Thursday, July 30, 2009

அடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் வேலைக்கு ஆட்களை எடுக்க துவங்குவோம் : இன்போசிஸ் சி.இ.ஓ.

பொருளாதார மந்த நிலை காரணமாக புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதை நிறுத்தி வைத்திருந்த இன்போசிஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்., அடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் ஆட்களை எடுக்க துவங்கி விடும் என்று அதன் சி.இ.ஓ.,மற்றும் மேலாண் இயக்குனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடந்த சி.ஐ.ஐ., கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, இந்த நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் இருந்து பொருளாதார நிலை மேம்பட்டு விடும் என்றும், எனவே மீண்டும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் வேலை நாடு முழுவதும் துவங்கிவிடும் என்றும் சொன்னார். பொருளாதார மந்த நிலையால், இன்போசிஸ் உள்பட எல்லா ஐ.டி.,நிறுவனங்களுமே கடும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தன என்றார் அவர்.
நன்றி : தினமலர்


No comments: