Showing posts with label விஞ்ஞானி. Show all posts
Showing posts with label விஞ்ஞானி. Show all posts

Wednesday, June 8, 2011

யாரிடம் சொல்லி அழ?


கடந்த வாரம் ஜெர்மானிய அரசு ஒரு முடிவு எடுத்தது. அதாவது, நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைக் கூடங்களையும் படிப்படியாக 11 ஆண்டுகளில் மூடிவிட வேண்டும். 2022-ம் ஆண்டில் ஜெர்மனியில் அணுஉலைக் கூடங்களே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் அது.


இதற்கு அவசியமில்லை என்று ஜெர்மனியின் அதிபர் ஆஞ்செலா மெர்க்கெல் தனிப்பட்ட முறையில் சில மாதங்களுக்கு முன்பும்கூட கருத்து தெரிவித்திருந்தாலும், அவரும் நாடாளுமன்றத்தின் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறார். வேறு வழியில்லை. இதற்கு ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை என இரண்டு இயற்கைச் சீற்றங்களும் ஒருசேரத் தாக்கியதில் ஃபுகுஷீமா அணுஉலை பாதிக்கப்பட்டது முதல் உலக நாடுகள் மற்றும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் அச்சமும் விழிப்புணர்வும்தான் காரணம். இப்போது உடனடியாக 7 அணுஉலைக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.

அதேசமயம் இந்தியாவில் ஒரு நிலைப்பாடு மேற்கொள்ளப்படுகிறது. ஜெய்தாபூரில் அணுஉலைக்கூடம் அமைத்தே தீருவோம் என்று அரசு சொல்கிறது.

இதற்கு அரசுத் தரப்பில் தரப்படும் விளக்கம்: இத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அணுஉலைக் கூடம் மூலம் மின்உற்பத்தி மிகமிக அவசியத் தேவையாக இருக்கிறது. இப்போது அணுஉலைக் கூடங்கள் மூலம் நம் நாட்டுக்குக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 3 விழுக்காடு மட்டுமே. 2020-ம் ஆண்டு இது 6 விழுக்காடாக உயரும். 2030-ம் ஆண்டு இது 12 விழுக்காடாக உயரும். பாதுகாப்பு முறைகளில்தான் சிறிது மாற்றங்கள் தேவை. அதில் முழுமையாகக் கவனம் செலுத்தினால் பிரச்னையே இல்லை.

இதை இந்திய அரசு சொல்லும்போது நாம் ஜெர்மனியை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெர்மனியில் அணுமின் உலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் 22 விழுக்காடு. அதாவது நான்கில் ஒரு பங்கு மின்சாரம் அணுஉலைக் கூடங்கள் மூலம்தான் அவர்களுக்குக் கிடைத்து வருகிறது. ஆனாலும் அதை இழக்கத் துணிகிறார்கள். எதற்காக? மக்கள் நல்வாழ்வுக்காக.

ஃபுகுஷீமா அணுஉலை விபத்தால் குடிநீரிலும்கூட கதிர்வீச்சின் தாக்கம் இருக்கும் நிலைமையைக் கண்கூடாகக் கண்டுவிட்டதால் ஏற்பட்ட முடிவு இது. மக்கள் நலன் கருதி இந்த முடிவை அவர்கள் மேற்கொள்கிறார்கள். பிற இயற்கை ஆதாரங்கள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முடிவை ஏற்றுக் கொள்கிறார்கள். மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, ஆபத்தைத் தெரிந்தே அரவணைப்பது மடமை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அணுஉலைக் கூடங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் ஜெர்மனி அரசுக்கும்கூட நன்றாகத் தெரியும். அவர்கள் நம்மைவிட பொறுப்பாக இந்தப் பணிகளில் ஈடுபட்டு, பாதுகாப்புக்கு அதிக அக்கறை தரக்கூடியவர்கள்தான். ஆனால் அவர்கள் அறிந்திருக்கிறார்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவை யாவும் இயற்கைச் சீற்றங்களுக்கு முன்பாக அர்த்தமற்றவை என்பதை.

இந்தியாவின் அணுஉலைக் கூடங்கள் பாதுகாப்பற்றவை என்பது மட்டுமல்ல, இவற்றுள் தீவிரவாதிகள் புகுந்து அணுஆயுதம் செய்வதற்கான மூலப்பொருள்களைத் திருடிச் செல்வதென்பது வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் மிகவும் எளிது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இதை மும்பைத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவு இருந்தும் இந்திய அரசு சொல்கிறது - பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரி செய்துவிட்டால் போதுமானது. அணுஉலைக் கூடங்களால் பிரச்னை இருக்காது என்று. எவ்வளவு பொறுப்பற்றதனம்?

அண்மையில் ஜெய்தாபூரில், அணுஉலைக் கூடத்துக்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியை அரசு அடக்கி ஒடுக்கிவிட்டது என்றே சொல்லலாம். இந்த மக்களின் எதிர்ப்பு அரசியலாக்கப்பட்டு, அரசியல் சண்டையாக மாற்றப்பட்டதால் மக்களின் ஈனக்குரல் அமுங்கிவிட்டது. அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் அணுஉலைக் கூடம்தான் இந்தியாவிலேயே மிகப் பெரியது. இந்த அணுஉலைக் கூடத்தின் மின்உற்பத்தித் திறன் 9,900 மெகாவாட். இதற்காக இங்கே 2,400 ஏக்கர் நிலத்தை அரசு ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜெய்தாபூரில் அணுஉலை அமையவிருக்கும் பகுதி பல்லுயிர் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இடங்களில் முக்கியமானது. ஆனாலும் அந்த இடத்தைத்தான் இந்திய அணுமின் கழகம் தேர்வு செய்துள்ளது. அதற்கு அணு ஆற்றல் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இடத்தில் அணுஉலை அமையுமானால், இந்த பல்லுயிர் பெருக்கம் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது.

மேலும், நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் கொண்ட 4-வது நிலையில் உள்ள பகுதி இது என்று பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் இந்த இடத்தில் அணுமின் உலை வைப்பது எந்த விதத்தில் சரியான முடிவாக இருக்கும்? அமைக்கப்படவுள்ள ஈபிஆர் எனப்படும் புதிய தொழில்நுட்பத்திலான உலைகள், இதுவரை பரிசோதனைக்கு உட்படாதவை. இவற்றின் நன்மை தீமையை யார் அறிவார்? பிறகு எந்த தைரியத்தில் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக அரசு கூறுகிறது?

இந்தியாவில் கிடைக்கும் யுரேனியம் 10,000 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு மட்டுமே போதுமானது. இதற்கும் மேலாக, அணுமின் உற்பத்தியை அதிகரித்தால் யுரேனியத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தாக வேண்டும். இதற்கு ஆயிரம் கெடுபிடிகள், ஒப்பந்தங்கள், தடைகள். இதையும் மீறி இறக்குமதி செய்தாலும் அவற்றின் விலை அப்போது மேலதிகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இந்தியாவின் மின் தேவை ஒவ்வோராண்டும் 10 விழுக்காடு அதிகரிப்பதாகவும் அதனால்தான் இத்தகைய முடிவுகளை மேற்கொள்வதாகவும் அரசு காரணம் கூறுகிறது. இது ஒரு நொண்டிச் சாக்கு. இந்தியாவின் மின்உற்பத்தி தட்டுப்பாடு 13 விழுக்காடு என்றால், மின்விநியோகத்தில் வழித்தட இழப்பு 28 விழுக்காடாக இருக்கிறது. இப்போது இருக்கும் மின்உற்பத்தி நிலையங்களை அதன் முழுஉற்பத்தித் திறனுக்குப் பயன்படுத்தி, வழித்தட மின்இழப்பை 10 விழுக்காடாகக் குறைத்தாலே போதும். மின்தட்டுப்பாடு நீங்கிவிடும்.

மக்களைப் பற்றியும், நாளைய தலைமுறை பற்றியும் கவலைப்படாமல் பன்னாட்டு நிறுவனங்களின் மின்தேவையைப் பற்றி மட்டுமே அரசு கவலைப்பட்டால், இப்படியெல்லாம்தான் முடிவுகள் எடுக்கப்படும்!
நன்றி : தினமணி


Monday, December 21, 2009

காலில் அணி​வ​தைக் கழுத்​தில் மாட்டும் விஞ்​ஞா​னம்

வேளாண்​மை​யும் மனி​த​நல வாழ்​வும் சீர்​மிகு சிறப்​பு​டன் விளங்க வேண்​டு​மென்று எண்​ணிய முன்​னோ​டி​கள் ஆயி​ரம் பேர் இருந்​தா​லும்,​​ இரண்டு மாபெ​ரும் விஞ்​ஞா​னி​க​ளின் சேவை​களை எண்​ணி​னால்,​​ இன்று வாழும் வேளாண்​மைப் பேரா​சி​ரி​யர்​கள் வெட்​கப்​பட வேண்​டும்.​ அந்த இரு​வர்​க​ளில் ஒரு​வர் ஆல்​பர்ட் ஹோவார்டு.​ மற்​றொ​ரு​வர் ஆல்​பர்ட் ஷாட்ஸ்.​ ஒரு​வர் இந்​தி​யா​வில் வாழ்ந்த இங்​கி​லாந்​துப் பேரா​சி​ரி​யர்.​ மற்​றொ​ரு​வர் அமெ​ரிக்​கா​வில் வாழ்ந்த யூத-​ரஷிய விஞ்​ஞானி.​

யாருக்கு யாரி​டம் பாடம் என்ற தின​மணி ​(24-8-09) கட்​டுரை மூலம்,​​ ஆல்​பர்ட் ஹோவார்டு அறி​மு​க​மா​கி​விட்​டார்.​ ரசா​யன விவ​சா​யத்​தால் எதிர்​கா​லத்​தில் நிக​ழப்​போ​கும் ஆபத்​து​க​ளைக் குறிப்​பாக மண்​வ​ளம் இழப்பு,​​ மனி​த​வ​ளம் இழப்பு-​அதா​வது நோய் எதிர்ப்பு சக்​தி​யில்​லா​மல் மருந்து மாத்​தி​ரை​க​ளுக்கு அடி​மை​யா​கப் போகும் மனி​த​கு​லம் பற்​றி​யெல்​லாம் 1920-களில் சுமார் 100 ஆண்​டு​க​ளுக்கு முன்பே எச்​ச​ரித்​த​வர்,​​ ஆல்​பர்ட் ஹோவார்டு.​

இந்​திய விவ​சா​யத்​தில் ரசா​யன உரம் இல்​லா​ம​லேயே உற்​பத்​தியை உயர்த்த மண்​ணில் கரிய விழு​து​க​ளைப் பதிக்க-​அதா​வது ஹு​மஸ் பற்​றிய ஆய்​வு​க​ளுக்கு வித்​திட்​டார்.​ பிரிட்​டிஷ் ஆட்​சி​யில் வேளாண்மை ஆலோ​ச​க​ரா​கப் பணி​பு​ரிந்த ஹோவார்​டுக்கு எதிர்ப்​பு​கள் விளைந்​தன.

​ ""வேளாண்​மைக்கு உயில்'' எழு​தி​ய​வர் ரசா​யன உரங்​க​ளை​யும் பூச்​சி​ம​ருந்து விஷங்​க​ளை​யும் அவற்​றின் தொடக்க காலத்தி​லி​ருந்து எதிர்த்​த​வர்.​ இவர் வழங்​கிய மாற்​றுத்​திட்​டம் அதா​வது மண்​வ​ளத்​து​டன் இயற்கை வழி​யி​லேயே உயர்ந்த விளைச்​சல் பெறும் ஆராய்ச்​சி​க​ளுக்​குப் புசா​வில் வாய்ப்பு இல்லை.​ இந்​தி​யா​வின் வேளாண்மை ஆராய்ச்​சிக் கழ​கத்​தின் முதன்மை வேளாண் ஆலோ​ச​க​ருக்கு நெருக்​கடி வந்​தது.​ உர நிறு​வ​னங்​க​ளுக்கு ஒரு கைப்​பா​வை​யாக விவ​சாய ஆராய்ச்​சி​கள் திசை​தி​ரும்​பி​ய​தால்,​​ ஹோவார்​டுக்கு சோதனை வந்​தது.​ புசாவி​லி​ருந்து ஹோவார்டு வெளி​யே​றி​னாரா,​​ வெளி​யேற்​றப்​பட்​டாரா என்​ப​தில் தெளிவு இல்லை.​

வே​ளாண்மை உயி​லைப் புரட்​டிப் பார்த்​தால்,​​ புசாவி​லி​ருந்து ஏன் இந்​தூர் தர்​பா​ருக்கு வந்​தார் என்​ப​தற்கு இவ்​வாறு ஹோவார்டு நொந்​து​கொண்ட வரி​கள்:​ ""ஒரு பயிர் நோயின்றி நல்​ல​படி வளர்ந்து திட​மாக வாழ்ந்து உயர்ந்த அள​வில் உற்​பத்தி பெற அப் பயி​ரின் கீழ் வள​மான கரிம விழு​து​கள் மண்​ணில் பர​வ​லாக வேண்​டும்.​ அதற்​கேற்ற வகை​யில்,​​ நாம் வழங்க வேண்​டிய குண​ப​எரு நிலை,​​ நைட்​ர​ஜன் கார்​பன் விகி​தம் 1 :​ 10 என்ற அள​வில் நிலவ வேண்​டும்.​ முறை​யான அளவு அவ​சி​யம்.​ புசா​வில் வேளாண்மை ஆராய்ச்சி என்​றால் அதை மண்​ணோடு தொடர்பு செய்​யா​மல்,​​ விதைப்​பெ​ருக்​கம்,​​ பூச்​சி​யி​யல்,​​ பூச​ண​யி​யல்,​​ பயி​ரி​யல் என்று பல​வி​த​மான துறைப் பிரி​வு​கள் முளைத்​து​விட்​டன.​ மண்​வ​ளம் பற்​றிய யோச​னையோ ஆய்வோ...​ இல்லை...'' பின்​னர் இவர் மண்​ணில் கரிம விழு​து​கள் பற்​றிய ஆராய்ச்​சி​யைத் தொடர,​​ விதர்​பா​வில் உள்ள காட்​டன் கமிட்டி முன்​வந்து,​​ இந்​தூர் சமஸ்​தான ஆத​ர​வு​டன் 100 ஏக்​கர் நிலம் 100 ஆண்டு குத்​தகை என்ற அடிப்​ப​டை​யில் பெற்று,​​ ஆராய்ச்​சியை அன்று தொடங்கி மண்​வ​ளத்தை உயர்த்​தி​ய​தால்​தான்,​​ இன்​று​வரை மத்​திய மாகா​ணங்​க​ளில் பருத்தி உற்​பத்​தித்​தி​றன் கூடி​யது.​

மண்​வ​ளம் வேறு,​​ மண்​ணில் ஹு​மஸ் என்​பது வேறு.​ இன்​றைய விஞ்​ஞா​னி​கள் ஹு​மஸ் என்​றால் இயற்கை உரம் இடு​வது என்று பொருள்​ப​டப் புரிந்து கொள்​கின்​ற​னர்.​ சுருக்​க​மா​கச் சொல்​வ​தா​னால் பத்​தாம் நூற்​றாண்​டில் சுர​பா​லர் எழு​திய விருட்​சா​யுர்​வே​தம் திருக்​கு​ற​ளைப்​போல் ஈரடி வெண்​பா​வைப்​போல் பாடப்​பட்​டது.

தி​ருக்​கு​ற​ளுக்​குப் பரி​மே​ல​ழ​கர் உரை எழு​தி​ய​தைப்​போல்,​​ ஆல்​பர்ட் ஹோவார்டு எழு​தி​யுள்ள ""வேளாண்மை உயில்'' படிக்​கப் படிக்​கப் புதிய பொருள்​க​ளைத் தரு​கி​றது.​ குண​ப​ஜ​லமே ஹு​மஸ் என்று பொருள்​பட இவ​ரு​டைய இந்​தூர் கம்​போஸ்​டிங் உள்​ளது.​ நாற்​பது பக்​கங்​க​ளில் ஹோவார்டு கூறி​யதை நாலு வரி​க​ளில் சொல்​வது இய​லாது என்​றா​லும் அடிப்​படை இதுவே.​

ஹோவார்டு இந்​தி​யா​வில் பணி​பு​ரிந்த கால​கட்​டத்​தில் ​(1906-32) விவ​சா​யி​க​ளி​டம் மாடு இருந்​தது.​ மாட்​டுக்​கொட்டி​லில் சிமெண்​டுத்​த​ளம் இல்லை.​ மண்​த​ரை​யில் கட்​டு​வார்​கள்.​ மண்​த​ரை​யில் மாட்​டின் சாண​மும் கோம​ய​மும் விழா​மல் இருக்க தின​மும் மாட்​டுக்கு ஒரு படுக்கை போட வேண்​டும்.​ அது அறு​வ​டைக்​க​ழி​வாக இருக்க வேண்​டும்.​ பெரும்​பா​லும் தட்​டைப்​புல்-​வைக்​கோல்,​​ துவ​ரைக்​கொடி,​​ கட​லைக்​கொடி,​​ கரும்​புச்​சோகை,​​ வாழைச்​சோகை அவற்​றின்​மீது மரத்​தூள்-​இப்​ப​டிப்​பட்ட படுக்கை இந்​தூர் பண்​ணை​யில் அமைக்​கப்​பட்​டது.​ அதன் நைட்​ர​ஜன்:​ கார்​பன் ரேஷியோ 1 :​ 33.​ அப்​ப​டுக்​கை​யின் மீது இரவு மாடு​கள் கழிக்​கும் கோம​யம்,​​ சாணம் சேர்ந்து ஒரு பயி​ருக்​குத் தேவை​யான ஹு​மûஸ அதா​வது 1 :​ 10 என்ற அள​வில் தழைச்​சத்து உயர்ந்து கார்​பன் சத்து குறைந்து மக்​கும் நிலை உருப்​பெ​று​கி​றது.​ தினம் மாட்​டுத் தொழு​வத்​தைக் கூட்ட வேண்​டாம்.​ அப்​ப​டியே வாரிச்​சு​ருட்டி தோட்​டத் தரி​சில் போட்டு விட வேண்​டும்.​ மாடு​க​ளின் அள​வைப் பொருத்து 1 மாதத்​தில் 50 செண்டு நிலத்​தில் உரத்​தையே உலர்​மூ​டாக்கு செய்து சற்று மக்​கிய பின்பு உழுது விதைத்​து​வி​ட​லாம்.​ அவ​ர​வர் வச​திப்​படி முட்​டுப்​ப​டுக்​கை​யா​கப் போட​லாம்.​ குவி​ய​லா​கப் போட்​டும் மக்க மக்க அள்​ள​லாம்..​ 1935-க்குப் பின் இங்​கி​லாந்து திரும்​பிய ஹோவார்டு இம்​மு​றைக்கு இந்​தூர் கம்​போஸ்​டிங் என்று பெய​ரிட்​டுத் தன் தாய்​நாட்​டை​யும் வளப்​ப​டுத்​தி​யுள்​ளார்.​ ஆயி​ரக்​க​ணக்​கான இங்​கி​லாந்து விவ​சா​யி​களை இயற்கை விவ​சா​யத்​துக்கு மாற்​றிய பெருமை இவ​ருக்கு உண்டு.​

இக்​கால ரசா​யன விஞ்​ஞா​னி​கள் இயற்கை விவ​சா​யத்தை எதிர்த்து என்ன பேசி​னார்​களோ ஹோவார்டு வாழ்ந்த அந்​தக் காலத்​தி​லும் பேசி​யுள்​ளார்​கள்.​ 1920-30 கால​கட்​டத்​தில் ரசா​யன உரம் விலை மலிவு.​ அதைக் கார​ணம் காட்டி மரத்​தூள்,​​ சாணம்,​​ வைக்​கோல் எல்​லாம் விலை அதி​கம் என்று ரசா​ய​ன​வா​தி​கள் கூறி​ய​தற்கு அவர் வழங்​கிய ஒரே பதில் இதுவே:​ ""இயற்கை எரு​வைப் பெறும் உரிமை மண்​ணுக்கு உள்​ளது.​ இந்த மண் உரி​மை​யைத் தட்​டிப் பறித்​தால் மண் இறந்​து​வி​டும்...'' மண் இறந்​து​வி​டும் என்​றால் அம்​மண்​ணில் நுண்​ணு​யி​ரி​கள் பூண்​டோடு அழி​யும் என்று பொருள்.​

ஹோ​வார்டை இத்​து​டன் நிறுத்​திக் கொண்டு ஷாட்​சின் கதை​யைத் தொடங்​கு​வோம்.​

ஆல்​பர்ட் ஷாட்ஸ் ஹோவார்டு காலத்​தில் வாழ்ந்த யூத-​ரஷிய விஞ்​ஞானி.​ நிற​வெ​றி​யால் இவர் தாத்தா ரஷி​யாவி​லி​ருந்து விரட்​டப்​பட்​டார்.​ அவர் அமெ​ரிக்​கா​வில் கனக்​டிக்​கட் மாநி​லத்​தில் போஸ்ரா என்ற சிற்​றூ​ரில் 140 ஏக்​க​ரில் ஒரு சிறு விவ​சா​யப் பண்​ணையை உரு​வாக்​கி​னார்.​ அமெ​ரிக்​கா​வில் 140 ஏக்​கர் நில​முள்​ள​வர் சிறு விவ​சாயி.​ அப்​போது சின்​னப்​பை​ய​னாக இருந்த ஷாட்​சுக்கு விவ​சா​யத்​தின்​மீது கொள்ளை ஆசை.​ விவ​சா​யம் என்​றால் அது மண்​ணைப் பற்​றிய படிப்பு என்று அச்​சி​று​வன் புரிந்​து​கொண்டு ராணு​வத்​தில் சேர்ந்து புளோ​ரிடா ராணுவ மருத்​து​வ​ம​னை​யில் பணி​பு​ரிந்​து​கொண்டே மண்​ணு​யி​ரி​யல்,​​ நுண்​ணு​யி​ரி​யல் ஆகிய துறை​க​ளில் ரட்​கர்ஸ் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பிற்​கா​லத்​தில் முனை​வர் பட்​டம் பெறும் முன்பே,​​ ஸ்ட்​ரப்​டோ​மை​சீ​னைக் கண்​டு​பி​டித்​த​வர்.​ இவர் ஸ்ட்​ரப்​டோ​மை​சீ​னைக் கண்​டு​பி​டிப்​ப​தற்கு முன்பு உல​கில் அது​வரை காச​நோய்க்கு மருந்து இல்​லா​மல் கோடிக்​க​ணக்​கான மக்​கள் காச​நோய் வந்து இறந்​த​தாக வர​லாறு கூறும்.​ இவர் புளோ​ரிடா ராணுவ மருத்​து​வ​ம​னை​யில் பணி​பு​ரிந்து கொண்டே பல வகை​யான மண்​களை-​ ஏரி​மண்,​​ சேற்று மண்,​​ தோட்ட மண்,​​ ஆற்​றோர மண்,​​ அலை​யாத்தி மண் என்று சேக​ரித்து ஆராய்ந்​த​வண்​ணம் இருந்​த​போது ஒரு​வ​கை​யான குண​ப​நுண்​ணு​யி​ரி​க​ளைக் கண்​டு​பி​டித்​தார்.​ அது காச​நோய்க் கிரு​மி​யைக் கொல்​லுமா என்ற கேள்​வி​யு​டன்,​​ டூபர்​கு​ளோ​சிஸ் என்ற பாக்​டீ​ரி​யாக்​க​ளைப் பெற விரும்​பி​னார்.​ அப்​போது எந்த மருத்​து​வ​ரும் துணி​வு​டன் காச​நோய்க் கிரு​மியை ஆராய முன்​வ​ர​வில்லை.​ இவ​ருக்கு ஒரு​பா​தாள அறை ஒதுக்​கப்​பட்​டது.​ இரவு பக​லாக அந்​தப் பாதாள இருட்​ட​றை​யில் டூபர்​கு​ளோ​சிஸ் பாக்​டீ​ரியா காச​நோய்க் கிரு​மி​யைக் கையாண்டு,​​ அதைத்​தான் கண்​டு​பி​டித்த ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் காச​நோய் பாக்​டீ​ரி​யா​வைக் கொல்​வ​தை​யும் கண்​டு​பி​டித்து,​​ இந்த விஷ​யத்தை இவ​ருக்கு உத​வி​யாக இருந்த பேரா​சி​ரி​ய​ரி​டம் கூறி​னார்.​ அப்​போது ஷாட்ஸ் 23 வயது இளை​ஞர்.​ உல​கம் அறி​யா​த​வர்.​ இவர் யூதர்,​​ ரஷி​யர்,​​ மாண​வர் என்​றெல்​லாம் குறை கூறி ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் மருந்​தை​யும் அதன் விருத்​திக்​கான நுட்​பத்​தை​யும் மருந்து நிறு​வ​னத்​துக்கு அப்​பே​ரா​சி​ரி​யர் விற்​றுப்​ப​ணம் சம்​பா​தித்​தது மட்​டு​மல்ல,​​ நோபல் பரி​சை​யும் தட்​டிப் பறித்​தார்.​ பின்​னர் மிக​வும் போரா​டிய ஷாட்ஸ் குறைந்​த​பட்​சம் ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் தனது கண்​டு​பி​டிப்பு என்​ப​தைச் சான்​று​றுதி செய்​தார்.​ ஸ்ட்​ரப்​டோ​மை​சீன் என்​றால் "பின்​ன​லான காளான் நுண்​ணு​யிர்' என்று பொருள்.​ கோழி​யின் தொண்​டை​யில் இருந்த ஒரு பாக்​டீ​ரி​யாவை மண்ணி​லி​ருந்து பெற்ற காளான் நுண்​ணு​யி​ரி​யைக் கலந்து உரு​வான குண​பமே ஸ்ட்​ரப்​டோ​மை​சீன்.​ இவர் இந்த நுண்​ணு​யி​ரி​யைப் பெருக்​கிப் பயிர்​கள் மீது தெளித்​துப் பயிர்​க​ளுக்கு ​ வரும் பூசண நோய்,​​ பூச்சி நோய் ஆகி​ய​வற்​றை​யும் குணப்​ப​டுத்​தி​னார்.​

பிற்​கா​லத்​தில் ஷாட்ஸ் மண்​ணில் உள்ள கரி​ம​வி​ழு​தா​கிய ஹு​மஸ் பற்​றிய ஆய்​வி​லேயே முழுக்​க​வ​னத்​தை​யும் செலுத்​தி​னார்.​ ரசா​யன உரங்​கள் அறி​மு​க​மா​வ​தற்கு முன்பு மண்​ணில் உள்ள நுண்​ணு​யி​ரி​கள் பற்​றிய ஆராய்ச்​சியை ரஷி​யா​வின் பல்​க​லைக்​க​ழ​கங்​கள் மட்​டுமே மேற்​கொண்​டது.​ ஒரு பயி​ரைப் பற்​றிப் படிப்​ப​தற்கு முன் ​ ​

வேரின் கீழுள்ள மண்​ணைப் பற்​றிப் படிக்க வேண்​டும் என்​பது ரஷிய விஞ்​ஞா​னி​க​ளின் கருத்து.​ பெடா​லஜி என்ற துறை ரஷி​யா​வில் மட்​டுமே இருந்​தது.​ ஆனால் அவை ரஷிய மொழி​யில் இருந்​தன.​ ஷாட்ஸ் ரஷிய மொழி கற்று அத்​து​றை​யின் ஆய்​வு​க​ளை​யெல்​லாம் கரைத்​துக் குடித்து அமெ​ரிக்​கா​வில் இயற்கை விவ​சா​யம் பர​வக் கார​ண​மா​னார்.​

இவர் கூறிய ஒரு கருத்து இன்​றைய விஞ்​ஞா​னி​க​ளுக்​குப் பாடம் புகட்​டும்.​ ஆனால் ஷாட்ஸ் அன்​றைய வேளாண் விஞ்​ஞா​னி​க​ளைப் பற்றி இவ்​வாறு கூறி​யுள்​ளார்:​

""இன்று மண்​விஞ்​ஞா​னி​கள் என்று கூறும் பேரா​சி​ரி​யர்​க​ளின் செயல்​பா​டு​கள் வெட்​கக்​கே​டா​னது.​ நான் என்னை ஒரு மண்​விஞ்​ஞானி என்று கூறவே வெட்​க​மா​யுள்​ளது.​ மண்​ணில் ரசா​ய​னங்​களை இட்டு அந்த விளை​வைப் பயிர்​க​ளில் எடுத்​துக்​காட்​டும் செயற்​கைக்கு விவ​சா​யம் விலை​போய் விட்​டது.​ ஒரு மண்​விஞ்​ஞா​னிக்​கும் உழ​வி​யல் விளைச்​சலை மட்​டும் கணக்​குப் பார்க்​கும் பண்ணை நிர்​வா​கிக்​கும் என்ன வித்​தி​யா​சம்?​ மண் ஆய்வு என்​பது ரசா​யன உர நிறு​வ​னங்​கள் வழங்​கும் ஒரு பாடத்​திட்​ட​மா​கி​விட்​டது.​ ரசா​யன உர நிறு​வ​னங்​க​ளின் கொழுத்த லாபத்​துக்​கா​கவே வேளாண்​மைப் பல்​க​லைக்​க​ழ​கப் பேரா​சி​ரி​யர்​கள்,​​ விஞ்​ஞா​னி​கள் உழைக்​கின்​ற​னர்.​ மண் ஆராய்ச்​சிப் பட்​டப்​ப​டிப்​பு​கள் மண்​ணுக்கு உத​வா​மல் ரசா​யன உர நிறு​வ​னங்​க​ளின் வரு​மா​னத்​துக்கு உத​வு​கின்​றன.​ மண் விஞ்​ஞா​னி​க​ளுக்கு ரசா​யன உரக் கம்​பெ​னி​கள் கொழுத்த சம்​ப​ளம் தரு​கின்​றன.​ தேனில் விழுந்த ஈக்​க​ளைப்​போல் வேளாண்​மைப் பட்​டம் பெற்ற பேரா​சி​ரி​யர்​க​ளும் மாண​வர்​க​ளும் ரசா​யன உர ஊறல்​க​ளில் விழுந்​து​விட்​ட​னர்.​ ஆண்​டுக்கு ஆண்டு தலை​முறை தலை​மு​றை​யாக காலம் செல்​லச் செல்ல மண்​ணில் உள்ள குண​ப​ரச ஆய்வு-​மண்​வி​ழு​து​க​ளைப் பற்​றிய ஆய்வு மண்​ணில் உள்ள நுண்​ணு​யி​ரி​கள் பற்​றிய ஆய்வு ஆகிய அற்​புத விஷ​யங்​கள் கிடப்​பில் போடப்​பட்​டு​விட்​டன'' பிற்​கா​லத்​தில் ஷாட்ஸ் மண்​ணில் இருக்க வேண்​டிய லைகன் என்ற ஒரு​வ​கைப் பாசி உயி​ரி​யின் கரைக்​கும் ஆற்​றலை அறிந்து,​​ அது​போன்ற நுண்​ணு​யி​ரி​களே மண்​ணில் உள்ள உலோ​கச் சத்​தைக் கரைத்து உயர்ந்த விளைச்​சலை ஏற்​ப​டுத்​து​கின்​றன என்​றார்.​ மண்​ணில் நுண்​ணு​யி​ரி​கள் இருக்க வேண்​டும்.​ ரசா​ய​னம் இருக்க வேண்​டும் என்று கூறும் மண்​விஞ்​ஞா​னி​களை என்ன செய்​வது?​ இந்​தி​யா​வில் எல்லா மாநி​லங்​க​ளும் மர​பணு மாற்ற விதை​க​ளைப் புறக்​க​ணித்​துள்​ளன.​ கேரள அரசு மர​பணு மாற்ற விதைக்​குத் தடை விதித்து விட்​டது.​ எனி​னும்​கூட தமிழ்​நாடு பல்​க​லைக்​க​ழ​கப் பேரா​சி​ரி​யர் மாலிக்​யூ​லர் பயா​லஜி கற்​ற​வர்,​​ பி.ட்டி கத்​த​ரிக்​காய் விஷ​மில்லை என்​றும்,​​ அதில் உள்ள ஒரு பாக்​டீ​ரியா மண்ணி​லி​ருந்து எடுக்​கப்​பட்​டது என்​றும் கூறு​கி​றார்.

​ இன்று ஹோவார்டோ,​​ ஷாட்சோ உயி​ரு​டன் இருந்​தால் அந்​தப்ó பேரா​சி​ரி​ய​ருக்கு இவ்​வாறு பதில் வழங்​கி​யி​ருப்​பார்:​ ""மண்​ணுக்​குள் செய்ய வேண்​டிய உயிர் விஞ்​ஞா​னம் உயி​ரித்​தொ​ழில்​நுட்​பம்.​ அதை மண்​ணில்​தான் செய்ய வேண்​டும்.​ அதற்கு மர​பணு மாற்​றம் என்று மகு​டம் சூட்​டிப் பயிர் மீதும் விதை​மீ​தும் திணிக்​கக்​கூ​டாது.​ மண்​ணில் உள்ள நுண்​ணு​யி​ரி​கள் மண்​ணில்​தான் இருக்க வேண்​டும்.​ காலில் அணிய வேண்​டிய ஒன்றை யாரா​வது கழுத்​தில் மாலை​யா​கப் போட்​டுக் கொள்​வார்​களா?​...''
கட்டுரையாளர் : ஆர்.எஸ்.​ நாரா​ய​ணன்
நன்றி : தினமணி

Thursday, December 3, 2009

தேவை சாதனைச் சிந்தனை!

சமீபத்தில் நோபல் பரிசு பெற்றிருக்கும் வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானி முனைவர் ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் சில கருத்துகள் சிந்தனைக்குரியவை மட்டுமல்ல, பாராட்டுக்கும் உரியவை. லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் எம்.ஆர்.சி. பரிசோதனைச் சாலையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முனைவர் வெ. ராமகிருஷ்ணன் இன்னும் தனது இந்தியத் தொடர்புகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுடன் இந்தியாவின் வருங்காலம் பற்றிய சிந்தனைகளையும் சுமந்து கொண்டிருப்பது என்பதே நெகிழ வைக்கும் விஷயங்கள்தான்.

வெளிநாட்டில் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொண்டு விட்டாலே, தனது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமே இந்தியாவிலிருந்து வெளியேறி விட்டதுதான் என்பது, வாழ்வில் வெற்றி பெற்றுவிட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பலரும் கூறும் குற்றச்சாட்டு. இந்தியாவின் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகள் திறமைக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்றும், லஞ்சமும், ஊழலும், சிபாரிசும்தான் வளர்ச்சிக்கு அளவுகோலே தவிர திறமைக்கு இந்தியாவில் இடமில்லை என்றும் பல வெளிநாடுவாழ் இந்தியர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களில் இருந்து மாறுபட்டு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் இந்தியாவின் வருங்காலம் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் நம்பிக்கையூட்டும் தகவல்கள் நமக்கே வியப்பாக இருக்கிறது.

சுதந்திரத்துக்கு முன்பு உலக அரங்கில் புகழ்பெற்ற கணிதமேதை ராமானுஜம், விஞ்ஞானி சி.வி. ராமன் போன்றவர்களைப்போல தற்போது பல மேதைகள் உருவாகாததன் காரணம் பற்றிக் கேட்டபோது, அதற்கு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் பதில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ""கடின உழைப்பும் லட்சிய வெறியும் இருந்தால் உலகம் போற்றும் மேதைகளாகவும், தலைசிறந்த விஞ்ஞானிகளாகவும் உருவாகக்கூடிய திறமைசாலிகள் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது இருந்தாலும், அவர்கள் கணினி, பொறியியல், நிதி நிர்வாகம் போன்ற படிப்புகளுடன் பன்னாட்டு நிறுவனங்களில் சில லட்ச ரூபாய் அல்லது டாலர்கள் சம்பாதிப்பதுடன் திருப்தி அடைந்து விடுவதுதான் இந்தியாவின் துரதிர்ஷ்டம்'' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் அவர்.

மேலும் கூறுகையில், முந்தைய நாள்களைப்போல அல்லாமல் உலக ஆராய்ச்சிகள் அனைத்துமே இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதிகள் இருப்பதால், வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவில் இருந்தபடியே ஆராய்ச்சிகளைத் தொடர முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். தன்னுடைய துறையிலேயேகூட பிரகாசமான எதிர்காலமுள்ள இளம் இந்திய விஞ்ஞானிகள் பலரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணைய தளங்களிலும், பல ஆய்வரங்கங்களிலும்தான் பார்த்து வியப்பதாகவும் கூறியிருக்கிறார் விஞ்ஞானி ராமகிருஷ்ணன்.

இந்தியாவின் மிகப்பெரிய குறைபாடு, போதிய ஆராய்ச்சி நிறுவனங்கள் இல்லாமை என்பதை ஒத்துக் கொள்ளும் அவர், எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி சாலைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக, மருத்துவம், பொறியியல், நிர்வாக இயல், நிதி நிர்வாகம், தகவல் தொழில் நுட்பம் போன்ற படிப்புகளுக்குப் பெற்றோரும், மாணவர்களும் அரசும் முன்னுரிமை கொடுத்து வருவதன் விளைவு, அடிப்படை விஞ்ஞானப் பிரிவுகளான ரசாயனம், பௌதீகம், விலங்கியல், தாவர இயல் போன்றவைகளும், அவற்றின் சிறப்பு இயல்களும் போதிய வரவேற்பு இல்லாமல் இருக்கின்றன. இதன் தொடர்விளைவாக, பெரிய ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இந்தியாவில் உருவாவது கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது.

அரசும் சரி, விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காகத் தரப்படும் முக்கியத்துவத்தையும், நிதி ஒதுக்கீடையும் படிப்படியாகக் குறைத்து வருகிறது. மேலைநாடுகளின் ஆராய்ச்சிகளை நாம் பயன்படுத்திக் கொண்டால் போதுமானது என்றும், உயர்மட்ட அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காக அரசு நிதியாதாரம் அளிப்பது தேவை இல்லாதது என்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு சிந்தனை ஏற்பட்டிருக்கிறது. ஒருசில தனியார் நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும்தான் இன்னும் முனைப்பாக அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கான நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.

படிப்பு முடிவதற்குள், கல்லூரி வளாகத்திலேயே நேர்முகத் தேர்வு நடந்து வேலை கிடைத்தால் போதும் என்று மாணவர்களும் நினைக்கிறார்கள். பல லட்சம் ரூபாய் கட்டணம் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோரும் நினைக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் வசதியாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் பெற்றோர்கள் அவர்கள் சாதனையாளர்களாக உலக அரங்கில் புகழ் பெற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரியவில்லை. இதன் விளைவு, முன் எப்போதையும்விடப் புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் நமது இளைஞர்கள் இருந்தும் நாம் சாதனையாளர்களை உருவாக்காமல் இருக்கும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அப்துல் கலாம், அமர்த்தியா சென், முனைவர் "வெங்கி' ராமகிருஷ்ணன் போன்ற பல உலக சாதனையாளர்களும் பௌதீகமும், பொருளாதாரமும், ரசாயனமும் படித்தவர்கள்தான் என்பதையும், பணம் சம்பாதிப்பதைவிடக் காலாகாலம் நிலைத்து நிற்கும் சாதனை படைப்பது முக்கியம் என்பதையும் நமது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு அரசு பெரிய அளவில் தொடர்ந்து நிதி உதவி அளித்து ஊக்கமும் ஆக்கமும் தந்தாக வேண்டும். அடிப்படை விஞ்ஞானத்துக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் கல்விக் கொள்கையை அமைத்து உயர் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளித்தால் மட்டுமே இது சாத்தியம். நோபல் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதைப் போல, உலக அரங்கில் தலைசிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கும் வாய்ப்பும் வசதியும் இந்தியாவுக்கு இருக்கிறது. அதை நாம் தெரிந்தே உதாசீனப்படுத்துகிறோமே, ஏன்?
நன்றி : தினமணி