Monday, June 15, 2009

இந்தியாவின் மதிப்பு மிக்க கம்பெனி லிஸ்ட்டில் மீண்டும் சேர்ந்தது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்

இந்தியாவின் மதிப்பு மிக்க 100 கம்பெனிகள் லிஸ்ட்டில் மீண்டும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் இடம் பிடித்து விட்டது. ஏற்கனவே இந்தியாவின் மதிப்பு மிக்க கம்பெனி லிஸ்ட்டில் தான் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் இருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் அந்த கம்பெனியில் நடந்த நிதி மோசடியை அடுத்து, அது அந்த பெருமையை இழந்தது. இப்போது டெக் மகேந்திராவின் கைக்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வந்திருப்பததை அடுத்து, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நிகர லாபயும் ஈட்டி, அதன் மூலம் அதன் பங்கு மதிப்பும் கடந்த வாரத்தில் பெரிய அளவில் உயர துவங்கியது. சத்யத்தின் சந்தை மதிப்பும் ரூ.7,800 கோடியாக உயர்ந்து விட்டது. கடந்த ஜனவரி 7ம் தேதி சத்யத்தில் நிதி மோசடி நடந்தது வெளியே தெரிந்தது. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து ஜனவரி 9 ம் தேதி, சத்யத்தின் பங்கு மதிப்பு வெறும் ரூ.6.30 ஆகத்தான் இருந்தது. அதன் சந்தை மதிப்பும் அப்போது சுமார் ரூ.600 கோடியாகத்தான் இருந்தது. இப்போது அதன் பங்கு மதிப்பும் உயர்ந்து விட்டது. அந்த நிறுவனத்தின் மதிப்பும் உயர்ந்து விட்டது.
நன்றி : தினமலர்


கடந்த வாரத்தில் மட்டும் இந்தியாவின் 10 முக்கிய நிறுவனங்கள் இழந்தது ரூ.5,168 கோடி

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவின் 10 முக்கிய நிறுவனங்கள், அவர்களின் சந்தை முதலீட்டில் ரூ.5,168 கோடியை இழந்திருக்கின்றன. அதில் பெரும்பங்கை இழந்தது ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்பரேஷன் ( ஓ.என்.;ஜி.சி.)தான் . நான்கு தனியார் நிறுவனங்களையும் ஆறு பொதுத்துறை நிறுவனங்களையும் கொண்ட இந்தியாவின் முக்கிய 10 நிறுவனங்களின் சந்தை முதலீடு, கடந்த வாரத்தில் ரூ.16,88,213 கோடியில் இருந்து ரூ.16,83,045 கோடியாக குறைந்திருக்கிறது. கடந்த வெள்ளி அன்று மும்பை பங்கு சந்தையில் ஓ.என்.ஜி.சி.,யின் பங்கு மதிப்பு 4.56 சதவீதம் குறைந்து ரூ.1,126.80 ஆகத்தான் விற்பனை ஆனது. எனவே அதன் சந்தை முதலீடும் ரூ.11,518 கோடி குறைந்து ரூ.2,41,008 கோடியாகி விட்டது. ஒ.என்.ஜி.சி.,தவிர மற்ற முக்கிய நிறுவனங்களான எம்.எம்.டி.சி., என்.எம்.டி.சி.,எஸ்.பி.ஐ., பி.ஹெச்.இ.எல்., ஆகியவையும் அதிக அளவில் சந்தை முதலீட்டை கடந்த வாரத்தில் இழந்திருந்தன.
நன்றி : தினமலர்