் அரசியல் சட்டத்தில் இத்தகைய சட்டப்பிரிவு என்பது இல்லவே இல்லை. எனவே இச்சட்டப்பிரிவை அடியோடு நீக்குவது பற்றி ஆராயவேண்டிய கட்டம் வந்துவிட்டது.
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்த இந்தியாவின் நிலைமை முற்றிலுமாக மாறியிருக்கிறது. அப்போது காங்கிரஸ் கட்சி ஒன்றே வலிமை வாய்ந்த கட்சியாகத் திகழ்ந்தது. 1947-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி நடத்தியது. சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் நின்று தலைமை தாங்கிப் போராடிய பல தலைவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்புகளில் இருந்தார்கள். எனவே மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பிரச்னைகள் எழும்போது அவற்றைக் கட்சி மட்டத்திலும் ஆட்சி மட்டத்திலும் சுமுகமாகத் தீர்த்துக் கொண்டார்கள்.
ஆனால் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி மத்தியில் ஒரு கட்சியும் மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகளும் ஆட்சிப் பொறுப்புகளை ஏற்கும் நிலை வந்துவிட்டது. இந்த நிலைமையிலும் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு மத்தியில் எந்தவொரு கட்சியும் ஆட்சி செய்யமுடியாமல் பல்வேறு மாநிலக் கட்சிகளின் உதவியோடு கூட்டணி ஆட்சியை நடத்தும் நிலை மிகத் தெளிவாக உருவாகிவிட்டது.
இனி எந்தக் காலத்திலும் ஒரு கட்சியின் ஆட்சி என்பது மத்திய அரசில் ஏற்படப் போவதில்லை. எனவே மத்திய, மாநில அரசுகளுக்கிடையே மோதலற்ற போக்கு ஏற்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்; இல்லையென்றால் வளர்ச்சி திட்டவட்டமாகப் பாதிக்கப்படும்.
÷நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற வளர்ச்சிப் போக்குகள் இருப்பது மோதல்களை அதிகமாக்குவதற்கே வழிவகுக்கும். மாநில உரிமைகளை வலியுறுத்தி காங்கிரஸ் அல்லாத கட்சிகள் நடத்தும் போராட்டம் என்பது மத்திய அரசின் அதிகாரங்களுக்கு அறைகூவல் விடுவதில் போய் முடியும்.
இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சி முறைகள் நிலவி வரும்போது இந்தியாவிலும் அத்தகைய நிலைமை வந்துவிடக் கூடாது. மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும் உண்மையான கூட்டாட்சி மலரும் வகையிலும் நமது அரசியல் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டிய காலகட்டம் பிறந்துவிட்டது. இந்த உண்மையை மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் உணரவேண்டும். இல்லையென்றால் வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி
Labels:
அரசியல்,
கட்டுரை,
சட்டம்,
மத்தியஅரசு
Monday, December 14, 2009
கொள்கையை மறந்த கூட்டணிகள்
இந்திய அரசியலில் தனிக்கட்சி ஆட்சி என்பது முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சியே கோலோச்சுகிறது. சுதந்திரம் வாங்கித் தந்ததாகக் கூறும் காங்கிரஸ் கட்சியாகவே இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, அவை கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
நேற்றுமுதல் பகைவர்களாக இருந்தவர்கள் இன்று முதல் நண்பர்களாக மாறுவதும், இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை எதிரிகளாக ஆவதும் சாதாரண குடிமக்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அரசியல்வாதிகளுக்கு இது வாடிக்கையாகிவிட்டது.
இந்தச் சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு தத்துவ விளக்கமும் கூறுகின்றனர். "அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை; நிரந்தரமான பகைவர்களும் இல்லை' என்னே அருமையான கொள்கை விளக்கம், பாருங்கள்!
நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி ஓடும் காரணம் புரிகிறதா? கடந்த காலங்களில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் மீதும், பாஜக மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து போனார்கள். அவர்களுக்கு ஒரு மூன்றாவது அணி தேவைப்பட்டபோது, அந்தச் சூழ்நிலையை இடதுசாரிகள் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர். அப்போது அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் துணையாக நின்றனர். மதவாதக் கட்சியான பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது எனக் காரணம் கூறினர்.
காலம் கடந்து அவர்கள் மூன்றாவது அணியை உருவாக்கியபோது மக்கள் நிராகரித்து விட்டனர். காங்கிரஸ் கட்சிக்குக் கடைசிவரை முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த இடதுசாரிகளின் அரசியல் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை.
மாநிலங்களிலும் இதுதான் நிலைமை; தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் மாறிமாறி திமுக அல்லது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகளின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? மத்தியில் மூன்றாவது அணியின் தேவையை உணர்ந்தவர்கள் மாநில அரசியலுக்கு மூன்றாவது அணி தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டதுதான் மிகப்பெரிய வேடிக்கை!
கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஈழத்தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்தது. கடைசிநாள் வரை பதவிசுகத்தை அனுபவித்த பாட்டாளி மக்கள் கட்சி, உறவை முறித்துக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டதை மக்கள் எப்படி ஏற்பார்கள்? விடுதலைப்புலிகளை ஆதரித்துக்கொண்டிருக்கும் மதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியும் எதிர்மாறான கொள்கைகளைக் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டன.
தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையாத நிலையில் அதிமுகவுடன் கூட்டணி முடிந்துவிட்டது என பாமக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஒருதரப்பாக அறிவித்தன. இதற்கு முன் நடந்த இடைத்தேர்தலில் பாமகவைத் தொடர்ந்து அதிமுகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இடதுசாரிகள் தனியாக நின்று படுதோல்வியடைந்தனர். ஆனால், பாடம் கற்றனரா என்பது தெரியவில்லை.
இப்போது திருச்செந்தூர், வந்தவாசி (தனி) சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக நிற்பதாக அறிவித்தவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசரம் அவசரமாக அதன் தலைவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, அவர்கள் மேடையில் பேசப் போவதில்லை என்றும் தனியாகவே கூட்டம் போட்டு ஆதரவு தேடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
"ஈழத் தமிழர் பிரச்னையில் எங்கள் கோரிக்கையை மத்திய அரசு கேட்கவில்லை' என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக , காங்கிரசின் உறவை உதறித்தள்ள முன்வரவில்லை. அப்படி ஒரு நிலை உருவானால், அந்தக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக காத்துக்கொண்டிருக்கிறது. இதுதான் இங்கே அரசியல் கட்சிகளின் கூட்டணிக் கொள்கை.
தமிழகத்தில் மறுபடியும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், வந்தவாசி (தனி) ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் தெரிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி (தனி) தொகுதிக்கு அந்தத் தொகுதி திமுக உறுப்பினராக இருந்த ஜெயராமன் மறைவு காரணமாக அத் தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. திருச்செந்தூர் தொகுதியில் அத் தொகுதி அதிமுக உறுப்பினராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்துவிட்டார். இதனால் இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் தொகுதியில் 25 பேரும், வந்தவாசி (தனி) தொகுதியில் 14 பேரும் போட்டியிடுகின்றனர். இதில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளும் மோதுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் என்றாலே ஒரு பரபரப்புதான். இப்போது ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சியின் மதிப்பீடு அந்தத் தேர்தல் மூலம் கணிக்கப்படும். அத்துடன் வரப்போகும் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இது அமையும் என்பதால் இந்த முடிவுகள் மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சி எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று எண்ணுவதும், அதனை எதிர்க்கட்சிகள் எப்படியாவது முறியடித்துவிட வேண்டும் என்று திட்டமிடுவதும் இயல்பு. இதனால்தான் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுகிறது.
இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வீடுகளுக்குப் பால், பத்திரிகை வினியோகம் செய்பவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவர் என்றும், மேலும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பணம் பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க அவர்கள் மீது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
தேர்தல் நேரங்களில் வாக்குச் சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம், "எங்கள் தெருவுக்குக் குடிநீர் வசதி வேண்டும்; சாலை வசதி தேவை' என்று கோரிக்கைகளை முன்னிறுத்துவார்கள். ஆனால், இப்போது மக்கள் பணம்கேட்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இதற்குக் காரணம் என்ன? அரசியல் கட்சிகள் தானே! அவர்கள் மீது இதுவரை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? பெயருக்கு வழக்குகள் போடுவார்கள். அது அடுத்த தேர்தல்வரை தொடரும். அவர்கள் ஆளும் கட்சியானால், அந்த வழக்குகள் கிடப்பில் போடப்படும் அல்லது திரும்பப் பெறப்படும்.
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தால் அதன் தீர்ப்பு வரவும், அடுத்த தேர்தல் வரவும் சரியாக இருக்கும். "வெற்றி பெற்றது செல்லாது' என்று அறிவிக்கப்பட்ட தகுதியிழந்த அந்த உறுப்பினர், முழுபதவிக்காலப் பயனையும் அனுபவித்து விட்டே வெளியேறுகிறார். அவர் இதுவரை பெற்ற ஊதியம் மற்றும் சலுகைகளைப் பறிமுதல் செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா? இத்தனை காலம் வழக்காடியவர் பெறப்போகும் பயன்என்ன?
""அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால் வாக்காளர்கள் வாங்கக்கூடாது'' என்னும் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. எந்தக் கொள்கையும் இல்லாமல் கூட்டணி அமைத்துக் கொண்டு வெற்றிபெற்று பதவிக்காவும், பணத்துக்காகவும் அலையும் அவர்களிடம், ""வாங்கியது வரை ஆதாயம்'' என்றே மக்கள் நினைக்கின்றனர்.
"உங்களுக்காக உழைக்க எங்களுக்கு உத்தரவிடுங்கள்' என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே தவிர நடைமுறையில் நன்றாக இல்லையே! மக்கள் சேவைக்காகவே பதவிகளைத் துச்சமாகத் தூக்கி எறிந்த தூய தலைவர்களை நாடு மறந்துவிட்டது. இப்போது, "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று கூறினால் ஏற்கப்படுமா?
இந்த இடைத்தேர்தல் வெற்றி தோல்வியால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை. தேசத்தின் பணம் விரயம் செய்யப்படுகிறது.
ஆந்திரத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அதுபோல பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிக்கே அந்த இடத்தை அளித்து விடுவதற்கான தேர்தல் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
""இந்தியா ஒரு பெரிய நாடாக இருப்பதில் ஒரு விசேஷம் இருக்கிறது. கோல்கத்தாவுக்குப் போய் கம்யூனிசத்தை ஆதரித்தும், அலாகாபாத்துக்குப் போய் முதலாளித்துவத்தை ஆதரித்தும், காரைக்குடிக்குப்போய் வகுப்புவாதத்தை ஆதரித்தும் பேச முடிகிறதல்லவா?'' என்று கவிஞர் கண்ணதாசன் இந்திய அரசியலின் முரண்பாட்டைக் கேலி செய்தார். கொள்கையை மறந்த கூட்டணிகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாகும்.
கட்டுரையாளர் : உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி
நேற்றுமுதல் பகைவர்களாக இருந்தவர்கள் இன்று முதல் நண்பர்களாக மாறுவதும், இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை எதிரிகளாக ஆவதும் சாதாரண குடிமக்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அரசியல்வாதிகளுக்கு இது வாடிக்கையாகிவிட்டது.
இந்தச் சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு தத்துவ விளக்கமும் கூறுகின்றனர். "அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை; நிரந்தரமான பகைவர்களும் இல்லை' என்னே அருமையான கொள்கை விளக்கம், பாருங்கள்!
நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி ஓடும் காரணம் புரிகிறதா? கடந்த காலங்களில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் மீதும், பாஜக மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து போனார்கள். அவர்களுக்கு ஒரு மூன்றாவது அணி தேவைப்பட்டபோது, அந்தச் சூழ்நிலையை இடதுசாரிகள் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர். அப்போது அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் துணையாக நின்றனர். மதவாதக் கட்சியான பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது எனக் காரணம் கூறினர்.
காலம் கடந்து அவர்கள் மூன்றாவது அணியை உருவாக்கியபோது மக்கள் நிராகரித்து விட்டனர். காங்கிரஸ் கட்சிக்குக் கடைசிவரை முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த இடதுசாரிகளின் அரசியல் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை.
மாநிலங்களிலும் இதுதான் நிலைமை; தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் மாறிமாறி திமுக அல்லது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகளின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? மத்தியில் மூன்றாவது அணியின் தேவையை உணர்ந்தவர்கள் மாநில அரசியலுக்கு மூன்றாவது அணி தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டதுதான் மிகப்பெரிய வேடிக்கை!
கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஈழத்தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்தது. கடைசிநாள் வரை பதவிசுகத்தை அனுபவித்த பாட்டாளி மக்கள் கட்சி, உறவை முறித்துக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டதை மக்கள் எப்படி ஏற்பார்கள்? விடுதலைப்புலிகளை ஆதரித்துக்கொண்டிருக்கும் மதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியும் எதிர்மாறான கொள்கைகளைக் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டன.
தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையாத நிலையில் அதிமுகவுடன் கூட்டணி முடிந்துவிட்டது என பாமக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஒருதரப்பாக அறிவித்தன. இதற்கு முன் நடந்த இடைத்தேர்தலில் பாமகவைத் தொடர்ந்து அதிமுகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இடதுசாரிகள் தனியாக நின்று படுதோல்வியடைந்தனர். ஆனால், பாடம் கற்றனரா என்பது தெரியவில்லை.
இப்போது திருச்செந்தூர், வந்தவாசி (தனி) சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக நிற்பதாக அறிவித்தவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசரம் அவசரமாக அதன் தலைவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, அவர்கள் மேடையில் பேசப் போவதில்லை என்றும் தனியாகவே கூட்டம் போட்டு ஆதரவு தேடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
"ஈழத் தமிழர் பிரச்னையில் எங்கள் கோரிக்கையை மத்திய அரசு கேட்கவில்லை' என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக , காங்கிரசின் உறவை உதறித்தள்ள முன்வரவில்லை. அப்படி ஒரு நிலை உருவானால், அந்தக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக காத்துக்கொண்டிருக்கிறது. இதுதான் இங்கே அரசியல் கட்சிகளின் கூட்டணிக் கொள்கை.
தமிழகத்தில் மறுபடியும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், வந்தவாசி (தனி) ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் தெரிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி (தனி) தொகுதிக்கு அந்தத் தொகுதி திமுக உறுப்பினராக இருந்த ஜெயராமன் மறைவு காரணமாக அத் தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. திருச்செந்தூர் தொகுதியில் அத் தொகுதி அதிமுக உறுப்பினராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்துவிட்டார். இதனால் இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் தொகுதியில் 25 பேரும், வந்தவாசி (தனி) தொகுதியில் 14 பேரும் போட்டியிடுகின்றனர். இதில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளும் மோதுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் என்றாலே ஒரு பரபரப்புதான். இப்போது ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சியின் மதிப்பீடு அந்தத் தேர்தல் மூலம் கணிக்கப்படும். அத்துடன் வரப்போகும் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இது அமையும் என்பதால் இந்த முடிவுகள் மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சி எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று எண்ணுவதும், அதனை எதிர்க்கட்சிகள் எப்படியாவது முறியடித்துவிட வேண்டும் என்று திட்டமிடுவதும் இயல்பு. இதனால்தான் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுகிறது.
இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வீடுகளுக்குப் பால், பத்திரிகை வினியோகம் செய்பவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவர் என்றும், மேலும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பணம் பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க அவர்கள் மீது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
தேர்தல் நேரங்களில் வாக்குச் சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம், "எங்கள் தெருவுக்குக் குடிநீர் வசதி வேண்டும்; சாலை வசதி தேவை' என்று கோரிக்கைகளை முன்னிறுத்துவார்கள். ஆனால், இப்போது மக்கள் பணம்கேட்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இதற்குக் காரணம் என்ன? அரசியல் கட்சிகள் தானே! அவர்கள் மீது இதுவரை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? பெயருக்கு வழக்குகள் போடுவார்கள். அது அடுத்த தேர்தல்வரை தொடரும். அவர்கள் ஆளும் கட்சியானால், அந்த வழக்குகள் கிடப்பில் போடப்படும் அல்லது திரும்பப் பெறப்படும்.
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தால் அதன் தீர்ப்பு வரவும், அடுத்த தேர்தல் வரவும் சரியாக இருக்கும். "வெற்றி பெற்றது செல்லாது' என்று அறிவிக்கப்பட்ட தகுதியிழந்த அந்த உறுப்பினர், முழுபதவிக்காலப் பயனையும் அனுபவித்து விட்டே வெளியேறுகிறார். அவர் இதுவரை பெற்ற ஊதியம் மற்றும் சலுகைகளைப் பறிமுதல் செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா? இத்தனை காலம் வழக்காடியவர் பெறப்போகும் பயன்என்ன?
""அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால் வாக்காளர்கள் வாங்கக்கூடாது'' என்னும் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. எந்தக் கொள்கையும் இல்லாமல் கூட்டணி அமைத்துக் கொண்டு வெற்றிபெற்று பதவிக்காவும், பணத்துக்காகவும் அலையும் அவர்களிடம், ""வாங்கியது வரை ஆதாயம்'' என்றே மக்கள் நினைக்கின்றனர்.
"உங்களுக்காக உழைக்க எங்களுக்கு உத்தரவிடுங்கள்' என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே தவிர நடைமுறையில் நன்றாக இல்லையே! மக்கள் சேவைக்காகவே பதவிகளைத் துச்சமாகத் தூக்கி எறிந்த தூய தலைவர்களை நாடு மறந்துவிட்டது. இப்போது, "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று கூறினால் ஏற்கப்படுமா?
இந்த இடைத்தேர்தல் வெற்றி தோல்வியால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை. தேசத்தின் பணம் விரயம் செய்யப்படுகிறது.
ஆந்திரத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அதுபோல பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிக்கே அந்த இடத்தை அளித்து விடுவதற்கான தேர்தல் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
""இந்தியா ஒரு பெரிய நாடாக இருப்பதில் ஒரு விசேஷம் இருக்கிறது. கோல்கத்தாவுக்குப் போய் கம்யூனிசத்தை ஆதரித்தும், அலாகாபாத்துக்குப் போய் முதலாளித்துவத்தை ஆதரித்தும், காரைக்குடிக்குப்போய் வகுப்புவாதத்தை ஆதரித்தும் பேச முடிகிறதல்லவா?'' என்று கவிஞர் கண்ணதாசன் இந்திய அரசியலின் முரண்பாட்டைக் கேலி செய்தார். கொள்கையை மறந்த கூட்டணிகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாகும்.
கட்டுரையாளர் : உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி
Labels:
அரசியல்,
இந்தியாஅரசு,
கட்டுரை,
தேர்தல்
Saturday, December 12, 2009
கேள்வி கேட்பார் இல்லையா?
பொது மக்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் ஒன்று சட்டத்தின் தவறான விதிமுறைகளால் இருக்கலாம் அல்லது அரசு நிர்வாகத்தில் நிலவும் காலதாமதம், அலட்சியப் போக்கு, ஊழல் போன்றவற்றால் மக்கள் அவதியுறலாம்.
சட்டத்தின் குறைபாடுகளை நீக்குவதற்கான அதிகாரம் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களுக்கு இருக்கிறது. நிர்வாகத்தின் சீர்கேடுகளால் நடைபெறும் அநீதிகளைக் களையவும், அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டங்களைக் கண்காணித்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்.
அன்றாட வாழ்வில் நாட்டு மக்களுக்கு ஏற்படும் பல்வேறு குறைகளை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து தக்க நடவடிக்கைகளை எடுக்க நாடாளுமன்ற முறையில் உள்ள வாய்ப்பு
களில் மிக முக்கியமானது கேள்வி நேரம்.
கேள்வி நேரம் என்பது இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் 18-ம் நூற்றாண்டில் தொடங்கியது.
இங்கிலாந்து நாடாளுமன்ற முறையைப் பின்பற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரமாக ஒதுக்கப்படுகிறது. அதிகபட்சமாக இரு அவைகளிலும் நேரிடை பதிலுக்காக தலா இருபது கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும். ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்ட துறையின் அமைச்சர் நேரிடையாக அவையில் பதிலளிப்பதற்காக நட்சத்திரக் குறியிடப்பட்ட இருபது கேள்விகள் குலுக்கல் முறையில் முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவையின் விதிமுறைப்படி ஓர் உறுப்பினருக்கு ஒரு நட்சத்திரக் குறியிட்ட கேள்விக்கு மேல் ஒரு நாளைக்குத் தரப்படுவதில்லை.
ஒரே கேள்வியைக் கேட்பவர்கள் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் குலுக்கல் முறையில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவையில் நேரிடையாகப் பதிலளிக்கப்படாமல் இரு அவைகளிலும் தனித்தனியாக ஒவ்வொரு நாளும் இருநூறு கேள்விகளுக்கு எழுத்து மூலமாகப் பதில் தரப்பட்டு அவையின் முன் வைக்கப்படும். இந்த முறையால், இரு அவைகளிலும் சேர்ந்து நாள் ஒன்றுக்கு 440 கேள்வி-பதில்கள் மூலம் அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு மக்கள் பிரதிநிதிகளுக்குக் கிடைக்கிறது.
545 உறுப்பினர்களையுடைய மக்களவையின் கேள்வி நேரத்தில், இருபது கேள்விகளுக்கு மட்டுமே நேரடி பதில் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் என்பதால் அத்தகைய வாய்ப்பு மிக அரியதாகத்தான் ஓர் உறுப்பினருக்கு அமையும். திங்கள் முதல் வெள்ளி வரை, வாரத்தில் அமைச்சரகத் துறைகள் அனைத்தும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. உறுப்பினர் எழுப்பும் கேள்வி அந்த பிரச்னைக்குரிய அமைச்சரைக் குறிப்பிட்டு நேரிடையாக அனுப்பப்படுகிறது. கேள்விக்குரிய நாளுக்கு ஐந்து நாள் முன்னதாகவும், 21 நாள்களுக்குள்ளாகவும் உறுப்பினர் தமது கேள்வியை அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளின் விவரம் அச்சிடப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஐந்தாறு நாள்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டுவிடும். ஆக, தன்னுடைய கேள்வி வரும் நாளன்று குறிப்பிட்ட உறுப்பினர் அந்தக் கேள்விக்குரிய பிரச்னைகளைத் துணைக் கேள்விகள் மூலம் கேட்பதற்கான விவரங்களைச் சேகரித்து வைத்து, குறிப்பிட்ட அமைச்சரின் துறை நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும்.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கடந்த காலத்தில் இருபது கேள்விகளில் நான்கு அல்லது ஐந்து கேள்விகளுக்கு மட்டுமே பதில் பெறப்பட்டு அதற்குள் கேள்வி நேரம் முடிந்துவிடும்.
இங்கிலாந்து மக்களவையில் கேள்வி-பதில்கள் மிக விரைவாகவும், சுருக்கமாகவும் இருக்கும். உதாரணமாக, 30-11-2009 திங்கள்கிழமை ஒரு மணி நேரத்தில் 19 கேள்விகளுக்குப் பதில்கள் தரப்பட்டன.
அதே 30-11-2009 திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய மக்களவைக் கூட்டத்தின் கேள்வி நேரத்தில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் கேட்கப்படவிருந்த இருபது கேள்விகளுக்குத் தொடர்புடைய 38 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே வருகை தந்து தம்முடைய கேள்விகளைக் கேட்டனர். மீதமிருந்த கேள்விகளுக்கு உரிய 34 உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் அவையில் இல்லாத காரணத்தால் அரை மணி நேரத்தில் கேள்வி நேரம் முடிவு பெற்று அவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற மக்களவைக் கூட்டங்களில் குறிப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள் பெரும்பாலான கேள்விகள் பதில் தரப்படாமல் விடப்பட்டிருக்குமே தவிர, 26 நிமிடத்துக்குள் கேள்வி நேரம் முற்றுப் பெற்றது கிடையாது. ஒதுக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகக் கேள்வி கேட்ட உறுப்பினர்கள் அவையில் இல்லாததால், அவை ஒத்திவைக்கப்பட்டது என்பது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு வேதனையான சாதனை ஆகும்.
கேள்விகள் கேட்டுவிட்டுக் குறிப்பிட்ட தருணத்தில் அவையில் இல்லாத 34 பேர்களில் கட்சிவாரியாகப் பார்த்தால் காங்கிரஸ் (12), பா.ஜ.க. (7), ஜே.டி.யு. (3), சிவசேனா (3), சி.பி.எம். (2), சி.பி.ஐ. (2) மற்றும் ஓர் உறுப்பினர் மட்டும் வராத கட்சிகள் சமாஜ்வாதி, கே.சி.எம்., ஏ.எம்.எம்.ஐ., பிஜு ஜனதாதள், சுயேச்சை ஆகியோர் அடங்கும். ஆக, ஆளுங்கட்சியினர் கேள்வி நேரத்தில் அலட்சியமாக இருப்பதைவிட, கேள்வி கேட்ட எதிர்க்கட்சியினர் பலர் மக்களுக்குப் பணியாற்றத் தமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறியது கண்டனத்துக்குரியதாகும்.
மக்களவையில் இப்படி என்றால், மாநிலங்களவையிலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது. 2-12-2009 அன்று மாநிலங்களவையில் கேள்வி கேட்ட 5 உறுப்பினர்கள் வரவில்லை. மேலும் 8-12-2009 அன்று கேள்வி கேட்ட 7 உறுப்பினர்கள் அவையில் இல்லாத காரணத்தால் அந்தக் கேள்விகளுக்கு நேரிடையான பதில்கள் அவையில் தரப்படவில்லை.
சென்ற 14-வது மக்களவையின் ஐந்தாண்டு காலத்தில் மொத்தம் 89,000 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. 14-வது மக்களவையின் ஐந்தாண்டு காலத்தில் 56 உறுப்பினர்கள் எத்தகைய கேள்வியையும் கேட்கவில்லை என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. அவர்களில் முக்கியமானவர்கள் தேவ கவுடா, மம்தா பானர்ஜி, அஜீத் சிங், உமர் அப்துல்லா, கல்யாண் சிங், ஜெகதீஷ் டைட்லர், தர்மேந்திரா, கோவிந்தா போன்ற கட்சித் தலைவர்கள் பலரும், திரையுலகப் பிரமுகர்களும் ஒரு கேள்விகூட கேட்டதில்லை. மேலும், 67 உறுப்பினர்கள் அந்த ஐந்தாண்டு காலத்தில் பத்துக் கேள்விகள் அல்லது அதற்கும் குறைவாகக் கேட்டிருக்கிறார்கள். மொத்த உறுப்பினர்களில் 23 சதவிகிதம் பேர் கேள்வி கேட்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருந்தனர்.
சென்ற மக்களவையில் சிவசேனா கட்சி உறுப்பினர்கள் ஆனந்தராவ் வித்தோபா அட்சுல் 1,255 கேள்விகளையும், சிவாஜி அதல்ராவ் பாட்டில் 1,251 கேள்விகளையும் கேட்டு முதல் இரண்டு இடங்களைப் பெற்றிருந்தனர். இதை வைத்து, அகில இந்திய அரசியலில் சிவசேனா உறுப்பினர்களுக்கு இருந்த அக்கறை மற்ற கட்சியினருக்கு இல்லாது போயிற்று என்று கூற முடியுமா?
30-11-2009 அன்று கேள்வி கேட்டு அவைக்கு வராத உறுப்பினர்கள் பற்றி அந்தந்தக் கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதப்போவதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்துள்ளார். அவையின் நடவடிக்கைகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு ரூ.26,000 அரசாங்கப்பணம் செலவிடப்படுகிறது. அன்று கேள்வி கேட்டு வராத உறுப்பினர்களால் அவையின் நடவடிக்கை அரை மணி நேரம் ஒத்திப்போடப்பட்டு வீணான செலவு ரூ. 7.8 லட்சம் ஆகும். இது அரசாங்கப்பணம் என்றாலும் மக்களின் வரிப்பணம்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் விளைவாகத்தான் ஹரிதாஸ் முந்த்ரா என்பவருக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து தவறான முறையில் நிதியுதவி அளிக்கப்பட்டதென்று உறுப்பினர் பெரோஸ் காந்தி (இந்திரா காந்தியின் கணவர்) 1958-ல் மக்களவையில் தீர்மானம் கொண்டுவந்ததன் பேரில், பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.சி.சாக்லா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின்படி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதிக்கு முந்த்ரா உதவியிருப்பதாகவும், அதன்பேரில், அவருடைய பங்குகளை மிக அதிகமான விலைக்கு வாங்க நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி உத்தரவின்படி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் முன்வந்ததும் தெரியவந்தது. இது, அரசாங்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய ஊழல் விவகாரம் என்று சாக்லா குழு தீர்மானித்தது. அதன் பிறகு, நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவியிலிருந்து வெளியேறினார்.
1973 ஆகஸ்டு 15-ல் கல்வியமைச்சர் நூருல் ஹாசன் முயற்சியால் சுதந்திர இந்தியாவின் முதல் 25 ஆண்டுகள் பற்றிய ஒரு வரலாற்றைத் தொகுத்து காலப்பெட்டகத்தில் வைத்து தில்லி செங்கோட்டை அருகில் ஆழப் புதைத்தார்கள். விஞ்ஞான முறையால் அப்பெட்டகத்தை ஐயாயிரம் ஆண்டுகளுக்குப்பின் வருபவர்களால் தாம் திறந்து பார்க்க முடியும் என்று கூறப்பட்டது. ஆயினும், பெட்டகத்தில் வைக்கப்பட்ட வரலாற்றில் பல தவறான, தாறுமாறான விவரங்கள் இருப்பதாக ஒரு கேள்வி 1973 நவம்பரில் மக்களவையில் வந்தது. அதற்கு, பெட்டகத்திலுள்ள வரலாறு மிகவும் ரகசியமானது, அது ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் பார்க்கப்பட வேண்டும் என்று கல்வியமைச்சர் பதிலளித்தார்.
ஆயினும், 1977 மார்ச்சில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்ததும், அந்தக் காலப்பெட்டகம் தோண்டியெடுக்கப்பட்டு, அதிலிருந்த வரலாற்றுக் குறிப்புகள் தவறானவை என்று நிரூபணமானது. இதில் எனக்கும் பங்கு உண்டு.
சிறுபொறி, பெரும் தீயாக மாறக்கூடும். அதைப்போல், ஒரு சிறிய கேள்வி பெரிய வரலாற்றுத் திருப்பத்தை உண்டாக்கக்கூடும். ஆக, கேள்வி நேரத்தை எந்த வகையிலும் ஒதுக்கி வைப்பது அல்லது அலட்சியம் செய்வது, நாட்டு மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும்.
கட்டுரையாளர் : இரா.செழியன்
நன்றி : தினமணி
சட்டத்தின் குறைபாடுகளை நீக்குவதற்கான அதிகாரம் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களுக்கு இருக்கிறது. நிர்வாகத்தின் சீர்கேடுகளால் நடைபெறும் அநீதிகளைக் களையவும், அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டங்களைக் கண்காணித்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்.
அன்றாட வாழ்வில் நாட்டு மக்களுக்கு ஏற்படும் பல்வேறு குறைகளை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து தக்க நடவடிக்கைகளை எடுக்க நாடாளுமன்ற முறையில் உள்ள வாய்ப்பு
களில் மிக முக்கியமானது கேள்வி நேரம்.
கேள்வி நேரம் என்பது இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் 18-ம் நூற்றாண்டில் தொடங்கியது.
இங்கிலாந்து நாடாளுமன்ற முறையைப் பின்பற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரமாக ஒதுக்கப்படுகிறது. அதிகபட்சமாக இரு அவைகளிலும் நேரிடை பதிலுக்காக தலா இருபது கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும். ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்ட துறையின் அமைச்சர் நேரிடையாக அவையில் பதிலளிப்பதற்காக நட்சத்திரக் குறியிடப்பட்ட இருபது கேள்விகள் குலுக்கல் முறையில் முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவையின் விதிமுறைப்படி ஓர் உறுப்பினருக்கு ஒரு நட்சத்திரக் குறியிட்ட கேள்விக்கு மேல் ஒரு நாளைக்குத் தரப்படுவதில்லை.
ஒரே கேள்வியைக் கேட்பவர்கள் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் குலுக்கல் முறையில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவையில் நேரிடையாகப் பதிலளிக்கப்படாமல் இரு அவைகளிலும் தனித்தனியாக ஒவ்வொரு நாளும் இருநூறு கேள்விகளுக்கு எழுத்து மூலமாகப் பதில் தரப்பட்டு அவையின் முன் வைக்கப்படும். இந்த முறையால், இரு அவைகளிலும் சேர்ந்து நாள் ஒன்றுக்கு 440 கேள்வி-பதில்கள் மூலம் அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு மக்கள் பிரதிநிதிகளுக்குக் கிடைக்கிறது.
545 உறுப்பினர்களையுடைய மக்களவையின் கேள்வி நேரத்தில், இருபது கேள்விகளுக்கு மட்டுமே நேரடி பதில் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் என்பதால் அத்தகைய வாய்ப்பு மிக அரியதாகத்தான் ஓர் உறுப்பினருக்கு அமையும். திங்கள் முதல் வெள்ளி வரை, வாரத்தில் அமைச்சரகத் துறைகள் அனைத்தும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. உறுப்பினர் எழுப்பும் கேள்வி அந்த பிரச்னைக்குரிய அமைச்சரைக் குறிப்பிட்டு நேரிடையாக அனுப்பப்படுகிறது. கேள்விக்குரிய நாளுக்கு ஐந்து நாள் முன்னதாகவும், 21 நாள்களுக்குள்ளாகவும் உறுப்பினர் தமது கேள்வியை அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளின் விவரம் அச்சிடப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஐந்தாறு நாள்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டுவிடும். ஆக, தன்னுடைய கேள்வி வரும் நாளன்று குறிப்பிட்ட உறுப்பினர் அந்தக் கேள்விக்குரிய பிரச்னைகளைத் துணைக் கேள்விகள் மூலம் கேட்பதற்கான விவரங்களைச் சேகரித்து வைத்து, குறிப்பிட்ட அமைச்சரின் துறை நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும்.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கடந்த காலத்தில் இருபது கேள்விகளில் நான்கு அல்லது ஐந்து கேள்விகளுக்கு மட்டுமே பதில் பெறப்பட்டு அதற்குள் கேள்வி நேரம் முடிந்துவிடும்.
இங்கிலாந்து மக்களவையில் கேள்வி-பதில்கள் மிக விரைவாகவும், சுருக்கமாகவும் இருக்கும். உதாரணமாக, 30-11-2009 திங்கள்கிழமை ஒரு மணி நேரத்தில் 19 கேள்விகளுக்குப் பதில்கள் தரப்பட்டன.
அதே 30-11-2009 திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய மக்களவைக் கூட்டத்தின் கேள்வி நேரத்தில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் கேட்கப்படவிருந்த இருபது கேள்விகளுக்குத் தொடர்புடைய 38 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே வருகை தந்து தம்முடைய கேள்விகளைக் கேட்டனர். மீதமிருந்த கேள்விகளுக்கு உரிய 34 உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் அவையில் இல்லாத காரணத்தால் அரை மணி நேரத்தில் கேள்வி நேரம் முடிவு பெற்று அவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற மக்களவைக் கூட்டங்களில் குறிப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள் பெரும்பாலான கேள்விகள் பதில் தரப்படாமல் விடப்பட்டிருக்குமே தவிர, 26 நிமிடத்துக்குள் கேள்வி நேரம் முற்றுப் பெற்றது கிடையாது. ஒதுக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகக் கேள்வி கேட்ட உறுப்பினர்கள் அவையில் இல்லாததால், அவை ஒத்திவைக்கப்பட்டது என்பது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு வேதனையான சாதனை ஆகும்.
கேள்விகள் கேட்டுவிட்டுக் குறிப்பிட்ட தருணத்தில் அவையில் இல்லாத 34 பேர்களில் கட்சிவாரியாகப் பார்த்தால் காங்கிரஸ் (12), பா.ஜ.க. (7), ஜே.டி.யு. (3), சிவசேனா (3), சி.பி.எம். (2), சி.பி.ஐ. (2) மற்றும் ஓர் உறுப்பினர் மட்டும் வராத கட்சிகள் சமாஜ்வாதி, கே.சி.எம்., ஏ.எம்.எம்.ஐ., பிஜு ஜனதாதள், சுயேச்சை ஆகியோர் அடங்கும். ஆக, ஆளுங்கட்சியினர் கேள்வி நேரத்தில் அலட்சியமாக இருப்பதைவிட, கேள்வி கேட்ட எதிர்க்கட்சியினர் பலர் மக்களுக்குப் பணியாற்றத் தமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறியது கண்டனத்துக்குரியதாகும்.
மக்களவையில் இப்படி என்றால், மாநிலங்களவையிலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது. 2-12-2009 அன்று மாநிலங்களவையில் கேள்வி கேட்ட 5 உறுப்பினர்கள் வரவில்லை. மேலும் 8-12-2009 அன்று கேள்வி கேட்ட 7 உறுப்பினர்கள் அவையில் இல்லாத காரணத்தால் அந்தக் கேள்விகளுக்கு நேரிடையான பதில்கள் அவையில் தரப்படவில்லை.
சென்ற 14-வது மக்களவையின் ஐந்தாண்டு காலத்தில் மொத்தம் 89,000 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. 14-வது மக்களவையின் ஐந்தாண்டு காலத்தில் 56 உறுப்பினர்கள் எத்தகைய கேள்வியையும் கேட்கவில்லை என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. அவர்களில் முக்கியமானவர்கள் தேவ கவுடா, மம்தா பானர்ஜி, அஜீத் சிங், உமர் அப்துல்லா, கல்யாண் சிங், ஜெகதீஷ் டைட்லர், தர்மேந்திரா, கோவிந்தா போன்ற கட்சித் தலைவர்கள் பலரும், திரையுலகப் பிரமுகர்களும் ஒரு கேள்விகூட கேட்டதில்லை. மேலும், 67 உறுப்பினர்கள் அந்த ஐந்தாண்டு காலத்தில் பத்துக் கேள்விகள் அல்லது அதற்கும் குறைவாகக் கேட்டிருக்கிறார்கள். மொத்த உறுப்பினர்களில் 23 சதவிகிதம் பேர் கேள்வி கேட்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருந்தனர்.
சென்ற மக்களவையில் சிவசேனா கட்சி உறுப்பினர்கள் ஆனந்தராவ் வித்தோபா அட்சுல் 1,255 கேள்விகளையும், சிவாஜி அதல்ராவ் பாட்டில் 1,251 கேள்விகளையும் கேட்டு முதல் இரண்டு இடங்களைப் பெற்றிருந்தனர். இதை வைத்து, அகில இந்திய அரசியலில் சிவசேனா உறுப்பினர்களுக்கு இருந்த அக்கறை மற்ற கட்சியினருக்கு இல்லாது போயிற்று என்று கூற முடியுமா?
30-11-2009 அன்று கேள்வி கேட்டு அவைக்கு வராத உறுப்பினர்கள் பற்றி அந்தந்தக் கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதப்போவதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்துள்ளார். அவையின் நடவடிக்கைகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு ரூ.26,000 அரசாங்கப்பணம் செலவிடப்படுகிறது. அன்று கேள்வி கேட்டு வராத உறுப்பினர்களால் அவையின் நடவடிக்கை அரை மணி நேரம் ஒத்திப்போடப்பட்டு வீணான செலவு ரூ. 7.8 லட்சம் ஆகும். இது அரசாங்கப்பணம் என்றாலும் மக்களின் வரிப்பணம்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் விளைவாகத்தான் ஹரிதாஸ் முந்த்ரா என்பவருக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து தவறான முறையில் நிதியுதவி அளிக்கப்பட்டதென்று உறுப்பினர் பெரோஸ் காந்தி (இந்திரா காந்தியின் கணவர்) 1958-ல் மக்களவையில் தீர்மானம் கொண்டுவந்ததன் பேரில், பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.சி.சாக்லா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின்படி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதிக்கு முந்த்ரா உதவியிருப்பதாகவும், அதன்பேரில், அவருடைய பங்குகளை மிக அதிகமான விலைக்கு வாங்க நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி உத்தரவின்படி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் முன்வந்ததும் தெரியவந்தது. இது, அரசாங்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய ஊழல் விவகாரம் என்று சாக்லா குழு தீர்மானித்தது. அதன் பிறகு, நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவியிலிருந்து வெளியேறினார்.
1973 ஆகஸ்டு 15-ல் கல்வியமைச்சர் நூருல் ஹாசன் முயற்சியால் சுதந்திர இந்தியாவின் முதல் 25 ஆண்டுகள் பற்றிய ஒரு வரலாற்றைத் தொகுத்து காலப்பெட்டகத்தில் வைத்து தில்லி செங்கோட்டை அருகில் ஆழப் புதைத்தார்கள். விஞ்ஞான முறையால் அப்பெட்டகத்தை ஐயாயிரம் ஆண்டுகளுக்குப்பின் வருபவர்களால் தாம் திறந்து பார்க்க முடியும் என்று கூறப்பட்டது. ஆயினும், பெட்டகத்தில் வைக்கப்பட்ட வரலாற்றில் பல தவறான, தாறுமாறான விவரங்கள் இருப்பதாக ஒரு கேள்வி 1973 நவம்பரில் மக்களவையில் வந்தது. அதற்கு, பெட்டகத்திலுள்ள வரலாறு மிகவும் ரகசியமானது, அது ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் பார்க்கப்பட வேண்டும் என்று கல்வியமைச்சர் பதிலளித்தார்.
ஆயினும், 1977 மார்ச்சில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்ததும், அந்தக் காலப்பெட்டகம் தோண்டியெடுக்கப்பட்டு, அதிலிருந்த வரலாற்றுக் குறிப்புகள் தவறானவை என்று நிரூபணமானது. இதில் எனக்கும் பங்கு உண்டு.
சிறுபொறி, பெரும் தீயாக மாறக்கூடும். அதைப்போல், ஒரு சிறிய கேள்வி பெரிய வரலாற்றுத் திருப்பத்தை உண்டாக்கக்கூடும். ஆக, கேள்வி நேரத்தை எந்த வகையிலும் ஒதுக்கி வைப்பது அல்லது அலட்சியம் செய்வது, நாட்டு மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும்.
கட்டுரையாளர் : இரா.செழியன்
நன்றி : தினமணி
Friday, November 27, 2009
லிபரான் அறிக்கை: அத்வானிக்கு புது வாழ்வு?
பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சிப் பூசலும், ராஜ்நாத் சிங்குக்குப் பிறகு புதிய தலைவர் யார் என்கிற சர்ச்சையும் ஓய்ந்துள்ள நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கை முன்கூட்டியே வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இக் கமிஷன் 17 ஆண்டுகள் விசாரணை நடத்தி கடந்த ஜூன் 30-ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில் நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே வெளியானது. பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ஏ.பி.வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 பேர் மீது கமிஷன் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாஜகவின் புதிய தலைவர் நிதின் கட்காரி என்று முடிவு செய்யப்பட்டு, அவர் இந்த ஆண்டு கடைசியில் பதவியேற்க உள்ளார். இதேபோல மாநிலங்களவையில் பா.ஜ.க. தலைவராக அருண் ஜேட்லி தொடர்ந்து நீடிப்பார் என்பதும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எல்.கே.அத்வானி ராஜிநாமா செய்த பிறகு, அந்தப் பதவியை சுஷ்மா சுவராஜ் வகிக்க இருக்கிறார் என்பதும் தெளிவாகியுள்ளது.
கட்சிக்குப் புதிய தலைவரும், புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அத்வானி தனது நண்பர்களிடம் கூறிவருகிறார். புதிய தலைமை செயல்படும்போது ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் அதற்குத் தம்மை யாரும் பொறுப்பாக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் இதற்கு முக்கிய காரணம்.
முரளி மனோகர் ஜோஷிதான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவதின் விருப்பம். ஆனால், இதற்கு அத்வானி உடன்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
பா.ஜ.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., சங்கப்பரிவாரத் தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் நீடித்துவந்த நிலையில், நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானது அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திவிடும் என்று தெரிகிறது.
லிபரான் அறிக்கை தாக்கல், அத்வானியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவே உதவும் என்பது பலரது கருத்தாகும். அதாவது இந்த அறிக்கை மீதான நடவடிக்கையாக அத்வானி சிறைக்குச் சென்றால் அது கட்சிக்கு வலுசேர்க்கும் என்றும் பலர் கருதுகின்றனர். எனினும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த அறிக்கையின்பேரில் அத்வானியின் மீது நடவடிக்கை எடுத்து அவருக்குப் புதுவாழ்வு கொடுக்க காங்கிரஸ் விரும்பாது. ஆனால், அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்று கூறிவரும் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங், ராஷ்ட்ரீய லோகதளம் தலைவர் லாலு பிரசாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் அத்வானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் அரசை வலியுறுத்தக்கூடும்.
மத்திய அரசு கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. அதாவது கரும்புக்கான ஆதரவு விலையை மத்திய அரசு அறிவிக்கும். மாநில அரசு இதற்கு மேல் விலை நிர்ணயம் செய்தால் அதைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் ஏற்க வேண்டும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. இந்த அவசரச் சட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தச் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு, அதைத் திசைதிருப்பும் முயற்சியில் லிபரான் கமிஷன் அறிக்கையைக் கசிய விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபரான் கமிஷன் அறிக்கை இந்தக் கூட்டத்தொடரின் கடைசியில்தான் தாக்கல் செய்யப்பட இருந்தது.
கரும்பு கொள்முதல் தொடர்பான அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியிலேயே பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் சரத் பவார்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். மிகவும் முக்கியமான விஷயத்தில் சரத் பவார் முன்யோசனையுடன் செயல்படாதது ஏன் என்று காங்கிரஸôர் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அண்மைத் தேர்தல்களில் வெற்றிபெற்றபோதிலும் எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்னையைக் கையிலெடுத்துக் கொண்டு தங்களை முற்றுகையிடக்கூடும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லை. மக்களவையில் அது திமுகவின் ஆதரவையே பெரிதும் நம்பியுள்ளது. "ஸ்பெக்டரம்' ஊழல் விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அக்கட்சி ஏற்கெனவே காங்கிரஸýக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது. ஆனால், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழல் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஐ-க்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார். இது காங்கிரஸýக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை, தொலைத் தொடர்புத்துறையில் ஊழல், மதுகோடா விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிடாமல் இருக்க காங்கிரஸ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவை அடக்கிவைக்கும் பொருட்டு லிபரான் கமிஷன் அறிக்கையை கையிலெடுத்துக் கொண்டுள்ளது.
அயோத்தி விவகாரத்தை மக்கள் மறந்துவிட்ட நிலையில், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முடியாது என்பதை பாஜகவும் உணர்ந்துவிட்ட நிலையில் லிபரான் அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் அயோத்தி பேச்சு எழுந்துள்ளது.
17 தொகுப்புகளைக் கொண்ட லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி வேண்டும் என்றே பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பாபர் மசூதி செயல் கமிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் சரிவரச் செயல்படத் தவறிவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காங்கிரûஸ ஆதரிக்காத முஸ்லிம்கள் இதுகுறித்து மௌனமாக இருந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது பிரதமர் பதவி வகித்த பி.வி.நரசிம்மராவ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கமிஷன் கூறியுள்ளது.
பாஜக தலைவர் அத்வானி சரிவரச் செயல்படவில்லை என்று கடந்த சில மாதங்களாக சங்கப் பரிவாரங்கள் அவரைக் குறைகூறி வந்தன.
மேலும் அத்வானி ஆதரவாளர்களுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறிவந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பின்னர் அத்வானியை அனுசரித்துச் செல்ல முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
பாஜகவின் அடுத்த தலைவராக நிதின் கட்காரியை அத்வானிதான் முன்மொழிந்ததாகத் தெரிகிறது. நரேந்திர மோடியை கட்சித் தலைவராக்கிவிட வேண்டும் என்று அத்வானி விரும்பினார். அதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போதைய சூழலில் கட்சித் தலைவர் பதவியை ஏற்க மோடி தயாராக இல்லை.
புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள நிதின் கட்காரி சரிவரச் செயல்படத் தவறும்பட்சத்தில் அல்லது அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
லிபரான் கமிஷன் அறிக்கை வெளியீடும், அதன் தொடர் நிகழ்வுகளும் அத்வானி எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர வழிவகுக்கலாம். அதை பாஜக தலைமையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். அத்வானி எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கிறாரோ இல்லையோ நிச்சயம் இது அவரது கரத்தை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இக் கமிஷன் 17 ஆண்டுகள் விசாரணை நடத்தி கடந்த ஜூன் 30-ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில் நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே வெளியானது. பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ஏ.பி.வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 பேர் மீது கமிஷன் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாஜகவின் புதிய தலைவர் நிதின் கட்காரி என்று முடிவு செய்யப்பட்டு, அவர் இந்த ஆண்டு கடைசியில் பதவியேற்க உள்ளார். இதேபோல மாநிலங்களவையில் பா.ஜ.க. தலைவராக அருண் ஜேட்லி தொடர்ந்து நீடிப்பார் என்பதும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எல்.கே.அத்வானி ராஜிநாமா செய்த பிறகு, அந்தப் பதவியை சுஷ்மா சுவராஜ் வகிக்க இருக்கிறார் என்பதும் தெளிவாகியுள்ளது.
கட்சிக்குப் புதிய தலைவரும், புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அத்வானி தனது நண்பர்களிடம் கூறிவருகிறார். புதிய தலைமை செயல்படும்போது ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் அதற்குத் தம்மை யாரும் பொறுப்பாக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் இதற்கு முக்கிய காரணம்.
முரளி மனோகர் ஜோஷிதான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவதின் விருப்பம். ஆனால், இதற்கு அத்வானி உடன்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
பா.ஜ.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., சங்கப்பரிவாரத் தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் நீடித்துவந்த நிலையில், நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானது அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திவிடும் என்று தெரிகிறது.
லிபரான் அறிக்கை தாக்கல், அத்வானியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவே உதவும் என்பது பலரது கருத்தாகும். அதாவது இந்த அறிக்கை மீதான நடவடிக்கையாக அத்வானி சிறைக்குச் சென்றால் அது கட்சிக்கு வலுசேர்க்கும் என்றும் பலர் கருதுகின்றனர். எனினும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த அறிக்கையின்பேரில் அத்வானியின் மீது நடவடிக்கை எடுத்து அவருக்குப் புதுவாழ்வு கொடுக்க காங்கிரஸ் விரும்பாது. ஆனால், அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்று கூறிவரும் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங், ராஷ்ட்ரீய லோகதளம் தலைவர் லாலு பிரசாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் அத்வானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் அரசை வலியுறுத்தக்கூடும்.
மத்திய அரசு கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. அதாவது கரும்புக்கான ஆதரவு விலையை மத்திய அரசு அறிவிக்கும். மாநில அரசு இதற்கு மேல் விலை நிர்ணயம் செய்தால் அதைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் ஏற்க வேண்டும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. இந்த அவசரச் சட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தச் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு, அதைத் திசைதிருப்பும் முயற்சியில் லிபரான் கமிஷன் அறிக்கையைக் கசிய விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபரான் கமிஷன் அறிக்கை இந்தக் கூட்டத்தொடரின் கடைசியில்தான் தாக்கல் செய்யப்பட இருந்தது.
கரும்பு கொள்முதல் தொடர்பான அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியிலேயே பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் சரத் பவார்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். மிகவும் முக்கியமான விஷயத்தில் சரத் பவார் முன்யோசனையுடன் செயல்படாதது ஏன் என்று காங்கிரஸôர் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அண்மைத் தேர்தல்களில் வெற்றிபெற்றபோதிலும் எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்னையைக் கையிலெடுத்துக் கொண்டு தங்களை முற்றுகையிடக்கூடும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லை. மக்களவையில் அது திமுகவின் ஆதரவையே பெரிதும் நம்பியுள்ளது. "ஸ்பெக்டரம்' ஊழல் விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அக்கட்சி ஏற்கெனவே காங்கிரஸýக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது. ஆனால், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழல் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஐ-க்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார். இது காங்கிரஸýக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை, தொலைத் தொடர்புத்துறையில் ஊழல், மதுகோடா விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிடாமல் இருக்க காங்கிரஸ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவை அடக்கிவைக்கும் பொருட்டு லிபரான் கமிஷன் அறிக்கையை கையிலெடுத்துக் கொண்டுள்ளது.
அயோத்தி விவகாரத்தை மக்கள் மறந்துவிட்ட நிலையில், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முடியாது என்பதை பாஜகவும் உணர்ந்துவிட்ட நிலையில் லிபரான் அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் அயோத்தி பேச்சு எழுந்துள்ளது.
17 தொகுப்புகளைக் கொண்ட லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி வேண்டும் என்றே பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பாபர் மசூதி செயல் கமிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் சரிவரச் செயல்படத் தவறிவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காங்கிரûஸ ஆதரிக்காத முஸ்லிம்கள் இதுகுறித்து மௌனமாக இருந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது பிரதமர் பதவி வகித்த பி.வி.நரசிம்மராவ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கமிஷன் கூறியுள்ளது.
பாஜக தலைவர் அத்வானி சரிவரச் செயல்படவில்லை என்று கடந்த சில மாதங்களாக சங்கப் பரிவாரங்கள் அவரைக் குறைகூறி வந்தன.
மேலும் அத்வானி ஆதரவாளர்களுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறிவந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பின்னர் அத்வானியை அனுசரித்துச் செல்ல முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
பாஜகவின் அடுத்த தலைவராக நிதின் கட்காரியை அத்வானிதான் முன்மொழிந்ததாகத் தெரிகிறது. நரேந்திர மோடியை கட்சித் தலைவராக்கிவிட வேண்டும் என்று அத்வானி விரும்பினார். அதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போதைய சூழலில் கட்சித் தலைவர் பதவியை ஏற்க மோடி தயாராக இல்லை.
புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள நிதின் கட்காரி சரிவரச் செயல்படத் தவறும்பட்சத்தில் அல்லது அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
லிபரான் கமிஷன் அறிக்கை வெளியீடும், அதன் தொடர் நிகழ்வுகளும் அத்வானி எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர வழிவகுக்கலாம். அதை பாஜக தலைமையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். அத்வானி எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கிறாரோ இல்லையோ நிச்சயம் இது அவரது கரத்தை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி
Wednesday, November 25, 2009
குனியக் குனிய...
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது. அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?
இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!
உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?
சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.
அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.
ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.
கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.
சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?
அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!
குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?
நன்றி : தினமணி
ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?
இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!
உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?
சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.
அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.
ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.
கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.
சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?
அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!
குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?
நன்றி : தினமணி
Thursday, November 19, 2009
அளவுக்கு மீறினால்...
குழந்தைக்கு அலங்காரம் செய்து திருஷ்டி கழிக்க கன்னத்தில் கரும்புள்ளி வைப்பது போல, மகாராஷ்டிர மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் நிறைந்த 20 ஆண்டு கிரிக்கெட் விளையாட்டுக்காக உலகம் முழுவதும் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, அவரது சொந்த மாநிலத்தில் அவர் தலையில் ஒரு குட்டு விழுந்திருக்கிறது. குட்டு வைத்திருப்பவர் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சச்சின், "நான் ஒரு மகாராஷ்டிரன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஆனாலும், முதலில் நான் இந்தியன். மும்பை நகரம் இந்தியர் யாவருக்கும் உரியது' என்று குறிப்பிட்டுள்ளார். இதில் எந்தவித முரண்பாடான கருத்துகளோ, மறைமுகமான பதிலடியோ அல்லது அரசியல் பிரவேசமோ எதுவுமே இல்லை. ஆனாலும் தேவையே இல்லாமல் சச்சினைக் கண்டித்திருக்கிறார் பால் தாக்கரே.
"உன் விளையாட்டுத் திடலை விட்டுவிட்டு அரசியல் களத்திற்குள் புகுந்துகொண்டு, எல்லா இந்தியருக்கும் மும்பையில் சமஉரிமை உள்ளது என்று பேசியிருக்கிறீர். சச்சின், இந்த வார்த்தைகளால் மராட்டியர் இதயம் உடைந்துபோனது. மும்பைக்குள் இடம்பெயர்வோரை ஏன் தூண்டி விடுகிறாய்?...'என்று பலவாறாக சச்சினுக்குக் கண்டனம், எச்சரிக்கை, கேள்விக் கணைகள் என்று ஒரு கட்டுரை வடித்திருக்கிறார் பால் தாக்கரே, தனது சாம்னா இதழில்!
மகாராஷ்டிர மாநிலத் தேர்தல் முடிந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழியேற்பின்போது, சமாஜவாதி கட்சி உறுப்பினர் அபு ஆஸ்மி, மராத்தி மொழியில் உறுதி மொழி ஏற்காமல் ஹிந்தியில் உறுதிமொழி ஏற்றார் என்பதற்காக அவரை அடித்து, உதைத்து ரகளை செய்தனர் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்.எல்.ஏக்கள். இதன் மூலமாக, இத்தனை காலமாக இந்த விவகாரங்களில் சிவசேனாவுக்கு இருந்துவந்த புகழை ராஜ் தாக்கரே தட்டிச்சென்றுவிட்டாரே என்ற ஆதங்கம் இருந்துவந்தது.
சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை அவதூறாகப் பேசியதற்காக அபு ஆஸ்மி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ரகளை செய்தனர். மராட்டிய மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
இப்போது, சச்சின் டெண்டுல்கர் மீது பாய்ந்துள்ளதன் மூலம், மராட்டியர்கள் மட்டுமன்றி, இந்தியர்கள் மட்டுமன்றி, உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை, மகாராஷ்டிர மண்ணின் மைந்தர் என்பதற்காக, மாநில உணர்வுடன் குறுகிப் போக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அழகல்ல. "உலகம் கொண்டாடும் இந்தியர் சச்சின், எங்கள் மண்ணின் மைந்தர்' என்று சொல்லிக் கொள்வதில்தான் ஒவ்வொரு மராட்டியரும் பெருமை காண முடியும். சச்சின் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ள கருத்தும் இதுதான். "நான் மராட்டியன் என்பதற்காகப் பெருமை கொள்கிறேன். ஆனாலும் முதலில் இந்தியன்' என்று சச்சின் குறிப்பிடும்போது, அதனால் அவருக்கு மட்டுமல்ல, மராட்டியர் அனைவருக்கும் பெருமை உண்டாகுமே தவிர, இழிவை ஏற்படுத்தாது.
இருப்பினும், மொழிப்பற்று, இனப்பற்றை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முற்படும்போது, இத்தகைய தேவையற்ற கண்டனங்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.
மனித உணர்வு விரிந்துகொண்டே சென்றாக வேண்டும். தன் குடும்பம், தன் மொழி, தன் இனம், தன் ஊர், தனது மாவட்டம், தன் மாநிலம், தனது நாடு என்ற பரந்துபட்ட மனதுடன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகைத் தழுவ வேண்டும். மொழி, இனம், நாடு என்ற எல்லைகள் கடந்து உலக மக்கள் அனைவரையும் சகோதரனாக எண்ணும்போதுதான் அவன் "மனிதன்' ஆகிறான்.
உணவுக்கு உப்பு மிகமிக அவசியம். உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. உப்பில்லாவிட்டாலும் பசித்தவாய்க்கு சாப்பிட்டுவிட முடியும். ஆனால் உப்பு அளவுக்கு அதிகமானால் அந்த உணவைச் சாப்பிடவே முடியாது என்பதுமட்டுமல்ல, சாப்பிடுபவர் நலனுக்கும் நோய் சேர்க்கும்.
மொழி உணர்வும், கலாசார உணர்வும் உப்பு போன்றதுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மொழி, தன் இனம் குறித்த உணர்வும் பெருமிதமும் இருந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவன் வாழ்க்கை ருசிக்காது. சப்பென்று ஆகிவிடும். அதே நேரத்தில், அந்த உணர்வு அளவுகடந்த வெறியாக மாறும்போது, அரசியலுக்காக வெறியேற்றும்போது, உலகின் பார்வையில் அவர்கள் கடுகினும் சிறுத்துப் போவார்கள்.
நன்றி : தினமணி
பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சச்சின், "நான் ஒரு மகாராஷ்டிரன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஆனாலும், முதலில் நான் இந்தியன். மும்பை நகரம் இந்தியர் யாவருக்கும் உரியது' என்று குறிப்பிட்டுள்ளார். இதில் எந்தவித முரண்பாடான கருத்துகளோ, மறைமுகமான பதிலடியோ அல்லது அரசியல் பிரவேசமோ எதுவுமே இல்லை. ஆனாலும் தேவையே இல்லாமல் சச்சினைக் கண்டித்திருக்கிறார் பால் தாக்கரே.
"உன் விளையாட்டுத் திடலை விட்டுவிட்டு அரசியல் களத்திற்குள் புகுந்துகொண்டு, எல்லா இந்தியருக்கும் மும்பையில் சமஉரிமை உள்ளது என்று பேசியிருக்கிறீர். சச்சின், இந்த வார்த்தைகளால் மராட்டியர் இதயம் உடைந்துபோனது. மும்பைக்குள் இடம்பெயர்வோரை ஏன் தூண்டி விடுகிறாய்?...'என்று பலவாறாக சச்சினுக்குக் கண்டனம், எச்சரிக்கை, கேள்விக் கணைகள் என்று ஒரு கட்டுரை வடித்திருக்கிறார் பால் தாக்கரே, தனது சாம்னா இதழில்!
மகாராஷ்டிர மாநிலத் தேர்தல் முடிந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழியேற்பின்போது, சமாஜவாதி கட்சி உறுப்பினர் அபு ஆஸ்மி, மராத்தி மொழியில் உறுதி மொழி ஏற்காமல் ஹிந்தியில் உறுதிமொழி ஏற்றார் என்பதற்காக அவரை அடித்து, உதைத்து ரகளை செய்தனர் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்.எல்.ஏக்கள். இதன் மூலமாக, இத்தனை காலமாக இந்த விவகாரங்களில் சிவசேனாவுக்கு இருந்துவந்த புகழை ராஜ் தாக்கரே தட்டிச்சென்றுவிட்டாரே என்ற ஆதங்கம் இருந்துவந்தது.
சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை அவதூறாகப் பேசியதற்காக அபு ஆஸ்மி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ரகளை செய்தனர். மராட்டிய மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
இப்போது, சச்சின் டெண்டுல்கர் மீது பாய்ந்துள்ளதன் மூலம், மராட்டியர்கள் மட்டுமன்றி, இந்தியர்கள் மட்டுமன்றி, உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை, மகாராஷ்டிர மண்ணின் மைந்தர் என்பதற்காக, மாநில உணர்வுடன் குறுகிப் போக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அழகல்ல. "உலகம் கொண்டாடும் இந்தியர் சச்சின், எங்கள் மண்ணின் மைந்தர்' என்று சொல்லிக் கொள்வதில்தான் ஒவ்வொரு மராட்டியரும் பெருமை காண முடியும். சச்சின் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ள கருத்தும் இதுதான். "நான் மராட்டியன் என்பதற்காகப் பெருமை கொள்கிறேன். ஆனாலும் முதலில் இந்தியன்' என்று சச்சின் குறிப்பிடும்போது, அதனால் அவருக்கு மட்டுமல்ல, மராட்டியர் அனைவருக்கும் பெருமை உண்டாகுமே தவிர, இழிவை ஏற்படுத்தாது.
இருப்பினும், மொழிப்பற்று, இனப்பற்றை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முற்படும்போது, இத்தகைய தேவையற்ற கண்டனங்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.
மனித உணர்வு விரிந்துகொண்டே சென்றாக வேண்டும். தன் குடும்பம், தன் மொழி, தன் இனம், தன் ஊர், தனது மாவட்டம், தன் மாநிலம், தனது நாடு என்ற பரந்துபட்ட மனதுடன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகைத் தழுவ வேண்டும். மொழி, இனம், நாடு என்ற எல்லைகள் கடந்து உலக மக்கள் அனைவரையும் சகோதரனாக எண்ணும்போதுதான் அவன் "மனிதன்' ஆகிறான்.
உணவுக்கு உப்பு மிகமிக அவசியம். உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. உப்பில்லாவிட்டாலும் பசித்தவாய்க்கு சாப்பிட்டுவிட முடியும். ஆனால் உப்பு அளவுக்கு அதிகமானால் அந்த உணவைச் சாப்பிடவே முடியாது என்பதுமட்டுமல்ல, சாப்பிடுபவர் நலனுக்கும் நோய் சேர்க்கும்.
மொழி உணர்வும், கலாசார உணர்வும் உப்பு போன்றதுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மொழி, தன் இனம் குறித்த உணர்வும் பெருமிதமும் இருந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவன் வாழ்க்கை ருசிக்காது. சப்பென்று ஆகிவிடும். அதே நேரத்தில், அந்த உணர்வு அளவுகடந்த வெறியாக மாறும்போது, அரசியலுக்காக வெறியேற்றும்போது, உலகின் பார்வையில் அவர்கள் கடுகினும் சிறுத்துப் போவார்கள்.
நன்றி : தினமணி
Wednesday, November 18, 2009
பதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்-பழ . நெடுமாறன்
முல்லைப்பெரியாறு அணை நீர்ப் பிரச்னையில் மீண்டும் கேரளம் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது. தமிழகம் மறுபடியும் மறுபடியும் வஞ்சிக்கப்பட்டுவிட்டது.
1979-ம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம், தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது.
பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீரைக் கொண்டு சென்று மின்உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக அணை பலவீனமாக இருப்பதாகக் கூக்குரல் எழுப்பியது.
இதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அணையைப் பார்வையிட்டு, பெரியாறு அணை பலமாக இருந்தாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படியும், தமிழக அரசு தனது செலவில் அணையை மேலும் பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படியும், இந்தப் பணிகள் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறினார். அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
அணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழகம் மேற்கொள்வதற்கு, கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டது. 1980-ல் தொடங்கிய இந்தப் பணிகள் 2001-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக நடைபெற்றன. மராமத்து வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்குக் கேரளம் சம்மதிக்கவில்லை. எனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 2001-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டபோது, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.
இக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும், 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டில் தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் கடத்துகிற தந்திரத்தைக் கேரளம் கையாண்டது. இதன் விளைவாக 5 ஆண்டுகள் கடந்தன. இது கேரளத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.
இறுதியாக 2006 பிப்ரவரி 27-ம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது. ஆனால் இத் தீர்ப்பை செயல்படுத்தவிடாத வகையில் கேரளம் 17-3-2006 அன்று சட்டமன்றத்தில் நதிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு கொடுத்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதன் பின்னர் கேரளம் புதிய தந்திரத்தைக் கையாண்டது. புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் இருந்தார். 2007 மே மாதத்துக்குப் பிறகு இத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொறுப்பேற்றார். கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது ஆய்வு நடத்துவதற்குக் கேரளம் அனுமதி பெற்றுவிட்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும்.
கேரளத்தின் புதிய சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என்பதை உணர்ந்த கேரளம், விசாரணையின் இறுதிக் கட்டத்தில் புதிய பிரச்னையை வேண்டுமென்றே எழுப்பியது. பெரியாறு அணைப் பிரச்னையில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை அரசியல் சட்ட ஆயம்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. வழக்கு நடந்த மூன்றாண்டு காலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பாத கேரளம் விசாரணையின் முடிவுக் கட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பியதற்கே காலம் கடத்தும் நோக்கமே காரணமாகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை இப்போது அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ, மாற்றவோ அதிகாரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, கேரளத்தின் முயற்சியைத் தமிழகம் முறியடித்திருக்க வேண்டும். கேரளம் பிறப்பித்த புதிய சட்டம் குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிறகு தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று அதன் விளைவாக அரசியல் சட்ட ஆயம் அமைப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது. மூன்றாண்டுகாலமாக நடைபெற்ற விசாரணையை முடக்கிப் போட்டதன் மூலம் கேரளம் நான்காவது வெற்றியை அடைந்துவிட்டது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் முதல் அனைவரிடமும் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நமது நியாயத்தை எடுத்துக்கூறி ஆதரவு தருவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுமட்டுமல்ல. நமது எதிர்ப்பை பிரதமரிடமும் மற்றவர்களிடமும் பதிவு செய்ய தமிழக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது.
கடந்த 16-9-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணையமைச்சரைக் கண்டித்துக் கூட்டம் என்பது, பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது. பிறகு அந்தக் கூட்டத்தை நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை.
காங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்துக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.
முல்லைப்பெரியாறு கேரள மாநிலத்தில் ஓடும் நதியாகும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ஓடும் நதியல்ல என்ற தவறான வாதத்தை கேரளம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும், தமிழகத்தின் சார்பில் சரியான முறையில் அது மறுக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உள்ளது. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாற்றில் ஓடும் நீரின் மொத்த அளவு 4,767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒருபகுதி நீர், அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்துக்குள் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர் ஆகும். அதாவது தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாற்றில் கலக்கும் நீரில் சுமார் 8-ல் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். எட்டில் ஏழு பகுதி நீர் கேரளத்துக்கு நம்மால் வழங்கப்படுகிறது. எனவே பெரியாறு பன்மாநில நதியே தவிர, கேரள நதி அல்ல. இந்த உண்மைகளை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உணர்த்துவதற்குத் தமிழக அரசு அடியோடு தவறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்கு மட்டுமே கருணாநிதி கவலைப்படுகிறாரே தவிர பெரியாறு அணை நீர் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து அவர் கவலைப்படவில்லை.
காவிரிப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகளை வற்புறுத்தி நிலைநாட்டுவதைவிட மத்திய அரசுக்கு நல்லபிள்ளையாக நடந்துகொள்வதிலேயே கருணாநிதி முழு கவனம் செலுத்தியதால் நாம் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம்.
1970-ம் ஆண்டில் காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகள் பயன்தராத நிலையில், நடுவர் மன்றம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தது. பெங்களூரில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் துணைத் தேர்தலில் இரு காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. எனவே அதில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இந்திரா காங்கிரஸýக்கு இருந்தது.
அப்போது பிரதமர் இந்திரா, முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் காவிரிப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அன்று கருணாநிதி அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதன் விளைவு பின்னால் நமக்குப் பெரும் இழப்புகளைத் தந்தது. 1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸýடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இந்த உறவு வழிவகுத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால் இதற்குப் பிறகு கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸின் சார்பில் முதலமைச்சரான தேவராஜ் அர்ஸ், காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் சட்டவிரோதமாகவும், தமிழகத்தின் சம்மதமின்றியும் அணைகளைக் கட்டத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைக்க முன்வந்தார். இடைக்காலத்தில் 19 ஆண்டுகளில் அவ்வளவு அணைகளையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. அதன் விளைவாக தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அறவே தடைப்பட்டுப்போனது.
நடுவர் மன்றத்தின் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி, நீதி தவறாதவர் என்ற பெயரெடுத்தவர். அவர் காவிரிப் பாசன பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். எனவே அவரது தீர்ப்பு தங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பதை உணர்ந்த கர்நாடக அரசியல்வாதிகள் அவரை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவ கௌடா, சித்ததோஷ் முகர்ஜி மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொய்யான புகாரைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது, சில கோயில்களில் அவர்களுக்குப் பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு விலையுயர்ந்த பரிசுகளை இவர்கள் பெற்றிருப்பதால் நடுநிலை தவறிவிட்டார்கள் என தேவ கௌடா குற்றம் சாட்டினார். பிறகு அவரே கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். அப்போதும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அந்த வேளையில் தேவ கௌடாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு எதிரான நிலையை எடுத்து வைக்கத் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முன்வரவில்லை.
காவிரிப் பிரச்னையில் தொடக்கம் முதல் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தேவ கௌடாவை மத்தியில் பிரதமராக்கவும் தி.மு.க. துணைநின்றது என்பதுதான் துரோகத்தின் உச்சகட்டமாகும். தேவ கௌடா பிரதமரான பிறகும்கூட நடுவர் மன்றத் தலைவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்களோ சித்ததோஷ் முகர்ஜி மீது சுமத்தப்பட்ட பழியைப் போக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் மனம் நொந்து தனது பதவியிலிருந்து விலகினார். கர்நாடகத்தின் நோக்கம் வெற்றிபெற்றது. இதற்குக் கருணாநிதி துணைநின்றார் என்பதுதான் வரலாற்றுச் சோகமாகும்.
காவிரிப் பிரச்னையில் துரோகம் தொடர்ந்தது. நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் வற்புறுத்தத் தவறிவிட்டது. 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தைப் பெற்று இறுதி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 30-5-97-ல் மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை தீட்டி மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியது. இந்த வரைவுத் திட்டத்தின்படி முழுமையான அதிகாரம் கொண்ட நதி நீர் ஆணையம் ஏற்படுத்துவதற்கான யோசனை கூறப்பட்டது. இதையும் கர்நாடகம் ஏற்காமல் வழக்கில் வாய்தா வாங்கியபடியே இருந்தது. இதற்கிடையில் தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். பிரதமர் வாஜ்பாய் 6-8-98 அன்று கூட்டிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் புதிய வரைவுத் திட்டம் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. இதில் காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தும் யோசனை கைவிடப்பட்டு பிரதமர் தலைமையிலான மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்ற யோசனை கூறப்பட்டிருந்தது. எந்த அதிகாரமில்லாத இந்தக் குழு அமைக்கும் யோசனையை கருணாநிதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார். இதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் தலைமையிலான முதலமைச்சர் குழுவும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் கூறியதற்காக அவரது யோசனையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டதுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தில்லியின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடுவதைக் கருணாநிதி மற்ற பிரச்னைகளிலும் தொடர்ந்தார். ஒகேனக்கல் பிரச்னை அவ்வாறுதான் ஆனது.
1998-ம் ஆண்டில் தமிழக கர்நாடக அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பெங்களூர் குடிநீர்த் திட்டத்துக்கும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் என்பதால் எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் தமிழகம் ஜப்பானிய அரசின் உதவியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ததால் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆயிற்று. இத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியபோது கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, ஒகேனக்கல்லுக்கே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த வேளையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நலன் கருதி, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க கருணாநிதி தயங்கவில்லை.
“”கர்நாடகத்தில் இன்று நடந்திடும் ஆளுநர் ஆட்சி முடிவுற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலரும் வரை அவசியம் கருதி பொறுத்திருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்ற அசையாத நம்பிக்கையோடு இப்போது தாற்காலிகமாக அமைதி காப்போம்’’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதைக் கண்டித்தன. மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் ஓர் உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்று சொன்னார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தைத் தள்ளி வைக்க கருணாநிதி முன்வந்தபோதிலும் காங்கிரஸ் அங்கு வெற்றிபெறவில்லை. பா.ஜ.க.தான் வெற்றிபெற்றது. ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதான் மிச்சம்.
தில்லியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கட்சிகளின் நலன்களைக் காக்க தமிழகத்தின் நலன்களைக் காவு கொடுக்க கருணாநிதி ஒருபோதும் தயங்கமாட்டார் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் உண்டு.
2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள், கட்சி வேறுபாடின்றி போராட்டங்களை நடத்தினார்கள். மக்களின் கொதிப்புணர்வைச் சமாளிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 15 நாள்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதியே முன்மொழிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் இந்திய அரசை மட்டுமல்ல, சிங்கள அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்தத் தீர்மானத்தை வரவேற்றனர். இலங்கையில் போர் முனையில் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் இவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியிலிருந்து விரைந்து வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சு, தனக்குத் திருப்தி அளித்ததாக கருணாநிதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியோ போர் நிறுத்தம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் கருணாநிதிக்கு திருப்தி அளித்த அம்சம் எது? அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு; இதில் நானாகத் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே மீண்டும் அனைத்துக்கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து எங்கள் முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வந்தவரோ தில்லி அதிகாரபீடத்தின் தூதுவராயிற்றே. அவரையும் அவர் மூலம் தில்லி அதிகாரபீடத்தையும் திருப்திப்படுத்துவதுதானே கருணாநிதியின் நோக்கமும் கடமையும். எனவே உலகத் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதவி பேரத்தில் தமிழக உரிமைகள் பாழாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கட்டுரையாளர் : பழ . நெடுமாறன்
நன்றி : தினமணி
1979-ம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம், தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது.
பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீரைக் கொண்டு சென்று மின்உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக அணை பலவீனமாக இருப்பதாகக் கூக்குரல் எழுப்பியது.
இதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அணையைப் பார்வையிட்டு, பெரியாறு அணை பலமாக இருந்தாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படியும், தமிழக அரசு தனது செலவில் அணையை மேலும் பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படியும், இந்தப் பணிகள் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறினார். அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
அணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழகம் மேற்கொள்வதற்கு, கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டது. 1980-ல் தொடங்கிய இந்தப் பணிகள் 2001-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக நடைபெற்றன. மராமத்து வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்குக் கேரளம் சம்மதிக்கவில்லை. எனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 2001-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டபோது, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.
இக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும், 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டில் தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் கடத்துகிற தந்திரத்தைக் கேரளம் கையாண்டது. இதன் விளைவாக 5 ஆண்டுகள் கடந்தன. இது கேரளத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.
இறுதியாக 2006 பிப்ரவரி 27-ம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது. ஆனால் இத் தீர்ப்பை செயல்படுத்தவிடாத வகையில் கேரளம் 17-3-2006 அன்று சட்டமன்றத்தில் நதிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு கொடுத்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதன் பின்னர் கேரளம் புதிய தந்திரத்தைக் கையாண்டது. புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் இருந்தார். 2007 மே மாதத்துக்குப் பிறகு இத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொறுப்பேற்றார். கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது ஆய்வு நடத்துவதற்குக் கேரளம் அனுமதி பெற்றுவிட்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும்.
கேரளத்தின் புதிய சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என்பதை உணர்ந்த கேரளம், விசாரணையின் இறுதிக் கட்டத்தில் புதிய பிரச்னையை வேண்டுமென்றே எழுப்பியது. பெரியாறு அணைப் பிரச்னையில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை அரசியல் சட்ட ஆயம்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. வழக்கு நடந்த மூன்றாண்டு காலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பாத கேரளம் விசாரணையின் முடிவுக் கட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பியதற்கே காலம் கடத்தும் நோக்கமே காரணமாகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை இப்போது அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ, மாற்றவோ அதிகாரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, கேரளத்தின் முயற்சியைத் தமிழகம் முறியடித்திருக்க வேண்டும். கேரளம் பிறப்பித்த புதிய சட்டம் குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிறகு தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று அதன் விளைவாக அரசியல் சட்ட ஆயம் அமைப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது. மூன்றாண்டுகாலமாக நடைபெற்ற விசாரணையை முடக்கிப் போட்டதன் மூலம் கேரளம் நான்காவது வெற்றியை அடைந்துவிட்டது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் முதல் அனைவரிடமும் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நமது நியாயத்தை எடுத்துக்கூறி ஆதரவு தருவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுமட்டுமல்ல. நமது எதிர்ப்பை பிரதமரிடமும் மற்றவர்களிடமும் பதிவு செய்ய தமிழக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது.
கடந்த 16-9-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணையமைச்சரைக் கண்டித்துக் கூட்டம் என்பது, பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது. பிறகு அந்தக் கூட்டத்தை நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை.
காங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்துக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.
முல்லைப்பெரியாறு கேரள மாநிலத்தில் ஓடும் நதியாகும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ஓடும் நதியல்ல என்ற தவறான வாதத்தை கேரளம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும், தமிழகத்தின் சார்பில் சரியான முறையில் அது மறுக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உள்ளது. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாற்றில் ஓடும் நீரின் மொத்த அளவு 4,767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒருபகுதி நீர், அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்துக்குள் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர் ஆகும். அதாவது தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாற்றில் கலக்கும் நீரில் சுமார் 8-ல் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். எட்டில் ஏழு பகுதி நீர் கேரளத்துக்கு நம்மால் வழங்கப்படுகிறது. எனவே பெரியாறு பன்மாநில நதியே தவிர, கேரள நதி அல்ல. இந்த உண்மைகளை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உணர்த்துவதற்குத் தமிழக அரசு அடியோடு தவறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்கு மட்டுமே கருணாநிதி கவலைப்படுகிறாரே தவிர பெரியாறு அணை நீர் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து அவர் கவலைப்படவில்லை.
காவிரிப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகளை வற்புறுத்தி நிலைநாட்டுவதைவிட மத்திய அரசுக்கு நல்லபிள்ளையாக நடந்துகொள்வதிலேயே கருணாநிதி முழு கவனம் செலுத்தியதால் நாம் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம்.
1970-ம் ஆண்டில் காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகள் பயன்தராத நிலையில், நடுவர் மன்றம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தது. பெங்களூரில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் துணைத் தேர்தலில் இரு காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. எனவே அதில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இந்திரா காங்கிரஸýக்கு இருந்தது.
அப்போது பிரதமர் இந்திரா, முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் காவிரிப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அன்று கருணாநிதி அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதன் விளைவு பின்னால் நமக்குப் பெரும் இழப்புகளைத் தந்தது. 1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸýடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இந்த உறவு வழிவகுத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால் இதற்குப் பிறகு கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸின் சார்பில் முதலமைச்சரான தேவராஜ் அர்ஸ், காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் சட்டவிரோதமாகவும், தமிழகத்தின் சம்மதமின்றியும் அணைகளைக் கட்டத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைக்க முன்வந்தார். இடைக்காலத்தில் 19 ஆண்டுகளில் அவ்வளவு அணைகளையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. அதன் விளைவாக தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அறவே தடைப்பட்டுப்போனது.
நடுவர் மன்றத்தின் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி, நீதி தவறாதவர் என்ற பெயரெடுத்தவர். அவர் காவிரிப் பாசன பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். எனவே அவரது தீர்ப்பு தங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பதை உணர்ந்த கர்நாடக அரசியல்வாதிகள் அவரை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவ கௌடா, சித்ததோஷ் முகர்ஜி மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொய்யான புகாரைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது, சில கோயில்களில் அவர்களுக்குப் பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு விலையுயர்ந்த பரிசுகளை இவர்கள் பெற்றிருப்பதால் நடுநிலை தவறிவிட்டார்கள் என தேவ கௌடா குற்றம் சாட்டினார். பிறகு அவரே கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். அப்போதும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அந்த வேளையில் தேவ கௌடாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு எதிரான நிலையை எடுத்து வைக்கத் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முன்வரவில்லை.
காவிரிப் பிரச்னையில் தொடக்கம் முதல் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தேவ கௌடாவை மத்தியில் பிரதமராக்கவும் தி.மு.க. துணைநின்றது என்பதுதான் துரோகத்தின் உச்சகட்டமாகும். தேவ கௌடா பிரதமரான பிறகும்கூட நடுவர் மன்றத் தலைவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்களோ சித்ததோஷ் முகர்ஜி மீது சுமத்தப்பட்ட பழியைப் போக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் மனம் நொந்து தனது பதவியிலிருந்து விலகினார். கர்நாடகத்தின் நோக்கம் வெற்றிபெற்றது. இதற்குக் கருணாநிதி துணைநின்றார் என்பதுதான் வரலாற்றுச் சோகமாகும்.
காவிரிப் பிரச்னையில் துரோகம் தொடர்ந்தது. நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் வற்புறுத்தத் தவறிவிட்டது. 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தைப் பெற்று இறுதி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 30-5-97-ல் மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை தீட்டி மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியது. இந்த வரைவுத் திட்டத்தின்படி முழுமையான அதிகாரம் கொண்ட நதி நீர் ஆணையம் ஏற்படுத்துவதற்கான யோசனை கூறப்பட்டது. இதையும் கர்நாடகம் ஏற்காமல் வழக்கில் வாய்தா வாங்கியபடியே இருந்தது. இதற்கிடையில் தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். பிரதமர் வாஜ்பாய் 6-8-98 அன்று கூட்டிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் புதிய வரைவுத் திட்டம் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. இதில் காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தும் யோசனை கைவிடப்பட்டு பிரதமர் தலைமையிலான மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்ற யோசனை கூறப்பட்டிருந்தது. எந்த அதிகாரமில்லாத இந்தக் குழு அமைக்கும் யோசனையை கருணாநிதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார். இதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் தலைமையிலான முதலமைச்சர் குழுவும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் கூறியதற்காக அவரது யோசனையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டதுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தில்லியின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடுவதைக் கருணாநிதி மற்ற பிரச்னைகளிலும் தொடர்ந்தார். ஒகேனக்கல் பிரச்னை அவ்வாறுதான் ஆனது.
1998-ம் ஆண்டில் தமிழக கர்நாடக அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பெங்களூர் குடிநீர்த் திட்டத்துக்கும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் என்பதால் எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் தமிழகம் ஜப்பானிய அரசின் உதவியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ததால் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆயிற்று. இத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியபோது கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, ஒகேனக்கல்லுக்கே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த வேளையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நலன் கருதி, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க கருணாநிதி தயங்கவில்லை.
“”கர்நாடகத்தில் இன்று நடந்திடும் ஆளுநர் ஆட்சி முடிவுற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலரும் வரை அவசியம் கருதி பொறுத்திருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்ற அசையாத நம்பிக்கையோடு இப்போது தாற்காலிகமாக அமைதி காப்போம்’’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதைக் கண்டித்தன. மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் ஓர் உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்று சொன்னார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தைத் தள்ளி வைக்க கருணாநிதி முன்வந்தபோதிலும் காங்கிரஸ் அங்கு வெற்றிபெறவில்லை. பா.ஜ.க.தான் வெற்றிபெற்றது. ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதான் மிச்சம்.
தில்லியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கட்சிகளின் நலன்களைக் காக்க தமிழகத்தின் நலன்களைக் காவு கொடுக்க கருணாநிதி ஒருபோதும் தயங்கமாட்டார் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் உண்டு.
2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள், கட்சி வேறுபாடின்றி போராட்டங்களை நடத்தினார்கள். மக்களின் கொதிப்புணர்வைச் சமாளிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 15 நாள்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதியே முன்மொழிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் இந்திய அரசை மட்டுமல்ல, சிங்கள அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்தத் தீர்மானத்தை வரவேற்றனர். இலங்கையில் போர் முனையில் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் இவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியிலிருந்து விரைந்து வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சு, தனக்குத் திருப்தி அளித்ததாக கருணாநிதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியோ போர் நிறுத்தம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் கருணாநிதிக்கு திருப்தி அளித்த அம்சம் எது? அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு; இதில் நானாகத் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே மீண்டும் அனைத்துக்கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து எங்கள் முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வந்தவரோ தில்லி அதிகாரபீடத்தின் தூதுவராயிற்றே. அவரையும் அவர் மூலம் தில்லி அதிகாரபீடத்தையும் திருப்திப்படுத்துவதுதானே கருணாநிதியின் நோக்கமும் கடமையும். எனவே உலகத் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதவி பேரத்தில் தமிழக உரிமைகள் பாழாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கட்டுரையாளர் : பழ . நெடுமாறன்
நன்றி : தினமணி
Subscribe to:
Posts (Atom)
