Showing posts with label ரயில்வே. Show all posts
Showing posts with label ரயில்வே. Show all posts

Friday, July 10, 2009

இன்னும் ஒரு மாதத்தில் இரண்டு பாயின்ட்- டு -பாயின்ட் ரயில்கள் இயக்கப்படும் : மம்தா பானர்ஜி

கடந்ø மூன்றாம் தேதி ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, 'டுரோன்டோ ' என்ற பெயரில் புதிதாக 12 நான்-ஸ்டாப், பாயின்ட்- டு -பாயின்ட் ரயில்கள் இயக்கப்படும் என்றார். அவைகளில் இரண்டு ரயில்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள்ளாகவேஇயக்கப்படும் என்றார் அவர். செகந்தராபாத்தில் இருந்து ஒரு ரயில் புதுடில்லிக்கும், நாக்பூரில் இருந்து ஒரு ரயில் புதுடில்லிக்கும் புறப்பட்டு செல்லும் என்றார். இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் இந்த வகை நான்-ஸ்டாப் ரயில்களில் ஏர்-கன்டிஷன் மற்றும் ஏர்-கன்டிஷன் அல்லாத பெட்டிகள் இணைக்கப் பட்டிருக்கும். மம்தா அறிவித்த இன்னொரு புதிய ரயிலான டபுள்-டெக்கர் ரயில் இன்னும் ஒரு வருட காலத்தில் இந்தியாவில் ஓடத்துவங்கும் என சொல்லப்படுகிறது. ரயில்வே பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பதிலளித்த மம்தா, ரயில்வே பட்ஜெட்டில் சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் இன்னும் ஒரு வருடத்தில் செயல்பட துவங்கும் என்றார். மேலும் ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டின் ( ஆர் ஆர் பி ) செயல்பாடுகள் மாற்றி அமைக்கப்படும் என்றார். அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத வேலைகள் ஒதுக்கப்படும் என்றும், ரயில்வே துறை நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வுகளில் அந்தந்த மாநில மொழிகளிலேயே கேள்விகள் கேட்கப்படும் என்றார்.
நன்றி : தினமலர்


Saturday, July 4, 2009

ரயில்வேயின் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைக்கும் வேலை தொடர்பாக நிபுணர் குழு அமைப்பு

இந்திய ரயில்வேயின் நெட்வொர்க் பணிக்காக, இந்தியா முழுவதும் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கண்காணித்து, ஆதை மேம்படுத்த ஆலோசனை சொல்ல,மற்றும் திட்டங்கள் தீட்ட, ஒரு நிபுணர் குழு அமைக்கப் படுகிறது. அந்த குழு, இந்தியாவின் டெலிகாம் துறையில் புரட்சியை ஏற்படுத்திய சாம் பிட்ரோடாவை தலைவராக கொண்டு செயல்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார். இந்த குழு, ரயில்வேயில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கில் என்னென்ன புதுமைகளை செய்யலாம் என்றும், இதன் மூலம் நாட்டின் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கும் தகவல் தொழில் நுட்பத்தை எப்படி கொண்டு செல்லலாம் என்றும் ஆராய்ந்து ஆலோசனை சொல்லும் என்று மம்தா தெரிவித்தார். ரயில்வேயில் ஆப்டிக்கல் ஃபைபர் அமைக்கும் பணியை ஏற்கனவே ரெயில்நெட் என்ற நிறுவனம் ஏற்று செய்து வருகிறது. இந்த நிறுவனம் தான் இந்திய டெலிகாம் துறையில் இருந்து அதற்கு தேவையான உரிமத்தை பெற்றிருக் கிறது. ஏற்கனவே ரயில் பாதைகளில் சுமார் 30,000 கி.மீ.தூரத்திற்கு அது ஆப்டிக்கல் ஃபைபர் கேபிளை அமைத்தும் இருக்கிறது. அதனை விரையில் 40,000 கி.மீ.தூரத்திற்கு விரிவு படுத்தவும் அது முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்