Saturday, November 29, 2008

தீவிரவாதிகளை அடையாளம் கண்டுகொள்ள உதவிய சிசிடிவி

சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் தீவிரவாதிகளின் தாக்குதலை நம்மால் தடுக்க முடியாதுதான் என்றாலும், தாக்க வந்த தீவிரவாதிகள் யார் என்றும் அவர்கள் ஏகே 47 மற்றும் எம் 5 மூலம் யார் யாரை சுட்டார்கள் என்பதையும் துள்ளியமாக போலீசாருக்கு காட்டி கொடுத்து விட்டது. போலீசாரின் விசாரணைக்கு இது மிக உதவியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கள் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை துள்ளியமாக படம் பிடித்திருக்கின்றன.பொதுவாக மும்பையில் பல இடங்களில் சிசிடிவி மற்றும் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டிருக்கின்றன. செக்யூரிட்டி சாதனங்கள் தயாரிக்கும் ஸைகாம், ஹனிவெல், சீமன்ஸ் மற்றும் கோத்ரஜ் போன்ற பிரபல நிறுவனங்கள், மும்பை முழுவதும் ஆங்காங்கே சிசிடிவி யை வைத்திருக்கின்றன. நகர் முழுவதிலும் என்ன நடக்கிறது என்பது 24 மணி நேரமும் ரெக்கார்ட் செய்யப்படுகிறது. சி.எஸ்.டி. டெர்மினஸில் ( முன்னர் இது விக்டோரியா டெர்மினஸ் ) இருந்து தானே வரையுள்ள 30 கி.மீ.பாதை முழுவதிலும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கிறது. சர்ச்கேட்டில் இருந்து விரார் என்ற இடத்திற்கு செல்லும் 60 கி.மீ.பாதையெங்கும் ஸைகாம் நிறுவனம் 820 சிசிடிவி களை வைத்திருக்கிறது. இது தவிர மும்பை முழுவதும் டிராபிக்கை கண்காணிக்க ரூ.4 கோடி செலவில் 100 சிசிடிவி களையும் அந்த நிறுவனம் வைத்திருக்கிறது. தாதரில் இருக்கும் பிரபல சித்திவிநாயகர் கோயிலிலும் சிசிடிவி வைக்கப்பட்ட கண்காணிக்கப்படுகிறது. இவைகள் மூலம் போலீசார் எளிதில் தீவிரவாதிகளை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: