Showing posts with label அரபு நாடு. Show all posts
Showing posts with label அரபு நாடு. Show all posts

Saturday, August 14, 2010

புதிய சலுகைத்திட்டத்தை அறிவித்தது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

சர்வதேச அளவில் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், ரவுண்ட்டிரிப் விமானப் பயணத்திற்கான கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதுதொடர்பாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இந்த கட்டணக்குறைப்பு அனைத்து ( பர்ஸ்ட், பிசினஸ் மற்றும் எகானமி) பிரிவுகளுக்கும் பொருந்தும் என்றும், இந்த கட்டணக்குறைப்பின் மூலம், 13 சதவீத அளவிற்கு சேமிப்பைப் பெறலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாஸ்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையங்களிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளான பக்ரைன், கெய்ரோ, டமாஸ்கஸ், துபாய், குவைத், மஸ்கட், ரியாத், டெஹ்ரான் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்லும் விமானங்களில் இந்த கட்டணக்குறைப்பு பொருந்தும் என்றும், மக்கள் இந்த புதிய சேவையை தங்கள் நிறுவன இணையதளமான டபிள்யூடபிள்யூடபிள்யூ. எமிரேட்ஸ்.காம்/யுஎஸ் என்ற இணையதளத்தில் பெறலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளது. இந்த தி்ட்டம், இந்த மாதம் 31ம் ‌தேதி முடிவடைவதாகவும், செப்டம்பர் 1ம் தேதி முதல், அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.


நன்றி: தினமலர்


Tuesday, December 8, 2009

இப்போது துபாய்; அடுத்து? வர்த்தக வட்டாரத்தில் பீதி

துபாயில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, சர்வதேச சந்தையை அசைத்து பார்த்து விட்டது. துபாய்க்கு பிறகு, இனி எந்த நாட்டில் இது போன்ற பிரச்னை ஏற்படும் என்ற பீதி, சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. துபாயில் அரசுக்கு சொந்தமான 'துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம், தான் வாங்கிய 3,70,000 கோடி ரூபாய் கடனை, உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து, கடனுக்கான தவணையை ஆறு மாதத்துக்கு தள்ளி வைக்கும்படி, கடன் கொடுத்தவர்களை இந்நிறுவனம் கேட்டுக் கொண்டது. இது, சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பணக்கார நாடான துபாயிலேயே நிதி நெருக்கடி உள்ளது என்ற பேச்சு எழுந்ததையடுத்து, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன.

இதையடுத்து, இது போன்ற நிதி நெருக்கடி அடுத்து, எந்த நாட்டில் ஏற்படுமோ என்ற பீதி எழுந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இந்த கவலை உள்ளது. பொருளாதார மந்த நிலையை சமாளிப்பதற்காக, இந்த நாடுகளில் அரசு செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பட்ஜெட்டில் பற்றாக்குறை விழுமோ என்ற பேச்சு உள்ளது. கடன்களை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு கஜானா வலிமையாக உள்ளதா என்ற கவலையான குரல்கள் ஒலிக்கத் துவங்கி விட்டன. ஜெர்மனியிலும் அரசின் கடன் அளவு எகிறியுள்ளது. ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் அளவுக்கு ஜெர்மனியில் அரசு கடன் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. அயர்லாந்தில், அடுத்த ஆண்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில், அரசின் கடன் 83 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் கடந்த 2007ல், மொத்த பொருளாதார வளர்ச்சியில் அரசின் கடன் 25 சதவீதமாக மட்டுமே இருந்தது. லட்வியாவும் பெருமளவு கடனில் சிக்கியுள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், 'பல்வேறு நாடுகளில் அரசு கடன் திரும்பச் செலுத்த முடியாத அளவுக்கு இருந்தால், உடனடியாக சர்வதேச நிதியகம் (ஐ.எம்.எப்.,) இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்; சிறப்பு பொருளாதார சலுகைகளை அறிவிக்க வேண்டும்' என்றனர்.
நன்றி : தினமலர்


Sunday, December 6, 2009

துபாய் நெருக்கடி சாதாரண பிரச்னைதான்: மான்டெக்சிங் அலுவாலியா

துபாய் நெருக்கடி சாதாரண பிரச்னை தான் என்று திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், துபாயில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி சமாளிக்க கூடியது தான். இது சாதாரண பிரச்னைதான். துபாயில் ஏற்பட்டுள்ள ‌பிரச்னையால், இந்தியாவுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ பெரும் பாதிப்பு எதுமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா தனது நிதியியல் கொள்கையை நிலைப்படுத்தி மேலும் பல பிரமிக்கத் தக்க மாற்றங்களை காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உலக வங்கி குழும தலைவர் ராபர்ட் சோயல்லிக், துபாய் நெருக்கடி சமாளிக்கும் அளவிற்கு சாதாரண விஷயம் தான். இதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Friday, December 4, 2009

வளைகுடா பணம் வரும் : கேரளாவுக்கு பாதிப்பு உண்டு

'துபாயில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து பணம் பெறும் சில மாநிலங்களின் பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்படலாம்' என, இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. துபாயில் அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனமான 'துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கி, தான் வாங்கிய பல லட்ச கோடிக்கணக்கான ரூபாய் கடனை, திருப்பி செலுத்த ஆறு மாத காலம் தவணை கேட்டது. துபாயின் இந்த பொருளாதார சூழ்நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோராட் கூறியதாவது: துபாயில் இருந்து வரும் பணத்தை நம்பியே நாட்டின் சில பகுதிகள் உள்ளன. அதனால், சில பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் மூலமே ஏராளமான வருவாய் பெற்று வந்தது கேரளா. துபாயின் பொருளாதார நெருக்கடி எந்த அளவுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை நாம் காண வேண்டும். எனினும், துபாய் பொருளாதார நெருக்கடியால், இந்திய வங்கித் துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. எனவே, அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை.
இவ்வாறு உஷா கூறினார். பொதுத்துறை வங்கிகளில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ள கம்பெனிக்கு 1,500 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பிரிட்டனைச் சேர்ந்த நான்கு வங்கிகள் இணைந்து, 'துபாய் வேர்ல்டு' நிறுவனத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி உள்ள செய்தியில், 'ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து, 4,800 கோடி ரூபாய் முதல் 9,600 கோடி ரூபாய் வரையும், எச்.எஸ்.பி.சி., ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு மற்றும் லாய்ட்ஸ் வங்கி ஆகியவை தலா 4,800 கோடி ரூபாயும் கடன் கொடுத்துள்ளன. ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கிடையில், துபாயின் பொருளாதார நெருக்கடி குறித்து, 'டிவி' சேனல் ஒன்றிற்கு பேட்டி யளித்த சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் கூறியதாவது: சர்வதேச வங்கிகளில் இருந்து பெறப்பட்ட வர்த்தக கடன்களுக்கு அரசு பொறுப்பல்ல. துபாய் வேர்ல்டு நிறுவனத்திற்கு கடன் வழங்கிய வங்கிகள் அதன் பாதிப்புகளையும் உணர்ந்திருக்க வேண்டும். கம்பெனிக்கு தரப்படும் கடன் மற்றும் அரசுக்கு தரப்படும் கடன் ஆகிய இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க இவர்களுக்கு தெரிய வேண்டும். இவ்வாறு அல்வாலீத் கூறினார்.
நன்றி : தினமலர்


Wednesday, December 2, 2009

கேரளாவில் ஸ்மார்ட் நகரம் துபாய் நிறுவனம் தவிப்பு

கேரளாவில் ஸ்மார்ட் நகரம் உருவாக்க தேர்ந் தெடுக்கப்பட்ட துபாயை மையமாக கொண்டு செயல்படும் 'டெக்காம்' நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக, அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம், கொச்சியில், 1,500 கோடி ரூபாய் மதிப்பில் 'ஸ்மார்ட் நகரம்' அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த நகரம் அமைக்கும் பணிக்காக, துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'டெக்காம்' நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதுகுறித்து நிருபர்களிடம் பேட்டியளித்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியதாவது:

கொச்சி 'ஸ்மார்ட் நகரம்' திட்டத்திற்காக ஒதுக் கப்பட்ட 246 ஏக்கர் நிலத்தில், 12 சதவீதம் நிலத் தில் தங்களுக்கு உரிமை வழங்க வேண்டும் என 'டெக்காம்' நிறுவனம், கேட்டது. இதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிபந்தனை ஒரிஜினல் ஒப்பந்தத் தில் இல்லை. 'ஸ்மார்ட் நகரம்' உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு வேறு நிறுவனத்தை தேர்ந்தெடுக்க தயங்காது.இவ்வாறு அச்சுதானந்தன் கூறினார்.இவ்வாறு முதல்வர் கருத்து வெளியிட்ட தினத்தன்று மாலையே, 'டெக்காம்' நிறுவனம், முதல்வர் அச்சுதானந்தனை துபாய் வருமாறு அழைப்பு விடுத்தது.'ஸ்மார்ட் நகர' திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அப்துல் ரகுமான் கூறுகையில், 'இத்திட் டம் தாமதமானாலும், கேரள மக்களின் நலனுக்காகவும், மாநில பொருளாதாரத்திற்காகவும், அதை வெற்றிகரமாக செயல்படுத்துவோம்' என்றார்.
நன்றி : தினமலர்


Tuesday, December 1, 2009

உலகப் பொருளாதாரம் எங்கு செல்கிறது?

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா? இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா? விடை தெரியத்தான் இந்தக் கட்டுரை. சரியாக செப்., 2008ல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான 'லேமென் பிரதர்ஸ்' மூழ்கி விட்டது என்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்த செய்திகளும் உலகையே திருப்பிப் போட்டு சென்றது.

யானை புகுந்த கரும்புத் தோட்டம் போல் ஆனது உலகம். பங்குச் சந்தைகள் இருந்ததில் பாதியை இழந்தன. வங்கிகள் பல மூழ்கின. அரசாங்கங்கள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன. அடிபட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர். எழுந்தவர்கள் சில லட்சம் பேர் தான். ஆனால், கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். ஏனெனில் பலர் இது போன்ற நிகழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்காதது. அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதில் இந்தியாவும் ஒன்று என்பதில் நமக்கு மிகவும் பெருமை. விழுந்த காரணம் என்ன? அளவுக்கு அதிகமான சம்பளம், போனஸ் (அதாவது கோடிக்கணக்கில்) என்று கொடுத்து எடுக்கப்பட்ட எம்.பி.ஏ., இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், என்ன செய்தாவது கம்பெனியின் வருமானத்தை உயர்த்துங்கள் என்று. ஆதலால் பலருக்கு ஏதாவது செய்தாவது லாபத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்பாடுகள். அதில் ஒன்று தான் நிதி ஆதாரம் அதிகம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகப்படியான வீட்டுக் கடன்களை வாரி வழங்கியது. வட்டி மிகவும் குறைந்திருந்த போது வாங்கிய அளவுக்கு அதிகமான கடன்கள் பின்னர் வட்டி கூடிய போது வட்டி கூட கட்ட முடியாத ஒரு சூழ்நிலை. வீடுகளின் விலை வேறு குறைய ஆரம்பித்தது. உலகளவில் இந்தக் கம்பெனிகள் முதலீடு செய்திருந்த முதலீடுகளும் பங்குச் சந்தையின் பாதிப்பால் மதிப்பு குறைய ஆரம்பித்தன. நஷ்டங்கள் லட்சக்கணக்கான கோடிகளில். கடன்கள் திரும்பி வராமல் போனதால் வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். ஆதலால், கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் பல வீட்டுக் கடன் நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான வங்கிகளும் திவாலாகி வந்தன.

எப்படி திரும்ப எழுந்தது?: திரும்ப எழ காரணம், அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தான். பல நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பல லட்சம் கோடிகள் பண உதவி செய்து அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீள வழிவகை செய்தது. எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சி தான், விரைவில் மீண்டெழுந்ததற்கான காரணம். அதனால், பல நிறுவனங்கள் தப்பின. இருந்தாலும், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் நூறாண்டுகள் கழிந்த நிறுவனங்களும் அடங்கும். இது தவிர மக்களும் தங்களது வாயைக் கட்டி, வயிற்றை கட்டி இருந்ததும் ஒரு காரணம். அதாவது, அந்த கஷ்டமான சூழ்நிலையில் பெரிய செலவு ஏதும் செய்யாமல் இருந்தனர். கம்பெனிகளும் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தின. ஆதலால், அவர்களின் லாபம் கூடியது. விற்பனைகள் குறைந்த போதும் லாபம் கூடியது.

திரும்பி வந்த பங்குச் சந்தை நஷ்டங்கள்: பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை பலர் ஒரு வருடத்தில் திரும்பப் பெற முடிந்தது மிகவும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில், அதாவது, 1987ம் ஆண்டு முதலீட்டாளர்கள், தாங்கள் இழந்தவற்றை திரும்பப்பெற இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட 'கிரேட் டிப்ரஷன்' (பண வாட்டம்) இழந்தவற்றை திரும்பப் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பார்க்கும் போது இந்த முறை உலக நாடுகள் மீண்டெழுந்தது ஒரு வருடத்திற்குள். ஆதலால், இந்த மீண்டெழுச்சியை பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.

இந்தியா ஏன் அதிகம் பாதிக்கப்படவில்லை?: கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவோ அல்லது அதற்கு முன் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வீழ்ச்சியோ இந்தியாவை அதிகம் பாதிக்கவில்லை. காரணம், திறமையான நிர்வாகம். மேலும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, பொருளாதார சீர்திருத்தங்களை பெரிய அளவில் இங்கு கொண்டு வராதது தான்.

உலகமெங்கும் வங்கிகளின் நிலைமை: உலகமெங்கும் வங்கிகள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 25 வங்கிகளும், இந்த ஆண்டு 75 வங்கிகளுக்கும் மேல் மூழ்கி விட்டன. இந்திய வங்கிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றன. இந்தியாவில் வங்கிகள் சமீபகாலத்தில் மூழ்கியதாக சரித்திரமே இல்லை. அப்படி மூழ்கும் நிலை வந்தாலும் அந்த வங்கியை நல்ல நிலையில் இருக்கும் வங்கியோடு இணைத்து, முதலீட்டாளர்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணம் நியூ பாங்க் ஆப் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப் பட்டது. தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சாங்கில் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்திய வங்கிகளில், தனி நபர் ஒருவருக்கு, ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணத்திற்கு காப்பீடு இருக்கிறது. ஏனெனில், வங்கிகளுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போட்டிருந்தால் அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்காத பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் திருப்ப கிடைக்கும். ஆனால், அது போல சந்தர்ப்பங்கள் சமீப காலங்களில் ஏற்படவேயில்லை என்பதால் பயம் ஏதும் தேவையில்லை.

இந்த நிகழ்வுகளில் கற்றுக் கொண்டது என்ன?: சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொண்டோம். சேமிக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. எல்லா சேமிப்பையும் ஒரே முதலீட்டில் போடக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டோம். ஆண்டாண்டு காலமாக தங்கம், வெள்ளியில் சேமித்து வந்திருக்கிறோம், அது எவ் வளவு உன்னதமானது என்று உலகத்திற்கு நாம் எடுத்துக் காட்டினோம். உலகமும் நம்மை பின்பற்றத் தொடங்கியது. ஆதலால், தங்கம், வெள்ளி தொடமுடியாத அளவிற்கு சென்று விட்டது.

துபாயில் என்ன நடந்தது?: துபாய் அரசுக்கு சொந்தமான 'துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்காக பல நிறுவனங்களிடமிருந்து கடன்கள், வேலைகளை வாங்கியிருந்தது. அதில் 80 பில்லியன் டாலர் (3,70,000 கோடி) அளவு கடன்களை செலுத்த முடியாததால் அதை செலுத்துவதற்கு இன்னும் ஆறு மாத தவணை வேண்டும் என்ற கேட்டது உலகையை உலுக்கியது. ஏனெனில், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது அரபு நாடுகள் தான். உலகின் பெரிய நாடுகளே தங்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அரபு நாடுகளை நாடுவது வழக்கம் (சிட்டி வங்கி தனக்கு பிரச்னை ஏற்பட்ட போது அரபு நாடுகளைத் தான் நாடியது). அவர்களுக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வார்கள்? அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அதாவது தனி நபரோ அல்லது கம்பெனியோ கடன் வாங்கி கொடுக்க முடியாமல் போயிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கடன் வாங்கியதோ துபாய் அரசு. அவர்களே கொடுக்க முடியாமல் போனால்?

துபாய் திரும்ப எழுமா?: துபாய், உலகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. ஆதலால், துபாயின் பிரச்னையின் அளவு 80 பில்லியன் டாலர் என்றால், அதை தீர்ப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ஆனால், பிரச்னை இதை விட பெரிது என்றால், அது இந்தியாவை சிறிது பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தற்போதே அங்கு கட்டட விலை மிகவும் குறைந்து விட்டது. இது தவிர வங்கிகள் இனி வீடுகள் வாங்கக் கடன் கொடுக்குமா என்பது யோசிக்க வேண்டும். ஆதலால், கட்டுமானப் பணிகள் குறையும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. துபாயும் மற்ற நாடுகளைப் போல செலவுகளை குறைக்க முயற்சிக்கும். தற்போது துபாய் போன்ற நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தலைமைப் பதவிக்கு அமர்த்தி அழகு பார்ப்பதும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதும் வாடிக்கை தான். இனிமேல் அது போன்ற பதவிகள் இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கட்டுரையாளர் : சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்

Monday, November 30, 2009

துபையில் தேள் கொட்டினால்...

கடந்த ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் இப்போதுதான் சற்று குறைந்து, உலக நாடுகள் தட்டுத் தடுமாறி மீண்டும் தங்களைச் சுதாரித்துக் கொள்ளத் தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில், துபை அரசாங்கத்தின் பல்வேறு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களையும், வியாபாரம் மற்றும் கட்டுமானத் தொழில்களையும் நிர்வகிக்கும் "துபை வொர்ல்ட்' அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம்வரை தான் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுவது போலவும், தனது நிதி நிலைமை சீரும் சிறப்புமாக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்த "துபை வொர்ல்ட்' கடனில் மூழ்கித் தத்தளிக்கும் உண்மை திடுக்கிட வைத்திருக்கிறது.

அடுத்த ஆறு மாத காலத்துக்குத் தான் திருப்பிச் செலுத்த வேண்டிய தவணைகள், வட்டிகள் என்று அனைத்தையும் முடக்கி இருப்பதாக "துபை வொர்ல்ட்' அறிவித்திருக்கிறது. இந்த அரசு நிறுவனத்தின் மொத்தக் கடன் சுமார் 520 கோடி டாலர் என்று கூறப்படுகிறது. இந்த 520 கோடி டாலர் உள்பட துபை அரசு செலுத்த வேண்டிய கடன் தொகை சுமார் 800 கோடி டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழில், சிறப்புப் பொருளாதார மண்டலம், கப்பல் மற்றும் துறைமுகக் கட்டுமானத் துறை என்று எதையுமே விட்டு வைக்காமல் உலகம் முழுவதும் முதலீடு செய்து வந்தது "துபை வொர்ல்ட்' நிறுவனம். கடந்த வாரம் வரை 200 கோடி டாலர்கள் கையிருப்பு இருப்பதாகவும், அபுதாபி 100 கோடி டாலர்கள் தர இருப்பதாகவும் கூறிவந்தது இந்த நிறுவனம்.

உலக நிதி நிறுவனங்களின் பயமெல்லாம் "துபை வொர்ல்ட்' போல ஏனைய துபை நிறுவனங்களும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்குமோ என்பதுதான். இந்தப் பிரச்னைக்கு எல்லாம் மூல காரணம், துபை என்கிற குட்டி நாட்டின் அதிபரான ஷேக் முகம்மது பின் ராஷித்-அல்-மக்கோடம்தான். வானளாவிய கட்டடங்கள், வியாபார நிறுவனங்கள், மால்கள் என்று துரித கதியில் துபையை சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் போட்டியாக உருவாக்கிக் காட்டுவது என்று திட்டமிட்டதுடன் நில்லாமல், தனது வெற்றியைப் பற்றிய அதீதக் கற்பனையில் உலகளாவிய முதலீடுகளிலும் கால் வைக்க முற்பட்டார் அவர்.

துபையின் திடீர் நிதிநிலைச் சரிவுக்குக் காரணம் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் எனலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பீப்பாய் 140 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது பாதிக்குப் பாதியாகக் குறைந்து 75 முதல் 78 டாலர்களாக இருக்கிறது. இப்போது துபையில் பாதி கட்டப்பட்ட நிலையில் நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், மால்களும், விற்பனை வளாகங்களும் ஏராளம். துபையில் முதலீடு செய்து வந்தவர்கள் உலகப் பொருளாதாரச் சரிவுக்குப் பிறகு முதலீடு என்பதை நிறுத்தி விட்டது இன்னொரு காரணம்.

"துபை வொர்ல்ட்' மற்றும் துபை அரசின் நிதி நெருக்கடியால் இந்தியாவுக்கு நேரிட இருக்கும் உடனடிப் பிரச்னைகள் மூன்று. வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் அனுப்பப்படும் சுமார் 250 கோடி டாலரில் ஏறத்தாழ பாதிக்குப் பாதி வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பப்படுபவைதான். அந்த வரவு கணிசமாகக் குறையக் கூடும். இரண்டாவதாக, துபையுடன் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும், துபையில் முதலீடு செய்திருக்கும் இந்திய நிறுவனங்களின் முதலீடு அல்லது வர வேண்டிய பணம் தடைபடுவதால், பல நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். இந்தியாவில் துபை செய்திருக்கும் முதலீடுகள் திரும்பப் பெறப்படும் அபாயம் மூன்றாவது.

"துபை வொர்ல்ட்' மற்றும் அரசின் பொருளாதாரப் பின்னடைவு இந்திய வங்கிகளையும் பாதிக்கக்கூடும். இந்திய வங்கிகள் சுமார் ரூ. 6,500 கோடி வரை வளைகுடா நாடுகளில், குறிப்பாக, ஐக்கிய அரபுக் கூட்டாட்சியில் பற்று வரவு நடத்தி வருகிறது.

சிக்கனம் சார்ந்த பொருளாதாரம் கைவிடப்பட்டு செலவழிப்பதும், கடன் வாங்குவது ஊக்குவிக்கப்படுவதும், வரைமுறையற்ற வளர்ச்சி வரவேற்கப்படுவதும், உலகப் பொருளாதாரப் பின்னடைவு அல்லது துபையில் ஏற்பட்டிருப்பதுபோலப் பொருளாதாரத் தகர்வு ஏற்பட்டால் நம்மை நிலைகுலைய வைத்துவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

முந்தைய ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டியும், தற்போதைய கவர்னர் சுப்பாராவும் மிகுந்த எச்சரிக்கையுடனும், பலத்த கட்டுப்பாடுகளுடனும் இந்தியாவில் நிதி நிர்வாகத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஓரளவுக்கு நம்மைக் காப்பாற்றி வருகிறது. துபையைத் தாக்கியிருக்கும் நிதி நெருக்கடி சுனாமி, நம்மை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமா என்று கேட்பவர்கள், உலகமயத்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள்!
நன்றி : தினமணி

துபாய் பொருளாதார நெருக்கடி: அதிகளவு பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கருத்து

துபாய் பொருளாதார நெருக்கடியால் அதிகளவு பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டதன் காரணமாக துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரெலியாக இந்திய பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இந்நிலையில், துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தகவல் தெரிவித்தனர் . இதன் காரணமாக இன்றைய பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் தொடங்கியது. நேற்று ஐக்கிய அரபு குடியரசின் ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை, நிதி சந்தை, வங்கிகள் ஆகியவற்றின் பணப்புழக்கம் பாதிக்காத வகையில் அந்நாட்டு நாணயமான தினாரை வங்கித் துறையில் புழக்கத்திற்கு விடுவதாக அறிவித்தது. இந்நிலையில் எடில்விஸ் இன்ஸ்டிசனல் ஈக்விட்டிஸ் என்ற முதலீடு நிறுவனத்தின் துணை தலைவர் விகாஸ் கிமானி இதுகுறித்து கூறும் போது, இந்திய பொருளாதாரத்திற்கு துபாயில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாதிப்பு குறைந்த அளவே இருக்கும். துபாய் நிறுவன கடன் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த கடனை திருப்பி செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். துபாய் வேர்ல்ட் நிறுவனத்தை பாதுகாக்க துபாய் அரசு முயற்சிக்கும் என்று தெரிவித்தார்.
ஐக்கிய அரபு குடியரசு, நெருக்கடியில் உள்ள நிறுவனத்திற்கு உதவும் வகையில் உதவிக்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று பொதுவான எதிர்பார்ப்பு நிலவுவதாக மற்றொரு நிபுணர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Friday, November 27, 2009

துபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது: ஆனந்த் சர்மா

துபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டுள்ளது. இது நேற்று பங்குச் சந்தை, கடன் சந்தை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இன்று துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. துபாய் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, இந்திய பங்குச்சந்தையில் எதிரெலித்து கடும் சரிவினை கண்டது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, துபாய் பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கோ, ரியல் எஸ்டேட் தொழிலுகோ எந்த வித பாதிப்பும் வராது என்று கூறியுள்ளார். மேலும் , இந்திய பொருளாதாரம் பரந்த அளவிலானது. துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இங்கும் பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை நன்கு செயல்பட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Monday, August 24, 2009

துபாயில் வீட்டு வாடகை 30 சதவீதம் குறைவு

துபாயில் வீட்டு வாடகை இந்த மாதம் 30 சதவீதம் குறைந்துள்ளது. துபாயில் பரவலாக பல பகுதிகளில் வீட்டு வாடகை கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் வீட்டு வாடகை உயர்ந்து வருவதாகவும் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களாக வீட்டு வாடகை சிங்கிள் பெட் ரூம் உள்ள வீடுகளுக்கு 11 சதவீதமும், ஒரு பெட் ரூம் வீடுகளுக்கு 6 சதவீதமும் உயர்ந்திருந்தது என ‌அவர்கள் தெரிவித்தனர். ஜூன், ஜூலை மாதங்களில் சொத்துகள் வாங்கும் திறன் சற்று அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Wednesday, August 12, 2009

மத்திய கிழக்கு நாடுகள் சந்தையில் பலமான எதிர்கால வியாபார திட்டம் : வோல்டாஸ் வியூகம்

மத்திய கிழக்கு நாடுகளின் சந்தையில் வர்த்தக போட்டியில் வென்று தனக்கென தனிச்சிறப்பான இடம் பிடிக்க டாடா குரூப்சின் வோல்டாஸ் நிறுவனம் அதிகம் முயன்று வருவதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த வோல்டாஸ் கம்பெனியின் வருடாந்திர பொது கூட்டத்தில், பங்குதாரர்கள் மத்தியில் பேசிய வோல்டாஸ் சேர்மன் இஷாத் ஹூசைன் இத் தகவலை தெரிவித்தார். இதற்காக சவுதியில் ஒரு சப்சிடிரி கம்பெனி நிறுவ திட்டமிட்டுள்ளத‌ாகவும் ஏற்கனவே அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் பணிகள் துவங்கி விட்டதாகவும் தெரிவித்தார். சர்வதேச பொருளாதர நெருக்கடியில் பாதிக்கப்படாத நாடுகள் என்ற வரிசையில் கதார், அபுதாபி, சவுதிஅரேபியா ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிளான திட்டங்களை செயல்படுத்த இந்நாடுகள் ஆயத்தமாக இருக்கின்றன. இந்நிலையில் வோல்டாசின் சர்வதேச திட்டங்கள் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சீராக இயங்கி வருகின்றன. சர்வதேச நிதி சுழலையும் மீறி , வோல்டாஸ் கடந்த நிதி ஆண்டில் ரூபாய் 1,334 கோடிக்கு வர்த்தக ஆர்டர்கள் பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளது என்றார்.

நன்றி : தினமலர்


Monday, July 27, 2009

வளைகுடா நாடுகளிலேயே யூ.ஏ.இ., தான் இந்தியர்களின் விருப்ப நாடாக இருக்கிறது

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு, அங்குள்ள ஐக்கிய அரபு குடியரசு ( யு.ஏ.இ.,) தான் இன்னமும் மிகவும் விருப்பமான நாடாக இருக்கிறது. அங்கு சுமார் 15 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக சென்றிருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய அரபு குடியரசில் இந்திய தூதராக இருக்கும் வேனு ராஜாமணி இது குறித்து கருத்து தெரிவிக்கையில் சுமார் 15 லட்சம் இந்தியர்கள் இங்கு இருக்கிறார்கள். அதில் சுமார் 12 லட்சம் பேர் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திய பிரதேஷில் இருந்து வந்தவர்கள் என்றார் அவர். ' வளைகுடா நாடுகளின் பொருளாதார சீர்குழைவால் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்வர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ' என்பது குறித்து, சமீபத்தில் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ( சிடிஎஸ் ) நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய வேனு ராஜாமணி இவ்வாறு தெரிவித்தார். அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களிடையே ஐக்கிய அரபு குடியரசு தான் ஒரு விருப்பமான நாடாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. அதற்கு அடுத்ததாக சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், மலேஷியா மற்றும் பஹ்ரெய்ன் நாடுகள் இருக்கின்றன. ராஜாமணி மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, 2007 ஐ விட 2008 ல் 11.87 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


Saturday, July 4, 2009

கடும் பொருளாதார நெருக்கடியிலும் ஐக்கிய அரபு குடியரசுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போதும், ஐக்கிய அரபு குடியரசுக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து தான் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது மூன்று சதவீதம் அதிகரித்திருக்கிறது. இத்தனைக்கும் மற்ற அரபு நாடுகளில் இந்த எண்ணிக்கை 18 சதவீதம் குறைந்திருக்கிறது. இதில் சவுதி அரேபியா தான் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, கடந்த வருடத்தை விட 10 மற்றும் 8 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆசிய பசிபிக் பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால் ஐக்கிய அரபு குடியரசில் மூன்று சதவீத வளர்ச்சியும் ஆப்பிரிக்காவில் மூன்று சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்