Sunday, November 15, 2009

வைப்புத் தொகை வட்டி வீதம் குறைகிறது

அரசு மற்றும் தனியார் வங்கிகளில் வைப்புத் தொகைக்கான வட்டி வீதம் குறைந்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் நிரந்தர வைப்புத் தொகை குறித்து யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
அரசுத் துறை வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கு (பிக்சட் டிபாசிட்) அதிகபட்சமாக 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டு வந்தது. சமீப காலமாக அந்த 7 சதவீதம் கூட கொஞ்சம் குறையத் தொடங்கியது.

ஆனால், இப்போது இரண்டு அரசுத் துறை வங்கிகள் தங்களின், 180-364 நாட்கள் மற்றும் ஒரு ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டு காலகட்ட நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தில் 0.25 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் வரை குறைத்துவிட்டன. இதைத் தொடர்ந்து, தனியார் வங்கிகளும் குறிப்பிட்ட சில நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை குறைக்கத் தொடங்கி விட்டன. ஆனால், மூன்று ஆண்டு மற்றும் அதற்கு அதிகமான குறுகிய கால வைப்புத் தொகைக்கான வட்டி வீதம், 7 சதவீதமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
நன்றி : தினமலர்

No comments: