பின்னலாடைத் தொழில் உலகளாவிய முறையில் பிரபலமடைந்து விளங்கும் பெருமைக்குரிய நகரம் திருப்பூர்.
இங்கு தயாராகும் பல்வேறு ரகமான பின்னலாடைகளுக்குக் கவர்ச்சியான வண்ணத்தை மெருகேற்றித் தருகிற சாயங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாயப்பட்டறை ஆலைகள் ஈடுபட்டுள்ளன. வண்ணமேற்றப்பட்ட ஆயத்த ஆடைகளை விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் அனுப்புவதற்கு முன்னதாக அவற்றைச் சலவை செய்யும் சலவை ஆலைகளும் இத்தொழிலில் பிரிக்க முடியாத அங்கம்.
இந்தச் சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து வேலைநிறுத்தம் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன.
வழக்கமான வேலைநிறுத்தங்கள் அவை நடைபெறும் தொழில் அல்லது பணிக்கூட முதலாளிகள் மற்றும் அவற்றின் பணியாளர்களை மட்டுமே பாதிக்கிற ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டவை. ஆனால் திருப்பூரில் நடைபெற்று வருகிற வேலைநிறுத்தத்துக்கு இரட்டைப் பரிமாணங்கள் உண்டு. ஒன்று, அந்தத் தொழில் சம்பந்தப்பட்டது; இன்னொன்று ஒட்டுமொத்த சமுதாயத்தை உள்ளடக்கியது.
திருப்பூர் மட்டுமன்றி ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இத்தகைய சாயப்பட்டறை மற்றும் சலவை ஆலைகள் அமைந்துள்ளன.
1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திருப்பூரில் மிகப்பெரும் அளவில் அமைக்கப்பட்ட சாயஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து வரத் தொடங்கியது. இதையடுத்து நொய்யல் ஆற்றுக் கரையோர விவசாயம் பாதிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் வந்த அபாயகரமான தொழிற்சாலைக் கழிவுநீரால் ஆற்று நீர் முற்றிலுமாக மாசடைந்தது.
ஒரத்துப்பாளையம் அணை சுற்று வட்டாரத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாயின. இத்துடன் அணையில் தேங்கியிருக்கும் மாசுபட்ட நீரினாலும், கால்வாய்களில் செல்லும் இந்தக் கழிவுநீரினாலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் கிடைத்துவந்த குடிநீரும் மாசுபட்டுவிட்டது. அன்றாடம் குடிநீருக்கு இப்பகுதி மக்கள் நெடுந்தொலைவு சென்று வர வேண்டியிருக்கிறது.
இதை ஒத்த பாதிப்புகள் ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் நேரிட்டுள்ளன. சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பெரிதளவு மாசுபடுத்துகிற இதர தொழில்களாக தோல் பதனிடும் தொழிலும், ரசாயனத் தொழிற்சாலைகளும் அறியப்படுகின்றன. வேலூர் - ராணிப்பேட்டை பகுதிகளில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் காரணமாக நேரிட்டுள்ள மாசுபடுதலும் அளவில்லாத எல்லையை எட்டியுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள் அமைவதும், அவற்றின் மூலம் உற்பத்தி பெருகுவதும் எந்த ஒரு நாட்டுக்கும் இன்றியமையாத தேவைதான். எனினும், இந்த வளர்ச்சியின் பரிமாணங்கள் சுற்றுச்சூழலை மீட்க முடியாத பெருஞ்சேதத்துக்கு இலக்காக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் காரணமாகவே தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மத்திய அரசால் நாடு முழுவதற்கும் பொருந்தும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. மாநிலங்களிலும் மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ், தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் ஏற்கெனவே அமலில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டோ, தளர்த்தப்பட்டோ விட்டபோதிலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய இசைவைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்வது சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான்.
ஆனால் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சாயக்கழிவு நீர் ஆற்றில் விடப்பட்டு வந்ததன் காரணமாக நேரிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தமிழக அரசோ, மாசுக்கட்டுப்பாடு வாரியமோ உரியவகையில் களையத் தவறிவிட்டன. இதே நிலைமைதான வேலூர் மாவட்டத்தின் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் விஷயத்திலும் நிலவியது. இந்த இரண்டு (திருப்பூர், வேலூர்) மாவட்டங்களின் பாதிப்புக்கு இலக்காகிய மக்கள் நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
திருப்பூர் சாயப்பட்டறை, சலவை ஆலைகளின் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு, காவிரி ஆற்றோடு கலந்து அதன் பாசனப்படுகை முழுவதிலும் பாதிப்பு உணரப்பட்டது. கரூர் தாலுகா நொய்யல் கால்வாய் விவசாயிகள் சங்கம் இப்பிரச்னையை 1996-ம் ஆண்டு வாக்கில் உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. சென்னை உயர் நீதிமன்றத்திலும், தில்லி உச்ச நீதிமன்றத்திலும் இப்பிரச்னை தொடர்பான வழக்கும், மேல்முறையீடுகளும் கடந்த 13 ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு தீர்ப்புகளும், மேலாணைகளும் பிறப்பிக்கப்பட்டன. வேலூர் குடிமக்கள் நலச் சங்கம் தொடுத்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ம் ஆண்டிலேயே வழங்கியுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது குறித்த முன்னோடித் தீர்ப்பாகவும் நிலைபெற்று விட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இடம்பெற்றுள்ள பதிவுகளின் சுருக்கம் பின்வருமாறு:
""தொழில் நடவடிக்கை மூலம் அபாயகரமான கழிவுகளை வெளியேற்றினால் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும், பாதிக்கப்படும் கிராமத்தினர் உள்ளிட்ட இதர மக்களுக்கும் தொழில்துறையினர் இழப்பீடு வழங்கப் பொறுப்பாளிகள் ஆவர். தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும் இது பொருந்தும். அத்துடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதாரத்தில் இருந்து மீட்டமைக்க வேண்டிய நடவடிக்கைக்கும் அவர்கள் பொறுப்பாளிகள் ஆவர்''.
""அரசியல் சாசனப் பிரிவுகள் 47, 48-ஏ, 51-ஏ(ஜி) ஆகியவற்றின்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். அத்துடன் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் படி மாசில்லாத சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது தனிமனிதர்களின் உரிமை என்று அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாசுபடுத்தியவர்களே தண்டம் செலுத்துவது என்ற கொள்கைகள் சுற்றுப்புறச் சூழல் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.''
இந்தத் தீர்ப்புகளின் பின்புலத்தில் திருப்பூர் சாயப்பட்டறை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட கண்டிப்பான உத்தரவுகளைக் கடந்த 2009 அக்டோபர் 6அன்று பிறப்பித்தது:
""சாயஆலைகள் நீதிமன்றம் விதித்திருக்கும் அபராதம் உள்பட அனைத்து விதிமுறைகளையும் இன்றிலிருந்து (6.10.09) அடுத்த மூன்று மாத காலத்தில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். நொய்யல் ஆறு,அணை ஆகியவற்றில் மாசு கலக்காமல் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கொடுத்திருக்கும் காலக்கெடுவுக்குள் சுத்தப்படுத்தும் பணிகளையும் முடிக்க வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையங்களைச் செயல்படுத்தவும், அணையைச் சுத்தப்படுத்துவது, ஆற்றைத் தூய்மைப்படுத்துவது, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை முழுமையாக வழங்கவும், அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றவும் இன்றிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு வழங்கப்படுகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் வேறு மாசு ஏற்படாமல் விதிமுறைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.''
உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்தக் காலக்கெடு ஜனவரி 6 அன்று முடிவடைகிறது. இதற்குள்ளாக,சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய தொகைகள் நீங்கலாக மீதமுள்ள 62 கோடி ரூபாய்களைச் செலுத்துவது மட்டுமன்றி, ஏற்கெனவே நிறுவப்பட்டு வரும் 17 பொதுசுத்திகரிப்பு நிலையங்களில், ஆர்.ஓ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்து கொண்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது நிறுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இவற்றைச் செயல்படுத்தத் தவறினால், இந்த ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்படும். இந்தக் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்த இயலாமையைத் தெரிவித்துத்தான், திருப்பூரில் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்தச் சாயப்பட்டறை, சலவை ஆலைகளில் பணிபுரியும் 40 ஆயிரம் தொழிலாளர்களும், அவர்தம் குடும்பங்களும் உடனடி பாதிப்புக்கு உள்ளாவது திண்ணம். இந்த ஆலைகளை நம்பியுள்ள பனியன் தொழில் மற்றும் அதன் சார்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும்.
திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு தாலுகாக்களின் 68 கிராமங்களில் 28,499 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டு, 28,596 விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய கையறு நிலையில் உள்ளனர்.
இப்பிரச்னையின் இரண்டு பரிமாணங்களும் கனமானவை; அலட்சியப்படுத்த முடியாதவை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கறாராக அமல்படுத்துவது இதில் எட்டப்படக் கூடிய எந்தத் தீர்வுக்கும் அடிநாதமாக - முன்நிபந்தனையாக இருத்தல் வேண்டும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வாக சில கோரிக்கைகளையும் ஆலை உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர். நிறுவப்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான கட்டமைப்புச் செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குவது; வங்கிக் கடன் வட்டியைத் தள்ளுபடி செய்வது; கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்குவது; தவணை செலுத்தி முடிக்க வேண்டிய ஆண்டுகளை நீட்டிப்பது போன்ற இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவது அவசியமே. மாநில அரசு இந்தத் தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நோக்கோடு இவற்றுக்கு உரிய தீர்வு காணவும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படியான நிவாரணத் தொகைகள் வழங்கப்படவும் முற்பட வேண்டும்.
அதேநேரத்தில், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடாமல் பார்த்துக் கொள்கிற சமூகப் பொறுப்புணர்வோடு ஆலை உரிமையாளர்களும் ஒரு நேர்மையான அணுகுமுறையைக் கைக்கொள்வது சமரசம் செய்து கொள்ளக்கூடாத கட்டாயம்.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
Showing posts with label நீர். Show all posts
Showing posts with label நீர். Show all posts
Tuesday, January 5, 2010
Monday, January 4, 2010
காலம் கடந்துவிடவில்லை
நீர்நிலைகள், நீர்வரத்து வாய்க்கால்களைப் பாதுகாப்பதா? அல்லது அங்கு ஏழைகள் கட்டியுள்ள வீடுகளை அகற்றுவதா, கூடாதா? என்ற சங்கடமான கேள்விக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்துள்ள பதில் மிகத் தெளிவானது. "இரண்டுமே சமூகப் பிரச்னைதான். ஆனால், நீர்நிலைகளையும் நீர்வரத்துப் பகுதிகளையும் பாதுகாப்பதுதான் இதில் முக்கியமானது' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பழனி நகராட்சிப் பகுதி சிறுநாயக்கன்குளத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள 500 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ள நீதிமன்றம், அதோடு நில்லாமல், 1998-ம் ஆண்டில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு மாறாக, அந்தப் பகுதியில் சாலை அமைத்து, மின்இணைப்பு வழங்கி, குடிநீர்க் குழாய்கள் அமைத்துக் கொடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிர்வாகம் இவ்வாறு மின்இணைப்பு, சாலைவசதி, தெருவிளக்கு எல்லாமும் அளித்து அதனை முறைப்படுத்துவதும் பட்டா வழங்கப் பரிந்துரைப்பதுமான இத்தகைய முரண்பாடுகள்தான் தமிழ்நாட்டின் அனைத்து ஏரி, குளங்களும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட முக்கிய காரணம்.
தமிழ்நாடு முழுவதிலும் 5000-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் ஏரிகளும் மழைநீரை மட்டுமே தேக்கி வைக்கும் குளங்களுமாக இரு வகை நீர் ஆதாரங்கள் பன்னெடுங்காலமாக இருந்துவருகின்றன. ஆனால் அவை யாவற்றையும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பாழ்படுத்திவிட்டோம். இதற்கு முக்கியமான காரணம்-அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரை நிரப்பினால், 300 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஆனாலும்கூட, தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் -2007 இன்னமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் இச்சட்டத்தை முறையாக அமல்படுத்துவது மட்டுமன்றி ஏரிகள் குளங்கள் பராமரிப்பைப் பொதுப்பணித் துறையிடமிருந்து நீக்கி, அந்தந்தப் பகுதி விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்த ஏரிகள் பலவற்றில் தொழிற்கூடங்கள், நீரைப் பயன்படுத்திக் கொள்வதுடன், கழிவு நீரையும் கலக்கின்றன. இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் வருவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதில் ஓரளவுக்குமேல் தலையிட முடியாத சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய குறைபாடுகளையும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் போக்க முடியும்.
ஏரிகளைப் பாதுகாப்பதில் அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆக்கிரமிப்பு செய்த ஏழை மக்களுக்கு வேறு இடத்தில் இடம் கொடுத்த பிறகும்கூட, அதே இடத்தில்தான் பட்டா வேண்டும் என்று கோருவதும் அவர்களுக்காக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்குவதும் அரசியல் கட்சிகளின் பொறுப்பின்மையைத்தான் காட்டுகின்றன.
நகர்ப்புறத்தில் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் நேரிட்டபோது உடனுக்குடன் அவை அகற்றப்பட்டிருந்தால், அங்கே நிலையான குடியிருப்புகள் உருவாகியிருக்காது. இன்று இத்தனை சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகளையும் அரசு சந்தித்திருக்க வேண்டியதும் இல்லை. அரசியல்வாதிகளுக்குப் பயந்துகொண்டு, அல்லது அவர்களிடம் ஊழலில் பங்குகொண்டு இத்தகைய ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவுதான் இன்றைய தினம் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் ஏழை மக்களால், தொழிற்கூடங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நச்சுக் கழிவுகள் ஏரிகளில் கலக்கப்படுகின்றன.
நகரத்தை விட்டுத் தள்ளுவோம். ஏரி, குளங்கள் அழியும்படியான நிலை ஊரகப் பகுதியில் எப்படி ஏற்பட்டது? விவசாயியின் அடிப்படையே நீர்ஆதாரம்தானே! எப்படி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தார்கள்? என்கிற பின்னணி காரணங்கள், சமூக ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்குரியவை.
கிராமங்களில் பல தலைமுறைகளாகக் கோலோச்சிக் கொண்டிருந்த நிலஉடைமையாளர்கள் மீதான வெறுப்பும், அவர்களது பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் நஷ்டமடைந்தால் நமக்கென்ன என்கிற அலட்சியமும்தான், அந்தப் பண்ணையாளர்களால் பாதிப்படைந்த கிராமத்தினர் சும்மா இருக்கக் காரணமாக இருந்தது. பின்னாளில் நீர் வரத்து இல்லாமல் அத்தகைய ஏரி, குளம் மேடுற்றபோது, அதையே காரணம் காட்டி அங்கு பஸ் நிலையம், மின்சார அலுவலகம்,பஸ் பணிமனை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் உருவாக அரசியல்வாதிகள் வகை செய்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். மாறாக, அப்போது ஆக்கிரமிப்புகளை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்த, அந்த மண்ணில் தொடர்ந்து வாழ நேர்ந்த சிறு விவசாயிகளும் விவசாயக் கூலிகளும், இடம்பெயர முடியாத அப்பகுதியின் பிற குடிகளும்தான். இப்போது அவர்களுக்குத்தான் குடிக்கவும் தண்ணீர் இல்லை. விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. மழைபெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வருவதே இல்லை.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இத்தவறுகளை திருத்திவிட முடியும். கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அரசியல் சமூக, பொருளாதார மாற்றங்கள் பல வேறுபாடுகளைக் களைந்துவிட்டது. இப்போது பாசன நீர் என்பது அனைத்து விவசாயிகளுக்கான சொத்து. நீர்ஆதாரம்தான் ஊரக மக்களின் ஒரே வாழ்வாதாரம். ஆகையால், அரசியல் பாகுபாடு இல்லாமல் நீர்நிலை மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தமிழகத்தின் நிலத்தடி நீரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு வழங்கும் பெரும்நிதியம் இந்த நீர்நிலைகளாக மட்டுமே இருக்க முடியும்.
நன்றி : தினமணி
பழனி நகராட்சிப் பகுதி சிறுநாயக்கன்குளத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள 500 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ள நீதிமன்றம், அதோடு நில்லாமல், 1998-ம் ஆண்டில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு மாறாக, அந்தப் பகுதியில் சாலை அமைத்து, மின்இணைப்பு வழங்கி, குடிநீர்க் குழாய்கள் அமைத்துக் கொடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிர்வாகம் இவ்வாறு மின்இணைப்பு, சாலைவசதி, தெருவிளக்கு எல்லாமும் அளித்து அதனை முறைப்படுத்துவதும் பட்டா வழங்கப் பரிந்துரைப்பதுமான இத்தகைய முரண்பாடுகள்தான் தமிழ்நாட்டின் அனைத்து ஏரி, குளங்களும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட முக்கிய காரணம்.
தமிழ்நாடு முழுவதிலும் 5000-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் ஏரிகளும் மழைநீரை மட்டுமே தேக்கி வைக்கும் குளங்களுமாக இரு வகை நீர் ஆதாரங்கள் பன்னெடுங்காலமாக இருந்துவருகின்றன. ஆனால் அவை யாவற்றையும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பாழ்படுத்திவிட்டோம். இதற்கு முக்கியமான காரணம்-அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரை நிரப்பினால், 300 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஆனாலும்கூட, தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் -2007 இன்னமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் இச்சட்டத்தை முறையாக அமல்படுத்துவது மட்டுமன்றி ஏரிகள் குளங்கள் பராமரிப்பைப் பொதுப்பணித் துறையிடமிருந்து நீக்கி, அந்தந்தப் பகுதி விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்த ஏரிகள் பலவற்றில் தொழிற்கூடங்கள், நீரைப் பயன்படுத்திக் கொள்வதுடன், கழிவு நீரையும் கலக்கின்றன. இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் வருவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதில் ஓரளவுக்குமேல் தலையிட முடியாத சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய குறைபாடுகளையும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் போக்க முடியும்.
ஏரிகளைப் பாதுகாப்பதில் அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆக்கிரமிப்பு செய்த ஏழை மக்களுக்கு வேறு இடத்தில் இடம் கொடுத்த பிறகும்கூட, அதே இடத்தில்தான் பட்டா வேண்டும் என்று கோருவதும் அவர்களுக்காக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்குவதும் அரசியல் கட்சிகளின் பொறுப்பின்மையைத்தான் காட்டுகின்றன.
நகர்ப்புறத்தில் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் நேரிட்டபோது உடனுக்குடன் அவை அகற்றப்பட்டிருந்தால், அங்கே நிலையான குடியிருப்புகள் உருவாகியிருக்காது. இன்று இத்தனை சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகளையும் அரசு சந்தித்திருக்க வேண்டியதும் இல்லை. அரசியல்வாதிகளுக்குப் பயந்துகொண்டு, அல்லது அவர்களிடம் ஊழலில் பங்குகொண்டு இத்தகைய ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவுதான் இன்றைய தினம் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் ஏழை மக்களால், தொழிற்கூடங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நச்சுக் கழிவுகள் ஏரிகளில் கலக்கப்படுகின்றன.
நகரத்தை விட்டுத் தள்ளுவோம். ஏரி, குளங்கள் அழியும்படியான நிலை ஊரகப் பகுதியில் எப்படி ஏற்பட்டது? விவசாயியின் அடிப்படையே நீர்ஆதாரம்தானே! எப்படி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தார்கள்? என்கிற பின்னணி காரணங்கள், சமூக ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்குரியவை.
கிராமங்களில் பல தலைமுறைகளாகக் கோலோச்சிக் கொண்டிருந்த நிலஉடைமையாளர்கள் மீதான வெறுப்பும், அவர்களது பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் நஷ்டமடைந்தால் நமக்கென்ன என்கிற அலட்சியமும்தான், அந்தப் பண்ணையாளர்களால் பாதிப்படைந்த கிராமத்தினர் சும்மா இருக்கக் காரணமாக இருந்தது. பின்னாளில் நீர் வரத்து இல்லாமல் அத்தகைய ஏரி, குளம் மேடுற்றபோது, அதையே காரணம் காட்டி அங்கு பஸ் நிலையம், மின்சார அலுவலகம்,பஸ் பணிமனை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் உருவாக அரசியல்வாதிகள் வகை செய்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். மாறாக, அப்போது ஆக்கிரமிப்புகளை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்த, அந்த மண்ணில் தொடர்ந்து வாழ நேர்ந்த சிறு விவசாயிகளும் விவசாயக் கூலிகளும், இடம்பெயர முடியாத அப்பகுதியின் பிற குடிகளும்தான். இப்போது அவர்களுக்குத்தான் குடிக்கவும் தண்ணீர் இல்லை. விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. மழைபெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வருவதே இல்லை.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இத்தவறுகளை திருத்திவிட முடியும். கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அரசியல் சமூக, பொருளாதார மாற்றங்கள் பல வேறுபாடுகளைக் களைந்துவிட்டது. இப்போது பாசன நீர் என்பது அனைத்து விவசாயிகளுக்கான சொத்து. நீர்ஆதாரம்தான் ஊரக மக்களின் ஒரே வாழ்வாதாரம். ஆகையால், அரசியல் பாகுபாடு இல்லாமல் நீர்நிலை மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தமிழகத்தின் நிலத்தடி நீரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு வழங்கும் பெரும்நிதியம் இந்த நீர்நிலைகளாக மட்டுமே இருக்க முடியும்.
நன்றி : தினமணி
Labels:
தமிழகஅரசு,
தலையங்கம்,
நீதி மன்றம்,
நீர்
Wednesday, November 18, 2009
பதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்-பழ . நெடுமாறன்
முல்லைப்பெரியாறு அணை நீர்ப் பிரச்னையில் மீண்டும் கேரளம் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது. தமிழகம் மறுபடியும் மறுபடியும் வஞ்சிக்கப்பட்டுவிட்டது.
1979-ம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம், தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது.
பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீரைக் கொண்டு சென்று மின்உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக அணை பலவீனமாக இருப்பதாகக் கூக்குரல் எழுப்பியது.
இதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அணையைப் பார்வையிட்டு, பெரியாறு அணை பலமாக இருந்தாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படியும், தமிழக அரசு தனது செலவில் அணையை மேலும் பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படியும், இந்தப் பணிகள் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறினார். அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
அணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழகம் மேற்கொள்வதற்கு, கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டது. 1980-ல் தொடங்கிய இந்தப் பணிகள் 2001-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக நடைபெற்றன. மராமத்து வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்குக் கேரளம் சம்மதிக்கவில்லை. எனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 2001-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டபோது, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.
இக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும், 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டில் தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் கடத்துகிற தந்திரத்தைக் கேரளம் கையாண்டது. இதன் விளைவாக 5 ஆண்டுகள் கடந்தன. இது கேரளத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.
இறுதியாக 2006 பிப்ரவரி 27-ம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது. ஆனால் இத் தீர்ப்பை செயல்படுத்தவிடாத வகையில் கேரளம் 17-3-2006 அன்று சட்டமன்றத்தில் நதிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு கொடுத்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதன் பின்னர் கேரளம் புதிய தந்திரத்தைக் கையாண்டது. புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் இருந்தார். 2007 மே மாதத்துக்குப் பிறகு இத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொறுப்பேற்றார். கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது ஆய்வு நடத்துவதற்குக் கேரளம் அனுமதி பெற்றுவிட்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும்.
கேரளத்தின் புதிய சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என்பதை உணர்ந்த கேரளம், விசாரணையின் இறுதிக் கட்டத்தில் புதிய பிரச்னையை வேண்டுமென்றே எழுப்பியது. பெரியாறு அணைப் பிரச்னையில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை அரசியல் சட்ட ஆயம்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. வழக்கு நடந்த மூன்றாண்டு காலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பாத கேரளம் விசாரணையின் முடிவுக் கட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பியதற்கே காலம் கடத்தும் நோக்கமே காரணமாகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை இப்போது அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ, மாற்றவோ அதிகாரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, கேரளத்தின் முயற்சியைத் தமிழகம் முறியடித்திருக்க வேண்டும். கேரளம் பிறப்பித்த புதிய சட்டம் குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிறகு தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று அதன் விளைவாக அரசியல் சட்ட ஆயம் அமைப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது. மூன்றாண்டுகாலமாக நடைபெற்ற விசாரணையை முடக்கிப் போட்டதன் மூலம் கேரளம் நான்காவது வெற்றியை அடைந்துவிட்டது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் முதல் அனைவரிடமும் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நமது நியாயத்தை எடுத்துக்கூறி ஆதரவு தருவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுமட்டுமல்ல. நமது எதிர்ப்பை பிரதமரிடமும் மற்றவர்களிடமும் பதிவு செய்ய தமிழக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது.
கடந்த 16-9-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணையமைச்சரைக் கண்டித்துக் கூட்டம் என்பது, பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது. பிறகு அந்தக் கூட்டத்தை நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை.
காங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்துக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.
முல்லைப்பெரியாறு கேரள மாநிலத்தில் ஓடும் நதியாகும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ஓடும் நதியல்ல என்ற தவறான வாதத்தை கேரளம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும், தமிழகத்தின் சார்பில் சரியான முறையில் அது மறுக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உள்ளது. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாற்றில் ஓடும் நீரின் மொத்த அளவு 4,767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒருபகுதி நீர், அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்துக்குள் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர் ஆகும். அதாவது தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாற்றில் கலக்கும் நீரில் சுமார் 8-ல் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். எட்டில் ஏழு பகுதி நீர் கேரளத்துக்கு நம்மால் வழங்கப்படுகிறது. எனவே பெரியாறு பன்மாநில நதியே தவிர, கேரள நதி அல்ல. இந்த உண்மைகளை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உணர்த்துவதற்குத் தமிழக அரசு அடியோடு தவறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்கு மட்டுமே கருணாநிதி கவலைப்படுகிறாரே தவிர பெரியாறு அணை நீர் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து அவர் கவலைப்படவில்லை.
காவிரிப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகளை வற்புறுத்தி நிலைநாட்டுவதைவிட மத்திய அரசுக்கு நல்லபிள்ளையாக நடந்துகொள்வதிலேயே கருணாநிதி முழு கவனம் செலுத்தியதால் நாம் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம்.
1970-ம் ஆண்டில் காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகள் பயன்தராத நிலையில், நடுவர் மன்றம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தது. பெங்களூரில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் துணைத் தேர்தலில் இரு காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. எனவே அதில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இந்திரா காங்கிரஸýக்கு இருந்தது.
அப்போது பிரதமர் இந்திரா, முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் காவிரிப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அன்று கருணாநிதி அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதன் விளைவு பின்னால் நமக்குப் பெரும் இழப்புகளைத் தந்தது. 1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸýடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இந்த உறவு வழிவகுத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால் இதற்குப் பிறகு கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸின் சார்பில் முதலமைச்சரான தேவராஜ் அர்ஸ், காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் சட்டவிரோதமாகவும், தமிழகத்தின் சம்மதமின்றியும் அணைகளைக் கட்டத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைக்க முன்வந்தார். இடைக்காலத்தில் 19 ஆண்டுகளில் அவ்வளவு அணைகளையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. அதன் விளைவாக தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அறவே தடைப்பட்டுப்போனது.
நடுவர் மன்றத்தின் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி, நீதி தவறாதவர் என்ற பெயரெடுத்தவர். அவர் காவிரிப் பாசன பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். எனவே அவரது தீர்ப்பு தங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பதை உணர்ந்த கர்நாடக அரசியல்வாதிகள் அவரை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவ கௌடா, சித்ததோஷ் முகர்ஜி மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொய்யான புகாரைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது, சில கோயில்களில் அவர்களுக்குப் பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு விலையுயர்ந்த பரிசுகளை இவர்கள் பெற்றிருப்பதால் நடுநிலை தவறிவிட்டார்கள் என தேவ கௌடா குற்றம் சாட்டினார். பிறகு அவரே கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். அப்போதும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அந்த வேளையில் தேவ கௌடாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு எதிரான நிலையை எடுத்து வைக்கத் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முன்வரவில்லை.
காவிரிப் பிரச்னையில் தொடக்கம் முதல் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தேவ கௌடாவை மத்தியில் பிரதமராக்கவும் தி.மு.க. துணைநின்றது என்பதுதான் துரோகத்தின் உச்சகட்டமாகும். தேவ கௌடா பிரதமரான பிறகும்கூட நடுவர் மன்றத் தலைவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்களோ சித்ததோஷ் முகர்ஜி மீது சுமத்தப்பட்ட பழியைப் போக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் மனம் நொந்து தனது பதவியிலிருந்து விலகினார். கர்நாடகத்தின் நோக்கம் வெற்றிபெற்றது. இதற்குக் கருணாநிதி துணைநின்றார் என்பதுதான் வரலாற்றுச் சோகமாகும்.
காவிரிப் பிரச்னையில் துரோகம் தொடர்ந்தது. நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் வற்புறுத்தத் தவறிவிட்டது. 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தைப் பெற்று இறுதி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 30-5-97-ல் மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை தீட்டி மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியது. இந்த வரைவுத் திட்டத்தின்படி முழுமையான அதிகாரம் கொண்ட நதி நீர் ஆணையம் ஏற்படுத்துவதற்கான யோசனை கூறப்பட்டது. இதையும் கர்நாடகம் ஏற்காமல் வழக்கில் வாய்தா வாங்கியபடியே இருந்தது. இதற்கிடையில் தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். பிரதமர் வாஜ்பாய் 6-8-98 அன்று கூட்டிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் புதிய வரைவுத் திட்டம் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. இதில் காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தும் யோசனை கைவிடப்பட்டு பிரதமர் தலைமையிலான மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்ற யோசனை கூறப்பட்டிருந்தது. எந்த அதிகாரமில்லாத இந்தக் குழு அமைக்கும் யோசனையை கருணாநிதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார். இதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் தலைமையிலான முதலமைச்சர் குழுவும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் கூறியதற்காக அவரது யோசனையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டதுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தில்லியின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடுவதைக் கருணாநிதி மற்ற பிரச்னைகளிலும் தொடர்ந்தார். ஒகேனக்கல் பிரச்னை அவ்வாறுதான் ஆனது.
1998-ம் ஆண்டில் தமிழக கர்நாடக அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பெங்களூர் குடிநீர்த் திட்டத்துக்கும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் என்பதால் எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் தமிழகம் ஜப்பானிய அரசின் உதவியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ததால் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆயிற்று. இத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியபோது கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, ஒகேனக்கல்லுக்கே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த வேளையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நலன் கருதி, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க கருணாநிதி தயங்கவில்லை.
“”கர்நாடகத்தில் இன்று நடந்திடும் ஆளுநர் ஆட்சி முடிவுற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலரும் வரை அவசியம் கருதி பொறுத்திருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்ற அசையாத நம்பிக்கையோடு இப்போது தாற்காலிகமாக அமைதி காப்போம்’’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதைக் கண்டித்தன. மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் ஓர் உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்று சொன்னார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தைத் தள்ளி வைக்க கருணாநிதி முன்வந்தபோதிலும் காங்கிரஸ் அங்கு வெற்றிபெறவில்லை. பா.ஜ.க.தான் வெற்றிபெற்றது. ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதான் மிச்சம்.
தில்லியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கட்சிகளின் நலன்களைக் காக்க தமிழகத்தின் நலன்களைக் காவு கொடுக்க கருணாநிதி ஒருபோதும் தயங்கமாட்டார் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் உண்டு.
2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள், கட்சி வேறுபாடின்றி போராட்டங்களை நடத்தினார்கள். மக்களின் கொதிப்புணர்வைச் சமாளிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 15 நாள்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதியே முன்மொழிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் இந்திய அரசை மட்டுமல்ல, சிங்கள அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்தத் தீர்மானத்தை வரவேற்றனர். இலங்கையில் போர் முனையில் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் இவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியிலிருந்து விரைந்து வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சு, தனக்குத் திருப்தி அளித்ததாக கருணாநிதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியோ போர் நிறுத்தம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் கருணாநிதிக்கு திருப்தி அளித்த அம்சம் எது? அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு; இதில் நானாகத் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே மீண்டும் அனைத்துக்கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து எங்கள் முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வந்தவரோ தில்லி அதிகாரபீடத்தின் தூதுவராயிற்றே. அவரையும் அவர் மூலம் தில்லி அதிகாரபீடத்தையும் திருப்திப்படுத்துவதுதானே கருணாநிதியின் நோக்கமும் கடமையும். எனவே உலகத் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதவி பேரத்தில் தமிழக உரிமைகள் பாழாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கட்டுரையாளர் : பழ . நெடுமாறன்
நன்றி : தினமணி
1979-ம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம், தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது.
பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீரைக் கொண்டு சென்று மின்உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக அணை பலவீனமாக இருப்பதாகக் கூக்குரல் எழுப்பியது.
இதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அணையைப் பார்வையிட்டு, பெரியாறு அணை பலமாக இருந்தாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படியும், தமிழக அரசு தனது செலவில் அணையை மேலும் பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படியும், இந்தப் பணிகள் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறினார். அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
அணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழகம் மேற்கொள்வதற்கு, கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டது. 1980-ல் தொடங்கிய இந்தப் பணிகள் 2001-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக நடைபெற்றன. மராமத்து வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்குக் கேரளம் சம்மதிக்கவில்லை. எனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 2001-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டபோது, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.
இக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும், 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டில் தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் கடத்துகிற தந்திரத்தைக் கேரளம் கையாண்டது. இதன் விளைவாக 5 ஆண்டுகள் கடந்தன. இது கேரளத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.
இறுதியாக 2006 பிப்ரவரி 27-ம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது. ஆனால் இத் தீர்ப்பை செயல்படுத்தவிடாத வகையில் கேரளம் 17-3-2006 அன்று சட்டமன்றத்தில் நதிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு கொடுத்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதன் பின்னர் கேரளம் புதிய தந்திரத்தைக் கையாண்டது. புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் இருந்தார். 2007 மே மாதத்துக்குப் பிறகு இத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொறுப்பேற்றார். கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது ஆய்வு நடத்துவதற்குக் கேரளம் அனுமதி பெற்றுவிட்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும்.
கேரளத்தின் புதிய சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என்பதை உணர்ந்த கேரளம், விசாரணையின் இறுதிக் கட்டத்தில் புதிய பிரச்னையை வேண்டுமென்றே எழுப்பியது. பெரியாறு அணைப் பிரச்னையில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை அரசியல் சட்ட ஆயம்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. வழக்கு நடந்த மூன்றாண்டு காலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பாத கேரளம் விசாரணையின் முடிவுக் கட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பியதற்கே காலம் கடத்தும் நோக்கமே காரணமாகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை இப்போது அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ, மாற்றவோ அதிகாரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, கேரளத்தின் முயற்சியைத் தமிழகம் முறியடித்திருக்க வேண்டும். கேரளம் பிறப்பித்த புதிய சட்டம் குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிறகு தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று அதன் விளைவாக அரசியல் சட்ட ஆயம் அமைப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது. மூன்றாண்டுகாலமாக நடைபெற்ற விசாரணையை முடக்கிப் போட்டதன் மூலம் கேரளம் நான்காவது வெற்றியை அடைந்துவிட்டது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் முதல் அனைவரிடமும் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நமது நியாயத்தை எடுத்துக்கூறி ஆதரவு தருவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுமட்டுமல்ல. நமது எதிர்ப்பை பிரதமரிடமும் மற்றவர்களிடமும் பதிவு செய்ய தமிழக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது.
கடந்த 16-9-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணையமைச்சரைக் கண்டித்துக் கூட்டம் என்பது, பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது. பிறகு அந்தக் கூட்டத்தை நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை.
காங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்துக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.
