Showing posts with label நானோ. Show all posts
Showing posts with label நானோ. Show all posts

Monday, November 30, 2009

ஹைபிரிட் நானோ காரை அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டம்

ஹைபிரிட் நானோ காரை அறிமுகப் படுத்த டாடா குரூப் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டாடா மோட்டார் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த “நானோ” என்ற கார்களை தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. இந்த கார்கள் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வருகின்றன. மிக குறைந்த விலை என்பதால் இந்த கார்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், விற்கப் பட்ட நானோ கார்களில் சில தீப்பிடிப்பதாக தகவல்களும் வெளியாகியது.
இந்நிலையில், தென்கொரிய செய்தி நிறுவனத்திடம் போட்டியளித்துள்ள டாடா நிறுவன தலைமை அதிகாரி, விரைவில் உலகிலேயே குறைந்த விலை கொண்ட காரை அறிமுகப் படுத்த உள்ளதாகவும், இந்த கார் நானோ வகையை சேர்ந்ததாக இருக்கும் என்றும் இது நானோ காரை விட தொழில்நுட்பம் கொண்டதாக ஹைபிரிட் வெர்ஷனாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கார் எளிய விதத்தில் பயன்படுத்த கூடியதாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Tuesday, November 10, 2009

அவுட் சோர்ஸிங் முறையில் நானோ கார் உற்பத்தி

இந்தியாவின் மிக குறைந்த விலை கார் என்ற பெருமைக்குரியது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார். ஒரு லட்சம் ரூபாய் விலை கொண்ட இந்த காருக்காக, 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், ஒரு லட்சம் பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தான் தற்போது நானோ கார் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
நானோ காருக்காக, மேற்கு வங்கம் சிங்குரில் தான் முதலில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. ஆனால், உள்ளூரில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக, இந்த தொழிற்சாலை குஜராத் மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது. ஆனால், இன்னும் முழுமையாக ரெடியாக வில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் தொழிற்சாலை செயல்பட துவங்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், அதற்குள் ஒரு லட்சம் பேருக்கு நானோ காரை சப்ளை செய்ய முடியுமா என்பது கேள்விக்குரியாக உள்ளது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ரவி காந்த் லண்டனில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அங்கு அவர் கூறுகையில்,' ஆண்டுக்கு 10 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த சிறு தொழிற்சாலைகளுக்கு, நானோ காரை அசெம்பள் முறையில், மாற்று பெயரில் தயாரிக்க அனுமதி அளிக்கப்படுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என்று கூறினார். இது இந்திய கார் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட அவுட்சோர்ஸிங் முறையில் இப்பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
நன்றி : தினமலர்


Saturday, July 18, 2009

முதல் நானோ காரை மும்பைவாசி பெற்றார்

உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் முதல் நானோ கார், ஒரு மும்பைவாசி வாடிக்கையாளருக்கு நேற்று வழங்கப்பட்டது. அசோக் ரகுநாத் விகாரே என்ற மும்பைவாசிக்கு முதல் நானோ காரின் சாவியை நேற்று டாடா மோட்டார்ஸ் சேர்மன் ரத்தன் டாடா வழங்கினார். டாடா மோட்டார்ஸின் பெருமைமிகு காரான நானோ வை அதன் சேர்மன் ரத்தன் டாடாவிடமிருந்து பெற்றதில் அதிக மகிழ்ச்சி அடைந்ததாக ரகுநாத் தெரிவித்தார். நானோவின் சிறந்த வகை மாடலான நானோ எல்எக்ஸ் ( லூனார் சில்வர் ) காரை அவர் பெற்றார். இதன் மூலம், முதல் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நானோ காரை சப்ளை செய்யும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் மீதி பேருக்கு நானோ கார் சப்ளை செய்யப்பட்டு விடும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. முதல் காருக்கான சாவியை ரகுநாத்திடம் வழங்கி பேசிய ரத்தன் டாடா, அதிகம் புகையை கக்காத, நவீன வசதிகள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிற, ஓட்டுவதற்கு சுகமாக இருக்கிற, நகரங்களுக்கு ஏற்ற, சிறந்த கார் ஒன்றை ரகுநாத் பெற்றிருக்கிறார் என்றார். ரகுநாத்திற்கு அடுத்ததாக, இரண்டாவது நானோ காரை ஹெச்டிஎஃப்சி பேங்க் ஊழியரான ஆசிஸ் பாலகிருஷ்ணன் ( எல்எக்ஸ் - சன்ஷைன் யெல்லோ ) என்பவரும், மூன்றாவது காரை கோரஸ் இந்தியாவும் ( எல்எக்ஸ் - லூனார் சில்வர் ) பெற்றனர்.
நன்றி : தினமலர்


Friday, July 17, 2009

முதல் வாடிக்கையாளருக்கு இன்று நானோ கார் சப்ளை செய்யப்படுகிறது

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், அது தயாரித்த உலகின் மிக மலிவு விலை காரான நானோவை, அதன் முதல் வாடிக்கையாளருக்கு இன்று சப்ளை செய்கிறது. கடந்த வருடம் ஜனவரி மாதத்திலேயே புதுடில்லியில் நடந்த விழாவில் நானோ காரை டாடாவின் சேர்மன் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தி விட்டாலும், அதற்கான புக்கிங் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் துவங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் தொழிற்சாலை அமைப்பதற்காக டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியிருந்த விவசாய நிலத்தை, விவசாயிகளிடமே திருப்பி கொடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி, அதன் மூலம் தொழிற்சாலையை இயங்க விடாமல் தடுத்ததால் கார் தயாரிப்பு நின்றது. பின்னர் அங்குள்ள தொழிற்சாலை குஜராத்துக்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் அங்கு தயாரிப்பை துவக்கி, காரை வெளியே கொண்டு வர காலதாமதம் ஆகும் என்பதால், டாடா மோட்டார்ஸூக்கு உத்தரகான்ட் மாநிலத்தில் உள்ள பான்ட்நகரில் இருக்கும் தொழிற்சாலையில் இருந்து நானோ காரை தயாரித்து இப்போது சப்ளை செய்கிறது. நானோ காரை புக் செய்த முதல் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நானோ கார் ரூ.ஒரு லட்சம் விலையில் ( வரிகள் தனி ) கொடுக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Wednesday, June 24, 2009

டாடாவின் நானோ காரை பெறுவதற்காக 1.55 லட்சம் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பு

உலகின் மிக மலிவான கார் என்று சொல்லப்படும் டாடா மோட்டார்ஸின் நானோ காரை பெறுவதற்காக, 1.55 லட்சம் வாடிக்கையாளர்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு அடுத்த மாதத்தில் இருந்து நானோ சப்ளை செய்யப்படும். அடுத்த மாதத்தில் துவங்கும் சப்ளை, அடுத்த வருடம் மார்ச்சுக்குள் முடியும். அடுத்த கட்டமாக 55,021 பேருக்கு அதன்பின்னர் நானோ சப்ளை செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. டாடாவின் நானோவுக்காக மொத்தம் 2,06,703 பேர் புக் செய்திருந்தார்கள். அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டிய கார் தயாரிக்கப்பட்டு விட்டது என்றும், அவர்கள் மட்டும் நாங்கள் மார்ச் 23ம் தேதி அறிவித்த எக்ஸ் - ஷோரூம் விலையில் நானோவை பெறுவார்கள் என்றும் சொன்னார்கள்.
நன்றி : தினமலர்



Saturday, April 18, 2009

நானோ காருக்கான இதுவரை வந்த விண்ணப்பம் 5,00,000 : இதனால் டாடா மோட்டார்ஸூக்கு வந்தது ரூ.15 கோடி

உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் ' நானோ 'வை வாங்க விருப்பம் தெரிவித்து இதுவரை 5,00,000 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது என்றும், அதன் மூலம் டாடா மோட்டார்ஸூக்கு ரூ.15 கோடி ( ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.300 ) கிடைத்திருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. விண்ணப்பங்களை விற்க ஆரம்பித்து 15 நாட்களே ஆன நிலையில், இந்தளவுக்கு அதற்கு வரவேற்பு இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நானோ காருக்கான புக்கிங் கடந்த 9 ம் தேதி ஆரம்பமானது. வரும் 25ம் தேதி வரை புக்கிங் செய்யலாம் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்திருக்கிறது. நானோ காருக்காக கடன் வாங்கினால், வட்டி 10 சதவீதம்தான் ( பொதுவாக வட்டி 11.75 சதவீதம் வசூலிக்கப்படுகிறது ) என்று அறிவித்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டுமே இதுவரை ஒரு லட்சம் விண்ணப்பங்களை விற்றிருக்கிறது. மொத்தம் விற்பனை ஆன விண்ணப்பங்களில் ஐந்தில் ஒரு பங்கை ஸ்டேட் பேங்க்கே விற்பனை செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸின் உயர் அதிகாரி ஒருவர், இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. புக்கிங் 25ம் தேதி வரை இருப்பதால் அதன் பின்னரே மொத்தம் வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு என்பதை சொல்வோம். அதன் பின் அவைகள் எல்லாம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, 60 நாட்களுக்குள் ஒரு லட்சம் விண்ணப்ப தாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்றார். நாங்கள் ஏற்கனவே சொல்லியிருப்பதை போல, முதலில் ஒரு லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு, வரும் ஜூலை மாதத்தில் நானோ கார் சப்ளை செய்வது ஆரம்பமாகும் என்றார். நானோ காருக்கான விண்ணப்பங்களை ஸ்டேட் பேங்க், 850 க்கும் அதிகமான நகரங்களில் இருக்கும் அதன் 1,350 கிளைகளில் விற்பனை செய்கிறது. டாடா மோட்டார்ஸ் அதன் 30,000 அவுட்லெட்கள் மூலமாக விண்ணப்பங்களை விற்கிறது. இது தவிர நானோ காருக்காக டாடா மோட்டார்ஸூடன் ஒப்பந்தம் செய்திருக்கும் டாடா மோட்டார் பைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க்,மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவையும் விண்ணப்பங்களை விற்கின்றன. பொதுவாக வங்கிகளில், ஐந்து வருடங்களுக்கு மட்டுமே கார் லோன் கொடுக்கப்பட்டாலும், நானோ காருக்காக மட்டும் அது ஏழு வருட லோனாக மாற்றப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, April 7, 2009

நானோ காரை விட அதிக விலையுள்ள புல்லட் பைக்

டாடாவின் நானோ கார் ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதர வரிகள் எல்லாம் சேர்த்தால் ரூ.ஒரு லட்சத்தை விடவும் கொஞ்சம் அதிகம் வரும் என்று சொன்னாலும், அதன் எக்ஸ் ஃபேக்டரி விலை ரூ. ஒரு லட்சம் தான். ஆனால் அதைவிடவும் அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதில் ஒன்று ராயல் என்ஃபீல்ட்டின் புல்லட் மேசிஸ்மோ மாடல் பைக். இதன் இப்போதைய விலை ரூ.1,06,000.
நன்றி : தினமலர்


Monday, April 6, 2009

நானோ காரை விட அதிக விலையுள்ள நாய்

டாடாவின் நானோ கார் ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதர வரிகள் எல்லாம் சேர்த்தால் ரூ.ஒரு லட்சத்தை விடவும் கொஞ்சம் அதிகம் வரும் என்று சொன்னாலும், அதன் எக்ஸ் ஃபேக்டரி விலை ரூ. ஒரு லட்சம் தான். ஆனால் அதைவிடவும் அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதில் ஒன்று இந்த வகை நாய். ' பிரஞ்ச் மஸ்டிப் ' என்ற இந்த வகை நாய் குட்டிகளில் விலை சந்தையில் ரூ.1,16,000 க்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


Friday, April 3, 2009

மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது நானோ

டாடா கார் ஷோரூம்களில், நானோ காரின் விற்பனைக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. வரும் 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை நானோ கார் புக்கிங் நடைபெறும். டாடா நானோ கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்ய விண்ணப்பப் படிவங்கள், நாடு முழுவதும் உள்ள ஆயிரம் நகரங்களில், 30 ஆயிரம் இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள கன்கார்டு ஷோரூம் மற்றும் அண்ணா சாலையில் உள்ள வி.எஸ்.டி., ஷோரூம்களில் புக்கிங் செய்வதற்கு வசதியாக விண்ணப்பப் படிவங்கள் நேற்று வழங்கப்பட்டன. வரும் 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை புக்கிங் நடைபெறும். புக்கிங் செய்த வாடிக்கையாளர்களை குலுக்கல் மூலம் தேர்வு செய்து ஜூலை மாதம் முதல் கார்கள் டெலிவரி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஒரு லட்சம் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. சென்னையில் ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நானோ சி.எக்ஸ்.பி.எஸ். 3 என்ற மாடல் கார் விலை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்.
நானோ பி.எஸ். 3 கார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய். நானோ எல்.எக்ஸ்.பி.எஸ். 3 கார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காருக்கு 18 மாதம் அல்லது 24 ஆயிரம் கி.மீ., வரை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.6 கி.மீ., தூரம் கார் பயணிக்க வல்லது. அதிகபட்சமாக 105 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும். புதிய 2 சிலிண்டர் சக்தி வாய்ந்தது. 624 சி.சி., திறன் கொண்ட அலுமினியம் எம்.பி.எப்.ஐ., பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று மீட்டர் நீளத்தில் இன்ஜின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. வீல்கள் மூலைக்கு தள்ளப்பட்டு, ரூப் உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய கார்களை விட 21 சதவீதம் அதிக இடவசதியளிக்கும் படி நன்கு அகலமாக திகழ்கிறது. நானோ கார் புக்கிங் செய்ய முதல் விண்ணப்பத்தை சாயாதேவி பூர்த்தி செய்து கொடுத்து நிருபர்களிடம் கூறுகையில், ''நடுத்தர மக்களிடம் இந்த கார் நல்ல வரவேற்பு பெறும். மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் இந்த காரை சென்னை நகரில் பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என்றார்.
நன்றி : தினமலர்


Wednesday, April 1, 2009

சிங்கூரில் நானோ கார் தயாரிக்கப்படும் : மேற்கு வங்க அரசு அதிகாரி

டாடாவின் நானோ கார் விரைவில் சிங்கூரில் இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசின் முக்கிய தொழில்களுக்கான செயலாளர் சபாசாச்சி சென் கோலாலம்பூரில் தெரிவித்தார். கடந்த வருடத்தில்தான் டாடா மோட்டார்ஸ், சிங்கூரில் இருந்து தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்றியது. சிங்கூரில் தொழிற்சாலை அமைத்த டாடா மோட்டார்ஸ், அங்குள்ள திரினாமூல் காங்கிரஸ் கட்சியினரின் கடும் எதிர்ப்பால் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிற்சாலையை குஜராத்தில் உள்ள சனாட் என்ற இடத்திற்கு மாற்றியது. இருந்தாலும் அவர்கள் அமைத்த தொழிற்சாலை சிங்கூரில் அப்படியே தான் இருக்கிறது. அங்கு கார் தயாரிப்பு வேலைகள் எதுவும் நடக்கவில்லை. அவ்வளவுதான். இந்நிலையில் மலேஷிய தலைநகர் சென்றிருக்கும் மேற்கு வங்க அரசின் முக்கிய தொழில்களுக்கான துறை செயலர் சென், நாங்கள் டாடாவின் முதல் தரமான நானோ தொழிற்சாலையை இழந்து விட்டோம். விரைவில் சிங்கூர் தொழிற்சாலையில் இருந்து அந்த கார் தயாரிக்கப்படும். ஏனென்றால் உலகின் மிக மலிவு விலை காருக்கு நான்கு முதல் ஐந்து தொழிற்சாலைகள் வரை தேவைப்படும் என்றார். இருந்தாலும் எப்போது இது நடக்கும் என்று சொல்லவில்லை. அவர் மேலும் தெரிவித்தபோது, மற்ற கம்பெனியினர் குறைந்த விலையில் சிறிய காரை அறிமுகப்படுத்தும் முன் நாம் அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் விரும்பியது. தாமதம் ஆகக்கூடாது என்று நினைத்தனர். இருந்தாலும் சிங்கூரில் நடந்த பிரச்னையை அவர்கள் மென்மையாகத்தான் கையாண்டார்கள். டாடாவுக்கு உலக அளவில் நல்ல மதிப்பு இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


Monday, March 30, 2009

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் டாடா மோட்டார்ஸ் உடன்பாடு

டாடா மோட்டார்ஸின் வாகனங்களுக்கு கடன் கொடுப்பதற்காக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கும் டாடா மோட்டார்ஸூக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனை டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 1,450 கிளைகளிலும், டாடா மோட்டார்ஸின் 470 விற்பனை நிலையங்களிலும் இந்த வங்கி மூலம் வாடன கடன் பெற முடியும். டாடாவின் மலிவு விலை காரான நானோவை புக் செய்வதற்கும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அங்கீகாரம் பெற்றிருக்கிறது. காரின் விலையில் ( ஆன் ரோடு ) 90 சதவீதம் வரை கடனான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கொடுக்கிறது. அதிக பட்சமாக ஆறு வருடங்கள் வரை திருப்பி செலுத்தும் வசதியுடன் வாகன கடன் பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி : தினமலர்


Saturday, March 28, 2009

மாதம் 6,250 ரூபாய் சம்பளம் பெறுபவரா? : நானோ வருகையால் வங்கி கடன் உண்டு

மாதம் 6,250க்கு மேல் சம் பளம் பெறுபவரா நீங்கள்? அப்படியானால், கார் வங்குவதற்கு உங்களுக்கு வங்கியில் கடன் கிடைக்கும். டாடாவின் ஒரு லட்ச ரூபாய் நானோ கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்படுத்தக் கூடிய வகையிலான கார் என தொழில் அதிபர் ரத்தன் டாடா இதை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குறைந்த வருவாய் உடையவர்கள் இந்த காரை வாங்குவதற்கு வங்கிகளில் கடன் வசதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தற்போது கார் கடன் வாங்க வேண்டுமெனில், ஒருவரது ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண்டும். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தாலும் அவரது ஆண்டு வருமானமும் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண் டும். தற்போது நானோ கார் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதால், குறைந்த அளவு வருவாய் பெறுவோரும், அதை வாங்குவதற்கு வகை செய்யும் விதமாக கடன் பெறுவதற்கான வருமானத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரமாக இருந்தால், அவருக்கு கார் வாங்குவதற்கு கடன் வசதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாதம் 6,250 ரூபாய் சம்பளம் பெறுபவரும் இனிமேல் காருக்கான கடன் வசதியை பெற முடியும். அதே நேரத்தில், சொந்தமாக தொழில் செய்பவர், கார் கடன் பெற வேண்டுமெனில் அவரது ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண்டும்'என்றார்.
இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறியதாவது: இரு சக்கர வாகனங்களை வாங்குவோரை, காருக்கு மாறச் செய்யும் வகையில் தான் நானோ கார் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாய் நானோ காரின் 'எகானமி' மாடலை வாங்குவதற்கு 2,999 ரூபாய் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். நடுத்தர ரக காருக்கு 3,499 ரூபாயும், உயர் ரக காருக்கு 3,999ம் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்கு நானோ கார் ஒதுக்கீடு செய்யப்பட்டால், முன்பதிவு கட்டணம், வங்கியின் நானோ கார் கடன் வசதி திட்டத்துக்கு மாற்றப்படும்.அதிகபட்சமாக ஏழு ஆண்டு காலத்திற்கு 11.75 சதவீதத்தில் இருந்து 12 சதவீத வட்டி வரை கடன் வழங்கப்படும். இவ்வாறு வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தினமலர்



Tuesday, March 24, 2009

டாடாவின் நானோ கார் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்குமா ?

உலகின் மிக மலிவு விலை கார் என்று சொல்லப்படும் டாடாவின் நானோ, மக்களின் கைக்கு வரும் போது ஒரு லட்சம் ரூபாய்க்கு கிடைக்காது என்பது தெளிவாகிறது. ஏனென்றால், நானோவின் ஸ்டாண்டர்டு மாடல் காரின் எக்ஸ் - பேக்டரி விலையே ரூ.ஒரு லட்சம் என்று சொல்லப்படுகிறது. பின்னர் அது ஷோரூமுக்கு வரும்போது, ரூ.1,12,000 வரை விலையாகும் என்கிறார்கள். வாங்குபவர்கள் கைக்கு வரும்போது, ரோடு டாக்ஸ், இன்சூரன்ஸ் எல்லாம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் சேர்த்தால் ரூ.1,20,000 க்கு மேல் விலை வந்து விடும் என்கிறார்கள். இது நானோவின் பேசிக் மாடல் தான். இது தவிர இரண்டு டீலக்ஸ் மாடல்கள் இருக்கின்றன. பேசிக் மாடலே ரூ.1,20,000 க்கு மேல் விலைக்கு வந்து விடும் போது டீலக்ஸ் மாடல்களின் விலை ரூ.1,60,000 மற்றும் ரூ.2,00,000 வரை கூட வந்து விடும் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


'நானோ' கார் வாங்குவோருக்கு அதிர்ஷ்டம்: கூடுதல் விலைக்கு கை மாற்றிவிட வாய்ப்பு

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடாவின் ஒரு லட்ச ரூபாய் நானோ காருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட விற்பனையில் இந்த காரை வாங்குவோருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. குறைந்த அளவிலேயே கார் தயாரிக்கப்படுவதால், தற்போது காரை வாங்குவோர், அதை கூடுதல் விலைக்கு மற்றொருவருக்கு மாற்றி விடும் வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் நானோ கார். உலகிலேயே மிகக் குறைந்த விலையாக ஒரு லட்ச ரூபாய்க்கு கார் தயாரித்து விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பிரச்னை, நானோ கார் தயாரிப்பில் தாமதத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், டாடாவுக்கு குஜராத் மாநிலம் ஆதரவுக் கரம் நீட்டியது. தற்போது, காரை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நானோ கார் நேற்று முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தயாரிப்பு மிகக் குறைவாக உள்ளதால், நானோ காருக்கு கடும் கிராக்கி நிலவுகிறது.
இதுகுறித்து ஆட்டோ மொபைல்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது: நானோ கார் தொடர்பாக ஐந்து கோடிக்கும் அதிகமானோரிடம் இருந்து விசாரிப்புகள் வந்துள்ளன. முதல் கட்ட தேவையைப் போக்குவதற்கு இரண்டு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் கார்கள் வரை தேவைப்படுகின்றன. மொத்த தேவையில் 2.5 சதவீதத்துக்கும் குறைவான அளவே முதல் கட்டமாக கார்கள் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. காருக்கான அனைத்து முன்பதிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களும் நானோ காரை பெறுவதற்கு இரண்டாண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். முன்னர், மாருதி 800 கார் விற்பனைக்கு வந்த போதும் இதே நிலை தான் ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்போது முதல் கட்ட விற்பனையில் நானோ காரை பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது. குறைவான எண்ணிக்கையிலேயே கார் தயாரிக்கப்படுவதால், தங்கள் பெயரில் புக் செய்யப்பட்ட காரை, கூடுதல் விலைக்கு வேறொருவருக்கு விற்பனை செய்ய அவர்கள் முயற்சிக்கலாம். கார் தேவைப்படாதவர்கள் கூட, காருக்காக முன்பதிவு செய்து, அதை கூடுதல் விலைக்கு வேறொருவருக்கு விற்க முயற்சிக்கலாம். எப்படியாது நானோ காரை வாங்கியே தீர வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள்,காரின் விலையை விட கூடுதலாகக் கொடுத்து அதை வாங்க முயற்சிப்பர்.
நானோ கார் விற்பனை தொடர்பாக டாடா நிறுவனம் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், அதன் டீலர்கள் சில விவரங்களைத் தெரிவித்துள்ளனர். இதன்படி, நானோ கார் தொடர்பாக டாடா நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் உடன்பாடு செய்துள்ளது. நானோ கார் வாங்குவதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதி வசதி அளிக்கும். காருக்கு புக் செய்தவர்களின் பெயர்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக விற்பனைக்கு வரும் கார்களைப் பெறும் அதிர்ஷ்டசாலிகள் அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். புக் செய்யப்பட்டவரின் பெயருக்கு டீலர்களின் ஷோரூம்களுக்கு கார் வந்து விடும். வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தங்கள் கார்களை எடுத்துச் செல்லலாம். நிதி விவகாரங்களில் டீலர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. காரை டெலிவரி செய் யும் பணி மட்டுமே டீலர்களுக்கு உண்டு. இவ்வாறு ஆட்டோ மொபைல்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகையில், 'நானோ காருக்காக பெருமளவு வாடிக்கையாளர்கள் புக் செய்வது, டாடா நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும். 'இரண்டு லட்சம் கார்கள் புக் செய்யப்பட்டால் கூட, அந்நிறுவனத்துக்கு அதன் மூலமாக 1,400 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த நிதியை டாடா நிறுவனம், தனது பல்வேறு நிதித் தேவைகளுக்கு பயன்படுத்தும்' என்றன.
நன்றி : தினமலர்


முன்கூட்டியே விற்பனைக்கு வந்து விட்டது 'நானோ' கார்: : சொன்னதைச் செய்தார் டாடா

உலகிலேயே மிகக் குறைந்த விலையுடைய நானோ கார், விற்பனைக்கு வந்து விட்டது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப் படி, ஒரு லட்ச ரூபாய்க்கு நானோ கார்கள் விற்பனை செய்யப்படும் என்றும், அடுத்த மாதம் 9ம் தேதி முதல், காருக்கான முன்பதிவு துவங்கும் என்றும் தொழில் அதிபர் ரத்தன் டாடா நேற்று பெருமையுடன் தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த அதிகாரப்பூர்வ அறிமுக விழாவில், ரத்தன் டாடா பேசியதாவது: இந்த நாளை, சாலை போக்குவரத்தின் புதிய பரிமாணமாக கருதலாம். ஒரு லட்ச ரூபாய் விலையுள்ள கார் என்பதால், அதை மிகவும் மலிவான கார் என கூறப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து தரப்பினரும் வாங்கி பயன்படுத்தக் கூடிய கார் என்று கூறலாம். ஏற்கனவே நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ அதை உறுதியாக பின்பற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நானோ காரின் எகானமி ரக கார், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
இந்த உயர் ரக கார்களில் ஏசி, பவர் பிரேக், பவர் விண்டோ உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இந்த கார்களை மேற்கு ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளது. நானோ கார்களுக்கான முன் பதிவு அடுத்த மாதம் 9ம் தேதி முதல் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் முதல் டெலிவரி செய்யப்படும்.முதல் ஒரு லட்சம் நானோ கார்களை வாங்கவுள்ள வாடிக்கையாளர்கள், முன்பதிவு செய்தவர்களில் இருந்து குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவர். கார் முன்பதிவு செய்வதற்கு அதிகபட்ச வரையறை எதுவும் இல்லை. குஜராத் சனாந்த்தில் ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்கள் தாயரிக்க முடியும். பின்னர், இது ஆண்டுக்கு ஐந்து லட்சம் கார்களாக அதிகரிக்கப்படும். நாங்கள் எதிர் பார்த்ததுக்கு முன் கூட்டியே நானோ கார் விற்பனைக்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதல்கட்டமாக, பந்த் நகர் தொழிற்சாலையில் இருந்து 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் கார்கள் வரை சப்ளை செய்யப் படும். பந்த் நகரில் கார் தயாரிப்பது தற்காலிகமான ஏற்பாடு தான். ஒரு கோடிக்கும் அதிகமான நானோ கார்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவை மேலும் அதிகரித்தால் அதற்கேற்ப நிறுவனத்தின் உற்பத்தி திறனும் அதிகரிக்கப்படும். இவ்வாறு டாடா கூறினார்.
டாடா மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குனர் ரவி காந்த் கூறியதாவது: நானோ காருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ300. நாடுமுழுவதும் உள்ள ஸ்டேட் பாங்குகளில் இதற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். டாடா நானோ கார் வாங்க கடன் வசதி கிடைக்கவும் 15 வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. அதன் மூலம் வாங்குபவர்களுக்கு தனிக்கட்டணமும் உண்டு. முதலில் ஒரு லட்சம் கார்கள் வினியோகத்திற்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யப்படும். அப்படி கார் கிடைக்காத பட்சத்தில், நானோ காருக்காக முன்பதிவு செய்து ஒரு ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு 8.5 சதவீத வட்டி அளிக்கப்படும். இரண்டு ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு 8.75 சதவீத வட்டி தரப்படும். . நானோ கார்கள், நான்கு நபர்கள் வசதியாக அமரக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 624 சிசி திறன் கொண்ட இந்த கார்கள், மூன்று வகைகளில் கிடைக்கும். இரு சக்கர வாகனங்களை விட குறைவாகவே இந்த கார்கள் கார்பனை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 26.6 கி.மீ., வரை செல்லும். இவ்வாறு ரவிகாந்த் கூறினார்.
நன்றி : தினமலர்


Monday, March 23, 2009

நானோ காருக்கான புக்கிங் ஏப்ரல் 9 ம் தேதி துவங்குகிறது ; கார் ஜூலையில் கிடைக்கும்

மக்கள் கார் என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வால் அழைக்கப்படுவதும், உலகின் மிக மலிவான கார் என்றும் சொல்லப்படுவதுமான நானோ காருக்கான புக்கிங் ஏப்ரல் 9 ம் தேதி துவங்கும் என்று ரத்தன் டாடா தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் 9 ம் தேதி துவங்கப்படும் புக்கிங், ஏப்ரல் 23ம் தேதி வரை இருக்கும் என்றும், முதலில் புக் செய்யும் ஒரு வட்சம் பேருக்கு முதலில் நானோ விற்கப்படும் என்றும் அதன் விலை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ரத்தன் டாடா தெரிவித்தார். ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ கொடுக்கப்படும் என்று முதலில் நாங்கள் சொன்ன வாக்கு காப்பாற்றப்படும் என்று சொன்ன அவர், அதை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்வையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது என்றார். இருந்தாலும் இப்போது அதன் விலை கொஞ்சம் குறைந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது என்றார். முதலில் புக் செய்த ஒரு லட்சம் பேருக்கு வரும் ஜூலை மாத துவக்கத்தில் கார் சப்ளை செய்யப்படும் என்றும், அதற்கான விண்ணப்ப பாரம் இந்தியா எங்கும் 1,000 நகரங்களில் 30,000 இடங்களில் கிடைக்கும் என்றார். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் 850 கிளைகள் அதிகாரம் கொண்டதாக இருக்கும். கடன் மூலமாக வாங்க விரும்புபவர்கள் முதலில் ரூ.2,999 மட்டும் செலுத்தி விட்டு மீதியை கடன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்றார். புக்கிங்கை பெற்றுக்கொள்ள மேலும் 15 நிதி நிறுவனங்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் பெயர் இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கப்படும். கார் கடனுக்கான வட்டி எவ்வளவு என்பதை கடன் கொடுக்கும் வங்கியே தீர்மானிக்கும் என்று சொன்ன ரவி காந்தி, பொதுத்துறை வங்கிகளும் கடன் கொடுக்க முன் வந்திருக்கின்றன என்றார். குஜராத்தில் சனாண்ட் என்ற இடத்தில் நானோ வுக்காக பிரத்யேகமாக துவங்கப்பட்டிருக்கும் தொழிற்சாலையில் வருடத்திற்கு 2.5 லட்சம் கார்களை தயாரிக்க முடியும். அது, விரைவில் 5 லட்சம் கார்களை தயாரிக்க கூடியதாக விரிவாக்கம் செய்யப்படும். 4.5 மீட்டர் நீளமும், 624 சிசி இஞ்சினையும் கொண்டா நானோ காரில் நான்கு பேர் பயணம் செய்யலாம். இப்போதுள்ள இரு சக்கர வாகனங்கள் வெளியிடும் புகையை விட குறைவான அளவே புகையை வெளியிடும் இந்த காரில் அதிகபட்சமாக லிட்டருக்கு 26.6 கி.மீ.தூரம் வரை போகலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் லக்ஸூரி என்று மூன்று மாடல்களில் நானோ கிடைக்கிறது. நானோவின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு, தேவையை பொறுத்து 2011 வாக்கில் ஏற்றுமதி செய்யப்படும் என்றார் ரத்தன் டாடா.
நன்றி : தினமலர்


பெரிய கனவுகளுடன் இன்று வர இருக்கும் சிறிய கார்

இந்தியா முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான கார் பிரியர்கள் பெரிய கனவுகளுடன் காத்திருக்கும் சிறிய காரான ' நானோ ' இன்று வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. நானோ கார் வெளிவருவதை அடுத்து, இன்று பங்கு சந்தையில் டாடா மோட்டார்ஸின் பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ' மக்கள் கார் ' என்று சொன்ன உலகின் மிக மலிவு விலை காரான நானோ மூன்று மாடல்களில் வெளிவருகிறது. ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் லக்ஸூரி ஆகிய மாடல்களில் வெளிவருகிறது. விலை, மாடலுக்கு தகுந்தபடி ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.1.30வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் காரில் ஏ.சி.இருக்காது.இன்று மும்பையில் வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப்படும் நானோ, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில்தான் இந்தியாவின் மற்ற நகரங்களில் உள்ள டாடா மோட்டார்ஸின் டீலர்களுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. புக்கிங்கும் அப்போதுதான் ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது. புக் செய்யும்போதே முன்பணம் ரூ.70,000 செலுத்த வேண்டும். கடந்த 15 மாதங்களுக்கு முன்பே டில்லியில் நடந்த ஆட்டோ ஷோவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தும், வர்த்தக ரீதியாக வெளியில் வருவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு, மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு எதிராக நடந்தப்பட்ட அரசியல் போராடம்தான் காரணம். கடந்த அக்டோபரிலேயே இந்த கார் விற்பனைக்கு அனுப்ப டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருந்தும், மே.வங்கத்தில் உள்ள சிங்கூரில் இவர்கள் அமைத்த தொழிற்சாலையை நடத்த விடாமல் அரசியல் கட்சி ஒன்று தடுத்ததை அடுத்து, அந்த தொழிற்சாலையை அங்கிருந்து குஜராத்தில் உள்ள சனான்ட் என்ற இடத்திற்கு மாற்ற வேண்டியதாகி விட்டது. அங்கும் முழு அளவிலான தயாரிப்பு நடக்க இந்த வருடம் அக்டோபர் வரை ஆகி விடும் என்று சொல்லப்படுகிறது. டாடாவின் மற்ற தொழிற்சாலைகளிலேயே இப்போது குறைந்த அளவில் நானோ கார் தயாரிக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


Sunday, March 22, 2009

நானோ கார் புக்கிங் நாளை ஆரம்பம்: எதிர்பார்க்கிறது பங்குச் சந்தை : சேதுராமன் சாத்தப்பன்

கடந்த வியாழக் கிழமையன்று அமெரிக்காவில் ஏற்பட்ட மாறுதல்களும், பணவீக்கம் 0.44 சதவீதமாகக் குறைந்ததும் (கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது) சந்தையில் எவ்விதமான பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.வியாழனன்று முடிவாக மும்பை பங்குச் சந்தை 25 புள்ளிகள் கூடி முடிந்தது. வங்கிகள், வருங்காலங்களிலும் இதே போன்ற நிலை தொடர முடியாது என்றும், வராக்கடன்கள் கூடும் என்றும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அது, அனைத்து வங்கிப் பங்குகளையும் நேற்று முன்தினம் சகட்டுமேனிக்கு கீழே தள்ளியது. நேற்று முன்தினம் குறைவுக்கு இன்னொரு காரணம், லாபநோக்கில் முதலீட்டாளர்கள் செயல்பட்டதும் தான். கடந்த இரண்டு வாரத்தில் சந்தை 7 சதவீதம் வரை மேலே சென்றது. இது தான் சமயம் என்று பலர் விற்கின்றனர் என்றே கூறவேண்டும்.
நேற்று முன்தினம் இறுதியாக மும்பை பங்குச் சந்தை 35 புள்ளிகள் குறைந்து 8,966 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 2,780 புள்ளிகளில் முடிந்தது.
உலக ஜி.டி.பி., எப்படி இருக்கிறது? சீனா, இந்தியா தவிர மற்ற நாடுகளின் ஜி.டி.பி., (மொத்த உற்பத்தி குறியீடு) மிகவும் கீழே இருக்கும் என்று பல நாட்டு வல்லுனர்கள் கணித்துள்ளனர். தற்போது, உலக அளவு ஜி.டி.பி., 2009ம் ஆண்டும் மிகவும் குறையும் என்றும், இது போல குறைவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. அனைவரும் எதிர்பார்க்கும் நானோ கார் முன்பதிவு நாளை துவங்க உள்ளது. சைக்கிளில் செல்பவர் மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசைப்படுவது போல, மோட்டார் சைக்கிளில் செல்பவர் காருக்கு ஆசைப்படுவார் அதுவும் நானோவுக்கு விரும்பி வருவார் என்ற பெரிய நம்பிக்கையும், கார் இல்லாதவர்களைக் கூட கார் வாங்க வைக்கும் என்ற பெரிய நம்பிக்கையும் பெரிய ஒரு எதிர்பார்ப்பை நானோவுக்கு ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்படி நிறைய பேர் அப்ளை செய்யும் பட்சத்தில் சப்ளை அதிகம் இல்லாததால் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. மேலும், வெளிமார்க்கெட்டில் பிரிமியங்கள் கூடலாம். எது எப்படி இருந்தாலும், தற்போது ஆட்டோ ரிக்ஷாவே ஒரு லட்ச ரூபாய்க்குள் கிடைக்காத நிலையில், ஒரு லட்ச ரூபாயில் ஒரு கார் அதுவும் டாடா கார் என்பது ஒரு பெரிய சாதனை தான். திங்கள் போற்றுதும், திங்கள் போற்றுதும் என்று, வரும் திங்களை ஆவலுடன் எதிர்பார்ப்போம். அமெரிக்க அரசு இன்னும் பல கோடி டாலர்களை இறக்கி கம்பெனிகளை மீட்டுக் கொடுக்கும் என்ற செய்தி கம்பெனிகளுக்கு அமிர்தமாக இருந்தாலும், இந்தப் பணத்தைக் கொடுப்பதற்காக மேலும் டாலர்களை அச்சிடும் என்ற செய்தி அமெரிக்க டாலரின் மதிப்பை வெகுவாகக் குறைத்தது. கடந்த ஒரு வாரமாக இந்திய ரூபாய் வலுப்பெற்று வருவதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஒரு டாலர் 52 ரூபாய் அளவு சென்று, தற்போது 50.66 அளவிற்கு வந்து நிற்கிறது. முன்பே கூறியிருந்தோம், 51 அளவில் பார்வர்ட் கான்ட்ராக்ட் போடுமாறு. போட்டிருந்தீர்களா?
டிபிளேஷனுக்கு (பணச் சுருக்கம்) பயப்பட வேண்டுமா? ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களை குறைக்கும் பட்சத்தில், வங்கிகளும் கடன்களுக்கான வட்டி வீதங்களை குறைக்கும். அப்படி வட்டிகள் குறையும் பட்சத்தில் கடன்கள் அதிகமாக பெறப்படும். அது நாட்டில் பொருள் உபயோகம், உற்பத்தியை பெருக்கும்.
வரும் வாரம் எப்படி இருக்கும்? சந்தை 9,000க்கு கிட்டே வந்து மேலும் கீழும் செல்கிறது. தேர்தல் வரை சிறிது மேலே செல்லும் வாய்ப்பு உண்டு. ஏனெனில், பணப்புழக்கம் கூடுவதால், பொருட்களின் விற்பனை கூடும்.
நன்றி : தினமலர்


Saturday, March 21, 2009

' நானோ ' காரின் சப்ளை ஜூனில் தான் சரியாகும்

எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் ' நானோ 'காரின் சப்ளை, இன்னும் சில மாதங்களுக்கு தேவைக்கு ஏற்றபடி இருக்காது என்றும், வரும் ஜூன் மாதத்தில் இருந்துதான் சப்ளை சரியாகும் என்றும் சொல்லப்படுகிறது. வரும் திங்கட்கிழமை அன்று அதாவது 23 ம் தேதி டாடா மோட்டார்ஸின் டீலர்களிடம் நானோ கார் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்து அதற்கான புக்கிங் ஆரம்பமாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நானோ கார் தயாரிப்பிற்காக பிரத்யேகமாக குஜராத்தில் சனாந்த் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையில் இருந்து முழுமையான தயாரிப்பு அக்டோபர் - நவம்பரில் தான் துவங்கும் என்கிறார்கள். அதுவரை உத்தரகான்ட் மாநிலத்தில் பான்ட்நகரில் இருக்கும் டாடாவின் தொழிற்சாலையில் தான் நானோ தயாரிக்கப்படுகிறது. டாடாவுக்காக பூனேயில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் நானோவுக்காக இன்னொரு தயாரிப்பு கூடத்தை சேர்க்கலாமா என்றும் டாடா மோட்டார்ஸ் யோசித்து வருகிறது. இப்போதுள்ள வசதிப்படி, முதல் வருடத்தில் மொத்தம் 1,00,000 நானோ கார்கள் மட்டுமே தயாரிக்க முடியும் என்று தெரிகிறது. இது தேவைக்கு தகுந்த தயாரிப்பாக இருக்காது. தேவைக்கு மிக குறைந்த அளவு தயாரிப்புதான் இது. பூனேயில் இருக்கும் டாடா மோட்டார்ஸின் அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசுகையில், இப்போது 1,500 நானோ கார்கள் மட்டும்தான் தயாராகியிருக்கிறது. இவைகள் தான் எங்களது டீலர்களிடம் வைக்கப்படும். புக்கிங் ஆரம்பமானதும் இன்னுமொரு 500 - 600 கார்கள் தயாராகி சப்ளை செய்யப்படும் என்றார். நானோ காரின் 20 சதவீத பாகங்களை டாடா ஆட்டோ காம்ப் சிஸ்டம்ஸ் ( டாகோ ) நிறுவனம்தான் தயாரிக்கிறது. அதேபோல் அதன் இருக்கைகளை, டாகோ மற்றும் அமெரிக்க நிறுவனமான ஜான்சன் கன்ட்ரோல்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் டாடா ஜான்சன் கன்ட்ரோல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, March 17, 2009

டாடாவின் ' நானோ ' காரை வாங்க விண்ணப்ப பாரம் விலை ரூ.300 ?

டாடாவின் ' நானோ ' கார் மிக குறைந்த விலையில் கிடைத்தாலும், அதை வாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான வேலை இல்லை என்று தெரிகிறது. அதற்காக நாம் அதிகம் செலவிட வேண்டும் போலிருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் கார் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் ' நானோ ' இம்மாதம் 23ம் தேதி விற்பனைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற கார்களைப்போல் நாம் நேராக டீலரிடம் சென்று ' நானோ ' வை வாஙகி விட முடியாது. அதற்காக உள்ள விண்ணப்ப பாரத்தை வாங்கி அதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன் பின்னரே நமது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்று தெரிய வரும். அந்த விண்ணப்ப பாரமும் ரூ.300 கொடுத்து வாங்க வேண்டும் என்று தெரிகிறது. ஒரு வேளை நமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் ரூ.300 திருப்பி கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. முதல் முறையாக கார் கம்பெனி ஒன்று அவர்களது காரை வாங்க விண்ணப்ப பாரம் வினியோகித்து, அதை ரூ.300 க்கு விற்க இருப்பது இது தான் முதன் முறை. நானோ காரை வாங்க அதிக அளவில் டிமாண்ட் இருக்கும் என்று எதிர்பார்ப்பதால் இந்த ஏற்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது என்று டாடா மோட்டார்ஸ் சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ' நானோ ' வைற வாங்க கடன் கொடுப்பதற்காக இதுவரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் பஞ்சாப் நேஷனல் பேங்க்கும் டாடா மோட்டார்ஸூடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன. விரைவில் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளும் இந்த வரிசையில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்