Monday, December 15, 2008

நட்சத்திர ஓட்டல்களில் 'ரூம்' கிடைப்பது கஷ்டம்

நட்சத்திர ஓட்டல்களில் தங்க வருவோருக்கு தற்போது அத்தனை எளிதில் ஓட்டல் நிர்வாகம் அறைகளை கொடுப்பது இல்லை. பல்வேறு விசாரணைகளுக்கு பிறகே தரப்படுகின்றன. அதேபோல், அறைகளில் அதிரடி சோதனையும் நடத்தப்படுகிறது. மும்பை நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து, பெரும்பாலான நட்சத்திர ஓட்டல்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளன. வருவாயில் பெரும்பகுதியை பாதுகாப்புக்காக செலவிடத் துவங்கியுள்ளன. தங்கள் ஊழியர்களுக்கு சில சிறப்பு பயிற்சிகளையும் கற்றுத் தர முடிவு செய்துள்ளன. யோகா, கராத்தே உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தற்போது, அறைகளை வாடகைக்கு கேட்டு நட்சத்திர ஓட்டல்களுக்கு வருவோருக்கு அத்தனை எளிதில் அவை கிடைப்பது இல்லை. ஓட்டலில் தங்குவோர் பற்றிய முழு விவரமும் இருந்தால் தான் அறைகள் தரப்படுகின்றன. அலுவலக மற்றும் வீட்டு முகவரி, தொலைபேசி எண், அடையாள அட்டை என அத்தனையும் இருக்க வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதவிர, அனைத்து அறைகளிலும், முன் எச்சரிக்கை எதுவும் இல்லாமல் அதிரடி சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்