Showing posts with label வட்டி. Show all posts
Showing posts with label வட்டி. Show all posts

Monday, June 6, 2011

வங்கி வைப்பு நிதி முதலீட்டிற்கு கூடுதல் ஆதாயம்

வங்கி, அஞ்சலக சேமிப்பு, பங்குச் சந்தை, பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் என, பலதரப்பட்ட முதலீட்டு இனங்களில், பாதுகாப்பான, நியாயமான வருவாய்க்கு உகந்த முதலீடு எது?


இந்த கேள்விக்கு, வங்கி, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என, ”லபமாக விடை கூறி விடலாம். தற்போதைய நிலையில், முதலீடு மோசம் போகாமல், அதே சமயம், பணவீக்கத்தை ஓரளவு எதிர்கொள்ளும் வகையில், வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன.

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் குறைந்தபட்ச வட்டி, 3.5 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி, 9 சதவீதமாகவும் உள்ளது. இவற்றை விட அதிக வட்டியை, வங்கிகள் அவற்றின் பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்குகின்றன.வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, 3.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இது, வங்கியில் சேமிப்பு கணக்கை கொண்டுள்ள வாடிக்கையாளருக்கு, கூடுதல் வருவாயை வழங்கும் எனலாம்.

மேலும், அன்றாட இருப்பு நிலைக்கேற்ப கணக்கிடப்படும் வட்டியை, மாதா மாதமோ அல்லது காலாண்டிற்கு ஒருமுறையோ, வழங்கும் நடைமுறையை அமல்படுத்துவது குறித்தும், ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. இதனால், வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம், சராசரியாக 4.13 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.எனினும், இந்த வட்டி விகிதத்தை விட, கூடுதல் வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, 'பிக்சட் டிபாசிட்' எனப்படும், குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன. இத்திட்டத்தில், குறைந்தபட்சம் ஓராண்டு முதலீட்டிற்கு, அதிகபட்சமாக 10.25 சதவீத வட்டியை, வங்கிகள் வழங்குகின்றன.

மேலும், மூத்த குடிமக்களுக்கு, கூடுதலாக இதைவிட வட்டி வழங்கப்படுகிறது.இந்த வகையில், குறித்த கால வைப்பு நிதிக்கு அதிக வட்டி வழங்குவதில், தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டு வைப்பு கணக்கிற்கு, 10.25 சதவீத வட்டி வழங்குகிறது. அதாவது, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சி காலத்தில் 11 ஆயிரத்து 65 ரூபாய் கிடைக்கும். கரூர் வைஸ்யா வங்கி, ஓராண்டு கால வைப்புத் திட்டத்திற்கு 10 சதவீத வட்டி வழங்கி, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கர்நாடகா பேங்க், சவுத் இந்தியன் பேங்க் ஆகியவை, வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஓராண்டு முதலீட்டிற்கு, 9.75 சதவீத வட்டியை வழங்குகின்றன. இந்த வரிசையில், பெடரல் பேங்க் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டிற்கான குறித்த கால வைப்புத் தொகைக்கு, 9.60 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதன்படி இவ்வங்கியில், 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சிக் காலத்தில் 10 ஆயிரத்து 995 ரூபாய் கிடைக்கும்.

பெரும்பாலான மூத்த குடிமக்களின் முதல் தேர்வாக, வங்கிகளின் டிபாசிட் திட்டங்கள் உள்ளன. அவர்கள் ஓய்வூதியம், பணிக்கொடை, காப்பீடு ஆகியவற்றின் மூலம் பெறும் வருவாயை, வங்கிகளின் குறித்த கால வைப்புக் கணக்கில் சேமிக்கின்றனர். அவர்களைக் கவர்வதற்காக, வங்கிகள், இதர முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வட்டியை விட, கூடுதல் வட்டியை வழங்குகின்றன.

இவ்வகையில், மூத்த குடிமக்களின் ஓராண்டு கால வைப்புத் தொகைக்கு, கரூர் வைஸ்யா பேங்க் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் ஆகியவை, அதிகபட்சமாக 10.5 சதவீத வட்டியை வழங்குகின்றன. இதன்படி, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வோருக்கு, முதிர்ச்சிக் காலத்தில் 11 ஆயிரத்து 92 ரூபாய் கிடைக்கும். இதேபோல், ஆக்சிஸ் பேங்க், கர்நாடகா பேங்க் ஆகியவையும், மூத்த குடிமக்களின் ஓராண்டு வைப்புத் தொகைக்கு, 10.25 சதவீத வட்டியை வழங்குகின்றன. பெடரல் பேங்க் 10.1 சதவீத வட்டியை வழங்கி வருகிறது.

பங்குச் சந்தை, பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தால், இதை விட கூடுதல் வருவாய் பார்க்க முடியும் என்றபோதிலும், அவற்றில் இடர்பாடுகள் அதிகம் உள்ளன. தங்கத்தில் செய்யும் முதலீடு, லாபகரமானதாக கருதப்படுகிறது. கடந்த ஓராண்டில் தங்கம் விலை, 19.5 சதவீதம் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை, 92 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை, 19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களின் சராசரி வருவாய், 8.8 சதவீதமும், கடன்பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு மேற்கொள்ளும் பேலன்ஸ்டு பண்டு திட்டங்கள், 8.7 சதவீத வருவாயையும் அளித்துள்ளன. 'இன்கம் பண்டு' மீதான முதலீட்டின் சராசரி வருவாய், 5 சதவீதமாகவும், 5 ஆண்டு கால முதலீட்டின் சராசரி வருவாய், 6.5 சதவீதமாகவும் உள்ளது.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முன்னணியில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக் கூடிய,'லார்ஜ் கேப்' பரஸ்பர நிதி திட்டங்களின் 5 ஆண்டு கால சராசரி வருவாய், 11 சதவீதமாக உள்ளது.

இத்திட்டங்கள் வாயிலான வருவாயை ஒப்பிடும் போது , வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதிக்கான வட்டி வருவாய் குறைவுதான். எனினும், நியாயமான வட்டி வருவாயில், நிம்மதியாக காலம் கழிக்க விரும்புவோரின் விருப்பத் தேர்வாக, வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்கள் திகழ்வதில் வியப்பேதுமில்லை.

அதிக வருவாய்:வங்கிகளின், குறித்த கால வைப்பு நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மீது, கடன் பெறும் வசதியும் உள்ளது. இக்கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு, வங்கி மாறுபடுகிறது. அவசர தேவை அல்லது பிற நிதியினங்களில், முதலீடு செய்து கூடுதல் வருவாய் பெற விரும்பும் முதலீட்டாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன்படி, தங்களின் வைப்பு நிதி டிபாசிட்டிலிருந்து பெறும் கடனுக்கு, கூடுதலாக, 2 அல்லது 3 சதவீத வட்டியை செலுத்த வேண்டும். வங்கிகள், குறித்த கால வைப்பு நிதியில், 30 சதவீத அளவிற்கு கடன் வழங்குகின்றன.

- ஏ.கே.விஜய்தேவ்
நன்றி : தினமலர்   


Monday, August 16, 2010

இந்தியன் வங்கியின் புதிய திட்டம் அறிமுகம்


இந்தியன் வங்கி, குறுகிய கால, 'மெச்சூரிட்டி' கொண்ட நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கான நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில், 'இன்டபுள்' மற்றும் 'இன்டபுள் சீனியர்' என்ற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன் வங்கி. அதன்படி, 'இன்டபுள்' திட்டத்தில் வைப்பு நிதி செலுத்தும் பொதுமக்களுக்கு அத்தொகை 108 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மூத்த குடிமக்களுக்கான 'இன்டபுள் சீனியர்' திட்டத்தில், வைப்பு நிதி 100 மாதங்களில் இரண்டு மடங்கு ஆகும். மற்ற சாதாரண வைப்பு நிதி திட்டங்களுக்கு பொருந்தக் கூடிய அனைத்து விதிகளும் இத்திட்டத்துக்கும் பொருந்தும். அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட 'மெச்சூரிட்டி' காலகட்டத்தில் செலுத்தப்படும் ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புத் தொகைக்கு, 7.25 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதம் ஆக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்


Wednesday, January 6, 2010

வீட்டு கடனுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்தது ஆக்சிஸ் வங்கி

இந்தியாவின் மூன்றாவது ‌பெரிய வங்கியான, ஆக்சிஸ் வங்கி வீட்டு கடனுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் 31ம் தேதிக்குள் வாங்கும் கடனுக்கு மட்டும், எவ்வளவு ரூபாய் கடன் வாங்கினாலும், முதல் இரண்டு வருடங்களுக்கு 8.25 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் வசூலிக்கப் படும். அதற்கு பிறகு மாறும் வட்டி விகிதம் விதிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வீட்டு கடனுக்கான வட்டி, இரண்டு வருடங்களுக்கு பிறகு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் எனப்படும் வட்டி விகித்தின் அடிப்படியில் வட்டி விதிக்கப்படும்.
இதில் ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் விட 3.5 சதவீதம் குறைவாக வசூலிக்கப்படும். ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான கடனுக்கு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் விட 3 சதவீதத்திற்கும் குறைவாக வட்டி வசூலிக்கப்படும் என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Tuesday, December 22, 2009

விலைவாசியை கட்டுப்படுத்த வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

'உணவுப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் முதல் வாரத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவாக, 20 சதவீதத்தை அடைந்தது.

இதை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் கூறியதாவது: இந்த மாதம், உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை என்றால், பின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, வட்டி வீதத்தை அதிகரிப்பது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்க வேண்டிய குறிப்பிட்ட ரொக்க கையிருப்பு வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.


இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், கடந்த 18ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசி உள்ளார். இதனால், நிதிக் கொள்கைகள் கடுமையாக்கப்படலாம் என்ற ஊகங்களும் நிலவுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி, அடுத்த நிதிக் கொள்கையை, அடுத்த மாதம் 29ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல், அரசு செயலற்று இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இவ்விவகாரத்தால், பார்லிமென்ட் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. அதே சமயம், முன்பு ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த பிமல் ஜலான் கருத்து தெரிவிக்கையில், 'அதிகப் பணப்புழக்கத்தை உறிஞ்சி எடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால், விலைவாசி குறையும்' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவும், வியட்னாமும், வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து பணவீக்கத்தை சமீபத்தில் குறைத்திருப்பதையும் நிதித்துறையும் ரிசர்வ் வங்கியும் கவனித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Sunday, November 15, 2009

வைப்புத் தொகை வட்டி வீதம் குறைகிறது

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் வைப்புத் தொகைக்கான வட்டி வீதம் குறைந்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் நிரந்தர வைப்புத் தொகை குறித்து யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
அரசுத் துறை வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கு (பிக்சட் டிபாசிட்) அதிகபட்சமாக 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டு வந்தது. சமீப காலமாக அந்த 7 சதவீதம் கூட கொஞ்சம் குறையத் தொடங்கியது.

ஆனால், இப்போது இரண்டு அரசுத் துறை வங்கிகள் தங்களின், 180-364 நாட்கள் மற்றும் ஒரு ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டு காலகட்ட நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தில் 0.25 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் வரை குறைத்துவிட்டன. இதைத் தொடர்ந்து, தனியார் வங்கிகளும் குறிப்பிட்ட சில நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை குறைக்கத் தொடங்கி விட்டன. ஆனால், மூன்று ஆண்டு மற்றும் அதற்கு அதிகமான குறுகிய கால வைப்புத் தொகைக்கான வட்டி வீதம், 7 சதவீதமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
நன்றி : தினமலர்

Tuesday, October 13, 2009

வீட்டுக் கடன்களுக்கு இனி 'ப்ளோட்டிங்' வட்டி வீதம் தான்

இதுவரை வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்பட்ட 'பிக்சட்' வட்டிவீதம் போய் இனி, 'ப்ளோட்டிங்' வட்டி வீதம் தான் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. சாதாரணமாக வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி நிரந்தர வட்டி எனப்படும் பிக்சட் வட்டி வீதம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வட்டி வீதங்களில் இருந்த மாற்றம் ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் பிக்சட் வட்டி வீதத்தை விரும்பினர். அப்போதைய நிலவரப்படி பிக்சட் வட்டிக்கும் மாறும் வட்டி எனப்படும் 'ப்ளோட்டிங்' வட்டிக்கும் பெரிய வித்தியாசம் இருந்ததில்லை. அதுவே வங்கிகளுக் கும் பெரிய அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இப்போது சில ஆண்டுகளாக, நிரந்தர மற்றும் மாறும் வட்டி வீதங்களுக்கிடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக மாறி வருகிறது. இவற்றின் வித்தியாசம் 5.25 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதம் வரை வங்கிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில வங்கிகள் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டகாலம் வரை நிரந்தர வட்டியும் அதற்குப் பின் மாறும் வட்டியும் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றன.
நிரந்தர மற்றும் மாறும் வட்டி வீதங்களுக்கிடையில் இவ்வளவு பெரிய வித்தியாசம் வந்தது ஏன்? உலகப் பொருளாதார மந்தநிலை இந்தியப் பங்கு மற்றும் நிதிச் சந்தையில் ஏற்படுத்திய பாதிப்பு, அரசின் கடன் வாங்கும் கொள்கை இவற்றால் தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இந்த வித்தியாசத்தால் பொதுமக்களுக்கு நிரந்தர வட்டி தான் லாபம் என்றாலும், வங்கிகளுக்கு நிரந்தர வட்டி என்பது நஷ்டத்தைத் தரக்கூடியதாக இருந்தது. 2002-03 காலகட்டங்களில் இரு வட்டிகளுக்கும் இடையிலான வித்தியாசம் 50லிருந்து 200 அடிப்படைப் புள்ளிகள் வரை மாறியது. மக்களோ, கடன்களுக்கு நிரந்தர வட்டியையே தேர்வு செய்தனர். வித்தியாசத்தால் ஏற்பட்ட விளைவு வங்கிகளையே பாதித்து வந்தது. 2006ல் இந்த நஷ்டம் வங்கிகளைப் பெருமளவில் பாதித்தது. இப்போது, இந்த நிரந்தர வட்டி முறையை நீக்கிவிட்டு, மாறும் வட்டியை நிரந்தரமாக்கலாமா என்று வங்கிகள் யோசித்து வருகின்றன. கூடிய விரைவில் 'ப்ளோட்டிங்' வட்டி வீதம் தான் அமலாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Thursday, September 3, 2009

விவசாயி கடன் வட்டி விகிதத்தை குறைந்தது ஸ்டேட் வங்கி

விவசாயிகளுக்கான கடன் வட்டி விகிதத்தை ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ.,) குறைத்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் வங்கி விவசாய தொழில் பிரிவு பொது மேலாளர் நிரஞ்சன் பார்ஷா தெரிவிக்கும் ‌போது, பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடுமையான மழை உள்ளிட்ட இயற்கை பேரழிவு காரணமாக, விவசாயிகள் அடைய வேண்டிய லாபம் கிடைக்க பெறாமல் அல்லல்பட்டு வருகின்றனர். இதனை ஸ்டேட் வங்கி கவனத்தில் கொண்டு, விவசாயிகளின் இன்னல்களை போக்கும் விதமாக, கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, சிறு விவசாயிகளின் 25 லட்சம் வரையிலான கடன்களுக்கு முதல் வருடத்தில் 8 சதவீதமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வருடத்தில் 9 சதவீத வட்டி விகிதம் குறைக்கப் பட உள்ளது என தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Saturday, August 15, 2009

எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் வட்டி குறைப்பு அறிவிப்பு

புதிதாக வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கான வட்டி வீதத்தை, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் குறைத்துள்ளது.இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முன்னர் 30 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கான வட்டி வீதம் 9.25 சதவீதமாக இருந்தது. தற்போது 75 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கான மாறுகின்ற வட்டி வீதம் 8.75 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் தேதி முதல் இந்தப் புதிய வட்டி வீதம் அமலுக்கு வந்துள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தர வட்டி வீதத்திலும், அதன்பின் மாறுகின்ற வட்டி வீதத்திலும் கடன் பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு, 75 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 8.90 சதவீத வட்டி வசூலிக்கப்படும். முன்னர் இந்த வகைக் கடன்களுக்கான வட்டி வீதம் 9.50 சதவீதமாக இருந்தது.
நன்றி : தினமலர்


Wednesday, April 22, 2009

வீடு, வாகனம் கடன் மீதான வட்டி மேலும் குறையும்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

வீடு, வாகனம் மற்றும் கம்பெனிகள் பெறும் கடன் மீதான வட்டி விகிதம் குறைக்கப்படும் வகையில் ரிசர்வ் வங்கி, தன் வருடாந்திர கடன் வசதிக் கொள்கையை அறிவித்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், 2009-10ம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர கடன் வசதிக் கொள்கையை அறிவித்தார். தற்போது உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து, பல்வேறு சலுகை மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் வங்கிகள் அளிக்கும் கடன் வசதி மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தான், பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற கருத்து தொடர்ந்து பேசப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியின் 2009-10ம் ஆண்டின் கடன் வசதிக் கொள்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், குறைந்த கால வங்கி ரொக்க கையிருப்பு (ரெப்போ) சதவீதம் 4.75 சதவீதமாகவும், ரிசர்வ் வங்கிகளில் வைத்திருக்கும் பணம் (ரிவர்ஸ் ரிப்போ) சதவீதம் 3.25 ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
இது, ஏற்கனவே இருந்த அளவில் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற வங்கிப் பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை.
அதே சமயம் மொத்த வளர்ச்சி 2008-09ம் ஆண்டுக்கு 6.5 சதவீதம் இருக்கும் என்ற மதிப்பீடு, தற்போது 6 சதவீதமாகக் குறையும் என்று மாற்றி மதிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், பணவீக்கம் மார்ச் 2010 வரை தொடர்ந்து 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்காது என்ற நல்ல தகவலும் இதில் உள்ளது.
பணவீக்கம் பூஜ்யம் அளவிற்கு குறைந்ததால், பாதிப்பு ஏற்படாது என்றும் தேவைகள் குறைய வாய்ப்பில்லை என்றும், பெரிய அளவில் கச்சா எண்ணெய் விலைக்குறைவு இந்த அளவிற்கு பணவீக்கம் குறையக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறுகையில், 'உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிலைமையைக் கணக்கிட்டு அதற்கேற்ப ரிசர்வ் வங்கி நடவடிக்கை இருக்கும். 'உலக அளவிலான மந்தப் பொருளாதார நிலை பாதிக்காமல், அதே சமயம் வளர்ச்சி இருக்கும் வகையில் நடவடிக்கை அமையும். 'வங்கிகள் கடன் வழங்கும் போது, அதற்கான வட்டிவிகிதம் குறையும் வாய்ப்புகள் உள்ளன. அதே போல வங்கிகள் டிபாசிட்களுக்கு அளிக்கும் வட்டி அளவை குறைப்பதால் சிறுசேமிப்பு போன்றவை போட்டியாக வரும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. காரணம் பணப்புழக்கம் பாதிப்பின்றி இருக்கிறது' என்றார்.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓரியண்டல் வங்கி நிர்வாக டைரக்டர் எஸ்.சி.சின்கா கூறுகையில், 'ரிசர்வ் வங்கி கொள்கையைப் பார்க்கும் போது வங்கி கடன் மீதான வட்டி குறையும்' என்றார். நிதித்துறை பொருளாதார விவகாரச் செயலர் அசோக் சாவ்லா கருத்துத் தெரிவிக்கும் போது, 'ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வங்கி தரும் கடன் மீதான வட்டி விகிதம் குறையும்' என்று கருத்துத் தெரிவித்தார். வீடு, கார் மற்றும் கம்பெனிகள் வாங்கும் கடன் மீதான வட்டி அளவு இனிக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு கடன் அளவு 'ஓஹோ...': மத்திய, மாநில அரசுகள் வாங்கும் கடன் அளவு கணிசமாக அதிகரித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல்: நடப்பு நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகள் வாங்கிய கடன் அளவு மதிப்பீடு: நான்கு லட்சத்து 34 ஆயிரத்து 647 கோடி ரூபாய். இது 2008-09ல் நான்கு லட்சத்து 2,032 ரூபாயாகும். நிதி ஊக்குவிப்பு செயல்களுக்காக செலவிடும் பணத்திற்காக கடன் வாங்கும் அளவு அதிகரித்திருக்கிறது.
முன்பு 2007-08ம் ஆண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டில் இரண்டரை மடங்கு கடன் அதிகமாக வாங்கப்படுகிறது. இதில் மாநில அரசுகள் வாங்கும் கடன் அளவும் அதிகரித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Thursday, April 9, 2009

டெபாசிட்டுகளுக்கு மேலும் வட்டி குறைக்கப்படும் அபாயம்!

பொதுமக்களின் டெபாஸிட்டுகளுக்கு மேலும் வட்டி குறைக்கப்படும் என்று இந்திய வங்கிகள் சங்க தலைவர் டிஎஸ் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டிக் குறைப்புச் சலுகைகளைப் பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்துவது குறித்து நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கித் தலைவர் டி சுப்பாராவவுடன் பேசினார் நாராயணசாமி. பின்னர் அவர் கூறியதாவது: "ரிசர்வ் வங்கி மிகச் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இனி கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க இடமில்லை. வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும். ஆனால் வங்கி நடைமுறைகள் இதற்கு இடமளிக்கவில்லை. இப்போது குறைக்கப்பட்டுள்ள கடன் வழங்கல் வட்டியைச் சரிகட்ட, பொதுமக்களின் வைப்புகளுக்கு வங்கிகள் வழங்கும் வட்டியைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த பதினைந்து நாட்களுக்குள் அனைத்து வங்கிகளும் வைப்புத் தொகை வட்டி விகிதத்தைக் குறைக்க உள்ளன", என்றார். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளபடி இன்னும் 2 சதவிகிதம் அளவுக்கு முதன்மைக் கடன் வழங்கலுக்கான (PLR) கடன்களுக்கான வட்டி விகிதத்தை அனைத்து வணிக வங்கிகளும் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குத் தயாராக இல்லை எந்த வங்கியும். மாறாக மக்களின் வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டியில் கை வைக்க முடிவு செய்துவிட்டன.இது கடன் வழங்கலை மட்டுமல்ல, மக்களின் சேமிப்பையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணம் தேக்கம்!இன்னொரு பக்கம், கடன்களுக்கான வட்டிகள் குறையாமலே உள்ளதாலும், கடன் வழங்கும் நடைமுறைகளை வங்கிகள் மிகவும் கடினமாக்கி வைத்திருப்பதாலும் அனைத்து வணிக வங்கிகளிலும் ரூ.1,22,000 கோடிக்கும் அதிகமாக பணம் தேங்கி நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணம் முழுவதும் ரிசர்வ் வங்கியில் 3.5 சதவிகித வட்டியில் டெபாஸிட்டாக வைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெற ஆர்வம் காட்டததாலும், பொதுமக்கள் கடன் பெறும் அளவு 34 சதவிகிதம் குறைந்துவிட்டதாலும் இந்த நிலை என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஓபி பட் தெரிவித்துள்ளார்.

நன்றி : தட்ஸ்தமிழ்



Tuesday, April 7, 2009

வட்டியை மேலும் குறைக்க வங்கிகள் முன்வர வேண்டும் : ரிசர்வ் வங்கி கவர்னர் வேண்டுகோள்

இந்தியாவின் பணவீக்கம் ஜீரோ சதவீதத்தை ஒட்டியே இருந்து வருவதால், வங்கிகள், வட்டியை மேலும் குறைக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கேட்டுக்கொண்டுள்ளார். மும்பையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைம்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு செமினாரில் கலந்து கொண்டு பேசிய சுப்பாராவ், ரிசர்வ் வங்கி, முக்கிய வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது. நிதி கொள்கையையும் எளிதாக்கியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மற்ற வங்கிகளும் வட்டியை குறைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பணவீக்கம் குறைந்து வருவதையடுத்து கடந்த அக்டோபரில் இருந்து பல தடவைகள் ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்திருக்கிறது. மற்ற வங்கிகளும் கடந்த காலத்தில் வட்டியை குறைத்திருக்கின்றன. இருந்தாலும் அவைகள் மேலும் வட்டியை குறைக்கலாம் என்றார் சுப்பாராவ். வங்கிகளில் கூடுதல் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் ரிசர்வ் வங்கி, ரிபோ ரேட்டை 5 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரிபோ ரேட்டை 3.5 சதவீதம் வரையிலும் குறைத்திருக்கிறது.
நன்றி : தினமலர்