Friday, July 17, 2009

விமான எரிபொருள் விலை 6% குறைக்கப்பட்டது

இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் பொதுத் துறை நிறுவனங்கள், புதன்கிழமை அன்று விமான எரிபொருள் விலையை 5.7 சதவீதம் குறைத்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து, அண்மைக் காலமாக விமான எரிபொருளின் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், தற்பொழுது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, சராசரியாக 63.42 டாலராக குறைந்துள்ளதையடுத்து விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. புதுடெல்லியில், ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.2,221 குறைக்கப்பட்டு ரூ.36,338-க்கு விற்பனை செய்யப்படுகிறது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.39,789 என்ற அளவிலிருந்து ரு.37,475-ஆக குறைக்கப் பட்டுள்ளது. இந்தியா வாங்கும் ஒரு பீப்பாய் பேஸ்கட் குரூட் ஆயில் விலை அண்மையில் சராசரியாக 69.57 டாலராக அதிகரித்ததையடுத்து இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விமான எரிபொருளின் விலையை உயர்த்தின
நன்றி : தினமலர்


No comments: