Friday, August 29, 2008

பங்கு சந்தையில் மீண்டும் காளைகளின் ஆதிக்கம் ; சென்செக்ஸ் 3.4 சதவீதம் உயர்ந்தது

இந்திய பங்கு சந்தையில் மீண்டும் காளையின் ஆதிக்கம் ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 516.19 புள்ளிகள் ( 3.67 சதவீதம் ) உயர்ந்து 14,564.53 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 146 புள்ளிகள் ( 3.46 சதவீதம் ) உயர்ந்து 4,360.00 புள்ளிகளில் முடிந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், பணவீக்கம் எதிர்பார்த்ததை போல் உயராமல் குறைந்திருந்ததால், இன்று முழுவதும் காளையின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இன்ஃப்ராஸ்டரக்ஸர், ஆயில், மெட்டல் மற்றும் டெக்னாலஜி பங்குகள் பெருமளவு விற்பனை ஆயின. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் உயர்ந்திருந்தன. உலக அளவில் பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை இருந்ததும் இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்தது. பணவீக்கம் 12.79 சதவீதமாக இருக்கும் என்ற சிஎன்பிசி - டிவி18 யின் கணிப்பை பொய்யாக்கிவிட்டு பணவீக்கம் 12.40 சதவீதமாக இருந்தது பங்கு சந்தையில் நல்ல வளர்ச்சியை கொண்டு வந்தது.
நன்றி : தினமலர்


No comments: