பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள் என்று விலைவாசிப் பிரச்னையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று வெற்றிகரமாக "பாரத் பந்த்' நடத்தியபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு மாற்று ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பதை சமீபத்திய நாடாளுமன்ற நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.
பாரதிய ஜனதா கட்சியின் தயவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம், நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்கை, அமெரிக்காவை மையப்படுத்தியுள்ள பிரச்னைகள், உலகமயமாக்கல் என்று வரும்போது காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கைகோத்துச் செயல்படுவதைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் பார்த்து வருகிறோம்.
அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக்கப்படும் என்பதுதான் நிலைமை. நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயத்துக்குமுன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்க முதலீட்டாளர்களையும், அரசையும் மனம் குளிர்விக்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் குறியாக இருக்கிறார் என்கிறார்கள். மன்மோகன் சிங்கின் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில் காங்கிரஸýம், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியேகூட முனைப்புடன் செயல்படுகிறது என்பதுதான் குறிப்பிடவேண்டிய ஒன்று.
அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிப்படைக் காரணம், அணுமின் நிலையங்களில் அணுக்கசிவோ, விபத்தோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால்தான் இந்த நிபந்தனை.
இழப்பீட்டுக்கு ஓர் உச்சவரம்பு விதிப்பதன் மூலம் அணுவிபத்தால் ஏற்படும் தலைமுறைகளைக் கடந்த பாதிப்புகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருக்காது. அணுமின் நிலையங்களை அன்னிய முதலீட்டாளர்கள் மட்டுமே நிறுவ முடியும் என்பதால் தங்களது நாட்டு முதலீட்டாளர்களின் இழப்பைக் குறிப்பிட்ட வரம்புக்குள் நிறுத்த அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு விரும்புகிறது.
போபாலில் நடந்த விஷவாயுக் கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் முழுமையான இழப்பீடு கொடுக்காத நிலையில், இன்னமும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதும், நீதிமன்றப்படிகளில் ஏறி, இறங்கி சலித்துவிட்டிருப்பதும் இதுபோன்ற விபத்துகளில் இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஆனால், அப்படிப்பட்ட இழப்பீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கப்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
அணுசக்தி என்பது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது, அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு முழுமையான இழப்பீடு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவதும்கூட ஒரு நல்லரசின் கடமை.
கடந்த மக்களவையில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது இந்த இழப்பீட்டு மசோதாவில் அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது ஏன்? தங்களது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். அது என்ன நிபந்தனைகள்?
முதலாவதாக, அணுசக்திக் கூடங்கள் தனியார் தரப்பில் விடப்படக் கூடாது என்பதும் அரசுதான் நடத்த வேண்டும் என்பதும். இரண்டாவதாக, அணுசக்தி நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 500 கோடியாக இருந்ததை 1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதும் தேவைப்பட்டால் மேலும் உயர்த்திக் கொள்ளும் அதிகாரமும் அரசுக்கு இருக்க வேண்டும் என்பதும்.
முன்பு தயாரிக்கப்பட்ட மசோதாவின்படி, அணுசக்தி உற்பத்தியாளர்களின் இழப்பீடு 500 கோடி என்றும், அதற்குமேல் இழப்பீடு தரப்பட வேண்டுமானால் அதை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் இருந்தது. இப்போது பாஜகவின் கோரிக்கையின்படி அரசு நிறுவனமாக மட்டுமே அணுசக்திக் கூடங்கள் அமைக்கப்படும் என்கிற நிலையில் இழப்பீடு எவ்வளவு இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொள்வது என்பதுதானே நியாயம். அரசே நடத்தும்போது உச்சவரம்பின் அவசியம் தேவையில்லையே!
இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்றி, அரசு நிறுவனமாக அணுசக்திக் கூடங்களை அமைத்து, பிறகு அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டிருப்பது இந்த மசோதாவிலிருந்தே பளிச்செனத் தெரிகிறதே. அப்படியானால் இது மக்களை முட்டாளாக்கும் மசோதாதானே?
சரி, மின்உலைகளில் தயாரிப்புக் குறைபாடுகள் இருந்தால் அதற்கு உலைகளை வழங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்குமா? அவர்களிடமிருந்து விபத்து ஏற்பட்டால் இழப்பீடு முழுமையாகப் பெறப்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு மசோதா பதில் சொல்லவில்லையே, ஏன்?
பாரதிய ஜனதாவும், காங்கிரஸýம் ஓரினப் பறவைகள். பொருளாதாரக் கொள்கையிலும், பன்னாட்டு நிறுவன ஆதரவிலும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம். ஏனைய மாநிலக் கட்சிகள் இந்தப் பிரச்னையில் மௌனம் சாதிக்கின்றனவே, ஏன்? அவர்களைப் பொறுத்தவரை அணுவாவது.. உலையாவது.. விபத்தாவது.. இழப்பாவது..! உறுப்பினர்களின் சம்பள உயர்வுதான் இப்போதைய கவலை!
மக்களைப் பற்றியும் வருங்காலச் சந்ததியினரைப் பற்றியும் இவர்கள் எங்கே கவலைப்படுகிறார்கள்...?
நன்றி : தினமணி
Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts
Thursday, August 19, 2010
Saturday, January 23, 2010
நாம்தான் கிடைத்தோமா?
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் குழுதான் என்று வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூற, இல்லையில்லை இறுதி முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்று அடுத்த நாளே மறுத்து நமது வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
தேசியவாத காங்கிரஸ் என்ற தோழமைக் கட்சியின் தனிப்பெரும் தலைவர் சரத் பவார். அவருடைய சமீபகால அரசியல் நடவடிக்கைகள், மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள், நலன் சாராது கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அதிபர்கள், சர்க்கரை மொத்த வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் நலன் சார்ந்து இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு சாகுபடியாளர்களுக்குக் கட்டுபடியாகும் கொள்முதல் விலையை வாங்கித் தருவதில் அதிக ஆர்வம் காட்டாத சரத் பவார், இறக்குமதி கோதுமைக்குக் கூடுதல் விலை தருவதற்குத் தயக்கம் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து கோதுமை உற்பத்தியாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.
இதையெல்லாம் கூறக் காரணம், மரபணு மாற்றப்பட்ட கத்தரி விஷயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது என்று கூறி, இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கப்பட காரணமாக அவர் இருந்துவிடுவாரோ என்கிற அச்சம்தான். நல்லவேளை ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு அவருக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்.
பி.டி. கத்தரிக்காய் விதைகளை "மேகோ' (மகாராஷ்டிர உயர்விளைச்சல் விதை நிறுவனம்) என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்க பி.டி. நிறுவனம் தான் மகாராஷ்டிரத்தில் இப்படி ஒரு புதிய பெயரில் சில இந்தியர்களை முன்னிலைப்படுத்தி ஓர் இந்திய நிறுவனம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மரபணு மாற்றப்பட்ட இந்தக் கத்தரிக்காய் விதை உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை பெருமளவு நிலப்பரப்பில் விதைக்கப்பட்டு நேரடியாக சோதிக்கப்படவே இல்லை என்பதுதான்.
மரபணு மாற்றப்பட்ட பருத்தியாவது பரவாயில்லை. கத்தரிக்காய் என்பது நேரிடையாக மக்களால் உணவாகச் சாப்பிடப்படுவது. இதில் நச்சுக்கலப்பு இருந்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், அமெரிக்காவிலும் ஏனைய மேலைநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்கள் விவசாயத்துக்காக இருக்கும்போது, மரபணுப் பரிசோதனைகளை அங்கே நடத்தாமல் இந்தியா போன்ற ஏமாளி நாடுகளில் நடத்தி, நம்மைப் பரிசோதனைக் களமாக்குவதன் ராஜதந்திரம், சிறந்த அரசியல் ராஜதந்திரியான சரத் பவாருக்கு ஏன் தெரியவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.
இதே பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கி சாகுபடி செய்து, சாகுபடி பொய்த்ததால் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட இந்திய விவசாயிகள் எண்ணிக்கை சில ஆயிரம். அவர்களுக்கு இந்த நிறுவனம் எந்த நஷ்டஈட்டையும் அளித்ததாகத் தகவலே கிடையாது. ஆலைகளில் இந்தப் பருத்தியைக் கையாண்ட தொழிலாளர்களுக்கு ஒருவித அரிப்பும், இதர உடல் உபாதைகளும் ஏற்பட்டது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பசுமைப்புரட்சியை இந்த நாட்டில் கொண்டு வந்தபோது மிகவும் பெருமிதம் கொண்ட நமக்கு அதன் தீமைகள் புரிய பல ஆண்டுகள் பிடித்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மரபணு மாற்றிய கத்தரிக்காயைப் பன்னாட்டு நிறுவனம்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் நோக்கம் இந்தியர்கள் கத்தரிச் சாகுபடியில் அமோக லாபம் சம்பாதிக்க வேண்டும், பூச்சி அரிக்காத காய்கறிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும், ஓர் ஏக்கருக்கு இப்போது கிடைப்பதைவிட 3 மடங்கு 5 மடங்கு என்று கத்தரிக்காய் விளைய வேண்டும் என்பதெல்லாம் அல்ல. இவையெல்லாம் வியாபார உத்திக்காகக் கூறப்பட்டாலும் நம்முடைய பாரம்பரிய கத்தரிக்காய் ரகங்களைப் புழக்கத்திலிருந்து அகற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதன் பிறகு கத்தரிக்காய் என்றாலே நாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரித்துத்தரும் ரகத்தைத்தான் வாங்க வேண்டியிருக்கும். அப்போது அதற்குத் தரும் விலையும் அமோகமாக இருக்கும்.
அதைவிடுங்கள், அதனால் நிலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய கெடுதல்களை எப்படி முன்கூட்டியே அனுமானிப்பது? நாம் காரணம் இல்லாமலேயே சந்தேகப்படும் பத்தாம்பசலிகளாகவே கூட இருந்து தொலைப்போம், நாளை இதனால் கெடு விளைவுகள் ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றப் போவது யார்? போபாலில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரையும் வாழ்வையும் உறிஞ்சிய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனம் இன்று எங்கே? அதன் தலைவராக இருந்த ஆண்டர்சன் எங்கே? அவரைக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்த மன்மோகன் அரசு எடுத்த தீவிர முயற்சிகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் இப்போதும் முழுமையான நஷ்டஈடு கிடைக்காமல் தவிக்கிறார்களே, அவர்களுக்கு விடிவுதான் என்ன?
நாளை மரபணு கத்தரிக்காயால் அப்படியொரு கெடு பலன் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பிணை நிற்கப் போவது யார்? இந்தியாவில் அணு மின் நிலையம் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நேரிட்டால் மிகவும் குறைந்தபட்ச நஷ்ட ஈடு தந்தாலே போதும், வேறு எந்த ஜாமீனும் தேவையில்லை என்று ஒப்பந்தம் தயாரிக்கும் இந்த தேசபக்தர்களை நம்பியா நம் நாட்டு நிலங்களை புதிய மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு ஒப்படைப்பது?
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே கெல்லி எறிய தண்டியிலே ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்தார் அண்ணல் மகாத்மா காந்தி. நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா? என் செய்வது, ஐநூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பதற்குத்தான் வோட்டு என்றாகிவிட்ட பிறகு, விலைபேசுவது நம் நாட்டு சரத் பவாராக இருந்தால் என்ன, அமெரிக்க ஆண்டர்சனாக இருந்தால்தான் என்ன?
நன்றி : தினமணி
தேசியவாத காங்கிரஸ் என்ற தோழமைக் கட்சியின் தனிப்பெரும் தலைவர் சரத் பவார். அவருடைய சமீபகால அரசியல் நடவடிக்கைகள், மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள், நலன் சாராது கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அதிபர்கள், சர்க்கரை மொத்த வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் நலன் சார்ந்து இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு சாகுபடியாளர்களுக்குக் கட்டுபடியாகும் கொள்முதல் விலையை வாங்கித் தருவதில் அதிக ஆர்வம் காட்டாத சரத் பவார், இறக்குமதி கோதுமைக்குக் கூடுதல் விலை தருவதற்குத் தயக்கம் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து கோதுமை உற்பத்தியாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.
இதையெல்லாம் கூறக் காரணம், மரபணு மாற்றப்பட்ட கத்தரி விஷயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது என்று கூறி, இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கப்பட காரணமாக அவர் இருந்துவிடுவாரோ என்கிற அச்சம்தான். நல்லவேளை ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு அவருக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்.
பி.டி. கத்தரிக்காய் விதைகளை "மேகோ' (மகாராஷ்டிர உயர்விளைச்சல் விதை நிறுவனம்) என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்க பி.டி. நிறுவனம் தான் மகாராஷ்டிரத்தில் இப்படி ஒரு புதிய பெயரில் சில இந்தியர்களை முன்னிலைப்படுத்தி ஓர் இந்திய நிறுவனம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மரபணு மாற்றப்பட்ட இந்தக் கத்தரிக்காய் விதை உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை பெருமளவு நிலப்பரப்பில் விதைக்கப்பட்டு நேரடியாக சோதிக்கப்படவே இல்லை என்பதுதான்.
மரபணு மாற்றப்பட்ட பருத்தியாவது பரவாயில்லை. கத்தரிக்காய் என்பது நேரிடையாக மக்களால் உணவாகச் சாப்பிடப்படுவது. இதில் நச்சுக்கலப்பு இருந்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், அமெரிக்காவிலும் ஏனைய மேலைநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்கள் விவசாயத்துக்காக இருக்கும்போது, மரபணுப் பரிசோதனைகளை அங்கே நடத்தாமல் இந்தியா போன்ற ஏமாளி நாடுகளில் நடத்தி, நம்மைப் பரிசோதனைக் களமாக்குவதன் ராஜதந்திரம், சிறந்த அரசியல் ராஜதந்திரியான சரத் பவாருக்கு ஏன் தெரியவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.
இதே பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கி சாகுபடி செய்து, சாகுபடி பொய்த்ததால் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட இந்திய விவசாயிகள் எண்ணிக்கை சில ஆயிரம். அவர்களுக்கு இந்த நிறுவனம் எந்த நஷ்டஈட்டையும் அளித்ததாகத் தகவலே கிடையாது. ஆலைகளில் இந்தப் பருத்தியைக் கையாண்ட தொழிலாளர்களுக்கு ஒருவித அரிப்பும், இதர உடல் உபாதைகளும் ஏற்பட்டது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பசுமைப்புரட்சியை இந்த நாட்டில் கொண்டு வந்தபோது மிகவும் பெருமிதம் கொண்ட நமக்கு அதன் தீமைகள் புரிய பல ஆண்டுகள் பிடித்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மரபணு மாற்றிய கத்தரிக்காயைப் பன்னாட்டு நிறுவனம்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் நோக்கம் இந்தியர்கள் கத்தரிச் சாகுபடியில் அமோக லாபம் சம்பாதிக்க வேண்டும், பூச்சி அரிக்காத காய்கறிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும், ஓர் ஏக்கருக்கு இப்போது கிடைப்பதைவிட 3 மடங்கு 5 மடங்கு என்று கத்தரிக்காய் விளைய வேண்டும் என்பதெல்லாம் அல்ல. இவையெல்லாம் வியாபார உத்திக்காகக் கூறப்பட்டாலும் நம்முடைய பாரம்பரிய கத்தரிக்காய் ரகங்களைப் புழக்கத்திலிருந்து அகற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதன் பிறகு கத்தரிக்காய் என்றாலே நாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரித்துத்தரும் ரகத்தைத்தான் வாங்க வேண்டியிருக்கும். அப்போது அதற்குத் தரும் விலையும் அமோகமாக இருக்கும்.
அதைவிடுங்கள், அதனால் நிலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய கெடுதல்களை எப்படி முன்கூட்டியே அனுமானிப்பது? நாம் காரணம் இல்லாமலேயே சந்தேகப்படும் பத்தாம்பசலிகளாகவே கூட இருந்து தொலைப்போம், நாளை இதனால் கெடு விளைவுகள் ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றப் போவது யார்? போபாலில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரையும் வாழ்வையும் உறிஞ்சிய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனம் இன்று எங்கே? அதன் தலைவராக இருந்த ஆண்டர்சன் எங்கே? அவரைக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்த மன்மோகன் அரசு எடுத்த தீவிர முயற்சிகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் இப்போதும் முழுமையான நஷ்டஈடு கிடைக்காமல் தவிக்கிறார்களே, அவர்களுக்கு விடிவுதான் என்ன?
நாளை மரபணு கத்தரிக்காயால் அப்படியொரு கெடு பலன் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பிணை நிற்கப் போவது யார்? இந்தியாவில் அணு மின் நிலையம் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நேரிட்டால் மிகவும் குறைந்தபட்ச நஷ்ட ஈடு தந்தாலே போதும், வேறு எந்த ஜாமீனும் தேவையில்லை என்று ஒப்பந்தம் தயாரிக்கும் இந்த தேசபக்தர்களை நம்பியா நம் நாட்டு நிலங்களை புதிய மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு ஒப்படைப்பது?
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே கெல்லி எறிய தண்டியிலே ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்தார் அண்ணல் மகாத்மா காந்தி. நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா? என் செய்வது, ஐநூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பதற்குத்தான் வோட்டு என்றாகிவிட்ட பிறகு, விலைபேசுவது நம் நாட்டு சரத் பவாராக இருந்தால் என்ன, அமெரிக்க ஆண்டர்சனாக இருந்தால்தான் என்ன?
நன்றி : தினமணி
Labels:
அமெரிக்கா,
இந்தியாஅரசு,
தலையங்கம்,
விவசாயம்
Monday, January 18, 2010
அமெரிக்காவில் மேலும் 4 வங்கிகள் மூடல்
அமெரிக்கா, பொருளாதார சரிவில் இருந்து மீட்டு வந்தாலும், அதன் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அங்கு வங்கிகள் மூடும் நிலை தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அமெரிக்க வங்கித் துறையில் 4 வங்கிகள் திவாலாகி உள்ளன. ஜனவரி 15ம் தேதி அன்று மட்டும் பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி, செயின்ட் ஸ்டீபன் வங்கி, டவுன் கம்யூனிட்டி வங்கி உள்ளிட்ட மூன்று வங்கிகள் மூடப் பட்டன. கடந்த வாரம் வாஷிங்டனைச் சேர்ந்த ஹாரிசன் வங்கி திவாலானது. இந்த ஆண்டின் தொடக்க மாதத்திலேயே நான்கு வங்கிகள் திவாலாகியுள்ளது அமெரிக்க வங்கித் துறையைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.நன்றி : தினமலர்
Saturday, January 16, 2010
புத்தொளி பாய்ச்சிய புனிதர்!
ஜாதியிலே, மதங்களிலே, சாத்திரச் சண்டைகளிலே அகப்பட்டு, புகழ் மங்கிக்கிடந்த இந்தியத் திருநாட்டின் நிலையை மாற்ற - அதன் உயர்வை உலகுக்குப் பறைசாற்றத் தோன்றிய பெருந்தகை சுவாமி விவேகானந்தர். அவர் இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள தொண்டு அளப்பரியதாகும்.
விவேகானந்தரைச் சான்றோனாக, துறவியாக, நாவலனாக, தத்துவ ஞானியாக, சீர்திருத்தச் செம்மலாகக் காண்பர் பலர். இவை அனைத்துக்கும் மேலான ஒரு பரிமாணம் அவருக்கு உண்டு. ஊக்கமின்றி, உள்ள உரமிழந்து அன்னியருக்கு அடிமைகளாக வாழ்ந்த இந்தியர் நெஞ்சில் புத்தொளி பாய்ச்சியவர் அவர். முடைநாற்றம் வீசும் மூடப்பழக்கங்களையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு, ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைந்த இந்நாட்டு மக்களுக்கு அறிவு நெறி காட்டியவர்.
தன்னம்பிக்கையும், அச்சமின்மையுமே அவர் சொல்லிலும், செயலிலும் உயிர் நாதமாகத் திகழ்ந்தன. ""பண்டைய மதங்கள் கடவுளின் மீது நம்பிக்கையற்றவனை "நாத்திகன்' என்றன. ஆனால் புதிய மதமோ எவனொருவனுக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லையோ அவனையே நாத்திகன் என அழைக்கிறது'' (சுவாமி விவேகானந்தரின் எழுத்தும் பேச்சும் தொகுதி: 2 பக்.301) எனப் புதிய சித்தாந்தம் ஒன்றை அவர் வலியுறுத்தினார். வலிமையே வாழ்வெனவும், வலியின்மை மரணமெனவும் முழங்கினார். ""மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம் அச்சமின்மை'' (தொகுதி: பக்.160) என வலியுறுத்தினார். உபநிஷதங்களிலிருந்து வெளிப்படும் கருத்து இதுவே என்றார். மக்களிடையே இருந்த அச்சம் எனும் பிணியைக் கண்டதோடல்லாமல், அந்நோயின் மூலத்தையும் தெளிவுற அறிந்திருந்தார்.
அறியாமை! தன்வலி புரியாமையால் விளைந்த அறியாமை; எல்லாவற்றையும் செய்யக் கூடிய ஆற்றலின் ஊற்று நம்முள்ளே சுரந்துகொண்டிருக்க, அறியாமையால் அதை அறியாதிருத்தல் பேதைமை எனவும், ""முடியாது, என்னால் இயலாது என்று மட்டும் சொல்லாதீர்கள். நீங்கள் எல்லையற்றவர்கள். காலமும், இடமும் கூட உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை. நீங்கள் எதையும் செய்ய முடியும். எல்லாம் வல்லவர் நீங்கள்'' (பக்.300) எனவும் கூறினார்.
தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப்பின், இந்திய நாட்டின் உண்மை நிலை அறிய, இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார் விவேகானந்தர். நாட்டில் பரவிக்கிடந்த வறுமையையும், அதனால் மக்களுற்ற இன்னல்களையும் கண்டு கலங்கினார் அவர். ""பசித்த மானிடனுக்கு மதத்தைப் போதிப்பது பயனற்றது'' எனத் தனது குருநாதரின் மொழியை அனுபவத்தால் உணர்ந்தார் சுவாமி விவேகானந்தர். வறியவரோடு வறியவராக அப்பயணத்தின் போது அவர் வாழ்ந்தார்.
விவேகானந்தர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, செல்வந்தர்கள் பலர் பணம் தர முன்வந்தனர். ஆனால் விவேகானந்தர், தன் அன்பர்களை நடுத்தர மக்களிடம் சென்று பொருள் வேண்டச் சொன்னார். தான் நடுத்தர ஏழை மக்களின் பிரதிநிதியாகவே அமெரிக்கா செல்ல விரும்புவதாகப் பெருமையுடன் சொன்னார்!
""இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை'' என்னும் குறள் வரியின் இலக்கணமாகவே அவர் வாழ்வு அமைந்திருந்தது. அவர் எளிய வாழ்க்கை முறையையும், உண்மைத் துறவு நிலையையும் அவர் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும். குறிப்பாக, இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இறுதியாகக் குமரிமுனையை அடைந்த விவேகானந்தர், கடலில் இருந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய விழைந்தார். ஆனால், படகேறிச்செல்ல அவரிடம் பணம் இல்லை. சுறா மீன்கள் நிரம்ப உள்ள குமரிக்கடலில் குதித்து, நீந்திப் பாறையை அடைந்து, தியானம் மேற்கொண்டார்.
அயல் நாடுகளில் விவேகானந்தரின் நாவன்மையையும், உள்ளத்திண்மையையும், மனத்தன்மையையும், மதி நுட்பத்தையும் கண்டு வியந்தோர் பலர். 1893-ம் ஆண்டு சிகாகோவில் அனைத்துலக சமயப் பெருமன்றத்தில் விவேகானந்தர் ஆற்றிய, கேட்போர் பிணிக்குந்தன்மை வாய்ந்த உரை இந்தியாவின் புகழை உலகறியச் செய்தது. அப் பெருமன்றத்தில் விவேகானந்தர் உரையாற்றிய பாங்கையும், தன் நாநலத்தால் மக்களை அவர் கவர்ந்த விதத்தையும் பிரஞ்சு நாட்டு அறிஞர் ரோமென்ரோலந்து தான் எழுதிய, "விவேகானந்தரின் வாழ்க்கை' என்ற நூலில் சிறப்புடன் விளக்கியுள்ளார்.
""யாரும் அறியாத அம் முப்பது வயது இளந்துறவி, கார்டின் கிப்பன்ஸôல் சிகாகோவில் 1893-ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்ட அனைத்துலகச் சமயப் பெருமன்றத்தில் புகுந்தபோது, அவரின் கம்பீரத் தோற்றம் உடனிருந்தோரை மெய்மறக்கச் செய்தது. அவர் வலிவும், பொலிவும், கருவிழிகளும், தோற்றமிடுக்கும், சொற்பொழிவைத் துவக்கியவுடன் நல்லிசையென ஒலித்த அவர்தம் குரலும், அவர் நிறம் கண்டு அவர் மீது முன்பு வேற்றுமை மனப்பான்மை கொண்டிருந்த அமெரிக்க, ஐரோப்பிய மக்களையும் கவர்ந்திழுத்தன. அப்போர்க்குணம் கொண்ட இந்தியத் துறவி அமெரிக்காவில் தன் ஆழ்ந்த முத்திரையைப் பதித்துச் சென்றார்'' (பக்.5).
இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தான் கூறவந்த கருத்துகளை எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி வெளிப்படுத்தினார். தன் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்கச் சிந்தனையாளர் இங்கர்சாலை சந்தித்தார் விவேகானந்தர். அவர் விவேகானந்தரின் அச்சமற்ற போக்கையும், அந்நாளிலான அமெரிக்காவின் நிலைமையையும் மனதில் கொண்டு, ""ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்நாட்டுக்கு வந்து போதித்திருப்பீர்களாயின், உங்களை தூக்கிலோ, தீயிலோ இட்டிருப்பர் இந்நாட்டவர்'' என்றார் (தொகுதி:2 பக்.27).
மதத்துக்கும், மானுடத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு உணர்ந்திருந்தார் விவேகானந்தர். ஆன்மிகத்துக்கும் நடைமுறை வாழ்வுக்கும் இடைவெளி ஏதும் இல்லை என்பதை தம் சொற்பொழிவுகள் மூலம் நிறுவினார். இக்கருத்தை அறுதியிடும் வண்ணம், "செயல்முறை வேதாந்தம்' என்னும் கோட்பாட்டைக் கண்டார். ஆன்மிகம் என்பது வாழும் நெறி; அது வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவோர் சென்றடையும் கூடாரமன்று என்பது அவர் கருத்து. இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று நமக்கு உணர்த்தும்.
ஒருமுறை விவேகானந்தரைக் காண முதுநிலைப் பட்டப்படிப்புப் பயின்று வந்த மாணவன் ஒருவன் வந்தான். அவன் துறவு பூண விவேகானந்தரின் கட்டளையை வேண்டி நின்றான். அம் மாணவன் துறவு பூணக்காரணம், அவன் படித்துக் கொண்டிருந்த முதுநிலைப் பட்டப்படிப்பு சிரமமாக இருந்ததுதான் என்பதைக் கண்டறிந்த விவேகானந்தர், முதுநிலைப் படிப்பைக் காட்டிலும் துறவு வாழ்க்கை கடினமானது என நயம்படக் கூறி, அம் மாணவனுக்கு உண்மையை உணர்த்தினார்.
மதத்தின் மீதுள்ள பற்று மதவெறியாக உருவெடுப்பதைக் கடிந்தவர் விவேகானந்தர். மதவெறியே மதநெறியாகப் போற்றிக் கொள்ளப்படும் இந்நாளில், விவேகானந்தரின் பணிச்சிறப்பும், பேச்சும் முக்கியத்துவம் பெறுகின்றன; பெரிதும் வேண்டப்படுகின்றன. மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பியதும் மதுரையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுப் பேசுகையில், மதவெறிக்கு ஆட்படாமல் இருக்குமாறு மக்களை வேண்டினார்.
""தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது. இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது. ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி, கொள்கை வெறியை வளர்க்கிறது; சில நேரங்களில் அவ்வெறி, எல்லை கடந்தும் போய்விடுகிறது. மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்களுக்குக் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' (தொகுதி:3 பக்.172) எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் உரை நிகழ்த்தும்போதும், மதவெறியை வன்மையாக அவர் கண்டித்தார். "உலகளாவிய மதம்' எனும் தலைப்பில் 1900-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உரை நிகழ்த்துகையில், ""உலகில் உள்ள நோய்கள் யாவினும் மிகக் கொடிய நோய் மதவெறி எனும் நோயே'' என்றார்.
விவேகானந்தரின் செயலிலும் பேச்சிலும் பிற மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு எப்போதும் இருந்ததில்லை. உலக மதங்கள் யாவும் தமக்குள் இருக்கும் பிணக்குகளைத் துறந்து உலகளாவிய தன்மை எய்த வேண்டும் என விழைந்தார் விவேகானந்தர். ""மதங்கள் யாவும் பரந்த நோக்குடையனவே. பல மதங்களைப் போதித்து வரும் மதவாதிகள் அவர்தம் பணிகளைச் சற்று நிறுத்தினால், நாம் இவ்வுண்மையை நொடிப்பொழுதில் உணரலாம்'' (தொகுதி: 2 பக்.367)
ஜாதியின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுந்தவர் விவேகானந்தர். மேல் வகுப்பினருக்கு ஒரு நீதி; கீழ் வகுப்பினருக்கு ஒரு நீதி என்று சமுதாயத்தில் அமைந்துள்ள வேறுபாடு சாத்திரத்தால் விளைந்ததன்று; சதியால் நேர்ந்தது என முரசறைந்தார். ""சாதி வெறி பிடித்தோரும் ஒரு சில மதவாதிகளும் இந்நாட்டினை இழிநிலைக்குத் தள்ளிவிட்டனர்'' (தொகுதி: 6 பக்.317) என வேதனைப்பட்டார்.
இந்தியா உயர வேண்டுமெனில் இந்தியர் ஜாதிப் பித்தைத் தவிர்த்து பேதமற்ற உயர் நெறி போற்றி ஒழுகுதல் அவசியம் என விரும்பினார். இந்து சமயத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் ஜாதி-மதவெறியை வளர்ப்போரைக் கடுமையாக எதிர்த்தார் விவேகானந்தர். ""உங்கள் சமயம் மகத்தானது, ஆனால் அதன் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் அவர்களை மடமைக்கு ஆட்படுத்துகின்றீர். வற்றாத சுனை பொங்கிக் கொண்டிருக்க, மக்களைச் சாக்கடை நீரைப் பருகச் செய்கின்றீர்'' (தொகுதி: 5 பக்.223) என வேதனையுடன் குறிப்பிட்டார்.
விவேகானந்தர் விசாலப் பார்வையால் உலகை விழுங்கியவர். அறிவின்பாற்பட்டதே சமயம் என நிறுவியவர். "தன்னிற் பிறிதில்லை தெய்வம்' எனத் தன்னம்பிக்கையை வளர்த்தவர். அவர் கருத்துகள் புதியதோர் உலகம் காண நம்மை ஊக்குவன. அவர் மண்ணுலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான் என்றாலும் அவர் மூட்டிய கனல், அணையா விளக்கென ஒளிர்விடும் என நம்பிக்கை அவருக்கு இருந்தது. ""ஒரு விவேகானந்தர் என்ன, காலப்போக்கில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்'' என்பது அவரது நம்பிக்கை.
அந்த நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றப்படும் பெரும் பொறுப்பு நமது இளைய தலைமுறைக்கு உண்டு.
கட்டுரையாளர்:ப.சேரலாதன்
நன்றி : தினமணி
விவேகானந்தரைச் சான்றோனாக, துறவியாக, நாவலனாக, தத்துவ ஞானியாக, சீர்திருத்தச் செம்மலாகக் காண்பர் பலர். இவை அனைத்துக்கும் மேலான ஒரு பரிமாணம் அவருக்கு உண்டு. ஊக்கமின்றி, உள்ள உரமிழந்து அன்னியருக்கு அடிமைகளாக வாழ்ந்த இந்தியர் நெஞ்சில் புத்தொளி பாய்ச்சியவர் அவர். முடைநாற்றம் வீசும் மூடப்பழக்கங்களையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு, ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைந்த இந்நாட்டு மக்களுக்கு அறிவு நெறி காட்டியவர்.
தன்னம்பிக்கையும், அச்சமின்மையுமே அவர் சொல்லிலும், செயலிலும் உயிர் நாதமாகத் திகழ்ந்தன. ""பண்டைய மதங்கள் கடவுளின் மீது நம்பிக்கையற்றவனை "நாத்திகன்' என்றன. ஆனால் புதிய மதமோ எவனொருவனுக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லையோ அவனையே நாத்திகன் என அழைக்கிறது'' (சுவாமி விவேகானந்தரின் எழுத்தும் பேச்சும் தொகுதி: 2 பக்.301) எனப் புதிய சித்தாந்தம் ஒன்றை அவர் வலியுறுத்தினார். வலிமையே வாழ்வெனவும், வலியின்மை மரணமெனவும் முழங்கினார். ""மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம் அச்சமின்மை'' (தொகுதி: பக்.160) என வலியுறுத்தினார். உபநிஷதங்களிலிருந்து வெளிப்படும் கருத்து இதுவே என்றார். மக்களிடையே இருந்த அச்சம் எனும் பிணியைக் கண்டதோடல்லாமல், அந்நோயின் மூலத்தையும் தெளிவுற அறிந்திருந்தார்.
அறியாமை! தன்வலி புரியாமையால் விளைந்த அறியாமை; எல்லாவற்றையும் செய்யக் கூடிய ஆற்றலின் ஊற்று நம்முள்ளே சுரந்துகொண்டிருக்க, அறியாமையால் அதை அறியாதிருத்தல் பேதைமை எனவும், ""முடியாது, என்னால் இயலாது என்று மட்டும் சொல்லாதீர்கள். நீங்கள் எல்லையற்றவர்கள். காலமும், இடமும் கூட உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை. நீங்கள் எதையும் செய்ய முடியும். எல்லாம் வல்லவர் நீங்கள்'' (பக்.300) எனவும் கூறினார்.
தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப்பின், இந்திய நாட்டின் உண்மை நிலை அறிய, இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார் விவேகானந்தர். நாட்டில் பரவிக்கிடந்த வறுமையையும், அதனால் மக்களுற்ற இன்னல்களையும் கண்டு கலங்கினார் அவர். ""பசித்த மானிடனுக்கு மதத்தைப் போதிப்பது பயனற்றது'' எனத் தனது குருநாதரின் மொழியை அனுபவத்தால் உணர்ந்தார் சுவாமி விவேகானந்தர். வறியவரோடு வறியவராக அப்பயணத்தின் போது அவர் வாழ்ந்தார்.
விவேகானந்தர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, செல்வந்தர்கள் பலர் பணம் தர முன்வந்தனர். ஆனால் விவேகானந்தர், தன் அன்பர்களை நடுத்தர மக்களிடம் சென்று பொருள் வேண்டச் சொன்னார். தான் நடுத்தர ஏழை மக்களின் பிரதிநிதியாகவே அமெரிக்கா செல்ல விரும்புவதாகப் பெருமையுடன் சொன்னார்!
""இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை'' என்னும் குறள் வரியின் இலக்கணமாகவே அவர் வாழ்வு அமைந்திருந்தது. அவர் எளிய வாழ்க்கை முறையையும், உண்மைத் துறவு நிலையையும் அவர் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும். குறிப்பாக, இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இறுதியாகக் குமரிமுனையை அடைந்த விவேகானந்தர், கடலில் இருந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய விழைந்தார். ஆனால், படகேறிச்செல்ல அவரிடம் பணம் இல்லை. சுறா மீன்கள் நிரம்ப உள்ள குமரிக்கடலில் குதித்து, நீந்திப் பாறையை அடைந்து, தியானம் மேற்கொண்டார்.
அயல் நாடுகளில் விவேகானந்தரின் நாவன்மையையும், உள்ளத்திண்மையையும், மனத்தன்மையையும், மதி நுட்பத்தையும் கண்டு வியந்தோர் பலர். 1893-ம் ஆண்டு சிகாகோவில் அனைத்துலக சமயப் பெருமன்றத்தில் விவேகானந்தர் ஆற்றிய, கேட்போர் பிணிக்குந்தன்மை வாய்ந்த உரை இந்தியாவின் புகழை உலகறியச் செய்தது. அப் பெருமன்றத்தில் விவேகானந்தர் உரையாற்றிய பாங்கையும், தன் நாநலத்தால் மக்களை அவர் கவர்ந்த விதத்தையும் பிரஞ்சு நாட்டு அறிஞர் ரோமென்ரோலந்து தான் எழுதிய, "விவேகானந்தரின் வாழ்க்கை' என்ற நூலில் சிறப்புடன் விளக்கியுள்ளார்.
""யாரும் அறியாத அம் முப்பது வயது இளந்துறவி, கார்டின் கிப்பன்ஸôல் சிகாகோவில் 1893-ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்ட அனைத்துலகச் சமயப் பெருமன்றத்தில் புகுந்தபோது, அவரின் கம்பீரத் தோற்றம் உடனிருந்தோரை மெய்மறக்கச் செய்தது. அவர் வலிவும், பொலிவும், கருவிழிகளும், தோற்றமிடுக்கும், சொற்பொழிவைத் துவக்கியவுடன் நல்லிசையென ஒலித்த அவர்தம் குரலும், அவர் நிறம் கண்டு அவர் மீது முன்பு வேற்றுமை மனப்பான்மை கொண்டிருந்த அமெரிக்க, ஐரோப்பிய மக்களையும் கவர்ந்திழுத்தன. அப்போர்க்குணம் கொண்ட இந்தியத் துறவி அமெரிக்காவில் தன் ஆழ்ந்த முத்திரையைப் பதித்துச் சென்றார்'' (பக்.5).
இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தான் கூறவந்த கருத்துகளை எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி வெளிப்படுத்தினார். தன் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்கச் சிந்தனையாளர் இங்கர்சாலை சந்தித்தார் விவேகானந்தர். அவர் விவேகானந்தரின் அச்சமற்ற போக்கையும், அந்நாளிலான அமெரிக்காவின் நிலைமையையும் மனதில் கொண்டு, ""ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்நாட்டுக்கு வந்து போதித்திருப்பீர்களாயின், உங்களை தூக்கிலோ, தீயிலோ இட்டிருப்பர் இந்நாட்டவர்'' என்றார் (தொகுதி:2 பக்.27).
மதத்துக்கும், மானுடத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு உணர்ந்திருந்தார் விவேகானந்தர். ஆன்மிகத்துக்கும் நடைமுறை வாழ்வுக்கும் இடைவெளி ஏதும் இல்லை என்பதை தம் சொற்பொழிவுகள் மூலம் நிறுவினார். இக்கருத்தை அறுதியிடும் வண்ணம், "செயல்முறை வேதாந்தம்' என்னும் கோட்பாட்டைக் கண்டார். ஆன்மிகம் என்பது வாழும் நெறி; அது வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவோர் சென்றடையும் கூடாரமன்று என்பது அவர் கருத்து. இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று நமக்கு உணர்த்தும்.
ஒருமுறை விவேகானந்தரைக் காண முதுநிலைப் பட்டப்படிப்புப் பயின்று வந்த மாணவன் ஒருவன் வந்தான். அவன் துறவு பூண விவேகானந்தரின் கட்டளையை வேண்டி நின்றான். அம் மாணவன் துறவு பூணக்காரணம், அவன் படித்துக் கொண்டிருந்த முதுநிலைப் பட்டப்படிப்பு சிரமமாக இருந்ததுதான் என்பதைக் கண்டறிந்த விவேகானந்தர், முதுநிலைப் படிப்பைக் காட்டிலும் துறவு வாழ்க்கை கடினமானது என நயம்படக் கூறி, அம் மாணவனுக்கு உண்மையை உணர்த்தினார்.
மதத்தின் மீதுள்ள பற்று மதவெறியாக உருவெடுப்பதைக் கடிந்தவர் விவேகானந்தர். மதவெறியே மதநெறியாகப் போற்றிக் கொள்ளப்படும் இந்நாளில், விவேகானந்தரின் பணிச்சிறப்பும், பேச்சும் முக்கியத்துவம் பெறுகின்றன; பெரிதும் வேண்டப்படுகின்றன. மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பியதும் மதுரையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுப் பேசுகையில், மதவெறிக்கு ஆட்படாமல் இருக்குமாறு மக்களை வேண்டினார்.
""தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது. இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது. ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி, கொள்கை வெறியை வளர்க்கிறது; சில நேரங்களில் அவ்வெறி, எல்லை கடந்தும் போய்விடுகிறது. மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்களுக்குக் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' (தொகுதி:3 பக்.172) எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் உரை நிகழ்த்தும்போதும், மதவெறியை வன்மையாக அவர் கண்டித்தார். "உலகளாவிய மதம்' எனும் தலைப்பில் 1900-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உரை நிகழ்த்துகையில், ""உலகில் உள்ள நோய்கள் யாவினும் மிகக் கொடிய நோய் மதவெறி எனும் நோயே'' என்றார்.
விவேகானந்தரின் செயலிலும் பேச்சிலும் பிற மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு எப்போதும் இருந்ததில்லை. உலக மதங்கள் யாவும் தமக்குள் இருக்கும் பிணக்குகளைத் துறந்து உலகளாவிய தன்மை எய்த வேண்டும் என விழைந்தார் விவேகானந்தர். ""மதங்கள் யாவும் பரந்த நோக்குடையனவே. பல மதங்களைப் போதித்து வரும் மதவாதிகள் அவர்தம் பணிகளைச் சற்று நிறுத்தினால், நாம் இவ்வுண்மையை நொடிப்பொழுதில் உணரலாம்'' (தொகுதி: 2 பக்.367)
ஜாதியின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுந்தவர் விவேகானந்தர். மேல் வகுப்பினருக்கு ஒரு நீதி; கீழ் வகுப்பினருக்கு ஒரு நீதி என்று சமுதாயத்தில் அமைந்துள்ள வேறுபாடு சாத்திரத்தால் விளைந்ததன்று; சதியால் நேர்ந்தது என முரசறைந்தார். ""சாதி வெறி பிடித்தோரும் ஒரு சில மதவாதிகளும் இந்நாட்டினை இழிநிலைக்குத் தள்ளிவிட்டனர்'' (தொகுதி: 6 பக்.317) என வேதனைப்பட்டார்.
இந்தியா உயர வேண்டுமெனில் இந்தியர் ஜாதிப் பித்தைத் தவிர்த்து பேதமற்ற உயர் நெறி போற்றி ஒழுகுதல் அவசியம் என விரும்பினார். இந்து சமயத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் ஜாதி-மதவெறியை வளர்ப்போரைக் கடுமையாக எதிர்த்தார் விவேகானந்தர். ""உங்கள் சமயம் மகத்தானது, ஆனால் அதன் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் அவர்களை மடமைக்கு ஆட்படுத்துகின்றீர். வற்றாத சுனை பொங்கிக் கொண்டிருக்க, மக்களைச் சாக்கடை நீரைப் பருகச் செய்கின்றீர்'' (தொகுதி: 5 பக்.223) என வேதனையுடன் குறிப்பிட்டார்.
விவேகானந்தர் விசாலப் பார்வையால் உலகை விழுங்கியவர். அறிவின்பாற்பட்டதே சமயம் என நிறுவியவர். "தன்னிற் பிறிதில்லை தெய்வம்' எனத் தன்னம்பிக்கையை வளர்த்தவர். அவர் கருத்துகள் புதியதோர் உலகம் காண நம்மை ஊக்குவன. அவர் மண்ணுலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான் என்றாலும் அவர் மூட்டிய கனல், அணையா விளக்கென ஒளிர்விடும் என நம்பிக்கை அவருக்கு இருந்தது. ""ஒரு விவேகானந்தர் என்ன, காலப்போக்கில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்'' என்பது அவரது நம்பிக்கை.
அந்த நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றப்படும் பெரும் பொறுப்பு நமது இளைய தலைமுறைக்கு உண்டு.
கட்டுரையாளர்:ப.சேரலாதன்
நன்றி : தினமணி
Monday, December 21, 2009
காத்திருக்கும் புதைகுழி
வரலாறு என்பது திட்டமிட்டு நிகழக்கூடியதல்ல. சொல்லப்போனால், மிகச் சாதாரணமான அபத்தமான முடிவுகள்தான் பெரும்பாலான சரித்திர நிகழ்வுகளை உருவாக்கி இருக்கின்றன. சமீபத்தில் நடந்த இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்தியா சம்பந்தப்பட்டது. காரணம், அமெரிக்க வரலாற்றில் வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை அறிவிக்கும் முன் இந்தியப் பிரதமருடன் அந்நாட்டு அதிபர் உரையாடியிருப்பதைச் சாதாரண நிகழ்வாக நம்ம ôல் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஆப்கன் போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது}அதாவது}போரை மேலும் தீவிரப்படுத்துவது என்று வெள்ளை மாளிகை எடுத்திருக்கும் முடிவை இப்போது மதிப்பிடுவது கடினமானது. இதைத் தவிர்த்து, இப்போதைக்கு அமெரிக்காவுக்கு வேறு நல்ல தெரிவுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதேசமயம், இந்தப் போரில் அல்}காயிதா மற்றும் தாலிபன்களின் வலைப் பின்னல்களை அறுக்க நேசப் படைகள் பாகிஸ்தானுடன் கூட்டணி அமைத்தால் போதாது என்கிற முடிவுக்கு அமெரிக்கா வந்திருக்கிறது. ராணுவ நடவடிக்கைகளில், ஆளில்லா "காம்பட் ட்ரோன்' தாக்குதல் விமானங்களைப்போல இந்தியாவும் கை கோர்க்க வேண்டும் என்று அமெரிக்க வியூகவாதிகள் நினைக்கிறார்கள். இந்தப் பின்னணியிலேயே மன்மோகன் சிங்}ஒபாமா இடையேயான உரையாடல் நடந்தேறி இருக்கிறது.
உரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்க அறிவிப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது அமெரிக்காவின் வியூகத்தை நோக்கி இந்தியா நகரத் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. ஒருவேளை ஆப்கனுக்கு இந்தியப் படைகளை அனுப்ப நம் அரசு முடிவெடுத்தால், ராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் இந்தியா எடுக்கப்போகும் மிக மோசமான முடிவுகளில் ஒன்றாக அது அமையுயும். சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் கற்ற பாடங்களைவிடவும் மோசமான பாடங்களை இந்தியா எதிர்கொள்ள நேர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆப்கன் மீது 1979}ல் சோவியத் ஒன்றியம் போர் தொடுத்தது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் நீடித்த அந்தப் போரின் இறுதியில் வலுவான சோவியத் படைகள் தோல்வியைத் தழுவின. அப்புறம் 12 ஆண்டுகள் உள்நாட்டுப் போர். பிறகு, 2001 முதல் அமெரிக்கா அங்கு போரிட்டுக்கொண்டிருக்கிறது. ரஷியாவும் சரி, அமெரிக்காவும் சரி; ஆப்கனைப் பற்றி நினைத்தது வேறு; நடந்தது வேறு.
முன்னதாக, ஆங்கிலேயே}ஆப்கானியப் போர்களில் ஆங்கிலேயர்களுக்கும் இப்படித்தான் நேர்ந்தது. புவியியலைப்போலவே சிக்கலான சமூக இயக்கவியலைக் கொண்ட ஆப்கன் ""ஏன் இந்த நாட்டுக்குள் காலடி எடுத்துவைத்தோம்'' என்ற மோசமான அனுபவத்தையே படையெடுத்த நாடுகளுக்கெல்லாம் அளித்திருக்கிறது என்பது சரித்திரம் புகட்டும் பாடம்.
ஆங்கிலேயர்களும் ரஷியர்களும் தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். அமெரிக்கர்கள் முடிந்த வரை மோதிப் பார்க்க முடிவெடுத்திருக்கிறார்கள். அவ்வளவே.
இந்நிலையில், இந்தியப் படைகள் ஆப்கனுக்குள் நுழைவது இந்தியாவுக்குத் தேவையற்ற தலைவலியை உருவாக்கும். ஏதோ ஒரு காலை வேளையில் அமெரிக்க விமானங்கள் தன் துருப்புகளைச் சுமந்து பல்லாயிரம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் பறந்த பின்னர் இந்த வலியின் தீவிரத்தை இந்தியா உணர வேண்டியிருக்கும்.
கடந்த சில மாதங்களாகவே இந்திய எல்லைகளில் அதிகரித்துவரும் சீன அத்துமீறல்கள், இந்தியாவின் அண்டை நாடுகளில் நிறுவப்படும் ராணுவ முக்கியத்துவம் மிக்க சீனக் கட்டமைப்புகள் குறித்த செய்திகள் ஒருவிதமான அச்சத்தை உருவாக்கி வருகிறது. இதை எதிர்கொள்ள ""இந்தியா ராணுவ ரீதியிலான பலத்தைப் பெருக்க வேண்டும்; சீனாவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்'' என்ற குரல்கள் எழுவதையும் பார்க்கிறோம்.
ஆனால், இந்தியா எங்கு தன் பலத்தைப் பெருக்க வேண்டும் என்றால், முதலில் ராஜதந்திர வட்டாரத்தில்தான். கடந்த கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாக மிக மோசமான முடிவுகள் எடுக்கப்பட்ட துறை நமது வெளியுறவுத் துறையாகவே இருக்கும். ஆகையால், இந்தியர்கள் முதலில் தம் குரலை நம்முடைய வெளியுறவுக் கொள்கைக்காக எழுப்புவதே பொருத்தமாக இருக்கும். தற்போதைய தேவையும் அதுவே.
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக, அமெரிக்காவை நம்பி நாம் நமது தன்னம்பிக்கையையும், தனித்தன்மையையும் கைவிடுகிறோம் என்று அரசையும், குறிப்பாக, வெளியுறவுத் துறையையும் எச்சரிக்க விரும்புகிறோம்!
நன்றி : தினமணி
ஆப்கன் போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது}அதாவது}போரை மேலும் தீவிரப்படுத்துவது என்று வெள்ளை மாளிகை எடுத்திருக்கும் முடிவை இப்போது மதிப்பிடுவது கடினமானது. இதைத் தவிர்த்து, இப்போதைக்கு அமெரிக்காவுக்கு வேறு நல்ல தெரிவுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதேசமயம், இந்தப் போரில் அல்}காயிதா மற்றும் தாலிபன்களின் வலைப் பின்னல்களை அறுக்க நேசப் படைகள் பாகிஸ்தானுடன் கூட்டணி அமைத்தால் போதாது என்கிற முடிவுக்கு அமெரிக்கா வந்திருக்கிறது. ராணுவ நடவடிக்கைகளில், ஆளில்லா "காம்பட் ட்ரோன்' தாக்குதல் விமானங்களைப்போல இந்தியாவும் கை கோர்க்க வேண்டும் என்று அமெரிக்க வியூகவாதிகள் நினைக்கிறார்கள். இந்தப் பின்னணியிலேயே மன்மோகன் சிங்}ஒபாமா இடையேயான உரையாடல் நடந்தேறி இருக்கிறது.
உரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்க அறிவிப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது அமெரிக்காவின் வியூகத்தை நோக்கி இந்தியா நகரத் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. ஒருவேளை ஆப்கனுக்கு இந்தியப் படைகளை அனுப்ப நம் அரசு முடிவெடுத்தால், ராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் இந்தியா எடுக்கப்போகும் மிக மோசமான முடிவுகளில் ஒன்றாக அது அமையுயும். சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் கற்ற பாடங்களைவிடவும் மோசமான பாடங்களை இந்தியா எதிர்கொள்ள நேர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆப்கன் மீது 1979}ல் சோவியத் ஒன்றியம் போர் தொடுத்தது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் நீடித்த அந்தப் போரின் இறுதியில் வலுவான சோவியத் படைகள் தோல்வியைத் தழுவின. அப்புறம் 12 ஆண்டுகள் உள்நாட்டுப் போர். பிறகு, 2001 முதல் அமெரிக்கா அங்கு போரிட்டுக்கொண்டிருக்கிறது. ரஷியாவும் சரி, அமெரிக்காவும் சரி; ஆப்கனைப் பற்றி நினைத்தது வேறு; நடந்தது வேறு.
முன்னதாக, ஆங்கிலேயே}ஆப்கானியப் போர்களில் ஆங்கிலேயர்களுக்கும் இப்படித்தான் நேர்ந்தது. புவியியலைப்போலவே சிக்கலான சமூக இயக்கவியலைக் கொண்ட ஆப்கன் ""ஏன் இந்த நாட்டுக்குள் காலடி எடுத்துவைத்தோம்'' என்ற மோசமான அனுபவத்தையே படையெடுத்த நாடுகளுக்கெல்லாம் அளித்திருக்கிறது என்பது சரித்திரம் புகட்டும் பாடம்.
ஆங்கிலேயர்களும் ரஷியர்களும் தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். அமெரிக்கர்கள் முடிந்த வரை மோதிப் பார்க்க முடிவெடுத்திருக்கிறார்கள். அவ்வளவே.
இந்நிலையில், இந்தியப் படைகள் ஆப்கனுக்குள் நுழைவது இந்தியாவுக்குத் தேவையற்ற தலைவலியை உருவாக்கும். ஏதோ ஒரு காலை வேளையில் அமெரிக்க விமானங்கள் தன் துருப்புகளைச் சுமந்து பல்லாயிரம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் பறந்த பின்னர் இந்த வலியின் தீவிரத்தை இந்தியா உணர வேண்டியிருக்கும்.
கடந்த சில மாதங்களாகவே இந்திய எல்லைகளில் அதிகரித்துவரும் சீன அத்துமீறல்கள், இந்தியாவின் அண்டை நாடுகளில் நிறுவப்படும் ராணுவ முக்கியத்துவம் மிக்க சீனக் கட்டமைப்புகள் குறித்த செய்திகள் ஒருவிதமான அச்சத்தை உருவாக்கி வருகிறது. இதை எதிர்கொள்ள ""இந்தியா ராணுவ ரீதியிலான பலத்தைப் பெருக்க வேண்டும்; சீனாவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்'' என்ற குரல்கள் எழுவதையும் பார்க்கிறோம்.
ஆனால், இந்தியா எங்கு தன் பலத்தைப் பெருக்க வேண்டும் என்றால், முதலில் ராஜதந்திர வட்டாரத்தில்தான். கடந்த கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாக மிக மோசமான முடிவுகள் எடுக்கப்பட்ட துறை நமது வெளியுறவுத் துறையாகவே இருக்கும். ஆகையால், இந்தியர்கள் முதலில் தம் குரலை நம்முடைய வெளியுறவுக் கொள்கைக்காக எழுப்புவதே பொருத்தமாக இருக்கும். தற்போதைய தேவையும் அதுவே.
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக, அமெரிக்காவை நம்பி நாம் நமது தன்னம்பிக்கையையும், தனித்தன்மையையும் கைவிடுகிறோம் என்று அரசையும், குறிப்பாக, வெளியுறவுத் துறையையும் எச்சரிக்க விரும்புகிறோம்!
நன்றி : தினமணி
Friday, December 18, 2009
என்ன விலை அமெரிக்க அணு உலை?
அணுசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அமெரிக்காவுடன் செய்துகொள்ள, அனைத்துத் தரப்பு எதிர்ப்புகளையும் மீறி, பிடிவாதம் காட்டி அதைச் சாதித்துக் காட்டியவர் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்த உடன்பாடு இந்தியாவின் மின்சாரத் தேவைகளை முற்றிலுமாக நிறைவேற்ற உதவும் அமுதசுரபி என்று இந்திய ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்பட்டது. இதன் இணைப்பாக சர்வதேச அணுசக்திக் குழுமத்துடன் ஓர் உடன்பாடு, அணுசக்தி வர்த்தக நாடுகள் குழுவுடன் மற்றோர் உடன்பாடு என்றும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த அணுசக்தி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும், நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடருவதன் விளைவாகப் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவுடனான அணுசக்தித் துறை ஒத்துழைப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றம் "ஹைட் சட்டம்' என்ற ஒன்றை ஏற்கெனவே நிறைவேற்றியிருந்தது. இப்போது அணுசக்தி தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்திலும் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்கா தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு, அதையும் மன்மோகன் சிங் அரசு சிரமேற்கொண்டு செயல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதன் பின்னணிதான் என்ன? அணுமின் உற்பத்திக் கூடங்களை நிறுவி, மின்சார உற்பத்தியில் ஈடுபடுகையில், விபத்துக்கான சாத்தியக்கூறுகள் இருப்பது இயல்பே. அனல்-புனல் மின் நிலையங்களில்கூட விபத்துகள் நிகழ வாய்ப்பு உண்டு என்றாலும், அணுமின் நிலைய விபத்து மிகுதியான அபாயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அமெரிக்காவின் "மூன்று மைல் தீவு' அணுமின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்ததும், ரஷியாவின் "செர்னோபில்' அணுமின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்டதும், இத்தகைய விபத்துகளின் அபாய விளைவுகள் எந்த அளவுக்குக் கடுமையாக இருக்கும் என்பதற்கான அனுபவப் பாடங்களாகும்.
இந்த அபாயத்தைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் எச்சரிக்கையோடும், பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் அணுமின் உற்பத்தியில் ஈடுபட வேண்டியது அவசியம்; அது சாத்தியமானதும்கூட. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடுமானால், அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதும் தவிர்க்க முடியாத கடமைகள்.
÷எதிர்பாராத அபாயங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடாக வந்தவைதான் காப்பீட்டுத் திட்டங்கள். இதற்காக சர்வதேச அளவில் சில கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன; உலக நாடுகள் பலவற்றில் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. சர்வதேச அணுசக்திக் கழகத்தின் முயற்சியின் விளைவாக 1963-ல் அணுசக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்பாடு ஒன்று உருவாக்கப்பட்டு அது 1997 முதல் அமலாக்கத்துக்கு வந்தது.
÷வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பான, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஸ்தாபனத்தின் முயற்சியில் அணுமின் சக்தித் துறையில் மூன்றாவது நபர் கடப்பாடுக்கான பாரிஸ் கோட்பாடு 1960-ல் உருவாக்கப்பட்டு, 1963-ல் புரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் செழுமைப்படுத்தப்பட்டு, 1968 முதல் அமலுக்கு வந்தது. இந்த வியன்னா மற்றும் பாரிஸ் கோட்பாடுகள் இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான வரையறையை ஏற்படுத்த 1988-ல் செர்னோபில் விபத்துக்குப் பிறகு ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 1997-ல், சர்வதேச அணுசக்திக் கழக உறுப்பு நாடுகள் அணுசக்தி பாதிப்புக்கான கூடுதல் இழப்பீட்டுக்கான கோட்பாடு ஒன்றையும் நிறைவேற்றியுள்ளன. இது இன்னமும் அமலாக்கத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
÷இந்த சர்வதேசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட நாடுகள் சில, தத்தம் நாட்டுக்குப் பொருத்தமான சட்டங்களை இது தொடர்பாக நிறைவேற்றியுள்ளன. பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா போன்றவை பாரிஸ் அல்லது வியன்னா கோட்பாடுகளை ஏற்றுச் சட்டமியற்றிய நாடுகளில் சில. சர்வதேசக் கோட்பாடு எதனையும் அங்கீகரிக்காமலும், சொந்த நாட்டில் சட்டமியற்றாமலும் அணுசக்தித் துறையில் ஈடுபட்டு வரும் நாடாக சீனா உள்ளது.
÷ரஷியா, சீனா போன்ற நாடுகள் அணுமின் துறையில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை அரசுத் துறையில் மட்டுமே மேற்கொள்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளில் பிரதானமாக அணுமின்துறை உற்பத்தி - வர்த்தகத்தில் தனியார் துறையே ஈடுபட்டு வருகிறது. அணுமின் விபத்து காரணமான பாதிப்புகளுக்கும் முழுமையான நிவாரணம் அல்லது இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் என்பது பொதுவான ஒன்று. எனினும், காப்பீட்டுத் திட்டங்களின் கீழ், இந்த அணுமின் பாதிப்பு தொடர்பான கடப்பாடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே, இது குறித்துச் சட்டமியற்றிய நாடுகளின் நோக்கமாக அமைந்தது.
÷அணுமின் உற்பத்தித் துறையில் ஈடுபடுகிற நிறுவனங்கள் இருவகைப்படும். அணு உலைகள், இதர சாதனங்கள், எரிபொருள், எரிபொருள் பயன்பாடு தொடர்பான தொழில் நுணுக்கச் சேவைகள் போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்கள் ஒருவகை; இவற்றைப் பயன்படுத்தி அணுமின் நிலையத்தை நிறுவி இயக்குகிற, அதைப் பராமரிக்கிற, உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்று விநியோகிக்கிற பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் இரண்டாவது வகை. அணுமின் விபத்து பாதிப்பு குறித்த குடிமைக் கடப்பாடுகள் முதல் வகை நிறுவனங்கள் மீது சுமத்தப்படக்கூடாது என்பதுதான், இதுதொடர்பாக 1957-ம் ஆண்டிலேயே சட்டமியற்றிய அமெரிக்க நாடு எடுத்த முடிவு. அணுமின் உலை மற்றும் இதர சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உற்பத்திக் கோளாறு காரணமாகவே விபத்து நிகழ்ந்தாலும், அதன் பாதிப்புக்கு எந்த வகையிலும் கடன்பட்டவை ஆகாது என்று அவற்றுக்கு முழு விலக்கு அளித்துவிட்டது அமெரிக்க அரசாங்கம். மாறாக, விபத்து காரணமான பாதிப்புகளுக்கு, அணுமின் நிலையத்தைச் செயல்படுத்துகிற நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்காக அந்த நிறுவனம் காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டமியற்றப்பட்டது.
÷அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு, அது சட்டத்தின் கீழான காப்பீட்டை அமெரிக்க அணுமின் கூடங்கள் பெற்றுள்ளனவா என்று கண்காணிக்கிறது. இந்த அணுமின் கூடங்கள் தொடர்பான காப்பீட்டு உத்தரவாதத்தை "அமெரிக்க அணுசக்திக் காப்பீட்டாளர்கள்' என்ற ஒரு கூட்டமைப்பு நல்கி வருகிறது. இந்தக் காப்பீட்டைப் பெறச் செலுத்த வேண்டிய வருடாந்திர "பிரீமியம்' தொகை, ஒரே ஓர் அணுஉலையைக் கொண்ட மின்கூடத்துக்கு 4 லட்சம் டாலர் என்று சராசரியாக நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் அமெரிக்காவில் அணுசக்தி சாதன உற்பத்தி - வர்த்தகத்தில் ஈடுபடும் தனியார் துறை நிறுவனங்களுக்கு, விபத்து நிவாரண இழப்பீட்டிலிருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்கும் விதமாகவே அந்நாட்டுச் சட்டம் அமைந்துள்ளது.
÷இப்போது அமெரிக்காவில் தனியார் துறை அணுமின் உற்பத்தி நிறுவனங்களாக உள்ள ஜெனரல் எலெக்ட்ரிக், அரேவா, வெஸ்டிங் ஹவுஸ், ரோசாடோம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் புதிய அணுமின் கூடங்களுக்கான அணு உலைகள் உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்ய மும்முரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இவை அமெரிக்காவில் உள்ளதுபோலத் தங்களுக்குப் பாதுகாப்பான சட்ட ஏற்பாடுகள் இந்தியாவிலும் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றன. இந்தக் கோரிக்கையை அமெரிக்க அரசாங்கமும் வலியுறுத்துகிறது. அண்மையில் அமெரிக்க நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கிடம், அதிபர் ஒபாமாவே இதற்கான சட்டத்தை விரைவில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நெருக்குதல் கொடுத்துள்ளார் என்பது வெளிப்படையாகவே தெரிய வந்தது.
÷இந்தப் பின்னணியில் தான் மத்திய அரசு அணுசக்தி குடிமைக் கடப்பாடு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மசோதாவில், இந்தியாவில் அமையவுள்ள அணுமின் கூடங்களில் விபத்து ஏதேனும் நேரிட்டால், அது தொடர்பான நிவாரணம், இழப்பீடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு, மத்திய அரசின் அணுமின் துறையின் கீழ் இயங்கும், இந்திய அணுமின் வாரியத்துக்கு மட்டுமே என்று விதிக்கப்படும். அணுஉலைகளையோ, இதர சாதனங்களையோ, அணுஎரிபொருளையோ, அதுதொடர்பான தொழில் நுணுக்கச் சேவைகளையோ, விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு எந்தவிதக் கடப்பாடும் இருக்காது என்பதுதான் இதன் சாராம்சம். அணு உலைகளின் உற்பத்திக் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டாலும், அவற்றை விற்பனை செய்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது.
÷அது மட்டுமல்ல, அணுமின் விபத்து நேரிட்டால், அந்த விபத்து தொடர்பான இழப்பீட்டுத் தொகைக்கு 45 கோடி டாலர் (ரூ. 2,300 கோடி) உச்சவரம்பாக விதிக்கப்படும் என்று இந்த மசோதாவைப் பற்றிய விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அணுமின் கூட விபத்து, லட்சக்கணக்கான மக்களைக்கூட பாதிப்புக்கு இலக்காக்கும் பரிமாணம் கொண்டதாக அமையக்கூடும். அப்படிப்பட்ட நிலையில் இந்த 45 கோடி டாலர் என்பது வெறும் கண்துடைப்பாக மட்டுமே நின்றுவிடும் ஆபத்து எழும். இந்த உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே அதற்கு உள்ளிட்டுக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற முடியும் என்பது இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. போபால் விஷவாயுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்டுகளாகியும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நிவாரணம் பெற இயலாது அல்லாடுகிற நேர்வை நினைவில் வைத்துப் பார்த்தால், மத்திய அரசின் புதிய சட்டம் எவ்வளவு பாதகமான நிலைமைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதை ஊகிப்பது கடினம் அல்லவே!
÷"லாபங்கள் அனைத்தும் தனியாருக்கு; பாதிப்புகளும், இழப்பும் அரசாங்கத்துக்கு' என்பதுதானே நவீன தாராளமயத்தின் தாரக மந்திரம். அதன்படி அமெரிக்க நாட்டின் அணுமின் உற்பத்தி - வர்த்தகத் தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 60,000 கோடி வரை விற்று, லாபம் ஈட்டுவதற்கு வழிதிறந்துவிட முற்படுகிற, இந்திய ஆட்சியாளர்கள், அவற்றின் மீது எந்தக் கட்டத்திலும் மயிலிறகு அளவுகூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்டம் போட்டுப் பாதுகாப்பு நல்க முற்படுகின்றனர்.
÷"என்ன விலை அமெரிக்க அணு உலையே? எம் மக்களின் உயிரைக் கூடத் தருவேன்' என்று இந்திய மக்களின் வாழ்வுரிமைக்கே எதிரான சட்டத்தை மன்மோகன் சிங் அரசு நிறைவேற்ற அனுமதிக்கப் போகிறதா நம் ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றம்?
கட்டுரையாளர் : உ.ரா. வரதராசன்
நன்றி : தினமணி
இந்த உடன்பாடு இந்தியாவின் மின்சாரத் தேவைகளை முற்றிலுமாக நிறைவேற்ற உதவும் அமுதசுரபி என்று இந்திய ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்பட்டது. இதன் இணைப்பாக சர்வதேச அணுசக்திக் குழுமத்துடன் ஓர் உடன்பாடு, அணுசக்தி வர்த்தக நாடுகள் குழுவுடன் மற்றோர் உடன்பாடு என்றும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த அணுசக்தி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும், நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடருவதன் விளைவாகப் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவுடனான அணுசக்தித் துறை ஒத்துழைப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றம் "ஹைட் சட்டம்' என்ற ஒன்றை ஏற்கெனவே நிறைவேற்றியிருந்தது. இப்போது அணுசக்தி தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்திலும் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்கா தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு, அதையும் மன்மோகன் சிங் அரசு சிரமேற்கொண்டு செயல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதன் பின்னணிதான் என்ன? அணுமின் உற்பத்திக் கூடங்களை நிறுவி, மின்சார உற்பத்தியில் ஈடுபடுகையில், விபத்துக்கான சாத்தியக்கூறுகள் இருப்பது இயல்பே. அனல்-புனல் மின் நிலையங்களில்கூட விபத்துகள் நிகழ வாய்ப்பு உண்டு என்றாலும், அணுமின் நிலைய விபத்து மிகுதியான அபாயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அமெரிக்காவின் "மூன்று மைல் தீவு' அணுமின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்ததும், ரஷியாவின் "செர்னோபில்' அணுமின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்டதும், இத்தகைய விபத்துகளின் அபாய விளைவுகள் எந்த அளவுக்குக் கடுமையாக இருக்கும் என்பதற்கான அனுபவப் பாடங்களாகும்.
இந்த அபாயத்தைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் எச்சரிக்கையோடும், பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் அணுமின் உற்பத்தியில் ஈடுபட வேண்டியது அவசியம்; அது சாத்தியமானதும்கூட. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடுமானால், அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதும் தவிர்க்க முடியாத கடமைகள்.
÷எதிர்பாராத அபாயங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடாக வந்தவைதான் காப்பீட்டுத் திட்டங்கள். இதற்காக சர்வதேச அளவில் சில கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன; உலக நாடுகள் பலவற்றில் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. சர்வதேச அணுசக்திக் கழகத்தின் முயற்சியின் விளைவாக 1963-ல் அணுசக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்பாடு ஒன்று உருவாக்கப்பட்டு அது 1997 முதல் அமலாக்கத்துக்கு வந்தது.
÷வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பான, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஸ்தாபனத்தின் முயற்சியில் அணுமின் சக்தித் துறையில் மூன்றாவது நபர் கடப்பாடுக்கான பாரிஸ் கோட்பாடு 1960-ல் உருவாக்கப்பட்டு, 1963-ல் புரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் செழுமைப்படுத்தப்பட்டு, 1968 முதல் அமலுக்கு வந்தது. இந்த வியன்னா மற்றும் பாரிஸ் கோட்பாடுகள் இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான வரையறையை ஏற்படுத்த 1988-ல் செர்னோபில் விபத்துக்குப் பிறகு ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 1997-ல், சர்வதேச அணுசக்திக் கழக உறுப்பு நாடுகள் அணுசக்தி பாதிப்புக்கான கூடுதல் இழப்பீட்டுக்கான கோட்பாடு ஒன்றையும் நிறைவேற்றியுள்ளன. இது இன்னமும் அமலாக்கத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
÷இந்த சர்வதேசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட நாடுகள் சில, தத்தம் நாட்டுக்குப் பொருத்தமான சட்டங்களை இது தொடர்பாக நிறைவேற்றியுள்ளன. பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா போன்றவை பாரிஸ் அல்லது வியன்னா கோட்பாடுகளை ஏற்றுச் சட்டமியற்றிய நாடுகளில் சில. சர்வதேசக் கோட்பாடு எதனையும் அங்கீகரிக்காமலும், சொந்த நாட்டில் சட்டமியற்றாமலும் அணுசக்தித் துறையில் ஈடுபட்டு வரும் நாடாக சீனா உள்ளது.
÷ரஷியா, சீனா போன்ற நாடுகள் அணுமின் துறையில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை அரசுத் துறையில் மட்டுமே மேற்கொள்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளில் பிரதானமாக அணுமின்துறை உற்பத்தி - வர்த்தகத்தில் தனியார் துறையே ஈடுபட்டு வருகிறது. அணுமின் விபத்து காரணமான பாதிப்புகளுக்கும் முழுமையான நிவாரணம் அல்லது இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் என்பது பொதுவான ஒன்று. எனினும், காப்பீட்டுத் திட்டங்களின் கீழ், இந்த அணுமின் பாதிப்பு தொடர்பான கடப்பாடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே, இது குறித்துச் சட்டமியற்றிய நாடுகளின் நோக்கமாக அமைந்தது.
÷அணுமின் உற்பத்தித் துறையில் ஈடுபடுகிற நிறுவனங்கள் இருவகைப்படும். அணு உலைகள், இதர சாதனங்கள், எரிபொருள், எரிபொருள் பயன்பாடு தொடர்பான தொழில் நுணுக்கச் சேவைகள் போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்கள் ஒருவகை; இவற்றைப் பயன்படுத்தி அணுமின் நிலையத்தை நிறுவி இயக்குகிற, அதைப் பராமரிக்கிற, உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்று விநியோகிக்கிற பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் இரண்டாவது வகை. அணுமின் விபத்து பாதிப்பு குறித்த குடிமைக் கடப்பாடுகள் முதல் வகை நிறுவனங்கள் மீது சுமத்தப்படக்கூடாது என்பதுதான், இதுதொடர்பாக 1957-ம் ஆண்டிலேயே சட்டமியற்றிய அமெரிக்க நாடு எடுத்த முடிவு. அணுமின் உலை மற்றும் இதர சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உற்பத்திக் கோளாறு காரணமாகவே விபத்து நிகழ்ந்தாலும், அதன் பாதிப்புக்கு எந்த வகையிலும் கடன்பட்டவை ஆகாது என்று அவற்றுக்கு முழு விலக்கு அளித்துவிட்டது அமெரிக்க அரசாங்கம். மாறாக, விபத்து காரணமான பாதிப்புகளுக்கு, அணுமின் நிலையத்தைச் செயல்படுத்துகிற நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்காக அந்த நிறுவனம் காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டமியற்றப்பட்டது.
÷அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு, அது சட்டத்தின் கீழான காப்பீட்டை அமெரிக்க அணுமின் கூடங்கள் பெற்றுள்ளனவா என்று கண்காணிக்கிறது. இந்த அணுமின் கூடங்கள் தொடர்பான காப்பீட்டு உத்தரவாதத்தை "அமெரிக்க அணுசக்திக் காப்பீட்டாளர்கள்' என்ற ஒரு கூட்டமைப்பு நல்கி வருகிறது. இந்தக் காப்பீட்டைப் பெறச் செலுத்த வேண்டிய வருடாந்திர "பிரீமியம்' தொகை, ஒரே ஓர் அணுஉலையைக் கொண்ட மின்கூடத்துக்கு 4 லட்சம் டாலர் என்று சராசரியாக நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் அமெரிக்காவில் அணுசக்தி சாதன உற்பத்தி - வர்த்தகத்தில் ஈடுபடும் தனியார் துறை நிறுவனங்களுக்கு, விபத்து நிவாரண இழப்பீட்டிலிருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்கும் விதமாகவே அந்நாட்டுச் சட்டம் அமைந்துள்ளது.
÷இப்போது அமெரிக்காவில் தனியார் துறை அணுமின் உற்பத்தி நிறுவனங்களாக உள்ள ஜெனரல் எலெக்ட்ரிக், அரேவா, வெஸ்டிங் ஹவுஸ், ரோசாடோம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் புதிய அணுமின் கூடங்களுக்கான அணு உலைகள் உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்ய மும்முரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இவை அமெரிக்காவில் உள்ளதுபோலத் தங்களுக்குப் பாதுகாப்பான சட்ட ஏற்பாடுகள் இந்தியாவிலும் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றன. இந்தக் கோரிக்கையை அமெரிக்க அரசாங்கமும் வலியுறுத்துகிறது. அண்மையில் அமெரிக்க நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கிடம், அதிபர் ஒபாமாவே இதற்கான சட்டத்தை விரைவில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நெருக்குதல் கொடுத்துள்ளார் என்பது வெளிப்படையாகவே தெரிய வந்தது.
÷இந்தப் பின்னணியில் தான் மத்திய அரசு அணுசக்தி குடிமைக் கடப்பாடு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மசோதாவில், இந்தியாவில் அமையவுள்ள அணுமின் கூடங்களில் விபத்து ஏதேனும் நேரிட்டால், அது தொடர்பான நிவாரணம், இழப்பீடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு, மத்திய அரசின் அணுமின் துறையின் கீழ் இயங்கும், இந்திய அணுமின் வாரியத்துக்கு மட்டுமே என்று விதிக்கப்படும். அணுஉலைகளையோ, இதர சாதனங்களையோ, அணுஎரிபொருளையோ, அதுதொடர்பான தொழில் நுணுக்கச் சேவைகளையோ, விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு எந்தவிதக் கடப்பாடும் இருக்காது என்பதுதான் இதன் சாராம்சம். அணு உலைகளின் உற்பத்திக் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டாலும், அவற்றை விற்பனை செய்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது.
÷அது மட்டுமல்ல, அணுமின் விபத்து நேரிட்டால், அந்த விபத்து தொடர்பான இழப்பீட்டுத் தொகைக்கு 45 கோடி டாலர் (ரூ. 2,300 கோடி) உச்சவரம்பாக விதிக்கப்படும் என்று இந்த மசோதாவைப் பற்றிய விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அணுமின் கூட விபத்து, லட்சக்கணக்கான மக்களைக்கூட பாதிப்புக்கு இலக்காக்கும் பரிமாணம் கொண்டதாக அமையக்கூடும். அப்படிப்பட்ட நிலையில் இந்த 45 கோடி டாலர் என்பது வெறும் கண்துடைப்பாக மட்டுமே நின்றுவிடும் ஆபத்து எழும். இந்த உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே அதற்கு உள்ளிட்டுக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற முடியும் என்பது இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. போபால் விஷவாயுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்டுகளாகியும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நிவாரணம் பெற இயலாது அல்லாடுகிற நேர்வை நினைவில் வைத்துப் பார்த்தால், மத்திய அரசின் புதிய சட்டம் எவ்வளவு பாதகமான நிலைமைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதை ஊகிப்பது கடினம் அல்லவே!
÷"லாபங்கள் அனைத்தும் தனியாருக்கு; பாதிப்புகளும், இழப்பும் அரசாங்கத்துக்கு' என்பதுதானே நவீன தாராளமயத்தின் தாரக மந்திரம். அதன்படி அமெரிக்க நாட்டின் அணுமின் உற்பத்தி - வர்த்தகத் தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 60,000 கோடி வரை விற்று, லாபம் ஈட்டுவதற்கு வழிதிறந்துவிட முற்படுகிற, இந்திய ஆட்சியாளர்கள், அவற்றின் மீது எந்தக் கட்டத்திலும் மயிலிறகு அளவுகூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்டம் போட்டுப் பாதுகாப்பு நல்க முற்படுகின்றனர்.
÷"என்ன விலை அமெரிக்க அணு உலையே? எம் மக்களின் உயிரைக் கூடத் தருவேன்' என்று இந்திய மக்களின் வாழ்வுரிமைக்கே எதிரான சட்டத்தை மன்மோகன் சிங் அரசு நிறைவேற்ற அனுமதிக்கப் போகிறதா நம் ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றம்?
கட்டுரையாளர் : உ.ரா. வரதராசன்
நன்றி : தினமணி
Labels:
அணுசக்தி,
அமெரிக்கா,
கட்டுரை,
மத்தியஅரசு
Tuesday, December 15, 2009
தேசம் விலைபோகிறதே...!
அது மன்னராட்சி ஆனாலும், மக்களாட்சி ஆனாலும், ஏன் சர்வாதிகார ஆட்சியே ஆனாலும் அந்த நாட்டையும், மக்களையும், அவர்களது நலனையும் பாதுகாப்பதுதான் அடிப்படைக் கடமை. நல்ல பல திட்டங்களின் மூலம் மக்களது நல்வாழ்வுக்கு ஓர் அரசு உத்தரவு தருகிறதோ இல்லையோ, அன்னியர்கள் தேசத்தை ஆக்கிரமிக்காமல் பாதுகாப்பதும், சுரண்டாமல் பார்த்துக் கொள்வதும் எந்த ஓர் அரசுக்கும் அடிப்படைக் கடமை. இந்த அடிப்படைக் கடமையைக்கூட மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்யத் தவறுகிறதோ என்கிற ஐயப்பாடு சமீபகாலமாகத் தோன்றியிருக்கிறது.
இந்தியா மிகப்பெரிய மின் பற்றாக்குறையைச் சந்திக்க இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்தியாவின் எரிசக்தித் தேவையை எப்படி எதிர்கொள்வது என்பதில் அனைவரும் கைகோர்த்து, நாளைய தலைமுறையினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்தப் பிரச்னையில் மக்கள் கருத்தை முறையாகக் கணிக்காமலும், பொதுவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமலும் அமெரிக்காவுடன் பல்வேறு சமரசங்களைச் செய்துகொண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது இந்திய அரசு.
அதுவும் போதாதென்று, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும், நாளைய தலைமுறையினரின் நியாயமான பாதுகாப்பை நிர்மூலமாக்கும் ஒரு நடவடிக்கையிலும் இப்போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இறங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அது இந்திய நிறுவனமோ, பன்னாட்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும், தாங்கள் தொழில் செய்து லாபம் சம்பாதிப்பதற்காகச் சுற்றுச்சூழலைப் பாதிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் அந்தத் தொழிற்சாலையைச் சுற்றி வாழும் மக்களின் நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதும் ஏற்புடையதல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் 21-வது பிரிவின்படி வாழ்வுரிமை என்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையில் மேலும் ஒருபடி சென்று, வாழும் உரிமை என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவைகளுடன் வாழ்வது என்பதும்தான் என்று பல தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்திருக்கிறது. அதை மேலும் விரிவுபடுத்தி, மனித உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ்வது என்பது, பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழலுடனும், நச்சுக் கலப்பில்லாத காற்று மற்றும் தண்ணீருடனும் வாழ்வது என்றுகூடத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
உலகிலுள்ள ஏனைய அரசியலமைப்புச் சட்டங்களை எல்லாம்விட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சுற்றுச்சூழலுக்கு மிக அதிகமான முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்திருக்கிறது. இயற்கைச் சூழலைப் பேணுவது மற்றும் அதிகரிப்பது என்பதை அரசியல் சட்டப்பிரிவு 51-அ, அடிப்படை உரிமையாகவே நமக்கு அளித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகள் வலியுறுத்தும் கருத்து, எந்த ஒரு தொழில் நிறுவனமும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்றாக வேண்டும் என்பதைத்தான். தங்களது ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் கழிவுகள், வாயுக் கசிவுகள் மற்றும் நச்சுத்தன்மை போன்றவற்றால் சுற்றிலும் வாழும் பொதுமக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அனைத்துக்கும்கூட நிறுவனம் பொறுப்பேற்றாக வேண்டும்.
சட்டமும் அரசியல் சட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். தார்மிக ரீதியாகப் பார்த்தாலும், தாங்கள் லாபம் கருதிச் செய்யும் தொழில் அடுத்தவரைப் பாதிக்கக்கூடாது என்பதும் அப்படிப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈடும் பரிகாரமும் செய்ய வேண்டும் என்பதும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனித நாகரிகம் ஏற்றுக்கொள்ளும் கடமையும்கூட. நிலைமை இப்படி இருக்கும்போது, நமது மத்திய அரசு விசித்திரமான ஒரு சட்டத்தின் மூலம், அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களின் நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தயாராகி இருப்பதுதான் வெட்கக் கேடாக இருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்ட அணு எரிசக்தி ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அந்த நாட்டு நிறுவனங்கள் இன்னும் அணு மின் நிலையங்களைத் தொடங்க ஆர்வத்துடன் முன்வராதது ஏனாம் தெரியுமா? அந்த அணு மின் நிலையங்களில் ஒருவேளை கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டுமே என்பதால் அவர்கள் தயங்குகிறார்களாம். எப்படி இருக்கிறது கதை. அணு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் அடைய மட்டும்தான் தயாராம்!
நமது இந்திய அரசு உடனே என்ன செய்ய இருக்கிறது தெரியுமா? அணுமின் எரிசக்தி பாதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிட்டி பில்) என்றொரு சட்டம் இயற்றி, இந்த அணுமின் நிலையங்களால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்களின் அதிகபட்ச நஷ்ட ஈட்டுத் தொகை 450 மில்லியன் டாலர் என்று பாதுகாப்புத் தர முன்வந்திருக்கிறது. அதற்கு மேலான பாதிப்புகளுக்கு இந்திய அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமாம்.
என்ன அயோக்கியத்தனம் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. தேசப்பற்றுமிக்க ஓர் அரசு, இந்தியாவை ஓர் அமெரிக்காவாக மாற்றவும், பன்னாட்டு முதலீடுகளைப் பெறுவதற்காகவும் இப்படி ஒரு "சலுகை' அளிக்க இருக்கிறது. நாளைய தலைமுறையின் நல்வாழ்வு முக்கியமா, இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கியமா இல்லை பன்னாட்டு முதலீடும், ஆபத்தான அணு மின்சக்தியும் முக்கியமா?
தேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்! வந்தே மாதரம்!
நன்றி : தினமணி
இந்தியா மிகப்பெரிய மின் பற்றாக்குறையைச் சந்திக்க இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்தியாவின் எரிசக்தித் தேவையை எப்படி எதிர்கொள்வது என்பதில் அனைவரும் கைகோர்த்து, நாளைய தலைமுறையினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்தப் பிரச்னையில் மக்கள் கருத்தை முறையாகக் கணிக்காமலும், பொதுவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமலும் அமெரிக்காவுடன் பல்வேறு சமரசங்களைச் செய்துகொண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது இந்திய அரசு.
அதுவும் போதாதென்று, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும், நாளைய தலைமுறையினரின் நியாயமான பாதுகாப்பை நிர்மூலமாக்கும் ஒரு நடவடிக்கையிலும் இப்போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இறங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அது இந்திய நிறுவனமோ, பன்னாட்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும், தாங்கள் தொழில் செய்து லாபம் சம்பாதிப்பதற்காகச் சுற்றுச்சூழலைப் பாதிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் அந்தத் தொழிற்சாலையைச் சுற்றி வாழும் மக்களின் நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதும் ஏற்புடையதல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் 21-வது பிரிவின்படி வாழ்வுரிமை என்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையில் மேலும் ஒருபடி சென்று, வாழும் உரிமை என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவைகளுடன் வாழ்வது என்பதும்தான் என்று பல தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்திருக்கிறது. அதை மேலும் விரிவுபடுத்தி, மனித உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ்வது என்பது, பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழலுடனும், நச்சுக் கலப்பில்லாத காற்று மற்றும் தண்ணீருடனும் வாழ்வது என்றுகூடத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
உலகிலுள்ள ஏனைய அரசியலமைப்புச் சட்டங்களை எல்லாம்விட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சுற்றுச்சூழலுக்கு மிக அதிகமான முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்திருக்கிறது. இயற்கைச் சூழலைப் பேணுவது மற்றும் அதிகரிப்பது என்பதை அரசியல் சட்டப்பிரிவு 51-அ, அடிப்படை உரிமையாகவே நமக்கு அளித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகள் வலியுறுத்தும் கருத்து, எந்த ஒரு தொழில் நிறுவனமும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்றாக வேண்டும் என்பதைத்தான். தங்களது ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் கழிவுகள், வாயுக் கசிவுகள் மற்றும் நச்சுத்தன்மை போன்றவற்றால் சுற்றிலும் வாழும் பொதுமக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அனைத்துக்கும்கூட நிறுவனம் பொறுப்பேற்றாக வேண்டும்.
சட்டமும் அரசியல் சட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். தார்மிக ரீதியாகப் பார்த்தாலும், தாங்கள் லாபம் கருதிச் செய்யும் தொழில் அடுத்தவரைப் பாதிக்கக்கூடாது என்பதும் அப்படிப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈடும் பரிகாரமும் செய்ய வேண்டும் என்பதும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனித நாகரிகம் ஏற்றுக்கொள்ளும் கடமையும்கூட. நிலைமை இப்படி இருக்கும்போது, நமது மத்திய அரசு விசித்திரமான ஒரு சட்டத்தின் மூலம், அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களின் நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தயாராகி இருப்பதுதான் வெட்கக் கேடாக இருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்ட அணு எரிசக்தி ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அந்த நாட்டு நிறுவனங்கள் இன்னும் அணு மின் நிலையங்களைத் தொடங்க ஆர்வத்துடன் முன்வராதது ஏனாம் தெரியுமா? அந்த அணு மின் நிலையங்களில் ஒருவேளை கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டுமே என்பதால் அவர்கள் தயங்குகிறார்களாம். எப்படி இருக்கிறது கதை. அணு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் அடைய மட்டும்தான் தயாராம்!
நமது இந்திய அரசு உடனே என்ன செய்ய இருக்கிறது தெரியுமா? அணுமின் எரிசக்தி பாதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிட்டி பில்) என்றொரு சட்டம் இயற்றி, இந்த அணுமின் நிலையங்களால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்களின் அதிகபட்ச நஷ்ட ஈட்டுத் தொகை 450 மில்லியன் டாலர் என்று பாதுகாப்புத் தர முன்வந்திருக்கிறது. அதற்கு மேலான பாதிப்புகளுக்கு இந்திய அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமாம்.
என்ன அயோக்கியத்தனம் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. தேசப்பற்றுமிக்க ஓர் அரசு, இந்தியாவை ஓர் அமெரிக்காவாக மாற்றவும், பன்னாட்டு முதலீடுகளைப் பெறுவதற்காகவும் இப்படி ஒரு "சலுகை' அளிக்க இருக்கிறது. நாளைய தலைமுறையின் நல்வாழ்வு முக்கியமா, இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கியமா இல்லை பன்னாட்டு முதலீடும், ஆபத்தான அணு மின்சக்தியும் முக்கியமா?
தேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்! வந்தே மாதரம்!
நன்றி : தினமணி
Labels:
அமெரிக்கா,
காப்பீட்டு,
சட்டம்,
தலையங்கம்,
மத்தியஅரசு
Sunday, December 6, 2009
அபத்தமும் ஆபத்தும்!
காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவே முடியாத பகுதி என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துவதை விட்டுவிட்டு அதை ஒரு பிரச்னைக்குரிய பகுதி என்று நம்மவர்களே உலக அரங்கில் ஒத்துக்கொண்டு விடுவார்களோ என்கிற பயம் சமீபகாலமாக எழுந்து வருகிறது. இந்தியாவின் தேச நலன் கருதியும், பாதுகாப்பு கருதியும் காஷ்மீர் பிரச்னையில் நாங்கள் அமெரிக்காவின் வழிகாட்டுதல்படி நடக்கிறோம் என்று நம்மவர்கள் சொல்லி விடுவார்களோ என்றும் பயமாக இருக்கிறது.
ஆரம் பம் முதலே காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணையத் தயாராக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. தாங்கள் பாகிஸ்தானிய முஸ்லிம்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்று கருதும் காஷ்மீரிகள் கேட்டது "ஆசாதி', அதாவது, தனி நாடுதானே தவிர பாகிஸ்தானுடன் இணைய ஒருபோதும் தயாராக இருக்கவில்லை. இந்தியாவை விட்டுப் போகும்போது கூடவே பிரச்னையையும் விட்டுப் போக வேண்டும் என்று கருதிய பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவுதான் காஷ்மீர் பிரச்னை.
காஷ்மீரைத் தனி நாடாக்கி அதைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பது என்பது ஆசியா கண்டத்தையே தனது கண்காணிப்பில் வைத்திருப்பது என்கிற ரகசியம் மேலைநாட்டு வல்லரசுகளுக்கு நன்றாகவே தெரியும். காஷ்மீரைத் தனி நாடாக்கி அங்கே தனது ராணுவத் தளத்தை அமைத்துவிட்டால், எண்ணெய் வளம் மிகுந்த மத்திய ஆசிய நாடுகள், ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட வளமும், பலமும் பொருந்திய எல்லா ஆசிய நாடுகளையும் கண்காணிக்க முடியும் என்று மேற்கத்திய வல்லரசுகள் நினைக்கின்றன. அதனால்தான், அமெரிக்கா ஆரம்பம் முதலே பாகிஸ்தானுக்குப் பெரிய அளவில் நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்துக் காஷ்மீர் பிரச்னை கொழுந்துவிட்டு எரியும்படி பார்த்துக் கொள்கிறது.
உலக ராஜதந்திர வியூகத்தில் தத்தம் நாடுகளின் பாதுகாப்பையும், மேலாண்மையையும் பாதுகாக்க முயல்வதும் செயல்படுவதும் தவறல்ல. அந்த வியூகங்களை உடைத்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக மாறி விட்டிருக்கிறது என்பதற்கு, அங்கே தொடர்ந்து நடந்துவரும் தேர்தல்களும், அதில் கடந்த நான்கு தேர்தல்களாக மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு வாக்களித்திருப்பதும்
சாட்சி. பாகிஸ்தானியப் பகுதியான ஆசாத் காஷ்மீரில் முறை
யா கத் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை என்பதையும், அங்கே அடிக்கடி பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதையும் நாம் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரைப் பற்றி இப்போது நாம் விவாதிக்க வேண்டியதன் காரணம், அரசியல் முதிர்ச்சி இல்லாமல் அந்த மாநில முதல்வர் உமர் அப்துல்லா சிறுபிள்ளைத்தனமாக வெளியிட்டிருக்கும் சில கருத்துகள்தான். காஷ்மீரிலுள்ள தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை ஜனநாயக வழிமுறைக்கு அழைத்து வருவதற்கு முயற்சிக்க வேண்டிய முதல்வர், திடீரென்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்று பேசத் தொடங்கி இருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
முத்த ரப்பு என்பது தீவிரவாதக் குழுக்கள், மாநில அரசு மற்றும் மத்திய அரசு என்று கூறியிருந்தால் அவரது முயற்சியை வரவேற்றுப் பாராட்டி இருக்கலாம். உமர் அப்துல்லா குறிப்பிடும் முத்தரப்பு என்பது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதக் குழுக்கள் என்று இருப்பதை நாம் எப்படி வரவேற்பது? அது இருக்கட்டும். இப்படி ஓர் அபத்தமான கருத்தை ஒரு மாநில முதல்வர் வெளியிடுகிறார். அந்தக் கூட்டணி ஆட்சியில் பங்கு பெறும் காங்கிரஸ் கட்சியோ, உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி அங்கம் வகிக்கும் மத்திய அரசோ மறுக்கவோ, எதிர்க்கவோ இல்லையே, ஏன்?
கடந்த நான்கு தேர்தல்களைவிட, தீவிரவாதக் குழுக்கள் விடுத்த எச்சரிக்கைகளைச் சட்டை செய்யாமல் காஷ்மீர் மக்கள் வாக்குப் பதிவில் கலந்துகொண்டிருப்பதில் இருந்தே, மக்கள் மத்தியில் தீவிரவாதம் செல்வாக்கு இழந்து வருவது தெளிவாகிறது. கடந்த 20
ஆண்டுகளில், இந்த ஆண்டுதான் காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் மிகமிகக் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மாநிலங்களவையில் கூறியிருக்கிறார். இந்த நிலையில், அவசியமே இல்லாமல் முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்கிற பெயரில் பாகிஸ்தானைப் பிரச்னையில் நுழையவிட வேண்டிய அவசியம்தான் என்ன?
காஷ் மீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் பேசுகிறார்கள். நாம் மௌனமாக இருக்கிறோம். இங்கே, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி சகாவான காஷ்மீர் முதல்வர், முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானை இணைக்க வேண்டும் என்கிற விபரீத யோசனையை முன்வைக்கிறார். நாம் பேசாமல் இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ஜம்மு காஷ்மீரிலிருந்து ராணுவம்
கணிசமாகக் குறைக்கப்படும் என்கிறார். எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் எல்லோரும் பேசாமல் இருக்கிறார்கள். அதிர்ச்சி தரும் விஷயங்கள் இவை.
காஷ்மீரிலிருந்து ராணுவத்தைக் குறைப்பதோ விலக்கிக் கொள்வதோ ஆபத்து. பாகிஸ்தானை முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க நினைப்பது அபத்தம். இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் வாளாயிருந்தால் அதன் விளைவு விபரீதமாக முடியும்!
நன்றி : தினமணி
ஆரம் பம் முதலே காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணையத் தயாராக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. தாங்கள் பாகிஸ்தானிய முஸ்லிம்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்று கருதும் காஷ்மீரிகள் கேட்டது "ஆசாதி', அதாவது, தனி நாடுதானே தவிர பாகிஸ்தானுடன் இணைய ஒருபோதும் தயாராக இருக்கவில்லை. இந்தியாவை விட்டுப் போகும்போது கூடவே பிரச்னையையும் விட்டுப் போக வேண்டும் என்று கருதிய பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவுதான் காஷ்மீர் பிரச்னை.
காஷ்மீரைத் தனி நாடாக்கி அதைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பது என்பது ஆசியா கண்டத்தையே தனது கண்காணிப்பில் வைத்திருப்பது என்கிற ரகசியம் மேலைநாட்டு வல்லரசுகளுக்கு நன்றாகவே தெரியும். காஷ்மீரைத் தனி நாடாக்கி அங்கே தனது ராணுவத் தளத்தை அமைத்துவிட்டால், எண்ணெய் வளம் மிகுந்த மத்திய ஆசிய நாடுகள், ரஷியா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட வளமும், பலமும் பொருந்திய எல்லா ஆசிய நாடுகளையும் கண்காணிக்க முடியும் என்று மேற்கத்திய வல்லரசுகள் நினைக்கின்றன. அதனால்தான், அமெரிக்கா ஆரம்பம் முதலே பாகிஸ்தானுக்குப் பெரிய அளவில் நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்துக் காஷ்மீர் பிரச்னை கொழுந்துவிட்டு எரியும்படி பார்த்துக் கொள்கிறது.
உலக ராஜதந்திர வியூகத்தில் தத்தம் நாடுகளின் பாதுகாப்பையும், மேலாண்மையையும் பாதுகாக்க முயல்வதும் செயல்படுவதும் தவறல்ல. அந்த வியூகங்களை உடைத்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக மாறி விட்டிருக்கிறது என்பதற்கு, அங்கே தொடர்ந்து நடந்துவரும் தேர்தல்களும், அதில் கடந்த நான்கு தேர்தல்களாக மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு வாக்களித்திருப்பதும்
சாட்சி. பாகிஸ்தானியப் பகுதியான ஆசாத் காஷ்மீரில் முறை
யா கத் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை என்பதையும், அங்கே அடிக்கடி பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதையும் நாம் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரைப் பற்றி இப்போது நாம் விவாதிக்க வேண்டியதன் காரணம், அரசியல் முதிர்ச்சி இல்லாமல் அந்த மாநில முதல்வர் உமர் அப்துல்லா சிறுபிள்ளைத்தனமாக வெளியிட்டிருக்கும் சில கருத்துகள்தான். காஷ்மீரிலுள்ள தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை ஜனநாயக வழிமுறைக்கு அழைத்து வருவதற்கு முயற்சிக்க வேண்டிய முதல்வர், திடீரென்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்று பேசத் தொடங்கி இருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
முத்த ரப்பு என்பது தீவிரவாதக் குழுக்கள், மாநில அரசு மற்றும் மத்திய அரசு என்று கூறியிருந்தால் அவரது முயற்சியை வரவேற்றுப் பாராட்டி இருக்கலாம். உமர் அப்துல்லா குறிப்பிடும் முத்தரப்பு என்பது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதக் குழுக்கள் என்று இருப்பதை நாம் எப்படி வரவேற்பது? அது இருக்கட்டும். இப்படி ஓர் அபத்தமான கருத்தை ஒரு மாநில முதல்வர் வெளியிடுகிறார். அந்தக் கூட்டணி ஆட்சியில் பங்கு பெறும் காங்கிரஸ் கட்சியோ, உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி அங்கம் வகிக்கும் மத்திய அரசோ மறுக்கவோ, எதிர்க்கவோ இல்லையே, ஏன்?
கடந்த நான்கு தேர்தல்களைவிட, தீவிரவாதக் குழுக்கள் விடுத்த எச்சரிக்கைகளைச் சட்டை செய்யாமல் காஷ்மீர் மக்கள் வாக்குப் பதிவில் கலந்துகொண்டிருப்பதில் இருந்தே, மக்கள் மத்தியில் தீவிரவாதம் செல்வாக்கு இழந்து வருவது தெளிவாகிறது. கடந்த 20
ஆண்டுகளில், இந்த ஆண்டுதான் காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் மிகமிகக் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மாநிலங்களவையில் கூறியிருக்கிறார். இந்த நிலையில், அவசியமே இல்லாமல் முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்கிற பெயரில் பாகிஸ்தானைப் பிரச்னையில் நுழையவிட வேண்டிய அவசியம்தான் என்ன?
காஷ் மீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் பேசுகிறார்கள். நாம் மௌனமாக இருக்கிறோம். இங்கே, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி சகாவான காஷ்மீர் முதல்வர், முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானை இணைக்க வேண்டும் என்கிற விபரீத யோசனையை முன்வைக்கிறார். நாம் பேசாமல் இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ஜம்மு காஷ்மீரிலிருந்து ராணுவம்
கணிசமாகக் குறைக்கப்படும் என்கிறார். எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் எல்லோரும் பேசாமல் இருக்கிறார்கள். அதிர்ச்சி தரும் விஷயங்கள் இவை.
காஷ்மீரிலிருந்து ராணுவத்தைக் குறைப்பதோ விலக்கிக் கொள்வதோ ஆபத்து. பாகிஸ்தானை முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க நினைப்பது அபத்தம். இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் வாளாயிருந்தால் அதன் விளைவு விபரீதமாக முடியும்!
நன்றி : தினமணி
Labels:
அமெரிக்கா,
இந்தியாஅரசு,
தலையங்கம்
Thursday, December 3, 2009
அற்றைத் திங்கள் அந்த நள்ளிரவில்...
{யூனியன் கார்பைடு நிறுவனத்தில் (இப்போது டோவ் கெமிக்கல்ஸ்) துருப்பிடித்துக் கிடக்கும் ஒரு கொள்கலன்.}1984 டிசம்பர் 2 ம் தேதி இரவு 10 மணி.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் கொள்கலன் 610-ல் தண்ணீர் கலக்கிறது. அந்த டேங்க்கில் இருந்த 42 டன் மீதைல் ஐசோசயனைட், இந்தத் தண்ணீர் பட்டதும் வேதியியல் மாற்றம் அடைகிறது. 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்கிறது. அழுத்தம் தாங்காமல் கொள்கலனின் பாதுகாப்பு மூடிகள் திறந்து கொள்கின்றன. நள்ளிரவில் விஷவாயு வெளியேறிப் பரவுகிறது...போபால் நகர் முழுவதும்!
அப்போது அந்நகரின் மக்கள் தொகை 5.2 லட்சம். இவர்களில் 2 லட்சம் பேர் சிறுவர்கள். 3000 பேர் கருவுற்ற தாய்மார்கள்.
டிசம்பர் 3-ம் தேதி காலை போபால் நகர மக்கள் அனைவரும் கண்ணெரிச்சல், மூச்சடைப்புடன் கண்விழிக்கின்றனர். அன்றைய ஒரு நாளில் மட்டும் சுமார் 4000 பேர் இறந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உண்மையில், இறந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு என்று சொல்லப்படுகிறது. அடுத்த 72 மணி நேரத்தில் இறந்தவர்கள் சுமார் 10,000 பேர். இதன் பாதிப்பால் மெல்லச் செத்தவர்கள் 25,000 பேர்.
இன்னமும் சாகாமல் இருக்கும் இரண்டு விஷயங்களில் முதலாவது, போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீதான வழக்கு ஒன்றுதான். இரண்டாவதாக, யூனியன் கார்பைடு விட்டுச்சென்ற 390 டன் நச்சு வேதிப்பொருள்கள் இன்னமும் போபாலின் நிலத்தடி நீரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.
பராமரிப்பு இல்லாததுதான் விபத்துக்குக் காரணம் என்று தெளிவாக ஆய்வு அறிக்கைகள் குறிப்பிட்டன. பராமரிப்புச் செலவுகளை குறைப்பதற்காக கொள்கலன் 610க்கு அளிக்க வேண்டிய குளிர்பதன வசதியை விலக்கிக் கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனாலும் யூனியன் கார்பைடு இதை ஏற்கவில்லை. ஏதோ ஒரு ஊழியரின் சதிவேலை காரணமாக, கொள்கலன் 610-ல் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளது என்ற வாதத்தை மட்டுமே முன்வைத்தது.
இந்த வாதத்தையும் உப்புசப்பு இல்லாமல் செய்து உண்மை மறைக்கப்பட்டது. 42 டன் மீதைல் ஐசோசயனைடை ஒரே கொள்கலனில் வைத்திருந்தது சட்டப்படிக் குற்றம், இந்த அளவுக்கான மூலப்பொருளை 200 கலன்களில் வைத்திருந்திருக்க வேண்டும் என்று ஆய்வு நடத்திய வல்லுநர் குழு குறைகூறியுள்ளது என்பதை அரசு பெரிதாக நினைக்கவில்லை.
இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.62 ஆயிரம், பார்வை இழப்பு போன்ற நிரந்தர ஊனமுற்றோருக்கு ரூ.25000 இழப்பீடு வழங்கியதோடு சரி. மொத்தம் ரூ. 1500 கோடி இழப்பீடுகளாக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய அரசு 3 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தது. ஆனால் கிடைத்ததோ அதில் 15 விழுக்காடுதான்.
இத்தனைப் பேர் மரணத்துக்கு காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் வாரன் ஆன்டர்சன் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார். ஆனால் அவர், நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்படும்போதெல்லாம் வருவேன் என்ற உறுதிமொழியுடன் அமெரிக்கா சென்றவர் திரும்ப வரவே இல்லை. நீதிமன்றம் அழைத்தாலும் வரவில்லை. அதன் பிறகே, 17 ஆண்டுகள் கழித்து அவரை மறைந்துவாழும் குற்றவாளியாக அறிவித்து அவரை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்திய அரசு கேட்டுக் கொண்டது. இந்திய அரசு சொல்லும் காரணங்களுக்காக நாங்கள் எமது குடிமகனை உங்களிடம் ஒப்படைக்க இன்னின்ன சட்டங்கள் இடம் தரவில்லை என்று அமெரிக்கா சொல்லிவிட்டது.
இப்போது யூனியன் கார்பைடு கம்பனி என்றே ஒன்று இல்லை என்று ஆகிவிட்டது. அதாவது அந்த நிறுவனத்தை, ஏற்கெனவே பங்குதாரர் என்று சொல்லிக்கொண்டு, டோவ் கெமிக்கல் நிறுவனம் முழுமையாக வாங்கிவிட்டது. இப்போது யார் மீது வழக்கு தொடுப்பது. கீழே தள்ளியதோடு குழியும் பறித்ததாம் குதிரை என்கிற கதையாக, இந்தியாவில் ஏற்பட்ட வேலையிழப்பு நாள்களுக்கு ரூ.10,000 டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு போடும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டது. இந்த டோவ் கெமிக்கல் என்பதே ஒரு பொய்யான ஒன்று என்றும், யூனியன் கார்பைடு நிறுவனத்தை காப்பாற்ற இப்படியான பெயர் மாற்றம் உரிமையாளர் மாற்றம் என்று நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
போபால் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம், ஆன்டர்சனைக் கைது செய்வதற்கான புதிய ஆணையைப் பிறப்பித்துள்ளது. மறுபடியும் இந்திய அரசு இதனை அமெரிக்காவுக்குத் தெரிவித்து, அவர்கள் சட்டத்துக்கு பொருந்தி வந்தால், ஆன்டர்சனை அனுப்பி வைப்பார்கள். ஆனால், இப்போது இந்தியா மீது அமெரிக்கா பொழியும் பாசமழையில் இந்த மாதிரியான முகம் சுளிக்க வைக்கும் பிரச்னைகளை முன்வைக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான்.
சரி, ஆன்டர்சன் ஒப்படைக்கப்பட்டாலும் என்ன நீதி கிடைத்துவிடும்?
"கட்டின புருஷன் சரியில்லாதப்ப, கண்டவனையெல்லாம் குத்தம் சொல்லி என்ன ஆகப்போவது' என்று அழுத பெண்கள் மூக்கைச் சிந்துவதைப் போலத்தான் நாமும் சமாதானம் அடைய வேண்டும் போல. வேறு வழி!
கட்டுரையாளர் : இரா. சோமசுந்தரம்
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் கொள்கலன் 610-ல் தண்ணீர் கலக்கிறது. அந்த டேங்க்கில் இருந்த 42 டன் மீதைல் ஐசோசயனைட், இந்தத் தண்ணீர் பட்டதும் வேதியியல் மாற்றம் அடைகிறது. 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்கிறது. அழுத்தம் தாங்காமல் கொள்கலனின் பாதுகாப்பு மூடிகள் திறந்து கொள்கின்றன. நள்ளிரவில் விஷவாயு வெளியேறிப் பரவுகிறது...போபால் நகர் முழுவதும்!
அப்போது அந்நகரின் மக்கள் தொகை 5.2 லட்சம். இவர்களில் 2 லட்சம் பேர் சிறுவர்கள். 3000 பேர் கருவுற்ற தாய்மார்கள்.
டிசம்பர் 3-ம் தேதி காலை போபால் நகர மக்கள் அனைவரும் கண்ணெரிச்சல், மூச்சடைப்புடன் கண்விழிக்கின்றனர். அன்றைய ஒரு நாளில் மட்டும் சுமார் 4000 பேர் இறந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உண்மையில், இறந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு என்று சொல்லப்படுகிறது. அடுத்த 72 மணி நேரத்தில் இறந்தவர்கள் சுமார் 10,000 பேர். இதன் பாதிப்பால் மெல்லச் செத்தவர்கள் 25,000 பேர்.
இன்னமும் சாகாமல் இருக்கும் இரண்டு விஷயங்களில் முதலாவது, போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீதான வழக்கு ஒன்றுதான். இரண்டாவதாக, யூனியன் கார்பைடு விட்டுச்சென்ற 390 டன் நச்சு வேதிப்பொருள்கள் இன்னமும் போபாலின் நிலத்தடி நீரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.
பராமரிப்பு இல்லாததுதான் விபத்துக்குக் காரணம் என்று தெளிவாக ஆய்வு அறிக்கைகள் குறிப்பிட்டன. பராமரிப்புச் செலவுகளை குறைப்பதற்காக கொள்கலன் 610க்கு அளிக்க வேண்டிய குளிர்பதன வசதியை விலக்கிக் கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனாலும் யூனியன் கார்பைடு இதை ஏற்கவில்லை. ஏதோ ஒரு ஊழியரின் சதிவேலை காரணமாக, கொள்கலன் 610-ல் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளது என்ற வாதத்தை மட்டுமே முன்வைத்தது.
இந்த வாதத்தையும் உப்புசப்பு இல்லாமல் செய்து உண்மை மறைக்கப்பட்டது. 42 டன் மீதைல் ஐசோசயனைடை ஒரே கொள்கலனில் வைத்திருந்தது சட்டப்படிக் குற்றம், இந்த அளவுக்கான மூலப்பொருளை 200 கலன்களில் வைத்திருந்திருக்க வேண்டும் என்று ஆய்வு நடத்திய வல்லுநர் குழு குறைகூறியுள்ளது என்பதை அரசு பெரிதாக நினைக்கவில்லை.
இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.62 ஆயிரம், பார்வை இழப்பு போன்ற நிரந்தர ஊனமுற்றோருக்கு ரூ.25000 இழப்பீடு வழங்கியதோடு சரி. மொத்தம் ரூ. 1500 கோடி இழப்பீடுகளாக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய அரசு 3 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தது. ஆனால் கிடைத்ததோ அதில் 15 விழுக்காடுதான்.
இத்தனைப் பேர் மரணத்துக்கு காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் வாரன் ஆன்டர்சன் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார். ஆனால் அவர், நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்படும்போதெல்லாம் வருவேன் என்ற உறுதிமொழியுடன் அமெரிக்கா சென்றவர் திரும்ப வரவே இல்லை. நீதிமன்றம் அழைத்தாலும் வரவில்லை. அதன் பிறகே, 17 ஆண்டுகள் கழித்து அவரை மறைந்துவாழும் குற்றவாளியாக அறிவித்து அவரை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்திய அரசு கேட்டுக் கொண்டது. இந்திய அரசு சொல்லும் காரணங்களுக்காக நாங்கள் எமது குடிமகனை உங்களிடம் ஒப்படைக்க இன்னின்ன சட்டங்கள் இடம் தரவில்லை என்று அமெரிக்கா சொல்லிவிட்டது.
இப்போது யூனியன் கார்பைடு கம்பனி என்றே ஒன்று இல்லை என்று ஆகிவிட்டது. அதாவது அந்த நிறுவனத்தை, ஏற்கெனவே பங்குதாரர் என்று சொல்லிக்கொண்டு, டோவ் கெமிக்கல் நிறுவனம் முழுமையாக வாங்கிவிட்டது. இப்போது யார் மீது வழக்கு தொடுப்பது. கீழே தள்ளியதோடு குழியும் பறித்ததாம் குதிரை என்கிற கதையாக, இந்தியாவில் ஏற்பட்ட வேலையிழப்பு நாள்களுக்கு ரூ.10,000 டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு போடும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டது. இந்த டோவ் கெமிக்கல் என்பதே ஒரு பொய்யான ஒன்று என்றும், யூனியன் கார்பைடு நிறுவனத்தை காப்பாற்ற இப்படியான பெயர் மாற்றம் உரிமையாளர் மாற்றம் என்று நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
போபால் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம், ஆன்டர்சனைக் கைது செய்வதற்கான புதிய ஆணையைப் பிறப்பித்துள்ளது. மறுபடியும் இந்திய அரசு இதனை அமெரிக்காவுக்குத் தெரிவித்து, அவர்கள் சட்டத்துக்கு பொருந்தி வந்தால், ஆன்டர்சனை அனுப்பி வைப்பார்கள். ஆனால், இப்போது இந்தியா மீது அமெரிக்கா பொழியும் பாசமழையில் இந்த மாதிரியான முகம் சுளிக்க வைக்கும் பிரச்னைகளை முன்வைக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான்.
சரி, ஆன்டர்சன் ஒப்படைக்கப்பட்டாலும் என்ன நீதி கிடைத்துவிடும்?
"கட்டின புருஷன் சரியில்லாதப்ப, கண்டவனையெல்லாம் குத்தம் சொல்லி என்ன ஆகப்போவது' என்று அழுத பெண்கள் மூக்கைச் சிந்துவதைப் போலத்தான் நாமும் சமாதானம் அடைய வேண்டும் போல. வேறு வழி!
கட்டுரையாளர் : இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி
Labels:
அமெரிக்கா,
இந்தியாஅரசு,
கட்டுரை
Wednesday, November 25, 2009
குனியக் குனிய...
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது. அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?
இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!
உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?
சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.
அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.
ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.
கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.
சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?
அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!
குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?
நன்றி : தினமணி
ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?
இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!
உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?
சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.
அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.
ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.
கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.
சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?
அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!
குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?
நன்றி : தினமணி
Monday, November 23, 2009
டாலருக்கு நிகர் வேறு ஏதுமில்லை: மன்மோகன்
உலக வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான நாணயம் வேறு ஏதுவும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, அமெரிக்க தொழில் நிறுவனங்கள், தொழில் தொடங்குவதில் ஊக்கத்துடன் செயல்படுவதை பாராட்டினார். தற்சமயம் டாலருக்கு மாற்றாக வேறு அந்நிய செலவாணியை நினைக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், சீனாவிடம் அந்நிய செலவாணி கையிருப்பாக 2.5 டிரில்லியன் டாலர் உள்ளது. இதில் சிறு அளவு கூட விற்பனை செய்யவில்லை. இதில் இருந்து டாலரின் மேல் உள்ள நம்பிக்கையை அறியலாம். டாலரின் மீதான நம்பிக்கையில் பிரச்னை உள்ளது. இவை விரைவில் தீரும் என்று தெரிவித்தார். அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி பற்றி கேட்டபோது, அமெரிக்க முறையில் இது தற்காலிக பின்னடைவு, தற்காலிகமான கேள்விக்குறியே, ஆனால் இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்று மன்மோகன் சிங் கூறினார்.
நன்றி : தினமலர்
Labels:
அமெரிக்கா,
பொருளாதாரம்
Wednesday, November 18, 2009
நாளை எந்தப் பக்கம்?
சென்றவாரம் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க ஆற்றல் துறை அமைச்சர் ஸ்டீபன் சூ, புதுதில்லியில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐஐடி) மாணவர்களிடையே பேசும்போது, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்: "கோபன்ஹேகன் மாநாட்டில் கரியமில வாயு குறைப்பு குறித்து அமெரிக்கா எந்த உறுதிமொழியையும் வழங்காது'
அதாவது, கியோடோ மாநாட்டுத் தீர்மானத்தின்படி, வளர்ந்த நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா ஏற்கப்போவதில்லை என்பதுதான் இதன் பொருள். இதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார். அமெரிக்கா தனக்கான தூய ஆற்றல் மற்றும் பாதுகாப்புக் குறித்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும், அந்தச் சட்டம் அமெரிக்க அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும், அது நிறைவேறாத நிலையில் கரியமில வாயு குறைப்பு பற்றிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப மாறுதலுக்கான செயல்வரம்பு மாநாட்டில் (UNFCCC) அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிடம் இந்தியா எழுப்பிய கேள்விகள் குறித்துச் சொல்லும்போது, "இந்தியாவின் நிர்பந்தங்களை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். கரியமில வாயு வெளிப்பாட்டை இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகமாகக் குறைக்கத் தேவையில்லை' என்று இந்தியாவுக்கு மனம்குளிரும் பதிலையும் அவர் அளிக்கத் தவறவில்லை.
அதன் பின்னர், அவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அடுத்தநாள் சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, சீனாவை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
சிங்கப்பூரில் ஒபாமாவும், இந்தியாவில் ஸ்டீபன் சூ-வும் இப்படியாகப் பேசக் காரணம், கோபன்ஹேகன் மாநாட்டின்போது அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இந்தியாவும் சீனாவும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான்.
1997-ல் மேற்கொண்ட கியோடோ மாநாட்டு முடிவுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட அமெரிக்காவின் முயற்சிக்கு யாரும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காக இத்தகைய பசப்பு வார்த்தைகளை அமெரிக்கா பேசி வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு அமைச்சர்களை அனுப்பிவைத்தும், சீன நாட்டினைப் புகழ்ந்தும் தோழமை பாராட்டுகிறார்கள்.
உலகில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமானால், உலக நாடுகள் அனைத்தும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இதில் எந்தெந்த நாடுகள் இன்றைய மிக மோசமான புவிவெப்பத்துக்குக் காரணமோ அந்த நாடுகள் 1990-ம் ஆண்டு அளவின்படி குறிப்பிட்ட சதவீத கரியமில வாயு உள்ளிட்ட பசுமைஇல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைக்க வேண்டும். இதுதான் கியோடோ தீர்மானம்.
ஆனால் அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், 2005-ம் ஆண்டு நிலவரப்படி, (1990-ம் ஆண்டு நிலவரப்படி அல்ல), தாங்கள் வெளியேற்றும் பசுமைஇல்ல வாயுக்களில் 20 சதவீதத்தை 2020-ம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வோம் என்பதுதான். இதைவிட, நாங்கள் கொஞ்சம்கூட குறைக்க மாட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்.
இதைப்போன்ற அநியாயம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய வளிமண்டல மாசுகளின் 30 சதவீதம் அமெரிக்காவினால் உண்டானது. தற்போதும் ஆண்டுதோறும் உலகின் மொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 18 சதவீதம் அமெரிக்காவினுடையது. இதற்கு இணையான அளவில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே!
இதனால்தான் வளரும் நாடுகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமானவை. இந்த இரு நாடுகளும் ஒன்றாக நின்றால், கோபன்ஹேகனில் தற்போதுள்ள 141 நாடுகளும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும். ஓர் அணிக்கு சீனா அல்லது இந்தியா தலைமையேற்கும் கட்டாயம் உருவாகும். இது "பெரியண்ணன்' அமெரிக்காவுக்கு அவமரியாதை ஆகிவிடும். தற்போது அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சி வெளிப்படையானது. முதலாவதாக இரு நாடுகளையும் தனக்குச் சாதகமாக இருக்கச் செய்வது; அல்லது சும்மா இருந்தாலும் சரிதான். இரண்டாவதாக, சீனாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, இந்தியாவைத் தனிமைப்படுத்துவது!
இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுதான். இந்தியா தனித்து நின்று எதிர்க்கும் என்றால், அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் நிதியுதவிகள் கிடைக்காது என்பதுடன் வேறு நெருக்கடிகளும் ஏற்படும். உதாரணமாக, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல் பரிமாற்றம் இருக்காது.
இருப்பினும், உலக நன்மைக்காக எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகள்தானே முடிவு எடுப்பவர்களாக இருக்கிறார்கள்!
நன்றி: தினமணி
அதாவது, கியோடோ மாநாட்டுத் தீர்மானத்தின்படி, வளர்ந்த நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா ஏற்கப்போவதில்லை என்பதுதான் இதன் பொருள். இதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார். அமெரிக்கா தனக்கான தூய ஆற்றல் மற்றும் பாதுகாப்புக் குறித்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும், அந்தச் சட்டம் அமெரிக்க அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும், அது நிறைவேறாத நிலையில் கரியமில வாயு குறைப்பு பற்றிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப மாறுதலுக்கான செயல்வரம்பு மாநாட்டில் (UNFCCC) அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிடம் இந்தியா எழுப்பிய கேள்விகள் குறித்துச் சொல்லும்போது, "இந்தியாவின் நிர்பந்தங்களை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். கரியமில வாயு வெளிப்பாட்டை இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகமாகக் குறைக்கத் தேவையில்லை' என்று இந்தியாவுக்கு மனம்குளிரும் பதிலையும் அவர் அளிக்கத் தவறவில்லை.
அதன் பின்னர், அவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அடுத்தநாள் சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, சீனாவை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
சிங்கப்பூரில் ஒபாமாவும், இந்தியாவில் ஸ்டீபன் சூ-வும் இப்படியாகப் பேசக் காரணம், கோபன்ஹேகன் மாநாட்டின்போது அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இந்தியாவும் சீனாவும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான்.
1997-ல் மேற்கொண்ட கியோடோ மாநாட்டு முடிவுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட அமெரிக்காவின் முயற்சிக்கு யாரும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காக இத்தகைய பசப்பு வார்த்தைகளை அமெரிக்கா பேசி வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு அமைச்சர்களை அனுப்பிவைத்தும், சீன நாட்டினைப் புகழ்ந்தும் தோழமை பாராட்டுகிறார்கள்.
உலகில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமானால், உலக நாடுகள் அனைத்தும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இதில் எந்தெந்த நாடுகள் இன்றைய மிக மோசமான புவிவெப்பத்துக்குக் காரணமோ அந்த நாடுகள் 1990-ம் ஆண்டு அளவின்படி குறிப்பிட்ட சதவீத கரியமில வாயு உள்ளிட்ட பசுமைஇல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைக்க வேண்டும். இதுதான் கியோடோ தீர்மானம்.
ஆனால் அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், 2005-ம் ஆண்டு நிலவரப்படி, (1990-ம் ஆண்டு நிலவரப்படி அல்ல), தாங்கள் வெளியேற்றும் பசுமைஇல்ல வாயுக்களில் 20 சதவீதத்தை 2020-ம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வோம் என்பதுதான். இதைவிட, நாங்கள் கொஞ்சம்கூட குறைக்க மாட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்.
இதைப்போன்ற அநியாயம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய வளிமண்டல மாசுகளின் 30 சதவீதம் அமெரிக்காவினால் உண்டானது. தற்போதும் ஆண்டுதோறும் உலகின் மொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 18 சதவீதம் அமெரிக்காவினுடையது. இதற்கு இணையான அளவில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே!
இதனால்தான் வளரும் நாடுகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமானவை. இந்த இரு நாடுகளும் ஒன்றாக நின்றால், கோபன்ஹேகனில் தற்போதுள்ள 141 நாடுகளும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும். ஓர் அணிக்கு சீனா அல்லது இந்தியா தலைமையேற்கும் கட்டாயம் உருவாகும். இது "பெரியண்ணன்' அமெரிக்காவுக்கு அவமரியாதை ஆகிவிடும். தற்போது அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சி வெளிப்படையானது. முதலாவதாக இரு நாடுகளையும் தனக்குச் சாதகமாக இருக்கச் செய்வது; அல்லது சும்மா இருந்தாலும் சரிதான். இரண்டாவதாக, சீனாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, இந்தியாவைத் தனிமைப்படுத்துவது!
இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுதான். இந்தியா தனித்து நின்று எதிர்க்கும் என்றால், அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் நிதியுதவிகள் கிடைக்காது என்பதுடன் வேறு நெருக்கடிகளும் ஏற்படும். உதாரணமாக, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல் பரிமாற்றம் இருக்காது.
இருப்பினும், உலக நன்மைக்காக எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகள்தானே முடிவு எடுப்பவர்களாக இருக்கிறார்கள்!
நன்றி: தினமணி
Labels:
அமெரிக்கா,
சுற்றுச்சூழல்
Monday, November 16, 2009
அமெரிக்காவில் மேலும் 3 வங்கிகள் திவால்
அமெரிக்காவில் மேலும் மூன்று வங்கிகள் திவால் ஆகி உள்ளன. அமெரிக்கா பொருளாதார சரிவில் இருந்து மீட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து இருந்தார். இருப்பினும், அங்கு வங்கிகள் திவாலாவது மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிதியாண்டில் மட்டும் இதுவரை 123 வங்கிகள் மூடப் பட்டுள்ளன. இதில் 24 வங்கிககள் இந்த மாதம் மட்டும் மூடப் பட்ட வங்கிகளாகும். சமீபத்தில் அங்குள்ள ஓரியன் வங்கி, பசிபிக் கோஸ்ட் நேஷனல் வங்கி மற்றும் செஞ்சுரி வங்கி ஆகியவை மூடப் பட்டன. ஓரியன் வங்கி 2.7 பில்லியன் சொத்துக்களையும் 2.1 பில்லியன் டெபாசிட்டுகளையும் கொண்டிருந்தது. செஞ்சுரி வங்கி 728 மில்லியன் சொத்துக்கள் மற்றும் 631 டெபாஸிட்டுகளையும் கொண்டுள்ளது.நன்றி : தினமலர்
Friday, November 13, 2009
உலக(கே) ம(ô)யம்!
இடைத்தேர்தல் முடிவுகள் சாதாரணமாக ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அமைவதுதான் இயற்கை. பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள், மாநில ஆளுங்கட்சிகளுக்கு எதிரானதாக இந்தியாவில் அமைந்திருப்பதுகூட ஆச்சரியமில்லை. எதுவுமே செய்யாமல் நோபல் பரிசு பெறும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்கு எதிராகவும் அங்கே நடந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதுதான் ஆச்சரியம்.
அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் முதல் அமெரிக்கக் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவரான பராக் ஒபாமாவின் ஆட்சியின் மீது ஓராண்டுக்குள் மக்கள் அதிருப்தி அடைந்துவிட்டார்களோ என்கிற ஐயத்தை எழுப்புகிறது சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு மாநில ஆளுநர்களுக்கான தேர்தல் முடிவுகள். கடந்த வாரம் நடந்த வர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாநில ஆளுநர் தேர்தல்களில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பின்னடைவைச் சந்தித்திருப்பது பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
ஓராண்டுக்கு முன்னால் நடந்த அதிபர் தேர்தலில், யாரும் எதிர்பாராதவிதமாக வர்ஜீனியா மாநிலத்தில் அதிபர் ஒபாமா முன்னணி வகித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆளுநர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிரெய்க் டீட்ஸ், குடியரசுக் கட்சி வேட்பாளரான ராபர்ட் மெக்டொனால்டிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.
நியூஜெர்சி மாநிலம் கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் வசம் இருக்கும் மாநிலம் என்பது மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் எல்லா தளத்திலும் ஜனநாயகக் கட்சியே அதிகாரத்திலும் இருக்கிறது. நியூஜெர்சியில் குடியரசுக் கட்சி வேட்பாளரான கிறிஸ்டோபர் கிரிஸ்டி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கோர்சைனைத் தோற்கடித்து ஆளுநராகி இருக்கிறார்.
வேடிக்கை என்னவென்றால், தான் அதிபரான பிறகு நடக்கும் தேர்தல்கள் இவை என்பதால், பராக் ஒபாமா இந்த இரண்டு மாநிலங்களிலும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பதுதான். எப்படியும் இந்த இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே, தனது செல்வாக்குச் சரிந்துவிடாமல் காப்பாற்றப்படும் என்று அதிபர் ஒபாமா கருதியதில் தவறு ஒன்றுமில்லை.
இந்த இரண்டு மாநில ஆளுநர் தேர்தல்களும் முக்கியத்துவம் பெற்றதன் காரணம், அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 435 உறுப்பினர்கள் கொண்ட அமெரிக்க மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதுதான். அதுமட்டுமல்ல, அமெரிக்க மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு பெற்று, அந்த இடங்களுக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாநிலங்களில் பின்னடைவு ஏற்படுவது என்பது தனக்கு எதிரான மனோநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடக்கூடும் என்று அதிபர் ஒபாமா பயப்பட்டதில் நியாயமில்லாமல் இல்லை.
கடந்த ஆண்டு, அதிபர் தேர்தல், மேலவைத் தேர்தல் மற்றும் மக்களவைக்கான இடைத்தேர்தல்கள் என்று தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த குடியரசுக் கட்சியினருக்கு, இந்த இரண்டு மாநில ஆளுநர் தேர்தல் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 2010-ல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களை குடியரசுக் கட்சி வென்றுவிட்டால், அதிபர் ஒபாமா பலவீனமாகி விடுவார் என்பதால் ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் ஒருவித கலக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மாநில அளவிலான பிரச்னைகளை முன்னிறுத்தித் தேர்தல் முடிவுகள் அமைந்ததாக ஜனநாயகக் கட்சியினர் சமாதானம் சொன்னாலும், பொருளாதாரப் பிரச்னைகளை ஒபாமா நிர்வாகம் சரியாகக் கையாளாததுதான் தோல்விக்குக் காரணம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. இந்த முறை சுயேச்சைகள் குடியரசுக் கட்சியை ஆதரித்திருப்பதும், அதிபர் தேர்தலில் பெரிய அளவில் தேர்தலில் கலந்துகொண்ட கறுப்பர் இனத்தவர்கள், இந்தத் தேர்தலில் உற்சாகம் இழந்து தேர்தலில் பங்கு பெறாததும்கூட, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் தோல்விக்குக் காரணம் என்று கருத இடமிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, நியூயார்க் மாநகராட்சியின் மேயராக மீண்டும் கோடீஸ்வரர் மைக்கேல் ப்ளூம்பர்க் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அதிலென்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? இரண்டு தடவைக்கு மேல் ஒரு நபர் மேயர் பதவியில் தொடரக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தது. சுமார் 10 கோடி டாலர், அதாவது, 500 கோடி ரூபாய் செலவழித்து, அந்த விதியையே மாற்றி மூன்றாவது முறையாகத் தானே நியூயார்க்கின் மேயராகி இருக்கிறார் மைக்கேல் ப்ளூம்பர்க்! பணம் பாதாளம் வரை பாயும்தானே!
இடைத்தேர்தல் முடிவுகளிலும் சரி, பணம் பங்கு வகிப்பதிலும் சரி, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிகிறது. யாரைப் பார்த்து யார் படித்தது? ஹும்... உலகமயம் என்பதில் இதுகூட சேர்த்தி போலிருக்கிறது...
நன்றி : தினமணி
அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் முதல் அமெரிக்கக் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவரான பராக் ஒபாமாவின் ஆட்சியின் மீது ஓராண்டுக்குள் மக்கள் அதிருப்தி அடைந்துவிட்டார்களோ என்கிற ஐயத்தை எழுப்புகிறது சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு மாநில ஆளுநர்களுக்கான தேர்தல் முடிவுகள். கடந்த வாரம் நடந்த வர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாநில ஆளுநர் தேர்தல்களில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பின்னடைவைச் சந்தித்திருப்பது பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
ஓராண்டுக்கு முன்னால் நடந்த அதிபர் தேர்தலில், யாரும் எதிர்பாராதவிதமாக வர்ஜீனியா மாநிலத்தில் அதிபர் ஒபாமா முன்னணி வகித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆளுநர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிரெய்க் டீட்ஸ், குடியரசுக் கட்சி வேட்பாளரான ராபர்ட் மெக்டொனால்டிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.
நியூஜெர்சி மாநிலம் கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் வசம் இருக்கும் மாநிலம் என்பது மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் எல்லா தளத்திலும் ஜனநாயகக் கட்சியே அதிகாரத்திலும் இருக்கிறது. நியூஜெர்சியில் குடியரசுக் கட்சி வேட்பாளரான கிறிஸ்டோபர் கிரிஸ்டி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கோர்சைனைத் தோற்கடித்து ஆளுநராகி இருக்கிறார்.
வேடிக்கை என்னவென்றால், தான் அதிபரான பிறகு நடக்கும் தேர்தல்கள் இவை என்பதால், பராக் ஒபாமா இந்த இரண்டு மாநிலங்களிலும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பதுதான். எப்படியும் இந்த இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே, தனது செல்வாக்குச் சரிந்துவிடாமல் காப்பாற்றப்படும் என்று அதிபர் ஒபாமா கருதியதில் தவறு ஒன்றுமில்லை.
இந்த இரண்டு மாநில ஆளுநர் தேர்தல்களும் முக்கியத்துவம் பெற்றதன் காரணம், அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 435 உறுப்பினர்கள் கொண்ட அமெரிக்க மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதுதான். அதுமட்டுமல்ல, அமெரிக்க மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு பெற்று, அந்த இடங்களுக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாநிலங்களில் பின்னடைவு ஏற்படுவது என்பது தனக்கு எதிரான மனோநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடக்கூடும் என்று அதிபர் ஒபாமா பயப்பட்டதில் நியாயமில்லாமல் இல்லை.
கடந்த ஆண்டு, அதிபர் தேர்தல், மேலவைத் தேர்தல் மற்றும் மக்களவைக்கான இடைத்தேர்தல்கள் என்று தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த குடியரசுக் கட்சியினருக்கு, இந்த இரண்டு மாநில ஆளுநர் தேர்தல் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 2010-ல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களை குடியரசுக் கட்சி வென்றுவிட்டால், அதிபர் ஒபாமா பலவீனமாகி விடுவார் என்பதால் ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் ஒருவித கலக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மாநில அளவிலான பிரச்னைகளை முன்னிறுத்தித் தேர்தல் முடிவுகள் அமைந்ததாக ஜனநாயகக் கட்சியினர் சமாதானம் சொன்னாலும், பொருளாதாரப் பிரச்னைகளை ஒபாமா நிர்வாகம் சரியாகக் கையாளாததுதான் தோல்விக்குக் காரணம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. இந்த முறை சுயேச்சைகள் குடியரசுக் கட்சியை ஆதரித்திருப்பதும், அதிபர் தேர்தலில் பெரிய அளவில் தேர்தலில் கலந்துகொண்ட கறுப்பர் இனத்தவர்கள், இந்தத் தேர்தலில் உற்சாகம் இழந்து தேர்தலில் பங்கு பெறாததும்கூட, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் தோல்விக்குக் காரணம் என்று கருத இடமிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, நியூயார்க் மாநகராட்சியின் மேயராக மீண்டும் கோடீஸ்வரர் மைக்கேல் ப்ளூம்பர்க் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அதிலென்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? இரண்டு தடவைக்கு மேல் ஒரு நபர் மேயர் பதவியில் தொடரக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தது. சுமார் 10 கோடி டாலர், அதாவது, 500 கோடி ரூபாய் செலவழித்து, அந்த விதியையே மாற்றி மூன்றாவது முறையாகத் தானே நியூயார்க்கின் மேயராகி இருக்கிறார் மைக்கேல் ப்ளூம்பர்க்! பணம் பாதாளம் வரை பாயும்தானே!
இடைத்தேர்தல் முடிவுகளிலும் சரி, பணம் பங்கு வகிப்பதிலும் சரி, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிகிறது. யாரைப் பார்த்து யார் படித்தது? ஹும்... உலகமயம் என்பதில் இதுகூட சேர்த்தி போலிருக்கிறது...
நன்றி : தினமணி
Saturday, November 7, 2009
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலை இழப்புக்கள்
அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேற்றம் பெற்று வருவதாக அதிபர் ஒபாமா சொல்லி சில நாட்களுக்கு உள்ளே, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளது. அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 1,90,000 பேர் வேலை இழந்துள்ளனர். இது அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிட 2 சதவிகிதம் அதிகம். 'நிச்சயம் இது கவலைப்படத்தக்க விஷயமே. அமெரிக்க நிர்வாகம் உடனடியாக இதில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய நிதிச் சலுகைகளை அரசு அதிகரித்தாக வேண்டும்' என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வேலை இழப்புகள் தொடர்ந்து 22 மாதங்களாக அதிகரித்தபடி உள்ளதுதான் ஒபாமா நிர்வாகத்தை பெரிதும் பயமுறுத்தி வருகிறது.நன்றி : தினமலர்
Labels:
அமெரிக்கா,
வேலை இழப்பு
Monday, November 2, 2009
வீழ்ச்சியில் இருந்து மீட்டு வருகிறது அமெரிக்க பொருளாதாரம்
அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து மீட்டு வருவதாகவும், இதுவே சரியான பாதை என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். கடந்த ஆண்டு உலக அளவில் நடந்த பொருளாதார வீழ்ச்சி காரணமாக வளர்ந்த பல நாடுகள் இன்னல்களில் சிக்கின. அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் வேலை இழப்பு, ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகிறனர்.இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல அனைத்து நாடுகள் மீட்டு வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து மீட்டு வருவதாகவும், இதுவே சரியான பாதை என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், வங்கிதுறை மற்றும் வேலைவாய்பபு நிலையில் சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி சலுகைகள் காரணமாக மூன்றாவது காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து எழுந்து 3.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் வேலை இழப்பை தடுக்க தேவையான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Labels:
அமெரிக்கா,
பொருளாதாரம்
Monday, October 19, 2009
கடலுக்கு யார் காவல்?
உலகமயம் என்கிற போர்வையில் இந்தியாவும் ஏனைய வளர்ச்சி அடையும் பொருளாதாரங்களும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தேவைக்கும் வசதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறுபவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். மேலோட்டமாக வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டு, தேசத்தின் அடிப்படை ஸ்திரத்தன்மை தகர்க்கப்பட்டு வருகிறது.
உலகமயம் என்கிற பெயரில் அவர்களது பொருள்களை விற்கும் சந்தையாக மட்டும் இந்தியா பயன்படுத்தப்பட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளை அசுத்தப்படுத்தும் கழிவுப் பொருள்களையும், அந்த நாட்டு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சுப் பொருள்களையும், கதிரியக்கத்தை ஏற்படுத்தும் பொருள்களையும் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டியாக நாம் மாற்றப்படுவதை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பது?
அதைவிட துர்பாக்கியமான நிலைமை என்ன தெரியுமா? நமது அரசும் ஆட்சியாளர்களும் இது தெரிந்தும் தெரியாததுபோல இருப்பதும், மறைமுகமாக இதுபோன்ற செயல்களுக்கு ஆதரவு அளிப்பதும்தான். ஏன் நீதிமன்றங்களேகூட இந்தச் சம்பவங்களை சட்டத்தின் போர்வையில் ஆதரிக்கத் தலைப்படுகின்றன என்பதுதான் அதைவிட வேதனைதரும் விஷயம்.
ஓராண்டுக்கு முன்னால் எஸ்.எஸ். நார்வே என்கிற கப்பல் "ப்ளுலேடி' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு கடல் பயணத்துக்கு உகந்ததல்ல என்பதால் அதை உடைப்பதற்கு வங்கதேசத்துக்கு வந்தது. சுமார் 1,240 டன்கள் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாசும், பாலி க்ளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சுத்தன்மையையுடைய ரசாயனமும் இருப்பதாக அந்த நிறுவனத்தாரே ஒப்புக்கொண்ட அந்தக் கப்பலை உடைக்க சின்னஞ்சிறு வங்கதேசமும், மலேசியாவும் கூட மறுத்துவிட்ட நிலையில் "ப்ளுலேடி' இந்தியாவைத் தஞ்சமடைந்தது.
என்னவாயிற்று தெரியுமா? நமது நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்று, குஜராத் மாநிலம் பவநகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் அந்தக் கப்பல் உடைத்துப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அந்தக் கப்பல் உரிமையாளர்களின் கோரிக்கை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த 2005-ம் ஆண்டில் பன்னாட்டுப் புகையிலை நிறுவனமான ஐடிசி நிறுவனத்தாரின் காகித தொழிற்சாலைப் பிரிவினர் 25,000 டன் பழைய பேப்பர் இறக்குமதி செய்வதாகக் கூறி நியூஜெர்ஸி நகரத்தின் குப்பைக் கூளங்களையும் சில கன்டெய்னர்களில் நிரப்பி அந்தக் கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதற்குக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதுபோல எந்தெந்த பன்னாட்டு நிறுவனங்கள் என்னென்ன நச்சுப் பொருள்களையும் கழிவுப் பொருள்களையும், ரகசியமாக இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுகிறார்களோ, யார் கண்டது?.
இப்போது மீண்டும் ஒரு பிரச்னைக்குரிய கப்பல் குஜராத் செüராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் நங்கூரமிடப்பட்டு இருக்கிறது. "எஸ்.எஸ். இண்டிபென்டன்ஸ்' என்கிற அந்தக் கப்பல் எம்.எஸ். ஓஷியானிக் என்று முதலில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு இப்போது "பிளாட்டினம் 2' என்கிற பெயருடன் இந்தியத் துறைமுகத்துக்கு வந்திருக்கிறது. இந்த அமெரிக்கக் கப்பல் இந்தியாவைத் தஞ்சம் அடைவானேன்?.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துபாய் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பலை ஏன் அமெரிக்காவிலேயே உடைத்து பிரிக்கக் கூடாது? நியாயமாகப் பார்த்தால் அமெரிக்கக் கப்பலான "பிளாட்டினம் 2' அமெரிக்காவில் பிரிக்கப்படுவதுதானே நியாயம்?
அமெரிக்கச் சுற்றுச்சூழல் சட்டப்படி சுமார் 200 டன்களுக்கும் அதிகமான "ஆஸ்பெஸ்டாஸ்' அடங்கிய பொருள்களும் சுமார் 210 டன்கள் பாலி குளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சு ரசாயனம் கலந்த பொருள்களும் இருக்கும் இந்தக் கப்பல் அமெரிக்காவில் உடைக்கப்பட முடியாது. இதை உடைப்பதால் அமெரிக்கச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படலாம் என்று அமெரிக்க அரசு கருதுகிறது. அமெரிக்கச் சட்டங்கள் அனுமதி மறுக்கின்றன.
இந்தியாவை இந்தக் கப்பல் எப்படி அடைந்தது என்று கேட்டால் அதைவிட சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைக்கிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி செüராஷ்டிரா கடற்கரையை ஒட்டிய ஆழ்கடலை அடைந்த இந்தக் கப்பல் பவநகரிலுள்ள "அலங்க்' கப்பல் உடைப்புத் தளத்துக்கு மாநில அரசின் அனுமதி பெறாமல், ஒரு விசைத்தோணி மூலம் இழுத்து வரப்பட்டது. எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் அந்த விசைத்தோணி இன்னொரு கப்பலில் மோதிவிட அங்கேயே அந்தக் கப்பல் கைகழுவப்பட்டது.
இந்தக் கப்பலை யாருக்கும் தெரியாமல் "அலங்க்' கப்பல் உடைக்கும் தளத்துக்குக் கொண்டு வர எத்தனித்த தனியார் நிறுவனம் கைகழுவி விட்டதால் கடலில் நங்கூரமிட்டது இந்தக் கப்பல். விவரமறிந்த குஜராத் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கப்பலைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். ஒருவேளை, அந்தத் தனியார் நிறுவனமே கூடத் திட்டமிட்டு இந்தக் கப்பலை நடுக்கடலிலிருந்து விசைத்தோணி மூலம் இந்தியக் கடல் எல்லைக்குள் இழுத்துக் கொண்டுவந்து கைவிட்டதோ என்னவோ? கப்பல் உரிமையாளரிடம் அதற்குப் பெரிய தொகை பெற்றிருக்கலாம். இந்திய எல்லைக்குள் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கப்பலை நாம் நடுக்கடலில் கொண்டு விட முடியாது. உடைத்துத்தானே தீரவேண்டும்?
இதைப்பற்றி ஓர் அறிக்கை தயாரிக்கச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறது மத்திய சுற்றுச்சூழல் துறை. இதுபோன்ற நச்சுக்கழிவுகளும், கதிரியக்கத்தைத் தோற்றுவிக்கும் பொருள்களையும் கொண்ட ஒரு கப்பலை யார், எப்படி, எதற்காக இந்திய எல்லையில் நங்கூரம் பாய்ச்ச அனுமதித்தது என்று விசாரணை நடத்தவும் உத்தரவிடப் போவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர்.
இதுபோன்ற கப்பல்கள் உள்ளே வருவதை கண்காணிப்பதுதானே கடலோரப் பாதுகாப்பு படையினரின் வேலை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, படுகிறதா? மும்பை தாக்குதலுக்கு வந்தவர்களையே கண்காணிக்காமல் விட்டவர்கள்தானே அவர்கள்? அதற்குப் பிறகாவது உஷாராக இருந்திருக்கவேண்டாமா?
உலகமயம் என்கிற பெயரில் உலகின் நச்சுப் பொருள்களும், கதிரியக்கப் பொருள்களும், கழிவுகளும் கொட்டப்படுவதற்கு நமது தாய்த்திருநாடு பயன்படுகிறது என்பதைப் பார்க்க நமக்கு ரத்தம் கொதிக்கிறது. ஆனால், நமது ஆட்சியாளர்களை இது சற்றும் பாதித்ததாகவே தெரியவில்லை! இந்த லட்சணத்தில் நாம் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் வேறு செய்துகொண்டிருக்கிறோம். மிக அதிகமான கதிரியக்கம் உள்ள அணுக்கழிவுகள் இந்தியாவில் கொட்டப்பட மாட்டாது என்பது என்ன நிச்சயம்?
நன்றி : தினமணி
உலகமயம் என்கிற பெயரில் அவர்களது பொருள்களை விற்கும் சந்தையாக மட்டும் இந்தியா பயன்படுத்தப்பட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளை அசுத்தப்படுத்தும் கழிவுப் பொருள்களையும், அந்த நாட்டு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சுப் பொருள்களையும், கதிரியக்கத்தை ஏற்படுத்தும் பொருள்களையும் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டியாக நாம் மாற்றப்படுவதை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பது?
அதைவிட துர்பாக்கியமான நிலைமை என்ன தெரியுமா? நமது அரசும் ஆட்சியாளர்களும் இது தெரிந்தும் தெரியாததுபோல இருப்பதும், மறைமுகமாக இதுபோன்ற செயல்களுக்கு ஆதரவு அளிப்பதும்தான். ஏன் நீதிமன்றங்களேகூட இந்தச் சம்பவங்களை சட்டத்தின் போர்வையில் ஆதரிக்கத் தலைப்படுகின்றன என்பதுதான் அதைவிட வேதனைதரும் விஷயம்.
ஓராண்டுக்கு முன்னால் எஸ்.எஸ். நார்வே என்கிற கப்பல் "ப்ளுலேடி' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு கடல் பயணத்துக்கு உகந்ததல்ல என்பதால் அதை உடைப்பதற்கு வங்கதேசத்துக்கு வந்தது. சுமார் 1,240 டன்கள் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாசும், பாலி க்ளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சுத்தன்மையையுடைய ரசாயனமும் இருப்பதாக அந்த நிறுவனத்தாரே ஒப்புக்கொண்ட அந்தக் கப்பலை உடைக்க சின்னஞ்சிறு வங்கதேசமும், மலேசியாவும் கூட மறுத்துவிட்ட நிலையில் "ப்ளுலேடி' இந்தியாவைத் தஞ்சமடைந்தது.
என்னவாயிற்று தெரியுமா? நமது நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்று, குஜராத் மாநிலம் பவநகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் அந்தக் கப்பல் உடைத்துப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அந்தக் கப்பல் உரிமையாளர்களின் கோரிக்கை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த 2005-ம் ஆண்டில் பன்னாட்டுப் புகையிலை நிறுவனமான ஐடிசி நிறுவனத்தாரின் காகித தொழிற்சாலைப் பிரிவினர் 25,000 டன் பழைய பேப்பர் இறக்குமதி செய்வதாகக் கூறி நியூஜெர்ஸி நகரத்தின் குப்பைக் கூளங்களையும் சில கன்டெய்னர்களில் நிரப்பி அந்தக் கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதற்குக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதுபோல எந்தெந்த பன்னாட்டு நிறுவனங்கள் என்னென்ன நச்சுப் பொருள்களையும் கழிவுப் பொருள்களையும், ரகசியமாக இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுகிறார்களோ, யார் கண்டது?.
இப்போது மீண்டும் ஒரு பிரச்னைக்குரிய கப்பல் குஜராத் செüராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் நங்கூரமிடப்பட்டு இருக்கிறது. "எஸ்.எஸ். இண்டிபென்டன்ஸ்' என்கிற அந்தக் கப்பல் எம்.எஸ். ஓஷியானிக் என்று முதலில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு இப்போது "பிளாட்டினம் 2' என்கிற பெயருடன் இந்தியத் துறைமுகத்துக்கு வந்திருக்கிறது. இந்த அமெரிக்கக் கப்பல் இந்தியாவைத் தஞ்சம் அடைவானேன்?.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துபாய் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பலை ஏன் அமெரிக்காவிலேயே உடைத்து பிரிக்கக் கூடாது? நியாயமாகப் பார்த்தால் அமெரிக்கக் கப்பலான "பிளாட்டினம் 2' அமெரிக்காவில் பிரிக்கப்படுவதுதானே நியாயம்?
அமெரிக்கச் சுற்றுச்சூழல் சட்டப்படி சுமார் 200 டன்களுக்கும் அதிகமான "ஆஸ்பெஸ்டாஸ்' அடங்கிய பொருள்களும் சுமார் 210 டன்கள் பாலி குளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சு ரசாயனம் கலந்த பொருள்களும் இருக்கும் இந்தக் கப்பல் அமெரிக்காவில் உடைக்கப்பட முடியாது. இதை உடைப்பதால் அமெரிக்கச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படலாம் என்று அமெரிக்க அரசு கருதுகிறது. அமெரிக்கச் சட்டங்கள் அனுமதி மறுக்கின்றன.
இந்தியாவை இந்தக் கப்பல் எப்படி அடைந்தது என்று கேட்டால் அதைவிட சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைக்கிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி செüராஷ்டிரா கடற்கரையை ஒட்டிய ஆழ்கடலை அடைந்த இந்தக் கப்பல் பவநகரிலுள்ள "அலங்க்' கப்பல் உடைப்புத் தளத்துக்கு மாநில அரசின் அனுமதி பெறாமல், ஒரு விசைத்தோணி மூலம் இழுத்து வரப்பட்டது. எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் அந்த விசைத்தோணி இன்னொரு கப்பலில் மோதிவிட அங்கேயே அந்தக் கப்பல் கைகழுவப்பட்டது.
இந்தக் கப்பலை யாருக்கும் தெரியாமல் "அலங்க்' கப்பல் உடைக்கும் தளத்துக்குக் கொண்டு வர எத்தனித்த தனியார் நிறுவனம் கைகழுவி விட்டதால் கடலில் நங்கூரமிட்டது இந்தக் கப்பல். விவரமறிந்த குஜராத் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கப்பலைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். ஒருவேளை, அந்தத் தனியார் நிறுவனமே கூடத் திட்டமிட்டு இந்தக் கப்பலை நடுக்கடலிலிருந்து விசைத்தோணி மூலம் இந்தியக் கடல் எல்லைக்குள் இழுத்துக் கொண்டுவந்து கைவிட்டதோ என்னவோ? கப்பல் உரிமையாளரிடம் அதற்குப் பெரிய தொகை பெற்றிருக்கலாம். இந்திய எல்லைக்குள் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கப்பலை நாம் நடுக்கடலில் கொண்டு விட முடியாது. உடைத்துத்தானே தீரவேண்டும்?
இதைப்பற்றி ஓர் அறிக்கை தயாரிக்கச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறது மத்திய சுற்றுச்சூழல் துறை. இதுபோன்ற நச்சுக்கழிவுகளும், கதிரியக்கத்தைத் தோற்றுவிக்கும் பொருள்களையும் கொண்ட ஒரு கப்பலை யார், எப்படி, எதற்காக இந்திய எல்லையில் நங்கூரம் பாய்ச்ச அனுமதித்தது என்று விசாரணை நடத்தவும் உத்தரவிடப் போவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர்.
இதுபோன்ற கப்பல்கள் உள்ளே வருவதை கண்காணிப்பதுதானே கடலோரப் பாதுகாப்பு படையினரின் வேலை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, படுகிறதா? மும்பை தாக்குதலுக்கு வந்தவர்களையே கண்காணிக்காமல் விட்டவர்கள்தானே அவர்கள்? அதற்குப் பிறகாவது உஷாராக இருந்திருக்கவேண்டாமா?
உலகமயம் என்கிற பெயரில் உலகின் நச்சுப் பொருள்களும், கதிரியக்கப் பொருள்களும், கழிவுகளும் கொட்டப்படுவதற்கு நமது தாய்த்திருநாடு பயன்படுகிறது என்பதைப் பார்க்க நமக்கு ரத்தம் கொதிக்கிறது. ஆனால், நமது ஆட்சியாளர்களை இது சற்றும் பாதித்ததாகவே தெரியவில்லை! இந்த லட்சணத்தில் நாம் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் வேறு செய்துகொண்டிருக்கிறோம். மிக அதிகமான கதிரியக்கம் உள்ள அணுக்கழிவுகள் இந்தியாவில் கொட்டப்பட மாட்டாது என்பது என்ன நிச்சயம்?
நன்றி : தினமணி
Labels:
அமெரிக்கா,
தலையங்கம்,
நீதி மன்றம்
Thursday, October 15, 2009
பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டது அமெரிக்கா: கருத்து கணிப்பு
அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு விட்டதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து நேஷனல் அசோசியேசன் ஆப் பசினஸ் எகனாமிக்ஸ்(என்.ஏ.பி.ஈ.,) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், 44 பிரபல அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடம் கருத்து கணிப்பு நடத்தினோம். இதில் 80 சதவீதத்தினர் அமெரிக்க வரலாற்றில் கண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடி காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளது.நன்றி : தினமலர்
Labels:
அமெரிக்கா,
பொருளாதாரம்
Tuesday, October 13, 2009
இந்திய சாலைகளில் பவனி வர காத்திருக்கும் அமெரிக்க பைக்
அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்ஸன் பைக் உலகளவில் பிரசித்தி பெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியாவிலும் இந்த பைக் விற்பனை துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் இந்த பைக் இந்தியாவில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் சார்பில் பல மாடல்களில் பைக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில், குறைந்தபட்சம் 15 மாடல் பைக்குகளாவது, இந்தியாவில் கிடைக்கும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டது.ஹார்லி டேவிட்ஸன் பைக் விற்பனைக்கான டீலர்ஷிப் பெற, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராத வகையில், இந்தியாவில் இந்த பைக்குக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. எனவே, டீலர்ஷிப் பெறுவதிலும் ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். துவக்கத்தில் பஞ்சாப், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் டில்லியில் மட்டும் டீலர்ஷிப் துவக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது காணப்படும் வரவேற்பை கருத்தில் கொண்டு, டீலர்ஷிப்புக்காக விண்ணபிக்கும் காலக்கெடு நவம்பர் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய முக்கிய நகரங்கள் அனைத்திலும் இந்த பைக் கிடைக்கும் வகையில், டீலர்ஷிப்பை விரிவுப்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது. இந்தியாவில் இந்த பைக்கின் விலை ரூ.3.5 லட்சம் என்ற அளவில் இருக்கும்.
நன்றி : தினமலர்
Monday, August 24, 2009
பழைய கார்கள் விற்பனையில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆர்வம்
பழைய கார்கள் விற்பனையில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளது. தனது நிறுவனத்தின் கார்களின் செகண்ட் ஹேண்ட் சேஸ்சை 15 மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் . நாடு முழுவதும் செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனைக்காக 17 அவட்லெட்கள் திறந்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். இந்த ஆண்டு முடிவுக்குள் இந்த எண்ணிக்கையை 50ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த பேட்டியளித்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்லிம் : செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை மார்ச் மாதம் துவக்கப்பட்டது. இதுவரை 100 கார்கள் விற்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தற்பேததைய நிலவரப்படி 203 டீலர்கள் இருக்கின்றனர். டீலர்கள் எண்ணிக்கையை 2009ம் ஆண்டுக்குள் 260ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.நன்றி : தினமலர்
Subscribe to:
Posts (Atom)
