Monday, February 23, 2009

பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கையை ஆர்.பி.ஐ.எடுக்கும் : சுப்பாராவ்

இந்திய பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி கூர்ந்து கவனித்து வருகிறது. தேவைப்படும் போது வேண்டிய நடவடிக்கையை எடுக்க தயங்காது என்று ஆர்.பி.ஐ.,யின் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு சென்று மற்ற நாடுகளின் மத்திய வங்கி தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு வந்த சுப்பா ராவ், நிதி அமைச்சரை சந்தித்து பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். ஞாயிறு அன்று அவர் நிதி அமைச்சரை சந்தித்து அவரது வெளிநாட்டு பயணம் குறித்தும் இந்திய பொருளாதார நிலை குறித்தும் பேசினார். அப்போது நம்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்றார். வெளிநாடுகளின் பொருளாதார நிலை குறித்தும் அதனை சமாளிக்க அங்குள்ள மத்திய வங்கிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் கீழே சென்றிருப்பதால் ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைக்கலாம் என்று இங்கே உள்ள நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் டோக்கியோ சென்றிருந்த சுப்பா ராவ் அங்கு பேசியபோதுற, நாங்கள் இன்னும் வட்டியை குறைக்க முடியும். ஆனால் எவ்வளவு குறைப்பது, எப்போது குறைப்பது என்றுதான் தெரியாமல் இருக்கிறது என்றார். இப்போது ரிசர்வ் வங்கியில் ரிபோ ரேட் 5.5 சதவீதமாகவும் ரிவர்ஸ் ரிபோ ரேட் 4.0 சதவீதமாகவும் இருக்கிறது.
நன்றி : தினமலர்


அமெரிக்காவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு வாங்குகிறது ரிலையன்ஸ்

அமெரிக்காவில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை வாங்கும் முயற்சியில் ரிலயன்ஸ் இன்டஸ்டிரீஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் கிழக்கு, மேற்கு மற்றும் வளைகுடா கடற்பகுதியில் கிடங்குகளை அது தேடி வருகிறது. கிடங்குகளை குத்தகைக்கு எடுக்கிறார்களா அல்லது விலைக்கு வாங்குகிறார்களா என்று இன்னும் தெரியவில்லை. அந்த கிடங்குகள் ஒவ்வொன்றும் 2,00,000 முதல் 2,50,000 கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது. மார்ச் முடிவிற்குள் கிடங்குகள் வாங்கும் வேலை முடிந்து விடும் என்று தெரிகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம், நாள் ஒன்றுக்கு 5,80,000 பேரல் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலையில் தயாராகும் எண்ணெய்யை, உலக அளவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது. அதற்காக இந்த சேமிப்பு கிடங்குகள் வாங்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு இருக்கும், நாள் ஒன்றுக்கு 6,60,000 பேரல் எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறனுடைய தொழிற்சாலைக்கு அருகிலேயே 5,80,000 பேரல் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் இன்னொரு தொழிற்சாலையையும் அது நிறுவியிருக்கிறது. அதன் மூலம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம், ஆசியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை கொண்டதாக ஆகியிருக்கிறது.
நன்றி : தினமலர்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் ஆடிட் நிறுவனம் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் விலகல்

ரூ.7,800 கோடி மோசடியில் சிக்கி, வழக்கை சந்தித்து வரும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டராக இருந்து வந்த பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம், அதிலிருந்து விலகிக்கொண்டதாக அறிவித்திருக்கிறது. பிப்ரவரி 12,2009 முதல் அது விலகிக்கொண்டதாக அறிவித்திருக்கிறது. எனினும் அங்கு நடந்ததாக கூறப்படும் ரூ.7,800 கோடி மோசடி குறித்து நடந்து வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அது அறிவித்திருக்கிறது. சனிக்கிழமை அன்று கூடிய சத்யத்தின் போர்டு, அதன் ஆடிட்டராக இருக்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தை நீக்க வேண்டும் என்று மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறைக்கு பரிந்துரை செய்திருந்தது. அதனையடுத்து பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்திற்கு பதிலாக வேறு ஆடிட் நிறுவனத்தை நியமிக்கும் வேலையில் சத்யம் போர்டு ஈடுபட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


50 காசுகளில் இந்தியா முழுக்க பேசலாம்: '3 ஜி' சேவை சென்னையில் அறிமுகம்

பி.எஸ்.என்.எல்., சார்பில் இந்தியா முழுவதும் எந்த நெட்ஒர்க்கிற்கும், எந்த பகுதிக்கும் '50 காசுகளில்' பேசும் 'இந்தியா கோல்டன் 50' எனும் திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் துவக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத் தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3 ஜி' சேவை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடியே, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் இச்சேவையை அறிமுகப்படுத்தினார். 3 ஜி சேவையில் உள்ள 'வீடியோ கால்' மூலம் முதல்வரும், தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவும் பேசிக் கொண்டனர். முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இச் சேவையை துவக்கி வைத்து பேசியதாவது: சில வளர்ந்த நாடுகளில் மட் டுமே அறிமுகப்படுத்தப்பட்டு நடப்பில் உள்ள இந்த '3 ஜி' சேவை, தற்போது முதன் முதலாக இந்தியாவிலும் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்., மூலம் சென்னையிலேயே துவக்கப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒரே நேரத்தில் ஏழை மக்களுக்காக நடத்தும் இதுபோன்ற சாதனைகளை நாம் என் றைக்கும் நிரந்தர சரித்திர கல்வெட்டுக்களாக ஆக்குகிறோம். இவ்வளவு நெருக்கடியான நேரத்திலும், நான் இங்கே வந் திருப்பது என் உடலில் ஒரு துளி ரத்தம் ஒட்டிக் கொண்டிருந்தாலும், உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்கள் பிரச் னைக்காக, நாட்டு நன்மைக் காக போராடுவேன் என்பதற்காகத் தான். இந்தியாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒன் இண்டியா' திட்டம் போல், மற்றொரு திட்டம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 'இண்டியா கோல்டன் 50' என்ற பெயரில் அறிமுகமாகிறது. இந்தியாவில் எங்கிருந்தும் 50 பைசாவில் பேச வாய்ப்பளிக்கும் இந்த திட்டம் மக்கள் பயன் பாட்டிற்கும், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சிக்கும் உதவிடும். கருணாநிதி என்றைக்கும் ஏழை எளியோரின் அன்பனாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருப்பான். இந்த அரசை நீடிக்க விடுங்கள், மத்திய அரசை வாழ விடுங்கள், மத்திய, மாநில அரசுகளை ஒன்றுபடுத்தியிருக்கும் ஒருமைப்பாட்டை காப்பாற்றுங் கள், இறையாண்மையை காப் பாற்ற முன்வாருங்கள், வன் முறைகளால் நாட்டில் உள்ள நன்முறைகளை கெடுக்காதீர்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா பேசியதாவது: கடந்த 19 மாதங்களில் இத்துறையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2006-07ல் 13 சதவீதமாக இருந்த தொலை அடர்த்தி தற்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் 70 லட்சம் இணைப்புகள் வழங் கப்பட்டன. ஆனால், கடந்த ஜனவரி மாதத் தில் அதிகபட்சமாக 1.5 கோடி தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல்., மூலம் வழங் கப்பட்டுள்ளன. இந்த '3 ஜி' சேவை ஏற்கனவே பி.எஸ்.என்.எல் - எம்.டி.என். எல்., மூலம் துவக்கப்பட்டு, வர்த்தக ரீதியிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள '3 ஜி' சேவை வரும் ஏப்ரல் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துவிடும். மற்ற மாநிலங்களிலும் விரைவில் இச்சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு ராஜா பேசினார்.
நிகழ்ச்சியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைவர் குல்தீப் கோயல் கூறியதாவது: சென்னையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த '3 ஜி' சேவை விரைவில் மற்ற நகரங்களிலும் அறிவழங்க நோக்கியா, சாம்சங், சோனி மொபைல் நிறுவனங்கள் மற்றும் டேட்டா கார்டுகள் வழங் கும் நிறுவனங்களுடனும் ஒப் பந்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 50 லட்சம் '3 ஜி' இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு குல்தீப் கோயல் தெரிவித்தார். நிகழ்வில், பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி முதன் மை பொது மேலாளர் வேலுசாமி, தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுரா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
'3 ஜி' சேவைக்கு தனி 'சிம் கார்டு': பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3ஜி' மொபைல் சேவை சென்னையில் துவக் கப்பட்டுள்ளது. இச்சேவை வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன் பாட்டிற்கு வருகிறது. இதற்கு தனி சிம் கார்டு மற்றும் எண் வழங்கப்படுகிறது. இந்த சிம் கார்டின் விலை 300 ரூபாய். இதில் பேசும் வசதி அளிக்கப் படவில்லை. ஏழு நாட்கள் 'வேலிடிட்டி' வழங்கப்பட் டுள்ளது. 2 ஜி சேவையிலிருந்து 3ஜி சேவைக்கு நேரடியாக மாறும் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதில் வாய்ஸ் மற்றும் டேட் டா பிளான் எனும் இரண்டு திட்டங்கள் உள்ளன. இரண்டு திட்டங்களிலும் போஸ்ட் பெய்டு மற்றும் பிரிபெய்டு வசதிகளும் உள் ளன.
நன்றி : தினமலர்