Monday, February 23, 2009

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் ஆடிட் நிறுவனம் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் விலகல்

ரூ.7,800 கோடி மோசடியில் சிக்கி, வழக்கை சந்தித்து வரும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டராக இருந்து வந்த பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம், அதிலிருந்து விலகிக்கொண்டதாக அறிவித்திருக்கிறது. பிப்ரவரி 12,2009 முதல் அது விலகிக்கொண்டதாக அறிவித்திருக்கிறது. எனினும் அங்கு நடந்ததாக கூறப்படும் ரூ.7,800 கோடி மோசடி குறித்து நடந்து வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அது அறிவித்திருக்கிறது. சனிக்கிழமை அன்று கூடிய சத்யத்தின் போர்டு, அதன் ஆடிட்டராக இருக்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தை நீக்க வேண்டும் என்று மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறைக்கு பரிந்துரை செய்திருந்தது. அதனையடுத்து பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்திற்கு பதிலாக வேறு ஆடிட் நிறுவனத்தை நியமிக்கும் வேலையில் சத்யம் போர்டு ஈடுபட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: