
பேட்டரியில் இயங்கக் கூடிய கார், வேன் பொதுமக்களின் பார்வைக்காக கடலூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோல்கட்டா, 'டாரா' இன்டர்நேஷனல் கார் நிறுவனம் டிட்டு, டைனி, கொயட் என்ற பெயரில் மூன்று கார்கள், சுற்றுலா வேன் ஒன்றையும் தயாரித்துள்ளது. கொயட் மற்றும் டைனில் டிரைவரை சேர்த்து 4, டிட்டுவில் டிரைவரை சேர்த்து 2, சுற்றுலா வேனில் டிரைவரை சேர்ந்து 14 பேரும் பயணம் செய்யலாம். டிட்டு, கொயட் காரின் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய். டைனி ஒரு லட்சத்து 90 ஆயிரம், சுற்றுலா வேன் எட்டு லட்சம் ரூபாய். இந்த கார்கள், வேன் பேட்டரியில் இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசுபடாது. ஒரு கிலோ மீட்டருக்கு பேட்டரி செலவு 30 பைசா மட்டுமே ஆகிறது. வீட்டிலேயே பேட்டரியில் சார்ஜ் ஏற்றலாம். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 70, 80 கி.மீ., தூரம் வரை பயணம் செய்யலாம். இந்த கார்கள், வேன் பொதுமக்களின் பார்வைக்காக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடற்கரையில் கடந்த ஐந்து நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் முதல் கடலூர் புதுப்பாளையம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களை பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.
நன்றி :தினமலர்