Wednesday, December 9, 2009

அஜிதா ஏன் நக்​ச​லா​னாள்...?

இந்​தி​யா​வுக்கு மிகப்​பெ​ரிய ஆபத்து வெளியி​லி​ருந்து வராது.​ நம் நாட்​டுக்​குள்​ளேயே உரு​வாகி வரும் மாவோ​யிஸ்ட் தீவி​ர​வா​தி​க​ளால் உரு​வா​கும் ஆபத்​து​தான் அது எனப் ​ பல​ரும் கூறி வரு​கி​றார்​கள்.

மாவோ​யிஸ்​டு​களை அடக்கி ஒடுக்க கூடு​த​லான போலீ​ஸô​ரும்,​​ ராணு​வத்​தி​ன​ரும் சேர்ந்து ""ஆப​ரே​ஷன் கிரீன் ஹண்ட்'' எனப்​ப​டும் பச்சை வேட்டை திட்​டம்,​​ மத்​திய அர​சால் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.​ "நேர​டிப் பேச்​சு​வார்த்​தைக்கு வாருங்​கள் அல்​லது கடு​மை​யான நட​வ​டிக்​கை​களை எதிர்​கொள்​ளுங்​கள்' என்று மத்​திய அமைச்​சர் சிதம்​ப​ரம் எச்​ச​ரிக்​கை​யும் விடுத்​துள்​ளார்.​ ஆனால் இந்​தப் பிரச்​னையை ஒரு சட்ட ஒழுங்​குப் பிரச்​னை​யா​கக் கருதி நட​வ​டிக்கை எடுக்​கா​மல்,​​ ஓர் அடித்​தட்டு சமூ​கப் பிரச்னை என்ற நோக்​கில் ஆராய்ந்து மாற்று நட​வ​டிக்​கை​களை எடுக்க வேண்​டும் என்​பது அர​சி​யல் நோக்​கர்​கள் மற்​றும் நிர்​வாக வல்​லு​நர்​க​ளின் கருத்து.÷

​மாவோ​யிஸ்​டு​க​ளின் போராட்​டக் குழு​வில் நிறை​யப் பெண்​கள் உரு​வா​கி​யி​ருப்​பது இந்​தக் கருத்​துக்கு வலு சேர்க்​கி​றது.​ கடந்த நான்கு மாதங்​க​ளில் மேற்கு வங்​கத்​தின் மேற்கு மிது​ன​புரி பகு​தி​யில் 20 பெண் மாவோ​யிஸ்ட் தீவி​ர​வா​தி​க​ளைப் போலீ​ஸôர் கைது செய்​துள்​ள​னர்.​ அதில் மாலா குமாரி எனும் 20 வயது கும​ரிப்​பெண் ஒரு​வர்.​ இவர் மாவோ​யிஸ்​டு​க​ளின் உயர் கமிட்டி உறுப்​பி​னர்.​ ஒரு தாக்​கு​தல் பணிக்​குத் தலை​மை​யேற்று கையில் கண்​ணி​வெ​டி​குண்​டு​கள்,​​ பிஸ்​டல்​கள் போன்​ற​வற்​று​டன் கைது செய்​யப்​பட்​டி​ருக்​கி​றார்.​ ​

இது​போ​லவே சுமன்​மண்டி எனும் 50 வய​துப் பெண் ஒரு​வ​ரின் தலை​மை​யில் 14 பெண்​கள் லால்​கர் பகு​தி​யில் கைது செய்​யப்​பட்​டி​ருக்​கி​றார்​கள்.​ நிறை​யப் பெண் போரா​ளி​கள் யுத்​த​வெ​றி​யு​டன் அடர்ந்த காட்​டுப்​ப​கு​திக்​குள் கரடு முர​டான பகு​தி​க​ளில் ஆண்​க​ளுக்​குச் சம​மாக மிக​வும் அசெ​ள​க​ரி​ய​மான சூழ்​நி​லை​க​ளில் போரா​டு​வ​தற்​குத் தங்​க​ளைத் தயார்​ப​டுத்​திக் கொண்​டுள்​ள​னர்.​ இது​போன்ற வாழ்க்​கையை ஏற்​றுக்​கொள்​ளும் மன​நிலை அவர்​க​ளுக்கு ஏன்,​​ எப்​படி,​​ எதற்​காக வந்​தது எனும் கேள்வி எழு​கி​றது.​ இவர்​க​ளில் பல​ருக்கு மா சேதுங்,​​ கார்ல் மார்க்ஸ்,​​ லெனின் மற்​றும் ஸ்டா​லின் போன்​ற​வர்​க​ளைப் பற்றி எது​வுமே தெரி​யாது.​

2007-ம் ஆண்டு மகா​ராஷ்​டி​ரத்​தில் கத்​சி​ரோலி எனும் பகு​தி​யில் சுமன் எனும் 18 வயதே நிரம்​பிய இளம் பெண் மாவோ​யிஸ்​டு​க​ளின் தீவி​ர​வா​தப் பயிற்சி முகா​மில் ஆயு​தப்​ப​யிற்சி பெற்று வந்​தார்.​ அவ​ரைப் பேட்டி கண்ட ஒரு பத்​தி​ரி​கை​யா​ளர்,​​ ""இவ​ருக்கு கம்​யூ​னி​ஸத்​தைப் பற்​றியோ,​​ தீவி​ர​வா​தத்​தைப் பற்​றியோ எது​வுமே தெரி​யாது.​ தனது கிரா​மத்​தில் பிழைப்​புக்​குச் சரி​யான வழி கிடை​யாது,​​ தங்​க​ளைக் கொடு​மைப்​ப​டுத்​தும் ஆண்​கள் மற்​றும் தீவி​ர​வா​தி​க​ளைத் தேடித் தங்​கள் ஊருக்கு வரும் போலீஸ்​கா​ரர்​கள் தங்​களை மான​பங்​கம் செய்ய முயற்​சிப்​பது போன்​ற​வற்றி​லி​ருந்து விடு​பட மாவோ​யிஸ்​டு​களை அணு​கி​னால் அவர்​கள் உட​னடி நட​வ​டிக்கை எடுக்​கி​றார்​கள்.​ இவர்​கள் மாவோ​யிஸ்​டு​க​ளான கார​ணம் இது​தான்.​

ஆக,​​ ஆதி​வாசி மக்​க​ளின்​மீது மற்​ற​வர்​க​ளால் நடத்​தப்​ப​டும் கடு​மை​யான நட​வ​டிக்​கை​க​ளுக்கு அர​சுத் தரப்​பிலோ மற்ற அரசு சாராத நிறு​வ​னங்​கள் தரப்​பிலோ எந்​த​வி​த​மான நல்​லா​த​ர​வு​டன் கூடிய நட​வ​டிக்​கை​கள் அந்​தப் பகு​தி​யில் கிடை​யாது.​ நமது வளர்ந்​து​விட்ட கிரா​மங்​க​ளில் உள்​ள​து​போல்,​​ ஊர்ப் பஞ்​சா​யத்து அல்​லது தனிப்​பட்​ட​வர்​கள் மீது நடத்​தப்​ப​டும் தாக்​கு​தல்​க​ளைத் தட்​டிக்​கேட்​கும் பெரி​ய​வர்​கள் அடர்ந்த காட்​டுப்​ப​கு​தி​யில் உள்ள ஆதி​வாசி கிரா​மங்​க​ளில் இல்லை.​

இது​போன்ற பகு​தி​க​ளுக்​குச் செல்​லும் மாவோ​யிஸ்​டு​கள் பாதிக்​கப்​பட்ட பெண்​க​ளைக் குறி​வைத்து தங்​கள் இயக்​கத்​தில் சேர்த்​துக் கொள்​கி​றார்​கள்.​

இது​போன்ற ஆதி​வாசி குடி​யி​ருப்​பு​க​ளில் கண்​டெ​டுக்​கப்​பட்ட ஒரு சிறிய போஸ்​ட​ரில் "வர்க்​கப் போராட்​டத்​தின் மூலம் புரட்சி உரு​வா​கும்.​ புரட்சி இல்​லா​மல் பெண்​க​ளுக்கு விடு​தலை கிடைக்​காது' எனும் வாச​கங்​கள் உள்​ளன.​ இப்​ப​கு​தி​யில் வேலை செய்​யும் ஓர் அனு​ப​வம் வாய்ந்த போலீஸ் அதி​கா​ரி​யின் கூற்​றுப்​படி ஆதி​வா​சி​கள் குடி​யி​ருப்​பு​க​ளில் பொரு​ளா​தார முன்​னேற்​ற​மும் கிடை​யாது.​ அது​போ​லவே எந்த அர​சி​யல் கட்​சி​யும் கிடை​யாது.​ எனவே இந்த அர​சி​யல் வெற்​றி​டத்தை மாவோ​யிஸ்​டு​கள் மிக எளி​தாக நிரப்​பி​வி​டு​கி​றார்​கள்.​

மேலே கூறப்​பட்ட விஷ​யங்​கள் நமக்கு மிக​வும் அதிர்ச்சி அளிப்​ப​தாக உள்​ளன.​ இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த நீட்​டாலா குலாட்​கர் என்​ப​வர்,​​ அஜிதா எனும் 19 வயது நிரம்​பிய பெண் நக்​ச​லைட் பற்றி விரி​வா​கக் கூறு​கி​றார்.​

1968-ம் ஆண்டு கேர​ளத்​தில் ஒரு காவல் நிலை​யத்​தைத் தாக்​கும் நக்​ச​லைட்​டு​கள் சுற்றி வளைத்​துப் பிடிக்​கப்​பட்​டார்​கள்.​ அவர்​க​ளில் அஜிதா எனும் பெண்​ம​ணி​யும் ஒரு​வர்.​ அஜிதா குனிக்​கல் எனும் இந்​தப் பெண் மும்​பை​யில் பிறந்​த​வர்.​ ஆனால் கேர​ளத்​தில் வளர்ந்​த​வர்.​ இவ​ரது தந்தை குனிக்​கல் நாரா​ய​ணன்,​​ கேர​ளத்​தில் நக்​சல்​பாரி இயக்​கத்​தைத் தொடங்​கி​ய​வர்.​ இவ​ரது மனைவி மந்​தா​கினி குஜ​ராத்​தைச் சேர்ந்​த​வர்.​ கல்​லூ​ரி​யில் படித்​துக் கொண்​டி​ருந்த அஜி​தாவை,​​ அவ​ரது தந்தை நக்​சல்​பாரி இயக்​கத்​தில் சேரு​மாறு அழைப்பு விடுத்​தார்.​

நக்​சல்​பாரி இயக்​கத்​தில் முழு ஈடு​பாடு ஏற்​பட்ட பின் அஜிதா கேர​ளத்​தில் வய​நாடு பகு​திக்​குச் செல்​கி​றார்.​ அங்கு மலைப்​பி​ர​தே​சத்​தில் ஆதி​வா​சி​க​ளுக்​கும்,​​ நிலச்​சு​வான்​தார்​க​ளுக்​கும் கடு​மை​யான தக​ரா​று​கள் நடந்​து​வந்த நேரம் அது.​ நிறைய ஆதி​வா​சி​க​ளின் நிலங்​களை நிலச்​சு​வான்​தார்​கள் வன்​மு​றை​யாக எடுத்​துக்​கொண்டு ஆதி​வா​சி​களை விரட்டி விடு​வது என்​பது ஒரு பிரச்​னை​யாக உரு​வெ​டுத்​தது.​

இது பற்றி அரசு அதி​கா​ரி​க​ளி​டம் கேட்​டால்,​​ நிறைய பட்டா நிலங்​கள் வெளி​யூர்​க​ளில் வசிக்​கும் நிலச்​சு​வான்​தார்​க​ளால் தனிப்​பட்ட முறை​யில் நேர​டி​யாக நிர்​வ​கிக்​கப்​ப​டா​மல் இருந்​தன.​

இது​போன்ற நிலங்​க​ளில் ஆதி​வாசி கிரா​மத்​தி​னர் சென்று குடி​ய​மர்ந்து கொண்டு சிறிய அள​வில் விவ​சா​யம் செய்து வந்​தார்​கள்.​ இது இரண்டு மூன்று தலை​மு​றை​க​ளா​கத் தொடர,​​ இந்த நிலங்​கள் தங்​க​ளுக்​குச் சொந்​தம் என்று அவர்​கள் நினைத்​தார்​கள்.​ ஆனால்,​​ அரசு ஆவ​ணங்​க​ளில் பல நிலச்​சு​வான்​தார்​கள் பட்​டா​தா​ரர்​க​ளா​கத் தொடர்ந்​தார்​கள்.​

நிலங்​க​ளின் தேவை​க​ளும்,​​ விலை​ம​திப்​பும் உயர்ந்த பின்​னர்,​​ நகர்ப்​பு​றங்​க​ளில் இருந்த நிலச்​சு​வான்​தார்​கள் தங்​கள் நிலங்​க​ளைத் தேடி மலைக்​கி​ரா​மப் பகு​தி​க​ளுக்கு வந்து அவற்றை யாரோ ஆக்​கி​ர​மித்​தி​ருப்​ப​தைக் கண்டு போலீஸ் உத​வி​யு​டன்,​​ உள்​ளூர் ரவு​டி​கள்,​​ வஸ்​தா​து​கள் உத​வி​யு​டன்,​​ ஆதி​வா​சி​க​ளைத் துரத்​தி​விட்டு,​​ தங்​கள் பட்டா நிலங்​களை மீண்​டும் கைய​கப்​ப​டுத்​து​வார்​கள்.​ வழக்​கம்​போல் போலீ​ஸôர் சட்​டப்​படி பட்டா வைத்​தி​ருக்​கும் பணக்​கா​ரர்​க​ளின் பக்​கம் துணை நிற்​பார்​கள்.​

நிலைமை இப்​படி இருக்க ஆதி​வாசி தலை​வர்​க​ளும் நக்​சல்​பாரி இயக்​கத்​தி​ன​ரும் நிலச்​சு​வான்​தார் கையில் இருக்​கும் பட்​டாக்​கள் உண்​மை​யா​னவை அல்ல,​​ போர்​ஜ​ரி​கள் என வாதிட்​டார்​கள்.​ இந்​தப் பிரச்னை மிக​வும் அதி​க​மாகி ஒரு கொரில்லா தாக்​கு​தல்​தான் சரி என ரக​சி​ய​மாக நக்​சல்​பா​ரி​க​ளின் கூட்​டத்​தில் பிர​சா​ரம் தொடர்ந்​தது.​

கேர​ளத்​தின் அன்​றைய நம்​பூ​தி​ரிப்​பாட் அர​சாங்​கம் தலைச்​சேரி எனும் இடத்​தில் ஒரு பெரிய தாக்​கு​த​லைச் சமா​ளிக்க வேண்​டி​யி​ருந்​தது.​

கண்​ணூர் மாவட்​டத்​தில் ஒரு தனி​யார் பீடி கம்​பெனி மிகப் பிர​ப​ல​மாக வளர்ந்​தது.​ அதில் சுமார் 20,000 பீடித் தொழி​லா​ளர்​கள் வேலை செய்​தார்​கள்.​ அவர்​க​ளுக்​குக் குறைந்​த​பட்ச கூலி நிர்​ண​யம் செய்து நம்​பூ​தி​ரிப்​பா​டின் கம்​யூ​னிஸ்ட் அரசு ஒரு சட்​டம் இயற்​றி​யது.​ இந்​தக் கூலி கட்​டு​ப​டி​யா​காது என்​ப​தால்,​​ பீடி கம்​பெ​னியை மூடி​விட்டு,​​ தங்​கள் சொந்த கர்​நா​டக மாநி​லத்​துக்கு அதை மாற்​றி​விட்​டார்​கள்.​

இந்த ஒரே நட​வ​டிக்​கை​யில் 20,000 ஏழைத் தொழி​லா​ளர்​கள் வேலை​யி​ழந்து பரி​த​வித்​தார்​கள்.​ அவர்​க​ளைத் திரட்டி ஆயு​தங்​க​ளைக் கொடுத்​துப் பயிற்சி செய்து தலைச்​சேரி போலீஸ் நிலை​யத்​தைத் தாக்க முற்​பட்​டார்​கள் நக்​ச​லைட்​டு​கள்.​

அஜிதா அந்​தத் தாக்​குத​லில் பங்​கெ​டுத்​தார்.​ ""அந்​தத் தாக்​குத​லில் நிறைய ஆயு​தங்​கள் அங்கே கிடைக்​கும் என்று நாங்​கள் ஈடு​பட்​டோம்.​ ஆனால் அந்​தத் தாக்​குத​லில் நாங்​கள் கைது செய்​யப்​பட்டு படு​தோல்வி அடைந்​தோம்'' என்​கி​றார் அஜிதா.​ அவர் ஏழரை ஆண்​டு​கள் சிறை​யில் இருந்​தார்.​

19 வயதே நிரம்​பிய அஜிதா,​​ போலீ​ஸô​ரால் மான​பங்​கப்​ப​டுத்​தப்​பட்​ட​தா​க​வும்,​​ அவர்​கள் தன்னை நிறைய விப​சார வழக்​கில் கைதான பெண்​க​ளு​டன் ஒரே அறை​யில் அடைத்து வைத்​த​தா​க​வும் கூறு​கி​றார்.​ அது​மா​தி​ரிப் பெண்​கள் தாங்​கள் வாழ்க்​கை​யில் ஏழ்​மை​யி​னா​லும்,​​ ஆண்​கள் மற்​றும் போலீ​ஸôர் பல​ரால் துன்​பு​றுத்​தப்​பட்டு விப​சா​ரத் தொழி​லுக்கு வந்​த​தா​க​வும் கூறி​னார்​க​ளாம்.

இது ஒரு கேடு​கெட்ட உல​கம் என்​ப​தைத் தன்​னு​டைய ஏழரை ஆண்டு சிறை அனு​ப​வத்​தில் முழு​வ​தும் தெரிந்து கொண்​ட​தாக அவர் கூறு​கி​றார்.​

என் தந்தை எனக்​குப் போதித்த சித்​தாந்​தங்​க​ளும்,​​ என்​போன்ற சில துர​தி​ருஷ்​ட​மான ​ பெண்​கள் வாழ்க்​கை​யில் அனு​ப​வித்த துன்​பங்​க​ளும் என்​னைத் தீவிர போரா​ளி​யாக மாற்​றி​யது என்று கூறு​கி​றார் அஜிதா.​ ​

இது​போன்ற தக​வல்​கள் வளர்ந்​து​விட்ட மாநி​ல​மா​கிய தமி​ழ​கத்​தின் குடி​மக்​க​ளா​கிய நமக்கு மிக​வும் ஆச்​ச​ரி​யத்தை அளிக்​க​லாம்.​ மக்​க​ளின் அடிப்​ப​டைத் தேவை​களை மாநில அரசு கவ​னிக்க வேண்​டும்.​ கிரா​மப்​பு​றங்​க​ளில் வாழ்க்​கைக் கட்​ட​மைப்​பு​கள் எனப்​ப​டும் சாலை வச​தி​கள்,​​ குடி​நீர் வசதி,​​ கல்வி,​​ சுகா​தா​ரம் போன்​ற​வற்​று​டன் அடிப்​படை சமூ​கப் பாது​காப்​பும் உறுதி செய்​யப்​பட வேண்​டும்.​

கல்வி அறி​வில்​லாத பெண்​கள் எப்​படி நடத்​தப்​ப​டு​கி​றார்​கள்,​​ தொழி​லா​ளர்​கள் எப்​ப​டித் தங்​கள் எஜ​மா​னர்​க​ளால் நடத்​தப்​ப​டு​கி​றார்​கள் என்​ப​வை​யெல்​லாம் அடிப்​படை விஷ​யங்​க​ளாக மாறு​கின்​றன.​ ஏழை,​​ பணக்​கா​ரன் வித்​தி​யா​சம் மிக அதி​க​மாகி காழ்ப்​பு​ணர்ச்சி வள​ரக்​கூ​டாது என்ற ஒரே கார​ணத்​துக்​கா​கத்​தான் இந்​தி​யா​வின் முதல் பிர​த​மர் பண்​டித ஜவா​ஹர்​லால் நேரு,​​ சோஷ​லிச சித்​தாந்​தப்​படி ஏழை மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​காக பல உய​ரிய திட்​டங்​களை நடை​மு​றைப்​ப​டுத்​தி​னார்.​ காலப்​போக்​கில் அர​சி​யல்​வா​தி​க​ளின் ஊழல் பெருகி தாதாக்​க​ளு​ட​னும்,​​ தன​வந்​தர்​க​ளு​ட​னும் ஒரு கூட்​டணி அமைத்து ஏழை மக்​கள் அதிக அள​வில் உரு​வா​கித் தங்​க​ளுக்கு அரசு எது​வும் செய்​யாது,​​ போரா​டித்​தான் நமக்கு வேண்​டிய நன்​மை​களை நாம் பெற முடி​யும் என்ற எண்​ணம் உரு​வா​கி​விட்​டது.​

​இதை முற்​றும் உணர்ந்து,​​ அதன் அடிப்​ப​டை​யில் திட்​ட​மி​டா​மல்,​​ கூடு​தல் போலீ​ஸô​ரை​யும்,​​ பாது​காப்​புப் படை​யி​ன​ரை​யும் அனுப்பி,​​ ஆளில்​லாத விமா​னங்​க​ளின் மூலம் குண்டு மழை பொழிந்து மாவோ​யிஸ்​டு​களை அடக்கி ஒடுக்​கி​விட முடி​யாது!​​​ ​
கட்டுரையாளர் : எ‌ன்.​ முரு​க‌ன்
நன்றி : தினமணி

No comments: