Monday, December 1, 2008

தாக்குதலில் உயிர் இழந்தால் காப்பீட்டு தொகை கிடைக்குமா ?

மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடே துக்கம் அனுசரித்துக் கொண்டிருக்கும் போது, அந்த தாக்குதலில் கொள்ளப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை கிடைப்பது அவ்வளது எளிதான விஷயம் அல்ல என்கிறார்கள். தீவிரவாத தாக்குதலில் கொல்லப்படுபவர்களுக்கு இன்சூரன்ஸ் கவர் ஆகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ' டெரோரிஸம் இன்சூரன்ஸ் கவர் ' என்பது இப்போதைக்கு இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் பொதுவாக எல்லா லைப் இன்சூரன்ஸ் கம்பெனிகளுமே, இன்சூர் செய்தவர் தற்கொலை தவிர வேறு எந்த வகையில் இறந்தாலும், இன்சூர் செய்த தொகை கொடுக்கப்படும் என்றுதான் சொல்கிறது. எனவே இதையும் தற்கொலை இல்லாத மரணம் என்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் அமெரிககா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருப்பது போல் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இன்சூரன்ஸ் இல்லை என்கிறார்கள் கோடக் லைப் இன்சூரன்ஸ் அதிகாரிகள். ஆனால் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிகள், தீவிரவாதத்திற்கான இன்சூரன்ஸ் கவரை, தீ விபத்துடன் சேர்த்து add-on இன்சூரன்ஸ் பாலிசியாக வைத்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


பிரதமர் கையில் நிதித்துறை : பங்குச் சந்தையில் மகிழ்ச்சி

மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் வசம் நிதி பொறுப்பு சென்றதால், இந்திய பங்குச் சந்தை ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர் கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.வர்த்தக நகரமான மும்பையை நிலை குலையச் செய்யும் நோக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை இந்திய பங்குச் சந்தை வர்த்தகமின்றி மூடப் பட்டது. மறுநாள் சந்தை துவங்கியபோது மும்பையில் உள்ள முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் பெரும் பாலும் வர்த்தகத்தில் ஆர்வம் காட்டாததால் ஒரு தேக்க நிலை இருந்தது. அன்னிய முதலீட்டாளர் கள் ஓரளவு பங்குகளை வாங்கியதால் அன்று பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிவு பெற்றது.இந்திய பங்குச் சந்தை எந்த சூழ்நிலையையும் தாக்குப்பிடித்து நிற்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்நிலையில், நேற்று அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. மும்பை சம்பவத்திற்கு பொறுப் பேற்று, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகினர். இதையடுத்து, புதிய உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமிக்கப்பட்டார்.இவர் வசமிருந்த நிதித்துறை, பிரதமர் மன்மோகன் சிங்கே கூடுதலாக கவனிப்பார் என்பதும் உறுதியானது. இந்த செய்தி கேட்டதும் பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்கள், வங்கியாளர்கள், பங்குச் சந்தை வல்லுனர்கள், தொழில்நுட்ப பகுப்பாய்வாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்த மாற்றத்தின் மூலம் முதலீட்டாளர்கள் நம்பிக்கை மேம்படும் என தவுரஸ் பரஸ்பர நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.கே.குப்தா தெரிவித்தார். மேலும், ஜி-20 நாடுகள் கூட்டத் தில் பிரதமர் தெரிவித்த கருத்துக்களை உலகத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதைச் சுட்டிக் காட்டி, அதே போல இங்கும் புதிய அணுகுமுறை வரலாம் என்றும் கூறுகின்றனர்.'இந்த மாற்றத்தினால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாம் உலகச் சந்தைகளை சார்ந்து இருப்பதால், அதன் போக்கை பொறுத்தே இருக்கும். இருப்பினும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும். இன்று பங்குச் சந்தை துவங்கும் போது சமநிலையில் தான் இருக்கும்' என, மற்றொரு புரோக்கர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்