Friday, July 17, 2009

முதல் வாடிக்கையாளருக்கு இன்று நானோ கார் சப்ளை செய்யப்படுகிறது

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், அது தயாரித்த உலகின் மிக மலிவு விலை காரான நானோவை, அதன் முதல் வாடிக்கையாளருக்கு இன்று சப்ளை செய்கிறது. கடந்த வருடம் ஜனவரி மாதத்திலேயே புதுடில்லியில் நடந்த விழாவில் நானோ காரை டாடாவின் சேர்மன் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தி விட்டாலும், அதற்கான புக்கிங் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் துவங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் தொழிற்சாலை அமைப்பதற்காக டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியிருந்த விவசாய நிலத்தை, விவசாயிகளிடமே திருப்பி கொடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி, அதன் மூலம் தொழிற்சாலையை இயங்க விடாமல் தடுத்ததால் கார் தயாரிப்பு நின்றது. பின்னர் அங்குள்ள தொழிற்சாலை குஜராத்துக்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் அங்கு தயாரிப்பை துவக்கி, காரை வெளியே கொண்டு வர காலதாமதம் ஆகும் என்பதால், டாடா மோட்டார்ஸூக்கு உத்தரகான்ட் மாநிலத்தில் உள்ள பான்ட்நகரில் இருக்கும் தொழிற்சாலையில் இருந்து நானோ காரை தயாரித்து இப்போது சப்ளை செய்கிறது. நானோ காரை புக் செய்த முதல் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நானோ கார் ரூ.ஒரு லட்சம் விலையில் ( வரிகள் தனி ) கொடுக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: