Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

Monday, June 6, 2011

வங்கி வைப்பு நிதி முதலீட்டிற்கு கூடுதல் ஆதாயம்

வங்கி, அஞ்சலக சேமிப்பு, பங்குச் சந்தை, பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் என, பலதரப்பட்ட முதலீட்டு இனங்களில், பாதுகாப்பான, நியாயமான வருவாய்க்கு உகந்த முதலீடு எது?


இந்த கேள்விக்கு, வங்கி, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என, ”லபமாக விடை கூறி விடலாம். தற்போதைய நிலையில், முதலீடு மோசம் போகாமல், அதே சமயம், பணவீக்கத்தை ஓரளவு எதிர்கொள்ளும் வகையில், வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன.

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் குறைந்தபட்ச வட்டி, 3.5 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி, 9 சதவீதமாகவும் உள்ளது. இவற்றை விட அதிக வட்டியை, வங்கிகள் அவற்றின் பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்குகின்றன.வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, 3.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இது, வங்கியில் சேமிப்பு கணக்கை கொண்டுள்ள வாடிக்கையாளருக்கு, கூடுதல் வருவாயை வழங்கும் எனலாம்.

மேலும், அன்றாட இருப்பு நிலைக்கேற்ப கணக்கிடப்படும் வட்டியை, மாதா மாதமோ அல்லது காலாண்டிற்கு ஒருமுறையோ, வழங்கும் நடைமுறையை அமல்படுத்துவது குறித்தும், ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. இதனால், வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம், சராசரியாக 4.13 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.எனினும், இந்த வட்டி விகிதத்தை விட, கூடுதல் வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, 'பிக்சட் டிபாசிட்' எனப்படும், குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன. இத்திட்டத்தில், குறைந்தபட்சம் ஓராண்டு முதலீட்டிற்கு, அதிகபட்சமாக 10.25 சதவீத வட்டியை, வங்கிகள் வழங்குகின்றன.

மேலும், மூத்த குடிமக்களுக்கு, கூடுதலாக இதைவிட வட்டி வழங்கப்படுகிறது.இந்த வகையில், குறித்த கால வைப்பு நிதிக்கு அதிக வட்டி வழங்குவதில், தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டு வைப்பு கணக்கிற்கு, 10.25 சதவீத வட்டி வழங்குகிறது. அதாவது, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சி காலத்தில் 11 ஆயிரத்து 65 ரூபாய் கிடைக்கும். கரூர் வைஸ்யா வங்கி, ஓராண்டு கால வைப்புத் திட்டத்திற்கு 10 சதவீத வட்டி வழங்கி, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கர்நாடகா பேங்க், சவுத் இந்தியன் பேங்க் ஆகியவை, வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஓராண்டு முதலீட்டிற்கு, 9.75 சதவீத வட்டியை வழங்குகின்றன. இந்த வரிசையில், பெடரல் பேங்க் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டிற்கான குறித்த கால வைப்புத் தொகைக்கு, 9.60 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதன்படி இவ்வங்கியில், 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சிக் காலத்தில் 10 ஆயிரத்து 995 ரூபாய் கிடைக்கும்.

பெரும்பாலான மூத்த குடிமக்களின் முதல் தேர்வாக, வங்கிகளின் டிபாசிட் திட்டங்கள் உள்ளன. அவர்கள் ஓய்வூதியம், பணிக்கொடை, காப்பீடு ஆகியவற்றின் மூலம் பெறும் வருவாயை, வங்கிகளின் குறித்த கால வைப்புக் கணக்கில் சேமிக்கின்றனர். அவர்களைக் கவர்வதற்காக, வங்கிகள், இதர முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வட்டியை விட, கூடுதல் வட்டியை வழங்குகின்றன.

இவ்வகையில், மூத்த குடிமக்களின் ஓராண்டு கால வைப்புத் தொகைக்கு, கரூர் வைஸ்யா பேங்க் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் ஆகியவை, அதிகபட்சமாக 10.5 சதவீத வட்டியை வழங்குகின்றன. இதன்படி, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வோருக்கு, முதிர்ச்சிக் காலத்தில் 11 ஆயிரத்து 92 ரூபாய் கிடைக்கும். இதேபோல், ஆக்சிஸ் பேங்க், கர்நாடகா பேங்க் ஆகியவையும், மூத்த குடிமக்களின் ஓராண்டு வைப்புத் தொகைக்கு, 10.25 சதவீத வட்டியை வழங்குகின்றன. பெடரல் பேங்க் 10.1 சதவீத வட்டியை வழங்கி வருகிறது.

பங்குச் சந்தை, பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தால், இதை விட கூடுதல் வருவாய் பார்க்க முடியும் என்றபோதிலும், அவற்றில் இடர்பாடுகள் அதிகம் உள்ளன. தங்கத்தில் செய்யும் முதலீடு, லாபகரமானதாக கருதப்படுகிறது. கடந்த ஓராண்டில் தங்கம் விலை, 19.5 சதவீதம் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை, 92 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை, 19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களின் சராசரி வருவாய், 8.8 சதவீதமும், கடன்பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு மேற்கொள்ளும் பேலன்ஸ்டு பண்டு திட்டங்கள், 8.7 சதவீத வருவாயையும் அளித்துள்ளன. 'இன்கம் பண்டு' மீதான முதலீட்டின் சராசரி வருவாய், 5 சதவீதமாகவும், 5 ஆண்டு கால முதலீட்டின் சராசரி வருவாய், 6.5 சதவீதமாகவும் உள்ளது.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முன்னணியில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக் கூடிய,'லார்ஜ் கேப்' பரஸ்பர நிதி திட்டங்களின் 5 ஆண்டு கால சராசரி வருவாய், 11 சதவீதமாக உள்ளது.

இத்திட்டங்கள் வாயிலான வருவாயை ஒப்பிடும் போது , வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதிக்கான வட்டி வருவாய் குறைவுதான். எனினும், நியாயமான வட்டி வருவாயில், நிம்மதியாக காலம் கழிக்க விரும்புவோரின் விருப்பத் தேர்வாக, வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்கள் திகழ்வதில் வியப்பேதுமில்லை.

அதிக வருவாய்:வங்கிகளின், குறித்த கால வைப்பு நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மீது, கடன் பெறும் வசதியும் உள்ளது. இக்கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு, வங்கி மாறுபடுகிறது. அவசர தேவை அல்லது பிற நிதியினங்களில், முதலீடு செய்து கூடுதல் வருவாய் பெற விரும்பும் முதலீட்டாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன்படி, தங்களின் வைப்பு நிதி டிபாசிட்டிலிருந்து பெறும் கடனுக்கு, கூடுதலாக, 2 அல்லது 3 சதவீத வட்டியை செலுத்த வேண்டும். வங்கிகள், குறித்த கால வைப்பு நிதியில், 30 சதவீத அளவிற்கு கடன் வழங்குகின்றன.

- ஏ.கே.விஜய்தேவ்
நன்றி : தினமலர்   


Wednesday, December 9, 2009

அஜிதா ஏன் நக்​ச​லா​னாள்...?

இந்​தி​யா​வுக்கு மிகப்​பெ​ரிய ஆபத்து வெளியி​லி​ருந்து வராது.​ நம் நாட்​டுக்​குள்​ளேயே உரு​வாகி வரும் மாவோ​யிஸ்ட் தீவி​ர​வா​தி​க​ளால் உரு​வா​கும் ஆபத்​து​தான் அது எனப் ​ பல​ரும் கூறி வரு​கி​றார்​கள்.

மாவோ​யிஸ்​டு​களை அடக்கி ஒடுக்க கூடு​த​லான போலீ​ஸô​ரும்,​​ ராணு​வத்​தி​ன​ரும் சேர்ந்து ""ஆப​ரே​ஷன் கிரீன் ஹண்ட்'' எனப்​ப​டும் பச்சை வேட்டை திட்​டம்,​​ மத்​திய அர​சால் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.​ "நேர​டிப் பேச்​சு​வார்த்​தைக்கு வாருங்​கள் அல்​லது கடு​மை​யான நட​வ​டிக்​கை​களை எதிர்​கொள்​ளுங்​கள்' என்று மத்​திய அமைச்​சர் சிதம்​ப​ரம் எச்​ச​ரிக்​கை​யும் விடுத்​துள்​ளார்.​ ஆனால் இந்​தப் பிரச்​னையை ஒரு சட்ட ஒழுங்​குப் பிரச்​னை​யா​கக் கருதி நட​வ​டிக்கை எடுக்​கா​மல்,​​ ஓர் அடித்​தட்டு சமூ​கப் பிரச்னை என்ற நோக்​கில் ஆராய்ந்து மாற்று நட​வ​டிக்​கை​களை எடுக்க வேண்​டும் என்​பது அர​சி​யல் நோக்​கர்​கள் மற்​றும் நிர்​வாக வல்​லு​நர்​க​ளின் கருத்து.÷

​மாவோ​யிஸ்​டு​க​ளின் போராட்​டக் குழு​வில் நிறை​யப் பெண்​கள் உரு​வா​கி​யி​ருப்​பது இந்​தக் கருத்​துக்கு வலு சேர்க்​கி​றது.​ கடந்த நான்கு மாதங்​க​ளில் மேற்கு வங்​கத்​தின் மேற்கு மிது​ன​புரி பகு​தி​யில் 20 பெண் மாவோ​யிஸ்ட் தீவி​ர​வா​தி​க​ளைப் போலீ​ஸôர் கைது செய்​துள்​ள​னர்.​ அதில் மாலா குமாரி எனும் 20 வயது கும​ரிப்​பெண் ஒரு​வர்.​ இவர் மாவோ​யிஸ்​டு​க​ளின் உயர் கமிட்டி உறுப்​பி​னர்.​ ஒரு தாக்​கு​தல் பணிக்​குத் தலை​மை​யேற்று கையில் கண்​ணி​வெ​டி​குண்​டு​கள்,​​ பிஸ்​டல்​கள் போன்​ற​வற்​று​டன் கைது செய்​யப்​பட்​டி​ருக்​கி​றார்.​ ​

இது​போ​லவே சுமன்​மண்டி எனும் 50 வய​துப் பெண் ஒரு​வ​ரின் தலை​மை​யில் 14 பெண்​கள் லால்​கர் பகு​தி​யில் கைது செய்​யப்​பட்​டி​ருக்​கி​றார்​கள்.​ நிறை​யப் பெண் போரா​ளி​கள் யுத்​த​வெ​றி​யு​டன் அடர்ந்த காட்​டுப்​ப​கு​திக்​குள் கரடு முர​டான பகு​தி​க​ளில் ஆண்​க​ளுக்​குச் சம​மாக மிக​வும் அசெ​ள​க​ரி​ய​மான சூழ்​நி​லை​க​ளில் போரா​டு​வ​தற்​குத் தங்​க​ளைத் தயார்​ப​டுத்​திக் கொண்​டுள்​ள​னர்.​ இது​போன்ற வாழ்க்​கையை ஏற்​றுக்​கொள்​ளும் மன​நிலை அவர்​க​ளுக்கு ஏன்,​​ எப்​படி,​​ எதற்​காக வந்​தது எனும் கேள்வி எழு​கி​றது.​ இவர்​க​ளில் பல​ருக்கு மா சேதுங்,​​ கார்ல் மார்க்ஸ்,​​ லெனின் மற்​றும் ஸ்டா​லின் போன்​ற​வர்​க​ளைப் பற்றி எது​வுமே தெரி​யாது.​

2007-ம் ஆண்டு மகா​ராஷ்​டி​ரத்​தில் கத்​சி​ரோலி எனும் பகு​தி​யில் சுமன் எனும் 18 வயதே நிரம்​பிய இளம் பெண் மாவோ​யிஸ்​டு​க​ளின் தீவி​ர​வா​தப் பயிற்சி முகா​மில் ஆயு​தப்​ப​யிற்சி பெற்று வந்​தார்.​ அவ​ரைப் பேட்டி கண்ட ஒரு பத்​தி​ரி​கை​யா​ளர்,​​ ""இவ​ருக்கு கம்​யூ​னி​ஸத்​தைப் பற்​றியோ,​​ தீவி​ர​வா​தத்​தைப் பற்​றியோ எது​வுமே தெரி​யாது.​ தனது கிரா​மத்​தில் பிழைப்​புக்​குச் சரி​யான வழி கிடை​யாது,​​ தங்​க​ளைக் கொடு​மைப்​ப​டுத்​தும் ஆண்​கள் மற்​றும் தீவி​ர​வா​தி​க​ளைத் தேடித் தங்​கள் ஊருக்கு வரும் போலீஸ்​கா​ரர்​கள் தங்​களை மான​பங்​கம் செய்ய முயற்​சிப்​பது போன்​ற​வற்றி​லி​ருந்து விடு​பட மாவோ​யிஸ்​டு​களை அணு​கி​னால் அவர்​கள் உட​னடி நட​வ​டிக்கை எடுக்​கி​றார்​கள்.​ இவர்​கள் மாவோ​யிஸ்​டு​க​ளான கார​ணம் இது​தான்.​

ஆக,​​ ஆதி​வாசி மக்​க​ளின்​மீது மற்​ற​வர்​க​ளால் நடத்​தப்​ப​டும் கடு​மை​யான நட​வ​டிக்​கை​க​ளுக்கு அர​சுத் தரப்​பிலோ மற்ற அரசு சாராத நிறு​வ​னங்​கள் தரப்​பிலோ எந்​த​வி​த​மான நல்​லா​த​ர​வு​டன் கூடிய நட​வ​டிக்​கை​கள் அந்​தப் பகு​தி​யில் கிடை​யாது.​ நமது வளர்ந்​து​விட்ட கிரா​மங்​க​ளில் உள்​ள​து​போல்,​​ ஊர்ப் பஞ்​சா​யத்து அல்​லது தனிப்​பட்​ட​வர்​கள் மீது நடத்​தப்​ப​டும் தாக்​கு​தல்​க​ளைத் தட்​டிக்​கேட்​கும் பெரி​ய​வர்​கள் அடர்ந்த காட்​டுப்​ப​கு​தி​யில் உள்ள ஆதி​வாசி கிரா​மங்​க​ளில் இல்லை.​

இது​போன்ற பகு​தி​க​ளுக்​குச் செல்​லும் மாவோ​யிஸ்​டு​கள் பாதிக்​கப்​பட்ட பெண்​க​ளைக் குறி​வைத்து தங்​கள் இயக்​கத்​தில் சேர்த்​துக் கொள்​கி​றார்​கள்.​

இது​போன்ற ஆதி​வாசி குடி​யி​ருப்​பு​க​ளில் கண்​டெ​டுக்​கப்​பட்ட ஒரு சிறிய போஸ்​ட​ரில் "வர்க்​கப் போராட்​டத்​தின் மூலம் புரட்சி உரு​வா​கும்.​ புரட்சி இல்​லா​மல் பெண்​க​ளுக்கு விடு​தலை கிடைக்​காது' எனும் வாச​கங்​கள் உள்​ளன.​ இப்​ப​கு​தி​யில் வேலை செய்​யும் ஓர் அனு​ப​வம் வாய்ந்த போலீஸ் அதி​கா​ரி​யின் கூற்​றுப்​படி ஆதி​வா​சி​கள் குடி​யி​ருப்​பு​க​ளில் பொரு​ளா​தார முன்​னேற்​ற​மும் கிடை​யாது.​ அது​போ​லவே எந்த அர​சி​யல் கட்​சி​யும் கிடை​யாது.​ எனவே இந்த அர​சி​யல் வெற்​றி​டத்தை மாவோ​யிஸ்​டு​கள் மிக எளி​தாக நிரப்​பி​வி​டு​கி​றார்​கள்.​

மேலே கூறப்​பட்ட விஷ​யங்​கள் நமக்கு மிக​வும் அதிர்ச்சி அளிப்​ப​தாக உள்​ளன.​ இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த நீட்​டாலா குலாட்​கர் என்​ப​வர்,​​ அஜிதா எனும் 19 வயது நிரம்​பிய பெண் நக்​ச​லைட் பற்றி விரி​வா​கக் கூறு​கி​றார்.​

1968-ம் ஆண்டு கேர​ளத்​தில் ஒரு காவல் நிலை​யத்​தைத் தாக்​கும் நக்​ச​லைட்​டு​கள் சுற்றி வளைத்​துப் பிடிக்​கப்​பட்​டார்​கள்.​ அவர்​க​ளில் அஜிதா எனும் பெண்​ம​ணி​யும் ஒரு​வர்.​ அஜிதா குனிக்​கல் எனும் இந்​தப் பெண் மும்​பை​யில் பிறந்​த​வர்.​ ஆனால் கேர​ளத்​தில் வளர்ந்​த​வர்.​ இவ​ரது தந்தை குனிக்​கல் நாரா​ய​ணன்,​​ கேர​ளத்​தில் நக்​சல்​பாரி இயக்​கத்​தைத் தொடங்​கி​ய​வர்.​ இவ​ரது மனைவி மந்​தா​கினி குஜ​ராத்​தைச் சேர்ந்​த​வர்.​ கல்​லூ​ரி​யில் படித்​துக் கொண்​டி​ருந்த அஜி​தாவை,​​ அவ​ரது தந்தை நக்​சல்​பாரி இயக்​கத்​தில் சேரு​மாறு அழைப்பு விடுத்​தார்.​

நக்​சல்​பாரி இயக்​கத்​தில் முழு ஈடு​பாடு ஏற்​பட்ட பின் அஜிதா கேர​ளத்​தில் வய​நாடு பகு​திக்​குச் செல்​கி​றார்.​ அங்கு மலைப்​பி​ர​தே​சத்​தில் ஆதி​வா​சி​க​ளுக்​கும்,​​ நிலச்​சு​வான்​தார்​க​ளுக்​கும் கடு​மை​யான தக​ரா​று​கள் நடந்​து​வந்த நேரம் அது.​ நிறைய ஆதி​வா​சி​க​ளின் நிலங்​களை நிலச்​சு​வான்​தார்​கள் வன்​மு​றை​யாக எடுத்​துக்​கொண்டு ஆதி​வா​சி​களை விரட்டி விடு​வது என்​பது ஒரு பிரச்​னை​யாக உரு​வெ​டுத்​தது.​

இது பற்றி அரசு அதி​கா​ரி​க​ளி​டம் கேட்​டால்,​​ நிறைய பட்டா நிலங்​கள் வெளி​யூர்​க​ளில் வசிக்​கும் நிலச்​சு​வான்​தார்​க​ளால் தனிப்​பட்ட முறை​யில் நேர​டி​யாக நிர்​வ​கிக்​கப்​ப​டா​மல் இருந்​தன.​

இது​போன்ற நிலங்​க​ளில் ஆதி​வாசி கிரா​மத்​தி​னர் சென்று குடி​ய​மர்ந்து கொண்டு சிறிய அள​வில் விவ​சா​யம் செய்து வந்​தார்​கள்.​ இது இரண்டு மூன்று தலை​மு​றை​க​ளா​கத் தொடர,​​ இந்த நிலங்​கள் தங்​க​ளுக்​குச் சொந்​தம் என்று அவர்​கள் நினைத்​தார்​கள்.​ ஆனால்,​​ அரசு ஆவ​ணங்​க​ளில் பல நிலச்​சு​வான்​தார்​கள் பட்​டா​தா​ரர்​க​ளா​கத் தொடர்ந்​தார்​கள்.​

நிலங்​க​ளின் தேவை​க​ளும்,​​ விலை​ம​திப்​பும் உயர்ந்த பின்​னர்,​​ நகர்ப்​பு​றங்​க​ளில் இருந்த நிலச்​சு​வான்​தார்​கள் தங்​கள் நிலங்​க​ளைத் தேடி மலைக்​கி​ரா​மப் பகு​தி​க​ளுக்கு வந்து அவற்றை யாரோ ஆக்​கி​ர​மித்​தி​ருப்​ப​தைக் கண்டு போலீஸ் உத​வி​யு​டன்,​​ உள்​ளூர் ரவு​டி​கள்,​​ வஸ்​தா​து​கள் உத​வி​யு​டன்,​​ ஆதி​வா​சி​க​ளைத் துரத்​தி​விட்டு,​​ தங்​கள் பட்டா நிலங்​களை மீண்​டும் கைய​கப்​ப​டுத்​து​வார்​கள்.​ வழக்​கம்​போல் போலீ​ஸôர் சட்​டப்​படி பட்டா வைத்​தி​ருக்​கும் பணக்​கா​ரர்​க​ளின் பக்​கம் துணை நிற்​பார்​கள்.​

நிலைமை இப்​படி இருக்க ஆதி​வாசி தலை​வர்​க​ளும் நக்​சல்​பாரி இயக்​கத்​தி​ன​ரும் நிலச்​சு​வான்​தார் கையில் இருக்​கும் பட்​டாக்​கள் உண்​மை​யா​னவை அல்ல,​​ போர்​ஜ​ரி​கள் என வாதிட்​டார்​கள்.​ இந்​தப் பிரச்னை மிக​வும் அதி​க​மாகி ஒரு கொரில்லா தாக்​கு​தல்​தான் சரி என ரக​சி​ய​மாக நக்​சல்​பா​ரி​க​ளின் கூட்​டத்​தில் பிர​சா​ரம் தொடர்ந்​தது.​

கேர​ளத்​தின் அன்​றைய நம்​பூ​தி​ரிப்​பாட் அர​சாங்​கம் தலைச்​சேரி எனும் இடத்​தில் ஒரு பெரிய தாக்​கு​த​லைச் சமா​ளிக்க வேண்​டி​யி​ருந்​தது.​

கண்​ணூர் மாவட்​டத்​தில் ஒரு தனி​யார் பீடி கம்​பெனி மிகப் பிர​ப​ல​மாக வளர்ந்​தது.​ அதில் சுமார் 20,000 பீடித் தொழி​லா​ளர்​கள் வேலை செய்​தார்​கள்.​ அவர்​க​ளுக்​குக் குறைந்​த​பட்ச கூலி நிர்​ண​யம் செய்து நம்​பூ​தி​ரிப்​பா​டின் கம்​யூ​னிஸ்ட் அரசு ஒரு சட்​டம் இயற்​றி​யது.​ இந்​தக் கூலி கட்​டு​ப​டி​யா​காது என்​ப​தால்,​​ பீடி கம்​பெ​னியை மூடி​விட்டு,​​ தங்​கள் சொந்த கர்​நா​டக மாநி​லத்​துக்கு அதை மாற்​றி​விட்​டார்​கள்.​

இந்த ஒரே நட​வ​டிக்​கை​யில் 20,000 ஏழைத் தொழி​லா​ளர்​கள் வேலை​யி​ழந்து பரி​த​வித்​தார்​கள்.​ அவர்​க​ளைத் திரட்டி ஆயு​தங்​க​ளைக் கொடுத்​துப் பயிற்சி செய்து தலைச்​சேரி போலீஸ் நிலை​யத்​தைத் தாக்க முற்​பட்​டார்​கள் நக்​ச​லைட்​டு​கள்.​

அஜிதா அந்​தத் தாக்​குத​லில் பங்​கெ​டுத்​தார்.​ ""அந்​தத் தாக்​குத​லில் நிறைய ஆயு​தங்​கள் அங்கே கிடைக்​கும் என்று நாங்​கள் ஈடு​பட்​டோம்.​ ஆனால் அந்​தத் தாக்​குத​லில் நாங்​கள் கைது செய்​யப்​பட்டு படு​தோல்வி அடைந்​தோம்'' என்​கி​றார் அஜிதா.​ அவர் ஏழரை ஆண்​டு​கள் சிறை​யில் இருந்​தார்.​

19 வயதே நிரம்​பிய அஜிதா,​​ போலீ​ஸô​ரால் மான​பங்​கப்​ப​டுத்​தப்​பட்​ட​தா​க​வும்,​​ அவர்​கள் தன்னை நிறைய விப​சார வழக்​கில் கைதான பெண்​க​ளு​டன் ஒரே அறை​யில் அடைத்து வைத்​த​தா​க​வும் கூறு​கி​றார்.​ அது​மா​தி​ரிப் பெண்​கள் தாங்​கள் வாழ்க்​கை​யில் ஏழ்​மை​யி​னா​லும்,​​ ஆண்​கள் மற்​றும் போலீ​ஸôர் பல​ரால் துன்​பு​றுத்​தப்​பட்டு விப​சா​ரத் தொழி​லுக்கு வந்​த​தா​க​வும் கூறி​னார்​க​ளாம்.

இது ஒரு கேடு​கெட்ட உல​கம் என்​ப​தைத் தன்​னு​டைய ஏழரை ஆண்டு சிறை அனு​ப​வத்​தில் முழு​வ​தும் தெரிந்து கொண்​ட​தாக அவர் கூறு​கி​றார்.​

என் தந்தை எனக்​குப் போதித்த சித்​தாந்​தங்​க​ளும்,​​ என்​போன்ற சில துர​தி​ருஷ்​ட​மான ​ பெண்​கள் வாழ்க்​கை​யில் அனு​ப​வித்த துன்​பங்​க​ளும் என்​னைத் தீவிர போரா​ளி​யாக மாற்​றி​யது என்று கூறு​கி​றார் அஜிதா.​ ​

இது​போன்ற தக​வல்​கள் வளர்ந்​து​விட்ட மாநி​ல​மா​கிய தமி​ழ​கத்​தின் குடி​மக்​க​ளா​கிய நமக்கு மிக​வும் ஆச்​ச​ரி​யத்தை அளிக்​க​லாம்.​ மக்​க​ளின் அடிப்​ப​டைத் தேவை​களை மாநில அரசு கவ​னிக்க வேண்​டும்.​ கிரா​மப்​பு​றங்​க​ளில் வாழ்க்​கைக் கட்​ட​மைப்​பு​கள் எனப்​ப​டும் சாலை வச​தி​கள்,​​ குடி​நீர் வசதி,​​ கல்வி,​​ சுகா​தா​ரம் போன்​ற​வற்​று​டன் அடிப்​படை சமூ​கப் பாது​காப்​பும் உறுதி செய்​யப்​பட வேண்​டும்.​

கல்வி அறி​வில்​லாத பெண்​கள் எப்​படி நடத்​தப்​ப​டு​கி​றார்​கள்,​​ தொழி​லா​ளர்​கள் எப்​ப​டித் தங்​கள் எஜ​மா​னர்​க​ளால் நடத்​தப்​ப​டு​கி​றார்​கள் என்​ப​வை​யெல்​லாம் அடிப்​படை விஷ​யங்​க​ளாக மாறு​கின்​றன.​ ஏழை,​​ பணக்​கா​ரன் வித்​தி​யா​சம் மிக அதி​க​மாகி காழ்ப்​பு​ணர்ச்சி வள​ரக்​கூ​டாது என்ற ஒரே கார​ணத்​துக்​கா​கத்​தான் இந்​தி​யா​வின் முதல் பிர​த​மர் பண்​டித ஜவா​ஹர்​லால் நேரு,​​ சோஷ​லிச சித்​தாந்​தப்​படி ஏழை மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​காக பல உய​ரிய திட்​டங்​களை நடை​மு​றைப்​ப​டுத்​தி​னார்.​ காலப்​போக்​கில் அர​சி​யல்​வா​தி​க​ளின் ஊழல் பெருகி தாதாக்​க​ளு​ட​னும்,​​ தன​வந்​தர்​க​ளு​ட​னும் ஒரு கூட்​டணி அமைத்து ஏழை மக்​கள் அதிக அள​வில் உரு​வா​கித் தங்​க​ளுக்கு அரசு எது​வும் செய்​யாது,​​ போரா​டித்​தான் நமக்கு வேண்​டிய நன்​மை​களை நாம் பெற முடி​யும் என்ற எண்​ணம் உரு​வா​கி​விட்​டது.​

​இதை முற்​றும் உணர்ந்து,​​ அதன் அடிப்​ப​டை​யில் திட்​ட​மி​டா​மல்,​​ கூடு​தல் போலீ​ஸô​ரை​யும்,​​ பாது​காப்​புப் படை​யி​ன​ரை​யும் அனுப்பி,​​ ஆளில்​லாத விமா​னங்​க​ளின் மூலம் குண்டு மழை பொழிந்து மாவோ​யிஸ்​டு​களை அடக்கி ஒடுக்​கி​விட முடி​யாது!​​​ ​
கட்டுரையாளர் : எ‌ன்.​ முரு​க‌ன்
நன்றி : தினமணி

Monday, December 7, 2009

சொல்​ல​லாமா,​ கூடாதா?

வெளி​யூ​ருக்​குப் போவது என்று தீர்​மா​ன​மா​ன​வு​டன் நான் எடுத்த முடி​வைக் கேட்டு வீட்​டில் இருந்த யாரும் எது​வும் பேச​ வில்லை. சொல்​லப் போனால் வெளி​யூ​ருக்​குப் போகக்​கூட வேண்​டாம் என்றே அவர்​கள் நினைக்க ஆரம்​பித்​தார்​கள். நான் அவர்​க​ளைச் சமா​தா​னப்​ப​டுத்த விரும்​ப​வில்லை,​ அதே சம​யம் எடுத்த முடிவை செய​லாக்​கியே தீரு​வது என்ற எண்​ணத்​தோடு வீதி​யில் இறங்​கி​னேன். ​

​ அதற்​குள் என் வீட்​டார்,​ பக்​கத்து வீட்​டுக்​கா​ர​ர​ரி​டம் சுருக்​க​மா​கச் சொல்லி அவ​ரும் நான் தெருக்​கோ​டியை அடை​யும்​போது,​ ஏன் சார் விஷப் பரீட்சை,​ நான் வேணா 2 நாள் உங்க வீட்​டி​லேயே படுத்​துக் காவல் பார்த்​துக்​க​றேன் என்று முன்​வந்​தார். உங்​க​ளுக்​குச் சிர​மம் வேண்​டாம்,​ நாம் அர​சை​யும் நம்​பித்​தான் வாழ்ந்​தாக வேண்​டும் என்று சொல்​லி​விட்டு,​ காவல் நிலை​யம் நோக்கி நடந்​தேன். வெளி​யூர் போகும் அந்த 2 நாள்​க​ளும் போலீஸ்​கா​ரர்​கள் என் வீட்​டைப் பார்த்​துக் கொள்​ளச் சொல்ல வேண்​டும் என்​ப​து​தான் அந்த முடிவு.

​ போலீஸ் நிலை​யத்​துக்​குள் போன​போது கடா மீசை​யும் கலர் சொக்​கா​யும் போட்​டுக்​கொண்டு நாற்​கா​லியை அடைத்​த​படி ஒரு​வர் உட்​கார்ந்​தி​ருந்​தார். அவர்​தான் ரைட்​டர் என்று ஊகித்​தேன். முதல்​வர் கூடப் பதவி என்ற முள்​முடி இல்​லாத காலத்​தில் கலர் லுங்​கி​யு​டன் பேட்டி தந்த படத்தை சுப​மங்​க​ளா​வில் பார்த்​தி​ருந்​த​தால் உண்​மை​யி​லேயே இவ​ரும் பெரிய ரைட்​ட​ரா​கவே இருப்​பார் என்று ஊகித்​தேன். என் ஊகம் வீண் போக​வில்லை.

​ அதற்​குள் பேரி​ரைச்​ச​லோடு வந்த ஜீப்பி​லி​ருந்து காவல்​து​றைக்கே உரிய டிரேட் மார்க் தொப்​பை​யு​டன் ஒரு அதி​காரி யாரையோ வைத​ப​டியே உள்ளே மூச்சு வாங்​கிக்​கொண்டு வந்​தார். என்​னய்யா ஸ்டே​ஷன் லட்​ச​ணம் இது,​ எங்​கய்யா ஏட்டு,​ சூடா டீ சொல்​லுய்யா என்று உரத்த குர​லில் கட்​ட​ளை​யிட்​ட​ப​டியே இவன் யார் என்று என்​னைப் பார்த்​து​விட்டு ரைட்​ட​ரைப் பார்த்​தார்.

ரைட்​டர் தெரி​யாது என்​ப​தைக் ​ கண்​ணா​லேயே சொல்​லி​விட்டு விறைப்​பாக சல்​யூட் அடித்​தார். என்​னய்யா கேசு அது என்று கேட்​டுக்​கொண்டே அருகி​லி​ருந்த மர நாற்​கா​லி​யில் தன்னை புதைத்​துக் கொண்​டார்.

​ ரைட்​டர் எப்.ஐ.ஆர். ரிஜிஸ்​தரை அவ​ரி​டம் பணி​வா​கக் காட்​டி​னார். அவர் மீண்​டும் கொதிக்க ஆரம்​பித்​தார். நாம பொய் கேஸý​தான் போட​றோம்னு ஊர் பூரா பேச​றாங்க இதிலே என்​னயா பேரெல்​லாம் இப்​படி இருக்​குது,​ படி என்று உத்​த​ர​விட்​டார்.

​ ஒக்​கூர் மாசாத்​தி​யார்,​ காக்​கைப் பாடி​னி​யார்,​ வெண்​ணிக்​கு​யத்​தி​யார்,​ நப்​ப​ச​லை​யார்,​ குலோத்​துங்​கன்,​ பர​ணர்,​ கபி​லர்,​ பெருஞ்​சித்​தி​ர​னார்,​ இளங்கோ,​ புக​ழேந்தி,​ அம்​பி​கா​பதி என்று ரைட்​டர் உற்​சா​க​மா​கப் படித்​துக் கொண்டே போனார்.

​ நிறுத்​துய்யா,​ இந்​தப் புல​வர்​கள்​ளாம் கடைச்​சங்​கமா,​ இடைச்​சங்​கமா,​ தொழிற்​சங்​க​மான்னு அறி​ஞர்​க​ளா​லேயே சொல்ல முடி​யல்ல,​ நீ பாட்​டுக்கு இவங்க பேரை எழு​தி​யி​ருக்​கியே என்​னய்யா கேஸý என்று மீண்​டும் கேட்​டார்.

​ போக்​கு​வ​ரத்​துக்கு இடை​யூறு செய்​தது,​ பொதுச் சொத்​துக்​குச் சேதம் விளை​வித்​தது,​ அரசு ஊழி​யர்​க​ளைக் கடமை செய்ய விடா​மல் தடுத்​தது,​ தேசத்​துக்கு எதி​ரா​கக் கல​கம் செய்​தது என்று எல்லா செக்​ஷன்​ல​யும் புக் பண்​ணிட்​டேன்​(ஐ)​யா என்​றார். எனக்கே தூக்​கி​வா​ரிப்​போட்​டது.

​ இந்​தப் புல​வர்​கள்​ளாம் எந்​தக் காலத்​து​லயா அப்​ப​டிச் செஞ்​சாங்க என்று உண்​மை​யி​லேயே அழாக்​கு​றை​யா​கக் கேட்​டார் அந்த அதி​காரி. இன்​னிக்கு காலை​யி​லே​தான் சார் என்​றார் ரைட்​டர். எதுக்​காக,​ யார் இவங்க என்று மீண்​டும் கேட்​டார்.

​ விடி​கா​லைலே கரண்ட் போயி​டுச்​சாம் சார்,​ எங்க குடி​யி​ருப்​புக்கு மட்​டும் அடிக்​கடி கரண்ட் கட் செய்​வது சரியா என்று கேட்டு மறி​யல் பண்​ணி​னாங்க சார். இவங்​கள்​ளாம் ஒரு அர​சி​யல் கட்​சி​யிலே சேர்ந்​துட்​டாங்க சார். அங்க அவங்க பேரை​யெல்​லாம் இப்​படி சுத்​தத் தமிழ் பெயர்​களா மாத்​திட்​டாங்க சார் என்று ரைட்​டர் விளக்​கி​னார்.

செம்​மொழி மாநாடு நடக்​கப் போகிற சம​யத்​தில் இத்​தனை தமிழ்ப் புல​வர்​கள் கூண்​டோடு கைதா​கி​விட்​டார்​களே என்று திகைத்த எனக்​குப் புதிர் அவிழ்ந்​தது நிம்​ம​தி​யாக இருந்​தது.

​ அப்​போது திடீ​ரென யாரோ என்​னைப் பிடித்​துத் தள்​ளி​னார் போல இருந்​தது. கண்ணை விழித்​துப் பார்த்​தால் ஆபீ​சில்​தான் லஞ்ச் இன்​டெர்​வெல்​லுக்​குப் பிறகு அப்​ப​டியே சீட்​டில் தூங்​கி​ய​தும் அதெல்​லாம் பகல் கனவு என்​றும் தெரிந்​தது.

​ இனி ஊருக்​குப் போகக்​கூ​டாது,​ அப்​ப​டியே போவ​தாக இருந்​தா​லும் ​ போலீஸ்​கா​ரர்​க​ளி​டம் சொல்லி தொந்​த​ரவு செய்​யக்​கூ​டாது என்று தோன்​றி​யது.
கட்டுரையாளர் :ராணிப்​பேட்டை ரங்​கன்
நன்றி : தினமணி

Wednesday, December 2, 2009

"அணு' அளவும் இல்லை

அணுமின் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதால் கடந்த மாதம் 16-ம் தேதி அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி கைது செய்யப்பட்ட பிறகுதான் இத்தகைய தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசுக்கு துப்பு கிடைத்தது.

சரியாக 12 நாள்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலம் கார்வார் அருகே உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 55 ஊழியர்கள் மிகை கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகி இருப்பது, வழக்கமாக அவர்கள் உட்படுத்தப்படும் சிறுநீர் சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. இதற்குக் காரணம், அணுஉலைக் கூடத்தில் பணியாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் குளிர் குடிநீரில் டிரைடியம் கலந்திருந்ததுதான் என்று தெரியவந்துள்ளது.

இதுவே நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விஷயம். ஆனாலும் இதைவிட ஒரு படி மேலேபோய், "இந்த அணுஉலைக் கூடத்தில் எந்த இடத்திலும் கனநீர் கசிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது' என்று அணுமின் நிலையம் அறிவித்திருப்பது நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அணுமின் நிலையத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்றால், வெளியிலிருந்துதான் டிரைடியம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அர்த்தமா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

அணுமின் உலைக்கூடங்களில் யுரேனியம் பயன்படுத்தும்போது அதைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் கனநீரின் காரணமாக, மிகச்சிறிய அளவிலான டுடேரியம், டிரைடியம் என்ற வேதிப்பொருளாக மாறுகிறது. இதுதான் ஹைட்ரஜன் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள். இத்தகைய ஆபத்தான மூலப்பொருள் தற்போது குளிர் குடிநீர்த் தொட்டிக்கு வந்த டிரைடியம், நாளை வெளியே செல்லாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

அணுமின் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று அமெரிக்கா துப்பு கொடுத்தால், ஏதோ பயங்கரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் வந்து தாக்கியதைப்போல துப்பாக்கிகளுடன் வருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள் போலும். அணுமின் நிலையம் போன்ற ஓர் இடத்துள் புக வேண்டும் என்றால் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் வர மாட்டார்கள். விஞ்ஞானிகளுக்கு இணையான அறிவுடன் கருப்பு ஆடுகளாகத்தான் வருவார்கள் என்பதை அரசு புரிந்துகொண்டிருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

டிரைடியம் போன்ற கதிர்வீச்சுப் பொருளை அதே உலைக்கூடத்தின் குடிநீரில் கலப்பது மட்டுமல்ல, எந்தவொரு நகரத்தின் குடிநீர்த் தொட்டியிலும்கூட கலந்துவிட முடியும் என்பதை இந்த அணுமின் நிலையங்களும், அரசும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நிறைய அணுஉலைக் கூடங்களைத் திறக்க தயாராகி வருகிறோம். எத்தகைய பாதுகாப்பை இந்திய அரசு நமக்கு வழங்கவுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் கல்பாக்கம் பாதிக்கப்பட்டபோது இந்திரா காந்தி அணுமின் நிலையமும் பேரலையின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது கனநீர் கசிவும், சேகரித்து வைக்கப்பட்ட அணுஉலைக் கழிவுப் பொருள்களும் பேரலையால் வெளியேறியதாகப் பேச்சு எழுந்தது. ஆனால் அணுமின் நிலையம் அதை மறுத்தது. சுனாமியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னார்கள். ஆனால், கூடங்குளம், கல்பாக்கம், மும்பை பாபா அணுஉலைக் கூடம் எல்லாமும் கடலோரத்தில்தான் இருக்கின்றன.

பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தின் தொழில்துறை பாதுகாப்பில்கூட நாம் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இவை களவுபோகும்போது அந்த நிறுவனமும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும் படும் அவதி சொல்லிமாளாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி துவாக்குடியில் உள்ள நிறுவனத்தில் பாபா அணுமின் நிலையம் வழங்கிய பயன்படுத்தப்பட்ட யுரேனியம் திருடுபோனது. திருடியவருக்கு அதன் மதிப்போ ஆபத்தோ தெரியாது. அவரைப் பொருத்தவரை அது பொருத்தப்பட்டிருந்த தேனிரும்பு மட்டுமே மதிப்பு கொண்டதாக இருந்தது. பழைய இரும்புக் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார். கதிர்வீச்சை அறியும் கருவிகளுடன் பாபா அணுமின் நிலைய அதிகாரிகள் வந்து, பழைய இரும்புக் கடையிலிருந்து கதிர்வீச்சு வருவதைக் கண்டுபிடித்து தேடி எடுத்தார்கள்.

ஓராண்டுக்கு முன்பு மணலியில் உள்ள பைப் தயாரிக்கும் கம்பெனியில், பாபா அணுமின் நிலையத்தில் இதேபோன்ற வேதிப்பொருள் திருடுபோனதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதுபற்றி எந்தப் புகாரும் பதிவாகவே இல்லை.

இவை நம் உள்நாட்டுத் திருடர்களால், அவர்களுக்கே அதன் மதிப்பு தெரியாமல் நடந்த திருட்டுகள். ஆனால், தீவிரவாதிகள் அப்படியல்ல. அவர்களுக்கு இத்தகைய கதிர்வீச்சுப் பொருள்களின் மதிப்பு தெரியும், அதன் ஆபத்து தெரியும். அதன் பயன்பாடுகளும் அத்துப்படி. அப்படியானால், தொழில்துறைப் பயன்பாட்டிலும்கூட இந்திய அரசு எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பது புறியும். இது அரசுக்குப் புரியாதவரை நமக்கு அணு அளவும் பாதுகாப்பு இல்லை!

நன்றி : தினமணி


Saturday, November 14, 2009

யாருக்கு யார் பாதுகாப்பு?

இப்போதெல்லாம் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்புக் கெடுபிடி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு அதிரடிப்படை, கருப்புப் பூனைப்படை என இதன் செலவுகளும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. இது ஓர் ஏழை நாட்டுக்குக் கட்டுபடியாகுமா? இந்தக் கேள்வி எங்கும் எழுந்துள்ளது. எனினும் யாரும் இதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மக்களுக்குச் சேவை செய்ய வந்த இந்தப் பெரிய மனிதர்கள் “பாதுகாப்பு’ என்ற பெயரால் அந்நியப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். முக்கியமாக அலுவலக நேரங்களில் பணிகளுக்குச் செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்தி இந்த வி.ஐ.பி.க்கு வழிவகுத்துக் கொடுக்கும் காவலர்களின் கெடுபிடிகள் கொஞ்சநஞ்சமல்ல.

இப்போது பிரதமரை மையமாக வைத்து ஓர் அதிர்ச்சியான நிகழ்ச்சி. சண்டீகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி நிறுவன மருத்துவமனையில் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார்.

அப்போது அங்கு கொண்டு வரப்பட்ட சிறுநீரக நோயாளியான எஸ்.பி. வர்மா சுமார் 2 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் இறந்ததாகவும் அவரது உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட வர்மாவைப் பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை என்பது மனிதநேயமற்ற கொடுமையல்லவா?

இறந்து போன வர்மா குடும்பத்தினருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்ததுடன் ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனாதையாக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது.

இக்காலத்தில் மற்ற பொருள்களின் விலையெல்லாம் ஏறிக்கொண்டே இருக்கின்றன; மனித உயிர்களின் விலைகள் மட்டும் மலிவாகிவிட்டன. மனித உயிர்களுக்கு விலையே இல்லை என்று கூறப்பட்டதெல்லாம் அந்தக் காலம்.

மகாத்மா காந்தி, நேரு, காமராஜ், அண்ணா மற்றும் ஜீவானந்தம் போன்றவர்களுக்கு இந்த “பந்தாவெல்லாம் தெரியாமல் போய்விட்டது. எளிமையாக வாழ்ந்துவிட்டு இறந்து போனார்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்த அக்காலத் தலைவர்கள் பாவம், பரிதாபத்துக்கு உரியவர்கள்.

முற்றிலும் வியாபாரமாகிவிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நட்சத்திரங்களுக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படுவதாகக் காவல்துறை பெருமையோடு அறிவிக்கிறது. லட்சியமே இல்லாமல் லட்சக்கணக்கிலிருந்து தாவி கோடிக்கணக்கில் பணம் வாங்கும் இவர்களுக்கும் இந்திய ஏழை மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் பாதுகாப்புத் தரப்படுகிறது.

“மக்கள் பிரதிநிதிகளின் உயிருக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது கடமையில்லையா?’ என்று கேட்கிறார்கள். அப்படியானால் மக்களுக்குப் பாதுகாப்புத் தேவையில்லையா? அரசியலுக்கு வந்து சம்பாதிக்கவே துடிப்பவர்களுக்கு மக்கள் பணத்தில் பாதுகாப்புத் தரவேண்டிய அவசியம் என்ன? அவர்களது சொந்தப் பணத்தில் அல்லது கட்சிப் பணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவதுதானே முறையாகும்?

1947 ஆகஸ்ட் 15. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக விடுதலை பெற்றன. நாடெங்கும் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நவகாளியில் இந்து, முஸ்லிம் வகுப்புக் கலவரங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. மக்கள் குற்றுயிரும், குலையுயிருமாகத் திசைதெரியாமல் கூட்டம் கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தனர். இரு பக்கங்களிலும் மதவெறி கண்ணையும் கருத்தையும் மறைத்துக் கொண்டிருந்தது. இரண்டு மதங்களைச் சேர்ந்த மனிதர் உடல்களிலும் சிவப்பு ரத்தமே சிந்தப்பட்டன.

இந்த நேரத்தில் காந்தியடிகள் மட்டுமே இதைப் பற்றிக் கவலை கொண்டு கலவர பூமியான நவகாளியை நோக்கித் தன்னந்தனியாகத் தன் பயணத்தைத் தொடங்கினார், “அங்கு செல்வது ஆபத்து’ என்று எச்சரிக்கை செய்யப்பட்டபோதும் அவர் கேட்கவில்லை. மனித உயிர்களைக் காப்பதற்காக அந்தத் தள்ளாத வயதிலும் புறப்பட்டார். அவரது வருகை அங்கே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த வகுப்புத் தீயை அணைக்க உதவியது.

அங்கே அவருக்கு எந்த அதிரடிப்படையும் பாதுகாப்புத் தரவில்லை. மக்களே அவருக்குக் கவசமாக இருந்தனர். பகைவர்களையும் நேசிக்கும் பண்பும், தன்னுயிரைக் காட்டிலும் மன்னுயிரை மதிக்கும் அன்பும் அவருக்குப் பாதுகாப்பானது.

1861 ஏப்ரல் 12. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. இரு தரப்பிலும் ஆள்சேதமும், பொருள்சேதமும் மிக மிக அதிகம். இதுவரை நடந்துள்ள உள்நாட்டுப் போர்களில் இதற்கு இணையான ஒரு கொடிய போர் வரலாற்று ஏடுகளில் இல்லை. ஐக்கிய அரசு சார்பில் 3 லட்சத்து 60 ஆயிரம் வீரர்களும், கூட்டு அரசு சார்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களும் போரில் மடிந்தனர் என்றால் அதன் பயங்கரத்தை என்னென்பது?

போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. உள்நாட்டுப் போராக இருந்ததால் அழிவும், அவதியும் அதிகமாகிவிட்டது. இரு பகுதி மக்களுக்கும், “போர் எப்படியாவது முடிந்தால் போதும்’ என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. வெற்றி, தோல்வியைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.

போரின் விளைவாக கொலை, கொள்ளை, களவு, கட்டுப்பாடின்மை மிகுந்து விட்டன. உணவுக்கிடங்குகளை எரித்தல், பாலங்களைத் தகர்த்தல் எனக் கலவரங்களும் ஏற்பட்டுவிட்டன. இதனால் மக்கள் உணவுக்கும், போக்குவரத்துக்கும் பெரிதும் அவதிப்பட்டனர். தந்தையை, கணவனை, குழந்தைகளை இழந்து பெண்கள் சோகத்தில் தவித்தனர்.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் “பாதுகாப்புக் கருதி வெள்ளை மாளிகையிலேயே முடங்கிக் கிடக்கவில்லை.

தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் போர்க்களத்துக்கே போனார்; காயமுற்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த போர் வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

எதிர்தரப்புப் படைவீரர்களையும் அன்போடு நலம் விசாரித்தார்; கை குலுக்கினார். அவரது இடைவிடாத முயற்சியால் உள்நாட்டுப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.

இவ்வாறு மக்களுக்காகவும், தேசத்துக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு மக்களே பாதுகாப்புக் கவசமாக இருந்திருக்கின்றனர். இந்த நிலை மாறிப் போனது ஏன்? இதை எண்ணிப் பார்க்க வேண்டிய வேளை இது.

இந்தப் பாதுகாப்பு மரியாதைக்குரியதாகக் கருதப்படுவதால் இதனை மேலும் மேலும் முக்கியப் பிரமுகர்கள் கேட்டு வருகின்றனர்; இதனால் அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதற்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று பலமுறை அறிவித்தனர். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இக்காலத்தில் அரசியலைவிடச் சிறந்த வணிகம் இல்லை என்றாகிவிட்டது. இந்த வியாபாரப் போட்டியில் பகைவர்கள் தோன்றுவதும், மோதல்கள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாது. இவர்களுக்குப் பாதுகாப்பு தேவைதான். யாருக்கு யார் இந்தப் பாதுகாப்பைத் தருவது?

ஒரு நாட்டின் பிரதமர் உயிர் மேலானதுதான்; அது பாதுகாக்கப்பட வேண்டியதுதான். ஆனால், தன் உயிருக்கே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுநீரக நோயாளியால் பிரதமரின் பாதுகாப்புக்கு எப்படிக் குந்தகம் ஏற்படும்? இதுகூடவா இந்தப் பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல் போய்விட்டது?

அதிகார வர்க்கத்தினரைத் திருப்தி செய்வது ஒன்றே தங்கள் கடமை என்று காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் நினைக்கும்படி அரசுத்துறை தரம் தாழ்ந்து போய்விட்டது.

சட்ட விதிகள் எல்லாம் பாமர மக்களுக்கு மட்டும்தானா? படித்தவர்கள் எல்லாம் இதற்குச் சவால் விடுவதுபோலவே நடந்து கொள்கின்றனர்.

விதிப்படி வேலை செய்தவர்களை அதிகாரவர்க்கம் பாராட்டியதும், பரிசளித்ததும் அந்தக் காலம். இப்போது அப்படி நடக்கிறவர்கள் கேலிக்குரியவர்கள்; ஆள்வோரின் தண்டனைக்குரியவர்கள்; தேசத் துரோகிகள்!

“”எங்கே மனதில் பயமின்றி தலைநிமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ, எங்கே துண்டு துண்டாகச் சிதறாத உலகம் உள்ளதோ-என் தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்’’ என்று பாடினார் கவி தாகூர்.

மக்களாட்சியில் முக்கியப் பிரமுகர்களே குடிமக்கள்தாம். அந்த மக்களை அந்நியப்படுத்துகிற அதிரடிப்படைகள் எப்படி உண்மையான பாதுகாப்பு என்று கூற முடியும்? தேசம் விழித்தெழும்போது எல்லாம் தெரியும்.
கட்டுரையாளர் :உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி