Friday, August 29, 2008

பங்கு சந்தையில் மீண்டும் காளைகளின் ஆதிக்கம் ; சென்செக்ஸ் 3.4 சதவீதம் உயர்ந்தது

இந்திய பங்கு சந்தையில் மீண்டும் காளையின் ஆதிக்கம் ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 516.19 புள்ளிகள் ( 3.67 சதவீதம் ) உயர்ந்து 14,564.53 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 146 புள்ளிகள் ( 3.46 சதவீதம் ) உயர்ந்து 4,360.00 புள்ளிகளில் முடிந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், பணவீக்கம் எதிர்பார்த்ததை போல் உயராமல் குறைந்திருந்ததால், இன்று முழுவதும் காளையின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இன்ஃப்ராஸ்டரக்ஸர், ஆயில், மெட்டல் மற்றும் டெக்னாலஜி பங்குகள் பெருமளவு விற்பனை ஆயின. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் உயர்ந்திருந்தன. உலக அளவில் பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை இருந்ததும் இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்தது. பணவீக்கம் 12.79 சதவீதமாக இருக்கும் என்ற சிஎன்பிசி - டிவி18 யின் கணிப்பை பொய்யாக்கிவிட்டு பணவீக்கம் 12.40 சதவீதமாக இருந்தது பங்கு சந்தையில் நல்ல வளர்ச்சியை கொண்டு வந்தது.
நன்றி : தினமலர்


ஐ சி ஐ சி ஐ வங்கி துணை தலைவர் ராஜினாமா ; ஜேபி மார்கனின் சேர்ந்தார்

ஐ சி ஐ சி ஐ பேங்க்கின் இன்சூரன்ஸ் பிரிவு துணைதலைவராக பணியாற்றிய கல்பனா மோர்பாரியா, அதிலிருந்து விலகி விட்டார். அவர் ஜேபி மார்கன் நிதி நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவராக பொறுப்பேற்றார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ சி ஐ சி ஐ வங்கியில் கல்பனா மோர்பாரியா கடந்த 33 வருடமாக பணியாற்றியவர். அங்கு அவர், இன்சூரன்ஸ், செக்யூரிட்டீஸ் மற்றும் அசட் மேனெஜ்மென்ட் துறையில் தலைவராக பணியாற்றி வந்தார். 1975ம் வருடம் ஐ சி ஐ சி ஐ வங்கியில் சேர்ந்த கல்பனா, 2001 ம் ஆண்டு இயக்குனர்கள் குழுவில் இடம் பெற்றார். 2007 மே மாதம் வரை அதின் இணை மேலாண் இயக்குனராக இருந்தார். 2007 ஜூனில் இயக்குனர் குழுவில் இருந்து விலகினார். பின்னர் அவர் அந்த வங்கியின் இன்சூரன்ஸ் மற்றும் அசட் மேனேஜ்மென்ட் பிரிவின் துணை தலைவராக பணியாற்றினார். இப்போது அதிலிருந்து விலகிய கல்பனா, ஜேபி மார்கன் என்ற நிதி நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
நன்றி : தினமலர்

ரூ.14,999 க்கு லேப்டாப் : ஜெனித் அறிமுகப்படுத்தியது

இந்தியாவின் பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஜெனித், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.14,999 க்கு லேப்டாப்பையும் ரூ.11,999 க்கு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் மூன்று மாடல்களில் இருக்கின்றன. இந்த மாடல்கள் எல்லாம் எக்கோஸ்டைல் என்ற பெயரில் வெளிவருகின்றன. இந்த கம்ப்யூட்டர்களில் உடலுக்கு தீங்கு செய்யும் சாதனங்கள் எதுவும் இல்லை என்றும், இது மற்ற கம்ப்யூட்டர்கரை விட 30 சதவீதம் குறைவான மின்சாரத்தில் வேலை செய்யும் என்று சொல்கிறார்கள். இவைகள் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் விஸ்டா, மைக்ரோசாப்ட் எக்ஸ் பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும். ரூ.14,999 க்கு விற்கப்படும் எக்கோஸ்டைல் லேப்டாப்தான் மார்க்கெட்டில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டில் சிஸ்டத்தை கொண்டுள்ள லேப்டாப் என்று சொல்கிறார்கள். மைக்ரோசாப்ட் இந்தியாவின் சேர்மன் ரவி வெங்கடேசன் இதுகுறித்து பேசியபோது, எங்களது நோக்கமே மக்களுக்கு அவர்களால் வாங்கக்கூடிய விலையில் கம்ப்யூட்டரை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்றார்.
நன்றி : தினமலர்


குறைந்தது பணவீக்கம்

ஆகஸ்ட் 16ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 12.40 சதவீதமாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 12.63 சதவீதம். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, எரிபொருட்கள் விலை 1.1 சதவீதம் குறைந்துள்ளது. வீட்டு சாமான்களின் விலைகள் 3 சதவீதம் அதிகரித்துள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலை 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.