Showing posts with label வேலை வாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலை வாய்ப்பு. Show all posts

Wednesday, January 13, 2010

ஸ்டேட் பாங்கில் 27 ஆயிரம் பேரை நியமிக்க முடிவு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(எஸ்.பி.ஐ.,) வில், காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப, 27 ஆயிரம் பணியாளர்களை நியமிக்க உள்ளதாக, அவ்வங்கியைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எஸ்.பி.ஐ., வங்கியின் துணை மேலாண்மை இயக்குனர் மற்றும் குழு நிர்வாகி அனுப் பானர்ஜி கூறியதாவது:

இந்தாண்டு நாங்கள், 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை, கிளர்க் பணியிடங்களுக்கும், 5,500 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கும் நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

கிராமப்புறங்களில் வங்கிகளின் செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் நோக்கில், அங்கு இரண்டாயிரம் புரபேஷனரி அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டுள் ளோம். தேர்ந்தெடுக்கப் பட உள்ள 5,500 அதிகாரிகளில், 2,000 பேர், கிராமப்புறங்களில் நியமிக்கப்படுவர்.

அவர்கள், அப்பகுதிகளில், குறைந்தது, அடுத்த பத்தாண்டுகளுக்காவது பணியாற்ற வேண்டும். கடந்தாண்டு, எஸ்.பி.ஐ., வங்கி, 25 ஆயிரம் பேரை பணி நியமனம் செய்தது.

எஸ்.பி.ஐ., வங்கி இந்தாண்டு புதிதாக ஆயிரம் கிளைகளை திறக்க உள்ளது.

இதனால், இவ்வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 13 ஆயிரமாக அதிகரிக்கும். இந்த நிதியாண்டின் இறுதியில், எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையங்களின் எண்ணிக்கையை 25 ஆயிரமாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில், எஸ்.பி.ஐ., வங்கியின் வர்த்தகம் ஆண்டுக்கு 25 சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அனுப் பானர்ஜி கூறினார்.
நன்றி : தினமலர்


Thursday, December 3, 2009

5,000 பேரை பணியில் சேர்க்கிறது விப்ரோ!

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ வரும் (2009-2010) நிதியாண்டில் 5000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது. இதற்காக கல்லூரிகளில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த முடிவு செய்துள்ளது விப்ரோ. ஏற்கெனவே 8500 பேரை பணியில் நியமிக்கும் வேலை நடந்து கொண்டிருப்பதாகவும், கூடுதலாக மேலும் 5000 பேர் இப்போது தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் விப்ரோ நிறுவனத்தின் இணை சிஇஓ (ஐடி) கிரிஷ் பரஞ்பே தெரிவித்தார். 'நாங்கள் ஏற்கெனவே உறுதியளித்தபடி, குறிப்பிட்ட அளவு பணியிடங்களை நிரப்பி வருகிறோம். சொன்னபடி இளைஞர்களுக்கு அதிகளவு வாய்ப்புகளை தருகிறோம். அதுமட்டுமல்ல, பொறியியல் கல்லூரிகளில் மட்டும் வேலைக்கு ஆளெடுக்காமல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பிஎஸ்ஸி போன்ற படிப்புகளை முடித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு தருகிறோம். குறிப்பாக அறிவிக்கப்படும் பணியிடங்களுக்கு 60 சதவிகிதம் அனுபவமற்ற புதிய இளைஞர்களுக்கே வாய்ப்புத் தருகிறோம்' என்றார் கிரிஷ் பரஞ்பே. அடுத்த நிதியாண்டில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றும், மேலும் கூடுதலான பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


Saturday, November 28, 2009

ஐடி துறையில் 2.5 லட்சம் வேலை வாய்ப்பு :இன்போசிஸ்

ஐடி துறையில் அடுத்த ஆண்டுக்குள் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஐடி துறையின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்போசிஸ் தெரிவி்த்துள்ளது. மேலும் 20,000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் மோகன்தாஸ் பை கூறுகையில், ஐடி துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. 2007ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன. கடந்த 18 மாதங்களில்தான் இது குறைந்து வந்தது. இப்போது மீண்டும் உயர துவங்கி உள்ளது. அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம் என அவர் தெரிவித்துள்ளார்
நன்றி : தினமலர்


Friday, November 27, 2009

இந்திய ஐ.டி., துறையில் அதிகரிக்கிறது வேலைவாய்ப்பு

இந்தியாவில் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அனைத்து நாடுகளும் மீண்டு வருகின்றன. அனைத்து நாடுகளிலும் இயல்புநிலை ஏற்படத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) நிறுவனங்களுக்கு உள்நாட்டிலும் வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. இதனையடுத்து, இவ்வாண்டில், இத்துறையில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று நாட்டின் சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குனர் (மனிதவள மேம்பாடு) மோகன்தாஸ் பை தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது, ஐ.டி., துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. 2007-ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன. கடந்த 18 மாதங்களில்தான் நிலைமை இத்தனை மோசம். இப்போது மீண்டும் மறு எழுச்சிக்கான காலம். அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம் என்று தெரிவித்தார். மேலும் 20000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியில் தங்கள் நிறுவனம் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Thursday, November 26, 2009

வேலை வாய்ப்புக்கு உறுதி அளிக்கும் கல்வி முறை

ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்வியைக் கல்லூரிகளில் நிறைவு செய்த பின்பு சில ஆயிரம் இளைஞர்கள் அரசுத் துறைகளிலும், தனியார்துறைகளிலும், சிலர் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். அதேவேளையில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அலையும் நிலையும் உள்ளது.

ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் தமிழகப் பல்கலைக்கழகங்களிலிருந்து குறைந்தது 10 லட்சம் இளைஞர்கள் உயர்கல்வியை முடித்து வேலை தேடும் படலத்துக்குத் தயாராகவுள்ளனர். இதில் 10 சதவீத இளைஞர்களே வேலை வாய்ப்பைப் பெற முடிகிறது. ஆள்பலம், பணபலம் மற்றும் பின்புலம் உள்ளவர்களே இத்தகைய பணியைப் பெற முடிகிறது. வேலை வாய்ப்பைத் தேடி அலையும் இளைஞர் பட்டாளத்தின் தொகை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் உள்ள, 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 50 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகத் தங்களின் பெயரைப் பதிவு செய்துள்ளனர் என அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலை வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் வேலை வேட்டையை மிகுந்த வேட்கையுடன் நடத்தி ஓய்ந்து விடுவதையும், சிலர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. இதற்கு அரசே முழுப்பொறுப்பு என்று, அரசியல் கட்சிகள் போன்றே அரசின் மீது பழியைச் சுமத்திவிட்டுத் தப்பிக்காமல், சமூக அக்கறையுள்ள சமூகவியலாளர்கள் இப்பிரச்னையின்பால், தங்கள் கவனத்தைத் திருப்பினால் ஓரளவுக்கு இப்பிரச்னைக்கு விடியலை ஏற்படுத்த முடியும்.

பல துறைகளில் வளர்ந்து விட்ட சூழலிலும் நாம் இன்னும் எதற்கெடுத்தாலும் ஜப்பானையும், ரஷியாவையும் மேற்கோளாகக் காட்டிக் கொண்டு நம்மிடம் இருக்கும் அடையாளங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறோம். அவ்விதம் நம்மிடம் உள்ள அடையாளங்கள் என்ன? வாய்ப்புகள் என்ன? என்பதை அறிந்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. அவ்வாறு அடையாளம் கண்ட பின்பு அதை நடைமுறை சாத்தியமாக்கி நம் இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் கொள்ளச் செய்தல் வேண்டும். வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் வேண்டும் என்ற கோஷம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காணவும், கேட்கவும் இயலுகிறது. குறிப்பாக நாடு முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட பிறகு, தங்கள் நிறுவனங்களில் பயிலும் மாணவர்க்கு, வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் பணியைச் சில தனியார் கல்லூரி நிறுவனங்கள் மேற்கொண்டு வேலை வாய்ப்புப் பிரிவை ஏற்படுத்தின. அதன் உள்நோக்கம் புதிதாகக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களைத் தங்கள் நிறுவனங்களில் சேருவதற்கான ஓர் ஈர்ப்பு முறையாக எண்ணியதே ஆகும்.

இதனால் தனியார் கல்வி நிலையங்களில் பயின்ற மாணவர்களில் சிலர் தனியார் ஐ.டி. தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனர் என்பதும் உண்மை. ஆனால் இம் முறையினால் உயர்கல்வி பெறும் அனைவரும் வேலை வாய்ப்பைப் பெற முடிகிறதா என்றால் இல்லை என்ற விடையே நமக்குக் கிடைக்கும். ஆனால் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்தவுடன் தங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் அல்லது வேலை கிடைத்துவிடும் என்ற மேலோங்கிய உணர்வோடுதான் உள்ளனர். இது தவறு என்று கொள்ள முடியாது. காரணம் இதுதான் இன்றைய சமூகத் தேவை.

அதற்குண்டான முதல் பணி நம் கல்வி முறையில் சிலமாற்றங்களைக் கொண்டு வருவது அவசியத் தேவையாகும். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய ஓராண்டு சான்றிதழ் படிப்புகளை வழங்கத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை வாயிலாகத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 62 கலை அறிவியல் கல்லூரிகள், 53 பாலிடெக்னிக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டு, அலுவலக மின்னாட்சி (ஆபீஸ் ஆட்டோமேஷன்) மற்றும் வலைத்தள வடிவமைப்பு (வெப்டிசைன்) உள்ளிட்ட துறைகளில் பயிற்சி அளிக்கப்படும் கல்வி முறை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும், கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்று ஆண்டு பட்டப்படிப்புகள் காலத்தேவை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுவது அவசியம் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி. திருவாசகம் வெளியிட்டுள்ள கருத்தும், மாணவர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலுகின்ற போதே வேலைவாய்ப்புக் கல்வியையும் கற்று, கல்லூரியை விட்டு வெளியே வருகின்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும் அறிவிப்புகளாகும்.

இத்தகைய அறிவிப்புகளின் தொடர்ச்சியாக ஒரு கருத்தை இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு பயிலுகின்ற போதே தொழில் முனைவோர் என்ற பாடத்திட்டத்தை அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறச் செய்து இறுதி ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக்கி, மாணவர்கள் அவர்கள் விரும்பும் தொழில் குறித்த தொழிற் பாடங்களைக் கற்கும் வகையில் பாடத்திட்டங்களும், அதற்குரிய வசதியும், வாய்ப்பும் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய பாடத்திட்டங்களை உருவாக்குவதால் மட்டும் வேலை வாய்ப்புக் கிடைத்துவிடுமா என்ற கேள்வி எழக் கூடும்.

தொழில் முனைவோர் பயிற்சியின் வாயிலாக ஒரு மாணவர் உற்பத்திப் பொருள், உற்பத்தித்திறன், வணிகம், வணிகம் செய்வதற்கான களம், சந்தைப் பொருளாதாரம், திட்டம் உருவாக்கல், திட்டஅறிக்கை உருவாக்குதல், பொருள்களைத் தேர்வுசெய்தல், புதிய பொருள்களின் தேவையும் அதன் உற்பத்தியும், தொழில் நுட்பத் திறனைத் தேர்வு செய்வது, தொழிற்சாலை வசதிகள், தொழில் முனைவதற்கான நிதி ஆதாரம் வங்கிகள் மூலமும், வர்த்தக நிறுவனங்கள் மூலமும் கடன் பெறுவதற்கான வழிவகைகளை அறிவது, பெற்ற நிதி ஒழுங்காகச் செலவிடப்படுகிறதா என்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளுதல், நிதி அளவீடுகள், லாபத்தை அறிதல், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தும் முறை, தொழிலாளர் நிர்வாகம், தரநிர்ணயம், விற்பனை நிர்வாகம், இடைத்தரகர்களின் சூழ்ச்சியை எதிர்கொள்ளுதல், சந்தை வணிக யுக்திகள், விலையை நிர்ணயிக்கும் திறன், விற்பனை வரி, சுங்கவரி, மன அழுத்தம், ஆளுமைத்திறன் ஆகியவை குறித்து தெளிவான முறையிலும், விரிவான வகையிலும் பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு அளிக்கப்படும் பயிற்சிகள் நேர்முறைப்பாடமாகவும், செயல்முறை விளக்கமாகவும், கருத்தரங்குகளாகவும் வரையறுக்கப்படவேண்டும். செயல்முறை விளக்கமும், கருத்தரங்குகளும் மாணவர், தான் என்ன தொழில் குறித்து தொழில் முனைவோர் பயிற்சியைப் பெற விரும்புகிறாரோ அது பற்றி விரிவான வகையில் அறிந்து கொள்ளப் பெரிதும் உதவும்.

அவர் சுய தொழிலைத் தொடங்குவதற்கான அடிப்படையான பொருள் குறித்தும், அதன் உற்பத்தி பற்றியும், பொருள் ஈட்டும் வழிவகைகள் குறித்தும் அறிந்து கொள்ள இத்தகைய செயல்முறைப் பயிற்சிகள் துணைநிற்கும். பயிற்சி முடியும் தருவாயில் பயிற்சியாளர்கள் நன்கு பயிற்சி பெற்ற தொழில் முனைவோர்களாகவும், விற்பனை உத்தி, விற்பனைத் தந்திரங்களை அறிந்து தங்களை ஒரு தொழில் முனைவோராய் உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

மேலும் அவர்கள் வேலைத் தேடி அலையும் அவலத்திலிருந்து விடுபட்டு ஒரு சிறந்த தொழில் முனைவோராய் தன் உயர்கல்வியை முடித்து வெளியேறும் வாய்ப்பைப் பெறுவர். விரும்பி ஏற்கும் தொழிற்கல்வியின் மூலம், தாங்கள் ஏற்கப்போகும் தொழில் குறித்தும், அதன் மூலம் பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அதில் வரும் இடையூறுகளை ஆராய்ந்து, நீக்கவல்ல திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும் பயிற்சி, அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

இந்த வகையில் மாணவர்களைத் தயார்படுத்த சிறந்த ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் இனம் காணப்படவேண்டும். அவர்கள் சிறந்த முறையில் பாடத் திட்டங்களையும், பயிற்சி முறைகளையும் உருவாக்கித் தரவேண்டும். சிந்தனையின் வெளிப்பாடுதான் செயல்திட்டங்கள் என்ற வகையில் சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், அனுபவமிக்க தொழில் முனைவோர், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் இது குறித்த சிந்தனைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்து அவர்களது பரிந்துரையின்படி பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். பட்டப்படிப்பின் இறுதி ஆண்டின் முடிவில் பட்டத்துடன் வெளியே வருவதுடன் ஒரு தொழில் முனைவோராகவும், கல்லூரியை விட்டு வெளியே வரும் போது தன் வாழ்வில் தன்னம்பிக்கை கொண்ட மனிதனாய் வெளியேறுகிறோம் என்ற உணர்வையும், நிலையையும் உண்டாக்க வேண்டும். இந்த உணர்வே அவரை ஒரு தொழில் முனைவோராய் நிலைநிறுத்தும்.

புதிய தொழில் முனைவோரால் தொழில்கள் தொடங்கப்பட்டால் அந்தந்தப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற தொழில்கள் மேலும் நன்கு செழித்து வளர்கின்ற நிலை ஏற்படும். இதன் மூலம் வேலை தேடுவோரின் எண்ணிக்கை ஓரளவுக்குக் குறைவதற்கான வழிவகைகள் உண்டாகும் என்று நம்பலாம்.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், அனைவருக்கும் வேலை உண்டென்று சொல்லும் நிலை வரவேண்டும் என்ற சூழலை வளர்ந்து வரும் சமுதாயத்துக்கு உருவாக்கித் தரவேண்டியது இன்றைய அவசியத் தேவை. சமுதாயத்தின் இன்றைய இன்றியமையாத் தேவையை அறிந்து அதைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி முறையில் உரிய மாற்றங்களைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது மட்டுமன்று, அது காலத்தின் கட்டாயம். அதுவே சமூகத் தேடலை நிறைவு செய்யும் உண்மையான கல்வி முறையின் அடையாளம்.
(கட்டுரையாளர்: வி. சீ. கமலக்கண்ணன், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக உதவிப்பதிவாளர்)
நன்றி : தினமணி

Friday, November 13, 2009

அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்பு: டி.சி.எஸ்.,

இந்தியாவின் மிகப் பெரிய மென்‌பொருள் துறை ஏற்றுமதி நிறுவனமான டாடா கல்சல்டன்சி நிறுவனம்(டி.சி.எஸ்.,) செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், தனது நிறுவனத்தை விரிவுப் படுத்தும் விதமாக, அமெரிக்க நிறுவனமான டவ் கெமிக்கல் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளது. இந்த கூட்டணி காரணமாக மிட்லாந்து மற்றும் மிச்சிகன் பகுதிகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டவ் கெமிக்கல் நிறுவனமும், டாடா கல்சல்டன்சி நிறுவனமும் தங்களது புதிய சர்வீஸ் சென்டரை மிட்லாந்து மிச்சிகன் பகுதியில் உள்ள டவ் குளேபல் தலையிடம் அருகே அமைக்க போவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Monday, November 2, 2009

நோக்கியா நிறுவனத்தில் 1000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு

நோக்கியா நிறுவனத்தில் +2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7.11.2009 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடத்த உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊ‌தியம் ரூ.4400/- மற்றும் இலவச உணவுடன் ரூ.1000/-ற்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும். +2 ல் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Thursday, October 22, 2009

இந்தியாவில் 2 ஆயிரம் பேரை வேலையில் அமர்த்துகிறது டோயட்டா

உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான டோயட்டா மோட்டார் கார்ப்ரேஷன், இந்தியாவில் உள்ள அதன் நிறுவனத்தில் மேலும் இரண்டு ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ‌பெங்களூரில் டோயட்டா கிர்லோஸ்கர் மோட்டார்சுடன் இணைந்து டோயட்டா மோட்டார் நிறுவனம், ரூபாய் 3 ஆயிரத்து 200 கோடி முதலீட்டில் தனது கார் நிறுவன கிளை ஒன்றை நிறுவியுள்ளது. இதுகுறித்து, டோயட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குனர் ஹிரோஷி கூறும்போது, இந்தியாவில் சிறிய கார் தயாரிப்பிற்கு அதிகமான மனித உழைப்பு தேவைப் படுகிறது. இதற்காக 2 ஆயிரம் பேரை மேலும் பணியில் அ‌‌மர்த்த உள்ளோம். வேலையாட்களை பணியமைத்துவதற்கான வேலைகளை ஆரம்பிதது விட்டோம். புதிய சிறிய வகை கார் அறிமுக திட்டம் வரும் 2011க்குள் முடிவடையும் என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Wednesday, October 21, 2009

இந்திய நிறுவனங்களில் ஆளெடுப்பு விகிதம் கிடுகிடு உயர்வு

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் ஆளெடுப்பு நடவடிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளெடுப்பு விகிதம் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளதாம். தகவல் தொழில்நுட்பத் துறை, பிபிஓ, ரியல் எஸ்டேட் ஆகிய பிரிவுகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளனவாம். இதுதொடர்பாக இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், அனைத்துப் பிரிவுகளிலுமே வேலைக்கான ஆளெடுப்பு சுறுசுறுப்படைந்துள்ளது. குறிப்பாக ஐ.டி, பிபிஓ பிரிவுகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஆளெடுப்பு கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. மேலும் என்ட்ரி மற்றும் ஜூனியர் லெவல் வேலைகளுக்கு அதிகம் பேர் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று அந்த கருத்து கணிப்பு கூறுகிறது.
நன்றி : தினமலர்


Saturday, August 8, 2009

அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை ஒரு சதவீதம் குறைந்திருக்கிறது

அமெரிக்காவில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவுவதால், மாதா மாதம் லட்சக்கணக்கானவர்கள் புதிது புதிதாக வேலையை இழந்து கொண்டே இருக்கிறார்கள். ஜூலை மாதத்தில் மட்டும் 2,47,000 பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். இருந்தாலும் அது எதிர்பார்த்ததை விட மிக மிக குறைவான அளவுதான் என்று அங்கு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. எதிர்பார்த்ததை விட குறைந்த அளவினரே வேலையை இழந்திருப்பதால் ஜூன் மாதத்தில் 9.5 சதவீதமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை, ஜூலை மாதத்தில் 9.4 சதவீதமாக குறைந்திருக்கிறது. 2008 ஏப்ரலுக்குப்பின் இப்போதுதான் முதல் முறையாக வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.1 சதவீதம் குறைந்திருக்கிறதாம். இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் பாரக் ஒபாமா, வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்திருப்பது, நம் நாடு பொருளாதார சீரழிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதற்கான அடையாளம்தான் என்றார். இருந்தாலும் நாம் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஒருவர் கூட வேலையை இழக்கவில்லை என்ற செய்தி வரும் வரை நாம் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது என்றார் அவர். 2007 டிசம்பரில் பொருளாதார சீரழிவு ஆரம்பமானதில் இருந்து அமெரிக்காவில் 67 லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள் என்கிறது தொழிலாளர் துறை வெளியிட்ட அறிக்கை. நான் அதிபராக பொறுப்பேற்றிருந்தபோது இருந்ததை விட இப்போது வேலையில்லாதோர் எண்ணிக்கை பாதியாக குறைந்திருக்கிறது என்று சொன்ன ஒபாமா, பொருளாதார சிஸ்டத்தை நாம் சிக்கலில் இருந்து மீட்டிருக்கிறோம் என்றார். கடும் சீரழிவில் இருந்து மீட்டிருக்கிறோமே ஒழிய வளர்ச்சியடைய செய்யவில்லை. எனவே மீண்டும் முன்புபோல் வளருவதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்றார். முன்னதாக, ஜூலை மாதத்தில் விவசாயம் அல்லதாத துறையில் 3,20,000 பேர் வேலையிழப்பார்கள் என்றும், வேலையில்லாதோர் எண்ணிக்கை 9.6 சதவீதமாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. அது பொய்த்து விட்டது. மொத்தம் வேலை இழந்த 2,47,000 பேரில், உற்பத்தி துறையில் 52,000 பேர் மட்டுமே வேலையை இழந்திருக்கிறார்கள். கடந்த செப்டம்பருக்குப்பின் இப்போது தான் முதல் தடவையாக ஒரு லட்சத்துக்கும் குறையானவர்கள் இந்த துறையில் வேலையை இழந்திருக்கிறார்கள். ஒரு பக்கம் மக்கள் வேலையை இழந்து வந்தாலும், இன்னொரு பக்கம் புதிய வேலைவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. கல்வி மற்றும் மருத்துவ சேவை துறையில் ஜூலை மாதத்தில் புதிதாக 17,000 பேர் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். அதே போல கட்டுமான துறையில் 76,000 பேர் வேலையை இழந்திருந்தாலும் அது எதிர்பார்த்ததை விட மிக குறைவு தான் என்கிறார்கள். ஜூன் மாதத்தில் 18.53 டாலராக ( சுமார் ரூ.890 ) இருந்த அமெரிக்கர்களின் சராசரி ஒரு மணி நேர வருவானம், ஜூலை மாதத்தில் 18.56 டாலராக ( சுமார் ரூ.891 ) உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Thursday, July 30, 2009

அடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் வேலைக்கு ஆட்களை எடுக்க துவங்குவோம் : இன்போசிஸ் சி.இ.ஓ.

