ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சிஏஜி அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப்பதும், உச்ச நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல்வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார்.
மிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்திரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்பந்தமே இல்லாத அந்தக் குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் பெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட உடனேயே தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும், கேட்கவில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டவர்.
முதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரியார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால்தான் மேலும் மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்துகின்றன என்கிறார்.
கருணாநிதிக்குத் தெரியுமா? டி.டி. கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். உடன் பெருந்தலைவர் காமராஜும் வருகிறார். கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் செல்கின்றனர். எல்லோரும் சட்டையைக் கழற்றுகின்றனர். காமராஜ் சட்டையைக் கழற்றுகிறார். டி.டி.கே. சட்டையைக் கழற்றவில்லை. காமராஜ் சொல்லுகிறார்-"அவன் பூணூல் போட்டிருக்க மாட்டான், அதான் கழற்ற மாட்டேங்கிறான்' என்று! அந்த ஆச்சாரியாரின் ஆச்சரியமான ஆச்சாரத்தைப் பார்த்துச் சுற்றி இருந்தோர் வியந்தனர்.
காங்கிரஸ் கட்சி தனது மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணை பதவி விலக வைத்திருக்கிறதே! அவர்மீது விசாரணை நடக்கப் போகிறதே! அவர் என்ன தலித்தா? சுரேஷ் கல்மாடியைப் பதவி விலகச் சொல்லியுள்ளதே, அவர் என்ன தலித்தா?
கருணாநிதிக்கு நினைவிருக்கும். அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்கு தமிழர் ஓ.வி. அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். "அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா?' என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே. விபத்து நடந்த சில மணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து பெரியவர் லால் பகதூர் சாஸ்திரியும் நம்மவர் ஓ.வி.அளகேசனும் பதவி விலகினார்களே! அவர்கள் தலித்துகளா?
போஃபர்ஸ் பீரங்கி என்று தமிழகம் முழுவதும் ரூ. 64 கோடிக்கு விசாரணை வேண்டும். ராஜீவ் காந்தியைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே!
இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்க்கு கேள்வியே கேட்கக் கூடாது என்கிறீர்களே! என்ன நியாயம்?
1967-ல் ஜெயலலிதா கட்டிய வருமான வரி என்ன? இன்று அவர் கட்டுகிற வருமான வரி என்ன என்று கேட்கிற கருணாநிதி, அவர் 67-ல் கட்டிய வருமான வரி என்ன? இப்போது கட்டுகிற வரி என்ன என்று சொல்வாரா? பத்திரிகைகளைப் பார்ப்பனப் பத்திரிகைகள் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இந்த சாமானியனின் சாயம் வெளுத்துவிடும் என்பதாலா?
ஜெயலலிதாவைப் பார்ப்பனத்தி என்று இவர் பேசினால் வீரமணி கோபம் கொள்வார். அவர்தான் ஜெயலலிதாவுக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை' என்று பட்டம் கொடுத்தவர். கருணாநிதிக்குக்கூட அந்தப் பட்டத்தை அவர் வழங்கவில்லை.
பார்ப்பனப் பத்திரிகைகள் என்று குறிப்பிடுகிற கருணாநிதி, அவற்றை முதலில் இருந்தே இவை பார்ப்பனப் பத்திரிகைகள் என்று புறக்கணித்திருந்தால் நமக்குப் புரியும், இவர் சரியான பெரியாரின் சீடர் என்று. "சோ'வைப் பார்ப்பான் என்பார். பிறகு "சோ'வே என்னைப் பாராட்டியிருக்கிறார் தெரியுமா என்பார்.
ஓர் ஆங்கில நாளேட்டை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்பார். பிறகு அந்தப் பத்திரிகையே தன்னைப் பாராட்டியிருக்கிறது என்று பெருமை பேசுவார்.
இவர் குடும்பத்தினர் நடத்துகிற பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதெல்லாம் பார்ப்பனர்கள்தான். எதற்கு அவர்களை இந்தப் பெரியாரின் சீடர் குடும்பம் வளர்க்கிறது? பார்ப்பன வாடையே படாமல் இவர்களின் ஊடகம் நடக்காதா, என்ன?
ஜெமினி கணேசன் பிறந்த நாளில் கலந்துகொள்கிறார். ஜெமினியின் மாமா ஒருவர் முதல் மனைவியை இழந்துவிட்டாராம். உடனே எங்கள் இசை வேளாளர் குடும்பத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார். அவரின் பெண்தான் முத்துலெட்சுமி ரெட்டி என்கிறார். அப்படியென்றால், இந்தியச் சட்டப்படி முத்துலெட்சுமி பார்ப்பனப் பெண்தானே! அவரை ஏன் இவர் புகழ்கிறார்?
ஜாதிய ஒழிப்பில் ஈடுபட வேண்டிய கருணாநிதி, இன்னும் தன் ஜாதியைக்கூட மறக்க மாட்டேன் என்கிறாரே. கேட்டால், தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவன் என்பார். தன் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தவரே இவர்தானே!
பார்ப்பனர்களை இவ்வளவு வசைபாடும் கருணாநிதி, தன் குடும்பத்து இளைஞர்களிடம் பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கலாமே? சொல்லமாட்டார். பார்ப்பனீயம் அவருக்கு மட்டும் இனிக்க வேண்டும். மற்றவர்களுக்குக் கசக்க வேண்டும். இதுதான் கருணாநிதியின் பகுத்தறிவு தர்மம்.
தனக்குச் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிற கருணாநிதி, நீரா ராடியா, கனிமொழி, ராசா ஒலிக் குறுந்தகடுகள் குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே, ஏன்? ஆ. ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது நீரா ராடியாவா, இல்லை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியா என்று ஆங்கிலப் பத்திரிகைகள் கேள்வி கேட்டு திமுகவின் மானத்தைச் சந்தி சிரிக்கச் செய்கின்றனவே, அதைப்பற்றி இவர் எதுவுமே பேசுவதில்லையே, ஏன்?
ஒவ்வொரு தேர்தலின்போதும் நான் தாழ்த்தப்பட்ட பெண்ணை மருமகளாக்கியிருக்கிறேன் என்பார். தன் வீட்டு மருமகளாகிவிட்ட பெண்ணை ஒவ்வொரு தேர்தலின்போதும் தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருணாநிதி செய்கிற மரியாதையா? அவமரியாதையா? அவரது உள்மனதில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் மருமகளாகிவிட்டாளே என்கிற ஆதங்கத்தின், உள்மனதின் ஓலம்தானே அது? அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஆபத்து வருகிறபோதெல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பேசுகிற கருணாநிதி, ஏதாவது பெரும்பான்மை ஜாதி குறித்துப் பேசுவாரா? இதுவரை பேசியிருக்கிறாரா?
ராஜாஜி என்கிற பார்ப்பனர்தான் காமராஜையும், காங்கிரûஸயும் வீழ்த்த இவர்களுக்கு உதவினார். உடனே அவரை மூதறிஞர் என்றார்கள். அதற்கு முன்புவரை அவர் குல்லுக பட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார்!
மார்க்சிஸ்டுகளோடு தேர்தல் உறவா, தோழர் பி. இராமமூர்த்தியை சர்வதேசச் சிந்தனையாளர் என்பார்கள். உறவு முறிந்த மறுகணமே நொண்டிப் பார்ப்பான் இராமமூர்த்தி என்பார்கள்.
தோழர் ரங்கராஜனைக்கூட பார்ப்பனர் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியவர் கருணாநிதி.
இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சிவகங்கைச் சின்னப் பையன், சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை. அந்தப் பையன் என்னைப் பேசுகிறான் என்றவர்தானே கருணாநிதி.
வேலூரில் ""நேருவே ஆரிய திராவிட யுத்தம்'' என்று எழுதியிருக்கிறார் என்று சான்று காட்டுகிறார் கருணாநிதி.
என்ன செய்ய கருணாநிதி அவர்களே! அந்த நேருவும்கூட ஒரு பார்ப்பனர்தான். ஆமாம் காஷ்மீரத்து பண்டிட்தானே
கட்டுரையாளர் : நெல்லைகண்ணன்
நன்றி : தினமணி
Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts
Thursday, December 2, 2010
Monday, December 28, 2009
காங்கிரஸின் தந்தை ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பின் 125-ம் ஆண்டின் தொடக்கவிழா இன்று முதல் (டிச. 28) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமானதொரு கட்டம்.
1885 டிசம்பர் 28-ம் தேதி மும்பை நகரின் கோவாலியா குளக்கரையிலிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது.
பிற்காலத்தில் இந்தியாவை அடக்கி ஆண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களைப் படிப்படியாக நடத்தி, இறுதியில் "வெள்ளையனே வெளியேறு' என்ற மகத்தான போராட்டத்தையும் நடத்திய காங்கிரஸ் கட்சி உருவாக முன் நின்றவர் ஓர் ஆங்கிலேயர்தான். அவர் அப்பொழுது இருந்த ஆங்கிலேயர் ஆட்சியில் (ஐ.சி.எஸ்.) இந்திய நிர்வாகப் பணி அதிகாரியாகப் பணியாற்றி ஆங்கில அதிகாரத்தின்கீழ் நடைபெற்ற பல்வேறு தவறுகளையும், குற்றங்களையும் நேரடியாகக் கண்டு வெறுப்படைந்த நிலையில் தமது பதவியிலிருந்து வெளியேறி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு முழு முயற்சி எடுத்தார்.
1829 ஜூன் 6-ம் தேதி இங்கிலாந்தின் கென்ட் நகரில் ஜோசப் - மரியா தம்பதியின் எட்டாவது குழந்தையாக ஆலன் ஆக்டேவியன் ஹியூம் பிறந்தார். தந்தை ஜோசப் ஹியூம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒரு தீவிர உறுப்பினராக இருந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆலன் ஓர் ஐ.சி.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்று இந்தியாவில் 1850-ல் உத்தரப் பிரதேசத்தில் பணியைத் தொடங்கினார்.
பெரும்பாலான வெள்ளை அதிகாரிகளைப்போலல்லாமல் இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கு உண்மையாகப் பாடுபட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்ற முற்பட்டு, எட்டாவா மாவட்டத்தில் பல இலவசத் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கினார். அந்தப் பள்ளிகளில் இந்தி அல்லது உருது பயிற்று மொழியாக இருந்தது. இதற்கு முன்னதாக, ஆங்கிலக் கல்விமுறையில் முற்போக்கான அறிவியல் பாடங்களை இந்திய மாணவர்களுக்கு வழங்க வலியுறுத்தி வங்காளத்தில் ராஜாராம் மோகன் ராய் கோல்கத்தாவில் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்களைத் திறப்பதில் ஈடுபட்டார். ஆங்கில ஆட்சியின் உத்தரவைப் புறக்கணித்து தமது சொந்தச் செலவில் எட்டாவா நகரில் 1856-ல் ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தை ஆலன் தொடங்கினார். ஆலன் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் பிற்காலத்தில் அந்தப்பகுதி "ஹியூம் கஞ்ஜ்' என்று வழங்கப்பட்டு அது மருவி தற்பொழுது "ஹோம் கஞ்ஜ்' என அழைக்கப்படுகிறது.
1857-ல் சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு ஆங்கில மேலதிகாரிகளின் 1859 ஜனவரி சுற்றறிக்கையின்படி இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தச் சுற்றறிக்கைக்குப் பதிலாக 1859 மார்ச் 30-ம் தேதியிட்ட கடிதத்தில் ஆலன் பின்வரும் கருத்தை வலியுறுத்தினார்: ""இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் முயற்சி அதிகமாக வேண்டும் என்று இதற்கு முன் கிழக்கு இந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் போட்ட உத்தரவு உள்ளது.
அதன்படி தொடர்ந்து கல்வி அறிவைப் பரப்புவது நல்லது. கல்வி அறிவு மூலம் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டால்தான் அது அரசுக்கு நன்மை பயக்கும். அறியாமையில் மக்களை அடக்கி வைப்பதால் கடைசியில் எதற்கும் அடங்காத ஆவேசம் மக்களுக்கு ஏற்பட்டு எதிர்ப்படும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் அவர்கள் உடைத்தெறிந்துவிடுவார்கள் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன.
மக்களுடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டி அவர்களுடைய மதிப்பையும், நம்பிக்கையையும் பெறுவதில்தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்''.
சிப்பாய்க் கலகத்தை அடக்கிவிட்ட இறுமாப்பில் ஆலன் தந்த இந்த ஆலோசனையை ஆங்கில மேலதிகாரிகள் அலட்சியப்படுத்திவிட்டனர்.
இவ்வாறு ஆங்கில அரசாங்கம் மேற்கொண்ட பற்பல சீர்கேடான நடவடிக்கைகளை ஆலன் வலுவாக எதிர்த்தார். எடுத்துக்காட்டாக, மதுக்கடைகளை ஆங்காங்கு விரிவுபடுத்தி அதனால் கிடைக்கும் ஏராளமான வருவாயை அரசாங்கம் ஆண்டுதோறும் பெருக்கிக் கொள்வதை ஆலன் கண்டித்தார். அதனால், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஏழைகளின் குடும்பங்கள் படும் துன்பங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் தனது வரி வசூலை மட்டும் கவனித்துக் கொண்டிராமல் மக்களின் நலன்களையும் கவனிக்க வேண்டும் என்று 1860 மே மாதத்தில் ஆலன் எழுதிய அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
ஆலன் தந்த ஆலோசனைகளையும், முற்போக்கான திட்டங்களையும் அப்பொழுது இருந்த ஆங்கில மேலதிகாரிகள் பலர் புறக்கணித்தாலும், வைஸ்ராய் பதவிக்கு வந்த மேயோ பிரபு, ரிப்பன் பிரபு போன்றோர் ஆலனின் ஆலோசனைகளை வரவேற்றார்கள். விவசாயத் துறையை மேம்படுத்த ஆலன் அளித்த ஆய்வறிக்கைகளைப் பார்த்த மேயோ பிரபு, அவற்றை நிறைவேற்ற ஆலன்தான் பொருத்தமானவர் என்று முடிவெடுத்து 1870-ல் ஆங்கில அரசின் வைஸ்ராய் தலைமையகத்தில் விவசாயம், வருவாய், வணிகம் உள்ளிட்ட துறையில் செயலாளராக ஆலன் நியமிக்கப்பட்டார்.
1876-ல் வைஸ்ராயாக வந்த லிட்டன் பிரபுவுடன் ஆலனால் பல பிரச்னைகளில் ஒத்துப்போக இயலவில்லை. குறிப்பாக, வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்களில் இந்தியாவுக்கு ஏற்படவிருந்த பெரும் இழப்புகளை ஆலன் சுட்டிக்காட்டினார்.
மேலும், 1876-78-ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஒரு கோடி மக்கள் மாண்டனர். அதற்கான தீர்வு ஆலன் தந்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை லிட்டன் பிரபுவுக்குப் பிடிக்கவில்லை. உடனே, ஆலன் செயலாளர் பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு அப்பொழுது இருந்த வடமேற்கு மாகாணத்தின் (தற்கால உத்தரப்பிரதேசம்) வருவாய்த் துறை வாரியத்தின் இளநிலை உறுப்பினராக அனுப்பப்பட்டார். அப்பொழுது இருந்த பத்திரிகைகள் அனைத்தும் கடுமையான முறையில் ""மிக நேர்மையான ஓர் அதிகாரி ஆட்சியாளர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார்'' என்று கண்டித்தன.
1882 ஜனவரி முதல் நாளில் தமது அரசாங்கப் பதவியை ஆலன் துறந்துவிட்டார். அதன் பிறகு இந்திய மக்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று அவருக்கு இருந்தது. அது, ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்குச் செய்து வரும் அநீதிகளை வெளிப்படுத்தி தக்க முன்னேற்றத்தைத் தர வேண்டும் என்பதை வலியுறுத்த இங்கிலாந்து சென்று, அங்கு இந்தியா பற்றிய ஓர் அமைப்பை உண்டாக்க அவர் திட்டமிட்டார். ஆனால், வில்லியம் வெட்டர்பர்ன் போன்று இருந்த நண்பர்கள் இங்கிலாந்துக்குச் செல்வதைவிட இந்தியாவிலேயே இந்திய மக்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது நல்லது என்று ஆலோசனை கூறினார்கள்.
இந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டவும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவும் தக்கதொரு அமைப்பை உருவாக்க ஆலன் எடுத்த முதல் முயற்சி, கோல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளுக்கு 1883, மார்ச் 1-ல் சிறந்ததொரு வெளிப்படையான வேண்டுகோளை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:
""மிகவும் உயர்தரமான கல்வியைப் பெற்றுள்ள உங்களிடம்தான், நேர்மை, மன உறுதி, சமுதாய நீதி, அரசியல் ஆகியவற்றில் இந்தியா முன்னேற்றமடைவதற்கான பொறுப்பும், சக்தியும் இருக்கின்றன. தனிப்பட்ட மனிதனாகவோ அல்லது ஒரு நாடாகவோ இருந்தாலும் முன்னேற்றம் என்பது உள்ளிருந்து வெளிப்பட வேண்டுமே தவிர, என்னைப்போன்று நாட்டுக்கு நல்ல நண்பர்களாக உள்ள வெளிநாட்டவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. வெளிநாட்டிலிருந்து உங்களுக்குத் தேவையான உதவிகள், பணம், ஆதரவு கிடைக்கலாம். உங்களுக்காக அவர்கள் தியாகம் செய்யவும், போராட்டங்கள் நடத்தவும் முன்வரலாம். இருந்தாலும், தேசிய உணர்வு என்பது உங்களிடம்தான் உள்ளது. அதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியாது. இப்பொழுது உங்களுக்கு மிகவும் இன்றியமையாதவை: ஒற்றுமை, உறுதியான அமைப்பு, தெளிவான செயல்திட்டம்... உங்களில் ஐம்பது பேர் தன்னலமற்ற முறையில் எடுத்த காரியத்தை முடிக்கும் திறனுடன் இவ்வாறான ஓர் அமைப்பை உருவாக்க முன்வந்தால்தான், இந்தியா வளர்ச்சியடைவதற்கான வெற்றிப் பயணம் தொடங்கிவிட்டதாக ஆகும்...''
ஆலன் பற்றி இந்திய மக்களுக்கு மதிப்பும், நம்பிக்கையும் இருந்த காரணத்தினால் அவர் விடுத்த இந்த வேண்டுகோள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் பற்பல நகரங்களிலிருந்தும், மாகாணங்களிலிருந்தும் வந்த ஆதரவின்படி "இந்திய தேசிய சங்கம்' என்னும் பெயரில் ஆலன் முயற்சியின் விளைவாக இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு தேசிய அமைப்பு உருவானது. இதற்கான முன்னேற்பாடுகள் ஓரளவு செய்யப்பட்டபிறகு, 1885 மார்ச் மாதத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்த பிரதிநிதிகள் கூட்டத்தில், இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டை புணேயில் 1885 டிசம்பர் 25-31 வரை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆயினும், குறிக்கப்பட்ட மாநாட்டுத் தேதிக்குச் சில வாரங்களுக்கு முன்னதாக புணேயில் கடுமையான பிளேக் நோய் பரவிய காரணத்தினால், அந்த மாநாடு மும்பை நகருக்கு மாற்றப்பட்டது. இதற்கான பொறுப்பை மும்பை மாகாண அமைப்பு ஏற்றது. அதன்படி, மும்பையில், கோவாலியா குளத்தின் அருகில் இருந்த கோகுல்தாஸ் பள்ளிக்கூடத்தில் இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாடு கூட்டப்பட்டது.
1885 டிசம்பர் 28-ல் மும்பையில் கூடிய இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டில், மும்பை, வங்காளம், மதராஸ் மாகாணங்களிலிருந்து 72 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சர். வில்லியம் வெட்டர்பர்ன் (ஐ.சி.எஸ். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, ஆலனின் நெருங்கிய நண்பர்), எம்.ஜி. ரானடே (மும்பை சட்டமன்ற மேலவை உறுப்பினர், உயர் நீதிமன்ற நீதிபதி) மற்றும் பல்வேறு துறை விற்பன்னர்கள் கலந்துகொண்டனர்.
ஆலன் ஹியூம் முன்மொழிய, எஸ். சுப்ரமணிய ஐயர் (மதராஸ், பிரபல வழக்கறிஞர், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி). மாநாட்டின் வரவேற்புக் குழுவின் செயலாளர் கே.டி. டெலாங் (மும்பை, பிரபல வழக்கறிஞர், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி) ஆகியோர் வழிமொழிய, 1885, டிசம்பர் 28-ல் இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டுக்குத் தலைவராக டபுள்யு.சி. பானர்ஜி (கோல்கத்தா, பிரபல வழக்கறிஞர்) நியமிக்கப்பட்டார்.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: இந்திய நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் இந்தியர்களுக்குத் தகுந்த வாய்ப்புத் தருவதற்காகத் தேர்ந்தெடுக்கும் குழு இந்தியாவிலும், இலங்கையிலும் அமைக்கப்பட வேண்டும். இங்கிலாந்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆங்கில அரசின் செயலாளர் குழு நீக்கப்பட வேண்டும். மாகாண சட்டசபைகளுக்கு மக்கள்தொகைக்குத் தக்கவாறு உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தி, மாகாணத்தின் நிதிநிலை அறிக்கையைக் கவனித்து மாகாண நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பை சட்டமன்றங்களுக்கு வழங்க வேண்டும்.
இந்திய அலுவல் குழுவின் 1860 தீர்மானப்படி ஐ.சி.எஸ். தேர்வு ஒரேசமயத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடைபெறுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்கள் மேலும் பயிற்சி பெற இங்கிலாந்து அனுப்பப்பட வேண்டும். இந்திய அரசாங்க நிதியிலிருந்து தற்பொழுது ராணுவத்துக்குச் செலவிடப்படும் அதிகமான தொகையைக் குறைப்பதுடன், ஆங்கிலப் பேரரசின் செலவுகளை இந்தியாவின் மீது சுமத்தக்கூடாது. அரசாங்கத்தின் ராணுவச் செலவு அதிகப்படுத்தப்பட வேண்டுமென்றால் சுங்க வரி, வருமான வரியை உயர்மட்ட வகுப்பினருக்கும் விதித்து வருமானத்தை உயர்த்த வேண்டும். வட பர்மா பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருப்பதை இம் மாநாடு கண்டிப்பதுடன், இது மிகவும் தேவையான ஒன்று என்றால், இந்திய நிர்வாகத்திலிருந்து பர்மா முழுவதையும் தனிமைப்படுத்தி ஆங்கில ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொரு மாகாணத்திலுள்ள அரசியல் சங்கங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இந்தத் தீர்மானங்களின்படி மாகாணங்கள் தத்தம் நிலைமைக்கு ஏற்றவாறு அவற்றை நி றைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. இந்திய தேசிய சங்கத்தின் அடுத்த மாநாடு 1886 டிசம்பர் 28-ம் தேதி கோல்கத்தாவில் நடைபெறும்.
மும்பையில் கூடிய இந்த மாநாடுதான் இந்திய தேசிய காங்கிரஸின் தொடக்கம் என்று கூற வேண்டும். அப்பொழுதைய பத்திரிகைகளில் இந்த மாநாடு பற்றி நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டன.
முக்கியமாக, "பம்பாய் கெஸ்ட்' என்ற ஆங்கில ஏடு எழுதியதாவது: ""பம்பாயில் கூடிய மாநாடு இந்திய அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன் எப்போதும் இல்லாதவாறு இந்தியாவிலுள்ள பல்வேறு இன, கலாசார, மத சார்புடையவர்கள் ஓரிடத்தில் கூடி இந்தியா முழுமைக்கும் ஒன்றுபட்ட ஓர் அரசியல் அமைப்பைத் தொடங்கி இருப்பது மிகவும் தனித்தன்மையும், நம்பிக்கையும் உடைய சம்பவமாகும்.''
மும்பை மாநாட்டுக்கு முன்னதாக இந்தியாவில் ஆங்காங்கு உள்ள படித்த இந்தியர்கள் சிறுசிறு அமைப்புகளை வைத்திருந்தார்கள். மதராஸில் மகாஜனசபா (1849), கல்கத்தாவில் இந்தியா லீக் (1875), இந்தியன் அசோசியேஷன் (1876), பம்பாயில் பம்பாய் அசோசியேஷன் (1852), புணேயில் சர்வஜனிக் சபா (1867) போன்ற பல அமைப்புகள் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நிகரான வேலைவாய்ப்புகளும், சலுகைகளும் தரப்பட வேண்டுமென்று அவ்வப்பொழுது தீர்மானங்களையும், முறையீடுகளையும் செய்து வந்தன. ஆயினும், ஆலன் தொடங்கிய இந்திய தேசிய சங்கத்தின் மாநாட்டின் மூலம் தனிப்பட்டு இயங்கி வந்த பல சங்கங்களை ஓர் அமைப்பின்கீழ் - அதுவே நாளடைவில் "இந்திய தேசிய காங்கிரஸ்' என்று நிலைபெற்றது.
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் 1885 முதல் 1906 வரை தொடர்ந்து காங்கிரஸ் அமைப்பின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். ஆண்டுதோறும் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் மற்றவர்கள் தலைவராவதற்கு உறுதுணையாக இருந்தாரே தவிர ஒருபோதும் தாம் தலைவராவதற்கு உடன்படவில்லை. ஐ.சி.எஸ். அதிகாரியாக இந்தியா வந்த ஆலன் உண்மையில் இந்திய மக்களுக்குப் பணிபுரியும் குறிக்கோளுடன் இருந்ததல்லாமல், அவர் பணிபுரிந்த காலத்தில் விஞ்ஞான முறையில் பறவை இனங்களை ஆராய்ச்சி செய்து அவர் வெளியிட்ட பல ஆராய்ச்சி நூல்கள் உலக விஞ்ஞானிகள் கண்டு பாராட்டும் அளவுக்குச் சிறந்து விளங்கின. "இந்தியப் பறவை இயல் தந்தை' என ஆலன் போற்றப்படுகிறார்.
இந்தியாவின் முதுபெரும் தலைவர் தாதாபாய் நௌரோஜி தொடங்கி இந்திய விடுதலைப் போராட்டத்தை முடித்து வைத்த மகாத்மா காந்தி வரை மாபெரும் தலைவர்கள் பலர் இந்திய தேசிய காங்கிரûஸ ஒரு மாபெரும் அமைப்பாக வளர்ச்சியடையச் செய்தார்கள். ஆயினும், ஆலன் ஆக்டேவியன் ஹியூமைத்தான் "இந்திய காங்கிரஸின் தந்தை' என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பாக இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுக்கு லண்டன் சென்ற மகாத்மா காந்தி, தமது தொடக்க உரையில் பின்வருமாறு கூறினார்:
""நான் மிகப் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். காங்கிரஸ் அமைப்பு என்பது ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஓர் ஆங்கிலேயரின் கருத்தில் உருவான ஒன்று. அதனால் அவர்தான் காங்கிரஸின் தந்தை ஆவார்.''
ஐ.சி.எஸ். அதிகாரிகளாக இந்தியா வந்த ஆலன் ஆக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன் ஆகிய இருவரும் இந்தியக் குடிமக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்கும், பிறகு இந்திய தேசியத்தை வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியை உருவாக்கி வளர்த்ததற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. இருவரும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்கள். வரலாற்றில் நீண்டகாலமாக இங்கிலாந்தை எதிர்த்து தங்கள் உரிமைகளுக்காக ஸ்காட்லாந்து மக்கள் போராடி இருக்கிறார்கள்.
அந்தப் பாரம்பரிய உணர்வு இன்றளவும் நீடித்து வருகிறது. அந்த வகையில் ஆலன், வெட்டர்பர்ன் இருவரும் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் அநீதிகளை எதிர்த்துப் போராடினார்கள்.
கட்டுரையாளர் : இரா. செழியன்
நன்றி : தினமணி
1885 டிசம்பர் 28-ம் தேதி மும்பை நகரின் கோவாலியா குளக்கரையிலிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது.
பிற்காலத்தில் இந்தியாவை அடக்கி ஆண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களைப் படிப்படியாக நடத்தி, இறுதியில் "வெள்ளையனே வெளியேறு' என்ற மகத்தான போராட்டத்தையும் நடத்திய காங்கிரஸ் கட்சி உருவாக முன் நின்றவர் ஓர் ஆங்கிலேயர்தான். அவர் அப்பொழுது இருந்த ஆங்கிலேயர் ஆட்சியில் (ஐ.சி.எஸ்.) இந்திய நிர்வாகப் பணி அதிகாரியாகப் பணியாற்றி ஆங்கில அதிகாரத்தின்கீழ் நடைபெற்ற பல்வேறு தவறுகளையும், குற்றங்களையும் நேரடியாகக் கண்டு வெறுப்படைந்த நிலையில் தமது பதவியிலிருந்து வெளியேறி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு முழு முயற்சி எடுத்தார்.
1829 ஜூன் 6-ம் தேதி இங்கிலாந்தின் கென்ட் நகரில் ஜோசப் - மரியா தம்பதியின் எட்டாவது குழந்தையாக ஆலன் ஆக்டேவியன் ஹியூம் பிறந்தார். தந்தை ஜோசப் ஹியூம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒரு தீவிர உறுப்பினராக இருந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆலன் ஓர் ஐ.சி.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்று இந்தியாவில் 1850-ல் உத்தரப் பிரதேசத்தில் பணியைத் தொடங்கினார்.
பெரும்பாலான வெள்ளை அதிகாரிகளைப்போலல்லாமல் இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கு உண்மையாகப் பாடுபட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்ற முற்பட்டு, எட்டாவா மாவட்டத்தில் பல இலவசத் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கினார். அந்தப் பள்ளிகளில் இந்தி அல்லது உருது பயிற்று மொழியாக இருந்தது. இதற்கு முன்னதாக, ஆங்கிலக் கல்விமுறையில் முற்போக்கான அறிவியல் பாடங்களை இந்திய மாணவர்களுக்கு வழங்க வலியுறுத்தி வங்காளத்தில் ராஜாராம் மோகன் ராய் கோல்கத்தாவில் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்களைத் திறப்பதில் ஈடுபட்டார். ஆங்கில ஆட்சியின் உத்தரவைப் புறக்கணித்து தமது சொந்தச் செலவில் எட்டாவா நகரில் 1856-ல் ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தை ஆலன் தொடங்கினார். ஆலன் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் பிற்காலத்தில் அந்தப்பகுதி "ஹியூம் கஞ்ஜ்' என்று வழங்கப்பட்டு அது மருவி தற்பொழுது "ஹோம் கஞ்ஜ்' என அழைக்கப்படுகிறது.
1857-ல் சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு ஆங்கில மேலதிகாரிகளின் 1859 ஜனவரி சுற்றறிக்கையின்படி இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தச் சுற்றறிக்கைக்குப் பதிலாக 1859 மார்ச் 30-ம் தேதியிட்ட கடிதத்தில் ஆலன் பின்வரும் கருத்தை வலியுறுத்தினார்: ""இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் முயற்சி அதிகமாக வேண்டும் என்று இதற்கு முன் கிழக்கு இந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் போட்ட உத்தரவு உள்ளது.
அதன்படி தொடர்ந்து கல்வி அறிவைப் பரப்புவது நல்லது. கல்வி அறிவு மூலம் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டால்தான் அது அரசுக்கு நன்மை பயக்கும். அறியாமையில் மக்களை அடக்கி வைப்பதால் கடைசியில் எதற்கும் அடங்காத ஆவேசம் மக்களுக்கு ஏற்பட்டு எதிர்ப்படும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் அவர்கள் உடைத்தெறிந்துவிடுவார்கள் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன.
மக்களுடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டி அவர்களுடைய மதிப்பையும், நம்பிக்கையையும் பெறுவதில்தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்''.
சிப்பாய்க் கலகத்தை அடக்கிவிட்ட இறுமாப்பில் ஆலன் தந்த இந்த ஆலோசனையை ஆங்கில மேலதிகாரிகள் அலட்சியப்படுத்திவிட்டனர்.
இவ்வாறு ஆங்கில அரசாங்கம் மேற்கொண்ட பற்பல சீர்கேடான நடவடிக்கைகளை ஆலன் வலுவாக எதிர்த்தார். எடுத்துக்காட்டாக, மதுக்கடைகளை ஆங்காங்கு விரிவுபடுத்தி அதனால் கிடைக்கும் ஏராளமான வருவாயை அரசாங்கம் ஆண்டுதோறும் பெருக்கிக் கொள்வதை ஆலன் கண்டித்தார். அதனால், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஏழைகளின் குடும்பங்கள் படும் துன்பங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் தனது வரி வசூலை மட்டும் கவனித்துக் கொண்டிராமல் மக்களின் நலன்களையும் கவனிக்க வேண்டும் என்று 1860 மே மாதத்தில் ஆலன் எழுதிய அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
ஆலன் தந்த ஆலோசனைகளையும், முற்போக்கான திட்டங்களையும் அப்பொழுது இருந்த ஆங்கில மேலதிகாரிகள் பலர் புறக்கணித்தாலும், வைஸ்ராய் பதவிக்கு வந்த மேயோ பிரபு, ரிப்பன் பிரபு போன்றோர் ஆலனின் ஆலோசனைகளை வரவேற்றார்கள். விவசாயத் துறையை மேம்படுத்த ஆலன் அளித்த ஆய்வறிக்கைகளைப் பார்த்த மேயோ பிரபு, அவற்றை நிறைவேற்ற ஆலன்தான் பொருத்தமானவர் என்று முடிவெடுத்து 1870-ல் ஆங்கில அரசின் வைஸ்ராய் தலைமையகத்தில் விவசாயம், வருவாய், வணிகம் உள்ளிட்ட துறையில் செயலாளராக ஆலன் நியமிக்கப்பட்டார்.
1876-ல் வைஸ்ராயாக வந்த லிட்டன் பிரபுவுடன் ஆலனால் பல பிரச்னைகளில் ஒத்துப்போக இயலவில்லை. குறிப்பாக, வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்களில் இந்தியாவுக்கு ஏற்படவிருந்த பெரும் இழப்புகளை ஆலன் சுட்டிக்காட்டினார்.
மேலும், 1876-78-ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஒரு கோடி மக்கள் மாண்டனர். அதற்கான தீர்வு ஆலன் தந்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை லிட்டன் பிரபுவுக்குப் பிடிக்கவில்லை. உடனே, ஆலன் செயலாளர் பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு அப்பொழுது இருந்த வடமேற்கு மாகாணத்தின் (தற்கால உத்தரப்பிரதேசம்) வருவாய்த் துறை வாரியத்தின் இளநிலை உறுப்பினராக அனுப்பப்பட்டார். அப்பொழுது இருந்த பத்திரிகைகள் அனைத்தும் கடுமையான முறையில் ""மிக நேர்மையான ஓர் அதிகாரி ஆட்சியாளர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார்'' என்று கண்டித்தன.
1882 ஜனவரி முதல் நாளில் தமது அரசாங்கப் பதவியை ஆலன் துறந்துவிட்டார். அதன் பிறகு இந்திய மக்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று அவருக்கு இருந்தது. அது, ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்குச் செய்து வரும் அநீதிகளை வெளிப்படுத்தி தக்க முன்னேற்றத்தைத் தர வேண்டும் என்பதை வலியுறுத்த இங்கிலாந்து சென்று, அங்கு இந்தியா பற்றிய ஓர் அமைப்பை உண்டாக்க அவர் திட்டமிட்டார். ஆனால், வில்லியம் வெட்டர்பர்ன் போன்று இருந்த நண்பர்கள் இங்கிலாந்துக்குச் செல்வதைவிட இந்தியாவிலேயே இந்திய மக்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது நல்லது என்று ஆலோசனை கூறினார்கள்.
இந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டவும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவும் தக்கதொரு அமைப்பை உருவாக்க ஆலன் எடுத்த முதல் முயற்சி, கோல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளுக்கு 1883, மார்ச் 1-ல் சிறந்ததொரு வெளிப்படையான வேண்டுகோளை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:
""மிகவும் உயர்தரமான கல்வியைப் பெற்றுள்ள உங்களிடம்தான், நேர்மை, மன உறுதி, சமுதாய நீதி, அரசியல் ஆகியவற்றில் இந்தியா முன்னேற்றமடைவதற்கான பொறுப்பும், சக்தியும் இருக்கின்றன. தனிப்பட்ட மனிதனாகவோ அல்லது ஒரு நாடாகவோ இருந்தாலும் முன்னேற்றம் என்பது உள்ளிருந்து வெளிப்பட வேண்டுமே தவிர, என்னைப்போன்று நாட்டுக்கு நல்ல நண்பர்களாக உள்ள வெளிநாட்டவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. வெளிநாட்டிலிருந்து உங்களுக்குத் தேவையான உதவிகள், பணம், ஆதரவு கிடைக்கலாம். உங்களுக்காக அவர்கள் தியாகம் செய்யவும், போராட்டங்கள் நடத்தவும் முன்வரலாம். இருந்தாலும், தேசிய உணர்வு என்பது உங்களிடம்தான் உள்ளது. அதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடியாது. இப்பொழுது உங்களுக்கு மிகவும் இன்றியமையாதவை: ஒற்றுமை, உறுதியான அமைப்பு, தெளிவான செயல்திட்டம்... உங்களில் ஐம்பது பேர் தன்னலமற்ற முறையில் எடுத்த காரியத்தை முடிக்கும் திறனுடன் இவ்வாறான ஓர் அமைப்பை உருவாக்க முன்வந்தால்தான், இந்தியா வளர்ச்சியடைவதற்கான வெற்றிப் பயணம் தொடங்கிவிட்டதாக ஆகும்...''
ஆலன் பற்றி இந்திய மக்களுக்கு மதிப்பும், நம்பிக்கையும் இருந்த காரணத்தினால் அவர் விடுத்த இந்த வேண்டுகோள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் பற்பல நகரங்களிலிருந்தும், மாகாணங்களிலிருந்தும் வந்த ஆதரவின்படி "இந்திய தேசிய சங்கம்' என்னும் பெயரில் ஆலன் முயற்சியின் விளைவாக இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு தேசிய அமைப்பு உருவானது. இதற்கான முன்னேற்பாடுகள் ஓரளவு செய்யப்பட்டபிறகு, 1885 மார்ச் மாதத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்த பிரதிநிதிகள் கூட்டத்தில், இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டை புணேயில் 1885 டிசம்பர் 25-31 வரை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆயினும், குறிக்கப்பட்ட மாநாட்டுத் தேதிக்குச் சில வாரங்களுக்கு முன்னதாக புணேயில் கடுமையான பிளேக் நோய் பரவிய காரணத்தினால், அந்த மாநாடு மும்பை நகருக்கு மாற்றப்பட்டது. இதற்கான பொறுப்பை மும்பை மாகாண அமைப்பு ஏற்றது. அதன்படி, மும்பையில், கோவாலியா குளத்தின் அருகில் இருந்த கோகுல்தாஸ் பள்ளிக்கூடத்தில் இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாடு கூட்டப்பட்டது.
1885 டிசம்பர் 28-ல் மும்பையில் கூடிய இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டில், மும்பை, வங்காளம், மதராஸ் மாகாணங்களிலிருந்து 72 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சர். வில்லியம் வெட்டர்பர்ன் (ஐ.சி.எஸ். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, ஆலனின் நெருங்கிய நண்பர்), எம்.ஜி. ரானடே (மும்பை சட்டமன்ற மேலவை உறுப்பினர், உயர் நீதிமன்ற நீதிபதி) மற்றும் பல்வேறு துறை விற்பன்னர்கள் கலந்துகொண்டனர்.
ஆலன் ஹியூம் முன்மொழிய, எஸ். சுப்ரமணிய ஐயர் (மதராஸ், பிரபல வழக்கறிஞர், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி). மாநாட்டின் வரவேற்புக் குழுவின் செயலாளர் கே.டி. டெலாங் (மும்பை, பிரபல வழக்கறிஞர், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி) ஆகியோர் வழிமொழிய, 1885, டிசம்பர் 28-ல் இந்திய தேசிய சங்கத்தின் முதல் மாநாட்டுக்குத் தலைவராக டபுள்யு.சி. பானர்ஜி (கோல்கத்தா, பிரபல வழக்கறிஞர்) நியமிக்கப்பட்டார்.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: இந்திய நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் இந்தியர்களுக்குத் தகுந்த வாய்ப்புத் தருவதற்காகத் தேர்ந்தெடுக்கும் குழு இந்தியாவிலும், இலங்கையிலும் அமைக்கப்பட வேண்டும். இங்கிலாந்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆங்கில அரசின் செயலாளர் குழு நீக்கப்பட வேண்டும். மாகாண சட்டசபைகளுக்கு மக்கள்தொகைக்குத் தக்கவாறு உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தி, மாகாணத்தின் நிதிநிலை அறிக்கையைக் கவனித்து மாகாண நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பை சட்டமன்றங்களுக்கு வழங்க வேண்டும்.
இந்திய அலுவல் குழுவின் 1860 தீர்மானப்படி ஐ.சி.எஸ். தேர்வு ஒரேசமயத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடைபெறுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்கள் மேலும் பயிற்சி பெற இங்கிலாந்து அனுப்பப்பட வேண்டும். இந்திய அரசாங்க நிதியிலிருந்து தற்பொழுது ராணுவத்துக்குச் செலவிடப்படும் அதிகமான தொகையைக் குறைப்பதுடன், ஆங்கிலப் பேரரசின் செலவுகளை இந்தியாவின் மீது சுமத்தக்கூடாது. அரசாங்கத்தின் ராணுவச் செலவு அதிகப்படுத்தப்பட வேண்டுமென்றால் சுங்க வரி, வருமான வரியை உயர்மட்ட வகுப்பினருக்கும் விதித்து வருமானத்தை உயர்த்த வேண்டும். வட பர்மா பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருப்பதை இம் மாநாடு கண்டிப்பதுடன், இது மிகவும் தேவையான ஒன்று என்றால், இந்திய நிர்வாகத்திலிருந்து பர்மா முழுவதையும் தனிமைப்படுத்தி ஆங்கில ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒவ்வொரு மாகாணத்திலுள்ள அரசியல் சங்கங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இந்தத் தீர்மானங்களின்படி மாகாணங்கள் தத்தம் நிலைமைக்கு ஏற்றவாறு அவற்றை நி றைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. இந்திய தேசிய சங்கத்தின் அடுத்த மாநாடு 1886 டிசம்பர் 28-ம் தேதி கோல்கத்தாவில் நடைபெறும்.
மும்பையில் கூடிய இந்த மாநாடுதான் இந்திய தேசிய காங்கிரஸின் தொடக்கம் என்று கூற வேண்டும். அப்பொழுதைய பத்திரிகைகளில் இந்த மாநாடு பற்றி நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டன.
முக்கியமாக, "பம்பாய் கெஸ்ட்' என்ற ஆங்கில ஏடு எழுதியதாவது: ""பம்பாயில் கூடிய மாநாடு இந்திய அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன் எப்போதும் இல்லாதவாறு இந்தியாவிலுள்ள பல்வேறு இன, கலாசார, மத சார்புடையவர்கள் ஓரிடத்தில் கூடி இந்தியா முழுமைக்கும் ஒன்றுபட்ட ஓர் அரசியல் அமைப்பைத் தொடங்கி இருப்பது மிகவும் தனித்தன்மையும், நம்பிக்கையும் உடைய சம்பவமாகும்.''
மும்பை மாநாட்டுக்கு முன்னதாக இந்தியாவில் ஆங்காங்கு உள்ள படித்த இந்தியர்கள் சிறுசிறு அமைப்புகளை வைத்திருந்தார்கள். மதராஸில் மகாஜனசபா (1849), கல்கத்தாவில் இந்தியா லீக் (1875), இந்தியன் அசோசியேஷன் (1876), பம்பாயில் பம்பாய் அசோசியேஷன் (1852), புணேயில் சர்வஜனிக் சபா (1867) போன்ற பல அமைப்புகள் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நிகரான வேலைவாய்ப்புகளும், சலுகைகளும் தரப்பட வேண்டுமென்று அவ்வப்பொழுது தீர்மானங்களையும், முறையீடுகளையும் செய்து வந்தன. ஆயினும், ஆலன் தொடங்கிய இந்திய தேசிய சங்கத்தின் மாநாட்டின் மூலம் தனிப்பட்டு இயங்கி வந்த பல சங்கங்களை ஓர் அமைப்பின்கீழ் - அதுவே நாளடைவில் "இந்திய தேசிய காங்கிரஸ்' என்று நிலைபெற்றது.
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் 1885 முதல் 1906 வரை தொடர்ந்து காங்கிரஸ் அமைப்பின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். ஆண்டுதோறும் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் மற்றவர்கள் தலைவராவதற்கு உறுதுணையாக இருந்தாரே தவிர ஒருபோதும் தாம் தலைவராவதற்கு உடன்படவில்லை. ஐ.சி.எஸ். அதிகாரியாக இந்தியா வந்த ஆலன் உண்மையில் இந்திய மக்களுக்குப் பணிபுரியும் குறிக்கோளுடன் இருந்ததல்லாமல், அவர் பணிபுரிந்த காலத்தில் விஞ்ஞான முறையில் பறவை இனங்களை ஆராய்ச்சி செய்து அவர் வெளியிட்ட பல ஆராய்ச்சி நூல்கள் உலக விஞ்ஞானிகள் கண்டு பாராட்டும் அளவுக்குச் சிறந்து விளங்கின. "இந்தியப் பறவை இயல் தந்தை' என ஆலன் போற்றப்படுகிறார்.
இந்தியாவின் முதுபெரும் தலைவர் தாதாபாய் நௌரோஜி தொடங்கி இந்திய விடுதலைப் போராட்டத்தை முடித்து வைத்த மகாத்மா காந்தி வரை மாபெரும் தலைவர்கள் பலர் இந்திய தேசிய காங்கிரûஸ ஒரு மாபெரும் அமைப்பாக வளர்ச்சியடையச் செய்தார்கள். ஆயினும், ஆலன் ஆக்டேவியன் ஹியூமைத்தான் "இந்திய காங்கிரஸின் தந்தை' என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பாக இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுக்கு லண்டன் சென்ற மகாத்மா காந்தி, தமது தொடக்க உரையில் பின்வருமாறு கூறினார்:
""நான் மிகப் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். காங்கிரஸ் அமைப்பு என்பது ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஓர் ஆங்கிலேயரின் கருத்தில் உருவான ஒன்று. அதனால் அவர்தான் காங்கிரஸின் தந்தை ஆவார்.''
ஐ.சி.எஸ். அதிகாரிகளாக இந்தியா வந்த ஆலன் ஆக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன் ஆகிய இருவரும் இந்தியக் குடிமக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்கும், பிறகு இந்திய தேசியத்தை வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியை உருவாக்கி வளர்த்ததற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. இருவரும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்கள். வரலாற்றில் நீண்டகாலமாக இங்கிலாந்தை எதிர்த்து தங்கள் உரிமைகளுக்காக ஸ்காட்லாந்து மக்கள் போராடி இருக்கிறார்கள்.
அந்தப் பாரம்பரிய உணர்வு இன்றளவும் நீடித்து வருகிறது. அந்த வகையில் ஆலன், வெட்டர்பர்ன் இருவரும் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் அநீதிகளை எதிர்த்துப் போராடினார்கள்.
கட்டுரையாளர் : இரா. செழியன்
நன்றி : தினமணி
Saturday, December 19, 2009
காங்கிரசுக்கு சோதனை "தெலங்கானா'
ஆந்திர மாநில முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிக்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பது தொடர்பான சர்ச்சை எழுந்து முதல்வராக ரோசய்யா தொடர்வார் என அறிவிக்கப்பட்டு பிரச்னை ஓய்ந்திருந்த நிலையில், அங்கு "தனி தெலங்கானா' விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
÷1950}களின் தொடக்கத்தில் முதன்முதலாக நிலப்பிரபுக்களுக்கு எதிராக மிகப்பெரிய விவசாயிகள் இயக்கம் உருவானது. பின்னர் தனி மாநிலக் கோரிக்கை எழுந்தது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அக்கோரிக்கை புதிய உத்வேகம் பெற்றது.
இந்தக் காலத்தில்தான் மாநிலங்கள் மறுசீரமைப்புக் கமிஷன் கோரிக்கை வலுப்பெறவே பிரணாப் முகர்ஜி தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை எல்.கே.அத்வானியிடம் அளித்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர், தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்துவிட்டார்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி தெலங்கானா கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று 2004}ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. 2009}ம் ஆண்டு தேர்தலின்போதும் இதை காங்கிரஸ் முன்வைத்துப் பிரசாரம் செய்தது. செகந்தராபாதில் நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், "தனி தெலங்கானா' கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.
÷எனினும் தனி தெலங்கானா கோரிக்கை மீண்டும் எழாமல் பார்த்துக் கொள்வதாக முதல்வர் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் தலைமைக்கு உறுதியளித்ததுடன் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு இப்பிரச்னை தலைதூக்காமல் பார்த்துக் கொண்டார். தெலங்கானா பிரச்னை குறித்து விவாதிக்க ரோசய்யா தலைமையில் ஒரு கமிட்டியையும் ஏற்படுத்தினார். தெலங்கானா பகுதியைச் சேர்ந்த சிலருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்தார். இதையடுத்து பிரச்னை அமுங்கிப் போய் இருந்தது.
மேலும் அரசியலில் அதிருஷ்டம் ராஜசேகர ரெட்டி பக்கம் இருந்தது போலும்! அடுத்தடுத்து தேர்தல்களில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இது ராஜசேகர ரெட்டிக்குச் சாதகமாக இருந்ததால் தெலங்கானா பிரச்னை தலைதூக்கவில்லை.
2004}ல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, தெலங்கானா விவகாரத்தை காங்கிரஸ் கண்டுகொள்ளாததால் 2006}ல் அதனுடனான உறவை முறித்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர். ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலிலும் அக்கட்சி தோல்வியையே சந்தித்தது. 2009}ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 17 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி 2 இடங்களில் மட்டுமே வென்றது. இதேபோல மாநிலச் சட்டப்பேரவைக்கான தேர்தலில் தெலங்கானா பகுதியில் 119 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 10 தொகுதிகளையே அக் கட்சி கைப்பற்றியது.
இதனால் தனி தெலங்கானா கோரிக்கைக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்று சொல்லிவிட முடியாது. தெலங்கானா பகுதியில் ரெட்டிகள், கம்மவார் இன மக்களின் கை ஓங்கியிருந்தது. இதனால் தனி தெலங்கானா கோரிக்கை தேர்தலின்போது முக்கியத்துவம் பெறவில்லை. அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து ஹைதராபாத் நகராட்சித் தேர்தலில் போட்டியிடத் துணிவில்லாத நிலையில் கட்சியையே கலைத்துவிடலாமா என்ற யோசனயில் இருந்தார் அதன் நிறுவனரான கே.சந்திரசேகர ராவ்.
ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பிறகு முதல்வர் யார் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, தனக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த நிலையில் தாற்காலிக முதல்வராக ரோசய்யா பொறுப்பேற்றார். இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் ஆந்திர அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த காங்கிரஸ் தலைமை ஜெகன்மோகன் ரெட்டியைச் சமாதானப்படுத்தி ரோசய்யா முதல்வராகத் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவித்தது.
இதேசமயத்தில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவந்த ரெட்டி சகோதரர்கள் மீது சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்ததான குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தனர். அவரது மறைவுக்குப் பிறகு அந்த நெருக்கம் ஜெகன்மோகன் ரெட்டியுடனும் தொடர்ந்தது. மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன்ஒன்று தொடர்பு இல்லாதது என்ற போதிலும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கே. சந்திரசேகர ராவ், தெலங்கானா பிரச்னையை கையிலெடுத்து அதற்காக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார். ஆனால், தனி தெலங்கானா கோரிக்கைக்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. ரோசய்யாவின் ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தவும், அவரை ஆட்சியிலிருந்து கீழே இறக்கவும் ஜெகன் மோகன் ஆதரவாளர்களே பிரச்னையைப் பெரிதாக்க நினைத்து இருதரப்பினரையும் உசுப்பிவிட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தியவர்களே தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராயலசீமையைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், வேறு சில பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என அறிவித்துள்ளனர்.
தெலங்கானா பிரச்னையைச் சரிவர கையாள மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கட்சி தவறிவிட்டது. தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அரசு, அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டது. இந்த அறிவிப்பு வந்தவுடனேயே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகர ராவை சமாதானப்படுத்தவே இந்த அறிவிப்பு என்று காங்கிரஸ் சொல்வதை ஏற்க முடியாது. சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் இருந்தபோதே தெலங்கானா பற்றி முடிவு எடுப்பதற்கான முன்முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு ஆந்திர முதல்வரைக் கேட்டுக் கொண்டது. மார்க்சிஸ்ட் மற்றும் எம்ஐஎம் கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் தெலங்கானா கோரிக்கையை ஆதரிக்க முன்வந்தன. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மாநிலச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தின. (ஆனால், இரண்டு நாள்களுக்குப் பிறகு இப் பிரச்னை தலைகீழாக மாறிவிட்டது வேறு விஷயம்.)
தெலங்கானா மாநிலக் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்பதாக அறிவித்த உடனேயே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சந்திரசேகர ராவை காங்கிரஸ் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதேசமயத்தில் தனி தெலங்கானா மாநிலம் அமைந்தால் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியை காங்கிரஸýடன் இணைக்க ராவ் உறுதி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தெலங்கானா விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று காங்கிரஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரோசய்யாதான் முதல்வராக நீடிப்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்தபோது, ஜெகன்மோகன் ரெட்டி வெளிப்படையாக ஒப்புக்கொண்டாலும் மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தச் சமயத்தில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை விஸ்வரூபம் எடுத்தபோது அதற்கு ரெட்டி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்பதாக அவசரப்பட்டு அறிவித்த மத்திய அரசு, இதேபோன்ற கோரிக்கை நாட்டின் இதர பகுதிகளிலிருந்து வரும் என்பதை எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டது. தெலங்கானா பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா, கோர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையை எழுப்பியது. இதைத் தொடர்ந்து உ.பி. முதல்வர் மாயாவதியும், உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.
÷தனி தெலங்கானா மாநிலம் அமைவதை அரசு கொள்கை அளவில் ஏற்றதையடுத்து நாட்டின் இதர பகுதியில் உள்ளவர்கள் தனி மாநிலக் கோரிக்கையை எழுப்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், அரசின் அறிவிப்பு வெளியான விதம் தவறான சமிக்ஞையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அதாவது ஆந்திரத்தில் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம், வன்முறை நடந்ததை அடுத்து நிலைமையைச் சமாளிக்க அரசு தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்துள்ளது. இனி வன்முறை, போராட்டம் போன்றவற்றின் மூலம் கோரிக்கைகளை வலியுறுத்தினால் அரசைப் பணியவைத்துவிடலாம் என்ற எண்ணத்தை இது தோற்றுவித்துவிட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை உறுதிமொழியை நிறைவேற்றுவதா அல்லது அதிலிருந்து பின்வாங்கிவிடுவது நல்லதா என்பது புரியாமல் காங்கிரஸ் உள்ளது.
÷2004}ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைய ஆந்திரம் முக்கிய காரணமாக இருந்தது. 2009}ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் ஆந்திரம் உதவியுள்ளது.
இக்கட்டான இந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்க காங்கிரஸ் தவறிவிட்டால் இரண்டு பக்கமும் மக்கள் ஆதரவை காங்கிரஸ் இழந்துவிட நேரிடும். இதைக் கவனத்தில் கொண்டு காங்கிரஸ் செயல்பட வேண்டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி
÷1950}களின் தொடக்கத்தில் முதன்முதலாக நிலப்பிரபுக்களுக்கு எதிராக மிகப்பெரிய விவசாயிகள் இயக்கம் உருவானது. பின்னர் தனி மாநிலக் கோரிக்கை எழுந்தது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அக்கோரிக்கை புதிய உத்வேகம் பெற்றது.
இந்தக் காலத்தில்தான் மாநிலங்கள் மறுசீரமைப்புக் கமிஷன் கோரிக்கை வலுப்பெறவே பிரணாப் முகர்ஜி தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை எல்.கே.அத்வானியிடம் அளித்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர், தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்துவிட்டார்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி தெலங்கானா கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று 2004}ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. 2009}ம் ஆண்டு தேர்தலின்போதும் இதை காங்கிரஸ் முன்வைத்துப் பிரசாரம் செய்தது. செகந்தராபாதில் நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், "தனி தெலங்கானா' கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.
÷எனினும் தனி தெலங்கானா கோரிக்கை மீண்டும் எழாமல் பார்த்துக் கொள்வதாக முதல்வர் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் தலைமைக்கு உறுதியளித்ததுடன் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு இப்பிரச்னை தலைதூக்காமல் பார்த்துக் கொண்டார். தெலங்கானா பிரச்னை குறித்து விவாதிக்க ரோசய்யா தலைமையில் ஒரு கமிட்டியையும் ஏற்படுத்தினார். தெலங்கானா பகுதியைச் சேர்ந்த சிலருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்தார். இதையடுத்து பிரச்னை அமுங்கிப் போய் இருந்தது.
மேலும் அரசியலில் அதிருஷ்டம் ராஜசேகர ரெட்டி பக்கம் இருந்தது போலும்! அடுத்தடுத்து தேர்தல்களில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இது ராஜசேகர ரெட்டிக்குச் சாதகமாக இருந்ததால் தெலங்கானா பிரச்னை தலைதூக்கவில்லை.
2004}ல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, தெலங்கானா விவகாரத்தை காங்கிரஸ் கண்டுகொள்ளாததால் 2006}ல் அதனுடனான உறவை முறித்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர். ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலிலும் அக்கட்சி தோல்வியையே சந்தித்தது. 2009}ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 17 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி 2 இடங்களில் மட்டுமே வென்றது. இதேபோல மாநிலச் சட்டப்பேரவைக்கான தேர்தலில் தெலங்கானா பகுதியில் 119 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 10 தொகுதிகளையே அக் கட்சி கைப்பற்றியது.
இதனால் தனி தெலங்கானா கோரிக்கைக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்று சொல்லிவிட முடியாது. தெலங்கானா பகுதியில் ரெட்டிகள், கம்மவார் இன மக்களின் கை ஓங்கியிருந்தது. இதனால் தனி தெலங்கானா கோரிக்கை தேர்தலின்போது முக்கியத்துவம் பெறவில்லை. அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து ஹைதராபாத் நகராட்சித் தேர்தலில் போட்டியிடத் துணிவில்லாத நிலையில் கட்சியையே கலைத்துவிடலாமா என்ற யோசனயில் இருந்தார் அதன் நிறுவனரான கே.சந்திரசேகர ராவ்.
ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பிறகு முதல்வர் யார் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, தனக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த நிலையில் தாற்காலிக முதல்வராக ரோசய்யா பொறுப்பேற்றார். இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் ஆந்திர அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த காங்கிரஸ் தலைமை ஜெகன்மோகன் ரெட்டியைச் சமாதானப்படுத்தி ரோசய்யா முதல்வராகத் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவித்தது.
இதேசமயத்தில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவந்த ரெட்டி சகோதரர்கள் மீது சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்ததான குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தனர். அவரது மறைவுக்குப் பிறகு அந்த நெருக்கம் ஜெகன்மோகன் ரெட்டியுடனும் தொடர்ந்தது. மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன்ஒன்று தொடர்பு இல்லாதது என்ற போதிலும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கே. சந்திரசேகர ராவ், தெலங்கானா பிரச்னையை கையிலெடுத்து அதற்காக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார். ஆனால், தனி தெலங்கானா கோரிக்கைக்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. ரோசய்யாவின் ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தவும், அவரை ஆட்சியிலிருந்து கீழே இறக்கவும் ஜெகன் மோகன் ஆதரவாளர்களே பிரச்னையைப் பெரிதாக்க நினைத்து இருதரப்பினரையும் உசுப்பிவிட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தியவர்களே தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராயலசீமையைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், வேறு சில பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என அறிவித்துள்ளனர்.
தெலங்கானா பிரச்னையைச் சரிவர கையாள மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கட்சி தவறிவிட்டது. தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அரசு, அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டது. இந்த அறிவிப்பு வந்தவுடனேயே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகர ராவை சமாதானப்படுத்தவே இந்த அறிவிப்பு என்று காங்கிரஸ் சொல்வதை ஏற்க முடியாது. சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் இருந்தபோதே தெலங்கானா பற்றி முடிவு எடுப்பதற்கான முன்முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு ஆந்திர முதல்வரைக் கேட்டுக் கொண்டது. மார்க்சிஸ்ட் மற்றும் எம்ஐஎம் கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் தெலங்கானா கோரிக்கையை ஆதரிக்க முன்வந்தன. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மாநிலச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தின. (ஆனால், இரண்டு நாள்களுக்குப் பிறகு இப் பிரச்னை தலைகீழாக மாறிவிட்டது வேறு விஷயம்.)
தெலங்கானா மாநிலக் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்பதாக அறிவித்த உடனேயே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சந்திரசேகர ராவை காங்கிரஸ் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதேசமயத்தில் தனி தெலங்கானா மாநிலம் அமைந்தால் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியை காங்கிரஸýடன் இணைக்க ராவ் உறுதி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தெலங்கானா விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று காங்கிரஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரோசய்யாதான் முதல்வராக நீடிப்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்தபோது, ஜெகன்மோகன் ரெட்டி வெளிப்படையாக ஒப்புக்கொண்டாலும் மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தச் சமயத்தில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை விஸ்வரூபம் எடுத்தபோது அதற்கு ரெட்டி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்பதாக அவசரப்பட்டு அறிவித்த மத்திய அரசு, இதேபோன்ற கோரிக்கை நாட்டின் இதர பகுதிகளிலிருந்து வரும் என்பதை எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டது. தெலங்கானா பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா, கோர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையை எழுப்பியது. இதைத் தொடர்ந்து உ.பி. முதல்வர் மாயாவதியும், உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.
÷தனி தெலங்கானா மாநிலம் அமைவதை அரசு கொள்கை அளவில் ஏற்றதையடுத்து நாட்டின் இதர பகுதியில் உள்ளவர்கள் தனி மாநிலக் கோரிக்கையை எழுப்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், அரசின் அறிவிப்பு வெளியான விதம் தவறான சமிக்ஞையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அதாவது ஆந்திரத்தில் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம், வன்முறை நடந்ததை அடுத்து நிலைமையைச் சமாளிக்க அரசு தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்துள்ளது. இனி வன்முறை, போராட்டம் போன்றவற்றின் மூலம் கோரிக்கைகளை வலியுறுத்தினால் அரசைப் பணியவைத்துவிடலாம் என்ற எண்ணத்தை இது தோற்றுவித்துவிட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை உறுதிமொழியை நிறைவேற்றுவதா அல்லது அதிலிருந்து பின்வாங்கிவிடுவது நல்லதா என்பது புரியாமல் காங்கிரஸ் உள்ளது.
÷2004}ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைய ஆந்திரம் முக்கிய காரணமாக இருந்தது. 2009}ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் ஆந்திரம் உதவியுள்ளது.
இக்கட்டான இந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்க காங்கிரஸ் தவறிவிட்டால் இரண்டு பக்கமும் மக்கள் ஆதரவை காங்கிரஸ் இழந்துவிட நேரிடும். இதைக் கவனத்தில் கொண்டு காங்கிரஸ் செயல்பட வேண்டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி
Labels:
கட்டுரை,
காங்கிரஸ்,
மத்தியஅரசு
Wednesday, December 2, 2009
கூட்டணி அரசு-கூட்டாட்சி எங்கே?
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் மிகவும் சூடானதொரு துவக்கத்தையே சந்தித்திருக்கிறது.
கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்ட இரண்டு அவசரச்சட்டங்கள், நாட்டின் கரும்பு விவசாயிகளைக் கொதித்தெழச் செய்தன. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் இந்த அவசரச்சட்டங்களைக் கடுமையாக எதிர்க்க முற்பட்ட நிலையில், மத்திய அரசு அந்த அவசரச்சட்டங்களை அதே வடிவில் மசோதாக்களாகக் கொணர்ந்து நிறைவேற்ற இயலாத ஒரு நெருக்கடியை எதிர்கொண்டது. இதில் மத்திய அரசு சற்றே பின்வாங்கி இந்த அவசரச்சட்டங்களின் ஆட்சேபத்துக்குரிய முக்கிய ஷரத்துக்களில் மாற்றம் கொண்டு வரச் சம்மதித்தது.
இதன் காரணமாகக் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒரு சிறிய வெற்றி கிடைத்துள்ளது. இது ஒருவகையில் இந்திய ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியும் கூட.
எனினும், இந்தப் பிரச்னையின் மற்றொரு முக்கிய அம்சம் மத்திய - மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டது. நம் நாட்டின் அரசமைப்பு முறைக்குக் கூட்டாட்சி என்று பெயரிடப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது வெறும் கோஷமாகவே நின்று விட்டது.
மத்திய அரசில் தனிக்கட்சி ஆட்சி என்பது கடந்த சில பொதுத்தேர்தல்களாகவே விடைபெற்றுக் கொண்டு விட்டது. ஒரு வலுவான தேசியக் கட்சி சில - பல மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைத்துத்தான் ஆட்சி நடத்த முடியும் என்றாகி உள்ளது. இந்த நிலை எதிர்காலத்திலும் நீடிக்கவே செய்யும் என்பதே எதார்த்தம்.
ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசு, மாநிலங்களின் உரிமைகளை மதித்து நடக்கிற கூட்டாட்சிக் கோட்பாட்டை மட்டுமன்றி, ஆட்சியில் பங்காளிகளாக உள்ள கட்சிகளை மதிக்கிற கூட்டணி தர்மத்தைக் கூடக் கடைப்பிடிக்க மறுத்து வந்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக - 2009 பொதுத் தேர்தலுக்குப் பின் - பதவியேற்றவுடன் மேற்கொண்ட முதல் நடவடிக்கையான பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராக, திமுகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான டி.ஆர். பாலுவே குரல் எழுப்ப நேரிட்டது. இந்த முடிவை மத்திய அரசு கூட்டணிக்கட்சிகளைக் கூடக் கலந்தாலோசிக்காமல் எடுத்தது, கூட்டணி தர்மத்தை மீறுகிற இத்தகைய நடைமுறையை அனுமதிக்க முடியாது என்பதுதான் திமுக தரப்பில் ஒலிக்கப்பட்ட கம்பீரமான பிரகடனம். ஆனால், இதன் கம்பீரமும், வலிமையும், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா சென்னைக்குப் புனிதப்பணயம் மேற்கொண்டு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதியைச் சந்தித்த உடனேயே தொலைந்து போனது.
இப்போது, கரும்புக்கு விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் உள்ளடக்கம், மாநில அரசுகளை மதிக்கவில்லை என்று சொன்னால் அது பாதி உண்மைதான். மத்திய அரசு நிர்ணயித்து வந்துள்ள சட்டரீதியான குறைந்தபட்ச விலைக்குக் கூடுதலாக, மாநில அரசுகள் அறிவித்து வந்துள்ள மாநில அரசு பரிந்துரைத்த விலையை சர்க்கரை ஆலை அதிபர்கள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டியதில்லை என்று சட்டமியற்ற முற்பட்ட மத்திய அரசின் நடவடிக்கை, மாநில அரசுகளை இழிவுபடுத்துவதாகவே அமைந்தது என்பதுதான் முழு உண்மை.
மத்திய அரசு நிர்ணயிக்கிற விலையை நியாயமான-கட்டுபடியாகும் விலை என்று பெயர் மாற்றம் செய்து, அதற்குக் கூடுதலாக மாநில அரசு கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யுமானால், அதனால் நேரிடக்கூடிய சர்க்கரை விலை உயர்வின் சுமையை மாநில அரசுகள்தான் தாங்க வேண்டும் என்று விதித்தது இந்த அவசரச்சட்டம். பொது விநியோகத்திற்காகக் கட்டாயமாகத் தர வேண்டிய சர்க்கரைக்காக ஆலை முதலாளிகள் ரூ.15,000 கோடி வரை நிலுவைத் தொகையை வசூலித்துக் கொள்ளவும் அது வகை செய்தது. இப்போது இந்த 15,000 கோடி ரூபாயை வட்டச் செலவு கணக்கு எழுதித் தள்ளுபடி செய்ய சர்க்கரை முதலாளிகளுக்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கரும்பு விலை நிர்ணய ஏற்பாட்டில், மாநில அரசுகளுக்கு எந்தப்பங்கும், உரிமையும், அதிகாரமும் இல்லை என்பதைச் சட்டமாக்க மத்திய கூட்டணி அரசு முடிவெடுக்க முற்பட்டது, தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு போன்றவற்றில், காங்கிரசல்லாத கூட்டணிக்கட்சிகளின் அமைச்சர்கள் சிலர் இடம் பெற்றிருந்தாலும், கூட்டணிக்குத் தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி தானடித்த மூப்பாக முடிவுகளைத் திணித்துச் செயல்படுத்தி வருகிற நடைமுறையையே இந்த நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
மத்திய அரசின் இந்தப் போக்கு, தமிழ்நாட்டில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியது. அதனாலேயே அவர்கள் தங்களின் மவுன வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எதிர்ப்பை பகிரங்கமாகக் காட்ட வேண்டியதாயிற்று.
இதைத் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் கடல்சார் மீன்வளம் (முறைப்படுத்தல் மற்றும் நிர்வாகம்) நகல் சட்டம் வெளியிடப்பட்டுள்ள நடைமுறை கண்டனத்துக்குரியது. இந்த நகல் சட்டம் குறித்து ஏற்கெனவே மாநில அரசு அதன் கருத்துகளைத் தெரிவித்திருந்தும் அவை இதில் சேர்க்கப்படவில்லை என்று தமிழக முதலமைச்சர் மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளது வெறும் முறையீடு அல்ல; கடும் குற்றச்சாட்டே ஆகும்.
மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சட்டமுன்வடிவு அப்படியே தாக்கல் செய்யப்படுமானால், அது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு புயலையே எழுப்பும்.
மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகார வரம்புக்கு மட்டுமே உள்ளடங்கிய விஷயங்களாகவே இருந்தாலும், அவற்றின் மீது மாநில அரசுகளோடு முன்கூட்டியே கலந்தாய்வு நடத்துவதுதான், கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு ஒத்திசைவான நடைமுறையாக அமையும். ஆனால், மாநில அரசுகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் உள்ள பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் குறித்தே மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து சட்டமியற்ற முற்பட்டிருப்பது அரசியல் சட்டம் சார்ந்த ஒரு நெருக்கடியையே உருவாக்கும்.
மத்தியில் அமையும் கூட்டணி ஆட்சியில் சிறிய - பெரிய மாநிலக் கட்சிகளுக்குப் பங்கும் வாய்ப்பும் கிடைத்து வந்துள்ள போதிலும், அது மட்டுமே கூட்டாட்சிக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் தொடர் முயற்சிகளுக்குத் தடைக்கல்லாக இல்லை. இது கவலைக்குரிய ஒரு போக்கு என்பதை ஆளுங்கூட்டணிக்கட்சிகள் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சிகளும் உணர்ந்து, புரிந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கூட்டாட்சிக் கோட்பாடு - மாநில சுயாட்சி தொடர்பான விவாதங்கள் கடந்த காலங்களில் அரசியல் சட்டப்பிரிவு 356 ஒன்றை மட்டுமே மையமாகக் கொண்டு எழுந்து வந்தன. சர்க்காரியா கமிஷன் பரிந்துரை, பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை காரணமாக, 356வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுகளை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கலைக்கிற மத்திய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை லகான் போட்டு இழுத்துப் பிடித்து வைக்க நேரிட்டுள்ளது. ஆனால், 356வது பிரிவைத் தாண்டியும், மத்திய- மாநில உறவுகள் சம்பந்தமான கடுமையான பிரச்னைகள் எழுந்து நிற்கின்றன. இவையும் ஒரு பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு வலு சேர்ப்பதற்கான ஆரோக்கியமான நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டியுள்ளன.
1983-ம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஷேக் அப்துல்லாவின் முயற்சியில் ஸ்ரீநகரில் நடைபெற்ற உச்சி மாநாடு, மத்திய - மாநில உறவுகள் மறுசீரமைக்கப்படுவதற்கான ஒரு நல்ல முயற்சியாக அமைந்தது. இந்த உச்சி மாநாட்டில் திமுக, தெலுங்கு தேசம், அகாலிதளம், குடியரசுக்கட்சி, அசாம் கண பரிஷத் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் பங்கேற்றன. இதற்கும் முன்பாக 1977-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மேற்கு வங்க இடதுசாரி முன்னணி அரசும் மத்திய-மாநில உறவுகள் தொடர்பாக ஒரு 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்திருந்தது.
ஸ்ரீநகர் உச்சி மாநாட்டுக்குப் பிறகு, முதலமைச்சர்கள் மாநாடுகள்,1990-ல் தேசிய முன்னணி அரசு நிறுவிய மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டங்கள், முழுமையாக நிறைவளிக்காவிட்டாலும் சில குறிப்பிடத்தக்க பரிந்துரைகளைச் செய்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை ஆகியவை, மத்திய-மாநில உறவுகள் தொடர்பான பல அடிப்படையான அம்சங்களை முன்நிறுத்திய மைல் கற்களாக அமைந்தன. இந்த வரிசையில் 2007 ஏப்ரல் மாதத்தில் நீதிபதி பூஞ்சி தலைமையில் அமைக்கப்பட்ட பூஞ்சி கமிஷனின் பணி இன்னும் நிறைவடைய வேண்டியுள்ளது. இந்தப்பணி முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், அதுவும் நூலக அலமாரியில் வைக்கப்படும் இன்னொரு புத்தகமாக ஆகி, அலங்காரப் பொருளாக நின்றுவிடும் சாத்தியக்கூறு இருக்கவே செய்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டுகளில், கைவிடப்பட்ட வரி வருவாய் என்பது, 2006-2007-ல் ரூ.2.39 லட்சம் கோடி, 2007-2008-ல் ரூ.2.78 லட்சம் கோடி, 2008-2009-ல் ரூ.4.18 லட்சம் கோடி என்று உயர்ந்து வந்துள்ளது. இது மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கூடிய மத்திய அரசின் வருவாயைச் சுருக்கும் என்பதால், மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய பங்கையும் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டத் தேவையில்லை.
இப்படி மாநிலங்களின் உரிமைகள், சட்டமியற்றும் அதிகாரம், நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்தும் ஒட்டு மொத்தத் தாக்குதலுக்கு இலக்காகி நிற்பது, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு உலை வைக்கும் கட்டத்தை நோக்கி நாடு நகர்த்தப்படுவதற்கான அடையாளமே. கூட்டணி ஆட்சியிலேயே கூட்டாட்சி இந்தப் பாடுபடுகிறது என்றால், மத்தியில் தனிக்கட்சி ஆட்சி தப்பித்தவறி வந்து விட்டால் என்ன ஆகுமோ ? ஜனநாயக சக்திகள் விழிப்போடு செயல்பட வேண்டிய தருணமிது.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்ட இரண்டு அவசரச்சட்டங்கள், நாட்டின் கரும்பு விவசாயிகளைக் கொதித்தெழச் செய்தன. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் இந்த அவசரச்சட்டங்களைக் கடுமையாக எதிர்க்க முற்பட்ட நிலையில், மத்திய அரசு அந்த அவசரச்சட்டங்களை அதே வடிவில் மசோதாக்களாகக் கொணர்ந்து நிறைவேற்ற இயலாத ஒரு நெருக்கடியை எதிர்கொண்டது. இதில் மத்திய அரசு சற்றே பின்வாங்கி இந்த அவசரச்சட்டங்களின் ஆட்சேபத்துக்குரிய முக்கிய ஷரத்துக்களில் மாற்றம் கொண்டு வரச் சம்மதித்தது.
இதன் காரணமாகக் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒரு சிறிய வெற்றி கிடைத்துள்ளது. இது ஒருவகையில் இந்திய ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியும் கூட.
எனினும், இந்தப் பிரச்னையின் மற்றொரு முக்கிய அம்சம் மத்திய - மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டது. நம் நாட்டின் அரசமைப்பு முறைக்குக் கூட்டாட்சி என்று பெயரிடப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது வெறும் கோஷமாகவே நின்று விட்டது.
மத்திய அரசில் தனிக்கட்சி ஆட்சி என்பது கடந்த சில பொதுத்தேர்தல்களாகவே விடைபெற்றுக் கொண்டு விட்டது. ஒரு வலுவான தேசியக் கட்சி சில - பல மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைத்துத்தான் ஆட்சி நடத்த முடியும் என்றாகி உள்ளது. இந்த நிலை எதிர்காலத்திலும் நீடிக்கவே செய்யும் என்பதே எதார்த்தம்.
ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசு, மாநிலங்களின் உரிமைகளை மதித்து நடக்கிற கூட்டாட்சிக் கோட்பாட்டை மட்டுமன்றி, ஆட்சியில் பங்காளிகளாக உள்ள கட்சிகளை மதிக்கிற கூட்டணி தர்மத்தைக் கூடக் கடைப்பிடிக்க மறுத்து வந்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக - 2009 பொதுத் தேர்தலுக்குப் பின் - பதவியேற்றவுடன் மேற்கொண்ட முதல் நடவடிக்கையான பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராக, திமுகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான டி.ஆர். பாலுவே குரல் எழுப்ப நேரிட்டது. இந்த முடிவை மத்திய அரசு கூட்டணிக்கட்சிகளைக் கூடக் கலந்தாலோசிக்காமல் எடுத்தது, கூட்டணி தர்மத்தை மீறுகிற இத்தகைய நடைமுறையை அனுமதிக்க முடியாது என்பதுதான் திமுக தரப்பில் ஒலிக்கப்பட்ட கம்பீரமான பிரகடனம். ஆனால், இதன் கம்பீரமும், வலிமையும், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா சென்னைக்குப் புனிதப்பணயம் மேற்கொண்டு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான கருணாநிதியைச் சந்தித்த உடனேயே தொலைந்து போனது.
இப்போது, கரும்புக்கு விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் உள்ளடக்கம், மாநில அரசுகளை மதிக்கவில்லை என்று சொன்னால் அது பாதி உண்மைதான். மத்திய அரசு நிர்ணயித்து வந்துள்ள சட்டரீதியான குறைந்தபட்ச விலைக்குக் கூடுதலாக, மாநில அரசுகள் அறிவித்து வந்துள்ள மாநில அரசு பரிந்துரைத்த விலையை சர்க்கரை ஆலை அதிபர்கள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டியதில்லை என்று சட்டமியற்ற முற்பட்ட மத்திய அரசின் நடவடிக்கை, மாநில அரசுகளை இழிவுபடுத்துவதாகவே அமைந்தது என்பதுதான் முழு உண்மை.
மத்திய அரசு நிர்ணயிக்கிற விலையை நியாயமான-கட்டுபடியாகும் விலை என்று பெயர் மாற்றம் செய்து, அதற்குக் கூடுதலாக மாநில அரசு கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யுமானால், அதனால் நேரிடக்கூடிய சர்க்கரை விலை உயர்வின் சுமையை மாநில அரசுகள்தான் தாங்க வேண்டும் என்று விதித்தது இந்த அவசரச்சட்டம். பொது விநியோகத்திற்காகக் கட்டாயமாகத் தர வேண்டிய சர்க்கரைக்காக ஆலை முதலாளிகள் ரூ.15,000 கோடி வரை நிலுவைத் தொகையை வசூலித்துக் கொள்ளவும் அது வகை செய்தது. இப்போது இந்த 15,000 கோடி ரூபாயை வட்டச் செலவு கணக்கு எழுதித் தள்ளுபடி செய்ய சர்க்கரை முதலாளிகளுக்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கரும்பு விலை நிர்ணய ஏற்பாட்டில், மாநில அரசுகளுக்கு எந்தப்பங்கும், உரிமையும், அதிகாரமும் இல்லை என்பதைச் சட்டமாக்க மத்திய கூட்டணி அரசு முடிவெடுக்க முற்பட்டது, தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு போன்றவற்றில், காங்கிரசல்லாத கூட்டணிக்கட்சிகளின் அமைச்சர்கள் சிலர் இடம் பெற்றிருந்தாலும், கூட்டணிக்குத் தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி தானடித்த மூப்பாக முடிவுகளைத் திணித்துச் செயல்படுத்தி வருகிற நடைமுறையையே இந்த நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
மத்திய அரசின் இந்தப் போக்கு, தமிழ்நாட்டில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியது. அதனாலேயே அவர்கள் தங்களின் மவுன வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எதிர்ப்பை பகிரங்கமாகக் காட்ட வேண்டியதாயிற்று.
இதைத் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் கடல்சார் மீன்வளம் (முறைப்படுத்தல் மற்றும் நிர்வாகம்) நகல் சட்டம் வெளியிடப்பட்டுள்ள நடைமுறை கண்டனத்துக்குரியது. இந்த நகல் சட்டம் குறித்து ஏற்கெனவே மாநில அரசு அதன் கருத்துகளைத் தெரிவித்திருந்தும் அவை இதில் சேர்க்கப்படவில்லை என்று தமிழக முதலமைச்சர் மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளது வெறும் முறையீடு அல்ல; கடும் குற்றச்சாட்டே ஆகும்.
மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சட்டமுன்வடிவு அப்படியே தாக்கல் செய்யப்படுமானால், அது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு புயலையே எழுப்பும்.
மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகார வரம்புக்கு மட்டுமே உள்ளடங்கிய விஷயங்களாகவே இருந்தாலும், அவற்றின் மீது மாநில அரசுகளோடு முன்கூட்டியே கலந்தாய்வு நடத்துவதுதான், கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு ஒத்திசைவான நடைமுறையாக அமையும். ஆனால், மாநில அரசுகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் உள்ள பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் குறித்தே மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து சட்டமியற்ற முற்பட்டிருப்பது அரசியல் சட்டம் சார்ந்த ஒரு நெருக்கடியையே உருவாக்கும்.
மத்தியில் அமையும் கூட்டணி ஆட்சியில் சிறிய - பெரிய மாநிலக் கட்சிகளுக்குப் பங்கும் வாய்ப்பும் கிடைத்து வந்துள்ள போதிலும், அது மட்டுமே கூட்டாட்சிக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் தொடர் முயற்சிகளுக்குத் தடைக்கல்லாக இல்லை. இது கவலைக்குரிய ஒரு போக்கு என்பதை ஆளுங்கூட்டணிக்கட்சிகள் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சிகளும் உணர்ந்து, புரிந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கூட்டாட்சிக் கோட்பாடு - மாநில சுயாட்சி தொடர்பான விவாதங்கள் கடந்த காலங்களில் அரசியல் சட்டப்பிரிவு 356 ஒன்றை மட்டுமே மையமாகக் கொண்டு எழுந்து வந்தன. சர்க்காரியா கமிஷன் பரிந்துரை, பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை காரணமாக, 356வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுகளை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கலைக்கிற மத்திய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை லகான் போட்டு இழுத்துப் பிடித்து வைக்க நேரிட்டுள்ளது. ஆனால், 356வது பிரிவைத் தாண்டியும், மத்திய- மாநில உறவுகள் சம்பந்தமான கடுமையான பிரச்னைகள் எழுந்து நிற்கின்றன. இவையும் ஒரு பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு வலு சேர்ப்பதற்கான ஆரோக்கியமான நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டியுள்ளன.
1983-ம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஷேக் அப்துல்லாவின் முயற்சியில் ஸ்ரீநகரில் நடைபெற்ற உச்சி மாநாடு, மத்திய - மாநில உறவுகள் மறுசீரமைக்கப்படுவதற்கான ஒரு நல்ல முயற்சியாக அமைந்தது. இந்த உச்சி மாநாட்டில் திமுக, தெலுங்கு தேசம், அகாலிதளம், குடியரசுக்கட்சி, அசாம் கண பரிஷத் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் பங்கேற்றன. இதற்கும் முன்பாக 1977-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மேற்கு வங்க இடதுசாரி முன்னணி அரசும் மத்திய-மாநில உறவுகள் தொடர்பாக ஒரு 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்திருந்தது.
ஸ்ரீநகர் உச்சி மாநாட்டுக்குப் பிறகு, முதலமைச்சர்கள் மாநாடுகள்,1990-ல் தேசிய முன்னணி அரசு நிறுவிய மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டங்கள், முழுமையாக நிறைவளிக்காவிட்டாலும் சில குறிப்பிடத்தக்க பரிந்துரைகளைச் செய்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை ஆகியவை, மத்திய-மாநில உறவுகள் தொடர்பான பல அடிப்படையான அம்சங்களை முன்நிறுத்திய மைல் கற்களாக அமைந்தன. இந்த வரிசையில் 2007 ஏப்ரல் மாதத்தில் நீதிபதி பூஞ்சி தலைமையில் அமைக்கப்பட்ட பூஞ்சி கமிஷனின் பணி இன்னும் நிறைவடைய வேண்டியுள்ளது. இந்தப்பணி முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், அதுவும் நூலக அலமாரியில் வைக்கப்படும் இன்னொரு புத்தகமாக ஆகி, அலங்காரப் பொருளாக நின்றுவிடும் சாத்தியக்கூறு இருக்கவே செய்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டுகளில், கைவிடப்பட்ட வரி வருவாய் என்பது, 2006-2007-ல் ரூ.2.39 லட்சம் கோடி, 2007-2008-ல் ரூ.2.78 லட்சம் கோடி, 2008-2009-ல் ரூ.4.18 லட்சம் கோடி என்று உயர்ந்து வந்துள்ளது. இது மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கூடிய மத்திய அரசின் வருவாயைச் சுருக்கும் என்பதால், மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய பங்கையும் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டத் தேவையில்லை.
இப்படி மாநிலங்களின் உரிமைகள், சட்டமியற்றும் அதிகாரம், நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்தும் ஒட்டு மொத்தத் தாக்குதலுக்கு இலக்காகி நிற்பது, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு உலை வைக்கும் கட்டத்தை நோக்கி நாடு நகர்த்தப்படுவதற்கான அடையாளமே. கூட்டணி ஆட்சியிலேயே கூட்டாட்சி இந்தப் பாடுபடுகிறது என்றால், மத்தியில் தனிக்கட்சி ஆட்சி தப்பித்தவறி வந்து விட்டால் என்ன ஆகுமோ ? ஜனநாயக சக்திகள் விழிப்போடு செயல்பட வேண்டிய தருணமிது.
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி
Labels:
இந்தியாஅரசு,
கட்டுரை,
காங்கிரஸ்
Wednesday, November 18, 2009
பதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்-பழ . நெடுமாறன்
முல்லைப்பெரியாறு அணை நீர்ப் பிரச்னையில் மீண்டும் கேரளம் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது. தமிழகம் மறுபடியும் மறுபடியும் வஞ்சிக்கப்பட்டுவிட்டது.
1979-ம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம், தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது.
பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீரைக் கொண்டு சென்று மின்உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக அணை பலவீனமாக இருப்பதாகக் கூக்குரல் எழுப்பியது.
இதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அணையைப் பார்வையிட்டு, பெரியாறு அணை பலமாக இருந்தாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படியும், தமிழக அரசு தனது செலவில் அணையை மேலும் பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படியும், இந்தப் பணிகள் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறினார். அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
அணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழகம் மேற்கொள்வதற்கு, கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டது. 1980-ல் தொடங்கிய இந்தப் பணிகள் 2001-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக நடைபெற்றன. மராமத்து வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்குக் கேரளம் சம்மதிக்கவில்லை. எனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 2001-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டபோது, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.
இக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும், 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டில் தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் கடத்துகிற தந்திரத்தைக் கேரளம் கையாண்டது. இதன் விளைவாக 5 ஆண்டுகள் கடந்தன. இது கேரளத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.
இறுதியாக 2006 பிப்ரவரி 27-ம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது. ஆனால் இத் தீர்ப்பை செயல்படுத்தவிடாத வகையில் கேரளம் 17-3-2006 அன்று சட்டமன்றத்தில் நதிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு கொடுத்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதன் பின்னர் கேரளம் புதிய தந்திரத்தைக் கையாண்டது. புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் இருந்தார். 2007 மே மாதத்துக்குப் பிறகு இத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொறுப்பேற்றார். கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது ஆய்வு நடத்துவதற்குக் கேரளம் அனுமதி பெற்றுவிட்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும்.
கேரளத்தின் புதிய சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என்பதை உணர்ந்த கேரளம், விசாரணையின் இறுதிக் கட்டத்தில் புதிய பிரச்னையை வேண்டுமென்றே எழுப்பியது. பெரியாறு அணைப் பிரச்னையில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை அரசியல் சட்ட ஆயம்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. வழக்கு நடந்த மூன்றாண்டு காலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பாத கேரளம் விசாரணையின் முடிவுக் கட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பியதற்கே காலம் கடத்தும் நோக்கமே காரணமாகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை இப்போது அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ, மாற்றவோ அதிகாரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, கேரளத்தின் முயற்சியைத் தமிழகம் முறியடித்திருக்க வேண்டும். கேரளம் பிறப்பித்த புதிய சட்டம் குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிறகு தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று அதன் விளைவாக அரசியல் சட்ட ஆயம் அமைப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது. மூன்றாண்டுகாலமாக நடைபெற்ற விசாரணையை முடக்கிப் போட்டதன் மூலம் கேரளம் நான்காவது வெற்றியை அடைந்துவிட்டது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் முதல் அனைவரிடமும் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நமது நியாயத்தை எடுத்துக்கூறி ஆதரவு தருவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுமட்டுமல்ல. நமது எதிர்ப்பை பிரதமரிடமும் மற்றவர்களிடமும் பதிவு செய்ய தமிழக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது.
கடந்த 16-9-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணையமைச்சரைக் கண்டித்துக் கூட்டம் என்பது, பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது. பிறகு அந்தக் கூட்டத்தை நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை.
காங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்துக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.
முல்லைப்பெரியாறு கேரள மாநிலத்தில் ஓடும் நதியாகும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ஓடும் நதியல்ல என்ற தவறான வாதத்தை கேரளம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும், தமிழகத்தின் சார்பில் சரியான முறையில் அது மறுக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உள்ளது. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாற்றில் ஓடும் நீரின் மொத்த அளவு 4,767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒருபகுதி நீர், அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்துக்குள் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர் ஆகும். அதாவது தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாற்றில் கலக்கும் நீரில் சுமார் 8-ல் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். எட்டில் ஏழு பகுதி நீர் கேரளத்துக்கு நம்மால் வழங்கப்படுகிறது. எனவே பெரியாறு பன்மாநில நதியே தவிர, கேரள நதி அல்ல. இந்த உண்மைகளை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உணர்த்துவதற்குத் தமிழக அரசு அடியோடு தவறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்கு மட்டுமே கருணாநிதி கவலைப்படுகிறாரே தவிர பெரியாறு அணை நீர் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து அவர் கவலைப்படவில்லை.
காவிரிப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகளை வற்புறுத்தி நிலைநாட்டுவதைவிட மத்திய அரசுக்கு நல்லபிள்ளையாக நடந்துகொள்வதிலேயே கருணாநிதி முழு கவனம் செலுத்தியதால் நாம் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம்.
1970-ம் ஆண்டில் காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகள் பயன்தராத நிலையில், நடுவர் மன்றம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தது. பெங்களூரில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் துணைத் தேர்தலில் இரு காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. எனவே அதில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இந்திரா காங்கிரஸýக்கு இருந்தது.
அப்போது பிரதமர் இந்திரா, முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் காவிரிப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அன்று கருணாநிதி அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதன் விளைவு பின்னால் நமக்குப் பெரும் இழப்புகளைத் தந்தது. 1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸýடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இந்த உறவு வழிவகுத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால் இதற்குப் பிறகு கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸின் சார்பில் முதலமைச்சரான தேவராஜ் அர்ஸ், காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் சட்டவிரோதமாகவும், தமிழகத்தின் சம்மதமின்றியும் அணைகளைக் கட்டத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைக்க முன்வந்தார். இடைக்காலத்தில் 19 ஆண்டுகளில் அவ்வளவு அணைகளையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. அதன் விளைவாக தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அறவே தடைப்பட்டுப்போனது.
நடுவர் மன்றத்தின் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி, நீதி தவறாதவர் என்ற பெயரெடுத்தவர். அவர் காவிரிப் பாசன பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். எனவே அவரது தீர்ப்பு தங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பதை உணர்ந்த கர்நாடக அரசியல்வாதிகள் அவரை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவ கௌடா, சித்ததோஷ் முகர்ஜி மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொய்யான புகாரைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது, சில கோயில்களில் அவர்களுக்குப் பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு விலையுயர்ந்த பரிசுகளை இவர்கள் பெற்றிருப்பதால் நடுநிலை தவறிவிட்டார்கள் என தேவ கௌடா குற்றம் சாட்டினார். பிறகு அவரே கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். அப்போதும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அந்த வேளையில் தேவ கௌடாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு எதிரான நிலையை எடுத்து வைக்கத் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முன்வரவில்லை.
காவிரிப் பிரச்னையில் தொடக்கம் முதல் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தேவ கௌடாவை மத்தியில் பிரதமராக்கவும் தி.மு.க. துணைநின்றது என்பதுதான் துரோகத்தின் உச்சகட்டமாகும். தேவ கௌடா பிரதமரான பிறகும்கூட நடுவர் மன்றத் தலைவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்களோ சித்ததோஷ் முகர்ஜி மீது சுமத்தப்பட்ட பழியைப் போக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் மனம் நொந்து தனது பதவியிலிருந்து விலகினார். கர்நாடகத்தின் நோக்கம் வெற்றிபெற்றது. இதற்குக் கருணாநிதி துணைநின்றார் என்பதுதான் வரலாற்றுச் சோகமாகும்.
காவிரிப் பிரச்னையில் துரோகம் தொடர்ந்தது. நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் வற்புறுத்தத் தவறிவிட்டது. 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தைப் பெற்று இறுதி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 30-5-97-ல் மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை தீட்டி மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியது. இந்த வரைவுத் திட்டத்தின்படி முழுமையான அதிகாரம் கொண்ட நதி நீர் ஆணையம் ஏற்படுத்துவதற்கான யோசனை கூறப்பட்டது. இதையும் கர்நாடகம் ஏற்காமல் வழக்கில் வாய்தா வாங்கியபடியே இருந்தது. இதற்கிடையில் தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். பிரதமர் வாஜ்பாய் 6-8-98 அன்று கூட்டிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் புதிய வரைவுத் திட்டம் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. இதில் காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தும் யோசனை கைவிடப்பட்டு பிரதமர் தலைமையிலான மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்ற யோசனை கூறப்பட்டிருந்தது. எந்த அதிகாரமில்லாத இந்தக் குழு அமைக்கும் யோசனையை கருணாநிதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார். இதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் தலைமையிலான முதலமைச்சர் குழுவும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் கூறியதற்காக அவரது யோசனையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டதுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தில்லியின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடுவதைக் கருணாநிதி மற்ற பிரச்னைகளிலும் தொடர்ந்தார். ஒகேனக்கல் பிரச்னை அவ்வாறுதான் ஆனது.
1998-ம் ஆண்டில் தமிழக கர்நாடக அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பெங்களூர் குடிநீர்த் திட்டத்துக்கும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் என்பதால் எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் தமிழகம் ஜப்பானிய அரசின் உதவியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ததால் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆயிற்று. இத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியபோது கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, ஒகேனக்கல்லுக்கே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த வேளையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நலன் கருதி, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க கருணாநிதி தயங்கவில்லை.
“”கர்நாடகத்தில் இன்று நடந்திடும் ஆளுநர் ஆட்சி முடிவுற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலரும் வரை அவசியம் கருதி பொறுத்திருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்ற அசையாத நம்பிக்கையோடு இப்போது தாற்காலிகமாக அமைதி காப்போம்’’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதைக் கண்டித்தன. மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் ஓர் உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்று சொன்னார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தைத் தள்ளி வைக்க கருணாநிதி முன்வந்தபோதிலும் காங்கிரஸ் அங்கு வெற்றிபெறவில்லை. பா.ஜ.க.தான் வெற்றிபெற்றது. ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதான் மிச்சம்.
தில்லியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கட்சிகளின் நலன்களைக் காக்க தமிழகத்தின் நலன்களைக் காவு கொடுக்க கருணாநிதி ஒருபோதும் தயங்கமாட்டார் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் உண்டு.
2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள், கட்சி வேறுபாடின்றி போராட்டங்களை நடத்தினார்கள். மக்களின் கொதிப்புணர்வைச் சமாளிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 15 நாள்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதியே முன்மொழிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் இந்திய அரசை மட்டுமல்ல, சிங்கள அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்தத் தீர்மானத்தை வரவேற்றனர். இலங்கையில் போர் முனையில் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் இவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியிலிருந்து விரைந்து வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சு, தனக்குத் திருப்தி அளித்ததாக கருணாநிதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியோ போர் நிறுத்தம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் கருணாநிதிக்கு திருப்தி அளித்த அம்சம் எது? அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு; இதில் நானாகத் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே மீண்டும் அனைத்துக்கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து எங்கள் முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வந்தவரோ தில்லி அதிகாரபீடத்தின் தூதுவராயிற்றே. அவரையும் அவர் மூலம் தில்லி அதிகாரபீடத்தையும் திருப்திப்படுத்துவதுதானே கருணாநிதியின் நோக்கமும் கடமையும். எனவே உலகத் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதவி பேரத்தில் தமிழக உரிமைகள் பாழாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கட்டுரையாளர் : பழ . நெடுமாறன்
நன்றி : தினமணி
1979-ம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம், தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது.
பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீரைக் கொண்டு சென்று மின்உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக அணை பலவீனமாக இருப்பதாகக் கூக்குரல் எழுப்பியது.
இதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அணையைப் பார்வையிட்டு, பெரியாறு அணை பலமாக இருந்தாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படியும், தமிழக அரசு தனது செலவில் அணையை மேலும் பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படியும், இந்தப் பணிகள் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறினார். அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
அணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழகம் மேற்கொள்வதற்கு, கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டது. 1980-ல் தொடங்கிய இந்தப் பணிகள் 2001-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக நடைபெற்றன. மராமத்து வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்குக் கேரளம் சம்மதிக்கவில்லை. எனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 2001-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டபோது, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.
இக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும், 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டில் தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் கடத்துகிற தந்திரத்தைக் கேரளம் கையாண்டது. இதன் விளைவாக 5 ஆண்டுகள் கடந்தன. இது கேரளத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.
இறுதியாக 2006 பிப்ரவரி 27-ம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது. ஆனால் இத் தீர்ப்பை செயல்படுத்தவிடாத வகையில் கேரளம் 17-3-2006 அன்று சட்டமன்றத்தில் நதிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு கொடுத்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதன் பின்னர் கேரளம் புதிய தந்திரத்தைக் கையாண்டது. புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் இருந்தார். 2007 மே மாதத்துக்குப் பிறகு இத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொறுப்பேற்றார். கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது ஆய்வு நடத்துவதற்குக் கேரளம் அனுமதி பெற்றுவிட்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும்.
கேரளத்தின் புதிய சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என்பதை உணர்ந்த கேரளம், விசாரணையின் இறுதிக் கட்டத்தில் புதிய பிரச்னையை வேண்டுமென்றே எழுப்பியது. பெரியாறு அணைப் பிரச்னையில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை அரசியல் சட்ட ஆயம்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. வழக்கு நடந்த மூன்றாண்டு காலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பாத கேரளம் விசாரணையின் முடிவுக் கட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பியதற்கே காலம் கடத்தும் நோக்கமே காரணமாகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை இப்போது அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ, மாற்றவோ அதிகாரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, கேரளத்தின் முயற்சியைத் தமிழகம் முறியடித்திருக்க வேண்டும். கேரளம் பிறப்பித்த புதிய சட்டம் குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிறகு தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று அதன் விளைவாக அரசியல் சட்ட ஆயம் அமைப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது. மூன்றாண்டுகாலமாக நடைபெற்ற விசாரணையை முடக்கிப் போட்டதன் மூலம் கேரளம் நான்காவது வெற்றியை அடைந்துவிட்டது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் முதல் அனைவரிடமும் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நமது நியாயத்தை எடுத்துக்கூறி ஆதரவு தருவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுமட்டுமல்ல. நமது எதிர்ப்பை பிரதமரிடமும் மற்றவர்களிடமும் பதிவு செய்ய தமிழக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது.
கடந்த 16-9-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணையமைச்சரைக் கண்டித்துக் கூட்டம் என்பது, பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது. பிறகு அந்தக் கூட்டத்தை நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை.
காங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்துக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.
முல்லைப்பெரியாறு கேரள மாநிலத்தில் ஓடும் நதியாகும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ஓடும் நதியல்ல என்ற தவறான வாதத்தை கேரளம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும், தமிழகத்தின் சார்பில் சரியான முறையில் அது மறுக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உள்ளது. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாற்றில் ஓடும் நீரின் மொத்த அளவு 4,767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒருபகுதி நீர், அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்துக்குள் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர் ஆகும். அதாவது தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாற்றில் கலக்கும் நீரில் சுமார் 8-ல் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். எட்டில் ஏழு பகுதி நீர் கேரளத்துக்கு நம்மால் வழங்கப்படுகிறது. எனவே பெரியாறு பன்மாநில நதியே தவிர, கேரள நதி அல்ல. இந்த உண்மைகளை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உணர்த்துவதற்குத் தமிழக அரசு அடியோடு தவறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்கு மட்டுமே கருணாநிதி கவலைப்படுகிறாரே தவிர பெரியாறு அணை நீர் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து அவர் கவலைப்படவில்லை.
காவிரிப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகளை வற்புறுத்தி நிலைநாட்டுவதைவிட மத்திய அரசுக்கு நல்லபிள்ளையாக நடந்துகொள்வதிலேயே கருணாநிதி முழு கவனம் செலுத்தியதால் நாம் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம்.
1970-ம் ஆண்டில் காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகள் பயன்தராத நிலையில், நடுவர் மன்றம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தது. பெங்களூரில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் துணைத் தேர்தலில் இரு காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. எனவே அதில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இந்திரா காங்கிரஸýக்கு இருந்தது.
அப்போது பிரதமர் இந்திரா, முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் காவிரிப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அன்று கருணாநிதி அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதன் விளைவு பின்னால் நமக்குப் பெரும் இழப்புகளைத் தந்தது. 1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸýடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இந்த உறவு வழிவகுத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால் இதற்குப் பிறகு கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸின் சார்பில் முதலமைச்சரான தேவராஜ் அர்ஸ், காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் சட்டவிரோதமாகவும், தமிழகத்தின் சம்மதமின்றியும் அணைகளைக் கட்டத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைக்க முன்வந்தார். இடைக்காலத்தில் 19 ஆண்டுகளில் அவ்வளவு அணைகளையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. அதன் விளைவாக தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அறவே தடைப்பட்டுப்போனது.
நடுவர் மன்றத்தின் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி, நீதி தவறாதவர் என்ற பெயரெடுத்தவர். அவர் காவிரிப் பாசன பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். எனவே அவரது தீர்ப்பு தங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பதை உணர்ந்த கர்நாடக அரசியல்வாதிகள் அவரை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவ கௌடா, சித்ததோஷ் முகர்ஜி மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொய்யான புகாரைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது, சில கோயில்களில் அவர்களுக்குப் பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு விலையுயர்ந்த பரிசுகளை இவர்கள் பெற்றிருப்பதால் நடுநிலை தவறிவிட்டார்கள் என தேவ கௌடா குற்றம் சாட்டினார். பிறகு அவரே கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். அப்போதும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அந்த வேளையில் தேவ கௌடாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு எதிரான நிலையை எடுத்து வைக்கத் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முன்வரவில்லை.
காவிரிப் பிரச்னையில் தொடக்கம் முதல் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தேவ கௌடாவை மத்தியில் பிரதமராக்கவும் தி.மு.க. துணைநின்றது என்பதுதான் துரோகத்தின் உச்சகட்டமாகும். தேவ கௌடா பிரதமரான பிறகும்கூட நடுவர் மன்றத் தலைவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்களோ சித்ததோஷ் முகர்ஜி மீது சுமத்தப்பட்ட பழியைப் போக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் மனம் நொந்து தனது பதவியிலிருந்து விலகினார். கர்நாடகத்தின் நோக்கம் வெற்றிபெற்றது. இதற்குக் கருணாநிதி துணைநின்றார் என்பதுதான் வரலாற்றுச் சோகமாகும்.
காவிரிப் பிரச்னையில் துரோகம் தொடர்ந்தது. நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் வற்புறுத்தத் தவறிவிட்டது. 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தைப் பெற்று இறுதி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 30-5-97-ல் மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை தீட்டி மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியது. இந்த வரைவுத் திட்டத்தின்படி முழுமையான அதிகாரம் கொண்ட நதி நீர் ஆணையம் ஏற்படுத்துவதற்கான யோசனை கூறப்பட்டது. இதையும் கர்நாடகம் ஏற்காமல் வழக்கில் வாய்தா வாங்கியபடியே இருந்தது. இதற்கிடையில் தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். பிரதமர் வாஜ்பாய் 6-8-98 அன்று கூட்டிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் புதிய வரைவுத் திட்டம் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. இதில் காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தும் யோசனை கைவிடப்பட்டு பிரதமர் தலைமையிலான மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்ற யோசனை கூறப்பட்டிருந்தது. எந்த அதிகாரமில்லாத இந்தக் குழு அமைக்கும் யோசனையை கருணாநிதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார். இதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் தலைமையிலான முதலமைச்சர் குழுவும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் கூறியதற்காக அவரது யோசனையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டதுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
தில்லியின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடுவதைக் கருணாநிதி மற்ற பிரச்னைகளிலும் தொடர்ந்தார். ஒகேனக்கல் பிரச்னை அவ்வாறுதான் ஆனது.
1998-ம் ஆண்டில் தமிழக கர்நாடக அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பெங்களூர் குடிநீர்த் திட்டத்துக்கும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் என்பதால் எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் தமிழகம் ஜப்பானிய அரசின் உதவியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ததால் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆயிற்று. இத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியபோது கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, ஒகேனக்கல்லுக்கே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த வேளையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நலன் கருதி, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க கருணாநிதி தயங்கவில்லை.
“”கர்நாடகத்தில் இன்று நடந்திடும் ஆளுநர் ஆட்சி முடிவுற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலரும் வரை அவசியம் கருதி பொறுத்திருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்ற அசையாத நம்பிக்கையோடு இப்போது தாற்காலிகமாக அமைதி காப்போம்’’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதைக் கண்டித்தன. மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் ஓர் உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்று சொன்னார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தைத் தள்ளி வைக்க கருணாநிதி முன்வந்தபோதிலும் காங்கிரஸ் அங்கு வெற்றிபெறவில்லை. பா.ஜ.க.தான் வெற்றிபெற்றது. ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதான் மிச்சம்.
தில்லியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கட்சிகளின் நலன்களைக் காக்க தமிழகத்தின் நலன்களைக் காவு கொடுக்க கருணாநிதி ஒருபோதும் தயங்கமாட்டார் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் உண்டு.
2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள், கட்சி வேறுபாடின்றி போராட்டங்களை நடத்தினார்கள். மக்களின் கொதிப்புணர்வைச் சமாளிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 15 நாள்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதியே முன்மொழிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் இந்திய அரசை மட்டுமல்ல, சிங்கள அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்தத் தீர்மானத்தை வரவேற்றனர். இலங்கையில் போர் முனையில் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் இவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியிலிருந்து விரைந்து வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சு, தனக்குத் திருப்தி அளித்ததாக கருணாநிதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியோ போர் நிறுத்தம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் கருணாநிதிக்கு திருப்தி அளித்த அம்சம் எது? அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு; இதில் நானாகத் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே மீண்டும் அனைத்துக்கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து எங்கள் முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வந்தவரோ தில்லி அதிகாரபீடத்தின் தூதுவராயிற்றே. அவரையும் அவர் மூலம் தில்லி அதிகாரபீடத்தையும் திருப்திப்படுத்துவதுதானே கருணாநிதியின் நோக்கமும் கடமையும். எனவே உலகத் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதவி பேரத்தில் தமிழக உரிமைகள் பாழாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கட்டுரையாளர் : பழ . நெடுமாறன்
நன்றி : தினமணி
Tuesday, November 3, 2009
தலையங்கம்:இதுவல்ல கூட்டணி தர்மம்!
எந்த ஒரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் யார் ஆட்சியமைப்பது, எப்படி ஆட்சி அமைப்பது என்கிற குழப்பம் ஏற்படுவதும், ஓர் ஆட்சி பதவி ஏற்பதில் தாமதம் ஏற்படுவதும் ஏற்புடையது. ஆனால், தேர்தலுக்கு முன்பு அமைந்த கூட்டணியாகக்கூட அல்ல, கடந்த பத்து ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி மக்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகும், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசு இன்னும் பதவி ஏற்காமல் இருப்பதை நினைத்து ஆச்சரியப்படுவதா இல்லை இது என்ன கூட்டணி என்று எள்ளி நகையாடுவதா என்று தெரியவில்லை.
கடந்த 2004 சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இதே கூட்டணி ஒரு விசித்திரமான முடிவை எதிர்கொள்ள நேர்ந்தது. அதிக இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 69 இடங்களிலும், அதைவிடக் குறைந்த இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 70 இடங்களிலும் வெற்றி பெற்றபோது, நியாயமாக முதல்வர் பதவியைப் பெற்றிருக்க வேண்டிய தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வர் பதவியுடன் திருப்தி அடைந்து கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியது.
இன்னும் சற்றுப் பின்னோக்கிச் சென்று 1999 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், தேசியவாத காங்கிரஸ், தனது தாய்க் கட்சியுடனான மனமாச்சரியங்களை மறந்துவிட்டு, மதச்சார்பின்மை என்கிற ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டு கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்தது. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டும் சிவசேனையுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்திருந்தால், கடந்த பத்து ஆண்டுகள் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பற்றி கனவே கண்டிருக்க முடியாது.
1999-ல் ஏறத்தாழ சமீபத்திய சட்டப்பேரவை முடிவுகளைப் போலத்தான் முடிவுகள் அமைந்திருந்தன. அப்போது, துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதுடன், உள்துறை, நிதி மற்றும் மின்சாரம் ஆகிய முக்கிய துறைகளும் அந்தக் கட்சிக்குத் தரப்பட்டது. கடந்த 2004 தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைத்தபோதும் அதே நிலைமைதான் தொடர்ந்தது.
2009 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி வெளிவந்தபோது, காங்கிரஸ் கட்சியின் பலம் 82 ஆக உயர்ந்து, தேசியவாத காங்கிரஸ் 62 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. இதுதான் தருணம் என்று காங்கிரஸ் தனது "பெரிய அண்ணன்' தோரணையைக் காட்ட முற்பட்டிருப்பதுதான் பத்து நாள்கள் ஆகியும், தனிப்பெரும்பான்மை உறுதி செய்யப்பட்ட பிறகும் மகாராஷ்டிரத்தில் ஓர் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறியாகத் தொடர்கிறது.
தேசியவாத காங்கிரஸ் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. 1999-ல் இருந்த அதே நிலைமை ஏறத்தாழ இப்போதும் நிலவுவதால், தேவையில்லாத மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அது. உதவி முதல்வர் பதவியுடன் உள்துறைப் பொறுப்பும் எந்தக் காரணம் கொண்டும் பேரம் பேசப்படக்கூடாது என்பதுதான் அந்தக் கட்சியின் தரப்பு வாதம்.
ஆனால், காங்கிரஸ் தரப்பு, இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசியவாத காங்கிரûஸ மேலும் பலவீனப்படுத்துவது என்பதில்தான் குறியாக இருப்பதாகத் தெரிகிறது. சிவசேனை மற்றும் பாரதிய ஜனதாவுடன் எந்தக் காரணம் கொண்டும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்கிற தைரியம் காங்கிரஸ் தரப்புக்கு. மேலும், அடிப்படையில் மகாராஷ்டிரத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலோர், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவாரின் தலைமையை ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பவர்கள்.
தனது எதிரிகள் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதும், காங்கிரஸ் மேலிடமே தன்னை வேறு வழியில்லாமல்தான் சகித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அரசியல் சாணக்கியரான சரத்பவாருக்குத் தெரியாமலில்லை. அதனால்தான், அவர் எந்தவித பேச்சுவார்த்தையிலும் நேரிடையாகக் கலந்துகொள்ளாமல் தனது நம்பிக்கைக்குரிய சீடர்கள் மூலம் காயை நகர்த்தி வருகிறார்போலும்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சி விடுத்திருக்கும் இன்னொரு அஸ்திரம், உள்துறையை இரண்டாகப் பிரிப்பது என்பதும், 2004-ல் முதலமைச்சர் பதவிக்குப் பதிலாக அந்தக் கட்சிக்குக் காங்கிரஸ் அளித்த சுற்றுச்சூழல், தொழிலாளர் நலம் போன்ற துறைகளைத் திரும்பிப் பெறுவது என்பதும். தேசியவாத காங்கிரûஸ எவ்வளவு விரைவில் காங்கிரஸýடன் இணைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இணைத்துவிட வேண்டும் என்பதும் காங்கிரஸ் கட்சியின் திட்டம்.
முதல்வர் உள்பட, மகாராஷ்டிர அமைச்சரவையின் அதிகபட்ச அளவு 43 அமைச்சர்களாகத்தான் இருக்க முடியும். அதனால் தேசியவாத காங்கிரஸின் கோரிக்கை 21:21 என்ற விகிதத்தில் அமைச்சரவையைப் பிரித்துக் கொண்டு, 43-வது இடம் முதல்வருக்கு ஒதுக்குவது என்பதாக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, 23 : 20 என்ற விகிதத்தில் அமைச்சரவை அமைவதுடன் தனக்கு உள்துறையும் கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. விளைவு? முடிவுகள் வெளியாகிப் பத்து நாள்களாகியும் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி தொடர்கிறது.
எந்தவித சமரசமும் ஏற்படாத நிலையில், இனியும் பதவி ஏற்றுக்கொள்ளாமல் போனால் நகைப்புக்கு இடமாகிவிடும் என்பதால் முதல்வரும், துணை முதல்வரும் மட்டும் இன்று பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள். அமைச்சரவை பற்றிய முடிவுகள் இன்னும் எத்தனை நாள்கள் இழுத்தடிக்குமோ யாருக்குத் தெரியும்?
சரத்பவாரின் மருமகன் அஜித்பவார் ஏற்கெனவே அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு சுமார் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். "பெரிய அண்ணன்' போக்கில் காங்கிரஸ் தொடர்ந்து நடந்தால், தேவ கௌடா பாணியில் சரத்பவாரும் அஜீத்பவாரை ஒரு குமாரசாமி ஆக்கிவிடாமல் இருக்க வேண்டும்.
நன்றி : தினமணி
கடந்த 2004 சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இதே கூட்டணி ஒரு விசித்திரமான முடிவை எதிர்கொள்ள நேர்ந்தது. அதிக இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 69 இடங்களிலும், அதைவிடக் குறைந்த இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 70 இடங்களிலும் வெற்றி பெற்றபோது, நியாயமாக முதல்வர் பதவியைப் பெற்றிருக்க வேண்டிய தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வர் பதவியுடன் திருப்தி அடைந்து கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியது.
இன்னும் சற்றுப் பின்னோக்கிச் சென்று 1999 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், தேசியவாத காங்கிரஸ், தனது தாய்க் கட்சியுடனான மனமாச்சரியங்களை மறந்துவிட்டு, மதச்சார்பின்மை என்கிற ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டு கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்தது. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டும் சிவசேனையுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்திருந்தால், கடந்த பத்து ஆண்டுகள் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பற்றி கனவே கண்டிருக்க முடியாது.
1999-ல் ஏறத்தாழ சமீபத்திய சட்டப்பேரவை முடிவுகளைப் போலத்தான் முடிவுகள் அமைந்திருந்தன. அப்போது, துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதுடன், உள்துறை, நிதி மற்றும் மின்சாரம் ஆகிய முக்கிய துறைகளும் அந்தக் கட்சிக்குத் தரப்பட்டது. கடந்த 2004 தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைத்தபோதும் அதே நிலைமைதான் தொடர்ந்தது.
2009 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி வெளிவந்தபோது, காங்கிரஸ் கட்சியின் பலம் 82 ஆக உயர்ந்து, தேசியவாத காங்கிரஸ் 62 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. இதுதான் தருணம் என்று காங்கிரஸ் தனது "பெரிய அண்ணன்' தோரணையைக் காட்ட முற்பட்டிருப்பதுதான் பத்து நாள்கள் ஆகியும், தனிப்பெரும்பான்மை உறுதி செய்யப்பட்ட பிறகும் மகாராஷ்டிரத்தில் ஓர் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறியாகத் தொடர்கிறது.
தேசியவாத காங்கிரஸ் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. 1999-ல் இருந்த அதே நிலைமை ஏறத்தாழ இப்போதும் நிலவுவதால், தேவையில்லாத மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அது. உதவி முதல்வர் பதவியுடன் உள்துறைப் பொறுப்பும் எந்தக் காரணம் கொண்டும் பேரம் பேசப்படக்கூடாது என்பதுதான் அந்தக் கட்சியின் தரப்பு வாதம்.
ஆனால், காங்கிரஸ் தரப்பு, இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசியவாத காங்கிரûஸ மேலும் பலவீனப்படுத்துவது என்பதில்தான் குறியாக இருப்பதாகத் தெரிகிறது. சிவசேனை மற்றும் பாரதிய ஜனதாவுடன் எந்தக் காரணம் கொண்டும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்கிற தைரியம் காங்கிரஸ் தரப்புக்கு. மேலும், அடிப்படையில் மகாராஷ்டிரத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலோர், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவாரின் தலைமையை ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பவர்கள்.
தனது எதிரிகள் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதும், காங்கிரஸ் மேலிடமே தன்னை வேறு வழியில்லாமல்தான் சகித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அரசியல் சாணக்கியரான சரத்பவாருக்குத் தெரியாமலில்லை. அதனால்தான், அவர் எந்தவித பேச்சுவார்த்தையிலும் நேரிடையாகக் கலந்துகொள்ளாமல் தனது நம்பிக்கைக்குரிய சீடர்கள் மூலம் காயை நகர்த்தி வருகிறார்போலும்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சி விடுத்திருக்கும் இன்னொரு அஸ்திரம், உள்துறையை இரண்டாகப் பிரிப்பது என்பதும், 2004-ல் முதலமைச்சர் பதவிக்குப் பதிலாக அந்தக் கட்சிக்குக் காங்கிரஸ் அளித்த சுற்றுச்சூழல், தொழிலாளர் நலம் போன்ற துறைகளைத் திரும்பிப் பெறுவது என்பதும். தேசியவாத காங்கிரûஸ எவ்வளவு விரைவில் காங்கிரஸýடன் இணைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இணைத்துவிட வேண்டும் என்பதும் காங்கிரஸ் கட்சியின் திட்டம்.
முதல்வர் உள்பட, மகாராஷ்டிர அமைச்சரவையின் அதிகபட்ச அளவு 43 அமைச்சர்களாகத்தான் இருக்க முடியும். அதனால் தேசியவாத காங்கிரஸின் கோரிக்கை 21:21 என்ற விகிதத்தில் அமைச்சரவையைப் பிரித்துக் கொண்டு, 43-வது இடம் முதல்வருக்கு ஒதுக்குவது என்பதாக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, 23 : 20 என்ற விகிதத்தில் அமைச்சரவை அமைவதுடன் தனக்கு உள்துறையும் கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. விளைவு? முடிவுகள் வெளியாகிப் பத்து நாள்களாகியும் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி தொடர்கிறது.
எந்தவித சமரசமும் ஏற்படாத நிலையில், இனியும் பதவி ஏற்றுக்கொள்ளாமல் போனால் நகைப்புக்கு இடமாகிவிடும் என்பதால் முதல்வரும், துணை முதல்வரும் மட்டும் இன்று பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள். அமைச்சரவை பற்றிய முடிவுகள் இன்னும் எத்தனை நாள்கள் இழுத்தடிக்குமோ யாருக்குத் தெரியும்?
சரத்பவாரின் மருமகன் அஜித்பவார் ஏற்கெனவே அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு சுமார் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். "பெரிய அண்ணன்' போக்கில் காங்கிரஸ் தொடர்ந்து நடந்தால், தேவ கௌடா பாணியில் சரத்பவாரும் அஜீத்பவாரை ஒரு குமாரசாமி ஆக்கிவிடாமல் இருக்க வேண்டும்.
நன்றி : தினமணி
Subscribe to:
Posts (Atom)