முல்லைப்பெரியாறு கேரள மாநிலத்தில் ஓடும் நதியாகும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ஓடும் நதியல்ல என்ற தவறான வாதத்தை கேரளம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும், தமிழகத்தின் சார்பில் சரியான முறையில் அது மறுக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உள்ளது. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாற்றில் ஓடும் நீரின் மொத்த அளவு 4,767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒருபகுதி நீர், அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்துக்குள் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர் ஆகும். அதாவது தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாற்றில் கலக்கும் நீரில் சுமார் 8-ல் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். எட்டில் ஏழு பகுதி நீர் கேரளத்துக்கு நம்மால் வழங்கப்படுகிறது. எனவே பெரியாறு பன்மாநில நதியே தவிர, கேரள நதி அல்ல. இந்த உண்மைகளை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உணர்த்துவதற்குத் தமிழக அரசு அடியோடு தவறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்கு மட்டுமே கருணாநிதி கவலைப்படுகிறாரே தவிர பெரியாறு அணை நீர் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து அவர் கவலைப்படவில்லை.
காவிரிப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகளை வற்புறுத்தி நிலைநாட்டுவதைவிட மத்திய அரசுக்கு நல்லபிள்ளையாக நடந்துகொள்வதிலேயே கருணாநிதி முழு கவனம் செலுத்தியதால் நாம் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம்.
1970-ம் ஆண்டில் காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகள் பயன்தராத நிலையில், நடுவர் மன்றம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தது. பெங்களூரில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் துணைத் தேர்தலில் இரு காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. எனவே அதில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இந்திரா காங்கிரஸýக்கு இருந்தது.
அப்போது பிரதமர் இந்திரா, முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் காவிரிப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அன்று கருணாநிதி அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதன் விளைவு பின்னால் நமக்குப் பெரும் இழப்புகளைத் தந்தது. 1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸýடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இந்த உறவு வழிவகுத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால் இதற்குப் பிறகு கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸின் சார்பில் முதலமைச்சரான தேவராஜ் அர்ஸ், காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் சட்டவிரோதமாகவும், தமிழகத்தின் சம்மதமின்றியும் அணைகளைக் கட்டத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைக்க முன்வந்தார். இடைக்காலத்தில் 19 ஆண்டுகளில் அவ்வளவு அணைகளையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. அதன் விளைவாக தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அறவே தடைப்பட்டுப்போனது.
நடுவர் மன்றத்தின் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி, நீதி தவறாதவர் என்ற பெயரெடுத்தவர். அவர் காவிரிப் பாசன பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். எனவே அவரது தீர்ப்பு தங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பதை உணர்ந்த கர்நாடக அரசியல்வாதிகள் அவரை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவ கௌடா, சித்ததோஷ் முகர்ஜி மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொய்யான புகாரைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது, சில கோயில்களில் அவர்களுக்குப் பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு விலையுயர்ந்த பரிசுகளை இவர்கள் பெற்றிருப்பதால் நடுநிலை தவறிவிட்டார்கள் என தேவ கௌடா குற்றம் சாட்டினார். பிறகு அவரே கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். அப்போதும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அந்த வேளையில் தேவ கௌடாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு எதிரான நிலையை எடுத்து வைக்கத் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முன்வரவில்லை.
காவிரிப் பிரச்னையில் தொடக்கம் முதல் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தேவ கௌடாவை மத்தியில் பிரதமராக்கவும் தி.மு.க. துணைநின்றது என்பதுதான் துரோகத்தின் உச்சகட்டமாகும். தேவ கௌடா பிரதமரான பிறகும்கூட நடுவர் மன்றத் தலைவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்களோ சித்ததோஷ் முகர்ஜி மீது சுமத்தப்பட்ட பழியைப் போக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் மனம் நொந்து தனது பதவியிலிருந்து விலகினார். கர்நாடகத்தின் நோக்கம் வெற்றிபெற்றது. இதற்குக் கருணாநிதி துணைநின்றார் என்பதுதான் வரலாற்றுச் சோகமாகும்.
காவிரிப் பிரச்னையில் துரோகம் தொடர்ந்தது. நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் வற்புறுத்தத் தவறிவிட்டது. 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தைப் பெற்று இறுதி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 30-5-97-ல் மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை தீட்டி மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியது. இந்த வரைவுத் திட்டத்தின்படி முழுமையான அதிகாரம் கொண்ட நதி நீர் ஆணையம் ஏற்படுத்துவதற்கான யோசனை கூறப்பட்டது. இதையும் கர்நாடகம் ஏற்காமல் வழக்கில் வாய்தா வாங்கியபடியே இருந்தது. இதற்கிடையில் தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். பிரதமர் வாஜ்பாய் 6-8-98 அன்று கூட்டிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் புதிய வரைவுத் திட்டம் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. இதில் காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தும் யோசனை கைவிடப்பட்டு பிரதமர் தலைமையிலான மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்ற யோசனை கூறப்பட்டிருந்தது. எந்த அதிகாரமில்லாத இந்தக் குழு அமைக்கும் யோசனையை கருணாநிதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார். இதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் தலைமையிலான முதலமைச்சர் குழுவும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் கூறியதற்காக அவரது யோசனையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டதுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தில்லியின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடுவதைக் கருணாநிதி மற்ற பிரச்னைகளிலும் தொடர்ந்தார். ஒகேனக்கல் பிரச்னை அவ்வாறுதான் ஆனது.
1998-ம் ஆண்டில் தமிழக கர்நாடக அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பெங்களூர் குடிநீர்த் திட்டத்துக்கும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் என்பதால் எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் தமிழகம் ஜப்பானிய அரசின் உதவியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ததால் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆயிற்று. இத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியபோது கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, ஒகேனக்கல்லுக்கே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த வேளையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நலன் கருதி, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க கருணாநிதி தயங்கவில்லை.
“”கர்நாடகத்தில் இன்று நடந்திடும் ஆளுநர் ஆட்சி முடிவுற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலரும் வரை அவசியம் கருதி பொறுத்திருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்ற அசையாத நம்பிக்கையோடு இப்போது தாற்காலிகமாக அமைதி காப்போம்’’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதைக் கண்டித்தன. மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் ஓர் உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்று சொன்னார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தைத் தள்ளி வைக்க கருணாநிதி முன்வந்தபோதிலும் காங்கிரஸ் அங்கு வெற்றிபெறவில்லை. பா.ஜ.க.தான் வெற்றிபெற்றது. ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதான் மிச்சம்.
தில்லியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கட்சிகளின் நலன்களைக் காக்க தமிழகத்தின் நலன்களைக் காவு கொடுக்க கருணாநிதி ஒருபோதும் தயங்கமாட்டார் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் உண்டு.
2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள், கட்சி வேறுபாடின்றி போராட்டங்களை நடத்தினார்கள். மக்களின் கொதிப்புணர்வைச் சமாளிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 15 நாள்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதியே முன்மொழிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் இந்திய அரசை மட்டுமல்ல, சிங்கள அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்தத் தீர்மானத்தை வரவேற்றனர். இலங்கையில் போர் முனையில் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் இவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியிலிருந்து விரைந்து வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சு, தனக்குத் திருப்தி அளித்ததாக கருணாநிதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியோ போர் நிறுத்தம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் கருணாநிதிக்கு திருப்தி அளித்த அம்சம் எது? அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு; இதில் நானாகத் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே மீண்டும் அனைத்துக்கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து எங்கள் முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வந்தவரோ தில்லி அதிகாரபீடத்தின் தூதுவராயிற்றே. அவரையும் அவர் மூலம் தில்லி அதிகாரபீடத்தையும் திருப்திப்படுத்துவதுதானே கருணாநிதியின் நோக்கமும் கடமையும். எனவே உலகத் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதவி பேரத்தில் தமிழக உரிமைகள் பாழாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கட்டுரையாளர் : பழ . நெடுமாறன்
நன்றி : தினமணி
Tuesday, November 17, 2009
உணவின் தேவையும் நீரில் சிக்கனமும்
நாளுக்கு நாள் உணவின் தேவை உயர்ந்து வருகிறது. உணவின் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை என்பதால் அரிசி விலையும் பருப்பு விலையும் ஆகாயத்தைத் தொடுவதாக உள்ளன. நல்லவேளையாக தமிழ்நாட்டுக்குத் தேவையான வடகிழக்குப் பருவமழை தாமதமானாலும் தொடங்கியுள்ளது.
நீடிக்குமா? வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரப்பிரதேசத்திலும் ஒரிசாவிலும் வெள்ளத்தை ஏற்படுத்துமா? போகப் போகத் தெரியும். இங்கு பெய்யாமல் அங்கு பெய்தாலும் சரி. ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அரிசி வருவது நின்றுவிடாது. தென்மேற்குப் பருவமழை பொய்த்தது பொய்த்ததுதான்.
அரிசி, கோதுமை இறக்குமதியுடன் பருப்பு இறக்குமதியும் தொடர்வது உண்மைதான். உணவுக்கும் நீருக்கும் பற்றாக்குறை இருப்பது உண்மை. இதற்கு நதிநீர் இணைப்பு சரியான தீர்வு என்று பலர் கருதுகிறார்கள். அப்படியே இணைத்தாலும், ஆந்திர அரசு நமக்குத் தேவையான நீரைத் தருமா? குறுக்கே குறுக்கே கர்நாடகம் அணைக்கட்டுகளைக் கட்டிக் காவிரிப் பிரச்னை நாற்பது ஆண்டுகளாக சந்தி சிரிக்கிறது. கிருஷ்ணர் வேஷம் போட்டு மக்களை மயக்கிய என்.டி.ஆர். சென்னைக்கு கிருஷ்ணா தீர்த்தம் தருவதாக ஒப்பந்தம் செய்தார்.
தமிழ்நாடு அரசு தந்த பணத்தைக் கொண்டு ஆந்திர மாவட்டங்களில் கால்வாய் வெட்டினார்கள். இன்று வெட்டிய கால்வாய்கள் தூர்ந்துவிட்டன. பெருமாள் கோயிலில் வழங்கும் துளசி தீர்த்தம்போல் வந்தது சிறுதுளிகள். இன்று பாலாறில் அணை ஒரு பிரச்னை. எதிர்க்கட்சிகள் சிலநாள் தூக்கிப் பிடித்தன. இலங்கைத் தமிழர் பிரச்னை வந்ததும் காவிரிப் பிரச்னை, பாலாறு பிரச்னைகளையெல்லாம் ஓசை இல்லாமல் அடங்கிவிட்டன.
இந்தியாவில் உள்ள நதிகளை எல்லாம் இணைப்பது இயலாத காரியம் என்று ராகுல் காந்தி கைவிரித்துவிட்டதும் ஒருவிதத்தில் நல்லது. நதி இணைப்பில் எச்சரிக்கை தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆமோதித்து விட்டார். ஒரு காவிரிப் பிரச்னையைத் தீர்த்து வைக்க முடியாத சூழ்நிலையில், இருபது மாநிலங்களிலும் இருபது காவிரிப் பிரச்னைகள் - ஒவ்வொரு நதியும் அடுத்த மாநிலத்துக்கு வரும்போது - யார் குடுமி யாரிடம் இருக்கும், என்று பாரதப் பிரதமர் யோசித்துத்தான் இப்படிச் சொல்லியிருப்பார். அதற்குப் பின் சுற்றுச்சூழல், வன அழிப்பு, புதிய வாழ்விடம் என்ற பிரச்னைகள் ஏழைகளை மிகவும் பாதிக்கலாம். அதிகம் தண்ணீர் என்றால் அதிகம் உணவு. அதிகம் உணவுக்கு நதிநீர் இணைப்பு என்று ஒரு சுலபமான செய்தியைச் சொல்லும் அரசியல்வாதிகளும், பெரும்பாலான பொதுமக்கள் கருத்தும் ஒன்றாயுள்ளன. வேறு மாற்று யோசனைகளை நாம் சிந்திக்க மறுப்பது ஏன்?
முதலில் நீரில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறோமா? விவசாயத் தேவைக்குப் பயன்பட்ட தண்ணீர் முக்கிய அணைகள் அல்லது நீர்நிலைகளிலிருந்து குடிநீருக்காகத் தொலைதூரங்களுக்குக் கொண்டு வரப்படுகிறது. இடையில் எத்தனை உடைப்புகள் என்ற கணக்கு ஒருவரைத் தலை சுற்ற வைக்கும். பல இடங்களில் புதிய குளங்களே தேவையில்லாத பாழ்நிலத்தில் உருவாகியுள்ளது.
தோராயமாக இப்படி உடைப்பு எடுத்து ஓடும் தண்ணீரை ஸ்ப்ரிங்க்ளர் அல்லது "ரெயின்கன்'
மூலம் 2 லட்சம் டன் மக்சாச்சோளம் அல்லது 2 லட்சம் டன் கேழ்வரகு அல்லது 1.5 லட்சம் டன் வெள்ளைச்சோளம் உற்பத்தி செய்யலாம். கோ - 3 தீவனப்புல் சாகுபடி செய்தால் 10,000 பசுமாடுகள் (கலப்பினம்) மூலம் 50,000 டன் பால் உற்பத்தி செய்யலாம். பொது இடங்களில் குழாய் இருக்கும்; டேப் இருக்காது. டேப் இல்லாமல் தினம் வழிந்தோடும் தண்ணீரைக் கொண்டு பார் அமைத்துத் துவரையோ, உளுந்தோ போட்டால் ஒவ்வொரு வழிந்தோடும் குழாய்களைச் சுற்றியுள்ள இடத்திலும் 10 மூட்டை விளைச்சல் எடுக்கலாம்.
மழைநீர் சேமிப்பு என்பது கருத்தரங்கிலும் மேடைப் பேச்சுகளிலும் உள்ள வேகம் செயலில் இல்லை. இந்தியாவின் சராசரி மழை அளவு 115 செ.மீ. தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 90 செ.மீ. உலக சராசரி மழை அளவு 70 செ.மீ. ஆகவே இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டின் மழை அளவு உலக சராசரியைவிட அதிகமே.
மழைப்பொழிவு அதிகமுள்ள பல மாநிலங்களில் நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் - காவிரி டெல்டாப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 1000 அடிக்குக் கீழே தண்ணீர் சென்றுவிட்டது. பல மாநிலங்களில் இதே பிரச்னை.
நீர்ச்சிக்கனப் பயிர் சாகுபடிக்கு திட்டமிடப்படுகிறது. இதில் மிகவும் வியப்பான விஷயம், ராலிகன் சித்தி, ஹிவாரே பாசார் போன்ற வறட்சியான மகாராஷ்டிர மாநிலப் பகுதியில் மழை அளவு 46 செ.மீ. தான்.
உலக சராசரி - இந்திய சராசரியைவிடக் குறைவான தக்காண பீடபூமிப் பிரதேசம் இப்பகுதிகளில் இப்போதெல்லாம் 30, 40 அடியில் ஊற்று இருந்துகொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் அண்ணா ஹசாரே வழிகாட்டி, மக்கள் சேர்ந்து சிறப்பாக மழைநீரைச் சேமிப்பதுவே. இதுபோல் ஒவ்வொரு கிராமங்களிலும் ராலிகன் சித்தியின் உதாரணம் பின்பற்றப்படுமானால் நதிநீர் இணைப்பு என்ற பேச்சுக்கே அவசியமில்லை. கிடைக்கும் மழைநீரில் ஐந்தில் ஒரு பங்கைத்தான் பயன்படுத்துகிறோம். 50 சதவீதம் பயன்படுத்தத் திட்டமிட்டாலே போதும். பத்தில் 1 பங்கு இயல்பாகவே பூமிக்கடியில் செல்கிறது. பத்தில் 1 பங்கு ஏரி, குளங்களுக்கும் செல்கிறது. மீதி 8 பங்கு - பெய்யும் மழையில் 80 சதவீதம் பாழாகிறது.
ராலிகான் சித்தியிலும் ஹிவாரே பாசாரிலும் நிகழ்ந்தது என்ன? வனத்துறையின் துணையுடன் கிராமத்தின் மேற்கட்டில் இருந்த மலைகளில் ஏராளமாக மரங்களை நட்டார்கள். வனம் உருவானது. ஆங்காங்கே நீண்ட வரப்புகளை வெட்டினார்கள். பல்வேறு நீர்த்தடுப்பு - கசிவுநீர்க் குட்டைகள் - குறுக்கணைகள் கட்டினார்கள். தீவனப்புல், வெங்காயம் சாகுபடி செய்தனர். கிராமத்தைவிட்டு மும்பைக்குப் பிழைக்கச் சென்ற விவசாயிகள் கிராமத்துக்கு வந்து லட்சக்கணக்கில் சம்பாதித்தனர். சிறப்பாகக் கால்நடை - கறவைப்பசு வளர்த்தார்கள். "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்ற கண்ணதாசன் பாட்டுக்கு இலக்கணம் வகுத்தனர், வறட்சிப்பகுதி விவசாயிகள்.
உணவுக்குத் தேவை உள்ளது, சரி. ஆனால் ரேஷனில் வழங்கப்படும் அரிசி தேவையில்லாமல் வீணாவது ஒருபுறம். அரிசிச் சோறு உண்டு பழக்கமில்லாத மலைவாழ் மக்கள் ஒரு ரூபாய் அரிசியால் கேப்பை, வரகு, பொட்டுக்கம்பு போன்றவற்றைச் சொந்த உணவுத் தேவைக்கு என்று சாகுபடி செய்த வழக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். அரிசி உண்ணும் வழக்கம் இல்லாதவர்களிடம் அரிசி நுகர்வைத் திணிப்பது சரியா? கொஞ்சநஞ்சம் எஞ்சியுள்ள புஞ்சை தானிய சாகுபடியையும் அழித்துவிட்டு நீர்ச்செலவுள்ள அரிசி போன்ற உணவு சாகுபடியை ஊக்குவிப்பதும் சரிதானா?
1 டன் அரிசி உற்பத்தியாவதற்குச் செலவாகும் நீரிலிருந்து 10 டன் புஞ்சை தானியங்களையோ 10 டன் பருப்பு வகை தானியங்களையோ உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய ஸ்ப்ரிங்க்ளர் அல்லது ரெயின்கன் அமைத்துக் கொள்ளலாம். நீர்ச்சிக்கனம் பற்றி மீண்டும் விவாதிக்கும் முன்பு பொது வினியோக அரிசியானாலும், அதிக விலை கொடுத்து வெளி அங்காடி அரிசியானாலும், வேறு பயனாவதும் வீணாவதும் தொடர்கதை. பொதுவினியோக அரிசி வெளி அங்காடிக்குக் கடத்தப்படும் கதை ஒருபுறம். 1 ரூபாய் அரிசியைப் பயனீட்டாளர்களே, 5 ரூபாய்க்கு விற்பது ஒருபுறம். தமிழ்நாட்டு கிராமங்களில் 1 ரூபாய் ரேஷன் அரிசி மாவாக அரைக்கப்பட்டுக் கறவைப் பசுக்களுக்கு அடர்தீவனமாக வழங்கப்படுகிறது. ஏனெனில் புஞ்சை தானியங்களைவிட அரிசி மலிவாக உள்ளது. மனித உணவாக புஞ்சை தானியங்கள் பயன்படுவதற்கு அரிசி நுகர்வு குறுக்கே நின்றது சரி. இப்போது கால்நடை உணவாகவும் அரிசி மாறிவிட்டதால், புஞ்சை தானிய சாகுபடி எவ்வாறு ஊக்கம் பெறும் என்று புரியவில்லை.
""ஒருபக்கம் உண்ணச் சோறில்லை'' என்று புலம்பல். எனினும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் இன்று ரேஷன் அரிசி சாப்பிட்டால் வயிறு வலிக்கிறது என்று காரணம் சொல்லி வெளி அங்காடியில் நல்ல விலை கொடுத்து நல்ல அரிசி வாங்கி உண்பது இல்லையா? குப்பையில் நாள்தோறும் கொட்டும் அரிசிச்சோறை விளைவிக்கத் தமிழ்நாட்டுக்கு கங்கையே வந்தாலும் பத்தாது.
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக முனைவர்கள் அரிசியைச் சற்று மறந்துவிட்டு வேறு உணவு தானியங்களின் உற்பத்தியை உயர்த்துவதில் கவனம் செலுத்தக்கூடாதா? 1964 - 68 காலகட்டத்தில் பொன்னையா என்பவர், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது, புஞ்சை தானியப் பயிர் சாகுபடிக்கும், பருப்புவகைப் பயிர் சாகுபடிக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கித் தேர்வு விதைகளை விநியோகம் செய்யும் திட்டம் அவரால் செயலானது. தமிழ்நாட்டில் விளையக்கூடிய சம்பா கோதுமைக்கும் அன்றே சான்று விதை உற்பத்தித் திட்டம் வகுத்தவர். இன்று பருப்பு விலைகள் எல்லாம் கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 என்று உயர்ந்துள்ளன. பருவகாலத்துக்கு முன்பே சரியான நேரத்தில் உணவு தானியம், பருப்பு வகை விதை விநியோகம் செய்யாமல், இம்மாநில அரசின் வேளாண்மைத்துறை முனைவர்கள் பி.ட்டி கத்தரிக்காய் விற்பனைக்கு வந்துவிட்டால் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று எண்ணும் காரணம் என்னவென்று புரியவில்லை. உண்ட விஷம் போதாதா? மரபணு மாற்ற மலட்டு விதைகளைக் கொண்டு வந்து பாரம்பரிய விதைகளையும் வீரிய விதைகளையும் அழித்துவிட நினைக்கும் மடமையை என்னென்பது? காலநிலை மாற்றத்தினால் பெய்யும் மழை ஒரே சீராக இல்லை. ஒரே இடத்தில் மழைகொட்டி, பருவமழை பரவலாகப் பெய்யாமல், இந்திய மாநிலங்களில் நிலத்தடி நீர் எட்டாக்கனியாகி வருவதால், மேல்மட்ட ஊற்றுக்களை மீண்டும் உயிர் பெறச் செய்து, நீர்ச்சிக்கன உணவு தானியப் பயிர்களை ஊக்கப்படுத்த வேண்டிய அவசரத்தை வேளாண்மை அமைச்சரகம் உணர்ந்து உரிய நடவடிக்கை எடுத்தால், நாடு நன்மை பெறும்.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி
நீடிக்குமா? வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரப்பிரதேசத்திலும் ஒரிசாவிலும் வெள்ளத்தை ஏற்படுத்துமா? போகப் போகத் தெரியும். இங்கு பெய்யாமல் அங்கு பெய்தாலும் சரி. ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அரிசி வருவது நின்றுவிடாது. தென்மேற்குப் பருவமழை பொய்த்தது பொய்த்ததுதான்.
அரிசி, கோதுமை இறக்குமதியுடன் பருப்பு இறக்குமதியும் தொடர்வது உண்மைதான். உணவுக்கும் நீருக்கும் பற்றாக்குறை இருப்பது உண்மை. இதற்கு நதிநீர் இணைப்பு சரியான தீர்வு என்று பலர் கருதுகிறார்கள். அப்படியே இணைத்தாலும், ஆந்திர அரசு நமக்குத் தேவையான நீரைத் தருமா? குறுக்கே குறுக்கே கர்நாடகம் அணைக்கட்டுகளைக் கட்டிக் காவிரிப் பிரச்னை நாற்பது ஆண்டுகளாக சந்தி சிரிக்கிறது. கிருஷ்ணர் வேஷம் போட்டு மக்களை மயக்கிய என்.டி.ஆர். சென்னைக்கு கிருஷ்ணா தீர்த்தம் தருவதாக ஒப்பந்தம் செய்தார்.
தமிழ்நாடு அரசு தந்த பணத்தைக் கொண்டு ஆந்திர மாவட்டங்களில் கால்வாய் வெட்டினார்கள். இன்று வெட்டிய கால்வாய்கள் தூர்ந்துவிட்டன. பெருமாள் கோயிலில் வழங்கும் துளசி தீர்த்தம்போல் வந்தது சிறுதுளிகள். இன்று பாலாறில் அணை ஒரு பிரச்னை. எதிர்க்கட்சிகள் சிலநாள் தூக்கிப் பிடித்தன. இலங்கைத் தமிழர் பிரச்னை வந்ததும் காவிரிப் பிரச்னை, பாலாறு பிரச்னைகளையெல்லாம் ஓசை இல்லாமல் அடங்கிவிட்டன.
இந்தியாவில் உள்ள நதிகளை எல்லாம் இணைப்பது இயலாத காரியம் என்று ராகுல் காந்தி கைவிரித்துவிட்டதும் ஒருவிதத்தில் நல்லது. நதி இணைப்பில் எச்சரிக்கை தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆமோதித்து விட்டார். ஒரு காவிரிப் பிரச்னையைத் தீர்த்து வைக்க முடியாத சூழ்நிலையில், இருபது மாநிலங்களிலும் இருபது காவிரிப் பிரச்னைகள் - ஒவ்வொரு நதியும் அடுத்த மாநிலத்துக்கு வரும்போது - யார் குடுமி யாரிடம் இருக்கும், என்று பாரதப் பிரதமர் யோசித்துத்தான் இப்படிச் சொல்லியிருப்பார். அதற்குப் பின் சுற்றுச்சூழல், வன அழிப்பு, புதிய வாழ்விடம் என்ற பிரச்னைகள் ஏழைகளை மிகவும் பாதிக்கலாம். அதிகம் தண்ணீர் என்றால் அதிகம் உணவு. அதிகம் உணவுக்கு நதிநீர் இணைப்பு என்று ஒரு சுலபமான செய்தியைச் சொல்லும் அரசியல்வாதிகளும், பெரும்பாலான பொதுமக்கள் கருத்தும் ஒன்றாயுள்ளன. வேறு மாற்று யோசனைகளை நாம் சிந்திக்க மறுப்பது ஏன்?
முதலில் நீரில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறோமா? விவசாயத் தேவைக்குப் பயன்பட்ட தண்ணீர் முக்கிய அணைகள் அல்லது நீர்நிலைகளிலிருந்து குடிநீருக்காகத் தொலைதூரங்களுக்குக் கொண்டு வரப்படுகிறது. இடையில் எத்தனை உடைப்புகள் என்ற கணக்கு ஒருவரைத் தலை சுற்ற வைக்கும். பல இடங்களில் புதிய குளங்களே தேவையில்லாத பாழ்நிலத்தில் உருவாகியுள்ளது.
தோராயமாக இப்படி உடைப்பு எடுத்து ஓடும் தண்ணீரை ஸ்ப்ரிங்க்ளர் அல்லது "ரெயின்கன்'
மூலம் 2 லட்சம் டன் மக்சாச்சோளம் அல்லது 2 லட்சம் டன் கேழ்வரகு அல்லது 1.5 லட்சம் டன் வெள்ளைச்சோளம் உற்பத்தி செய்யலாம். கோ - 3 தீவனப்புல் சாகுபடி செய்தால் 10,000 பசுமாடுகள் (கலப்பினம்) மூலம் 50,000 டன் பால் உற்பத்தி செய்யலாம். பொது இடங்களில் குழாய் இருக்கும்; டேப் இருக்காது. டேப் இல்லாமல் தினம் வழிந்தோடும் தண்ணீரைக் கொண்டு பார் அமைத்துத் துவரையோ, உளுந்தோ போட்டால் ஒவ்வொரு வழிந்தோடும் குழாய்களைச் சுற்றியுள்ள இடத்திலும் 10 மூட்டை விளைச்சல் எடுக்கலாம்.
மழைநீர் சேமிப்பு என்பது கருத்தரங்கிலும் மேடைப் பேச்சுகளிலும் உள்ள வேகம் செயலில் இல்லை. இந்தியாவின் சராசரி மழை அளவு 115 செ.மீ. தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 90 செ.மீ. உலக சராசரி மழை அளவு 70 செ.மீ. ஆகவே இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டின் மழை அளவு உலக சராசரியைவிட அதிகமே.
மழைப்பொழிவு அதிகமுள்ள பல மாநிலங்களில் நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் - காவிரி டெல்டாப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 1000 அடிக்குக் கீழே தண்ணீர் சென்றுவிட்டது. பல மாநிலங்களில் இதே பிரச்னை.
நீர்ச்சிக்கனப் பயிர் சாகுபடிக்கு திட்டமிடப்படுகிறது. இதில் மிகவும் வியப்பான விஷயம், ராலிகன் சித்தி, ஹிவாரே பாசார் போன்ற வறட்சியான மகாராஷ்டிர மாநிலப் பகுதியில் மழை அளவு 46 செ.மீ. தான்.
உலக சராசரி - இந்திய சராசரியைவிடக் குறைவான தக்காண பீடபூமிப் பிரதேசம் இப்பகுதிகளில் இப்போதெல்லாம் 30, 40 அடியில் ஊற்று இருந்துகொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம் அண்ணா ஹசாரே வழிகாட்டி, மக்கள் சேர்ந்து சிறப்பாக மழைநீரைச் சேமிப்பதுவே. இதுபோல் ஒவ்வொரு கிராமங்களிலும் ராலிகன் சித்தியின் உதாரணம் பின்பற்றப்படுமானால் நதிநீர் இணைப்பு என்ற பேச்சுக்கே அவசியமில்லை. கிடைக்கும் மழைநீரில் ஐந்தில் ஒரு பங்கைத்தான் பயன்படுத்துகிறோம். 50 சதவீதம் பயன்படுத்தத் திட்டமிட்டாலே போதும். பத்தில் 1 பங்கு இயல்பாகவே பூமிக்கடியில் செல்கிறது. பத்தில் 1 பங்கு ஏரி, குளங்களுக்கும் செல்கிறது. மீதி 8 பங்கு - பெய்யும் மழையில் 80 சதவீதம் பாழாகிறது.
ராலிகான் சித்தியிலும் ஹிவாரே பாசாரிலும் நிகழ்ந்தது என்ன? வனத்துறையின் துணையுடன் கிராமத்தின் மேற்கட்டில் இருந்த மலைகளில் ஏராளமாக மரங்களை நட்டார்கள். வனம் உருவானது. ஆங்காங்கே நீண்ட வரப்புகளை வெட்டினார்கள். பல்வேறு நீர்த்தடுப்பு - கசிவுநீர்க் குட்டைகள் - குறுக்கணைகள் கட்டினார்கள். தீவனப்புல், வெங்காயம் சாகுபடி செய்தனர். கிராமத்தைவிட்டு மும்பைக்குப் பிழைக்கச் சென்ற விவசாயிகள் கிராமத்துக்கு வந்து லட்சக்கணக்கில் சம்பாதித்தனர். சிறப்பாகக் கால்நடை - கறவைப்பசு வளர்த்தார்கள். "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்ற கண்ணதாசன் பாட்டுக்கு இலக்கணம் வகுத்தனர், வறட்சிப்பகுதி விவசாயிகள்.
உணவுக்குத் தேவை உள்ளது, சரி. ஆனால் ரேஷனில் வழங்கப்படும் அரிசி தேவையில்லாமல் வீணாவது ஒருபுறம். அரிசிச் சோறு உண்டு பழக்கமில்லாத மலைவாழ் மக்கள் ஒரு ரூபாய் அரிசியால் கேப்பை, வரகு, பொட்டுக்கம்பு போன்றவற்றைச் சொந்த உணவுத் தேவைக்கு என்று சாகுபடி செய்த வழக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். அரிசி உண்ணும் வழக்கம் இல்லாதவர்களிடம் அரிசி நுகர்வைத் திணிப்பது சரியா? கொஞ்சநஞ்சம் எஞ்சியுள்ள புஞ்சை தானிய சாகுபடியையும் அழித்துவிட்டு நீர்ச்செலவுள்ள அரிசி போன்ற உணவு சாகுபடியை ஊக்குவிப்பதும் சரிதானா?
1 டன் அரிசி உற்பத்தியாவதற்குச் செலவாகும் நீரிலிருந்து 10 டன் புஞ்சை தானியங்களையோ 10 டன் பருப்பு வகை தானியங்களையோ உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய ஸ்ப்ரிங்க்ளர் அல்லது ரெயின்கன் அமைத்துக் கொள்ளலாம். நீர்ச்சிக்கனம் பற்றி மீண்டும் விவாதிக்கும் முன்பு பொது வினியோக அரிசியானாலும், அதிக விலை கொடுத்து வெளி அங்காடி அரிசியானாலும், வேறு பயனாவதும் வீணாவதும் தொடர்கதை. பொதுவினியோக அரிசி வெளி அங்காடிக்குக் கடத்தப்படும் கதை ஒருபுறம். 1 ரூபாய் அரிசியைப் பயனீட்டாளர்களே, 5 ரூபாய்க்கு விற்பது ஒருபுறம். தமிழ்நாட்டு கிராமங்களில் 1 ரூபாய் ரேஷன் அரிசி மாவாக அரைக்கப்பட்டுக் கறவைப் பசுக்களுக்கு அடர்தீவனமாக வழங்கப்படுகிறது. ஏனெனில் புஞ்சை தானியங்களைவிட அரிசி மலிவாக உள்ளது. மனித உணவாக புஞ்சை தானியங்கள் பயன்படுவதற்கு அரிசி நுகர்வு குறுக்கே நின்றது சரி. இப்போது கால்நடை உணவாகவும் அரிசி மாறிவிட்டதால், புஞ்சை தானிய சாகுபடி எவ்வாறு ஊக்கம் பெறும் என்று புரியவில்லை.
""ஒருபக்கம் உண்ணச் சோறில்லை'' என்று புலம்பல். எனினும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் இன்று ரேஷன் அரிசி சாப்பிட்டால் வயிறு வலிக்கிறது என்று காரணம் சொல்லி வெளி அங்காடியில் நல்ல விலை கொடுத்து நல்ல அரிசி வாங்கி உண்பது இல்லையா? குப்பையில் நாள்தோறும் கொட்டும் அரிசிச்சோறை விளைவிக்கத் தமிழ்நாட்டுக்கு கங்கையே வந்தாலும் பத்தாது.
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக முனைவர்கள் அரிசியைச் சற்று மறந்துவிட்டு வேறு உணவு தானியங்களின் உற்பத்தியை உயர்த்துவதில் கவனம் செலுத்தக்கூடாதா? 1964 - 68 காலகட்டத்தில் பொன்னையா என்பவர், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது, புஞ்சை தானியப் பயிர் சாகுபடிக்கும், பருப்புவகைப் பயிர் சாகுபடிக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கித் தேர்வு விதைகளை விநியோகம் செய்யும் திட்டம் அவரால் செயலானது. தமிழ்நாட்டில் விளையக்கூடிய சம்பா கோதுமைக்கும் அன்றே சான்று விதை உற்பத்தித் திட்டம் வகுத்தவர். இன்று பருப்பு விலைகள் எல்லாம் கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 என்று உயர்ந்துள்ளன. பருவகாலத்துக்கு முன்பே சரியான நேரத்தில் உணவு தானியம், பருப்பு வகை விதை விநியோகம் செய்யாமல், இம்மாநில அரசின் வேளாண்மைத்துறை முனைவர்கள் பி.ட்டி கத்தரிக்காய் விற்பனைக்கு வந்துவிட்டால் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று எண்ணும் காரணம் என்னவென்று புரியவில்லை. உண்ட விஷம் போதாதா? மரபணு மாற்ற மலட்டு விதைகளைக் கொண்டு வந்து பாரம்பரிய விதைகளையும் வீரிய விதைகளையும் அழித்துவிட நினைக்கும் மடமையை என்னென்பது? காலநிலை மாற்றத்தினால் பெய்யும் மழை ஒரே சீராக இல்லை. ஒரே இடத்தில் மழைகொட்டி, பருவமழை பரவலாகப் பெய்யாமல், இந்திய மாநிலங்களில் நிலத்தடி நீர் எட்டாக்கனியாகி வருவதால், மேல்மட்ட ஊற்றுக்களை மீண்டும் உயிர் பெறச் செய்து, நீர்ச்சிக்கன உணவு தானியப் பயிர்களை ஊக்கப்படுத்த வேண்டிய அவசரத்தை வேளாண்மை அமைச்சரகம் உணர்ந்து உரிய நடவடிக்கை எடுத்தால், நாடு நன்மை பெறும்.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி
Labels:
கட்டுரை,
சுற்றுச்சூழல்,
நீர்,
விவசாயம்
Subscribe to:
Posts (Atom)
