Showing posts with label வாகனம். Show all posts
Showing posts with label வாகனம். Show all posts

Wednesday, January 20, 2010

கார்களை மிஞ்சுது சைக்கிள் விலை

பயணம் செய்வதற்கு மட்டுமல்லாமல் உடற்பயிற்சி, மலை ஏற்றம் போன்றவற்றுக்கு பயன்படும் சைக்கிள்கள், 2.5 லட்ச ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்ற காலம் மலையேறி விட்டது. தற்போது, சர்வதேச கண்ணோட்டத்தில் சைக்கிள்கள் வடிவமைக்கப்படுவதால் அவற்றின் விலை, 2.5 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது.

டில்லியில் சமீபத்தில் பல்வேறு வாகனங்களின் கண்காட்சி நடந்தது. விதவிதமான கார்கள், டூவீலர்கள் இந்த கண்காட்சியை அலங்கரித்தன. தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற பாணியில் சைக்கிள் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை, இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தன. இந்த கண்காட்சியில் ஹீரோ, ஹெர்குலஸ், பி.எஸ்.ஏ., ரேலி, பியான்சி, அடிடாஸ், பயர்பாக்ஸ், ட்ரெக் உள்ளிட்ட சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தன. பயர் பாக்ஸ் நிறுவன அதிகாரி அஜித் காந்தி குறிப்பிடுகையில், 'தற்போது சைக்கிள்கள் உடற்பயிற்சிக்காகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரத்துக்கும், சண்டை காட்சிகளில் பயன்படுத்தவும் வாங்கப்படுகிறது. சைக்கிள் பயணம் செய்வதற்கு மட்டுமே, என்ற நிலை மாறி விட்டது' என்றார். அடிடாஸ் நிறுவன மேலாளர் ரித்திஷ் அரோரா குறிப்பிடுகையில், 'ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து எங்கள் நிறுவனம் பல்வேறு வகையான சைக்கிள்களை தயாரித்து வருகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் இடறாமல், தடுமாறாமல் செல்வதற்குரிய டயர்களை பயன்படுத்தி, ஏராளமான கியர்களை கொண்ட சைக்கிள்களை தயாரித்துள்ளோம். இவற்றின் விலை, ஆறாயிரம் முதல் இரண்டரை லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது' என்றார்.

நன்றி : தினமலர்


Tuesday, January 19, 2010

மாருதி சுசூகியின் 'ஈக்கோ' குடும்ப கார்


இந்தியாவில் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகி, ஆறு வண்ணங்களில் புதிய குடும்பக் காரான, 'ஈக்கோ'வை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசூகியின் ஈக்கோ, ஐந்து கதவுகளை கொண்ட, 'சி' பிரிவு கார். இந்தியாவிற்காக இக்காரை மாருதி நிறுவனம் மாறுபட்ட வடிவமைப்புடன் ஏழு சீட்டுகள் மற்றும் ஐந்து சீட்டுகள் கொண்ட ஈக்கோ குடும்பக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்டைலாகவும், அதிக இடவசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈக்கோவில் புதிய சக்தி வாய்ந்த நான்கு சிலிண்டர் 1,200 சி.சி., இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 15.1 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்யலாம். மெட்டாலிக் கிஸ்டெனிங் கிரே, மெட்டாலிக் சில்கி சில்வர், மெட்டாலிக் மிட்னைட் பிளாக், மெட்டாலிக் ப்ளூ பிளேஸ், பிரைட் ரெட் மற்றும் சூப்பிரியர் ஒயிட் என ஆறு வண்ணங்களில் இக்கார்கள் உள்ளன. ஈக்கோவில் முன், நடு மற்றும் பின்பக்க சீட்டுகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் பெரியதாகவும், வர்த்தகத்திற்கு ஏற்றதாகவும் இரட்டை நோக்கங்களை ஈக்கோ நிறைவேற்றுகிறது என்று மாருதி சுசூகி நிறுவன மண்டல மேலாளர் சந்தா, வர்த்தக மேலாளர் மனோகர் பட் ஆகியோர் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்


Thursday, January 14, 2010

செல்' இன்றிச் செல்!

பணியின்போது அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது.

÷சாலை விபத்துக்கான முக்கிய காரணிகளில் செல்போனும் ஒன்று. சாலைகளில் மட்டுமல்ல, தண்டவாளத்தைக் கடக்கும்போதுகூட செல்போன் பேசும் அளவு நம் மக்களை அடிமைப்படுத்தியுள்ளது செல்போன். ஆதலால் இந்தத் தடை நிச்சயம் பலனளிக்கும்.

÷அதேநேரத்தில், செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிப்பது ஓட்டுநர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்; பணியின்போது செல்போன் பேச வேண்டுமானால் தடை விதிக்கலாம்; செல்போனே எடுத்துச் செல்லத் தடை விதிக்கக் கூடாது என சில போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் சமரசத்துக்கு இடம் அளித்தால் இந்த உத்தரவே நீர்த்துப்போகும்.

÷போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேச செல்போன் அவசியம் என்று கருதினால், நடத்துநர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஓட்டுநர்கள் தொடர்புகொள்ள செல்போன் அவசியம் என்று வாதிடுவது நியாயமல்ல. அரசு சட்டம் இயற்றினால் அதில் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது.

÷செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதன்படி எடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. எல்லா சாலைகளிலும் யாராவது சிலர் செல்போன் பேசிக்கொண்டேதான் வாகனத்தை இயக்குகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் எப்போதாவது போலீஸ் பிடியில் சிக்குகின்றனர். செல்போன் பேசிக்கொண்டே கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.

÷பொது இடத்தில் புகைபிடிக்க, எச்சில் துப்பத் தடைவிதித்து அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவு நடைமுறையில் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. தொடர்ச்சியான கண்காணிப்பு, கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே அரசின் சட்டங்கள் மீறப்படுவதற்கு முதற்காரணம்.

÷அதேபோன்ற நிலைமை இந்த விஷயத்திலும் ஆகிவிடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் செல்போன் கொண்டு செல்கின்றனரா என்பது டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிவிலக்கும் அளிக்காமல் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

÷மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் என்பதுடன் நின்றுவிடாமல், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதிக்க வேண்டும்.

÷தனியார் பேருந்துகள் சிறப்பான சேவையை அளித்தாலும், அதிக வேகம், தொழில்போட்டியால் விதிமீறல் என அவைகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன. எனவே, இந்தக் கண்காணிப்பு வளையத்துக்குள் தனியார் பேருந்து ஓட்டுநர்களும் கொண்டுவரப்பட வேண்டும்.

÷அதேபோல அரசு அலுவலகங்களிலும் பணியின்போது ஊழியர்கள் செல்போன் பேச சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர், காத்துக்கிடக்கும் பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் செல்போனில் வெட்டியாகப் பேசி அரட்டை அடிப்பது கண்கூடு. இதனால், பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஏதாவது ஒரு காரணத்துக்காக அலுவலகங்களுக்கு வந்திருக்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

÷அறிவியல் முன்னேற்றத்தின் அற்புதம் செல்போன். அதன் வருகைக்குப் பின்னர் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியே ஏற்பட்டு, இன்று "செல் இல்லாதோர்க்கு இவ்வுலக வாழ்க்கையே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், அந்த நாகரிகப் புரட்சியே தனிமனித வாழ்வில் ஒரு மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. செல்போனால் எந்த அளவு பயன் உள்ளதோ அதே அளவு பாதிப்புகளும் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. செல்போனால், மாணவிகளுக்குப் பல்வேறு மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. உச்சகட்டமாக, ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிக்கொண்டே செல்போன் பேசுவதால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

÷எனவே, செல்போன் பயன்பாட்டில் நிச்சயம் கட்டுப்பாடுகள் தேவை. அரசு சட்டம் போட்டுத்தான் அந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஏனெனில் என்னதான் சட்டம் இயற்றினாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற தனிமனித ஒழுக்கமே எந்த சட்டத்தையும் வெற்றி பெறச் செய்யும்.
கட்டுரையாளர் : எஸ்.ராஜாராம்
நன்றி : தினமணி

Tuesday, January 12, 2010

களை கட்டிய டில்லி ஆட்டோ எக்ஸ்போ: 20 லட்சம் பேர் பார்வையிட்டனர்

டில்லியில் ஜனவரி 6ம் தேதி தொடங்கிய 10வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கண்காட்சியை சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 25 நாடுகளை சேர்ந்த கார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் புதிய ரக கார்கள் பார்வைக்கு வைத்து, பார்வையாளர்களின் கண்களை விரிய வைத்தனர். சுமார் 2,100 அரங்களை கொண்ட இந்த கண்காட்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும் வகையில், பேட்டரியில் இங்கும் கார்கள், காற்றை அதிக மாசுபடுத்தாத எரிவாயு தொழில்நுட்ப வாகனங்களை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. மொத்தம் 25 புதிய வாகனங்கள், கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய கார்கள், பைக்குகள் அட்டகாச அறிமுகம் :களை கட்டிய டில்லி ஆட்டோ எக்ஸ்போ உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் 30 நாடுகளை சேர்ந்த 2,100 நிறுவனங்கள் பங்கேற்று புதிய கார்கள் மற்றும் பைக்குகளை அறிமுகப்படுத்தினர்.

டில்லி ஆட்டோ எக்ஸ்போ கடந்த 5ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு நடந்தது. இந்த கண்காட்சிக்கு இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் ஏற்பாடு செய்து இருந்தன. உலகளவில், கார் மற்றும் பைக்குகள் விற்பனை சந்தையில் இந்தியா முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளின் விற்றுமுதல் தற்போது ரூ.90 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும், இந்தியாவில் புதிய கார்கள் மற்றும் பைக்குகள் விற்பனையில் சில மாதங்களுக்கு மட்டுமே தொய்வு நிலை காணப்பட்டது. 2009ம் ஆண்டு தொடக்கம் முதல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தான், டில்லியில் ஆட்டோ எக்ஸ்போ நடந்துள்ளது. இதில் 30 நாடுகளை சேர்ந்த 2,100 நிறுவனங்கள் புதிய கார்களையும், பைக்குகளையும் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளனர். இந்த கண்காட்சியில், வர்த்தக வாகனங்களும், பைக்குகளும், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய கார்கள் பற்றிய விவரம் வருமாறு:

வோக்ஸ்வாகன் போலோ: ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வாகன் நிறுவனம், கண்காட்சியில் போலோ காரை அறிமுகப்படுத்தியது. சிறிய கார்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள போலோ கார், இந்தியாவில் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. 1200 சிசி பெட்ரோல், 1200 சிசி டீஸல் என இரண்டு இன்ஜின்கள் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், நிஸான் நிறுவனத்தின் மைக்ரா ஆகிய கார்களுக்கு, போலோ கார் கடும் போட்டியை அளிக்கும்.

ஜெனரல் மோட்டார்ஸ் பீட்: அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பீட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இது விற்பனையிலும் உள்ளது. தற்போது 1200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட பீட் கார் விற்பனையில் உள்ளது. 1000 சிசி திறன் கொண்ட டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்ட பீட் கார், இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது. பீட் காரின் விலை ரூ.3.34 லட்சம் முதல் ரூ.3.99 லட்சம் வரை( எக்ஸ்ஷோரூம் டில்லி) உள்ளது. பீட் கார், ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ10, மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ, நிஸான் நிறுவனத்தின் மைக்ரா கார்களுக்கு கடும் போட்டியை தரும்.

ஹோண்டாவின் புதிய கார்: ஹோண்டா நிறுவனம், '2சிவி' என்ற கோட்நேம் கொண்ட புதிய காரை கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இது, 1200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இதன் விலை ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். இந்த கார் ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் போலோ, டொயோட்டோ நிறுவனத்தின் இடியோஸ், மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், நிஸான் நிறுவனத்தின் மைக்ரா கார்களுக்கு சவாலாக இருக்கும்.

டொயோட்டோ இடியோஸ்: ஜப்பானின் டொயோட்டோ நிறுவனம், இடியோஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பரில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, வோக்ஸ்வாகனின் போலோ, மாருதியின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், இந்தியாவில் ஜூலையில் அறிமுகமாக உள்ள நிஸானின் மைக்ரா கார்களுக்கு கடும் போட்டியை தரும்.
அசத்தலான சொகுசு கார்கள் அறிமுகம்
டில்லி கண்காட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் போட்டு போட்டுக் கொண்டு சொகுசு கார்களையும் அறிமுகப்படுத்தின. அதன் விவரம் வருமாறு:

மாருதி புதிய கார்: மாருதி சுசூகி நிறுவனம் 'ஆர்ஐஐஐ' என்ற கோட்நேமுடன், ஆறு இருக்கைகள் கொண்ட புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மல்டி பர்ப்பஸ் வைக்கிள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

ஸ்கோடா யெடி: ஜெர்மனியின் ஸ்கோடா நிறுவனத்தின் யெடி கார் தான் கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ஸ்போர்ட்ஸ் யுடிலிட்ட வைக்கிள் வரிசையில் இந்த கார் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் மத்திய பகுதியில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இரண்டு லிட்டர் டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டது. இதன் விலையை ஸ்கோடா நிறுவனம் அறிவிக்கவில்லை. எனினும், ரூ.14 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆரியா, பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் எக்ஸ்1, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கேமரோ போன்ற கார்களும் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன.
நன்றி : தினமலர்

Friday, January 8, 2010

வாய்ச்சொல் பலன் தராது...

அரசுப் பேருந்து ஒட்டுநர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டக்கூடாது என்ற தடை பாராட்டுக்குரியது. தமிழகப் போக்குவரத்துத் துறையின் இந்த உத்தரவை, பல்வேறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்களும் வரவேற்றுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிச்சென்றதே 9 குழந்தைகள் இறந்த விபத்துக்குக் காரணம் என்பதால், அதன் எதிரொலியாக இந்தத் தடை அறிவிக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும், இந்தத் தடை, காலத்தின் கட்டாயம். மிகமிக அவசியமானதுதான்.
பணியின்போது ஓர் ஓட்டுநர் தன் கைவசம் செல்போன் வைத்திருக்கக் கூடாது என்ற விதிமுறையால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியாது. கடுமையான தண்டனைகள் என்பது வெறுமனே ஒரு வார கால பணியிடை நீக்கம், ஊதிய உயர்வு நிறுத்தம் என்பதாக இருப்பது மட்டும் பணியில் செல்போன் பேசும் பழக்கத்தைத் தடுத்துவிடாது. பேருந்தில் நம்மை நம்பித்தான் சுமார் ஐம்பது பயணிகள் அமர்ந்து வருகிறார்கள், அவர்கள் வாழ்க்கை நம் கையில் இருக்கிறது என்ற அச்சமும் பொறுப்புணர்வும் இல்லாவிட்டால், தம்மிடம் செல்போன் இல்லாதபோதிலும்கூட, நடத்துநர் அல்லது உடன் வரும் சகஊழியர் வைத்திருக்கும் செல்போனைப் பயன்படுத்தவே முற்படுவார்கள்.

மேலும், விபத்து என்பது தனிப்பட்ட ஒரு வாகனம் மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருப்பதில்லை. பெரும்பாலும் இரண்டு வாகனங்கள் மோதிக்கொள்வதாகவே இருக்கின்றன. அரசுப் பேருந்து ஓட்டுநர் மட்டும் செல்போன் பேசாமல் வண்டி ஓட்டினாலும், எதிரில் நடந்து வருபவர் அல்லது வாகனம் ஓட்டி வருபவர் செல்போன் பேசியபடி வந்தாலும் விபத்து நேரிடவே செய்யும். தனியார் போக்குவரத்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களும் இந்த விதிமுறையைச் சரியாகப் பின்பற்றாவிட்டால், இதை அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு மட்டும் அமல்படுத்துவதால் முழுப்பயன் கிடைக்காது.

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது என்பதும் அவ்வாறு பேசுவது போக்குவரத்து விதியை மீறும் செயல் என்பதும் தற்போதும் நடைமுறையில் உள்ள விதிமுறைதான். இருப்பினும் பொதுவாக வாகன ஓட்டுநர்கள் ஒருவர்கூட இதைப் பின்பற்றுவதில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்வோர்கூட, காதுக்கும் தோளுக்கும் இடையில் செல்போனை வைத்துக்கொண்டு கழுத்து ஒடியப் பேசிச் செல்வதை அன்றாட வாழ்க்கையில் நூறு மீட்டருக்கு ஒரு நபரைக் காண முடியும் என்பதாகவே இன்றைய தமிழகத்தின் போக்குவரத்து நிலைமை இருக்கிறது. இதைப் போக்குவரத்துப் போலீஸôரால் ஏன் தடுக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்தில் இதுநாள் வரை செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிச் சென்றதற்காக எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது?

வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசியபடி செல்லும் மிக ஆபத்தான கொடிய வழக்கம் ஒழிய வேண்டுமென்றால், அதைக் காவல்துறையால் மட்டுமே செய்ய முடியும். இதுபோன்ற உயிர்காக்கும் உயர் நடவடிக்கை வேறு எதுவாகவும் இருந்துவிட முடியாது. விபத்து நேர்வுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றான இச்செயலையும் மிகஆபத்தானதாக அறிவித்து ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை மட்டுமே இந்தப் பழக்கத்தை ஒழிக்க உதவும்.

ஹெல்மட் விவகாரத்தில் அரசு இரண்டும்கெட்ட நிலைப்பாட்டை மேற்கொண்டதைப் போல, செல்போன் விவகாரத்திலும் நடந்துகொள்ளக்கூடாது. ஹெல்மட் அணியாவிட்டால் அதை அணியாதவருக்கு மட்டுமே பாதிப்பு. செல்போன் அப்படியல்ல. விபத்தில் சாகிறவர் அல்லது காயமடைபவர் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய நபர் மட்டுமல்ல. அப்பாவியாக எதிரில் வந்தவரும்தான். சக மனிதனின் உயிர் பற்றிய அக்கறை இல்லாமல் தன் கவனத்தைச் சிதறவிட்டு வாகனம் ஓட்டுபவரின் உரிமத்தை ரத்து செய்வதைத் தவிர வேறு எந்தவிதமான தண்டனையும் இந்தப் பழக்கத்தை நீக்கிவிடாது.

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது அல்லது ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக்கொண்டு வாகனம் ஓட்டியதால்தான் விபத்து நேரிட்டது என்பது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்படுமெனில் விபத்துக் காப்பீடுகள் பெற இயலாது என்பதையும் போக்குவரத்து விதிகளில் சேர்க்க வேண்டும்.

ஒரு நெடுஞ்சாலையில், அல்லது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் பறந்து கொண்டிருக்கும் நாற்கரச் சாலையில், பழுதான வாகனங்களுக்கு கண்மறைப்பை ஏற்படுத்தாமல் எப்படி, எந்த இடத்தில் நிறுத்துவது, பழுதான விவரத்தை பலநூறு மீட்டர் தொலைவுக்கு முன்பே அறிவிப்பு செய்து மற்ற வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவுவது எப்படி, இரவு நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்கிற அடிப்படை விஷயங்கள்கூட இன்றைய ஓட்டுநர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதால்தான் வாரத்துக்கு இரண்டு சம்பவங்களில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பின்னால் வந்த வாகனம் மோதி மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாகனங்களை ஆங்காங்கே அப்படியே நிறுத்திவிடும் ஓட்டுநர் மனநிலையைப் போக்க முற்படாத, ஹைவேஸ் பேட்ரோலிங் எதற்காக?

காவல்துறை இவ்விஷயத்தில் விதிமுறையைக் கடுமையாக அமல்படுத்துவது ஒருபுறம் இருக்க, வட்டாரப் போக்குவரத்துக் கழகத்துக்கும் மிகப்பெரும் பொறுப்பு உள்ளது. ஓட்டுநர் உரிமம் அளிக்கும் முன்பாக, ஒரு விபத்து நடந்தால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், குடும்பங்கள் எப்படிச் சிதைகின்றன, நாட்டின் பொருளாதாரத்தை அது எப்படிப் பாதிக்கிறது, ஊனமடைபவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது குறித்து ஒரு செயல்விளக்க வகுப்புக்கூட நடத்தாமல், கண்மூடித்தனமாக ஓட்டுநர் உரிமங்களை, டிரைவிங் ஸ்கூல் சொல்கிறபடி, அள்ளி வழங்கும் முறை தவிர்க்கப்படாதவரை சாலை விபத்துகள் குறைய வாய்ப்பில்லை. சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தாமல் வெறுமனே ஓட்டுநர் உரிமத்தை மட்டுமே வழங்குவதால் என்ன பயன்?

நன்றி : தினமணி

Tuesday, December 22, 2009

சொந்தமாக இரண்டு காரா? கூடுதல் வரி கட்டணும்

தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நகரத்தின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இப்பிரச்னை தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து நெரிசலில் கார்களின் பங்கு 30 சதவீதம், இருசக்கர வாகனங்களின் பங்கு 62 சதவீதம் என கவலை தெரிவிக்கப்பட்டது.
இத்துடன் போக்குவரத்து போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஷ் பாவா, நீதிபதிகளிடம் தெரிவித்ததாவது;
டில்லியில் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர், ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை சொந்தமாக வைத்துள்ளனர். வாகன நெரிசலுக்கு இதுவே முக்கிய காரணம். எனவே, வாகன பதிவை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு, சாலை வரி, பார்க்கிங் சார்ஜ் உள்பட பல வழிகளில் கூடுதல் வரி விதிப்பது பற்றி மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது.
இவ்வாறு விகாஷ் பாவா தெரிவித்தார். இதையடுத்து இதற்கு தகுந்தவாறு ஒரு சட்டத்திருத்தம் கொண்ட வர மாநில அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி : தினமலர்


Friday, December 18, 2009

எரிவாயு, பேட்டரியில் இயக்கும் முதல் பைக் அறிமுகம்

எரிவாயு மற்றும் பேட்டரியில் இயக்கும் முதல் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பெங்களூரில் அறிமுகம் செய்யப் பட்டது. சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத உலகின் முதல் நவீன பைக் இதுவாகும். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து, ஈகோ வெஹிகில்ஸ் நிறுவனம், இடி120 மற்றும் ஸ்டிரைக் என்ற பெயர்களில் இந்த இருசக்கர வாகனங்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. இது பெட்ரோலை ‌போல இரண்டு மடங்கு மைலேஜ் வழங்குகிறது. இது எரிவாயு மற்றும் பேட்டரியில் இயக்குமாறும், 120 சிசி திறன் பைக் குறைவான அளவு கார்பனை வெளியிடுமாறும் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பைக்குகளை காஸ் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட இரண்டினாலும் இயக்கலாம். நடுவழியில் சார்ஜ் தீர்ந்து விட்டாலும் ‌எரிவாயு மூலம் இயக்கலாம் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


Thursday, December 10, 2009

பெற்றோர்க்கும் பொறுப்பு உண்டு

அதிக எண்​ணிக்​கை​யில் பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​றிச் செல்​லும் வேன்​க​ளின் பர்​மிட் ரத்து ​ செய்​யப்​ப​டும் என்று தமி​ழ​கப் போக்​கு​வ​ரத்​துத் துறை அறி​வித்​துள்​ளது.​ சில இடங்​க​ளில் நட​வ​டிக்​கை​யி​லும் இறங்​கி​யுள்​ளது.​ ​

இது ஏதோ புதிய நட​வ​டிக்கை அல்​லது புதிய அர​சாணை போல தோற்​றம் தந்​தா​லும்,​​ அழு​கிற குழந்​தைக்​குப் பழைய கிலு​கி​லுப்​பை​யைக் காட்டி சமா​தா​னம் செய்​வ​தைப் போன்று,​​ வேதா​ரண்​யம் விபத்​தில் பள்​ளிக் குழந்​தை​கள் பலி​யான சம்​ப​வத்​தால் கொதித்​துப் போயி​ருக்​கும் சமூக மன​இ​றுக்​கத்​தைத் தளர்த்​தும் உத்​தி​யாக இந்த அறி​விப்​பைச் செய்​துள்​ளார்​கள்.​ அனு​ம​திக்​கப்​பட்ட எண்​ணிக்​கை​யைக் காட்​டி​லும் அதி​க​மான பய​ணி​களை ஏற்​றிச் செல்​லும் எந்​த​வொரு வாக​னத்​தின் பர்​மிட்​டை​யும் ரத்து செய்து,​​ வாகன ஓட்​டு​நர் மீது நட​வ​டிக்கை எடுக்​கச் சட்​டத்​தில் ஏற்​கெ​னவே இட​மி​ருந்​தா​லும் இத்​தனை கால​மாக ஏன் நட​வ​டிக்கை எடுக்​க​வில்லை என்ற கேள்வி எழும் முன்​பா​கவே,​​ இது​போன்ற ஓர் அறி​விப்​பின் மூலம்,​​ இனி​மேல் எல்​லாம் சரி​யா​கி​வி​டும் என்ற எண்​ணத்​தைத் தோற்​று​விப்​ப​து​தான் இந்த அறி​விப்​பின் நோக்​கம்.​

பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​றிச் செல்​லும் பள்ளி பஸ்​கள்,​​ தனி​யார் வேன்​கள்,​​ ஆட்​டோக்​கள் எல்​லா​மும் இத்​தனை நாளும் அள​வுக்கு அதி​க​மான எண்​ணிக்​கை​யில் குழந்​தை​களை ஏற்​றிச் சென்று கொண்​டி​ருந்​தா​லும்,​​ போக்​கு​வ​ரத்​துத் துறையோ அல்​லது காவல்​து​றையோ எந்த நட​வ​டிக்​கை​யும் எடுக்​கா​த​தற்​குக் கார​ணம் எல்​லா​ரும் அறிந்​த​து​தான்.​

இத்​த​கைய நிகழ்​வு​க​ளில் மிகப்​பெ​ரும் மெüனக் குற்​ற​வா​ளி​கள் பெற்​றோர்​கள்​தான் என்​பதை நாம் மறந்​து​வி​டு​கி​றோம்.​ பூக்​களை கூடை​யில் அள்​ளிப்​போ​டு​வ​தைப் போல ஆட்​டோக்​க​ளி​லும் வேன்​க​ளி​லும் ஏற்​றி​விட்டு வரும் பெற்​றோரை எந்த வகை​யில் குற்​ற​வா​ளி​கள் அல்ல என்று சொல்ல முடி​யும்?​ ஆட்டோ அல்​லது வேன் சாதா​ர​ண​மாக சாய்ந்​தா​லும்​கூட எத்​தனை குழந்​தை​கள் நெரிச​லில் சிக்கி எலும்பு முறி​யும்,​​ உயிரை இழக்​கும் என்​பது தெரிந்​தி​ருந்​தும்​கூட,​​ அந்த வாக​னங்​க​ளில் ஏற்றி அனுப்​பும் பெற்​றோ​ரின் அறி​யா​மையை எப்​ப​டிப் பொறுத்​துக்​கொள்​வது?​

"பள்ளி வெகு​தொ​லை​வில் உள்​ளது,​​ எங்​க​ளால் குழந்​தை​க​ளைக் கொண்​டு​போய் விட்​டு​விட்டு வேலைக்​குச் செல்ல இய​லாது' என்​ப​தும்,​​ "அள​வான எண்​ணிக்​கை​யில் குழந்​தை​களை ஏற்​றிச் செல்​லும் ஆட்டோ அல்​லது வேன்​க​ளில் மாதக் கட்​ட​ணம் அதி​கம்' என்​ப​தும்​தான் அவர்​கள் கூறும் கார​ணம்.​ தனி​யார் பள்​ளி​க​ளுக்கு கொட்​டி​ய​ழும் கல்​விக் கட்​ட​ணத்​தில் ஒப்​பி​டும்​போது,​​ குழந்​தை​க​ளின் பாது​காப்​புக்​கா​கச் ​ செல​வி​டும் கூடு​தல் தொகை மிகச் சிறி​து​தான் என்​ப​தைப் பெற்​றோர்​கள் உணர்​வ​தில்லை.​ ​

இது​போன்ற வாக​னங்​க​ளில் மட்​டு​மல்ல,​​ தங்​கள் குழந்​தை​களை ஸ்கூட்​ட​ரி​லும்,​​ மோட்​டார் சைக்​கி​ளி​லும் ஏற்​றிக்​கொண்டு பள்​ளிக் கதவை மூடும்​முன்​பா​கப் போய்ச் சேரு​வ​தற்​காக சாலை விதி​களை மீறும் பெற்​றோ​ரும் இருக்​கி​றார்​கள்.​ இவர்​கள் விபத்​துக்​குள்​ளா​கி​ற​போது,​​ பள்​ளிக் குழந்தை விபத்​தில் சாவு என்​கிற பச்​சா​தா​பச் செய்​தி​யாக மாறு​கி​றதே தவிர,​​ பள்​ளிக்கு நேர​மா​கி​விட்​ட​தால் சாலை விதி​களை காற்​றில் பறக்​க​விட்ட ஒரு தந்​தை​யின் அறி​யாமை பேசப்​ப​டு​வ​தில்லை.​ அண்​மை​யில்,​​ சாலை விபத்​தில் சிக்​கி​யும் ஸ்டி​ரெச்​ச​ரில் வந்து,​​ சிறப்பு அனு​ம​தி​யு​டன் தேர்வு எழு​திய மாணவி படத்​து​டன் செய்​தி​யாக்​கப்​பட்​டார்.​ ஆனால்,​​ அந்த விபத்​தின் தன்மை குறித்து யாருமே பேச​வில்லை.​

கல்​விக் கூடத்​தின் அரு​கி​லேயே குழந்​தை​கள் வசிக்க வேண்​டும் என்​பது நகர்ப்​பு​றங்​க​ளில் சாத்​தி​ய​மில்லை.​ ஆனால்,​​ இத்​த​கைய சிக்​க​லைத் தீர்க்க வெறு​மனே வாக​னச் சோதனை என்​கிற கண்​து​டைப்​பைக் காட்​டி​லும் வேறு நல்ல நட​வ​டிக்​கை​களை அரசு மேற்​கொள்​ள​லாம்.​

தனி​யார் பள்​ளி​க​ளில் பஸ் வசதி இருந்​தும்​கூட,​​ வேன்​க​ளி​லும் ஆட்​டோக்​க​ளி​லும் குழந்​தை​களை அனுப்​பக் கார​ணம் பள்ளி பஸ்​க​ளின் கட்​ட​ணம் மிக​அ​தி​க​மாக இருப்​ப​து​தான்.​ மாதம் ரூ.300,​ ரூ.400 மிச்​சம்​பி​டித்​து​வி​ட​லாம் என்ற நடுத்​த​ரக் குடும்ப மன​நி​லை​தான் இத்​த​கைய பாது​காப்​பாற்ற சூழ​லுக்கு உடன்​பட வைக்​கி​றது.​

தனி​யார் பள்​ளி​க​ளில் படிக்​கும் மாண​வர்​கள் எண்​ணிக்கை,​​ வெகு தொலைவி​லி​ருந்து வரும் மாண​வர்​கள் எண்​ணிக்கை ஆகி​ய​வற்றை கல்​வித் துறை கணக்​கெ​டுத்து,​​ ஒவ்​வொரு தனி​யார் பள்​ளி​க​ளும் கட்​டா​ய​மாக வைத்​தி​ருக்க வேண்​டிய பஸ்​க​ளின் எண்​ணிக்​கை​யைத் தீர்​மா​னிப்​ப​தும்,​​ அர​சுப் போக்​கு​வ​ரத்​துக் கழக பஸ்​க​ளுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட அதே கட்​ட​ணத்தை இக் குழந்​தை​க​ளி​டம் வசூ​லிக்க வேண்​டும் என்று கட்​டா​ய​மாக்​கு​வ​தும்​தான் இப்​பி​ரச்​னைக்கு குறைந்​த​பட்​சத் தீர்​வாக அமை​யும்.​

அரசு போக்​கு​வ​ரத்​துக் கழ​கங்​களே இந்​தப் பள்ளி வாக​னச் சேவை​யில் ஈடு​ப​ட​லாம் என்று பரிந்​து​ரைக்​கத் தோன்​றி​னா​லும்,​​ இல​வச பஸ் பாஸ் பெற்ற பள்ளி மாண​வர்​களை,​​ அர​சுப் போக்​கு​வ​ரத்​துக் கழக பஸ் நடத்​து​நர்​க​ளும் ஓட்​டு​நர்​க​ளும் அலைக்​க​ழிப்​ப​தைப் பார்த்​தால் ​ அத்​த​கைய பரிந்​து​ரை​க​ளைச் சொல்ல மனம் வரு​வ​தில்லை.​ இந்​தப் பள்​ளிக் குழந்​தை​களை இந்த நடத்​து​நர்​க​ளும் ஓட்​டு​நர்​க​ளும் ஓசி​யில் ஏற்​றிச் செல்​லப் போவ​தில்லை.​ இவர்​க​ளுக்​கான முழு கட்​ட​ணத்​தை​யும் மானி​ய​மாக பல கோடி ரூபாயை அரசு செலுத்​து​கி​றது.​ ஆனா​லும்,​​ இந்​தக் குழந்​தை​க​ளைக் கண்​ட​வு​டன் பஸ்ûஸ நிறுத்​தா​மல் கடந்​து​செல்​வ​தும்,​​ தள்​ளிப்​போய் நிறுத்​து​வ​தும்,​​ குழந்​தை​கள் தங்​கள் பாடப்​புத்​தக மூட்​டை​யு​டன் ஓடிப்​போய் ஏறு​வ​தும் எல்லா நக​ரங்​க​ளி​லும் வெட்​க​மில்​லா​மல் நடந்​து​கொண்டே இருக்​கி​றது.​ ஒரு பெற்​றோர்​கூட தட்​டிக் கேட்​ப​தில்லை.​ இந்த ஓட்​டு​நர் நடத்​து​நர்​க​ளும்,​​ தங்​க​ளுக்​கும் ஒரு குழந்தை இருக்​கி​றது என்​பதை நினைப்​ப​தில்லை.
நன்றி : தினமணி

Tuesday, December 8, 2009

புதிய வரவாக டாடாவின் 'இன்டிகோ மான்ஸா '

வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஏற்ப டாடா நிறுவனம், 'இன்டிகோ மான்ஸா' எனும் புதிய ரக காரை அறிமுகப்படுத்தி உள்ளது. 2003ல் அறிமுகமான இன்டிகோவை விட நவீனப்படுத்தப்பட்ட காராக மான்ஸா ரக கார் வெளிவந்துள்ளது.
காரின் வெளிப்பகுதி, உட்பகுதி அழகான, எடுப்பான தோற்றத்தை கொண்டது. 4.4 மீட்டர் அகலம், 2,520 மி.மீட்டர் அகலம் கொண்ட சக்கரங்களால் கார் பெரிய அளவில் காணப்படுகிறது. முன்பக்கம் 3 பாரல்ட் ஹெட் லாம்புகள் உள்ளன. கார் கதவின் வெளிப்புற கைப்பிடி மீது பூசப்பட்டிருக்கும் குரோமியம், அதற்கு மேலும் சிறப்பை அளிக்கிறது.

பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மோனேவிதிக் ஆங்குலர் வடிவிலான விளக்குகள், பின்னால் வரும் வாகனங்கள் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளன. அதனுடைய டிரங்க் 460 லிட்டர் கொள்ளளவு உடையது, நீண்ட தூர பயணத்துக்கும் ஏற்றது.

மற்ற கார்களை விட, மான்ஸா ரக கார் ஓட்டுபவர்களுக்கும், உடன் பயணம் செய்பவர்களுக்கும் மனநிறைவை தரும். பின்புறம் உள்ள இருக்கைகளும் அவற்றின் நடுவில் இருக்கும் கை வைத்துக் கொள்ளும் இடம், வீட்டில் அமர்ந்திருப்பது போல் இருக்கும்.

டில்ட் அட்ஜஸ்டபிள் பவர் ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுனர் இருக்கை, மின்னியல் தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய வெளிப்புற ரேர்வியூ மிரர்களும் உள்ளன. கொலப்ஸிபிள் ஸ்டீரிங் காலம், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஃபிராண்ட் ஏர் பேக்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உண்டு. டாக்கோ மீட்டரில் சிவப்பு கோடு இருப்பதற்கு பதிலாக இன்ஜின் க்ரிடிகல் 'ஆர்பிஎம்'ஐத் தாண்டும்போது இண்டிகேட்டர் முள் சிவப்பாக மாறிவிடும். இன்ஜின்,சென்ட்ரல் லாக்கிங் பியூச்சர் ஆகியவை மேலும் பாதுகாப்பு அளிக்கின்றன.

ஏ.ஆர்.ஏ.ஐ., ஆல் சான்றளிக்கப்பட்ட குவாட்ரஜெட் டீஸல் ஒரு லிட்டருக்கு 21.02 கி.மீ., தூரம் கொடுக்கிறது. சபீர் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 14.5 கி.மீ தூரம் கொடுக்கிறது. மான்ஸா ரக காருக்கு இரண்டு ஆண்டு அல்லது 75 ஆயிரம் கி.மீ., உத்தரவாதம் தரப்படுகிறது. ஏழு நிறங்களில் வெளிவந்துள்ளது. 401 நகரங்களில் தற்போது விறுவிறுப்பான விற்பனையில் உள்ளன.

டாடா கார் ஷோ ரூம்களில் விற்பனையில் உள்ளன. பெட்ரோல் காரின் விலை 4.64 லட்சம் ரூபாய். டீஸல் காரின் விலை 6.56 லட்சம் ரூபாய். இப்போதுள்ள டாடா இன்டிகோ கார் ரகங்கள் இண்டிகோ சிஎஸ், எக்ஸல், மரினா போன்ற கார்களும் விற்பனையில் உள்ளன. டாடா இன்டிகோ வகை கார்கள் 3.73 லட்சம் ரூபாயில் இருந்து 6.56 லட்சம் ரூபாய் வரை உள்ளன.
நன்றி : தினமலர்


பளீர் வெளிச்சத்துக்கு தரமான 'ஹெட்லைட்'

புதிய அனுபவத்தை தரக்கூடியது கார் அனுபவம். வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரும் சொந்த காரில் குடும்பத்தினருடன் பயணிக்கும் காலம் தற்போது உள்ளது. வெளிநாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்து புதிய ரக கார்களை தயாரித்து வருகின்றன. கார் வாங்கினாலும், அவற்றை பராமரிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும்.
தற்போதைய காலச்சூழ்நிலையில், வாகனங்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

மனிதனுக்கு இரு கண் போன்றது, வாகனங்களுக்கு ஹெட்லைட் விளக்குகள். இரவுப்பொழுதில் எதிர்வரும் வாகனங்களை கடந்து செல்ல தரமான ஹெட்லைட் அவசியம். சரியான முறையில் அவை இருந்தால் தான் விபத்துக்களை தவிர்க்க முடியும். டூ வீலரானாலும், காரானாலும் ஹெட்லைட்டை அவ்வப்போது பராமரித்துக் கொள்ள வேண்டும். எதிர்பாராத விபத்து, விஷமிகளின் தாக்குதல் போன்றவற்றால் முதலில் உடைவது ஹெட்லைட் விளக்குகளே.

ஹெட்லைட்டுகள் புதிய வடிவில் தற்போது வந்துள்ளன. அதன் மேல் உள்ள கண்ணாடி பாகம் வாகனங்களுக்கு தகுந்த அமைப்பில் வட்ட வடிவிலும், சதுர வடிவிலும் விற்பனையில் உள்ளன.

சென்னை, டில்லி, பெங்களூரு நகரங்களில் இருந்தும், உத்தர்காண்ட் மாநிலத்தில் இருந்தும் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. டூ வீலரை பொறுத்தமட்டில் 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையில் உள்ளன. அவை தவிர குறைந்த விலை ஹெட்லைட் தயாரிப்புகளும் சந்தையில் உள்ளன. 35 வாட்ஸ் திறன் கொண்ட பிலிப்ஸ் பல்புகள் 120 ரூபாயிலும், கேலஜன் லைட்டுகள் 100 ரூபாயிலும் உள்ளன. டூ வீலர் ஓட்டிகள் அதிகம் இவற்றை வாங்குகின்றனர்.

கார், சுமோ போன்றவற்றுக்கான அதிகம் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உள்ளது. லூமாக்ஸ், ஆட்டோபால், ஃபியாம் போன்ற நிறுவனங்களின் ஹெட்லைட்டுகள் காருக்கு பயன்படுத்தப்படுகின்றன. பெங்களூரு, டில்லி போன்ற நகரங்களில் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.

கார், சுமோ போன்றவற்றுகான ஹெட்லைட்டுகள் 160 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை உள்ளது. அம்பாஸிட்டர்களுக்கு 140 ரூபாயிலும் உள்ளன. இதற்கென உள்ள 90 வாட்ஸ் திறனுடைய பல்புகள் 150 முதல் 200 ரூபாய் வரையில் உள்ளது.

சேலம் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையாளர் ஆனந்தகுமார் கூறுகையில், ''கார், டூ வீலர், 407 போன்ற வாகனங்களுக்கான ஹெட்லைட் மற்றும் அதற்குரிய பல்புகள் விற்பனையில் உள்ளன. டில்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. கம்பெனி கார்களுக்கு தகுந்தவாறு தரமான வடிவமைப்பில் உள்ளன. 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை காருக்கு ஏற்றாற்போல் ஹெட்லைட் வாங்க முடியும்,'' என்றார்.
நன்றி : தினமலர்


Friday, December 4, 2009

அர​சுப் பேருந்​து​க​ளின் அவ​லம்!

சில தினங்​க​ளுக்கு முன்பு தனி​யார் பேருந்​து​க​ளில் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​ட​தா​க​வும்,​ இத​னால் அதி​ருப்தி அடைந்த பய​ணி​கள் ஆட்​சி​ய​ரி​டம் மனு கொடுக்க,​ அவர் நட​வ​டிக்கை எடுக்க சம்​பந்​தப்​பட்ட துறை​யி​ன​ருக்கு உத்​த​ர​விட்​ட​தா​க​வும்,​ இதை​ய​டுத்து,​ கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்ட சில தனி​யார் பேருந்​து​க​ளில் மீண்​டும் பழைய கட்​ட​ணமே வசூ​லிக்​கப்​பட்​ட​தா​க​வும் பத்​தி​ரி​கை​க​ளில் செய்தி ஒன்று கண்​ணில்​பட்​டது.

​ ​ ​ ​அப்​போது,​ அர​சுப் பேருந்​து​க​ளில் முறை​யான அறி​விப்​பின்றி சில மாதங்​க​ளா​கக் கூடு​தல் கட்​ட​ணம் வசூ​லிக்​கப்​பட்டு வரு​வது நினை​வுக்கு வந்​தது. ஆட்​சி​ய​ரி​டம் மனு கொடுத்​த​தும்,​ தனி​யார் பேருந்​து​க​ளில் கூடு​தல் கட்​ட​ணம் குறைக்​கப்​ப​டு​கி​றது. ஆனால்,​ பொது​மக்​கள்,​ வியா​பா​ரி​கள்,​ பய​ணி​கள் என பல்​வேறு தரப்​பி​ன​ரும் பல​கட்ட போராட்​டங்​கள் நடத்​தி​யும் அர​சுப் பேருந்​து​க​ளில் ஏற்​றப்​பட்ட கட்​ட​ணங்​கள் இது​வரை குறைக்​கப்​பட்​ட​தா​கத் தெரி​ய​வில்லை.

​ ​ வாக்​கு​கள் மீது இருக்​கும் அச்​சம்​கூட வாக்​கா​ளர்​க​ளி​டம் தங்​க​ளுக்கு இல்லை என்​பதை சில மாதங்​க​ளுக்கு முன்பு நடை​பெற்ற தேர்த​லின்​போது ஆட்​சி​யா​ளர்​கள் நிரூ​பித்​ததை மக்​கள் அறி​வர். பொது​மக்​கள் மீது தேர்​த​லுக்கு உள்ள இரக்​கம்​கூட ஆட்​சி​யா​ளர்​க​ளி​டம் இல்​லையோ என எண்​ணத் தோன்​று​கி​றது.

​ ​ சில வழித்​த​டங்​க​ளில் இயங்​கும் பேருந்​து​க​ளில் அதி​கா​ரி​க​ளின் நாளொரு உத்​த​ர​வால்,​ பொழு​தொரு கட்​ட​ணம் வசூ​லிக்​கப்​ப​டு​வ​தால் ஏழை,​ எளி​யோர் பாதிக்​கப்​ப​டு​வது ஆட்​சி​யா​ளர்​க​ளின் பார்​வைக்​குத் தெரி​யாத பகல் நிலா.

​ ​ வரும் துன்​பங்​க​ளைச் சிறிது காலம் பொறுத்​துக் கொண்​டால் பின்பு அதுவே பழ​கி​வி​டும் என்​ப​து​போல ஏற்​றப்​பட்ட கட்​ட​ணங்​கள் பய​ணி​க​ளுக்​குப் பழ​கி​விட்​டன.

​ ​ போக்​கு​வ​ரத்​தைப் பொறுத்​த​வரை தனி​யா​ரின் சேவை அர​சின் சேவை​யை​விட திருப்​தி​க​ர​மாக உள்​ளது என்​பதே பெரும்​பான்​மை​யான பொது​மக்​க​ளின் கருத்து.

​ ​ நக​ரங்​கள்,​ கிரா​மங்​கள் என்ற வேறு​பா​டில்​லா​மல் தனி​யார் பேருந்​து​கள் எப்​போ​தும் பள​ப​ளப்​பும்,​ சுறு​சு​றுப்​பும் மாறா​தவை. ஆனால்,​ அர​சுப் பேருந்​து​களோ நக​ருக்​குள்​ளும்,​ பெரு நக​ரங்​க​ளுக்கு இடை​யே​யும் இயக்​கப்​ப​டும் பேருந்​து​கள் பள​ப​ளப்பு,​ தாழ்​த​ளம் என பல்​வேறு வச​தி​கள் கொண்​டவை. கிரா​மப்​பு​றங்​க​ளுக்கு இயக்​கப்​ப​டும் பஸ்​க​ளின் நிலை​மையோ டெபா​சிட் இழந்த வேட்​பா​ள​ரின் நிலை​மை​போல மிக​வும் பரி​தா​பம்.

​ ​ மழைக்​கா​லங்​க​ளில் ஒழு​கு​தல்,​ குறிப்​பிட்ட நேரத்​தைத் தாண்​டி​யும் தேநீர் குடித்​த​படி உலக நடப்​பைப் பேசிக் கொண்​டி​ருக்​கும் ஓட்​டு​நர்,​ நடத்​து​நர்​கள்,​ இந்த வழித்​த​டத்​தில் செல்​லாது,​ நிறுத்​தங்​க​ளில் நிற்​காது என குரல் உயர்த்​தும் அறி​விப்​பு​கள்...இவை​யெல்​லாம் அரசு பேருந்​து​க​ளில் பிர​சித்​தம். தனி​யார் பேருந்​து​க​ளிலோ இது​போன்ற குறை​கள் எண்​பது சத​வி​கி​தம் இல்லை என்றே கூற​லாம்.

​ ​ பய​ணி​க​ளின் நிலைமை,​ வயது போன்​ற​வற்றை அனு​ச​ரித்து நிறுத்​தங்​கள் இல்​லாத இடங்​க​ளில்​கூட இறக்​கி​வி​டு​தல்,​ அனைத்து நிறுத்​தங்​க​ளில் நின்​றா​லும் குறிப்​பிட்ட நேரத்​தில் இலக்கை அடை​தல் போன்​றவை தனி​யார் பேருந்​து​க​ளின் கூடு​தல் பலம்.

​ ​ மற்ற விஷ​யங்​க​ளில் எப்​ப​டியோ,​ அரசு பேருந்​து​கள் விஷ​யத்​தில் "வடக்கு வாழ்​கி​றது,​ தெற்கு தேய்​கி​றது' என்​பதே உண்மை என்​பதை தென் மாவட்ட மக்​கள் அறி​வர்.

​ ​ ஒட்​டடை,​ அகற்​றப்​ப​டாத குப்​பைக் கூளங்​கள்,​ உடைந்த ஜன்​னல் கண்​ணா​டி​கள்,​ நசுங்​கிய படிக்​கட்​டு​கள்,​ கிழிந்த இருக்​கை​கள்...என சில அர​சுப் பேருந்​து​க​ளின் அவ​லங்​கள் சொல்​லில் அடங்​கா​தவை.

சில பேருந்​து​க​ளில் சிலந்​தி​கள் போன்ற சின்​னச்​சின்ன ஜந்​துக்​கள் டிக்​கெட்​டும் எடுக்​கா​மல்,​ பஸ் பாஸýம் இல்​லா​மல் பய​ணிப்​ப​தைப் பார்த்​தால் பய​ணி​க​ளுக்​குப் பொறா​மை​கூட உண்​டா​க​லாம். வடக்​கில் ஓடி வய​தா​கித் தேய்ந்த பல பேருந்​து​கள் தெற்​கில் இயக்​கப்​ப​டு​கின்​றன என்ற குற்​றச்​சாட்டு இருப்​ப​தும் நினை​வில் கொள்​ளத்​தக்​கது.

மேலும்,​ அதிக எண்​ணிக்​கை​யில் இயக்​கப்​பட்டு வந்த நகர பேருந்​து​களை தாழ்​த​ளப் பேருந்​து​கள் ஓரங்​கட்டி விட்​ட​தால்,​ பய​ணி​கள் வேறு​வ​ழி​யின்றி தாழ்​த​ளப் பேருந்​து​க​ளில்​தான் செல்ல வேண்​டிய நிர்​பந்​தம். ஏறக்​கு​றைய தமி​ழ​கத்​தின் அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் இதே​நி​லை​தான்.

தனி​யாரா,​ அரசா என பொது​மக்​கள் அந்​த​நாள்​தொட்டு இந்​த​நாள்​வரை குழம்​பித் தவிக்​க​லாம். ஆனால்,​ அரசோ தெளி​வா​கவே உள்​ளது. இல்​லை​யெ​னில்,​ அர​சுப் பேருந்​து​க​ளில் கட்​ட​ணம் ஒன்​றி​ரண்டு ரூபாய்​கள் உயர்த்​தப்​பட்​ட​தற்​கா​கப் ​ பொது​மக்​கள் போரா​டிக் கொண்​டி​ருக்​கும்​போது,​ கோடிக்​க​ணக்​கான ரூபா​யைக் கொட்​டித்​தர மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​துக்கு தனி​யா​ரைத் தேர்வு செய்​யுமா அரசு?​
கட்டுரையாளர் :மா. ஆறு​முக கண்​ணன்
நன்றி : தினமணி

Thursday, November 26, 2009

டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுகம்


டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் புதிய வகை பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. புதிய பைக் மற்​றும் ஸ்கூட்​டரின் தனித்துவம் என்னவென்றால், கிளெட்ச் இல்​லா​மல் தானாக இயங்​கும் கியர்​கள் கொண்டு இருப்பதே ஆகும்.
டிவி​எஸ் ஜைவ் மோட்​டார் சைக்​கிள் கிளெட்ச் இல்​லா​மல் தானாக இயங்​கும் வகை​யில் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது. பைக் எந்த கிய​ரில் சென்று கொண்​டி​ருந்​தா​லும் உட​ன​டி​யாக நியூட்​ர​லுக்​குக் கொண்டு வர முடி​யும். கியரை படிப்​ப​டி​யா​கக் குறைத்து நியூட்​ர​லுக்கு வர வேண்​டிய அவ​சி​யம் இல்லை. பைக்கை எந்த கிய​ரில் நிறுத்​தி​னா​லும்,​ அதே கிய​ரில் வண்​டியை தொடர்ந்து இயக்க முடி​யும். ​ 110 சிசி என்​ஜின்,​ 12 லிட்​டர் கொள்​ள​ளவு உள்ள பெட்​ரோல் டேங்க் ஆகி​ய​வற்​று​டன் கூடு​த​லாக பைக் இருக்​கை​யின் அடி​யில் பொருள்​களை வைத்​துக் கொள்ள இட வசதி உள்​ளது. இதன் விலை ரூ. 41 ஆயி​ர​மா​கும்.
டி.வி.​எஸ் வீகோ 110 சிசி என்​ஜின்,​​ 12 அங்​குல அள​வுள்ள அலாய் வீல்​கள் பொருத்​தப்​பட்​டுள்ள இந்த ஸ்கூட்​டர் குடும்​பத்​தில் உள்ள அனை​வ​ரும் எளி​தில் ஓட்​டக் கூடிய விதத்​தில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. ஸ்கூட்​ட​ரின் பின்​பு​றத்​தில் பெட்​ரோல் டேங்க் அமைக்​கப்​பட்​டுள்​ளது. ஐந்து லிட்​டர் கொள்​ள​ளவு பெட்​ரோல் டேங்க்,​செல்​போனை சார்ஜ் செய்​யும் வசதி உள்​ளிட்​டவை இதில் உள்​ளன. கருப்பு,​ கரு​நீ​லம்,​ கேப்​பச்​சீனோ ப்ரெüன்,​ சில்​வர் உள்​ளிட்ட ஐந்து நிறங்​கள் கொண்ட இதன் விலை ரூ. 42 ஆயி​ரம் ஆகும்.

நன்றி : தினமலர்


Monday, November 23, 2009

உன் குற்றமா? என் குற்றமா?

நகரத்தின் கடைவீதியில் சைக்கிள் ஓட்டவோ, நடைபாதையில் நடக்கவோ முடியாதபடி கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும்போது, அதற்காக ஒரு குடிமகன் எரிச்சலும் மனக்கொதிப்பும் அடைந்தால், அதை நகரத்தின் வளர்ச்சி என்று நினைத்து சமாதானம் அடைய வேண்டிய அவசியம் இல்லை.

அந்த மனக்கொதிப்பு நியாயமானதுதான் என்று நமக்குப் புரிய வைத்திருக்கிறார் கொலம்பியா நாட்டின் பொகோடா நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் என்ரிக் பெனலோசா. ஏனென்றால், "கார்நிறுத்தும் இடம் (பார்க்கிங்) என்பது அந்நாட்டுக் குடிமகனின் அரசியல் சாசனம் வழங்கிய உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை'

சென்னையில் இந்திய தொழிற்துறை சம்மேளனம் (சிஐஐ) நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் இதை அவர் குறிப்பிடும்போது, நடைபாதையில் நடக்கும் சாதாரணக் குடிமகனின் ஆத்திரம் நியாயமடைகிறது.

இவர் இங்கே பேசியது மட்டுமல்ல, அவரது ஊரில் நடைமுறைப்படுத்தியவரும்கூட. சாலைகளில் கார் நிறுத்தங்களுக்குத் தடை விதித்தவர். "ஒரு நகரின் தரத்தை நிர்ணயிப்பது அந்நகரில் உள்ள மேம்பாலங்களோ, நெடுஞ்சாலைகளோ அல்ல. அகலமான நடைபாதைகள். ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களைப் பாருங்கள். நடைபாதைகளுக்கும், சைக்கிளுக்கும் அதிக இடம் தந்திருக்கும்' என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

சென்னை நகரில் தற்போது அமைக்கப்படும் மேம்பாலங்கள்கூட 5 ஆண்டுகளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைத்தான் தரும் என்றும் தீர்க்கமாகக் கூறுகிறார் அவர். "பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்துதான் தேவை. ஒரு பஸ் தடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 40,000 பேர் பயணம் செய்ய முடியும் என்றால், அதேநேரத்தில் ஒரு கார் தடத்தில் 2,000 பேர்தான் பயணம் செய்ய முடியும்' என்பது அவரது கருத்து.

ஏன் இது நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் புரியவில்லை? ஏன் அவர்கள் இதையெல்லாம் யோசித்துப் பார்க்காமல், மேம்பாலங்களும், கார் பார்க்கிங் இடங்களையும் விரிவாக்கிக்கொண்டே போகிறார்கள்?

சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய கடைவீதிகளின் இருபுறமும் கார் நிறுத்துமிடம் உள்ளது. இதில் நிறுத்த இடமில்லாத கார்கள், குறிப்பாக அரசியல்வாதி அல்லது அதிகாரிக்குச் சொந்தமெனில், போலீஸýக்கு அஞ்சாமல் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது, போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக!

தமிழகத்தின் நகரங்களில் உள்ள பல பள்ளிகள் (இங்குதான் அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கிறார்கள்) பெற்றோரின் கார்களை, குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை தங்கள் வளாகத்துக்குள் அனுமதிப்பதே இல்லை. இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் மிக விசாலமான விளையாட்டுத் திடல், கார்நிறுத்த வசதிகள் இருக்கின்றன. இத்தனை வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டு, காலை மாலை இருவேளையும் சுமார் ஒருமணி நேரத்துக்கு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதே நிலைமைதான் கல்யாண மண்டபங்களிலும். நகரின் முக்கியப் பகுதியில் பிரம்மாண்டமான கல்யாண மண்டபங்கள் உள்ளன. வருபவர் அனைவரும் காரில் வருகிறார்கள். மண்டப வளாகம் கொள்ளாமல் சாலைகளில் நிறுத்தப்படும் கார்கள் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறும் காலதாமதமும் சொல்லிமாளாது.

கார் வைத்திருப்பதாலோ, சாலை வரி கட்டுகிறார் என்பதாலோ ஒருவர் பொதுமக்களுக்குச் சொந்தமான பொதுஇடத்தை-சாலையை-அடைத்துக் கொண்டு பார்க்கிங் வசதி பெற முடியுமா? அதைத் தனது அடிப்படை உரிமையாகக் கோருவது சரியாகுமா?

கார்களை நிறுத்துவதற்கான பலஅடுக்கு மாடிகளைப் பிரத்யேகமாக அமைத்துத் தர வேண்டிய பொறுப்பு கார்களைத் தயாரித்து வீதிகளில் விடும் நிறுவனங்களுக்கும் உண்டு அல்லவா! தங்கள் சொந்தப் பணத்தில், சொந்தமாக இடம்வாங்கி, வசதி செய்து தர வேண்டிய அவர்களது கடமையை நகராட்சி, மாநகராட்சி மீது திணிப்பது சரியல்ல.

சாதாரண நகரத்தைக்கூட கார்கள் படாதபாடு படுத்துகின்றன. அண்மையில் ஒசூரில் 500 நானோ கார்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மொத்தம் 4000 நானோ கார்கள் ஒசூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அங்கு 20,000 கார்கள் உள்ளன. மிகச் சிறிய நகராட்சி இந்தக் கார்களுக்கான நிறுத்துமிடம் உருவாக்கித் தர வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? எந்த வகையில் சாத்தியம்?

கார் நிறுத்தும் அடுக்குமாடிகளைக் கட்டித்தர வேண்டிய பொறுப்பு, செலவு இரண்டிலும் கார் உற்பத்தி நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டாமா? நகரத்தை கார்களால் நிரப்பும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புதான் என்ன?

இந்த வேளையில்தான் என்ரிக் பெனலோசா சொல்வதை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது: ""கார் பார்க்கிங் என்பது ஒரு குடிமகனின் அரசியல் சாசன உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை''.

கார் வாங்கும் சக்தி ஒரு சிலருக்கு இருக்கிறது என்பதாலேயே பெரும்பாலான குடிமக்களால் நடைபாதையில் நடக்கவே முடியாதென்றால் அது...
நன்றி : தினமணி

Saturday, November 21, 2009

மரணப் பாதைகளா இந்தியச் சாலைகள்?

உலகில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா, மக்கள்தொகையில் மட்டுமல்ல; சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையிலும் 2-ம் இடம். தேசிய நெடுஞ்சாலை, விரைவுச்சாலை, மாவட்டச் சாலைகள், பிற மாவட்டச் சாலைகள், கிராமச் சாலைகள் என மொத்தம் 33.10 லட்சம் கிலோமீட்டர் சாலைகளைக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைகின்றனர். விபத்துகளால் மட்டும் ஆண்டுக்கு ரூ. 5,500 கோடிக்கு இழப்பு ஏற்படுகிறது.

வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப சாலைகளை மேம்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும், விபத்துகள் குறையவில்லை. காரணம், சாலையை எப்படிப் பயன்படுத்துவது என்ற அடிப்படை விஷயம்கூட பொதுமக்களை முறையாகச் சென்றடையவில்லை என்பதுதான்.

இந்திய தண்டனைச் சட்டம்-1860, மோட்டார் வாகனச் சட்டம்-1988, சாலைக் கட்டுப்பாட்டு விதிகள்-1989 ஆகியவற்றின் மூலம், சாலை விதிகளை மீறுவோர், விபத்து ஏற்படுத்துவோர், முறையற்ற வாகனங்களைப் பயன்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இவை அனைத்துமே, இந்தியச் சாலைகளில் நிகழும் விபத்துகளைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை.

விபத்து ஏற்படுத்தி ஒருவரது உயிரிழப்புக்குக் காரணமானவருக்கு அளிக்கப்படும் அதிகபட்சத் தண்டனையே, இரு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம். ஆனாலும், இந்தத் தண்டனையும் பெரும்பாலான வழக்குகளில் கிடைப்பதில்லை; அபராதத்தோடு நின்றுவிடுகிறது. இதனால், சாலை விதி மீறல்கள் குறித்து எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

விபத்துகளைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளும் மத்திய அரசு, இதற்கென சட்டத்திருத்தம் மேற்கொள்ள பல இடங்களில் இருந்தும் சட்ட முன்வரைவு பெற்று பரிசீலிக்கிறது.

இதில் ஒன்று, நீதிபதி ஏஆர். லட்சுமணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது சட்ட முன்வரைவுப் பரிந்துரைகளை ஆகஸ்ட் 2009-ல் அளித்தது.

அதில், சாலைகளில் வேகமாக, மக்களை அச்சுறுத்தும் வகையில் தாறுமாறாகச் சென்று விபத்து ஏற்படுத்தி, உயிர்ச்சேதம் விளைவிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு ஐபிசி - 304ஏ பிரிவில் அதிகபட்சம் 2 ஆண்டு என உள்ள சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். இதை, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாகவும் மாற்ற வேண்டும்.

ஐபிசி - 304பி எனும் புதிய பிரிவை ஏற்படுத்தி, விபத்தில் உயிர்ச்சேதம் அல்லது காயம் ஏற்படுத்தி, நிற்காமல் சென்றுவிடும் வாகன ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், ஐபிசி - 279ஏ என்ற புதிய பிரிவை ஏற்படுத்தி, அதிக பாரம் ஏற்றி, மக்கள் உள்ள பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு 6 மாதங்கள் சிறை, அபராதம் விதிக்க வேண்டும் எனச் சட்டவிதிகளைக் கடுமையாக மாற்ற பரிந்துரை செய்துள்ளது.

இதற்கிடையே, "செல்போன் பேசியபடி வாகனத்தில் சென்றால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்' என வெங்கய்யநாயுடு தலைமையில் மக்களவைக்குழு அளித்த முன்மொழிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளக்கூடும் எனும் எதிர்பார்ப்பும் தற்போது நிலவுகிறது.

ஏற்கெனவே பல சட்டங்கள் இருந்தும் அதை அமல்படுத்துவதில் குறைபாடு இருக்கும்போது, மேலும் கடுமையான சட்டங்களை விதித்து என்ன பயன்? அதை அமல்படுத்துவது யார்?

அதிவேகம், அதிக பாரம், சாலைகளில் இயங்கத் தகுதியற்ற வாகனங்கள், குடித்துவிட்டு, போதை மருந்து உட்கொண்டு வாகனம் ஓட்டும் ஓட்டுநர், விதிகளைப் பின்பற்றாதது, உரிமம் பெறத் தகுதியற்ற ஓட்டுநர் எனப் பல காரணிகள் விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன.

இவற்றைக் கட்டுப்படுத்த, கண்காணிக்க போதிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல் வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்குவதால் மட்டும் பயன்கிடையாது.

வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் சாலைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் அவசியம்.

வாகன உற்பத்தி இடத்திலேயே வேகத்தைக் கண்காணிக்கும் கருவி பொருத்துவது, சாலையில் இயங்கும் அனைத்து வாகனங்களிலும் இக்கருவியைக் கட்டாயம் பொருத்தச் செய்வது, கட்டாயக் காப்பீடு, தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டண வசூல் மையங்களில் வாகனம் நிற்கும்போது, அதன் அதிக எடையைக் கண்டறிய எடை மேடை அமைப்பது போன்றவை தேவை.

குடித்துவிட்டு, செல்போன் பேசியபடி, சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர், விதிமீறுவோரைக் கண்காணிக்க ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட வேண்டும்.

அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து, அவற்றை ஒருங்கிணைத்து, மாவட்டத் தலைநகரில் கண்காணிப்பு, கட்டுப்பாட்டறை அமைக்க வேண்டும்.

விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்குத் தொடர்வது, அந்த வழக்குகளை விரைந்து விசாரித்து, அபராதம், தண்டனை விதிப்பது ஆகியவற்றுக்கென பிரத்யேக நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். விபத்துகளால் ஏற்படும் பொருள், மனித இழப்புகளைவிட, இவற்றுக்கு அதிகம் செலவாகிவிடாது.

இதில் முக்கியமாக, இவை அனைத்தையும் அமல்படுத்தும் பணியை போலீஸôரிடம் அளித்துவிடக் கூடாது. தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் காவலர்களுக்கு நிகராக, போக்குவரத்துக்கு எனத் தனியாக காவலர்கள் நியமிக்க வேண்டும். இருக்கும் பற்றாக்குறையில், மீண்டும் வழக்கமான போலீஸôரிடம் இப் பணிகளை ஒப்படைப்பதால், விதிமீறல்கள் தொடரச் செய்யுமே தவிர, குறையாது.

இந்தியச் சாலைகளில் பயணிப்போரின் உயிர் என்றாவது ஒருநாள் சாலையில் பறிபோகும் எனும் அச்சத்தைப் போக்குவதும், சாலை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி பயணிப்போரின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதும் அரசின் கடமை. இதற்கான அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தி, சட்டத் திருத்தங்களைச் செய்வது அவசியமாகும்.
கட்டுரையாளர் : எஸ். ஜெய்சங்கர்
நன்றி : தினமணி

Tuesday, November 17, 2009

ஓரிவா எலக்ட்ரிக் கார் விலை ரூ.1 லட்சம்

அஜந்தா குழுமம் நிறுவனம், இந்தியாவில், கடிகார விற்பனையில் புகழ் பெற்றது. இத்துடன் வீட்டு உபயோக பொருட்கள், டைல்ஸ், எலக்ட்ரிக் பைக்குகள், சி.எஃப்.எல்., லேம்ப்கள் ஆகியவற்றின் விற்பனையிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, சீன எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனத்தை விலைக்கு வாங்க, அஜந்தா குழுமம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், சீன நிறுவனத்தை விலைக்கு வாங்கி, ஆண்டுக்கு 5 ஆயிரம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய அஜந்தா குழுமம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்துடன் 'ஓரிவா' என்ற பெயரில் கார் விற்பனைக்கு வரும். இதன் விலை ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் அஜந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்கு தான், ஆண்டுக்கு 10 ஆயிரம் எலக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை விரிவுப்படுத்தி கார் தொழிற்சாலையை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, அஜந்தா நிறுவன அதிகாரிகளிடம் பேசிய போது, இந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. எனினும், அரசு உதவியை எதிர்பார்க்கிறோம். அரசு உதவினால் தான் விலை குறைந்த கார்களை உருவாக்க முடியும். மொத்த உற்பத்தி செலவில் நான்கில் ஒரு பகுதி என்ற அளவுக்கு வாட் மற்றும் கலால் வரிகள் உள்ளன. இந்த விஷயத்தில் அரசு சலுகை காட்டினால், ஒரு லட்சம் ரூபாய் என்ற விலைக்கு எலக்ட்ரிக் காரை நிச்சயம் விற்பனை செய்ய முடியும் என்றனர்.
நன்றி : தினமலர்


Wednesday, November 11, 2009

வாகன இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை குறைப்பது எப்படி?

இன்சூரன்ஸ் என்பது கட்டயமாக்கப்பட்ட ஒன்று. போலீஸார் சோதனை நடத்தும் போது, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கண்டிப்பாக ஆய்வு செய்வார்.
எனவே, கார் மற்றும் பைக்குக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை வாகன ஓட்டிகள் நன்கு உணர்ந்து இருப்பர். ஆனால், பெரும்பான்மையானோர் சோம்பறிதனத்தினால், வாகனத்துக்கு இன்சூரன்ஸை ஆண்டுக்கு ஆண்டு புதுப்பிக்க மறந்து விடுவர். வாகனம் விபத்தில் சிக்கும் போது தான், இன்சூரன்ஸின் உண்மை நிலை அவர்கள் உணர தொடங்குவர்.

வாகன இன்சூரன்ஸ் கட்டயமாக்கப்பட்ட ஒன்று என்றாலும், அதற்கான பிரிமியம் தொகையை பல வகையிலும் குறைக்க முடியும். அதற்கு முத்தான 10 வழிகள் இதோ.

1. வாகனத்தின் மாடல் மற்றும் வகை: கார் அல்லது பைக்கை பல நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் வாகனம், அடிக்கடி விபத்துக்குள்ளாவது, விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் வடிவமைப்பு இருப்பது போன்ற காரணத்துக்காக அந்த வாகனத்துக்கும் மட்டும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூடுதல் பிரிமியம் வசூலிப்பர். எனவே, எந்த மாடல், எந்த வகை வாகனத்துக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டால், பிரிமியம் தொகை குறையும். சில மாடல் வாகனங்கள், பராமரிப்பு செலவு குறைந்ததாக இருக்கும். அந்த வாகனங்களுக்கும் குறைந்த பிரிமியம் தான் வசூலிக்கப்படுகிறது.

2. டிரைவரின் பாலினம்: வெளிநாடுகளில், வாகனத்தை ஓட்டுபவர் ஆணா பெண்ணா? என்று பார்த்து அதற்கு ஏற்றவாறு பிரிமியம் தொகை வசூலிக்கின்றனர். ஆண் என்றால், குறைந்த பிரிமியம், பெண் என்றால் அதிக பிரிமியம் தொகை என்ற நிலைமை பல நாடுகளில் காணப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறை இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை. எனினும், பஜாஜ் அலியான்ஸ் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆண் டிரைவர்களை விட பெண்கள் சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர் என்று கருதுகின்றனர். எனவே, பெண்கள் பெயரில் இன்சூரன்ஸ் பதியும் போது சில சலுகைகளை அளிக்கின்றனர்.

3. வாகனம் ஓடும் நகரம்: வாகனம் எந்த நகரத்தில் பதிவு செய்யப்பட்டது, எந்த நகரில் ஓடுகிறது என்பதையும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவனிக்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் உள்ள நகரத்தில், வாகனங்களுக்கு உரசி செல்வதால் ஏற்படும் சிறிய சேதங்கள் தான் ஏற்படும். ஆனால், நெடுஞ்சாலைகளில் செல்லும் போது ஏற்படும் விபத்தில் வாகனங்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகும். எனவே, இன்சூரன்ஸ் புக் செய்யும் போது எந்த நகரத்தில் ஓடுகிறது/ ஓடப்போகிறது என்பதை தெளிவாக குறிப்பிட்டால், அதற்கு ஏற்றவாறு, பிரிமியம் தொகை கணக்கிடப்படும். பெரிய நகரங்கள் என்றால், பிரிமியம் தொகை குறைய வாய்ப்பு உள்ளது.

4. வாகனம் ஓட்டுபவரின் பணி: கார் அல்லது பைக்கை ஓட்டுகிறவர் என்ன பணி செய்கிறார் என்பதை பொருத்தும் பிரிமியம் தொகை குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். தினமும் அலுவலகம் செல்பவர் என்றால், அலுவலகம் மற்றும் வீட்டுக்கு செல்லத் தான் அந்த வாகனத்தை பயன்படுத்துவார். ஆனால், சிறு வணிகம் செய்பவர் என்றால், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் வாகனத்தை செலுத்துவார். எனவே, வாகனம் ஓட்டுபவர் என்ன பணி செய்கிறார் என்பதை பொருத்தே பிரிமியம் தொகையும் கணக்கிடப்படுகிறது.

5. கிளைம் செய்யாவிடில் போனஸ்: வாகன இன்சூரன்ஸ் செய்து இருப்பவர், அந்த வாகனம் சிறு சிறு விபத்துக்களில் சிக்கும் போது ஆகும் செலவை, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கிளைம் செய்யாவிடில், ஆண்டுதோறும் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது, 'நோ கிளைம் போனஸ்' என்ற பெயரில் பிரிமியம் தொகையில் சிறிதளவு குறைக்கப்படுகிறது. ஆனால், இன்சூரன்ஸை புதுபிக்கும் போது எவ்வித தாமதத்தையும் காட்டாமல், உடனுக்கு உடன் புதுப்பித்தால், இந்த தள்ளுபடி சலுகை பெறாலம். கிட்டத்தட்ட பிரிமியம் தொகையில் 35 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

7. பாதுகாப்பு சாதனங்கள்: கார் அல்லது பைக், திருடு போகாமல் இருக்க, விபத்தின் போது பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்களை பொருத்தி இருந்தால், அதற்கு ஏற்றவாறு பிரிமியம் தொகை குறையும்.

8. வாகனத்தின் உரிமையாளர் ஆட்டோமொபைல் சங்க உறுப்பினராக இருந்தால், 5 சதவீதம் வரை, பிரிமியம் தொகையில் குறைக்கப்படும்.

9. குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் முதல், சில காலம் வரை வாகனம் பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டு இருந்தால், இன்சூரன்ஸ் காலத்தை நீட்டிக்க செய்யலாம் அல்லது இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் போது சில தள்ளுபடி சலுகை பெறலாம். எனினும், குறிப்பிட்ட காலத்துக்கு வாகனத்தை பயன்படுத்த போவதில்லை என்பதை, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் இந்த சலுகை கிடைக்கும்.

10. ஆன் லைனில் பதிவு: ராயல் சுந்தரம், பஜாஜ் அலியான்ஸ் போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆன் லைன் மூலம் வாகன இன்சூரன்ஸ் மேற்கொள்ளும் நபர்களுக்கு பிரிமியம் தொகையில் தள்ளுபடி சலுகை அளிக்கின்றனர்.

இவ்வாறு, பத்து வழிகளை பின்பற்றினால், வாகன இன்சூரன்ஸின் பிரிமியம் தொகையை ஓரளவுக்கு குறைக்க முடியும்.
நன்றி : தினமலர்

Tuesday, November 10, 2009

அவுட் சோர்ஸிங் முறையில் நானோ கார் உற்பத்தி

இந்தியாவின் மிக குறைந்த விலை கார் என்ற பெருமைக்குரியது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார். ஒரு லட்சம் ரூபாய் விலை கொண்ட இந்த காருக்காக, 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், ஒரு லட்சம் பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தான் தற்போது நானோ கார் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
நானோ காருக்காக, மேற்கு வங்கம் சிங்குரில் தான் முதலில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. ஆனால், உள்ளூரில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக, இந்த தொழிற்சாலை குஜராத் மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது. ஆனால், இன்னும் முழுமையாக ரெடியாக வில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் தொழிற்சாலை செயல்பட துவங்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், அதற்குள் ஒரு லட்சம் பேருக்கு நானோ காரை சப்ளை செய்ய முடியுமா என்பது கேள்விக்குரியாக உள்ளது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ரவி காந்த் லண்டனில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அங்கு அவர் கூறுகையில்,' ஆண்டுக்கு 10 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த சிறு தொழிற்சாலைகளுக்கு, நானோ காரை அசெம்பள் முறையில், மாற்று பெயரில் தயாரிக்க அனுமதி அளிக்கப்படுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என்று கூறினார். இது இந்திய கார் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட அவுட்சோர்ஸிங் முறையில் இப்பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
நன்றி : தினமலர்


Monday, November 9, 2009

இழப்புக்கு ஈடு!

தமிழர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வதற்கும், தமிழர்களின் நிர்வாகத் திறமைக்குச் சான்றாக வெளிமாநிலத்தவர் பாராட்டுவதற்கும் ஒரு துறை உண்டென்றால் அது தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்துத்துறைதான்.

ஆனால் அந்தத் துறையின் இன்னொரு முகமோ, மனிதாபிமானமே இல்லாமல் கொடூரமாக இருப்பதை அறியும்போது பதறித் துடிக்காத நல்ல உள்ளங்களே இருக்க முடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், முதல்வர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவியில் இருந்தும் இத்துறையில் இப்படி ஒரு அவலமா என்று அரற்றாமல் இருக்க முடியாது. அந்த அவலத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கே. கார்வேந்தன்.

சாலை விபத்தில் அரசு பஸ்களால் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அளித்த தொகைகளையும் அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையையும் கேட்டு, தகவல் அறியும் சட்டப்படி அவர் மனுச் செய்திருக்கிறார். அவருக்குக் கிடைத்திருக்கும் பதில் அவரை மட்டும் அல்ல நம்மையுமே அதிர்ச்சியில் உறையவைக்கின்றன.

"தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்குத் தர வேண்டிய இழப்பீட்டுத் தொகை மொத்தம் ரூ.323.96 கோடி. 11,233 பேர் இந்தத் தொகை பெற காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 28 ஆண்டுகளாகியும் நயா பைசா கூடப் பெற முடியாமல் தவித்துக்கொண்டிருப்பவர்களும் உண்டு.

"சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து, தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் ரூ.18.61 கோடி தொகை வழங்கப்படவே இல்லை; சாலை விபத்து வழக்குகளை விசாரிக்கும் நடுவர் மன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் தரப்பட வேண்டிய ரூ.305.14 கோடியும் தரப்படவே இல்லை.

தீர்ப்பு கூறிய பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் காட்டும் மெத்தனத்தைப் பொறுக்க முடியாமல், பயணிகளுடன் சென்று கொண்டிருக்கும் அரசு பஸ்களை நடுவழியில் நிறுத்தி ஜப்தி செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிடும் சம்பவங்களும் பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் அடிக்கடி பிரசுரமாகிறது.

போக்குவரத்துத்துறை செயலரிடம் இந்த நிலுவை குறித்து கேட்டபோது, ""எவ்வளவு சீக்கிரம் பைசல் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் பைசல் செய்யவே பார்க்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.

"ஸ்டேண்டிங்' என்ற பெயரில் பயணிகளை நிற்க வைத்துக்கொண்டு போகக்கூடாது, அதிக வேகம் செல்லக்கூடாது, போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது, நல்ல நிலையில் இல்லாத பஸ்களை ஓட்டக்கூடாது என்றெல்லாம் தனியார்துறையில் போக்குவரத்து இருந்தபோது தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டுடன் கண்காணித்தார்கள். அப்போதெல்லாம் இந்த அளவுக்கு விபத்துகளும் நடக்கவில்லை. அனுபவம் உள்ள டிரைவர்கள் பொறுப்போடு வண்டிகளை ஓட்டினார்கள்.

இப்போது அரசு பஸ்களின் பராமரிப்பு சொல்லும் தரம் அன்று. அதற்குத் தொழிலாளர்களைவிட நிர்வாகமே முக்கிய காரணம். அரசு பஸ் டிரைவர்களின் அனுபவம், பயிற்சி எல்லாம் திருப்திகரமாக இல்லை. இளம் டிரைவர்களைக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நெரிசலான நேரங்களிலும் மோசமான பாதைகளிலும் ஓட்டச் சொல்வதும் அதிகரித்து வருகிறது. எனவே விபத்து இல்லாமல் பஸ் ஓட்டும் டிரைவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

தனியார் துறையில் பஸ்கள் இருந்தபோது அவற்றை அவர்கள் நன்கு பராமரித்தார்கள். அந்த பஸ்களை அதிகாரிகளும் அதிக அக்கறையோடு அடிக்கடி சோதித்து நல்ல நிலைமையில் ஓட்டவைத்தனர். அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி வழியில் நின்றாலும், கரும்புகையைக் கக்கிக் கொண்டு, தெருவே அலறும் அளவுக்கு ஓசை எழுப்பிச் சென்றாலும் அதைத் தடுக்கவோ, கேட்கவோ பிற துறை அதிகாரிகளுக்கு அதிகாரமே இல்லை என்ற மனோபாவமே நிலவுகிறது. வெள்ளைக் கோட்டைத் தாண்டக்கூடாது, மஞ்சள் சிக்னல் இருந்தால் போகக்கூடாது என்ற சாதாரண விதியைக் கூட அப்பட்டமாக மீறுவதே அதிகமாக அரசு பஸ்கள்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இன்சூரன்ஸ் செய்யாமல் தனியார் யாரும் எந்த வாகனத்தையும் தெருவில் ஓட்ட முடியாது. ஆனால் அரசு பஸ் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்துமே தங்களுடைய வாகனங்களை இன்சூர் செய்வதில்லை. கேட்டால், விபத்து நடந்தால் நாங்கள் உடனே இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிடுவோம், அதற்காக கோடிக்கணக்கான ரூபாயை இன்சூரன்ஸ் பிரிமீயமாக வீணாக்க விரும்பவில்லை என்று பதில் சொன்னார்கள். இவர்கள் நஷ்ட ஈடு வழங்கிய லட்சணத்தை கார்வேந்தன் அம்பலப்படுத்திவிட்டார். இப்போதுதான் மீண்டும் இன்சூர் செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

அரசு பஸ்களால் ஏற்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் போர்க்கால அடிப்படையில் முழுத் தொகையையும் வட்டியுடன் செலுத்த முதல்வர் கருணாநிதி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதப்படுத்தியதே கொடுஞ்செயல் என்பதை அதிகாரிகளுக்கு அவர் உணர்த்த வேண்டும். அதுவே அவர்களுடைய மனப்புண்களை ஆற்றும் மருந்து. அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அரசு போக்குவரத்துத்துறையிலேயே வேலையும் தர வேண்டும். அப்போதுதான் நஷ்டஈடு முழுமையானதாக இருக்கும்.
நன்றி : தினமணி

Tuesday, November 3, 2009

100 சிசி பைக் உற்பத்தி அதிகரிக்க பஜாஜ் முடிவு

இந்தியாவில், என்ட்ரி லெவல் பைக் என்றால், 100 சிசி பைக்கை தான் குறிப்பிடும். இந்த வகை பைக் விற்பனையில் முதல் இடத்தில் இருப்பது ஹீரோ ஹோண்டா நிறுவனம் தான். சில ஆண்டுகள் வரை, இந்த வகை பைக் விற்பனையில் அக்கறை காட்டாது இருந்த, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கடந்த ஜூலை மாதம், 100 சிசி திறன் கொண்ட டிஸ்கவர் டி.டி.எஸ்., எஸ்.ஐ., பைக்கை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.40 ஆயிரம் என்றும் அறிவிக்கப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

எதிர்பார்க்காத அளவுக்கு, இந்தியாவில் 100 சிசி பைக் விற்பனை ஜூலை செப்டம்பர் காலத்தில் 38.90 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, தனது 100 சிசி பைக் உற்பத்தியை அதிகரிக்க செய்ய, முடிவு செய்துள்ளது. தற்போது மாதத்துக்கு 85 ஆயிரம் பைக்குகள் என்ற அளவுக்கு உற்பத்தி அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு மூன்று தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில், மாதத்துக்கு 2.6 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்யப்படும். அடுத்த சில மாதங்களில் 100 சிசி பைக் சந்தையில் காணப்படும் நிலவரத்தை கருத்தில் கொண்டு உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடிவு செய்யலாம் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது.
நன்றி : தினமலர்

Friday, October 23, 2009

மாறுமா அரசுப் போக்குவரத்துக் கழகம்

தீபாவளியையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கிய சிறப்புப் பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாகப் பயணிகள் நடத்துநர்களிடம் கேட்டபோது, "முன்பதிவு மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டணம், சிறப்புப் பேருந்து என்பதற்காகக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்றனர்.

தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்தவர்களும், கொண்டாடி முடிந்து பணிக்குப் புறப்பட்டுச் சென்றவர்களும் பேருந்து நடத்துநர்களிடம் வாக்குவாதம் செய்து, வேறு வழியில்லாமல் பயணச்சீட்டு பெற்றுப் பயணித்தனர்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஏற்கெனவே மக்களவைத் தேர்தல் நேரத்தின்போது, சென்னை மாநகரப் பேருந்துகளின் கட்டணத்தை இரவோடு இரவாகக் குறைத்து அறிவித்ததும், பின்னர் கட்டணமே குறைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டதும் அறிந்ததே. "முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தவர்கள், இதை மறைக்காமல் இருப்பார்களா?'

வருவாய் ஈட்ட பண்டிகை நாள்களிலும், திருவிழாக்காலங்களின்போதும் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, நஷ்டம் அடையச் செய்துவரும், சாதாரண மக்களும் அறிந்த சிலவற்றை போக்குவரத்துக் கழகம் சீரமைத்தாலே போதும். ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் போக்குவரத்துக் கழகத்துக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ஒரே துறையில் அரசும், தனியாரும் ஈடுபடும்போது, தனியாருக்குச் சலுகைகளை வழங்க அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் முற்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதால், இதற்கு அவர்களும் உடன்படுகின்றனர்.

தனியார் பேருந்துகளுக்கு லாபகரமான "ரூட்'களை வழங்குவதிலும், "பீக் ஹவர்ஸ்' நேரங்களில் தனியார் பஸ்களை இயக்க அனுமதிப்பதும் உண்டு. இது தனியார் பேருந்து முதலாளிகள், அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தம். பேருந்து நிலையங்களில் தனியார் பேருந்து மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நேரத்துக்கும் இடையே "டைமிங்' தொடர்பாகப் பிரச்னைகள் ஏற்படும். அரசுப் பேருந்துகளை ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்கூட்டியே எடுக்குமாறும், நேரம் கடந்தும் தனியார் பேருந்துகளை எடுக்க மறுக்கும் செயல்களும் நடைபெறும்.

இதற்காக தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக பல வகைகளில் "செல்வாக்கு' உடைய உள்ளூர் பிரமுகர்கள் இருப்பார்கள். சில நேரங்களில் அரசுப் பேருந்து ஊழியர்களைத் தாக்க முயலும் சம்பவங்களும் நடைபெறும்.

பேருந்து நிலையங்களில் நடைபெறும் இச்சம்பவங்களைத் தவிர்க்க, தனியாருக்குச் சாதகமாக அரசுப் பேருந்து ஊழியர்கள் நடந்துகொள்வதும் உண்டு. இதற்காக ஊழியர்கள் மட்டத்தில் "கவனிப்பு'ம் உண்டு.

இதனால், தனியார் பேருந்தில் ஏராளமான பயணிகள் நின்றுகொண்டு பயணிப்பதையும், அரசுப் பேருந்துகள் காலியாகச் செல்வதையும் காணமுடியும்.

அரசுப் பேருந்துகளில் ஏற்படும் சிறு பழுதுகளை உடனடியாகச் சரி செய்வது இல்லை. அந்தப் பழுதுகளுடனே பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும். சில மாதங்கள் கழித்து பெரும் பழுது ஏற்படும்போதுதான், அதை நிறுத்தி சரிசெய்வது உண்டு. நூற்றுக்கணக்கில் செலவழிக்க வேண்டிய செலவு அப்போதே செய்யாமல் நாள்கணக்கில் இழுத்தடித்து, பல்லாயிரக்கணக்கில் செலவு செய்கின்றன போக்குவரத்துக் கழகங்கள்.

தொலைதூரப் பயணத்தின்போது, பயணிகள் உணவு, தேநீர் அருந்தவும், இயற்கை உபாதைகளுக்காகவும் சில இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுவது உண்டு. பேருந்துகள் நிற்கும் இடம் பெரும்பாலும் நகர்ப் பகுதியாக இருக்காது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக நெடுஞ்சாலைகளின் ஓரம் பேருந்து பயணிகளுக்காகவே அமைக்கப்படும் சிறு வணிக வளாகமாகவே அது காணப்படும். இங்கு அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் கடைகளை அமைத்திருப்பர். இங்கு விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலை, அப்பொருளின் உண்மையான விலையைவிட சில மடங்கு அதிகமாக இருக்கும்.

இவ்விடங்களில் பேருந்துகள் நின்று செல்வதற்காக, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை "கவனிப்பு' நடைபெறுகிறது.

இவ்வாறாக அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தனியாருக்குச் சாதகமாக நடந்துகொண்டு, அவர்களின் மூலம் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வருகின்றனர்.

இவற்றையெல்லாம் அரசுப் போக்குவரத்துத் துறை நிர்வாகம் கண்டறிந்து களைந்தால், அரசுப் போக்குவரத்துக் கழகம் தனது ஆண்டு வருவாயில் மேலும் சில நூறு கோடி ரூபாய்கள் கிடைக்கும்.

இவ்வாறு பயணிகள் அனைவரும் அறிந்த சில தவறுகளைக் களைந்து, வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் முயலவில்லை. மாறாக, பண்டிகை நாள்களில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டது.

பண்டிகை நாள்களில் உள்ளூர் வணிகக் கடைகளில் சிலர் "இனாம்' கேட்பதுபோல், பயணிகளிடமும் அரசுப் போக்குவரத்துக் கழகம் கேட்கத் தொடங்கிவிட்டதா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

கட்டுரையாளர் : தி. நந்தகுமார்
நன்றி : தினமணி