செப்டம்பர் 5-ம் தேதிதான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் என்றாலும், துரதிருஷ்டவசமாக, அந்த நாள் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டதால், இந்தியாவில் பெரும்பாலான பள்ளிகளில் ஒருநாள் முன்னதாகவே கொண்டாடி முடித்துவிட்டனர். தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சிகூட பிரதமரால் சனிக்கிழமையே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
டாக்டர் இராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரியில்கூட (ஒரு சிலர் மட்டும்) அவரது படத்துக்கு சனிக்கிழமையே மலர்தூவி வணங்கிவிட்டார்கள். முறைப்படியான விழா, கல்லூரி வேலைநாளில் நடைபெற உள்ளதாம்.
ஆசிரியர் தினம் மட்டுமன்றி, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஆகியனவும்கூட, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துவிடுமேயானால், வெள்ளிக்கிழமையே உறுதிமொழி ஏற்று, கடமையை சீக்கிரமே முடித்துக் கொள்கிற வழக்கம் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுவிட்டது.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தைத் திட்டாத அரசு ஊழியர்களோ ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லிவிடலாம். சுதந்திர தினம் என்ன ஆயுதபூஜையா, முதல்நாளே அலுவல்நேரத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில், பொரிகடலை வைத்து சாமி கும்பிடுவதைப் போல, முதல்நாளே கொடியேற்றிவிட! கொடியேற்ற ஆசிரியர் வரவில்லை என்பதற்காக பள்ளிக்குப் பூட்டுப் போட்ட கிராமங்களையும் இந்த ஆண்டு பார்க்க நேர்ந்தது.
இப்படிச் சிணுங்கிக் கொண்டே கொண்டாடுவதைக் காட்டிலும் அந்த விழாவையே ரத்து செய்துவிடலாமே! எதற்காக இப்படி முன்னதாகவே கொண்டாடுவதும், அரைகுறையாக நடத்துவதும்! தனியார் நிறுவனங்களிலும் சாலையோரத்திலும் ஓய்வுநாள் என்பதே இல்லாமல் பணியாற்றிக்கொண்டிருப்போர் ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தியாகம் செய்யக்கூட இவர்களுக்கு மனம் வருவதில்லையே, இவர்களைப் பொதுநல ஊழியர்கள் என்று அழைப்பதேகூடத் தவறல்லவா?
இதுபற்றிக் கேட்டால், "நாங்கள் மனிதர்கள் இல்லையா? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா?' என்பார்கள். இவர்கள் எத்தனை மணி நேரத்தைக் குடும்பத்துக்காகச் செலவிடுகிறார்கள் என்று கணக்கிட்டால், மற்ற வாரக் கிழமைகளைவிட குறைவாகத்தான் இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும், மாலையில் ஓட்டலுக்குப் போக வேண்டும், விழாக்களில் பங்குகொள்ள வேண்டும், காலை முதல் மாலை வரை டிவி அல்லது டிவிடி பார்க்க வேண்டும், சிக்கன், மட்டன், மீன் என்று ஏதாவது ஒரு அசைவ உணவு உண்டே ஆக வேண்டும், மது அருந்த வேண்டும், இதுதான் ஜாலி என்பதாகக் கருதப்படும் நிலைமை உருவாகிவிட்டது. இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், நூலகத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண்டும் என்று கேட்கிற அளவுக்குப் போயுள்ளது. ஆண்டு முழுவதும் தீபாவளி, பொங்கலிலும்கூட செயல்பட்டால்தானே அது அறிவாலயம் (நூலகம்)!
ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை இளைஞர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வர வேண்டும்; வேறொரு நாளில் வாரவிடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும்கூட, "ஃபிரண்ட்ûஸ மிஸ் பண்ணிடுவேனே' என்று அந்த வேலையைத் தவிர்க்கிற மனநிலை இளைஞர்களிடம் உருவாகியிருக்கிறது என்றால், ஞாயிற்றுக்கிழமையிலும் உழைக்கின்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நினைவுக்கு வராமல் மனது மரத்துப்போகும் என்றால், இதை ஞாயிறு நோய் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல!
இதெல்லாம் போகட்டும். இந்த ஞாயிறு மனநோய் சேவைப் பிரிவு ஊழியர்களையும் பீடித்துக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மின்வாரியம், தொலைத்தொடர்பு ஊழியர்களைப் பிடிப்பது முயல்கொம்புதான். மேலிடத்தில் செல்வாக்கு இருந்தால் மட்டுமே சராசரி இந்தியக் குடிமகனுக்கு ஞாயிறு சேவை வாய்க்கும்.
இதெல்லாம்கூடத் தொலையட்டும். மருத்துவமனை மருத்துவர்களையும் இந்த நோய் பீடித்திருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் உடல்நலக் குறைவு அல்லது விபத்தில் காயம் என்பதற்காக எந்த மருத்துவமனைக்குப் போனாலும், டாக்டர்கள் இருப்பதில்லை. சாதாரண கிளீனிக்குகள் மூடப்பட்டிருக்கும். 24 மணி நேர சேவை மருத்துவமனை என்று அறிவிப்பு இருந்தாலும் செவிலியர் மட்டுமே இருப்பார்.
கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட பயிற்சிமருத்துவர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் தாற்காலிகமான சிகிச்சையைத்தான் தருவார்கள். அரசு மருத்துவமனை என்றால் டீன் தயவு இருந்தால்தான் முடியும். அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மோதல், டாக்டர் மீது தாக்குதல் என்கிற செய்திகள் எந்தக் கிழமையில் நடைபெறுகிறது என்பதைக் கணக்கிட்டால் 99 விழுக்காடு ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழகம் முழுக்க, ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்பட, ஒரு நாள் மதுவிலக்கு அமல்படுத்தினாலும்கூட போதும், இந்த ஞாயிறுநோய் பாதி குணமடைந்துவிடும்! இந்தக் கருத்தை நாம் முன்வைத்தால், அண்டை மாநிலங்களும் இதைப் பின்பற்றுமா என்கிற அசட்டுத்தனமான கேள்வி கேட்கப்படும்.
நமக்குத் தெரிந்து இரவு பகல், நாள் கிழமை என்று பாராமல் இயங்கும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப்பாடமான உழைப்பை மட்டும் நம்மில் யாரும் பின்பற்றத் தயாராக இல்லையே என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஓய்வு தேவையில்லை என்பதல்ல நமது வாதம். ஓய்வு என்கிற பெயரில் பொழுது வீணடிக்கப்படுவதும், ஞாயிறு என்கிற காரணத்தால் கடமை மறப்பதும் தவறு என்பதுதான் நாம் வலியுறுத்த விரும்பும் கருத்து!
நன்றி : தினமணி
Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts
Wednesday, September 8, 2010
Sunday, January 17, 2010
ஊசலாடும் அரசு உதவிபெறும் பள்ளிகள்
ஒரு தாய், தன்னுடைய குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும்போது "ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும்' என்ற பழமொழி கூறுவதுண்டு.
கல்வித்துறையில் அரசு பள்ளிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கல்விச் சேவையை அளித்து வரும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களுக்கு நிதி உதவி அளிக்க அரசு முன்வராதது குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும் தாயின் செயலுக்கு ஒப்பானது என்கிறார்கள் அரசு உதவிபெறும் கல்வி நிலையத்தினர்.
தமிழகத்தில் அரசு கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள், அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
கல்விக் கட்டண வசூல், ஆசிரியர், அலுவலர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதிய நிர்ணயம் ஆகியவற்றைத் தனியார் கல்வி நிலையங்கள் தாங்களே முடிவுசெய்கின்றன.
ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமனம் அரசு வழிகாட்டுதலிலேயே நடத்தப்படுகிறது.
ஆசிரியர், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்குவது என்பதைத் தவிர அரசுப் பள்ளிகளுக்குக் கிடைக்கும் மற்ற சலுகைகள் எதுவும் உதவிபெறும் பள்ளிகளுக்குக் கிடைப்பதில்லை.
எனவே, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர் எண்ணிக்கையைக் கூடுதலாக்குவது ஆகியவற்றை அந்தந்தக் கல்வி நிலைய நிர்வாகங்களே செயல்படுத்த வேண்டியுள்ளது.
புதிய ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கான ஊதியத்தை பெற்றோர்}ஆசிரியர் கழகத்தின் மூலம் அளிக்கும் கட்டாயமும் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது.
அதன்படி, பெற்றோர்}ஆசிரியர் கழகத்துக்கு மாணவ, மாணவியரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையும் மிக மிகக் குறைவேயாகும். இதைவைத்து மாதா மாதம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது இயலாத காரியம் என்பதும் கல்வி நிலைய நிர்வாகிகள் கருத்து.
தற்போது இலவசக் கல்வித் திட்டத்தால் மாணவர்களிடையே எவ்விதக் கல்விக் கட்டணத்தையும் அப்பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க முடியாத நிலையும் உள்ளது.
அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் சேவை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையே. குறிப்பிட்ட சமூகத்தினர் சார்பிலோ அல்லது சேவை மனப்பான்மை உள்ளவர்கள் கூட்டாகச் சேர்ந்தோ, சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ள தனிப்பட்டவராலோ ஆரம்பிக்கப்பட்டு பின் அரசு உதவி பெற்றவைகளாக அவை மாறியிருப்பதே உண்மை.
இதுபோன்று மாநிலத்தில் 5048 ஆரம்பப் பள்ளிகளும், 1643 தொடக்கப் பள்ளிகளும், 630 உயர்நிலைப் பள்ளிகளும், 1067 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் விதி விலக்காக ஒரு சில பள்ளிகள் மட்டுமே தற்போது வர்த்தக நோக்கில் செயல்படுபடத் தொடங்கி உள்ளன. ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் பெரும்பாலானவை இன்றும் சேவை நோக்கம் குறையாமல் செயல்படுகின்றன. இவற்றில் பல, நூற்றாண்டு கடந்தவையாகவும், பாரதியார் போன்ற மகாகவிகள் பணிபுரிந்த பெருமைக்குரியதாகவும் திகழ்கின்றன.
இதுபோன்ற பள்ளிகளில் தற்போது மாணவர் எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்ததைவிட 3 மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால், ஆசிரியர் எண்ணிக்கை மட்டும் ஆரம்பத்தில் இருந்தது போலவே உள்ளது.
குறிப்பாக, நூலகர்கள், ஓவிய ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளின் நூலகங்கள் சிதிலமடைந்து கிடக்கும் அவல நிலையும் உள்ளது.
இவ்வகைப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் காலியிடத்தைக் கூட அந்தந்தப் பள்ளி நிர்வாகமே சொந்த நிதியில் நிரப்ப வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் கல்வித்துறை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் கல்வி நிலையத்தைத் தொடர்ந்து நடத்த நிதிப் பற்றாக்குறை ஏற்படும். அதனால் நிதி திரட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, மாணவர்களிடம் மறைமுகமாக கட்டணம் வசூலிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிதி வசூலிக்காவிட்டால், கல்வி நிலையத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் அக்கல்வி நிலைய நிர்வாகிகள்.
தற்போது இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் பள்ளிக்கும் பல லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. எனினும் அதற்கான நிதியைக் கூட அரசு அளிக்க முன்வராதது துரதிருஷ்டவசமானது என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இதனால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கோருகிற நிலை ஏற்படுகிறது.
அரசியல்வாதிகளின் உதவியைக் கோரும்போது, அவர்களது சிபாரிசை ஏற்கும் கட்டாயம் ஏற்படுவதால், மாணவர் சேர்க்கையின்போது நியாயமாக நடக்கமுடியவில்லை என்பதும் ஆசிரியர்கள் கூற்று.
எனவே, அரசு உதவிபெறும் பள்ளிகளது சேவை நோக்கம், அதன் பாரம்பரியப் பெருமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டாவது அரசு சிறப்பு நிதியை அளிக்கவேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரது வேண்டுகோள்.
சேவை நோக்கில் முழுமையாகச் செயல்பட முடியாமலும், வர்த்தக ரீதியில் மூழ்காமலும் ஊசலாட்டத்தில் தள்ளாடும் பாரம்பரியமிக்க அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் அரசு தன் உதவிக்கரத்தை நீட்டுவது "தந்தை மகனுக்காற்றும் கடமை' போன்றதே!
கட்டுரையாளர் :வ.ஜெயபாண்டி
நன்றி : தினமணி
கல்வித்துறையில் அரசு பள்ளிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கல்விச் சேவையை அளித்து வரும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களுக்கு நிதி உதவி அளிக்க அரசு முன்வராதது குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும் தாயின் செயலுக்கு ஒப்பானது என்கிறார்கள் அரசு உதவிபெறும் கல்வி நிலையத்தினர்.
தமிழகத்தில் அரசு கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள், அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
கல்விக் கட்டண வசூல், ஆசிரியர், அலுவலர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதிய நிர்ணயம் ஆகியவற்றைத் தனியார் கல்வி நிலையங்கள் தாங்களே முடிவுசெய்கின்றன.
ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமனம் அரசு வழிகாட்டுதலிலேயே நடத்தப்படுகிறது.
ஆசிரியர், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்குவது என்பதைத் தவிர அரசுப் பள்ளிகளுக்குக் கிடைக்கும் மற்ற சலுகைகள் எதுவும் உதவிபெறும் பள்ளிகளுக்குக் கிடைப்பதில்லை.
எனவே, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர் எண்ணிக்கையைக் கூடுதலாக்குவது ஆகியவற்றை அந்தந்தக் கல்வி நிலைய நிர்வாகங்களே செயல்படுத்த வேண்டியுள்ளது.
புதிய ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கான ஊதியத்தை பெற்றோர்}ஆசிரியர் கழகத்தின் மூலம் அளிக்கும் கட்டாயமும் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது.
அதன்படி, பெற்றோர்}ஆசிரியர் கழகத்துக்கு மாணவ, மாணவியரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையும் மிக மிகக் குறைவேயாகும். இதைவைத்து மாதா மாதம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது இயலாத காரியம் என்பதும் கல்வி நிலைய நிர்வாகிகள் கருத்து.
தற்போது இலவசக் கல்வித் திட்டத்தால் மாணவர்களிடையே எவ்விதக் கல்விக் கட்டணத்தையும் அப்பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க முடியாத நிலையும் உள்ளது.
அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் சேவை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையே. குறிப்பிட்ட சமூகத்தினர் சார்பிலோ அல்லது சேவை மனப்பான்மை உள்ளவர்கள் கூட்டாகச் சேர்ந்தோ, சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ள தனிப்பட்டவராலோ ஆரம்பிக்கப்பட்டு பின் அரசு உதவி பெற்றவைகளாக அவை மாறியிருப்பதே உண்மை.
இதுபோன்று மாநிலத்தில் 5048 ஆரம்பப் பள்ளிகளும், 1643 தொடக்கப் பள்ளிகளும், 630 உயர்நிலைப் பள்ளிகளும், 1067 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் விதி விலக்காக ஒரு சில பள்ளிகள் மட்டுமே தற்போது வர்த்தக நோக்கில் செயல்படுபடத் தொடங்கி உள்ளன. ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் பெரும்பாலானவை இன்றும் சேவை நோக்கம் குறையாமல் செயல்படுகின்றன. இவற்றில் பல, நூற்றாண்டு கடந்தவையாகவும், பாரதியார் போன்ற மகாகவிகள் பணிபுரிந்த பெருமைக்குரியதாகவும் திகழ்கின்றன.
இதுபோன்ற பள்ளிகளில் தற்போது மாணவர் எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்ததைவிட 3 மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால், ஆசிரியர் எண்ணிக்கை மட்டும் ஆரம்பத்தில் இருந்தது போலவே உள்ளது.
குறிப்பாக, நூலகர்கள், ஓவிய ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளின் நூலகங்கள் சிதிலமடைந்து கிடக்கும் அவல நிலையும் உள்ளது.
இவ்வகைப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் காலியிடத்தைக் கூட அந்தந்தப் பள்ளி நிர்வாகமே சொந்த நிதியில் நிரப்ப வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் கல்வித்துறை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் கல்வி நிலையத்தைத் தொடர்ந்து நடத்த நிதிப் பற்றாக்குறை ஏற்படும். அதனால் நிதி திரட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, மாணவர்களிடம் மறைமுகமாக கட்டணம் வசூலிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிதி வசூலிக்காவிட்டால், கல்வி நிலையத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் அக்கல்வி நிலைய நிர்வாகிகள்.
தற்போது இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் பள்ளிக்கும் பல லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. எனினும் அதற்கான நிதியைக் கூட அரசு அளிக்க முன்வராதது துரதிருஷ்டவசமானது என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இதனால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கோருகிற நிலை ஏற்படுகிறது.
அரசியல்வாதிகளின் உதவியைக் கோரும்போது, அவர்களது சிபாரிசை ஏற்கும் கட்டாயம் ஏற்படுவதால், மாணவர் சேர்க்கையின்போது நியாயமாக நடக்கமுடியவில்லை என்பதும் ஆசிரியர்கள் கூற்று.
எனவே, அரசு உதவிபெறும் பள்ளிகளது சேவை நோக்கம், அதன் பாரம்பரியப் பெருமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டாவது அரசு சிறப்பு நிதியை அளிக்கவேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரது வேண்டுகோள்.
சேவை நோக்கில் முழுமையாகச் செயல்பட முடியாமலும், வர்த்தக ரீதியில் மூழ்காமலும் ஊசலாட்டத்தில் தள்ளாடும் பாரம்பரியமிக்க அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் அரசு தன் உதவிக்கரத்தை நீட்டுவது "தந்தை மகனுக்காற்றும் கடமை' போன்றதே!
கட்டுரையாளர் :வ.ஜெயபாண்டி
நன்றி : தினமணி
Labels:
ஆசிரியர்,
தமிழகஅரசு,
மாணவர்
Saturday, December 26, 2009
ஐந்தில் மகிழாதது...
தமிழ்நாட்டில் செயல்வழிக் கல்வி தொடங்கப்பட்டபோது சில ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் முணுமுணுப்பு ஏற்பட்டாலும், "தொடக்கப்பள்ளி பாடத்திட்டத்தை மாற்றி அமையுங்கள், வீட்டுப்பாடங்களை ஒழியுங்கள்' என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்திய சென் இப்போது கூறியுள்ள கருத்தைப் பார்க்கும்போது, செயல்வழிக் கல்வி நன்மை பயக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அமார்த்திய சென் ஏதோ போகிற போக்கில் இந்த கருத்தைச் சொல்லிவிட்டுப் போகவில்லை. அவர் தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவிய கிழக்கு அறக்கட்டளை (இந்தியா) என்ற அமைப்பு, மேற்கு வங்க மாநிலத்தில் 6 மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை 2001-02ம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துகொண்டு தொடர்ச்சியாக கண்காணித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையை வைத்துதான் அவர் கூறியிருக்கிறார்.
தொடக்கப் பள்ளிக் குழந்தைகளை வீட்டுப் பாடங்கள் செய்யும்படி சொல்லும்போது, அக்குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்துக்கு உரித்தான விளையாட்டு, மகிழ்ச்சிகளை இழந்துவிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, சமூகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சேர்ந்துகொள்கின்றன. வசதி படைத்தவர்களும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை தனிவகுப்புகளுக்கு (டியூஷன்) அனுப்புகின்றனர். இது அவர்களின் கல்வித் தரத்திலும் பிரதிபலிக்கிறது.
இந்த ஆய்வுகளின்படி, தொடக்கப்பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் சிறார்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 சதவீத குழந்தைகளால் எழுதப் படிக்க முடியவில்லை. முஸ்லிம் குழந்தைகளில் 27 சதவீதம் பேரும், பொதுப் பிரிவில் 8 சதவீத குழந்தைகளாலும் எழுதப் படிக்க முடியவில்லை. இதற்கு தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள கோளாறுகளுடன் குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யச் சொல்வதும்தான் என்பதே இந்த ஆய்வின் வெளிப்பாடு.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் கல்வி கற்கும் முறையே வேறாக இருக்கிறது. குழந்தைகளுக்கு 5 வயதுவரை வகுப்புகளில்கூட எழுத பணிக்கப்படுவதில்லை. உரையாடல், விளையாடுதல் இவை மட்டுமே அவர்களின் வகுப்பறையாக இருக்கின்றன. குழந்தைகள் அங்கே குழந்தைகளாகவே இருக்கின்றனர். 5 வயதுக்குப் பிறகு, தொடக்கப் பள்ளி வகுப்புகளில் அறிவியல், மொழி ஆகியவற்றின் அடிப்படை, படித்தல், எழுதுதல், ஓவியம் போன்ற குழந்தைகளின் ஆர்வத்துக்கேற்ற நுண்கலை அறிமுகம் என சொல்லித்தரப்படுகிறது. பிறகுதான் பாடதிட்டத்தை மிகவும் செறிவானதாக கனமானதாக மாற்றுகின்றனர். ஆனால் இந்த நிலைமை இந்தியாவில் இல்லை.
நர்சரி பள்ளிகள் அறிமுகமாகாத நிலையில், இந்தியாவிலும் குழந்தைகள் 5 வயது வரை நன்றாக விளையாடினார்கள். வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டார்கள். பேசினார்கள், சொல்லிக்கொடுத்த வழிபாட்டு பாடல்களையும் கதைகளையும் திருப்பிச் சொன்னார்கள். பிறகுதான் அவர்கள் முதல் வகுப்பில் நேரிடையாக சேர்ந்து பயின்றார்கள். அப்போதும்கூட முதல் வகுப்பு செல்லும் குழந்தையுடன் ஒரு கரும்பலகையும், தமிழ் மொழிப் புத்தகம் ஒன்றும் கூட்டல் கழித்தலுக்கான வாய்ப்பாடு புத்தகமும் மட்டுமே கையில் இருந்தது. மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கில அரிச்சுவடி கற்றுத்தரப்பட்டது.
இப்போதெல்லாம் பிரி-நர்சரி வகுப்புகள், கிரீச் என குழந்தைகள் வீட்டில் தங்கவே இல்லாத சூழல்களை இந்திய சமுதாயம் வரிந்து உருவாக்கிக் கொண்டுவிட்டது. நர்சரி குழந்தைகளை தங்கள் பிஞ்சு விரல்களைக் கொண்டு ஆங்கிலத்தை எழுதிப் பழக்குகிறார்கள். எண்களை ஆயிரம் வரை எழுதித் தள்ளுகிறார்கள். வீட்டுப் பாடங்களையும் செய்கிறார்கள். புத்தக மூட்டைகளைச் சுமந்து செல்கிறார்கள். தனிவகுப்புகளுக்கும் செல்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் அவர்களுக்கு விளையாட, குழந்தைப் பருவத்தை அனுபவிக்க எங்கே நேரம் இருக்க முடியும்!
ஆங்கிலேயர் காலத்தில் முதல் பாரம் முடித்தவர்கள்கூட எழுதுவது பேசுவது படிப்பது மூன்றையும் தவறில்லாமல் செய்ய முடிந்தபோது இன்றைய பிளஸ் 2 மாணவர்கூட தவறில்லாமல் தமிழைக்கூட எழுதவும் முடியாத நிலை உருவானதை நினைக்க வேண்டியிருக்கிறது.
தற்போது சமச்சீர் கல்விக்காக பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பாடத்திட்டங்கள், அமார்த்திய சென் குறிப்பிடும் வகையில், எளிமையானதாகவும் வீட்டுப்பாடங்களுக்குத் தேவை இல்லாத வகையிலும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயல்வழிக் கல்விக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு மனிதன் வளர்ந்த பிறகு அசைபோட குழந்தைப் பருவ நினைவுகள் இல்லாவிட்டால், அவன் சமூகக் குற்றங்கள் செய்யும் வாய்ப்புகள் நேரிடுவதோடு, உணர்வுபூர்வமான சிக்கல்களிலிருந்து மீள்வதில் பெரும் குழப்பத்தையும், இயலாமையையும் சந்திக்க நேர்கிறது என்பதுதான் உளவியல் கூறும் உண்மை.
"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் கனவின் குழந்தைகள்' என்பதற்காக, நம்முடைய நிறைவேறாத வாழ்க்கை லட்சியங்களை அவர்கள் மீது திணிப்பது நியாயமாகாது. ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்ற பழமொழியை படிப்புக்காக மட்டுமே சொல்லப்பட்டதாக நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். ஐந்தில் மகிழ்ச்சியாக இல்லாதது ஐம்பதிலும் மகிழ்ச்சியாக இருக்காது என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி : தினமணி
அமார்த்திய சென் ஏதோ போகிற போக்கில் இந்த கருத்தைச் சொல்லிவிட்டுப் போகவில்லை. அவர் தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவிய கிழக்கு அறக்கட்டளை (இந்தியா) என்ற அமைப்பு, மேற்கு வங்க மாநிலத்தில் 6 மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை 2001-02ம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துகொண்டு தொடர்ச்சியாக கண்காணித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையை வைத்துதான் அவர் கூறியிருக்கிறார்.
தொடக்கப் பள்ளிக் குழந்தைகளை வீட்டுப் பாடங்கள் செய்யும்படி சொல்லும்போது, அக்குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்துக்கு உரித்தான விளையாட்டு, மகிழ்ச்சிகளை இழந்துவிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, சமூகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சேர்ந்துகொள்கின்றன. வசதி படைத்தவர்களும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை தனிவகுப்புகளுக்கு (டியூஷன்) அனுப்புகின்றனர். இது அவர்களின் கல்வித் தரத்திலும் பிரதிபலிக்கிறது.
இந்த ஆய்வுகளின்படி, தொடக்கப்பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் சிறார்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 சதவீத குழந்தைகளால் எழுதப் படிக்க முடியவில்லை. முஸ்லிம் குழந்தைகளில் 27 சதவீதம் பேரும், பொதுப் பிரிவில் 8 சதவீத குழந்தைகளாலும் எழுதப் படிக்க முடியவில்லை. இதற்கு தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள கோளாறுகளுடன் குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யச் சொல்வதும்தான் என்பதே இந்த ஆய்வின் வெளிப்பாடு.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் கல்வி கற்கும் முறையே வேறாக இருக்கிறது. குழந்தைகளுக்கு 5 வயதுவரை வகுப்புகளில்கூட எழுத பணிக்கப்படுவதில்லை. உரையாடல், விளையாடுதல் இவை மட்டுமே அவர்களின் வகுப்பறையாக இருக்கின்றன. குழந்தைகள் அங்கே குழந்தைகளாகவே இருக்கின்றனர். 5 வயதுக்குப் பிறகு, தொடக்கப் பள்ளி வகுப்புகளில் அறிவியல், மொழி ஆகியவற்றின் அடிப்படை, படித்தல், எழுதுதல், ஓவியம் போன்ற குழந்தைகளின் ஆர்வத்துக்கேற்ற நுண்கலை அறிமுகம் என சொல்லித்தரப்படுகிறது. பிறகுதான் பாடதிட்டத்தை மிகவும் செறிவானதாக கனமானதாக மாற்றுகின்றனர். ஆனால் இந்த நிலைமை இந்தியாவில் இல்லை.
நர்சரி பள்ளிகள் அறிமுகமாகாத நிலையில், இந்தியாவிலும் குழந்தைகள் 5 வயது வரை நன்றாக விளையாடினார்கள். வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டார்கள். பேசினார்கள், சொல்லிக்கொடுத்த வழிபாட்டு பாடல்களையும் கதைகளையும் திருப்பிச் சொன்னார்கள். பிறகுதான் அவர்கள் முதல் வகுப்பில் நேரிடையாக சேர்ந்து பயின்றார்கள். அப்போதும்கூட முதல் வகுப்பு செல்லும் குழந்தையுடன் ஒரு கரும்பலகையும், தமிழ் மொழிப் புத்தகம் ஒன்றும் கூட்டல் கழித்தலுக்கான வாய்ப்பாடு புத்தகமும் மட்டுமே கையில் இருந்தது. மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கில அரிச்சுவடி கற்றுத்தரப்பட்டது.
இப்போதெல்லாம் பிரி-நர்சரி வகுப்புகள், கிரீச் என குழந்தைகள் வீட்டில் தங்கவே இல்லாத சூழல்களை இந்திய சமுதாயம் வரிந்து உருவாக்கிக் கொண்டுவிட்டது. நர்சரி குழந்தைகளை தங்கள் பிஞ்சு விரல்களைக் கொண்டு ஆங்கிலத்தை எழுதிப் பழக்குகிறார்கள். எண்களை ஆயிரம் வரை எழுதித் தள்ளுகிறார்கள். வீட்டுப் பாடங்களையும் செய்கிறார்கள். புத்தக மூட்டைகளைச் சுமந்து செல்கிறார்கள். தனிவகுப்புகளுக்கும் செல்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் அவர்களுக்கு விளையாட, குழந்தைப் பருவத்தை அனுபவிக்க எங்கே நேரம் இருக்க முடியும்!
ஆங்கிலேயர் காலத்தில் முதல் பாரம் முடித்தவர்கள்கூட எழுதுவது பேசுவது படிப்பது மூன்றையும் தவறில்லாமல் செய்ய முடிந்தபோது இன்றைய பிளஸ் 2 மாணவர்கூட தவறில்லாமல் தமிழைக்கூட எழுதவும் முடியாத நிலை உருவானதை நினைக்க வேண்டியிருக்கிறது.
தற்போது சமச்சீர் கல்விக்காக பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பாடத்திட்டங்கள், அமார்த்திய சென் குறிப்பிடும் வகையில், எளிமையானதாகவும் வீட்டுப்பாடங்களுக்குத் தேவை இல்லாத வகையிலும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயல்வழிக் கல்விக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு மனிதன் வளர்ந்த பிறகு அசைபோட குழந்தைப் பருவ நினைவுகள் இல்லாவிட்டால், அவன் சமூகக் குற்றங்கள் செய்யும் வாய்ப்புகள் நேரிடுவதோடு, உணர்வுபூர்வமான சிக்கல்களிலிருந்து மீள்வதில் பெரும் குழப்பத்தையும், இயலாமையையும் சந்திக்க நேர்கிறது என்பதுதான் உளவியல் கூறும் உண்மை.
"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் கனவின் குழந்தைகள்' என்பதற்காக, நம்முடைய நிறைவேறாத வாழ்க்கை லட்சியங்களை அவர்கள் மீது திணிப்பது நியாயமாகாது. ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்ற பழமொழியை படிப்புக்காக மட்டுமே சொல்லப்பட்டதாக நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். ஐந்தில் மகிழ்ச்சியாக இல்லாதது ஐம்பதிலும் மகிழ்ச்சியாக இருக்காது என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி : தினமணி
Labels:
ஆசிரியர்,
தமிழகஅரசு,
தலையங்கம்,
தாய்மொழி,
மாணவர்
Saturday, December 19, 2009
பிள்ளைகளைக் கண்காணிப்பார்களா பெற்றோர்கள்?
தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதோடு தங்களது கடமை முடிந்து விட்டது எனக் கருதாமல் தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளைப் பெற்றோர்கள் கண்காணித்து வரவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக மாறி வருகிறது.
தொடக்க நிலையைக் காட்டிலும் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களைக் கண்டிப்பாகப் பெற்றோர்கள் கவனத்துடன் கையாள வேண்டும். ஏனெனில் வளர்இளம் பருவத்தில் உள்ள இவர்களின் ஒவ்வொரு செயலுமே அவர்களுக்குச் சரியாகப் படும் என்பதால் இந்தப் பருவத்தில் அவர்கள் மீது கண்டிப்பாக ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
முன்பெல்லாம் பள்ளிகளில் ஆசிரியர்களைப் பார்த்தால் மாணவர்களுக்குப் பயம் கலந்த மரியாதை வருவது இயல்பாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் மாணவர்களாக இருந்தவர்கள் தற்பொழுது உயர்ந்த நிலைக்கு வந்த பின்னர் தங்களின் இந்த உயரிய நிலைக்குக் காரணம் ஆசிரியர்கள்தான் என்பதை உணர்ந்து அவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருவதையும், வீடு கட்டிக் கொடுத்துக் கொண்டாடியதையும் இன்றைய ஒவ்வோர் ஆசிரியரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
இன்றோ பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளில்கூட ஆசிரியர்களை மதிப்பதில்லை என்று ஆசிரியர் வட்டாரங்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றன. காரணம் சினிமாவிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் காமெடி நடிகரை ஆசிரியராகவோ, பேராசிரியராகவோ காட்டி, அவர்களைக் கொண்டு ஆசிரியர்களை எவ்வளவு மோசமாகச் சித்திரிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மோசமாகக் காட்டுகின்றனர்.
இக்காட்சிகளைப் பார்த்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவனுக்குத் தாமும் அதேபோல் செய்தால் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. விளைவு... மதிக்கத்தக்கவர் அல்ல ஆசிரியர் என்ற எண்ணம்தான் அவனுள் வளர்கிறது.
இது சாதாரணம். இப்படி உள்ளூர் ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் போட்டி போட்டுக் காட்டும் காட்சிகள் மாணவனின் மனதில் நஞ்சை விதைக்கின்றன. ஊடகங்கள் வருவதற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரே பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் பேசுவதைத் தாங்களாகவே தவிர்த்து வந்தனர். ஆனால் இன்றோ ஊடகங்கள் எப்படிச் சந்திக்கலாம்.. அதற்கான வழிமுறைகள் என்ன... மாட்டிக் கொண்டால் தப்பிப்பதற்கான வழிகள் என்ன என்று அத்தனையும் பட்டியல் போட்டுக் காண்பிக்கின்றன. இப்படிப் பழத்தை உரித்து வாயிலே கொடுத்தால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.
இப்படி ஊடக வெளிச்சத்தில் கரைந்து பள்ளிகளில் வைத்தே மது அருந்திய மாணவர்களையும், இன மோதல்களில் ஈடுபட்ட மாணவர்களையும், பெண் ஆசிரியைகளைக் கேலி செய்த மாணவர்களையும், சக மாணவிகளைக் கிண்டல் செய்த மாணவர்களையும், தேவையற்ற புகைப்படம் எடுத்த மாணவர்களையும், படிக்காமல் சுற்றித்திரியும் மாணவர்களையும் ஆசிரியர்கள் தண்டிக்க முடியாத நிலையே இன்று நிலவுகிறது.
அதனையும் மீறித் தண்டனை கொடுத்தால் கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு அந்த ஆசிரியர் உள்பட வேண்டும். இதனைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தண்டனை கொடுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், ஏதோ, இவராவது தங்களது மகன் மீது பற்றுக் கொண்டு தீய வழியில் செல்லாமல் திருத்தினாரே என்று மகிழ்ச்சி கொள்வதில்லை. மாறாக என் மகனை நீங்கள் (நீ) எவ்வாறு கண்டிக்கலாம் என ஆசிரியர்களை நோக்கி அம்பினை எய்வதுதான் ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நடக்கும் நிகழ்வுகளை அமைதியாக இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதை தவிர ஆசிரியர்களுக்கு வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்குக்கூட மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க முடியவில்லை. காரணம் இன்றைய மாணவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
இவ்விஷயத்தில் மாணவர்களை விட மாணவிகளைக் கண்டிப்பதில் ஆசிரியர்களுக்குப் பெரும் அவதியுள்ளது. இப்படிப் பள்ளிகளில் மனம் போன போக்கில் நடந்து வரும் மாணவர்களைக் கண்டிப்பதில் ஆசிரியர்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை நாளிதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்களின் மூலம் நன்கு தெரிந்து கொள்ளும் மாணவர்கள், அதைத் தங்களுக்குச் சாதகமாக்கி முடிந்தவரை தப்பித்து வருகின்றனர்.
மெட்ரிக் பள்ளிகளில் ஏராளமான பணம் கொடுத்துத் தங்களது பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்கள், தொடர்ந்து பள்ளிகளின் ஆசிரியர்களோடு தொடர்புகொண்டு விசாரித்து வருவதால் அங்கு மாணவர்கள் செய்யும் தவறு குறைக்கப்படுகிறது.
ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்களில் பலர் சேர்க்க வருவதோடு தமது கடமை முடிந்துவிட்டதாகக் கருதி பின்னர் மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்குத்தான் வருகின்றனர்.
தங்களது மகன் அல்லது மகள் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்கிறார்களா? இல்லையா? என்பது கூட பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சிலருக்குத் தங்கள் பிள்ளைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்பதுகூடத் தெரிவதில்லை என்பதுதான் உச்சகட்ட வேதனை.
இன்றைய காலநிலை மாற்றமும், ஊடகங்களின் போக்கும் எந்த அளவுக்கு மாணவர்களின் நலனைப் பாதித்து வருகின்றன என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து பள்ளிகளின் ஆசிரியர்கள், சக மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர்புகொண்டு தனது பிள்ளையின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள முற்பட வேண்டும்.
எழுத்தறிவித்தவனை இறைவனாகக்கூட கருத வேண்டாம். மனிதனாகக் கருதித் தங்களது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்காகத்தான் ஆசிரியர் செயல்படுகிறார் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட்டால் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒவ்வொருவரின் மகனும், மகளும் உயர்வார்கள். பெற்றோர்கள் சற்று சிந்திப்பார்களா?
கட்டுரையாளர் : வி. குமாரமுருகன்
நன்றி : தினமணி
தொடக்க நிலையைக் காட்டிலும் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களைக் கண்டிப்பாகப் பெற்றோர்கள் கவனத்துடன் கையாள வேண்டும். ஏனெனில் வளர்இளம் பருவத்தில் உள்ள இவர்களின் ஒவ்வொரு செயலுமே அவர்களுக்குச் சரியாகப் படும் என்பதால் இந்தப் பருவத்தில் அவர்கள் மீது கண்டிப்பாக ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
முன்பெல்லாம் பள்ளிகளில் ஆசிரியர்களைப் பார்த்தால் மாணவர்களுக்குப் பயம் கலந்த மரியாதை வருவது இயல்பாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் மாணவர்களாக இருந்தவர்கள் தற்பொழுது உயர்ந்த நிலைக்கு வந்த பின்னர் தங்களின் இந்த உயரிய நிலைக்குக் காரணம் ஆசிரியர்கள்தான் என்பதை உணர்ந்து அவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருவதையும், வீடு கட்டிக் கொடுத்துக் கொண்டாடியதையும் இன்றைய ஒவ்வோர் ஆசிரியரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
இன்றோ பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளில்கூட ஆசிரியர்களை மதிப்பதில்லை என்று ஆசிரியர் வட்டாரங்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றன. காரணம் சினிமாவிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் காமெடி நடிகரை ஆசிரியராகவோ, பேராசிரியராகவோ காட்டி, அவர்களைக் கொண்டு ஆசிரியர்களை எவ்வளவு மோசமாகச் சித்திரிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மோசமாகக் காட்டுகின்றனர்.
இக்காட்சிகளைப் பார்த்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவனுக்குத் தாமும் அதேபோல் செய்தால் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. விளைவு... மதிக்கத்தக்கவர் அல்ல ஆசிரியர் என்ற எண்ணம்தான் அவனுள் வளர்கிறது.
இது சாதாரணம். இப்படி உள்ளூர் ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் போட்டி போட்டுக் காட்டும் காட்சிகள் மாணவனின் மனதில் நஞ்சை விதைக்கின்றன. ஊடகங்கள் வருவதற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரே பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் பேசுவதைத் தாங்களாகவே தவிர்த்து வந்தனர். ஆனால் இன்றோ ஊடகங்கள் எப்படிச் சந்திக்கலாம்.. அதற்கான வழிமுறைகள் என்ன... மாட்டிக் கொண்டால் தப்பிப்பதற்கான வழிகள் என்ன என்று அத்தனையும் பட்டியல் போட்டுக் காண்பிக்கின்றன. இப்படிப் பழத்தை உரித்து வாயிலே கொடுத்தால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.
இப்படி ஊடக வெளிச்சத்தில் கரைந்து பள்ளிகளில் வைத்தே மது அருந்திய மாணவர்களையும், இன மோதல்களில் ஈடுபட்ட மாணவர்களையும், பெண் ஆசிரியைகளைக் கேலி செய்த மாணவர்களையும், சக மாணவிகளைக் கிண்டல் செய்த மாணவர்களையும், தேவையற்ற புகைப்படம் எடுத்த மாணவர்களையும், படிக்காமல் சுற்றித்திரியும் மாணவர்களையும் ஆசிரியர்கள் தண்டிக்க முடியாத நிலையே இன்று நிலவுகிறது.
அதனையும் மீறித் தண்டனை கொடுத்தால் கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு அந்த ஆசிரியர் உள்பட வேண்டும். இதனைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தண்டனை கொடுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், ஏதோ, இவராவது தங்களது மகன் மீது பற்றுக் கொண்டு தீய வழியில் செல்லாமல் திருத்தினாரே என்று மகிழ்ச்சி கொள்வதில்லை. மாறாக என் மகனை நீங்கள் (நீ) எவ்வாறு கண்டிக்கலாம் என ஆசிரியர்களை நோக்கி அம்பினை எய்வதுதான் ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நடக்கும் நிகழ்வுகளை அமைதியாக இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதை தவிர ஆசிரியர்களுக்கு வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்குக்கூட மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க முடியவில்லை. காரணம் இன்றைய மாணவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
இவ்விஷயத்தில் மாணவர்களை விட மாணவிகளைக் கண்டிப்பதில் ஆசிரியர்களுக்குப் பெரும் அவதியுள்ளது. இப்படிப் பள்ளிகளில் மனம் போன போக்கில் நடந்து வரும் மாணவர்களைக் கண்டிப்பதில் ஆசிரியர்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை நாளிதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்களின் மூலம் நன்கு தெரிந்து கொள்ளும் மாணவர்கள், அதைத் தங்களுக்குச் சாதகமாக்கி முடிந்தவரை தப்பித்து வருகின்றனர்.
மெட்ரிக் பள்ளிகளில் ஏராளமான பணம் கொடுத்துத் தங்களது பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்கள், தொடர்ந்து பள்ளிகளின் ஆசிரியர்களோடு தொடர்புகொண்டு விசாரித்து வருவதால் அங்கு மாணவர்கள் செய்யும் தவறு குறைக்கப்படுகிறது.
ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்களில் பலர் சேர்க்க வருவதோடு தமது கடமை முடிந்துவிட்டதாகக் கருதி பின்னர் மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்குத்தான் வருகின்றனர்.
தங்களது மகன் அல்லது மகள் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்கிறார்களா? இல்லையா? என்பது கூட பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சிலருக்குத் தங்கள் பிள்ளைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்பதுகூடத் தெரிவதில்லை என்பதுதான் உச்சகட்ட வேதனை.
இன்றைய காலநிலை மாற்றமும், ஊடகங்களின் போக்கும் எந்த அளவுக்கு மாணவர்களின் நலனைப் பாதித்து வருகின்றன என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து பள்ளிகளின் ஆசிரியர்கள், சக மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர்புகொண்டு தனது பிள்ளையின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள முற்பட வேண்டும்.
எழுத்தறிவித்தவனை இறைவனாகக்கூட கருத வேண்டாம். மனிதனாகக் கருதித் தங்களது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்காகத்தான் ஆசிரியர் செயல்படுகிறார் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட்டால் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒவ்வொருவரின் மகனும், மகளும் உயர்வார்கள். பெற்றோர்கள் சற்று சிந்திப்பார்களா?
கட்டுரையாளர் : வி. குமாரமுருகன்
நன்றி : தினமணி
Labels:
ஆசிரியர்,
கட்டுரை,
பெற்றோர்,
மாணவர்
Subscribe to:
Posts (Atom)
