இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.
அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.
உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.
இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.
இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன்படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில் நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்,
இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?
ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?
எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும்பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.
கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதைவாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர் அனில் அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக்கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?
தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?
ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!
நன்றி : தினமணி
Showing posts with label ஐரோப்பா. Show all posts
Showing posts with label ஐரோப்பா. Show all posts
Saturday, August 28, 2010
Thursday, January 7, 2010
ரோமாபுரிக்கு அவமானம்!
இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி எப்போதுமே பரபரப்பாகப் பேசப்படுபவர். ஏதாவது ஒரு காரணத்துக்காக அவர் சர்வதேச ஊடகங்களை எப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார். இப்போது அவரது பெயர் பரபரப்பாகியிருக்கும் காரணம் கொஞ்சம் வித்தியாசமானது.
÷அண்மையில் மிலன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் மக்களோடு மக்களாகக் கலந்திருந்த பெர்லுஸ்கோனியின் முகத்தில் இளைஞர் ஒருவர் சர்ச் போன்ற வடிவத்தைக் கொண்ட கரடுமுரடான பொருளைக் கொண்டு தாக்கிவிட்டார். இதில் நிலைகுலைந்துபோன பெர்லுஸ்கோனியின் மூக்கு உடைந்தது. வாயில் இரு பற்கள் பெயர்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
÷இத்தாலி மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியொரு சம்பவத்துக்கு இத்தாலி முழுவதுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்திருக்க வேண்டும். நாடே ஒன்றிணைந்து பிரதமர் விரைவாகக் குணமடைந்து வர பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். பிரதமருக்கான பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி விவாதம் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், அதெல்லாம் நடக்கவில்லை.
÷இத்தாலியின் ஒரு பிரிவினர் பெர்லுஸ்கோனியின் மீதான தாக்குதலை வரவேற்று இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அவரைத் தாக்கிய இளைஞரை ஹீரோவாக்கினர். மூக்கிலும் வாயிலும் ரத்தம் சொட்டும் பெர்லுஸ்கோனியின் பொம்மைகள் கடைகளில் விற்றுத் தீர்ந்தன. ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் பெர்லுஸ்கோனிக்கு எதிரான கருத்துகளால் நிரம்பின. அந்த அளவுக்கு பெர்லுஸ்கோனியின் மீது வெறுப்புக் கொண்ட மக்கள்கூட்டம் இத்தாலியில் இருக்கிறது. தேசம் பிளவுபட்டுக் கிடப்பதும் வெளிப்படையாகி இருக்கிறது.
÷நாட்டின் தலைவருக்கு விபத்து ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அந்த நாடே அவருக்காக அனுதாபப்படுவதுதான் இயல்பு. எதிர்க்கட்சியினர்கூட இந்த மாதிரியான சூழலில் விமர்சனத்தைத் தவிர்ப்பார்கள். பெர்லுஸ்ú கானி மீது மட்டும் ஏனிந்த வெறுப்பு? அதற்கும் காரணங்கள் இருக்கின்றன.
÷அண்மையில் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்து கொண்டிருந்தது. பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக பல நாடுகளின் தலைவர்கள் கூடியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும், தன்னிடமிருந்த படத்தை, பக்கத்து மேஜைக்குத் தள்ளிக் கொண்டிருந்தார். பல்வேறு கால கட்டங்களில் பெண்கள் பயன்படுத்திய உள்ளாடைகள் என அந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. அதை வாங்கிய சிலர் பார்த்தனர். சிலர் முகம் சுளித்தனர். சிலர் கண்டுகொள்ளவில்லை.
÷பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெüன், பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி போன்ற பெருந்தலைகளும், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஐரோப்பியக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் பரோனஸ் ஆஷ்டன் போன்ற பெண் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் இவ்வளவு மலிவான செயலைச் செய்த அந்த நபர், இத்தாலியின் பிரதமர் பெர்லுஸ்கோனிதான் எனப் பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இடம் பொருள் தெரியாமல் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட இந்த மனிதருக்கு வயது 73.
÷இதுபோன்ற நகைப்புக்கிடமான செயல்களுக்குப் பெயர் பெற்றவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ். உலக நடப்புகள் பற்றிய அடிப்படையான கேள்விகளுக்குக்கூட ஏடாகூடமாகப் பதில் சொல்லி பத்திரிகையாளர்களின் கேலிக்கு ஆளானவர் அவர். இவரது பொது அறிவையும் நிர்வாகத் திறனையும் கிண்டல் செய்யாதவர்களே இல்லை.
÷ஊடகங்களின் கேலிக்கு ஆளான இன்னொருவர் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி. ஆனால், இவரது நிர்வாகத்திறனைப் பற்றி யாரும் கேலி செய்யவில்லை. கேலிக்குள்ளானது இவரது தனிப்பட்ட வாழ்க்கைதான். இரண்டாவது மனைவியுடன் ஊர் சுற்றிய கதைகள் பத்திரிகைகளில் வெளியானதால் சர்கோஸியின் மரியாதை கிழிந்து போனது. மனைவியுடன் தனது உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்காக எக்கி நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களெல்லாம் இன்றைக்கும் இணையத்தில் ஹாட். பதவிக்கு வந்த காலத்தில் மாவீரன் நெப்போலியனுடன் ஒப்பிடப்பட்ட சர்கோஸி, இப்போது கேலிப் பொருளாகியிருக்கிறார்.
÷இந்த இருவரையும் விஞ்சி நிற்கிறார் பெர்லுஸ்கோனி. மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் இவர், அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே இளம் பெண்களுடன் வாழ்ந்து வருவதாகவும் பத்திரிகைகள் எழுதுகின்றன. விலைமாது ஒருவர், தனது சுயசரிதையில் பெர்லுஸ்கோனி பற்றி தாறுமாறாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
÷இதேபோல, பொது நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிறத்தைக் குறிப்பிட்டு, கேலி வெளிப்படும் தொனியில் பேசியுள்ளார் பெர்லுஸ்கோனி. அத்துடன் விடாமல், ஒபாமாவின் மனைவியையும் அதேபோல் குறிப்பிட்டுள்ளார். பெர்லுஸ்கோனியின் இந்தப் பேச்சால், இத்தாலியின் எதிர்காலத்துக்குச் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக, நாட்டின் மூத்த தலைவர்கள் ஒபாமாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று. இதையெல்லாம் பெர்லுஸ்கோனி பொருள்படுத்துவதில்லை. இதைக்கூட ஒபாமாவுக்கு ஜாலியாக எடுத்துக்கொள்ளத் தெரியாதா, எனக் கேட்பார்.
÷இன்னொரு நிகழ்ச்சியின்போது, உலகத் தலைவர்களையெல்லாம் கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்த மிச்சேல் ஒபாமா, பெர்லுஸ்கோனியிடம் மட்டும் கைகுலுக்கிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இது இத்தாலிக்கு நேர்ந்த அவமானமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இப்படித் தனது தனிப்பட்ட வாழ்க்கையாலும், செயல்களாலும் ஒரு பிரிவு மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் பெர்லுஸ்கோனி, இத்தாலிய ஊடங்களில் பெரும்பான்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். நாட்டின் மூன்றாவது பெரிய பணக்காரர். சிறந்த தொழிலதிபரும்கூட. அரசியல் ரீதியான எதிர்ப்புகளையெல்லாம் திறம்படக் கையாண்டவர். ஆனாலும், தனிப்பட்ட வாழ்க்கையால் தற்போது அவரது புகழுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவிலிருந்து அவர் மீண்டு வருவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது.
பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் தனிப்பட்ட வாழ்வைக் கிளறிப்பார்ப்பது நியாயமாகுமா என அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுவதுண்டு.
பெர்லுஸ்கோனியின் விவகாரத்தை மாதிரியாக எடுத்துப் பார்த்தால் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகிறது. நாட்டுத் தலைவரின் தனிப்பட்ட குறும்புகளாலும், நகைப்புக்கிடமான செயல்களாலும் உலக அரங்கில் அந்த நாட்டின் மரியாதை சரிந்து போகும், அரசு முறை உறவுகள் சிக்கலாகும் என்றால், அந்தத் தலைவர் மீது மக்களுக்கு வெறுப்புத்தான் ஏற்படும். அதற்காக, பெர்லுஸ்கோனியைத் தாக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், மக்களின் வலியைப் புரிந்து கொள்ள இந்தக் காயங்கள் அவருக்கு உதவக்கூடும்.
கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி
÷அண்மையில் மிலன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் மக்களோடு மக்களாகக் கலந்திருந்த பெர்லுஸ்கோனியின் முகத்தில் இளைஞர் ஒருவர் சர்ச் போன்ற வடிவத்தைக் கொண்ட கரடுமுரடான பொருளைக் கொண்டு தாக்கிவிட்டார். இதில் நிலைகுலைந்துபோன பெர்லுஸ்கோனியின் மூக்கு உடைந்தது. வாயில் இரு பற்கள் பெயர்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
÷இத்தாலி மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியொரு சம்பவத்துக்கு இத்தாலி முழுவதுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்திருக்க வேண்டும். நாடே ஒன்றிணைந்து பிரதமர் விரைவாகக் குணமடைந்து வர பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். பிரதமருக்கான பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி விவாதம் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், அதெல்லாம் நடக்கவில்லை.
÷இத்தாலியின் ஒரு பிரிவினர் பெர்லுஸ்கோனியின் மீதான தாக்குதலை வரவேற்று இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அவரைத் தாக்கிய இளைஞரை ஹீரோவாக்கினர். மூக்கிலும் வாயிலும் ரத்தம் சொட்டும் பெர்லுஸ்கோனியின் பொம்மைகள் கடைகளில் விற்றுத் தீர்ந்தன. ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் பெர்லுஸ்கோனிக்கு எதிரான கருத்துகளால் நிரம்பின. அந்த அளவுக்கு பெர்லுஸ்கோனியின் மீது வெறுப்புக் கொண்ட மக்கள்கூட்டம் இத்தாலியில் இருக்கிறது. தேசம் பிளவுபட்டுக் கிடப்பதும் வெளிப்படையாகி இருக்கிறது.
÷நாட்டின் தலைவருக்கு விபத்து ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அந்த நாடே அவருக்காக அனுதாபப்படுவதுதான் இயல்பு. எதிர்க்கட்சியினர்கூட இந்த மாதிரியான சூழலில் விமர்சனத்தைத் தவிர்ப்பார்கள். பெர்லுஸ்ú கானி மீது மட்டும் ஏனிந்த வெறுப்பு? அதற்கும் காரணங்கள் இருக்கின்றன.
÷அண்மையில் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்து கொண்டிருந்தது. பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக பல நாடுகளின் தலைவர்கள் கூடியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும், தன்னிடமிருந்த படத்தை, பக்கத்து மேஜைக்குத் தள்ளிக் கொண்டிருந்தார். பல்வேறு கால கட்டங்களில் பெண்கள் பயன்படுத்திய உள்ளாடைகள் என அந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. அதை வாங்கிய சிலர் பார்த்தனர். சிலர் முகம் சுளித்தனர். சிலர் கண்டுகொள்ளவில்லை.
÷பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெüன், பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி போன்ற பெருந்தலைகளும், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஐரோப்பியக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் பரோனஸ் ஆஷ்டன் போன்ற பெண் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் இவ்வளவு மலிவான செயலைச் செய்த அந்த நபர், இத்தாலியின் பிரதமர் பெர்லுஸ்கோனிதான் எனப் பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இடம் பொருள் தெரியாமல் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட இந்த மனிதருக்கு வயது 73.
÷இதுபோன்ற நகைப்புக்கிடமான செயல்களுக்குப் பெயர் பெற்றவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ். உலக நடப்புகள் பற்றிய அடிப்படையான கேள்விகளுக்குக்கூட ஏடாகூடமாகப் பதில் சொல்லி பத்திரிகையாளர்களின் கேலிக்கு ஆளானவர் அவர். இவரது பொது அறிவையும் நிர்வாகத் திறனையும் கிண்டல் செய்யாதவர்களே இல்லை.
÷ஊடகங்களின் கேலிக்கு ஆளான இன்னொருவர் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி. ஆனால், இவரது நிர்வாகத்திறனைப் பற்றி யாரும் கேலி செய்யவில்லை. கேலிக்குள்ளானது இவரது தனிப்பட்ட வாழ்க்கைதான். இரண்டாவது மனைவியுடன் ஊர் சுற்றிய கதைகள் பத்திரிகைகளில் வெளியானதால் சர்கோஸியின் மரியாதை கிழிந்து போனது. மனைவியுடன் தனது உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்காக எக்கி நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களெல்லாம் இன்றைக்கும் இணையத்தில் ஹாட். பதவிக்கு வந்த காலத்தில் மாவீரன் நெப்போலியனுடன் ஒப்பிடப்பட்ட சர்கோஸி, இப்போது கேலிப் பொருளாகியிருக்கிறார்.
÷இந்த இருவரையும் விஞ்சி நிற்கிறார் பெர்லுஸ்கோனி. மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் இவர், அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே இளம் பெண்களுடன் வாழ்ந்து வருவதாகவும் பத்திரிகைகள் எழுதுகின்றன. விலைமாது ஒருவர், தனது சுயசரிதையில் பெர்லுஸ்கோனி பற்றி தாறுமாறாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
÷இதேபோல, பொது நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிறத்தைக் குறிப்பிட்டு, கேலி வெளிப்படும் தொனியில் பேசியுள்ளார் பெர்லுஸ்கோனி. அத்துடன் விடாமல், ஒபாமாவின் மனைவியையும் அதேபோல் குறிப்பிட்டுள்ளார். பெர்லுஸ்கோனியின் இந்தப் பேச்சால், இத்தாலியின் எதிர்காலத்துக்குச் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக, நாட்டின் மூத்த தலைவர்கள் ஒபாமாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று. இதையெல்லாம் பெர்லுஸ்கோனி பொருள்படுத்துவதில்லை. இதைக்கூட ஒபாமாவுக்கு ஜாலியாக எடுத்துக்கொள்ளத் தெரியாதா, எனக் கேட்பார்.
÷இன்னொரு நிகழ்ச்சியின்போது, உலகத் தலைவர்களையெல்லாம் கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்த மிச்சேல் ஒபாமா, பெர்லுஸ்கோனியிடம் மட்டும் கைகுலுக்கிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இது இத்தாலிக்கு நேர்ந்த அவமானமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இப்படித் தனது தனிப்பட்ட வாழ்க்கையாலும், செயல்களாலும் ஒரு பிரிவு மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் பெர்லுஸ்கோனி, இத்தாலிய ஊடங்களில் பெரும்பான்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். நாட்டின் மூன்றாவது பெரிய பணக்காரர். சிறந்த தொழிலதிபரும்கூட. அரசியல் ரீதியான எதிர்ப்புகளையெல்லாம் திறம்படக் கையாண்டவர். ஆனாலும், தனிப்பட்ட வாழ்க்கையால் தற்போது அவரது புகழுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவிலிருந்து அவர் மீண்டு வருவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது.
பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் தனிப்பட்ட வாழ்வைக் கிளறிப்பார்ப்பது நியாயமாகுமா என அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுவதுண்டு.
பெர்லுஸ்கோனியின் விவகாரத்தை மாதிரியாக எடுத்துப் பார்த்தால் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகிறது. நாட்டுத் தலைவரின் தனிப்பட்ட குறும்புகளாலும், நகைப்புக்கிடமான செயல்களாலும் உலக அரங்கில் அந்த நாட்டின் மரியாதை சரிந்து போகும், அரசு முறை உறவுகள் சிக்கலாகும் என்றால், அந்தத் தலைவர் மீது மக்களுக்கு வெறுப்புத்தான் ஏற்படும். அதற்காக, பெர்லுஸ்கோனியைத் தாக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், மக்களின் வலியைப் புரிந்து கொள்ள இந்தக் காயங்கள் அவருக்கு உதவக்கூடும்.
கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி
Saturday, December 5, 2009
ஒற்றுமை நீங்கிடில்...
ஒரு வழியாக ஐரோப்பியக் கூட்டமைப்பு, பெல்ஜியப் பிரதமர் ஹெர்மன் வேன் ரோம்பையை ஐரோப்பியக் கவுன்சிலின் நிரந்தர அதிபராகத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து கொண்டிருந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இந்தத் தேர்வுக்குப் பின்னில் நடந்த அரசியல் மற்றும் கூட்டு ராஜதந்திரப் போட்டிகள் ஏராளம் ஏராளம். அதையெல்லாம் மீறி, ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்கு சுவீடன் பிரதமர் ஃபிரடரிக் ரெய்ன்பெல்ட்டைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது ஒரு நீண்டநாள் கனவு. ஒன்றோடு ஒன்று போர் தொடுத்துக் கொண்டிருந்த சரித்திரம்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு உண்டு. தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளையும், போட்டிகளையும் மறந்து ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டாக வேண்டும் என்கிற எண்ணத்துக்கு முதலில் வித்திட்டது இரண்டாம் உலகப் போர். ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு வித்திட்டது அரசியலும், ஒற்றுமை உணர்வும் என்பதைவிட வியாபாரமும், பொருளாதாரமும் என்பதுதான் நிஜம்.
1950-ல் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தியாளர்கள்தான் ஐரோப்பியக் கூட்டமைப்பு என்கிற எண்ணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள். தங்களது வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெற்று செழிப்பதற்கு ஐரோப்பாவில் அமைதியும் ஒற்றுமையும் நிலவ வேண்டும் என்பதை உணர்ந்த நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தியாளர்களின் முயற்சியின் விளைவாக பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஆறு நாடுகள் இணைந்து உருவாக்கிய ஐரோப்பியப் பொருளாதார ஒருங்கிணைப்புதான் இன்று ஐரோப்பியக் கூட்டமைப்பாக உருவாகி இருக்கிறது.
1973-ல் டென்மார்க், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைந்தது. எண்பதுகளில் கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலும் இணைந்தபோது, ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது ஒரு வலுவான பொருளாதார அமைப்பாகவும், பலமான சக்தியாகவும் உருவாகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. தங்களது எல்லைகளைப் பரஸ்பர வர்த்தகத்துக்கும், பயணங்களுக்கும் உடைத்து எறிந்து, ஐரோப்பாவை ஓர் ஒட்டுமொத்த சந்தையாக உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியின் இணைப்பும், ஆஸ்திரியா, ஃபின்லாந்து, சுவீடன் போன்ற நாடுகள் உறுப்பினர்களாகச் சேர்ந்ததும் ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு மேலும் வலு சேர்த்தன.
சுமார் பத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பொதுவுடைமைத் தத்துவத்தைக் கைவிட்டு சந்தைப் பொருளாதாரத்துக்குத் தயாரானதுடன், ஐரோப்பியக் கட்டமைப்பு மேலும் வலுவடைந்து பல்கேரியா மற்றும் ருமேனியா போன்ற நாடுகளும் தங்களைக் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டபோது, 27 நாடுகளுடன் வல்லரசான அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவுக்கு ஐரோப்பியக் கூட்டமைப்பு பலம் வாய்ந்ததாகக் காட்சி அளிக்கிறது.
பொது நாணயமாக "யூரோ' ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு, டாலருக்குப் போட்டியாக உலக அரங்கில் யூரோ தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் நிகரான வல்லரசாக ஐரோப்பியக் கூட்டமைப்பு காட்சி அளிக்கிறது என்பதும் மறுக்க இயலாத யதார்த்தம்.
இந்த நிலையில்தான், ஐரோப்பியக் கௌன்சிலின் நிரந்தர அதிபராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து, கூட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் அவருக்கு முழு அதிகாரம் அளிப்பது என்கிற முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் பதவியில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரை நியமித்து விட்டால், தனது நன்மைகள் பாதுகாக்கப்படும் என்று அமெரிக்கா கருதியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஐரோப்பியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் ஒரு பலமான நிரந்தரப் பதவியில் டோனி பிளேயரைப் போன்ற உலக நாடுகளுடன் நட்புறவுள்ள பிரமுகர் ஒருவர் அமர்வதை விரும்பவில்லை என்பது ஒருபுறம். மேலும், ஜெர்மன் அதிபர் அன்ஜெலா மெர்க்கலும், பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசியும், டோனி பிளேயருக்கு எதிராக மறைமுகமாகக் காயை நகர்த்தினர் என்பது மறுபுறம்.
நடந்து முடிந்த தேர்வின் பின்னணியில் ஐரோப்பியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளும் உறுப்பினர் நாடுகளுக்கு இடையேயான மனமாச்சாரியங்கள் வெளிப்பட்டுள்ளன. முக்கியமான பிரச்னைகளில் இப்போதும் உறுப்பினர் நாடுகள், தங்களது நலனின் அடிப்படையில் ஐரோப்பியக் கூட்டமைப்பை அணுகுகிறார்களே ஒழிய அதைத் தங்கள் அனைவருக்கும் பொதுவான ஒட்டுமொத்த அமைப்பாகவும், ஒற்றுமையின் அடையாளமாகவும் பார்ப்பதில்லை என்று தெரிகிறது.
இந்தியா அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்து நடத்தும் தைரியத்தையும், தார்மிக உரிமையையும் இழந்துவிட்ட நிலையில், ஐரோப்பியக் கூட்டமைப்பின் முக்கியத்துவம் இன்றியமையாதது.
ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது அமெரிக்காவும் சீனாவும் இரண்டு வல்லரசுகளாக வளர்ந்து வரும் சூழலில், உலக அமைதியையும், பொருளாதார சமத்துவத்தையும் நிலைநாட்ட மிகவும் அவசியம்.
சக்தி வாய்ந்த ஐரோப்பியக் கூட்டமைப்பு உருவானால் மட்டுமே சீனாவும், அமெரிக்காவும் போட்டியோ, எதிர்ப்போ இல்லாத பொருளாதார வல்லரசுகளாகவும், ஏகாதிபத்திய சக்திகளாகவும் உருவாகாமல் தடுக்க முடியும். இதை ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் உணர்ந்து செயல்படுவதுதான் உலகின் வருங்கால நன்மைக்கு உத்திரவாதமாக இருக்கும்!
நன்றி : தினமணி
ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது ஒரு நீண்டநாள் கனவு. ஒன்றோடு ஒன்று போர் தொடுத்துக் கொண்டிருந்த சரித்திரம்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு உண்டு. தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளையும், போட்டிகளையும் மறந்து ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டாக வேண்டும் என்கிற எண்ணத்துக்கு முதலில் வித்திட்டது இரண்டாம் உலகப் போர். ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு வித்திட்டது அரசியலும், ஒற்றுமை உணர்வும் என்பதைவிட வியாபாரமும், பொருளாதாரமும் என்பதுதான் நிஜம்.
1950-ல் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தியாளர்கள்தான் ஐரோப்பியக் கூட்டமைப்பு என்கிற எண்ணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள். தங்களது வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெற்று செழிப்பதற்கு ஐரோப்பாவில் அமைதியும் ஒற்றுமையும் நிலவ வேண்டும் என்பதை உணர்ந்த நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தியாளர்களின் முயற்சியின் விளைவாக பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஆறு நாடுகள் இணைந்து உருவாக்கிய ஐரோப்பியப் பொருளாதார ஒருங்கிணைப்புதான் இன்று ஐரோப்பியக் கூட்டமைப்பாக உருவாகி இருக்கிறது.
1973-ல் டென்மார்க், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைந்தது. எண்பதுகளில் கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலும் இணைந்தபோது, ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது ஒரு வலுவான பொருளாதார அமைப்பாகவும், பலமான சக்தியாகவும் உருவாகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. தங்களது எல்லைகளைப் பரஸ்பர வர்த்தகத்துக்கும், பயணங்களுக்கும் உடைத்து எறிந்து, ஐரோப்பாவை ஓர் ஒட்டுமொத்த சந்தையாக உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியின் இணைப்பும், ஆஸ்திரியா, ஃபின்லாந்து, சுவீடன் போன்ற நாடுகள் உறுப்பினர்களாகச் சேர்ந்ததும் ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு மேலும் வலு சேர்த்தன.
சுமார் பத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பொதுவுடைமைத் தத்துவத்தைக் கைவிட்டு சந்தைப் பொருளாதாரத்துக்குத் தயாரானதுடன், ஐரோப்பியக் கட்டமைப்பு மேலும் வலுவடைந்து பல்கேரியா மற்றும் ருமேனியா போன்ற நாடுகளும் தங்களைக் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டபோது, 27 நாடுகளுடன் வல்லரசான அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவுக்கு ஐரோப்பியக் கூட்டமைப்பு பலம் வாய்ந்ததாகக் காட்சி அளிக்கிறது.
பொது நாணயமாக "யூரோ' ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு, டாலருக்குப் போட்டியாக உலக அரங்கில் யூரோ தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் நிகரான வல்லரசாக ஐரோப்பியக் கூட்டமைப்பு காட்சி அளிக்கிறது என்பதும் மறுக்க இயலாத யதார்த்தம்.
இந்த நிலையில்தான், ஐரோப்பியக் கௌன்சிலின் நிரந்தர அதிபராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து, கூட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் அவருக்கு முழு அதிகாரம் அளிப்பது என்கிற முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் பதவியில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரை நியமித்து விட்டால், தனது நன்மைகள் பாதுகாக்கப்படும் என்று அமெரிக்கா கருதியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஐரோப்பியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் ஒரு பலமான நிரந்தரப் பதவியில் டோனி பிளேயரைப் போன்ற உலக நாடுகளுடன் நட்புறவுள்ள பிரமுகர் ஒருவர் அமர்வதை விரும்பவில்லை என்பது ஒருபுறம். மேலும், ஜெர்மன் அதிபர் அன்ஜெலா மெர்க்கலும், பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசியும், டோனி பிளேயருக்கு எதிராக மறைமுகமாகக் காயை நகர்த்தினர் என்பது மறுபுறம்.
நடந்து முடிந்த தேர்வின் பின்னணியில் ஐரோப்பியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளும் உறுப்பினர் நாடுகளுக்கு இடையேயான மனமாச்சாரியங்கள் வெளிப்பட்டுள்ளன. முக்கியமான பிரச்னைகளில் இப்போதும் உறுப்பினர் நாடுகள், தங்களது நலனின் அடிப்படையில் ஐரோப்பியக் கூட்டமைப்பை அணுகுகிறார்களே ஒழிய அதைத் தங்கள் அனைவருக்கும் பொதுவான ஒட்டுமொத்த அமைப்பாகவும், ஒற்றுமையின் அடையாளமாகவும் பார்ப்பதில்லை என்று தெரிகிறது.
இந்தியா அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்து நடத்தும் தைரியத்தையும், தார்மிக உரிமையையும் இழந்துவிட்ட நிலையில், ஐரோப்பியக் கூட்டமைப்பின் முக்கியத்துவம் இன்றியமையாதது.
ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது அமெரிக்காவும் சீனாவும் இரண்டு வல்லரசுகளாக வளர்ந்து வரும் சூழலில், உலக அமைதியையும், பொருளாதார சமத்துவத்தையும் நிலைநாட்ட மிகவும் அவசியம்.
சக்தி வாய்ந்த ஐரோப்பியக் கூட்டமைப்பு உருவானால் மட்டுமே சீனாவும், அமெரிக்காவும் போட்டியோ, எதிர்ப்போ இல்லாத பொருளாதார வல்லரசுகளாகவும், ஏகாதிபத்திய சக்திகளாகவும் உருவாகாமல் தடுக்க முடியும். இதை ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் உணர்ந்து செயல்படுவதுதான் உலகின் வருங்கால நன்மைக்கு உத்திரவாதமாக இருக்கும்!
நன்றி : தினமணி
Subscribe to:
Posts (Atom)
