Showing posts with label வணிகம். Show all posts
Showing posts with label வணிகம். Show all posts

Tuesday, January 12, 2010

களை கட்டிய டில்லி ஆட்டோ எக்ஸ்போ: 20 லட்சம் பேர் பார்வையிட்டனர்

டில்லியில் ஜனவரி 6ம் தேதி தொடங்கிய 10வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கண்காட்சியை சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 25 நாடுகளை சேர்ந்த கார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் புதிய ரக கார்கள் பார்வைக்கு வைத்து, பார்வையாளர்களின் கண்களை விரிய வைத்தனர். சுமார் 2,100 அரங்களை கொண்ட இந்த கண்காட்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும் வகையில், பேட்டரியில் இங்கும் கார்கள், காற்றை அதிக மாசுபடுத்தாத எரிவாயு தொழில்நுட்ப வாகனங்களை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. மொத்தம் 25 புதிய வாகனங்கள், கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய கார்கள், பைக்குகள் அட்டகாச அறிமுகம் :களை கட்டிய டில்லி ஆட்டோ எக்ஸ்போ உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் 30 நாடுகளை சேர்ந்த 2,100 நிறுவனங்கள் பங்கேற்று புதிய கார்கள் மற்றும் பைக்குகளை அறிமுகப்படுத்தினர்.

டில்லி ஆட்டோ எக்ஸ்போ கடந்த 5ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு நடந்தது. இந்த கண்காட்சிக்கு இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் ஏற்பாடு செய்து இருந்தன. உலகளவில், கார் மற்றும் பைக்குகள் விற்பனை சந்தையில் இந்தியா முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளின் விற்றுமுதல் தற்போது ரூ.90 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும், இந்தியாவில் புதிய கார்கள் மற்றும் பைக்குகள் விற்பனையில் சில மாதங்களுக்கு மட்டுமே தொய்வு நிலை காணப்பட்டது. 2009ம் ஆண்டு தொடக்கம் முதல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தான், டில்லியில் ஆட்டோ எக்ஸ்போ நடந்துள்ளது. இதில் 30 நாடுகளை சேர்ந்த 2,100 நிறுவனங்கள் புதிய கார்களையும், பைக்குகளையும் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளனர். இந்த கண்காட்சியில், வர்த்தக வாகனங்களும், பைக்குகளும், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய கார்கள் பற்றிய விவரம் வருமாறு:

வோக்ஸ்வாகன் போலோ: ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வாகன் நிறுவனம், கண்காட்சியில் போலோ காரை அறிமுகப்படுத்தியது. சிறிய கார்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள போலோ கார், இந்தியாவில் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. 1200 சிசி பெட்ரோல், 1200 சிசி டீஸல் என இரண்டு இன்ஜின்கள் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், நிஸான் நிறுவனத்தின் மைக்ரா ஆகிய கார்களுக்கு, போலோ கார் கடும் போட்டியை அளிக்கும்.

ஜெனரல் மோட்டார்ஸ் பீட்: அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பீட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இது விற்பனையிலும் உள்ளது. தற்போது 1200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட பீட் கார் விற்பனையில் உள்ளது. 1000 சிசி திறன் கொண்ட டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்ட பீட் கார், இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது. பீட் காரின் விலை ரூ.3.34 லட்சம் முதல் ரூ.3.99 லட்சம் வரை( எக்ஸ்ஷோரூம் டில்லி) உள்ளது. பீட் கார், ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ10, மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ, நிஸான் நிறுவனத்தின் மைக்ரா கார்களுக்கு கடும் போட்டியை தரும்.

ஹோண்டாவின் புதிய கார்: ஹோண்டா நிறுவனம், '2சிவி' என்ற கோட்நேம் கொண்ட புதிய காரை கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இது, 1200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இதன் விலை ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். இந்த கார் ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் போலோ, டொயோட்டோ நிறுவனத்தின் இடியோஸ், மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், நிஸான் நிறுவனத்தின் மைக்ரா கார்களுக்கு சவாலாக இருக்கும்.

டொயோட்டோ இடியோஸ்: ஜப்பானின் டொயோட்டோ நிறுவனம், இடியோஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பரில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, வோக்ஸ்வாகனின் போலோ, மாருதியின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், இந்தியாவில் ஜூலையில் அறிமுகமாக உள்ள நிஸானின் மைக்ரா கார்களுக்கு கடும் போட்டியை தரும்.
அசத்தலான சொகுசு கார்கள் அறிமுகம்
டில்லி கண்காட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் போட்டு போட்டுக் கொண்டு சொகுசு கார்களையும் அறிமுகப்படுத்தின. அதன் விவரம் வருமாறு:

மாருதி புதிய கார்: மாருதி சுசூகி நிறுவனம் 'ஆர்ஐஐஐ' என்ற கோட்நேமுடன், ஆறு இருக்கைகள் கொண்ட புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மல்டி பர்ப்பஸ் வைக்கிள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

ஸ்கோடா யெடி: ஜெர்மனியின் ஸ்கோடா நிறுவனத்தின் யெடி கார் தான் கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ஸ்போர்ட்ஸ் யுடிலிட்ட வைக்கிள் வரிசையில் இந்த கார் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் மத்திய பகுதியில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இரண்டு லிட்டர் டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டது. இதன் விலையை ஸ்கோடா நிறுவனம் அறிவிக்கவில்லை. எனினும், ரூ.14 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆரியா, பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் எக்ஸ்1, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கேமரோ போன்ற கார்களும் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன.
நன்றி : தினமலர்

Tuesday, December 8, 2009

பளீர் வெளிச்சத்துக்கு தரமான 'ஹெட்லைட்'

புதிய அனுபவத்தை தரக்கூடியது கார் அனுபவம். வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரும் சொந்த காரில் குடும்பத்தினருடன் பயணிக்கும் காலம் தற்போது உள்ளது. வெளிநாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்து புதிய ரக கார்களை தயாரித்து வருகின்றன. கார் வாங்கினாலும், அவற்றை பராமரிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும்.
தற்போதைய காலச்சூழ்நிலையில், வாகனங்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

மனிதனுக்கு இரு கண் போன்றது, வாகனங்களுக்கு ஹெட்லைட் விளக்குகள். இரவுப்பொழுதில் எதிர்வரும் வாகனங்களை கடந்து செல்ல தரமான ஹெட்லைட் அவசியம். சரியான முறையில் அவை இருந்தால் தான் விபத்துக்களை தவிர்க்க முடியும். டூ வீலரானாலும், காரானாலும் ஹெட்லைட்டை அவ்வப்போது பராமரித்துக் கொள்ள வேண்டும். எதிர்பாராத விபத்து, விஷமிகளின் தாக்குதல் போன்றவற்றால் முதலில் உடைவது ஹெட்லைட் விளக்குகளே.

ஹெட்லைட்டுகள் புதிய வடிவில் தற்போது வந்துள்ளன. அதன் மேல் உள்ள கண்ணாடி பாகம் வாகனங்களுக்கு தகுந்த அமைப்பில் வட்ட வடிவிலும், சதுர வடிவிலும் விற்பனையில் உள்ளன.

சென்னை, டில்லி, பெங்களூரு நகரங்களில் இருந்தும், உத்தர்காண்ட் மாநிலத்தில் இருந்தும் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. டூ வீலரை பொறுத்தமட்டில் 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையில் உள்ளன. அவை தவிர குறைந்த விலை ஹெட்லைட் தயாரிப்புகளும் சந்தையில் உள்ளன. 35 வாட்ஸ் திறன் கொண்ட பிலிப்ஸ் பல்புகள் 120 ரூபாயிலும், கேலஜன் லைட்டுகள் 100 ரூபாயிலும் உள்ளன. டூ வீலர் ஓட்டிகள் அதிகம் இவற்றை வாங்குகின்றனர்.

கார், சுமோ போன்றவற்றுக்கான அதிகம் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உள்ளது. லூமாக்ஸ், ஆட்டோபால், ஃபியாம் போன்ற நிறுவனங்களின் ஹெட்லைட்டுகள் காருக்கு பயன்படுத்தப்படுகின்றன. பெங்களூரு, டில்லி போன்ற நகரங்களில் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.

கார், சுமோ போன்றவற்றுகான ஹெட்லைட்டுகள் 160 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை உள்ளது. அம்பாஸிட்டர்களுக்கு 140 ரூபாயிலும் உள்ளன. இதற்கென உள்ள 90 வாட்ஸ் திறனுடைய பல்புகள் 150 முதல் 200 ரூபாய் வரையில் உள்ளது.

சேலம் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையாளர் ஆனந்தகுமார் கூறுகையில், ''கார், டூ வீலர், 407 போன்ற வாகனங்களுக்கான ஹெட்லைட் மற்றும் அதற்குரிய பல்புகள் விற்பனையில் உள்ளன. டில்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. கம்பெனி கார்களுக்கு தகுந்தவாறு தரமான வடிவமைப்பில் உள்ளன. 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை காருக்கு ஏற்றாற்போல் ஹெட்லைட் வாங்க முடியும்,'' என்றார்.
நன்றி : தினமலர்


Tuesday, November 24, 2009

ஃபாஸ்ட்புட்டை பின்னுக்கு தள்ள வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தமிழக இட்லி

தமிழர்களுக்கு இட்லி இப்போது இந்திய அளவில் பிரபலமாகி விட்டது. ஆனால் உலகஅளவில் இட்லிக்கு எந்த மவுசும் ஏற்படவில்லை. வெளி நாட்டுக்காரர்கள் இந்தியா வரும் போதும் இட்லியை சாப்பிட்டு விட்டு அதன் ருசியை பாராட்டுவது உண்டு. இருப்பினும் நாம் இன்னும் வெளிநாடுகளில் இட்லியை அறிமுகப்படுத்தாததால் அவை இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழ்நாட்டுக்குள் முடங்கி கிடக்கின்றன.
சீனாவில் பிறந்த “நூடுல்ஸ்”, வெள்ளைக்காரர்களில் கண்டுபிடிப்பான “பர்க்கர்” போன்றவை இன்று உலக அளவில் முக்கிய இடத்தை பிடித்து விட்டன. இப்போது இந்த இடத்துக்கு இட்லியையும் கொண்டு வரும் திட்டத்தை தஞ்சாவூரில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழில் நுட்ப மையம் உருவாக்கியுள்ளது. இட்லியை பதப்படுத்தி அனுப்புவதுதான் பெரிய பிரச்சினை அதை மட்டும் கண்டுபிடித்து விட்டால் இட்லியையும் உலக அளவில் சந்தைப்படுத்தி விடலாம். அதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்க இந்த மையம் முயற்சித்து வருகிறது. இது பற்றி இந்த மைய இயக்குனர் அழகு சுந்தரம் கூறியதாவது: இட்லியை உற்பத்தி செய்து, பதப்படுத்தி வெளிநாட்டு விற்பனைக்கு அனுப்ப 3 வருட ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். பர்க்கர் போன்ற உணவுகளை விட இட்லியில் அதிக சத்தும், ருசியும் இருக்கிறது. இருந்தாலும் ஏன் இதை உலக அளவில் பிரபலப்படுத்த முடியவில்லை என்ற கேள்வி எழுந்தது. இட்லி மிகவும் சத்தான உணவு. விலை மலிவான உணவு. எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம்.
எனவே இதை தொழில் உற்பத்தி பொருளாக்கி சந்தை படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். இதன் முதல் கட்ட ஆராய்ச்சிக்காக இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் ரூ.2 கோடியே 60 லட்சம் வழங்கி உள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஒரு பகுதியாக குடும்ப பெண்கள் பங்கேற்கும் “இட்லி மேளா” என்ற விழாவை டிசம்பர் 3ந் தேதி தஞ்சாவூரில் நடத்த உள்ளோம். அப்போது குடும்ப பெண்கள் ஒவ்வொரு வரும் இட்லியை தயாரித்து கொடுக்கலாம். அதில் எந்த இட்லி ருசியாக இருக்கிறது. எப்படி தயாரிப்பதால் இந்த ருசி வருகிறது? என்று ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


Wednesday, November 4, 2009

பிரிட்டானியாவின் புதிய பானம்

பிரபல பிரிட்டானியா நிறுவனம், குழந்தைகளுக்கான புதிய பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பானத்தின் பெயர், 'ஆக்டிவ் மைண்ட்!' இதை, பிரிட்டானியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் வினிதா பாலி அறிமுகப்படுத்தி பேசுகையில், 'இந்நாளில், குழந்தைகளுக்கு படிப்புச் சுமையால் அதிக கவனம் தேவைப்படுகிறது. எல்லா குழந்தைகளுக்கும், முழு நினைவாற்றல் இருப்பதில்லை. 'மூளை சுறுசுறுப்படையவும், படித்ததை நினைவில் வைத்துக் கொள்ளவும், பால் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த பானம் நிச்சயம் கைகொடுக்கும். மூளைக்குப் புத்துணர்ச்சியும், நினைவாற்றலையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆக்டிவ் மைண்ட், படிக்கும் குழந்தைகளுக்கு முக்கியமான ஒன்று' என்று கூறினார்.புதிய பானம், 180 மில்லி கிராம் கொண்ட பாட்டிலில், மாம்பழம் மற்றும் ஸ்டிராபெரி ஆகிய சுவைகளில், தமிழகம் முழுவதும் கிடைக்கிறது.
நன்றி ; தினமலர்


Wednesday, October 21, 2009

வெள்ளி விலை உயர்வால் கொலுசு உற்பத்தி பாதிப்பு

வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் இயங்கும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகளில், வெள்ளிக் கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி ஆகியவற்றின் உற்பத்தியில், நேரடியாக 60 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும், சராசரியாக 50 டன் அளவுக்கு கொலுசு உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு, வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வெள்ளி கிலோ 18 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மார்க்கெட் நிலவரப்படி, கிலோ 28 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கிறது. வெள்ளி விலை உயர்வால், கொலுசு உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தால், கலக்கத்தில் உள்ளனர்.
சேலம், வெள்ளி பட்டறை இயக்குனர் செல்வம் கூறியதாவது: சேலம் கொலுசுக்கு, வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்ததால், விலை உயர்வால் பாதிப்பு இல்லை. தீபாவளிக்கு பின் தங்கம், வெள்ளி விலையில் சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் நிலவியது, ஆனால், தொடர்ந்து வெள்ளியின் விலை அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. இதனால், வெள்ளி ஆபரணங்கள் ஆர்டர் கொடுக்கும் பணி முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகி, உற்பத்தியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளி விலை உயர்வால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய, கொலுசு மீதான 4 சதவீத ஆபரண வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். இவ்வாறு செல்வம் கூறினார்.
நன்றி : தினமலர்


Tuesday, October 13, 2009

நின்ஜா 250 ஆர் பைக் விலை ரூ.2.69 லட்சம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஜப்பானின் கவாஸாக்கி நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் பல சொகுசு பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், கவாஸாக்கி பஜாஜ் சார்பில், நின்ஜா 250 ஆர் என்ற பெயரில் புதிய பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த பைக்கின் விலை ரூ.2.69 லட்சமாக இருக்கும். ஐரோப்பிய நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபியூல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பம் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42 கி.மீ., மைலேஜ் தரக் கூடியது. இந்தியாவில் ஏற்கனவே, யமஹா மற்றும் சுசூகி நிறுவனங்கள் சார்பில் சொகுசு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு போட்டியாக தற்போது, நின்ஜா 250 ஆர் பைக் களத்தில் குதித்து உள்ளது. டெலஸ்கோபிக ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் யுனி டிரக் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த பைக்கின் முன்பக்க மற்றும் பின் பக்க பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக், கவாஸாக்கி நிறுவனத்தின் தாய்லாந்து தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் ஒன்றாக இணைக்கப்படும். வெளிநாட்டில் இருந்து முழுமையான பைக்காக இறக்குமதி செய்தால், 100 சதவீத வரி செலுத்த வேண்டும். இதை தவிர்ப்பதற்காகவே, உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு முழு மைக்காக உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக 11 சதவீத வரி தான் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் தான், நின்ஜா 250 ஆர் பைக்கின் விலை ரூ.2.69 லட்சம் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.
நன்றி : தினமலர்


Thursday, September 17, 2009

திருடனின் கையில் சாவி...!

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் தலைமையகம் என்று அறியப்படும் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவை எவை தெரியுமா? தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தான். அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதைக்கூட இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன என்றுகூடக் கூறப்படுவதுண்டு. மருந்து உற்பத்தியாளர்கள் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும், மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் அமெரிக்க மக்களின் சேமிப்பை விழுங்குவதும் இவர்கள்தான் என்பதும், அமெரிக்க நுகர்வோர் அமைப்பின் முன்னோடி ரால்ஃப் நாடரின் தொடர்ந்த குற்றச்சாட்டு.

கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லிவிடலாம், மருந்து உற்பத்தி என்று. இப்போதைய விலையில் அனைத்து மருந்துகளின் விலையையும் பாதிக்குப் பாதி குறைத்தாலும் இந்த மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்காக லாபம் ஈட்டும் நிலைமை தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றன என்பது மட்டுமல்ல, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், "பரிசு' என்கிற பெயரில் அன்பளிப்புகளையும் வழங்கித் தங்களது மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்ட வைக்கின்றன. சாதாரண இருமல், காய்ச்சலுக்குப் போனால் கூட 10 அல்லது 15 மருந்துகளை மருத்துவர்கள் எழுதித் தருவது, நோய் குணமாவதற்கு மட்டுமல்ல, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புக்கான நன்றிக் கடனும்கூட!

இந்த மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களையும் அவரது குடும்பத்தினரையும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து உபசாரம் செய்வதும், தங்களது விலையுயர்ந்த மருந்துகளை தாராளமாக அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டும் மருத்துவர்களுக்கு கார், வீடு, விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் என்று வழங்குவதும் சர்வசாதாரணம். இப்போதெல்லாம் பிரபல மருத்துவர்களின் குடும்பம் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவருவதற்கான மொத்தச் செலவையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

அன்பளிப்பு என்ற பெயரில் மருத்துவர்களின் மனதைக் கெடுத்து தேவையில்லாத மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் சுமத்தும் இந்த தப்பான வழிமுறைக்கு முடிவு காணப்படுமா என்று ஏதோ ஒரு நல்ல மனது படைத்த மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு தந்த பதில் என்ன தெரியுமா? மருந்து தயாரிப்பாளர்களிடம் இதற்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் கோரியிருக்கிறோம் என்பதுதான்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் என்பதுதான் மருத்துவ ஊழலின் ஊற்றுக்கண் என்பதுகூட தெரியாதா நமது சுகாதாரத்துறைக்கும், மத்திய அரசுக்கும்? அது போகட்டும். இந்த சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மருத்துவர்களுக்கு மதுவும் விருந்தும் அளித்தும், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுப்பியும் ஒன்பது தவறான, தரமற்ற மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவைத்த குற்றத்துக்காக 230 கோடி டாலர்கள் (அதாவது, 11,500 கோடி ரூபாய்) அபராதம் செலுத்திய "ஃபைசர்' நிறுவனம்-

வாதத்துக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவர்களை வசப்படுத்தி "வையோக்ஸ்' என்கிற மாத்திரையை கோடிக்கணக்காக விற்பனை செய்து, கொழுத்து, அதன் தொடர்விளைவாக இதயவலி மற்றும் பக்கவாதத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு 2004-ல் அந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்திய, சுமார் 480 கோடி டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு
நிறுவனம் மூலம் நஷ்டஈடு அளித்த மெர்க் நிறுவனம்-

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடிய நிறுவனங்கள்தான் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள்.

கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள அமெரிக்காவிலேயே தமது கைவரிசையைக் காட்டும் இந்த நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் தயாள சிந்தனையுடனும், மக்கள் நலனைக் கருதியும் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களைக் கவர்ந்து, தங்கள் மருந்துகளை விற்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது...

எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்கிற நிலைமை வந்துவிட்ட பிறகு, எப்படி சம்பாதித்தோம் என்பதைவிட எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்கிற மனநிலை ஏற்பட்டுவிட்டபோது இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்...

ஏதுமறியாத அப்பாவி இந்திய குடிமகன், அவர் நம்பும் மருத்துவராலும், அவரும் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் அரசாலும், அவரது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியாக வாழும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுகிறாரே, இதற்கு முடிவே இல்லையா?.
நன்றி : தினமணி

Thursday, June 25, 2009

ஏர் - இந்தியாவின் எல்லா சுமைகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் : மன்மோகன் சிங்

ஏர் - இந்தியாவின் எல்லா சுமைகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்தார். ஆனால் அதற்கு பதிலாக ஏர் - இந்தியா நிறுவனம், கடுமையான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். நிர்வாகத்துறையில், நிதித்துறையில் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையில் பல மாறுதல்களை ஏர் - இந்தியா செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த ஏர் - இந்தியா அதிகாரிகள், ஒரு ஏர்லைன்ஸ் சிரமத்திற்குள்ளாகும் போதெல்லாம் ஒரு அரசாங்கத்தால் உதவிக் கொண்டிருக்க முடியாதுதான் என்றனர். இது குறித்து பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பட்டேல், குறுகிய கால மற்றும் நீண்ட கால நோக்கில் செலவை குறைத்து வருமானத்தை பெருக்க ஏர் - இந்தியா பல கண்டிப்பான நடவடிக்கைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றார். ஏர் - இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த கடும் நிதி நெருக்கடி குறித்து நேற்று பிரதமர் மன்மோகன்சிங்குடன், பிரபுல் பட்டேல், மூத்த அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஏர் - இந்தியாவின் புதிய சிஎம்டி அர்விந்த் ஜாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். ஊழியர்கள் எண்ணிக்கையில் மட்டுமல்லாது, அவர்களது சம்பளம் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவைகளில் பல தேவையில்லாத விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை உடனடியாக நீக்க வேண்டியிருக்கிறது என்றார் பிரபுல் பட்டேல்.
நன்றி : தினமலர்


Friday, April 24, 2009

மைக்ரோசாப்ட்டின் விற்பனை 6 சதவீதம் குறைந்திருக்கிறது

இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலாண்டில், உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் விற்பனை, கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் 6 சதவீதம் குறைந்திருக்கிறது.கடந்த 23 வருடங்களில் இதுவரை வேறு எந்த காலாண்டிலும், விற்பனை இந்தளவுக்கு குறைந்ததில்லை என்கிறது அது. மைக்ரோசாப்ட்டின் லாபமும் 32 சதவீதம் குறைந்து 2.98 பில்லியன் டாலராகி இருக்கிறது. விற்பனை 13.65 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் வின்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விற்பனை மூலமாகத்தான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெருமளவு லாபம் வருகிறது. ஆனால் சமீப காலமாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதால் பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மைக்ரோசாப்ட்டின் சாப்ட்வேர் விற்பனையும் குறைந்து விட்டது என்கிறார்கள். இந்த நிலை அடுத்த காலாண்டிலும் தொடரத்தான் செய்யும் என்கிறார் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிதி அதிகாரி கிரிஸ் லிட்டல். 1986 ம் ஆண்டு பப்ளிக் கம்பெனி யாக மாறிய மைக்ரோசாப்ட், செலவை குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,400 பேரை உடனடியாகவும், 3,600 பேரை இன்னும் 18 மாதங்களிலும் குறைக்க இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்தது.
நன்றி : தினமலர்


Tuesday, April 21, 2009

பங்கு ஒன்றுக்கு 9.50 டாலர் விலை : சன் மைக்ரோசிஸ்டத்தை ஆரக்கிள் வாங்குகிறது

கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சன் மைக்ரோசிஸ்டத்தை, பிரபல கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள் வாங்குகிறது. சன் நிறுவனத்தின் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 9.50 டாலர் என்ற விலையில் ஆரக்கிள் வாங்கிக்கொள்கிறது. அதன் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலர் ( சுமார் 35,000 கோடி ரூபாய் ) என்று சொல்லப்படுகிறது. கடந்த வெள்ளி அன்று சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்கின் முடிவு விலை என்னவாக இருந்ததோ, அதிலிருந்து 42 சதவீதம் பிரீமியம் வைத்து அதன் பங்குகளை ஆரக்கிள் வாங்கிக் கொள்கிறது. சன் விற்கப்படுவதை அடுத்து நேற்று சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்கு மதிப்பு 27 சதவீதம் உயர்ந்தும், ஆரக்கிளின் பங்கு மதிப்பு 5.56 சதவீதம் குறைந்தும் இருந்தது. ஏற்கனவே, சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்குகளை பங்கு ஒன்றுக்கு 9.40 டாலர் வரை கொடுத்து வாங்கிக்கொள்வதாக ஐ.பி.எம்.தெரிவித்திருந்தது. இருந்தாலும் ஐ.பி.எம்.மின் கோரிக்கையை சன் நிராகரித்து விட்டது. அதன் பின் ஒரு மாதத்திற்குப்பின் இப்போது பங்குக்கு 9.50 டாலர் என்ற விலையில் ஆரக்கிளுக்கு கொடுக்கு முன் வந்திருக்கிறது. ஆரக்கிளிடம் சன் மைக்ரோசிஸ்டத்தை விற்பதற்கு அதன் போர்டு ஆப் டைரக்டர்கள் அனைவரும் ஒத்துக்கொண்டனர். இருந்தாலும் பங்குதாரர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒப்புதலை பெற்று இது விற்கப்படும் என்று சன் தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Saturday, April 11, 2009

ஜெனரல் மோட்டார்ஸ் புதிய திட்டம்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட கார்களுக்காக செவ்ரோலெட்-ஓ.கே., என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது மற்றும் விற்பனை செய்வதற்கான புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இதற்கு செவ்ரோலெட்-ஓ.கே., என பெயரிடப் பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் ஆறு நகரங்களில் ஒன்பது விற்பனை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதை, 30 விற்பனை மையங்களாக விரிவு படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன துணை தலைவர் பாலேந்திரன் கூறுகையில், 'அறிமுகப்படுத்தப் பட்டுள்ள திட்டத்தின் மூலம், புதிய கார் வாங்கும்போது எந்த வகையான அனுபவம் ஏற்படுமோ, அதேபோன்ற அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்' என்றார்.
நன்றி : தினமலர்


Friday, April 10, 2009

சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாதில் ரூ.33161 கோடி தனியார் முதலீடு!

கடந்த 3 ஆண்டுகளில் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் மட்டும் தனியார் துறையினர் ரூ.33161 கோடி முதலீடு செய்துள்ளனர், என அஸோசெம் (Association of Chambers of Commerce and Industry) தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள முதல் நிலை நகரங்கள் டெல்லி, மும்பை போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள தனியார் துறை முதலீட்டோடு ஒப்பிடுகையில் இது 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகும். இந்தியாவின் முதல் நிலை நகரங்களில் இதே காலகட்டத்தில் ரூ.14240 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அஸோஸெம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டிலேயே உள் கட்டமைப்பு வளர்ச்சியில் தனியார் துறையின் முதலீட்டை அதிகம் கவர்ந்திழுப்பவை இன்றைக்கு சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று தென்னிந்திய நகரங்கள்தான். தனியார் துறையின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட 70 சதவீதம் கடந்த மூன்றாண்டுகளில் இந்த நகரங்களில்தான் செய்யப்பட்டுள்ளன.கடந்த 6 மாதங்களில் மட்டுமே ரூ.12990 கோடி மதிப்பிலான 12 ரியல் எஸ்டேட் திட்டங்கள் இந்த நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 6 திட்டங்கள் பெங்களூரில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ. 12150 கோடியில் 5 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் ரூ.4000 கோடி மதிப்பில் ஐடிசி ஓட்டல் உள்பட பல ஹோட்டல்கள் இந்த 6 மாதங்களில் துவங்கப்பட்டுள்ளன.பரப்பளவில், மக்கள் தொகையில் இவை சற்று சிறிய நகரங்களாக இருந்தாலும், சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான மக்கள், நிலையான அரசியல் தன்மை, கல்வியறிவு, குறைந்த ஊதியத்துக்கும் உழைக்கத் தயாராக உள்ள தொழிலாளர்கள் போன்ற காரணங்கள்தான் இந்த நகரங்களுக்கு அதிக முதலீட்டை ஈர்ப்பதாக அஸோஸெம் தெரிவித்துள்ளது.

நன்றி : தட்ஸ்தமிழ்


Wednesday, March 11, 2009

மற்ற கம்பெனிகளை வாங்குவதற்காக முதலீடு செய்வதை ஐ.பி.எம்.நிறுத்தவில்லை

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டிருந்தாலும், பிரபல ஐ.டி.நிறுவனமான ஐ.பி.எம்., மற்ற கம்பெனிகளை வாங்குவதற்காக செய்யும் முதலீட்டை குறைக்கவில்லை. ஐ.பி.எம்.மின் தலைமை அதிகாரி சாமுவேல் பால்மிசனோ, அதன் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும் நாங்கள் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள் பின்நோக்கி பார்ப்பது இல்லை. எப்போதுமே முன்நோக்கி தான் பார்க்கிறோம். தொடர்ந்து ஆர் அண்ட் டி சென்டர்களை நிறுவுவதிலும், மற்ற கம்பெனிகளை வாங்குவதிலும், வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுவதிலும் முதலீடு செய்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த இக்கட்டான வேளையிலும் நாங்கள் ஊழியர்களை குறைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில்தான் ஐ.பி.எம். நிறுவனம், நிதி மோசடியில் சிக்கியிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்திருந்தது. சத்யம் கம்ப்யூட்டர்ஸூம் அதன் 51 சதவீத பங்குகளை விற்கும் ஏற்பாட்டில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, March 10, 2009

மும்பை தீவிரவாத தாக்குதலால் இந்தோ - பாகிஸ்தான் வர்த்தகம் 60 சதவீதம் வரை பாதிக்கும்

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் 26 ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடந்து வரும் பனிப்போரை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடந்து வந்த வர்த்தகம் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வரும் 2009 - 10 நிதி ஆண்டில் இரு நாட்டு வர்த்தகம் 60 சதவீதம் வரை பாதிக்க கூடும் என்று இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு ( எஃப் ஐ சி சி ஐ ) தெரிவிக்கிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய இந்திய தொழில் அதிபர்கள் அச்சப்படுகிறார்கள் என அது தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானுடன் தற்போது 2 பில்லியன் டாலருக்கும் ( ரூ.10,200 கோடி ) அதிகமான தொகைக்கு வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் இந்திய தொழில் அதிபர்கள், இந்த நிதி ஆண்டின் இறுதியில் 900 மில்லியன் டாலருக்கும் ( ரூ.4,590 கோடி ) குறைவான தொகைக்கே வர்த்தகம் செய்திருப்பார்கள் என்கிறது எஃப்.ஐ.சி.சி.ஐ. வர்த்தகம் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இறக்குமதியாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய இந்திய ஏற்றுமதியாளர்கள் பாகிஸ்தான் செல்லவே பயப்படுகிறார்கள் என்கிறது அது. பாகிஸ்தானுக்கு நேரடியாக செல்லாமல் துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகள் வழியாக அங்குள்ள இறக்குமதியாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவும் சில ஏற்றுமதியாளர்கள் முயற்சி செய்கின்றனர். இந்தியாவில் இருந்து டெக்ஸ்டைல், ரெடிமேட் ஆடைகள்,டெக்ஸ்டைல் மெஷின்கள், காட்டன், விவசாய பொருட்கள், ஸ்டீல், கெமிக்கல் போன்ற பொருட்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

நன்றி : தினமலர்


Wednesday, February 25, 2009

ஜப்பானின் ஏற்றுமதி 45 சதவீதம் குறைந்து விட்டது

உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் அதிகம் முன்னேறிய நாடாகவும், ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் இருக்கும் ஜப்பானின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 45 சதவீதம் குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவின் காரணமாக ஜப்பான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் இந்த வருடம் ஜனவரி மாதத்தின் ஏற்றுமதி 45 சதவீதம் குறைந்திருப்பதாக அந்நாடு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அமெரிக்கான ஏற்றுமதி 53 சதவீதமும், ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி 47 சதவீதம் குறைந்திருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ஜப்பானின் டிரேட் டெபிசிட் 9.9 பில்லியன் டாலராக அதிகரித்து விட்டது. உலக அளவில் ஜப்பானின் கார்களுக்கான டிமாண்ட் 69 சதவீதம் குறைந்திருக்கிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து போனதால் ஜப்பானின் எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் டிமாண்ட் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜப்பானின் பொருளாதாரமே ஏற்றுமதியை நம்பித்தான் இருப்பதால், ஏற்றுமதி குறைந்திருப்பது அந்நாட்டு பொருளாதாரத்தை பெரிதாக பாதித்திருப்பதாக சொல்கிறார்கள். இரண்டாம் உலகப்போருக்குப்பின் இப்போதுதான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். எனவே உலகின் முதல் பொருளாதார நாடான அமெரிக்காவும், இரண்டாவது பொருளாதார நாடான ஜப்பானும் இணைந்து, ஜப்பானின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
நன்றி : தினமலர்


Wednesday, December 3, 2008

ஒரு டிக்கெட்டுக்கு ஒன்று இலவசம் : பாரமவுன்ட் ஏர்வேஸ் அறிவிப்பு

விடுமுறை காலச் சலுகையாக, விமான பயணத்தில், ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட்டை இலவசமாக, தரும் திட்டத்தை, பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரையில் பாரமவுன்ட் ஏர்வேஸ் நிர்வாக, மேலாளர் தியாகராஜன் கூறியதாவது: விடுமுறைக்கால சலுகையாக, ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். எங்கள் விமானத்தில் 'எலைட் பிசினஸ் கிளாஸ்' டிக்கெட் ஒன்று வாங்கும்போது, கூடுதலாக 1500 ரூபாய் செலுத்தி இலவசமாக ஒரு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். வரிகள், சர்சார்ஜ் தனி. அடிக்கடி விமானங்களில், பறப்பவர்களுக்காக 'பாரமவுன்ட் ராயல்' என்ற பெயரில் தனிச்சலுகைகள் வழங்குகிறோம். இதில், உறுப்பினரானால் கோல்ப் கிளப்புகள், ரிசார்ட்டுகள் போன்றவற்றின் சேவைகள் பெற்றுத் தரப்படும். இச்சலுகையை பெற விரும்புவோர் தீதீதீ.ணீச்ணூச்ட்ணிதணtச்டிணூதீச்தூண்.ஞிணிட் என்ற வெப்சைட்டில், பதிவு செய்யலாம். மதுரையில் இருந்து ஒரு நாளைக்கு நான்கு விமானங்களை சென்னைக்கு இயக்குகிறோம். இது தவிர, மதுரையில் இருந்து கோவா, ஆமதாபாத், புனே செல்லவும் தொடர்பு விமான வசதிகளை தருகிறோம். எங்கள் சேவைக்கு போட்டி இருப்பதாக கருதவில்லை. தென்னிந்திய விமான பயணிகளில் 26 சதவீதம் பேர் எங்களது வாடிக்கையாளர்கள். விமான பெட்ரோல் விலை குறைந்துள்ளதால், அதன் பயனை பயணிகளுக்கு தருவது பற்றி பரிசீலிக்கப்படும். மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைந்த பிறகு, 2011 முதல் வெளிநாட்டு விமானங்களை இயக்குவோம். இதற்கு எங்களிடம் உள்ள 'எம்பரெர்' ரக விமனங்கள் பொருத்தமாக இருக்கும். மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் விமான பயணிகளின் ஆர்வம் குறைந்துள்ளது. தென்னிந்தியாவில் அதிகம் பாதிப்பு இல்லை. இவ்வாறு மேலாளர் கூறினார்.
நன்றி : தினமலர்


Tuesday, December 2, 2008

இரண்டே நாளில் ரூ. 50,000 கோடி இழப்பு

மும்பையில், பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை அடுத்து இரண்டு நாள் வர்த்தக இழப்பு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய். சுற்றுலா பயணிகள் வருகை, ஓட்டல்கள் உட்பட பல்வேறு வகையில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மூன்று நாள் நகரமே முடங்கிய நிலையில், பல கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. புதன் கிழமை இரவு , பயங்கரவாதிகள் அட்டாசம் ஆரம்பித்தது. அன்றும், மறுநாளும் சேர்த்து மட்டும், பங்குச்சந்தை, வர்த்தகம் ஆகியவற்றை கணக்கிட்டால், 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக தரப்பில் மேலோட்டமான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாளில், அதிரடிப்படையினர் முற்றுகை,கடைகள், நிறுவனங்கள் மூடல், மாமூல் வாழ்க்கை பாதிப்பு போன்றவற்றை கணக்கிட்டால், இழப்பு இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த நாட்களில் பங்குச்சந்தை மூடப் பட்டிருந்தது. நிதி நிறுவனங்களும் செயல்படவில்லை.மும்பையில் உள்ள 20 தியேட்டர்கள், 75 மல்டிப்ளக்ஸ்களில் ஒரு நாள் டிக்கெட் வசூல் இரண்டு லட்சம் ரூபாய். குளிர்பானங்கள் உட்பட விற்பனையால் தனி வருமானம் கிடைக்கும். ஆனால், இந்த பயங்கர நாட்களில் இங்கும் வருவாய் அடியோடு குறைந்து விட்டது. தாஜ், ஓபராய் உட்பட ஓட்டல்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சேத மதிப்புகள் இன்னும் பல கோடிகளை தாண்டும் என்றும் மதிப்பிடப்படுகிறது. உலக அளவில், முதல் பத்து வர்த்தக நகரங்களில் மும்பை உள்ளது. இந்தியான் மொத்த உற்பத்தி அளவில் மும்பையின் பங்கு 5 சதவீதம். அன்னிய செலாவணி, வருமான வரி வசூல் மட்டும் 40 சதவீதம், வெளிநாட்டு வர்த்தகம் மூலம் 60 சதவீதம், எக்சைஸ் வரி வசூல் 20 சதவீதம் வருவாயை மும்பை தருகிறது.இது தவிர, வணிக நிறுவனங்கள் மூலம் வரி வருவாயாக 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. மும்பையின் தனி நபர் வருமானம் , தேசிய தனி மனித வருமானத்தை விட மூன்று மடங்கு. அதாவது, தனி நபர் ஆண்டு வருமானம் 49 ஆயிரம் ரூபாய்.
நன்றி : தினமலர்


Saturday, November 29, 2008

மும்பை தாக்குதல்களால் டெக்ஸ்டைல் ஏற்றுமதி கடும் பாதிப்பு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இந்திய டெக்ஸ்டைல் ஏற்றுமதி துறை, மும்பை ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களால் மேலும் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மும்பையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்குள் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய திடீர் தாக்குதல்களல் மேலைநாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் பீதி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்றைக்கு முந்தின நாள் இரவில் இருந்து இப்போது வரை, முடியாமல் தொடர்ந்து வரும் மும்பை ஹோட்டல்கள் தாக்குதல்களை அடுத்து, மும்பை வருவதாக இருந்த பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் தங்களது வருகையை ரத்து செய்து விட்டனர். மும்பையின் பிரபல இரண்டு ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களால் நாங்கள் எங்களது ' டிரிப் 'பை கேல்சல் செய்து விட்டோம் என்றும், வேறு தேதியில் வருகிறோம் என்றும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருக்கும் பல இறக்குமதியாளர்கள் இங்குள்ள ஏற்றுமதியாளர்களுக்கு இ மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். அவர்களில் பெரும்மாபாலானவர்கள் டெக்ஸ்டைல் மற்றும் ஜவுளி இறக்குமதியாளர்கள். டெக்ஸ்டைல் மற்றும் ஜவுளி துறையை சேர்ந்த டிசைனர்கள் மற்றும் வியாபாரிகள் அடிக்கடி இந்தியா வருவது வழக்கம். இங்கு வரும் அவர்கள் இங்குள்ள ஏற்றுமதியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களது ஆர்டர்களை உறுதி செய்வது வழக்கம். ஏனென்றால் டெக்ஸ்டைல் துறையை பொருத்தவரை, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் ஃபேஷன் மாறி விடும். மேலும் சீசனுக்கு தகுந்தபடியும் ஃபேஷன் மாறுவதுண்டு. எனவே அங்கிருந்து வரும் வியாபாரிகளுடன் டிசைனர்களும் அடிக்கடி இங்கு வந்து அவர்கள் கொடுத்திருக்கும் ஆர்டரை பார்வையிடுவது வழக்கம். அதன் தரத்தை நேரடியாக பார்த்து, அதன் பின்னரே அதற்கான விலையை உறுதி செய்வார்கள். மும்பையில்தான் பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்களின் தலைமையகம் இருக்கிறது என்பதாலும், அதுதான் இந்தியாவின் வர்த்தக தலைநகராக இருப்பதாலும் அவர்கள் எல்லோரும் மும்பைக்குதான் வருவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்குவதும் இப்போது தாக்குதலுக்கு உள்ளான தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டிரைடன்ட் ஹோட்டல்களில்தான் என்கிறார் ஃபெரரேஷன் ஆப் இன்டியன் எக்ஸ்போர்ட் ஆர்கானிஷேசன் தலைவர் ( மேற்கு பகுதி ) எஸ்,கே,ஷராப். நேற்று மட்டும் அனேக வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் மும்பை டிரிப் பை கேன்சல் செய்து விட்டதாக தகவல் சொன்னார்கள். அவர்கள் எல்லோரும் பெரிய இறக்குமதியாளர்கள் என்றார் அவர். ஜெர்மனி மற்றும் அமெரிக்க இறக்குமதியாளர்கள், அந்நாட்டு வியாபாரிகளை இப்போது இந்தியா போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன என்றார் அவர்.
நன்றி : தினமலர்


Sunday, October 19, 2008

நானோவுக்கு போட்டியாக குறைந்த விலை கார்

டாடாவின் நானோ காருக்கு போட்டியாக அஜந்தா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ஒரு லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடாவின் கனவுத் திட் டமான ஒரு லட்ச ரூபாய் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலை குஜராத் துக்கு மாற்றப்பட்டுள்ளது. சிங்கூர் பிரச்னையால் திட்டமிட்டபடி நானோ கார், குறித்த காலத்திற்குள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாடா நிறுவனத்துக்கு போட்டியாக கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள் தயாரிப்பு நிறுவனமான அஜந்தா, குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, ஒரெவா என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. குஜராத், கட்ச் மாவட்டத்தில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலையில் காரின் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அஜந்தா நிறுவனங்களின் இயக்குனர் ஜய்சுக் படேல் கூறுகையில், 'ஏற்கனவே எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய அனுபவம் உள்ளது. இதனால், எலக்ட்ரிக் காரை தயாரிப்பதில் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. காரின் மாடல் தான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தயாரிப்பு பணி முடிவடைந்து சந்தைக்கு எப்போது வரும் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது' என்றார். அஜந்தா நிறுவன வட் டாரங்கள் கூறுகையில், 'காரின் விலை 90 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்துக்குள் இருக்கும். இதுபற்றி வாடிக்கையாளர்களிடம் இருந்து விசாரணைகள் வரத் துவங்கியுள்ளன' என்றன.
நன்றி : தினமலர்


Monday, September 15, 2008

சிங்கூர் பிரச்னையால் கார் தயாரிப்பு தொழிலுக்கு பாதிப்பு இல்லை

'சிங்கூர் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு ஏற் பட்டுள்ள பிரச்னையால், இந்தியாவில் எங்கள் நிறுவனங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ள முதலீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் கார் தயாரிப்பு பணியை தொடர்ந்து மேற்கொள் வோம்' என, மெர்சிடிஸ் உள்ளிட்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு வங்கம், சிங்கூரில் உள்ள டாடா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து, பிரபல கார் தயாரிப்பு நிறுவனங் கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன உயரதிகாரி ரய்னெர் ஸ்முக்கெல் கூறுகையில், 'இந்திய கார் சந்தை மீது எங்களுக்கு பலமான நம்பிக்கை உள்ளது. சிறிய ரக காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள் ளோம். சொகுசு கார்களுக் கான தேவை அதிகரித் துள்ளதால், இந்தியாவில் கார் தயாரிப்பு பணி பாதிக் கப்படாது' என்றார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ஹெண்டர்சன் கூறுகையில், 'சிங்கூர் பிரச்னையால் எங்கள் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் முதலீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியாவில் கார் தயாரிப்புக்காக கூடுதலாக முதலீடு செய்துள் ளோம்' என்றார். நிசான் மோட்டார் இந்தியா நிறுவன மேலாண்மை இயக்குனர் ஷோகி கிமுரா கூறுகையில், 'இந்தியாவில் எங்கள் தயாரிப்பு திட்டங்களை மேலும் விரிவு படுத்த முடிவு செய்துள்ளோம். 'வரும் 2012க்குள் ஒன்பது புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளோம். இவற்றில் ஐந்து மாடல் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்' என்றார்.
நன்றி : தினமலர்