Showing posts with label தங்கம். Show all posts
Showing posts with label தங்கம். Show all posts

Thursday, December 17, 2009

சீனாவில் 255 டன் தங்கம் உற்பத்தி

உலக அளவில் தங்கம் பயன்பாட்டில், இது வரை இந்தியா முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது, சீன நாட்டில் தங்கம் பயன்பாடு அதிகரித்துள்ளதையடுத்து, சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில், மிக அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளுள் சீனா முன்னணியில் உள்ளது. சென்ற அக்டோபர் மாதத்தில், சீனாவில் 26.354 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு 2009ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதத்தில் சீனாவில் 254.552 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டை விட 14.1 சதவீதம் அதிகம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பல நாடுகளின் செலாவணிகளுக்கு எதிராக, அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு சரிவடைந்து போனதால், உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. இதனால், கடந்த ஒரு சில மாதங்களாக இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்தது. டிசம்பர் 3ம் தேதியன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.1,707 ஆக உயர்ந்தது. அதாவது, ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.12,792 ஆக அதிகரித்தது. இந்தநிலையில், புதன்கிழமை அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,599 ஆக இருந்தது. இந்தியாவில், தங்கத்தின் விலை அதிகளவில் உயர்ந்ததையடுத்து, தங்கம் பயன்பாடு குறைந்து போனது.
நன்றி : தினமலர்


Saturday, December 5, 2009

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி: பவுனுக்கு ரூ.392 குறைந்தது

தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் வரை ஜெட் வேகத்தில் ஏறியபடி இருந்தது. கடந்த 1 ம் தேதி திடீரென தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்தது. கடந்த திங்கள் முதல் புதன் வரை 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு 500 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை குறையத் தொடங்கியது.
வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.1707 ஆக இருந்தது. நேற்று அது ரூ.1687 ஆக குறைந்தது. இன்று (சனி) தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் இன்று காலை நிலரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1638 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு பவுன் ஆபரண தங்கம் இன்று காலை ரூ.13,104 ஆக விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய விலையை விட ரூ.392 குறைவாகும்.
ஒரு கிராமிற்கு 49 ரூபாய் சரிவு ஏற்பட்டதால் இன்று நகை வாங்க சென்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த விலை சரிவு தற்காலிகமானது தான் என்று நகை வியாபாரி ஒருவர் கூறினார். கடந்த 2 நாட்களில் ஒரு பவுன் தங்கம் விலை 624 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் தங்கம் விலை சரிவு இந்த அளவுக்கு இருந்தது இல்லை.
நன்றி : தினமலர்


Friday, November 27, 2009

தகிக்கிறது தங்கம் : சவரன் ரூ.13,464

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 13,464 ரூபாயை எட்டியது. தங்கத்தின் விலை நேற்று மாலை சற்று குறைந்து 13,368 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை எப்போதுமில்லாத வகையில் தற்போது 13 ஆயிரத்தையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 1,655 ரூபாயாகவும், ஒரு சவரன் 13,240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது.
ஒரு கிராம் 1,675 ரூபாயாகி, ஒரு சவரன் 13,400 ரூபாயை எட்டிப்பிடித்தது. மாலை கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 1,671, சவரன் 13,368 ரூயாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1683 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 13 ஆயிரத்து 464 ரூபாயாகவும், 24 காரட் தங்கத்தின் விலை 18 ஆயிரத்து 100 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) 31.80 ரூபாயாக உள்ளது. பார் வெள்ளியின் விலை 29 ஆயிரத்து 715 ரூபாயாக உள்ளது. தங்கத்தின் விலை நாளுக்குள் நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், சில நாட்களில் சவரன் 14 ஆயிரம் ரூபாயை எட்டிப்பிடிக்கும் என தெரிகிறது.
நன்றி : தினமலர்


Tuesday, November 24, 2009

பயன்படுத்தாத பழைய நகைக்கு வட்டி : எஸ்பிஐ அறிவிப்பு

பயன்படுத்தாத பழைய தங்க நகைகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால் அவற்றை ஸ்டேட் பாங்க்கில் டெபாசிட் செய்து, வட்டியும் பெறலாம். மதிப்பு மீது கடனும் பெறலாம். கோல்டு டெபாசிட் திட்டத்தை நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, அடிக்கடி பயன்படுத்தாத பழைய தங்க நகைகள், டெபாசிட்டாக ஏற்கப்படும். இத்திட்டத்தில் பெறப்படும் நகைகள் மும்பையில் உள்ள மத்திய அரசின் நாணய அச்சடிப்பு மையத்துக்கு அனுப்பப்படும். அங்கு நகைகள் உருக்கப்பட்டு, கழிவுகள் நீக்கப்படும். சுத்தத் தங்கமாக்கி (999 சுத்தம்) பிஸ்கெட்டுகளாக மாற்றப்படும்.
அதன் மதிப்பை நிர்ணயம் செய்து, வாடிக்கையாளருக்கு அந்த தொகைக்கு தங்க டெபாசிட் சான்றிதழ் அளிக்கப்படும். தங்க டெபாசிட் தொகை மீது 1.5 சதவீதம் வரை வட்டியை வங்கி அளிக்கும். இந்த திட்டத்தின்கீழ் டெபாசிட் செய்ய குறைந்தபட்சம் 500 கிராம் (62.5 பவுன்) நகை தேவை. குறைந்தது 3 ஆண்டு கால டெபாசிட்டாக ஏற்கப்படும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Saturday, November 21, 2009

தங்கம் விலை ஏற்றம் எதிரொலி பழைய தங்கம் விற்பனையும் குறைவு

தங்கத்தின் பயங்கர விலையேற்றத்தால், பழைய தங்க நகைகள் விற்பனை குறைந்துள்ளதாக மும்பையை சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.மகாராஷ்டிரா, மும்பையில், சவேரி பஜாரில், தங்கம் வாங்குவது மற்றும் விற்பது ஆகிய இரண்டும் நடைபெறும். ஆனால், கடந்த புதனன்று ஏற்பட்ட, தங்கத்தின் பயங்கர விலையேற்றத்தால், இந்த பஜார் பகுதி தற்போது வெறிச்சோடி காணப்பட்டது.இதுகுறித்து, ஜுக்ராஜ் காந்திலால் அண்ட் கோ என்ற நிறுவனத்தை சேர்ந்த பிரகாஷ் ஜே.ஜெயின் என்பவர் கூறியதாவது:தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி 200 டன் அளவிலான தங்கத்தை ஐ.எம்.எப்.,யிடம் இருந்து வாங்கி உள்ளது.பத்து கிராம் தங்கத்தின் விலை 15 ஆயிரம் ரூபாயாக இருந்த போது, தினமும், 8 கிலோ முதல் 10 கிலோ வரை தங்கம் விற்பனைக்கு வந்தது. அதுவே 10 கிராம் தங்கம் 16 ஆயிரம் ரூபாயாக அதிகரித்த போது, எங்களிடம் தினசரி விற்பனைக்காக வரும் தங்கத்தின் அளவு 4 கிலோ முதல் 5 கிலோவாகக் குறைந்தது. 10 கிராம் தங்கம் 17,150 ரூபாயை தொட்டபோது, எங்களிடம் விற்பனைக்கு வரும் தங்கத்தின் அளவு தினமும் 4 கிலோவாகக் குறைந்தது.விலை அதிகரிக்கும் போது, மக்கள் பழைய நகைகள் விற்பனை செய்வது குறைந்து கொண்டே வந்துள்ளது. தற்போதைய நிலையிலேயே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே போனால், அடுத்த ஆறு மாதங்களில், 10 கிராம் தங்கத்தின் விலை 18 ஆயிரத்தை தொடும் என கருதுகிறேன். நான் எதிர்பார்த்த காலத்தை விட குறைந்த காலத்திலேயே, தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.இவ்வாறு ஜே.ஜெயின் கூறினார்.மும்பையில் மிகப்பெரிய நகைகடையான திரிபுவன் தாஸ் பீம்ஜி சவேரி மேலாளர் கிரண் தீக்ஷித் கூறுகையில், 'மக்கள், திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குகி
நன்றி : தினமலர்


இறக்கை கட்டி பறக்குது தங்கம் விலை ஒரே மாதத்தில் சவரன் ரூ. 1,040 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் 12 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்றது. ஒரே மாதத்தில் மட்டும் சவரனுக்கு 1,040 ரூபாய் அதிகரித்துள்ளது.ஆபரணத் தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகமாகவே உள்ளது. சிறிது விலை குறைந்த மாதிரி தெரிந்தாலும் நேற்று முன்தினம் காலை சவரன் 13 ஆயிரத்தை தொட்டது. மாலையில் சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 976 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,622 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று காலைசவரனுக்கு 64 ரூபாய் வரை குறைந்து, 12 ஆயிரத்து 912 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,614 ரூபாய்க்கும் விற்றது. மாலையில் சவரனுக்கு மேலும் 32 ரூபாய் அதிகரித்து, 12 ஆயிரத்து 944 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,618 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த அக்டோபர் 20ம் தேதி சவரன் 11 ஆயிரத்து 904 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,488 ரூபாய்க்கும் விற்றது. கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி சவரன் ஒன்பதாயிரத்து 24 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,128 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு மாதத்தில் சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து சென்னை மொத்த நகைகள் சங்க துணைத் தலைவர் உதயகுமார் கூறுகையில், 'எப்போதெல்லாம் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைகிறதோ? அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது. முதலீடுக்கு தங்கம் மிகவும் பாதுகாப்பானதாக அனைவரும் கருதுகின்றனர்.சமீபத்தில், ரஷ்யா 30 டன் தங்க பிஸ்கட்டுகளை விற்றது. அதை வெளியே போகாமல் இருக்க மத்திய வங்கி வாங்கிவிட்டது. பங்குச் சந்தை, அமெரிக்க டாலர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. சிறிது குறைந்ததுபோல் தெரிந்தாலும், தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது' என்றார்.
நன்றி : தினமலர்


Friday, November 20, 2009

தங்கத்தின் மீதான முதலீடு குறைகிறது

தங்கத்தில் முதலீடு செய்வது, இந்திய அளவில் 42 சதவீதம் குறைந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் அமைப்பு கூறியுள்ளது. இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. சுத்த தங்கத்தின் நேற்றைய மதிப்பு, 10 கிராமுக்கு, ரூ.17 ஆயிரத்து 280 என்ற அளவிலும், ஆபரணத் தங்கத்தின் மதிப்பு, 10 கிராமுக்கு, ரூ.16 ஆயிரத்து 220 என்றும் 'எகிறி' உள்ளது. இதையடுத்து, ஆபரணத் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் குறைந்துள்ளது.உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது என்றாலும், கடந்த ஜூலை செப்டம்பர் மாதங்களில், 34 சதவீதம் குறைந்துள்ளது என்று, உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது என்று கூறியுள்ள கவுன்சில், இதுவரை 111.6 டன் மட்டுமே இந்தியா வாங்கியுள்ளது என்றும் கூறுகிறது. இது கடந்த ஆண்டை விட, 42 சதவீதம் குறைவு. ஆபரணத்தைத் தவிர, மற்ற பயன்பாட்டுக்கான தங்கம் வாங்குவதும், 67 சதவீதம் குறைந்துள்ளது.உலக அளவில், இந்த ஆண்டுக்கான முதல் ஒன்பது மாதங்களில் 800 டன் தங்கம் விற்பனை ஆகியுள்ளது. எனினும், கடைசி மூன்று மாதங்களில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.இந்தியாவுக்கு நேர் எதிராக, சீனாவில் தங்கத்தின் மீதான முதலீடு 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் மீதான முதலீடு 8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒன்பது மாதங்களில் 120 டன் தங்கம், சீனாவில் விற்பனை ஆகியுள்ளது. மேலும், 24 கேரட் சுத்த தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையும் சீனாவில் அதிகரித்துள்ளது.சீனாவின் அபரிமித வளர்ச்சியை இது காட்டுவதாக, பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


Thursday, November 19, 2009

'ஜெட்' வேகத்தில் தங்கம் : ஒரு சவரன் 13 ஆயிரம் ரூபாய்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்தது. நேற்று ஒரு சவரன் 12,984 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை குறைவதாக இல்லை; நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது. கடந்த மாதத்தில் 11 ஆயிரத்திற்கு விற்ற தங்கம், இந்த மாத துவக்கத்தில் 12 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. தொடர்ந்து, தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம், 1,605 ரூபாயாகவும், சவரன் 12,840 ரூபாயாகவும் இருந்தது. நேற்றும் கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்தது. நேற்று மாலை ஒரு கிராம், 1,623 ரூபாயாகவும், ஒரு சவரன், 12,984 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரே நாளில் சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்தது.

இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1,625 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 13 ஆயிரமாக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 17 ஆயிரத்து 475 ரூபாயாகவும், பார் வெள்ளியின் விலை 29 ஆயிரத்து 945 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) 32.05 ரூபாயாக உள்ளது.

இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், 'சர்வதேச அளவிலான பொருளாதார மாற்றமும், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என கருதி உலக நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பதாலும் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறையாது, சில நாட்களில் 13 ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிடும்' என்றனர்.
நன்றி : தினமலர்

Tuesday, November 17, 2009

உயர பறக்குது தங்கம் விலை: ஒரு சவரன் 12,864 ரூபாய்

ஆபரணத் தங்கத்தின் விலை எகிறிக் கொண்டே போகிறது. இரண்டு நாளில் 160 ரூபாய் அதிகரித்து, நேற்று சவரன், 12,784 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில் ஏறிக் கொண்டே போகிறது. கடந்த மாதத்தில் ஒரு சவரன் 11 ஆயிரத்துக்கு மேல் விற்று வந்தது. கடந்த 3ம் தேதி சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென 12 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்தது. ஒரு கிராம் 1,559 ரூபாயாகவும், சவரன் 12,472 ரூபாய்க்கும் விற்றது. அடுத்தடுத்த நாளில் விலை உயர்வதும், சற்று குறைவதுமாக இருந்தது. 14ம் தேதி ஒரு கிராம், 1,578 ரூபாய் எனவும், சவரன் 12,624 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று திடீரென தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு மேலும் 20 ரூபாய் அதிகரித்தது. நேற்று ஒரு கிராம், 1,598 ரூபாயாகவும், சவரன், 12,784 ரூபாய்க்கும் விற்பனையானது. இரண்டு நாளில் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.

'தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பதால், உலகில் பல நாடுகளும் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை ஏறிக் கொண்டே செல்கிறது. விரைவில் ஒரு சவரன், 13 ஆயிரத்தைத் தொட்டுவிடும்' என, தங்க மொத்த விற்பனையாளர்கள் கூறினர்.

இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 864 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1, 608 ரூபாயாக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 17 ஆயிரத்து 295 ரூபாயாகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) 31.50 ரூபாயாகவும் உள்ளது. பார் வெள்ளியின் விலை 29 ஆயிரத்து 430 ரூபாயாக உள்ளது.
நன்றி : தினமலர்


Monday, November 16, 2009

தங்கம் விலை எப்போது சரியும்?

உலகப் பொருளாதாரம் பாதிப்படைந்த போதும், இந்தியாவில், தங்கத்திற்கான கிராக்கி குறையவில்லை. நடப்பாண்டு முடிய இன்னமும் ஒரு மாதம் இருக்கிறது. இருந்த போதும், 850 டன் வரை தங்கம் மொத்த விற்பனை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்தாண்டில் தங்கம் இறக்குமதி மொத்தம் 712.6 டன். இதில், 500 டன் ஆபரணம் செய்யவும், எஞ்சியவை மூலதன முதலீட்டிற்கும் சென்றிருக்கிறது என்று, உலக தங்க கவுன்சில் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, நடப்பாண்டில், மொத்தம் 850 டன் தங்கம் தேவை இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால், இறக்குமதி அளவு 500 டன் இருக்கும். தங்கத்தின் மொத்த விற்பனை குறித்த ஆய்வாளர் பார்கவ் வைத்யா கூறுகையில், 'ஸ்டாண்டர்டு ஆபரணத் தங்கம் 10 கிராமின் விலை 16 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயர்ந்து நிற்கிறது' என்பது பெரிய விஷயம் என்கிறார். அதே சமயம் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்கம் வாங்க அச்சப்படுகின்றனர். இந்த அளவு விலை கொடுத்து வாங்க பணம் இல்லை. அதுவும் பருவமழையும் அவ்வளவு இல்லை. ஆகவே, தங்கம் வாங்கும் போக்கு வரும் மாதங்களில் குறையும் போது, அதற்கேற்ப விலையும் சற்று சரியும். அதற்காக ஒரேயடியாக சரிந்து விடாது என்றும் பெரிய வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.
மும்பையில் உள்ள தங்க வர்த்தகர் பிருத்விராஜ் கோத்தாரி கூறியதாவது: கடந்த ஆண்டில் 10 கிராமின் விலை 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை இருந்தது. நடப்பாண்டில், 15 ஆயிரத்து 105 ரூபாயாக உயர்ந்திருப்பது, 21 சதவீத உயர்வைக் காட்டுகிறது. அதே சமயம் இறக்குமதியாகும் தங்கத்தின் விலைக்கும் இங்குள்ள சந்தை விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதால், பெரிய அளவில் லாபம் கிடைக்காது. அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏற்ற இறக்கமாகத் தான் தங்கம் விலை இருக்கும். அப்போது, சிறிது விலை இறங்கலாம். கடந்த 2004ம் ஆண்டில் 10 கிராம், 5,850 ரூபாய்க்கு விற்ற தங்கம், தற்போது, இரு மடங்கு விலை அதிகரித்திருக்கிறது. இவ்வாறு பிருத்விராஜ் கோத்தாரி கூறினார்.
நன்றி : தினமலர்


Saturday, November 14, 2009

200 டன் தங்கம் : ஒரே மாதத்தில் அரசுக்கு ரூ.1,544 கோடி லாபம்

ஐ.எம்.எப் அமைப்பிடம் இந்திய ரிசர்வ் வங்கி வாங்கிய 200 டன் தங்கம், ஒரே மாதத்தில் ரூ.1500 கோடி லாபத்தை அரசுக்கு சம்பாதித்துத் தந்துள்ளது.கடந்த மாதத்தில் 200 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியது. உலக தங்க மார்க்கெட்டில் விற்கும் விலையைக் கொடுத்துத்தான் இந்தியா தங்கத்தை வாங்கியது. இந்தியா ஒரு அவுன்ஸ் (31 கிராம்) தங்கத்துக்கு கொடுத்த விலை ரூ.49,115. இந்தியா கொடுத்த மொத்த தொகை ரூ.31,490 கோடி.அக்டோபர் 30ம் தேதிக்குப் பிறகு தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்து,ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.53,815 ஆக உயர்ந்துவிட்டது. அதனால் இந்தியா வாங்கிய 200 டன் தங்கத்தின் மதிப்பு இரண்டு வார காலத்தில் ரூ.1544 கோடி உயர்ந்துள்ளது. இந்தியாவிடம் ஏற்கெனவே 358 டன்கள் தங்கம் இருந்தது. இப்பொழுது அது 558 டன்களாக உயர்ந்துள்ளது. இது 55 சதவீதம் உயர்வாகும். இந்தியாவின் கையிருப்பில் உள்ள தங்கம் 558 டன்களாக உயர்ந்ததால் தங்க கையிருப்பு நாடுகளின் வரிசைப் பட்டியலில் 9வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. உலக சராசரியை விட இந்த அளவு குறைவானது என்றாலும் உலகில் வளரும் முன்னணி நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 0.5 சதவீதமும், ரஷ்யா 4 சதவீதமும், இந்தியா 6 சதவீதமும், சீனா 2 சதவீதமும் தங்கம் வைத்துள்ளனவாம்.
நன்றி : தினமலர்


Wednesday, November 11, 2009

மீட்கப்பட்ட நாட்டின் மதிப்பு!

தனிமனிதர் ஒருவர், சந்தர்ப்பவசத்தால், தன் ஆஸ்தியை அடகு வைக்க நேர்ந்து, நாளடைவில் அதை மீட்டு எடுத்தால், அது ஒரு சாதனையாகப் போற்றப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு, கிட்டத்தட்ட அப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டால், அது ஓர் உணர்வுபூர்வமான விஷயமாகக் கருதப்படுவதில் வியப்பில்லை.

சுமார் 18 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த அந்தச் சம்பவம் இப்போது நினைவுகூரப்படுகிறது.

மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்கு கெடு நெருங்கிவிட்டது. வட்டி செலுத்துவதற்குப் போதுமான அந்நியச் செலாவணி மத்திய அரசிடம் அப்போது இல்லை.

அதேபோல் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் அந்நியச் செலாவணி இல்லை.

அதுசமயம் வெளிநாட்டிலிருந்து கடத்தல் செய்யப்பட்ட தங்கத்தை நமது சுங்கத்துறை பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கத்தை - சுமார் 70 டன் தங்கம் - பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் அடமானம் வைத்து அந்நியச் செலாவணி திரட்டப்பட்டது.

"இளம் துருக்கி' என மதிக்கப்பட்ட மறைந்த சந்திரசேகர் பாரதப் பிரதமராக இருந்த அந்தநேரத்தில், இப்படித்தான் அவர் ஒரு சிரமமான நிலையைச் சமாளித்தார்.

அதன்பிறகு, ஒரு சில ஆண்டுகளில் நிலைமை மாறத் தொடங்கியது. அந்நியச் செலாவணி கையிருப்பு படிப்படியாக உயர்ந்தது. இப்போது வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.

இதற்கு முத்தாய்ப்பாக, சில தினங்களுக்குமுன் பாரத ரிசர்வ் வங்கி, சர்வதேச நிதி அமைப்புக்கு (ஐ.எம்.எஃப்.) 6.7 பில்லியன் டாலர் (ரூ. 29,490 கோடி) கொடுத்து 200 டன் தங்கத்தைக் கொள்முதல் செய்துள்ளது.

இது வெறும் தங்கக் கொள்முதல் மட்டுமல்ல; இந்தியா நியாயமான பெருமிதம் கொள்ளத்தக்க "வெற்றிக் கதை' என பலரால் கருதப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.எம்.எஃப். விற்பனை செய்ய முன் வந்த தங்கத்தில் பாதி அளவை இந்தியா கொள்முதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கம் வாங்குவதில் இரு வேறு நிலைப்பாடுகள் உள்ளன. சிலர், நகைச்சுவையாகக் கூறுவதுபோல், ஒலிம்பிக்கில் நாம் தங்கம் வாங்குகிறோமோ இல்லையோ, உலகிலேயே சந்தையில் அதிகம் தங்கம் வாங்குவது இந்திய மக்கள்தான். ஆண்டுக்கு சுமார் 800 டன் தங்கத்தை இந்திய மக்கள் வாங்குகிறார்கள்.

அதேநேரம், பாரத ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு அப்படி ஒன்றும் பெரிய அளவில் இல்லை. இதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு.
அமெரிக்காவில் உள்ள "பெரெட்டன் உட்ஸ்' நகரில் 1944-ம் ஆண்டு பல நாடுகள் கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு நாடும் தன் கையிலிருக்கும் தங்கத்தின் அடிப்படையில்தான், தங்கள் நாணயத்தை மாற்றிக் கொள்வதற்கான விகிதங்கள் நிர்ணயிக்கப்படும் என்பதே அது.

ஆனால், காலப்போக்கில் பல்வேறு காரணங்களுக்காக, 1971-ல் இந்த முறை கைவிடப்பட்டது.

மாறாக, கையிருப்பாக எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதற்குப் பதில், கையிருப்பாக எவ்வளவு அமெரிக்க டாலர் இருக்கிறது என்ற அடிப்படையை உலக நாடுகள் பின்பற்றத் தொடங்கின.

கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில், இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 285 பில்லியன் டாலராக இருந்தது.

இது அன்னிய கரன்சியாகவும், தங்கமாகவும், ஐ.எம்.எஃப்.ல் எஸ்.டி.ஆர். வடிவிலும் உள்ளன. பல்வேறு உலக நாடுகளைப்போல், இந்தியாவின் தங்கக் கையிருப்பு மதிப்புக் குறைவுதான். அண்மைக்காலம்வரை இந்தியாவின் தங்கக் கையிருப்பின் மதிப்பு, பத்து பில்லியன் டாலர் அளவுதான்.

துல்லியமாகச் சொல்ல வேண்டும் எனில் 351 டன் தங்கம் மட்டுமே இருந்தது. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்தக் கையிருப்பில் தங்கம் 4 சதவீதமாகத்தான் இருந்தது.

அண்மையில் 200 டன் தங்கம் கொள்முதல் செய்த பிறகு, இந்தியாவின் தங்கக் கையிருப்பு 557 டன்னாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தக் கையிருப்பில் தங்கத்தின் பங்கு 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் அளவு 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் பயனாக, உலகில் அதிக அளவு தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல்முறையாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், இந்தியாவைப் பின்பற்றி மேலும் சில நாடுகள் தங்கள் தங்கக் கையிருப்பை உயர்த்துவதற்கு முன்வரக்கூடும்.

ஏற்கெனவே சீனா, ரஷியா, மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் தங்கள் தங்கக் கையிருப்பில் பெரும் பகுதியைத் தங்கமாகத்தான் வைத்திருக்கின்றன.
அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இந்நிலையில், மேலும் சில நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கள் தங்கக் கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில், தங்கம் கொள்முதல் செய்வார்களேயானால், தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும்.

அதுதவிர, தங்கத்தின் விலை உயருவதற்கு முக்கியக் காரணம், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து வருவதுதான். கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு, உலகின் முக்கிய கரன்சிகளுக்கு நிகராக அமெரிக்க டாலரின் மதிப்பு 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே காலகட்டத்தில் தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு சில நீண்டகால அடிப்படையிலான காரணங்களும் உண்டு.

உலக அளவில் தங்கத்தின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. மாறாகக் குறைந்துள்ளது.

தங்கத்தைத் தோண்டி எடுப்பதற்கான உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டு போவதற்கு இவையெல்லாமும் காரணம் ஆகும்.

ஒரு பக்கம், அமெரிக்கப் பொருளாதாரம் மந்தமடைந்து, வளர்ச்சி பூஜ்யத்துக்குக்கீழே சரிந்துள்ளது.

இன்னொரு பக்கம், அமெரிக்க டாலரின் மதிப்புக்குக் கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்குப் பிறகும்கூட, சர்வதேச வர்த்தகத்தில், நாணய மாற்றம் என்று வரும்போது, அமெரிக்க டாலருக்கு உள்ள உயர்ந்த இடத்தை இப்போதைக்கு தட்டிப்பறித்துவிட முடியாது.

எனினும், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது என்பது எப்படி ஒரு தனி நபரின் முதலீட்டுத் திட்டத்துக்குப் பொருந்துமோ, அதேபோல், ஒரு நாட்டின் கையிருப்பை நிர்வகிப்பதற்கும் பொருந்தும்.

இந்தியாவின் கையிருப்பை ஒரே நாணயத்தில் வைத்துக் கொள்ளாமல், பரவலான வகையில் வைத்திருப்பதே விவேகமானது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாகும். அந்த வகையில் பார்த்தாலும், பாரத ரிசர்வ் வங்கி சுமார் ரூ.30,000 கோடி கொடுத்து 200 டன் தங்கம் வாங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி

Wednesday, November 4, 2009

கைக்கு எட்டாத தூரத்தில் தங்கம் விலை

சர்வதேச அளவில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, எப்போதும் இல்லாத வகையில் தங்கத்தின் விலை ஒரு சவரன், 12 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விட்டது. இன்று சென்னையில் ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1,559 ரூபாயாக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 16 ஆயிரத்து 765 ரூபாயாகவும், பார் வெள்ளியின் விலை 28 ஆயிரத்து 345 ரூபாயாகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) ரூ. 30.30ஆக உள்ளது.
கடந்த அக்., 1ம் தேதி ஒரு கிராம் 1,457 ரூபாயாகவும், சவரன் 11 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்றது. அடுத்தடுத்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த 27ம் தேதி ஒரு கிராம் 1,485 ரூபாயாகவும், சவரன் 11 ஆயிரத்து 880க்கும் விற்பனையானது.நாள்தோறும் கிராமுக்கு மூன்று, நான்கு ரூபாய் என உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை ஒரு சவரன் 12 ஆயிரத்தையும் தாண்டியது. ஒரு கிராம் 1,513 ரூபாயாகவும், சவரன் 12 ஆயிரத்து 104 ரூபாயாகவும் விற்றது.நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 17 ரூபாய், சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்தது. நேற்று காலை ஒரு சவரன் 12 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் 1,527 ரூபாயாகவும், சவரன் 12 ஆயிரத்து 216 ரூபாய்க்கும் விற் றது. சென்னை தவிர மற்ற மாவட் டங்களில், ஒரு கிராம் விலை ஒன்று முதல் மூன்று ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
விலை உயர்வுக்கு காரணம் என்ன?தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன.மேலும், தங்கத்தின் விலை சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் 1,056 டாலராக உயர்ந்ததும் சர்வதே அளவில் தங்க மார்க்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவில் 12 ஆயிரம் ரூபாயையும் கடந்து விற்பனையாகி வருகிறது.தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மாதிரியாக இருந்து வந்தது. தற்போது தமிழகம் முழுதும் ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்துள்ளனர். இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. இதனால், சாமானிய மக்கள் தங்கத்தின் பக்கம் தலைகாட்டவே தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை நகைக் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ''ஆன்-லைன் வர்த்தகமே விலை உயர் வுக்கு காரணம். பலமுறை அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அமெரிக்கா, லண்டன் சந்தையில் விலை நிர்ணயிப்பதால், நிமிடத்திற்கு நிமிடம் விலை மாறுபடுவதால் உறுதியான விலையில் விற்கமுடியவில்லை. ஆன்-லைன் வர்த்தகத்திற்கு தடைவிதித்தால் மட்டுமே விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 29.39 ரூபாய்க்கும், கிலோ 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கிறது.
நன்றி : தினமலர்

Tuesday, November 3, 2009

சர்வதேச நிதியத்திடம் 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியது ரிசர்வ் வங்கி

ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தில் இருந்து ரிசர்வ் வங்கி 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 6.7 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாயின் மதிப்பில், இது 33 ஆயிரம் கோடியாக உள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச நாடுகளுக்கு நிதி உதவிகள் வழங்கி வரும் சர்வதேச நிதியத்தின் தலைமையகம் உள்ளது. இந்த சர்வதே நிதியத்திடம் 3 ஆயிரத்து 217 டன் தங்கம் இருப்புள்ளது. தற்போது, இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்து இருப்பதால், சர்வதேச நிதியத்திடம் இருந்து 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்க ரிசர்வ் வங்கி மு‌டிவு செய்து, சர்வதேச நிதியத்திடம் அனுமதி கேட்டது. இதற்கு தற்போது சர்வதேச நிதியகமும் அனுமதி அளித்துள்ளது. சர்வதேச நிதியத்திடம் வாங்கப் படும் தங்கம், இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
நன்றி : தினமலர்


Wednesday, October 14, 2009

அங்கே குறையுது; இங்கே 'இறங்க' மறுக்குது தங்கம்!

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மாற்று மதிப்பு சற்று குறைந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. சமீபகாலமாகவே, சர்வதேச அளவில் அவுன்ஸ் (31 கிராம்) தங்கம் விலையில் சரிவு கண்டு வந்துகொண்டிருக்கிறது. எனினும், இந்தியாவில் இதன் தாக்கம் காணப்படவில்லை. 'சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிந்தாலும், இந்தியாவில் தங்கத்தின் விலை குறைய இனி வாய்ப்பில்லை' என, சந்தைப் பொருட்கள் ஆராய்ச்சி வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மும்பையில், 10 கிராம் தங்கத்தின் விலை 15 ஆயிரத்து 855 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, இந்தியாவில் குறைந்துள்ளது.

மும்பையில், சந்தீப் ஜுவல்லரி உரிமையாளர் உத்தம் லோதா கூறியதாவது: திருவிழாக் காலங்களில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நகை விற்பனை 30 முதல் 40 சதவீதம் குறைந்து விட்டது. தசரா காலத்தில், மக்கள் நகை வாங்க மாட்டார்கள். தீபாவளி போனஸ் பெற்றுள்ளவர்கள், தற்போது நகை வாங்குகின்றனர். திருமணத்திற்கு நகை வாங்குவோர், அவர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப, நகை வாங்குகின்றனர். இவ்வாறு லோதா கூறினார். 'எங்கள் பட்ஜெட்டில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குறைந்த அளவு நகையே வாங்க முடிகிறது. கடந்தாண்டை விட, அதிகபட்சம் 2,000 ரூபாய் வரை சவரன் விலை எகிறி விட்டது.


அதனால், அதிக விலை கொடுத்து குறைந்த சவரன் வாங்க வேண்டிய நிலை உள்ளது' என்று வாடிக்கையாளர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. எனினும், விற்பனை சரியவிடாமல் பார்த்துக்கொள்ள நகைக் கடை உரிமையாளர்கள், தற்போது, குறைந்த எடையில், 'பார்வையாக' உள்ள பல்வேறு டிசைன் நகைகளைச் செய்ய, 'ஆர்டர்' கொடுக்கின்றனர். கடந்த ஒரு மாதமாகவே, குறைந்த எடை நகைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. 'தங்கத்தின் விலை ஏற ஏற, குறைந்த எடை நகைகளை வாங்க, மக்கள் தயாராகி விடுவர். பழைய நகைகளைப் போட்டு, குறைந்த எடை நகைகளை வாங்க, மும்பை மக்கள் தயாராகி விட்டனர்; பல உலோகங்கள் கலந்த தங்க நகை, சுத்தமான வெள்ளி நகைகளை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்' என, இந்திய நகை பயிற்சி நிறுவன இயக்குனர் வேதாந்த் ஜாட்டியா கூறியுள்ளார்.


இன்னும் சில நாட்களுக்கு தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்காது என்றாலும், குறைந்தது 15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 17 ஆயிரம் ரூபாய் வரை, சவரன் தங்கம் விலை ஏற்றம் காண வாய்ப்பு உள்ளது என்பது தான் வல்லுனர்கள் கருத்து.

நன்றி : தினமலர்


Thursday, August 27, 2009

1,400 ரூபாயை தாண்டியது ஒரு கிராம் தங்கம்: ஒரே நாளில் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் நேற்று 1,400 ரூபாயை தாண்டியது. சவரன், 11 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் விலை சில வாரங்களாக ஏறுவதும் இறங்குவதுமாக நிலையில்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம், 1,397 ரூபாய்க்கும், சவரன், 11 ஆயிரத்து 176 ரூபாய்க்கும் விற்றது. நேற்று காலை நிலவரப்படி சவரனுக்கு, 24 ரூபாய் அதிகரித்து, 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையில் சவரனுக்கு மேலும் 16 ரூபாய் அதிகரித்து, சவரன், 11 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனையானது. அதாவது, நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு கிராம், 1,400 ரூபாயை தாண்டியது குறிப்பிடத்தக்கது. 'இந்த விலை ஏற்றம் மேலும் தொடரும். இந்த விலை ஏற்றத்தால் பழைய நகைகளை மக்கள் விற்கத் துவங்கி விட்டனர்' என, தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


Monday, August 10, 2009

துவங்கியாச்சு பண்டிகை காலம்: தங்க நகை விற்பனை ஜொலிக்குமா?

பண்டிகை காலம் துவங்கியுள்ளதை அடுத்து, இந்தியாவில் தங்க நகை விற்பனையாளர்கள் குஷி அடைந்துள்ளனர். இந்தியாவில் பண்டிகை காலம் கோலாகலமாக துவங்கி விட்டது. ரக்ஷா பந்தன் முடிவடைந்துள்ள நிலையில், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை மற்றும் தீபாவளி என, பண்டிகைகள் வரிசை கட்டி வரத் துவங்கி விடும். பண்டிகை காலங்களின் போது, தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு தங்க நகைகளை பரிசளிக்கும் வழக்கம் இந்தியாவில் உள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் தான் அதிக திருமணங்கள் நடக்கும். எனவே, தங்க நகைகளின் விற்பனை பண்டிகை காலங்களில் அதிகரிக்கும்.
தற்போது, பண்டிகை காலம் துவங்கியுள்ளதை அடுத்து, நகை விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிக அதிக அளவில் வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகளில் குவிந்து விடுவர் என, அவர்கள் நினைக்கின்றனர். இதனால், விற்பனையாளர்கள் தங்க நகைகளை அதிகமாக வாங்கி இருப்பு வைத்துள்ளனர். உலகின் மொத்த தங்க நகை தேவையில், இந்தியாவின் பங்கு மட்டும் கடந்தாண்டு 20 சதவீதமாக இருந்தது. இதில், பெருமளவு நகைகள், பண்டிகை காலங்களிலேயே விற்பனையாகியுள்ளன. ஆனால், வட மாநிலங்களில் இந்தாண்டு எதிர் பார்த்த அளவு மழை பெய்யாததாலும், பருவமழை தாமதமாக துவங்கியதாலும், நகை விற்பனையாளர்களில் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர்.
நன்றி : தினமலர்


Saturday, August 8, 2009

காலையில் ஏறிய தங்கம் மாலையில் இறங்கியது

ஆபரணத் தங்கம் விலை, நேற்று கண்ணாமூச்சி காட்டியது. காலையில் ஏறிய விலை, மாலையில் சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 11 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்றது.
நேற்று முன்தினம் தங்கம் கிராம் 1,389 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று காலை சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து, சவரன் 11 ஆயிரத்து 128 ரூபாய்க்கும், கிராம் 1,391 ரூபாய்க்கும் விற்றது. மாலை நிலவரப்படி, சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 11 ஆயிரத்து 112 ரூபாய்க்கும், கிராம் 1,389 ரூபாய்க்கும் விற்றது.
நன்றி : தினமலர்


Tuesday, August 4, 2009

துறைமுக முன்னாள் தலைவர் வீட்டில் கிலோகணக்கில் தங்கம் : சி.பி.ஐ., விசாரணை தொடர்கிறது

சென்னை துறைமுக பொறுப்புக்கழக முன்னாள் தலைவர் சுரேஷ். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக இவர் மீது புகார் எழுந்ததையடுத்து. அவரது வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை முதல் நடந்து வரும் இந்த விசாரணைக்கு சுரேஷ் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்து 3 கிலோ தங்கம், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட ரூ.2 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை கைப்பற்றி, அதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : தினமலர்

அடுத்த வருடத்தில் இருந்து வருடத்திற்கு 200 டன் தங்கத்தை விற்க ஐ.எம்.எப்., முடிவு

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு 200 டன் தங்கத்தை விற்பனை செய்ய சர்வதேச நிதியமைப்பு (ஐஎம்எப்) திட்டமிட்டுள்ளது.
இப்போது லண்டன் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 935.32 டாலராக இருக்கிறது. இது தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். 2010ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் அது 1000 டாலரைத் தாண்டும் என்கிறார்கள். விலை உயர்ந்து வருவதால் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 200 டன் தங்கத்தை விற்க ஐஎம்எப் திட்டமிட்டுள்ளது. எனினும், அடுத்த ஆண்டின் பிற்பாதியில் அவுன்ஸ் தங்கத்தின் விலை 850 டாலராகத்தான் இருக்கும் என்று சிட்டி குழுமத்தின் ஆய்வாளர் ஆலன் ஹீப் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் நடைபெற உள்ள வருடாந்திர கூட்டத்துக்கு முன்பே தங்கம் விற்பதற்கு ஐஎம்எப் வாரியம் ஒப்புதல் வழங்கும் என்று அதன் திட்டமிடுதல் மற்றும் மறு ஆய்வு பிரிவு இயக்குநர் ரெஸா மொகதம் தெரிவித்துள்ளார். 403 டன் தங்கம் விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ஜெர்மனிக்கு அடுத்தபடியாக, ஐஎம்எப் அமைப்பிடம் 3,217 டன் தங்கம் இருப்பு உள்ளதாக லண்டனைச் சேர்ந்த ஜிஎப்எம்எஸ் ஆய்வு நிறுவன புள்ளி விவரம் கூறுகிறது. உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் கடந்த ஆண்டில் 246 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளன.
நன்றி : தினமலர்