Saturday, December 5, 2009

நமக்கு நாமே

பு​வி​வெப்​பத்​தைக் குறைப்​ப​தில் தனது பங்கு என்ன என்​பதை அமெ​ரிக்கா அறி​வித்​து​விட்​டது. அதா​வது 2005-ம் ஆண்டு வெளி​யேற்​றிய பசுமை இல்ல வாயுக்​க​ளின் அள​வில் 18 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​ளப்​போ​வ​தாக தெரி​வித்​தி​ருக்​கி​றது. வள​ரும் நாடு​க​ளில் மிக அதி​க​மாக பசுமை இல்ல வாயுக்​களை வெளி​யேற்​றும் சீனா,​ தான் 35 முதல் 40 விழுக்​காடு குறைக்​கப் போவ​தாக அறி​வித்​துள்​ளது. சீனா​வைப் போலவே ​ இந்​தி​யா​வும் ஓர​ளவு இதே அளவை அறி​வித்​தாக வேண்​டிய கட்​டா​யத்​தில் இருக்​கி​றது.

தற்​போது வெளி​யேற்​றப்​ப​டும் பசுமை இல்ல வாயுக்​க​ளின் அளவை இந்​தியா 40 சத​வீ​தம் குறைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால்,​ அதற்​காக இந்​தியா இழக்க வேண்​டிய தொழில்​வ​ளர்ச்​சி​யும் எதிர்​கொள்ள வேண்​டிய செல​வி​னங்​க​ளும் மிக அதி​கம். இந்​தி​யா​வின் மின்​உற்​பத்​தி​யில் பெரும்​பங்கு அனல்​மின் நிலை​யங்​களி​லி​ருந்​து​தான் கிடைக்​கி​றது. இவற்​றின் மூலம் வெளி​யேற்​றப்​ப​டும் கரி​ய​மில வாயு அள​வும் அதி​கம். இதற்​காக அனல்​மின் நிலை​யங்​களை உட​ன​டி​யாக மூடு​வதோ,​ மின்​உற்​பத்​தி​யைக் குறைத்​துக்​கொள்​வதோ இய​லாத காரி​யம்.

இந்​தி​யா​வில் சூரி​ய​சக்தி மூல​மாக மின்​சா​ரம் தயா​ரித்து,​ இழப்பை ஈடு செய்ய முடி​யும் என்​பது உண்​மையே என்​றா​லும்,​ அதற்​கா​கும் செலவு பல ஆயி​ரம் கோடி ரூபாய். இதில் ஒரு பகு​தியை ஐக்​கிய நாடு​கள் சபை வழங்​கும் என்​றா​லும்,​ புதிய மின்​உற்​பத்தி முறைக்கு அது முற்​றி​லும் பயன் அளிக்​காது. ​

தொ​ழில்​து​றை​க​ளில் வெளி​யேற்​றப்​ப​டும் கரி​ய​மில வாயு அள​வைக் குறைப்​ப​தற்​காக,​ தொழிற்​கூ​டங்​க​ளில் புதிய தொழில்​நுட்​பத்​தைப் புகுத்த வேண்​டு​மா​னால்,​ அதற்​காக இத்​தொ​ழில் துறைக்கு மானி​யம் மற்​றும் சலு​கை​கள் அறி​வித்​தாக வேண்​டும். இத​னால் இந்​தி​யா​வுக்கு பெரும் வரு​வாய் இழப்பு ஏற்​ப​டும். வளர்ச்​சிப் பணி​கள் தடைப்​ப​டும்.

இந்​தியா அதன் பிரச்​னையை எதிர்​கொள்​ளும் அதே வேளை​யில்,​ இந்​தி​யர் என்ற முறை​யில் ஒவ்​வொ​ரு​வ​ரும் புவி​வெப்​பத்​தைக்

குறைக்க சில வழி​கள் இருக்​கின்​றன. மின்​சா​ரத்தை அள​வா​கப் பயன்​ப​டுத்​து​வது,​ வாக​னப் பயன்​பாட்​டைக் குறைத்​துக்​கொள்​வது,​ சீர்​வளி அரங்​கு​கள் மற்​றும் குளிர்​ப​தன பெட்டி பயன்​பாட்டை கட்​டுக்​குள் வைப்​பது போன்​ற​வற்றை மேற்​கொள்​ள​லாம். இவை யாவற்​றை​யும் காட்​டி​லும் மிக அதி​க​மாக ஒரு மனி​தன் இந்​தப் புவிக்கு நன்மை செய்ய விரும்​பி​னால்,​ அவர் சைவ உண​வுக்கு மாறு​வ​தன் மூலம் அதைச் செய்ய முடி​யும்.

அண்​மை​யில் மத்​திய சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ் குறிப்​பி​டு​கை​யில் "மாட்​டி​றைச்சி சாப்​பி​டு​வதை நிறுத்​து​வ​தன் மூலம் புவி​வெப்​பத்​தைக் குறைக்​க​லாம்' என்று கூறிய கருத்து உண்​மையே. இதை நோபல் பரிசு பெற்​ற​வ​ரும் ஐக்​கி​ய​நா​டு​க​ளின் ஒரு பிரி​வா​கிய பரு​வ​நிலை மாற்​றத்​துக்​கான சர்​வ​தேச அமைப்​பின் தலை​வர்

ராஜேந்​தர் கே. பச்​செüரி பல கருத்​த​ரங்​கு​க​ளில் தொடர்ந்து வலி​யு​றுத்தி வரு​கி​றார்.

ஒரு கிலோ மாட்​டி​றைச்​சி​யைத் தவிர்ப்​ப​தன் மூலம் வளி​மண்​ட​லத்​தில் 36.4 கிலோ கரி​ய​மில வாயு கலப்​ப​தைத் தவிர்க்க முடி​யும் என்று அவர் சொல்​வது வெறும் புள்​ளி​வி​வ​ரம் அல்ல. நடை​முறை வாழ்க்​கைக்கு சாத்​தி​ய​மா​ன​தும்​கூட. ஆடு,​ மாடு​கள் வளர்ப்​ப​தற்​காக அழி​ப​டும் காடு​கள்,​ இறைச்​சியை வேறு இடங்​க​ளுக்​குக் கொண்டு செல்​வ​தற்​கான வாக​னப் போக்​கு​வ​ரத்து,​ இறைச்​சியை குளிர்​ப​த​னப் பெட்​டி​யில் வைத்​தி​ருத்​தல் போன்ற தொடர்​ந​ட​வ​டிக்​கை​யால் ஏற்​ப​டும் கரி​ய​மில வாயுவை கணக்​கிட்டு இந்​தக் கணக்​கீடு செய்​யப்​ப​டு​கி​றது.

இ​றைச்​சிக் கடை​கள் என்​பது ஊருக்கு ஒரு சில​வாக இருந்த நாள்​கள் என்​பது முற்​றி​லு​மாக மாறிப்​போய்,​ இப்​போது எல்லா நாள்​க​ளி​லும் எல்லா இடங்​க​ளி​லும் தெரு​வுக்​குத் தெரு இறைச்​சிக் கடை​க​ளும்,​ பிரி​யா​ணிக் கடை​க​ளும் இருப்​ப​தைக் காண்​கி​றோம். 2006 ம் ஆண்டு உல​கம் முழு​வ​தும் 28 கோடி டன் இறைச்சி உண​வுக்​காக பயன்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது. இது ஐம்​பது ஆண்​டு​க​ளுக்கு முன்பு இருந்த அள​வைக் காட்​டி​லும் 5 மடங்கு அதி​கம்.

ஒரு எக்​டேர் நிலப்​ப​ரப்​பில் வேளாண்மை செய்து உரு​வாக்​கப்​ப​டும் காய்​கறி,​ கனி​கள் பருப்​பு​வ​கை​கள் மூலம் ஒரு ஆண்​டுக்கு 30 பேருக்கு உண​வ​ளிக்க முடி​யும். ஆனால் இதே நிலப்​ப​ரப்பை கால்​நடை வளர்ப்​புக்​குப் பயன்​ப​டுத்தி அதன் மூலம் கிடைக்​கும் முட்டை,​ பால்,​

இறைச்சி ஆகி​ய​வற்​றின் மூலம் ஒரு ஆண்​டுக்கு 10 பேருக்கு மட்​டுமே உண​வ​ளிக்க முடி​யும் என்​றும் கணக்​கி​டப்​ப​டு​கி​றது.

ஒரு கிலோ கிராம் மாட்​டி​றைச்சி பெறு​வ​தற்கு 10 கிலோ கால்​ந​டைத் தீவ​னம் தேவைப்​ப​டு​கி​றது. ஒரு கிலோ பன்​றிக் கறிக்கு 5 கிலோ தானி​ய​மும் ஒரு கிலோ கோழிக்​க​றிக்கு 3 கிலோ தானி​யம் தேவை​யாக இருக்​கி​றது. ஆனால் இந்த தானி​யத்​தைக் கொண்டு பல வேளை உணவை ஒரு மனி​தன் உண்ண முடி​யும். மேலும்,​ காய்​கறி உண​வைச் சமைக்​கத் தேவைப்​ப​டும் எரி​சக்​தி​யைக் காட்​டி​லும் இறைச்சி உணவு தயா​ரிக்க 25 மடங்கு எரி​சக்தி தேவை​யாக இருக்​கி​றது. இவை யாவற்​றை​யும் கருத்​தில் கொள்​ளும்​போது,​ ஒரு​வர் சைவ உண​வுக்கு மாறு​வது மண்​ணு​ல​கிற்கு மட்​டு​மல்ல,​ வளி​மண்​ட​லத்​திற்​கும் நன்மை செய்ய முடி​யும்.

சைவ உணவு மனி​த​ருக்கு எளி​மை​யான உணவு என்​ப​து​டன்,​ வளி​மண்​ட​லத்தை மாசு​ப​டுத்​தும் பசுமை இல்ல வாயுக்​க​ளில் கரி​ய​மில வாயு​வை​விட 30 மடங்​கும் அதிக தீமை விளை​விக்​கும் மீத்​தேன் வாயுக்கு இறைச்சி கார​ண​மாக இருக்​கி​றது என்​பதை எண்​ணும் போது,​ இந்​தி​யர்​கள் ஒவ்​வொ​ரு​வ​ரும் மாமிச உண​வைத் தவிர்ப்​ப​தும்,​ வச​தி​க​ளைக் குறைத்​துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்​வ​தும் அர்த்​த​முள்ள வாழ்க்​கை​யாக இருக்​கும். மேலும்,​ புவி வெப்​பத்​தைக் குறைத்து பரு​வ​நிலை மாற்​றங்​களை கட்​டுக்​குள் கொண்​டு​வ​ர​வும் உத​வும். ஒவ்​வொ​ரு​வ​ரும் தங்​க​ளால் இயன்ற அள​வில் வளி​மண்​ட​லத்​தைக் காப்​பது என்று உறு​தியை ஏற்​றுக் கொண்​டால்,​ புவி​யைக் காக்​க​லாம். நாடு அத​ன​ள​வில் பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்க முற்​ப​டும்​போது குடி​ம​கன்​க​ளா​கிய நாமும் நம்​மால் முடிந்த பங்​க​ளிப்​பைச் செய்​தால் என்ன!
நன்றி : தினமணி

வெள்​ளிப் பனி​மலை உரு​குதே

""வெள்​ளிப் பனி​மலை மீது​லா​வு​வோம்'' என்று பாடிய பாரதி,​ கூடவே "GL​A​C​I​E​RS' ​ ​என்ற ஆங்​கி​லச் சொல்​லுக்கு ஓர் அழ​கிய தமிழ்ச்​சொல்லை ""வெள்​ளிப்​பனி'' என்று பாடிக்​காட்​டிய தேசி​யக்​க​விக்கு வணக்​கம் செலுத்​தும் அதே​ச​ம​யத்​தில்,​ 2035-ல்,​ அதா​வது இன்​னும் 25 ஆண்​டு​க​ளில்,​ கால​நி​லை​யின் தடு​மாற்​றம் விளை​வாக,​ இம​ய​மலை திரு​வண்​ணா​ம​லை​போல் ஆகி​வி​டும் என்று சில கால​நிலை வல்​லு​நர்​கள் எச்​ச​ரித்​துள்​ளதை எண்​ணிப் பார்த்​தால்,​ நெஞ்சு பொறுக்​கு​தி​லையே.

"மன்​னும் இம​ய​மலை எங்​கள் மலையே' என்று இப்​போது நாம் பாடி​னால் பாகிஸ்​தான்,​ நேபா​ளம்,​ திபெத்,​ பூடான் ஆகிய நாடு​கள் எங்​கள் பங்கு எங்கே என்று கேட்​கும்?​ இம​ய​ம​லை​யின் பரந்த விஸ்​தீ​ர​ணம் மத்​திய ஆசி​யா​வி​லும் விரிந்து பரந்​துள்​ளது. ஆனால் வெள்​ளிப்​ப​னி​ம​லை​கள் மட்​டும் மேற்​கூ​றிய நான்கு நாடு​க​ளு​டன் இந்​தி​யா​வுக்​கும் சேர்ந்து சொந்​தம். கால​நி​லைத் தடு​மாற்​றத்​தால் வேக​மாக வெள்​ளிப்​பனி உரு​கும் சூழ்​நி​லையை மன​தில் கொள்​ளா​மல் சொந்​தம் கொண்​டா​டும் ஐந்து நாடு​க​ளும் இந்த வெள்​ளிப்​பனி மலையை ஒரு மாபெ​ரும் பவர்​ஹ​வு​ஸôக மாற்ற எண்​ணு​கின்​றன.

÷உ​யிர்ச்​சூ​ழல் வளத்​தைப் புறக்​க​ணித்​து​விட்டு தென்​கோ​டி​யில் செயல்​பட்ட சேது சமுத்​தி​ரத் திட்​டம் ஓசை இழந்​து​விட்​டது. இது சூழல் பாது​காப்பு கார​ண​மாக இல்லை. கால்​வா​யில் மண் அள்ள அள்ள மீண்​டும் தூர்ந்து வரு​கி​ற​தாம். ட்ரட்​ஜர் கார்ப்​ப​ரே​ஷ​னுக்கு வர​வேண்​டிய பணம் வர​வில்​லை​யாம். சேது​ரா​மர் சேஃ​பா​கி​விட்​டார். இப்​போது லிப​ரான் கமி​ஷன் அறிக்​கை​யில் அயோத்​தி​ரா​மர் பிரச்​னை​யா​கி​விட்​டார். ராமர் பிரச்னை நமக்கு ஏன்?​ இப்​போ​துள்ள பூதா​கா​ர​மான பிரச்னை வட​கோ​டி​யில் உள்ள இம​யத்​தின் பனி​ம​லை​கள். ராம​ருக்கு வந்த ஆபத்து இப்​போது சிவ​னுக்கு இடம்​

பெ​யர்ந்​து​விட்​டது. மேரு​ம​லைக்​கும் கைலா​சத்​துக்​கும் ஆபத்து காத்​தி​ருக்​கி​றது. கால​நி​லைத் தடு​மாற்​றத்​துக்கு உல​கி​லேயே முதல் பலி இம​யத்​தின் வெள்​ளிப்​ப​னி​ம​லை​கள் என்று I.C.I.M.O.D.. கரு​து​கி​றது. அதா​வது In​t​e​r​n​a​t​i​o​n​al Ce​n​t​re ​ For In​t​e​g​r​a​t​ed Mo​u​n​t​a​in De​v​e​l​o​p​m​e​nt-​ல் கால​நி​லைத் தடு​மாற்​றத்தை ஆரா​யும் விஞ்​ஞா​னி​க​ளின் அறிக்​கை​யின் அடிப்​ப​டை​யில், ​I.C.I.M.O.D.,​ இம​ய​ம​லைப் பகு​தி​க​ளில் 2100-ஐ நெருங்​கும்​போது வெப்​ப​நிலை 5.5 டிகிரி செல்​சி​யஸ் அதி​க​மா​கும் என்​ப​தால்,​ பனி​ம​லை​கள் அழி​யும் என்று கூறு​கி​றது. ஆகவே,​ கயி​லை​மலை திரு​வண்​ணா​ம​லை​யா​கி​விட்​டால்.... இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யா​கும் நதி​களை நம்பி வாழும் இந்​தி​யர்​கள்,​ பாகிஸ்​தா​னி​யர்​கள்,​ பர்​மி​யர்​கள்,​ நேபா​ளி​கள்,​ பூட்​டா​னி​கள்,​ சீனர்​கள் எத்​தனை கோடி,​ எத்​தனை கோடி,​ இறைவா இவர்​கள் கதி என்​ன​வா​கும்?​ நினைத்​துப் பார்க்​கவே குலை​ந​டுங்​கும் ஒரு சூழ்​நி​லை​யில் எத்​தனை கோடி எத்​தனை கோடி டாலர்​கள் செல​வ​ழித்து நிலை​யற்ற நீர் மின்​சா​ரத்​திட்​டங்​களை இந்​தியா மட்​டு​மல்ல;​ பாகிஸ்​தான்,​ பூடான் நிறை​வேற்ற முனைந்​து​விட்​டது. இந்​தி​யா​வில் தைபாங் திட்ட மதிப்​பீடு,​ பூடா​னின் தலா திட்​டம்,​ பாகிஸ்​தா​னில் டையா​மர் பாஷா திட்​டம் ஆகிய மூன்​றும் உல​கி​லேயே அதி​கச் செல​வுள்ள நீர்​மின்​சா​ரத் திட்​டம் என்று கூறப்​ப​டு​கி​றது. ஒட்​டு​மொத்​த​மாக 1,50,000 மெகா​வாட் மின் உற்​பத்​தித் திட்​டம்.

÷இந்​தத் திட்​டங்​க​ளுக்கு இந்​தி​யா​வில் மட்​டு​மல்ல;​ சீனா​வி​லும் எதிர்ப்​புக் கிளம்​பி​யுள்​ளது. சீன நிபு​ணர் குழு மூத்த பொறி​யா​ளர் சின்-​யுவான் ஹாங்,​ பனி​மலை-​உரு​கு​வது தீவி​ர​மா​கும் என்​ப​தால் ஜீவ​ந​தி​கள் பாலா​றா​கி​விட்​டால் ​(வறண்​டு​விட்​டால்)​ இல்​லாத நீரில் எப்​படி மின்​சா​ரம் எடுக்க முடி​யும்?​ என்​கி​றார். ""கான்​கி​ரீட் மலை​கள்:​ இம​ய​ம​லை​க​ளின் அணைக் கட்​ட​டங்​கள்'' என்று ​I.C.I.M.O.D.,​ சார்​பில் ஆய்வு நிகழ்த்​திய ஸ்ரீபத் தர்​மா​தி​காரி என்ற பொறி​யா​ளர்,​ ""செய​லாற்ற முடி​யாத இம் மாபெ​ரும் திட்​டங்​க​ளில் கோடி கோடி​யா​கப் பணம் செல​வ​ழிப்​பது முட்​டாள்​த​ன​மா​னது. அது​வும் உல​க​ளா​விய நிதி நெருக்​க​டி​யுள்ள சூழ்​நி​லை​யில் இச்​செ​லவு அடி​முட்​டாள்​த​னம்'' என்று குறிப்​பிட்​டுள்​ளார். ""கால​நி​லைத் தடு​மாற்​றத்தை மன​தில் வைக்​கா​மல் இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யா​கும் நதி​க​ளின் போக்கு நிலை​யா​னது என்ற கரு​து​கோ​ளில் செயல்​ப​டு​வது ஆபத்​தா​னது. பனி ஏரி​கள் வெடித்து உடைப்பு எடுத்​தால் தோன்​றக்​கூ​டிய பயங்​கர வெள்​ளம் அணைக்​கட்​டு​களை உடைத்​து​வி​டும். காலப்​போக்​கில் நதி​யில் நீரோட்​டம் இல்​லா​விட்​டா​லும் மின் உற்​பத்தி செய்ய முடி​யாது...'' என்று தர்​மா​தி​காரி கூறி​யுள்​ளார்.

""பனி ஏரி வெடிப்பு'' என்​பது எதுவோ தரைப்​ப​கு​தி​யில் உள்ள சாதா​ரண ஏரி உடை​வ​து​போல் அல்ல. ஆங்​கி​லத்​தில் Gl​a​c​i​al La​ke Ou​t​b​u​r​st Fl​o​o​ds -​ GL​OF என்​பார்​கள். 1985-ல் நேபா​ளத்​தில் ஒருக்ளா​ஃப் ஏற்​பட்​ட​தன் விளை​வால் மலைப்​ப​கு​தி​யில் 14 பாலங்​க​ளை​யும்,​ 1 நீர்​மின் திட்ட அணை​யை​யும் உடைத்​துப் பெரு​கிய வெள்​ளத்​தில் மக்​கள் மடிந்​த​னர். பள்​ளத்​தாக்​குப் பயிர்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி நாச​மா​யின. பூடான் பகு​தி​யில் மட்​டும் 2,600 பனி ஏரி​கள் உள்​ளன. இவற்​றில் 25 வெடிக்​கும் அபா​யத்​தில் உள்​ளது. இதே நிலை இந்​தி​யா​வி​லும் உண்டு. வெள்​ளிப்​பனி உருகி ஆங்​காங்கே பனிக்​கட்டி ஏரி​கள் உரு​வாகி அவை வெடிக்​கின்​ற​ன​வாம்.

÷வ​ளர்ச்சி வளர்ச்சி என்று பேசி எவ்​வாறு பொது மூல​த​னத்​தைக் கொள்​ளை​ய​டிக்​க​லாம் என்​ப​தில் தீவிர கவ​னம் செலுத்​தப்​ப​டு​கி​றது. இந்த நோய் இந்​தியா,​ பாகிஸ்​தான்,​ பூடான்,​ நேபா​ளம் ஆகிய நாடு​க​ளில் பரவி இம​யத்​தையே அசைத்​துப் பார்க்​கி​றது. இப்​போ​துள்ள பிரச்னை,​ வெள்​ளிப்​ப​னி​மலை உரு​கு​வ​தால் தோன்​றக்​கூ​டிய தண்​ணீர்ப்​பஞ்​சம். கால​நி​லைத் தடு​மாற்றத்தை மனத்​தில் கொண்டு எதிர்​கால நீர்த்​தே​வையை எப்​ப​டிச் சமா​ளிப்​பது என்று யோசிப்​பதை மறந்து கோடி கோடி​யா​கப் பணத்​தைக் கொட்டி வற்​றப்​போ​கும் நதி​கள் மீது நீர்​மின்​சா​ரத் திட்​டங்​க​ளைச் செயல்​ப​டுத்​து​வது புத்​தி​சா​லித்​த​ன​மான ஆட்சி அதி​கா​ரத்​தின் லட்​ச​ணம் ஆகாது.

÷அ​னைத்​து​லக நிலை இப்​படி உள்​ள​போது,​ இந்த அவ​ச​ர​கா​லப் பிரச்​னையை இந்​தியா எவ்​வாறு மதிப்​பீடு செய்​கி​றது?​ மத்​திய அர​சின் வனம் மற்​றும் சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்,​ வெள்​ளிப்​பனி உரு​கு​வது பற்​றிய விஷ​யத்​திற்​கும் கால​நி​லைத் தடு​மாற்​றத்​திற்​கும் உறவு இருப்​ப​தா​கச் சொல்​லப்​ப​டும் விஷ​யம் ஆதா​ர​மில்​லா​தது என்று கூறு​கி​றார். மதிப்​பிற்​கு​ரிய அமைச்​சர் எந்த அடிப்​ப​டை​யில் கூறு​கி​றார் என்​றால்,​ அரசு கூறு​வ​தற்​கெல்​லாம் தலை​யாட்​டி​ய​படி உண்​மையை ஒளித்து எழு​து​வ​தற்​கும் சில விஞ்​ஞா​னி​கள் கிடைத்​த​வண்​ணம் உள்​ள​னர். அப்​ப​டிக்​கி​டைத்த வி.கே. ரெய்னா ஓய்வு பெற்ற புவி​யி​யல் விஞ்​ஞானி. ""வெள்​ளிப்​பனி மெல்ல மெல்​லப் பின்​னோக்​கிச் செல்​வது -​ உருகி ஏரி​யா​வது 19-ம் நூற்​றாண்​டின் இறு​திப் பகு​தி​யி​லேயே தொடங்​கி​விட்​டது என்​றும்,​ அலாஸ்கா அல்​லது கிரீன்​லேண்​டு​டன் ஒப்​பி​டும்​போது பின்​னோக்​கிச் செல்​லும் வெள்​ளிப்​பனி அவ்​வ​ளவு அதி​க​மா​யில்​லை​யாம். வெள்​ளிப்​பனி இயக்​கம் விழும் வெள்​ளிப்​பனி அள​வு​கொண்​டும்,​ தட்​ப​வெப்​பம் கொண்​டும் நிர்​ண​ய​மா​கி​ற​தே​த​விர தட்​ப​வெப்​பத் தடு​மாற்​றத்​துக்​கும் வெள்​ளிப்​பனி மறை​வுக்​கும் தொடர்பு இல்லை என்​றும் கங்கை உற்​பத்​திக்​குக் கார​ண​மான கங்​கோத்ரி வெள்​ளிப்​பனி நின்ற நிலை​யில் உள்​ள​தா​க​வும் ரெய்னா கூறி​யுள்​ளதை அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார்.

÷இந்​தியா-​பாகிஸ்​தான் ஜீவ​நதி சிந்​து​வு​டன் ஐந்து கிளை நதி​க​ளு​டன்,​ இந்​தி​யா​வுக்கே சொந்​த​மான கங்கை-​பிரம்​ம​புத்​திரா நதி​க​ளுக்​கும் சேர்த்து ஒரு பிரச்​னை​யும் இல்​லை​யென்று ஒரு ஜால்ரா விஞ்​ஞானி கூறி​யுள்​ளதை அப்​ப​டியே I.P.C.C. என்று சொல்​லப்​ப​டும் In​t​er Go​v​e​r​n​m​e​n​t​al Pa​n​el On Cl​i​m​a​te Ch​a​n​ge-​ன் தலை​வ​ரான ராஜேந்​திர பாச்​செ​ளரி தனது எதிர்ப்பை ""கார்​டி​யன்'' பத்​தி​ரி​கை​யில் குறிப்​பி​டும்​போது,​ "இப்​படி ஓர் அர்த்​த​மில்​லாத ரெய்​னா​வின் அறிக்​கையை அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ் ஒப்​புக்​கொண்​டது எப்​படி?​' என்று வியந்​துள்​ளார். I.P.C.C. ​ என்​பது நோபல் பரிசு பெற்ற விஞ்​ஞா​னி​களை உள்​ள​டக்​கி​யது. அமைச்​ச​ரின் கூற்​றில் உள்ள கருத்து வேற்​றுமை இத்​து​டன் அடங்​க​வில்லை. TE​RI ​ என்று சொல்​லப்​ப​டும் The Energy and Resour​ces Institute-​ன் வெள்​ளிப்​பனி விஞ்​ஞானி சையத் இக்​பால் ஹசன்,​ வனம்-​சுற்​றுச்​சூ​ழல் அமைச்​ச​ர​கம் தன்​னி​டம் தட்​ப​வெப்​பத் தடு​மாற்​றத்​தி​னால் இம​யத்​தின் வெள்​ளிப்​பனி மலை​யின் பாது​காப்பு பற்​றிய அறி​வி​யல் அறிக்கை கேட்​கப்​பட்​ட​தா​க​வும்,​ தனது கருத்​து​கள் புறக்​க​ணிக்​கப்​பட்​ட​தா​க​வும் கூறு​கி​றார்.

ரெய்னா அறிக்​கைக்​குத் தக்க பதில் வழங்​கி​யுள்​ளார். ""1980-களி​லேயே பசு​மை​யக நச்சு ஆவி​கள் இமய வெள்​ளிப்​ப​னி​க​ளைத் தாக்க ஆரம்​பித்​து​விட்​டன என்​றும்,​ இத​னால் இம​யத்​தின் வெள்​ளிப்​பனி வேக​மாக உரு​கு​வ​தை​யும் கண்​ட​றிந்​துள்​ள​தா​க​வும்,​ நேபா​ளம்,​ சிக்​கிம்,​ பூடான் பகு​தி​க​ளில் வெடிக்​கக்​கூ​டிய பனிக்​கட்டி ஏரி​கள் வெள்​ளிப்​பனி உரு​கு​வ​தால் தோன்​றி​யுள்​ளன என்​றும் குறிப்​பிட்​டுள்​ளார். எனி​னும் பூடான் அரசு அத்​த​கைய வெடிக்​கும் ஏரி​க​ளைக் கண்​ட​றிந்து அதை ஆபத்​தில்​லா​மல் நீரை வெளி​யேற்ற முயற்சி செய்​கி​றது. உத்​த​ராஞ்ச​லில் உள்ள கார்​வால் பல்​க​லைக்​க​ழ​கத்​தின் புவி​யி​யல் விஞ்​ஞா​னி​க​ளின் ஆய்​வுப்​படி,​ "கடந்த 200 ஆண்​டு​க​ளில் கங்​கோத்​ரி​யின் வெள்​ளிப்​பனி 2 கிலோ​மீட்​டர் அள​வுக்​குப் பின்​னோக்​கி​விட்​டது. அதா​வது உரு​கிக்குறைந்​து​விட்​டது.

ஆனால் கடந்த 25 ஆண்​டு​க​ளில் மட்​டும் 800 மீட்​டர் உள்​ள​டங்​கி​விட்​டது'' இந்த உண்மை நிலையை மூடி மறைத்து கங்​கோத்ரி வெள்​ளிப்​பனி உள்ள இடத்​தில் மாறா​மல் இருப்​ப​தாக அமைச்​சர் கூறு​வது நகைப்​புக்கு இடம் அளித்​தா​லும்,​ வெள்​ளிப்​பனி இழப்​பால் ஏற்​ப​டும் வெடி ஏரி​கள் அல்​கொய்தா தீவி​ர​வா​தி​க​ளின் வெடி​குண்​டை​விட மோச​மான விளை​வு​களை ஏற்​ப​டுத்​தக்​கூ​டிய செய்தி நகைப்​புக்​கு​ரி​யது இல்லை.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாரா​ய​ணன்
நன்றி : தினமணி

ஒற்றுமை நீங்கிடில்...

ஒரு வழி​யாக ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு, பெல்​ஜி​யப் பிர​த​மர் ஹெர்​மன் வேன் ரோம்​பையை ஐரோப்​பி​யக் கவுன்சி​லின் நிரந்​தர அதி​ப​ரா​கத் தேர்ந்​தெ​டுத்​துத் தொடர்ந்து கொண்​டி​ருந்த சர்ச்​சைக்கு முற்​றுப்​புள்ளி வைத்​தி​ருக்​கி​றது. இந்​தத் தேர்​வுக்​குப் பின்​னில் நடந்த அர​சி​யல் மற்​றும் கூட்டு ராஜ​தந்​தி​ரப் போட்​டி​கள் ஏரா​ளம் ஏரா​ளம். அதை​யெல்​லாம் மீறி,​ ஒரு முடிவு ஏற்​பட்​டி​ருக்​கி​றது என்​றால் அதற்கு சுவீ​டன் பிர​த​மர் ஃபி​ர​ட​ரிக் ரெய்ன்​பெல்ட்​டைப் பாராட்​டா​மல் இருக்க முடி​யாது.

ஐ​ரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு என்​பது ஒரு நீண்​ட​நாள் கனவு. ஒன்​றோடு ஒன்று போர் தொடுத்​துக் கொண்​டி​ருந்த சரித்​தி​ரம்​தான் ஐரோப்​பிய நாடு​க​ளுக்கு உண்டு. தங்​க​ளுக்​குள் உள்ள வேறு​பா​டு​க​ளை​யும்,​ போட்​டி​க​ளை​யும் மறந்து ஒன்​றா​கக் கைகோர்த்​துக் கொண்​டாக வேண்​டும் என்​கிற எண்​ணத்​துக்கு முதலில் வித்​திட்​டது இரண்​டாம் உல​கப் போர். ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​புக்கு வித்​திட்​டது அர​சி​ய​லும்,​ ஒற்​றுமை உணர்​வும் என்​ப​தை​விட வியா​பா​ர​மும்,​ பொரு​ளா​தா​ர​மும் என்​ப​து​தான் நிஜம்.

1950-ல் ஐரோப்​பிய நிலக்​கரி மற்​றும் எஃகு உற்​பத்​தி​யா​ளர்​கள்​தான் ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு என்​கிற எண்​ணத்​துக்​குப் பிள்​ளை​யார் சுழி போட்​ட​வர்​கள். தங்​க​ளது வியா​பா​ரம் தங்கு தடை​யின்றி நடை​பெற்று செழிப்​ப​தற்கு ஐரோப்​பா​வில் அமை​தி​யும் ஒற்​று​மை​யும் நிலவ வேண்​டும் என்​பதை உணர்ந்த நிலக்​கரி மற்​றும் எஃகு உற்​பத்​தி​யா​ளர்​க​ளின் முயற்​சி​யின் விளை​வாக பெல்​ஜி​யம்,​ பிரான்ஸ்,​ ஜெர்​மனி,​ இத்தாலி,​ லக்​சம்​பர்க் மற்​றும் நெதர்​லாந்து ஆகிய ஆறு நாடு​கள் இணைந்து உரு​வாக்​கிய ஐரோப்​பி​யப் பொரு​ளா​தார ஒருங்​கி​ணைப்​பு​தான் இன்று ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​பாக உரு​வாகி இருக்​கி​றது.

1973-ல் டென்​மார்க்,​ அயர்​லாந்து மற்​றும் இங்​கி​லாந்து ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​பில் இணைந்​தது. எண்​ப​து​க​ளில் கிரீஸ்,​ ஸ்பெ​யின் மற்​றும் போர்ச்​சு​க​லும் இணைந்​த​போது,​ ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு என்​பது ஒரு வலு​வான பொரு​ளா​தார அமைப்​பா​க​வும்,​ பல​மான சக்​தி​யா​க​வும் உரு​வா​கும் வாய்ப்​பு​கள் ஏற்​பட்​டன. தங்​க​ளது எல்​லை​க​ளைப் பரஸ்​பர வர்த்​த​கத்​துக்​கும்,​ பய​ணங்​க​ளுக்​கும் உடைத்து எறிந்​து,​ ஐரோப்​பாவை ஓர் ஒட்​டு​மொத்த சந்​தை​யாக உரு​வாக்​கும் முயற்​சி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. கிழக்கு மற்​றும் மேற்கு ஜெர்​ம​னி​யின் இணைப்​பும்,​ ஆஸ்​தி​ரியா,​ ஃபின்​லாந்து,​ சுவீ​டன் போன்ற நாடு​கள் உறுப்​பி​னர்​க​ளா​கச் சேர்ந்​த​தும் ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​புக்கு மேலும் வலு சேர்த்​தன.

சு​மார் பத்து கிழக்கு ஐரோப்​பிய நாடு​க​ளும் பொது​வு​டை​மைத் தத்​து​வத்​தைக் கைவிட்டு சந்​தைப் பொரு​ளா​தா​ரத்​துக்​குத் தயா​ரா​ன​து​டன்,​ ஐரோப்​பி​யக் கட்​ட​மைப்பு மேலும் வலு​வ​டைந்து பல்​கே​ரியா மற்​றும் ருமே​னியா போன்ற நாடு​க​ளும் தங்​க​ளைக் கூட்​ட​மைப்​பில் இணைத்​துக் கொண்​ட​போது,​ 27 நாடு​க​ளு​டன் வல்​ல​ர​சான அமெ​ரிக்​கா​வுக்கே சவால் விடும் அள​வுக்கு ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​பு பலம் வாய்ந்​த​தா​கக் காட்சி அளிக்​கி​றது.

பொது நாண​ய​மாக "யூரோ' ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு நாடு​க​ளில் அறி​மு​கப்​ப​டுத்​தப்​பட்​ட​தற்​குப் பிறகு,​ டால​ருக்​குப் போட்​டி​யாக உலக அரங்​கில் யூரோ தன்னை நிலை​நி​றுத்​திக் கொண்​டி​ருக்​கி​றது என்​ப​தும்,​ சீனா​வுக்​கும்,​ அமெ​ரிக்​கா​வுக்​கும் நிக​ரான வல்​ல​ர​சாக ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு காட்சி அளிக்​கி​றது என்​ப​தும் மறுக்க இய​லாத யதார்த்​தம்.

இந்த நிலை​யில்​தான்,​ ஐரோப்​பி​யக் கௌன்சி​லின் நிரந்​தர அதி​ப​ராக ஒரு​வ​ரைத் தேர்ந்​தெ​டுத்து,​ கூட்​ட​மைப்பை வலுப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் அவ​ருக்கு முழு அதி​கா​ரம் அளிப்​பது என்​கிற முடிவு எடுக்​கப்​பட்​டது. இந்​தப் பத​வி​யில் முன்​னாள் பிரிட்​டிஷ் பிர​த​மர் டோனி பிளே​யரை நிய​மித்து விட்​டால்,​ தனது நன்​மை​கள் பாது​காக்​கப்​ப​டும் என்று அமெ​ரிக்​கா​ கரு​தியதில் ஆச்​ச​ரி​யம் ஒன்​று​மில்லை.

ஐ​ரோப்​பி​யக் கூட்​ட​மைப்​பில் அங்​கம் வகிக்​கும் பல நாடு​கள் ஒரு பல​மான நிரந்​த​ரப் பத​வி​யில் டோனி பிளே​ய​ரைப் போன்ற உலக நாடு​க​ளு​டன் நட்​பு​ற​வுள்ள பிர​மு​கர் ஒரு​வர் அமர்​வதை விரும்​ப​வில்லை என்​பது ஒரு​பு​றம். மேலும்,​ ஜெர்​மன் அதி​பர் அன்​ஜெலா மெர்க்​க​லும்,​ பிரெஞ்சு அதி​பர் நிக்​கோ​லஸ் சர்க்​கோ​சி​யும்,​ டோனி பிளே​ய​ருக்கு எதி​ராக மறை​மு​க​மா​கக் காயை நகர்த்​தி​னர் என்​ப​து மறுபுறம்.

ந​டந்து முடிந்த தேர்வின் பின்​ன​ணி​யில் ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு எதிர்​கொள்​ளும் உறுப்​பி​னர் நாடு​க​ளுக்கு இடை​யே​யான மன​மாச்​சா​ரி​யங்​கள் வெளிப்​பட்​டுள்​ளன. முக்​கி​ய​மான பிரச்​னை​க​ளில் இப்​போ​தும் உறுப்​பி​னர் நாடு​கள்,​ தங்​க​ளது நல​னின் அடிப்​ப​டை​யில் ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பை அணு​கு​கி​றார்​களே ஒழிய அதைத் தங்​கள் அனை​வ​ருக்​கும் பொது​வான ஒட்​டு​மொத்த அமைப்​பா​க​வும்,​ ஒற்​று​மை​யின் அடை​யா​ள​மா​க​வும் ​பார்ப்​ப​தில்லை என்று தெரி​கி​றது.

இந்​தியா அணி​சேரா நாடு​க​ளுக்​குத் தலைமை வகித்து நடத்​தும் தைரி​யத்​தை​யும்,​ தார்​மிக உரி​மை​யை​யும் இழந்​து​விட்ட நிலை​யில்,​ ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​பின் முக்​கி​யத்​து​வம் இன்​றி​ய​மை​யா​தது.

ஐ​ரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு என்​பது அமெ​ரிக்​கா​வும் சீனா​வும் இரண்டு வல்​ல​ர​சு​க​ளாக வளர்ந்து வரும் சூழ​லில்,​ உலக அமை​தி​யை​யும்,​ பொரு​ளா​தார சமத்​து​வத்​தை​யும் நிலை​நாட்ட மிக​வும் அவ​சி​யம்.

சக்தி வாய்ந்த ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு உரு​வா​னால் மட்​டுமே சீனா​வும்,​ அமெ​ரிக்​கா​வும் போட்​டியோ,​ எதிர்ப்போ இல்​லாத பொரு​ளா​தார வல்​ல​ர​சுகளா​க​வும்,​ ஏகா​தி​பத்​திய சக்​தி​க​ளா​க​வும் உரு​வா​கா​மல் தடுக்க முடி​யும். இதை ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு நாடு​கள் உணர்ந்து செயல்​ப​டு​வ​து​தான் உல​கின் வருங்​கால நன்​மைக்கு உத்​தி​ர​வா​த​மாக இருக்​கும்!
நன்றி : தினமணி

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி: பவுனுக்கு ரூ.392 குறைந்தது

தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் வரை ஜெட் வேகத்தில் ஏறியபடி இருந்தது. கடந்த 1 ம் தேதி திடீரென தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்தது. கடந்த திங்கள் முதல் புதன் வரை 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு 500 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை குறையத் தொடங்கியது.
வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.1707 ஆக இருந்தது. நேற்று அது ரூ.1687 ஆக குறைந்தது. இன்று (சனி) தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் இன்று காலை நிலரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1638 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு பவுன் ஆபரண தங்கம் இன்று காலை ரூ.13,104 ஆக விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய விலையை விட ரூ.392 குறைவாகும்.
ஒரு கிராமிற்கு 49 ரூபாய் சரிவு ஏற்பட்டதால் இன்று நகை வாங்க சென்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த விலை சரிவு தற்காலிகமானது தான் என்று நகை வியாபாரி ஒருவர் கூறினார். கடந்த 2 நாட்களில் ஒரு பவுன் தங்கம் விலை 624 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் தங்கம் விலை சரிவு இந்த அளவுக்கு இருந்தது இல்லை.
நன்றி : தினமலர்


'3 ஜி' ஏலத்தில் 8 லட்ச ரூபாய் : பி.எஸ்.என்.எல்.,க்கு வருமானம்

சென்னையில், பி.எஸ்.என்.எல்., '3 ஜி' மொபைல் போன் எண்கள் ஏலத்தில், எட்டு லட்சம் ரூபாய் சென்னை தொலைபேசிக்கு கிடைத்துள்ளது. அதிகபட்சமாக, ஒரு எண் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் பேசும் இருமுனையில் உள்ளவர்களும் முகம் பார்த்து பேசும் 'வீடியோ கால்' வசதியுடன் கூடிய, '3 ஜி' சேவையை சமீபத்தில் பி.எஸ்.என்.எல்., சென்னையில் அறிமுகப்படுத்தியது. அத்துடன், இந்த சேவைக்கான மொபைல் போன் எண்களில், 292 'பேன்சி' எண்களை ஏலத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
ஏற்கனவே, சென்னை தொலைபேசி, '2 ஜி' சேவைக்கான எண்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்தது. இதில், ஒரு எண் அதிகபட்சமாக 55 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து '3 ஜி' ஏலத்தையும் பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி நடத்தியது. எஸ்.எம்.எஸ்., மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், 'பேன்சி' எண்கள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, குறைந்த பட்ச தொகை ஆயிரம், 2,000, 3,000 என நிர்ணயிக்கப்பட்டு நூறின் மடங்காக ஏலம் கேட்க வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஏலத்தில், 93 எண்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த, '3 ஜி' எண்கள் அனைத்தும் 94455 என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த ஏலத்தில் குறிப்பாக 94455 '55555 ' என்ற எண் மட்டும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 99999 என முடியும் எண், 77 ஆயிரம் ரூபாய்க்கும், 56789 என முடியும் எண், 62 ஆயிரம் ரூபாய்க்கும், 66666 என முடியும் எண் 30,300 ரூபாய்க்கும், 12345 என முடியும் எண் 30 ஆயிரம் ரூபாய்க்கும், 94455 என முடியும் எண் 28 ஆயிரத்திற்கும், 11111 என முடியும் எண் 15 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போயுள்ளது. இதன் மூலம், மூலம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில், '' தற்போது விடப்பட்டுள்ள ஏலத்தின் மூலம் சிறந்த லாபம் கிடைத்துள்ளது. ஏலத்தில் எடுக்கப்பட்ட 93 எண்கள் தவிர மீதமுள்ள 199 எண்கள் மீண்டும் அடுத்த ஒருவாரத்தில் ஏலத்தில் விடப்படும். ஏற்கனவே ஏலத்தில் எடுத்த எண்ணை யாராவது வாங்கவில்லை என்றால், அந்த எண்களும் மீண்டும் ஏலத்தில் விடப்படும்,'' என்றார்.
நன்றி : தினமலர்