Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Thursday, August 19, 2010

ஒருமரத்துப் பறவைகள்!

பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள் என்று விலைவாசிப் பிரச்னையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று வெற்றிகரமாக "பாரத் பந்த்' நடத்தியபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு மாற்று ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பதை சமீபத்திய நாடாளுமன்ற நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தயவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம், நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்கை, அமெரிக்காவை மையப்படுத்தியுள்ள பிரச்னைகள், உலகமயமாக்கல் என்று வரும்போது காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கைகோத்துச் செயல்படுவதைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் பார்த்து வருகிறோம்.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக்கப்படும் என்பதுதான் நிலைமை. நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயத்துக்குமுன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்க முதலீட்டாளர்களையும், அரசையும் மனம் குளிர்விக்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் குறியாக இருக்கிறார் என்கிறார்கள். மன்மோகன் சிங்கின் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில் காங்கிரஸýம், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியேகூட முனைப்புடன் செயல்படுகிறது என்பதுதான் குறிப்பிடவேண்டிய ஒன்று.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிப்படைக் காரணம், அணுமின் நிலையங்களில் அணுக்கசிவோ, விபத்தோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால்தான் இந்த நிபந்தனை.

இழப்பீட்டுக்கு ஓர் உச்சவரம்பு விதிப்பதன் மூலம் அணுவிபத்தால் ஏற்படும் தலைமுறைகளைக் கடந்த பாதிப்புகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருக்காது. அணுமின் நிலையங்களை அன்னிய முதலீட்டாளர்கள் மட்டுமே நிறுவ முடியும் என்பதால் தங்களது நாட்டு முதலீட்டாளர்களின் இழப்பைக் குறிப்பிட்ட வரம்புக்குள் நிறுத்த அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு விரும்புகிறது.

போபாலில் நடந்த விஷவாயுக் கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் முழுமையான இழப்பீடு கொடுக்காத நிலையில், இன்னமும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதும், நீதிமன்றப்படிகளில் ஏறி, இறங்கி சலித்துவிட்டிருப்பதும் இதுபோன்ற விபத்துகளில் இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஆனால், அப்படிப்பட்ட இழப்பீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கப்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அணுசக்தி என்பது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது, அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு முழுமையான இழப்பீடு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவதும்கூட ஒரு நல்லரசின் கடமை.

கடந்த மக்களவையில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது இந்த இழப்பீட்டு மசோதாவில் அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது ஏன்? தங்களது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். அது என்ன நிபந்தனைகள்?

முதலாவதாக, அணுசக்திக் கூடங்கள் தனியார் தரப்பில் விடப்படக் கூடாது என்பதும் அரசுதான் நடத்த வேண்டும் என்பதும். இரண்டாவதாக, அணுசக்தி நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 500 கோடியாக இருந்ததை 1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதும் தேவைப்பட்டால் மேலும் உயர்த்திக் கொள்ளும் அதிகாரமும் அரசுக்கு இருக்க வேண்டும் என்பதும்.

முன்பு தயாரிக்கப்பட்ட மசோதாவின்படி, அணுசக்தி உற்பத்தியாளர்களின் இழப்பீடு 500 கோடி என்றும், அதற்குமேல் இழப்பீடு தரப்பட வேண்டுமானால் அதை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் இருந்தது. இப்போது பாஜகவின் கோரிக்கையின்படி அரசு நிறுவனமாக மட்டுமே அணுசக்திக் கூடங்கள் அமைக்கப்படும் என்கிற நிலையில் இழப்பீடு எவ்வளவு இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொள்வது என்பதுதானே நியாயம். அரசே நடத்தும்போது உச்சவரம்பின் அவசியம் தேவையில்லையே!

இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்றி, அரசு நிறுவனமாக அணுசக்திக் கூடங்களை அமைத்து, பிறகு அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டிருப்பது இந்த மசோதாவிலிருந்தே பளிச்செனத் தெரிகிறதே. அப்படியானால் இது மக்களை முட்டாளாக்கும் மசோதாதானே?

சரி, மின்உலைகளில் தயாரிப்புக் குறைபாடுகள் இருந்தால் அதற்கு உலைகளை வழங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்குமா? அவர்களிடமிருந்து விபத்து ஏற்பட்டால் இழப்பீடு முழுமையாகப் பெறப்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு மசோதா பதில் சொல்லவில்லையே, ஏன்?

பாரதிய ஜனதாவும், காங்கிரஸýம் ஓரினப் பறவைகள். பொருளாதாரக் கொள்கையிலும், பன்னாட்டு நிறுவன ஆதரவிலும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம். ஏனைய மாநிலக் கட்சிகள் இந்தப் பிரச்னையில் மௌனம் சாதிக்கின்றனவே, ஏன்? அவர்களைப் பொறுத்தவரை அணுவாவது.. உலையாவது.. விபத்தாவது.. இழப்பாவது..! உறுப்பினர்களின் சம்பள உயர்வுதான் இப்போதைய கவலை!

மக்களைப் பற்றியும் வருங்காலச் சந்ததியினரைப் பற்றியும் இவர்கள் எங்கே கவலைப்படுகிறார்கள்...?
நன்றி : தினமணி

Saturday, January 23, 2010

நாம்தான் கிடைத்தோமா?

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் குழுதான் என்று வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூற, இல்லையில்லை இறுதி முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்று அடுத்த நாளே மறுத்து நமது வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

தேசியவாத காங்கிரஸ் என்ற தோழமைக் கட்சியின் தனிப்பெரும் தலைவர் சரத் பவார். அவருடைய சமீபகால அரசியல் நடவடிக்கைகள், மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள், நலன் சாராது கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அதிபர்கள், சர்க்கரை மொத்த வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் நலன் சார்ந்து இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு சாகுபடியாளர்களுக்குக் கட்டுபடியாகும் கொள்முதல் விலையை வாங்கித் தருவதில் அதிக ஆர்வம் காட்டாத சரத் பவார், இறக்குமதி கோதுமைக்குக் கூடுதல் விலை தருவதற்குத் தயக்கம் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து கோதுமை உற்பத்தியாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.

இதையெல்லாம் கூறக் காரணம், மரபணு மாற்றப்பட்ட கத்தரி விஷயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது என்று கூறி, இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கப்பட காரணமாக அவர் இருந்துவிடுவாரோ என்கிற அச்சம்தான். நல்லவேளை ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு அவருக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்.

பி.டி. கத்தரிக்காய் விதைகளை "மேகோ' (மகாராஷ்டிர உயர்விளைச்சல் விதை நிறுவனம்) என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்க பி.டி. நிறுவனம் தான் மகாராஷ்டிரத்தில் இப்படி ஒரு புதிய பெயரில் சில இந்தியர்களை முன்னிலைப்படுத்தி ஓர் இந்திய நிறுவனம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மரபணு மாற்றப்பட்ட இந்தக் கத்தரிக்காய் விதை உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை பெருமளவு நிலப்பரப்பில் விதைக்கப்பட்டு நேரடியாக சோதிக்கப்படவே இல்லை என்பதுதான்.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியாவது பரவாயில்லை. கத்தரிக்காய் என்பது நேரிடையாக மக்களால் உணவாகச் சாப்பிடப்படுவது. இதில் நச்சுக்கலப்பு இருந்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், அமெரிக்காவிலும் ஏனைய மேலைநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்கள் விவசாயத்துக்காக இருக்கும்போது, மரபணுப் பரிசோதனைகளை அங்கே நடத்தாமல் இந்தியா போன்ற ஏமாளி நாடுகளில் நடத்தி, நம்மைப் பரிசோதனைக் களமாக்குவதன் ராஜதந்திரம், சிறந்த அரசியல் ராஜதந்திரியான சரத் பவாருக்கு ஏன் தெரியவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.

இதே பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கி சாகுபடி செய்து, சாகுபடி பொய்த்ததால் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட இந்திய விவசாயிகள் எண்ணிக்கை சில ஆயிரம். அவர்களுக்கு இந்த நிறுவனம் எந்த நஷ்டஈட்டையும் அளித்ததாகத் தகவலே கிடையாது. ஆலைகளில் இந்தப் பருத்தியைக் கையாண்ட தொழிலாளர்களுக்கு ஒருவித அரிப்பும், இதர உடல் உபாதைகளும் ஏற்பட்டது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பசுமைப்புரட்சியை இந்த நாட்டில் கொண்டு வந்தபோது மிகவும் பெருமிதம் கொண்ட நமக்கு அதன் தீமைகள் புரிய பல ஆண்டுகள் பிடித்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மரபணு மாற்றிய கத்தரிக்காயைப் பன்னாட்டு நிறுவனம்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் நோக்கம் இந்தியர்கள் கத்தரிச் சாகுபடியில் அமோக லாபம் சம்பாதிக்க வேண்டும், பூச்சி அரிக்காத காய்கறிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும், ஓர் ஏக்கருக்கு இப்போது கிடைப்பதைவிட 3 மடங்கு 5 மடங்கு என்று கத்தரிக்காய் விளைய வேண்டும் என்பதெல்லாம் அல்ல. இவையெல்லாம் வியாபார உத்திக்காகக் கூறப்பட்டாலும் நம்முடைய பாரம்பரிய கத்தரிக்காய் ரகங்களைப் புழக்கத்திலிருந்து அகற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதன் பிறகு கத்தரிக்காய் என்றாலே நாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரித்துத்தரும் ரகத்தைத்தான் வாங்க வேண்டியிருக்கும். அப்போது அதற்குத் தரும் விலையும் அமோகமாக இருக்கும்.

அதைவிடுங்கள், அதனால் நிலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய கெடுதல்களை எப்படி முன்கூட்டியே அனுமானிப்பது? நாம் காரணம் இல்லாமலேயே சந்தேகப்படும் பத்தாம்பசலிகளாகவே கூட இருந்து தொலைப்போம், நாளை இதனால் கெடு விளைவுகள் ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றப் போவது யார்? போபாலில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரையும் வாழ்வையும் உறிஞ்சிய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனம் இன்று எங்கே? அதன் தலைவராக இருந்த ஆண்டர்சன் எங்கே? அவரைக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்த மன்மோகன் அரசு எடுத்த தீவிர முயற்சிகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் இப்போதும் முழுமையான நஷ்டஈடு கிடைக்காமல் தவிக்கிறார்களே, அவர்களுக்கு விடிவுதான் என்ன?

நாளை மரபணு கத்தரிக்காயால் அப்படியொரு கெடு பலன் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பிணை நிற்கப் போவது யார்? இந்தியாவில் அணு மின் நிலையம் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நேரிட்டால் மிகவும் குறைந்தபட்ச நஷ்ட ஈடு தந்தாலே போதும், வேறு எந்த ஜாமீனும் தேவையில்லை என்று ஒப்பந்தம் தயாரிக்கும் இந்த தேசபக்தர்களை நம்பியா நம் நாட்டு நிலங்களை புதிய மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு ஒப்படைப்பது?

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே கெல்லி எறிய தண்டியிலே ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்தார் அண்ணல் மகாத்மா காந்தி. நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா? என் செய்வது, ஐநூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பதற்குத்தான் வோட்டு என்றாகிவிட்ட பிறகு, விலைபேசுவது நம் நாட்டு சரத் பவாராக இருந்தால் என்ன, அமெரிக்க ஆண்டர்சனாக இருந்தால்தான் என்ன?
நன்றி : தினமணி

Monday, January 18, 2010

அமெரிக்காவில் மேலும் 4 வங்கிகள் மூடல்

அமெரிக்கா, பொருளாதார சரிவில் இருந்து மீட்டு வந்தாலும், அதன் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அங்கு வங்கிகள் மூடும் நிலை தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அமெரிக்க வங்கித் துறையில் 4 வங்கிகள் திவாலாகி உள்ளன. ஜனவரி 15ம் தேதி அன்று மட்டும் பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி, செயின்ட் ஸ்டீபன் வங்கி, டவுன் கம்யூனிட்டி வங்கி உள்ளிட்ட மூன்று வங்கிகள் மூடப் பட்டன. கடந்த வாரம் வாஷிங்டனைச் சேர்ந்த ஹாரிசன் வங்கி திவாலானது. இந்த ஆண்டின் தொடக்க மாதத்திலேயே நான்கு வங்கிகள் திவாலாகியுள்ளது அமெரிக்க வங்கித் துறையைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நன்றி : தினமலர்


Saturday, January 16, 2010

புத்தொளி பாய்ச்சிய புனிதர்!

ஜாதியிலே,​​ மதங்களிலே,​​ சாத்திரச் சண்டைகளிலே அகப்பட்டு,​​ புகழ் மங்கிக்கிடந்த இந்தியத் திருநாட்டின் நிலையை மாற்ற -​ அதன் உயர்வை உலகுக்குப் பறைசாற்றத் தோன்றிய பெருந்தகை சுவாமி விவேகானந்தர்.​ அவர் இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள தொண்டு அளப்பரியதாகும்.

விவேகானந்தரைச் சான்றோனாக,​​ துறவியாக,​​ நாவலனாக,​​ தத்துவ ஞானியாக,​​ சீர்திருத்தச் செம்மலாகக் காண்பர் பலர்.​ இவை அனைத்துக்கும் மேலான ஒரு பரிமாணம் அவருக்கு உண்டு.​ ஊக்கமின்றி,​​ உள்ள உரமிழந்து அன்னியருக்கு அடிமைகளாக வாழ்ந்த இந்தியர் நெஞ்சில் புத்தொளி பாய்ச்சியவர் அவர்.​ முடைநாற்றம் வீசும் மூடப்பழக்கங்களையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு,​​ ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைந்த இந்நாட்டு மக்களுக்கு அறிவு நெறி காட்டியவர்.

தன்னம்பிக்கையும்,​​ அச்சமின்மையுமே அவர் சொல்லிலும்,​​ செயலிலும் உயிர் நாதமாகத் திகழ்ந்தன.​ ""பண்டைய மதங்கள் கடவுளின் மீது நம்பிக்கையற்றவனை "நாத்திகன்' என்றன.​ ஆனால் புதிய மதமோ எவனொருவனுக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லையோ அவனையே நாத்திகன் என அழைக்கிறது'' ​(சுவாமி விவேகானந்தரின் எழுத்தும் பேச்சும் தொகுதி:​ 2 பக்.301) எனப் புதிய சித்தாந்தம் ஒன்றை அவர் வலியுறுத்தினார்.​ வலிமையே வாழ்வெனவும்,​​ வலியின்மை மரணமெனவும் முழங்கினார்.​ ""மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம் அச்சமின்மை'' ​(தொகுதி:​ பக்.160) என வலியுறுத்தினார்.​ உபநிஷதங்களிலிருந்து வெளிப்படும் கருத்து இதுவே என்றார்.​ மக்களிடையே இருந்த அச்சம் எனும் பிணியைக் கண்டதோடல்லாமல்,​​ அந்நோயின் மூலத்தையும் தெளிவுற அறிந்திருந்தார்.

அறியாமை!​ தன்வலி புரியாமையால் விளைந்த அறியாமை;​ எல்லாவற்றையும் செய்யக் கூடிய ஆற்றலின் ஊற்று நம்முள்ளே சுரந்துகொண்டிருக்க,​​ அறியாமையால் அதை அறியாதிருத்தல் பேதைமை எனவும்,​​ ""முடியாது,​​ என்னால் இயலாது என்று மட்டும் சொல்லாதீர்கள்.​ நீங்கள் எல்லையற்றவர்கள்.​ காலமும்,​​ இடமும் கூட உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை.​ நீங்கள் எதையும் செய்ய முடியும்.​ எல்லாம் வல்லவர் நீங்கள்'' ​(பக்.300) எனவும் கூறினார்.

தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப்பின்,​​ இந்திய நாட்டின் உண்மை நிலை அறிய,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார் விவேகானந்தர்.​ நாட்டில் பரவிக்கிடந்த வறுமையையும்,​​ அதனால் மக்களுற்ற இன்னல்களையும் கண்டு கலங்கினார் அவர்.​ ""பசித்த மானிடனுக்கு மதத்தைப் போதிப்பது பயனற்றது'' எனத் தனது குருநாதரின் மொழியை அனுபவத்தால் உணர்ந்தார் சுவாமி விவேகானந்தர்.​ வறியவரோடு வறியவராக அப்பயணத்தின் போது அவர் வாழ்ந்தார்.

விவேகானந்தர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது,​​ செல்வந்தர்கள் பலர் பணம் தர முன்வந்தனர்.​ ஆனால் விவேகானந்தர்,​​ தன் அன்பர்களை நடுத்தர மக்களிடம் சென்று பொருள் வேண்டச் சொன்னார்.​ தான் நடுத்தர ஏழை மக்களின் பிரதிநிதியாகவே அமெரிக்கா செல்ல விரும்புவதாகப் பெருமையுடன் சொன்னார்!

""இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை'' என்னும் குறள் வரியின் இலக்கணமாகவே அவர் வாழ்வு அமைந்திருந்தது.​ அவர் எளிய வாழ்க்கை முறையையும்,​​ உண்மைத் துறவு நிலையையும் அவர் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும்.​ குறிப்பாக,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இறுதியாகக் குமரிமுனையை அடைந்த விவேகானந்தர்,​​ கடலில் இருந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய விழைந்தார்.​ ஆனால்,​​ படகேறிச்செல்ல அவரிடம் பணம் இல்லை.​ சுறா மீன்கள் நிரம்ப உள்ள குமரிக்கடலில் குதித்து,​​ நீந்திப் பாறையை அடைந்து,​​ தியானம் மேற்கொண்டார்.

அயல் நாடுகளில் விவேகானந்தரின் நாவன்மையையும்,​​ உள்ளத்திண்மையையும்,​​ மனத்தன்மையையும்,​​ மதி நுட்பத்தையும் கண்டு வியந்தோர் பலர்.​ 1893-ம் ஆண்டு சிகாகோவில் அனைத்துலக சமயப் பெருமன்றத்தில் விவேகானந்தர் ஆற்றிய,​​ கேட்போர் பிணிக்குந்தன்மை வாய்ந்த உரை இந்தியாவின் புகழை உலகறியச் செய்தது.​ அப் பெருமன்றத்தில் விவேகானந்தர் உரையாற்றிய பாங்கையும்,​​ தன் நாநலத்தால் மக்களை அவர் கவர்ந்த விதத்தையும் பிரஞ்சு நாட்டு அறிஞர் ரோமென்ரோலந்து தான் எழுதிய,​​ "விவேகானந்தரின் வாழ்க்கை' என்ற நூலில் சிறப்புடன் விளக்கியுள்ளார்.

""யாரும் அறியாத அம் முப்பது வயது இளந்துறவி,​​ கார்டின் கிப்பன்ஸôல் சிகாகோவில் 1893-ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்ட அனைத்துலகச் சமயப் பெருமன்றத்தில் புகுந்தபோது,​​ அவரின் கம்பீரத் தோற்றம் உடனிருந்தோரை மெய்மறக்கச் செய்தது.​ அவர் வலிவும்,​​ பொலிவும்,​​ கருவிழிகளும்,​​ தோற்றமிடுக்கும்,​​ சொற்பொழிவைத் துவக்கியவுடன் நல்லிசையென ஒலித்த அவர்தம் குரலும்,​​ அவர் நிறம் கண்டு அவர் மீது முன்பு வேற்றுமை மனப்பான்மை கொண்டிருந்த அமெரிக்க,​​ ஐரோப்பிய மக்களையும் கவர்ந்திழுத்தன.​ அப்போர்க்குணம் கொண்ட இந்தியத் துறவி அமெரிக்காவில் தன் ஆழ்ந்த முத்திரையைப் பதித்துச் சென்றார்'' ​(பக்.5).

இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தான் கூறவந்த கருத்துகளை எவ்வித அச்சமும்,​​ தயக்கமுமின்றி வெளிப்படுத்தினார்.​ தன் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்கச் சிந்தனையாளர் இங்கர்சாலை சந்தித்தார் விவேகானந்தர்.​ அவர் விவேகானந்தரின் அச்சமற்ற போக்கையும்,​​ அந்நாளிலான அமெரிக்காவின் நிலைமையையும் மனதில் கொண்டு,​​ ""ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்நாட்டுக்கு வந்து போதித்திருப்பீர்களாயின்,​​ உங்களை தூக்கிலோ,​​ தீயிலோ இட்டிருப்பர் இந்நாட்டவர்'' என்றார் ​(தொகுதி:2 பக்.27).

மதத்துக்கும்,​​ மானுடத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு உணர்ந்திருந்தார் விவேகானந்தர்.​ ஆன்மிகத்துக்கும் நடைமுறை வாழ்வுக்கும் இடைவெளி ஏதும் இல்லை என்பதை தம் சொற்பொழிவுகள் மூலம் நிறுவினார்.​ இக்கருத்தை அறுதியிடும் வண்ணம்,​​ "செயல்முறை வேதாந்தம்' என்னும் கோட்பாட்டைக் கண்டார்.​ ஆன்மிகம் என்பது வாழும் நெறி;​ அது வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவோர் சென்றடையும் கூடாரமன்று என்பது அவர் கருத்து.​ இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று நமக்கு உணர்த்தும்.

ஒருமுறை விவேகானந்தரைக் காண முதுநிலைப் பட்டப்படிப்புப் பயின்று வந்த மாணவன் ஒருவன் வந்தான்.​ அவன் துறவு பூண விவேகானந்தரின் கட்டளையை வேண்டி நின்றான்.​ அம் மாணவன் துறவு பூணக்காரணம்,​​ அவன் படித்துக் கொண்டிருந்த முதுநிலைப் பட்டப்படிப்பு சிரமமாக இருந்ததுதான் என்பதைக் கண்டறிந்த விவேகானந்தர்,​​ முதுநிலைப் படிப்பைக் காட்டிலும் துறவு வாழ்க்கை கடினமானது என நயம்படக் கூறி,​​ அம் மாணவனுக்கு உண்மையை உணர்த்தினார்.

மதத்தின் மீதுள்ள பற்று மதவெறியாக உருவெடுப்பதைக் கடிந்தவர் விவேகானந்தர்.​ மதவெறியே மதநெறியாகப் போற்றிக் கொள்ளப்படும் இந்நாளில்,​​ விவேகானந்தரின் பணிச்சிறப்பும்,​​ பேச்சும் முக்கியத்துவம் பெறுகின்றன;​ பெரிதும் வேண்டப்படுகின்றன.​ மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பியதும் மதுரையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுப் பேசுகையில்,​​ மதவெறிக்கு ஆட்படாமல் இருக்குமாறு மக்களை வேண்டினார்.

""தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது.​ இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.​ ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி,​​ கொள்கை வெறியை வளர்க்கிறது;​ சில நேரங்களில் அவ்வெறி,​​ எல்லை கடந்தும் போய்விடுகிறது.​ மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்களுக்குக் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது.​ எனவே,​​ எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' ​(தொகுதி:3 பக்.172) எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மட்டுமன்றி,​​ வெளிநாடுகளில் உரை நிகழ்த்தும்போதும்,​​ மதவெறியை வன்மையாக அவர் கண்டித்தார்.​ "உலகளாவிய மதம்' எனும் தலைப்பில் 1900-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உரை நிகழ்த்துகையில்,​​ ""உலகில் உள்ள நோய்கள் யாவினும் மிகக் கொடிய நோய் மதவெறி எனும் நோயே'' என்றார்.

விவேகானந்தரின் செயலிலும் பேச்சிலும் பிற மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு எப்போதும் இருந்ததில்லை.​ உலக மதங்கள் யாவும் தமக்குள் இருக்கும் பிணக்குகளைத் துறந்து உலகளாவிய தன்மை எய்த வேண்டும் என விழைந்தார் விவேகானந்தர்.​ ""மதங்கள் யாவும் பரந்த நோக்குடையனவே.​ பல மதங்களைப் போதித்து வரும் மதவாதிகள் அவர்தம் பணிகளைச் சற்று நிறுத்தினால்,​​ நாம் இவ்வுண்மையை நொடிப்பொழுதில் உணரலாம்'' ​(தொகுதி:​ 2 பக்.367)

ஜாதியின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுந்தவர் விவேகானந்தர்.​ மேல் வகுப்பினருக்கு ஒரு நீதி;​ கீழ் வகுப்பினருக்கு ஒரு நீதி என்று சமுதாயத்தில் அமைந்துள்ள வேறுபாடு சாத்திரத்தால் விளைந்ததன்று;​ சதியால் நேர்ந்தது என முரசறைந்தார்.​ ""சாதி வெறி பிடித்தோரும் ஒரு சில மதவாதிகளும் இந்நாட்டினை இழிநிலைக்குத் தள்ளிவிட்டனர்'' ​(தொகுதி:​ 6 பக்.317) என வேதனைப்பட்டார்.

இந்தியா உயர வேண்டுமெனில் இந்தியர் ஜாதிப் பித்தைத் தவிர்த்து பேதமற்ற உயர் நெறி போற்றி ஒழுகுதல் அவசியம் என விரும்பினார்.​ இந்து சமயத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் ஜாதி-மதவெறியை வளர்ப்போரைக் கடுமையாக எதிர்த்தார் விவேகானந்தர்.​ ""உங்கள் சமயம் மகத்தானது,​​ ஆனால் அதன் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் அவர்களை மடமைக்கு ஆட்படுத்துகின்றீர்.​ வற்றாத சுனை பொங்கிக் கொண்டிருக்க,​​ மக்களைச் சாக்கடை நீரைப் பருகச் செய்கின்றீர்'' ​(தொகுதி:​ 5 பக்.223) என வேதனையுடன் குறிப்பிட்டார்.

விவேகானந்தர் விசாலப் பார்வையால் உலகை விழுங்கியவர்.​ அறிவின்பாற்பட்டதே சமயம் என நிறுவியவர்.​ "தன்னிற் பிறிதில்லை தெய்வம்' எனத் தன்னம்பிக்கையை வளர்த்தவர்.​ அவர் கருத்துகள் புதியதோர் உலகம் காண நம்மை ஊக்குவன.​ அவர் மண்ணுலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான் என்றாலும் அவர் மூட்டிய கனல்,​​ அணையா விளக்கென ஒளிர்விடும் என நம்பிக்கை அவருக்கு இருந்தது.​ ""ஒரு விவேகானந்தர் என்ன,​​ காலப்போக்கில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்'' என்பது அவரது நம்பிக்கை.

அந்த நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றப்படும் பெரும் பொறுப்பு நமது இளைய தலைமுறைக்கு உண்டு.​
கட்டுரையாளர்:ப.சேரலாதன்
நன்றி : தினமணி

Monday, December 21, 2009

காத்​தி​ருக்​கும் புதை​குழி

வர​லாறு என்​பது திட்​ட​மிட்டு நிக​ழக்​கூ​டி​ய​தல்ல.​ சொல்​லப்​போ​னால்,​​ மிகச் சாதா​ர​ண​மான அபத்​த​மான முடி​வு​கள்​தான் பெரும்​பா​லான சரித்​திர நிகழ்​வு​களை உரு​வாக்கி இருக்​கின்​றன.​ சமீ​பத்​தில் நடந்த இப்​ப​டிப்​பட்ட ஒரு நிகழ்வு இந்​தியா சம்​பந்​தப்​பட்​டது.​ கார​ணம்,​​ அமெ​ரிக்க வர​லாற்​றில் வியூக முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஒரு முடிவை அறி​விக்​கும் முன் இந்​தி​யப் பிர​த​ம​ரு​டன் அந்​நாட்டு அதி​பர் உரை​யா​டி​யி​ருப்​ப​தைச் சாதா​ரண நிகழ்​வாக நம்​ம ôல் எடுத்​துக்​கொள்ள முடி​ய​வில்லை.​

ஆப்​கன் போரில் ஈடு​பட்​டி​ருக்​கும் அமெ​ரிக்​கத் துருப்​பு​க​ளின் எண்​ணிக்​கையை அதி​க​ரிப்​பது}​அதா​வது}​போரை மேலும் தீவி​ரப்​ப​டுத்​து​வது என்று வெள்ளை மாளிகை எடுத்​தி​ருக்​கும் முடிவை இப்​போது மதிப்​பி​டு​வது கடி​ன​மா​னது.​ இதைத் தவிர்த்து,​​ இப்​போ​தைக்கு அமெ​ரிக்​கா​வுக்கு வேறு நல்ல தெரி​வு​கள் ஏதும் இருப்​ப​தா​கத் தெரி​ய​வில்லை.​

அதே​ச​ம​யம்,​​ இந்​தப் போரில் அல்}​காயிதா மற்​றும் தாலி​பன்​க​ளின் வலைப் பின்​னல்​களை அறுக்க நேசப் படை​கள் பாகிஸ்​தா​னு​டன் கூட்​டணி அமைத்​தால் போதாது என்​கிற முடி​வுக்கு அமெ​ரிக்கா வந்​தி​ருக்​கி​றது.​ ராணுவ நட​வ​டிக்​கை​க​ளில்,​​ ஆளில்லா "காம்​பட் ட்ரோன்' தாக்​கு​தல் விமா​னங்​க​ளைப்​போல இந்​தி​யா​வும் கை கோர்க்க வேண்​டும் என்று அமெ​ரிக்க வியூ​க​வா​தி​கள் நினைக்​கி​றார்​கள்.​ இந்​தப் பின்​ன​ணி​யி​லேயே மன்​மோ​கன் சிங்}​ஒபாமா இடை​யே​யான உரை​யா​டல் நடந்​தேறி இருக்​கி​றது.​

உரை​யா​ட​லைத் தொடர்ந்து,​​ அமெ​ரிக்க அறி​விப்​புக்கு இந்​திய வெளி​யு​ற​வுத் துறை அமைச்​ச​கம் வெளி​யிட்​டி​ருக்​கும் வர​வேற்​பைப் பார்க்​கும்​போது அமெ​ரிக்​கா​வின் வியூ​கத்தை நோக்கி இந்​தியா நக​ரத் தொடங்​கி​விட்​ட​தா​கவே தோன்​று​கி​றது.​ ஒரு​வேளை ஆப்​க​னுக்கு இந்​தி​யப் படை​களை அனுப்ப நம் அரசு முடி​வெ​டுத்​தால்,​​ ராணுவ ரீதி​யா​க​வும் ராஜ​தந்​திர ரீதி​யா​க​வும் இந்​தியா எடுக்​கப்​போ​கும் மிக மோச​மான முடி​வு​க​ளில் ஒன்​றாக அது அமை​யு​யும்.​ சோவி​யத் ஒன்​றி​ய​மும் அமெ​ரிக்​கா​வும் கற்ற பாடங்​க​ளை​வி​ட​வும் மோச​மான பாடங்​களை இந்​தியா எதிர்​கொள்ள நேர்ந்​தால் ஆச்​ச​ரி​யப்​ப​டு​வ​தற்​கில்லை.​

ஆப்​கன் மீது 1979}ல் சோவி​யத் ஒன்​றி​யம் போர் தொடுத்​தது.​ ஏறத்​தாழ 10 ஆண்​டு​கள் நீடித்த அந்​தப் போரின் இறு​தி​யில் வலு​வான சோவி​யத் படை​கள் தோல்​வி​யைத் தழு​வின.​ அப்​பு​றம் 12 ஆண்​டு​கள் உள்​நாட்​டுப் போர்.​ பிறகு,​​ 2001 முதல் அமெ​ரிக்கா அங்கு போரிட்​டுக்​கொண்​டி​ருக்​கி​றது.​ ரஷி​யா​வும் சரி,​​ அமெ​ரிக்​கா​வும் சரி;​ ஆப்​க​னைப் பற்றி நினைத்​தது வேறு;​ நடந்​தது வேறு.​

முன்​ன​தாக,​​ ஆங்​கி​லேயே}​ஆப்​கா​னி​யப் போர்​க​ளில் ஆங்​கி​லே​யர்​க​ளுக்​கும் இப்​ப​டித்​தான் நேர்ந்​தது.​ புவி​யி​ய​லைப்​போ​லவே சிக்​க​லான சமூக இயக்​க​வி​ய​லைக் கொண்ட ஆப்​கன் ""ஏன் இந்த நாட்​டுக்​குள் காலடி எடுத்​து​வைத்​தோம்'' என்ற மோச​மான அனு​ப​வத்​தையே படை​யெ​டுத்த நாடு​க​ளுக்​கெல்​லாம் அளித்​தி​ருக்​கி​றது என்​பது சரித்​தி​ரம் புகட்​டும் பாடம்.​

ஆங்​கி​லே​யர்​க​ளும் ரஷி​யர்​க​ளும் தோல்​வியை ஒப்​புக்​கொண்​டார்​கள்.​ அமெ​ரிக்​கர்​கள் முடிந்த வரை மோதிப் பார்க்க முடி​வெ​டுத்​தி​ருக்​கி​றார்​கள்.​ அவ்​வ​ளவே.​

இந்​நி​லை​யில்,​​ இந்​தி​யப் படை​கள் ஆப்​க​னுக்​குள் நுழை​வது இந்​தி​யா​வுக்​குத் தேவை​யற்ற தலைவ​லியை உரு​வாக்​கும்.​ ஏதோ ஒரு காலை வேளை​யில் அமெ​ரிக்க விமா​னங்​கள் தன் துருப்​பு​க​ளைச் சுமந்து பல்​லா​யி​ரம் கி.மீ.​ தொலை​வுக்கு அப்​பால் பறந்த பின்​னர் இந்த வலி​யின் தீவி​ரத்தை இந்​தியா உணர வேண்​டி​யி​ருக்​கும்.​

கடந்த சில மாதங்​க​ளா​கவே இந்​திய எல்​லை​க​ளில் அதி​க​ரித்​து​வ​ரும் சீன அத்​து​மீ​றல்​கள்,​​ இந்​தி​யா​வின் அண்டை நாடு​க​ளில் நிறு​வப்​ப​டும் ராணுவ முக்​கி​யத்​து​வம் மிக்க சீனக் கட்​ட​மைப்​பு​கள் குறித்த செய்​தி​கள் ஒரு​வி​த​மான அச்​சத்தை உரு​வாக்கி வரு​கி​றது.​ இதை எதிர்​கொள்ள ""இந்​தியா ராணுவ ரீதி​யி​லான பலத்​தைப் பெருக்க வேண்​டும்;​ சீனா​வுக்​குப் பாடம் புகட்ட வேண்​டும்'' என்ற குரல்​கள் எழு​வ​தை​யும் பார்க்​கி​றோம்.​

ஆனால்,​​ இந்​தியா எங்கு தன் பலத்​தைப் பெருக்க வேண்​டும் என்​றால்,​​ முத​லில் ராஜ​தந்​திர வட்​டா​ரத்​தில்​தான்.​ கடந்த கால் நூற்​றாண்டு கால​மா​கத் தொடர்ச்​சி​யாக மிக மோச​மான முடி​வு​கள் எடுக்​கப்​பட்ட துறை நமது வெளி​யு​ற​வுத் துறை​யா​கவே இருக்​கும்.​ ஆகை​யால்,​​ இந்​தி​யர்​கள் முத​லில் தம் குரலை நம்​மு​டைய வெளி​யு​ற​வுக் கொள்​கைக்​காக எழுப்​பு​வதே பொருத்​த​மாக இருக்​கும்.​ தற்​போ​தைய தேவை​யும் அதுவே.​

அர​சனை நம்​பிப் புரு​ஷ​னைக் கைவிட்ட கதை​யாக,​​ அமெ​ரிக்​காவை நம்பி நாம் நமது தன்​னம்​பிக்​கை​யை​யும்,​​ தனித்​தன்​மை​யை​யும் கைவி​டு​கி​றோம் என்று அர​சை​யும்,​​ குறிப்​பாக,​​ வெளி​யு​ற​வுத் துறை​யை​யும் எச்​ச​ரிக்க விரும்​பு​கி​றோம்!
நன்றி : தினமணி

Friday, December 18, 2009

என்ன விலை அமெ​ரிக்க அணு உலை?

அ​ணு​சக்​தித் துறை​யில் ஒத்​து​ழைப்​புக்​கான உடன்​பாட்டை அமெ​ரிக்​கா​வு​டன் செய்​து​கொள்ள,​​ அனைத்​துத் தரப்பு எதிர்ப்​பு​க​ளை​யும் மீறி,​​ பிடி​வா​தம் காட்டி அதைச் சாதித்​துக் காட்​டி​ய​வர் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்.​

இந்த உடன்​பாடு இந்​தி​யா​வின் மின்​சா​ரத் தேவை​களை முற்​றி​லு​மாக நிறை​வேற்ற உத​வும் அமு​த​சு​ரபி என்று இந்​திய ஆட்​சி​யா​ளர்​க​ளால் வர்​ணிக்​கப்​பட்​டது.​ இதன் இணைப்​பாக சர்​வ​தேச அணு​சக்​திக் குழு​மத்​து​டன் ஓர் உடன்​பாடு,​​ அணு​சக்தி வர்த்​தக நாடு​கள் குழு​வு​டன் மற்​றோர் உடன்​பாடு என்​றும் மத்​திய அர​சால் மேற்​கொள்​ளப்​பட்​டன.​ ஆனால்,​​ இந்த அணு​சக்தி விவ​கா​ரம் தொடர்​பான பேச்​சு​வார்த்​தை​க​ளும்,​​ நட​வ​டிக்​கை​க​ளும் முடி​வில்​லா​மல் தொட​ரு​வ​தன் விளை​வா​கப் புதிய விவா​தங்​கள் எழுந்​துள்​ளன.​

இந்​தி​யா​வு​ட​னான அணு​சக்​தித் துறை ஒத்​து​ழைப்​புக்கு அமெ​ரிக்க நாடா​ளு​மன்​றம் "ஹைட் சட்​டம்' என்ற ஒன்றை ஏற்​கெ​னவே நிறை​வேற்​றி​யி​ருந்​தது.​ இப்​போது அணு​சக்தி தொடர்​பாக இந்​திய நாடா​ளு​மன்​றத்​தி​லும் ஒரு புதிய சட்​டம் நிறை​வேற்​றப்​பட வேண்​டும் என்ற கோரிக்கை அமெ​ரிக்கா தரப்பி​லி​ருந்து முன்​வைக்​கப்​பட்டு,​​ அதை​யும் மன்​மோ​கன் சிங் அரசு சிர​மேற்​கொண்டு செயல்​ப​டுத்த மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்டு விட்​ட​தா​கச் செய்​தி​கள் வெளி​யாகி உள்​ளன.​

இ​தன் பின்​ன​ணி​தான் என்ன?​ அணு​மின் உற்​பத்​திக் கூடங்​களை நிறுவி,​​ மின்​சார உற்​பத்​தி​யில் ஈடு​ப​டு​கை​யில்,​​ விபத்​துக்​கான சாத்​தி​யக்​கூ​று​கள் இருப்​பது இயல்பே.​ அனல்-​புனல் மின் நிலை​யங்​க​ளில்​கூட விபத்​து​கள் நிகழ வாய்ப்பு உண்டு என்​றா​லும்,​​ அணு​மின் நிலைய விபத்து மிகு​தி​யான அபா​யங்​களை உள்​ள​டக்​கி​ய​தாக இருக்​கும்.​ அமெ​ரிக்​கா​வின் "மூன்று மைல் தீவு' அணு​மின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்​த​தும்,​​ ரஷி​யா​வின் "செர்​னோ​பில்' அணு​மின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்​ட​தும்,​​ இத்​த​கைய விபத்​து​க​ளின் அபாய விளை​வு​கள் எந்த அள​வுக்​குக் கடு​மை​யாக இருக்​கும் என்​ப​தற்​கான அனு​ப​வப் பாடங்​க​ளா​கும்.​

இந்த அபா​யத்​தைத் தவிர்க்​கும் வகை​யில் கூடு​தல் எச்​ச​ரிக்​கை​யோ​டும்,​​ பாது​காப்பு ஏற்​பா​டு​க​ளோ​டும் அணு​மின் உற்​பத்​தி​யில் ஈடு​பட வேண்​டி​யது அவ​சி​யம்;​ அது சாத்​தி​ய​மா​ன​தும்​கூட.​ ஆனால் இவை எல்​லா​வற்​றை​யும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடு​மா​னால்,​​ அதன் பாதிப்​பு​களை எதிர்​கொள்​வ​தும்,​​ பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு உரிய இழப்​பீ​டு​களை வழங்​கு​வ​தும் தவிர்க்க முடி​யாத கட​மை​கள்.​

÷எ​திர்​பா​ராத அபா​யங்​க​ளுக்​குப் பாது​காப்பு ஏற்​பா​டாக வந்​த​வை​தான் காப்​பீட்​டுத் திட்​டங்​கள்.​ இதற்​காக சர்​வ​தேச அள​வில் சில கோட்​பா​டு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன;​ உலக நாடு​கள் பல​வற்​றில் சட்​டங்​க​ளும் இயற்​றப்​பட்​டுள்​ளன.​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழ​கத்​தின் முயற்​சி​யின் விளை​வாக 1963-ல் அணு​சக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்​பாடு ஒன்று உரு​வாக்​கப்​பட்டு அது 1997 முதல் அம​லாக்​கத்​துக்கு வந்​தது.​

÷வ​ளர்ச்​சி​ய​டைந்த மேற்​கத்​திய நாடு​க​ளின் கூட்​ட​மைப்​பான,​​ பொரு​ளா​தார ஒத்​து​ழைப்பு மற்​றும் வளர்ச்​சிக்​கான ஸ்தா​ப​னத்​தின் முயற்​சி​யில் அணு​மின் சக்​தித் துறை​யில் மூன்​றா​வது நபர் கடப்​பா​டுக்​கான பாரிஸ் கோட்​பாடு 1960-ல் உரு​வாக்​கப்​பட்டு,​​ 1963-ல் புரூ​செல்ஸ் நக​ரில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் செழு​மைப்​ப​டுத்​தப்​பட்டு,​​ 1968 முதல் அம​லுக்கு வந்​தது.​ இந்த வியன்னா மற்​றும் பாரிஸ் கோட்​பா​டு​கள் இரண்​டை​யும் ஒருங்​கி​ணைத்து ஒரு முழு​மை​யான வரை​ய​றையை ஏற்​ப​டுத்த 1988-ல் செர்​னோ​பில் விபத்​துக்​குப் பிறகு ஒரு முயற்​சி​யும் மேற்​கொள்​ளப்​பட்​டது.​ 1997-ல்,​​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழக உறுப்பு நாடு​கள் அணு​சக்தி பாதிப்​புக்​கான கூடு​தல் இழப்​பீட்​டுக்​கான கோட்​பாடு ஒன்​றை​யும் நிறை​வேற்​றி​யுள்​ளன.​ இது இன்​ன​மும் அம​லாக்​கத்​துக்கு வர​வில்லை என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​

÷இந்த சர்​வ​தே​சக் கோட்​பா​டு​களை ஏற்​றுக்​கொண்ட நாடு​கள் சில,​​ தத்​தம் நாட்​டுக்​குப் பொருத்​த​மான சட்​டங்​களை இது தொடர்​பாக நிறை​வேற்​றி​யுள்​ளன.​ பிரிட்​டன்,​​ ஜெர்​மனி,​​ பிரான்ஸ்,​​ ரஷியா போன்​றவை பாரிஸ் அல்​லது வியன்னா கோட்​பா​டு​களை ஏற்​றுச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளில் சில.​ சர்​வ​தே​சக் கோட்​பாடு எத​னை​யும் அங்​கீ​க​ரிக்​கா​ம​லும்,​​ சொந்த நாட்​டில் சட்​ட​மி​யற்​றா​ம​லும் அணு​சக்​தித் துறை​யில் ஈடு​பட்டு வரும் நாடாக சீனா உள்​ளது.​

÷ர​ஷியா,​​ சீனா போன்ற நாடு​கள் அணு​மின் துறை​யில் உற்​பத்தி மற்​றும் வர்த்​த​கத்தை அர​சுத் துறை​யில் மட்​டுமே மேற்​கொள்​கின்​றன.​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட இதர நாடு​க​ளில் பிர​தா​ன​மாக அணு​மின்​துறை உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் தனி​யார் துறையே ஈடு​பட்டு வரு​கி​றது.​ அணு​மின் விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்​கும் முழு​மை​யான நிவா​ர​ணம் அல்​லது இழப்​பீடு வழங்க வேண்​டிய பொறுப்பு அர​சாங்​கத்​தையே சாரும் என்​பது பொது​வான ஒன்று.​ எனி​னும்,​​ காப்​பீட்​டுத் திட்​டங்​க​ளின் கீழ்,​​ இந்த அணு​மின் பாதிப்பு தொடர்​பான கடப்​பா​டு​க​ளுக்கு வழி​வகை செய்ய வேண்​டும் என்​பதே,​​ இது குறித்​துச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளின் நோக்​க​மாக அமைந்​தது.​

÷அ​ணு​மின் உற்​பத்​தித் துறை​யில் ஈடு​ப​டு​கிற நிறு​வ​னங்​கள் இரு​வ​கைப்​ப​டும்.​ அணு உலை​கள்,​​ இதர சாத​னங்​கள்,​​ எரி​பொ​ருள்,​​ எரி​பொ​ருள் பயன்​பாடு தொடர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​கள் போன்​ற​வற்​றில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் ஒரு​வகை;​ இவற்​றைப் பயன்​ப​டுத்தி அணு​மின் நிலை​யத்தை நிறுவி இயக்​கு​கிற,​​ அதைப் பரா​ம​ரிக்​கிற,​​ உற்​பத்​தி​யா​கும் மின்​சா​ரத்தை விற்று விநி​யோ​கிக்​கிற பணி​க​ளில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் இரண்​டா​வது வகை.​ அணு​மின் விபத்து பாதிப்பு குறித்த குடி​மைக் கடப்​பா​டு​கள் முதல் வகை நிறு​வ​னங்​கள் மீது சுமத்​தப்​ப​டக்​கூ​டாது என்​ப​து​தான்,​​ இது​தொ​டர்​பாக 1957-ம் ஆண்​டி​லேயே சட்​ட​மி​யற்​றிய அமெ​ரிக்க நாடு எடுத்த முடிவு.​ அ​ணு​மின் உலை மற்​றும் இதர சாத​னங்​களை உற்​பத்தி செய்​யும் நிறு​வ​னங்​கள்,​​ உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து நிகழ்ந்​தா​லும்,​​ அதன் பாதிப்​புக்கு எந்த வகை​யி​லும் கடன்​பட்​டவை ஆகாது என்று அவற்​றுக்கு முழு விலக்கு அளித்​து​விட்​டது அமெ​ரிக்க அர​சாங்​கம்.​ மாறாக,​​ விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்கு,​​ அணு​மின் நிலை​யத்​தைச் செயல்​ப​டுத்​து​கிற நிறு​வ​னமே பொறுப்​பேற்க வேண்​டும் என்​றும்,​​ அதற்​காக அந்த நிறு​வ​னம் காப்​பீட்​டுத் திட்​டத்தை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும் சட்​ட​மி​யற்​றப்​பட்​டது.​

÷அ​ணு​சக்தி ஒழுங்​கு​முறை ஆணை​யம் ஒன்​றும் ஏற்​ப​டுத்​தப்​பட்டு,​​ அது சட்​டத்​தின் கீழான காப்​பீட்டை அமெ​ரிக்க அணு​மின் கூடங்​கள் பெற்​றுள்​ள​னவா என்று கண்​கா​ணிக்​கி​றது.​ இந்த அணு​மின் கூடங்​கள் தொடர்​பான காப்​பீட்டு உத்​த​ர​வா​தத்தை "அமெ​ரிக்க அணு​சக்​திக் காப்​பீட்​டா​ளர்​கள்' என்ற ஒரு கூட்​ட​மைப்பு நல்கி வரு​கி​றது.​ இந்​தக் காப்​பீட்​டைப் பெறச் செலுத்த வேண்​டிய வரு​டாந்​திர "பிரீ​மி​யம்' தொகை,​​ ஒரே ஓர் அணு​உ​லை​யைக் கொண்ட மின்​கூ​டத்​துக்கு 4 லட்​சம் டாலர் என்று சரா​ச​ரி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்டு செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ மொத்​தத்​தில் அமெ​ரிக்​கா​வில் அணு​சக்தி சாதன உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டும் தனி​யார் துறை நிறு​வ​னங்​க​ளுக்கு,​​ விபத்து நிவா​ரண இழப்​பீட்டி​லி​ருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்​கும் வித​மா​கவே அந்​நாட்​டுச் சட்​டம் அமைந்​துள்​ளது.​

÷இப்​போது அமெ​ரிக்​கா​வில் தனி​யார் துறை அணு​மின் உற்​பத்தி நிறு​வ​னங்​க​ளாக உள்ள ஜென​ரல் எலெக்ட்​ரிக்,​​ அரேவா,​​ வெஸ்​டிங் ஹவுஸ்,​​ ரோசா​டோம் போன்ற பன்​னாட்டு நிறு​வ​னங்​கள்,​​ இந்​தி​யா​வில் புதிய அணு​மின் கூடங்​க​ளுக்​கான அணு உலை​கள் உள்​ளிட்ட சாத​னங்​களை விற்​பனை செய்ய மும்​மு​ர​மாக முயற்​சி​கள் மேற்​கொண்டு வரு​கின்​றன.​ இவை அமெ​ரிக்​கா​வில் உள்​ள​து​போ​லத் தங்​க​ளுக்​குப் பாது​காப்​பான சட்ட ஏற்​பா​டு​கள் இந்​தி​யா​வி​லும் செய்து தரப்​பட வேண்​டும் என்று கோரு​கின்​றன.​ இந்​தக் கோரிக்​கையை அமெ​ரிக்க அர​சாங்​க​மும் வலி​யு​றுத்​து​கி​றது.​ அண்​மை​யில் அமெ​ரிக்க நாட்​டுக்​குப் பய​ணம் மேற்​கொண்ட பிர​த​மர் மன்​மோ​கன் சிங்​கி​டம்,​​ அதி​பர் ஒபா​மாவே இதற்​கான சட்​டத்தை விரை​வில் இந்​திய நாடா​ளு​மன்​றத்​தில் நிறை​வேற்ற நெருக்​கு​தல் கொடுத்​துள்​ளார் என்​பது வெளிப்​ப​டை​யா​கவே தெரிய வந்​தது.​

÷இந்​தப் பின்​ன​ணி​யில் தான் மத்​திய அரசு அணு​சக்தி குடி​மைக் கடப்​பாடு மசோதா ஒன்றை நாடா​ளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய முடி​வெ​டுத்​துள்​ளது.​ இந்த மசோ​தா​வில்,​​ இந்​தி​யா​வில் அமை​ய​வுள்ள அணு​மின் கூடங்​க​ளில் விபத்து ஏதே​னும் நேரிட்​டால்,​​ அது தொடர்​பான நிவா​ர​ணம்,​​ இழப்​பீடு அனைத்​தை​யும் ஏற்​றுக்​கொள்ள வேண்​டிய கடப்​பாடு,​​ மத்​திய அர​சின் அணு​மின் துறை​யின் கீழ் இயங்​கும்,​​ இந்​திய அணு​மின் வாரி​யத்​துக்கு மட்​டுமே என்று விதிக்​கப்​ப​டும்.​ அணு​உ​லை​க​ளையோ,​​ இதர சாத​னங்​க​ளையோ,​​ அணு​எ​ரி​பொ​ரு​ளையோ,​​ அது​தொ​டர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​க​ளையோ,​​ விற்​பனை செய்​யும் அமெ​ரிக்க நிறு​வ​னங்​க​ளுக்கு எந்​த​வி​தக் கடப்​பா​டும் இருக்​காது என்​ப​து​தான் இதன் சாராம்​சம்.​ அணு உலை​க​ளின் உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து ஏற்​பட்​டா​லும்,​​ அவற்றை விற்​பனை செய்த வெளி​நாட்டு நிறு​வ​னத்​துக்கு எந்​தப் பொறுப்​பும் கிடை​யாது.​

÷அது மட்​டு​மல்ல,​​ அணு​மின் விபத்து நேரிட்​டால்,​​ அந்த விபத்து தொடர்​பான இழப்​பீட்​டுத் தொகைக்கு 45 கோடி டாலர் ​(ரூ.​ 2,300 கோடி)​ உச்​ச​வ​ரம்​பாக விதிக்​கப்​ப​டும் என்று இந்த மசோ​தா​வைப் பற்​றிய விவ​ரங்​கள் தெளி​வு​ப​டுத்​து​கின்​றன.​ அணு​மின் கூட விபத்து,​​ லட்​சக்​க​ணக்​கான மக்​க​ளைக்​கூட பாதிப்​புக்கு இலக்​காக்​கும் பரி​மா​ணம் கொண்​ட​தாக அமை​யக்​கூ​டும்.​ அப்​ப​டிப்​பட்ட நிலை​யில் இந்த 45 கோடி டாலர் என்​பது வெறும் கண்​து​டைப்​பாக மட்​டுமே நின்​று​வி​டும் ஆபத்து எழும்.​ இந்த உச்​ச​வ​ரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டால் மட்​டுமே அதற்கு உள்​ளிட்​டுக் காப்​பீட்​டுத் திட்​டத்​தைப் பெற முடி​யும் என்​பது இந்​தச் சட்​டத்​தைக் கொண்டு வரு​வ​தற்​கான கார​ண​மா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ போபால் விஷ​வா​யுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்​டு​க​ளா​கி​யும்,​​ அதில் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உரிய நிவா​ர​ணம் பெற இய​லாது அல்​லா​டு​கிற நேர்வை நினை​வில் வைத்​துப் பார்த்​தால்,​​ மத்​திய அர​சின் புதிய சட்​டம் எவ்​வ​ளவு பாத​க​மான நிலை​மைக்கு இட்​டுச் செல்​லக் கூடும் என்​பதை ஊகிப்​பது கடி​னம் அல்​லவே!​

÷"லாபங்​கள் அனைத்​தும் தனி​யா​ருக்கு;​ பாதிப்​பு​க​ளும்,​​ இழப்​பும் அர​சாங்​கத்​துக்கு' என்​ப​து​தானே நவீன தாரா​ள​ம​யத்​தின் தாரக மந்​தி​ரம்.​ அதன்​படி அமெ​ரிக்க நாட்​டின் அணு​மின் உற்​பத்தி -​ ​ வர்த்​த​கத் தனி​யார் நிறு​வ​னங்​க​ளுக்கு ரூ.​ 60,000 கோடி வரை விற்று,​​ லாபம் ஈட்​டு​வ​தற்கு வழி​தி​றந்​து​விட முற்​ப​டு​கிற,​​ இந்​திய ஆட்​சி​யா​ளர்​கள்,​​ அவற்​றின் மீது எந்​தக் கட்​டத்​தி​லும் மயி​லி​றகு அள​வு​கூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்​டம் போட்​டுப் பாது​காப்பு நல்க முற்​ப​டு​கின்​ற​னர்.​

÷"என்ன விலை அமெ​ரிக்க அணு உலையே?​ எம் மக்​க​ளின் உயி​ரைக் கூடத் தரு​வேன்' என்று இந்​திய மக்​க​ளின் வாழ்​வு​ரி​மைக்கே எதி​ரான சட்​டத்தை மன்​மோ​கன் சிங் அரசு நிறை​வேற்ற அனு​ம​திக்​கப் போகி​றதா நம் ஜன​நா​யக நாட்​டின் நாடா​ளு​மன்​றம்?
கட்டுரையாளர் : உ.ரா.​ வர​த​ரா​சன்
நன்றி : தினமணி

Tuesday, December 15, 2009

தேசம் விலை​போ​கி​றதே...!

அது மன்​ன​ராட்சி ஆனா​லும்,​​ மக்​க​ளாட்சி ஆனா​லும்,​​ ஏன் சர்​வா​தி​கார ஆட்​சியே ஆனா​லும் அந்த நாட்​டை​யும்,​​ மக்​க​ளை​யும்,​​ அவர்​க​ளது நல​னை​யும் பாது​காப்​ப​து​தான் அடிப்​ப​டைக் கடமை.​ நல்ல பல திட்​டங்​க​ளின் மூலம் மக்​க​ளது நல்​வாழ்​வுக்கு ஓர் அரசு உத்​த​ரவு தரு​கி​றதோ இல்​லையோ,​​ அன்​னி​யர்​கள் தேசத்தை ஆக்​கி​ர​மிக்​கா​மல் பாது​காப்​ப​தும்,​​ சுரண்​டா​மல் பார்த்​துக் கொள்​வ​தும் எந்த ஓர் அர​சுக்​கும் அடிப்​ப​டைக் கடமை.​ இந்த அடிப்​ப​டைக் கட​மை​யைக்​கூட மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி செய்​யத் தவ​று​கி​றதோ என்​கிற ஐயப்​பாடு சமீ​ப​கா​ல​மா​கத் தோன்​றி​யி​ருக்​கி​றது.​

இந்​தியா மிகப்​பெ​ரிய மின் பற்​றாக்​கு​றை​யைச் சந்​திக்க இருக்​கி​றது என்​பதை யாரும் மறுக்​க​வில்லை.​ இந்​தி​யா​வின் எரி​சக்​தித் தேவையை எப்​படி எதிர்​கொள்​வது என்​ப​தில் அனை​வ​ரும் கைகோர்த்து,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நல​னை​யும் கருத்​தில்​கொண்டு செயல்​பட வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்து இருக்க முடி​யாது.​ இந்​தப் பிரச்​னை​யில் மக்​கள் கருத்தை முறை​யா​கக் கணிக்​கா​ம​லும்,​​ பொது​வான அணு​கு​மு​றை​யைக் கடைப்​பி​டிக்​கா​ம​லும் அமெ​ரிக்​கா​வு​டன் பல்​வேறு சம​ர​சங்​க​ளைச் செய்​து​கொண்டு அணு​சக்தி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது இந்​திய அரசு.​

அது​வும் போதா​தென்று,​​ இந்​தி​யா​வின் உரி​மை​களை அடகு வைக்​கும்,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நியா​ய​மான பாது​காப்பை நிர்​மூ​ல​மாக்​கும் ஒரு நட​வ​டிக்​கை​யி​லும் இப்​போது மன்​மோ​கன் சிங் தலை​மை​யி​லான அரசு இறங்கி இருப்​பது அதிர்ச்சி அளிக்​கி​றது.​

அது இந்​திய நிறு​வ​னமோ,​​ பன்​னாட்டு நிறு​வ​னமோ எது​வாக இருந்​தா​லும்,​​ தாங்​கள் தொழில் செய்து லாபம் சம்​பா​திப்​ப​தற்​கா​கச் சுற்​றுச்​சூ​ழ​லைப் பாதிப்​ப​தும்,​​ தொழி​லா​ளர்​கள் மற்​றும் அந்​தத் தொழிற்​சா​லை​யைச் சுற்றி வாழும் மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​கும்,​​ ஆரோக்​கி​யத்​துக்​கும் பாதிப்பு ஏற்​ப​டுத்​து​வ​தும் ஏற்​பு​டை​ய​தல்ல.​ நமது அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் 21-வது பிரி​வின்​படி வாழ்​வு​ரிமை என்​பது ஒவ்​வோர் இந்​தி​யக் குடி​ம​க​னுக்​கும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​

நமது உச்ச நீதி​மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் மேலும் ஒரு​படி சென்று,​​ வாழும் உரிமை என்​பது உயி​ரு​டன் வாழ்​வது என்​பது மட்​டு​மல்ல,​​ சுய​ம​ரி​யா​தை​யு​டன் வாழ்​வது என்​ப​தும் அடிப்​ப​டைத் தேவை​க​ளான உண்ண உணவு,​​ உடுக்க உடை,​​ இருக்க வீடு இவை​க​ளு​டன் வாழ்​வது என்​ப​தும்​தான் என்று பல தீர்ப்​பு​க​ளின் மூலம் உறுதி செய்​தி​ருக்​கி​றது.​ அதை மேலும் விரி​வு​ப​டுத்தி,​​ மனித உரி​மை​யு​ட​னும்,​​ கௌ​ர​வத்​து​ட​னும் வாழ்​வது என்​பது,​​ பாது​காக்​கப்​பட்ட சுற்​றுச்​சூ​ழ​லு​ட​னும்,​​ நச்​சுக் கலப்​பில்​லாத காற்று மற்​றும் தண்​ணீ​ரு​ட​னும் வாழ்​வது என்​று​கூ​டத் தீர்ப்பு வழங்கி இருக்​கி​றது.​

உல​கி​லுள்ள ஏனைய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டங்​களை எல்​லாம்​விட,​​ இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் சுற்​றுச்​சூ​ழ​லுக்கு மிக அதி​க​மான முன்​னு​ரி​மை​யும் முக்​கி​யத்​து​வ​மும் அளித்​தி​ருக்​கி​றது.​ இயற்​கைச் சூழ​லைப் பேணு​வது மற்​றும் அதி​க​ரிப்​பது என்​பதை அர​சி​யல் சட்​டப்​பி​ரிவு 51-அ,​​ அடிப்​படை உரி​மை​யா​கவே நமக்கு அளித்​தி​ருக்​கி​றது.​

உச்ச நீதி​மன்ற பல்​வேறு தீர்ப்​பு​கள் வலி​யு​றுத்​தும் கருத்து,​​ எந்த ஒரு தொழில் நிறு​வ​ன​மும் அத​னால் ஏற்​ப​டும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​க​ளுக்கு முழுப் பொறுப்​பும் ஏற்​றாக வேண்​டும் என்​ப​தைத்​தான்.​ தங்​க​ளது ஊழி​யர்​க​ளுக்கு மட்​டு​மல்ல,​​ அந்த நிறு​வ​னத்​தின் கழி​வு​கள்,​​ வாயுக் கசி​வு​கள் மற்​றும் நச்​சுத்​தன்மை போன்​ற​வற்​றால் சுற்​றி​லும் வாழும் பொது​மக்​க​ளுக்​கும்,​​ உயி​ரி​னங்​க​ளுக்​கும் ஏற்​ப​டும் பாதிப்​பு​கள் அனைத்​துக்​கும்​கூட நிறு​வ​னம் பொறுப்​பேற்​றாக வேண்​டும்.​

சட்​ட​மும் அர​சி​யல் சட்​ட​மும் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ தார்​மிக ரீதி​யா​கப் பார்த்​தா​லும்,​​ தாங்​கள் லாபம் கரு​திச் செய்​யும் தொழில் அடுத்​த​வ​ரைப் பாதிக்​கக்​கூ​டாது என்​ப​தும் அப்​ப​டிப் பாதிப்பு ஏற்​பட்​டால் அதற்​கான நஷ்ட ஈடும் பரி​கா​ர​மும் செய்ய வேண்​டும் என்​ப​தும் சட்​டம் இருந்​தா​லும் இல்​லா​விட்​டா​லும் மனித நாக​ரி​கம் ஏற்​றுக்​கொள்​ளும் கட​மை​யும்​கூட.​ நிலைமை இப்​படி இருக்​கும்​போது,​​ நமது மத்​திய அரசு விசித்​தி​ர​மான ஒரு சட்​டத்​தின் மூலம்,​​ அன்​னி​யப் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் நஷ்ட ஈட்​டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்​க​ளுக்​குப் பாது​காப்பு அளிக்​கத் தயா​ராகி இருப்​ப​து​தான் வெட்​கக் கேடாக இருக்​கி​றது.​

அமெ​ரிக்​கா​வில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடு​க​ளு​டன் இந்​தியா கையெ​ழுத்​திட்ட அணு எரி​சக்தி ஒப்​பந்​தங்​க​ளுக்​குப் பிற​கும் அந்த நாட்டு நிறு​வ​னங்​கள் இன்​னும் அணு மின் நிலை​யங்​க​ளைத் தொடங்க ஆர்​வத்​து​டன் முன்​வ​ரா​தது ஏனாம் தெரி​யுமா?​ அந்த அணு மின் நிலை​யங்​க​ளில் ஒரு​வேளை கசிவு ஏற்​பட்டு அத​னால் பாதிப்பு ஏற்​பட்​டால்,​​ அதற்கு அந்​தப் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் முழுப் பொறுப்பு ஏற்​றாக வேண்​டுமே என்​ப​தால் அவர்​கள் தயங்​கு​கி​றார்​க​ளாம்.​ எப்​படி இருக்​கி​றது கதை.​ அணு மின் நிலை​யங்​க​ளில் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து லாபம் அடைய மட்​டும்​தான் தயா​ராம்!​ ​

நமது இந்​திய அரசு உடனே என்ன செய்ய இருக்​கி​றது தெரி​யுமா?​ அணு​மின் எரி​சக்தி பாதிப்​புச் சட்​டம் ​(சிவில் நியூக்​ளி​யர் லயபி​லிட்டி பில்)​ என்​றொரு சட்​டம் இயற்றி,​​ இந்த அணு​மின் நிலை​யங்​க​ளால் பாதிப்பு ஏற்​பட்​டால் அந்த நிறு​வ​னங்​க​ளின் அதி​க​பட்ச நஷ்ட ஈட்​டுத் தொகை 450 மில்​லி​யன் டாலர் என்று பாது​காப்​புத் தர முன்​வந்​தி​ருக்​கி​றது.​ அதற்கு மேலான பாதிப்​பு​க​ளுக்கு இந்​திய அரசே பொறுப்பு ஏற்​றுக் கொள்​ளு​மாம்.​

என்ன அயோக்​கி​யத்​த​னம் என்று யாரும் கேட்​டு​வி​டக் கூடாது.​ தேசப்​பற்​று​மிக்க ஓர் அரசு,​​ இந்​தி​யாவை ஓர் அமெ​ரிக்​கா​வாக மாற்​ற​வும்,​​ பன்​னாட்டு முத​லீ​டு​க​ளைப் பெறு​வ​தற்​கா​க​வும் இப்​படி ஒரு "சலுகை' அளிக்க இருக்​கி​றது.​ நாளைய தலை​மு​றை​யின் நல்​வாழ்வு முக்​கி​யமா,​​ இந்​திய மக்​க​ளின் பாது​காப்பு முக்​கி​யமா இல்லை பன்​னாட்டு முத​லீ​டும்,​​ ஆபத்​தான அணு மின்​சக்​தி​யும் முக்​கி​யமா?​

தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!
நன்றி : தினமணி

Sunday, December 6, 2009

அப‌த்​த​மு‌ம் ஆப‌த்​து‌ம்!

க‌ா‌ஷ்​மீ‌ர் இ‌ந்​தி​ய‌ா​வி‌ன் பிரி‌க்​க‌வே முடி​ய‌ாத பகுதி எ‌ன்​ப‌தை ஆணி‌த்​த​ர​ம‌ாக வலி​யு​று‌த்​து​வ‌தை வி‌ட்​டு​வி‌ட்டு அ‌தை ஒரு பிர‌ச்​‌னை‌க்​கு​ரிய பகுதி எ‌ன்று ந‌ம்​ம​வ‌ர்​க‌ளே உலக அர‌ங்​கி‌ல் ஒ‌த்​து‌க்​‌கொ‌ண்டு விடு​வ‌ா‌ர்​க‌ளே‌ா எ‌ன்​கிற பய‌ம் சமீ​ப​க‌ா​ல​ம‌ாக எழு‌ந்து வரு​கி​றது. இ‌ந்​தி​ய‌ா​வி‌ன் ‌தேச நல‌ன் கரு​தி​யு‌ம்,​ ப‌ாது​க‌ா‌ப்பு கரு​தி​யு‌ம் க‌ா‌ஷ்​மீ‌ர் பிர‌ச்​‌னை​யி‌ல் ந‌ா‌ங்​க‌ள் அ‌மெ​ரி‌க்​க‌ா​வி‌ன் வழி​க‌ா‌ட்​டு​த‌ல்​படி நட‌க்​கி​‌றே‌ா‌ம் எ‌ன்று ந‌ம்​ம​வ‌ர்​க‌ள் ‌சொல்லி விடு​வ‌ா‌ர்​க‌ளே‌ா எ‌ன்றும் பய​ம‌ாக இரு‌க்​கி​றது.

ஆர‌ம்​ ப‌ம் முத‌லே க‌ா‌ஷ்​மீ‌ர் ம‌க்​க‌ள் ப‌ாகி‌ஸ்​த‌ா​னு​ட‌ன் இ‌ணை​ய‌த் தய‌ா​ர‌ாக இரு‌க்​க​வி‌ல்‌லை எ‌ன்​ப​து​த‌ா‌ன் உ‌ண்‌மை. த‌ா‌ங்​க‌ள் ப‌ாகி‌ஸ்​த‌ா​னிய மு‌ஸ்​லி‌ம்​களி​லி​ரு‌ந்து ‌வேறு​ப‌ட்​ட​வ‌ர்​க‌ள் எ‌ன்று கரு​து‌ம் க‌ா‌ஷ்​மீ​ரி​க‌ள் ‌கே‌ட்​டது "ஆச‌ாதி', அத‌ா​வது, தனி ந‌ாடு​த‌ா‌னே தவிர ப‌ாகி‌ஸ்​த‌ா​னு​ட‌ன் இ‌ணைய ஒரு​‌போ​து‌ம் தய‌ா​ர‌ாக இரு‌க்​க​வி‌ல்‌லை. இ‌ந்​தி​ய‌ா‌வை வி‌ட்​டு‌ப் ‌போகு‌ம்​‌போது கூட‌வே பிர‌ச்​‌னை​‌யை​யு‌ம் வி‌ட்​டு‌ப் ‌போக ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று கரு​திய பிரி‌ட்​டி​ஷ‌ா​ரி‌ன் ​ பிரித்தாளும் சூழ்ச்சியின் வி‌ளை​வு​த‌ா‌ன் க‌ா‌ஷ்​மீ‌ர் பிர‌ச்‌னை.

க‌ா‌ஷ்​மீ​‌ரை‌த் தனி ந‌ாட‌ா‌க்கி அ‌தை‌த் தனது க‌ட்​டு‌க்​கு‌ள் ‌வை‌த்​தி​ரு‌ப்​பது எ‌ன்​பது ஆசிய‌ா க‌ண்​ட‌த்​‌தை‌யே தனது க‌ண்​க‌ா​ணி‌ப்​பி‌ல் ‌வை‌த்​தி​ரு‌ப்​பது எ‌ன்​கிற ரக​சி​ய‌ம் ‌மே‌லை​ந‌ா‌ட்டு வ‌ல்​ல​ர​சு​க​ளு‌க்கு ந‌ன்​ற‌ா​க‌வே ‌தெரி​யு‌ம். க‌ா‌ஷ்​மீ​‌ரை‌த் தனி ந‌ாட‌ா‌க்கி அ‌ங்‌கே தனது ர‌ாணு​வ‌த் தள‌த்‌தை அ‌மை‌த்​து​வி‌ட்​ட‌ா‌ல்,​ எ‌ண்​‌ணெ‌ய் வள‌ம் மிகு‌ந்த ம‌த்​திய ஆசிய ந‌ாடு​க‌ள், ரஷிய‌ா,​ சீன‌ா ம‌ற்​று‌ம் இ‌ந்​திய‌ா உ‌ள்​ளி‌ட்ட வள​மு‌ம்,​ பல​மு‌ம் ‌பெ‌ாரு‌ந்​திய எ‌ல்ல‌ா ஆசிய ந‌ாடு​க​‌ளை​யு‌ம் க‌ண்​க‌ா​ணி‌க்க முடி​யு‌ம் எ‌ன்று ‌மே‌ற்​க‌த்​திய வ‌ல்​ல​ர​சு​க‌ள் நி‌னை‌க்கின்றன. அத​ன‌ா‌ல்​த‌ா‌ன்,​ அ‌மெ​ரி‌க்க‌ா ஆர‌ம்​ப‌ம் முத‌லே ப‌ாகி‌ஸ்​த‌ா​னு‌க்​கு‌ப் ‌பெரிய அள​வி‌ல் நிதி உத​வி​யு‌ம்,​ ர‌ாணுவ உத​வி​யு‌ம் அளி‌த்​து‌க் க‌ா‌ஷ்​மீ‌ர் பிர‌ச்‌னை ‌கொழு‌ந்​து​வி‌ட்டு எரி​யு‌ம்​படி ப‌ா‌ர்‌த்​து‌க் ‌கொ‌ள்​கி​றது.

உலக ர‌ாஜ​த‌ந்​திர வியூ​க‌த்​தி‌ல் த‌த்​த‌ம் ந‌ாடு​க​ளி‌ன் ப‌ாது​க‌ா‌ப்​‌பை​யு‌ம்,​ மேலாண்மையையும் ப‌ாது​க‌ா‌க்க முய‌ல்​வ​து‌ம் ‌செய‌ல்​ப​டு​வ​து‌ம் தவ​ற‌ல்ல. அ‌ந்த வியூ​க‌ங்​க‌ளை உ‌டை‌த்து ந‌ம்​‌மை‌ப் ப‌ாது​க‌ா‌த்​து‌க் ‌கொ‌ள்​வ​தி‌ல்​த‌ா‌ன் நமது ச‌ாம‌ர்‌த்​தி​ய‌ம் அட‌ங்கி இரு‌க்​கி​றது. ஜ‌ம்மு க‌ா‌ஷ்​மீ‌ர் கட‌ந்த 60 ஆ‌ண்​டு​க​ளி‌ல் இ‌ந்​தி​ய‌ா​வி‌ன் பிரி‌க்க முடி​ய‌ாத பகு​தி​ய‌ாக ம‌ாறி வி‌ட்​டி​ரு‌க்​கி​றது எ‌ன்​ப​த‌ற்கு,​ அ‌ங்‌கே தொட‌ர்‌ந்து நட‌ந்​து​வ​ரு‌ம் ‌தே‌ர்​த‌ல்​க​ளு‌ம்,​ அதி‌ல் கட‌ந்த ந‌ா‌ன்கு ‌தே‌ர்​த‌ல்​க​ள‌ாக ம‌க்​க‌ள் ‌பெரு​ம​ள​வி‌ல் கல‌ந்​து​‌கொ‌ண்டு வ‌ா‌க்​க​ளி‌த்​தி​ரு‌ப்​ப​து‌ம்

ச‌ா‌ட்சி. ப‌ாகி‌ஸ்​த‌ா​னி​ய‌ப் பகு​தி​ய‌ான ஆச‌ா‌த் க‌ா‌ஷ்​மீ​ரி‌ல் மு‌றை​

ய‌ா ​க‌த் ‌தே‌ர்​த‌ல்​க‌ள் நட‌த்​த‌ப்​ப​டு​வ​தி‌ல்‌லை எ‌ன்​ப​‌தை​யு‌ம்,​ அ‌ங்‌கே அடி‌க்​கடி ப‌ாகி‌ஸ்​த‌ா​னிய அர​சு‌க்கு எதி​ர‌ாக நட‌க்​கு‌ம் ‌போர‌ா‌ட்​ட‌ங்​க‌ள் இரு‌ட்​ட​டி‌ப்பு ‌செ‌ய்​ய‌ப்​ப​டு​வ​‌தை​யு‌ம் ந‌ா‌ம் இதனுடன் ஒ‌ப்​பி‌ட்​டு‌ப் ப‌ா‌ர்‌க்க ‌வே‌ண்​டு‌ம்.

ஜ‌ம்மு க‌ா‌ஷ்​மீ​‌ரை‌ப் ப‌ற்றி இ‌ப்​‌போது ந‌ா‌ம் விவ‌ா​தி‌க்க ‌வே‌ண்​டி​ய​த‌ன் க‌ார​ண‌ம்,​ அர​சி​ய‌ல் முதி‌ர்‌ச்சி இ‌ல்​ல‌ா​ம‌ல் அ‌ந்த ம‌ாநில முத‌ல்​வ‌ர் உம‌ர் அ‌ப்​து‌ல்ல‌ா சிறு​பி‌ள்​‌ளை‌த்​த​ன​ம‌ாக ‌வெளி​யி‌ட்​டி​ரு‌க்​கு‌ம் சில கரு‌த்​து​க‌ள்​த‌ா‌ன். க‌ா‌ஷ்​மீ​ரி​லு‌ள்ள தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க​ளு​ட‌ன் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை நட‌த்தி,​ அவ‌ர்​க‌ளை ஜன​ந‌ா​யக வழி​மு​‌றை‌க்கு அ‌ழை‌த்து வரு​வ​த‌ற்கு முய‌ற்​சி‌க்க ‌வே‌ண்​டிய முத‌ல்​வ‌ர்,​ திடீ​‌ரெ‌ன்று மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை எ‌ன்று ‌பேச‌த் தொட‌ங்கி இரு‌ப்​ப​து​த‌ா‌ன் அதி‌ர்‌ச்சி அளி‌க்​கி​றது.

மு‌த்​த​ ர‌ப்பு எ‌ன்​பது தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க‌ள்,​ ம‌ாநில அரசு ம‌ற்​று‌ம் ம‌த்​திய அரசு எ‌ன்று கூறி​யி​ரு‌ந்​த‌ா‌ல் அவ​ரது முய‌ற்​சி‌யை வர​‌வே‌ற்​று‌ப் ப‌ார‌ா‌ட்டி இரு‌க்​க​ல‌ா‌ம். உம‌ர் அ‌ப்​து‌ல்ல‌ா குறி‌ப்​பி​டு‌ம் மு‌த்​த​ர‌ப்பு எ‌ன்​பது இ‌ந்​திய‌ா,​ ப‌ாகி‌ஸ்​த‌ா‌ன் ம‌ற்​று‌ம் தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க‌ள் எ‌ன்று இரு‌ப்​ப‌தை ந‌ா‌ம் எ‌ப்​படி வர​‌வே‌ற்​பது?​ அது இரு‌க்​க‌ட்​டு‌ம். இ‌ப்​படி ஓ‌ர் அப‌த்​த​ம‌ான கரு‌த்‌தை ஒரு ம‌ாநில முத‌ல்​வ‌ர் ‌வெளி​யி​டு​கி​ற‌ா‌ர். அ‌ந்​த‌க் கூ‌ட்​டணி ஆ‌ட்​சி​யி‌ல் ப‌ங்கு ‌பெறு‌ம் க‌ா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்​சி‌யே‌ா,​ உம‌ர் அ‌ப்​து‌ல்​ல‌ா​வி‌ன் ‌தேசிய ம‌ாந‌ா‌ட்​டு‌க் க‌ட்சி அ‌ங்​க‌ம் வகி‌க்​கு‌ம் ம‌த்​திய அர‌சே‌ா மறு‌க்​க‌வே‌ா,​ எதி‌ர்‌க்​க‌வே‌ா இ‌ல்​‌லை‌யே,​ ஏ‌ன்?​

கட‌ந்த ந‌ா‌ன்கு ‌தே‌ர்​த‌ல்​க​‌ளை​விட,​ தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க‌ள் விடு‌த்த எ‌ச்​ச​ரி‌க்​‌கை​க​‌ளை‌ச் ச‌ட்‌டை ‌செ‌ய்​ய‌ா​ம‌ல் க‌ா‌ஷ்​மீ‌ர் ம‌க்​க‌ள் வ‌ா‌க்​கு‌ப் பதி​வி‌ல் கல‌ந்​து​‌கொ‌ண்​டி​ரு‌ப்​ப​தி‌ல் இரு‌ந்‌தே,​ ம‌க்​க‌ள் ம‌த்​தி​யி‌ல் தீவி​ர​வ‌ா​த‌ம் ‌செ‌ல்​வ‌ா‌க்கு இழ‌ந்து வரு​வது ‌தெளி​வ‌ா​கி​றது. கட‌ந்த 20

ஆ‌ண்​டு​க​ளி‌ல்,​ இ‌ந்த ஆ‌ண்​டு​த‌ா‌ன் க‌ா‌ஷ்​மீ​ரி‌ல் தீவி​ர​வ‌ா​த‌ நடவடிக்கைகள் மிக​மி​க‌க் கு‌றை‌ந்​தி​ரு‌ப்​ப​த‌ாக ம‌த்​திய உ‌ள்​து‌றை அ‌மை‌ச்​ச‌ர் ப. சித‌ம்​ப​ர‌ம் ம‌ாநி​ல‌ங்​க​ள​‌வை​யி‌ல் கூறி​யி​ரு‌க்​கி​ற‌ா‌ர். இ‌ந்த நி‌லை​யி‌ல்,​ அவ​சி​ய‌மே இ‌ல்​ல‌ா​ம‌ல் மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை எ‌ன்​கிற ‌பெய​ரி‌ல் ப‌ாகி‌ஸ்​த‌ா​‌னை‌ப் பிர‌ச்​‌னை​யி‌ல் நு‌ழை​ய​விட ‌வே‌ண்​டிய அவ​சி​ய‌ம்​த‌ா‌ன் எ‌ன்ன?​

க‌ா‌ஷ் ​மீ‌ர் பிர‌ச்​‌னை‌க்​கு‌த் தீ‌ர்வு க‌ாண ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று சீன அதி​ப​ரு‌ம் அ‌மெ​ரி‌க்க அதி​ப​ரு‌ம் ‌பேசு​கி​ற‌ா‌ர்​க‌ள். ந‌ா‌ம் ‌மௌ​ன​ம‌ாக இரு‌க்​கி​‌றே‌ா‌ம். இ‌ங்‌கே,​ க‌ா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்​சி​யி‌ன் கூ‌ட்​டணி சக‌ா​வ‌ான க‌ா‌ஷ்​மீ‌ர் முத‌ல்​வ‌ர்,​ மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்​‌தை​யி‌ல் ப‌ாகி‌ஸ்​த‌ா‌னை இ‌ணை‌க்க ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்​கிற விப​ரீத ‌யே‌ாச​‌னை‌யை மு‌ன்​‌வை‌க்​கி​ற‌ா‌ர். ந‌ா‌ம் ‌பேச‌ா​ம‌ல் இரு‌க்​கி​‌றே‌ா‌ம். ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை நட‌த்​து​‌வே‌ா‌ம் எ‌ன்று ‌சொல்​வ​து​ட‌ன் நிறு‌த்​தி‌க் ‌கொ‌ள்​ள‌ா​ம‌ல்,​ ம‌ாநி​ல‌ங்​க​ள​‌வை​யி‌ல் ம‌த்​திய உ‌ள்​து‌றை அ‌மை‌ச்​ச‌ர் ஜ‌ம்மு க‌ா‌ஷ்​மீரி​லி​ரு‌ந்து ர‌ாணு​வ‌ம்

கணி​ச​ம‌ா​க‌க் கு‌றை‌க்​க‌ப்​ப​டு‌ம் எ‌ன்​கி​ற‌ா‌ர். எதி‌ர்‌க்​க‌ட்​சி​க‌ள்,​ ப‌த்​தி​ரி​‌கை​க‌ள் எ‌ல்​‌லே‌ா​ரு‌ம் ‌பேச‌ா​ம‌ல் இரு‌க்​கி​ற‌ா‌ர்​க‌ள். அதிர்ச்சி தரும் விஷயங்கள் இவை.

க‌ா‌ஷ்​மீரி​லி​ரு‌ந்து ர‌ாணு​வ‌த்​‌தை‌க் கு‌றை‌ப்​ப‌தே‌ா வில‌க்​கி‌க் ‌கொ‌ள்​வ‌தே‌ா ஆப‌த்து. ப‌ாகி‌ஸ்​த‌ா‌னை மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்​‌தை‌க்கு அ‌ழை‌க்க நி‌னை‌ப்​பது அப‌த்​த‌ம். இ‌தை​‌யெ‌ல்​ல‌ா‌ம் ப‌ா‌ர்‌த்​து‌க் ‌கொ‌ண்​டு‌ம் ‌கே‌ட்​டு‌க் ‌கொ‌ண்​டு‌ம் வ‌ாள‌ா​யி​ரு‌ந்தால் அதன் விளைவு விப​ரீ​த‌மாக முடியும்!
நன்றி : தினமணி

Thursday, December 3, 2009

அற்​றைத் திங்​கள் அந்த நள்​ளி​ர​வில்...

{யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தில் (இப்​போது டோவ் கெமிக்​கல்ஸ்)​ துருப்​பி​டித்​துக் கிடக்​கும் ஒரு கொள்​க​லன்.}

1984 டிசம்​பர் 2 ம் தேதி இரவு 10 மணி.

​மத்​தி​யப் பிர​தேச மாநி​லம்,​ போபால் நக​ரில் உள்ள யூனி​யன் கார்​பைட் நிறு​வ​னத்​தின் கொள்​க​லன் 610-ல் தண்​ணீர் கலக்​கி​றது. அந்த டேங்க்​கில் இருந்த 42 டன் மீதைல் ஐசோ​ச​ய​னைட்,​ இந்​தத் தண்​ணீர் பட்​ட​தும் வேதி​யி​யல் மாற்​றம் அடை​கி​றது. 200 டிகிரி செல்​சி​யஸ் அள​வுக்கு வெப்​பம் உயர்​கி​றது. அழுத்​தம் தாங்​கா​மல் கொள்​க​ல​னின் பாது​காப்பு மூடி​கள் திறந்து கொள்​கின்​றன. நள்​ளி​ர​வில் விஷ​வாயு வெளி​யே​றிப் பர​வு​கி​றது...போபால் நகர் முழு​வ​தும்!​ ​

​அப்​போது அந்​ந​க​ரின் மக்​கள் தொகை 5.2 லட்​சம். இவர்​க​ளில் 2 லட்​சம் பேர் சிறு​வர்​கள். 3000 பேர் கரு​வுற்ற தாய்​மார்​கள். ​

​டிசம்​பர் 3-ம் தேதி காலை போபால் நகர மக்​கள் அனை​வ​ரும் கண்​ணெ​ரிச்​சல்,​ மூச்​ச​டைப்​பு​டன் கண்​வி​ழிக்​கின்​ற​னர். அன்​றைய ஒரு நாளில் மட்​டும் சுமார் 4000 பேர் இறந்​த​னர் என்று அதி​கா​ரப்​பூர்​வ​மாக அறி​விக்​கப்​பட்​டது. உண்​மை​யில்,​ இறந்​த​வர்​க​ளின் எண்​ணிக்கை இரு மடங்கு என்று சொல்​லப்​ப​டு​கி​றது. அடுத்த 72 மணி நேரத்​தில் இறந்​த​வர்​கள் சுமார் 10,000 பேர். இதன் பாதிப்​பால் மெல்​லச் செத்​த​வர்​கள் 25,000 பேர். ​

​இன்​ன​மும் சாகா​மல் இருக்​கும் இரண்டு விஷ​யங்​க​ளில் முத​லா​வது,​ போபால் மாவட்ட நீதி​மன்​றத்​தில் நடை​பெ​றும்,​ யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தின் மீதான வழக்கு ஒன்​று​தான். இரண்​டா​வ​தாக,​ யூனி​யன் கார்​பைடு விட்​டுச்​சென்ற 390 டன் நச்சு வேதிப்​பொ​ருள்​கள் இன்​ன​மும் போபா​லின் நிலத்​தடி நீரைக் கெடுத்​துக் கொண்​டி​ருக்​கி​றது.

​பரா​ம​ரிப்பு இல்​லா​த​து​தான் விபத்​துக்​குக் கார​ணம் என்று தெளி​வாக ஆய்வு அறிக்​கை​கள் குறிப்​பிட்​டன. பரா​ம​ரிப்​புச் செல​வு​களை குறைப்​ப​தற்​காக கொள்​க​லன் 610க்கு அளிக்க வேண்​டிய குளிர்​ப​தன வச​தியை விலக்​கிக் கொள்​ளா​மல் இருந்​தி​ருந்​தால் இந்த விபத்தே நடந்​தி​ருக்​காது என்று ஆய்வு முடி​வு​கள் தெரி​விக்​கப்​பட்​டன. ஆனா​லும் யூனி​யன் கார்​பைடு இதை ஏற்​க​வில்லை. ஏதோ ஒரு ஊழி​ய​ரின் சதி​வேலை கார​ண​மாக,​ கொள்​க​லன் 610-ல் தண்​ணீர் கலக்​கப்​பட்​டுள்​ளது என்ற வாதத்தை மட்​டுமே முன்​வைத்​தது.

​இந்த வாதத்​தை​யும் உப்​பு​சப்பு இல்​லா​மல் செய்து உண்மை மறைக்​கப்​பட்​டது. 42 டன் மீதைல் ஐசோ​ச​ய​னைடை ஒரே கொள்​க​ல​னில் வைத்​தி​ருந்​தது சட்​டப்​ப​டிக் குற்​றம்,​ இந்த அள​வுக்​கான மூலப்​பொ​ருளை 200 கலன்​க​ளில் வைத்​தி​ருந்​தி​ருக்க வேண்​டும் என்று ஆய்வு நடத்​திய வல்​லு​நர் குழு குறை​கூ​றி​யுள்​ளது என்​பதை அரசு பெரி​தாக நினைக்​க​வில்லை.

​இறந்​த​வர் குடும்​பத்​துக்கு ரூ.62 ஆயி​ரம்,​ பார்வை இழப்பு போன்ற நிரந்​தர ஊன​முற்​றோ​ருக்கு ரூ.25000 இழப்​பீடு வழங்​கி​ய​தோடு சரி. மொத்​தம் ரூ. 1500 கோடி இழப்​பீ​டு​க​ளாக கொடுக்​கப்​பட்​டுள்​ளது. அதா​வது,​ இந்​திய அரசு 3 பில்​லி​யன் டாலர் இழப்​பீடு கேட்டு வழக்கு தொடுத்​தது. ஆனால் கிடைத்​ததோ அதில் 15 விழுக்​கா​டு​தான்.

​இத்​த​னைப் பேர் மர​ணத்​துக்கு கார​ண​மாக இருந்த யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தின் தலை​மைச் செயல் அலு​வ​லர் வாரன் ஆன்​டர்​சன் இந்த வழக்​கில் முதல் குற்​ற​வா​ளி​யாக பதிவு செய்​யப்​பட்​டார். ஆனால் அவர்,​ நீதி​மன்ற விசா​ர​ணைக்கு அழைக்​கப்​ப​டும்​போ​தெல்​லாம் வரு​வேன் என்ற உறு​தி​மொ​ழி​யு​டன் அமெ​ரிக்கா சென்​ற​வர் திரும்ப வரவே இல்லை. நீதி​மன்​றம் அழைத்​தா​லும் வர​வில்லை. அதன் பிறகே,​ 17 ஆண்​டு​கள் கழித்து அவரை மறைந்​து​வா​ழும் குற்​ற​வா​ளி​யாக அறி​வித்து அவரை ஒப்​ப​டைக்க வேண்​டும் என்று அமெ​ரிக்​கா​வி​டம் இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டது. இந்​திய அரசு சொல்​லும் கார​ணங்​க​ளுக்​காக நாங்​கள் எமது குடி​ம​கனை உங்​க​ளி​டம் ஒப்​ப​டைக்க இன்​னின்ன சட்​டங்​கள் இடம் தர​வில்லை என்று அமெ​ரிக்கா சொல்​லி​விட்​டது.

​இப்​போது யூனி​யன் கார்​பைடு கம்​பனி என்றே ஒன்று இல்லை என்று ஆகி​விட்​டது. அதா​வது அந்த நிறு​வ​னத்தை,​ ஏற்​கெ​னவே பங்​கு​தா​ரர் என்று சொல்​லிக்​கொண்டு,​ டோவ் கெமிக்​கல் நிறு​வ​னம் முழு​மை​யாக வாங்​கி​விட்​டது. இப்​போது யார் மீது வழக்கு தொடுப்​பது. கீழே தள்​ளி​ய​தோடு குழி​யும் பறித்​த​தாம் குதிரை என்​கிற கதை​யாக,​ இந்​தி​யா​வில் ஏற்​பட்ட வேலை​யி​ழப்பு நாள்​க​ளுக்கு ரூ.10,000 டாலர் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று வழக்கு போடும் அள​வுக்கு தைரி​யம் வந்​து​விட்​டது. இந்த டோவ் கெமிக்​கல் என்​பதே ஒரு பொய்​யான ஒன்று என்​றும்,​ யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்தை காப்​பாற்ற இப்​ப​டி​யான பெயர் மாற்​றம் உரி​மை​யா​ளர் மாற்​றம் என்று நடிக்​கி​றார்​கள் என்​றும் சொல்​லப்​ப​டு​கி​றது.

​போபால் நீதி​மன்​றம் கடந்த ஜூலை மாதம்,​ ஆன்​டர்​ச​னைக் கைது செய்​வ​தற்​கான புதிய ஆணை​யைப் பிறப்​பித்​துள்​ளது. மறு​ப​டி​யும் இந்​திய அரசு இதனை அமெ​ரிக்​கா​வுக்​குத் தெரி​வித்து,​ அவர்​கள் சட்​டத்​துக்கு பொருந்தி வந்​தால்,​ ஆன்​டர்​சனை அனுப்பி வைப்​பார்​கள். ​ஆனால்,​ இப்​போது இந்​தியா மீது அமெ​ரிக்கா பொழி​யும் பாச​ம​ழை​யில் இந்த மாதி​ரி​யான முகம் சுளிக்க வைக்​கும் பிரச்​னை​களை முன்​வைக்​கப்​ப​டுமா என்​ப​தும் சந்​தே​கம்​தான்.

​சரி,​ ஆன்​டர்​சன் ஒப்​ப​டைக்​கப்​பட்​டா​லும் என்ன நீதி கிடைத்​து​வி​டும்?​ ​

​"கட்​டின புரு​ஷன் சரி​யில்​லா​தப்ப,​ கண்​ட​வ​னை​யெல்​லாம் குத்​தம் சொல்லி என்ன ​ஆகப்​போ​வது' என்று அழுத பெண்​கள் மூக்​கைச் சிந்​து​வ​தைப் போலத்​தான் நாமும் சமா​தா​னம் அடைய வேண்​டும் போல. வேறு வழி!​
கட்டுரையாளர் : இரா. சோம​சுந்​த​ரம்
நன்றி : தினமணி


Wednesday, November 25, 2009

குனியக் குனிய...

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது. அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?

இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!

உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?

சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.

அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.

கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.

சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?

அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!

குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?
நன்றி : தினமணி

Monday, November 23, 2009

டாலருக்கு நிகர் வேறு ஏதுமில்லை: மன்மோகன்

உலக வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான நாணயம் வேறு ஏதுவும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, அமெரிக்க தொழில் நிறுவனங்கள், தொழில் தொடங்குவதில் ஊக்கத்துடன் செயல்படுவதை பாராட்டினார். தற்சமயம் டாலருக்கு மாற்றாக வேறு அந்நிய செலவாணியை நினைக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சீனாவிடம் அந்நிய செலவாணி கையிருப்பாக 2.5 டிரில்லியன் டாலர் உள்ளது. இதில் சிறு அளவு கூட விற்பனை செய்யவில்லை. இதில் இருந்து டாலரின் மேல் உள்ள நம்பிக்கையை அறியலாம். டாலரின் மீதான நம்பிக்கையில் பிரச்னை உள்ளது. இவை விரைவில் தீரும் என்று தெரிவித்தார். அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி பற்றி கேட்டபோது, அமெரிக்க முறையில் இது தற்காலிக பின்னடைவு, தற்காலிகமான கேள்விக்குறியே, ஆனால் இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்று மன்மோகன் சிங் கூறினார்.
நன்றி : தினமலர்

Wednesday, November 18, 2009

நாளை எந்தப் பக்கம்?

சென்றவாரம் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க ஆற்றல் துறை அமைச்சர் ஸ்டீபன் சூ, புதுதில்லியில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐஐடி) மாணவர்களிடையே பேசும்போது, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்: "கோபன்ஹேகன் மாநாட்டில் கரியமில வாயு குறைப்பு குறித்து அமெரிக்கா எந்த உறுதிமொழியையும் வழங்காது'

அதாவது, கியோடோ மாநாட்டுத் தீர்மானத்தின்படி, வளர்ந்த நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா ஏற்கப்போவதில்லை என்பதுதான் இதன் பொருள். இதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார். அமெரிக்கா தனக்கான தூய ஆற்றல் மற்றும் பாதுகாப்புக் குறித்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும், அந்தச் சட்டம் அமெரிக்க அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும், அது நிறைவேறாத நிலையில் கரியமில வாயு குறைப்பு பற்றிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப மாறுதலுக்கான செயல்வரம்பு மாநாட்டில் (UNFCCC) அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிடம் இந்தியா எழுப்பிய கேள்விகள் குறித்துச் சொல்லும்போது, "இந்தியாவின் நிர்பந்தங்களை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். கரியமில வாயு வெளிப்பாட்டை இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகமாகக் குறைக்கத் தேவையில்லை' என்று இந்தியாவுக்கு மனம்குளிரும் பதிலையும் அவர் அளிக்கத் தவறவில்லை.

அதன் பின்னர், அவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அடுத்தநாள் சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, சீனாவை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

சிங்கப்பூரில் ஒபாமாவும், இந்தியாவில் ஸ்டீபன் சூ-வும் இப்படியாகப் பேசக் காரணம், கோபன்ஹேகன் மாநாட்டின்போது அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இந்தியாவும் சீனாவும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான்.

1997-ல் மேற்கொண்ட கியோடோ மாநாட்டு முடிவுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட அமெரிக்காவின் முயற்சிக்கு யாரும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காக இத்தகைய பசப்பு வார்த்தைகளை அமெரிக்கா பேசி வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு அமைச்சர்களை அனுப்பிவைத்தும், சீன நாட்டினைப் புகழ்ந்தும் தோழமை பாராட்டுகிறார்கள்.

உலகில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமானால், உலக நாடுகள் அனைத்தும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இதில் எந்தெந்த நாடுகள் இன்றைய மிக மோசமான புவிவெப்பத்துக்குக் காரணமோ அந்த நாடுகள் 1990-ம் ஆண்டு அளவின்படி குறிப்பிட்ட சதவீத கரியமில வாயு உள்ளிட்ட பசுமைஇல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைக்க வேண்டும். இதுதான் கியோடோ தீர்மானம்.

ஆனால் அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், 2005-ம் ஆண்டு நிலவரப்படி, (1990-ம் ஆண்டு நிலவரப்படி அல்ல), தாங்கள் வெளியேற்றும் பசுமைஇல்ல வாயுக்களில் 20 சதவீதத்தை 2020-ம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வோம் என்பதுதான். இதைவிட, நாங்கள் கொஞ்சம்கூட குறைக்க மாட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்.

இதைப்போன்ற அநியாயம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய வளிமண்டல மாசுகளின் 30 சதவீதம் அமெரிக்காவினால் உண்டானது. தற்போதும் ஆண்டுதோறும் உலகின் மொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 18 சதவீதம் அமெரிக்காவினுடையது. இதற்கு இணையான அளவில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே!

இதனால்தான் வளரும் நாடுகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமானவை. இந்த இரு நாடுகளும் ஒன்றாக நின்றால், கோபன்ஹேகனில் தற்போதுள்ள 141 நாடுகளும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும். ஓர் அணிக்கு சீனா அல்லது இந்தியா தலைமையேற்கும் கட்டாயம் உருவாகும். இது "பெரியண்ணன்' அமெரிக்காவுக்கு அவமரியாதை ஆகிவிடும். தற்போது அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சி வெளிப்படையானது. முதலாவதாக இரு நாடுகளையும் தனக்குச் சாதகமாக இருக்கச் செய்வது; அல்லது சும்மா இருந்தாலும் சரிதான். இரண்டாவதாக, சீனாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, இந்தியாவைத் தனிமைப்படுத்துவது!

இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுதான். இந்தியா தனித்து நின்று எதிர்க்கும் என்றால், அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் நிதியுதவிகள் கிடைக்காது என்பதுடன் வேறு நெருக்கடிகளும் ஏற்படும். உதாரணமாக, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல் பரிமாற்றம் இருக்காது.
இருப்பினும், உலக நன்மைக்காக எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகள்தானே முடிவு எடுப்பவர்களாக இருக்கிறார்கள்!
நன்றி: தினமணி

Monday, November 16, 2009

அமெரிக்காவில் மேலும் 3 வங்கிகள் திவால்

அமெரிக்காவில் மேலும் மூன்று வங்கிகள் திவால் ஆகி உள்ளன. அமெரிக்கா பொருளாதார சரிவில் இருந்து மீட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து இருந்தார். இருப்பினும், அங்கு வங்கிகள் திவாலாவது மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிதியாண்டில் மட்டும் இதுவரை 123 வங்கிகள் மூடப் பட்டுள்ளன. இதில் 24 வங்கிககள் இந்த மாதம் மட்டும் மூடப் பட்ட வங்கிகளாகும். சமீபத்தில் அங்குள்ள ஓரியன் வங்கி, பசிபிக் கோஸ்ட் நேஷனல் வங்கி மற்றும் செஞ்சுரி வங்கி ஆகியவை மூடப் பட்டன. ஓரியன் வங்கி 2.7 பில்லியன் சொத்துக்களையும் 2.1 பில்லியன் டெபாசிட்டுகளையும் கொண்டிருந்தது. செஞ்சுரி வங்கி 728 மில்லியன் சொத்துக்கள் மற்றும் 631 டெபாஸிட்டுகளையும் கொண்டுள்ளது.
நன்றி : தினமலர்

Friday, November 13, 2009

உலக(கே) ம(ô)யம்!

இடைத்தேர்தல் முடிவுகள் சாதாரணமாக ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அமைவதுதான் இயற்கை. பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள், மாநில ஆளுங்கட்சிகளுக்கு எதிரானதாக இந்தியாவில் அமைந்திருப்பதுகூட ஆச்சரியமில்லை. எதுவுமே செய்யாமல் நோபல் பரிசு பெறும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்கு எதிராகவும் அங்கே நடந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதுதான் ஆச்சரியம்.

அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் முதல் அமெரிக்கக் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவரான பராக் ஒபாமாவின் ஆட்சியின் மீது ஓராண்டுக்குள் மக்கள் அதிருப்தி அடைந்துவிட்டார்களோ என்கிற ஐயத்தை எழுப்புகிறது சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு மாநில ஆளுநர்களுக்கான தேர்தல் முடிவுகள். கடந்த வாரம் நடந்த வர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாநில ஆளுநர் தேர்தல்களில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பின்னடைவைச் சந்தித்திருப்பது பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

ஓராண்டுக்கு முன்னால் நடந்த அதிபர் தேர்தலில், யாரும் எதிர்பாராதவிதமாக வர்ஜீனியா மாநிலத்தில் அதிபர் ஒபாமா முன்னணி வகித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆளுநர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிரெய்க் டீட்ஸ், குடியரசுக் கட்சி வேட்பாளரான ராபர்ட் மெக்டொனால்டிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

நியூஜெர்சி மாநிலம் கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் வசம் இருக்கும் மாநிலம் என்பது மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் எல்லா தளத்திலும் ஜனநாயகக் கட்சியே அதிகாரத்திலும் இருக்கிறது. நியூஜெர்சியில் குடியரசுக் கட்சி வேட்பாளரான கிறிஸ்டோபர் கிரிஸ்டி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கோர்சைனைத் தோற்கடித்து ஆளுநராகி இருக்கிறார்.

வேடிக்கை என்னவென்றால், தான் அதிபரான பிறகு நடக்கும் தேர்தல்கள் இவை என்பதால், பராக் ஒபாமா இந்த இரண்டு மாநிலங்களிலும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பதுதான். எப்படியும் இந்த இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே, தனது செல்வாக்குச் சரிந்துவிடாமல் காப்பாற்றப்படும் என்று அதிபர் ஒபாமா கருதியதில் தவறு ஒன்றுமில்லை.

இந்த இரண்டு மாநில ஆளுநர் தேர்தல்களும் முக்கியத்துவம் பெற்றதன் காரணம், அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 435 உறுப்பினர்கள் கொண்ட அமெரிக்க மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதுதான். அதுமட்டுமல்ல, அமெரிக்க மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு பெற்று, அந்த இடங்களுக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாநிலங்களில் பின்னடைவு ஏற்படுவது என்பது தனக்கு எதிரான மனோநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடக்கூடும் என்று அதிபர் ஒபாமா பயப்பட்டதில் நியாயமில்லாமல் இல்லை.

கடந்த ஆண்டு, அதிபர் தேர்தல், மேலவைத் தேர்தல் மற்றும் மக்களவைக்கான இடைத்தேர்தல்கள் என்று தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த குடியரசுக் கட்சியினருக்கு, இந்த இரண்டு மாநில ஆளுநர் தேர்தல் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 2010-ல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களை குடியரசுக் கட்சி வென்றுவிட்டால், அதிபர் ஒபாமா பலவீனமாகி விடுவார் என்பதால் ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் ஒருவித கலக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாநில அளவிலான பிரச்னைகளை முன்னிறுத்தித் தேர்தல் முடிவுகள் அமைந்ததாக ஜனநாயகக் கட்சியினர் சமாதானம் சொன்னாலும், பொருளாதாரப் பிரச்னைகளை ஒபாமா நிர்வாகம் சரியாகக் கையாளாததுதான் தோல்விக்குக் காரணம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. இந்த முறை சுயேச்சைகள் குடியரசுக் கட்சியை ஆதரித்திருப்பதும், அதிபர் தேர்தலில் பெரிய அளவில் தேர்தலில் கலந்துகொண்ட கறுப்பர் இனத்தவர்கள், இந்தத் தேர்தலில் உற்சாகம் இழந்து தேர்தலில் பங்கு பெறாததும்கூட, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் தோல்விக்குக் காரணம் என்று கருத இடமிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, நியூயார்க் மாநகராட்சியின் மேயராக மீண்டும் கோடீஸ்வரர் மைக்கேல் ப்ளூம்பர்க் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அதிலென்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? இரண்டு தடவைக்கு மேல் ஒரு நபர் மேயர் பதவியில் தொடரக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தது. சுமார் 10 கோடி டாலர், அதாவது, 500 கோடி ரூபாய் செலவழித்து, அந்த விதியையே மாற்றி மூன்றாவது முறையாகத் தானே நியூயார்க்கின் மேயராகி இருக்கிறார் மைக்கேல் ப்ளூம்பர்க்! பணம் பாதாளம் வரை பாயும்தானே!

இடைத்தேர்தல் முடிவுகளிலும் சரி, பணம் பங்கு வகிப்பதிலும் சரி, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிகிறது. யாரைப் பார்த்து யார் படித்தது? ஹும்... உலகமயம் என்பதில் இதுகூட சேர்த்தி போலிருக்கிறது...
நன்றி : தினமணி

Saturday, November 7, 2009

அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலை இழப்புக்கள்

அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேற்றம் பெற்று வருவதாக அதிபர் ஒபாமா சொல்லி சில நாட்களுக்கு உள்ளே, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளது. அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 1,90,000 பேர் வேலை இழந்துள்ளனர். இது அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிட 2 சதவிகிதம் அதிகம். 'நிச்சயம் இது கவலைப்படத்தக்க விஷயமே. அமெரிக்க நிர்வாகம் உடனடியாக இதில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய நிதிச் சலுகைகளை அரசு அதிகரித்தாக வேண்டும்' என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வேலை இழப்புகள் தொடர்ந்து 22 மாதங்களாக அதிகரித்தபடி உள்ளதுதான் ஒபாமா நிர்வாகத்தை பெரிதும் பயமுறுத்தி வருகிறது.
நன்றி : தினமலர்


Monday, November 2, 2009

வீழ்ச்சியில் இருந்து மீட்டு வருகிறது அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து மீட்டு வருவதாகவும், இதுவே சரியான பாதை என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். கடந்த ஆண்டு உலக அளவில் நடந்த பொருளாதார வீழ்ச்சி காரணமாக வளர்ந்த பல நாடுகள் இன்னல்களில் சிக்கின. அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் வேலை இழப்பு, ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகிறனர்.
இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல அனைத்து நாடுகள் மீட்டு வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து மீட்டு வருவதாகவும், இதுவே சரியான பாதை என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், வங்கிதுறை மற்றும் வேலைவாய்பபு நிலையில் சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதி சலுகைகள் காரணமாக மூன்றாவது காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து எழுந்து 3.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் வேலை இழப்பை தடுக்க தேவையான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Monday, October 19, 2009

கடலுக்கு யார் காவல்?

உலகமயம் என்கிற போர்வையில் இந்தியாவும் ஏனைய வளர்ச்சி அடையும் பொருளாதாரங்களும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தேவைக்கும் வசதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறுபவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். மேலோட்டமாக வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டு, தேசத்தின் அடிப்படை ஸ்திரத்தன்மை தகர்க்கப்பட்டு வருகிறது.

உலகமயம் என்கிற பெயரில் அவர்களது பொருள்களை விற்கும் சந்தையாக மட்டும் இந்தியா பயன்படுத்தப்பட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளை அசுத்தப்படுத்தும் கழிவுப் பொருள்களையும், அந்த நாட்டு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சுப் பொருள்களையும், கதிரியக்கத்தை ஏற்படுத்தும் பொருள்களையும் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டியாக நாம் மாற்றப்படுவதை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பது?
அதைவிட துர்பாக்கியமான நிலைமை என்ன தெரியுமா? நமது அரசும் ஆட்சியாளர்களும் இது தெரிந்தும் தெரியாததுபோல இருப்பதும், மறைமுகமாக இதுபோன்ற செயல்களுக்கு ஆதரவு அளிப்பதும்தான். ஏன் நீதிமன்றங்களேகூட இந்தச் சம்பவங்களை சட்டத்தின் போர்வையில் ஆதரிக்கத் தலைப்படுகின்றன என்பதுதான் அதைவிட வேதனைதரும் விஷயம்.

ஓராண்டுக்கு முன்னால் எஸ்.எஸ். நார்வே என்கிற கப்பல் "ப்ளுலேடி' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு கடல் பயணத்துக்கு உகந்ததல்ல என்பதால் அதை உடைப்பதற்கு வங்கதேசத்துக்கு வந்தது. சுமார் 1,240 டன்கள் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாசும், பாலி க்ளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சுத்தன்மையையுடைய ரசாயனமும் இருப்பதாக அந்த நிறுவனத்தாரே ஒப்புக்கொண்ட அந்தக் கப்பலை உடைக்க சின்னஞ்சிறு வங்கதேசமும், மலேசியாவும் கூட மறுத்துவிட்ட நிலையில் "ப்ளுலேடி' இந்தியாவைத் தஞ்சமடைந்தது.

என்னவாயிற்று தெரியுமா? நமது நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்று, குஜராத் மாநிலம் பவநகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் அந்தக் கப்பல் உடைத்துப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அந்தக் கப்பல் உரிமையாளர்களின் கோரிக்கை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த 2005-ம் ஆண்டில் பன்னாட்டுப் புகையிலை நிறுவனமான ஐடிசி நிறுவனத்தாரின் காகித தொழிற்சாலைப் பிரிவினர் 25,000 டன் பழைய பேப்பர் இறக்குமதி செய்வதாகக் கூறி நியூஜெர்ஸி நகரத்தின் குப்பைக் கூளங்களையும் சில கன்டெய்னர்களில் நிரப்பி அந்தக் கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதற்குக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதுபோல எந்தெந்த பன்னாட்டு நிறுவனங்கள் என்னென்ன நச்சுப் பொருள்களையும் கழிவுப் பொருள்களையும், ரகசியமாக இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுகிறார்களோ, யார் கண்டது?.

இப்போது மீண்டும் ஒரு பிரச்னைக்குரிய கப்பல் குஜராத் செüராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் நங்கூரமிடப்பட்டு இருக்கிறது. "எஸ்.எஸ். இண்டிபென்டன்ஸ்' என்கிற அந்தக் கப்பல் எம்.எஸ். ஓஷியானிக் என்று முதலில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு இப்போது "பிளாட்டினம் 2' என்கிற பெயருடன் இந்தியத் துறைமுகத்துக்கு வந்திருக்கிறது. இந்த அமெரிக்கக் கப்பல் இந்தியாவைத் தஞ்சம் அடைவானேன்?.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துபாய் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பலை ஏன் அமெரிக்காவிலேயே உடைத்து பிரிக்கக் கூடாது? நியாயமாகப் பார்த்தால் அமெரிக்கக் கப்பலான "பிளாட்டினம் 2' அமெரிக்காவில் பிரிக்கப்படுவதுதானே நியாயம்?

அமெரிக்கச் சுற்றுச்சூழல் சட்டப்படி சுமார் 200 டன்களுக்கும் அதிகமான "ஆஸ்பெஸ்டாஸ்' அடங்கிய பொருள்களும் சுமார் 210 டன்கள் பாலி குளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சு ரசாயனம் கலந்த பொருள்களும் இருக்கும் இந்தக் கப்பல் அமெரிக்காவில் உடைக்கப்பட முடியாது. இதை உடைப்பதால் அமெரிக்கச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படலாம் என்று அமெரிக்க அரசு கருதுகிறது. அமெரிக்கச் சட்டங்கள் அனுமதி மறுக்கின்றன.

இந்தியாவை இந்தக் கப்பல் எப்படி அடைந்தது என்று கேட்டால் அதைவிட சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைக்கிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி செüராஷ்டிரா கடற்கரையை ஒட்டிய ஆழ்கடலை அடைந்த இந்தக் கப்பல் பவநகரிலுள்ள "அலங்க்' கப்பல் உடைப்புத் தளத்துக்கு மாநில அரசின் அனுமதி பெறாமல், ஒரு விசைத்தோணி மூலம் இழுத்து வரப்பட்டது. எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் அந்த விசைத்தோணி இன்னொரு கப்பலில் மோதிவிட அங்கேயே அந்தக் கப்பல் கைகழுவப்பட்டது.

இந்தக் கப்பலை யாருக்கும் தெரியாமல் "அலங்க்' கப்பல் உடைக்கும் தளத்துக்குக் கொண்டு வர எத்தனித்த தனியார் நிறுவனம் கைகழுவி விட்டதால் கடலில் நங்கூரமிட்டது இந்தக் கப்பல். விவரமறிந்த குஜராத் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கப்பலைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். ஒருவேளை, அந்தத் தனியார் நிறுவனமே கூடத் திட்டமிட்டு இந்தக் கப்பலை நடுக்கடலிலிருந்து விசைத்தோணி மூலம் இந்தியக் கடல் எல்லைக்குள் இழுத்துக் கொண்டுவந்து கைவிட்டதோ என்னவோ? கப்பல் உரிமையாளரிடம் அதற்குப் பெரிய தொகை பெற்றிருக்கலாம். இந்திய எல்லைக்குள் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கப்பலை நாம் நடுக்கடலில் கொண்டு விட முடியாது. உடைத்துத்தானே தீரவேண்டும்?

இதைப்பற்றி ஓர் அறிக்கை தயாரிக்கச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறது மத்திய சுற்றுச்சூழல் துறை. இதுபோன்ற நச்சுக்கழிவுகளும், கதிரியக்கத்தைத் தோற்றுவிக்கும் பொருள்களையும் கொண்ட ஒரு கப்பலை யார், எப்படி, எதற்காக இந்திய எல்லையில் நங்கூரம் பாய்ச்ச அனுமதித்தது என்று விசாரணை நடத்தவும் உத்தரவிடப் போவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர்.
இதுபோன்ற கப்பல்கள் உள்ளே வருவதை கண்காணிப்பதுதானே கடலோரப் பாதுகாப்பு படையினரின் வேலை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, படுகிறதா? மும்பை தாக்குதலுக்கு வந்தவர்களையே கண்காணிக்காமல் விட்டவர்கள்தானே அவர்கள்? அதற்குப் பிறகாவது உஷாராக இருந்திருக்கவேண்டாமா?

உலகமயம் என்கிற பெயரில் உலகின் நச்சுப் பொருள்களும், கதிரியக்கப் பொருள்களும், கழிவுகளும் கொட்டப்படுவதற்கு நமது தாய்த்திருநாடு பயன்படுகிறது என்பதைப் பார்க்க நமக்கு ரத்தம் கொதிக்கிறது. ஆனால், நமது ஆட்சியாளர்களை இது சற்றும் பாதித்ததாகவே தெரியவில்லை! இந்த லட்சணத்தில் நாம் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் வேறு செய்துகொண்டிருக்கிறோம். மிக அதிகமான கதிரியக்கம் உள்ள அணுக்கழிவுகள் இந்தியாவில் கொட்டப்பட மாட்டாது என்பது என்ன நிச்சயம்?
நன்றி : தினமணி

Thursday, October 15, 2009

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டது அமெரிக்கா: கருத்து கணிப்பு

அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு விட்டதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து நேஷனல் அசோசியேசன் ஆப் பசினஸ் எகனாமிக்ஸ்(என்.ஏ.பி.ஈ.,) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், 44 பிரபல அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடம் கருத்து கணிப்பு நடத்தினோம். இதில் 80 சதவீதத்தினர் அமெரிக்க வரலாற்றில் கண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடி காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளது.
நன்றி : தினமலர்


Tuesday, October 13, 2009

இந்திய சாலைகளில் பவனி வர காத்திருக்கும் அமெரிக்க பைக்

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்ஸன் பைக் உலகளவில் பிரசித்தி பெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியாவிலும் இந்த பைக் விற்பனை துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் இந்த பைக் இந்தியாவில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் சார்பில் பல மாடல்களில் பைக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில், குறைந்தபட்சம் 15 மாடல் பைக்குகளாவது, இந்தியாவில் கிடைக்கும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டது.
ஹார்லி டேவிட்ஸன் பைக் விற்பனைக்கான டீலர்ஷிப் பெற, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராத வகையில், இந்தியாவில் இந்த பைக்குக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. எனவே, டீலர்ஷிப் பெறுவதிலும் ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். துவக்கத்தில் பஞ்சாப், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் டில்லியில் மட்டும் டீலர்ஷிப் துவக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது காணப்படும் வரவேற்பை கருத்தில் கொண்டு, டீலர்ஷிப்புக்காக விண்ணபிக்கும் காலக்கெடு நவம்பர் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய முக்கிய நகரங்கள் அனைத்திலும் இந்த பைக் கிடைக்கும் வகையில், டீலர்ஷிப்பை விரிவுப்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது. இந்தியாவில் இந்த பைக்கின் விலை ரூ.3.5 லட்சம் என்ற அளவில் இருக்கும்.
நன்றி : தினமலர்


Monday, August 24, 2009

பழைய கார்கள் விற்பனையில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆர்வம்

பழைய கார்கள் விற்பனையில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளது. தனது நிறுவனத்தின் கார்களின் செகண்ட் ஹேண்ட் சேஸ்சை 15 ம‌டங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் . நாடு முழுவதும் செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனைக்காக 17 அவட்‌லெட்கள் திறந்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். இந்த ஆண்டு முடிவுக்குள் இந்த‌ எண்ணிக்கையை 50ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த பேட்டியளித்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்லிம் : செகண்‌ட் ஹேண்ட் கார் விற்பனை மார்ச் மாதம் துவக்கப்பட்டது. இதுவரை 100 கார்கள் விற்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தற்பேததைய நிலவரப்படி 203 டீலர்கள் இருக்கின்றனர். டீலர்கள் எண்ணிக்கையை 2009ம் ஆண்டுக்குள் 260ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
நன்றி : தினமலர்