தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதையடுத்து நாட்டின் பிற பகுதிகளிலும் தனிமாநிலக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. வன்முறை மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்திய அரசுக்கு இந்த மொழிதான் புரிகிறது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து புந்தேல்கண்ட், பஸ்சிமாஞ்சல் (மேற்கு உத்தரப் பிரதேசம்) மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று அம் மாநில முதல்வர் மாயாவதி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இப்போது உ.பி.யின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலத்தை அமைப்பதற்கான அரசியல் சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்துமாறு பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தைப் பிரித்து கூர்க்கா தனிமாநிலம் அமைக்க வேண்டுமென்று பாஜகவும், கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவும் கோரிக்கை எழுப்பியுள்ளன. இது 102 ஆண்டுகாலக் கோரிக்கையாம். எல்லைப் பகுதியின் காவலர்களாக இருக்கும் அவர்கள் உணர்வுரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் மேற்குவங்க மாநிலத்தின் மற்ற பகுதியிலிருந்து தனிமைப்பட்டுக் கிடக்கின்றனராம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா தனிமாநிலக் கோரிக்கையும் எழுந்துள்ளது. மகாராஷ்டிர பாஜகவின் இந்தக் கோரிக்கையை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா எதிர்க்கிறது. விதர்ப்பா தனி மாநிலக் கோரிக்கையை எழுப்புபவர்கள் ஒருங்கிணைந்த மகாராஷ்டிரத்துக்காக உயிர் நீத்த 105 தியாகிகளின் கனவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அது கூறுகிறது.
இதேபோல போடோ மக்கள் முன்னணி உறுப்பினர் பிஸ்வமூர்த்தி, "போடோலேண்ட்' அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே கோரியுள்ளார். அசாம் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.
பிகார் மாநிலத்தைப் பிரித்து, "மிதிலாஞ்சல்' மாநிலமும், குஜராத் மாநிலத்தைப் பிரித்து, "சௌராஷ்டிரா' மாநிலமும் அமைக்க வேண்டும்; உ.பி.யின் கிழக்குப் பகுதியையும் பிகாரின் சில பகுதிகளையும் பிரித்து "போஜ்புர்' மாநிலமும் அமைக்க வேண்டும் என இது தொடர்கிறது.
2000-ல் பிகாரிலிருந்து "ஜார்க்கண்ட்' மாநிலமும், உ.பி.யிலிருந்து "உத்தரகண்ட்' மாநிலமும், மத்தியப் பிரதேசத்திலிருந்து "சத்தீஸ்கர்' மாநிலமும் பிரிக்கப்பட்டன. இப்போது தெலங்கானா அமையுமானால் இது இந்தியாவின் 29-வது மாநிலமாகும்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு புதிய குரல் கேட்கிறது. தமிழகத்தை இரண்டாகப் பிரித்தால் நல்லது. சிறிய மாநிலமாக இருந்தால் வளர்ச்சியிருக்கும்; நிர்வாகமும் எளிதாக இருக்கும். ஆனால் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது பாமகவின் முன்னுரிமைக் கோரிக்கை அல்ல என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனை வேறு சிலரும் வரவேற்றுள்ளனர்.
ஆனால் தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ""அப்படிப்பட்ட கருத்து திமுகவிலும் இல்லை; தமிழ்நாட்டு மக்களுக்கும் இல்லை'' என்று கூறியுள்ளார்.
தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது போன்ற யோசனைகள் மிகவும் ஆபத்தானவை மட்டுமல்ல, அபத்தமானவை. இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தொடங்கும்போதே, "ஏன் இதனை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என மூன்றாகப் பிரிக்கக் கூடாதா?' என்ற அடுத்த கேள்வியும் எழும். அத்துடன் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமும் நீர்த்துப் போகும்.
அந்தக் காலத்தில் தமிழகம் பல நாடுகளாக இருந்தது என்பது உண்மைதான். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்பவை முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டன. அத்துடன் பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கி.மு. 300 முதல் 600-ம் ஆண்டு வரை அரசாட்சி செய்திருக்கின்றனர். பல்லவர்களை வென்று காஞ்சியைக் கைப்பற்றி சாளுக்கியர்களும் சிலகாலம் ஆட்சி செய்துள்ளனர்.
இதுதவிர, தொண்டை நாடு, கொங்கு நாடுகளும் இருந்தன. மூவேந்தருக்குக் கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் குன்றுதோறும் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு பல சிற்றரசர்கள் தனியாகவே ஆண்டுவந்தனர். மேலும் தமிழ்நாட்டில் பல ஊர்களே நாடு என்ற பெயரில் வழங்கின. ஒரத்த நாடு, பாப்பா நாடு, பைங்கா நாடு, வள நாடு எனக் கூறலாம். இந்த ஊர்களே ஒரு நாடாக பல பண்ணையார்களால் ஆளப்பட்டுள்ளன. இன்றும் அவ்வூர்களில் அவர்களின் வம்சாவளியினர் இருக்கின்றனர். இவையெல்லாம் கடந்த கால வரலாறு.
நாடு விடுதலை பெற்றதும், மாநில வரையறை பற்றிய கேள்வி எழுந்தது. பிரதமர் நேருவின் தட்சிணப் பிரதேசத் திட்டம் ஏற்கப்படாததால் மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்து அமைப்பதற்காக "மாநிலப் புனரமைப்புக் குழு' நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரை செயல்படுத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணம் என்பது திராவிட நாடாக-பல மொழிகள் பேசும் மாநிலமாக இருந்தது. 1953-ல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் முதலில் பிரிந்தது. 1956-ல் மலபார் மாவட்டம் பிரிந்து கேரளத்தில் இணைந்தது. தென் கன்னட மாவட்டம் பிரிக்கப்பட்டு கர்நாடகத்துடன் சேர்ந்தது. மீதம் இருந்ததே தமிழ்நாடானது.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக வேங்கட மலையும், தெற்கு எல்லையாக குமரியாறும், கிழக்கும், மேற்கும் கடலாகவும் இருந்தன என்று தமிழக வரலாறு கூறுகிறது. இதனையே, "வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து' என பண்டைய புலவர்களும் பாடியுள்ளனர்.
ஆனால் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்தின் பல பகுதிகள் பறிபோய்விட்டன. தமிழகத்தின் வட எல்லையான வேங்கடம், சித்தூர் முதலிய பகுதிகள் ஆந்திரத்துக்கும், தேவிகுளம், பீர்மேடு முதலிய தமிழ்ப்பகுதிகள் கேரளத்துக்கும், கோலார் தங்கவயல் முதலிய தமிழ்நிலம் கர் நாடகத்துக்கும் எடுத்துத் தரப்பட்டபோது இதுபற்றி இங்கே யாரும் கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டில் இருந்த பெரிய கட்சிகள் எல்லாம் கண்டும், காணாமல் இருந்தபோது, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யும், அவர் கட்சியினருமே குரல் கொடுத்தனர். எல்லைப் போராட்டங்களை எடுத்து நடத்தினர். வடஎல்லை பாதுகாப்புக் குழுவின் செயலாளராக இருந்த கே. விநாயகம், சித்தூர் மாவட்டத்தில் வாழ்ந்த 4 லட்சம் தமிழர்களுக்காகப் பாடுபட்ட மங்கலக்கிழார் இவர்களைத் தமிழக வரலாறு மறக்காது.
எனவே இழந்த மண்ணை மீட்காவிட்டாலும், இருக்கும் மண்ணையாவது இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். மாநிலத்தைக் கூறுபோடுவதைவிட அதன் முன்னேற்றத்துக்காக உழைப்பதே பெருமையாகும்.
தமிழ்நாட்டில் நிர்வாகம் எளிதாக இருக்க வேண்டுமானால் அரசுத் துறைகள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் தலைநகரிலேயே தேக்கி வைப்பது கடந்த காலங்களில் தேவையாக இருக்கலாம்; இனித் தேவை இல்லை. நாட்டின் கடைகோடியில் இருக்கும் ஒருவர் எல்லாவற்றுக்கும் அரசுத்துறையை நாடி சென்னைக்கு மூட்டை கட்டிக் கொண்டு வர வேண்டும் என்பது என்ன நியாயம்?
தொழில் துறையை கோவை அல்லது திருப்பூருக்கும், வேளாண்மைத்துறையை தஞ்சாவூர் அல்லது திருச்சிக்கும் மாற்றவேண்டும். இது தவிர மதுரை, நெல்லை, சேலம் முதலிய புறநகரங்களுக்கும் பிற துறைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிவது ஆபத்தாகும்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் தலைநகர் மாநிலத்தின் மையப்பகுதியாகிய திருச்சியில் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். ஆனால் அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ள விடாமல் அதிகாரிகளே தடுத்து விட்டனர் என்று அப்போது கூறப்பட்டது. தலைநகரை மாற்றுவதற்குப் பதிலாகத் துறைகளை மாற்றுவது எளிதாகும்.
இன்றைய அறிவியல் உலகில் அமைச்சர்கள் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொண்டு நிர்வாகத்தை நடத்த முடியும். "விடியோ கான்பரன்ஸ்' முறை இப்போதே செயல்பாட்டில் இருக்கிறது; மனம் வைத்தால் மார்க்கமா இல்லை?
அழகிய தேன்கூட்டைக் கல்வீசிக் கலைப்பதா? அவை கொட்ட வரும்போது எட்டி எட்டி ஓடுவதா? தெலங்கானா பிரச்னையைத் தொட்டுவிட்டு மத்திய அரசு செய்வது அறியாமல் திகைத்து நிற்பது போதாதா? சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுக்க வேண்டாம்.
கட்டுரையாளர் :உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி
Showing posts with label தெலங்கானா. Show all posts
Showing posts with label தெலங்கானா. Show all posts
Saturday, December 26, 2009
Friday, December 25, 2009
சமாளிப்பா? திறமையின்மையா?
கடந்த 13 நாள்களாக ஆந்திர மாநிலம் முழுவதுமே கொதித்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலைமை மாறி, தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேர பந்த் என்பதாக வரம்புக்குள் வந்துள்ளது வன்முறை.
வன்முறை வரம்பு கடந்ததற்கும், வரம்புக்குள் வந்ததற்கும் காரணம் மத்திய அரசின் நிலைப்பாடாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட கருத்துதான். தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை தொடங்கும் என்று அவர் அறிவித்தவுடன் ஆந்திர மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது. இப்போதைக்கு இல்லை என்று சொன்னதும் வன்முறையின் பரப்பளவு வரம்புக்குள் வந்துவிட்டது.
மத்திய அரசு எதற்காக அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவானேன், அவஸ்தைப் படுவானேன், இப்போது எதையெல்லாமோ நியாயப்படுத்தி, விஷயத்தைத் தள்ளிப்போடுவானேன்!
தெலங்கானா விவகாரத்தில் முதலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு உள்துறை அமைச்சர் ஒரு காரணத்தைச் சொல்கிறார். ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் தெலங்கானா அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்மாதம் 9-ம் தேதி அறிவித்தேன் என்கிறார். அப்படியானால், அவர் சொன்ன அடுத்த நாளே நூற்று இருபத்தைந்து எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை ஏன் கொடுத்தார்கள்? அதுவும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்களே இத்தகைய முடிவை மேற்கொண்டதன் காரணம் என்ன? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்தால் எதற்காக இந்தப் போராட்டங்களை இக்கட்சிகள் நடத்தின?
தெலங்கானா பகுதிக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டு, தெலங்கானா போராட்டம் மறக்கப்பட்ட நிலையில் அதற்கு உயிர் கொடுத்து, பலமும் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதானே தவிர, சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அல்ல.
அதிக முக்கியத்துவம் இல்லாமல், கெüரவத்துக்காக தனக்கென ஒரு கட்சி என்ற அளவில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர ராவை, காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அதிக இடங்களில் போட்டியிட வைத்து, வெற்றி பெறவும் வைத்து, அவர்களைக் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்க விட்டு பெரிய ஆளாக்கிவிட்டவர் ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி. தெலங்கானா அமைப்போம் என்ற வாக்குறுதியும் கொடுத்து, அதை மத்திய கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சேர்க்க வைத்தவரும் அவரே. அன்று செய்த அந்தத் தவறுக்காக இன்று ஆந்திரமே அமளிக்காடாகிவிட்டது.
இந்தியத் தேர்தல் முறையில், நேற்று முளைத்த கட்சிகூட தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்டு, தன் சின்னத்துக்குக் கிடைக்கும் எல்லா கட்சியினரின் வாக்குகளையும் தனக்கானதாகக் காட்டி, அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறுவதும், மார்தட்டிக் கொள்வதும் எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோன்றுதான், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும், கூட்டணி வாக்குகளை தனது வாக்குகளாகக் காட்டி, தன் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகவும், தெலங்கானாவுக்கு ஆதரவு இருப்பதாகவும் பேசியது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, தெலுங்கு தேசக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தபோது படுதோல்வி அடைந்தது. ஹைதராபாத் மட்டுமே தெலங்கானா தலைநகரம் என்று சொல்லும் இக்கட்சி, மாநகராட்சித் தேர்தலில் அடைந்த படுதோல்வி, இந்தக் கருத்துக்கு ஆதரவு இல்லை என்பதை அம்பலப்படுத்தி, தலைக்குனிவை ஏற்படுத்தியது.
இழந்த கெüரவத்தை நிலைநிறுத்தத்தான் சந்திரசேகர ராவ் இத்தகைய போராட்டத்தை நடத்தினார் என்பதையும், இந்த வன்முறை திட்டமிட்ட சிலரின் நடவடிக்கையே என்றும், புரிந்துகொள்ள உள்துறை அமைச்சருக்கு அரசியல் அனுபவம் போதாதா, அல்லது உளவுத் துறையினர் சரியான தகவல்களைத் தரவில்லையா? தெலங்கானாவைப் பிரித்தால், ஆந்திரத்தில் ராயலசீமா கோரிக்கை எழும், பிற மாநிலங்களிலும் பிரச்னை எழும் என்பதே தெரியாமல், அறிவிப்புச் செய்தோம் என்று உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ சொன்னால், அதைச் சமாளிப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது திறமையின்மை என்பதா? அல்லது எல்லாம் தெரிந்திருந்தும், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுக்க எதிர்க்கட்சிகள் வேறு எதையாவது கத்திக்கொண்டிருக்கட்டுமே என்ற திட்டமிட்ட திசை திருப்பல்தானா! எப்படிப் புரிந்துகொள்வது?
இதனால் ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் இழந்தவை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று நினைக்கும்போது, வேதனையாக இருக்கிறது. மருந்து உற்பத்தி, தகவல்தொழில்நுட்பம், சேவைத் தொழில்கள் இவற்றில் மட்டுமே ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிலிருந்தும் 25 வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 1000 பிரதிநிதிகள் பங்கேற்பதாக இருந்த சிஐஐ பங்குதாரர் மாநாடு, சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டது. வழக்கமாக இந்த மாநாடு நடைபெறும்வேளையில் புதிய தொழில்ஒப்பந்தங்கள் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்துக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இப்போதும்கூட, ஆற அமர விவாதித்து சுமுக முடிவு காணப்படும் என்று சொல்வதனால், புதிய முதலீட்டாளர்கள் ஹைதராபாதை கண்டுகொள்ளப் போவதில்லை.
இதன் விளைவால் ஏற்படும் நஷ்டம் ஆந்திர மாநிலத்துக்கு மட்டுமல்ல. ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கும் தான். உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்.
நன்றி : தினமணி
வன்முறை வரம்பு கடந்ததற்கும், வரம்புக்குள் வந்ததற்கும் காரணம் மத்திய அரசின் நிலைப்பாடாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட கருத்துதான். தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை தொடங்கும் என்று அவர் அறிவித்தவுடன் ஆந்திர மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது. இப்போதைக்கு இல்லை என்று சொன்னதும் வன்முறையின் பரப்பளவு வரம்புக்குள் வந்துவிட்டது.
மத்திய அரசு எதற்காக அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவானேன், அவஸ்தைப் படுவானேன், இப்போது எதையெல்லாமோ நியாயப்படுத்தி, விஷயத்தைத் தள்ளிப்போடுவானேன்!
தெலங்கானா விவகாரத்தில் முதலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு உள்துறை அமைச்சர் ஒரு காரணத்தைச் சொல்கிறார். ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் தெலங்கானா அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்மாதம் 9-ம் தேதி அறிவித்தேன் என்கிறார். அப்படியானால், அவர் சொன்ன அடுத்த நாளே நூற்று இருபத்தைந்து எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை ஏன் கொடுத்தார்கள்? அதுவும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்களே இத்தகைய முடிவை மேற்கொண்டதன் காரணம் என்ன? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்தால் எதற்காக இந்தப் போராட்டங்களை இக்கட்சிகள் நடத்தின?
தெலங்கானா பகுதிக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டு, தெலங்கானா போராட்டம் மறக்கப்பட்ட நிலையில் அதற்கு உயிர் கொடுத்து, பலமும் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதானே தவிர, சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அல்ல.
அதிக முக்கியத்துவம் இல்லாமல், கெüரவத்துக்காக தனக்கென ஒரு கட்சி என்ற அளவில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர ராவை, காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அதிக இடங்களில் போட்டியிட வைத்து, வெற்றி பெறவும் வைத்து, அவர்களைக் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்க விட்டு பெரிய ஆளாக்கிவிட்டவர் ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி. தெலங்கானா அமைப்போம் என்ற வாக்குறுதியும் கொடுத்து, அதை மத்திய கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சேர்க்க வைத்தவரும் அவரே. அன்று செய்த அந்தத் தவறுக்காக இன்று ஆந்திரமே அமளிக்காடாகிவிட்டது.
இந்தியத் தேர்தல் முறையில், நேற்று முளைத்த கட்சிகூட தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்டு, தன் சின்னத்துக்குக் கிடைக்கும் எல்லா கட்சியினரின் வாக்குகளையும் தனக்கானதாகக் காட்டி, அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறுவதும், மார்தட்டிக் கொள்வதும் எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோன்றுதான், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும், கூட்டணி வாக்குகளை தனது வாக்குகளாகக் காட்டி, தன் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகவும், தெலங்கானாவுக்கு ஆதரவு இருப்பதாகவும் பேசியது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, தெலுங்கு தேசக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தபோது படுதோல்வி அடைந்தது. ஹைதராபாத் மட்டுமே தெலங்கானா தலைநகரம் என்று சொல்லும் இக்கட்சி, மாநகராட்சித் தேர்தலில் அடைந்த படுதோல்வி, இந்தக் கருத்துக்கு ஆதரவு இல்லை என்பதை அம்பலப்படுத்தி, தலைக்குனிவை ஏற்படுத்தியது.
இழந்த கெüரவத்தை நிலைநிறுத்தத்தான் சந்திரசேகர ராவ் இத்தகைய போராட்டத்தை நடத்தினார் என்பதையும், இந்த வன்முறை திட்டமிட்ட சிலரின் நடவடிக்கையே என்றும், புரிந்துகொள்ள உள்துறை அமைச்சருக்கு அரசியல் அனுபவம் போதாதா, அல்லது உளவுத் துறையினர் சரியான தகவல்களைத் தரவில்லையா? தெலங்கானாவைப் பிரித்தால், ஆந்திரத்தில் ராயலசீமா கோரிக்கை எழும், பிற மாநிலங்களிலும் பிரச்னை எழும் என்பதே தெரியாமல், அறிவிப்புச் செய்தோம் என்று உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ சொன்னால், அதைச் சமாளிப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது திறமையின்மை என்பதா? அல்லது எல்லாம் தெரிந்திருந்தும், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுக்க எதிர்க்கட்சிகள் வேறு எதையாவது கத்திக்கொண்டிருக்கட்டுமே என்ற திட்டமிட்ட திசை திருப்பல்தானா! எப்படிப் புரிந்துகொள்வது?
இதனால் ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் இழந்தவை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று நினைக்கும்போது, வேதனையாக இருக்கிறது. மருந்து உற்பத்தி, தகவல்தொழில்நுட்பம், சேவைத் தொழில்கள் இவற்றில் மட்டுமே ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிலிருந்தும் 25 வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 1000 பிரதிநிதிகள் பங்கேற்பதாக இருந்த சிஐஐ பங்குதாரர் மாநாடு, சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டது. வழக்கமாக இந்த மாநாடு நடைபெறும்வேளையில் புதிய தொழில்ஒப்பந்தங்கள் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்துக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இப்போதும்கூட, ஆற அமர விவாதித்து சுமுக முடிவு காணப்படும் என்று சொல்வதனால், புதிய முதலீட்டாளர்கள் ஹைதராபாதை கண்டுகொள்ளப் போவதில்லை.
இதன் விளைவால் ஏற்படும் நஷ்டம் ஆந்திர மாநிலத்துக்கு மட்டுமல்ல. ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கும் தான். உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்.
நன்றி : தினமணி
Labels:
இந்தியாஅரசு,
தெலங்கானா
Subscribe to:
Posts (Atom)
