Monday, July 27, 2009

வளைகுடா நாடுகளிலேயே யூ.ஏ.இ., தான் இந்தியர்களின் விருப்ப நாடாக இருக்கிறது

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு, அங்குள்ள ஐக்கிய அரபு குடியரசு ( யு.ஏ.இ.,) தான் இன்னமும் மிகவும் விருப்பமான நாடாக இருக்கிறது. அங்கு சுமார் 15 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக சென்றிருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய அரபு குடியரசில் இந்திய தூதராக இருக்கும் வேனு ராஜாமணி இது குறித்து கருத்து தெரிவிக்கையில் சுமார் 15 லட்சம் இந்தியர்கள் இங்கு இருக்கிறார்கள். அதில் சுமார் 12 லட்சம் பேர் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திய பிரதேஷில் இருந்து வந்தவர்கள் என்றார் அவர். ' வளைகுடா நாடுகளின் பொருளாதார சீர்குழைவால் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்வர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ' என்பது குறித்து, சமீபத்தில் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ( சிடிஎஸ் ) நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய வேனு ராஜாமணி இவ்வாறு தெரிவித்தார். அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களிடையே ஐக்கிய அரபு குடியரசு தான் ஒரு விருப்பமான நாடாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. அதற்கு அடுத்ததாக சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், மலேஷியா மற்றும் பஹ்ரெய்ன் நாடுகள் இருக்கின்றன. ராஜாமணி மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, 2007 ஐ விட 2008 ல் 11.87 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


No comments: