இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் கம்பெனியான லார்சன் அண்ட் டியூப்ரோ பெற்ற நிகர லாபம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் பெற்ற நிகர லாபத்தை விட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆதித்யா குரூப்பை சேர்ந்த யூனிடெக் சிமென்ட் நிறுவனத்தில் லார்சன் அண்ட் டியூப்ரோவுக்கு இருந்த 11.5 சதவீத பங்குகள் முழுவதையும் அது விற்று விட்டதால் தான் இந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்க முடிந்திருக்கிறது. கடந்த வருடம் முதல் காலாண்டில் எல் அண்ட் டி பெற்ற நிகர லாபம் ரூ.502 கோடி தான். அது இந்த ஆண்டில் ரூ.1,598 கோடியாக உயர்ந்ததற்கு முக்கிய காரணம், யூனிடெக்கின் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1,020 கோடி தான் என்கிறார்கள். இந்த அதிகப்படியான வருமானம் இல்லாமல்,ற அதன் நிகர லாபம் 15 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் சர்வதேச அளவில் இருக்கும் பொருளாதார மந்த நிலையால் எல் அண்ட் டி க்கு வரவேண்டிய ஆர்டர்களில் 22 சதவீதம் குறைந்து போனதுதான்.
நன்றி : தினமலர்
1 comment:
வரும் காலங்களில் LT ன் மதிப்பு கூடிக்கொண்டே போகக்கூடிய சாத்தியங்கள் அதிகம்,
நன்றி நண்பரே
http://www.tamilish.com/story/85462/
http://panguvanigamtips.blogspot.com/
Post a Comment