பொருளாதார மந்த நிலை காரணமாக புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதை நிறுத்தி வைத்திருந்த இன்போசிஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்., அடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் ஆட்களை எடுக்க துவங்கி விடும் என்று அதன் சி.இ.ஓ.,மற்றும் மேலாண் இயக்குனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடந்த சி.ஐ.ஐ., கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, இந்த நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் இருந்து பொருளாதார நிலை மேம்பட்டு விடும் என்றும், எனவே மீண்டும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் வேலை நாடு முழுவதும் துவங்கிவிடும் என்றும் சொன்னார். பொருளாதார மந்த நிலையால், இன்போசிஸ் உள்பட எல்லா ஐ.டி.,நிறுவனங்களுமே கடும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தன என்றார் அவர்.
நன்றி : தினமலர்


Thursday, July 23, 2009

யெஸ் பேங்க்கின் நிகர லாபம் 84 சதவீதம் அதிகம் : 900 பேருக்கு வேலை

தனியார் வங்கியான யெஸ் பேங்க், இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.100.07 கோடியை நிகர லாபமாக பெற்றிருக்கிறது. இது, கடந்த வருடம் இதே காலாண்டில் அந்த வங்கி பெற்றிருந்த ரூ.54.33 கோடி நிகர லாபத்தை விட 84 சதவீதம் அதிகம். மும்பை பங்கு சந்தைக்கு அந்த வங்கி அனுப்பிய அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருட முதல் காலாண்டில் ரூ.486.19 கோடியாக இருந்த அந்த வங்கியின் மொத்த வருமானமும் இந்த வருட முதல் காலாண்டில் ரூ.687.85 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு காரணம் நிதியை திறம்பட கையாண்டதுதான் என்கிறார் யெஸ் வங்கியின் எம்.டி.மற்றும் சி.இ.ஓ. ராணா கபூர். முதல் காலாண்டில் 84 சதவீதம் அதிக லாபம் சம்பாதித்திருக்கும் யெஸ் பேங்க், வங்கி விரிவாக்கத்திற்காக இந்த நிதி ஆண்டில் 900 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Friday, June 19, 2009

இந்திய நிறுவனங்களால் 3 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைச்சிருக்கு

அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகள் எல்லாம் இந்தியாவுக்கே போய்க்கொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்கர்களுக்கு வேலை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று புலம்பிக்கொண்டிருக்கும் அமெரிக்கர்களின் பார்வைக்கு ஒரு ஆச்சரியமான தகவலை ' இன்டியா பிராண்ட் ஈக்வட்டி ஃபவுண்டேஷன் ' என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்களால் 2004 - 07 காலத்தில் 3,00,000 அமெரிக்கர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பதுதான் அந்த தகவல். வாஷிங்டனில் அந்த அறிக்கையை வெளியிட்டு பேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா, 2004 - 07 காலத்தில் இந்திய நிறுவனங்களால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 10,500 கோடி டாலர்கள் கிடைத்திருக்கிறது என்றார். இந்தியர்களால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 10,500 கோடி டாலர் வந்து கொண்டிருக்கும் நிலையில்தான், 5,000 கோடி டாலர் அளவுக்கு இந்தியாவில் நடக்கும் அவுட்சோர்சிங் வேலையையும் அமெரிக்கர்களுக்கே கொடுங்கள் என்கிறார்கள். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூட, பெங்களுருக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் அவுட்சோர்சிங் வேலையை பஃப்பல்லோவுக்கு கொடுத்தால் என்ன என்று கேட்கிறார்.
நன்றி : தினமலர்


Wednesday, June 10, 2009

ஸ்டேட் பாங்க்கில் 13,000 பேருக்கு வேலை

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்த நிதி ஆண்டில் 13,000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. அதன் வெவ்வேறு பணிகளுக்காக இந்த 13,000 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 2008 - 09 நிதி ஆண்டில் நாங்கள் 33,703 பேரை புதிதாக வேலைக்கு எடுத்தோம். இந்த நிதி ஆண்டில் மேலும் 13,000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக் கிறோம் என்றார் ஸ்டேட் பேங்க்கின் உயர் அதிகாரி ஒருவர். முன்னணி வங்கியான எங்களுக்கு இது தேவைப் படுகிறது என்றார். முதலாவதாக நாங்கள் ஆபீசர்கள், மார்க்கெட்டிங் மற்றும் ரெக்கவரி ( ரூரல் ), மற்றும் டெக்னிக்கல் ( பண்ணை துறை ) பிரிவுகளில் புதிய ஆட்களை வேலைக்கு எடுக்க, வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார் அவர். இது குறித்து இன்ஸ்டியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் ( ஐபிபிஎஸ் ) இயக்குனர் பாலசந்திரன் பேசியபோது, பொதுவாகவே எல்லா இந்திய பொருத்துறை வங்கிகளுமே இந்த நிதி ஆண்டில் 30,000 பேர் வரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கின்றன. அதில் 50 சதவீதத்தை ஸ்டேட் பேங்க்கே எடுத்துக்கொள்ள இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


Wednesday, April 29, 2009

பி.பி.ஓ.வேலைக்காக 8,000 பேரை வேலைக்கு எடுக்கும் விப்ரோ டெக்னாலஜிஸ்

விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனம், அதன் பி.பி.ஓ.,பிரிவுக்கு, இந்த நிதி ஆண்டுக்குள் 8,000 பேரை வேலைக்கு எடுக்க முடிவு செய்திருக்கிறது. இந்த 8,000 பேரில் 1,300 பேர், ஐதராபாத்தில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் அதன் அலுவலகத்தில் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே அங்கு 3,150 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் அங்கு 22,000 பேர் வேலை பார்க்க முடியும். 70 வாடிக்கையாளர் களுக்கு தேவையான வேலைகளை இங்குள்ள பி.பி.ஓ., அலுவலகத்தில் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது குறித்து பத்திரிக்கையாளர்களிடையே பேசிய விப்ரோ பி.பி.ஓ., நிறுவனத்தின் தலைமை அதிகாரி அசுதோஷ் வைத்யா, நாங்கள் எங்களது பி.பி.ஓ., அலுவலகத்திற்கு பணியாளர்களை சேர்க்க ஆரம்பித்து விட்டோம். பெரிய நகரங்கள் மற்றும் டவுண்களில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுப்போம் என்றார். அங்கேயே அவர்களுக்கான கடிதம் கொடுக்கப்படும் என்றும் சொன்னார்.
நன்றி : தினமலர்


Wednesday, April 15, 2009

கடந்த மூன்று மாதங்களில் 5,000 பேரை புதிதாக வேலைக்கு சேர்த்திருக்கிறோம் : இன்போசிஸ்

பொருளாதார மந்த நிலை காரணமாக பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் வேளையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ், கடந்த மூன்று மாதங்களில் 5,000 பேரை புதிதாக வேலையில் சேர்த்திருக்கிறது. 5,000 பேரை புதிதாக சேர்த்திருந்தாலும், அதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,772 பேர் மட்டுமே கூடியிருக்கிறார்கள் என்றும் மீதி பேர் போய் விட்டார்கள் அல்லது அனுப்பப்பட்டு விட்டார்கள் என்றும் இன்போசிஸ் சொல்லியிருக்கிறது. மார்ச் 31,2009 கணக்குப்படி, இன்போசிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் மொத்தம் 1,04,850 ஊழியர்கள் பணியாற்று வதாக தெரிவித்திருக்கிறது. 2008 - 09 நிதி ஆண்டில் மொத்தமாக அது 28,231 ஊழியர்களை புதிதாக சேர்த்திருந்தாலும், வெளியே சென்றவர்கள் போக மீதி 13,663 பேர் அவர்களது ஊழியர்கள் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார்கள். இன்போசிஸின் ஹெச்ஆர்டி மற்றும் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் பிரிவின் தலைவர் மோகன்தாஸ் பை இதனை தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமலர்



Tuesday, March 10, 2009

பொருளாதார மந்தநிலை: ஏழை நாடுகள் அதோகதி

வளரும் நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மோசமாகும் என்று உலக வங்கி கணித்திருக்கிறது. தற்போது உலகம் முழுவதையும் பாதித்திருக்கும் பொருளாதார மந்தநிலை வளரும் நாடுகளில் நீண்டகாலப் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் உலகவங்கி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மிகவும் ஏழை நாடுகள் நிலைமை மீட்க முடியாத மோச நிலைக்கு செல்லக்கூடும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. வரும் ஞாயிறன்று 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்நாட் டின் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் சந்தித்து ஆலோசனை செய்யப் போகின்றனர்.
இதை ஒட்டி உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல் வருமாறு:
* இந்தியாவில் கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் வேலையிழந்தோர் எண்ணிக்கை ஐந்து லட்சம் பேர். ஆபரணத் தயாரிப்பு, ஆட்டோ துறை, மற்றும் ஜவுளித் துறை ஆகியவற்றில் வேலையிழந்திருக்கின்றனர். கம்போடியாவில் ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்ட 30 ஆயிரம் பேர் வேலை இழந்திருக்கின்றனர்.
* நடப்பாண்டில் வளரும் நாடுகள் சந்திக்கும் நிதிப்பற்றாக்குறை அளவு 3.5 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். அதை அவர்கள் திரட்ட முடியாது. பாதிக்கப்படும் நாடுகளில் கால்வாசி நாடுகள் மட்டுமே ஓரளவு நிலைமையைச் சமாளித்து வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும்.
* வளரும் நாடுகள் பட்டியலில் 116 நாடுகள் உள்ளன. அதில், 94 நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் 43 நாடுகள் மிகவும் பிச்சைக்கார நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் தங்கள் ஏழ்மையை அதிகரிக்காமல் தடுக்க தேவைப்படும் நிதியைக் கூட திரட்ட முடியாது.
* ஏழைமக்களை சொத்து என்று கருத வேண்டும், சுமை என்று கருதக்கூடாது. அதற்கேற்ப சிறு குழந்தைகளைப் பாதுகாப்பது, இளைஞர்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பு ஆகியவை தேவை. அதற்கான நடைமுறைகளைக் கண்டறிய வேண்டும். இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த உலக வங்கி துணைத் தலைவர் ஜஸ்டின் இபு லின் கூறுகையில், 'வளர்ந்த நாடுகள் தங்களிடம் உள்ள கூடுதல் நிதியை ஏழை நாடுகளுக்கு வழங்குவதின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு காண முடியும் ' என்றிருக்கிறார்.
நன்றி : தினமலர்


Monday, March 9, 2009

அமெரிக்காவில் ஆட்குறைப்பு: இந்தியாவில் ஆட்கள் தேர்வு

அமெரிக்காவில் உள்ள தன் ஊழியர்கள் 10 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பி, இந்தியாவில் தன் பணிகளை செய்து கொள்ள பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் 'வார்னர் பிரதர்ஸ்' திட்டமிட்டுள்ளது. ஹாலிவுட் உட்பட சர்வதேச அளவில் சினிமா படங்கள் தயாரிப்பில் பிரபலமான நிறுவனம் வார்னர் பிரதர்ஸ். நிதி நெருக்கடியில் இருந்து இந்த நிறுவனமும் தப்பவில்லை. இதனால், அமெரிக்காவில் பணியாற்றி வரும் தன் எட்டாயிரம் ஊழியர்களில் 10 சதவீதம் பேரை வேலை நீக்கம் செய்ய தீவிரமாக யோசித்து வருகிறது. விரைவில் இது ö தாடர்பாக இறுதி முடிவெடுக்க உள்ளது. அமெரிக்காவில் ஆளை குறைக்கும் அதே நேரத்தில், தன் பணிகளை இந்தியாவில் அமர்த்தும் ஊழியர்களை கொண்டு செய்து கொள்ளும் 'அவுட்சோர்சிங்' முறையை அமல்படுத்தவும் வார்னர் பிரதர்ஸ் எண்ணியுள்ளது. முதல் கட்டமாக, இந்தியாவில் 200 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும் என்பதால் தான் , நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க உள்ளது. அதே சமயம், இந்தியாவில் ஊழியர்கள் சம்பளம் மட்டுமின்றி, மொத்த செலவும் மிக குறைவு தான். நிறுவன தலைவர் பேர்ரி மேயர் கடந்த மாதம் ஏற்கனவே, ஆட் குறைப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 'எங்கள் சினிமா வர்த்தகத்தை பொறுத்தவரை, காலத்துக்கேற்ப முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் எங்கள் பணிகளை செய்து கொள்வதால், பல வகையில் செலவை குறைக்க முடிகிறது. அதனால், எங்கள் பணிகளை அவுட்சோர்சிங் முறையில், இந்தியாவில் செய்து கொள்வதில் தவறில்லை' என்று தெரிவித்தார். அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டவர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று புதிய அதிபர் பராக் ஒபாமா பிடிவாதமாக இருக்கிறார்; அதற்காகவே, வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்த வழி செய்யும் எச் 1 பி விசாவில் கைவைத்துள்ளார். இந்நிலையில், வார்னர் பிரதர்சை தொடர்ந்து, பல அமெரிக்க நிறுவனங்களும், தொடர்ந்து இந்தியாவில் தங்கள் பணிகளை செய்து கொள்ள தயங்காது என்றே தோன்றுகிறது.
நன்றி : தினமலர்


Thursday, February 19, 2009

சுகுணா 'டெய்லி பிரஷ்' கிளை துவக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் 150 சுகுணா, 'டெய்லி பிரஷ்' நேரடி விற்பனை நிலையங்களை துவக்க சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிக்கன் கோழி உற்பத்தியில் சிகரத்தை எட்டியுள்ள சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் சார்பில், சுகுணா 'டெய்லி பிரஷ்' என்ற பெயரில் நேரடி விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. கோவை ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டில் முதல் விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, புதுச்சேரி உட்பட பல நகரங்களிலும், 'டெய்லி பிரஷ்' கிளைகள் துவக்கப்பட்டன. தற்போது கேரளாவில் அங்கமாலி, திருச்சூர், எர்ணாகுளம், எளமாக்காரா என பல நகரங்களிலும் இதன் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. சுத்தம் செய்யப்படாத சிக்கன்களை வாங்க விரும்பாத சிக்கன் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில், ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளாக இந்த விற்பனை நிலையங்கள் அமைந் துள்ளன. லாலி பப், லெக் பீஸ், கறி கட், முழுக்கோழி என எட்டு விதமான சிக்கன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அசைவப் பிரியர்களை முழுமையாக திருப்திபடுத்தும் வகையில், ப்ரோசன் சிக்கன், ஹோம் பைட்ஸ் போன்ற உடனடி தயாரிப்பு சிக்கன் வகைகளும் இங்கு உள்ளன. ஒவ்வொரு 'டெய்லிபிரஷ்' கடையிலும் தினமும் 4,000 கிலோ சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக டோர் டெலிவரி வசதியும் துவக்கப்பட்டிருப்பதாக இப்பிரிவின் துணை பொது மேலாளர் பிரியா தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் 150 கடைகளைத் திறக்க சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழில் செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த கிளைகள் துவக்க முன் வரலாம் என்று இந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி : தினமலர்