Monday, December 7, 2009

சொல்​ல​லாமா,​ கூடாதா?

வெளி​யூ​ருக்​குப் போவது என்று தீர்​மா​ன​மா​ன​வு​டன் நான் எடுத்த முடி​வைக் கேட்டு வீட்​டில் இருந்த யாரும் எது​வும் பேச​ வில்லை. சொல்​லப் போனால் வெளி​யூ​ருக்​குப் போகக்​கூட வேண்​டாம் என்றே அவர்​கள் நினைக்க ஆரம்​பித்​தார்​கள். நான் அவர்​க​ளைச் சமா​தா​னப்​ப​டுத்த விரும்​ப​வில்லை,​ அதே சம​யம் எடுத்த முடிவை செய​லாக்​கியே தீரு​வது என்ற எண்​ணத்​தோடு வீதி​யில் இறங்​கி​னேன். ​

​ அதற்​குள் என் வீட்​டார்,​ பக்​கத்து வீட்​டுக்​கா​ர​ர​ரி​டம் சுருக்​க​மா​கச் சொல்லி அவ​ரும் நான் தெருக்​கோ​டியை அடை​யும்​போது,​ ஏன் சார் விஷப் பரீட்சை,​ நான் வேணா 2 நாள் உங்க வீட்​டி​லேயே படுத்​துக் காவல் பார்த்​துக்​க​றேன் என்று முன்​வந்​தார். உங்​க​ளுக்​குச் சிர​மம் வேண்​டாம்,​ நாம் அர​சை​யும் நம்​பித்​தான் வாழ்ந்​தாக வேண்​டும் என்று சொல்​லி​விட்டு,​ காவல் நிலை​யம் நோக்கி நடந்​தேன். வெளி​யூர் போகும் அந்த 2 நாள்​க​ளும் போலீஸ்​கா​ரர்​கள் என் வீட்​டைப் பார்த்​துக் கொள்​ளச் சொல்ல வேண்​டும் என்​ப​து​தான் அந்த முடிவு.

​ போலீஸ் நிலை​யத்​துக்​குள் போன​போது கடா மீசை​யும் கலர் சொக்​கா​யும் போட்​டுக்​கொண்டு நாற்​கா​லியை அடைத்​த​படி ஒரு​வர் உட்​கார்ந்​தி​ருந்​தார். அவர்​தான் ரைட்​டர் என்று ஊகித்​தேன். முதல்​வர் கூடப் பதவி என்ற முள்​முடி இல்​லாத காலத்​தில் கலர் லுங்​கி​யு​டன் பேட்டி தந்த படத்தை சுப​மங்​க​ளா​வில் பார்த்​தி​ருந்​த​தால் உண்​மை​யி​லேயே இவ​ரும் பெரிய ரைட்​ட​ரா​கவே இருப்​பார் என்று ஊகித்​தேன். என் ஊகம் வீண் போக​வில்லை.

​ அதற்​குள் பேரி​ரைச்​ச​லோடு வந்த ஜீப்பி​லி​ருந்து காவல்​து​றைக்கே உரிய டிரேட் மார்க் தொப்​பை​யு​டன் ஒரு அதி​காரி யாரையோ வைத​ப​டியே உள்ளே மூச்சு வாங்​கிக்​கொண்டு வந்​தார். என்​னய்யா ஸ்டே​ஷன் லட்​ச​ணம் இது,​ எங்​கய்யா ஏட்டு,​ சூடா டீ சொல்​லுய்யா என்று உரத்த குர​லில் கட்​ட​ளை​யிட்​ட​ப​டியே இவன் யார் என்று என்​னைப் பார்த்​து​விட்டு ரைட்​ட​ரைப் பார்த்​தார்.

ரைட்​டர் தெரி​யாது என்​ப​தைக் ​ கண்​ணா​லேயே சொல்​லி​விட்டு விறைப்​பாக சல்​யூட் அடித்​தார். என்​னய்யா கேசு அது என்று கேட்​டுக்​கொண்டே அருகி​லி​ருந்த மர நாற்​கா​லி​யில் தன்னை புதைத்​துக் கொண்​டார்.

​ ரைட்​டர் எப்.ஐ.ஆர். ரிஜிஸ்​தரை அவ​ரி​டம் பணி​வா​கக் காட்​டி​னார். அவர் மீண்​டும் கொதிக்க ஆரம்​பித்​தார். நாம பொய் கேஸý​தான் போட​றோம்னு ஊர் பூரா பேச​றாங்க இதிலே என்​னயா பேரெல்​லாம் இப்​படி இருக்​குது,​ படி என்று உத்​த​ர​விட்​டார்.

​ ஒக்​கூர் மாசாத்​தி​யார்,​ காக்​கைப் பாடி​னி​யார்,​ வெண்​ணிக்​கு​யத்​தி​யார்,​ நப்​ப​ச​லை​யார்,​ குலோத்​துங்​கன்,​ பர​ணர்,​ கபி​லர்,​ பெருஞ்​சித்​தி​ர​னார்,​ இளங்கோ,​ புக​ழேந்தி,​ அம்​பி​கா​பதி என்று ரைட்​டர் உற்​சா​க​மா​கப் படித்​துக் கொண்டே போனார்.

​ நிறுத்​துய்யா,​ இந்​தப் புல​வர்​கள்​ளாம் கடைச்​சங்​கமா,​ இடைச்​சங்​கமா,​ தொழிற்​சங்​க​மான்னு அறி​ஞர்​க​ளா​லேயே சொல்ல முடி​யல்ல,​ நீ பாட்​டுக்கு இவங்க பேரை எழு​தி​யி​ருக்​கியே என்​னய்யா கேஸý என்று மீண்​டும் கேட்​டார்.

​ போக்​கு​வ​ரத்​துக்கு இடை​யூறு செய்​தது,​ பொதுச் சொத்​துக்​குச் சேதம் விளை​வித்​தது,​ அரசு ஊழி​யர்​க​ளைக் கடமை செய்ய விடா​மல் தடுத்​தது,​ தேசத்​துக்கு எதி​ரா​கக் கல​கம் செய்​தது என்று எல்லா செக்​ஷன்​ல​யும் புக் பண்​ணிட்​டேன்​(ஐ)​யா என்​றார். எனக்கே தூக்​கி​வா​ரிப்​போட்​டது.

​ இந்​தப் புல​வர்​கள்​ளாம் எந்​தக் காலத்​து​லயா அப்​ப​டிச் செஞ்​சாங்க என்று உண்​மை​யி​லேயே அழாக்​கு​றை​யா​கக் கேட்​டார் அந்த அதி​காரி. இன்​னிக்கு காலை​யி​லே​தான் சார் என்​றார் ரைட்​டர். எதுக்​காக,​ யார் இவங்க என்று மீண்​டும் கேட்​டார்.

​ விடி​கா​லைலே கரண்ட் போயி​டுச்​சாம் சார்,​ எங்க குடி​யி​ருப்​புக்கு மட்​டும் அடிக்​கடி கரண்ட் கட் செய்​வது சரியா என்று கேட்டு மறி​யல் பண்​ணி​னாங்க சார். இவங்​கள்​ளாம் ஒரு அர​சி​யல் கட்​சி​யிலே சேர்ந்​துட்​டாங்க சார். அங்க அவங்க பேரை​யெல்​லாம் இப்​படி சுத்​தத் தமிழ் பெயர்​களா மாத்​திட்​டாங்க சார் என்று ரைட்​டர் விளக்​கி​னார்.

செம்​மொழி மாநாடு நடக்​கப் போகிற சம​யத்​தில் இத்​தனை தமிழ்ப் புல​வர்​கள் கூண்​டோடு கைதா​கி​விட்​டார்​களே என்று திகைத்த எனக்​குப் புதிர் அவிழ்ந்​தது நிம்​ம​தி​யாக இருந்​தது.

​ அப்​போது திடீ​ரென யாரோ என்​னைப் பிடித்​துத் தள்​ளி​னார் போல இருந்​தது. கண்ணை விழித்​துப் பார்த்​தால் ஆபீ​சில்​தான் லஞ்ச் இன்​டெர்​வெல்​லுக்​குப் பிறகு அப்​ப​டியே சீட்​டில் தூங்​கி​ய​தும் அதெல்​லாம் பகல் கனவு என்​றும் தெரிந்​தது.

​ இனி ஊருக்​குப் போகக்​கூ​டாது,​ அப்​ப​டியே போவ​தாக இருந்​தா​லும் ​ போலீஸ்​கா​ரர்​க​ளி​டம் சொல்லி தொந்​த​ரவு செய்​யக்​கூ​டாது என்று தோன்​றி​யது.
கட்டுரையாளர் :ராணிப்​பேட்டை ரங்​கன்
நன்றி : தினமணி

கூவம் நதி​யா​கி​றது...

சென்​னைப் பெரு​ந​க​ரின் அகண்ட சாக்​க​டை​க​ளாக உள்ள கூவம் ஆறு, அடை​யாறு,​ பக்​கிங்​காம் கால்​வாய் மூன்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்தி,​ சிங்​கா​ரச் சென்​னையை உரு​வாக்​கு​வ​தற்​காக சென்னை நதி​கள் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு,​ அதன் தலை​வர் பொறுப்​பை​யும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார் துணை முதல்​வர் மு.க. ஸ்டா​லின்.

​ ​ 1967-ல் முதன்​மு​த​லா​கத் தமி​ழ​கத்​தில் திமுக ஆட்சி அமைத்​த​போதே,​ கூவத்​தில் பட​கு​வி​டும் திட்​டத்​தைத் தொடங்​கி​னார் அன்று பொதுப்​ப​ணித்​துறை அமைச்​ச​ராக இருந்த இன்​றைய முதல்​வர் மு. கரு​ணா​நிதி. அதற்​கா​கக் கட்​டப்​பட்ட பட​குத்​து​றை​க​ளின் சிதைந்த மிச்​சங்​களை இப்​போ​தும் சில இடங்​க​ளில் காண முடி​கி​றது. அப்​போது அவ​ரால் அத்​திட்​டத்தை செய்​து​மு​டிக்க முடி​ய​வில்லை. "மகன் தந்​தைக்​காற்​றும் உதவி' அவர் தொடங்​கிய பணியை நிறைவு செய்​வ​து​தான்.

​ ​ இந்த ஆணை​யம் எத்​த​கைய பணி​களை முத​லில் செய்​யப்​போ​கி​றது;​ இதற்​கான மதிப்​பீடு என்ன,​ இச்​செ​ல​வுக்​கான நிதியை எங்​கி​ருந்து பெறப்​போ​கி​றார்​கள் என்ற விவ​ரங்​கள் விரை​வில் இது​பற்​றிய அறி​விப்​பு​க​ளாக வெளி​யா​கும். முத​லில் கூவத்​தைத்​தான் எடுத்​துக்​கொள்ள இருக்​கின்​ற​னர்.

​ ​ கூவம் மிக​மிக மோச​மாக மாச​டைந்து,​ கழி​வு​கள் நக​ர​வும் முடி​யா​த​படி தேங்​கிக் கிடக்​கி​றது. கூவத்​தில் உள்ள தண்​ணீரை எடுத்து,​ தெளி​ய​வைத்து,​ வடி​கட்​டிய நீரில் மீன்​களை விட்​டால்,​ 4 மணி நேரத்​தில் மீன்​கள் செத்​து​வி​டு​கின்​றன என்​ப​து​தான் கூவம் குறித்து ஆய்​வு​மு​டி​வு​கள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்​ஸி​ஜன் இல்லை. வெறும் நச்சு உலோ​கக் கலப்​பும்,​ சேறும் சக​தி​யும்​தான் உள்​ளன. அடை​யா​றும் அந்​த​வி​த​மா​கவே படு​மோ​ச​மாக மாச​டைந்து கிடக்​கி​றது. மணப்​பாக்​கம் தடுப்​பணை வரை அடை​யாறு கொஞ்​சம் தூய்​மை​யாக இருந்​தா​லும்,​ சென்னை பெரு​ந​க​ரத்​தில் நுழைந்​த​வு​டன் அதன் மேனி​யில் வெறும் குப்​பை​க​ளும் நச்​சுக் கழி​வு​க​ளும்​தான் கொட்​டப்​ப​டு​கின்​றன. "அடை​யாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்​தது,​ இப்​போ​தும் இருக்​கி​றது ​ என்​பதே நம்ப முடி​யாத விஷ​ய​மாக ஆகி​விட்​டது.

​ ​ அடை​யாறு,​ கூவம்,​ பக்​கிங்​காம் கால்​வாய் ஆகி​ய​வற்​றில் 1950 களில் இருந்த நிலை உரு​வா​க​வும்,​ பட​கு​கள் ஓட​வும்,​ நீர்​வாழ் உயி​ரி​னங்​கள் அவற்​றில் காணப்​ப​டும் சூழல் மீண்​டும் வர​வேண்​டும். இது முக்​கி​ய​மான பணி என்​ப​தி​லும்,​ இதை எப்​பாடு பட்​டா​கி​லும் செய்​தாக வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்​து​கள் இருக்க முடி​யாது. இருப்​பி​னும்,​ இத்​திட்​டம் வெற்றி பெற வேண்​டு​மா​னால்,​ இது தேர்​தல் கால அர​சி​யல் பிர​சா​ர​மாக மாறு​வ​தைத் தவிர்க்க வேண்​டும். இப்​ப​டிச் சொல்​லக் கார​ணம் இருக்​கி​றது. ​

சென்​னை​யின் நதி​க​ளைத் தூய்​மைப்​ப​டுத்​தும் பணிக்கு குறைந்​த​பட்​சம் 10 ஆண்​டு​கள் தேவை. இதற்​குள் 3 சட்​டப்​பே​ரவை தேர்​தல்​க​ளை​யும் 2 உள்​ளாட்​சித் தேர்​தல்​க​ளை​யும் சென்னை சந்​திக்க நேர​லாம். இத்​திட்​டம் அர​சி​யல் கட்​சி​யின் சாத​னை​யாக முன்​வைக்​கப்​ப​டு​மா​னால்,​ இத்​திட்​டத்தை எதிர்க்​கட்​சி​கள் குறை​கூ​றும்,​ விமர்​சிக்​கும் என்​ப​தோடு,​ ஆட்சி மாற்​றம் ஏற்​ப​டு​மே​யா​னால்,​ இத்​திட்​டத்தை முற்​றி​லு​மா​கப் புறக்​க​ணிப்​பார்​கள்,​ கிடப்​பில் போடு​வார்​கள். இத​னால் மக்​க​ளுக்​கும் இழப்பு,​ சென்னை நக​ருக்​கும் இழப்பு.

சிங்​கப்​பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்​தான். இந்த நதி கூவம் போல மிக​மிக மோச​மா​காத நிலை​யி​லேயே,​ 1977-ம் ஆண்​டில்,​ "சிங்​கப்​பூர் நதி மற்​றும் கலாங் கழி​மு​கத் தூய்​மைத் திட்​டம்' தொடங்​கப்​பட்டு 10 ஆண்டு கால அவ​கா​சத்​தில் முடிக்​கத் திட்​ட​மி​டப்​பட்டு,​ அதன்​படி சிறப்​பா​கச் செய்து முடிக்​கப்​பட்​ட​தன் முழு​மு​தற் கார​ணம்-​ அது அர​சி​யல் வெற்​றி​யாக ஆக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான். சிங்​கப்​பூர் நதி​யின் கரை​யி​லும் கழி​மு​கப் பகு​தி​யி​லும் குடி​யி​ருந்த 26,000 ஏழைக் குடும்​பங்​கள் பார​பட்​ச​மின்றி ஊருக்கு வெளியே குடி​ய​மர்த்​தப்​பட்​ட​னர். 2,800 குடி​சைத்​தொ​ழில் மற்​றும் சிறு​தொ​ழில்​கூ​டங்​க​ளும் ஊருக்கு வெளியே அனுப்​பப்​பட்​டன. நடை​பாதை வணி​கர்​கள்,​ தெரு​வோர உண​வ​கங்​கள் எல்​லா​மும் கழி​வு​நீர் போக்​கி​கள் கொண்ட தனி​யி​டங்​க​ளுக்கு மாற்​றப்​பட்​டன. பிளாஸ்​டிக் பொருள் போன்ற திடக்​க​ழி​வு​கள் சிங்​கப்​பூர் நதி​யில் கலக்​கா​த​படி சிறப்​புத் தடுப்பு அமைப்​பு​கள் கரை​யோ​ரங்​க​ளில் ஏற்​ப​டுத்​தப்​பட்​டன. இதற்​கான திட்​டச் செலவு 20 கோடி டாலர்​கள்.

​ ​ கூவத்தை அதன் உற்​பத்தி இடத்தி​லி​ருந்து கழி​மு​கம் வரை சுமார் 65 கி.மீ. தொலை​வுக்​குத் தூய்​மைப்​ப​டுத்​த​வும்,​ அடை​யாறு ​(சுமார் 48 கி.மீ.), பக்​கிங்​காம் கால்​வாய் எல்​லா​வற்​றி​லும் உள்ள ஆக்​கி​ர​மிப்​பை​யும் குடி​சைப் பகு​தி​க​ளை​யும் நீக்க வேண்​டு​மா​னால் மிகக் குறைந்​த​பட்​சம் ஒரு லட்​சம் குடி​சை​களை அகற்றி,​ புற​ந​கர்ப் பகு​தி​யில் மாற்​றி​டம் தந்​தாக வேண்​டும். பல்​வேறு ஆக்​கி​ர​மிப்​பு​கள் அகற்​றப்​பட வேண்​டும். தொழில்​நி​று​வ​னம் மற்​றும் மருத்​து​வ​ம​னைக் கழி​வு​கள் இதில் கலப்​ப​தைத் தடுக்க வேண்​டும். இத்​த​னை​யும் செய்ய வேண்​டு​மா​னால்,​ அர​சி​யல் சாய்வு இல்​லாத அர​சின் உறு​திப்​பாடு தேவை. வாக்கு வங்​கி​கள் பற்​றிய எந்த நினைப்​பும் இல்​லா​மல்,​ கட​மை​யைச் செய்​யும் உணர்வு மட்​டுமே இருந்​தால்​தான் இத்​திட்​டம் வெற்றி அடை​யும்.

​ ​ மேலும்,​ தமி​ழ​கத்​தின் தலை​ந​க​ர​மா​கிய சென்னை பெரு​ந​க​ரின் நதி​க​ளுக்கு மட்​டும் ஆணை​யம் அமைத்​தி​ருப்​ப​தைக் காட்​டி​லும்,​ ஏன் தமி​ழக நதி​கள் ஆணை​யம் என ​ அமைக்​க​வில்லை என்​பது சற்று வருத்​தம் தரு​கி​றது. தமி​ழ​கத்​தின் நதி​கள் அனைத்​துமே ஏறக்​கு​றைய கூவம்,​ அடை​யாறு போல தூய்மை கெட்​டுப்​போய் கிடக்​கின்​றன. மணல்​கொள்​ளை​யா​லும் தொழில்​து​றைக் கழி​வு​க​ளா​லும் மேனி மெலிந்து,​ நோயுற்​றுக் கிடக்​கின்​றன. இவற்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்​து​வது தமி​ழக அர​சின் பணி​தானே?​

​ ​ வாஷிங்​ட​னுக்கு ஒரு பொட்​டோ​மேக். லண்​ட​னுக்கு ஒரு தேம்ஸ். பாரீ​சுக்கு ​ ஒரு ரைன். சென்​னைக்கு ஒரு கூவம் என்​கிற நிலை ஏற்​பட வேண்​டும் என்​பது முதல்​வர் கரு​ணா​நி​தி​யு​டைய கனவு மட்​டு​மல்ல. ஒவ்​வொரு சென்​னை​வா​சி​யின் கன​வும்​கூட. நல்​ல​தொரு முயற்சி துணை முதல்​வர் தலை​மை​யில் செயல்​ப​டத் தயா​ரா​கி​றது. இந்த ஆக்​க​பூர்​வ​மான திட்​டம் அர​சி​ய​லாக்​கப்​ப​டக் கூடாது!
நன்றி : தினமணி

துபாய் நெருக்கடியால் பாதிப்பில்லை : உலக வங்கித் தலைவர்

துபாய் நெருக்கடி சமாளிக்கக் கூடிய அளவு சாதாரணமானது தான் எனவும், இதனால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார் உலக வங்கி குழும தலைவர் ராபர்ட் சோயல்லிக். டில்லியில் திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவை சந்தித்த பிறகு அவர் கூறுகையில், 'நிதி நெருக்கடி காரணமாக துபாயில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சமாளிக்கக் கூடிய அளவுக்கு சாதாரண பிரச்சினை தான். இதில் இந்தியாவுக்கோ, அதன் தொழிலாளர்களுக்கோ பெரும் பாதிப்பு என்று சொல்ல முடியாது.'என கூறியுள்ளார். மேலும், 'உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாய் இருக்கும். சீனாவும் இந்தியாவும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, உலகின் முக்கிய சக்தியாகத் திகழ்ந்தவை. இப்போது மீண்டும் அவை தங்கள் பழைய ஆதிக்கத் தன்மையைப் பெறுவதில் ஆச்சரியமில்லை. இந்தியா தனது நிதியியல் கொள்கையை நிலைப்படுத்தினால் மேலும் பல பிரமிக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம்' என தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


உலக பொருளாதார நெருக்கடி: நோபல் பரிசு தொகை குறைப்பு

உலகின் உயரிய சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு வழங்கும் திட்டத்தை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்பர்ட் நோபல் என்பவர் 1901ம் ஆண்டு உருவாக்கினார். இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி பரிசை தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தார். இதற்காக குறிப்பிட்ட தொகை வங்கிகளிலும், பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் இருந்து வரும் வருமானம் மூலம் பரிசு தொகை வழங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் ரூ.7 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் உலக பொருளாதார மாற்றங்கள் காரணமாக நோபல் அமைப்புக்கு வரவேண்டிய வருமானம் குறைந்துவிட்டது. எனவே இனிவரும் காலங்களில் நோபல் பரிசு தொகையை குறைத்து வழங்க திட்டமிட்டு உள்ளனர். இது பற்றி நோபல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஷால்மர் கூறும்போது, “எதிர் காலத்தில் பரிசு தொகையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதை தவிர்க்க முயற்சித்து வருகிறோம். ஆனால் நிலைமை சீராகும் வாய்ப்பு குறைவாக உள்ளது” என்றார்.
நன்றி : தினமலர்