Showing posts with label வரி. Show all posts
Showing posts with label வரி. Show all posts

Saturday, August 21, 2010

மக்களின் வரிப்பணம்தானே...

கல்வியைத் தொடர்ந்து இப்போது மருத்துவத் துறையையும் முழுமையாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஆட்சியாளர்களின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. முதலில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தனியார் ஒத்துழைப்பு என்று தொடங்கி, இப்போது அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பைத் தனியாரிடம்விடும் அளவுக்குத் தனியார்மயக்கொள்கை செயலாக்கம் பெற்றிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழக அரசு மட்டுமே சுகாதாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்க முன்வந்திருப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். உண்மையில், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் ஏனைய மாநிலங்களைவிட சற்று அடக்கியே வாசிக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் வழிகாட்டுதலை இதுவரை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாகவே அரசு மருத்துவமனைகளையும், ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிடும் முயற்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மக்கள் வரிப்பணத்தில், அரசு நிலத்தில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் முதல்கட்டமாக பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சுகாதாரத் துறை வற்புறுத்தி வருகிறது.

அடுத்தகட்டமாக, எக்ஸ்-ரே, ரத்தப்பரிசோதனை மையம் போன்றவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து நடத்துவது என்று தீர்மானிக்கக்கூடும். காலப்போக்கில் தனியாருக்கே அரசு நிறுவனங்களைத் தாரைவார்ப்பதுபோல இந்த ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் கொடுத்துவிடுவது என்பதுதான் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம் என்று கருதவும் இடமிருக்கிறது. கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையங்களை ஏற்று நடத்த எந்தத் தனியார் மருத்துவமனைதான் தயங்கும்?

"கல்வி, மருத்துவம் போன்றவை அரசின் செயல்பாடுகள் அல்ல. இவைகளிலிருந்து அரசு முழுமையாக விடுபட்டாக வேண்டும்' என்கிற தனியார்மயவாதிகளின் கருத்து ஏற்புடையதல்ல. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையே இந்தியா ஒரு ஜனநாயக சமதர்ம அரசு மட்டுமல்ல, மக்கள் நலம்பேணும் அரசும்கூட என்பதுதான். கல்வி, சுகாதாரம் போன்றவை அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தனியாரிடம் விடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவைப் போன்ற வறுமைக்கோட்டுக்குக்கீழே பல கோடி மக்கள் வாழும் நாட்டில் தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பது என்பது மிகப்பெரிய அரசியல் சமூக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நியாயமாகப் பார்த்தால், தமிழக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி.

இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே என்கிற நியாயங்கள் ஆட்சியாளர்களின் காதில் விழாது. அப்படிச் செய்தால் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்று ஆட்சியின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், தேர்தலில் வாக்குவேட்டை ஆடவும் முடியாதுதானே..

சென்னையிலுள்ள பொது மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். மாதந்தோறும் ஏழு லட்சம் ரூபாயையும் வாங்கிக்கொண்டு அந்தத் தனியார் நிறுவனம் பெரிதாக எதையும் சாதித்துவிடவும் இல்லை. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் அந்தத் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்திருக்கும் நிலையில், நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

"சென்னை பொது மருத்துவமனையைப்போல, சென்னையிலுள்ள ஏனைய அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியையும் தனியாரிடம் கொடுக்க இருக்கிறோம். முறையாகச் செயல்படாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.

தனியார் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் பராமரிப்பிலும், தனியார் நிறுவனங்களின் காட்டில் மழை. மக்கள் வரிப்பணம்தானே, சொந்த முதலா மோசம் போகிறது..!
நன்றி : தினமணி

Wednesday, December 23, 2009

புதிய வருமான வரி பூதம்: சம்பளத்தை தாண்டி பெறப்படும் எல்லாவற்றுக்கும் வரி; வாடகை முதல் குட்டீஸ் கல்விச் சலுகை வரை பிடிப்பு

மாதச் சம்பளம் வாங்குவோர் தலையில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய வருமான வரி 'இடி' விழுந்துள்ளது. ஆம்! சம்பளத்தில் பெறும் வாடகைப்படி, கார், பைக் சலுகை போன்ற சலுகைகளுக்கும் வரி பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பளத்தில், அடிப்படை சம் பளம் , அகவிலைப்படி மட்டும் அல்ல, உதிரிச் சலுகைகள் என்பது தகவல் தொழில்நுட்ப கம் பெனிகள் வருகைக்குப் பின் அதிகரித்தன. இம்மாதிரி சலுகைகள் தருவதற்கு வரிவிலக்கு இருந் தது. ஆனால், உடனடியாக இதன் மீதான நேரடி வரிவிதிப்பு அமலாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அதிகபட்சம் சம்பளம் பெறுபவராக இருந்தால், சம்பளத்தில் 31 சதவீதம் வரை வரியாக கட்ட நேரிடும்.

இந்த புதிய வருமானவரி 'பூதம்' திடீரென இப்போது ஓசைப் படாமல் நுழைந்து விட்டது. கடந்த ஏப்ரல் முதல் தேதியில் இருந்தே முன்தேதியிட்டு வரி பிடித்தம் செய்ய, வருமான வரித் துறை உத்தரவிட்டு விட்டதால், ஒராண்டு முழுக்க போடப்படும் வரியை, வரும் மூன்றே மாதங்களில் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கம்பெனிகளுக்கு இது தொடர்பாக வருமான வரித்துறை கடிதம் அனுப்பி விட் டது. மூன்று மாத சம்பளத்தொகையில் ஓராண்டு வரியை பிடித்து விடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால், வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தில் இருந்தே, தனியார் கம்பெனி ஊழியர்கள் பலருக்கும் வரி பிடித்தம் செய்யப்பட்டு விடும்.
கடந்த பட்ஜெட்டை சமர்ப் பித்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒரு அதிரடி இன்ப அதிர்ச்சியை தந்தார். அதற்கு முன்பு நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், 'உதிரி சலுகைகள் ஆதாய வரி' ( பிரிஞ்ச் பெனிபிட்டாக்ஸ்)என்று ஒரு வரியை போட்டிருந்தார். அதை பிரணாப் நீக்கினார். ஒருவர் பெறும் சம்பளத்தில் சேரும் இதர சலுகைகள் மீதான வரி. இதை பிரணாப் ரத்து செய்ததும், தனியார் நிறுவன ஊழியர் கள், அதிகாரிகள் பெரும் சந்தோஷப்பட்டனர். ஆனால், அது நிலைக்கவில்லை. இப்போது தான் அதன் உண்மையான சுயரூபம் தெரிந்துள்ளது. இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதன் விளைவு என்ன தெரியுமா? மொத்த சம்பளத்தில் வாங்கும் சலுகைப் பணம் எல்லாவற்றுக்கும் வரி கட்ட வேண்டும் என்பது தான். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தரப்படும் சில சலுகைகளை கம் பெனி ஏற்றுக்கொள்வதில்லை. தாங்கள் வரி கட்ட வேண்டும் என்பதால், அதில் இருந்து தப்பிக்க, ஊழியர்களிடமே வரி பிடித்தம் செய்கிறது. மாதச் சம்பளத்தில், டி.டி.எஸ்., பிடிக் கப்பட்டு விடுகிறது. ஆனால், வரி பிடித்தம் செய்ய வேண்டாம் என்று நினைத்து, தனியார் நிறுவனங்கள் தரும் இதர சலுகைகளுக்கு வரி பிடிப்பதில்லை. இனி அதற்கும் பிடிக்க வேண்டும் என்பது தான், வரி ஆணையத்தின் குறிக்கோள். அதை இப்போது நிறைவேற்றி உள்ளது. மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சி.டி.பி.டி.,) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய வரி விகிதங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பின் சில அம்சங்கள்:

* கம்பெனி தரும் கார், அதை ஓட்ட நியமிக்கப்படும் டிரைவருக்கு தரும் சம்பளம் போன் றவை இதுவரை கம்பெனியே ஏற்று வந்தது; இனி இதற்கும் வரி உண்டு.

* சிறிய கார்கள் பயன்படுத்துவோரை விட, பெரிய கார்களை பயன்படுத்துவோருக்கு அதிக வரி பிடித்தம் செய்யப்படும்.

* வாடகைப்படியில் நகரங்களுக்கு ஏற்ப வரி பிடித்தம் செய்யப்படுகிறது. 7.5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சம்பளத்தில் கணக்கிட்டு அதற்கு வரி பிடிக்கப்படும்.

* கம்பெனி தரும் கிரெடிட் கார்டு சலுகை, கம்பெனி பங்குகளை ஊழியர்களுக்கு சலுகை விலையில் தரும் 'எஸாப்' சலுகைக்கும் கூட வரி உண்டு.

* குழந்தைகளுக்கு படிப்பு உட்பட கட்டண சலுகையை கம்பெனி தந்தால், அதற்கும் வரி உண்டு.

* விடுமுறை கால, சுற்றுலாச் செலவுகளை கம்பெனி ஏற்றாலும் அதற்கும் வரி பிடிக்கப் படும்.

* சென்னை உட்பட பெரிய நகரங்களில் வாடகைப்படி அதிகபட்சமாக 15சதவீத அடிப்படையில் தான் வரி வசூலிக்கப்படும்.

* கிளப்களில் உறுப்பினராக இருந்தாலும், அந்த கட்டணத் துக்கும் வரி பிடித்தம் உண்டு.

இந்த வரிப்பிடித்தம் பற்றி இப்போது தான் தெளிவுபடுத் தப்பட்டாலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருவதாக அறிவித்து விட்டதால், இந்த மாதத்தில் இருந்து மார்ச் வரை மூன்று மாதங்களின் சம் பளத்தில், மற்ற எட்டு மாதங்களுக்கும் சேர்த்து வரி பிடிக்கப்படும்.அதேசமயம் கிராக்கிப்படி மற்றும் பிராவிடண்ட் பண்டுகளுக்கு கட்டப்படும் பணம் வரியில் இருந்து தப்பியது. ஏற்கனவே, எப்.பி.டி.,யில் வசூலிக்கப்பட்ட வரித்தொகையை விட, ஒருவர் இந்த புதிய வரி விதிப்பில் அதிகமாகவே செலுத்த வேண்டியிருக்கிறது. முன்பு சிதம்பரம் அமைச்சராக இருந்து அமல்படுத்தியதை விட, அதிக அளவு பிடித்தம் இந்த புது உத்தரவால் அமலாகிறது. கிட்டத்தட்ட 31 சதவீதம் வரை சம்பளத்தில் அதிகபட்சமாக இழக்க வேண்டியதிருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
நன்றி : தினமலர்

Monday, December 21, 2009

கூகுள் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு

பிரபல கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சிக்கி உள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தியில், இன்டர்நெட் வருமானம் மூலம் கூகுள் நிறுவனம் 1.6 பில்லியன் பவுண்டுகள் சம்பாதித்ததாகவும், இதற்கான வரியை அந்நிறுவனம் கட்டவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு பிரிட்டனில் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது அயர்லாந்து கிளைக்கு குறுக்கு வழியில் மாற்றி 450 மில்லியன் பவுண்ட் வரி செலுத்தாமல் சட்டப்பூர்வமாகவே தப்பித்துக் கொண்டது கூகுள் என்றும்
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி 141519 டாலர்கள் மட்டும்தான் என்றும், அதுகூட விளம்பர வருவாய் மீதான வரி இல்லை என்றும் அதில் கூறப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Friday, November 13, 2009

இதோ ஒரு புது வரி!

உலகையே இப்போது அச்சமூட்டி வரும் பிரச்னை புவி வெப்பமடைவதுதான். அதைக் குறைக்க யார் யார் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்தெந்தத் துறைகளில் இதற்கான சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும் என்றெல்லாம் விவாதங்கள் நடைபெறுகின்றன. அதே சமயம், உலகத்தின் பெரும்பாலான நாடுகளை ஆட்டிப்படைக்கும் பொருளாதார மந்த நிலையும் உலகத் தலைவர்களின் கவனத்தை அதே அளவுக்கு ஈர்த்து வருகிறது. இவ்விரு பிரச்னைகளுக்கும் ஒரு சேர தீர்வு காணும் யோசனை ஒன்று இப்போது வளர்ந்த நாடுகளில் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது.

அது, அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஜேம்ஸ் டோபின் என்பவர் 1970-களில் தெரிவித்த உலகளாவிய பணப் பரிமாற்றத்தின் மீது வரி விதிக்க வேண்டும் என்ற யோசனையாகும். இது இன்னமும் யோசனை அளவிலேயே இருக்கிறது, நடைமுறைக்கு வரவில்லை.

சர்வதேச அளவில், பணப் பரிமாற்றத்தின்போது மொத்தத் தொகை மீது 0.5% வரி விதித்தால் அதுவே கணிசமான அளவுக்கு நிதியாகத் திரளும். அந்த நிதியில் பாதியை அதை வசூலிக்கும் நாடுகள் தங்களுடைய பட்ஜெட் பற்றாக்குறையை இட்டு நிரப்பவும், எஞ்சிய தொகையை புவி வெப்பமடைவதைச் சுயமாகக் குறைக்க முடியாத வளரும் நாடுகளுக்கு உதவவும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெüன் இதை முதலில் பரிந்துரைத்தார். அதற்கு வரவேற்பைவிட கண்டனமே அதிகம் இருக்கிறது.

""இதை நாங்கள் விரும்பவில்லை'' என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதிபர் பராக் ஒபாமா இதை ஆதரிப்பார் என்று பிரெüன் நம்புகிறார்.

""அப்படி சர்வதேச பணப் பரிமாற்றத்தின் மீது வரி விதிப்பதாக இருந்தால் அதிக விகிதத்தில் வரி விதிக்காதீர்கள், மிகக் குறைந்த அளவு விதியுங்கள்'' என்று கனடா நாட்டவர் தயக்கத்துடனேயே கூறியுள்ளனர்.

""இப்படி ஒரு வரி விதிப்பை அறிமுகப்படுத்தி அதை அமல்படுத்துவது மிகவும் கடினம்'' என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) கருத்துத் தெரிவித்திருக்கிறது.

சர்வதேச அளவில் காணப்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க கார்டன் பிரெüன் தெரிவித்த 4 யோசனைகளில் ஒன்றுதான் இந்த சர்வதேச பணப் பரிவர்த்தனை மீதான வரி விதிப்பாகும். இந்த யோசனையை ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்செலா மெர்கல், பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி ஆகியோரும் ஆதரித்துள்ளனர். அதேசமயம் ""ஜி-20'' நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் நிதியமைச்சர்கள் இந்த யோசனையைக் கடுமையாக எதிர்ப்பார்கள், அதை கார்டன் பிரெüனின் திறமையான வாதத்தால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பிரிட்டிஷ் நாட்டின் அனைத்துப் பணப் பரிவர்த்தனைகள் மீதும் 0.05% (அதாவது அரை சதவீதம் மட்டுமே) வரி விதிப்பதன் மூலம் மட்டுமே ஓராண்டில் சுமார் 7 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்குமாம். எந்த நிதியமைச்சரும் இப்படியொரு தொகை தானாக வருவதை வேண்டாம் என்று நிராகரிக்க மாட்டார். அத்துடன் இதில் பாதியைக் கொண்டு பிரிட்டிஷ் அரசின் நிதிப் பற்றாக்குறையை இட்டு நிரப்பிவிடலாமாம்.

ஆனால் இந்த வரிவிதிப்பில் உள்ள பிரச்னையே இதை உலகம் முழுக்க உள்ள நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சில நாடுகளில் மட்டும் இப்படியொரு வரியை விதித்தால், அதை மக்களை ஏமாற்றி கூடுதல் நிதி திரட்டும் உத்தி என்றே அந்த நாட்டுப் பொருளாதார அறிஞர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டுவர். எனவே இதை உலகின் அனைத்து நாடுகளும் ஏற்கச் செய்தால்தான் முழு வெற்றியைப் பெற முடியும்.

இந்த வரியை எதிர்ப்பவர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் மீண்டும் சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலையோ, நெருக்கடியோ ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்றே எல்லா நாடுகளிலும் விரும்புவார்கள். எனவே அதற்கு உதவும் இந்த நிதிச் சீர்திருத்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
இந்த நிதியைத் திரட்ட, பணப் பரிமாற்றம் நடைபெறும் நிதி நிறுவனங்களைத் தவிர உற்ற இடங்கள் வேறு இல்லை. எனவே சர்வதேச வர்த்தகம், தொழில்துறை பற்றுவரவு நடைபெறும் நிதி நிறுவனங்களிலேயே இந்த வரியை விதித்து வசூலிப்பது எளிது.

சர்வதேச பணப் பரிவர்த்தனை மீது வரி விதிப்பதில் இன்னொரு ஆதாயமும் இருக்கிறது. ஏதோ சில காரணங்களுக்காக இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், சில நாடுகளில் நடைபெறும் பணப் பரிமாற்றங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கின்றன. அங்கே எத்தனை கோடி பணம் புரள்கிறது, யார் யாருக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாமலேயே மூடுமந்திரமாக இருக்கிறது. இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தால் அந்த நாடுகளில் திரைமறைவாக நடக்கும் பணப் பரிமாற்றம் ஓரளவுக்காவது வெளியில் தெரிய வாய்ப்பு ஏற்படும்.

புதிய வரி விதிப்பு வசூல் தொகையில் பாதி அளவு, வளரும் நாடுகளில் புவி வெப்பமடைதலுக்குத் துணைபுரியும் காரணிகளை நீக்கச் செலவிடப்படும். அதனால் சுயமாக நிதி திரட்டிச் செலவிட முடியாத வளரும் நாடுகள் பலன் அடையும். வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் இரண்டும் சேர்ந்து புவி வெப்பம் அடைவதைக் குறைத்தால்தான் இந்தப் புவி நாம் வாழ்வதற்கு ஏற்றதாக மாறும். எனவே இந்த யோசனை அந்த வகையில் வரவேற்கத்தக்கது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி : தினமணி

Thursday, April 16, 2009

ரூ.31 கோடி வருமான வரி செலுத்தி முதல் இடத்தில் இருக்கும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்

சென்ற 2008-09-ஆம் நிதி ஆண்டில், பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களில் அதிக வருமான வரி செலுத்தியதில் அக்ஷய்குமார் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ரூ.31 கோடி முன்கூட்டிய வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) செலுத்தி உள்ளார். அதாவது, இவரது ஆண்டு வருமானம் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது. இது, கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில், இவரால் செலுத்தப்பட்ட வரியான ரூ.12.50 கோடியைக் காட்டிலும் 148 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் : கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில் ஷாருக்கான் ரூ.31.50 கோடி முன்கூட்டிய வருமான வரியாக செலுத்தி முதலிடத்தில் இருந்தார். சென்ற நிதி ஆண்டில், இவர் செலுத்திய வரி 1.62 சதவீதம் குறைந்து, ரூ.30.90 கோடியாக குறைந்துள்ளது. இதனையடுத்து, 2008-09-ஆம் நிதி ஆண்டில் இவர் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார்.
பத்து முன்னணி இந்தி நட்சத்திரங்கள் சென்ற 2007-08-ஆம் நிதி ஆண்டில் மொத்தம் ரூ.107 கோடியை வரியாக செலுத்தி உள்ளனர். இதில், அக்ஷய்குமார் மற்றும் ஷாருக்கான் ஆகிய இரண்டு நடிகர்கள் மட்டும் செலுத்திய வரியின் அளவு மட்டும் 60 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தி திரைப்பட உலகில் கொடி கட்டி பறந்த அமிதாப்பச்சன், சென்ற 2008-09-ஆம் நிதி ஆண்டில் ரூ.1.25 கோடி செலுத்தி 10 முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளார். இவர் கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில் ரூ.4.95 கோடி முன்கூட்டிய வரி செலுத்தி இருந்தார். இது, இவரது வருமானம் குறைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ரூ.3.20 கோடி செலுத்தி எட்டாவது இடத்தில் உள்ளார். இவர் செலுத்திய முன்கூட்டிய வரியும் கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் 42.80 சதவீதம் (ரூ.5.60 கோடி) குறைந்துள்ளது.
ஐஸ்வர்யா ராய் : அதேசமயம், இவர்களையெல்லாம் விஞ்சி, அமிதாப்பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா ராய் ரூ.4.75 கோடி செலுத்தி ஆறாவது இடத்தில் உள்ளார். முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இவர் செலுத்திய வரி 10.46 சதவீதம் (ரூ.4.30 கோடி) அதிகரித்துள்ளது.
ராஜேஷ் கன்னா : ராஜேஷ் கன்னா கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில் ரூ.11.90 கோடி வரி செலுத்தி மூன்றாவது இடத்தில் இருந்தார். சென்ற நிதி ஆண்டில், இவர் செலுத்திய வரி 42.27 சதவீதம் குறைந்து ரூ.6.87 கோடியாக சரிவடைந்துள்ளது. இதனையடுத்து 2008-09-ஆம் நிதி ஆண்டில் இவர் ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளார்.
நன்றி : தினமலர்


Saturday, March 7, 2009

கெமிக்கல் இன்டஸ்டிரியை ஊக்கப்படுத்தவும் விரைவில் திட்டம் : மத்திய அரசு முடிவு

ஸ்டீல், சிமென்ட் போன்ற பொருட்களுக்கான உற்பத்தி வரியை குறைத்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்ட சில நாட்களிலேயே இன்னொரு துறைக்கான சலுகை திட்டம் குறித்தும் திட்டமிட ஆரம்பித்தது. அந்த துறை, கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை. இந்த துறைக்கும் கஸ்டம்ஸ் மற்றும் எக்ஸைஸ் டூட்டியை கட் செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாப்தாவுக்கு இப்போது விதிக்கப்படும் 5 சதவீத கஸ்டம்ஸ் டூட்டியை இல்லாமல் ஆக்குவது, மோனோ எத்தில் கிளைகோலுக்கு விதிக்கப்படும் 8 சதவீத எக்ஸைஸ் டூட்டியை 4 சதவீதமாக குறைப்பது போன்ற சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தலுக்குப்பின் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த டூட்டி கட் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கருத்து கேட்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் இந்திய கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையும் வெகுவாக பாதித்திருக்கிறது. விலை குறைந்திருப்பது, ஏற்றுமதி ஆர்டர் குறைந்திருப்பது, உள்நாட்டின் டிமாண்ட் குறைந்து போனது போன்ற காரணங்களால் இந்த துறையின் விரிவாக்க திட்டங்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும், உற்பத்தி சிறிய அளவிலேயே நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள். டெக்ஸ்டைல் தொழிலுக்கு பயன்படும் விஸ்கோஸ் ஸ்டாபிள் பைபர் தயார் செய்யும் கிராஸிம் நிறுவனத்தின் விற்பனை , மூன்றாவது காலாண்டில் 22 சதவீதம் குறைந்திருப்பதை அடுத்து, அந்த நிறுவனம், உற்பத்தியை நிறுத்தி விடலாமா என்று யோசித்து வருவதாக சொல்கிறார்கள். கடந்த வருடம் ஜூலை மாதம் பேரலுக்கு 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 40 - 45 டாலர் தான். எனவே கெமிக்கல், சால்வன்ட், பாலிமர், மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் விலை, கடந்த 2002 - 03 ல் இருந்த நிலைக்கு போய்விட்டது என்கிறார்கள். .
நன்றி : தினமலர்