Saturday, November 29, 2008

மும்பை தாக்குதல்களால் டெக்ஸ்டைல் ஏற்றுமதி கடும் பாதிப்பு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இந்திய டெக்ஸ்டைல் ஏற்றுமதி துறை, மும்பை ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களால் மேலும் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மும்பையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்குள் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய திடீர் தாக்குதல்களல் மேலைநாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் பீதி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்றைக்கு முந்தின நாள் இரவில் இருந்து இப்போது வரை, முடியாமல் தொடர்ந்து வரும் மும்பை ஹோட்டல்கள் தாக்குதல்களை அடுத்து, மும்பை வருவதாக இருந்த பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் தங்களது வருகையை ரத்து செய்து விட்டனர். மும்பையின் பிரபல இரண்டு ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களால் நாங்கள் எங்களது ' டிரிப் 'பை கேல்சல் செய்து விட்டோம் என்றும், வேறு தேதியில் வருகிறோம் என்றும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருக்கும் பல இறக்குமதியாளர்கள் இங்குள்ள ஏற்றுமதியாளர்களுக்கு இ மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். அவர்களில் பெரும்மாபாலானவர்கள் டெக்ஸ்டைல் மற்றும் ஜவுளி இறக்குமதியாளர்கள். டெக்ஸ்டைல் மற்றும் ஜவுளி துறையை சேர்ந்த டிசைனர்கள் மற்றும் வியாபாரிகள் அடிக்கடி இந்தியா வருவது வழக்கம். இங்கு வரும் அவர்கள் இங்குள்ள ஏற்றுமதியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களது ஆர்டர்களை உறுதி செய்வது வழக்கம். ஏனென்றால் டெக்ஸ்டைல் துறையை பொருத்தவரை, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் ஃபேஷன் மாறி விடும். மேலும் சீசனுக்கு தகுந்தபடியும் ஃபேஷன் மாறுவதுண்டு. எனவே அங்கிருந்து வரும் வியாபாரிகளுடன் டிசைனர்களும் அடிக்கடி இங்கு வந்து அவர்கள் கொடுத்திருக்கும் ஆர்டரை பார்வையிடுவது வழக்கம். அதன் தரத்தை நேரடியாக பார்த்து, அதன் பின்னரே அதற்கான விலையை உறுதி செய்வார்கள். மும்பையில்தான் பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்களின் தலைமையகம் இருக்கிறது என்பதாலும், அதுதான் இந்தியாவின் வர்த்தக தலைநகராக இருப்பதாலும் அவர்கள் எல்லோரும் மும்பைக்குதான் வருவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்குவதும் இப்போது தாக்குதலுக்கு உள்ளான தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டிரைடன்ட் ஹோட்டல்களில்தான் என்கிறார் ஃபெரரேஷன் ஆப் இன்டியன் எக்ஸ்போர்ட் ஆர்கானிஷேசன் தலைவர் ( மேற்கு பகுதி ) எஸ்,கே,ஷராப். நேற்று மட்டும் அனேக வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் மும்பை டிரிப் பை கேன்சல் செய்து விட்டதாக தகவல் சொன்னார்கள். அவர்கள் எல்லோரும் பெரிய இறக்குமதியாளர்கள் என்றார் அவர். ஜெர்மனி மற்றும் அமெரிக்க இறக்குமதியாளர்கள், அந்நாட்டு வியாபாரிகளை இப்போது இந்தியா போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன என்றார் அவர்.
நன்றி : தினமலர்


No comments: