Saturday, November 14, 2009

200 டன் தங்கம் : ஒரே மாதத்தில் அரசுக்கு ரூ.1,544 கோடி லாபம்

ஐ.எம்.எப் அமைப்பிடம் இந்திய ரிசர்வ் வங்கி வாங்கிய 200 டன் தங்கம், ஒரே மாதத்தில் ரூ.1500 கோடி லாபத்தை அரசுக்கு சம்பாதித்துத் தந்துள்ளது.கடந்த மாதத்தில் 200 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியது. உலக தங்க மார்க்கெட்டில் விற்கும் விலையைக் கொடுத்துத்தான் இந்தியா தங்கத்தை வாங்கியது. இந்தியா ஒரு அவுன்ஸ் (31 கிராம்) தங்கத்துக்கு கொடுத்த விலை ரூ.49,115. இந்தியா கொடுத்த மொத்த தொகை ரூ.31,490 கோடி.அக்டோபர் 30ம் தேதிக்குப் பிறகு தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்து,ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.53,815 ஆக உயர்ந்துவிட்டது. அதனால் இந்தியா வாங்கிய 200 டன் தங்கத்தின் மதிப்பு இரண்டு வார காலத்தில் ரூ.1544 கோடி உயர்ந்துள்ளது. இந்தியாவிடம் ஏற்கெனவே 358 டன்கள் தங்கம் இருந்தது. இப்பொழுது அது 558 டன்களாக உயர்ந்துள்ளது. இது 55 சதவீதம் உயர்வாகும். இந்தியாவின் கையிருப்பில் உள்ள தங்கம் 558 டன்களாக உயர்ந்ததால் தங்க கையிருப்பு நாடுகளின் வரிசைப் பட்டியலில் 9வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. உலக சராசரியை விட இந்த அளவு குறைவானது என்றாலும் உலகில் வளரும் முன்னணி நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 0.5 சதவீதமும், ரஷ்யா 4 சதவீதமும், இந்தியா 6 சதவீதமும், சீனா 2 சதவீதமும் தங்கம் வைத்துள்ளனவாம்.
நன்றி : தினமலர்


No comments: